Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கே அதிக பலனா? நியூசிலாந்து ஊடகங்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவுடனான தோல்விக்குப் பிறகு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி 2025இன் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு நியூசிலாந்து அணி நாடு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, இப்போது அங்குள்ள ஊடகங்களில் அது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. நியூசிலாந்தின் முன்னணி நாளிதழான நியூசிலாந்து ஹெரால்டு, "1.438 பில்லியன் மக்கள் தொகையையும் கிரிக்கெட்டுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தையும் கொண்ட இந்தியா, மும்பையைவிட குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்தை தோற்கடித்தது" என்று குறிப்பிட்டது. இந்தியாவின் வெற்றிக்கான காரணங்களைப் பட்டியலிட்டு, "இந்த வெற்றியில் இந்தியாவின் சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் போட்டியில் இந்தியா சிறந்த அணியைக் கொண்டிருந்தது, மேலும் பல விஷயங்களும் அதற்குச் சாதகமாக அமைந்தன. பாகிஸ்தான் போட்டியை நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு விளையாட மறுத்துவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஐந்து போட்டிகளையும் துபையில் மட்டுமே விளையாடியது. அதேபோல், இந்திய அணி துபை மைதானத்திற்குப் பழகிவிட்டது. பயணங்களில் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டது. போட்டி எங்கு நடைபெற வேண்டும் என்பது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்போது, அதற்கேற்ப 15 வீரர்களைக் கொண்ட ஓர் அணியை உருவாக்குவது உங்களுக்கு எளிதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், "ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் 11 இந்திய வீரர்களில், நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்பட மொத்தம் ஆறு பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இந்தியாவை பொறுத்தவரை, 50 ஓவர்களில் 38 ஓவர்கள் அதன் சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டன. மறுபுறம், நியூசிலாந்து அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஒருவர் சாண்ட்னர், மற்றவர் மிட்செல் பார்ஸ்வெல்," என்று நியூசிலாந்து ஹெரால்டு தனது செய்தியில் கூறியுள்ளது. அதோடு, "க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர ஆகியோர் இருந்தாலும், அவர்கள் முழுநேர சுழற்பந்து வீச்சாளர்கள் அல்ல. உதாரணமாக, இந்தியாவின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மறுபுறம், நியூசிலாந்தின் நான்காவது சுழற்பந்து வீச்சாளர் பிலிப்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை விக்கெட் கீப்பராக தொடங்கினார்," என்று நியூசிலாந்து ஹெரால்டு செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவின் ஆதிக்கம் பற்றிய விவாதம் போட்டியின் சூழல், இந்தியாவுக்கு சாதகமாகவும், நியூசிலாந்துக்கு எதிராகவும் இருந்தது என்றாலும், நியூசிலாந்து அணி எளிதில் தோல்வியடைந்தது என்று நியூசிலாந்து ஹெரால்டு நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறுகையில், "எனது அணியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற போட்டிகளில் எப்போதும் சில சவால்கள் இருக்கும், அவற்றில் இருந்து நீங்கள் வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். நான் எதைப் பற்றியும் குறை சொல்ல முடியாது. போட்டி முழுவதும் நாங்கள் முழு பலத்துடன் எதிரணி அணிக்கு சவாலாக இருந்திருக்கிறோம்," என்றார். இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா? முகமது ஷமி நோன்பு கடைப்பிடிக்கவில்லை என விவாதம் - இன்சமாம் உல்-ஹக் கூறிய அறிவுரை என்ன? கோலி, ரோஹித் இருவரும் அடுத்த உலகக்கோப்பை வரை அணியில் நீடிக்க முடியுமா? முன்னுள்ள சவால்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நிலவியல் அரசியல் யதார்த்தங்கள், அக்கறையின்மை மற்றும் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் விறுவிறுப்பற்ற போட்டிச் சூழல் ஆகியவை சாம்பியன்ஸ் டிராபி போட்டி, ஐ.சி.சி திட்டமிட்டபடி நடக்காமல் போவதற்குக் காரணமாக அமைந்தன. சாம்பியன் டிராபி ஐ.சி.சி.க்கு நிதி திரட்டும் ஒரு வழியாக மாறியது. ஆனால் டி20இன் மகத்தான வெற்றிக்கு மத்தியில், ஒருநாள் போட்டியின் தன்மை குறித்த கேள்வி இன்னும் அப்படியே உள்ளது" என்று ரேடியோ நியூசிலாந்து தனது வலைதளத்தில் எழுதியுள்ளது. "எந்தவொரு போட்டியின் வெற்றிக்கும் இந்தியா ஒரு நிதி இயந்திரம் போன்றது. 1996க்கு பிறகு, எந்தவொரு ஐ.சி.சி போட்டியையும் நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டபோது, இந்தியா பங்கேற்குமா என்பது குறித்து சந்தேகத்துக்குரிய சூழல் நிலவியது" என்று ரேடியோ நியூசிலாந்து பதிவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, "இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் இன்னும் முடிவுக்கு வராததால், பாகிஸ்தானில் விளையாடுவதில்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இரு நாடுகளும் ஐ.சி.சி போட்டிகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுகின்றன. அதுவும் இப்போது மூன்றாவது நாட்டில்" என்றும் ரேடியோ நியூசிலாந்து குறிப்பிட்டிருந்தது. விருது பெற்ற கிரிக்கெட் எழுத்தாளர் நிக்கோலஸ் ப்ரூக்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர்களை நினைத்துத் தான் வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார். "என்னைப் பொறுத்தவரை, இந்திய அணி சிறப்பானது. எந்தச் சூழ்நிலையிலும் முன்னேறும் திறன் கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி அதன் திறமையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஒரே இடத்தில் விளையாடுவதன் மூலமாகப் பலன் பெற்றதாக மற்ற விஷயங்கள் பேசப்படுகின்றன" என்று கூறியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் வெற்றிக் களிப்பு - புகைப்படத் தொகுப்பு10 மார்ச் 2025 நியூசிலாந்தை வீழ்த்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது எப்படி?9 மார்ச் 2025 இந்தியா மீதான பாராட்டும் விமர்சனமும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தியது, ஆனால் இந்தியா அங்கு சென்று விளையாட மறுத்துவிட்டது. ஜஸ்பிரித் பும்ரா உடற்தகுதி காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறியதாலும், விராட் கோலி இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனதாலும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றி இன்னும் பெரிதாக்கப்படுகிறது என்று நியூசிலாந்து செய்தி வலைதளமான ஸ்டஃப் குறிப்பிட்டுள்ளது. "கடந்த இரண்டு ஆண்டுகளில், மூன்று ஐ.சி.சி போட்டிகளில் இந்தியா 24 போட்டிகளில் 23 போட்டிகளில் வென்றுள்ளது. இதில் 2023 ஒருநாள் உலகக்கோப்பை, கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை அடங்கும். ஆனால் இந்த சாம்பியன்ஸ் டிராபி குறித்து, போட்டியை நடத்தும் நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய நன்மைகள் இந்தியாவுக்கு கிடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எந்தவொரு தொடரையும் நடத்தும் நாடு, அந்தத் தொடரில் பலனடைகிறது. கடந்த நான்கு ஒருநாள் உலகக் கோப்பைகளில், போட்டியை நடத்திய நாடு மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எந்தவொரு பெரிய விளையாட்டுப் போட்டியிலும், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு கிடைத்த பலன்களை, போட்டி நடத்தாத நாடு ஒருபோதும் பெறுவதில்லை," என்று ஸ்டஃப் தெரிவித்துள்ளது. மேலும் "2021ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி அனைத்து 15 போட்டிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கியது. அந்த நேரத்தில், இந்தியா வேறு எந்த நாட்டிலும் போட்டிகளை விளையாடுவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆனால், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது அணியை பாகிஸ்தானில் விளையாட அனுமதிக்கவில்லை. இந்நிலையில், மீதமுள்ள ஏழு நாடுகள் பாகிஸ்தானில் இருந்தபோது, ஐ.சி.சி இந்தியாவுக்கான அனைத்துப் போட்டிகளையும் துபையில் ஏற்பாடு செய்தது" என்று ஸ்டஃப் இணையதளம் எழுதியுள்ளது. அதோடு, "இறுதிப் போட்டிக்கு முன்பு, முகமது ஷமி, ஆடுகளத்தின் நிலை குறித்து எங்களுக்குத் தெரியும், எனவே எங்களுக்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கிறது என்று கூறியிருந்தார். நியூசிலாந்து தனது போட்டிகளை பாகிஸ்தானின் மூன்று நகரங்களில் விளையாடியது, அதே நேரத்தில் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடியது," என்று ஸ்டஃப் குறிப்பிட்டது. சாம்பியன்ஸ் டிராபி: துபையில் அனைத்து போட்டிகளையும் விளையாடுவதன் மூலம் இந்தியா பயனடைகிறதா?27 பிப்ரவரி 2025 கோலி சாதனை சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா?24 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்தினாலும் இந்தியாவுக்கே பலன் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன கென்யாவின் நைரோபியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக நியூசிலாந்தின் செய்தி வலைதளமான தி போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. அதன் பிறகு, நியூசிலாந்து அணி வெள்ளை பந்து இறுதிப் போட்டியில் தொடர்ந்து ஐந்தாவது தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தியா தனது குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்த நாளிலிருந்து, பல வகையான கேள்விகள் எழத் தொடங்கின. இந்திய அணி ஏற்கெனவே பலமாக உள்ளது. அதுபோக இந்திய அணிக்குப் பல விஷயங்கள் சாதகமாக இருந்தன. "ஐ.சி.சி பிற அணிகளிடம், பாகிஸ்தானுக்கு வெளியே விளையாட ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என்று கூறியது. ஆனால், இந்திய அணி துபையில் முகாமிட்டுத் தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதைப் போன்ற உதவியைப் பெற்றது. மறுபுறம், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்து துபைக்கு மாறி மாறிப் பயணித்தது" என்றும் ஸ்டஃப் இணையதளம் குறிப்பிட்டது. நியூசிலாந்தின் செய்தி இணையதளமான தி போஸ்ட், "இந்தியா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா பெற்ற வசதிகள் எந்தவொரு உலகளாவிய விளையாட்டிலும் வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காது," என்று தெரிவித்தது. இவைதவிர, நியூசிலாந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் நியூசிலாந்து ஒரு பெரிய போட்டியைத் தவறவிடுவது இது முதல் முறை அல்ல என்றும் அந்தச் செய்தி இணையதளம் எழுதியுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு கென்யாவில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோதும், இறுதிப் போட்டியின்போது, வெற்றி அவர்களின் கைகளைவிட்டு நழுவுவது போலத் தோன்றியதை தி போஸ்ட் நினைவுகூர்ந்தது. ஆனால் அப்போது கிறிஸ் கெய்ன்ஸ் 102 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறையும் அதே போன்ற ஒரு இன்னிங்ஸ் தேவைப்பட்டது என்றும் தி போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce8vqze416yo
  2. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தர்மேந்திர பிரதான் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்பிக்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வின் முதல் நாளான நேற்றே, தேசிய கல்விக் கொள்கை பிரச்சனையால் விவாதங்களுடன் தொடங்கியது. தமிழ்நாடு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கும் போது, தமிழ்நாடு எம்பிக்களை நோக்கி ஒரு வார்த்தையால் குறிப்பிட்ட பிரதான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்தி வைக்க நேர்ந்தது. அமர்வின் இரண்டாவது நாளான இன்று, நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது "இந்தியை ஏற்க மாட்டோம்" "மும்மொழியை ஏற்க மாட்டோம்" என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. வைகோ, மத்திய அமைச்சரின் பேச்சால், மக்களின் மனம் புண்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், "அமைச்சர் தமது பேச்சை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறினார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்" எனவும் வைகோ வலியுறுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, அமைச்சருக்கு எதிராக திமுக சார்பில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும், இதனை அவைத்தலைவர் ஏற்க வேண்டும் எனவும் கூறினார். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான நிதியை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை எனக் கூறினார். மத்திய அரசின் முடிவு வெறும் அரசியல் முடிவு அல்ல எனவும், இதனால் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, தங்களின் கட்சி திமுகவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூறினார். மத்திய அமைச்சர் பயன்படுத்திய வார்த்தை , மக்களை தாழ்த்தக் கூடியது எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தர்மேந்திர பிரதான் என்ன பேசினார்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். ''பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ 2,000 கோடி நிதி, பிற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. சட்டத்தால் கட்டாயமாக்கப்படாத ஒரு கொள்கையை பின்பற்றாததால், எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காது என்ற வாக்குறுதியை ஒன்றிய அரசு அளிக்குமா?'' என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியதா? பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்? சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி? இந்தியாவில் விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் - வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி? 'தமிழ்நாடு யு டர்ன் அடித்துவிட்டது' - மத்திய அமைச்சர் இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் எம்பியும் என்னை சந்தித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்" என்றார். "இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது." என்று பேசினார். மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்?9 மார்ச் 2025 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?7 மணி நேரங்களுக்கு முன்னர் மேலும்,"அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை, நேர்மையாக இல்லை, ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை.'' மேலும் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு, அவர்கள் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றார் தர்மேந்திர பிரதான் '' அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்." என தெரிவித்தார். மேலும், "பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று அவர் தெரிவித்தார். அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். உடல் பருமனாகாமல் இருக்க தினசரி சமையலில் எந்த எண்ணெய், எவ்வளவு சேர்க்க வேண்டும்?8 மார்ச் 2025 தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 'தேசிய கல்விக் கொள்கையை திமுக ஒப்புக் கொள்ளவில்லை' - கனிமொழி பட மூலாதாரம்,PTI அவை மீண்டும் கூடிய போது பேசிய திமுக எம் பி கனிமொழி, மத்திய கல்வி அமைச்சர் தமிழக எம்.பி.க்களை, தமிழக அரசை ஒரு வார்த்தையை குறிப்பிட்டு விமர்சனம் செய்ததாக கூறினார். "நாங்கள் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்த போது, தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது, அதிலுள்ள மும்மொழி கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தோம். தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக திமுக கூறவில்லை" என்று கனிமொழி பேசினார். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தான் அந்த வார்த்தைகளை கூறியிருக்கக் கூடாது என்றார். "எனது வார்த்தைகள் காயப்படுத்தும் வகையில் இருந்திருந்தால் நான் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை" என்றார். "எனினும் முக்கியமான விசயம் இதுதான். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கனிமொழி தலைமையில் மாநில கல்வி அமைச்சருடன் வந்து என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள் இந்த திட்டத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்வதாக தெரிவித்தனர்" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார். உடனே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், "நீங்கள் அமைதியாக இருங்கள். உண்மையை கேட்பதற்கான தைரியம் உங்களுக்கு வேண்டும்" என்று கூறிவிட்டு "எனக்கு கிடைத்த தகவல்படி தமிழக முதல்வர் இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதற்குள் ஏதோ சில உள்விவகாரம் எழுந்தது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்" என்றார். முதல்வர் ஸ்டாலின் கண்டனம் இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிட்டு பேசிய வார்த்தையை கண்டித்து பதிவிட்டுள்ளார். "தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தரமேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்", என்று ஸ்டாலின் தெரிவித்தார். "தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்", என்றும் அவர் அந்த அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். "புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து அனுப்பிய பிஎம் ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?", என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அன்று எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு இருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சென்னையில் திமுக கட்சியினர் போராட்டம் "நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்", என்று தரமேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் அமைச்சர் தரமேந்திர பிரதான் பேசிய கருத்தினை எதிர்த்து சென்னையில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் கண்டன போராட்டங்களை நடத்தினர். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8mz4p42mvo
  3. மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 31 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்றுண்டிச்சாலையில் உணவை உட்கொண்ட 53 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 31 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரிசோதனைகளுக்காக மாணவர்கள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகளை பொது சுகாதார பரிசோதகர்கள் பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் காரணமாக பாடசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் பிரவேசத்தினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/315912
  4. மொஸ்கோ மீது உக்ரைன் உக்கிர ஆளில்லா விமானதாக்குதல் Published By: RAJEEBAN 11 MAR, 2025 | 11:56 AM ரஸ்ய தலைநகர் மொஸ்கோவின் உக்கிரமான ஆளில்லா விமானதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். மொஸ்கோவிற்கு வெளியே உள்ள விட்னோய் மற்றும் டொமெடெடோவோ ஆகிய நகரங்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் ஏழு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொஸ்கோவை நோக்கி செலுத்தப்பட்ட 75 ஆளில்லா விமானங்கள் செயல் இழக்கச்செய்யப்பட்டன என மொஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். ஆளில்லா விமான சிதறல்கள் காரணமாக கூரையொன்று சேதமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மொஸ்கோ மீதான இந்த தாக்குதலை தொடர்ந்து ஒருபுகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது, விமானநிலையங்களில் விமானங்கள் பயணிப்பது குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2022 இல் உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதலை ஆரம்பித்த பின்னர் மொஸ்கோ மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் ஆளில்லா விமானதாக்குதல் இது என தெரிவிக்கப்படுகின்றது. சவுதி அரேபியாவில் உக்ரைன் அமெரிக்க பிரதிநிதிகள் மத்தியில் மிக முக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மொஸ்கோவில் சேதமடைந்;த கட்டிடங்களையும், எரியுண்ட வாகனங்களையும் காண்பிக்கும் படங்களை மொஸ்கோ ஆளுநர் வெளியிட்டுள்ளார். ஆளில்லா விமான தாக்குதலால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மூன்று சிறுவர்கள் உட்பட 12 பேரை வெளியேற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208883
  5. “தங்கள் வீடுகளில் பலர் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன், பெண்களும் குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்” - சிரிய படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் Published By: RAJEEBAN 10 MAR, 2025 | 11:00 AM bbc சிரியாவில் அலவைட் சிறுபான்மை முஸ்லீம் மதபிரிவினர் அவர்களில் வீடுகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அவற்றை நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபத பசார்அல் அசாத்தின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதான பழிவாங்கல் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்துள்ள நிலையில் சிரியாவின் இடைக்கால தலைவர் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அசாத்தின் ஆதரவு கோட்டைகளான லடாகியா மற்றும் டர்டஸ் ஆகிய கடலோர மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். சூறையாடல்கள் குறித்தும் சிறுவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து உள்ளுர் மக்கள் விபரித்துள்ளனர். கடலோர நகரமான பனியாவில் உள்ள அல்வைட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் ஹை அல் குசூரில் இரத்தம் தோய்ந்த பெருமளவு உடல்கள் சிதறிக்கிடப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பலவயதுடைய ஆண்கள் இங்கு சுடப்பட்டனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நாங்கள் ஜன்னலிற்கு வெளியே எட்டிப்பார்ப்பதற்கு கூட அஞ்சினோம் என தெரிவித்துள்ள பொதுமக்கள் இணையசேவை பாதிக்கப்பட்டிருந்தது அது ஒழுங்காக செயற்படதொடங்கியவேளை முகநூல் பதிவுகள் மூலம் அயலவர்களின் மரணங்கள் குறித்து நாங்கள் அறிந்தோம் என தெரிவித்துள்ளனர். பசார் அல் அசாத்தை முகநூலில் விமர்சித்தமைக்காக 2023இல் என்னை கைதுசெய்தார்கள்,கடந்த டிசம்பரில் பசார் அல் அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்டபின்னர் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்கள் சிறையிலிருந்து பலரை விடுதலை செய்தவேளை என்னையும் விடுதலை செய்தார்கள் என பிபிசிக்கு தெரிவித்துள்ள அய்மென் பரெஸ் சில நாட்களிற்கு முன்னர் ஹை அல் குசூர் மீது இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்கள்( அரசதரப்பினர்) தாக்குதல்களை மேற்கொண்டவேளை என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள் அவர்கள் என்னை கொலை செய்யவில்லை ஆனால் எனது கார்களை எடுத்து சென்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அவர்கள் புதியவர்களாக நான் இதுவரை பார்க்காதவர்களாக காணப்பட்டனர்,அவர்கள் உஸ்பெக் அல்லது செச்சினியாவை சேர்ந்தவர்களாகயிருக்கவேண்டும் என பரெஸ் தெரிவித்துள்ளார். அவர்களுடன் சிரியாவை சேர்ந்தவர்களும் காணப்பட்டனர் ஆனால் அவர்கள் பாதுகாப்பு படையினர் இல்லை சில பொதுமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் வீடுகளில் பலர் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன், பெண்களும் குழந்தைகளும் இரத்த வெள்ளத்தில்காணப்பட்டனர்,சிலர் உயிர் தப்புவதற்காக வீடுகளின் கூரைகளிற்கு தப்பிச்சென்றனர் ஆனால் அவர்களும் இந்த இரத்தக்களறியிலிருந்து உயிர் பிழைக்கவில்லை என பரெஸ் தெரிவித்துள்ளார். லடாக்கியா ஜப்லே பணியாசில் 750க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தவிர அசாத் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினர் இடையிலான நேரடி மோதலில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பனியாஸ் நகரிற்கு சிரிய பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்ததை தொடர்ந்து நிலைமை ஸ்திரமடைந்தது என பரெஸ் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் ஏனைய ஆயுததாரிகளை அங்கிருந்து வெளியேற்றி பொதுமக்களிற்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். சிரியாவின் கரையோர பகுதிகளில் சிறுபான்மையினரான இஸ்லாமிய அலவைட் மத பிரிவினர் அதிகளவில் வாழ்கின்றனர்.முன்னாள் ஜனாதிபதி அசாத் இந்த சமூகத்தை சேர்ந்தவர் எனினும் இந்த மதபிரிவினர் தங்களை அவருடன் இனம்காணவில்லை. அலவைட் சமூகத்தினர் தங்கள் ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக இருப்பார்கள் பழிவாங்கும் கொலைகள் இடம்பெறாது என சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்தனர். எனினும், இந்த வாரம் அரசாங்க படையினர் நூற்றுக்கணக்கான அலவைட் சமூகத்தினரை கொலை செய்துள்ளமை சிறுபான்மை சமூகத்தினரிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/208765
  6. ரெலோவின் முக்கியஸ்தர் விந்தன் தமிழ் அரசுக் கட்சியில் இணைவு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். ரெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்த விந்தன் கனகரட்னத்துக்கும் கட்சிக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்திருந்தன. இந் நிலையில் திடிரென நேற்றையதினம் அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முதல், அரசியல் பயணம் என நீண்டகால உறுப்பினர் மட்டுமல்லாது, அக்கட்சியின் முக்கியஸ்தராகவும் விளங்கி வந்த விந்தன் கனகரட்னம், அக் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டமை அரசியல் கட்சிகளிடத்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/315909
  7. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமித்தல் குறித்து விசேட அறிவித்தல் 11 MAR, 2025 | 05:05 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமித்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெயர் குறித்த நியமனங்கள் வெளியிடப்பட்ட 336 உள்ளூர் அதிகார சபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் கடிதங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் அந்தந்த உள்ளூர் அதிகார சபை தெரிவத்தாட்சி அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களினால் கட்டுப்பணம் பணம் செலுத்தப்படும் போது வேட்பாளர்களில் ஒருவரை அக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக நியமிக்க முடியும். மேலும், எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக (பௌர்ணமி தினம்) இருந்தாலும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகமும் அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களும் திறந்து இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/208925
  8. பட்டலந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு பட்டலந்த தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். பட்டலந்த முகாம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குறித்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/315900
  9. யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே? Published By: RAJEEBAN 11 MAR, 2025 | 04:44 PM guardian முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில் விருப்பம் உள்ளவர். தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் குற்றவாளிகளை தேடியலைந்ததையும், 16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர் பெருமையுடன் கூறியவர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பை தவறவிட்டமை குறித்து 2016 இல் அவர் தெரிவித்திருந்தார். அந்த பெண் 1989 இல் சிறையில் கொல்லப்பட்டார். 2016 இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தனது ஈவிரக்கமற்ற போதைப்பொருளிற்கு எதிரான போரை ஹிட்லரின் யூத அழிப்பு நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டிருந்தார். ஹிட்லர் 3 மில்லியன் யூதர்களை கொலை செய்தார் பிலிப்பைன்சில் போதைப்பொருளிற்கு அடிமையான மூன்று மில்லியன் பேர் உள்ளனர் அவர்களை படுகொலை செய்வது குறித்து நான் மகிழ்ச்சியடைவேன் என்றார். பெண்களை இழிவு செய்தல் தன்னை பற்றிய மிகைப்படுத்தி கதைத்தல் பத்திரிகைகளை தாக்குதல் ஆகியவற்றை விரும்புபவரான ஒரு ஜனரஞ்சகவாதியான பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். மனிலா விமான நிலையத்திற்கு அவர் வந்தவேளை சர்வதேச பொலிஸாரின் பிடியாணை அவருக்கு வழங்கப்பட்டது. அவருடைய பதவிக்காலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்டானாவோவில் உள்ள டாவோ நகரத்தின் முன்னாள் வழக்குதொடுநரும், மேயருமான டுட்டெர்டே போதைப்பொருள் குற்றங்களை ஒழிப்பதாக வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் 2016 இல் பிலிப்பைன்ஸ் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானார். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அவர் ஈடுபட்டதால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடல்கள் மனிலா குடாவில் உள்ள மீன்களிற்கு உணவாக வழங்கப்பட்டன. இவர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புநடவடிக்கைகளின் போது 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் வறியமக்கள், நகரப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள். பொலிஸாரினால் இனந்தெரியாத குழுக்களினால் சுடப்பட்டார்கள். தண்டனை வழங்குபவர் என அழைக்கப்பட்ட 79 வயது டுட்டெர்டே 15 வயதில் துப்பாக்கி வைத்திருந்தமைக்காக பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டவர் . அவர் சில பாடசாலைகளில் இருந்து நீக்கப்பட்டார், தனது சக மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தார், ஆனால் எதற்காகவும் தண்டிக்கப்படவில்லை தப்பினார். இவரை கடுமையாக விமர்சித்தவரான பிலிப்பைன்சின் செனெட்டர் அந்தோனியோ டிரிலேன்ஸ் ஒரு முறை கார்டியனிற்கு தெரிவித்தார். இதுவே தண்டனையிலிருந்து விடுபடும் மனோநிலையை அவரிடம் உருவாக்கியிருக்கலாம். அவர் ஒருபோதும் தண்டிக்கப்படாததால் அவர் கொலைகளில் ஈடுபட்டார், தனது விருப்பம் போல செயற்பட்டார் என செனெட்டர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/208926
  10. தக்கோலப் போர்: சோழர்களின் தோல்விக்கு வித்திட்ட ராஜாதித்த சோழன் வீரமரணம் - யானை மீதிருந்தவருக்கு என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,BJP TAMILNADU / INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 11 மார்ச் 2025, 01:50 GMT தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் என்ன தொடர்பு? அந்தப் போரில் நடந்தது என்ன? மார்ச் ஏழாம் தேதியன்று ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்தில் நடைபெற்ற 56வது நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்த மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் இடையிலான தொடர்பை மனதில் வைத்தே இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பிற்காலச் சோழ மரபைச் சேர்ந்தவரான ராஜாதித்த சோழன் ஒருபோதும் மன்னராக இருந்ததில்லை. இருந்த போதும், சோழ வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது? கங்கை முதல் இலங்கை வரை தமிழர் ஆட்சியை ராஜேந்திர சோழன் விரிவாக்கியது எப்படி? கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் சிற்றரசர்கள் இடையிலான எல்லை ஒப்பந்தம் கூறும் சுவாரஸ்ய தகவல் தக்கோல யுத்தத்தின் முக்கியத்துவம் பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர் முதலாம் பராந்தகச் சோழன். கி.பி. 955ல் இவர் மரணமடைந்தார். சோழ மன்னர்களிலேயே மிகவும் புகழ்பெற்ற மன்னராக இருந்த ராஜராஜ சோழன் கி.பி. 985ல் மன்னராக முடிசூடினார். இந்த இரு மன்னர்களுக்கும் இடையிலான காலகட்டம் 30 ஆண்டுகள். ஆனால், 'இந்த முப்பது ஆண்டுகள் சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதி' எனக் குறிப்பிடுகிறார், சோழர்களின் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. அப்படி ஒரு கடுமையான சூழலை சோழ அரசுக்கு ஏற்படுத்திய யுத்தம்தான் தக்கோல யுத்தம். முதலாம் பராந்தகச் சோழன் இரண்டு சேர இளவரசிகளை மணந்திருந்தார். அவர்களில் கோ கிழான் அடிகளுக்குப் பிறந்தவர்தான் ராஜாதித்தன். பராந்தகச் சோழனுக்கு கண்டராதித்தன், அரிஞ்சயன் என வேறு இரு மகன்களும் உண்டு. பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்திற்கு ராஜாதித்திய சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது ராஜாதித்தன் கொல்லப்பட்ட போர் ராஷ்டிரகூட (ஏறக்குறைய தற்போதைய கர்நாடகப் பகுதி) மன்னனான மூன்றாம் கிருஷ்ண தேவன், கி.பி. 949-இல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தார். கங்க நாட்டின் மன்னனான இரண்டாம் பூதுகனும் பெரும் படையுடன் அவருக்கு துணையாக சேர்ந்துகொண்டார். இந்த இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்து, சோழ நாட்டின் ஒரு பகுதியான தொண்டை நாட்டைத் தாக்கின. அந்தத் தருணத்தில் திருநாவலூரில் தன் படையுடன் சோழ இளவரசனான ராஜாதித்தன் தங்கியிருந்தார். ராஷ்டிரகூட படைகளை எதிர்கொள்வதற்காக தக்கோலத்துக்குச் சென்றார் ராஜாதித்தன். இந்தப் போரில்தான் அவர் கொல்லப்பட்டார். இந்தப் போர் திடீரெனத் துவங்கியதில்லை. இந்தப் போருக்கு ஒரு நீண்ட காலப் பின்னணி இருந்தது. இந்தப் பின்னணியை தனது 'லார்ட்ஸ் ஆஃப் எர்த் அண்ட் சீ' (Lords of Earth and Sea) நூலில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் அனிருத் கனிசெட்டி. தர்மேந்திர பிரதானின் விமர்சனமும், ஸ்டாலினின் எதிர்வினையும் - நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடந்தது?6 மணி நேரங்களுக்கு முன்னர் முகமது ஷமி நோன்பு கடைப்பிடிக்கவில்லை என விவாதம் - இன்சமாம் உல்-ஹக் கூறிய அறிவுரை என்ன?10 மார்ச் 2025 தக்கோலப் போருக்கான விதை கி.பி. 930களின் பிற்பகுதி. பராந்தகச் சோழனின் அரசவையில் வந்து நின்ற அந்த இளைஞன், எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் அவனுடைய ஆடைகள் சிறப்பாகவே இருந்தன. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சில மாதங்களுக்கு முன்புவரை ராஷ்டிரகூட ராஜ்ஜியத்தின் மன்னனாக இருந்தவன். தன்னுடைய தளபதிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து, தன்னைத் தூக்கியெறிந்துவிட்டு தனது வயதான சித்தப்பாவை மன்னராக்கியிருப்பதாகவும் தனக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்து நாட்டை மீட்டுத்தர வேண்டுமென்றும் பராந்தகச் சோழனிடம் சொன்னான் அந்த இளைஞன் (இவரது பெயரை கெனிசெட்டி குறிப்பிடவில்லை. ஆனால், இந்த மன்னன் கி.பி. 930 முதல் கி.பி. 936வரை ராஷ்டிரகூட நாட்டை ஆண்ட நான்காம் கோவிந்தன் என்கிறார், வரலாற்றாசிரியரான சதாசிவ பண்டாரத்தார்). பட மூலாதாரம்,JUGGERNAUT தொடர்ந்து வெற்றிகளைச் சந்தித்து வந்த பராந்தகச் சோழன் அந்த இளைஞனை ஆதரிக்க முடிவுசெய்தார். அவனுக்கு தன் மகளையும் திருமணம் செய்துவைத்தார். தன் கணவருக்கு சோழ நாடு ஆதரவு அளித்திருப்பதை தெரிவித்ததைக் குறிக்கும் வகையில், தக்கோலத்தில் இருந்த ஒரு கோவிலுக்கு அணையா விளக்கு ஒன்றை பரிசளித்தாள் பராந்தகச் சோழனின் மகள். ஆனால், அதே தக்கோலத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் காத்திருந்தன. கி.பி. 939ஆம் ஆண்டு. சோழ தேசத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்த மான்யகேதா நகரம் அன்றைக்கு விழாக் கோலம் சூடியிருந்தது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞனின் தலையில் தங்கக் கிரீடத்தை வைத்து, அவனை ராஷ்டிரகூட நாட்டின் மன்னனாக அறிவித்தார்கள் அந்நாட்டின் தளபதிகள். அந்தப் புதிய மன்னனின் பெயர் மூன்றாம் கிருஷ்ணன். உண்மையில், ராஷ்டிரகூட நாட்டின் சிம்மாசனத்துக்கான வரிசையில் மூன்றாம் கிருஷ்ணன் இருக்கவில்லை. ஆனால், மோசமான ஆட்சியின் காரணமாக கோவிந்தன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட பிறகு, மூன்றாம் கிருஷ்ணின் தந்தை அரசராக்கப்பட்டார். தந்தை மன்னனாக இருந்த காலத்திலேயே, மூன்றாம் கிருஷ்ணன், தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளத் துவங்கினார். தான் அரசனாக முடிசூடிய பிறகு மத்திய இந்தியாவில் பல இடங்களைப் பிடித்த அவர், கங்க நாட்டில் இருந்த அரசனைத் தூக்கியெறிந்துவிட்டு இரண்டாம் பூதுகன் என்பவருக்கு முடிசூடினார். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?10 மார்ச் 2025 இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்நிலையில்தான், தன் மருமகனுக்கு ஆதரவாக கங்க நாட்டின் மீது படையெடுத்தார் பராந்தகச் சோழன். இந்தப் போரில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தப் போரில், முன்னாள் ராஷ்டிரகூட மன்னனான பராந்தகச் சோழனின் மருமகனும் கொல்லப்பட்டான். இதற்குப் பிறகு, பராந்தகச் சோழன் ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுக்கவில்லையென்றாலும், மூன்றாம் கிருஷ்ணன் விடுவதாயில்லை. கி.பி. 949ல் சோழ நாட்டை நோக்கி தன் படைகளைத் திருப்பினான் மூன்றாம் கிருஷ்ணன். ராஷ்டிரகூடர்களை எதிர்கொள்ள தஞ்சையிலிருந்தபடியே மிகப் பெரிய படையை தனது வட எல்லைக்கு அனுப்பினார் பராந்தகச் சோழன். அந்தப் படைகளுக்கு ராஜாதித்தன் தலைமை தாங்கினார். கிட்டத்தட்ட நடு வயதை எட்டியிருந்த ராஜாதித்தன் இன்னமும் பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டிருக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே நல்ல பெயர் இருந்தாலும், இந்தப் போரில் வெற்றிபெற்றால், அடுத்த மன்னர் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த யுத்தத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் சேர நாட்டைச் சேர்ந்த வெள்ளன் குமரன். பட மூலாதாரம்,BJP TAMILNADU/INSTAGRAM அணையா விளக்கும் கிருஷ்ணனின் படைகளும் கிருஷ்ணனின் படைகள் தக்கோலத்தில் வந்து இறங்கின. 11 ஆண்டுகளுக்கு முன்பாக, தன் கணவனுக்காக சோழ இளவரசி எந்த ஊரில் அணையா விளக்கை ஏற்றினாரோ, அதே தக்கோலத்தில் கிருஷ்ணனின் படைகள் நின்றுகொண்டிருந்தன. மிகப் பெரிய படை. கிருஷ்ணனின் யானைக்கு முன்பாக மிகப் பெரிய கொடி மரத்தை பிடித்திருந்தார்கள். அதில் ராஷ்டிரகூடர்களின் கொடிக்குக் கீழே, அவனிடம் தோற்ற மன்னர்களின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. திடீரென துந்துபிகள் முழங்கின. நிலம் அதிர படைகள் இரு திசைகளிலும் முன்னேறின. கத்திகள் மோதும் ஒலியும் அம்புகள் பறக்கும் ஒலியும் அந்த இடத்தை நிறைத்தன. அடுத்த சில விநாடிகளில் மனிதக் கூக்குரல்களும் எழுந்தன. ராஜாதித்தனின் தளபதியான வெள்ளன் குமரன் ஒரு பக்கம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, யானை மீதிருந்து கங்க மன்னன் பூதுகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தார் ராஜாதித்தர். அவருடைய யானைக்கு அருகே பயிற்சி பெற்ற வாள் வீரர்கள், வேல் வீரர்கள் இருந்தனர். அவர்களும் கங்க மன்னனின் யானையை வீழ்த்த முயன்றனர். அதேபோல, எதிர்த் தரப்பும் முயன்று கொண்டிருந்தது. இந்த யுத்தம் மிகக் கொடூரமானதாக இருந்தது. யுத்தத்தின் ஆரம்பத்தில், ராஷ்டிரகூட - கங்கர் கூட்டணியை கிட்டத்தட்ட பின்னுக்குத் தள்ளினார் ராஜாதித்தர். சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூறுவது என்ன?10 மார்ச் 2025 காமராஜர் கட்டிய மலம்புழா அணையிலிருந்து மதுபான தொழிற்சாலைக்கு தண்ணீர்: கேரளாவில் வலுக்கும் போராட்டம் – பிபிசி கள ஆய்வு11 மார்ச் 2025 சோழர்கள் தோல்விக்கு வித்திட்ட திருப்புமுனை நிகழ்வு ஒரு தருணத்தில் திடீரென பூதுகனின் யானை, ராஜாதித்தரின் யானைக்கு அருகில் வந்தது. சட்டென தனது கத்தியை உருவியபடி ராஜாதித்தனின் யானை மீது ஏறிய பூதுகன், ராஜாதித்தனை வீழ்த்தினார். யானை மீதே இறந்து போனார் ராஜாதித்தன். இதற்குப் பிறகு சோழப் படைகள் சிதற ஆரம்பித்தன. வெள்ளன் குமரனுக்கு இந்தச் செய்தி வந்து சேர்ந்த போது, திகைத்துப் போனான். போர்க்களத்தில் எந்த இடத்தில் ராஜாதித்தர் விழுந்து கிடக்கிறார், யார் கொன்றது என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை. ராஜாதித்தன் இறந்த பிறகு, கிருஷ்ணன் தஞ்சையையும் மதுரையையும் சூறையாடினான் என்கிறார், அனிருத் கனிசெட்டி. சில கல்வெட்டுகள் மூன்றாம் கிருஷ்ண தேவனை 'கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்' என குறிப்பிடுகின்றன. கார்காட் செப்பேடுகள் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டை வென்று அதனை தனது தளபதிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் இலங்கை உள்ளிட்ட அரசர்களிடமிருந்து கப்பம் பெற்று, ராமேஸ்வரத்தில் ஒரு வெற்றித் தூணை நிறுவியதாகவும் கூறுகின்றன. ஆனால், அவன் தஞ்சையை வெற்றி கொண்டதாகச் சொல்ல முடியாது என்கிறார், பிற்காலச் சோழர்கள் நூலை எழுதிய சதாசிவ பண்டாரத்தார். தற்போதைய பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகை வீரட்டானத்துக்கு தெற்கே மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, சோழர்களின் கீழிருந்த தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் வென்று, தனது கூட்டாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்ததையே மிகைப்படுத்தி கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கூறியிருக்க வேண்டும் என்கிறார் அவர். ராஜாதித்தர் கொலை குறித்த மாற்று கருத்து ஆனால், ராஜாதித்தர் கொல்லப்பட்டது குறித்து வேறு விதமான கருத்தும் இருக்கிறது. இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பு, ராஜாதித்தரின் மார்பைத் துளைத்ததால் அவர் கொல்லப்பட்டதாக லெய்டன் செப்பேடுகளை அடிப்படையாக வைத்து குறிப்பிடுகிறார் சதாசிவ பண்டாரத்தார். பூதுகனின் செயலைப் பாராட்டி அவனுக்கு மிகப் பெரிய அளவிலான பிரதேசங்களை மூன்றாம் கிருஷ்ணன் வழங்கியதாகவும் (மாண்டியாவுக்கு அருகில் உள்ள) ஆதக்கூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருவெள்ளறை ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் 'ஆனைமேற்றுஞ்சினார்' என ராஜாதித்தனைக் குறிப்பிடுகின்றன. ராஜாதித்தனின் மரணம் முதலாம் பராந்தகச் சோழனைக் கடுமையாக பாதித்தது. அடுத்த ஆண்டே, அதாவது கி.பி. 950ஆம் ஆண்டே தனது இரண்டாவது மகனான கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அதாவது கி.பி. 953- 55க்குள் இறந்தும் போனார் பராந்தகச் சோழன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gm73563evo
  11. படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வெளிப்படுத்தினார். 45 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர். பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதன்போது வெளிப்படுத்தினார். கேள்வி: இந்தியா-இலங்கை மீனவப் பிரச்னை, மிக முக்கியமான பிரச்னையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான பாரிய பொறுப்பு உங்கள் வசம் காணப்படுகிறது. இது தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது? பதில்: இலங்கை இந்தியா இடையிலான மீனவப் பிரச்னை என்பது மிக நீண்ட நாட்களாக புரையோடிப் போயுள்ள பிரச்னையாகக் காணப்படுகின்றது. இதைத் தீர்ப்பதற்காக அல்லது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகக் கடந்த காலங்கள் முழுவதுமே இங்கிருக்கின்ற மீனவர்கள், மீனவ சங்கங்கள், அரசியல்வாதிகள் எல்லோருமே பல்வேறு பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும்கூட எந்தவித இணக்கப்பாடும் இல்லாது தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது. அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதன் காரணமாக இன்று அது திருப்புமுனையாக மாறியுள்ளது என நான் நினைக்கின்றேன். அதற்குக் காரணம் என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பிறகு அது மாத்திரமல்ல, கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கணிசமான மக்கள் வாக்களித்தார்கள். யாழ் மாவட்டத்திலும் எங்களை முதலாவது கட்சியாக மக்கள் உயர்த்தி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. எங்களை நம்பிய மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் மீனவர்களுடைய பிரச்னை தொடர்பில் பல தடவை சொல்லியிருப்பேன். பெருமளவான மீனவர்கள் என்னிடம் சொல்வது ஒன்றுதான். முடியுமானால், இந்த இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துங்கள். தடுத்து நிறுத்த முடியாவிட்டால் நாங்கள் எல்லோருமே இந்தக் கடலில் குதித்து செத்துப் போகின்றோம் என்ற வார்த்தையைப் பல மீனவர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு இன்றைக்கு இது உச்சக்கட்டமான பிரச்னையாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இந்திய அரசிடமும் சரி, தமிழ்நாட்டு அரசிடமும் சரி, நாங்கள் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்வது, 'எங்களுடைய கடற்பரப்பு, இது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட கடல் பரப்பு, இலங்கைக்குச் சொந்தமான கடல். இந்தக் கடல் எல்லையை மீற வேண்டாம், தாண்ட வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்குச் சொல்லும் படி,' நாங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழக மீனவர்கள் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கேரளா கடல் பரப்பிற்குச் செல்லமாட்டார்கள். ஆந்திராவுக்கு செல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால், எங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து முற்று முழுதாக எங்களுடைய மீன்வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, எங்களுடைய கடல் வளங்களை நாசம் செய்துவிட்டு, எங்களுடைய கடல் தொழிலாளர்களின் வலைகள், வளங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு கொள்ளையடித்துக் கொண்டு, போகும் வழியில் நாங்கள் தொப்புல்கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு போகின்றார்கள். இதுதான் இன்றைக்கு இவர்களுடைய நிலைமை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. அதற்கான நடவடிக்கைகள் நகர்வுகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். இலங்கை: 2 வயது குழந்தையை தத்தெடுத்து சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன? இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி? கச்சத்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கூறக்கூடிய ஒரு விடயம், கச்சத்தீவு நிலப்பரப்புக்கு அண்மித்த பகுதியில்தான் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதைத் தாண்டி நாங்கள் செல்வதில்லை எனக் கூறுகின்றார்கள். அப்படி கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடிக்கின்ற அந்த மீனவர்களை இலங்கை கடற்படை ஏன் கைது செய்கின்றது? பதில்: இதற்கான பதிலை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. இலங்கையில், ஒரு சில இந்திய ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். விசேடமாக ஆங்கில பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான செய்திகளை இந்தியாவுக்கு கொண்டு செல்கின்ற வலிமையான பத்திரிகைகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் சென்று கேட்டுப் பார்க்கின்றபோது, மிகத் தெளிவாக அவர்கள் சொல்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. நாங்கள் நேரடியாக வந்து பார்த்திருக்கின்றோம். இந்திய ட்ரோலர்கள் வந்து, எங்களுடை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து எங்களுடைய கடல் பரப்பில் இருந்துகொண்டு எங்கள் மீன் வளங்களையும், கடல் வளங்களையும் கொள்ளையடிப்பதை நாசமாக்குவதையும் நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். அதனால், இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. கச்சத்தீவுக்குக்கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. நாங்கள் ஏதோ இணக்கப்பாட்டிற்கு வந்து கொடுத்தாலே தவிர, அவர்கள் அங்கு வர முடியாது. அவர்களுக்குச் சொந்தமான கடலில் அவர்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும் பரவாயில்லை. அதேபோன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடல் பரப்பில் அவர்கள் மீன் பிடிப்பார்களாக இருந்தால், அதற்கு எங்களுடைய கடற்படை எந்தவிதத்திலும் தலையீடு செய்யாது. அவர்கள் எங்களுடைய கடற்பரப்பு அல்ல, எங்களுடைய எல்லையையும் தாண்டி, எங்களுடைய கரையையும்கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். கச்சத்தீவுக்கு அந்தப் பக்கம் அவர்களின் கடலில் இருந்துகொண்டு மீன்பிடிக்கின்றோம் என்பது பொய்யான விடயம். அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம். கேள்வி: இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்னையாகக் காணப்படுவது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கம் இலங்கையிடம் மீளக் கோரியிருந்தன. இலங்கை அரசாங்கத்திற்குக் கச்சத்தீவை கொடுப்பதற்கான எண்ணம் எதுவும் இருக்கின்றதா? பதில்: கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது ஐக்கிய நாடுகள் சபையில் கடல் எல்லை தொடர்பான விடயத்தில் எங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், கச்சத்தீவை என்றைக்குக் கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்பது வரலாற்று ரீதியில் வேறு விடயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது எங்களுக்குச் சொந்தமானது. ஆனால், எங்கள் எல்லோருக்குமே தெரியும். நேற்று இன்று அல்ல. இந்தியா, தமிழ்நாட்டில் தேர்தல் காலங்கள் வருகின்றபோது காளான் பூத்ததைப் போன்று தொடர்ந்து கச்சத்தீவு பிரச்னையை இவர்கள் கையில் எடுப்பது வழமை. ஆனால், கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. இதை யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை. புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்3 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் யோசனைகள் உள்ளதா? படக்குறிப்பு,"அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்" என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகரன். கேள்வி: கடந்த காலங்களில் நாங்கள் கண்ட ஒரு விடயம். அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் வரக்கூடிய இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. சில வேளையில் அவர்களை விரட்டுவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியா தரப்பினர், தங்களை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சொல்கின்றார்கள். உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் அவர்கள் குற்றசாட்டுகளை முன்வைக்கின்றார்கள். இது உங்களின் அரசாங்கம் அல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளின் காலப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்தன. உங்களின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கும் பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றதா? பதில்: இல்லை. எங்களுடைய அரசாங்கத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களைத் துன்புறுத்துவதோ, அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. ஆனால் உங்களுக்கு தெரியும். ஒரு நாட்டின் கடல் எல்லையை மீறுகின்றபோது அந்தக் கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உண்டு. யுத்த காலத்தில் அது வேறு கதை. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் சம்பங்கள் இடம்பெற்று இருக்கின்றது. ஆனால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு வந்ததற்குப் பிறகு நாங்கள் இந்திய படகுகளைக் கைது செய்வது உண்மை. ஆனால் கடற்படை அவர்களைத் துப்பாக்கி பிரயோகம் செய்து, தடுக்க வேண்டும் என கோரிக்கையோ கட்டளையோ யாரும் விடவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவமொன்று இருக்கின்றது. அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்றால், அந்தச் சம்பவம் இடம்பெற்றபோது எங்களுடைய கடற்படையினர் கைது செய்வது வழமை. பலவந்தமாக அவர்களுடைய படகுகளில் ஏறிக் கைது செய்கின்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கின்றபோது அவர்கள் படகுகளில் ஏற முடியாதவாறு சுற்றி வர ஓயில் போட்டிருப்பார்கள். அதையும் மீறி ஏறினால் சுடுநீரைக் குழாய் மூலம் பாய்ச்சுவார்களாம். கடற்படைக்குத் தீங்கு செய்கின்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்கின்றார்கள். அதையும் மீறி அன்றைய தினம் எங்களுடைய ஒரு சிப்பாய் படகிற்குள் ஏறிவிட்டார். ஏறிய பிறகு அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, அவரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் தலையில் சுட்டிருக்கலாம் அல்லது ஏனைய பாகங்களில் சுட்டிருக்கலாம். ஆனால், முழங்காலுக்குக் கீழேதான் சுடப்பட்டது. மீன்பிடிப் படகுகளில் வருகின்றவர்கள் கூலித் தொழிலாளர்கள் அப்பாவிகள். அங்குள்ள ஒரு சில பெண்கள் கதறி அழுவதையும் நான் பார்த்திருக்கின்றேன். நான் இந்திய மீனவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஒரு மீனவர் என்னிடம் சொன்னார், "ஐயா நான் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். இது எங்களுடைய வாழ்க்கைப் பிரச்னை. இந்த வாழ்க்கைப் பிரச்னைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாக இருந்தால், இந்திய கடற்பரப்பில் மீன்கள் உற்பத்தியாவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது இந்திய கடற்பரப்பின் ஏனைய பகுதிகளில் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்குமானால், சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான சலுகைகளைச் செய்து கொடுத்து இருக்குமானால், நிச்சயமாக நாங்கள் இவ்வாறானதொரு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க மாட்டோம்" என்றார். தங்களுக்கு முடியாத பட்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை எடுப்பதாக அவர்கள் தரப்பில் கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த வகையில் அந்த மீனவர்களை நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதோ அவர்களைத் துன்புறுத்துவதோ அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. அவர்களைச் சிறையில் அடைக்கின்றபோது தங்களுக்குத் தெரியும் என்று கூறி அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். "நாங்கள் சட்டவிரோதம் எனத் தெரிந்து கொண்டுதான் இலங்கை கடல் எல்லையை மீறி இருக்கின்றோம். அதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம்" என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களால் அல்ல. நீதிமன்றத்தால். அந்த நிலைமையின் கீழ் நாங்கள் சொல்கின்றோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல. இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பதுதான். இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்21 பிப்ரவரி 2025 இலங்கை: 2025-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய 10 விடயங்கள்17 பிப்ரவரி 2025 இந்திய பிரதமர் மோதியுடன் மீனவர் பிரச்னை குறித்து பேசப்பட்டதா? படக்குறிப்பு,"இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல, இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பது தான்." கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றார். நரேந்திர மோதியை சந்தித்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்திருந்தார். இப்படியான சந்திப்புகளில் இந்த மீனவப் பிரச்னை தொடர்பாக எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? பதில்: ஒரு விடயம் இருக்கின்றது. இந்திய விஜயத்தின்போது தோழர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மோதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்னை முதன்மையான பிரச்னையாகப் பேசப்படவில்லை. அதைவிட வேறு விதமான தேவைகள் இந்தியாவிற்கு இருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இந்தியாவுக்கும் தெரியும் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், நான் அண்மையில் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது இந்திய அரசாங்கம் 42 லட்சம் ரூபா நட்ட ஈடாக அல்லது மானியமாக வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அங்கிருக்கின்ற மீனவர்கள் தொடர்பான புத்திஜீவிகள் சிலர் என்னிடம் கூறினார்கள். இது ட்ரோல் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை. அப்படி இருந்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தப் பொடம் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக எங்களுடைய கடல் பரப்பை நாசமாக்குகின்றார்கள் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். அதனால், இது சம்பந்தமாக தோழர் அநுர குமாரவோடு வேறு விதமான ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால், இது பேசப்பட்டது. எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் ஒரு தீவு. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தத் தீவு அழகாக இருக்கின்றது. அது தீவாக இருப்பதன் காரணமாக நாங்கள் இறைமையுள்ள நாடு, தன்னாதிக்கம் உள்ள நாடு. மோதியுடனான சந்திப்பின்போது நாங்கள் கூறியுள்ளோம். இது, இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்புகளிலும் நானும்கூட அடித்துக் கூறுகின்ற ஒரு விடயம்தான். இந்திய படகுகள் எங்களுடைய கடல் எல்லையை மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 தமிழ்நாடு, இலங்கை மீனவப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: இந்திய மீனவர்களைக் கைது செய்யும்போது, அவர்களின் உடைமைகள், சொத்துகள் இலங்கையில் அரசு உடையாக்கப் படுகின்றன. அந்த நடவடிக்கை இனி வரும் காலங்களில் எப்படியான விதத்தில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை இந்த அரசாங்கம் எப்படிப் பார்க்கின்றது? பதில்: இந்த நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும். இப்போதும்கூட 124 படகுகள் அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. 24 படகுகள் தொடர்பில் வழக்கு நடக்கின்றது. சுமார் 20 படகுகளை அவர்கள் கொண்டு செல்ல முடியும். அவர்கள் வருவதில்லை. 124 படகுகள் என்பது விளையாட்டு இல்லை. பெரிய படகுகள். லட்சக்கணக்கான பெறுமதிமிக்க படகுகள். இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் இன்றைக்கு அவை அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய படகுகளால் எங்களுடைய கடல்வளம் அழிக்கப்படுகின்றது. அந்தக் கடல் வளத்தை மீள உருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இதை இந்தியாவுக்கும் நாங்கள் அறிவித்து இருக்கின்றோம். இந்திய தூதுவர்களுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்னவென்றால்,வேறு எதுவும் அல்ல. இது எங்களுடைய வீடு.எங்கள் வீட்டில் வேறு ஒருவர் வந்து புகுந்து விளையாடுவாராக இருந்தால், அவருக்குத் தேவையான வகையில் வளங்களை நாசம் செய்வாராக இருந்தால், அதை நாங்கள் கண்மூடிப் பார்த்துக் கொண்டு இருப்போமாக இருந்தால், நாங்கள் ஒன்று குருடர்களாக அல்லது செவிடர்களாக அல்லது மூடர்களாக, ஊமைகளாகவே இருக்க வேண்டும். அல்லது இதைக் கண்டு அஞ்சும் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அப்படியல்ல. இந்திய அரசாங்கத்தை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். இந்திய மீனவர்களை நாங்கள் நேசிக்கின்றோம். மீன்பிடி அமைச்சர் என்ற வகையில் இந்திய மீனவர்கள் மீதான பாசம் நேசம் அதிகரித்திருக்கின்றது. அந்த நேசம் பாசம் எல்லாமே இருக்கின்றது. அதனால், நேசம் பாசம் தொடர வேண்டும் என்றால், அல்லது நீங்கள் சொல்கின்ற அந்தத் தொப்புள் கொடி உறவு உண்மை என்றால் அந்தத் தொப்புள் கொடி உறவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களாகும். கடலையே நம்பி வாழ்கின்றார்கள். கடந்த 30 வருடத்திற்கு மேல் யுத்தம். பாதிக்கப்பட்டது வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாக இன்னமும் தங்களால் எழ முடியவில்லை. தங்களின் வாழ்க்கையில் மேல் எழ முயன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கட்டி எழுப்புகின்ற அந்த வாழ்க்கையில், மண்ணை வாரிப் போடுவது, தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொள்ளும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களே. எங்களுடைய மீனவர்களின் வாழ்க்கையை அவர்களே நாசமாக்கின்றார்கள். எங்களுடைய கடல் வளத்தை நாசமாக்கின்றார்கள். இவ்வாறு கடல் வளம் நாசமாக்கப்படுவது தொடருமாக இருந்தால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களுடைய கடல் பரப்பு பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பாலைவனத்தில் நாளை இந்தியாவுக்கும் இடம் கிடையாது. எங்களுக்கும் இடம் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் அன்றைக்கு எந்த விளையாட்டையும் விளையாட முடியாது. அதனால், நாங்கள் நீங்கள் எல்லோருமே சேர்ந்து இந்தக் கடலைப் பாதுகாக்க வேண்டும். கடல் எங்களுக்குச் சொந்தமானது அல்ல. உங்களுக்கும் சொந்தமானது அல்ல. நாளைய தலைமுறைக்குச் சொந்தமானது. அந்த வகையில்தான் இதற்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வு, இந்திய படகுகள், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு சில படகு உரிமையாளர்கள் எங்களுடைய கடல் எல்லையை மீறாதிருப்பதே இதற்கான நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வு என்று நான் நினைக்கின்றேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8ydyeqkdyo
  12. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2025 | 10:38 AM பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார். போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக டுடேர்டே நடத்­திய போராட்­டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசா­ரணை நடத்­தியது. இந்நிலையிலேயே அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட டுடேர்டே தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளர். கைது சட்டவிரோதமானது எனவும், விமான நிலையத்தில் வழக்கறிஞர்களில் ஒருவரை டுடேர்டேவைச் சந்திக்க பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் டுடெர்ட்டேவின் முன்னாள் சட்ட ஆலோசகர் சால்வடார் பனெலோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208869
  13. கண்ட இடத்தில் கைது செய்ய உத்தரவு கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை இந்த விவகாரம் தொடர்பாக மேலும் அறிக்கையை தாக்கல் செய்து, சந்தேக நபரான ஐ.ஜி.பி-யைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியது. வெலிகம பெலேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன், பத்து இடங்களில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடுதலாக, மேலும் 18 இடங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/315898
  14. டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் நூலின் தமிழாக்கம் தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் “இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க” என்ற நூல் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இதன் போது தலைமை உரையை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் நிகழ்த்தியதோடு நூல் விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணர் நிகழ்த்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் வெளியிட மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் அவர்கள் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார். தொடர்ந்தும் நிகழ்வில் சட்டத்தரணி மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் மற்றும் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் ஆகியோரும் சிறப்புரைகளை வழங்கியிருந்தனர். https://thinakkural.lk/article/315875
  15. 11 MAR, 2025 | 10:49 AM தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அருட்தந்தை மா.சத்திவேல் செவ்வாய்க்கிழமை (11) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவோடு ஆல்ஜசீரா ஊடகவியலாளர் நடாத்திய நேர்காணலைத் தொடர்ந்து தெற்கில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மக்களின் கொந்தளிப்பு விழுந்துள்ளது. படலந்த வதை முகாமை மையமாக வைத்து அதற்கு காரணமான பிரதான சூத்திரதாரியான ரணிலின் "சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை பறிக்க வேண்டும்" எனும் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கையில் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனக் கூறுவதில் எவ்வாறு நம்பிக்கை வைப்பது? ஒரு குற்றவாளி இன்னும் ஒரு குற்றவாளியை விசாரிக்க முடியுமா? அவ்வாறு விசாரித்தாலும் அது அரசியல் நோக்கம் கொண்டதாகவே இருக்கும். தெற்கில் ரணிலிற்கு எதிரான மனநிலை பட்டலந்தை வதைமுகாமை பற்றியதாகவே மட்டும் இருப்பதும் உருவாகி இனவாத தன்மையை வெளிப்படுத்துகின்றது. யுத்த காலப்பகுதி தொடர்பிலும் யுத்த இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவை தொடர்பு கொள்ளும் அப்பேட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கும் பதில் அளிக்க ரணில் தடுமாறியதே நாம் அறிவோம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கரிசனையோ அக்கறையோ இல்லாத மனநிலையையும் படலந்த குற்றங்களை முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் எனக்கொருவது பக்க சார்பானதும் இனி வாத மனநிலையை கொண்டதுமாகும். அல்ஜசீரா ஊடகவியலாளர் தெற்கிலும் வடக்கிலும் நிகழ்த்தப்பட்ட வதைகள், கொடூர கொடூரங்கள் யுத்தக் காலப்பகுதி தொடர்பிலும் குற்றங்கள் கேள்விக்கணைகள் தொடுகின்ற போது தெற்கு சார்ந்து மட்டும் சிந்திப்பதும் தமிழர் தேசத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்த குற்றங்கள் தொடரில் கருத்துக்கள் வெளியிடாது இருப்பது இரண்டு நாடுகள் என்பதையே காட்டி நிற்கின்றது. இரண்டு நாடுகள் என்றாலும் அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரினதும் தார்மீக பொறுப்பாகும். தற்போதும் அதனை காண முடியாமல் இருப்பது இனவாத அவல நிலையையே மீண்டும் உணர்த்துகின்றது. பட்டர் அந்த முகாமோடு தொடர்புபட்டவர்கள் அதற்கு துணை நின்ற பாதுகாப்பு தரப்பினரும் நீதி முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களே அதில் மாற்று கருத்து இல்லை காலம் கடந்தேனும் நீதி நிலைநாட்டப்படல் வேண்டும். உண்மை முழு நாட்டுக்கும் தெரிய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 1988/ 89 காலப்பகுதியில் மாத்தலை பிரதேசத்தில் இராணுவத்திற்கு தலைமை தாங்கிய போது அங்கு கொண்டு புதைக்கப்பட்டவர்களின் சமூக புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கில் மேலும் பல சமூக புதைகுழிகள் தொடர்பான அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இது தொடர்பான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்ட போதும் அது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தியான மக்கள் முன்னணி வாய் திறக்காமல் அமைதி காத்து தற்போது ரணில் மீது விசாரணை எனக் கூறுவது அரசியல் நாடகமாக அமையக்கூடாது. ஊடகவியலாளர் திஸ்சநாயகத்தின் உதவியோடு 1988/ 89 காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளை தூக்கிக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நோக்கி ஓடியதை மறக்க முடியாது. அதே மகிந்த திஸ்ச நாயகத்திற்கு 20 வருட தண்டனையை பெற்றுக் கொடுத்ததும் சர்வதேச தலையீட்டின் காரணமாக அவர் விடுதலை பெற்றுதும் மறக்க முடியாது. படலந்த கொலைகளை காரணம் காட்டி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இது தொடர்பில் சந்திரிக்கா பண்டார நாயக்கரும் மகிந்த ராஜபக்சவும் அமைதி காத்தமை கொலை குற்றவாளிகளை பாதுகாத்ததாகவே கருதப்பட வேண்டும். அவர்களும் ரணிலுக்கு கொலை குற்றவாளிகளே, தண்டிக்கப்பட வேண்டியவர்களே. சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய யுத்தம் அவர்களால் புரியப்பட்ட கொலைகள் படலந்த விடயத்தை விசாரணைக்கு உட்படுத்தாததை மறைத்து விட்டது. தெற்கு இனவாத யுத்தத்தில் மூழ்கி இருந்தது.இனவாதம் தெற்கின் கண்களை மறைத்து நீதியை புதைத்து விட்டது என்றும் கூறலாம். இவ்வாறு மறைத்தவர்களும் பட்டலந்தை கொலையாளிகளே. அல் ஜாசீரா ஊடகவியலாளர் கேள்விகளை கேட்கவில்லையேல் தற்போதும் நீதிக்கான குரல் எழுத்திருக்காது. தமிழர்களை பொறுத்தவரையில் ரணிலுக்கு எதிரான விசாரணை எனக் கூறும் தேசிய மக்கள் சக்தியாகிய மக்கள் விடுதலை முன்னணி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சந்திரிகாவையும் மகிந்தவையும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு பலவந்தமாக தள்ளி தமது முன்னணி உறுப்பினர்களையும் சாதாரண கிராமிய இளைஞர்களையும் இனவாதத்திற்குள் தள்ளி தமிழர்களை இனப் படுகொலை புரிந்த இவர்களும் தண்டனைக்குரியவர்களே. தற்போதைய ஆட்சியாளர் ரணிலுக்கு எதிராக விசாரணை நடத்துவதாக கூறுவது போல் தங்கள் மனசாட்சியை தொட்டு தங்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் மட்டுமே இவர்களின் கிளீன் சிறீலங்காவிற்கு நீதி கிட்டும் இல்லையேல் அதுவும் போலியே. தற்போதைய ஆட்சியாளர் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த யுத்தம் தொடர்பாக உள்ளக விசாரணை என்பதும் சர்வதேசத்தின் எந்த தலையீட்டையும் ஏற்க மாட்டோம் என்று கூறுவதற்கும் காரணம் இவர்கள் மீதும் கொலை குற்றச்சாட்டுகள் விழும் என்பதன் காரணமாகவே. கடந்த ஆட்சியாளர்களை போல பாதுகாப்பு படையினரை பாதுகாக்கும் நோக்கமேயாகும். சர்வதேச விசாரணைக்கு மறுப்பு தெரிவிப்பவர்களும் கொலை குற்றவாளிகளே. இலங்கை வரலாற்றில் எல்லா காலப்பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் எல்லாவற்றுக்கும் இதய சுத்தியோடு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கான தகுதி இலங்கைக்கு இல்லை என்பதே தமிழர்களின் கடந்த கால நிகழ்கால அனுபவமாகும். அதனாலையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் யுத்த குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. இதுவரை காலமும் பட்டலந்த வதைமுகாம் தொடர்பாக அமைதி காத்தவர்கள் எல்லாம் இன்று வாய் திறக்கிறார்கள் எனில் அதற்கு அல் ஜஸீரா சர்வதேச ஊடகமே காரணமாகும். அதைப் போன்று தமிழர்களுக்கு எதிரான இன படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள், கொலையாளிகள், இனவாதிகள் என்பதை உண்மை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/208870
  16. 11 MAR, 2025 | 09:10 AM திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை (11) அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கிறார். கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே இன்று பதவியேற்கின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார். 1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார். துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார். 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் (போர் இடம்பெற்ற காலப்பகுதியில்) மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார். சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேமசங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றினால் அதிகரிக்க முன்னர்) பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகிறார். 2000ம் ஆண்டு பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிவானாக செயற்பட்ட காலத்தில் மிருசுவிலில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப்பேரை சுட்டு படுகொலை செய்த வழக்கின் விசாரணைகளை உரியவகையில் முன்னெடுத்தமைக்காக அந்த வழக்கின் தூக்குத் தண்டனை பெற்ற இராணுவச் சிப்பாயின் மேன்முறையீட்டை விசாரணை செய்து தூக்குத் தண்டனையை உறுதிசெய்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கருக்கு பாராட்டை கோடிட்டுக் காட்டியிருந்தது. https://www.virakesari.lk/article/208861
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை 34 நிமிடங்களுக்கு முன்னர் வட கொரிய அரசாங்கத்துக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் ஹேக்கர்கள், வரலாற்றிலேயே மிக அதிக அளவாக 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) அளவுக்கான கிரிப்டோவை கொள்ளையடித்த நிலையில், அதில் குறைந்தது 300 மில்லியன் டாலர் பணத்தை மீட்க முடியாத வகையில் அவர்கள் மாற்றியுள்ளனர். லாசரஸ் குரூப் எனும் பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ வர்த்தக நிறுவனமான பைபிட்-ஐ (ByBit) ஹேக் செய்து, அதிலிருந்த ஏராளமான கிரிப்டோ கரன்சியை கொள்ளையடித்துள்ளனர். அப்போதிலிருந்து, ஹேக்கர்கள் அந்த கிரிப்டோகரன்சியை பணமாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஹேக்கிங் குழுவினர் இதிலிருந்து கிடைக்கும் பணத்தை வட கொரியாவின் ராணுவ மேம்பாட்டிற்கு திருப்பி விட 24 மணிநேரமும் வேலை செய்வதாக, நிபுணர்கள் கூறுகின்றனர். கிரிப்டோகரன்சி பற்றிய 12 கேள்விகளும் பதில்களும் செயலி மூலம் டிஜிட்டல் கடன் பெறுவோர் ஏமாறாமல் இருக்க அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இறந்தவர்களின் ஜிமெயில், பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் என்ன ஆகும்? டிஜிட்டல் உயில் பற்றி தெரியுமா? செலவிட பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள் - ஆய்வு கூறுவது என்ன? வட கொரியா ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி? "கிரிப்டோ பண திருட்டு விசாரணையை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஹேக்கர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. அவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் நுட்பமான திறன் பெற்றுள்ளனர்" என்கிறார், கிரிப்டோ முதலீட்டு நிறுவனமான எலிப்டிக்கின் இணை நிறுவனர் டாம் ராபின்சன். கிரிப்டோ தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ள மற்றவர்களைக் காட்டிலும், வட கொரியாவைச் சேர்ந்த கும்பல் கிரிப்டோவை பணமாக மாற்றுவதில் திறன் படைத்தது என்கிறார் ராபின்சன். "தானியங்கி சாதனங்கள் மற்றும் பல ஆண்டு அனுபவத்துடன் இதில் இயங்கும் நபர்கள் ஒரு அறை முழுக்க இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். கிரிப்டோவை பணமாக மாற்றும் வேலையில், ஒவ்வொரு நாளும் சில மணிநேரம் தான் அவர்கள் இடைவேளை எடுப்பார்கள் என்றும் அவர்களின் செயல்களிலிருந்து யூகிக்க முடிகிறது. அவர்கள் ஷிஃப்ட் அடிப்படையில் வேலை பார்க்கக் கூடும்." என்கிறார் ராபின்சன். தர்மேந்திர பிரதானின் விமர்சனமும், ஸ்டாலினின் எதிர்வினையும் - நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடந்தது?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?10 மார்ச் 2025 கொள்ளையடிக்கப்பட்ட மொத்த கிரிப்டோ பணத்தில் 20% எப்போதும் மீட்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாக, பைபிட் நிறுவனம் கூறுவது எலிப்டிக்கின் மதிப்பீட்டுடன் ஒத்துப்போகிறது. சமீப ஆண்டுகளில் வட கொரியர்கள் சுமார் ஒரு டஜன் எண்ணிக்கையிலான ஹேக்கிங்களில் ஈடுபட்டு, அந்நாட்டின் ராணுவம் மற்றும் அணுசக்தி வளர்ச்சிக்காக நிதி அளிப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. பைபிட்டின் ஒரு சப்ளையர் நிறுவனத்தை ரகசியமாக ஹேக் செய்து, 4,01,000 ஈதேரியம் கிரிப்டோ நாணயங்களை அனுப்புவதற்கான டிஜிட்டல் முகவரியை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். தங்களுடைய சொந்த டிஜிட்டல் வாலட்டுக்கு பணத்தை மாற்றுவதாக பைபிட் கருதியிருந்த நிலையில், அனைத்தும் ஹேக்கர்கள் வசம் சென்றுவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திருடப்பட்ட கிரிப்டோ கரன்சியை மீட்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பைபிட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பென் ஸோவ் கூறினார் பைபிட் நிறுவனம் கூறுவது என்ன? பைபிட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பென் ஸோவ் தங்களின் வாடிக்கையாளர்களின் நிதி எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை, என தெரிவித்துள்ளார். அந்நிறுவனம் திருடப்பட்ட கிரிப்டோ நாணயங்களை முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற கடன் மூலம் ஈடுகட்டியுள்ளது. எனினும், "லாஸரஸ் நிறுவனத்துக்கு எதிராக போர் தொடுத்துள்ளோம்" என ஸோவ் கூறுகிறார். இதற்காக லாசரஸ் பவுண்டி திட்டம் என்ற ஒன்றை பைபிட் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, திருடப்பட்ட கிரிப்டோ நாணயங்களின் தடத்தை பின் தொடர்ந்து, அதை முடக்குவதற்கு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அனைத்து கிரிப்டோ பரிமாற்றங்களையும் அனைவராலும் அணுகத்தக்க தரவுத் தளத்தில் பார்க்க முடியும், எனவே லாசரஸ் குழுவால் திருடப்பட்ட நாணயங்கள் இடமாற்றம் செய்யப்படும் போது அதை பின்தொடர முடியும். இந்தியா ஆதிக்கம்: சாம்பியன்ஸ் டிராபி நிகழ்வுகள் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா?22 நிமிடங்களுக்கு முன்னர் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான்கள் கூறுவது என்ன?10 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோவை பணமாக மாற்றுவதில் வடகொரியர்கள் வெற்றிகரமாக உள்ளனர். மீட்பதில் சிக்கல் ஏன்? ஹேக்கர்கள் ஒரு முக்கிய கிரிப்டோ சேவையை பயன்படுத்தி, திருடப்பட்ட கிரிப்டோ நாணயங்களை டாலர் போன்ற பணமாக மாற்றும் முயற்சியின் போது, அந்த கிரிப்டோ நாணயங்கள் குற்றப் பின்னணி கொண்டது என நினைத்தால் அந்த நிறுவனம் அதை முடக்க முடியும். திருடப்பட்ட பணத்தில் 40 மில்லியன் டாலர்களை பரிமாற முயன்ற போது வெற்றிகரமாகக் கண்டறிந்து தகுந்த எச்சரிக்கை விடுத்தமைக்காக இதுவரை 20 பேர் 4 மில்லியன் டாலருக்கும் அதிகமான வெகுமதியை பெற்றுள்ளனர். ஆனால், வட கொரியாவின் நிபுணத்துவத்தை வைத்துப் பார்க்கும் போது, மீதமுள்ள பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "வட கொரியா ஒரு குறிப்பிட்ட அமைப்பு மற்றும் மற்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்ளாத பொருளாதார அமைப்பைக் (closed economy) கொண்டது. எனவே, அவர்கள் ஹேக்கிங் மற்றும் சட்ட விரோதமாக பெற்ற பணத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதில் வெற்றிகரமானவர்களாக உள்ளனர். சைபர் மோசடியால் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை அவர்கள் பொருட்படுத்துவதில்லை," என சைபர் பாதுகாப்பு நிறுவனமான செக் பாயிண்ட் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் டோரிட் டோர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரிப்டோ நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவுவதில் தயக்கம் உள்ளது. என்ன பிரச்னை? எல்லா கிரிப்டோ நிறுவனங்களும் மற்ற நிறுவனங்களை போல உதவுவதற்கு தயாராக இல்லாததும் மற்றொரு பிரச்னையாக உள்ளது. கிரிப்டோ பரிமாற்ற நிறுவனமான eXch நிறுவனம் ஹேக்கர்கள் கிரிப்டோ நாணயங்களை பணமாக மாற்றுவதை தடுத்து நிறுத்தவில்லை என, பைபிட் உட்பட சில நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன. eXch நிறுவனத்தின் உரிமையாளராக கருதப்படும் ஜோஹன் ராபர்ட்ஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்து மின்னஞ்சல் மூலம் பதிலளித்தார். ஆரம்பத்தில் நிதி பரிமாற்றத்தை தடுத்து நிறுத்தவில்லை என ஒப்புக்கொண்ட அவர், பைபிட் நிறுவனத்துடன் நீண்ட காலமாக சச்சரவு இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த கிரிப்டோ நாணயங்கள் ஹேக்கிங் மூலம் பெறப்பட்டவை என்பது குறித்து தங்கள் குழுவினர் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார். தாங்கள் தற்போது ஒத்துழைப்பதாகக் கூறும் அவர், ஆனால் பிரதான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் போது, அவர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாக்கத் தவறுவதன் மூலம் துரோகம் செய்வதாகக குற்றம் சாட்டினார். காமராஜர் கட்டிய மலம்புழா அணையிலிருந்து மதுபான தொழிற்சாலைக்கு தண்ணீர்: கேரளாவில் வலுக்கும் போராட்டம் – பிபிசி கள ஆய்வு3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?9 மார்ச் 2025 பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு,பார்க் ஜின் ஹ்யோக் என்பவர் லாசரஸ் குழுவை சேர்ந்த ஒரு ஹேக்கர் என குற்றம் சாட்டப்படுகிறது முந்தைய மோசடிகள் லாசரஸ் குழுவுக்குப் பின்னால் தாங்கள் இருப்பதாக வட கொரியா எப்போதும் ஒத்துக்கொண்டதில்லை. ஆனால், உலகிலேயே நிதி ஆதாரத்துக்கு தங்களின் ஹேக்கிங் திறனை பயன்படுத்தும் ஒரே நாடு வட கொரியா மட்டுமே என கருதப்படுகிறது. முன்னதாக லாசரஸ் குழு வங்கிகளை குறிவைத்து தாக்கியது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரிப்டோ நாணய நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. சட்ட விரோதமாக பெறப்பட்ட கிரிப்டோ நாணயங்களை சட்டப்பூர்வ பணமாக மாற்றுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் இந்த துறையில் குறைவாகவே உள்ளன. வட கொரியாவுடன் தொடர்புபடுத்தப்படும் சமீபத்திய ஹேக்கிங் நிகழ்வுகள் 2019ல் அப்பிட்-ஐ (UpBit) ஹேக் செய்து 41 மில்லியன் டாலர் கிரிப்டோ நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன குகாயின் (KuCoin) எனப்படும் நிறுவனத்திலிருந்து 273 மில்லியன் டாலர் கிரிப்டோ நாணயங்கள் திருட்டு (பெருமளவு பணம் மீட்கப்பட்டது) 2022-ல் ரோனின் பிரிட்ஜ் தாக்குதல் மூலம் 600 மில்லியன் டாலர் கிரிப்டோ நாணயங்களை ஹேக் செய்து திருடினர் ஆட்டோமிக் வாலட்-ஐ 2023ல் ஹேக் செய்து 100 மில்லியன் டாலர் கிரிப்டோ நாணயங்கள் திருட்டு லாசரஸ் குழுவுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்படும் வட கொரியர்களை கடந்த 2020-ஆம் ஆண்டு அதிகம் தேடப்படும் சைபர் குற்றவாளிகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. தங்கள் நாட்டை விட்டு வெளியேறாத வரை இத்தகைய தனிநபர்களை கைது செய்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74kj7d1k4vo
  18. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பை விரைவில் வழங்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதிவாதிகளிடம் விளக்கங்களை கோராமல் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே புதிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு என்ன? இந்த வழக்கு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமல் கடமைகளை தவறவிட்டதன் ஊடாக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழான குற்றங்களை இழைத்துள்ளமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும். இந்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழக்கின் பிரதிவாதிகளை விசாரணைகளுக்கு அழைக்காது 2022 பெப்ரவரி 18ஆம் திகதி பிரதிவாதிகளை விடுவித்து தீர்ப்பளித்தது. நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மொஹமட் இசர்டீன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த தீர்ப்பை வழங்கியது. மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தின் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் அதனை வலுவிழக்கச் செய்யுமாறும் கோரி சட்ட மாஅதிபரால் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மேன்முறையீட்டை பரிசீலித்த உயர் நீதிமன்றம் பிரதிவாதிகளை அழைக்காமல் அவர்களை விடுவித்தமையானது சட்டத்திற்கு முரணான விடயம் என உத்தரவிட்டது. வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றின் நீதிபதிகள் குழாத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுவிக்குமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு உயர் நீதிமன்றத்தினால் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/315832
  19. பட்டலந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்பித்து அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - குமார் குணரத்னம் Published By: VISHNU 11 MAR, 2025 | 03:46 AM தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதுடன் அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் ஊடகவியலாளர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுப்பிய போது அவர் சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வில்லை எனக் கூறினார்.எனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத அறிக்கையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.அத்துடன் இந்த கருத்துக்களை தொடர்ந்து தற்போது பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்க என்பவரின் அரசியலை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் 1977 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட பொருளதாரா திட்டம் முதல் அதனுடன் தொடர்புடையதாக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் அதேபோன்று ஜனநாயகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒடுக்குமுறைகள் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் முன்னெடுக்கப்பட்ட சமூக விரோத செயற்பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கவே அவர் செயற்பட்டுள்ளார். முதலாளித்துவ அரசாங்கம் எப்போதும் சமூகத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களின் நன்மைக்காக மாத்திரம் தீர்மானங்களை முன்னெடுத்த போதிலும் அப்பாவி மக்கள் சார்பில் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதேபோன்று 2022 ஆம் ஆண்டு நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கடுத்திருந்த போது அப்போது ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம் அதானி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டமை மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஆட்சி செய்த முறை பற்றி நாம் நன்கறிவோம். எனவே தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பட்டலந்த சித்திரவதை போன்று பல பகுதிகளில் குற்றச்செயல்கள் இடம்பெற்றிருக்கலாம்.எனவே இது போன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208855
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேத்யூ ஹென்றி பதவி, பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் 10 மார்ச் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கிய இடத்திலிருந்து 1,000 கி.மீ தள்ளியும், முடிந்திருக்க வேண்டிய இடத்திலிருந்து 2,000 கி.மீ அப்பாலும் நிறைவடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி உலகின் முன்னணி 'வெள்ளை பந்து' அணியாக அதன் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு ஆமதாபாத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இந்திய அணி அனுபவித்த வேதனையைக் குறைத்துள்ளது. துபை நகரில் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்கள் இதனை கொண்டாடினாலும், இந்த தொடரில் நடந்த சில தவிர்க்க இயலாத விஷயங்கள் சர்வதேச கிரிக்கெட் வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் வெற்றிக் களிப்பு - புகைப்படத் தொகுப்பு கோலி, ரோஹித் இருவரும் அடுத்த உலகக்கோப்பை வரை அணியில் நீடிக்க முடியுமா? முன்னுள்ள சவால்கள் என்ன? இந்தியா சாம்பியன்: பரபரப்பான இறுதிப் போட்டியின் திருப்புமுனை தருணங்களும் வரலாற்றுச் சாதனைகளும் மறக்க முடியாத 2000: பழைய கணக்கை தீர்க்குமா இந்தியா? இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் இன்று மோதல் இந்த தொடரில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆடிய போட்டிகள் ஒரு கண்காட்சி போல இருந்தன. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெற்றன. ஒரே இடத்தில் ஆடிய, இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் அந்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்திய வீரர்களின் பெயர் பொறித்த ஆடை அணிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெற்றன. ஹர்திக் பாண்டியா துபையில் இருந்த போது "குங்-ஃபூ பாண்ட்-யா!" என்று காதைப் பிளக்கும் கூச்சலுடன் களம் கண்டார். இதே போன்று லாகூரில் ஓர் அறிமுகம் அவருக்கு கிடைத்திருக்குமா? துரதிர்ஷ்டவசமாக, நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். இது தெளிவுபடுத்தப்பட வேண்டும், இங்கே இதற்கு எளிதான பதில்கள் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவுக்கு கிடைத்த சாதகம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்யப்போவதில்லை என்று இந்தியா அறிவித்தது. அப்போது முதலே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா இல்லாமல் போட்டியை நடத்துவதா? ஐ.சி.சி. வருமானத்தில் இந்திய சந்தை கணிசமான பகுதியை கொண்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள பாகிஸ்தானிடமிருந்து கடைசி நிமிடத்தில் அதனைப் பறிப்பதா? அதுவும் சாத்தியம் இல்லை. இதன் விளைவாக இந்தியா ஒரே ஹோட்டலில் தங்கியிருந்து ஒரே நகரத்தில் தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடியது. இந்திய அணிக்கு கிடைத்த இந்த சாதகங்கள் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. நியூசிலாந்து அணி 7,000 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் ஓர் இந்திய வீரர் அதிகபட்சம் பயணிக்க வேண்டிய தூரம் வெகு சொற்பமே. அதாவது நடந்தே கடக்க வேண்டிய தூரம் மட்டுமே. உணவில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் பாதுகாப்பானதா?9 மார்ச் 2025 மாடுகள் எவ்வாறு தகவல் பரிமாறிக் கொள்கின்றன? மனிதன் புரிந்து கொண்டால் என்ன மாற்றம் நிகழும்?9 மார்ச் 2025 ஒரே மைதானத்தில் விளையாடியது "நிச்சயமாக" தங்களுக்கு உதவியது என்று அரையிறுதிக்குப் பிறகு முகமது ஷமி கூறும் வரை, இந்தியா அதனை மறுத்தே வந்தது. இந்தியாவுக்கு சாதகமான சூழல் உள்ளதாக கூறுபவர்கள் இன்னும் "வளர வேண்டும்" என்றே இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதற்கு முன்பு வரை கூறி வந்தார். தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை ஆதரிக்கப் போவதாக கூறும் வரை மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த விவகாரத்தில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுங்கள், இந்தியா வைத்திருக்கும் அதிகாரம் தெரியும். இதுதான் சர்வதேச கிரிக்கெட் செல்லும் பாதை. 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் கடைசி நிமிடத்தில் அரையிறுதி ஆடுகளம் மாற்றப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. எட்டு மாதங்களுக்கு முன்பு, கயானாவில் நடந்த டி20 அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை தோற்கடித்தது. ரோஹித் சர்மா மட்டுமே புறப்படுவதற்கு முன்பு தனது அணியின் போட்டிகள் எங்கு விளையாடப்படும் என்பதை அறிந்திருந்தார். இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி நேரலையை கண்டு களிக்க ஏற்றவாறு காலை 10:30 மணிக்கு போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை இந்தியாவின் கடைசி லீக் போட்டி ஒரு ஞாயிற்றுக்கிழமை விளையாடப்பட்டது. அது இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகமாக உள்ள நேரம். இதனால் தென்னாப்பிரிக்கா துபைக்கு பறந்து வர வேண்டியிருந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த பாகிஸ்தானுக்குத் மீண்டும் திரும்ப வேண்டிய கேலிக்கூத்தான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு போட்டி நடத்துவதால், அந்த போட்டியை நடத்தும் நாட்டுக்கு சாதகமான விசயங்கள் கிடைக்கும் என்பது இயல்பு. ஆனால் உங்கள் எதிராளிகள் நடத்தும் ஒரு தொடரிலும் அதேபோன்ற நன்மைகளை நீங்கள் பெறுவது முற்றிலும் மாறுபட்டது. நிச்சயமாக, இது எதுவும் இந்திய வீரர்களின் தவறு அல்ல. பாகிஸ்தான் ஆட்சியாளரை அகற்ற போராடி இந்தியா வந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் - நேரு கூறியது என்ன?9 மார்ச் 2025 'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?9 மார்ச் 2025 இந்த வாரம் இறுதிப் போட்டிக்கு முந்தைய கேப்டன்களின் நேர்காணலுக்கு துணை கேப்டன் சுப்மன் கில்லை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்திய ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் 50 ஓவர் விளையாட்டுகளில் சிறந்த வீரர்கள். நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கான ரன்னை எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் வெகு தொலைவில் இல்லை. வாய்ப்பு வழங்கப்பட்டால் கில்லும் அந்த இடத்ற்கு வரக்கூடும். இந்த போட்டி எங்கு விளையாடப்பட்டிருந்தாலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்ற அளவுக்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும்பாலும் மறந்தே போய்விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஐசிசி போட்டிகள் சலிப்பு தருகின்றனவா ? பணம் கொழிக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு எதிர்வினையாக ஐசிசி ஆண்கள் போட்டிகள் கருதப்படுகின்றன. வருகிற 2031-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் டிராபி, டி20 அல்லது 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறும் என்கிற அளவுக்கு ஐசிசி போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆனால், இந்த போட்டிகள் அடிக்கடி நடத்தப்படுவதாலும், ஒரே மாதிரியான வடிவத்தைப் பின்பற்றுவதாலும், சலிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் யாரும் போட்டிக்கு வரவில்லை. இங்கிலாந்து அணி தொடரில் இருந்து மோசமாக வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மற்ற நாடுகளில்? இந்த போட்டியைப் பற்றி குடும்ப வாட்ஸ்அப் குழுவில் வந்திருக்கும் தகவல்களைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த போட்டியின் ஏற்பாடு குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. போட்டி தொடங்குவதற்கு 57 நாட்களுக்கு முன்புதான் அதன் அட்டவணை உறுதிப்படுத்தப்பட்டது. கயானா அரையிறுதியை எந்த ஆங்கில ஊடகங்களாலும் பார்க்க முடியவில்லை. கடைசி நேரத்தில் விமான பயணங்களை முடிவு செய்ய இயலவில்லை, விமானங்கள் குறைவாக இருந்தன. பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க அதிகாரிகளால் பயணம் செய்வது குறித்து எச்சரிக்கப்பட்ட நாடுகளில் கயானாவும் ஒன்றாகும். கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன. சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி?9 மார்ச் 2025 இந்திய விடுதலைக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் இங்கே அமலில் இருந்த 'முண்டச்சி வரி' பற்றி தெரியுமா?8 மார்ச் 2025 அடுத்தடுத்த போட்டிகளிலும் குழப்பங்கள் தொடரும் அடுத்த இரண்டு போட்டிகளில் - இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2026 -ல் நடைபெறும் ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விஷயங்கள் எளிதாக இருக்காது. இரண்டுமே இந்தியாவில் நடைபெறும். டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுடன் இலங்கையும் கூட்டாக நடத்துகிறது. அதாவது பாகிஸ்தான் தகுதி பெற்றால் தற்போது இந்திய அணிக்கு கிடைத்த அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும். இந்தியாவுக்கு இருந்த அதே நன்மைகள் பாகிஸ்தானுக்கு கிடைக்கலாம். ஆனால், இரு இடங்கள் இறுதிப் போட்டிக்காக தேவைப்படுவது போன்ற நிச்சயமற்ற தன்மைகள் எதுவும் அந்த தொடரிலும் மாற போவதில்லை. இதன் அர்த்தம் நம்பிக்கை போய்விட்டது என்பதல்ல. சர்வதேச கிரிக்கெட்டிற்கான அச்சுறுத்தல் என்ன? இரண்டு வாஷ் அவுட்கள் மற்றும் பல ஒருதலைப்பட்ச ஆட்டங்கள் இருந்த போதிலும், சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் வலுவாக உள்ளது என்பதை சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் நிரூபித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸின் சதம் எப்போதும் நிலைத்து நிற்கும். ரவீந்திரா விளையாட்டின் அடுத்த நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்து வருகிறார். ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஒமர்சாய் விரும்பக்கூடிய வீரர்களில் ஒருவராக உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் தரம் அல்ல, மாறாக அக்கறையின்மைதான். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gepllrgp5o
  21. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளையாக ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஒரு புறநடை என்று கூடச் சொல்லலாம். யாரும் எதிர்பார்க்காத வகையில் – எதிர்வு கூறல்களுக்கு அப்பாற்பட்டு இந்த முடிவு அமைந்திருந்தது. போர் தின்ற மண்ணில், தமிழ்த் தேசியத்தின் தடத்தில் வீறுகொண்டெழுந்த தேசத்தில் திருப்புமுனையாக நடந்தேறிய இந்த வரலாற்று வெற்றியை தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசியபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த கட்சிகளின் சுயநல அரசியல் போக்கின் மீதான வெறுப்பும், அனுரகுமார திசாநாயக்கா என்ற தனிமனித ஆளுமை மீதான ஈர்ப்புமே வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் மீது தமிழ் மக்கள் “குருட்டு”த்தனமான நம்பிக்கை வைப்பதற்குப் போதுமான காரணிகளாக இருந்தன. தேசிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்கள் எவரும் தமிழ் மக்களுக்காக எதையும் சாதித்தவர்களல்லர். தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர்கள் கூட இல்லை. ஆனாலும், தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தங்கள் சுயலாபப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கோடு, “கண்ணை மூடிக் கொண்டு” கட்சிக்குப் போட்ட வாக்குகள் யார், யாரையோ எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கியிருக்கின்றன. ஆனாலும், இந்த உண்மை தெரியாமல் தேசிய மக்கள் சக்தி இப்போது வடக்கில் நடந்து கொள்ளும் விதம், தங்கள் சொந்தக் கட்சிகள் மீது வைத்திருந்த வெறுப்பை விட பல மடக்கு வெறுப்பை ஏற்படுத்தி வருகின்றது என்ற கசப்பான உண்மையை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். “ஒரு ஐந்து வருடத்துக்குத் தானே?” என்று தங்கள் சொந்த அபிலாசைகளை அடகுவைத்து மக்கள் கொடுத்த ஆணையைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில், சொந்தக் காசில் சூனியம் வைப்பதைப் போன்று இந்த வெற்றியை தாரைவார்க்கும் வகையில் அந்தக் கட்சி செயற்படுகின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கின்றோம் என்ற பெயரில் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுத்தவர்களால் திட்டமிட்டு தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி சரிவடையச் செய்யப்படுகின்றதா? போன்ற பல சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்லிதல் வடக்கு மாகாணத்தின் யாழ்.தேர்தல் மாவட்டத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் மூன்றாம் இடத்தையே அநுரகுமார திஸாநாயக்கவால் பெற்றுக் கொள்ள முடிந்தது. அதுவும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வடக்கில் தோல்வியை எதிர்கொண்டிருந்தார். ஆனால் இரண்டு மாதங்களுக்குள் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதுவும், தமிழ்த் தேசியக் கட்சிகளை எல்லாம் தூக்கி விழுங்கி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டது. இதற்கு காரணம் என்ன? திடீர் வாக்கு வங்கி அதிகரிப்பின் பின்னணி என்ன? என்பது தொடர்பில் ஆராய்வது காலத்தின் தேவையாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா மீதான நம்பிக்கை தமிழ் மக்களிடத்தில் துளிர்விட்டிருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி அநுர மேற்கொண்டிருந்தார். வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டார். மிகச் சிறந்த – நேர்மையான நிர்வாகி என்று பெயர் எடுத்த வேதநாயகன், சலுகைகளுக்காக விலைபோகாத ஒருவர். அத்துடன் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி பாரம்பரியத்தில் வந்த ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரை வடக்கின் ஆளுநராக ஜனாதிபதி அநுரகுமார நியமித்ததன் மூலம், வடக்கு மக்களின் மனங்களில் தன் மீதான நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தினார். இதனை,யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா கூட வேதநாயகனை ஆளுநராக நியமித்ததன் மூலம் தேசிய மக்கள் சக்தி வடக்கில் தனது வாக்கு வங்கியை சடுதியாக அதிகரித்தது என்று பலமுறை தனது மேடைப் பேச்சுகளில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கட்சிகள் நவக்கிரகங்கள் போல ஆளுக்கொரு திசையில் நின்றமையும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் வாக்கு வங்கிச் சரிவில் செல்வாக்குச் செலுத்தியது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கைவிட்டு அரசியல் தீர்வு என்ற ஒற்றைப் புள்ளியை மையப்படுத்தி தங்கள் பரப்புரை வியூகங்களை வகுக்க, அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி பேசிய மருத்துவர் அர்ச்சுனாவும், தேசிய மக்கள் சக்தியினரும் இலகுவாக வெற்றியைப் பெற்றுக் கொண்டனர். சமகாலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய சிறீதரன் – சுமந்திரன் பனிப்போரும் தாக்கத்தை செலுத்தியதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதற்கு மேலதிகமாக, கடந்த காலங்களில் சிங்களத் தேசியக் கட்சிகளின் முகவர்களாக களமிறங்கிய டக்ளஸ், அங்கஜன் போன்றவர்களை ஆதரித்த தமிழ் மக்களும் இம்முறை தேசிய மக்கள் சக்தியினரை – ஆளும் கட்சியினரை நேரடியாக ஆதரிக்க முடிவு செய்தமையும் செல்வாக்கைச் செலுத்தியது எனலாம். இப்படிப் பல காரணங்கள் ஒன்று சேர்ந்து முகம் அறியாத தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை நாடாளுமன்றம் அனுப்பியது. இந்த வெற்றிகளின் பின்னால் மறைமுக காரணி ஒன்றும் இழையோடுகின்றது. அதாவது வடக்கின் அரசாங்க உத்தியோகத்தர்களின் தீர்மானம், மக்களிடத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியது. எந்தவொரு தேர்தலிலும், அரசாங்கப் பணியாளர்கள் யாரை ஆதரிக்கின்றனரோ அதே தரப்பையே மக்கள் ஆதரித்திருந்தனர் என்பது வரலாறு. வடக்கில் நடந்த எந்தத் தேர்தலும் இதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. ஊழல் – அரசியல் தலையீடு – தவறிழைத்த அதிகாரிகளுக்கான பதவி உயர்வு என கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அவர்களுக்கு ‘கூஜா’ தூக்கியவர்கள் மீதான வெறுப்புணர்வால், கணிசமான அரசாங்க அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தது மாத்திரமல்லாது, மக்களையும் ஆதரிக்கத் தூண்டியுமிருந்தனர். வெற்றி பெறுவதைவிட அதை தக்க வைப்பது முக்கியம். இந்த இடத்தில்தான் தேசிய மக்கள் சக்தி சறுகத் தொடங்குகின்றதா என்று எண்ணத் தோன்றுகின்றது. முன்னொருபோதும் சாத்தியப்படாத வெற்றியை வடக்கு மக்கள் வழங்கியபோதும், அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்னடிப்பதானது, வெற்றியை கொடுத்த வேகத்தில் மக்கள் பிடுங்கி எடுத்துவிடுவார்கள் என்ற அபாயத்தை உணராத செயற்பாடாகவே இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வலி. வடக்கில் மக்களின் கோரிக்கையாக இருந்த 1.5 கிலோ மீற்றர் நீளமான பாதை பயன்பாட்டுக்கு மாத்திரம் விடுவிக்கப்பட்டது. இது மக்களிடத்தில் வரவேற்பை பெற்றது. எதிர்காலத்தில் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் நிலையில் ஒரு துரும்புகூட நகராத நிலையில், மற்றைய சிங்கள ஆட்சியாளர்களைப் போல் தான் தேசிய மக்கள் சக்தியினரும் என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாக, தங்கள் பதவிகளுக்காக சிறிதர் தியேட்டருக்கும், நல்லூர் கோவில் பின்வீதிக்கும் அலைந்து திரிந்தவர்கள், அவர்களுக்காக எதையும் செய்தவர்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியினருடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். தியேட்டரிலிருந்தும், நல்லூர் கோவில் பின் வீதியிலிருந்தும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலுக்கு உதவிகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களை நடுத்தெருவில் விட்ட உயர் அரச அதிகாரிகளும் தேசிய மக்கள் சக்தியினரின் வாலைப் பிடித்துக்கொண்டு இப்போது தொங்குகின்றனர். தேசிய மக்கள் சக்திக்கு இது தெரியாது விட்டாலும், மக்களுக்கு இப்படியானவர்கள் யார் என்பது தெரியும். காலத்துக்குக் காலம் கட்சி தாவும் நேர்மையற்ற இத்தகைய நபர்கள் மீதான அதிருப்தி தான் தேசிய மக்கள் சக்தி மீதான விருப்பாக மாறியிருந்தது. ஏனெனில், இப்படியானவர்கள் தங்கள் வயிற்றை வளர்ப்பதையும், தாங்கள் அதிகாரத்தை வைத்திருக்கவுமே விரும்பினர். அவர்கள் எத்தகைய பிழையான விடயங்களையும் செய்யத் தயாராக இருந்தனர். குறிப்பாக அரச நிர்வாகத்தில் வடக்கில் இன்னமும் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் மாவட்ட உயர்நிலை மற்றும் இரண்டாம் நிலைகளில் உள்ள அதிகாரிகள் தொடர்பில் மக்களிடத்தே நிறைய அதிருப்திகள் வெளிப்படையாகவே உண்டு. கடந்த கால ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, காணிகள் பிடித்தமை, அரச அபிவிருத்தித் திட்டங்களில் தரகுப் பணம் பெற்றமை, மக்களுக்கான நிவாரணங்களில் ‘டீல்’ பேசி கோடிக்கணக்கான பணம் சுருட்டியமை என்று இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீண்டு செல்கிறது. இப்படியாக ஊழல் செய்தவர்களும், மோசடி செய்தவர்களும் இன்னமும் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகக் குறைந்தது அவர்களுக்கு எதிராக விசாரணைகளும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒட்டி உறவாடுகின்றனர். தேசிய மக்கள் சக்தியினரும் அவர்களை அரவணைத்துச் செல்கின்றனர் என்பதை நேரடியாகக் காணும் போது மக்களுக்குக் கட்சியின் மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளது. இது வடக்கில் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்த அரசாங்கப் பணியாளர்களிடத்தில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. விரக்திக்கு அப்பால் அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டும் என நேர்மையாக விரும்பிய – அதற்காக மக்களை ஆதரிக்கத் தூண்டிய அரசாங்க அதிகாரிகள் இன்று தேசிய மக்கள் சக்தியால் கைவிடப்பட்டுள்ளனர் என்று எண்ணுகின்றனர். தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடந்த தேர்தல்களின் போது பணியாற்றியவர்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் தூக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த அரசாங்கப் பணியாளர்கள் எதிர்வரும் தேர்தல்களில், ‘யூ- ரேன்’ எடுப்பதற்கே நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. அது நிச்சயமாக மக்களிடத்திலும் எதிரொலிக்கும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தியோடு தற்போதுள்ள எந்தவொரு அரசாங்க உயர் அதிகாரிக்கும், மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை. மாறாக மக்களிடத்தே அதிருப்திதான் உண்டு. அப்படிப்பட்டவர்களை கூட வைத்துக்கொண்டு உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வது என்பது தேசிய மக்கள் சக்திக்கு விஷப் பரீட்சைதான். ஒட்டுமொத்த நாடும் தேசிய மக்கள் சக்தியோடு நிற்கின்ற தோற்றம் உருவாகுவதற்கு வடக்கு மக்களே பிரதான காரணம். கடந்த காலத் தேர்தல்களிலும் தெற்கு மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளோடு நின்றாலும் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு நின்றிருந்தனர். அந்த வரைபடத்தை மாற்றியமைத்த தேசிய மக்கள் சக்தி சிறிது காலத்திலேயே அதை இழக்கப் போகின்றதா? இல்லை ‘கிளீன் சிறிலங்காவின்’ கீழ் தம்மோடு ஒட்டியுள்ள ‘ஒட்டுண்ணிகளை’ கழற்றிவிட்டு வெற்றியைத் தொடர்ந்தும் தக்க வைக்கப்போகின்றதா?. வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருப்போம். https://thinakkural.lk/article/315834
  22. 10 MAR, 2025 | 08:27 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் போன்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்தப் பாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ளதா அல்லது மாகாண சபையின் கீழ் உள்ளதா என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வரவு - செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். கல்வி மறுசீரமைப்பை ஆசிரியர் பயிற்சி, பௌதீக வளங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார். அதனையும் வரவேற்கின்றோம். கல்வி மறுசீரமைப்பின்போது கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் 9ஆம் தரத்துக்காக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்தப்போவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். அவ்வாறு அந்த வகுப்புக்கு புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்துவதென்றால் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்? அது நீக்கப்படுமா, அதேபோன்று சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் என்பதனையும் கூறுங்கள். அது நல்ல விடயமென்றால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம். இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபைகளின் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தில் இருந்தாலும் அந்த தீர்மானம் தொடர்பில் நான் திருப்தியாக இருக்கவில்லை. அந்த பாடசாலையின் பெயர் பலகைக்கு 10 இலட்சம் ரூபாவும் இணையத்தளத்துக்கு 10 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. ஆனால், ஆசிரியர்களும் பிள்ளைகளும் தேசிய பாடசாலை என்ற மகிழ்ச்சியில் இருந்ததுடன், இப்போதும் தேசிய பாடசாலை என்றே கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் போகின்றன. ஆனால், அவ்வாறு பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த பெயர் நீக்கப்பட்டது. இப்போது அந்தப் பாடசாலைகள் தாய், தந்தை இல்லாத பாடசாலைகள் போன்று ஆகிவிட்டது. இப்போது யார் இதற்கு பொறுப்பு என்று தெரியாமல் இருக்கிறது. இதனால் இந்த பாடசாலைகள் தொடர்பில் சரியான முறைமையொன்றை தயாரிக்குமாறு கோருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/208837
  23. படக்குறிப்பு,நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கடல் பகுதியில் திங்கட் கிழமை காலையில் இரண்டு கப்பல்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டன. இரண்டு கப்பல்களும் கிழக்கு யார்க்ஷர் கடற்கரையில், பிரிட்டனில் உள்ள கிரிம்ஸ்பீ பகுதிக்கு அருகே மோதிக் கொண்டன. ஸ்டெனா இம்மாகுலேட் கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்ற போது, வட கடலில் சோலாங் சரக்கு கப்பலால் மோதி விபத்துக்கு விபத்துக்குள்ளானது. எண்ணெய் எடுத்துச்சென்ற கப்பல் மற்றும், வேதிப்பொருட்களுடன் சென்ற சோலாங் என இரண்டிலும் ஏற்பட்ட தீ இரண்டாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது. பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல் நங்கூரமிட்டிருந்த போது, போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சோலாங் எனப்படும் கன்டேய்னர் கப்பலால் மோதப்பட்டதாகத் தெரிகிறது. அமெரிக்க நிறுவனமான க்ரோவ்லி, ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலின் ஆபரேட்டர் மற்றும் இணை உரிமையாளர் ஆகும். ஃப்ளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த விபத்தில் தீ பற்றி எரிந்தது மற்றும் ஜெட் எரிபொருள் கப்பலில் இருந்து வெளியானது. கப்பலில் பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்தவர்கள் அதனை விட்டு வெளியேறினர். தற்போது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் கணக்கிடப்பட்டுள்ளனர்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Play video, "வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ", கால அளவு 0,32 00:32 காணொளிக் குறிப்பு,வட கடலில் இரு கப்பல்கள் மோதல் - கடும் தீ இரு கப்பல்களில் இருந்த 36 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் போக்குவரத்து செயலாளரிடம் பேசிய பிறகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கிரஹாம் ஸ்டூவர்ட் தெரிவித்தார். இப்போது அனைவரும் கரைக்கு வந்துவிட்டனர். ஆனால் இதனால் ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் அவர் கூறினார். கப்பலில் இருந்தவர்களைத் தேடும் பணி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஒருவரை காணவில்லை என்பதை எச்.எம். கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது. காணாமல் போனவர் சோலாங் கப்பலின் ஊழியர் ஆவார். ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்த ஜெட் எரிபொருள் அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமானது. அமெரிக்க அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 10 எண்ணெய் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். மோதல் சமயங்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லவும், தேசிய அவரச காலங்களில் எரிபொருட்கள் கொண்டு செல்லவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது. டேங்கரில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும், பெரிய அளவில் தீ பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் காட்டுகின்றன. அதிவேகமாக வந்து மோதிய கப்பல் இம்மாகுலேட் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பிபிசியிடம் சிய போது, சோலாங் கப்பல் சுமார் 16 நாட்ஸ் வேகத்தில் வந்து மோதியதாகவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் கைகளில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு உயிர் காக்கும் படகுகளில் ஏறி தப்பியதாகவும் கூறினார். சுற்றுச்சூழலில் இந்த மோதல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இம்மாகுலேட் கப்பலில் இருந்து ஜெட் எரிபொருள் கடலில் கலந்திருப்பதாகவும் ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. படக்குறிப்பு,கப்பல்கள் மோதல் நிகழ்ந்த இடம் கப்பல்கள் பற்றிய விவரங்களைக் கண்காணிக்கும் மேரைன் டிராஃபிக்கின் தரவுகளின்படி, ஸ்டெனா இம்மாகுலேட் 183 மீட்டர் நீளம் (600 அடி) கொண்ட அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பல் ஆகும். ஸ்டெனா இம்மாகுலேட் கிரேக்க துறைமுகமான அகியோய் தியோடோராய் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு, பிரிட்டனில் உள்ள ஹல்லுக்கு செல்ல இருந்தது. மார்டைம் ஆப்டிமா வலைத்தளத்தின்படி, இந்தக் கப்பல் 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, மேலும் அதன் எடை கிட்டத்தட்ட 50,000 டன்கள் ஆகும். சோலாங் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கன்டேய்னர் கப்பல் ஆகும். இது 2005 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, மேலும் 9,500 டன் சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்று மரைன் ஆப்டிமா வலைத்தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சோலாங் கண்டேய்னர் கப்பல், ஸ்காட்லாந்து துறைமுகமான கிரேன்ஜ்மவுத் என்ற இடத்திலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாமிற்கு சென்றுக்கொண்டிருந்தது மேரைன் டிராஃபிக்கின் தரவுகள், விபத்து நடந்தபோது ஒரு கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததையும், ஒன்று கிட்டத்தட்ட நிலையாக இருந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8x41kjx5xxo
  24. 10 MAR, 2025 | 08:17 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கில் படையினரால் நடத்தப்படும் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதற்கு சமாந்தரமான சம்பளத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இராணுவ மயமாக்கலாகவே இதனைக் கருத வேண்டிவரும். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலைமை. இதை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கல்வியாளர்கள் மீது எனக்கு சிறந்த மரியாதை உள்ளது. இங்குள்ள ஆசிரியர்களின் எதிர்பார்பது தமக்கு கீழுள்ள மாணவர்கள் சமூகத்தில் மிளிர வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் அதிகமாக நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டிய துறையாக இது இருக்கின்றது. மாணவர்களுக்கு உயரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஆசிரிய சேவையின் சம்பளம் குறைவானதாகவே இருக்கின்றது. சம்பள அதிகரிப்புக்காக அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் சுபோதினி குழுவின் அறிக்கைக்கு அமைய மூன்று கட்டங்களாக சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கப்பட்ட போதும் அது தொடர்பில் நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கின்றது. எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சு போன்றவற்றுக்கு அதிகளவில் ஒதுக்காது அவற்றை கல்விக்காக ஒதுக்கலாம். இதேவேளை முன்பள்ளி ஆசிரியர்கள் விடயத்தில் படையினரால் நடத்தப்பபடுபவற்றில் 30 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகின்ற போதும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றது. இதனால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் குறைந்தது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதற்கு சமாந்தரமான சம்பளத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் இராணுவ மயமாக்கலாகவே கருத வேண்டி வரும். இது ஏன் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நடக்கின்றது. இதனை மாற்ற வேண்டும். வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அங்கு கட்டிடங்கள் உள்ளிட்ட சில கருத்திட்டங்களை நிறைவு செய்ய 2 பில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளது. இது தொடர்பில் பிரதமரும் கல்வி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் அங்கு கல்வித்துறையில் நிலவும் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.கல்வி திணைக்களம் என்பது நாட்டின் இருதயமாகும். இங்கே பிரச்சினை ஏற்பட்டால் அனைத்து பகுதிகளிலும் பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் திறமையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் காணப்படுகின்றது. வாழ்க்கையில் எதனையாவது அடைய வேண்டும் என்றே இவர்கள் வெளிநாடுகளுக்கு போகின்றனர். இதன்மூலம் சிறந்த தொழிற்படையை நாங்கள் இழக்கின்றோம். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/208843

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.