Everything posted by ஏராளன்
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கட்டுரை தகவல் ஃபியோன் வின் பிபிசி விளையாட்டு செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியின் போது சர்ரே மைதான பணியாளருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சர்ரே மைதானத்தின் தலைமை பணியாளர் லீ ஃபோர்டில் உடன் விரலை நீட்டி கம்பீர் பேசியது வலைப் பயிற்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில் கம்பீர், "நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது" மற்றும் "நீங்கள் ஒரு களப் பணியாளர் மட்டுமே, அதற்கு மேல் எதுவும் இல்லை" என உரக்க கூறியதை கேட்க முடிந்தது. சம்பவம் நடந்த போது அங்கிருந்த இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது "டெஸ்ட் போட்டிகாக விக்கெட்டை (ஆடுகளத்தை) பார்வையிட பயிற்சியாளர்கள் சென்ற போது விலகிச் செல்லுமாறு கூறப்பட்டனர்" எனத் தெரிவித்தார். "நாங்கள் விக்கெட் மீது நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மைதான பணியாளர்களில் ஒருவர் வந்து அங்கிருந்து இரண்டரை மீட்டர் தள்ளி நிற்குமாறு கூறினார். என்னுடைய கிரிக்கெட் கரியரில் யாரும் அப்படிச் சொல்லி நான் பார்த்ததில்லை" என கோடக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்ரே மைதானப் பணியாளர்கள் ஆடுகளத்தை பார்வையிட இடையூறாக இருந்ததாகக் கூறுகிறார் கோடக். "அவர் தலைமை பயிற்சியாளரிடம் கயிற்றுக்கு வெளியே நின்று விக்கெட்டை(ஆடுகளத்தை) பாருங்கள் எனக் கூறினார். அவ்வாறு நின்று எப்படிப் பார்க்க முடியும் என எனக்குத் தெரியவில்லை." "ஒருவர் அவருடைய ஷூக்களை தேய்த்ததாகவோ அல்லது விக்கெட்டில் ஏதேனும் போட முயற்சித்தாகவோ அல்லது ஸ்பைக் அணிந்திருந்தாகவோ பொறுப்பாளர்கள் உணர்ந்தால் அவ்வாறு சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் அதைச் சொன்ன விதம் விசித்திரமானது" என்றார் கோடக். "மைதானத்தில் குறிப்பாக, ஸ்கொயர் மீது பொறுப்பாளர்கள் சற்று கூடுதல் கவனமாக இருப்பார்கள். தங்களிடம் பேசுகிறவர்கள் மிகவும் திறன்மிக்க, புத்திசாலியான நபர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும் அவர், "நீங்கள் மிகவும் புத்திசாலியான, அதிக திறன் மிக்க நபர்களுடன் வேலை செய்கிற போது, ஒருவர் ஆணவமாகப் பேசினால், நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால் இறுதியில் அது ஒரு கிரிக்கெட் மைதானமே. அது நீங்கள் தொடக் கூடாத, உடைந்துவிடக்கூடிய 200 ஆண்டுகள் பழைய கலைப்பொருள் அல்ல" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி (கோப்புப்படம்) பயிற்சிக்கென குறிப்பாக எந்த வெளிப்புற களமும் இல்லாத நிலையில், அடுத்த டெஸ்டுக்கான ஆடுகளத்திற்கு அருகே வலை அமைக்கப்பட்ட 3 ஆடுகளங்களை இந்தியா பயிற்சிக்குப் பயன்படுத்தியது. இது தான் வழக்கமான நடைமுறைதான். பிபிசி ஸ்போர்ட் இதுகுறித்து சர்ரே நிர்வாகத்திடம் கருத்து பெற முயன்றபோது அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் ஒரு காணொளி மூலம் இந்திய ஊடகங்களுக்குப் பதிலளித்த ஃபோர்டிஸ், "இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை" எனத் தெரிவித்தார். இரு அணிகளுக்கும் இடையே காரசாரமான மற்றும் போட்டி மிகுந்த இந்தத் தொடரில் நிகழ்ந்த சம்பவங்களில் சமீபத்திய நிகழ்வு இது. ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சதமடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியை முன்கூட்டியே டிரா செய்ய இந்தியா மறுத்துவிட்டது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் இங்கிலாந்து வீரர்கள் "கிரிக்கெட்டின் மாண்புக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்" எனத் விமர்சித்திருந்தார். லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நேரத்தைக் கடத்தும் உத்திகளில் ஈடுபட்டதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நான்காவது டெஸ்டில் டிரா செய்வதில் சர்ச்சை ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மான்செஸ்டர் போட்டியைத் தொடர்ந்து அடுத்த போட்டிக்கு மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் இங்கிலாந்து தனது பந்துவீச்சில் மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டோக்ஸ் பல்வேறு காயங்களுடன் அவதிப்படுகிறார். ஜேமி ஓவர்டன், அட்கின்சன் மற்றும் ஜோஷ் டங் மாற்று வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ் இதுவரையிலான நான்கு போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பி, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியுள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த டெஸ்டில் ஆடுவாரா என்பது பற்றியும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. தொடருக்கு முன்பே அறிவிக்கப்பட்ட அதிகபட்சம் மூன்று போட்டிகளில் அவர் விளையாடிவிட்டார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கவுதம் கம்பீர் சர்ரே மைதான பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. "ஓவல் டெஸ்டு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது" பிபிசி ஸ்போர்ட்ஸின் தலைமை கிரிக்கெட் செய்தியாளர் ஸ்டீபன் ஷெமில்டின் பகுப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் மற்றும் லீ ஃபோர்டிஸ் இருவருமே வெளிப்படையான நபர்கள். எந்தவொரு கருத்து வேறுபாட்டிலும் இருவருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தத் தொடரின் அதீத உணர்வுகளுக்கு இது மற்றுமொரு உதாரணம். முதலில் லார்ட்ஸில் நிகழ்ந்த எரிச்சலூட்டும் நிகழ்வுகள், அடுத்து ஓல்ட் ட்ராஃபோர்டில் நிகழ்ந்த கைகுலுக்கல் சர்ச்சை, தற்போது இந்த சர்ச்சை நிகழ்வு. ஓவலில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டுக்கு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது. இது உச்சபட்ச விளையாட்டு. இங்கு ஒவ்வொரு முடிவும் முக்கியம். சம்மந்தப்பட்டவர்கள் அதன்மீது அக்கறையுடன் இருப்பார்கள். இதனால் சில சந்தப்ப்பங்களில் நிலைமை கைமீறிச் செல்வது ஒன்றும் புதிதல்ல. தற்போது இருந்து ஓவல் பிட்ச் (ஆடுகளம்) வெளிச்சத்திலே இருக்கும். வரலாற்று ரீதியாக இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்து வந்துள்ளது. தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. அடுத்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் லியம் டாவ்சன் இடம் பெற மாட்டார் என்ற ஊகங்கள் உள்ளன. பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பிறகு சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்ட் இல்லாமல் இங்கிலாந்து அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளது. இதன் மூலம் சுழற்பந்து வீச்சுக்கு அவர் தரும் முக்கியத்துவம் புரிய வரும். ஆனால், அது ஸ்டோக்ஸின் முடிவைப் பொருத்தது. ஓல்ட் ட்ராஃபோர்ட் டெஸ்டில் அதிக ஓவர்களை வீசி ஓய்ந்து போயுள்ள அவர் கடைசி டெஸ்டில் என்ன மாதிரியான பங்கு வகிப்பார் என்பது பற்றி கேள்விகள் உள்ளன. ஸ்டோக்ஸ் 4 வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார் என்றால் டாவ்சன் அணியில் இடம்பெறுவார். ஸ்டோக்ஸ் பந்துவீசுவதில் சிரமம் இருந்தால், இங்கிலாந்து அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலை வரலாம். அவ்வாறான பட்சத்தில் டாவ்சன் அணியில் இடம் பெறுவது கடினம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0yjmper0go
-
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், REUTERS 30 ஜூலை 2025, 02:28 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருப்பதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) கூறியுள்ளது. இவற்றுள், ஃபுகுஷிமா டாய்ச்சி என்பது 2011ஆம் ஆண்டு ஜப்பானை தாக்கிய 9.0 அளவு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட அணுமின் நிலையமாகும். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ள இரு அணுமின் நிலையங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அங்கே எந்தவொரு அசாதாரண சூழலும் இல்லை என்றும் டெப்கோ கூறியுள்ளது. ஆனாலும் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையத்தில் சேதமடைந்த எரிபொருள் சிதைவுகளை முழுமையாக அப்புறப்படுத்தும் பணி 12 முதல் 15 ஆண்டுகள் தாமதமாகும் என்று டெப்போ இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அந்த அணுமின் நிலையத்திற்குள் கதிர்வீச்சு அளவு குறைவதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவின் காம்ச்சாட்கா பிராந்திய கடற்கரை முன்னதாக, ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 என்கிற அளவுக்கு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் பெட்ரோபாவ்லாவ்ஸ்க் - காம்ச்சாட்ஸ்கி என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அளவை முதலில் 8.7 புள்ளிகளாக கணித்திருந்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் தனது கணிப்பை 8.8 என்பதாக திருத்தியது. "கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" இந்த நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததாக அந்த பிராந்திய அமைச்சர் செர்கெய் லெபெடெவ் தெரிவித்துள்ளார். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் ஒரு குழந்தைகள் பள்ளி சேதடைந்தது என்று அவர் கூறியுள்ளார். "இன்றைய நிலநடுக்கம் மிகத் தீவிரமானது மற்றும் கடந்த பல தசாப்தங்களில் கண்டிராதது" என்று காம்ச்சாட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். ஜப்பானில் மக்களுக்கு எச்சரிக்கை ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று கருதப்பட்ட பல நூறு கிலோமீட்டர் நீண்ட கடற்கரைப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். "பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லுங்கள். சுனாமி அலைகள் விரைவிலோ அல்லது சற்று நேரத்திற்குப் பிறகோ தாக்கக் கூடும். எச்சரிக்கை அமலில் இருக்கும் வரை பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து இருங்கள்" என்று ஜப்பானின் அந்த எச்சரிக்கை அறிவிப்பு கூறுகிறது. சுனாமி அலைகள் 3 அல்லது 4 மீட்டர் வரை எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் ஜப்பான்: ஹொக்கைடோ முதல் கியூஷு வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதேநேரத்தில் ஜப்பானின் பிற பகுதிகளில் குறைந்த அளவிலான எச்சரிக்கைகள் அமலில் உள்ளன அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் அலாஸ்காவின் தொலைதூர அலூடியன் தீவுகள் ஹவாய் குவாம் ஈக்வெடார் நாட்டையும் 10 அடி உயர சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g62665l9do
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
யாழ். செம்மணி மனித புதைகுழிகளில் மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு ; இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு Published By: VISHNU 29 JUL, 2025 | 09:12 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 24 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாய்க்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். அதன் போது, 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி பகுதிகளை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டு தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டதுடன், துறைசார் நிபுணர்களுடன் புதைகுழிகளின் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்க தாமதிக்கப்படுவதால், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஸ்கான் நடவடிக்கை முன்னெடுக்கபடும் - என்றார். https://www.virakesari.lk/article/221315
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
இனிய பாரதியின் இன்னும் ஒரு சகாவான் சபாபதி மட்டு கிரான் வைத்து சிஜடி யினரால் கைது இதுவரை இனிய பாரதியின் சகாக்கள் 4 பேர் கைது Published By: VISHNU 29 JUL, 2025 | 08:41 PM இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஜடி யினர் கைது செய்துள்ளனர். ரி.எம்.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர். இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் ; இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை(29) மாலை 4.00 மணியளவில் சிஜடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடி யினர் மேற்கொண்டுவருகின்றனர் இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சிஜடி யினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு இனியபாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/221313
-
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி, காதலன், யுவதியின் நண்பி ஆகிய மூவரும் விளக்கமறியலில் Published By: VISHNU 29 JUL, 2025 | 08:31 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க, நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ரிக் ரொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார். குறித்த இளைஞனுடன் ரிக் ரொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி , அவரை காதலித்து வந்துள்ளார். அந்நிலையில் தனது காதலனுக்கு , அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை களவெடுத்து, அதனை காதலனிடம் கொடுத்துள்ளார். வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். யுவதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை களவெடுத்த யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை களவெடுப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது, நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏனைய நால்வரையும் பிணையில் செல்ல அனுமதித்தார். அதேவேளை, திருடப்பட்ட நகைகளில் ஒரு தொகையும், நகைகளை விற்று வாங்கிய அதிநவீன மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டு, சான்று பொருளாக, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியதை அடுத்து, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221312#google_vignette
-
செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் - அருட்தந்தை மா.சத்திவேல்
Published By: VISHNU 29 JUL, 2025 | 06:23 PM செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர். ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது. செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர். இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அல்ஜாஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே. ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது. உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும். அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே. இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம். https://www.virakesari.lk/article/221307
-
கடும் பசியில் காஸா மக்கள் - பட்டினி மனித உடலை என்ன செய்யும்?
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், "காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிலர் தெருக்களில் சோர்ந்து விழுகிறார்கள் என்றும் ஐ.நா. கூறியுள்ளது. ஐ.நா. இன்னும் அதிகாரப்பூர்வமாக "பஞ்சம்" என்று அறிவிக்கவில்லை. ஆனால், கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயத்தில் காஸா உள்ளது என ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC- Integrated Food Security Phase Classification) எச்சரிக்கிறது. பட மூலாதாரம், ANADOLU/GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது பஞ்சம் என்றால் என்ன, அது எப்போது அறிவிக்கப்படுகிறது? ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) என்பது, மக்கள் மலிவு விலை மற்றும் சத்தான உணவைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை விவரிக்க பயன்படும் உலகளாவிய தரநிலை. இதில் கட்டம் 5 தான் மிக உயர்ந்த கட்டமாக கருதப்படுகிறது. அதாவது பஞ்சம். பஞ்சம் என்பது பின்வரும் நிலைகளை சந்திக்கும் ஒரு தீவிர சூழ்நிலையை குறிக்கிறது. 20% குடும்பங்கள் உணவுக்கான தீவிர பற்றாக்குறையை எதிர்கொள்வது குறைந்தது 30% குழந்தைகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது ஒவ்வொரு நாளும், 10,000 பேரில் குறைந்தது 2 பெரியவர்கள் அல்லது 4 குழந்தைகள் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களின் தொடர்பால் உயிரிழப்பது காஸாவின் மொத்த மக்களும் (2.1 மில்லியன் பேர்) கட்டம் 3 (நெருக்கடி) அல்லது அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர் என IPC கூறுகிறது. மே மற்றும் செப்டம்பர் 2025 க்கு இடையில் கிட்டத்தட்ட 469,500 பேர் பேரழிவு நிலையை (IPC கட்டம் 5) அனுபவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழல் ஏற்பட்டவுடன், ஐ.நா. பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கிறது. சில சமயங்களில் ஒரு நாட்டின் அரசாங்கத்துடன் இணைந்தோ, பெரும்பாலும் சர்வதேச உதவி நிறுவனங்கள் அல்லது மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்தோ இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பட மூலாதாரம், MAJDI FATHI/NURPHOTO/GETTY IMAGES படக்குறிப்பு, வடக்கு காஸாவில் உள்ள ஜிகிம் எல்லையில் இருந்து வரும் உதவி லாரிகளில் இருந்து பாலத்தீனியர்கள் மாவு மூட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள் பசியால் வாடும் போது ஒருவரின் உடலுக்கு என்ன நடக்கும்? பட்டினி என்பது நீண்ட காலமாக உணவு இல்லாததால் ஏற்படுகிறது. இதனால் உடல், அதன் அடிப்படை செயல்பாடுகளுக்கு தேவையான கலோரிகளைப் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுவாக உடல், உணவை குளுக்கோஸாக உடைக்கிறது. ஆனால் உணவு நிறுத்தப்படும்போது, உடல் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை வெளியிட, கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைகோஜனை உடைக்கத் தொடங்குகிறது. அங்குள்ள வளங்கள் தீர்ந்துவிட்டால், உடல் தேங்கிய கொழுப்பை உடைத்து, இறுதியில் தசை திரளையும் உடைத்து, போதுமான ஆற்றலை உற்பத்தி செய்யும். பட்டினியால் நுரையீரல், வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் சுருங்கலாம். இது மூளையை பாதித்து, மாயத்தோற்றம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். சிலர் நேரடியாக பட்டினியால் இறக்க நேரிடலாம். ஆனால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பால், சுவாசம் அல்லது செரிமான அமைப்புகளில் ஏற்படும் தொற்றுகள் போன்ற சிக்கல்களால் அடிக்கடி இறக்கின்றனர். பட்டினி ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கிறது. "நீங்கள் திடீரென்று கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாக மாட்டீர்கள். இந்தக் குழந்தைகளுக்கு முன்பு தட்டம்மை, நிமோனியா, வயிற்றுப்போக்கு அல்லது அதுபோன்ற நோய்கள் இருந்திருக்கலாம்," என்கிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து துறையின் கௌரவ மூத்த ஆராய்ச்சி பேராசிரியர் சார்லோட் ரைட். மேலும், "முன்பு ஆரோக்கியமாக இருந்த, ஆனால் இப்போது பட்டினியால் வாடத் தொடங்கியுள்ள குழந்தைகளுக்கு, உணவு கிடைத்தால் அதை சாப்பிட்டு ஜீரணிக்கத் தேவையான ஆற்றல் இன்னும் இருக்கும். மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்"என்றும் பேராசிரியர் ரைட் விளக்குகிறார். படக்குறிப்பு,பசியின் நீண்ட கால விளைவுகள் ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது? குழந்தைப் பருவத்தில் உணவுப் பற்றாக்குறையைச் சந்திப்பது, வாழ்நாள் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதில், அறிவாற்றல் வளர்ச்சியில் (cognitive development) குறைபாடுகள் ஏற்படுவது மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய நிலை (stunting) ஆகியவை அடங்கும். உடல் வளர்ச்சி குன்றிய நிலை (Stunting) என்பது, மோசமான ஊட்டச்சத்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் தொற்றுகள், மற்றும் போதிய உளவியல் மற்றும் சமூக தூண்டுதல் இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் குறைபாடாக உலக சுகாதார அமைப்பு (WHO) வரையறுக்கிறது. பொதுவாக, இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப எதிர்பார்க்கப்படும் உயரத்தை விட குறைவாக இருப்பார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்தில் போதுமான அளவு உணவு கிடைக்காவிட்டால், இரத்த சோகை, ப்ரீ -எக்லாம்ப்சியா, ரத்தக்கசிவு, மரணம் போன்ற தீவிர சிக்கல்களை தாய்மார்களுக்கு ஏற்படுத்தலாம். அதேபோல், குழந்தைகள் இறந்து பிறப்பது, குறைவான எடையுடன் பிறப்பது, வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற பாதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம் என்கிறது யுனிசெஃப். அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கத் தேவையான சத்தான பாலை உற்பத்தி செய்ய போராடலாம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மெடிசின்ஸ் சன்ஸ் பிரான்டியர்ஸ் (Médecins Sans Frontières) அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் நுரதீன் அலிபாபா கூறுகையில், 'இதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது' என்கிறார் . "வளர்ச்சிக் குறைபாடு என்பது மீள முடியாதது. அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள காலத்தை கடந்த பிறகும், குறைந்த உயரத்தில்தான் இருப்பார்கள். இது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பெரும்பாலும் நிரந்தர கற்றல் குறைபாடும் இருக்கும், அது அவர்கள் பள்ளியில் சேரும் வரை தெளிவாக தெரியாது" என்று கூறிய மருத்துவர் அலிபாபா, "ஊட்டச்சத்து குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது, இதனால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும்" என்றும் கூறுகிறார். "நிறைய மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிறுமிகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கலாம். அவர்கள் கருத்தரித்தால், இந்த பெண்கள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம்." ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புகள் பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் மாறும் ஒரு நிலை) இன்னொரு சிக்கலாக உருவாகலாம். "வயதான பிறகு எலும்புகள் மடிக்கக்கூடியதாக மாறுவதால், அவர்கள் தங்கள் உடல் எடையை சுமக்க முடியாமல் போகலாம். அதனால், ஒரு சிறிய நிகழ்வும் கூட எலும்பு முறிவுக்கு வழிவகுக்கும்," என்று மருத்துவர் அலிபாபா விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் பாலத்தீனியர்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் ? "இந்த நெருக்கடிக்கு பதிலளிக்க இரண்டு முக்கியமான அணுகுமுறைகள் தேவை. முதலாவது, காஸாவிற்கு அதிகளவிலான உணவு அனுப்பப்பட வேண்டும். இரண்டாவது, விலையுயர்ந்த சிகிச்சை உணவுகள் வழங்கப்பட வேண்டும்"என்று பேராசிரியர் ரைட் கூறினார். "குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வேகமாக உணவளிக்க வேண்டும்." "தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தேர்வாகும். முதலில், தாய்க்கு உணவளிக்க வேண்டும், அதன்மூலம் அவர் குழந்தைக்கு உணவளிக்க முடியும். ஆனால், ஆண்களை விட , பெண்களிடம் உணவு சென்றடைவதை உறுதிசெய்வது தான் உண்மையான சவால் உணவு " "முக்கியமான செய்தி என்னவெனில், குழந்தைகளும் தாய்மார்களும் முன்னுரிமை பெற வேண்டும், அவர்களுக்கு பெரிய அளவு உதவி தேவையில்லை." 'ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தரும். அதற்கான சிகிச்சை எப்போதும் நேரடியானதல்ல' என விளக்குகிறார் பிபிசி அரபு சுகாதார நிருபரும், மருத்துவராக பயிற்சி பெற்ற ஸ்மிதா முண்டாசாத். கடுமையான சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு விழுங்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஊட்டச்சத்து தேவைப்படலாம். "மேலும், நோய்த்தொற்றுகள் அல்லது பிற சிக்கல்களுக்கான சிகிச்சைகளும் தேவைப்படும்," என்றும் அவர் கூறினார். "சில சந்தர்ப்பங்களில், ஒருவருக்கு மிக விரைவாக அல்லது தவறான உணவை கொடுப்பது ஆபத்தானது. "அதனால், பசிக்காக உணவை வழங்குவது மட்டும் போதாது. சரியான உணவையும் வழங்க வேண்டும். மேலும், இதை ஆதரிக்கக்கூடிய ஒரு செயல்பாட்டு சுகாதார அமைப்பும் இருக்க வேண்டும்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் ஸ்மிதா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdrkj8zep71o
-
வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்கள், சிறுவர்களுக்காக நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு
29 JUL, 2025 | 04:13 PM தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்துவைத்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுகின்றன. 11ஆவது மாவட்டமாக, நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்த இல்லம் முக்கியமாக தேவைப்படும். காரணம், வீட்டில் ஆண்கள் அல்லது வீட்டுத் தலைவர்களின் மதுபாவனை அல்லது போதைப்பொருள் பாவனையினால் விளையும் வன்முறையினால் பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்த வண்ணமுள்ளது. அதற்கான சிறந்த தீர்வாகவே இந்த பாதுகாப்பு இல்லங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள பொலிஸாரின் உதவியுடன் இயங்கி வருகிறது. இந்த பாதுகாப்பு இல்லத்தினை நம்பி வருபவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கி, வைத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, உளநல ஆலோசனை வழங்கி, மருத்துவம் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளது. இதனால் வாழும் வாழ்க்கையில் ஏதும் பிரச்சினை ஏற்படும்போது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்களைத் தவிர்த்து, பெண்கள் தமது பாதுகாப்புக்காக இந்த இல்லங்களுக்கு வருகைதந்து, தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கானதாக இந்த இல்லங்கள் அமையும். மேலும், இல்லங்களுக்கு வருகை தருபவர்களுக்கு ஒரு குறுகிய காலத்தில் அவர்களுக்கான வீடுகளிலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டு, அதற்கான சட்ட நடவடிக்கையும் இல்லத்தின் ஊடாக எடுக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் சமூகத்தில் ஆரோக்கியமான பிரஜையாக வாழலாம் என சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். தற்போது திறந்துவைக்கப்பட்ட தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221287
-
வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
சஜீவன் படுகொலைக்கு நீதி கோரி மல்லாவியில் ஆர்ப்பாட்டம் ; குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்படும் - ரவிகரன் எச்சரிக்கை 29 JUL, 2025 | 03:56 PM முல்லைத்தீவு - மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஆனந்தராசா சஜீவனின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக, ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மல்லாவி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தபப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மல்லாவி பொலிஸாரை எச்சரித்துள்ளார். அதேவேளை சஜீவனின் படுகொலை விவகாரம் தொடர்பில் தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதுடன், இந்த விவகாரத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு தம்மால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார். மல்லாவியில் இன்று (29) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி, மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் பங்கேற்றபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞன் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலருக்கெதிராக சஜீவனின் குடும்பத்தினரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாடு அளிக்கப்பட்டும் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பொலிஸாரால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த வகையில் சஜீவனின் படுகொலை இடம்பெற்று பத்தொன்பதாம் நாளன்று கடந்த 16.08.2024 அன்றும், அதன் பிற்பாடு ஏழு மாதங்கள் கடந்து, 14.03.2025 அன்றும் படுகொலைக்கான நீதி கோரி, மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக சஜீவனின் படுகொலை இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ள நிலையிலும், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இன்று (29) சஜீவனின் படுகொலைக்கு நீதி கோரி மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள், பொதுமக்கள், ரவிகரன் ஆகியோர் இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது மல்லாவி பேருந்து நிலைய வளாகத்திலிருந்து மல்லாவிப் பொலிஸ் நிலையம் வரை சென்றது. சஜீவனுக்கு நீதி கிடைக்கவேண்டும், கொலைக் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியும், பதாதைகளைத் தாங்கியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவ்வேளை, ரவிகரன் தெரிவிக்கையில், ஒரு வருடகாலமாக சஜீவனின் கொலைக்கு நீதி கோரி இந்த மக்கள் போராடிவருகின்றனர். இருப்பினும் இந்தப் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. இந்தப் படுகொலைக்கான நீதி கிடைக்கவேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் இந்த கொலைக்கான நீதி கிடைக்கவில்லை எனில், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், மல்லாவி பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்தப் படுகொலை விவகாரத்தில் மல்லாவிப் பொலிஸாரின் அசமந்தப்போக்கு பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிற்கு தெரியப்படுத்துவதுடன், இந்த படுகொலைக்கான நீதியை உடனடியாக வழங்குமாறும் கோரவுள்ளேன் என்றார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது இந்தப் படுகொலை விவகாரம் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த படுகொலைக்கு விரைந்து உரிய நீதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதன்போது சஜீவனின் படுகொலைக்கு விரைந்து நீதி வழங்குமாறு கோரி மல்லாவி பொது அமைப்புக்கள் மற்றும் மல்லாவி வர்த்தக சங்கம் மற்றும் மல்லாவி பொதுமக்கள் சார்பாக துரைராசா ரவிகரனால் மகஜர் ஒன்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/221285
-
லலித், குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும்; - லலித்தின் தந்தை
லலித் மற்றும் குகன் : காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் 2011 டிசம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டாளர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியங்களை வழங்குவதற்காக, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றமும் அவ்வாறான அறிவிப்பினை விடுத்திருந்தது. ஆனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் ஆதாரங்களை வழங்க முடியவில்லை என்று கூறியிருந்தார். இதன் விளைவாக, அவர் ஜனாதிபதி என்ற தகுதியில் சாட்சியமளிக்க அழைக்கப்படவில்லை. இப்போது அவர் ஜனாதிபதியாக இல்லை என்று, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அவருக்கு எதிரான உயிர் அச்சுறுத்தல்களை பரிசீலித்ததோடு, 2024 டிசம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரசியல் செயற்பாட்டாளர்கள். மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து, பின்னர் முன்னணி சோசலிச கட்சி என்று அறியப்பட்ட ஒரு பிரிவுடன் அவர்கள் இணைந்திருந்தனர். இரண்டு இளைஞர்களும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி இறுதியாக காணப்பட்டனர். போரினால் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். காணாமல் போனோர் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாக லலித் நீண்டகாலமாக பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தார். டிசம்பர் 9ஆம் திகதி மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் ஆவரங்காலில் உள்ள குகனின் வீட்டிலிருந்து இருவரும் கடைசியாக வெளியேறியதாக ஊடகவியலாளர் ஷாலிகா விமலசேன குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. குகனின் மனைவி டிசம்பர் 14 அன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தனது கணவரின் மோட்டார் சைக்கிள் காணப்பட்டதை கண்டுள்ளார். எனினும், அந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து பொலிஸாரும் கிராம மக்களும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். டிசம்பர் 13ஆம் திகதி கோப்பாய் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கோப்பாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக குகனின் மனைவிக்கு பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 9ஆம் திகதி அதைப் பார்த்ததாக அப்பகுதி மக்கள் உள்ளூர் கிராம உத்தியோகத்தரிடம் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலிக்கு அருகில் வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த குழுவொன்று லலித் மற்றும் குகன் ஆகியோரை தடுத்து நிறுத்தியதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மேலதிக விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்தன. ஒருவேளை குற்றவாளிகளை அறிந்திருந்தாலும், நேரில் கண்ட சாட்சிகள் அவர்களை குறிப்பிடுவதற்கு பயந்து முன்வராமல் இருந்திருக்கலாம். அவிசாவளையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்த லலித், நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணியில் முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக இருந்துள்ளார். அவருடன் காணாமல் போன குகன் முருகானந்தனும் அரசியல் செயற்பாட்டாளரும் ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார். குகன் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார். ஆனால் 1999 ஆம் ஆண்டில் அந்தக் குழுவிலிருந்து வெளியேறினார். மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹாவில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாக உள்ள வருண தீப்தி ராஜபக்ஷ, டிசம்பர் 9, 2021 அன்று பேஸ்புக்கில் இது குறித்துப் பதிவிட்டபோது இந்த காணாமல் போன விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார் – “லலித் காணாமல் போன சில நாட்களுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை குறித்து நான் பாரிய நிச்சயமற்ற தன்மையை உணர்ந்தேன். அது என் மனதை கனக்கச் செய்தது. அந்த நேரத்தில், இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர் நண்பர்கள், தலைமறைவாக இருந்து, உதுல் பிரேமரத்னவுக்கும் (வழக்கறிஞரும் ஆர்வலருமான) எனக்கும், லலித் மற்றும் குகன் எங்கே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவ்வப்போது தகவல் அளித்தனர். அந்தத் தகவல் வருத்தமளிப்பதாக இருந்தாலும், லலித் மற்றும் குகன் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உதுலையும் என்னையும் எங்களுக்குத் தெரிந்த பல்வேறு அமைப்புகளையும் தனிநபர்களையும் தொடர்பு கொள்ளத் தூண்டியது. ஆளுநராகவும், பின்னர் ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகமாகவும் பதவி வகித்த ராஜித் கீர்த்தி தென்னகோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தார்.” 2009 டிசம்பர் 15 அன்று, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு இவ்வாறு கூறினார்: “லலித்குமாரும் குகன் முருகானந்தனும் காணாமல் போகவில்லை; அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படவில்லை. அவர்கள் விரைவில் பொலிஸ் அல்லது இராணுவத்தால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். எனினும் உறுதியளித்தபடி மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சோதனை நடத்தியது. ஆனால், அவர்களை அங்கு காணவில்லை. லலித் மற்றும் குகன் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள், 15 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என பல செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். லலித் குமார் வீரராஜ், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் முக்கிய பங்காளியான மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://puja.lk/ta/story/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE/
-
நெல்லை பாளையங்கோட்டையில் மென்பொறியாளர் ஆணவக்கொலை
'தந்திரமாக பேசி அழைத்துச் சென்றான்' - மென்பொறியாளர் ஆணவக்கொலையில் என்ன நடந்தது? படக்குறிப்பு,கொலையுண்ட மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷூம், ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டு முன் கூடியுள்ள உறவினர்களும் 29 ஜூலை 2025, 02:47 GMT நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் மென்பொறியாளர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை அவரது தாயின் கண் முன்னே பெண்ணின் சகோதரர் கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் காவல் நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார். காவல் சார்பு ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி கொலையுண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோரும் குடும்பத்தினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னணி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் - தமிழ் செல்வி தம்பதியரின் மகன் கவின் செல்வ கணேஷ்(26). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை காதலித்து வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது குடும்பம் இதற்கு முன்பு தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகளும் கவின் செல்வ கணேஷும் ஒரே பள்ளியில் படித்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அதுவே பின்னாளில் காதலாக மாறியுள்ளதாக காவல்துறை கூறுகிறது. காவல் சார்பு ஆய்வாளர் தம்பதியருக்கு சுர்ஜித் (24) என்ற மகனும் இருக்கிறார். படக்குறிப்பு,சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்துவந்தார் கவின் செல்வ கணேஷ் என்ன நடந்தது? கொலை தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது: கவின் செல்வ கணேஷ் சென்னையில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். உடல் நலமின்றி இருந்த அவரது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் கவின் அழைத்து வந்துள்ளார். கவின் பாளையங்கோட்டை வந்திருந்ததை அறிந்த அவரது காதலியின் சகோதரரான சுர்ஜித் அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். கவினை சுர்ஜித் அழைத்துப் பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதம் ஆணவக்கொலையில் முடிந்துள்ளது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையர் சுரேஷ், ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சுர்ஜித் கொலை செய்தது உறுதியானதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சுர்ஜித்தை கைது செய்தனர். விசாரணையில் ஆணவக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சுர்ஜித் ஒப்புதல் வாக்குமூலம் பிபிசி தமிழிடம் பேசிய விசாரணை அதிகாரி ஒருவர், "சுர்ஜித்தின் அக்காவும், கவின் செல்வ கணேஷ் ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். கவின் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களது காதல் சுர்ஜித்துக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து பல முறை சுர்ஜித் அவரது அக்காவை கண்டித்ததுடன், கவினையும் அழைத்து எச்சரித்துள்ளார். ஆனால், சுர்ஜித்தின் அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று அவ்வப்போது அவருடன் கவின் பேசியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) சித்த மருத்துவமனைக்கு கவின் வந்ததை அறிந்த சுர்ஜித் அவரை பின் தொடர்ந்து சென்று தனியாக அழைத்து மீண்டும் எச்சரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து விட்டதாக சுர்ஜித் வாக்குமூலம் கொடுத்தார்" என்று தெரிவித்தார். பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு சுர்ஜித்தின் தாய்-தந்தையே காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். படக்குறிப்பு,கைது செய்யப்பட்ட சுர்ஜித் "கவினை தந்திரமாக பேசி சுர்ஜித் அழைத்துச் சென்றான்" பிபிசி தமிழிடம் அழுது கொண்டே பேசிய கவினின் தாய் தமிழ் செல்வி, "எனக்கு இரண்டு மகன்கள், இதில் மூத்த மகன் கவின் செல்வகணேஷ். பொறியியல் முடித்துவிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தான். பள்ளியில் படிக்கும் போதே கவினும் சுர்ஜித்தின் அக்காவும் நண்பர்களாக பழகி வந்தனர் என்பதால், எங்களது பின்னணி சுர்ஜித்தின் குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும். ஒரு வாரத்துக்கு முன் கீழே விழுந்த என் அப்பாவுக்கு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தோம். அவருக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுர்ஜித்தின் அக்காவிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் மருத்துவராக பணியாற்றும் சித்த மருத்துவமனைக்கு கவின் அழைத்துச் சென்றான். கவினுடன் நான், எனது மற்றொரு மகன் மற்றும் என் சகோதரர் ஆகியோருடன் உடன் வந்திருந்தோம்." என கூறினார். மேலும் பேசிய அவர், "ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் சித்த மருத்துவமனைக்கு என் அப்பாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்த போது சுர்ஜித் அங்கே வந்தான். அவனது பெற்றோர் கவினை பார்க்க வேண்டும் என கூறியதாக சொல்லி சுர்ஜித் அழைத்தான். அதை நம்பி சுர்ஜித்துடன் கவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றான். சித்த மருத்துவ ஆலோசனை முடிந்த பின் நானும் எனது இளைய மகனும் மற்றும் என் தம்பி கேடிசி நகர் சாலையில் சென்ற போது எனது மகனுடன் சுர்ஜித் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தோம். இதனால், வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் சென்ற போது என்னை தகாத வார்த்தையில் சுர்ஜித் திட்டினான். அதன் பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் என் மகனை சுர்ஜித் கொலை செய்துவிட்டான். கவினை கொலை செய்ய தூண்டிய சுர்ஜித் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். "ஒரு இளைஞனை சாதி மிருகமாக்கி உள்ளது" சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பெற்றோர் காவல்துறையில் பணியாற்றும் நிலையில் எந்த குற்றப் பின்னணியும் இல்லாத இளைஞனால் அவரது அக்கா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு சாதி வன்மமே காரணம்." என்றார். 2022ஆம் ஆண்டு முதல்வரை சந்தித்து ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் தேவை என்று மனு அளித்திருந்த நிலையில், இதுவரை எந்த தனி சட்டத்தையும் தமிழக அரசு இயற்றவில்லை என அவர் கூறினார். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பு அளித்தும் இதுவரை எந்த மாவட்டத்திலும் இது பின்பற்றப்படவில்லை எனவும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு காவல்துறையினர் உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். "ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் கதிர். பட மூலாதாரம்,KATHIR படக்குறிப்பு,ஆணவப் படுகொலை செய்பவர்களுக்கு பிணையில் வெளியே வராத அளவுக்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - எவிடென்ஸ் கதிர் கவின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வரும் பெண்ணின் பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. தாராபுரம்: பட்டியலின தொழிலாளி மரணம் - சமூக அமைப்புகள் சந்தேக குரல் சிவன் மலையில் பட்டியல் சமூக திருமணங்களுக்கு மண்டபங்கள் மறுக்கப்படுகிறதா? பிபிசி கள ஆய்வு அரியலூர் அருகே கோவிலில் பட்டியல் சாதியினருக்கு முட்டுக்கட்டை போடும் 'ஏழு வகையறா' யார்? சாதிய பாகுபாடு சர்ச்சை: காஞ்சி கோவிலில் செல்வப்பெருந்தகைக்கு என்ன நடந்தது? போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்த பின்னரே முக்காணியில் சுமார் 3 மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னரே கவின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjdy548e5v7o
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
ஓவல் மைதான பராமரிப்பாளருடன் இந்திய தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் கடும் வாக்குவாதம் Published By: VISHNU 29 JUL, 2025 | 06:42 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசியும் ஐந்தாவதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில், மைதான பராமரிப்பாளர் லீ ஃபோர்ட்டிஸ் மற்றும் இந்திய தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது லீ ஃபோர்ட்டிஸை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டிப் பேசிய கௌதம் கம்பீர், 'நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் ஒன்றும் சொல்லத் தேவையில்லை' என கூறியுள்ளார். அவர்கள் இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது திட்டவட்டமாக தெரியவராத போதிலும், கம்பீரிடம் ஃபோர்ட்டிஸ் ஏதோ கூறியதை அடுத்தே கம்பீர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இந்தத் தொடரை சமப்படுத்துவதாக இருந்தால் வியாழக்ழமை (31) ஆரம்பமாகவுள்ள கடைசி டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றே ஆகவேண்டும். இதனைக் கருத்தில்கொண்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பயிற்சியின்போது உணர்ச்சிவசப்பட்ட கம்பீர், மைதான பராமரிப்பாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் துடுப்பாட்டப் பயிற்றுநர் சித்தன்ஷு கோட்டாக் தலையிட்டு நிலைமை கட்டுப்படுத்தியுள்ளார். 'இதனை நான் முறையிடுவேன்' என ஃபோர்ட்டிஸ் தெரிவித்ததால் வாக்குவாதம் சூடுபிடித்துள்ளது. 'உங்களுக்கு என்ன முறையிடவேண்டுமோ அதை போய் முறையிடுங்கள்' என கம்பீர் சற்று காரசாரமாக பதிலளித்துள்ளார். இதனை அடுத்து கோட்டாக் தலையிட்டு, மைதான பராமரிப்பாளரை தனியாக ஓர் ஓரத்திற்கு அழைத்துச் சென்று 'நாங்கள் எதையும் சேதப்படுத்த மாட்டோம்' என கூறியுள்ளார். இந்தியாவின் மற்றைய பயிற்றுநர்களான மோர்னி மோர்க்கல், ரெயான் டுஷே ஆகிய இருவரும் இந்த வாக்குவாத்தை கேட்டவண்ணம் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் எதிற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெளிவாகாத போதிலும் அவர்கள் இருவரும் பயிற்சிக்கான ஆடுகளங்களின் தன்மை குறித்து வாதிட்டிருக்கலாம் என தெரிகிறது. எவ்வாறாயினும் மீண்டும் ஃபோர்ட்டிஸை நோக்கி திரும்பிய கம்பீர், எனது அணி 'என்ன செய்யக்கூடாது' என அவர் சொல்லத் தேவையில்லை என்றார். 'நாங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு சொல்ல முடியாது. நீங்கள் வெறுமனே ஒரு மைதான பராமரிப்பாளர். அதற்குமேல் எதுவும் இல்லை' என கம்பீர் தெரிவித்தது வீடியோவில் காணப்பட்டது. அதன் பின்னர் இருவரும் தத்தம் வழிகளில் சென்றதுடன் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதை கம்பீர் மேற்பார்வை செய்யத் தொடங்கினார். பின்னர் மைதானத்திலிருந்து தனது அறையை நோக்கி சென்ற ஃபோர்ட்டிஸ், 'இது ஒரு மிக முக்கியமான போட்டி. அவர் (கம்பீர்) உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்' என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221308
-
லலித், குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும்; - லலித்தின் தந்தை
இருவர், 2009 இன் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
-
ஒஸ்கார் விருதுபெற்ற திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூத குடியேற்றவாசியால் சுட்டுக்கொலை
ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 10:41 AM ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படையினரும் யூத குடியேற்றவாசிகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களை விபரிக்கும் ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் திரைப்படத்தை உருவாக்குவதற்கு இவர் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார். ஹெப்ரோனிற்கு அருகில் உள்ள உம் அல் கெய்ர் பாலஸ்தீனிய கிராமத்தின் மீது யூதகுடியேற்றவாசிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டார் என பாலஸ்தீன அதிகார சபையின் கல்வியமைச்சு சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது. நோ அதர் லாண்டினை உருவாக்கிய வேறு இருவரும் இதனை உறுதி செய்துள்ளனர். இன்றுகாலை எனது நண்பர் அவ்டா படுகொலை செய்ய்பட்டார் என பாலஸ்தீன பத்திரிகையாளர் பசெல் அட்ரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பாலஸ்தீனிய சமூக செயற்பாட்டாளரை சுட்டுக்கொன்ற இஸ்ரேலியர் அவர் தனது கிராமத்தில் நின்றுகொண்டிருந்தவேளை யூத குடியேற்றவாசியொருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் அது அவரது உயிரை குடித்தது என அவர் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக என அவர் பதிவிட்டுள்ளார். ஹடாலின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வீடியோவையும் பதிவிட்டுள்ள அவர். https://www.virakesari.lk/article/221243
-
லலித், குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும்; - லலித்தின் தந்தை
லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் ; இவர்களாவது நீதியை பெற்றுதருவார்கள் என நம்புகின்றேன் - லலித்தின் தந்தை Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 03:55 PM லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என தெரிவித்துள்ள லலித்தின் தந்தை ஆறுமுகம் வீரராஜா லலித் குகனிற்கும் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கும் இந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- எனது மகன் காணாமல்போய் 14 வருடங்களாகின்றன, முறைப்பாடொன்றை செய்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு சென்றோம். இதிலாவது நல்லது கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். நாளைமறுதினம் வழக்கு உள்ளது வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம். லலித் குகன் மாத்திரமல்ல பதினைந்து இருபதினாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தவர்கள் பரிதவிக்கின்றனர். அவங்களிற்கும் ஒரு நீதி கிடைக்கவேண்டும், எங்களிற்கும் நீதி கிடைக்கவேண்டும். லலித் குகன் யார் என்பது இந்த அரசாங்கத்திற்கு நன்றாக தெரியும், இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்கவேண்டும். எனது பிள்ளைக்கும் ஏனையவர்களிற்கும் நீதி கிடைக்குமாக இருந்தால் நான் இந்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பேன். https://www.virakesari.lk/article/221282
-
நல்லூர் ஆலய வளாகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினரால் மக்கள் பதற்றம்!
29 JUL, 2025 | 11:35 AM நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்போது நல்லூர் ஆலய முன்வாயிலில் திடீரென இராணுவ வாகனம் ஒன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் திருவிழா காலத்தில் அந்தப் பகுதியில் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் எவரும் ஆலய வளாகத்துக்குள் செல்வதற்கும் அனுமதி இல்லை. இந்நிலையில், பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இராணுவத்தினரின் வாகனம் அத்துமீறி உள்நுழைந்தமை, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இராணுவத்தின் அத்துமீறல் இன்னமும் தொடர்கிறதா என பெருமளவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221249
-
ஒரே ஒரு பாஸ்வேர்ட் 150 ஆண்டு பழைய நிறுவனத்தை அழித்தது எப்படி?
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி என்ற போக்குவரத்து நிறுவனம், இத்தகைய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒன்றாகும். கட்டுரை தகவல் ரிச்சர்ட் பில்டன் பிபிசி பனோரமா 35 நிமிடங்களுக்கு முன்னர் சைபர் ஹேக்கிங் கும்பல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பிரிட்டன் நிறுவனத்தை, இந்த ஹேக்கர் கும்பல் அழித்த சிறிது நேரத்திலேயே, அந்த நிறுவனத்தின் 700 ஊழியர்களும் தங்களது வேலைகளை இழந்தனர். இந்த சம்பவம், ஒரே ஒரு பலவீனமான பாஸ்வோர்டால் தொடங்கியது. சைபர் ஹேக்கிங் கும்பல் (இணையவழியில் தரவுகளைத் திருடும் கும்பல்), அந்த 'பலவீனமான பாஸ்வோர்டைக் 'கைப்பற்றி, நிறுவனத்தின் கணினி அமைப்புகளை முடக்கியது. இது தான் அந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி என்ற போக்குவரத்து நிறுவனம், இத்தகைய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் நிறுவனங்களில் ஒன்றாகும். எம்&எஸ், கோ-ஆப் மற்றும் ஹாரோட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், சமீபத்திய மாதங்களில் இத்தகைய சைபர் தாக்குதல்களால் (இணையவழி தாக்குதலால்)பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் , கோ-ஆப் நிறுவனத்தைச் சேர்ந்த 65 லட்சம் உறுப்பினர்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருந்தார். கேஎன்பி நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஹேக்கர்கள் முதலில் ஒரு ஊழியரின் பாஸ்வோர்டை யூகித்து, பின்னர் நிறுவனத்தின் கணினி அமைப்பிற்குள் நுழைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் அவர்கள் நிறுவனத்தின் தரவை குறியாக்கம் செய்து அதன் உள் அமைப்புகளை முடக்கியுள்ளனர். ஒரு பணியாளரின் பலவீனமான பாஸ்வோர்ட், நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை அந்த பணியாளரிடம் சொல்லவில்லை என்று கேஎன்பி இயக்குனர் பால் அபோட் கூறுகிறார். "நிறுவனங்களும் அமைப்புகளும், தங்கள் கணினி அமைப்புகளை பாதுகாக்க, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் (NCSC) தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் கூறுகிறார். சர்வதேச சைபர் ஹேக்கிங் கும்பல்களுடன் போராடும் குழுவைச் சந்திக்க, பிபிசி பனோரமா குழுவிற்கு தேசிய சைபர் பாதுகாப்பு மையம் அனுமதி வழங்கியது. 'ஒரு சிறிய தவறு எங்களை பாதித்துவிட்டது' படக்குறிப்பு,பால் அபோட்டின் நிறுவனம் கேஎன்பி சைபர்தாக்குதலுக்கு ஆளானது. 2023 ஆம் ஆண்டில், கேஎன்பி நிறுவனம் 500 லாரிகளை இயக்கியது. அதில் பெரும்பாலானவை 'Knights of Old' என்ற பிராண்டின் கீழ் இயங்கின. தொழில்துறையின் தரநிலைகளை, தனது நிறுவனத்தின் ஐடி துறை பின்பற்றுவதாகக் கூறும் அந்த நிறுவனம், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக காப்பீட்டுக் கொள்கையும் எடுத்துள்ளது. ஆனால், 'அகிரா' என்ற ஹேக்கர் குழு, அந்த அமைப்பை உடைத்து, வணிகத்தை இயக்கத் தேவையான முக்கியமான தரவுகளை ஊழியர்கள் அணுக முடியாதபடி தடுத்தது. தரவை திரும்பப் பெற விரும்பினால், நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று ஹேக்கர்கள் கூறியுள்ளனர். "நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தின் உள் கட்டமைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்துவிட்டது என்று அர்த்தம். கண்ணீரையும் கோபத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நேர்மறையான உரையாடலை நடத்த முயற்சி செய்யுங்கள்" என்று நிறுவனத்தை மீட்க வேண்டுமென்றால் அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என்று கூறிய ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஹேக்கர்கள் தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், இத்தகைய வழக்குகளை கையாளும் நிபுணர்கள், அது மில்லியன் கணக்கான பவுண்டுகளாக இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர். தங்கள் அமைப்பு ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய சைபர் தாக்குதலை எதிர்கொள்வதாக, NCSC - தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (National Cyber Security Centre) கூறுகிறது. தேசிய சைபர் பாதுகாப்பு மையம் என்பது GCHQ (Government Communications Headquarters) என்ற பிரிட்டனின் மூன்று முக்கிய பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று. MI5 மற்றும் MI6 ஆகியவை அதன் மற்ற இரண்டு அமைப்புகளாக உள்ளன. தினசரி நிகழும் சைபர் தாக்குதல்களைக் கையாளும் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் குழுவை சாம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழிநடத்துகிறார். "ஹேக்கர்கள் புதிதாக எதையும் செய்யவில்லை," என்கிறார் சாம். அவர்கள் வெறுமனே ஒரு பலவீனமான இணைப்பைத் தேடுவதாகக் கூறும் அவர், "அவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படக்கூடிய நிறுவனங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எப்போது அவர்களை குறிவைத்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள்" என்றும் பிபிசி பனோரமாவிடம் குறிப்பிடுகிறார். 'தாக்குதல் நடத்துபவர்கள் மிக அதிகம், அவர்களைத் தடுக்கக் கூடியவர்கள் மிகக் குறைவு' படக்குறிப்பு,நிறுவனங்கள் தங்கள் சைபர் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனக் கூறுகிறார் பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன். தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிபவர்கள் இதுபோன்ற தாக்குதல்களை அடையாளம் காண உளவுத்துறை ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் கணினி அமைப்பிலிருந்து ஹேக்கர்களை அகற்றி அவர்களுடைய மென்பொருளை நிறுவ முயற்சிக்கின்றனர். ஜாக் (அவரது உண்மையான பெயர் மாற்றபட்டுள்ளது) சமீபத்திய சம்பவத்தின் போது இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஹேக்கர்களின் தாக்குதலை முறியடித்துள்ளார். "தாக்குதல் எப்படியானதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே சேதத்தை முடிந்தவரை குறைக்க விரும்புவீர்கள். குறிப்பாக நீங்கள் வெற்றி பெற்றால் அது உற்சாகமாக இருக்கும்" என்கிறார் ஜாக் . தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (National Cyber Security Centre) பாதுகாப்பு அடுக்கை மட்டுமே வழங்க முடியும் என்று கூறுகிறது. இந்த மென்பொருள் கடத்தல் முறை என்பது வேகமாக வளர்ந்து வரும், லாபம் நிறைந்த ஒரு சைபர் குற்றம் (இணையவழியில் நடக்கும் குற்றம்) என்பது அனைவருக்கும் தெரியும். "இதில் ஈடுபடுபவர்கள் அதிகமாக இருப்பதும், எங்களைப் போன்றவர்கள் மிகக் குறைவாக இருப்பதும், இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஒரு காரணம்" என்று சாம் கூறுகிறார். நிறுவனங்கள் தாக்குதல்களை அல்லது அவர்கள் கேட்கும் தொகைகள் குறித்து புகாரளிக்க வேண்டிய கட்டாயம் இல்லாததால், எத்தனை நிறுவனங்கள் ஹேக்கர்களுக்கு மீட்புத் தொகையை செலுத்துகின்றன என்பதற்கான தரவு கிடைப்பது கடினம். ஆனால், அரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு பிரிட்டனில் வணிகம் செய்யும் நிறுவனங்கள் மீது இதுபோன்ற 19,000 தாக்குதல்கள் நடந்துள்ளன எனத் தெரியவருகிறது. பிரிட்டனில் வழக்கமாக சுமார் 4 மில்லியன் யூரோவை அவர்கள் மீட்புத் தொகையாக கேட்கிறார்கள் என்று தொழில்துறை ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்களால் மட்டுமே அதை செலுத்த முடிகின்றது. "கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் நடந்த சைபர் தாக்குதல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்," என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் கூறுகிறார். குற்றவாளிகள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை மறுக்கும் அவர், நிறுவனங்கள் தங்களது சைபர் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். ஆனால் தடுப்பு நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை என்றால், தேசிய குற்றவியல் நிறுவனத்தின் (NCA) இரண்டாவது குழு குற்றவாளிகளைப் பிடிக்க முயல்கிறது. ஹேக்கிங் என்பது ஒரு குற்றமாக இருப்பினும், அதில் நிறைய பணம் சம்பாதிக்க முடிவதால், இது அதிகரித்து வருகிறது என்கிறார் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் தலைவரான சுசான் கிரிம்மர். அவரது பிரிவு, எம்&எஸ் நிறுவனத்தின் ஹேக்கிங் சம்பவம் குறித்து ஆரம்பகட்ட மதிப்பாய்வை நடத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பிரிவுக்குப் பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு வாரமும் சுமார் 35 முதல் 40 ஹேக் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக கிரிம்மர் கூறுகிறார். "இந்தப் போக்கு தொடர்ந்தால், பிரிட்டனின் மென்பொருள் கட்டமைப்புத் தாக்குதல்களுக்கு இதுவே மிக மோசமான ஆண்டாக இருக்கும் என்று நான் கணித்துள்ளேன்," என்றும் அவர் பகிர்ந்துகொண்டார். 'ஹேக்கிங் எளிதாகி வருகிறது' படக்குறிப்பு, பிரிட்டனில் உள்ள தேசிய குற்றவியல் அமைப்பின் குழுத் தலைவரான சுசான் கிரிம்மர், ஹேக்கிங் மூலம் அதிகமான பணம் கிடைப்பதால் அது அதிகரித்து வருவதாகக் கூறுகிறார். இப்போது ஹேக்கிங் செய்வது மிகவும் எளிதாகி வருகிறது. சில உத்திகளில் கணினியே தேவைப்படுவதில்லை. உதாரணமாக, ஐடி உதவி மையங்களுக்கு அழைப்பு விடுத்து, தாக்குதலைத் தொடங்கும் வழியும் உள்ளது. "இது தாக்குதல்களுக்கான தடைகளைக் குறைத்துள்ளது," எனும் கிரிம்மர், "இப்போது குற்றவாளிகள், எந்தவொரு தொழில்நுட்ப திறனும் இல்லாமல், தாக்குதலுக்குத் தேவையான கருவிகள் மற்றும் சேவைகளை எளிதாக அணுகுகிறார்கள்" என்றும் தெரிவித்தார். 'எம்&எஸ்' நிறுவனத்தின் கணினி அமைப்புக்குள் ஹேக்கர்கள் ஊடுருவி, மோசடி வழியாக, அவர்கள் உள் அமைப்புகளை அணுகும் அனுமதியைப் பெற்றனர். இதனால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன, விநியோகங்கள் தாமதமானது, அலமாரிகள் காலியாக இருந்தன, வாடிக்கையாளர் தரவுகளும் திருடப்பட்டன. இன்றைய இளைய தலைமுறை ஹேக்கர்கள், "கேமிங் வழியாக சைபர் குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்." இது அவர்களின் ஒரு புதிய சிறப்பியல்பாக பார்க்கப்படுகிறது என்கிறார் தேசிய குற்றவியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜேம்ஸ் பாபேஜ். இதுபோன்ற சூழ்நிலையில் நிறுவனத்தை மீட்பதற்கான தொகையை செலுத்த வேண்டுமா? படக்குறிப்பு, "இப்போது குற்றவாளிகள், எந்தவொரு தொழில்நுட்ப திறனும் இல்லாமல், தாக்குதலுக்குத் தேவையான கருவிகள் மற்றும் சேவைகளை எளிதாக அணுகுகிறார்கள்" "மென் திறன்கள்" (soft skills) மூலம் உதவி மையங்களை ஏமாற்ற முடியும் என்பதை இளைய தலைமுறை ஹேக்கர்கள் உணர்ந்துள்ளார்கள்" என்று கூறும் ஜேம்ஸ் பாபேஜ், "இது நிறுவனங்களின் கணினி அமைப்புகளுக்குள் நுழைய அவர்களுக்கு உதவுகிறது" என்று விளக்குகிறார். அமைப்புக்குள் நுழைந்த பிறகு, ஹேக்கர்கள் டார்க் நெட்டிலிருந்து வாங்கிய மென்பொருளைப் பயன்படுத்தி, தரவை திருடி, கணினி அமைப்புகளை முடக்குகிறார்கள் . "ரான்சம்வேர் என்பது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சைபர் குற்ற அச்சுறுத்தலாகும். இது பிரிட்டன் உட்பட உலகம் முழுவதற்கும், மேலும் தேசிய பாதுகாப்பிற்கும் ஆபத்தாக இருக்கிறது" என்கிறார் ஜேம்ஸ் பாபேஜ். இதே கருத்தைத் தான் மற்றவர்களும் முன்வைக்கின்றனர். டிசம்பர் 2023 இல், பிரிட்டன் தேசிய பாதுகாப்பு உத்தி குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழு, "எந்த நேரத்திலும் பேரழிவு தரும் ரான்சம்வேர் தாக்குதல் நடப்பதற்கு அதிக ஆபத்து" இருப்பதாக எச்சரித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டனின் தேசிய தணிக்கை அலுவலகம் (NAO), பிரிட்டனில் சைபர் அச்சுறுத்தல் தீவிரமானது என்றும், வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. நிறுவனங்கள், "அவை முன்னெடுக்கும் அனைத்து முடிவுகளிலும் சைபர் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ரிச்சர்ட் ஹார்ன் கூறுகிறார். இந்த சைபர் ஹேகிங்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிறுவனத்தை மீட்க, ஹேக்கர்கள் கேட்கும் தொகையை செலுத்துவதை, தான் ஊக்குவிப்பதில்லை என்று ஜேம்ஸ் பாபேஜ் கூறுகிறார். "இதுபோன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தீர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், மீட்கும் தொகையை செலுத்துவது இந்த குற்றங்களை மேலும் ஊக்குவிக்கிறது" என்றும் அவர் குறிப்பிடுகிறார். அரசாங்கம், அதன் நிறுவனங்கள் மீட்கும் பணத்தை செலுத்துவதை தடுக்கும் ஒரு விதியை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேபோல், இப்போது ரான்சம்வேர் தாக்குதல்கள் நிகழ்ந்தால், தனியார் நிறுவனங்கள் அவற்றைக் குறித்துப் புகாரளிக்க வேண்டும், மேலும் மீட்கும் தொகையை செலுத்துவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டும். நார்தாம்ப்டன்ஷையரில் உள்ள கேஎன்பி நிறுவனத்தின் இயக்குனர் பால் அபோட், சைபர் அச்சுறுத்தல்களின் ஆபத்துகள் குறித்து மற்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். நிறுவனங்கள் இப்போது தங்களிடம் அதிநவீன ஐடி பாதுகாப்பு, அதாவது ஒரு வகையான 'சைபர் எம்ஓடி' இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார். "குற்றச் செயல்களுக்கு எதிராக, வலுவான நடவடிக்கைகள் எடுக்க அனுமதிக்கும் சட்டங்கள் இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார். பல நிறுவனங்கள், இத்தகைய சைபர் குற்றங்களைப் புகாரளிக்காமல், மௌனமாக குற்றவாளிகளுக்குப் பணத்தையும் செலுத்துகின்றன என்று கூறுகிறார் கேஎன்பி நிறுவனத்துக்காக பணியமர்த்தப்பட்ட சைபர் நிபுணர் பால் காஷ்மோர். நிறுவனங்கள் அனைத்தையும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும்போது, அவை அந்தக் கும்பல்களுக்கு அடிபணிகின்றன. "இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம். குற்றவாளிகளைப் பிடிக்க, மிகக் குறைவாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்று கூறுகிறார் பால் காஷ்மோர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14e40jr2j4o
-
பாதுகாப்பு பிரதியமைச்சராக இராணுவ அதிகாரி பதவிவகிப்பதால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு - அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ
Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 11:21 AM பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 'இங்கு ஒரு பிரச்சினை இருப்பதாக நாங்களும் கருதுகின்றோம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை அவரது அமைச்சு கையாளவில்லை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் பொலிஸாரும் சிஐடியினருமே விசாரணைகளை கையாள்கின்றனர் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ ஆனால் அவர் பிரதியமைச்சராக பதவி வகிக்கின்றார், இதனால் விசாரரணைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டும், உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் பிரதியமைச்சராக பதவி வகிப்பதால் மக்கள் இயல்பாகவே விசாரணைகள் மீது அவர் செல்வாக்கு செலுத்தலாம் என கருதுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக விசாரணைகளின் நம்பகதன்மை குறித்த கேள்வி எழும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிற்கு தொடர்பிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ கிழக்கு மாகாணத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றியவேளை ஜயசேகரவிற்கு இது குறித்து தெரிந்திருந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக அவருக்கு சில தகவல்கள் கிடைத்திருந்ததா? இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் அவர் சிஐடியினருக்கு வாக்குமூலம் தெரிவித்தது எனக்கு நினைவில் இருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும், விசாரணைகளிற்கு பின்னரே அவருக்கு தொடர்புள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221248
-
கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம்; வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் துமிந்த திசாநாயக்க 29 JUL, 2025 | 12:12 PM முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் வழக்கிலிருந்து விடுதலை செய்து கல்கிஸ்ஸை நீதவான் சத்துரிக்கா டி சில்வா இன்று செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் சந்தேக நபராக குறிப்பிடப்படும் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மே மாதம் 23 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221258
-
ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள் - வைரல் புகைப்படத்தின் உண்மையான பின்னணி
பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, பிரதீப் நேகி (இடது) மற்றும் கபில் நேகி (வலது) ஆகிய இரு சகோதர்களை சுனிதா சௌஹான் (நடுவில்) மணந்தார் கட்டுரை தகவல் சௌரப் சௌஹான் சிர்மெளரிலிருந்து பிபிசிக்காக 28 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தின் ஷிலாயி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா செளஹான் என்ற பெண், பிரதீப் நேகி, கபில் நேகி ஆகிய இரண்டு சகோதரர்களை மணந்தார். பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகப் பதிவுசெய்யப்பட்ட ஹாடி சமூகத்தின் 'ஜோடிதாரா' என்ற பழங்கால நடைமுறையின்படி இந்த பலதார திருமணம் நடைபெற்றது. உள்ளூர் மொழியில் 'ஜோடிதாரா' அல்லது 'ஜாஜ்டா' என்று அழைக்கப்படும் இந்த வகைத் திருமணம், சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் பாரம்பரியம் ஆகும். சிர்மௌர் மாவட்டம் டிரான்ஸ் கிரி பகுதியில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவு வகைகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனம் என திருமணம் களைகட்டியிருந்தது. கலாசார பாரம்பரியத்திற்கான உதாரணமாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இந்த திருமணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணம் குறித்து தம்பதியினரின் குடும்பத்தினரிடம் பேச பிபிசி பலமுறை முயன்றது, ஆனால் அவர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, மாநில அரசின் ஜல் சக்தி துறையில் பிரதீப் நேகி பணிபுரிகிறார், கபில் நேகி வெளிநாட்டில் விருந்தோம்பல் துறையில் பணிபுரிகிறார் பழமையான பாரம்பரிய சடங்கு ஜோடிதாரா சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்தவர் மணமகள். மணமகன்கள் இருவரும் குன்ஹாட் கிராமத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷிலாய் கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி மாநில தலைநகர் சிம்லாவிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டு குடும்பங்களும் ஹாடி சமூகத்தைச் சேர்ந்தவை. இந்த சமூகத்தினர், சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ் கிரி பகுதியிலும், உத்தரகண்டின் ஜெளன்சர்-பாவர் மற்றும் ரவாய்-ஜெளன்பூர் பகுதிகளிலும் வசிக்கின்றனர். இந்த சமூகத்தினரிடைய பல கணவர் மணம் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. இந்த 'ஜோடிதாரா' நடைமுறை குடும்பத்திற்குள் ஒற்றுமையைப் பேணுவதற்காகவும், பரம்பரையாக வரும் சொத்து பிரியாமல் ஒன்றாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுவதாக ஹாடி சமூகத்தினர் நம்புகின்றனர். ஒரு பெண், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சகோதரர்களை மணந்து கொள்வது இயல்பானது. திருமணமானவுடன், வீட்டுப் பொறுப்புகளை பரஸ்பர ஒப்புதலுடன் மேற்கொள்வதற்கு இந்தத் திருமண நடைமுறை உதவுவதாக நம்பப்படுகிறது. சிர்மௌரைத் தவிர, சிம்லா, கின்னௌர் மற்றும் லாஹெளல் ஸ்பிதியின் சில பகுதிகளிலும் இந்த பாரம்பரியம் காணப்படுகிறது. "ஜோடிதாரா பாரம்பரியம் எங்களது அடையாளம். இது, நிலம் உட்பட சொத்துக்கள் பிரிவதைத் தடுக்கவும், வரதட்சணை முறையைத் தவிர்க்கவும், சகோதரர்களிடையே ஒற்றுமையைப் பேணவும், குழந்தைகளை வளர்க்கவும் உதவுகிறது" என உள்ளூர்வாசியான கபில் செளகான் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஷிலாயி பகுதியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும், நான்கு முதல் ஆறு குடும்பங்கள் இந்த நடைமுறையை இன்றும் பின்பற்றுகின்றன. அண்மையில் நடைபெற்ற திருமணத்தைப் பற்றி கபில் செளகானிடம் கேட்டோம். "இதுபோன்ற திருமணங்கள் நீண்ட காலமாகவே நடைபெறுகின்றன. இதுபற்றி எனக்கு தெரியும். இது புதுமாதிரியான திருமணம் இல்லை. இது ஒரு வழக்கமான பாரம்பரியம். இது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம், மணமகள், மணமகன் மற்றும் அவர்களது குடும்பங்கள் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டால், மற்றவர்களுக்கு இதில் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். "இந்த திருமண முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், திருமணம் செய்துக் கொள்ளாமலே ஒன்றாக வாழும் 'லிவ்-இன்' உறவுகளிலும் மக்கள் வசதியாக இருக்கிறார்கள்." பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, இந்த திருமணம் கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகும் கலாசார பெருமை ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் ஒரு பெண் ஒரே மணமேடையில் இருவரைத் திருமணம் செய்துக் கொண்டது மட்டுமல்ல. மணமகள் மற்றும் அவரது கணவர்கள் இருவரும் படித்தவர்கள். மணமகன்களில் ஒருவரான பிரதீப் நேகி ஹிமாச்சல் பிரதேச மாநில அரசின் ஜல் சக்தி துறையில் பணிபுரிகிறார், கபில் நேகி வெளிநாட்டில் விருந்தோம்பல் துறையில் பணிபுரிகிறார். இந்தத் திருமணம் குறித்து பிபிசியிடம் பேசிய சுனிதா செளகான், "இந்தத் திருமணம் என்னுடைய சொந்த முடிவு. இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், தெரிந்துதான் அதை ஏற்றுக்கொண்டேன்" என்று கூறினார். மணமகன்களில் ஒருவரான பிரதீப் நேகி, "எங்கள் கலாசாரத்தில், இது நம்பிக்கை, அக்கறை மற்றும் பகிரப்பட்ட பொறுப்புக்கான உறவு" என்று சொல்கிறார் . மணமகன்களில் மற்றொருவரான கபில் நேகி, "நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், இந்த உறவை நான் மதிக்கிறேன். என் மனைவிக்கு நம்பிக்கையையும் அன்பையும் கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார். இந்த திருமணம் பாரம்பரிய ரமல்சார் பூஜை முறைப்படி நடந்தது. இந்த முறையில், சப்தபதி முறையில் தீயை வலம் வருவதற்கு பதிலாக, 'சின்ஜ்' எனப்படும் சத்தியப் பிரமாணம் செய்யப்படுகிறது. நெருப்பின் முன் நின்று மணமக்கள் ஒன்றாக வாழ்வதாக சத்தியம் செய்கின்றனர். வழக்கமான திருமணங்களில் மணமகன் ஊர்வலமாக மணமகளின் வீட்டிற்கு செல்வார். ஆனால், ஜோடிதாரா பாரம்பரியத்தில், மணமகள் மற்றும் உற்றார் உறவினர்கள் ஊர்வலமாக மணமகன் வீட்டிற்குச் செல்வார்கள். இந்த வகையிலும், ஜோடிதாரா பாரம்பரியம் பிற இந்திய திருமண மரபுகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, உத்தரகண்டில் உள்ள ஹாடி சமூகத்தினர் ஜெளன்சாரி சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், மேலும் அவர்களுக்கு இது போன்ற மரபுகள் உள்ளன வாஜிப்-உல்-அர்ஸ் மற்றும் சட்ட அங்கீகாரம் ஹிமாச்சல் பிரதேசத்தில், ஜோடிதாராவின் நடைமுறை 'வாஜிப் உல் அர்ஸ்' எனப்படும் காலனித்துவ கால வருவாய் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணம், கிராமங்களின் சமூக மற்றும் பொருளாதார நடைமுறைகளைப் பதிவுசெய்து ஜோடிதாராவைத் ஹாடி சமூகத்தின் பாரம்பரியமாக அங்கீகரிக்கிறது. விவசாய நிலங்கள் பிரிந்துபோவதைத் தடுப்பதும், குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதும் இந்த நடைமுறையின் நோக்கமாகக் கூறப்படுகிறது. ஒருதார மணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று இந்து திருமணச் சட்டம் கூறுவதால் தான், இத்தகைய திருமணங்களின் சட்டப்பூர்வ நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. "இரண்டு திருமணங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால், 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS) பிரிவு 32 ஆகியவை பொருந்தாது" என்று ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுஷில் கௌதம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கலாசாரம் மற்றும் வரலாற்று பின்னணி ஜோடிதாரா பாரம்பரியத்தின் வேர்கள், டிரான்ஸ் கிரி பகுதியில் ஆழமாக வேரூன்றியிருப்பதாக நம்பப்படுகிறது. மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலியுடன் கதையுடன் பாரம்பரிய வேர்கள் இணைக்கப்பட்டுள்ளது, அதனால்தான் பலர் இதை 'திரௌபதி பிரதா' என்றும் அழைக்கிறார்கள். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சரான டாக்டர் ஒய்.எஸ். பர்மார், ஜோடிதாரா பாரம்பரியத்திற்குப் பின்னால் உள்ள சமூக மற்றும் பொருளாதார காரணங்களை 'Polyandry in the Himalayas' என்ற தனது புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, 'மலைப்பாங்கான பகுதிகளின் கடினமான சூழ்நிலைகளில் இந்த நடைமுறை வளர்ந்தது, அங்கு விவசாய நிலங்களை ஒன்றாக வைத்திருப்பது அவசியம்.' "இந்த நடைமுறை, சமூக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பதுடன் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் மரபுகளை பிரதிபலிக்கிறது. இது சமூக மதிப்புகளைப் பாதுகாப்பதாகவே பார்க்கப்பட வேண்டும்" என்று ஹாடி சமூகத்தைச் சேர்ந்த அறிஞரும் சமூக ஆர்வலருமான அமிசந்த் ஹாடி கூறுகிறார். மத்திய ஹாடி குழுவின் பொதுச் செயலாளர் குந்தன் சிங் சாஸ்திரி கூறுகையில், இந்த பாரம்பரியம் மிகவும் பழமையானது என்றும், குடும்ப ஒற்றுமையைப் பேணுவதே இதன் நோக்கம் என்றும் கூறுகிறார். 'பல கணவர் மணம்' தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் இந்தத் திருமணத்திற்குப் பிறகு, சமூக மற்றும் தார்மீக ரீதியிலான விவாதங்களும் தொடங்கிவிட்டன. பல கணவர் மணம் என்பதை, ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் விஷயமாகக் கருதுகின்றனர். இருந்தபோதிலும், இதுபோன்ற திருமணங்கள், பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று கூறுகின்றன. "ஜோடிதாரா நடைமுறை பெண்களை சுரண்டுவதை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது" என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தவாலே கூறினார். இது அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு எதிரானது என ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் டாக்டர் ஓம்கார் ஷாத் கூறினார். ஹிமாச்சல் பிரதேச அரசின் தொழில்துறை அமைச்சரும் ஷிலாயி எம்எல்ஏவுமான ஹர்ஷ்வர்தன் செளகான், "இது ஷிலாயி-இன் பழைய பாரம்பரியம். பிரதீப்பும் கபிலும் இந்த பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருப்பதன் மூலம் தங்கள் கலாசார பாரம்பரியத்தை மதித்துள்ளனர்" என்று கூறுகிறார். பட மூலாதாரம்,ALOK CHAUHAN படக்குறிப்பு, சிர்மௌரின் கிரிபார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஹாடி சமூகத்தைச் சேர்ந்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் ஹாடி சமூகத்தின் பிற திருமண பழக்கவழக்கங்கள் ஜோதிதாராவைத் தவிர, ஹாடி சமூகத்தில் மேலும் நான்கு பாரம்பரிய திருமண பழக்கவழக்கங்கள் வழக்கத்தில் உள்ளன. குழந்தை திருமணம்: தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே குழந்தையின் திருமணம் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும், குழந்தை வளர்ந்து தனது சம்மதத்தை அளித்த பின்னரே திருமணச் சடங்குகள் நடைபெறும். ஜாஜ்டா திருமணம்: இந்த வகை திருமணத்தில், மணமகன் தரப்பினர் திருமணத்தை முன்மொழிவார்கள். பெண் வீட்டாரின் சம்மதம் பெற்ற பிறகு, திருமணச் சடங்குகள் நடைபெறும். இந்த மரபிலும், 'சின்ஜ்' எனப்படும் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு மணமக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். கிதையோ திருமணம்: திருமணமான பெண் தனது கணவன் வீட்டாருடனான உறவை முறித்துக் கொண்டு வேறொருவரை மணப்பதை கிதையோ திருமணம் என்று அழைக்கின்றனர். ஹார் திருமணம்: ஒரு பெண் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு ஆணைத் திருமணம் செய்தால் அதை ஹார் திருமணம் என்று அழைக்கின்றனர். பட மூலாதாரம், PUNEET BARNALA/BBC காலத்திற்கு ஏற்ப மாறும் மரபு ஜோடிதாரா வகை திருமணங்கள் தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர். "இந்த வழக்கம் தற்போது ஒரு சில கிராமங்களில் மட்டுமே காணப்படுகிறது, பெரும்பாலான திருமணங்கள் ஆரவாரமின்றி அமைதியாக நடைபெறுகின்றன" என்று சமூக ஆர்வலர் ரமேஷ் சிங்டா கூறுகிறார். இருப்பினும், இந்த சமீபத்திய திருமணம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் ஹாடி சமூகத்திற்கு வழங்கப்பட்ட பட்டியல் பழங்குடி அந்தஸ்து காரணமாகவும் இது அதிகரித்துள்ளது. ஹாடி சமூகத்தின் மொத்த மக்கள் தொகை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லை. ஆனால், இந்த சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 2.5 முதல் 3 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்பட்டது. இதில் சிர்மௌரின் டிரான்ஸ் கிரி பகுதியைச் சேர்ந்த சுமார் 1.5 முதல் 2 லட்சம் பேர் வரை என்று கூறப்பட்டது. ஹாடி சமூகத்தினரின் பின்னணி சிர்மௌர் மாவட்டம் கிரிபார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த பகுதியில் நிரந்தர சந்தை இல்லை, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வந்த சமூகத்தினர், பொருட்களை விற்பதற்காக தற்காலிக சந்தைகளை அமைத்தனர். இப்படி சந்தை அமைத்த இந்த சமூகம் காலப்போக்கில், ஹாடி என்று அறியப்பட்டது. ஹாடி என்றால் சந்தை என்று பொருள் ஆகும். ஹாடி என்ற பெயர், உள்ளூர் ஹாட் பஜாரில் வீட்டுப் பொருட்களை விற்கும் பழைய பாரம்பரியத்துடன் தொடர்புடையது என சமூக ஆர்வலர் ரமேஷ் சிங்டாவின் கூறுகிறார். உத்தரகண்டில் உள்ள ஹாட்டி சமூகத்தினர் ஜெளன்சாரி சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறார்கள், இந்த இரு சமூகத்தினரின் மரபுகள் மிகவும் ஒத்தவை. ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹாடி சமூகத்திற்கு மத்திய அரசு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கியது. இருப்பினும், 2024 ஜனவரியில், 'கிரிபார் பட்டியல் சாதி பாதுகாப்புக் குழு' தாக்கல் செய்த மனுவின் பேரில் ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றம் இந்த முடிவை நிறுத்தி வைத்தது. ஹாடி சமூகத்திற்கு எஸ்.டி அந்தஸ்து வழங்குவது தற்போதுள்ள இடஒதுக்கீடு முறையைப் பாதிக்கலாம் மற்றும் பட்டியல் சாதியினரின் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று குழு கூறுகிறது. இந்த சமூகம் பட்டியலின பழங்குடி அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், அதற்கான வசதிகளைப் பெறுவதில்லை. உத்தரகண்ட் (அன்றைய ஒருங்கிணைந்த உத்தரப் பிரதேசம்) மாநிலத்தின் ஹாடி சமூகத்தினர் 1967ஆம் ஆண்டிலேயே பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4ge4j32736o
-
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த 54 வயது சகோதரன் படுகொலை!
Published By: DIGITAL DESK 2 29 JUL, 2025 | 12:35 PM யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில், நான் குறி சொல்லும் வேலை செய்து வருகிறேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை அவர்கள் உள்ளே வந்து என்னை கட்டி போட்டுவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தவேளை தம்பி சடலமாக காணப்பட்டார் என கூறியுள்ளார். இருப்பினும் குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்தில் திருப்தியடையாத யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/221261
-
"கடல் மீன்களில் நச்சு உலோகங்கள்" : இலங்கை அருகே 2021-ல் மூழ்கிய கப்பலால் ஏற்பட்ட பின் விளைவுகள் என்ன?
பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, எக்ஸ்-பிரஸ் கப்பல் விபத்துக்குப் பிறகு கொழும்பு கடற்கரையில் பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) மற்றும் பிற குப்பைகளை அகற்ற இலங்கை கடற்படை வீரர்கள் பணியாற்றினர். புகைப்படம்: மே 2021 கட்டுரை தகவல் எழுதியவர், லியானா ஹோசியா & சரோஜ் பதிரானா நீர்கொழும்பு, இலங்கை 28 ஜூலை 2025 நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு சரக்குக் கப்பல் விபத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய பிளாஸ்டிக் கசிவுக்கு பிறகு, இன்னும் இலங்கை கடற்கரைகளின் மணலில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட சிறிய பிளாஸ்டிக் உருண்டைகளை (நர்டுல்ஸ்-nurdles) தன்னார்வலர்கள் பிரித்தெடுத்து வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டு எக்ஸ்-பிரஸ் பேர்ல் சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பில்லியன் கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்), டன் கணக்கில் எரிபொருள், அமிலம், காஸ்டிக் சோடா, ஈயம், செப்புக் கழிவு, லித்தியம் பேட்டரிகள், எபோக்சி பிசின் ஆகியவை கடலுக்குள் சிதறியதாகக் கருதப்படுகிறது. இவை அனைத்தும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை. அந்த விபத்தினால் ஏற்பட்ட சேதம் உடனடியாகத் தெரிந்தது. பிளாஸ்டிக் துகள்கள் கடற்கரையை வெண்மையாக மாற்றின. இறந்த ஆமைகள், டால்பின்கள், மீன்கள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின. ஆனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு முன்பு நினைத்ததைவிட, மிக நீண்ட காலம் நீடிக்கலாம் என விஞ்ஞானிகள் தற்போது எச்சரிக்கின்றனர். அதிகரிக்கும் நச்சுத்தன்மை இதுவரை கோடிக்கணக்கான பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) அகற்றப்பட்டிருக்கலாம். ஆனால், மணலில் ஆழமாக மறைந்திருக்கும் பயறு அளவிலான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களைக் கண்டுபிடிப்பது இப்போது மிகவும் கடினமாக உள்ளது. மோசமான விஷயம் என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் துகள்கள் இன்னும் அதிக நச்சுத்தன்மையுடையதாக மாறுவதாக புதிய ஆராய்ச்சி கூறுகிறது. "அவை கடலின் மாசுபாட்டை உறிஞ்சும் ஒரு பெரிய ரசாயன ஸ்பாஞ் போல இருக்கின்றன," என்று மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் டேவிட் மெக்சன் கூறுகிறார். நர்டில்கள் என்பது பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க உருக்கப்படும் மூலப்பொருட்கள். உலகளாவிய பிளாஸ்டிக் விநியோகத்தில் இவற்றைப் பெரிய அளவில் கொண்டு செல்வது, வழக்கமான ஒன்று தான். துபாய் துறைமுகத்திலிருந்து மலேசியாவின் போர்ட் கிளாங்கிற்குப் பயணிக்கும்போது, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரிக் அமிலம் கொண்ட ஒரு கொள்கலன் கசிந்து உலோகப் பெட்டியை அரிப்பதாக குழுவினர் கண்டனர். ஆனால், புகையை வெளியிடுகின்ற , கசியும் கொள்கலனை நிறுத்த கத்தார் மற்றும் இந்திய துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. 2021ம் ஆண்டு,மே 19ம் தேதி இரவு , அக்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழையும்போது, அதில் உள்ள கொள்கலன் எட்டு நாட்களாக மணிக்கு ஒரு லிட்டர் வீதம் அமிலம் கசிந்து கொண்டிருந்தது. பின்னர் அக்கப்பல் அவசரமாக துறைமுகத்தில் நிறுத்தப்பட அனுமதி கோரியது, ஆனால் காலையில் சிங்கப்பூர் கொடியுடைய அந்தக் கப்பல் தீப்பிடித்தது. அந்தக் கப்பலின் குழுவினர், இலங்கை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்களின் தீயணைப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், தீ முழுக் கப்பலுக்கும் பரவியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு கப்பல் மூழ்கியது. அதன் சரக்குகள் மற்றும் எரிபொருள், இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து, ஒன்பது கடல் மைல் தொலைவில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கே நீர்கொழும்புக்கும் இடையில் கடலில் சிந்தியது. படக்குறிப்பு, இலங்கையின் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்களை முதித கட்டுவாலா காட்டுகிறார். "போர் திரைப்படத்தைப் போல இருந்தது" "அடுத்து நடந்தது ஒரு போர் திரைப்படத்தைப் போல இருந்தது," என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும், பேர்ல் ப்ரொடெக்டர்ஸ் என்ற உள்ளூர் அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான முதித கட்டுவாலா கூறினார். இந்த அமைப்பு, இலங்கை அரசு அதிகாரிகள் நடத்திய, கப்பல் உரிமையாளர்களின் நிதியுதவியுடன் இயங்கிய துப்புரவுப் பணியில் தன்னார்வமாக பங்கேற்றது. "அதே மாதிரியான பாதிப்புகளுடன் ஆமைகள் கரையோரத்தில் ஒதுங்கத் தொடங்கின. அவற்றின் தோலில் இருந்த தீக்காயங்கள் உரிந்து கொண்டிருந்தது. அவற்றின் மூக்கும் கண்களும் சிவந்து வீங்கி இருந்தன. டால்பின்களும் கரை ஒதுங்கின. அவற்றின் தோலும் சிவந்து உரிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம்" என்றார் முதித கட்டுவாலா. கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் , "பனி போல" இருந்தன. "அதைப் பார்க்கவே பயமாக இருந்தது," என்றும் அவர் கூறினார். அதனை சுத்தம் செய்யும் பணி தீவிரமாகத் தொடங்கியது. தொடக்கத்தில், கட்டுவாலாவும் அவரது சக தன்னார்வலர்களும் சேர்ந்து, ஒவ்வொரு நாளும் "300–400 கிலோ நுண்துகள்களை" சேகரித்தனர். காலப்போக்கில், துப்புரவுப் பணியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உருண்டைகளின் (நர்டுல்ஸ்) அளவு இரண்டு மணி நேரத்தில் 3-4 கிலோவாகக் குறைந்தது. "பிளாஸ்டிக் உருண்டைகள் சிதறிக் கொண்டிருந்தன. மணலில் புதைந்து போனதால் அவற்றைப் பார்ப்பதே கடினமாக இருந்தது," என்று அவர் குறிப்பிடுகிறார். தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது இனி பயனளிக்காது என முடிவு செய்யப்பட்டது. எனவே, அவர்களின் பணி நிறுத்தப்பட்டு, அரசு ஏற்பாடு செய்த உள்ளூர் துப்புரவுக் குழுக்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதே நேரத்தில், பிளாஸ்டிக் உருண்டைகள் (நர்டுல்ஸ்) விலங்குகளுக்கு ஏற்கனவே தீங்கு விளைவிப்பதோடு, கசிவு அல்லது வேறு மாசு மூலங்களால் இன்னும் அதிகமான நச்சுத்தன்மை பெற்று மாசடைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்தனர். அடுத்த சில ஆண்டுகளில், அவர்கள் மாதிரிகளைச் சேகரித்து, காலப்போக்கில் ஏற்படும் தாக்கங்களைக் கண்டறிய முயன்றனர். படக்குறிப்பு, தீயில் எரிக்கப்பட்ட பிளாஸ்டிக் உருண்டைகள் தான் மிகவும் அதிகமாக மாசுபட்டவை என்று தடயவியல் வேதியியலாளர்கள் கூறுகின்றனர். பிபிசி நடத்திய புலனாய்வு 2024 நவம்பரில், பிபிசி மற்றும் வாட்டர்ஷெட் புலனாய்வுகள் 20க்கும் மேற்பட்ட மாதிரிகளை மான்செஸ்டர் பெருநகர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் வேதியியலாளர்கள் குழுவிற்கு அனுப்பின. தீயில் எரிந்த பிளாஸ்டிக் உருண்டைகள் மிகவும் மாசுபட்டிருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். அவை ஆர்சனிக், ஈயம், காட்மியம், தாமிரம், கோபால்ட், நிக்கல் போன்ற நச்சுத்தன்மையுள்ள உலோகங்களை வெளியிடுகின்றன. இவை நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானவை. "இன்னும் சுற்றி வரும் துகள்கள் சுற்றுச்சூழலில் இருந்து மாசுபாட்டை உறிஞ்சி, மேலும் நச்சுத்தன்மையுடையதாக மாறுகின்றன" என்றும், "அவற்றை கடல்வாழ் உயிரினங்கள் உட்கொள்ளும் போது, மாசுபாட்டை அவற்றுக்குள் பரப்பும்"என்றும் மெக்சன் கூறுகிறார். பேரழிவை ஏற்படுத்திய கப்பல் விபத்து நடந்த இடம் மற்றும் அதற்கு அருகிலுள்ள நீர்கொழும்பு தடாகத்தில் பிடிக்கப்பட்ட மீன்களில், கப்பலின் சரக்குகளிலும், பிளாஸ்டிக் உருண்டைகளிலும் இருந்த அதே மாசுபாடுகள் கண்டறியப்பட்டன. அதேபோல் அந்த விபத்தின் போது கண்டுபிடிக்கப்பட்ட அபாயகரமான உலோகங்கள் சிலவும் மீன்களில் காணப்பட்டன. அவை பாதுகாப்பான வரம்பை மீறியிருந்தன. இந்தப் பேரழிவு மாசுபாட்டின் மூலமாக இருக்கலாம். ஆனால் அதை நேரடியாக உறுதிப்படுத்த முடியாது. ஏனென்றால், மீன்கள் பிளாஸ்டிக் உருண்டைகளை உண்டனவா, எத்தனை உருண்டைகளை உண்டன, அல்லது மாசுபாடு வேறு மூலங்களில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "ஆனால் அந்த கடல் சூழலில் ஏற்கனவே உள்ள மாசுபாட்டுடன் சேரும்போது, இது சுற்றுச்சூழலுக்கும், அந்த கடலில் வாழும் உயிரினங்களை உணவுக்கான ஆதாரமாக நம்பியிருக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று மெக்சன் கூறுகிறார். உள்ளூர் மீனவர்கள் கூறுவது என்ன? உள்ளூர் மீனவர்கள் இந்த பேரழிவிற்கும், மீன்களின் எண்ணிக்கை குறைவதற்கும் தொடர்பு உள்ளது என்று நம்புகிறார்கள். "எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து இங்கு வரைக்கும், புதிய இளம் மீன்கள் கிடைப்பதே இல்லை," என்று மீனவர் ஜூட் சுலந்தா கூறுகிறார். ஆனால், கடலில் மூழ்கிய கப்பல் மற்றும் குப்பைகளை அகற்ற 130 மில்லியன் டாலருக்கும் மேல் செலவிட்டோம் என கப்பலின் உரிமையாளரான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் லிமிடெட் கூறுகிறது. மேலும் கடற்கரையில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காகவும், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு 20 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாகவும் அது கூறுகிறது. கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றுள்ளது என்றும், அந்த செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியான பாதிப்புகள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், பிரிட்டன் கடல்சார் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால் வரம்பிடப்பட்ட, கப்பல் உரிமையாளர் செலுத்திய தொகை நீண்டகால சேதத்தை ஈடுசெய்யப் போதாது. எனவே, அந்த வரம்பை நீக்கவும், இன்னும் அதிகமான இழப்பீடு பெறவும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. கடந்த வியாழக்கிழமையன்று , இலங்கை உச்ச நீதிமன்றம், பேரழிவால் நாடு அனுபவித்த நீண்டகால பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களுக்கு ஆரம்பகால இழப்பீடாக 1 பில்லியன் டாலர்களை நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு வரம்பு உள்ளது. ஏனெனில், எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள சிங்கப்பூர் மீது உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. மறுபுறம், இந்தத் தீர்ப்பால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கையை மதிப்பிடுவதற்காக தங்கள் சட்ட ஆலோசகர்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் அதை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ் தெரிவித்துள்ளது. கப்பல் நிறுவனம் கூறுவது என்ன? வனவிலங்குகளின் இழப்பு, சுற்றுலா, மீன்பிடித்தல் மற்றும் கப்பல் எரிந்தபோது வெளியான நச்சுப் புகையால் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பேரழிவின் மதிப்பு 6 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று சேதத்தை மதிப்பிடுவதற்கான விஞ்ஞானிகள் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரசாந்தி குணீர்தேனா கூறுகிறார். "வளிமண்டலத்தில் டையாக்ஸின் மற்றும் ஃபுரான்" என்ற புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. "இவை சுமார் 70 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்" என்கிறார் பேராசிரியர் குணீர்தேனா. ஆனால் கப்பல் நிறுவனம் இந்த மதிப்பீட்டை நிராகரிக்கிறது. கடலில் ஏற்பட்ட கசிவுகளை மதிப்பீடு செய்யும், கப்பல் துறையால் நிதியளிக்கப்படும் அமைப்பான சர்வதேச டேங்கர் உரிமையாளர்கள் மாசுபாடு கூட்டமைப்பை (ITOPF) இந்த விவகாரத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அந்த அமைப்பு, "இந்த அறிக்கை தெளிவாக இல்லை, அதில் சரியான தகவல்களும் இல்லை. நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரமின்றி உள்ளது" என தெரிவித்துள்ளது. தானும், அதன் குழுவினரும் "அமில கசிவை கையாள்வதில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும், அதே நேரத்தில் அனைத்து பாதுகாப்பு மற்றும் அவசரகால நெறிமுறைகளையும் பின்பற்றியதாகவும்" கப்பல் உரிமையாளர் கூறியுள்ளார். மறுபுறம், கப்பல் தங்கள் கடற்பரப்பை வந்தடையும் வரை, அதன் பிரச்னைகள் குறித்து தெரியாது எனவும், தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை எனவும் கொழும்பு துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. படக்குறிப்பு, பல உள்ளூர் மீனவர்கள் இப்போது தங்கள் படகுகளை விற்று வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சிப்பதாக ஜூட் சுலந்தா கூறுகிறார். இலங்கை எனும் தீவு தேசத்தின் உயிர்நாடியாக இருப்பது கடல். அதன் அழகிய தங்க நிறக் கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன, மேலும் பல தலைமுறைகளாக மீன்பிடித் தொழில் அந்நாட்டிற்கு உணவளித்து வருகிறது. ஆனால், தனது தொழிலுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று கவலைப்படுகிறார் மீனவர் சுலந்தா. "பலர் தங்கள் படகுகளை விற்று வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார்கள். பலர் சோர்வடைந்துவிட்டனர். உண்மையில், என் மகன் தான் தற்போது என்னுடன் வேலை செய்கிறார். அவனும் ஒரு மீனவர்"என்று கூறும் சுலந்தா, "ஆனால் அவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு நீதி கிடைத்திருக்க வேண்டும் என்றால், இந்நேரம் கிடைத்திருக்கும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cewy1y1kpepo
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? - இந்திய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் 28 JUL, 2025 | 05:25 PM புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார். மக்களவையில் பேசிய அவர் “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் இறையாண்மையின் அடையாளமாகும். எங்கள் நடவடிக்கைகள் முற்றிலும் தற்காப்புக்காகவே இருந்தன. ஆத்திரமூட்டும் அல்லது எல்லையை கைப்பற்றும் நோக்கங்களுக்காக அல்ல. இருப்பினும் மே 10 2025 அன்றுஇ அதிகாலை 1.30 மணியளவில் பாகிஸ்தான் ஏவுகணைகள் ட்ரோன்கள் ராக்கெட்டுகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியா மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியது. நமது எஸ்-400 ஆகாஷ் வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் தாக்குதலை முற்றிலுமாக முறியடித்தன. இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 22 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ஆயுதப்படை ஒன்பது பயங்கரவாத தளங்களின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. மே 10 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்களில் இந்திய விமானப்படை கடுமையாகத் தாக்கியபோது பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு போர் நிறுத்தத்துகுக்கு முன்வந்தது. அப்போது இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் பாகிஸ்தானின் தரப்பில் ஏதேனும் தவறு நடந்தால் இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் என்பது பிரதேசத்தைக் கைப்பற்றவோ அல்லது போரை தூண்டவோ தொடங்கப்படவில்லை மாறாக சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கவும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கவும் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதே ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம். எங்களின் ராணுவ நோக்கத்தை அடைந்ததால் போரை நிறுத்தினோம். எந்தவொரு அழுத்தத்தாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்று கூறுவது ஆதாரமற்றது முற்றிலும் தவறானது. எனது அரசியல் வாழ்க்கையில் நான் எப்போதும் பொய்களைப் பேசுவதில்லை” என்றார் மேலும் “எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் நமது விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்வி நமது தேசிய உணர்வுகளைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது ஆயுதப் படைகள் எத்தனை எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்ற கேள்வியையே அவர்கள் கேட்க வேண்டும். இந்தியா எதிரிகளின் பயங்கரவாதத் தளங்களை அழித்ததா என்றால் பதில் ஆம் என்பதுதான். நீங்கள் ஒரு கேள்வி கேட்பதாக இருந்தால் இந்த நடவடிக்கையில் நமது துணிச்சலான வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதுதான். இதற்கான பதில் இல்லை என்பதுதான். நமது வீரர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை” என்றார். https://www.virakesari.lk/article/221188
-
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பும் நிபுணத்துவமும் உள்வாங்கப்படுவது அவசியம் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தல்
Published By: VISHNU 28 JUL, 2025 | 07:15 PM (நா.தனுஜா) நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும். அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும் என சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் புதுப்பிக்கவேண்டும் எனவும் அந்த ஆணைக்குழு வேண்டுகோள்விடுத்துள்ளது. யாழ் செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் ஞாயிற்றுக்கிழமை (27) வரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுபவை உள்ளடங்கலாக 101 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை நோக்கிய பயணத்தில் இந்த மனிதப்புதைகுழி அகழ்வு மிகமுக்கியமான முதற்கட்ட செயன்முறையாகும். அதேவேளை இந்த அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணை செயன்முறை என்பன சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். குறிப்பாக அவை உயிரிழந்தோரினதும், அவர்களது குடும்பத்தாரினதும் உரிமைகளையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும். மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் ஒவ்வொரு மனித எலும்புக்கூட்டின் பின்னணியிலும் நினைத்துப்பார்க்கமுடியாத துன்பத்துக்கு முகங்கொடுத்த ஒரு குடும்பம் இருக்கிறது. எனவே இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் தனிமனித கௌரவத்துக்கான மரியாதையுடனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்புடனும் முன்னெடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி இக்குற்றங்களின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இச்செயன்முறையானது உச்சபட்ச நேர்த்தியுடனும், சட்ட நியமங்களுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச மேற்பார்வை இன்றியமையாததாகும். செம்மிண மனிதப்புதைகுழி அகழ்வானது இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கியமானதொரு தருணத்தைப் பிரதிபலிக்கின்றது. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து செம்மணி மனிதப்புதைகுழி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானம் பெற்றது. அன்று முதல் இன்றுவரை இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாகத் தொடரும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்குக்கான அழுத்தமானதும், வலிமிகுந்ததுமான அடையாளமாக அது திகழ்கின்றது. சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் செம்மணி - சித்துபாத்தியில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருப்பதானது உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன அடையப்படுவதற்கு வழிவகுக்கக்கூடியவகையில் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்திய நம்பத்தகுந்த, வெளிப்படைத்தன்மை வாய்ந்த, உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடியவாறான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது. உலகளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையான தீர்க்கப்படாத வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அங்கு 60,000 - 100,000 க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டிருப்பதுடன் அவற்றில் பெரும்பான்மையானவை 1983 - 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான ஆயதப்போராட்டகாலத்தில் பதிவானவையாகும். ஆயுதமோதல் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் போரின் பின்னரான கரிசனைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேற ஆணைக்குழுக்கள் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டன. இருப்பினும் அந்த ஆணைக்குழுக்கள் பெரும்பாலும் நல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்தினவே தவிர, பொறுப்புக்கூறல் குறித்து போதுமானளவு அவதானம் செலுத்தவில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச கட்டமைப்புக்களின் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான உண்மையை அறியும் உரிமை, நீதி மற்றும் செயற்திறன்மிக்க இழப்பீடு என்பன தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகின்றன. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் சர்வதேசத்தின் பங்கேற்புடனான நீதிச்செயன்முறை உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணையனுசரணை வழங்கியது. இருப்பினும் அத்தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஆரம்பத்தில் நேர்மறையானதொரு நகர்வாக நோக்கப்பட்டாலும், அரசியல்மயமாக்கல், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சுதந்திரம், மக்கள் மத்தியிலான நம்பிக்கையீனம் போன்றவற்றால் அக்கட்டமைப்பு நீண்டகாலமாக பின்னடைவை சந்தித்திருந்தது. தற்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கண்காணித்துவரும் நிலையில், முன்னெப்போதையும் விட இப்போது அவ்வலுவலகம் தனது சுயாதீனத்துவத்தை உறுதிசெய்யவேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமன்றி அவ்வலுவலகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களை சட்ட ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்துவோருடன் நெருங்கிய தொடர்புகளை பேணுவதுடன் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும். நீதியை நிலைநாட்டுவதில் உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் நிலையான சர்வதேச கண்காணிப்பு உள்வாங்கப்படவேண்டியது மிக அவசியமாகும். இம்மனிதப்புதைகுழி அகழ்வு வெறுமனே தடயவியல் நடவடிக்கையாக மாத்திரம் அமையக்கூடாது. மாறாக இது வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல், பாதிக்கப்பட்ட தரப்பினரை அடையாளங்காணல், குற்றவாளிகளைத் தண்டித்தல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரியவாறான நிவாரணங்களை வழங்கல் என்பன தொடர்பில் உரிய சர்வதேச சட்டக்கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றியிருக்கிறது என்பதற்கான முன்னுதாரணமாக இவ்விடயம் அமையவேண்டும். மேலும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிபுணத்துவம் என்பன உள்வாங்கப்படவேண்டும். அதற்கமைய சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அகழ்வு செயன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மைவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தவேண்டும். அடையாளம் காணப்படும் மனித எச்சங்கள் உள்ளிட்ட சான்றாதாரங்கள் உரியமுறையில் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும். https://www.virakesari.lk/article/221217
-
மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்
28 JUL, 2025 | 06:00 PM கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் தூவல்களை ஏற்றிச்சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி கடலில் மூழ்கியதையடுத்து, அந்த கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் தூவல்கள் தற்போது மன்னார் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி வருகிறது. இந்நிலையில் கரை ஒதுங்கி தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் திங்கட்கிழமை (28) மன்னார் சௌத்பார், கீரி, தாழ்வுப்பாடு கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மக்களை பயன்படுத்தி, அவர்களுக்கு குறிப்பிட்ட நாளாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடல் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமானது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், கடல்சார் பாதுகாப்பு சூழல் திணைக்கள பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/221202