Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 04:20 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மருதலிங்கம் பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218011
  2. டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார, தரிந்து ரத்நாயக்க; பங்களாதேஷ் 90 - 3 விக் 17 JUN, 2025 | 12:22 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டத்தின் பகல்போசன இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இப் போட்டியில் இலங்கை சார்பாக 31 வயதான வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார, இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய 29 வயதான சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர். இன்றைய போட்டியில் பந்துவீச அழைக்கப்பட்ட தரிந்து ரத்நாயக்க தனது நான்காவது ஓவரில் மொமினுள் ஹக்கை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் முதலாவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவினால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் (14), மொமினுள் ஹக் (29) ஆகிய இருவரின் விக்கெட்களை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தரிந்து ரத்நாயக்க வீழ்த்தினார். (45 - 3 விக்) எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ (25 ஆ.இ.), முஷ்பிக்குர் ரஹிம் (20 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியை நல்ல நிலையை நோக்கி நகர வைத்துள்ளனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடரவுள்ளது. https://www.virakesari.lk/article/217697
  3. TEA 1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England Day 1 - Session 2: England chose to field. India (51 ov) 215/2 Current RR: 4.21 • Min. Ov. Rem: 38 • Last 10 ov (RR): 43/0 (4.30) England
  4. இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES/MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு,இரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா மோரேல், அலிசன் பிரான்சிஸ் & விக்டோரியா கில் பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் குழு 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து வரும் இஸ்ரேல், இரானின் நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது முக்கிய கவனம் செலுத்துகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் கூற்றுப்படி (IAEA), இரானின் அணுசக்தி மையத்தில் உள்ள நடான்ஸ் நிலையம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. மற்றொரு தளமான ஃபோர்டோ, ஒரு மலையின் ஆழத்தில் அமைந்துள்ளது. அந்த நிலத்தடி அணுசக்தி நிலையத்தை அடைவதற்கு, அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் தேவைப்படும். ஒருவேளை ஃபோர்டோ மீது குண்டுவீச்சு நடந்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் என்னவாக இருக்கும்? இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் "மிகவும் கவலைக்குரியவை" என்று சர்வதேச அணுசக்தி முகமை விவரித்துள்ளது. திங்கள் கிழமையன்று, அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, ராணுவ விரிவாக்கம் "மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளுடன் கதிரியக்க வெளியீட்டிற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது" என்று கூறினார். யுரேனியத்தின் ஒரு குறிப்பிட்ட வகையை (ஐசோடோப்பை) உருவாக்கிச் சேமிக்க, செறிவூட்டல் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சர்ரே பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் தேசிய இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பேடி ரீகனின் கூற்றுப்படி, யுரேனியத்தை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கும்போது, அது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை, பெரும்பகுதியாக, 99.3 சதவிகிதம் யுரேனியம்-238, அதோடு, 0.7% - அதாவது சுமார் 150 அணுக்களில் ஒரு அணு யுரேனியம்-235 "அணு உலை வேலை செய்யத் தேவையானது இதுதான்" என்று விளக்குகிறார் பேராசிரியர் ரீகன். ஆற்றல் வெடிப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானில் உள்ள முழுமையடையாத அராக் கனநீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சிகளை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டது அணுசக்தி செறிவூட்டல் செயல்முறை, அடிப்படையில் யுரேனியம்-235 அளவை அதிகரிப்பதைக் குறிக்கிறது. யுரேனியத்தை அதன் வாயு வடிவத்தில் எடுத்து மைய விலக்குகள் (centrifuges) எனப்படும் இயந்திரங்களில் சுழற்றுவதன் மூலம் இந்தச் செயல்முறை நடைபெறுவதாக விளக்கினார் பேராசிரியர் ரீகன். மேலும் யுரேனியம்-238, தேவையான யுரேனியம்-235ஐ விட கனமாக இருப்பதால், அவை சுழலும்போது இரண்டும் பிரிந்து விடுகின்றன. செறிவூட்டலை அதிகரிக்க இந்தச் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. ஆற்றலை வெளியிடும் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினையை உருவாக்க அணுமின் நிலையங்களுக்குப் பொதுவாக இந்தச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் சுமார் 3-5% தேவைப்படுகிறது. ஆனால் அணு ஆயுதம் தயாரிப்பதே நோக்கமாக இருக்கும்போது, யுரேனியம்-235 சுமார் 90% தேவைப்படும். அடிப்படையில், யுரேனியம் எவ்வளவு செறிவூட்டப்படுகிறதோ, அந்த அணுக்கள் அனைத்தும் பிளவுபடும்போது ஆற்றல் வெடிப்பும் அதிகமாக இருக்கும். இரானின் யுரேனியம் சுமார் 60% செறிவூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அதாவது, அணு ஆயுதம் தயாரிக்கப் போதுமான அளவு செறிவூட்டும் பாதையில் அது முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், முறையாகச் சேமித்து வைக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மீது ராக்கெட்டை ஏவுவது, ஃபுகுஷிமா அல்லது செர்னோபில் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட பேரழிவுகளைப் போன்ற "அணுசக்தி விபத்தை" ஏற்படுத்தாது. "அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம், செறிவூட்டப்படாத யுரேனியத்தைவிட மூன்று மடங்கு அதிக கதிரியக்கத் தன்மை கொண்டது. ஆனால், மொத்த அளவில் பார்த்தால், இரண்டுமே அடர்த்தியான கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல. இதனால் பெரியளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் அபாயமில்லை," என்று செர்னோபில் பேரழிவின் பின்விளைவுகளை ஆய்வு செய்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம் ஸ்மித் விளக்குகிறார். "யுரேனியம், ஓர் அணு உலை அல்லது வெடிகுண்டில் பயன்படுத்தப்படும்போது பிளவுபடும். இதனால் கதிரியக்க சீசியம், ஸ்ட்ரோன்டியம், அயோடின் போன்ற பிளவுப் பொருட்கள் உருவாகின்றன. இந்தப் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் முக்கியக் காரணிகள். அதனால், இவற்றைப் பற்றியே நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்," என்கிறார் அவர். ஆனால் செறிவூட்டல் தளங்களில் அணுசக்தி எதிர்வினை எதுவும் நடைபெறுவதில்லை. அதனால் ஒரு வெடிகுண்டு வெடித்தாலும் அது எந்த எதிர்வினையையும் தூண்டாது. எனவே, அந்த ஆபத்தான கதிரியக்க "பிளவுப் பொருட்கள்" இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால், வெடிப்பு ஏற்படும்போது, யுரேனியம் அந்த இடத்திற்குள் பரவிச் சிதறக்கூடும். அருகில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் டெஹ்ரானில் இருந்து வெளியேறி வருகின்றனர் நடான்ஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு, ஐ.ஏ.இ.ஏ அந்த இடத்தில் கதிரியக்க மாசுபாட்டைக் கண்டுபிடித்தது. ஆனால் வெளியே உள்ள கதிரியக்கத்தின் அளவுகள் மாறாமல் சாதாரண மட்டங்களில் இருப்பதாக ஐ.ஏ.இ.ஏ குறிப்பிட்டது. "யுரேனியத்தின் கதிர்வீச்சு உண்மையில் அதிக தூரம் பயணிக்காது" என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் கனிமவியல் மற்றும் கதிரியக்க கழிவு மேலாண்மைத் துறையின் தலைவர் பேராசிரியர் கிளேர் கார்க்ஹில். ஆனால் அந்த நிலையத்திற்கு அருகில் இருப்பவர்களுக்கு, உடல்நல அபாயங்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். "மனித உடலுக்கு ஏற்படும் நச்சுத்தன்மையைப் பொறுத்தவரை, நீங்கள் நிச்சயமாக யுரேனியம் துகள்களைச் சுவாசிப்பதோ, உட்கொள்வதோ நல்லதல்ல," என்று அவர் கூறினார். "ஏனென்றால் யுரேனியம் துகள்கள் நுரையீரல் அல்லது வயிற்றுக்குள் உள்ள செல்களில் தங்கி, மெதுவாக, கதிரியக்கத்தால் சிதைத்து, சேதத்தை ஏற்படுத்தும்." கதிரியக்கத் தன்மையுடன் ஏற்படும் ரசாயன வெளிப்பாடும் அருகில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கலாம். "ஏதேனும் விபத்து ஏற்பட்டு, மையவிலக்குகளில் (centrifuges) அடக்கப்பட்டிருந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் (uranium hexafluoride) வாயு வெளியேறினால், அது மிக மோசமான ஒரு ரசாயன விபத்தாக மாறும்," என பாங்கூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணுப் பொருள் வல்லுநரான பேராசிரியர் சைமன் மிடில்பர்க் தெரிவித்தார். "இந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் தொடர்புகொண்டால், அது மிகவும் அரிக்கும் தன்மையுடையதாகவும், ஆபத்தானதாகவும் மாறும். ஏனெனில் இது மிக வலிமையான ஓர் அமிலத்தை உருவாக்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். "ஆனால் அது அந்த உள்ளூர் பகுதிக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை." தங்கள் அவசர மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களின் நிலையும், அதன் தளங்களில் உள்ள கதிர்வீச்சு அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg44glj3xo
  5. பட மூலாதாரம்,RAMJI கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற்றது. கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். சாமி சிலையின் பல்லக்கைத் தூக்குவதில் இருந்து கோவில் கோபுர கலசத்தில் நீரைத் தெளிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து தரப்பு மக்களும் சமமாகப் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியது எப்படி? வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய பட்டியல் சமூக மக்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின மக்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். அந்த ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அந்தப் பழமையான கோவிலை இடித்துவிட்டுப் புதிய மாரியம்மன் கோவிலைக் கட்ட ஊர்மக்கள் திட்டமிட்டனர். பிபிசி தமிழிடம் பேசிய உள்ளூர் கிராம மக்கள், அந்த கோவிலின் பெரும்பான்மைப் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் சில ஆண்டு காலம் அப்படியே இருந்தது. அதன் பின்னர் ஊர் மக்கள் அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டி இந்தக் கோவில் பணிகளை முடிக்க ஆர்வம் காட்டினோம் என்று தெரிவிக்கின்றனர். நான்கு முக்கியக் கோரிக்கைகள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்க முடிவெடுத்த தருணம் "கோவில் கட்டி முடித்த பிறகு நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் பட்டியலின மக்களின் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் நான்கு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தோம்" என்று தெரிவிக்கிறார் பட்டியல் பிரிவைச் சேர்ந்த ராம்ஜி. அந்தக் கோரிக்கைகள், பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் விழா கமிட்டியில் சம அளவிலான பொறுப்புகளை பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் கோவிலில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வழி வகை செய்ய வேண்டும் கோவில் திருவிழாவின்போது சாமி சிலை தூக்குவதைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சிலைகளை வண்டியில் வைத்து பவனி அழைத்து வர வேண்டும். "ஆரம்பத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு வீடாக கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5000 வசூலிக்கப்பட்டது. பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன," என்று தெரிவிக்கிறார் ராம்ஜி. "ஆரம்பத்தில் சிறு சிறு கோவில் நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். பிறகு சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் போன்றவற்றை கோவிலுக்கு மேல்புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பட்டியலின பெண்கள் கீழ் புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கின," என்று விவரிக்கும் ராம்ஜி, பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுதான் இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிர்வாகத்தை நாடியதாகக் குறிப்பிடுகிறார். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முடிவுகள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,மாரியம்மன் சிலை பவனி நிகழ்வில் பங்கேற்ற ஊர்ப் பொதுமக்கள் இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே வட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் மே 29ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விழா கமிட்டி குழுவினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி: கோவில் குடமுழுக்கு விழாவில், பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கோவில் விழாக் குழுவில் அனைத்து வகுப்பினரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். சாமி ஊர்வலத்திற்கான வாகன ஏற்பாட்டைப் பொதுவான முறையில் செய்ய வேண்டும். வாட்ஸ்ஆப் குரூப்பில் சாதி தொடர்பான பதிவுகள் எதையும் பதிவிடக்கூடாது. சாமி ஊர்வலம், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் சாதிப் பாகுபாடின்றி அனைத்து வகுப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும். திருவிழா சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும், மேற்படி இருதரப்பினரும் வழங்க வேண்டும். இந்த முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன், "மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதன் அடிப்படையில், அமைதியான முறையில் வழிபாடு நடத்த மக்கள் அனைவரும் முன்வந்தனர்" என்று கூறினார். 'அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கக் கூடாது' பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஊர் பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விழாக் கமிட்டி குழுவின் தலைவர் காசி விஸ்வநாதன் அடுத்து வரும் தலைமுறையினர் சாதிய கொடுமை மற்றும் தீண்டாமையின் வாசமின்றி வளர வேண்டும் என்று கூறினார். "தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். ஆனால் கடவுள் மற்றும் வழிபாட்டு உரிமையானது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருக்கும். அதை கடவுளிடம் முறையிட கோவில்களுக்கு வருகின்றனர். பிற்போக்குத் தன்மை கொண்ட சாதிய கட்டுப்பாடுகளை நாங்கள் உடைக்க விரும்பினோம்," என்று தெரிவித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், "கோவில் திருவிழாவின்போது உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் சாதிய பெருமைகளைப் பேசும் வீடியோக்கள், சாதிப் பெயர்கள் மற்றும் பாடல்கள் போன்றவை பகிரப்படுவதை மறுத்தோம். மேற்கொண்டு பேனர்களிலும் சாதிப் பெயர்கள் ஏதும் இடம் பெறாமல் அச்சிடப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அதை அனைவரும் முறையாகப் பின்பற்றினோம். மக்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மகிழ்வுடன் பங்கேற்றனர்," என்றார். இனி வருங்காலங்களிலும், அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய போக்கே தொடரும் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார். அனைத்து கோவில் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பட்டியலின மக்கள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,குடமுழுக்கு நிகழ்வின்போது ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பங்கேற்றனர். ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்து பால் குடம் எடுத்துள்ளனர். "அனைவரும் ஒன்றாக பால் குடம் எடுத்தோம். பொங்கலும் ஒன்றாகப் படையலிடப்பட்டது. மேலும் மாரியம்மன் சிலை பவனியின்போது அந்தச் சிலையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தூக்கிச் சென்றனர். எங்கள் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அனைத்தும் நடைபெற்றது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார் ராம்ஜி. கேள்விக்குள்ளாகிறதா பட்டியலின வழிபாட்டு உரிமைகள்? "பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் காலம் காலமாகப் பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில மாற்றங்களையும், சேலம் கிராமத்தில் நடந்திருப்பது போன்று நேர்மறையான மாற்றங்களையும் காண்பது மக்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெளியுலக அனுபவத்தையும் காட்டுகிறது," என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் வெளியான தலித் இதழ்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான ஆர். யுவராஜ். தமிழ்நாடு பட்டியலின மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து வரும் அவர், "இதுபோன்ற கோவில் வழிபாட்டு உரிமைகள் அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை," என்றும் குறிப்பிட்டார். "பல சமூகத்தினர் சேர்ந்து வாழும் பகுதி என்பதால் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தொழில்மயமாக்கப்பட்ட பகுதி என்றால் ஒரே தொழிலைச் சார்ந்து பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில், பழைய தீண்டாமை பழக்கவழக்கங்கள் எளிமையாக முடிவுக்கு வருகிறது. ஏனெனில் அவர்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதாரத்திற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் ஒரேயொரு சாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, வாழ்வும் வருமானமும் ஒரு எல்லைக்குள்தான் என்று வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் சாதிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கின்றன," என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார். அதோடு, சமூக நீதிக்கான பயணம் மிக நீண்டது எனவும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கோவில் பிரவேசம் ஓர் இளைப்பாறல் எனவும் யுவராஜ் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpw7g1ee0n2o
  6. 18 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்திய இளம் படை? அணியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் (5 போட்டிகள்) இன்று பிரிட்டனின் ஹெடிங்லியில் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை தொடங்குகிறது. 25 வயது ஆகிய சுப்மான் கில் 21-ம் நூற்றாண்டு இந்திய அணியின் இளம் கேப்டனாக உருவெடுத்துள்ளார். 18 ஆண்டுகள் வறட்சி 2007- ஆம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபின் 18 ஆண்டுகளாக பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கிறது. ஆதலால், இந்த முறை இளம் கேப்டன் சுப்மன் கில் மீதும், இளம் வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முற்றிலும் இளமையான அதே நேரத்தில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை அணுகுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை இன்று பிரிட்டனில் நடைபெறுகிறது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று அது மட்டுமல்லாமல் 2025-27-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று இந்த டெஸ்ட் தொடரிலிருந்து தொடங்குவதால் இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் தொடரை முடிக்கவும் தீர்மானமாக இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி 3-வது இடத்தையும், இங்கிலாந்து அணி, 22 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்தன. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்றும், பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இழந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு டெஸ்ட் தொடர் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறின. 23 ஆண்டுகளுக்குப்பின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணியால் டெஸ்ட் வெற்றியைப் பெற முடியவில்லை. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்களில் இந்திய அணி தோற்றது. ஆதலால், இந்திய அணி இந்த மைதானத்தில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்றால்கூட கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் கழித்து கிடைத்த வெற்றியாகவே வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய கிரிக்கெட் அணி (கோப்புப் படம்) கில் தலைமைக்கு பரிசோதனை சுப்மன் கில் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி இதற்கு முன் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக கில் தலைமை ஏற்றுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் 5 முதல் தரப்போட்டிகளில் கில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், ரஞ்சிக் கோப்பையில் ஒரு முறை கேப்டன்ஷிப் செய்துள்ளார். ஒருநாள்போட்டி, டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது டெஸ்ட் கேப்டன்ஷிப். சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். ஐபிஎல் டி20 தொடரில் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார். சுப்மன் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் கேப்டன்ஷி செய்யும்போது பார்த்தேன், என்னை அவர் ஈர்த்துவிட்டார். அவரின் அமைதி, வியூகம் அமைக்கும் முதிர்ச்சி, முடிவெடுக்கும் திறன் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருப்பது கில்லுக்கு கூடுதல் பலத்தையும், எளிமையாக பணியைச் செய்யவும் வழிவகுக்கும். இவர்கள் தவிர ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட், கருண் நாயர் ஆகியோரும் டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் உள்ளனர். இங்கிலாந்து அணி ப்ளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியில் இன்னும் ப்ளேயிங் லெவன் அறிவிக்கப்படவில்லை. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா - இவர்கள் உத்தேச ப்ளேயிங் லெவனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரில் சுப்மான் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார் சுப்மான் கில் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அருமையான தொடக்கத்தை அளித்த கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது வீரராக கருண் நாயர், அன்கேப்டு வீரர் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடிய சுதர்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், 3வது இடம் யாருக்கு என்பது குழப்பமாக இருக்கிறது. விராட் கோலி களமிறங்கும் 4-வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார் என்பதால் அந்த இடம் நிரப்பப்பட்டுவிட்டது. 3-வது இடம் கருண் நாயருக்கு வழங்கப்பட்டால், அடுத்ததாக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் சாய் சுதர்சனா அல்லது ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியா என்ற கேள்வி எழுகிறது. பந்துவீச்சிலும் 5வது பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்வதா அல்லது நிதிஷ் ரெட்டியை தேர்வு செய்வதா என்ற கேள்வியும் எழுகிறது. பிரிட்டன் மண்ணில் பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியதில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செயல்படுவார். பேட்டிங்கிலும் ஓரளவு நன்றாக செயல்படுவார் என்பதால் 8-வது வீரராக ஷர்துல் தாக்கூர் வரவும் வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சு வரிசையில் ஜடேஜா தவிர்த்து பேட்டிங்கில் வலுசேர்க்க வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ராணா ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம். பிரிட்டன் பருவநிலைக்கு ஏற்றார்போல் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்விங், பவுன்ஸர் இருக்கும் என்பதால், இருவரில் ஒருவர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வலைப்பயிற்சியில் கருண்நாயர் இவர்கள் இல்லை இந்திய அணி கடைசியாக 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் இருந்த விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா, புஜாரா, ஷமி, ரஹானே, அக்ஸர் படேல், இசாந்த் சர்மா, சூர்யகுமார், விஹாரி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த அணியில் இல்லை. 2022-ஆம் ஆண்டு 5வது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன்ஷியில் இந்திய அணி ஆடியது. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் சதம் விளாசினர். 98 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிம்மசொப்னாக திகழ்ந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி 378 ரன்களைத் துரத்தியதில் ரூட், பேர்ஸ்டோவின் சதம் வெற்றியைத் தேடித்தந்தது. மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து பிரன்டென் மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷமான 'பாஸ்பால்' ஆட்டத்தை விளையாடுகிறது. இங்கிலாந்து அணி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் தொடரை அணுகுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். துணைக் கேப்டனாக ஓலே போப் நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், போப், ஸ்டோக்ஸ் என வலுவான வரிசை இருக்கிறது. இதில் ஜோ ரூட்டுக்கு மட்டுமே இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. பந்துவீச்சில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்வில் இருந்த கிறிஸ் வோக்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார், அவர் தவிர்த்து பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகிய வேகப்பந்துவீச்சாளரும், ஷோயிப் பஷீர் சுழற்பந்துவீச்சாளரும் உள்ளார். இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் ஆட்டத்தை எந்தநேரத்திலும் திருப்பக்கூடியவர்கள் என்பதால், இந்திய அணி நடுவரிசை விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், கார்ஸ், டங் ஆகிய 4 வீரர்கள் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இவர்களின் பேட்டிங், பந்துவீச்சு குறித்து இந்திய வீரர்களுக்கும் தெரியாது, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சு குறித்தும் இவர்களுக்கும் தெரியாது என்பதும் சவாலாக இருக்கும். டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டால் நடுவரிசை பேட்டர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிடுவார்கள், இதற்கு வாய்ப்பளிக்காமல் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட வேண்டும். இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஓலே போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேம் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷீர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். ஆடுகளம் எப்படி? ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. பிரிட்டனில் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயில் நன்றாக இருக்கும் என்பதால், தொடக்கத்தில் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும். ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ராபின்ஸன் அளித்த பேட்டியில் "வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை பேட்டர்கள், பந்துவீச்சாளர்களுக்கு சமமாக இருக்கும் வகையில் மாற்றியிருக்கிறோம். புற்களை அதிகமாக விட்டு வைக்காமல் குறைத்துவிட்டோம். ஆதலால், ஸ்விங், பவுன்ஸ் இருக்கும், பேட்டிங்கும் நன்றாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்கலாம். முதல் 3 நாட்கள் வெயில் இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸில் பேட்டர்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் கடைசி இரு நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதால், குளிர்ந்த சூழல், காற்றின் வேகம், ஆடுகளத்தின் தன்மை ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது (கோப்புப்படம்) இதுவரை இங்கிலாந்து-இந்தியா இந்திய அணி கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன் 2007-ம் ஆண்டு திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை பிரிட்டன் மண்ணில் வென்றது. அதேபோல ஹெடிங்லி மைதானத்தில் கடைசியாக 2002ல் வென்றது, 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி வெல்லவில்லை. முதல் போட்டியில் வெற்றியும், டெஸ்ட் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு வரலாறாக இருக்கும். இரு அணிகளும் கடந்த 1932ம் ஆண்டிலிருந்து 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 வெற்றிகளும், இந்திய அணி 35 வெற்றிகளும் பெற்றுள்ளன, 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2024ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து சென்றது. இந்திய அணியும் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் செய்து 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தொடக்கத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வெல்லும் சூழலில் இருந்தது, ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8mmr7ln4o
  7. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருதுகளையும் 2 கலசப்பதக்கங்களையும் பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/217990
  8. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாடு திரும்பினார் 20 JUN, 2025 | 10:43 AM சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China) அழைப்பின் பேரில் சீனாவுக்கு 10 நாட்கள் விஜயம் மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நேற்று வியாழக்கிழமை (19) மாலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார். சீனாவின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத் தளங்களை பார்வையிடும் நோக்கமாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. டில்வின் சில்வாவுடன் சுமார் 29 பேர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உட்பட 29 பேர் நேற்று மாலை 06.20 மணியளவில் சீனா விமான சேவையின் எம்.யு - 231 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த விஜயத்தின் போது இலங்கையின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217968
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். மௌரா (தனியுரிமையைப் பாதுகாக்க அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது துணையிடம் இதைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை. எனவே, அவர் வெளியேறும் வரை காத்திருந்து, பின்னர் தன்னை நன்கு சுத்தப்படுத்திக் கொள்வார். சோப்பு முதல் லூப்ரிகன்ட் (Lubricant) வரை தான் பயன்படுத்தும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை மாற்ற முயன்றார். ஆனால் பிரச்னை தீவிரமடைந்தது, வீக்கம் மற்றும் சிவந்து போகுதல் என அது தொடர்ந்தது. குறிப்பாக, விந்துவுடனான தொடர்புக்கு பிறகுதான் இதெல்லாம் நடந்தது. விந்து ஒவ்வாமை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசியில் மௌரா அந்தத் துணையிடமிருந்து பிரிந்து, ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கும் இருக்கும் ஒருவரை விரும்பத் தொடங்கினார். "சில நாட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஒரு இரவில் உடலுறவுக்குப் பிறகு நாங்கள் படுக்கையில் படுத்திருந்தபோது, என் நாக்கு திடீரென்று வீங்கத் தொடங்கியது," என்று மௌரா நினைவு கூர்ந்தார். "என்ன நடக்கிறது என்பதைக் கண்ட என் துணை, 'உனக்கு மூச்சுத் திணறுகிறது!' என்று கத்தினார். என் இன்ஹேலரை தேடி எடுத்து, என் வாயில் திணித்து, அதை இயக்கினார். அதிர்ஷ்டவசமாக, மருந்து என் நுரையீரலுக்குள் செல்லும் அளவுக்கு நான் சுவாசித்துக் கொண்டிருந்தேன்." ஆஸ்துமா மற்றும் பல ஒவ்வாமைகளைக் கொண்ட மௌரா, ஆணுறையில் கசிவு ஏற்பட்டதாக நம்புகிறார். அவரும் அவருடைய நீண்டகால துணைவரும் இப்போது ஆணுறை பயன்பாட்டில் இன்னும் கவனமாக இருக்கிறார்கள். இத்தகைய அனுபவத்தை எதிர்கொள்ளும்வரை, விந்து ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தனக்குத் தெரியாது என்று அவர் கூறுகிறார். மிகவும் அரிதானவை என்றாலும், சிலருக்கு மற்றவர்களின் உடல்களுடன் தொடர்பு ஏற்படும்போது, கடுமையான நோயெதிர்ப்பு எதிர்வினைகளால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் இத்தகைய நிலைமைகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வேலை, உறவுகள் மற்றும் பொதுவாக ஒருவர் உலகில் எவ்வாறு வாழ்கிறார் என்பதையும் பாதிக்கலாம். ஆனால் இந்த எதிர்வினைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன, அவற்றுக்கு சரியான காரணம் என்ன என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது. அவை உண்மையான ஒவ்வாமைகளா, அல்லது வேறு ஏதாவது? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விசித்திரமான எதிர்வினைகள், மனித நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்தன்மைகள் மற்றும் நமது உடலின் வேதியியல் பற்றிய நுண்ணறிவுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்குகின்றன. பெரும்பாலும், மற்றொரு நபரின் உடல் தொடர்பான உணர்திறன் (Sensitivity) என்பது, அந்த உடலில் இருக்கக்கூடிய வெளிப்புறப் பொருட்களுடன் தொடர்புடையது. உதாரணமாக, அது டியோடரன்ட்கள் மற்றும் ஆஃப்டர் ஷேவ் கிரீம்கள் உள்ளிட்ட செயற்கை வாசனை திரவியங்களாக இருக்கலாம். 150க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் இத்தகைய ஒவ்வாமையுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது. காரணம் என்பது எப்போதும் தெளிவாக இருக்காது. ஒரு அமெரிக்கப் பெண், தனது கணவரின் வாசனை திரவியத்தால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு ஆளானார். அவருக்கு மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம் என்ற நோய் ஏற்பட்டது. இந்த நிலையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் செல்கள் செயலிழக்கத் தொடங்குகின்றன. ஆஸ்திரியாவில் உள்ள கெப்லர் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் சபீன் ஆல்ட்ரிச்டர் கூறுகையில், "இந்த இணைப்பு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மாஸ்ட் செல் கோளாறுகள் உள்ள சில நோயாளிகள், மற்றவர்களின் இயற்கையான உடல் துர்நாற்றம் அல்லது தோலால் வெளிப்படும் ரசாயனங்களுக்கு உணர்திறன் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்." என்கிறார். உடல் துர்நாற்றத்திற்கு பங்களிக்கும் பல சேர்மங்களை தோல் வெளியிடுகிறது. இந்த தோல் வாயுக்களில் டோலுயீன் போன்ற ரசாயனங்கள் அடங்கும். இவை கச்சா எண்ணெயில் காணப்படுகிறது. மேலும், வண்ணப்பூச்சுகள் (Paint), பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. மக்கள் தெரிந்தோ தெரியாமலோ டோலுயீனை நுகரலாம், உதாரணத்திற்கு, புகையிலை புகையில் உள்ள ஏராளமான ரசாயனங்களில் டோலுயீனும் ஒன்றாகும். 'பீப்பிள் அலர்ஜி டு மீ' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனித தோல் தொடர்ந்து தூசித் துகள்களை உதிர்த்து வாயுக்களை வெளியிடுகிறது. பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM- People Allergic To Me) எனப்படும் மர்மமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உடல்கள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை குறித்து சில கூடுதல் நுண்ணறிவுகளை வழங்க முடியும். சமீபத்திய ஆய்வுகள், சிலரின் சரும வாயுக்கள் அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை போன்ற எதிர்வினைகளைத் தூண்டுவதாகக் கூறுகின்றன. அத்தகைய நிகழ்வு பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானில் உள்ள டோக்காய் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான யோஷிகா செகின் மற்றும் அவரது குழுவினர், 2023ஆம் ஆண்டில் PATM அறிகுறிகளைப் பற்றி புகார் அளித்தவர்களால் வெளியிடப்பட்ட சரும வாயுக்களை ஆராய்ந்தனர். குழு ஆய்வு செய்த 75 சரும வாயுக்களில், குறிப்பாக டோலுயீன் இருக்க அதிக வாய்ப்புள்ளது. PATM உள்ளவர்கள், இந்த நிலை இல்லாதவர்களை விட சராசரியாக 39 மடங்கு அதிகமாக இந்த வேதிப்பொருளை வெளியேற்றினர். "சுவாசத்தின் போது டோலுயீன் காற்றின் வழியாக உள்ளிழுக்கப்படுகிறது. ஒரு தீங்கு விளைவிக்கும் சேர்மமாக, இது பொதுவாக கல்லீரலால் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது," என்று செகின் விளக்குகிறார். "இருப்பினும், PATM நோயாளிகளுக்கு டோலுயீனை உடைக்கும் திறன் குறைந்து, ரத்த ஓட்டத்தில் அது குவிந்து, பின்னர் தோல் வழியாக வெளியிடப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். PATM என்ற கருத்தாக்கமே இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அதற்கான நோயறிதல் அளவுகோல்கள் எதுவும் இல்லை என்றும் செக்கின் குறிப்பிடுகிறார். மறுபுறம், வியர்வை ஒவ்வாமை என்பது பொதுவாக மற்றவர்களின் வியர்வையை விட ஒருவரின் சொந்த வியர்வைக்கான உணர்திறனுடன் தொடர்புடையது. முடியைப் பொறுத்தவரை, மனித முடி ஒவ்வாமை இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்ட சில சந்தர்ப்பங்களில், எதிர்வினைக்கான காரணம் முடியில் உள்ள ஒவ்வாமை அல்ல, மாறாக வெளிப்புறப் பொருளில் உள்ள ஒவ்வாமையாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒரு பூனையை வளர்ப்பவரின் முடியில் நுழையும் பூனை புரதம் (Cat protein) அல்லது கெரட்டின் முடி சிகிச்சையில் மூலம் வரும் ஃபார்மால்டிஹைட் வகைகள். உடல் திரவங்களிலிருந்து ஏற்படும் பாதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முத்தமிடுவதால் உமிழ்நீர் வழியாக ஒவ்வாமை பரவும். உடல் திரவங்களில் உள்ள குறிப்பிட்ட ஒவ்வாமையூக்கிகளால் (Allergen) ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படலாம். பிரிட்டனில் ஒரு பெண்ணுக்கு பிரேசில் கொட்டைகள் (Brazil nuts- மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரு விதை அல்லது பாதாம் போன்ற ஒரு கொட்டை) தொடர்பான ஒவ்வாமை இருந்தது. அந்தப் பெண்ணின் துணைவர், அவர்களது உடலுறவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பிரேசில் கொட்டைகளை எடுத்துக்கொண்டார். இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில், அவர் தனது பற்கள், நகங்கள் மற்றும் கைகளை நன்றாக சுத்தம் செய்திருந்தார். ஆனால், அவருடனான உடலுறவுக்குப் பின், அந்தப் பெண்ணுக்கு தோல் அரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பொதுவாக முத்தமிடும்போது இத்தகைய ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு பாதாம், வேர்க்கடலை போன்ற கொட்டைகள் காரணமென கூறப்பட்டாலும், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொண்ட பிறகு, உமிழ்நீர் மூலமாகவும் ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படுகிறது. ஆன்டிபயாடிக் ஒவ்வாமை உள்ள பெண்கள், அந்த மருந்துகளை உட்கொண்டவர்களுடன் உடலுறவு மற்றும் (சாத்தியமான) வாய்வழி உறவு கொண்டபிறகு, பாதகமான எதிர்விளைவுகளை அனுபவித்துள்ளனர். ஆனால் இந்த வெளிப்புற ஒவ்வாமைகளுக்கு அப்பால், சில உடல் திரவங்களுக்குள் இருக்கும் புரதங்களும் ஒரு எதிர்வினையைத் தூண்டும். ஒரு உதாரணம் விந்து, சில மருத்துவர்கள் இதுகுறித்து அறிந்திருந்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் அதிக தகவல்கள் தேவைப்படுகிறது. விந்து ஒவ்வாமையின் அறிகுறிகள் (செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி என்றும் அழைக்கப்படுகின்றது) என்பது, அதீத தோல் அரிப்பு முதல் ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையான அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) வரை இருக்கலாம். இது குறிப்பாக 20 மற்றும் 30 வயதுடையவர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக 100க்கும் குறைவான ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளே உள்ளன என்று 2024இல் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. செமினல் பிளாஸ்மா- விந்தணுவின் பெரும்பகுதியை உருவாக்கும் திரவம் இது. இதில் ஒவ்வாமை என்பது விந்தணுவை விட, அதனுள் இருக்கும் ஒரு புரதத்தின் காரணமாக ஏற்படுகிறது. 'கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னை' பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில், ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் 'கிளினிக்கல் மெடிசின்' பேராசிரியரான ஜோனாதன் பெர்ன்ஸ்டீன் இது குறித்து விளக்கினார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி கொண்டவர்களின் உடலில் என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி குறித்த ஆராய்ச்சியை செயல்படுத்த நல்ல விலங்கு மாதிரிகள் இல்லை, அல்லது போதுமான அளவு பாதிக்கப்பட்ட மனிதர்கள் இல்லை என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். விந்து ஒவ்வாமை என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சார்ந்தோ அல்லது பரவலான முறையிலும் ஏற்படலாம். இது பொதுவாக யோனியுடன் அல்லது அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஸ்பெயினில், ஒரு பெண், யோனி வழி உடலுறவுக்குப் பிறகு எந்த ஒவ்வாமையையும் எதிர்கொள்ளவில்லை. குதவழி உடலுறவுக்குப் பிறகு, சுயநினைவை இழந்து, அனாபிலாக்ஸிஸின் பிற அறிகுறிகளையும் எதிர்கொண்டார். அவருக்கு, விந்து திரவத்திற்கு அதிக உணர்திறன் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் ஒரு பெண்ணின் சருமம் விந்துடன் தொடர்பு கொண்டபோது (பாலியல் சாராத சூழ்நிலையில்) வீக்கம் மற்றும் தோல் அரிப்பு ஏற்பட்டது. உடலுறவுக்குப் பிறகான கடுமையான வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை குறிப்பிட்ட அறிகுறிகளாக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். அவரது நோயாளிகளில் ஒருவர் அந்த உணர்வை, "யோனியில் ஆயிரம் ஊசிகள் கொண்டு குத்தப்படுவது போல இருந்தது" என்று விவரித்தார். ஒரு பெண், பல துணைவர்களின் விந்து அல்லது ஒருவரின் விந்துவுக்கு உணர்திறன் கொண்டவராக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். பொதுவாக இதில் நோயறிதல் (Diagnosis) என்பது ஒரு பாலியல் துணையிடமிருந்து சேகரித்த புதிய விந்து திரவ மாதிரியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்கின் ப்ரிக் (Skin prick) சோதனையை உள்ளடக்கியது. பெர்ன்ஸ்டீனிடம் வழக்கமாக, ஒரு ஆண் துணைவருடன் வாழும் அல்லது ஒருதார மணம் செய்து கொண்ட பெண்களே சிகிச்சைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். விந்து ஒவ்வாமை குறித்த சிகிச்சைக்கு அதிக நிபுணர்கள் இல்லாததால், சிலர் பெர்ன்ஸ்டீனுடன் கலந்தாலோசிக்க நீண்ட தூரம் பயணம் செய்து வருகிறார்கள். "மருத்துவ நிபுணர்களுக்கு அவ்வாறு வருபவர்களை எப்படி கையாள்வது என தெரியாததால், பல நோயாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது தீவிரமான ஸ்டீராய்டு சிகிச்சைகளைத் தொடங்குகிறார்கள்" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். ஆனால் பெர்ன்ஸ்டீனின் கூற்றுப்படி, விந்து ஒவ்வாமை உள்ள எவரும் அவரது நுட்பத்திலிருந்து பயனடையலாம். ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே விந்து ஒவ்வாமை பற்றிய தரவு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. பெர்ன்ஸ்டீன் அது போன்ற ஒரு பாதிப்பை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறுகிறார், ஆனால் அது ஆண்களில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லையா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஒவ்வாமையின் அறிகுறிகள் யோனிக்குள் உள்ள குறிப்பிட்ட நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடுமா என்று அவர் யோசித்தார். இருப்பினும் இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான குதவழி உடலுறவுக்குப் பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை குறித்த பதிலை அளிக்கவில்லை. சிகிச்சைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பெர்ன்ஸ்டீன் பரிசோதித்த முந்தைய சிகிச்சையில், ஒரு நோயாளியின் உணர்திறனைக் குறைக்க, அவரது தோலுக்குள் ஒரு துணையின் விந்துவை ஊசி மூலம் செலுத்துவது அடங்கும். இது போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோமுக்கான (Post orgasmic illness syndrome) சிகிச்சையைப் போன்றது. (போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோம்- இதில், ஆண்கள் தங்கள் சொந்த விந்தணுக்களுக்கே அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவொரு அரிய மற்றும் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையாகும்.) ஆனால் இந்த சோதனை முறை விலை உயர்ந்தது. "மாதிரிகளைத் தயாரிப்பதில் நிறைய ஆய்வகப் பணிகள் இருந்ததால், நோயாளிகள் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பெர்ன்ஸ்டீனும் அவரது குழுவினரும் இரண்டு மணி நேர அமர்வில் இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியைக் கண்டுபிடித்தனர். முதலில், அவர்கள் விந்தணுவிலிருந்து விந்து திரவத்தைப் பிரித்தனர். பின்னர், நோயாளி எவ்வளவு உணர்திறன் உடையவர் என்பதைப் பொறுத்து, திரவத்தை மிகவும் பலவீனமான நிலைக்கு - மில்லியனில் ஒரு பங்கு அல்லது பத்து மில்லியனில் ஒரு பங்கு என நீர்த்துப்போகச் செய்தனர். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும், அவர்கள் நீர்த்த திரவத்தை நோயாளியின் யோனியில் செலுத்தினர், ஒவ்வொரு முறையும் செறிவுகளை படிப்படியாக அதிகரித்தனர். இது நோயாளி சகிப்புத்தன்மையை வளர்க்க உதவியது. செயல்முறை முழுவதும், நோயாளி நெருக்கமாக கண்காணிக்கப்பட்டார். இதன் விளைவாக, "அதன் பிறகு, பெரும்பாலான நோயாளிகளுக்கு பெரிய ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படவில்லை. பின்னர் அந்த ஒரு துணையுடன் (விந்தணு மாதிரி அளித்த நபர்) அவர்களால் எந்த பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள முடிந்தது." என பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிற மனிதர்கள் தொடர்பான ஒவ்வாமை என்பது துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உடலுறவுக்கு பிறகு ஆணின் பிறப்புறுப்பு சிவந்தது செமினல் பிளாஸ்மா மற்றும் விந்து தொடர்பான அதிக உணர்திறன் என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது வேறு பிரச்னையாக கருதப்படுகிறது. உடலுறவின் போது பரவும் வேறு சில திரவங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. கருப்பை வாய் மற்றும் யோனியின் செல்களால் சுரக்கப்படும் ஒரு திரவமான செர்விகோவஜினல் (Cervicovaginal) திரவத்திற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கிட்டத்தட்ட எந்த ஆராய்ச்சியும் இல்லை. இந்தத் திரவம் யோனி பகுதியின் வறண்ட தன்மையைக் குறைக்கவும், சில நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது. ஆனால் போலந்தில் உள்ள தோல் மருத்துவ நிபுணரான மாரெக் ஜான்கோவ்ஸ்கி, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைக் தான் கண்டதாக கூறுகிறார். அந்த நோயாளி, ஒரு ஆண் பல மருத்துவர்களைச் சந்தித்த பிறகு அவரிடம் வந்தார். ஒரு பெண்ணுடன் யோனி உடலுறவு கொண்டு, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஆணின் பிறப்புறுப்பு பகுதி சிவந்து, தோல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாய்வழி உடலுறவு கொண்ட பிறகு அவரது முகத்திலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஒவ்வாமையாக இருக்கலாம் என்று அந்த நோயாளி நினைத்தார், ஆனால் மற்ற மருத்துவர்கள் அவர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி நேர்மறையான சிந்தனையுடன் இருந்தார். பாலியல் செயல்பாடுகளின் போது பெண்களால் சுரக்கப்படும் செர்விகோவஜினல் திரவத்திற்கு ஏற்படும் ஒவ்வாமைக்கான பிற சாத்தியமான நிகழ்வுகளையும் தேடினார். ஆண்டிஹிஸ்டமைன்களை எடுத்துக் கொண்ட பிறகு தன்னிடம் வந்த நோயாளி குணமடைந்ததாக அவர் கூறுகிறார். இந்த பாதிப்பு ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரை 2017இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது. அவர்கள் தோல் மருத்துவர்கள் மற்றும் இந்த நிலை இருக்கக்கூடிய நபர்களை ஆய்வு செய்தனர். ஐந்து தோல் மருத்துவர்களில் ஒருவர் இதே போன்ற நிகழ்வுகளை நோயாளிகளிடம் கண்டதாகக் கூறினர். இருப்பினும் பல மருத்துவர்களால் இந்த ஒவ்வாமை உண்மையானதா என்பதை உறுதியாக கூறமுடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வில், செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்கள், தொடர்புக்குப் பிறகு தோல் சிவந்து போவது, அரிப்பு, எரிச்சல், வீக்கம் ஆகியவை ஏற்பட்டதாகக் கூறினர். இந்த பதில்களின் அடிப்படையில், ஜான்கோவ்ஸ்கியும் அவரது குழுவினரும் இந்த ஒவ்வாமை அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் விந்து ஒவ்வாமையைப் போலவே பொதுவானதாக இருக்கலாம் என்று மதிப்பிட்டனர். இருப்பினும், இதுவரை கிடைத்த சான்றுகள் அவதானிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும், அதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். விந்து மற்றும் செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமைகளுக்கு இடையிலான ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஆணுறைகள் பிந்தையவற்றுக்கு பெரிதும் உதவாது. காரணம், ஆணுறைகள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பையை முழுமையாக மூடாது என்பதால். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வு முடிவுகளில், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் மீண்டும் அந்தத் திரவத்திற்கு பழக்கப்படுவது, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்களுக்கு உதவியது என்று கண்டறியப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், இளம் வயதினர்- அதாவது தங்கள் காதல் உறவுகளின் தொடக்க கட்டத்தில் இருப்பவர்கள் என்றும், துணையுடனான நெருக்கத்திற்கான அவர்களின் வலுவான ஆசை அவர்களுக்கு இந்த ஒவ்வாமையின் அசௌகரியத்தைத் தாங்க உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். காலப்போக்கில், திரவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்வது அவர்களின் அறிகுறிகளைக் குறைப்பதாகத் தோன்றியது. எனவே இது விந்து ஒவ்வாமையிலிருந்து வேறுபட்டது, பொதுவாக விந்து ஒவ்வாமை, தானாகவே போய்விடாது. தங்கள் துணையிடம் ஏதாவது ஒரு விஷயத்தால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, அதன் தாக்கம் தீவிரமாக இருக்கலாம். விந்து மற்றும் அது தொடர்புடைய ஒவ்வாமையைத் தவிர்ப்பதற்கு விலையுயர்ந்த மாற்று வழிகள் தேவைப்பட்டிருக்கலாம் என்பதால், தானும் தன்னுடைய துணையும், குழந்தைகள் பெற வேண்டாம் என்ற முடிவை எடுப்பதில், தனது விந்து ஒவ்வாமை பிரச்னை ஒரு பங்கு வகித்ததாக மௌரா நம்புகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். "எனது துணைவரின் விந்துவுக்கு எனக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறியதால், மனம் புண்பட்டதாக துணைவர் என்னிடம் கூறினார்," என்று மௌரா கூறுகிறார். ஆனால், அவரது காதல் உறவு பாதுகாப்பானதாக உள்ளது. அவரது துணைவர் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை. "இந்த ஒவ்வாமைக்கு அவர் என்னை அல்ல, விதியையே குறை கூறுகிறார்." என்கிறார் மௌரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyl6p49330o
  10. 20 JUN, 2025 | 09:57 AM நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நிலவிவரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக விரைவில் பிறிதொரு இடத்தில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபை அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மிக நீண்ட காலமாக செய்யப்பட்டுவந்த திண்மக் கழிவகற்றல் பொறிமுறைக்கு பொருத்தமான இடம் இல்லாத காரணத்தால் தற்போது சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. தற்சமயம் அதற்கான தீர்வாக மாற்றிடமொன்றுக்கு சுற்றுச்சூழல் அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளரின் முயற்சியால் இதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அதற்கான அமைவிடத்தில் தற்போது வேலைகள் உள்ளதன் காரணமாக அது இன்னும் முடிவடையவில்லை. திண்மக்கழிவகற்றல் தரம் பிரிக்கும் பகுதி தற்சமயம் இல்லாத காரணத்தால் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகியுள்ளோம். இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. திண்மக் கழிவுகளை தரம் பிரித்து தரும் பட்சத்தில் அதனை அகற்றுவதற்கான வசதிகள் இலகுவாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் கையிலுமே எமது பிரதேசத்தின் தூய்மையும் இருக்கிறது. பிரதேச சபைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஒரிரு வாரங்களாக பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். சில வாரங்களில் முழுமையான வினைத்திறனாக திண்மக் கழிவகற்றலை கொண்டு செல்வோம் என்பதை உறுதியுடன் கூறுகிறோம். காரைக்கால் பகுதி தற்போது திண்மக் கழிவகற்றலை தரம் பிரிக்கும் வேலையை செய்ய முடியாத பிரதேசமாக மாறியுள்ளது. அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றபடியால் தொடர்ச்சியாக அதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்றிடமாக நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைமுனங்கு இந்து மயானத்துக்கு அருகில் திண்மக் கழிவகற்றல் இடமொன்றை அமைத்து எங்களுக்கு வர வேண்டிய நிதிப் பங்களிப்புடன் முழுமையான வேலை திட்டங்கள் நடக்கிறது. அந்த இடத்தில் அதனை திறம்பட செய்வோம் என எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/217964
  11. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 09:37 AM வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவு இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகளாவிய பிரபல இணைய சேவைகளான ஆப்பிள், பேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 184 மில்லியன் சான்று மீறலைவிட இது எண்ணிக்கையில் பெரிதாக இருப்பதால், இதனை துகாப்பு ஆய்வாளர்கள் "மாபெரும் அச்சுறுத்தல் " என வர்ணிக்கின்றனர். https://www.virakesari.lk/article/217960
  12. பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை Published By: VISHNU 20 JUN, 2025 | 03:12 AM செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். குறித்த சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் என கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கைப்பற்ற இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புத் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து காவல்துறை நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் சரிபார்க்க முடியாத சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தும். சொத்துக்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குழு மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அடங்கும். இந்தக் குழுவில் முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் பலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217956
  13. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கின் யாழ் விஜயமும் முக்கிய சந்திப்புக்களும்! Published By: PRIYATHARSHAN 20 JUN, 2025 | 12:01 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் அங்கு பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், வடமாகாண ஆளுநர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழுக்கான விஜயத்தின் முதல் நாளில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், யாழ். கோட்டையை பார்வையிட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி ஏனைய உறுப்பு நாடுகளுடன் இப்போதிருந்தே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்,தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு, முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள், கட்டுமான அபிவிருத்திகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை , விமான சேவை, கப்பல் சேவை, காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் கேட்டறிந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள VVS விநியோகஸ்தார்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் பனை உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் பாரிம்பரிய உள்ளூர் கூழை சுவைத்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கும் உள்ளுர் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசாவை சந்தித்து கலந்துரையாடிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், உயர்கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் அபிலாஷைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இந்த சந்திப்பு, கல்வியை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது. யாழ். மாநகர மேயர் விவேகானந்தராஜா மதிவதானியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளார், இந்த ஆக்கபூர்வமான ஈடுபாடுகள், மாகாண மற்றும் நகராட்சி மட்டங்களில் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் முயற்சிகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கயுள்ளது. யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஆங்கில மொழி கற்றல் மற்றும் டிஜிட்டல் கல்வியை ஆதரிப்பதில் அவர்களின் பணிகளை அறிந்துகொண்டார். உலகளாவிய சூழலில் செழித்து வளர இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் பிரிட்டிஷ் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. வட இலங்கையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோரை Yarl IT Hub -இல் சந்தித்தார் பிரித்தாகிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், இந்த மையம் ஒரு செழிப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், உள்ளூர் திறமைகளை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கவும் உதவுகிறது. வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை ஆதரிக்கிறது. தொழில்நுட்பம், தொழில்முனைவோரை உள்ளிடக்கிய வளர்ச்சியில் இளைஞர்களை வழிநடத்தும் முயற்சிகளை பிரித்தானிய மதிக்கிறதாக குறிப்பிட்டார். நாகதீப விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் கோவில் ஆகியவற்றைப் பார்வையிட உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நைனாதீவுக்குச் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகார் அன்று பற்றிக், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடல் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னுரிமைகள் குறித்த மதிப்புமிக்க முன்னோக்குகளை வழங்கியது. பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகம் வகிக்கும் முக்கிய பங்கை பிரித்தானியா அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்கு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மீனவர் அமைப்புகளிடமிருந்து பல தகவல்களை கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், நிலையான கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களின் நுண்ணறிவு முக்கியமானது என்று குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன் மற்றும் ஆராய்ச்சியாளர்களை சந்தித்த, உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், இலங்கையில் முதன்மை மருத்துவத்தில் நீண்டகால நிலைமைகள் மேலாண்மைக்கான ஆதரவு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக். யாழ்ப்பாணத்திலுள்ள பழைமை வாய்ந்த உணவகமான மலாயன் கபேக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அங்கு உள்ளூர் செய்திகளை அறியும் முகமாக 94 வருட கால பழைமை வாய்ந்த வீரகேசரி பத்திரிகையில் செய்திகளை ஆராய்ந்தார். யாழ். தீபகற்பத்தில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவன திட்டத்தின் முதலாம் கட்ட நிறைவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். நீர் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும், சமூகங்களை ஆதரிக்கும் மற்றும் இலங்கையில் நீண்டகால மீள்தன்மையை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு நிதியளிப்பதில் பிரித்தானிய பெருமை கொள்கிறது என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217980
  14. மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC கௌரவிப்பு 17 JUN, 2025 | 12:13 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும். தனது 118ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் இந்த டெஸ்ட போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இந்த நினைவுச் சின்னத்தை ஏஞ்சலோ மெத்யூஸிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவித் தலைவர் ஜயன்த தர்மதாசவும் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட அழைக்கப்பட்டதை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் முதலில் களத்தினுள் சென்றார். அப்போது பாடசாலை வீரர்கள் இருபுறமும் நின்றவாறு துடுப்பை உயர்த்தி அவருக்கு கௌரவம் செலுத்தினர். மெத்யூஸ் கையை உயர்த்தி அசைத்தவாறு களத்தினுள் புகுந்தார். அப்போது இலங்கை வீரர்களும் அரங்கில் குழுமியிருந்தவர்களும் பலத்த கரகோஷம் செய்து ஏஞ்சலோ மெத்யூஸை பாராட்டி கௌரவித்தனர். https://www.virakesari.lk/article/217694
  15. 19 JUN, 2025 | 09:36 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது. குறித்த பாலத்தினை அமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது குறித்த பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி அமைப்பினருடன் கலந்துரையாடாமல் திடீரென பால வேலைக்காக பாதையை முற்றுமுழுதாக வெட்டி பாலம் அமைக்கின்ற பணிகள் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அருகிலே மாற்றுப் பாதை ஒன்றை அமைக்காமல் மக்களுடைய போக்குவரத்து முற்றாக தடைப்படக்கூடிய வகையில் மோட்டார் சைக்கிள் மட்டும் செல்லக்கூடிய ஒரு சிறிய பாதையை மட்டும் போட்டுவிட்டு குறித்த பாலம் அமைக்கும் பணி இடம்பெறுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியூடாக விவசாய நடவடிக்கைகளுக்கு சென்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கச்சான் காணிகளுக்கு செல்கின்ற மக்கள் வயல் நிலங்களுக்கு செல்கின்ற மக்கள் தங்களுடைய வயல் நிலங்கள் மற்றும் கச்சான் காணிகளுக்கான மூலப் பொருட்கள் அல்லது முடிவு பொருட்களை கொண்டு செல்ல அல்லது கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் குறிப்பாக சிறுபோக அறுவடை ஆரம்பித்து இருக்கின்ற நிலைமையில் நேற்று முதல் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் குறித்த அறுவடை நெல்லினை வீடுகளுக்கு கொண்டுவர முடியாத இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்குரிய மாற்றுப் பாதை அமைத்து தர முடியாது என தெரிவித்திருக்கிறதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் எனவே தமக்கு உடனடியாக அந்த பாலம் அமைக்கின்ற இடத்திலே அதற்கு அருகாக மாற்றுப்பாதை ஒன்றை அமைத்து தங்களுடைய நெல்லுகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கும் தங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கும் ஏற்ற வகையில் உளவு இயந்திரம் செல்லக்கூடிய வகையில் பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய விவசாய உள்ளீடுகளை உரிய வகையிலே தனது வீடுகளுக்கு கொண்டுவர முடியாமல் அந்தரிப்பதாகவும் எனவே இதற்குரிய அதிகாரிகள் உடனடியாக இதற்குரிய பாதையை அமைத்து தருமாறும் தங்களுக்கு அந்த இடத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியமானது எனவும் ஆனால் அந்த பாலம் அமைக்கின்ற பணியினால் தங்களுடைய விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாலத்தை அமைக்குமாறும் ஆனால் அதற்கு அருகிலே மக்கள் சென்றுவரக்கூடிய பாதையை அமைத்து தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குறிப்பாக பாதைகளில் கட்டுமான பணிகள் செய்கின்ற போது அதற்கு மாற்று பாதையை ஏற்பாடு செய்ய வேண்டியது அந்த பாதை கட்டுமானம் செய்கின்றவர்களுடைய பொறுப்பாக காணப்படுகின்ற நிலைமையில் அவ்வாறு செய்யப்படாமல் இந்த வேலை ஏன் செய்யப்படுகிறது என்பது தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். https://www.virakesari.lk/article/217950
  16. பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தாமஸ் ஜெர்மைன் பதவி, மூத்த தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தனது தேடுபொறியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை பொருத்தி இணையத்தைப் புதுப்பிக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் இந்த நடவடிக்கையால் இணையதளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று பல நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தக் கணிப்பு சரியா தவறா என்பதற்கு அப்பால், ஆன்லைன் வரலாற்றின் தற்போதைய அத்தியாயம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. "இயந்திரமயமான இணையதளங்களுக்கு" உங்களை வரவேற்கிறோம். ஓர் எளிய பேரத்தின் அடிப்படையில் இணையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்ற தேடுபொறிகள் தங்கள் உள்ளடக்கத்தை இலவசமாகப் பெற இணையதளங்கள் அனுமதிக்கின்றன. 'கூகுள் சர்ச்' மக்களை இணையதளங்களுக்கு அனுப்புகிறது, அங்கு அவர்களுக்கு கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பரங்களைக் காட்டுகின்றன. அதன் மூலமாக மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள். பெரும்பாலான இணையதளங்கள் இப்படித்தான் பணம் சம்பாதிக்கின்றன. இணைய செயல்பாடுகளில் 68% தேடுபொறிகளில் இருந்தே தொடங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், சுமார் 90% தேடல்கள் கூகுளில் நடைபெறுகின்றன. இணையம் ஒரு தோட்டம் என்று வைத்துக் கொண்டால், பூக்களை வளர்க்க உதவும் சூரியன் என்று கூகுளை குறிப்பிடலாம். தற்போதைய இந்த ஏற்பாடு பல தசாப்தங்களாக வலுவாக இருந்தது. ஆனால் ஒரு சிறிய மாற்றம், இந்த அமைப்பு சிதைந்து வருவதாக சிலரை நம்பச் செய்துள்ளது. கூகுள் தேடுபொறியில் ஒரு புதிய AI கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றபோதிலும், விமர்சகர்கள் அச்சப்படுகின்றனர். அவர்களது கணிப்புகள் நிதர்சனமாகிவிட்டால், இணையத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம். தரமான தகவல்கள் ஆன்லைனில் கிடைப்பது அரிதாகலாம், ஏராளமான மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். இருந்தபோதிலும் விமர்சகர்களின் கணிப்புக்கு மாறாக, இது இணையதளங்களின் வணிக மாதிரியை மேம்படுத்தலாம் என்றும், சிறந்த உள்ளடக்கத்தைக் கண்டறியும் வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம் என்றும் பல நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால், எப்படியிருந்தாலும் உங்களுடைய டிஜிட்டல் அனுபவங்கள் இதுவரை இருந்தது போல இனி இருக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. கூகுள் தேடுபொறியில் ஒரு விஷயத்தை தேடும்போது, AI உருவாக்கிய பதில்களான AI ஓவர்வியூஸ் தற்போது தோன்றுகிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டுதான் ஆகிறது. 2025 மே 20ஆம் தேதியன்று கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, தற்போது கூகுள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். அதாவது, "ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தேடல் அனுபவத்தை விரும்புவோருக்கு, நாங்கள் ஒரு புதிய AI மோட்-ஐ அறிமுகப்படுத்துகிறோம். இது தேடலின் முழுமையான மறுபரிணாமமாக இருக்கும்," என்று அவர் கூறினார். பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு இருப்பதால், இதையும் நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால் இது மிகைப்படுத்தல் அல்ல, நிதர்சனமான உண்மை. 'இது கூகுள் தேடலின் எதிர்காலம்' பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES மக்கள் ஆண்டுக்கு ஐந்து டிரில்லியன் முறை கூகுள் தேடலைப் பயன்படுத்துகிறார்கள். இது இணையத்தின் வடிவத்தை வரையறுக்கிறது. AI மோட் ஒரு தீவிரமான மாற்றமாக இருக்கும். AI ஓவர்வியூஸ் போலன்றி, AI மோட் பாரம்பரிய தேடல் முடிவுகளை முழுவதுமாக மாற்றுகிறது. அதற்குப் பதிலாக, உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க சாட்பாட் ஒரு குறுங்கட்டுரையைத் திறம்பட உருவாக்குகிறது. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, AI மோட் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தேடுபொறி மற்றும் நிறுவனத்தின் செயலியில் ஒரு பொத்தானாகத் தோன்றும். இது இப்போதைக்கு விருப்பத் தேர்வாக இருந்தாலும், "இது கூகுள் தேடலின் எதிர்காலம்" என்று கூகுள் சர்ச் பிரிவின் தலைவர் லிஸ் ரீட் இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியைத் தொடங்கும்போதே தெளிவாகக் கூறிவிட்டார். AI ஓவர்வியூஸ் ஏற்கெனவே இணையத்தின் மற்ற பகுதிகளுக்கு மிகக் குறைந்த போக்குவரத்தை அனுப்பும் நிலையில், AI மோட் அந்தப் போக்கை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள். இது நடந்தால், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வரும் டிஜிட்டல் உள்ளடக்கத்தைத் தூண்டிய 'வணிக மாதிரி' நசுக்கப்படக்கூடும். "கூகுள் அதன் தற்போதைய வடிவத்தில் AI மோட் வசதியை இயல்பு நிலையாக மாற்றினால், அது இணையத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என சந்தைப்படுத்தல் நிறுவனமான ஆம்சிவின் சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன் (SEO) உத்தி மற்றும் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார். "இது பெரும்பாலான வெளியீட்டாளர்களின் முக்கிய வருவாய் ஆதாரத்தை கணிசமாகக் குறைக்கும், மேலும் இது ஆர்கானிக் தேடல் மூலம் வரும் பயனர்களை நம்பியிருக்கும் உள்ளடக்க படைப்பாளர்களை ஊக்கமிழக்கச் செய்யும். அதாவது குறைந்தபட்சம் லட்சக்கணக்கான இணையதளங்கள் பாதிக்கப்படலாம். கூகுளிடம் அதற்கான சக்தி உள்ளது" என அவர் மேலும் கூறுகிறார். இந்தக் கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூகுள் கூறுகிறது. AI மோட், இணையதளங்களை ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்று நிறுவனம் நம்புகிறது. "ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கான கிளிக்குகளை இணையதளங்களுக்கு அனுப்புகிறோம், மக்களை இணையத்துடன் இணைப்பது தொடர்ந்து எங்களுடைய முன்னுரிமையாக உள்ளது," என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார். "AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் போன்ற புதிய முயற்சிகள் தேடலை மேம்படுத்துகின்றன மற்றும் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை விரிவுபடுத்துகின்றன. இது உள்ளடக்கத்தைக் கண்டறிவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது" என அவர் மேலும் குறிப்பிட்டார். இப்படி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், கூகுள் மற்றும் அதன் விமர்சகர்கள் ஒரேயொரு விஷயத்தில் உடன்படுகிறார்கள்: "அது, இணையம் மிகவும் வித்தியாசமாக மாறப் போகிறது" என்பதுதான். குறைந்தபட்சம் அடுத்த ஓர் ஆண்டில் தற்போதைய ஆன்லைன் சகாப்தம் முடிவுக்கு வரும். அந்த மாற்றத்தின் இறுதியில் இணைய உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் ஒரே கேள்வி. வெளியீட்டாளர்களின் கவலை இணையம் எங்கும் செல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சமூக ஊடக தளங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன, கட்டணத் திரைகளைக் கொண்ட சில பிரபலமான தளங்கள் செழிப்பாக இருக்கின்றன. மக்கள் ஆன்லைனில் தகவல்களை தேடிக் கண்டறியும் முறை மட்டுமே மாறப் போகிறது. சிலரின் அச்சம், "பொதுவான இணையதளம்" ஆபத்தில் உள்ளது என்பதே. அதாவது, சுதந்திரமாக அணுகக்கூடிய சுயாதீன இணையதளங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் வணிகங்களுக்கு சிக்கல் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவல், படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொள்ளும் அவர்கள், பெரும்பாலும் "வெளியீட்டாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள், இருப்பினும், இதற்கு முன்னரே நாம் இதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். 2010இல் "இணையதளம் இறந்துவிட்டது" என்று வயர்டு பத்திரிகையின் ஓர் அட்டைப்படம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்றும் நாம் இங்கே இருக்கிறோம். ஸ்மார்ட்போன்கள், செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் உலகளாவிய இணையதளம் தொடர்பான 'இறுதி நாள்' கணிப்புகளைத் தூண்டிவிட்டன. ஆனால் மே மாதத்தில் கூகுள் அறிவித்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு AI மோட் முன்னோடியில்லாத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறும் நிபுணர்கள் பலரிடம் பிபிசி பேசியது. "இணையதளங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதற்கு 'அழிந்துவிடும்' என்று சொல்வது அதிகப்படியானது என்று நான் நினைக்கிறேன்," என போலெமிக் டிஜிட்டல் (Polemic Digital) என்ற எஸ்.இ.ஓ நிறுவனத்தின் நிறுவனர் பாரி ஆடம்ஸ் கூறுகிறார். அவர், "Decimation (பெருமளவில் குறையும்) என்பது சரியான சொல்" என்கிறார். கூகுள் இதை ஏற்கவில்லை. உண்மையில், AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இணையத்திற்கு நல்லது என்று கூகுள் நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள், பயனர்களை "இணையதளங்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்கின்றன" என்றும், மக்கள் தாங்கள் கிளிக் செய்யும் இணைப்புகளில் அதிக நேரம் செலவிடுவதால் "உயர் தரம்" கொண்ட தேடல் அனுபவம் சாத்தியமாகும் என்றும் கூகுள் உறுதிபடக் கூறுகிறது. இருந்தபோதிலும், கூகுளின் இந்தக் கூற்றுகளை ஆதரிக்கும் தரவை அந்த நிறுவனம் வழங்கவில்லை. ஆர்வமுள்ள வெளியீட்டாளர்களுக்கு கூகுள் AI வழிகாட்டி ஒன்றை வைத்துள்ளது. ஆனால் AI ஓவர்வியூஸ் இணையதளங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிய தெளிவான தகவல்களை அது வழங்கவில்லை. இந்த தொடர்பான கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை. அத்துடன், இந்த AI கருவிகள் தேடல் இணையத்திற்கு அனுப்பும் மொத்த டிராஃபிக்கை குறைக்கின்றன என்பதை கூகுள் மறுக்கவில்லை அல்லது குறைந்தபட்சம் நேரடியாக மறுக்கவில்லை என்றும் கூறலாம். "AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இரண்டுமே மூலங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியுள்ளன, இருந்தபோதிலும் நீங்கள் தேடும் கேள்விக்கான பதிலை AI கொடுத்துவிட்டால், நீங்கள் ஏன் மூல பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்?" என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர். தரவுகள் இந்த தர்க்கத்தை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. மக்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதைப் பொறுத்து, "கிளிக்-த்ரூ ரேட்" என்று அழைக்கப்படும் இணையதளங்களுக்கு கூகுள் அனுப்பும் போக்குவரத்தின் அளவை AI ஓவர்வியூஸ் 30% முதல் 70% வரை குறைப்பதாகப் பல்வேறு பகுப்பாய்வுகள் கூறுகின்றன. கூகுள் சர்ச்சில் இப்போது சுமார் 60% "ஜீரோ-கிளிக்" ஆக இருப்பதாகவும், பயனர் ஒரு இணைப்பை பார்வையிடாமலேயே அவர்களுக்கான பதில் கிடைத்து விடுவதாகவும் பகுப்பாய்வுகள் கண்டறிந்துள்ளன. 'இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன' பட மூலாதாரம்,GOOGLE/ BBC AI மோட் வசதியின் சில பதிப்புகள் விரைவில் இயல்புநிலையாக மாறும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், மேலும் இது பாரம்பரிய இணைப்புகளின் பட்டியலை முற்றிலுமாக நீக்குவதால், தேடுதலில் AI ஏற்படுத்தும் தாக்கம் அதிகரிக்கும். "கூகுளின் AI மோட், இணையதளங்களுக்குச் செல்லும் கிளிக்குகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இது நேர்மறையிலான சூழ்நிலையில்தான்," என்கிறார் ஆடம்ஸ். "அதிக அளவிலான பயனர்கள் AI அவர்களுக்கு என்ன கொடுக்கிறதோ அதிலேயே திருப்தி அடைவார்கள் என நினைக்கிறேன். இது வணிகத்தில் சாத்தியமான லாபம் கிடைப்பதற்கும், திவாலாவதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். பல வெளியீட்டாளர்களுக்கு, இது வியத்தகு முறையில் இருக்கும்." இது ஒரு சில வலைப்பதிவர்கள் வேலை இழப்பது தொடர்பானது மட்டுமல்ல, பயனர்கள் இணையத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் தகவல்களை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதையும் மாற்றக்கூடும். "இணையதளம் என்பது பல்வேறு தகவல்கள் உங்கள் விரல் நுனியில் உள்ளவை என்றே சொல்லலாம், ஆனால் அது இனி மாறக்கூடும்" என்று காற்றின் தர தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யும் ஹவுஸ்ஃப்ரெஷின் நிர்வாக ஆசிரியர் கிசெல் நவரோ கூறுகிறார். கூகுளால் ஓரங்கட்டப்பட்டதாக உணரும் இணையதளங்களின் பிரதிநிதியாக நவரோ பேசுகிறார். பயனர்கள் தேடும் தகவல்களுக்கான ஆதாரங்களின் பன்முகத்தன்மையை இது மிகவும் குறைத்துவிடக்கூடும் என்று அவர் கவலை தெரிவிக்கிறார். "இணையதளம் நம் அனைவருக்குமான மிகப்பெரிய நூலகத்தைப் போன்றது. ஆனால், நூலகரிடம் புத்தகம் கேட்டால் அவர் புத்தகத்தைப் பற்றி மட்டுமே உங்களுக்குச் சொல்வார்" என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற கணிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் தவறானவை என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். பல்வேறு காரணங்களுக்காக இணையதளங்களின் போக்குவரத்து குறையலாம் என்றும், இந்தச் சிக்கல்களை பற்றிச் சொல்லும் ஆய்வுகள் பெரும்பாலும் சீரற்ற தரவு மற்றும் குறைபாடுள்ள முறையைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார். "எங்கள் கண்ணோட்டத்தில், இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன" என்று கூகுளின் அறிவு மற்றும் தகவல் துறையின் மூத்த துணைத் தலைவர் நிக் ஃபாக்ஸ், தனது சமீபத்திய பாட்காஸ்ட் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "இணையதளங்களின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து கூகுளைவிட அதிக அக்கறை கொண்ட நிறுவனம் வேறெதுவும் இல்லை." உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையதளங்களில் உள்ள உள்ளடக்கத்தின் அளவு 45% அதிகரித்துள்ளது என்றும், இது ஸ்பேமை தவிர்த்த பிறகு இருக்கும் அளவு என்றும் ஃபாக்ஸ் கூறினார். "இதை தரவுகள் சொல்கின்றன," என்று அவர் கூறினார். "மக்கள் இன்னும் இணையதளங்களிலேயே மிகவும் அதிக அளவில் கிளிக் செய்கிறார்கள்." பல்வேறு உறுதிமொழிகள் இருந்தபோதிலும், சில இணையதளங்கள் AI அடிப்படையில் இயங்கும் சாட்பாட்கள் மற்றும் தேடுபொறியின் வருகையால் சிரமப்படுகின்றன. 'பொது இணையதளங்களை நிச்சயமாக அழிக்கப் போகிறது' பட மூலாதாரம்,HOUSEFRESH/ YUN SUN PARK கடந்த ஆண்டு, பெரிய பிராண்டுகளுக்கு கிளிக்குகளை மாற்றியமைக்கும் கூகுளின் வழிமுறைகளுக்கான புதுப்பிப்புகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய எண்ணற்ற சிறிய ஆன்லைன் வணிகங்களில் ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனமும் ஒன்று. தற்போது, தங்களுக்கு AI மூலம் சேதங்கள் அதிகரிப்பதாக நவரோ கூறுகிறார். "சில வாரங்களுக்கு முன்பு, திடீரென ஓர் அதிகரிப்பைக் கவனித்தோம்," என்று நவரோ கூறுகிறார். கூகுள் தேடலில் ஹவுஸ்ஃப்ரெஷ் எத்தனை முறை தோன்றும் என்ற பதிவுகள் அதிகரித்தன. "ஆனால் அதே நேரத்தில், கிளிக்குகள் குறைந்துவிட்டன. எனவே கூகுள் எங்கள் இணைப்புகளை அடிக்கடி காட்டுகிறது. ஆனால் யாரும் கிளிக் செய்வதில்லை. இது AI ஓவர்வியூஸ் உடன் தொடர்புடையது" என்கிறார் அவர். பிரைட்எட்ஜ் தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ் வந்த பிறகு, இணையம் முழுவதும் 49% பதிவுகள் அதிகரித்துள்ளன. ஆனால் மக்கள் தங்கள் பதில்களை செயற்கை நுண்ணறிவிடம் இருந்து பெறுவதால் 30% கிளிக்குகள் குறைந்துள்ளன. "கூகுள்தான் விதிகளை உருவாக்குகிறது, விளையாட்டை உருவாக்கிய அவர்களே, அதில் பங்கேற்றவர்களுக்கு வெகுமதி அளித்தனர்," என்று கூறும் நவரோ, "இப்போது அவர்களே, 'இது என் உள்கட்டமைப்பு, இணையதளம் அதில் வாழ்கிறது' என்று கூறுகிறார்கள். நமக்குத் தெரிந்த பொதுவான இணையதளத்தை அது நிச்சயமாக அழிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. அநேகமாக அது ஏற்கெனவே நடந்துவிட்டது." 'இயந்திர இணையதளத்தை வரவேற்போம்' AI மோட் என்பதன் மிகப்பெரிய தாக்கம், நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பெறும் அனுபவத்தில் எதிரொலிக்கும். சிலர் நம்புவது போல், நாம் புதிய முன்னுதாரணம் ஒன்றின் தொடக்க காலகட்டத்தில் இருக்கலாம். இணையதளத்தை எதிர்காலத்தில் "இயந்திர இணையதளம்" என்றே அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இணையதளங்கள் என்பது மனிதர்களுக்காக அல்லாமல் AI இயந்திரம் படிக்க உருவாக்கப்படும் இடமாகவும், நாம் சாட்பாட்கள் மூலம் சுருக்கங்களைப் படித்து தகவல்களைத் தெரிந்து கொள்ளும் முதன்மை வழியாகவும் மாறலாம். அண்மையில் கூகுள் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி ஆய்வகமான Google DeepMindஇன் தலைவரான டெமிஸ் ஹசாபிஸ் அளித்த பேட்டி ஒன்றில், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை நேரடியாக செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு வழங்க விரும்புவார்கள் என்றும், சிலர் அந்தத் தகவலை மனிதர்கள் படிக்கும் வகையில் இணையதளங்களில் வெளியிடுவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். "சில ஆண்டுகளில் விஷ்யங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். இணையதளங்கள் வழக்கம் போலவே, வசதியான முறையில் பதில்களைக் கொடுக்கும் ஓர் உலகமாக இருக்கும். ஆனால் திறந்த இணையதளத்தை மிகவும் பிரபலமாக்கிய சில விஷயங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கக்கூடும். பல புதிய விஷயங்களை தரும் இந்த வாய்ப்பு நல்லதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். டீகோடர் பாட்காஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் பேசிய சுந்தர் பிச்சை, இது பயனர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்று கூறினார். பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இணையதளங்களுக்கு நெட்வொர்க் சேவைகளை வழங்கும் Cloudflare நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேத்யூ பிரின்ஸ், இதிலுள்ள மிகப்பெரிய சிக்கலை முன்னறிவிக்கிறார். "ரோபோக்கள் விளம்பரங்களை கிளிக் செய்வதில்லை," என்று அவர் கூறுகிறார். AI பார்வையாளர்களாக மாறினால், படைப்பாளர்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்? நேரடியான இழப்பீடு என்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அமேசானின் செயற்கை நுண்ணறிவுக்காக, நியூயார்க் டைம்ஸ் உள்ளடக்க உரிமம் வழங்குகிறது. பயனர் தரவுகளில் செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்க ரெடிட்டுக்கு ஆண்டுக்கு $60 மில்லியன் கட்டணத்தை கூகுள் செலுத்துகிறது. டஜன் கணக்கான பெரிய வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் OpenAI மற்றும் பிறருடன் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிக தரவுகளைக் கொண்ட மிகப்பெரிய இணையதளங்கள் மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. "இதுபோன்ற உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்துவது இணையதளத்தைத் தக்கவைக்கத் தேவையான அளவில் செயல்படும் ஒரு மாதிரி என்று எனக்குத் தோன்றவில்லை," என்று விளம்பர தொழில்நுட்ப நிறுவனமான ராப்டிவின் நிர்வாக துணைத் தலைவர் டாம் கிரிட்ச்லோ கூறுகிறார். "கிளிக்குகள் குறைவதற்கு மாற்றாக அது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது கடினம்" என்கிறார் அவர். இணையத்தில் பணம் சம்பாதிப்பது கடினமாகிவிட்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று ஆடம்ஸும் மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள். நவரோவை போன்ற பலர் இந்த நிலையை ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளனர். 'புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது' ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனம் யூட்யூபில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால் சமூக ஊடக வழிமுறைகளின் விருப்பங்கள் இன்னும் நிலையற்றவையாகவே இருப்பதாக நவரோ கூறுகிறார். மேலும் படைப்பாளர்கள் விஷயத்தின் ஆழத்தையும் விவரங்களையும் தியாகம் செய்ய தளங்கள் கட்டாயப்படுத்துகின்றன. "உயர்தரம் வாய்ந்த உள்ளடக்கங்களை உருவாக்க எந்தவித ஊக்கமும் கிடைப்பதில்லை. அனைத்துமே பணமாக்குதல் மற்றும் மாற்றம் பற்றியதாக மாறும், அது தகவலை குறைவாகத் தெரிவிக்கவும் அதிகமாக விற்கவும் கட்டாயப்படுத்துகிறது," என்று நவரோ கூறுகிறார். இணையதளத்தில் வெளியீட்டாளர்கள் கொண்டிருந்த தன்னிச்சையான செயல்பாட்டை இழப்பது என்பது பார்வையாளர்களாகிய உங்களுக்கு தரம் குறைந்த உள்ளடக்கமே கிடைக்கும் என்பதையே ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது என்று நவரோ கூறுகிறார். கூகுளுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பிற தேடுபொறிகள் இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், அவர்களும் தங்கள் தேடல் கருவிகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்து வருகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மைக்ரோசாப்ட் அதன் Bing தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை இணைத்து வருகிறது. ஆனால் கூகுளின் சிறிய போட்டியாளர்கள் மிகக் குறைந்த அளவே சந்தையில் பங்களிப்பதால், அவர்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்பதுடன், பலர் தங்கள் சொந்த AI கருவிகளைச் சேர்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயந்திர இணையதளம் மிகவும் நெருக்கமானதாகவும், பன்முகத் தன்மை குறைவானதாகவும் இருந்தாலும், ஆன்லைனில் தங்கள் நேரத்தைச் செலவிடுவோருக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கலாம். சில பார்வையாளர்கள் பீதியடையவில்லை என்பதையும் கவனிக்கலாம். "பரிணாமம் என்ற அர்த்தத்தில் நான் கவலைப்படவில்லை," என்று சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரும், 1980களில் உலகளாவிய இணையதளத்தின் முன்னோடியாக இருந்த கட்டமைப்பை வடிவமைத்த ஆரம்பக்கால முன்னோடிகளில் ஒருவருமான டேம் வெண்டி ஹால் கூறுகிறார். "செயற்கை நுண்ணறிவு இப்போது சமன்பாட்டிற்குள் வருகிறது, அது அனைத்து இயக்கவியலையும் மாற்றப் போகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை நான் சரியாகச் சொல்ல விரும்பவில்லை. இணையதளம் இன்னும் இருக்கிறது, அது இன்னும் திறந்தே இருக்கிறது. கூகுள் இந்த வழியில் சென்றால், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது," என்று அவர் கூறுகிறார். 'இதுதான் திருட்டுக்கான வரையறை' பட மூலாதாரம்,GETTY IMAGES AI Mode என்பது ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு "fan-out முறையை " பயன்படுத்துகிறது. அதாவது, AI உங்கள் கேள்வியை துணை தலைப்புகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் பல தேடல்களைச் செய்கிறது. AI Mode மிகவும் மாறுபட்ட ஆதாரங்களைப் பரிந்துரைக்கவும், மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு ஆழமான பதில்களை உருவாக்கவும், ஆழமாகச் செல்லவும் உதவுகிறது. அத்துடன், தொடர்ந்து கேள்விகளைக் கேட்கும் திறனை நீங்கள் பெறுகிறீர்கள் என்று கூகுள் கூறுகிறது. கூகுளின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ்க்கான எதிர்வினைகள் AI மோட் மிகவும் பிரபலமாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. "மக்கள் AI ஓவர்வியூஸ் பயன்படுத்துவதால், அவர்களுக்குக் கிடைக்கும் பதில்களால் திருப்தி அடைவதையும், அவர்கள் அடிக்கடி தேடுவதையும் நாங்கள் காண்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 'தேடுபொறியில்' மிகவும் வெற்றிகரமான வெளியீடுகளில் இதுவும் ஒன்று," என்று கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் சுந்தர் பிச்சை கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தேடலை சிறந்ததாக ஆக்குகிறது என்றும் பயனர்கள் விரும்புவது இதுதான் என்றும் கூகுள் கூறுகிறது. ஆனால் இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது என்று 2,200க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகக் குழுவான நியூஸ்/மீடியா அலையன்ஸின் தலைவர் டேனியல் காஃபி கூறுகிறார். (பிபிசி நியூஸ்/மீடியா அலையன்ஸில் உறுப்பினராக உள்ளது.) "இதுதான் திருட்டுக்கான வரையறை. செயற்கை நுண்ணறிவு பதில்கள், அசல் தயாரிப்புக்கு மாற்றாகும். அவர்கள் எங்களுடைய உள்ளடக்கத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள், அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவும் கிடைக்காது," என்று காஃபி கூறுகிறார். "விற்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களின் சார்பாக இந்த கூகுள் இந்த வணிக முடிவை எடுக்க முடியாது." வெளியீட்டாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதுதான் பிரச்னை என்று காஃபி உள்படப் பலரும் கூறுகின்றனர். நீதிமன்ற வழக்கு ஒன்றில் வெளியிடப்பட்ட உள் ஆவணங்கள், கூகுள் அதன் விதிகளை "சத்தமின்றிப் புதுப்பிக்க" தேர்வு செய்திருப்பதைக் காட்டுகின்றன. எனவே கூகுள் 'தேடலில்(search)' பங்கேற்பது என்பது இணையதளங்கள் தானாகவே AI க்காக உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு ஒப்புக் கொள்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டாளர்கள் விலகலாம் என்றாலும், அவர்கள் தேடல் முடிவுகளை முழுவதுமாக விலக்கினால் மட்டுமே அது முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 'இதுவே முடிவல்ல என நம்ப விரும்புகிறேன்' இந்த உள் ஆவணங்கள், நிறுவனத்தின் இறுதி முடிவெடுக்கும் செயல்முறையைப் பிரதிபலிக்காத ஆரம்ப விவாதங்களைக் காட்டுகின்றன என்றும், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கம் கூகுளில் கிடைக்கிறதா என்பதை எப்போதும் கட்டுப்படுத்தி வந்துள்ளனர் என்றும் கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். இணையதள உரிமையாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை AI மோட் மற்றும் AI ஓவர்வியூஸ் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் பதில்களில் இருந்து விலக்கி வைக்க அனுமதிக்கும் கட்டுப்பாடுகளை கூகுள் வழங்குகிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். "AI பதில்கள் அசல் தயாரிப்புக்கு மாற்றாக உள்ளன. இதை நாம் ஒருபோதும் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் ஒரு வணிக முன்மொழிவாக நான் பார்க்கவில்லை," என்கிறார் காஃபி. கடந்த ஓர் ஆண்டாக, தேடுபொறி மற்றும் டிஜிட்டல் விளம்பர வணிகங்களில் கூகுள் ஒன்றல்ல, இரண்டு சட்டவிரோத தனியுரிமையை வைத்திருப்பதாக அமெரிக்க நீதிமன்றங்கள் கண்டறிந்துள்ளன. நீதிமன்றங்கள் இன்னும் விளைவுகளைத் தீர்மானித்து வருகின்றன. மேலும் இணையத்தின் மீதான கூகுளின் கட்டுப்பாட்டிற்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கான சாத்தியங்களும் உள்ளன. நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு கூகுள் உடன்படவில்லை என்றும் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. நிறுவனம் மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்கிறது என்றும், நிறுவனத்தை உடைப்பதற்கான திட்டங்கள் நுகர்வோருக்கு மோசமானதாக இருக்கும் என்றும், புத்தாக்கங்களை மந்தப்படுத்தும் என்றும் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால் கூகுளின் பிடி ஏற்கெனவே சிறிய வழிகளில் தளர்ந்து கொண்டிருக்கலாம். இந்த நீதிமன்ற விசாரணைகளின்போது, சஃபாரியில் கூகுள் தேடல்கள் 22 ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளதாக ஆப்பிள் நிர்வாகி எடி கியூ கூறினார். இதற்குக் காரணம் மக்கள் AI சாட்பாட்களை பயன்படுத்துவதே. ஆப்பிள் சாதனங்கள் உள்பட ஒட்டுமொத்த 'வினவல் வளர்ச்சியை' நிறுவனம் தொடர்ந்து காண்காணித்து வருவதாக அறிக்கை ஒன்றில் கூகுள் தெரிவித்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 72% அமெரிக்கர்கள் தேடுபொறிகளுக்குப் பதிலாக சில நேரங்களில் ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். "நீங்களே சர்ச் செய்யும்போது அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்," என iPullRank என்ற SEO நிறுவனத்தின் நிறுவனர் மைக் கிங் கூறுகிறார். "ஆனால் பலர் தங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார். ஆனால் AI இணைப்பு என்பது குறிப்பிடத்தக்க செலவுகளுடன் வரக்கூடும். "இது வடிகட்டி குமிழ்களை அதிகமாக உருவாக்கப் போகிறது. ஏனென்றால் கூகுள் உங்கள் வினாவுடன் தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, விளக்கத்தைக் கொடுக்கிறது," என்று கிங் கூறுகிறார். AI சாட்பாட்கள் பற்றிய ஆராய்ச்சி, அவை எதிரொலி அறைகளாகச் செயல்படும் போக்கைக் கொண்டுள்ளன என்பதையும் குறிக்கிறது. "நீங்கள் எதிர்பார்க்கும் தகவல் வலுப்படுத்தப்பட்டதாக இருக்கும்," என்று கிங் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES AI பதில்களின் தரம் குறித்த அடிப்படைக் கவலைகள் உள்ளதையும் மறுக்க முடியாது. AI ஹாலிசினேஷன்ஸ், அவற்றின் தொழில்நுட்பத் திறன்கள் மேம்படும்போது மோசமடைந்து வருவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுந்தர் பிச்சைகூட ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் தொழில்நுட்பத்தின் "ஓர் உள்ளார்ந்த அம்சம்" ஹாலிசினேஷன்ஸ் என்று கூறினார். கூகுள் AI பதில்களை நிலைநிறுத்த அதன் பாரம்பரிய தேடல் முறைகளைப் பயன்படுத்துகிறது என்றும், மேலும் அதன் துல்லியத்தன்மை மேம்பட்டு வருவதாகவும் கூகுள் கூறுகிறது. கூகுளின் AI தேடல் பதில்களில் பெரும்பாலானவை உண்மையானவை என்றும், அவற்றின் துல்லியம், மற்ற தேடல் அம்சங்களுடன் இணையாக இருப்பதாகவும் பிபிசியுடனான நேர்காணலில் கூகுள் தெரிவித்துள்ளது. இருப்பினும், கூகுளின் AI ஓவர்வியூஸ், மக்களை கற்களைச் சாப்பிடவும் பீட்சா ரெசிபிகளில் பசையைச் சேர்க்கவும் அறிவுறுத்திய ஆரம்பக்கால சறுக்கல்கள் இருந்த காலங்களை மனதில் இருந்து அகற்றிவிட முடியாது. பிழைகளைச் சரிசெய்ய கூகுள் தீவிரமாக முயன்றாலும், 2025ஆம் ஆண்டில் ஒரு சமீபத்திய வியாழக்கிழமையில், AI ஓவர்வியூஸ், இது வியாழக்கிழமை அல்ல, இது 2025 அல்ல என்று கூறியதையும் சுலபமாக மறந்துவிட முடியாது. கணினி விஞ்ஞானிகள் "சாட் சாம்பர்ஸ் (chat chambers)" என்று உருவாக்கிய தவறான தகவல்களைக் கொண்ட அமைப்பையும்கூட ஏஐ ஓவர்வியூஸ் உருவாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கூகுள் AI, இணையத்தில் நீங்கள் காண்பதை மட்டுப்படுத்தாமல் உங்கள் ஆர்வங்களுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார். இணையத்தை உருவாக்கி அதைச் சார்ந்து இருப்பவர்களுக்கு இயந்திர இணையதளத்தின் அச்சுறுத்தல் கவலையளிக்கும் அதே வேளையில், கூகுள் ஒரு வித்தியாசமான, உற்சாகமான படத்தை வரைகிறது. "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணையதளங்களுக்கு போக்குவரத்தை அதிகமாக அனுப்புவதை நீங்கள் பார்க்க முடியும். நாங்கள் உறுதிபூண்டுள்ள தயாரிப்பின் திசை அதுதான் என்று நான் நினைக்கிறேன்," என்று சுந்தர் பிச்சை டீகோடர் நேர்காணலில் தெரிவித்தார். கூகுள் பிபிசியிடம் பேசியபோது, "தேடலை மேம்படுத்துவது, பயனர்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை உருவாக்குவது மற்றும் இறுதியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் கண்டுபிடிப்பதற்குமான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது ஆகியவையே தனது தொலைநோக்குப் பார்வை என்று கூறுகிறது, இருப்பினும் இவை சாத்தியமான வெவ்வேறு வழிகளில்" என்று கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES "என்ன நடக்கப் போகிறது என்று நான் கணிக்கப் போவதில்லை. ஏனென்றால், நிச்சயமாக, எதிர்காலம் பன்முகத்தன்மை கொண்டது," என்கிறார் நீண்டகால தொழில்நுட்ப ஆதரவாளரும் ஆன்லைன் தளங்களின் சிதைவு குறித்து வரவுள்ள என்ஷிட்டிஃபிகேஷன் புத்தகத்தின் எழுத்தாளருமான கோரி டாக்டரோவ். "ஆனால், தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கான அல்லது எனது தகவல்களைக் கண்டறிவதற்கான ஒரு வழியாக கூகுளை மதிப்பவராக நான் இன்னும் இருந்திருந்தால், இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுவேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால் இணைய பயனர்கள் தாங்கள் காண விரும்பும் மாற்றங்களுக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு தருணமாகவும் இது இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். "இந்த நெருக்கடியை நாம் வீணாக்கி விடக்கூடாது" என்கிறார் டாக்டரோவ். "மக்களை மிகவும் கோபப்படுத்தும் ஒன்றை கூகுள் செய்ய உள்ளது. எனது முதல் எண்ணம் 'சரி, அருமை. அந்தக் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்யலாம் என்பதுதான்.' கூட்டணியை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்" எனக் குறிப்பிடுகிறார் அவர். சிலர் கூகுளின் தொலைநோக்குப் பார்வை நிறைவேறும் வரையோ அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகள் செயல்படுவதற்காகவோ காத்திருக்கவில்லை. கிளவுட்ஃப்ளேரின் மேத்யூ பிரின்ஸ், நேரடித் தலையீட்டை ஆதரிக்கிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்தாவிட்டால், கிளவுட்ஃப்ளேர் மற்றும் அனைத்து அளவிலான வெளியீட்டாளர்களின் கூட்டமைப்பும் கூட்டாக இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களை நகல் எடுப்பவர்களைத் தடுப்பதே அவரது திட்டம். இது "ஆன்லைனில் அனுமதிக்கப்பட்டவற்றின் விதிமுறைகளை மீட்டமைக்க" மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கின் மாதிரிகளுக்கு எரிபொருளாக இருக்கும் தங்கள் தரவுகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த கட்டாயப்படுத்தும் ஒரு துணிச்சலான முயற்சி. (இந்தத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை). இது,"எனது மிகவும் நேர்மறையான அணுகுமுறை, மனிதர்கள் இலவசமாக உள்ளடக்கத்தை பெறலாம், தானியங்கு நிரலிகள் உள்ளடக்கத்திற்காகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதும் என் கோரிக்கை" என்று பிரின்ஸ் கூறுகிறார். புதியதும் சிறப்பானதுமான ஒன்று, தற்போது இருப்பதற்கு மாற்றாக வந்தாலும்கூட, இழந்ததைப் பற்றிய ஏக்கத்தை உணராமல் இருப்பது கடினம் என்று நவரோ கூறுகிறார். "அந்த இணையதளம் என்பது ஒரு சில மக்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களை அடையும்போதுதான் நடக்கும்," என்று அவர் கூறுகிறார். தனது சிறு வயதில், ராக் இசைக் குழுவான குயினுக்காக தாம் உருவாக்கிய ஸ்பானிஷ் மொழி ரசிகர் தளத்தைப் பற்றி அவர் நினைவு கூர்ந்தார். "நான் குயின் இசைக்குழுவை இணையத்தில் தேடினேன். ஆனால் அந்த நேரத்தில் இசைக் குழுவைப் பற்றிய ஸ்பானிஷ் மொழி உள்ளடக்கம் அதிகமாக இல்லை. அதனால் நான் அதை உருவாக்கத் தொடங்கினேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது அதைச் செய்ய முடியும் என்று உணர்ந்ததால் அதை செய்ய முடிந்தது." "இதுவே முடிவல்ல என்று நம்ப விரும்புகிறேன்." *தாமஸ் ஜெர்மைன் பிபிசியின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர். அவர் கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு, தனியுரிமை மற்றும் இணைய கலாசாரத்தின் அம்சங்கள் குறித்து எழுதி வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql2qwp622wo
  17. Published By: DIGITAL DESK 3 19 JUN, 2025 | 05:32 PM வீசா விண்ணப்பதாரர்களுக்கு விரிவாக்கப்பட்ட திரையிடல் மற்றும் சரிபார்ப்பு தொடர்பில் விசேட அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், எங்கள் வீசா செயல்முறை மூலம் தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்துவதன் மூலம், எங்கள் நாட்டையும் எங்கள் குடிமக்களையும் பாதுகாக்க வெளிவிவகார அமைச்சு உறுதிபூண்டுள்ளது. அமெரிக்க வீசா என்பது ஒரு சலுகை மட்டுமே. உரிமை அல்ல. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் உட்பட, அமெரிக்காவிற்கு அனுமதிக்கப்படாத வீசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண எங்கள் விசா சோதனை மற்றும் சோதனையில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். புதிய வழிகாட்டுதலின் கீழ், F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வகைப்பாடுகளில் உள்ள அனைத்து மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விண்ணப்பதாரர்களின் ஒன்லைன் இருப்பு உட்பட விரிவான மற்றும் முழுமையான சோதனையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த சோதனையை எளிதாக்க, F, M மற்றும் J குடியேறியவர் அல்லாத வீசாக்களுக்கான அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களிலும் உள்ள தனியுரிமை அமைப்புகளை "பொதுமக்கள்" என்று சரிசெய்ய அறிவுறுத்தப்படுவார்கள். எங்கள் வெளிநாட்டு இடுகைகள் விரைவில் F, M மற்றும் J குடியேறியவர்கள் அல்லாத வீசா விண்ணப்பங்களை திட்டமிடுவதை மீண்டும் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் சந்திப்பு கிடைப்பதற்காக தொடர்புடைய தூதரகம் அல்லது தூதரக வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வீசா தீர்ப்பும் ஒரு தேசிய பாதுகாப்பு முடிவாகும். அமெரிக்காவிற்குள் நுழைய விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்கர்களுக்கும் நமது தேசிய நலன்களுக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதையும், அனைத்து விண்ணப்பதாரர்களும் கோரப்படும் வீசாவிற்கான தங்கள் தகுதியை நம்பகத்தன்மையுடன் நிறுவுவதையும், அவர்கள் தங்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளுக்கு இணங்க நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதையும் உறுதிசெய்ய, வீசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும். https://www.virakesari.lk/article/217927
  18. அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று நாங்களும் அதிக டெஸ்ட்களில் விளையாட தகுதி உடையவர்களே! - ஏஞ்சலோ மெத்யூஸ் Published By: VISHNU 17 JUN, 2025 | 01:25 AM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு போன்று இலங்கைக்கும் அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறைகூவல் விடுக்கப்படவேண்டும் என ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார். இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச அரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாவதற்கு முன்னதாக திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பிரகாசமாக இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு 'எமக்கு மிகக் குறைவான டெஸ்ட்கள் கிடைப்பது கவலைக்குரியதாகும். நேர்மையாகக் கூறுவதென்றால் 2008க்குப் பின்னர் நான் முதல் தடவையாக ஒரு வருடத்தில் நான்கு டெஸ்ட்களில் விளையாடுகிறேன். இது கவலை தருகிறது. இளம் கிரிக்கெட் தலைமுறையினர் இன்னும் அதிகமான டெஸ்ட்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனெனில் கிரிக்கெட் வடிவங்களில் டெஸ்ட் கிரிக்கெட்தான் உயரியதாகும். எனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இளம் கிரிக்கெட் வீரர்கள் டெஸட் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே ஒரு வருடத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவேண்டும். 'இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருடத்தில் 15க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அப்படியானால் எங்களால் ஏன் முடியாது. எங்களாலும் விளையாட முடியும். அதற்காக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்தால் அது சாத்தியமாகும். நாங்கள் உலகக் கிண்ணங்களை வென்றுள்ளோம். ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறோம். எனவே அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்றே நாங்களும் அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி உடையவர்களே' என பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். 16 வருடங்கள் இலங்கைக்காக மூவகை கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதித்த நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதற்கான காரணம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 'கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஒரு சுழற்சியாகும். நாங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறோம். கடந்த கால வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். நாங்கள் எல்லோரும் இளம் வீரர்களாக அணியில இணைந்து சிரேஷ்ட வீரர்களாக வெளியேறுகிறோம். என்னைப்பொறுத்த மட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வுபெறுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. 'கடந்த ஏழு, எட்டு போட்டிகளில் எனது திறமை நான் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. எனவே அணிக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. நான் எமது அணியின் எதிர்கால அட்டவணையைப் பார்த்தபோது நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் இல்லை. (பங்களாதேஷுடனான தொடருக்குப் பின்னர் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னரே அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது) இது துரதிர்ஷ்டவசமாகும். எனவே இதுதான் இளையவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க சரியான தருணம் என எண்ணினேன். ஏனேனில் பல திறமையான இளம் வீரர்கள் சாதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார். தொடர்ந்து பதிலளித்த அவர், 'சனத் பயிற்றுநராக பொறுப்பேற்ற பின்னர், தரங்கவும் அவரது அணியினரும் தேர்வாளர்களாக வந்த பின்னர் தொடர்பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் எங்களோடு அடிக்கடி உரையாடுகிறார்கள்.. சிரேஷ்ட வீரர்களோ அல்லது கனிஷ்ட வீரர்களோ அவர்கள் சரியானவற்றை கலந்துரையாடுகிறார்கள்.. அதுதான் முக்கியமானது. அணியில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு தொடர்பாடல்கள் பிரதானமானது. அதன் பின்னரே ஆற்றல் வெளிவரும். அதனை நான் நேரடியாக பார்த்துள்ளேன். நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டோம். எங்களுக்கு டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாட கிட்டத்தட்ட வாய்ப்பிருந்தது. அத்துடன் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆகவே தொடர்பாடல் மிகத் தெளிவாக இருந்ததுடன் சூழ்நிலையும் சிறப்பாக இருந்தது. அதனால் தான் ஆற்றல்களும் மேலும் மேலும் சிறப்பாக இருந்தது. அவர்கள் தங்களது பணியை சிறப்பாக ஆற்றுகின்றனர். அத்துடன் திறமையான வீரர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களது தரமும் உயர்கிறது. எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார். டெஸ்ட் ஓய்வுக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை விளையாட எண்ணியுள்ளதாக ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். 'ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றது. அப் போட்டி இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறுவதால் சொந்த மண்ணில் இலங்கை சம்பியனாகவேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன். ஆனால், அதற்கு எனது உடற்தகுதி அனுமதிக்கவேண்டும். அதற்காக நான் கடுமையாக உழைக்கவுள்ளேன். கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு எனது திறமையை அதிகரித்துக்கொள்ளும் அதேவேளை உடற்தகுதியையும் பேணவுள்ளேன். அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவேன்' என பதிலளித்தார். இலங்கை அணி வீரராக நினைவிலிருந்து நீங்காத தருணங்கள் பற்றி கேட்டபோது, 'எனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுப் பார்க்கும்போது ஒவ்வொரு விரரரையும் போன்று எனக்கும் நினைவிலிருந்து நீங்காத எத்தனையோ தருணங்கள் இருக்கின்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்னில் 2010இல் நாங்கள் ஈட்டிய வெற்றி - (ஒருநாள் போட்டியில் மெத்யூஸ் - மாலிங்க 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 132 ஓட்டங்களின் உதவியுடன் ஈட்டிய ஒரு விக்கெட் வெற்றி), இங்கிலாந்துக்கு எதிராக முதல் தடவையாக அந் நாட்டில் நாங்கள் ஈட்டிய (ஏஞ்சலோ மெத்யூஸின் தலைமையில்) முதலாவது டெஸ்ட் வெற்றி, 2016இல் அவஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு ஈட்டிய 3 - 0 தொடர் வெற்றி ஆகிய அனைத்தும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றிகளாகும். அத்துடன் உலகக் கிண்ணத்தை மறக்க முடியாது. 2014 ரி20 உலகக் கிண்ணம், 2014 ஆசிய கிண்ணம் ஆகிய வெற்றிகளையும் ஈட்டினோம். வெற்றியீட்டிய இந்த அணிகளில் எல்லாம் நான் பங்காற்றியதையிட்டு மிகுந்த சந்தோஷம் அடைகிறேன்' என்றார். மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களைப் போன்ற கசப்பான நிகழ்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிரான 2021 உலகக் கிண்ணப் போட்டியில் டைம் அவுட் ஆன விதம் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்? 'அது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால், அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள். அவர்களுக்கு எதிராக எனது மனதில் எதுவும் இல்லை. அவர்கள் எங்களுடன் நலமாகவே இருக்கின்றனர். வெளிப்படையாக கூறுவதென்றால் நாங்கள் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால், அவர்களுக்கு எதிராக எனது மனதில் இதுவும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை. வெறுப்பு என்பது கிரிக்கெட்டில் மோசமான வார்த்தை. நாங்கள் அனைவரும் கடினமாகவும் நேர்மையாகவும் விளையாடுகிறோம். அவர்கள் அனைவரும் எனது நல்ல நண்பர்கள்' என ஒரு சிறந்த வீரருக்கே உரிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பதிலளித்தார் மெத்யூஸ். இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அணித் தலைவர் பதவியை நீங்கள் துறந்ததற்கான காரணம் என்ன? 'ஸிம்பாப்வேக்கு எதிராக 2018இல் சந்தித்த தோல்வியை இலங்கை அணியினாலும் முழு இலங்கையினாலும் ஜீரணிக்க முடியவில்லை. இதனை அடுத்து நான் அணித் தலைவர் பதவியலிருந்து விலகிக்கொண்டேன். நாங்கள் வீழ்ச்சி அடைந்த நேரத்திலேயே அணித் தலைவர் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. அந்தத் தோல்வியினால் நான் பெரும் சோகம் அடைந்தேன். அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்க வெண்டும் என நான் எண்ணினேன். அதனால் தான் அணித் தலைவர் பதியிலிருந்து விலக நேரிட்டது. ஒரு வருடம் கழித்து தலைமைப் பதவியைப் பொறுப்பெற்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன். '2008இலிருந்து இன்றுவரை நான் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன், எதிர்கொண்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவற்றை நான் சமாளித்துக்கொண்டேன். ஆடுகளத்தின் உள்ளேயும் வெளியேயும் சவால்கள் வந்தன. உபாதைகளுக்குள்ளானேன். அவை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வந்தேன். நான் எப்போதும் சரியானதை செய்ய முயற்சித்தேன் என கருதுகிறேன். வீரர்கள் என்ற வகையில் தலைவர் என்ற வகையில் நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் சில வேளைகளில் தவறாகி விடுவதுண்டு. விளையாட்டில் இவ்வாறு இடம்பெறுவது சகஜம். ஆனால், பின்னோக்கிப் பார்க்கும் போது நான் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சரியான தீர்மானங்களையே எடுத்தேன் என்பதையிட்டு சந்தோஷமடைகிறேன். அத்துடன் அணிக்கான எனது நூற்றுக்கு 100 வீத பங்களிப்பை வழங்கினேன் என நம்புகிறேன்' என பதிலளித்தார் மெத்யூஸ். புனித சூயைப்பர் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவராக சகலதுறைகளிலும் பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ் 2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விளையாடி இருந்தார். பாடசாலையை விட்டு விலகிய பின்னர் கலம்போ கோல்ட்ஸ் கழகத்தில் இணைந்த ஏஞ்சலோ மெத்யூஸ் கிட்டத்தட்ட 20 வருடங்கள் அக் கழகத்திற்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தனது கிரிக்கெட் வளர்ச்சியில் இக் கழகமும் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர், '2007ஆம் ஆண்டு மாகாண கிரிக்கெட் போட்டியில் நான் சிறப்பாக விளையாடியதால் 2008இல் இலங்கை ஏ அணிக்கு நான் தெரிவுசெய்யப்பட்டேன். தென் ஆபிரிக்காவுக்கான அந்த கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு சதங்களை அடித்தேன். அதன் பின்னர் இலங்கை அணியில் நான் இணைக்கப்பட்டேன். அப்போது தொலைக்காட்சி திரைகளில் பார்த்து இரசித்த சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், முரளிதரன், மஹேல, சங்கக்கார ஆகிய உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உடைமாற்று அறையில் (dressing room) பார்த்தபோது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 'ஆனால், அந்த சூழ்நிலையை எனது சொந்த வீடு போல் ஆக்கி எனது மன அழுத்தத்தை குறைத்ததுடன் உணர்ச்சிகளையும் இலகுவாக்கிய டி.எம். டில்ஷான், திலான் சமரவீர உட்பட அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனது கன்னி முயற்சியில் நான் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தேன். ஆனால் அவர்கள் எனது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினர். அத்துடன் தன்னம்பிக்கையும் ஊட்டினர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதன் பின்னர் நான் பின்னோக்கி நகரவில்லை. மேடு பள்ளங்களை சந்தித்தேன். தொல்லைகளும் கஷ்டங்களும் வந்தன. அவை அனைத்தையும் கடந்து வந்ததைப் பார்க்கும்போது இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் அவர். ஊடக சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியவர்களை நினைவுகூர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ், தன்னை வளர்த்து ஆளாக்கி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கிய தனது பெற்றோரே தனது ஹீரோக்கள் என கூறினார். 'நான் எத்தனையோ பேருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையை எனக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பல தடவைகள் உபாதைக்குள்ளானேன். ஆனால், இறைவனின் ஆசியால் என்னால் 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்ய முடிந்தது. இது எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க விசேட பயணமாகும். இன்றுவரை நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் தங்களை எனக்காக அர்ப்பணித்த எனது பெற்றோர், எனது உடன்பிறப்புகள், எனது மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு நான் நன்றிகூறவேண்டும். நான் அழுத்தங்களை எதிர்கொண்டபோதெல்லாம் அவற்றிலிருந்து மீண்டு வர எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அது இலகுவானதல்ல. அவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். என்னை வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கிய எனது பெற்றோரிடம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் தான் எனது ஹீரோக்கள். 'எனது நெருங்கிய நண்பர்கள், பிரச்சினைகள், சிரமங்களின்போது எனக்காக என்னோடு இருந்தவர்கள், எனது முன்னாள், சமகால பயிற்றுநர்கள், எனக்கு கல்வி தந்து என்னை விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கச் செய்த புனித சூசையப்பர் கல்லூரி, கல்லூரியின் முன்னாள், சமகால முதல்வர்கள் (அதிபர்கள்), முன்னாள் மற்றும் சமகால ஆசிரியர்கள், முன்னாள் மற்றும் சமகால பயிற்றுநர்கள் உட்பட எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்னேன். அத்துடன் எனது கழகம் கலம்போ கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் நன்றி கூறவேண்டும்' என மெத்யூஸ் தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான, 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்த காலி சர்வதேச மைதானத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது விசேட அம்சமாகும். https://www.virakesari.lk/article/217668
  19. பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு,ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர். ஒடிசா மாநில தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டது எப்படி? பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை துறை அதிகாரிகள் ஒடிசா மாநிலம், பாலாங்கீர் (Balangir) மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இருந்து சுமார் 80 பேர், கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூருக்கு வந்துள்ளனர். அவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். "செங்கல் சூளைகளில் வேலை பார்ப்பதற்காக இவர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்களுக்குத் தலா 35 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செங்கல் சூளை உரிமையாளர் அளித்துள்ளார்" என்கிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன். "சொந்த ஊரில் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள்தான் விவசாய வேலைகள் இருக்கும். மற்ற நாட்களில் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுவோம். குடும்பத்தில் கஷ்டம் அதிகரித்ததால், முன்பணத்தை வாங்கிக் கொண்டு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்தோம்" எனக் கூறுகிறார், ஒடிசாவின் சலேபாடி கிராமத்தைச் சேர்ந்த ஷிபா மாலிக். பாலாங்கீர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிய வருவது வாடிக்கையாக உள்ளது. பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றியவர்கள் தங்கியிருந்த இடம் 'ஆறு மாதங்களாக அவஸ்தை' - "கடந்த ஆறு மாதங்களாக குடிநீர், உணவு, இருப்பிடம் என முறையான அடிப்படை வசதிகள் எதுவும் நாங்கள் வேலை பார்த்த சூளையில் செய்து தரப்படவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் ஷிபா மாலிக். ஷிபாவிடம் ஒடியா மொழியில் உரையாடுவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த சகில் எக்கா என்பவர் பிபிசி தமிழுக்கு உதவி செய்தார். இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணிநேரம் தங்களிடம் வேலை வாங்கப்பட்டதாகக் கூறும் ஷிபா மாலிக், "நாங்கள் குடும்பமாக வந்து வேலை செய்தோம். வாரம் முழுக்க செங்கல்லை அறுத்தாலும் ரூ. 500 தான் உரிமையாளர் தருவார். எதிர்த்துக் கேள்வி கேட்டால், அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறுவார்," என்கிறார். தங்கள் வேலைக்கு உரிய சம்பளம் இல்லாததால், சூளை உரிமையாளரிடம் சில தொழிலாளர்கள் சண்டையிட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் வாரத்தில் சுமார் 70 தொழிலாளர்கள் முன்பணத்தைக் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர். "மீதமுள்ள மூன்று வயது குழந்தை உள்பட ஏழு பேருக்கு பணம் செலுத்துவதற்கு யாரும் இல்லை. இந்த தகவலை சூளையில் வேலை பார்த்த பெண்ணின் மகன், ஒடிசாவில் உள்ள அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர்," எனக் கூறுகிறார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன். இதன்பிறகு ஜூன் 17 அன்று சிவன்வாயலில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை கண்டறிந்துள்ளனர். பட மூலாதாரம்,IRCDS படக்குறிப்பு, வலி நிவாரணிகளாக போலி மருத்துவரால் வழங்கப்பட்ட மருந்துகள் 'உடல் வலியைப் போக்குவதற்கு ஊசி' "குடும்பமாக தங்குவதற்கு சிறிய குடிசை மாதிரி அமைத்துத் தந்துள்ளனர். அதன் உள்ளே நுழைவதற்கு 2 அடி உயரம்தான் உள்ளது. மின்வசதி உள்பட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை" எனக் கூறுகிறார், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பேசிய அவர், "14 மணிநேரத்துக்கும் மேலாக வேலை பார்த்ததால் அவர்களுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊசி போட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதற்காக வாரம் ஒருமுறை போலி மருத்துவர் ஒருவரை வரவழைத்துள்ளனர்," எனக் கூறுகிறார். போலி மருத்துவர் மூலம் மருந்துகளைக் கையாண்டதாக சூளை உரிமையாளர் மீது வெங்கல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, பயன்படுத்திய ஊசிகள், ஏராளமான மருந்து அட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர். மருந்துகளின் தன்மை குறித்து சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தியிடம் கேட்டபோது, "வலி நிவாரணத்துக்கான மருந்துகளாக இவை உள்ளன" என்று மட்டும் பதில் அளித்தார். "நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் செங்கற்களை அறுப்போம். ஆனால், மிகக் குறைவான கூலியே கொடுக்கப்பட்டதால், அது உணவு செலவுக்கே சரியாக இருக்கும். ஊருக்குள் சென்று ரேசன் அரிசியை வாங்கி பயன்படுத்துவோம்" எனக் கூறுகிறார் ஷிபா மாலிக். "ஆறு மாதங்களாக வேலை பார்த்தாலும் சூளை உரிமையாளரிடம் வாங்கிய முன்பணத்தைக் கழிக்க முடியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,IRCDS 'ஒடிசா தொழிலாளர்களை குறிவைக்கும் முகவர்கள்' "திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உரிமம் பெறாத சூளைகளும் உள்ளன. ஒடிசாவில் வறுமையால் வாடும் மக்களை குறிவைத்து சில முகவர்கள் இயங்கி வருகின்றனர்" எனக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் (Integrated rural community development society) ஒருங்கிணைப்பாளரான பழனி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்கள் முகவர் மூலமாக வந்துள்ளனர். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் சூளைக்குச் செல்கின்றனர். அதிகாலை வரை வேலை பார்ப்பார்கள். பகலில் கற்கள் காய்வதற்கு எளிதாக இருக்கும். சிலர் மாலை 4 மணிக்கு சென்றுவிட்டு 12 மணி வரையில் வேலை பார்ப்பார்கள்," எனவும் அவர் குறிப்பிட்டார். "ஒருவர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தாலும் ஆய்வு நடத்தும்போது, தங்களின் உரிமையாளர் குறித்து தவறாக எதுவும் கூற மாட்டார்கள். அதனால் மீட்பதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும்," எனக் கூறுகிறார் ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் களப் பணியாளர் சூர்யா நடராஜன். ஒருவர் கொத்தடிமை எனக் கண்டறியப்பட்டால் அவருக்கு மாநில அரசு ஒரு லட்ச ரூபாயை வழங்குவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார். "மீட்கப்பட்ட தொழிலாளிக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு உடனே முப்பதாயிரம் ரூபாயை அரசு வரவு வைக்கிறது. வழக்கு நடக்கும் காலங்களில் மீதமுள்ள தொகையை வரவு வைப்பது வழக்கம்" என்கிறார் சூர்யா நடராஜன். செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்ட ஷிபா மாலிக், தீபாஞ்சலி மாலிக், சாய்ரேந்திரி நாக், பகாரட் நாக், ஹடுபரிகா, ஜென்ஹி பரிஹா மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவே ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். '2 மாதங்களில் மூன்றாவது சம்பவம்' செங்கல் சூளையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ் உரிமம் பெறவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஊழியர்களுக்கான வருகைப் பதிவேடு, ஊதிய பதிவேடு ஆகியவற்றை பராமரிக்கவில்லை என்பதும் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்தனர். சூளை உரிமையாளர் துளசி மீது வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சூளை உரிமையாளர் மீதான நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன், "முன்தொகை கொடுத்து தொழிலாளர்களைக் கூட்டி வருவது என்பது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை மீறி அதிக நேரம் வேலை பார்க்க வைத்தது உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார். "ஆனால், அவரைக் கைது செய்ய முடியவில்லை. தற்போது சூளையின் உரிமையாளர் தலைமறைவாக இருக்கிறார்" என, ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 2 மாதங்களில் மட்டும் மூன்று நிகழ்வுகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டுள்ளதாகக் கூறும் ரவிச்சந்திரன், மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் கூறுகிறார். "கொத்தடிமைகளாக யாரையும் பயன்படுத்த மாட்டோம் என்பதை அவர்களிடம் எழுதி வாங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார். கொத்தடிமைகளாக மக்களை பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டால், கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976-ன் கீழ், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2000 வரை அபராதமும் விதிக்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wpn9rqg12o
  20. ஈழப்பிரியன் அண்ணாவுக்கு சந்திக்க நேரமில்லை போல, அடுத்தமுறை சந்திப்போம் என செய்தி அனுப்பி உள்ளார். சிறி அண்ணை இன்னொரு முறை வருகையில் சந்திப்போம்.
  21. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள் Published By: VISHNU 16 JUN, 2025 | 02:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன் கசுன் ராஜித்த, அறிமுக வீரர் இசித்த விஜேசுந்தர ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை குழாத்தில் இடம்பெறும் பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, இசித்த விஜேசுந்தர ஆகிய நால்வரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. ஆரம்ப வீரர் லஹிரு குமார ஓரே ஒரு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். ஆறு வருடங்களுக்கு பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஏ அணிக்கான போட்டிகளிலும் பிரகாசித்த ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய அகில தனஞ்சய இம்முறை 7 உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தி சுழல்பந்துவீச்சாளர்களில் சிறந்து விளங்கினார். அத்துடன் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஆரம்ப வீரர் லஹிரு உதார (9 போட்டிகளில் ஒரு இரட்டைச் சதத்துடன் 787 ஓட்டங்கள்), மத்திய வரிசை வீரர் பசித்து சூரியபண்டார (8 போட்டிகளில் 2 சதங்களுடன் 620 ஓட்டங்கள்), மற்றொரு மத்திய வரிசை வீரரான பவன் ரத்நாயக்க (8 போட்டிகளில் 542 ஓட்டங்கள்), சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சோனால் தினூஷ (4 போட்டிகளில் 255 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்), சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க (8 போட்டிகளில் 52 விக்கெட்கள்), இசித்த விஜேசுந்தர (44 முதல்தர போட்டிகளில் 112 விக்கெட்கள்) ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சிரேஷ்ட வீரர்கள் எதிர்பார்த்தது போல குழாத்தில் இடம்பெறுகின்றனர். இலங்கை டெஸ்ட் குழாம் பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால தினூஷ, பவன் ரத்நாயக்க, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, இசித்த பெர்னாண்டோ. https://www.virakesari.lk/article/217564
  22. உங்கள் வசதிப்படி செய்யுங்க, போட்டிகளுக்கு அண்மையாக என்றால் நீங்கள் குறிப்பிட்டது போல் வீராங்கனைகளின் பெயர் விபரம் தெரியும்.
  23. அது வந்து... இப்ப நான் என்ன சொல்றது?! திரு சுகந்தன் அவர்கள், இந்தப் பகுதியை சுற்றுலா தலமாக்க முயற்சிக்கிறார். அத்தோடு கள்ளை போத்தலில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார். பனை மூலப்பொருட்களை வைத்து நிறைய உள்ளூர் உற்பத்திகள் விற்பனை, ஏற்றுமதி செய்கிறார். பாதுகாப்பான படகுச்சவாரி போன்றன பயிற்றப்பட்ட ஊழியர்களை வைத்து மேற்கொள்கிறார். ஆசையாக இருந்தால் ஒரு செய்தி அனுப்பி இருக்கலாமே அண்ணை? ஊருக்கு வந்தால் ஒரு பனைக் கள்ளு(வெறிக்காது) வாங்கித்தந்திருப்பேனே!
  24. கமேனி தொடர்ந்தும் உயிருடன் இருக்ககூடாது - இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் 19 JUN, 2025 | 04:00 PM இஸ்ரேலின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்ல கமேனி தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கு அனுமதிக்க முடியாது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானின் இன்றைய ஏவுகணைகளை தாக்குதலை தொடர்ந்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கு தலைமை தாங்கி இஸ்ரேலை அழிப்பதை தனது பணியாகக் கொண்ட காமெனி போன்ற ஒரு சர்வாதிகாரி தொடர்ந்து இருக்க முடியாது. ”என அவர் தெரிவித்துள்ளார் இஸ்ரேலிய இராணுவத்திற்கு "அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார் மேலும் "அதன் அனைத்து இலக்குகளையும் அடைய இந்த மனிதன் தொடர்ந்து இருக்கக்கூடாது" என்பதை இராணுவம் .அறியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217924

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.