Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    18695
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by ஏராளன்

  1. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 932 மி.மீ. மழை - தென் மாவட்டங்களின் நிலைமை என்ன? 17 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை (டிசம்பர் 18) நிலவரப்படி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 352 மி.மீ.-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது என்று மாவட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 118 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 206மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நான்கு தென்மாவட்டங்களைப் பார்வையிடச் செல்வதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை (டிசம்பர் 18) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் இடுப்பளவு மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்னென்ன மீட்புப் பணிகள் செய்யப்படுகின்றன? சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தூத்துக்குடியில் மழைநீரோடு சேர்த்து நிரம்பியிருக்கும் அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் பக்கிள் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார். வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க படகுகள் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு வான்வழியே உணவுப்பொருட்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இதறகாக கோவை விமானப்படை தளத்துடன் பணிகள் ஒருங்கிணைக்கப்படுவதாகத் தெரிவித்தார். தற்போதைக்கு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ரயில்களும் கோவில்பட்டிவரை மட்டுமே இயக்கப்படுவதாகத் தெரிவித்தார். படக்குறிப்பு, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை 17-ஆம் தேதி காலை ஆறு மணி முதல் 24 மணி நேரத்தில் 361 மி.மீ. மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்திருக்கிறது. சாத்தான்குளம், கோவில்பட்டியில் முறையே 466, 495 மி.மி. மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 351 மி.மீ. மழை பெய்திருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ரயில் சேவைகள் ரத்து மழை காரணமாக சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் இன்று (டிசம்பர் -18 ஆம் தேதி) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், நெல்லை- ஜாம்நகர் விரைவு ரயில், திருச்செந்தூர்- பாலக்காடு விரைவு ரயில், சென்னை- குருவாயூர் விரைவு ரயில், திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரயில், நாகர்கோவில்- கோவை விரைவு ரயில், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில், வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில்கள், நெல்லை- தூத்துக்குடி பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c28y7ygkmk3o
  2. முல்லைத்தீவில் தொடரும் மழை : 56 கிராமங்கள் பாதிப்பு, 68 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு 18 DEC, 2023 | 11:33 AM முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சி. கோகுலராஜா தெரிவித்துள்ளார். இதில் 56 கிராமங்களை சேர்ந்த 976 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இவர் மேலும் தெரிவித்தார். அதிகமாக குளங்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றன முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த குளங்களின் கீழ் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் வெள்ள நீர் வழிந்து ஓட முடியாத நிலையில் பல்வேறுபட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 56 கிராம சேவகர் பிரிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 976 குடும்பங்களைச் சேர்ந்த 3010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 அங்கத்தவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள் அதிகளவான வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் 15 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பண்டாரவன்னி கிராமத்தைச் சேர்ந்த 63 குடும்பங்களை சேர்ந்த 201 அங்கத்தவர்கள் கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் புளியங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் ஐந்து குடும்பங்களை சேர்ந்த 21 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் உள்ள மக்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர்களுக்கு தகவல்களை வழங்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது. இவ்வாறு மழைநீர் தேங்குவதற்கான காரணம் நீரோட கூடிய பாதைகள் பகுதிகளில் அத்துமீறிய கட்டிடங்கள் மற்றும் அத்துமீறிய செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதால் அதிகளவான நீர் வழி செல்ல முடியாத நிலையில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையானது இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடரக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதால் மேலும் ஒரு காற்றழுத்தம் ஒன்று வங்கக் கடலில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதால் மக்கள் இதனை கவனத்தில் கொண்டு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171923
  3. ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த கெப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதி சடங்குகள் : 'உக்ரைனைக் காக்க தன் உயிரைக் கொடுத்த மாவீரன்' என புகழாராம்! Published By: DIGITAL DESK 3 18 DEC, 2023 | 11:29 AM உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த கெப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதி சடங்குகள் உக்ரைன் இராணுவத்தினரின் மரியாதை மற்றும் உக்ரைன் மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் உக்ரைனின் மிலிதோன் நகரில் நடைபெற்றது. 'உக்ரைனைக் காக்க தன் உயிரைக் கொடுத்த மாவீரன்' என்று கப்டன் ரனீஷ் என புகழராம் சூட்டி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. கெப்டன் ரனிஷின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட வீதியின் இருபுறமும் வாகனங்களில் சென்ற உக்ரைனியர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி, தலைகுனிந்து மரியாதை செலுத்தினர். https://www.virakesari.lk/article/171931
  4. 18 DEC, 2023 | 11:28 AM மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். குறித்த நியமனமானது கடந்த (13) திகதி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வின்சன்ட் பிரான்சிஸ் மற்றும் மேரிஆன் ஜோசப் ஆகியோருக்கு 02 வது பிள்ளையாக பிறந்த வின்சன்ட் பிரான்சிஸ் ஜஸ்ரினா யுலேக்கா என்பவர் யாழ். திருக்குடும்ப கன்னியா் ஆங்கில பாடசாலையில் ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்று, தனது உயர் கல்வியை சென்னை பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து விஞ்ஞானமாணி (தாவரவியல்) பட்டத்தினை 1989 ஆம் ஆண்டு முதற்தரத்திலேயே சித்திபெற்ற ஒரு சிறந்த ஆளுமையுடன் திகழ்ந்ததுடன், 2013 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் வசிக்கும் தேசமாண்ய திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், 1990 ஆம் ஆண்டில் இணைந்த வடகிழக்கு மாகாண திருகோணமலை விவசாய விரிவாக்கல் திணைக்களத்தில் பட்டதாரிப் பயிலுனராக இணைக்கப்பட்டார். இவர் 1991 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் முதலாவது நியமனமாக, இணைந்த வடகிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், 2007 ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாண காணி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்), சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், சிறுவா் நன்னடத்தை திணைக்களத்தின் மாகாண ஆணையாளராகவும், மோட்டாா் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு உள்வாங்கப்பட்ட இவர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளா் (நிருவாகம்), மாகாண சபைச் செயலாளர், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளா், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளா், பிரதிப் பிரதம செயலாளா் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்ற செயலாளர் பதவிகளிலும் கடமையாற்றி வந்துள்ளார். பல்வேறுபட்ட மாகாண திணைக்களங்களின் தலைமைப் பதவிகள் மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர் பதவிகளில், பதவி வகித்த காலப்பகுதியில் அத்துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன் அதன் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்து பல்வேறு அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் பாரிய பங்களிப்பைச் செய்தவராவார். அத்துடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான நலன்புரிச் சங்கத்தின் தலைவராகவும் இருந்துவந்துள்ளார். 32 வருடகாலமாக இலங்கை நிருவாக சேவையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், கடந்த 2022.01.07 ஆம் திகதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையேற்று பதவி வகித்து வந்த நிலையில் கடந்த 13.12.2023 திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளதுடன், சமய அனுஸ்டானத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபரின் குடும்பத்தினர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171928
  5. 18 DEC, 2023 | 11:12 AM கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மிகவேகமாக பரவும் இலகுவில் அடையாளம் காணமுடியாத கொரோனா வைரசின் புதியமாறுபாடு பரவிவருவதை தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் பரவும் புதிய நோயினால் இலங்கைக்கு எப்போதும் ஆபத்து என்பதால் இலங்கை எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளது என சுகாதார அமைச்சின் கொரோனா விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். 48 மணித்தியாலங்களிற்கு மேல் காய்ச்சல் உட்பட நோய் அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் வைத்திய உதவியை நாடவேண்டும் தொற்று பரவல் ஆபத்தை தவிர்ப்பதற்கான முகக்கவசங்களை முடிந்தளவு பயன்படுத்தவேண்டும் மருத்துவபரிசோதனைகளை முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/171926
  6. பட மூலாதாரம்,MAYANK MAKHIJA/NURPHOTO VIA GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் ஒருவர் தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்கியதால், அவருடைய தொண்டையில் உள்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தும்மலை அடக்குவது இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள டண்டீ நகரில் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு நைன்வெல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனக்கு தும்மல் ஏற்பட்டபோது அதனை அடக்குவதற்காக, மூக்கையும் வாயையும் தன் கைகளால் மூடியுள்ளார். அவ்வாறு தும்மலை அடக்கியதால் அவரது மூச்சுக்குழாயில் 2 மி.மீ. வரை காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. ஒருவர் தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடினால் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில் அழுத்தம் 20 மடங்கு அதிகரிக்கும் என, டண்டீ பல்கலைக்கழக மருத்துவர்கள் கூறுகின்றனர். ரத்தக்குழாயில் வீக்கம் இதன் காரணமாக ஒரு நபரின் செவிப்பறை கிழியும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், ரத்தக்குழாயில் எதிர்பாராத வீக்கமும் ஏற்படலாம். இது, அனீரிசம் (aneurysm) என்று அழைக்கப்படுகிறது. மார்பு எலும்புகள் உடையலாம் அல்லது வேறு சில கடுமையான காயங்கள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதிக்கையில், அவருடைய தொண்டையிலிருந்து ‘கரகர’வென சத்தம் வருவதையும் அதனை அந்நபரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தும்மல் வந்த நேரத்தில், அந்நபர் சீட் பெல்ட் அணிந்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார். மருத்துவர்களின் கூற்றுப்படி, அந்நபர் ஏற்கனவே ஒவ்வாமை மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பட மூலாதாரம்,BMJ 'தும்மல் உடலைக் காக்கும்' அந்நபருக்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை எனவும் மருத்துவமனையில் சிறிது நேரம் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சில வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் போதிய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்கு அதிக வேலைகளை செய்ய வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஐந்து வாரங்களுக்குப் பிறகு, மற்றொரு ஸ்கேன் பரிசோதனையில் அவரது கழுத்தில் இருந்த காயம் முற்றிலும் குணமானது தெரியவந்தபோது மருத்துவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இதுதொடர்பாக பி.எம்.ஜே. எனப்படும் மருத்துவ ஆய்விதழில் அறிக்கை வெளியானது. அதன் ஆசிரியர் டாக்டர். ராஸ்டெஸ் மிசிரோவ்ஸ் பிபிசியிடம் கூறுகையில், “தும்மல் மனித உடலின் ஒரு 'பாதுகாப்பு செயல்முறை' என்று கூறினார். அதாவது, தும்மல் இயற்கையான பாதுகாப்பு செயல்முறை. பட மூலாதாரம்,GETTY IMAGES தும்மல் நல்லது - ஏன்? இதன் மூலம் எரிச்சலூட்டும் எதுவும் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைவதை தும்மல் தடுக்கிறது எனவும் இதனால், தும்முவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என்றும் அவர் விளக்குகிறார். "தும்மலின் போது, எச்சில் மற்றும் சளியுடன் சேர்ந்து வைரஸ்கள் போன்ற எரிச்சலூட்டும் தொற்றுகள் மூக்கிலிருந்து வெளியேறும். இந்த வைரஸ்கள் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரவுவதைத் தடுக்க நம் கைகளால் அல்லது முழங்கையின் உள் பகுதியைக் கொண்டு மூக்கை மூட வேண்டும்” என்கிறார் அவர். சில சமயங்களில் மூக்கையோ அல்லது வாயையோ மூடிக்கொண்டு தங்கள் தும்மலைத் தடுக்க மாட்டார்கள் என்றும் வேறு வழிகளில் தும்முவதை தடுப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார். "நான் தும்முவதை நிறுத்த மூக்கை மூடுவதில்லை. நான் வேறு முறையைப் கையாளுகிறேன். நான் என் கட்டை விரலை என் மூக்கின் கீழ் மேல் உதட்டில் வைத்து அந்த இடத்தை சில நொடிகள் அழுத்துகிறேன். இந்த முறை எனக்கு வேலை செய்கிறது." என்கிறார் அவர். தும்மலை நிறுத்துவது திடீரென மூச்சுக்குழாயில் கடுமையான காயத்தை ஏற்படுத்தும், இது மருத்துவ ரீதியாக "தன்னிச்சையான மூச்சுக்குழாய் துளையிடல்" ( "spontaneous tracheal perforation" ) என கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அரிதாகவே காணப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறினாலும், சில சமயங்களில் அது ஆபத்தானது. பட மூலாதாரம்,GETTY IMAGES தொண்டையில் காயம் இத்தகைய சம்பவம் 2018 ஆம் ஆண்டில் பிரிட்டனில் நடந்தது. லெய்செஸ்டரில் ஒரு நபர் தும்முவதை அடக்கியதால் அவரது தொண்டையில் காயம் ஏற்பட்டது. தும்மலை அடக்கியதால், திடீரென தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், பேசுவதற்கும் உணவுப்பொருட்களை விழுங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், ஏழு நாட்களுக்குக் குழாய் மூலம் அவருக்கு மருத்துவர்கள் உணவளித்தனர். தும்மல் வருவது ஏன்? கிருமிகள், வைரஸ்கள் அல்லது மகரந்தத் துகள்களால் மட்டும் தும்மல் ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில நேரங்களில் சூரியனின் வலுவான கதிர்கள் கூட தும்மலை ஏற்படுத்தலாம். 1,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், வலுவான கதிர்கள் அல்லது வலுவான சூரிய ஒளி காரணமாக அவர்கள் தும்முகிறார்கள் என்று ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சில நிபுணர்கள் இதற்குக் காரணம் மரபாகவும் இருக்கலாம் என்று நம்புகிறார்கள். சிலர் அதிகமாக உணவு உண்ட பிறகு தும்மல் வருவதாகச் சொல்கிறார்கள். ஒரு நபரின் தும்மல் எட்டு மீட்டர் அதாவது 26 அடி வரை எட்டும். மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் லிடியா போரோய்பா நடத்திய ஆய்வில், தும்மும்போது மூக்கிலிருந்து வெளியேறும் துகள்கள் பல நிமிடங்களுக்கு காற்றில் மிதக்கும் என்று தெரியவந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyr3d4l1xggo
  7. 18 DEC, 2023 | 10:06 AM பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால் வீடுகளில் கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில், 7/8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்த மக்கள் பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். கால்நடைகள் கூட வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலவற்றை இறந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் சிறு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழலில் தாம் இருப்பதாக தெரிவித்த அவர்கள், வீடுகளும் இடிந்துவிழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வசித்துவரும் நிலையில் குறித்த குடும்பங்கள் வெள்ளத்தினால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி நிர்க்கதியாக்கப்பட்ட்டுள்ளனர் . இதேவேளை கடந்த 16ம் திகதி வரை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம், விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 283 குடும்பங்களை சேர்ந்த 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்திருக்கின்றமை குறிப்படத்தக்கது . https://www.virakesari.lk/article/171915
  8. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒரு மருத்துவ நிபுணர் இருக்கிறார், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு அவர் ஒரு கடவுள் போல.
  9. ஷிப்லி அபார சதம் : 19இன் கீழ் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது பங்களாதேஷ் 17 DEC, 2023 | 06:10 PM (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 195 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய பங்களாதேஷ் முதல் தடவையாக ஆசிய சம்பியனாகி வரலாறு படைத்தது. அத்துடன் இந்த வருட 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாத அணியாக பங்களாதேஷ் சம்பியனானமை விசேட அம்சமாகும். 18 வயதான அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி குவித்த அபார சதம், ரொஹானத் தௌல்லா போசன், மாறூப் ம்ரிதா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன பங்களாதேஷை ஆசிய சம்பியனாக்கியது. முதல் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான், இலங்கை ஆகிய அணிகளை வெற்றிகொண்ட பங்களாதேஷ், அரை இறுதியில் முற்றிலும் எதிர்பாராத விதமாக 2021 ஆசிய சம்பியன் இந்தியாவை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறத்தில் முதல் சுற்றில் இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகளையும் அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதி ஆட்ட வாய்ப்பை ஐக்கிய அரபு இராச்சியம் உறுதிசெய்துகொண்டிருந்தது. இறுதிப் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்து முழுமையான ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ் மிக இலகுவாக வெற்றிபெற்று ஆசிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்ப வீரர் அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி குவித்த அபார சதம், சௌதர் ரிஸ்வான், அரிபுல் இஸ்லாம் ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்தது. பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதலாவது விக்கெட் வீழ்ந்தபோது மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தது. எனினும், கடைசி ஓவர் வரை மிகவும் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஷிப்லி 149 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 129 ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷின் வெற்றிக்கு வித்திட்டார். 50ஆவது ஓவரில் ஒரு பந்து மீதமிருந்தபோது 7ஆவதாக ஆட்டம் இழந்த ஷிப்லி, 2ஆவது விக்கெட்டில் சௌதர் ரிஸ்வானுடன் 125 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் ஆரிபுல் இஸ்லாமுடன் 76 பந்துகளில் 86 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார். சௌதுர் ரிஸ்வான் 71 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 60 ஓட்டங்களையும் ஆரிபுல் இஸ்லாம் 40 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் அணித் தலைவர் மஹ்புஸுர் ரஹ்மான் ரபி 21 ஓட்டங்களைப் பெற்றார். வெற்றியை மாத்திரம் குறிவைத்து ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த பங்களாதேஷ் முதல் 30 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷிப்லி 5 போட்டிகளில் விளையாடி 126.00 என்ற அதிசயிக்கத்தக்க சராசரியுடன் 2 சதங்கள் உட்பட மொத்தமாக 378 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார். ஐக்கிய அரபு இராச்சிய அணி பந்துவீச்சில் அய்மான் அஹமத் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஓமித் ரெஹ்மான் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 283 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 87ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. எவ்வாறாயினும் முதல் சுற்றில் இலங்கையையும் அரை இறுதியில் பாகிஸ்தானையும் வெற்றிகொண்ட பெருமையுடன் ஐக்கிய அரபு இராச்சியம் உப சம்பியனாகி திருப்தி அடைந்தது. ஐக்கிய அரபு இராச்சிய அணியில் துருவ் பரஷர் (25 ஆ.இ.), அக்ஷத் ராய் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். 14 உதிரிகள் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. பந்துவீச்சில் ரொஹானத் தௌல்லா போசன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாறுப் ம்ரிதா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இக்பால் ஹொசெயன் ஈமொன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் அஷிக்குர் ரஹ்மான் ஷிப்லி வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/171907
  10. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அசத்தல் அறிமுகம் - தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன சாதித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 டிசம்பர் 2023, 13:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 116 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனை, இந்திய வீரர்கள் எளிதில் ஊதித் தள்ளினர். இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் கால் பதித்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இருபது ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அறிமுகம் இந்த போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் வீரரான சாய் சுதர்சன் களம் கண்டார். கேப்டன் லோகேஷ் ராகுல் அவருக்கு இந்திய அணியின் தோப்பியை அளித்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னாப்பிரிக்கா இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாடியது. பட மூலாதாரம்,GETTY IMAGES தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அது தவறு என்று அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் உணர்ந்திருப்பார். தென் ஆப்ரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட அதிரடி வீரர் ராஸ்ஸி வான்டர் டுஸ்சன் அதே அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் காலியானார். 3 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் டோனி ஷோர்சியுடன் இணைந்து அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மார்க்ரம் முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அர்ஷ்தீப் சிங், ஆவேஷ்கான் மிரட்டல் பந்துவீச்சு இந்திய அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய இருவருமே துல்லியமாக பந்துவீசி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டினர். டோனி ஷோர்சி 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான ஹென்றி கிளாஸனும் அந்த அணிக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 6 ரன் மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் நடையைக் கட்டினார். தென் ஆப்ரிக்க அணியின் ஆபாத்பாந்தவனாக பார்க்கப்படும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆவேஷ்கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான கேப்டன் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வியான் முல்டன் 0, இந்திய வம்சாவளி வீரரான கேசவ் மகராஜ் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதிக்கட்டத்தில் அன்டிலே மட்டும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி 33 ரன்களை எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 27.3 ஓவர்களிலேயே 116 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் ஒரு விக்கெட்டை எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் அசத்தல் எளிய இலக்கை எதிர்கொண்ட இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சாய் சுதர்சனும் களம் புகுந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்துகளில் 5 ரன் எடுத்த நிலையில் முல்டர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் போட்டி என்ற சாயலே தெரியாத வகையில் முதல் பந்தில் இருந்தே அபாரமாக ஆடினார். எந்தவொரு பதற்றமும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் ஒரு பந்து கூட வீணடிக்காமல் ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் சிறப்பாக இருந்தது. அவருடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது, அரைசதம் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா, சாய் சுதர்சனுடம் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணி வெற்றிக்கோட்டை எளிதாக எட்டச் செய்தனர். முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் அர்ஷ்தீப் சிங் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணியின் அஸ்திவாரத்தையே அசைத்த அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். https://www.bbc.com/tamil/articles/cg3vjpl9zwgo
  11. ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ?!😂 ஐ மீன் மீம் கிரியேட்டர சொன்னேன்!🤣
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின்கள் தங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வகையில் ராணுவ, கல்வி மற்றும் மதப் பயிற்சிகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் "முதியவர் ஒரு பெரிய பிரபுவைக் கொல்ல விரும்பும்போது, அவர் மிகவும் துணிச்சலான (...) இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை (...) அந்த பிரபு மறைந்தால், அவரைக் கொன்றவர்களுக்கு சொர்க்கம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்." இந்த வார்த்தைகளுடன், வெனிஸ் நாட்டு ஆய்வாளர் மார்கோ போலோ தனது "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் பல தசாப்தங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் அவர் கண்டறிந்த விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது கிறிஸ்தவர்கள் மற்றும் முஹம்மது நபியைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பயங்கரவாதத்தை பரப்பிய முஸ்லிம்களின் குழுவிற்கு தி ஹசாசின்ஸ் (The Hassassins) என்ற பெயரை அந்த நூலில் பயன்படுத்தினார். கொலைகாரன் என்ற முதல் வார்த்தையின் பொருள் என்னவென்றால், மற்றொரு நபரைக் கொல்லும் ஒருவரைக் குறிப்பிட அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவுக்குக் காரணமான பெரிய தாக்குதல்களில் ஒன்று ஏப்ரல் 28, 1192 அன்று டயர் நகரில் (இன்றைய லெபனான்) நிகழ்ந்தது. அந்த நாளில், மூன்றாவது சிலுவைப் போரின் போது தலைவர்களில் ஒருவரான மான்ஃபெராட்டின் இத்தாலிய பிரபு கான்ராட், ஜெருசலேமின் மன்னராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தார். இருப்பினும், கொண்டாட்டம் நடைபெறவில்லை. அக்கால வரலாற்றின் படி, இரண்டு தூதர்கள் ஒரு கடிதத்துடன் பிரபுவை அணுக முடிந்தது. அவர் அதைப் படித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் தூதுவர்கள் கத்திகளை எடுத்து அவரைக் குத்தினார்கள். இத் தாக்குதல் நடத்தியவர்களை யார் அனுப்பினார்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும், அவர்கள் ஹசாசின்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டது. இது காலப்போக்கில் நாவலாசிரியர்கள், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்களை ஊக்கப்படுத்தியது. மேலும் சமீபத்தில் ஹசாசின்ஸ் க்ரீட் வீடியோ கேம் சாகாவை உருவாக்கியவர்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின்கள் பல நூற்றாண்டுகளாக இஸ்லாம் மத விளக்கங்கள் மற்றும் தலைமைத்துவம் ஆகிய இரண்டிலும் நேர்ந்த பிளவுகளின் விளைவாக உருவாகினர். ஹசாசின்கள் யார்? இந்த குழுவின் தோற்றம் கி.பி. 632 இல், முஹம்மது நபியின் மரணத்திற்குப் பிறகு, இஸ்லாம் சந்தித்த பிளவுகளுள் ஒன்று. அங்கு அவருக்குப் பிறகு இமாமாக (தலைவர்) யார் வர வேண்டும் என்பதில் வேறுபாடுகள் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டதால், இன்று நாம் ஷியாக்கள் மற்றும் சன்னிகள் என்று அறியப்படும் பிரிவுகள் தோன்றின என மாட்ரிட் தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் துறை பேராசிரியர், இக்னாசியோ குட்டரஸ் டீ டெரான் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். 9 ஆம் நூற்றாண்டில் ஷியாக்கள் எண்ணிக்கையில் விரிவடைந்தனர். ஆனால் தலைமைத்துவத்தில் ஒரு புதிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதுடன் இமாம் இஸ்மாயில் இப்னு ஜாஃபரின் பெயரில் இஸ்மாயிலிஸ்டுகள் என்ற ஒரு கிளை உருவானது. இந்த கடைசி குழுவும் ஒரு பிளவுக்கு உட்பட்டது. அக்குழுவை யார் வழிநடத்துவது என்பது பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது நிஜார் என்ற இளவரசரைச் சுற்றி ஒரு சாரார் திரண்டனர். அவர் அலெக்ஸாண்டிரியாவில் (எகிப்து) ஆட்சியைப் பிடித்த பிறகு, அவரது இளைய சகோதரரின் சீடர்களால் கெய்ரோவில் படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும், கொலை செய்யப்பட்ட நிஜாரைப் பின்பற்றுபவர்கள், புதிய உத்தரவை ஏற்காமல், கிழக்கில் பாரசீகத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அங்கு அவர்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பரப்பினார்கள், அவை சன்னிகள் அல்லது ஷியாக்களால் சரியாகக் கவனிக்கப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின் குழு 11 ஆம் நூற்றாண்டில் ஹசன்-இ சப்பா என்ற அறிவார்ந்த மிஷனரியால் உருவாக்கப்பட்டது. நிஜாரிகள் கிரேக்க தத்துவம் மற்றும் எஸோதெரிசிசத்தின் கூறுகளை இஸ்லாத்தின் நடைமுறையில் இணைத்தனர். ஒரு துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, இக்குழு மிஷனரிகளின் வலையமைப்பை உருவாக்கியது. இந்த பிரசங்கிகளில் ஒருவர் 11 ஆம் நூற்றாண்டில் ஹசன்-ஐ சப்பா என்ற இளம் பாரசீக நபர் ஒருவரைக் கடத்தினார். அவர் மதம் மாறி ஒரு இரகசிய சமூகத்தை உருவாக்கினார்: அந்த சமூகம் தான் ஹசாசின்கள். "அரேபியர்களின் இந்த காலனித்துவ முயற்சிக்கு நிஜாரிகள் ஒரு எதிர்வினை. இது மற்ற அரபு நீரோட்டங்களுடன் ஒப்பிடும் போது பாரசீக தன்னியக்கவாதம்" என்று செவில்லே பல்கலைக்கழகத்தின் (ஸ்பெயின்) இஸ்லாமிய ஆய்வுகளின் பேராசிரியர் எமிலியோ கோன்சாலஸ் பிபிசி முண்டோவிடம் விளக்கினார். . "ஹசாசின்ஸ், அவர்களின் பங்கிற்கு, நிஜாரிகள் அனைவரையும் தீவிரமயமாக்கினர். இது ஒரு மத சாக்குப்போக்கு கொண்ட ஒரு சமூக நீரோட்டமாகும். இறுதியாக அழிக்கப்படுவதற்கு முன், அவர்கள் நினைக்கும் ஒரே விஷயம் ஒரு பயங்கரவாதக் குழுவாக மாறுவது," என்று நிபுணர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு காலத்தில் கொலையாளிகளின் கோட்டையாக இருந்த அலமுட்டின் இடிபாடுகள் இன்றைய இரானிய மலைகளில் இன்னும் காணப்படுகின்றன. முஸ்லிம், கிறிஸ்தவர் இரு தரப்புக்கும் மரணத்தை பரிசளித்த ஹசாசின்கள் நிஜாரிகள் தங்கள் சொந்த நிலத்தை உருவாக்க முயன்றனர் ஆனால் அதில் தோல்வியடைந்தனர். பின்னர், ஹசன்-ஐ சப்பா பின்வாங்குவதற்கு இரானின் மலைகளைத் தேர்ந்தெடுத்தார் என்பதுடன் தெஹ்ரான் நகருக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் எல்பர்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள அலாமுட் கோட்டையை கைப்பற்றினார். இந்தக் கோட்டை நிஜாரிகளிடம் இருந்த கோட்டை வலையமைப்பின் தலைமையிடமாக இருந்தது. மேலும், அதன் அதிகாரம் இன்றைய சிரியா மற்றும் லெபனான் வரை நீட்டிக்கப்பட்டது. அங்கிருந்து தான் அந்தப் பிரிவின் நிறுவனர், பின்னர் "மலையின் முதியவர்" என்று அறியப்படுகிறார். அவர் "இஸ்லாமிய நாடுகளில் அரசியலின் போக்கில் தீர்க்கமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார் என விளக்கினார். அவரது இலக்குகளை அடைய ஹசன்-ஐ சப்பா உயர் பயிற்சி பெற்ற போராளிகளை உருவாக்கினார். முஸ்லீம் அரசுகள் மற்றும் வம்சங்கள் மற்றும் சிலுவைப்போர் பிரதேசங்களில் அவர் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்க அவர்களைப் பயன்படுத்தினார். "அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிக்கப்படவில்லை அல்லது அதைக் கைப்பற்றவோ கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு வலிமை இல்லை. எனவே அவர்கள் அதை ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் கையாண்டார்கள். அதாவது, அவர்கள் தப்பிக்க முடியுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அங்கு சென்று ஒருவரைக் கொன்றுவிடுகிறார்கள்," என கோன்சாலஸ் ஃபெர்ரின் மேலும் கூறினார். ஹசன்-ஐ சப்பாவின் தலைமையிலான இயக்கம் பிரபலமானதோ அல்லது அனைவரின் வரவேற்பைப் பெற்றதோ அல்ல. மாறாக "அதிக அறிவுப்பூர்வமானது, அடிப்படைவாதத்தை உருவாக்கும் மதச் சார்பு கொண்டது," என்று வரலாற்றாசிரியர் விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின் கொலையாளி பிரிவைச் சேர்ந்தவர்களின் விருப்பமான ஆயுதங்களில் குத்திக் கொலை செய்யும் ஆயுதம் முக்கிய இடம்பிடித்தது. ஹசன்-இ சப்பாவைப் பின்பற்றியவர்களைப் பற்றி பல செய்திகள் மற்றும் கட்டுக்கதைகள் உள்ளன. முஸ்லீம் ஆதாரங்களைப் பொறுத்தவரை அவருடைய உறுப்பினர்களை இழிவாகக் குறிப்பிடுகின்றன. அதன் உண்மையான பெயர் ஃபெடயீன் (மற்றவர்களுக்காகத் தங்களைத் தியாகம் செய்பவர்கள்) என்றாலும், அவர்கள் ஹாஷிஸ் என்ற போதைப் பொருளை உட்கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஹஸ்ஸாஸின் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஏன் இப்படி அறியப்படத் தொடங்கினர்? "ஹசன்-இ சப்பா பயிற்சியின் போது தனது போராளிகளிடம் சொர்க்கத்தைப் பற்றிக் கூறியதாகவும், பின்னர் போதைப்பொருள் இலைகளை உட்கொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இலைகளை மென்று தின்றோ, திரவப் பொருளாக்கிக் குடித்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ உட்கொள்ள வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் அவர்கள் செய்ய வேண்டிய கொலைகளைச் செய்ய அவர் அவர்களுக்கு கட்டளையிட்டார்" என்று குட்டரஸ் டீ டெரான் கூறினார். இருப்பினும், இந்தக் கருத்து தவறானது என்றும், அக்குழுவினர் பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் மற்றும் அதை இழிவுபடுத்தும் முயற்சிகள் பற்றிய புரிதல் இல்லாததால் இது பரவியது என்றும் கோன்சாலஸ் ஃபெரின் நம்புகிறார். "அந்த போதைப் பொருளைப் பயன்படுத்திய பின் நீங்கள் கடைசியாகச் செய்ய விரும்புவது யாரையாவது கொல்ல வேண்டும் என்பது தான் என அக்குழுவில் இணைந்து பணியாற்றிய எவருக்கும் தெரியும்," என்றார். "அவர்கள் கமிசாக்களாக இருந்ததால், அவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தால் அது நிச்சயமாக ஹாஷிஷைத் தவிர வேறு ஒரு போதைப் பொருளாக இருந்திருக்கும்," என்று இந்த வரலாற்றாசிரியர் கூறினார். மேலும் பேசிய கோன்சாலஸ் ஃபெர்ரின், ஹசாசின் என்ற சொல்லுக்கு பின்னணியில் பிற சாத்தியமான சொற்பிறப்பியல்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று "அடிப்படைவாதி" என்றும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொலையாளிகளின் துணிச்சலான செயல்களின் கதைகள் வெனிஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் மார்கோ போலோவின் காதுகளை எட்டின. விவசாயிகளின் குழந்தைகளை வாங்குதல் அல்லது கடத்துதல் ஆகியவை ஹசன்-ஐ சப்பாவும் அவரது வாரிசுகளும் போராளிகளின் அணிகளை வளர்க்கும் சில வழிகளாகும். ஆள் சேர்ப்பு செய்யப்பட்டவுடன், புதிய உறுப்பினர்களுக்கு கைகோர்த்து போரிடுவது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் தாக்குதல்களை நிறைவேற்றப் போகும் நகரங்கள் அல்லது நகரங்களின் மொழி, கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. "அவர்கள் ஒரு வகையான நிஞ்ஜாக்கள் (மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சிபெற்றவர்கள்). மக்கள் மத்தியில் மறைந்தும், பதுங்கியும் செல்லத் தெரிந்த போராளிகள்,"என்று கோன்சாலஸ் ஃபெர்ரின் கூறினார். குட்டரஸ் டீ டெரான் இதேபோன்ற தகவலைத் தான் தெரிவித்தார். "அவர்கள் தங்கள் தாக்குதல்களைச் செய்யப் போகும் இடங்களில் வசிப்பவர்களின் மரபுகள் மற்றும் பேச்சு வழக்கு, நடத்தை போன்றவற்றைக் கூட அறிந்தவர்கள். மிகவும் நன்கு அறிந்த மற்றும் பண்பட்ட மக்கள்," என்று விவரித்தார். கொலையாளிகளின் துல்லியமான ஊடுருவல் திறன், அவர்களின் பிற திறன்களுடன் இணைந்து அவர்களை பிரபலமாக்கியதுடன் ஒரு அச்சத்தைத் தோற்றுவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து நாட்டின் ஆங்கிலேய மன்னர் முதலாம் எட்வர்ட், ஹசன்-இ சப்பாவால் உருவாக்கப்பட்ட ஒரு பிரிவு உறுப்பினர்களில் ஒருவரின் கொலை முயற்சியில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். "அந்தக் கொலைகாரர்கள் சபிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன் தப்பி ஓடியவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் தங்களை விற்றுவிடுகிறார்கள். அவர்கள் மனித ரத்தத்திற்காக ஏங்குகின்றனர். அவர்கள் அப்பாவி மக்களை பணத்துக்காகக் கொல்கிறார்கள் என்பதுடன் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை, ரட்சிப்பைப் பற்றி கூட," என்று அவர் தனது நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலோ-அமெரிக்கன் வரலாற்றாசிரியரான பெர்னார்ட் லூயிஸ், அவரது புத்தகமான "The Assassins: A Radical Sect of Islam"-ல், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெர்மன் பாதிரியாரின் கதையை மேற்கோள் காட்டி இப்படி எழுதியுள்ளார். "பிசாசு போல- அவர்கள் ஒளியின் தேவதைகளாக உருமாறுகிறார்கள். அதே போன்ற தோற்றங்களை உருவாக்குகின்றனர். ஆடை, மொழிகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு நாடுகள் மற்றும் மக்களின் செயல்களைப் பற்றி அறிந்துகொள்கின்றனர். இவ்வாறு, செம்மறி ஆடுகளின் உடையில் மறைத்து செயல்படும் அவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் மரணத்தை எதிர்கொள்கிறார்கள்," என ப்ரோகார்டஸ் என்று அழைக்கப்படும் மதத்தலைவரான லூயிஸின் கூற்றை மேற்கோள் காட்டி அவற்றை விவரித்தார். செவில்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், தனது பங்கிற்கு, இந்தக் குழுவின் உறுப்பினர்களை "வரலாற்றில் முதல் பயங்கரவாதிகள்" என்று விவரிக்கத் தயங்கவில்லை. ஏனெனில், அவர்களின் பல செயல்கள் பகல் நேரத்திலும், பொதுவெளியிலும் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன. "ஒரு கவர்னர் தனது துணையுடன் சந்தை வழியாகச் சென்றால், ஒரு கொலைகாரன் எங்கிருந்தோ தோன்றி, ஒரு கத்தியை எடுத்து கழுத்தை அறுப்பான். அதில் தான் உயிர் பிழைத்து வரமுடியுமா என்பது பற்றி அந்த கொலைகாரன் கவலைப்படுவதில்லை," என்று அவர் கூறினார். கொலையாளியின் மரணம் கூட விரும்பத்தக்கதாக இருந்தது. ஏனெனில் அவனது நடவடிக்கைகளின் அடிப்படை எப்போதும் ரகசியமாகவே இருந்தது என குட்டரஸ் டீ டெரான் மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின்களின் திருட்டுத்தனம் மற்றும் எதிரி எல்லைக்குள் ஊடுருவும் திறன் காரணமாக, அவர்கள் ஜப்பானிய நிஞ்ஜாக்களுடன் ஒப்பிடப்படுகிறார்கள். அக்குழுவின் உறுப்பினர்கள் தங்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க, ஹசன்-இ சப்பா அவர்களை மதபோதனைக்கு உட்படுத்தினார். மார்கோ போலோவின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஏதுவாக அந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. "ஹசன்-இ சப்பா இரண்டு மலைகளுக்கு இடையில், ஒரு பள்ளத்தாக்கில், இதுவரை கண்டிராத மிக அழகான தோட்டத்தை கட்டினார். அதில் பூமியின் சிறந்த மரங்களும், பழங்களும் இருந்தன (...) தோட்டத்தின் மையத்தில் ஒரு நீரூற்று இருந்தது. அங்கு குழாய்களின் வழியாக மது, பால், தேன் மற்றும் தண்ணீர் அனுப்பப்பட்டது," என்று வெனிஸ் ஆய்வாளர் எழுதினார். "அவருடைய தோட்டத்திற்கு உலகின் மிக அழகான கன்னிப்பெண்களை அவர் அழைத்து வந்தார். அவர்கள் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரிந்தவர்கள் என்பதுடன் தேவதைகளைப் போல் பாடவும் தெரிந்துவைத்திருந்தனர். அங்கு அவர் தனது குடிமக்களை இது சொர்க்கம் என்று நம்ப வைத்தார்," என "புக் ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மங்கோலியப் படைகளால் அழிக்கப்படும் வரை அலமுட் மலை நிஜாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஐரோப்பிய சாகசப் பயணி ஒருவரின் தகவலின், "கொலைகாரர்களாக மாறவிருந்தவர்களைத் தவிர, யாரும் அந்தத் தோட்டத்திற்குள் நுழையமுடியவில்லை.” மார்கோ போலோவின் கூற்றுப்படி, ஹசன்-இ சப்பா, பயிற்சி பெற்ற போராளிகளை பழத்தோட்டத்தில் பாதுகாத்து வைத்து, அவர்கள் அங்குள்ள இன்பங்களை அனுபவிக்க வழிகளை ஏற்படுத்தினார். ஆயினும், தலைவர் ஒருவரைத் தண்டிக்க நினைத்தால், அவருக்கு போதைப் பொருள் கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார். பின்னர் அந்த நபர் போதை தெளிந்தபின், முகமதுவின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்ட அந்த "சொர்க்கத்திற்கு" மீண்டும் திரும்ப விரும்பினால், அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறுவார். இதனால் அவர்கள் தொடர்ந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலைகளைச் செய்யத் தொடங்கினர். “யாரும் சொந்த விருப்பத்துடன் அந்த சொர்க்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்,” என போலோ குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹசாசின்கள் என்ன ஆயினர்? வடக்கிலிருந்து மங்கோலிய அடையாளத்துடன் ஒரு எதிரி அவர்களை அழிக்கும் வரை நிஜாரி அமைப்பினர் 166 ஆண்டுகள் செயல்பட்டு வந்தனர். "மங்கோலியர்கள் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறினர். சிலுவைப்போர்களை விடவும் கூட அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். அவர்கள் மிகவும் காட்டுமிராண்டிகளாகவும், மேற்குலக எதிரிகளை விட நெருங்கிய இடத்திலிருந்து தாக்க முற்பட்டவர்களாகவும் இருந்தனர். எனவே, நிஜாரிகள் அவர்களுடன் சில வகையான உடன்பாடுகளை எட்ட முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை" என்று குட்டரஸ் டீ டெரான் விளக்கினார். அஞ்சிய செங்கிஸ் கானின் பேரன் ஹுலாகு கானின் வலிமைமிக்க ராணுவம், இதுவரை அசைக்க முடியாத கோட்டையின் மீது விரைந்து வந்து தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது. அந்தக் கொலையாளிகள் ஹுலாகு கானின் மாமா ஒருவரை கொன்றதாக அவர் நம்பியதாக சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது நடப்பதற்கு முன், பல முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் பிரபுக்கள் தங்கள் உயிர்களை அந்த குழுவினரின் கைகளில் இழந்தனர். கொலையாளிகளால் குறிவைக்கப்பட்ட பின்னும் உயிரைக் காப்பாற்ற முடிந்த ஒருவர் சுல்தான் சலாவுதீன். இஸ்லாத்தின் மிக முக்கியமான நபர்களில் அவர்கள் ஒருவர் என்பதுடன் 12 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்காக ஜெருசலேமை மீட்டெடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹசாசின் குழு 11 ஆம் நூற்றாண்டில் ஹசன்-இ சப்பா என்ற அறிவார்ந்த மிஷனரியால் உருவாக்கப்பட்டது. சலாவுதீன் உயிர் தப்பியது எப்படி? "சலாவுதீன் சிலுவைப் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொடர்ச்சியான பணிகளை மேற்கொண்டார். ஆனால் அந்த நோக்கத்தை அடைய அவர் சில முஸ்லீம் அரசுகள் மற்றும் ராஜ்ஜியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவை பெரும்பாலும் சிலுவைப் போர்களுக்கு ஆதரவாக இருந்தன. சலாவுதீனின் தொடர் பணிகளின் போது அவர் நிஜாரி கோட்டையான (இன்றைய சிரியாவில் உள்ளது) மஸ்யாஃபைக் குறிவைத்தார்," என்று குட்டரஸ் டீ டெரான் கூறினார். நிஜாரிகளின் பதில் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது என்பதுடன் 1185 இல் அவர்கள் அவரது வாழ்க்கையை முடிக்க கொலையாளிகளை அனுப்பினர். "கொலையாளிகள் சலாதீனின் முகாமிற்குள் அவரது வீரர்கள் போல் உடையணிந்து ஊடுருவினர். மேலும், அவரது கூடாரத்தில் நுழைந்து அவரைக் கொல்ல முயன்றனர். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை "அவர் ஒரு பாதுகாப்பு மிக்க கவச உடை அணிந்திருந்ததால் அந்தக் கொலை முயற்சியில் அவர் உயிர் பிழைக்க முடிந்தது," என்று மாட்ரிட் தன்னாட்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கூறினார். 9-வது சிலுவைப் போரில் பங்கேற்ற இங்கிலாந்தின் மன்னர் முதலாம் எட்வர்ட், 1272 இல் இந்த கொலைகாரக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலிருந்து தப்பினார். இந்த வகையான செயல்பாடுகள் மற்றும் அதற்கான பயிற்சிகளை காலப்போக்கில் அவர்கள் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கும் பெரும் தொகைகளைப் பெற்றுக்கொண்டு கற்றுக் கொடுத்தனர். இதன் மூலம், பல நூற்றாண்டுகளாக நீடித்திருக்கும் கொலைகாரர்களின் பிம்பத்தை உருவாக்கி நிலைநிறுத்த அவர்களால் முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cg3vj0r8e45o
  13. 17 DEC, 2023 | 05:39 PM தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1334 குடும்பங்களைச் சேர்ந்த 4254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நேற்று சனிக்கிழமை (16) மாலை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் 941 குடும்பங்களைச் சேர்ந்த 3046 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேரும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 9320 பேரும், மண்முனைபற்று பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காத்தான்குடி 2ஆம் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேரும் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன், வாகரையில் 2 வீடுகளும் காத்தான்குடியில் ஒரு வீடும், ஏறாவூர் பற்றில் 7 வீடுகளுமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/171902
  14. 17 டிசம்பர் 2023, 14:43 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது. படக்குறிப்பு, குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு திருநெல்வேலியில் நிரம்பி வழியும் அணைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதீத மழையால் அங்குள்ள பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நீடித்து வரும் கனமழையால் பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு சுமார் 20,000 கன அடி தண்ணீர் வந்துள்ளது. அதேபோல் மாஞ்சோலை மலைப்பகுதியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை 143 அடி கொள்ளவு மட்டுமே என்பதால் ஏற்கனவே அது 85 சதவீதம் நிரம்பிய நிலையில் விரைவில் அது நிறைய வாய்ப்புள்ளது. எனவே பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து வெறும் 3000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் தற்போது வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. திருநெல்வேலி நகரம் படக்குறிப்பு, தென்காசியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்துள்ளது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகர், பெருமாள்புரம், என் ஜி ஓ காலனி போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் திருநெல்வேலி டவுன், களக்காடு, திசையன்விளை பகுதியில் உடன்குடி சாலை, நேருஜி கலையரங்கம் மற்றும் செட்டிகுளம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீனவர்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது தூத்துக்குடி சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக 2 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றால அருவிகளுக்கு செல்ல தடை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காலையிலிருந்து பெய்த தொடரும் கனமழையின் காரணமாக திருவேங்கடம் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வெள்ளப்பெருக்கு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, கூடங்குளம் அதிகாரிகள் குடியிருப்பில் வெள்ளம் கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் நிலைமை என்ன? கூடங்குளம் பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், கூடங்குளம் அனு விஜய் நகரியம் வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்த பகுதியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் சனிக்கிழமையன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், ஞாயிறு(இன்று) அன்று பெய்த கனமழையால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பகுதிகளில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுத்துள்ள நிலையில் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 18ம் தேதியன்று விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் அடிப்படை தேவைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணியாளர்களை கொண்டு இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை சமீபத்தில் சென்னையில் பெய்த மழையே வரலாறு காணாத மழை என்று வானிலை நிபுணர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது பாளையங்கோட்டையில் 4.30 மணிநேர நிலவரப்படி 26செமீ மழை பெய்துள்ளது. இதுவே 29ஐ தாண்டினால் கடந்த 150 வருடங்களில் இந்த பகுதியில் பெய்த அதிகமான மழை இதுவே என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் வானிலை நிபுணர் பிரதீப். தென்மாவட்டங்களுக்கு விரைந்த மீட்புக்குழு கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மற்றும் தென்காசிக்கு தேசிய பேரிடர் மீட்புகுழு விரைந்துள்ளது. என்டிஆர்ஃஎப் சார்பில் ஒரு அணிக்கு 25 பேர் என்ற கணக்கில் 4 அணிகள் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு சென்றுள்ள அணியே திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு பணியில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி மருந்துகள், படகுகள், இயந்திரங்கள் என தயார் நிலையில் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களை தங்க வைக்கும் முகாம்கள், மீட்பு பணிகள் மற்றும் தேவையான அவசர பணிகளை தயார் படுத்தி வருகின்றனர். 2 நாட்களில் 50 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு தற்போது பெய்யும் மழை கனமழை முதல் அதிகனமழையாக தொடரும் என்று அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதையடுத்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசு நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த மழை இன்னும் அதி கனமழையாக உருவாகும் என்றும் செவ்வாய்க் கிழமைதான் இதன் வேகம் குறையும் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப். அடுத்த 48 மணி நேரத்திற்கு 30 முதல் 50 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c28y7ygkmk3o
  15. 4-Month-Old Tennessee Boy Survives Being Sucked into Tornado ‘by the Grace of God,’ Mom Says Sydney Moore said her boyfriend attempted to grab the baby as he was being pulled out of his bassinet but got caught in the storm himself By Abigail Adams Published on December 13, 2023 04:39PM EST Trending Vid A destroyed home is seen in the aftermath of a tornado on December 10, 2023 in Clarksville, Tennessee. PHOTO: JON CHERRY/GETTY Family members say a 4-month-old baby somehow survived being sucked into one of the tornadoes that touched down in Tennessee during Saturday’s severe weather outbreak. The mom and her two children were inside their home on Biglen Road in Clarksville when the twister tore through their town, according to a GoFundMe started by the mother’s sister, Caitlyn Moore. Sydney Moore, 22, said she was with her 1-year-old son in the back bedroom of the mobile home when she heard the winds begin to pick up, according to NBC affiliate WSMV. The walls of the home collapsed just as the mom of two jumped on top of her eldest son, per WSMV. Then, Sydney’s boyfriend watched as their 4-month-old baby was pulled out of his bassinet and into the funnel cloud. Tenn. Man Remembered as a 'Hero' After Dying While Protecting His Mother and Son from Tornado The boyfriend tried to grab the sleeping child but was pulled into the twister himself, per the report. Simultaneously, Sydney and her 1-year-old were crushed by their trailer. Sydney and the toddler were somehow able to escape the wreckage, according to WSMV. She initially feared her youngest son was dead, but he was quickly found alive in a fallen tree. "I was pretty sure he was dead and we weren’t going to find him. But he’s here, and that’s by the grace of God," the mom said. Never miss a story — sign up for PEOPLE's free daily newsletter to stay up-to-date on the best of what PEOPLE has to offer, from celebrity news to compelling human interest stories. 10-Year-Old Boy Among 6 Dead After Tennessee Tornadoes: 'Absolutely Devastated,' Says Mom Luckily, Caitlyn said, almost everyone walked away after the twister with minor cuts and bruises, WSMV reported. Sydney’s boyfriend “suffered a broken arm/shoulder," per the GoFundMe. However, the family’s home was completely destroyed, and their car is now a total loss, according to the fundraiser. The tornado also “took all of the formula, diapers, wipes, clothing” and other important belongings. Toddler Found Dead in Mom’s Arms After Tennessee Tornado Flipped Mobile Home, Neighbor Says The mobile home’s rental company “has graciously put them in a hotel for a month” while they piece their lives back together following the deadly storm, Caitlyn said. More than $16,000 has been raised via GoFundMe to support the family following Saturday’s deadly tornado outbreak, which killed six people and injured dozens of others. https://people.com/4-month-old-tennessee-boy-survives-being-sucked-into-tornado-8415631
  16. புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் தூக்கி எறியப்பட்ட 4மாத குழந்தை மீட்பு 29 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட தீவிர புயலில் சிக்கிக் கொண்ட 4 மாத குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள், புயல் தங்கள் வீடு, மொபைல் என அனைத்தையும் அழித்து விட்டதாகவும் தங்கள் குழந்தையின் தொட்டில் புயலோடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடவுள் புண்ணியத்தில் தங்கள் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். கடுமையான புயல் காற்றில் இந்த குழந்தை தொட்டிலோடு சேர்த்து இழுத்து செல்லப்பட்டுள்ளது. பின்னர் வேரோடு சாய்ந்த மரம் ஒன்றில் தொட்டில் மாட்டி அந்த குழந்தை அதில் பத்திரமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் கடுமையான மழையும் பெய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையின் ஒரு வயதாகும் சகோதரன் மற்றும் பெற்றோர்கள் சிறு காயங்களோடு பத்திரமாக உள்ளனர். குழந்தையின் தாயான 22 வயதாகும் சிட்னி மூர் இந்த புயல் தங்களது மொபைல் போன்களை அழித்து விட்டதாக கூறியுள்ளார். புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை “ புயல் என் குழந்தையை தொட்டிலோடு அடித்துச் சென்றுவிட்டது, அந்த சமயத்தில் அவன் அதில் தூங்கி கொண்டிருந்தான்” என உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் மூர். அந்த குழந்தையின் தந்தை தொட்டிலை பிடிக்க கடுமையான முயற்சி செய்த போதும் தீவிரமான புயல் அதை இழுத்து சென்றுவிட்டது. இதுகுறித்து மூர் கூறுகையில், “குழந்தையின் தந்தை தொட்டிலை தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி இறுக பற்றிக்கொண்டிருந்தார். ஆனால், புயல் தீவிரமாக வீசியதில் அவர் கீழே சரிந்து தொட்டில் கையை விட்டு நழுவிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில், தான் தனது ஒரு வயது மகனான ப்ரின்ஸ்டனை இறுக பிடித்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார் மூர். “ குழந்தையை காப்பாற்று என்று எனக்குள் ஒரு குரல் கேட்டு கொண்டே இருந்தது. நான் ஓடி சென்று அவனை சூழ்ந்து கொண்ட அடுத்த கணமே மேற்கூரை இடிந்து எங்கள் மீது விழுந்து விட்டது. அதற்குள் நாங்கள் புதைந்து விட்டோம். என்னால் மூச்சு கூட விட முடியவில்லை” என்று கூறியுள்ளார் மூர். பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் பாதிக்கப்பட்டுள்ள டென்னசி மாகாணம் குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் புயல் கடந்த பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து ப்ரின்ஸ்டனை மீட்டுள்ளார் மூர். பின்னர் அவரும், குழந்தையின் தந்தையும் இணைந்து இளைய மகனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். கடும் மழையில் அந்த குழந்தையை தேடி கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு மரத்தில் அந்த குழந்தையின் தொட்டில் தொங்கி கொண்டிருந்திருக்கிறது. அதில் குழந்தை உயிருடன் பத்திரமாக இருந்துள்ளது. “என்னால் குழந்தையை உயிருடன் பார்க்க முடியாது, அவனை கண்டுபிடிக்கவே முடியாது என்றெல்லாம் நான் பயந்து விட்டேன், ஆனால் கடவுளின் கருணையில் அவனை உயிரோடு மீட்டு விட்டோம்” என்று கூறுகிறார் மூர். பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, தூக்கி எறியப்பட்ட குழந்தை மற்றும் அவனது சகோதரன் புயலால் தங்களது கார் மற்றும் வீட்டை இழந்த மூரின் குடும்பத்திற்கு உதவ மூரின் சகோதரி கெய்ட்லின் கோஃபவுண்ட்மீ (GoFundMe) - ஐ தொடங்கியுள்ளார். மூரும் அவரின் குழந்தைகளும் சிறு காயங்களால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குழந்தையின் தந்தைக்கு கை மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கெய்ட்லின். கோஃபவுண்ட்மீ தகவல்படி, யாரோ மரத்தில் அமர வைத்தது போல இந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ தேவதை வந்து அவனை மீட்டு அங்கு பத்திரமாக வைத்தது போல் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. குழந்தை மட்டும் இல்லாமல் போயிருந்தால் என் வாழ்வே மோசமாக போயிருக்கும், குழந்தையின் தந்தைக்கும் இதே நிலைதான் என்று கூறியுள்ளார் மூர். https://www.bbc.com/tamil/articles/cgl4g3e9rkmo
  17. காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டுபெண்கள் பலி Published By: RAJEEBAN 17 DEC, 2023 | 11:58 AM காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும் Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது. தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர், காயமடைந்த ஒருவரை தூக்கி சென்றவர் கொல்லப்பட்டார் என Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது. 54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது, இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171876
  18. அரபிக்கடல் பகுதியில் கடத்தப்பட்டகப்பலை மீட்க சுற்றி வளைத்தது இந்திய கடற்படை 17 DEC, 2023 | 11:04 AM புதுடெல்லி: அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்டமோல்ட்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அரபிக் கடல் பகுதியில் கடந்த வியாழக் கிழமையன்று மோல்ட்டா நாட்டு சரக்கு கப்பல் ‘எம்.வி.ரூன்’ 18 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலை 6 பேர் கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய கடற்படை கப்பல் தற்போது எம்.வி.ரூன் கப்பலை நேற்று காலை இடைமறித்தது. எம்.வி.ரூன் சரக்கு கப்பலுக்குள் நுழைந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியை இந்திய கடற்படையினர் கூட்டணி நாடுகளின் கடற்படை உதவியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/171868
  19. அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை! - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ 17 DEC, 2023 | 03:59 PM அரசியலிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தைக் காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும்பான்மையான மக்கள் தமது கட்சியுடன் திரண்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் எமது கட்சியை விட்டு நகரவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை என்றும், கட்சியைச் நேர்ந்த யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்ஷக்கள் பாடுபடுவார்கள் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171891
  20. தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். முறையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையில் இருந்து பாதுகாக்க முடியும் என நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் விசேட வைத்தியர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/285002
  21. வெள்ளத்தால் ஒட்டுசுட்டானில் பலர் பாதிப்பு : 102 பேர் பாதுகாப்பாக மீட்பு 17 DEC, 2023 | 09:42 AM முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாட்ட மக்கள் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. அந்தவகையில் சனிக்கிழமை (16) திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்தில் உள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 102 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு கருவேலன்கண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171855
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, "தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக" தெரிவித்திருந்தார். 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. முதலில் தனது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அது கூறியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ்ஹின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாலத்தீவுக்கு சென்றபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கணக்கெடுப்பின் கீழ், இந்தியா மற்றும் மாலத்தீவு இணைந்து மாலத்தீவு பகுதிகளில் உள்ள நீர் பரப்பளவு, பவளப்பாறை, கடல் ஆகியவற்றை ஆய்வு செய்வதாக இருந்தது. மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையிலான புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ள முதல் இருதரப்பு ஒப்பந்தம் இது. முன்னதாக மாலத்தீவு அதிபர் முய்சு, "தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளைத் திரும்பப் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக" தெரிவித்திருந்தார். அதிபர் முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, 'இந்தியாவே வெளியேறு’ என்ற கோஷத்தை முன்வைத்த அந்தக் கட்சி, மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றுவோம் என்று கூறி பிரசாரம் செய்தது. அவர் அதிபரான பிறகு எடுக்கும் இதுபோன்ற முடிவுகள் ‘முழுவதும் சீனாவின் செல்வாக்கின் அடிப்படையிலேயே’ எடுக்கப்படுவதாகத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கு முன்னால் அதிபராக இருந்த மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது இப்ராகிம் சோலிஹ், 'முதலில் இந்தியா’ என்ற கோஷத்தை முன்வைத்தார். முய்சுவின் நிலைப்பாடோ இதற்கு முற்றிலும் நேர்மாறானது. ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தை ரத்து செய்யும் மாலத்தீவின் முடிவிற்குப் பிறகு, சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியில் இந்தியாவின் ஸ்ட்ரேட்டஜிக் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு துருக்கியை தேர்வு செய்துள்ள முய்சு, அங்கு புதிய மாலத்தீவு தூதரகத்தையும் தொடங்கியுள்ளார். இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாலத்தீவு துருக்கியில் இருந்து தினசரி பயன்படுத்தும் பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. தங்கள் நாட்டில் துருக்கிய முதலீட்டை ஊக்குவித்து வரும் அதே வேளையில் மாலத்தீவில் இருந்தும் துருக்கிக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மாலத்தீவில் இருந்து துருக்கிக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முய்சுவின் துருக்கி பயணத்தைத் தொடர்ந்து மாலத்தீவின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீஃப் சீனா சென்றிருந்தார். சீனா தலைமையில் நடந்த சீனா-இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். அதே நேரம், இதேபோன்ற மற்றோர் அமைப்பான இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன் குறித்து மாலத்தீவின் அணுகுமுறையோ அவ்வளவு நேர்மறையானதாக இல்லை. சீனா-இந்தியா வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பேசிய லத்தீஃப் தனது நாட்டிற்கு சீனாவின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ளார். துருக்கி மற்றும் சீனாவிற்கு மாலத்தீவு தலைவர்கள் பயணிப்பது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமான அறிகுறி அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், சீனாவும் துருக்கியும் இந்தியாவின் நிலம் மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிற்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவில் புதிய அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அந்த அரசை ஓரளவிற்குத் தனது பக்கத்தில் வைத்திருக்க இந்தியா முயன்று வருகிறது. மாலத்தீவின் சமீபத்திய நடவடிக்கை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள சீன ஆய்வு மையத்தின் இணை பேராசிரியர் அரவிந்த் யெல்லேரி, "1996-97 முதல் சர்வதேச அரசியல் நீல பொருளாதாரம் அல்லது பெருங்கடல் பொருளாதாரத்தில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாக" தெரிவிக்கிறார். இது இந்திய பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கலுடனான இந்தியாவின் நெருக்கம் கடல் தொடர்பான உத்தியில் இந்தியாவின் பாத்திரத்தை அதிகரித்துள்ளது. அதிலிருந்து, தென் சீனக் கடல், அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் இந்தியா தனது ஸ்ட்ரேட்டஜிக் நலன்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், மொரீஷியஸ், மாலத்தீவு, சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் இந்தியாவின் தொடர்புகள் அதிகரித்துள்ளது. கண்காணிப்பு, எரிபொருள் விநியோகம் மேலும் பல விஷயங்களில் இந்தியாவிற்கு இந்தப் பகுதிகளில் நலன்கள் உள்ளது. கடந்த 25-30 ஆண்டுகளில், இந்தியா இந்தப் பகுதிகளில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது. இந்தியாவிற்கு பொருளாதார மற்றும் மூலோபாய அடிப்படையில் மாலத்தீவின் முக்கியத்துவம் மிக அதிகம் என்று கூறுகிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அமைதி மற்றும் மோதல் தீர்வுகளுக்கான நெல்சன் மண்டேலா மையத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா. எனவேதான், மாலத்தீவில் புதிய அரசு ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அந்த அரசை ஓரளவிற்குத் தனது பக்கத்தில் வைத்திருக்க இந்தியா முயன்று வருகிறது. சீனாவும் இந்தப் பகுதியில் தனது செயல்பாட்டை அதிகரிக்க விரும்புகிறது. ஆனால் இந்தியா அதற்கு முக்கியப் போட்டியாளராக இருந்து வருகிறது. "இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக தற்போது தென்சீனக் கடலில் இருந்து வெளியே வந்து இங்கு தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது,” என்று கூறுகிறார் அரவிந்த் யெல்லேரி. “மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சீனாவுக்கு சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது இந்தியாவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் வலுவாக வெளியே தெரியும். மாலத்தீவில் இந்திய வீரர்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அவர்கள் திரும்பி வருவது கவலை அளிக்க கூடிய விஷயமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். சீனாவின் செல்வாக்கை குறைப்பது கடினமான சவால் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இந்தியா என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு பதிலளித்த அரவிந்த் யெல்லேரி, இதுபோன்ற சிறிய நாடுகளைத் தனது பக்கம் கொண்டு வர இந்தியா இவ்வளவு கடும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார். இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சீன முதலீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், பூடான் மற்றும் மாலத்தீவில் தனது செல்வாக்கை வலுப்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் சீனாவுடனான உறவின் மதிப்பை இந்த நாடுகள் புரிந்துகொள்ள விடுவதே இந்தியாவின் கொள்கையாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். காரணம் இப்போது சீனாவின் நிதியுதவி பல நாடுகளுக்குச் சுமையாக மாறியுள்ளது. எனவே அவர்கள் இந்தப் 'பொறி'யில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். “சொல்லப்போனால், பூகோள ரீதியாக மாலத்தீவு இந்தியாவுடன் நெருக்கமாக உள்ளது. இரண்டாவது, அங்குள்ள மக்கள்தொகை அமைப்பும் இந்திய மக்கள்தொகையின் அமைப்பிற்கு நெருக்கமாக உள்ளது. இது சீனாவின் மக்கள்தொகையின் தன்மை மற்றும் இயல்புடன் பொருந்தவில்லை. எனவே, மாலத்தீவின் பண்புகள் சீனாவுடன் பொருந்தவில்லை என்பதை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறுகிறார் யெல்லேரி. அதே நேரம், “தொடக்கத்தில் இருந்தே முய்சு இந்தியாவுக்கு எதிரான உதியையே கொண்டுள்ளார். அது அவரின் முடிவுகள் வாயிலாகவே கண்கூடாகத் தெரிகிறது. ஹைட்ரோகிராஃபி ஒப்பந்தம் ரத்து, இந்திய படைகள் திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை சீன கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பது போலத்தான் உள்ளது. இது இந்தியா மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று தெரிவிக்கிறார் பிரேமானந்த மிஸ்ரா. “இஸ்லாமிய சித்தாந்தத்தின் பக்கம் மாலத்தீவு சாய்வதையும் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. தேசிய நலன் என்பது எந்த சித்தாந்தம் சார்ந்தோ அல்லது தலைவர் மற்றும் கட்சி சார்ந்தோ இருத்தல் கூடாது. ஆனால் சில நேரங்களில் வெளியுறவு கொள்கைகளில் அதைப் பார்க்க முடியும். குறிப்பாக இரான் போன்ற விஷயங்களில் இதைப் பார்க்கலாம்” என்கிறார் மிஸ்ரா. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிற்கான மூன்று வழிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவில் முய்சுவின் அரசு இருக்கும் வரை சீனாவின் இடையூறை குறைக்க முடியாத வரை இந்தியா ‘காத்திருந்து கண்காணிக்கும்’ உத்தியை பயன்படுத்த வேண்டும், என்கிறார் பிரேமானந்த் மிஸ்ரா. "இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். ஆனால் தற்போதைக்கு முய்சு இருக்கும் வரை, அங்கு ஒரு இஸ்லாமிய சார்பு தன்மை இருக்கலாம். மாலத்தீவின் பொருளாதாரத் தேவைகளில் சீனாவின் தலையீடு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இது இந்தியாவின் பாதுகாப்புத் துறை, பொருளாதாரம் மற்றும் மூலோபாயக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தியா தனது அண்டை நாட்டுக் கொள்கையில் இந்த பிரச்னைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று கூறுகிறார் பிரேமானந்த் மிஸ்ரா. இந்தியாவிற்கு மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு மூன்று வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் அவர். மாலத்தீவில் முய்சுவின் அரசு இருக்கும் வரை சீனாவின் இடையூறை குறைக்க முடியாத வரை இந்தியா ‘காத்திருந்து கண்காணிக்கும்’ உத்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா மறைமுகமான செல்வாக்கை அங்கு உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் அமெரிக்காவும் பிற நாடுகளும்கூட இந்தியப் பெருங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளன. எனவே, அமெரிக்கா மூலம் மாலத்தீவு மீது செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சி எடுக்கலாம். மாலத்தீவு சீனாவை சார்ந்திருப்பதை அதிகரித்திருப்பதால், அதன் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவின் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்புமாறு தூண்டி விடலாம். மிஸ்ராவின் கருத்துப்படி, மாலத்தீவில் சீனா குடியேற விரும்புவதால் அங்கு 'இந்தியாவே வெளியேறு’ கோஷம் ஊக்குவிக்கப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையைக் கையிலெடுக்க வாய்ப்புள்ளது. சீனா - மாலத்தீவு இடையிலான உறவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவிடம் இருந்து மாலத்தீவு 1 பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த பணம் மாலத்தீவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் பில்லியன்கணக்கான டாலர்களை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இதர வளர்ச்சி சார்நத பணிகளுக்காக கடனாக வழங்கியுள்ளது. மாலத்தீவு அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதி முக்கியமான மூலோபாய பகுதியாகக் கருதப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றன. நீண்டகாலமாகவே மாலத்தீவில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளது. மாலத்தீவில் இருப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியைக் கண்காணிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, தனது தீவுகளில் ஒன்றை சீனாவுக்கு 40 ஆண்டுகளுக்கு வெறும் 50 மில்லியன் டாலருக்கு குத்தகைக்குக் கொடுத்தது மாலத்தீவு. மாலத்தீவும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. சீனாவிடம் இருந்து மாலத்தீவு ஒரு பில்லியன் டாலர் வரை கடன் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தப் பணம் மாலத்தீவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சீன கடற்படை மாலத்தீவில் தனது எல்லையை அதிகரிக்க முயன்று வரும் அதே வேளையில் சீனாவின் செல்வாக்கைத் தடுக்க இந்தியா முயன்று வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c892x1ryrd1o
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.