Everything posted by ஏராளன்
-
வடகிழக்கு மக்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை : அதற்காக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம் - அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்
Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:41 PM வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. எனவே நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காகவும் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர் அருட்தந்தை ஜீவநந்த பீரிஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரையும் இன்று வியாழக்கிழமை (06) நீதிக்கான நடை பயணத்தின் 1030 வது நாள் போராட்டத்தில் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினர்கள் பௌத்த தேரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காலிமுகத்திடல் அரகலைய போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் நீதிக்கான பயணம் தொடர்ந்து 1030 வது நாளாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் வடக்கு கிழக்கில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி அவர்களுக்கான இடங்கள் அன்று முதல் இன்றுவரை கிடைக்கப்படவில்லை அனைத்து மக்களையும் விட அதிகமாக வடகிழக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும். எனவே அந்த மக்களின் நோக்கத்தை கூட தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது. எனவே, அந்த மக்களின் நோக்கத்துக்காக மக்கள் பேரவைக்கான இயக்கமாகிய நாங்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து பேராடிவருகின்றோம் அதை வலியுறுத்துவதற்காக இந்த தொடர்ச்சியான நடைபாதை போராட்டங்கள் கோரிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அசாதாரண நியாயமில்லாத இந்த முறையை மாற்றுவதற்காக உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக மக்களாகிய நாங்கள் ஒன்றுபடவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/208437
-
நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன்
நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு Published By: Digital Desk 3 06 Mar, 2025 | 01:17 PM நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை (05) மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில் நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய பற்றாக்குறை தொடர்பிலும், அவற்றினை நிவர்த்தி செய்வது தொடர்பில் புதிய ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது, படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/208435
-
தத்தெடுத்த குழந்தையை கொலை செய்த தம்பதிக்கு மரணதண்டனை
06 Mar, 2025 | 04:13 PM தத்தெடுத்த குழந்தையை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தத்தெடுக்கப்பட்ட 02 வயதுடைய குழந்தை ஒன்று சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை தத்தெடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட வைத்தியரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட வைத்திய அறிக்கையில், உயிரிழந்த குழந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டதாகவும் குழந்தை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/208452
-
பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
பந்தலந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில் Published By: Rajeeban 06 Mar, 2025 | 11:19 AM பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார். அரசாங்க விசாரணை அறிக்கை பந்தலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில்விக்கிரமசிங்க என தெரிவித்திருந்ததுடன் அங்கு மீறல்கள் இடம்பெறுவது குறித்து குறைந்தபட்சம் அவருக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது. அல்ஜசீரா செய்தியாளர் தன்வசம் வைத்திருந்த அரசாங்க விசாரணை அறிக்கையின் நகல்வடிவத்தை காண்பித்து கேள்விஎழுப்பியவேளை முதலில் அவ்வாறான அறிக்கையொன்று உள்ளதையே மறுத்த ரணில்விக்கிரமசிங்க பின்னர் அந்தஅறிக்கை செல்லுபடித்தன்மை வாய்ந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208420
-
அமெரிக்காவுடன் எந்த வகையான போருக்கும் தயார்; சீனா அறிவிப்பு
அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தாம் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கும் வரி விதிப்புகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரிவிதிப்பு மூலமாகவோ வர்த்தக போர் மூலமாகவோ அல்லது எவ்வித போர் மூலமாகவோ அதற்காக எதிராக இறுதி வரை போராட தாம் தயாராகவுள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள சீன தூதுரகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 முதல் 15 வீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்தது. இதனிடையே, சீனாவில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியை 7.2 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://thinakkural.lk/article/315723
-
தமிழர் ஆணையைப் பெற்றதாகக் கூறும் அரசு அவர்களின் அபிலாஷைகளைப் புறக்கணிக்கிறது - எம்.ஏ.சுமந்திரன்
Published By: Vishnu 06 Mar, 2025 | 04:01 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருப்பதானது, கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே அவர்கள் செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் செவ்வாய்கிழமை (4) கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றியதுடன், இவ்வாரம் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார். அவை இலங்கையில் மனித உரிமைககள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில் மாத்திரம் தான் விதிவிலக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணையனுசரணையுடன் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இம்முறை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் 2015 செப்டெம்பரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரால் மீள்நிகழாமைக்கான உத்தரவாதமாகவும், தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டது. இருப்பினும் தற்போது அமைச்சர் விஜித்த ஹேரத்தினால் குறித்துரைக்கப்பட்ட மூன்று கட்டமைப்புக்களுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் கூறுவதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்போகிறார்களா என்பது தெரியவரும். அதேபோன்று முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது அதனைப் பதிலீடு செய்வதற்குப் பிறிதொரு சட்டத்தைக் கொண்டுவரப்போவதாகக் கூறுகிறது. மேலும் இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை தாம் முற்றாக நிராகரிப்பதாக கடந்த திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி குறிப்பிட்டிருக்கிறார். எனவே கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது. நல்லிணக்கம் என்பது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்படவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு ஆணை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் அம்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையை இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதன்று என்றார். https://www.virakesari.lk/article/208401
-
14 வயது சிறுமிக்கு திருமணம்: வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்கள்; கதறி அழுத சிறுமி - இன்றைய முக்கிய செய்திகள்
பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய (06/03/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இந்த விவகாரத்தில் போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் என்றும் தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் (30) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது. பின்னர் இன்று அந்த சிறுமியை, மலை கிராமத்தில் உள்ள மாதேஸின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். ஆனால், உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிக்கொண்டு சென்று மாதேஸின் வீட்டில் மீண்டும் விட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்த புகாரில் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தாயார் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா? தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது? அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன? பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: வல்லுநர் குழு தலைவர் பட மூலாதாரம்,Getty Images பழநி முருகன் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என, வல்லுநர் குழு தலைவர் பொங்கியப்பன் தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "முருகன் கோவில் மூலவர் சிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று, பழநி கோவில் மூலவர் சிலை பாதுகாப்புக் குழுத் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான பொங்கியப்பன் தெரிவித்தார். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. போகர் சித்தர் மூலவர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார். மூலவர் சிலையைப் பாதுகாப்பது, பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி, ஆதீனங்கள், ஸ்தபதிகள் அடங்கிய 15 பேர் கொண்ட மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்த குழுவினர் அவ்வப்போது மூலவர் சிலையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி, பழநி தேவஸ்தான அலுவலகத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான மூலவர் சிலை பாதுகாப்பு வல்லுநர் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், பழநி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் இணை ஆணையர் நடராஜன், தற்போதைய இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஐஐடி பேராசரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின்னர், குழுத் தலைவர் பொங்கியப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பழநி முருகன் கோவில் மூலவர் சிலை உறுதித்தன்மையுடன் இருக்கும். சிலை பாதுகாப்பாக இருக்கிறது. மூலவர் சிலை குறித்த ஐஐடி குழுவினரின் ஆய்வு முடிவை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது" என்றார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி?4 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் பட மூலாதாரம்,தினமணி நடிகா் சிங்கமுத்துக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகா் வடிவேலு புதன்கிழமை ஆஜரானார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறாக பேச தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகா் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, வடிவேலுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யும்படி சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகா் வடிவேலு சாட்சியம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சிங்கமுத்து தரப்பு வழக்குரைஞா் முறையிட்டார். மேலும், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தாளில் இட்லியை வேக வைத்தால் என்ன ஆபத்து?மருத்துவர்கள் தகவல்3 மார்ச் 2025 இந்தியாவுக்கும் ஓட்டோமான் பேரரசின் கடைசி கலீபாவுக்கும் என்ன உறவு? ஒரு ஆவணத்தின் மர்மம்2 மார்ச் 2025 கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றம் பட மூலாதாரம்,Getty Images ஐக்கிய அரபு அமீரகத்தில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 2 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் கண்ணூரைச் சேர்ந்த முகமது ரினாஷ் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அல் அய்னில் ஒரு பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சக இந்தியக் குடியேறி ஒருவரைக் கொலை செய்ததற்காக முரளீதரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை குறித்து பிப்ரவரி 28 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய தூதரகத்துக்கு தகவல் அளித்தது, அதன் பின்னர் தூதரகம் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டது. தூதரகம் இருவருக்கும் சாத்தியமான அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகம் கருணை மனுக்கள் மற்றும் மன்னிப்பு கோரிக்கைகளை சமர்ப்பித்ததாகவும், ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகம் இப்போது இறுதி சடங்குகளில் குடும்பங்களின் பங்கேற்பை ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குடல் ஆரோக்கியம்: ஒரு நாளில் எத்தனை முறை மலம் கழிப்பது ஆரோக்கியமானது?28 பிப்ரவரி 2025 கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது? - 5 அரிய தகவல்கள்26 பிப்ரவரி 2025 வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்துக: இலங்கை எம்.பி இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோர மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கை என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ மக்களுடைய குறித்த வாழ்வாதார ஆதாரத்தை சுரண்டுகின்ற வகையில் செயல்படுவதாக இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தத் தவறினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படுமெனவும், அத்தகைய நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2025 வரவுசெலவுத்திட்ட கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd92jqgx9wjo
-
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்த நாடுகளும் நிதி விவரமும் இதோ
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முக்கியமான தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராணுவ உதவியை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்கா அதிரடி காட்டியது. போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனாலும் டிரம்பின் இந்த செயல் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2024 வரை உக்ரைனுக்கு வழங்கிய உதவிகளை விரிவாகப் பார்க்கலாம். நிதி, மனிதாபிமானம், ராணுவம் ஆகியவற்றில் உக்ரனைக்கு அமெரிக்கா அதிக உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ராணுவத்தில் 64.1 பில்லியன் யூரோக்களை வழங்கியிருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய யூனியன் நிதி உதவியாக 46.4 பில்லியன் யூரோக்களையும், மனிதாபிமான உதவியாக 2.6 பில்லியன் யூரோக்களையும் வழங்கியிருக்கிறது. ஆனால் ராணுவ உதவி எதுவும் வழங்கவில்லை. இதற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், கனடா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு அதிக உதவிகளை புரிந்துள்ளன. உக்ரைனுக்கு கிடைத்திருக்கும் 267 பில்லியன் யூரோ உதவி வழங்கியவர்களில், ஐரோப்பா மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் 132 பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா 114 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ உதவி என்று பார்த்தால் 129.8 பில்லியன் யூரோக்கள் கிடைத்துள்ளன. இதில் அமெரிக்கா 64 பில்லியன் யூரோக்களுடன் முதலிடத்திலும், ஐரோப்பா 62 பில்லியன் யூரோக்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. போரின் காரணமாக உக்ரைன் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி ஐரோப்பா முழுவதும் சுமார் 63 லட்சம் உக்ரேனிய அகதிகளும், உலகளவில் 68 லட்சம் உக்ரேனிய அகதிகளும் பிறநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஜெர்மனி, ரஷ்யா, போலந்து, பிரிட்டன், ஸ்பெயின் நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நாடு நிதி(பில்லியன் யூரோ) மனிதாபிமானம் ராணுவம் அமெரிக்கா: 46.6 – 3.4 – 64.1 ஐரோப்பிய யூனியன்: 46.4 – 2.6 ஜெர்மனி: 1.4 - 3.2 - 12.6 பிரிட்டன்: 3.8 – 0.9 – 10.1 ஜப்பான்: 9.2 – 1.3 – 0.1 கனடா: 5.2 – 0.5 – 2.6 டென்மார்க்: 0.1 – 0.4 – 7.5 நெதர்லாந்து: 0.7 – 0.8 – 5.9 ஸ்வீடன்: 0.3 – 0.4 – 4.7 பிரான்ஸ்: 0.8 – 0.6 – 3.5 போலந்து: 0.9 – 0.5 – 3.6 நாடுகள் – உக்ரைன் அகதிகள் ஜெர்மனி: 12.4 லட்சம் ரஷ்யா: 10.22 லட்சம் போலந்து: 10 லட்சம் பிரிட்டன்: 2,53,535 ஸ்பெயின்: 2,16,975 https://thinakkural.lk/article/315708
-
வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்துக : இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும் - ரவிகரன்
05 Mar, 2025 | 09:38 PM வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளதாகவும், அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கை என சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ மக்களுடைய குறித்த வாழ்வாதார ஆதாரத்தை சுரண்டுகின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். மீனவமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில் செயற்படும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த தவறினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் வீதிகளில் இறங்கிப்போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும், அத்தகைய நிலையை ஏற்படுத்தவேண்டாம் எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்தார். பாராளுமன்றில் புதன்கிழமை ( 05) இடம்பெற்ற 2025 வரவுசெலவுத்திட்ட கடற்றொழில் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சர் அவர்களே, இந்திய இழுவைப்படகுகள் செய்யும் அத்துமீறிய செயல்களினால் எமது வடக்கு மீனவர்கள் தொழில் செய்யமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எமது மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றது. வடக்கு மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுகின்றது. இந்திய விசைப்படகுகள் மீன்பிடியில் மிகவும் அழிவுகரமான முறைகளிலொன்றாகக் கருதப்படும் அடித்தள இழுவை வலை பிரயோகத்தை மேற்கொள்கின்றன. ஆழ்விசைப்படகுகள் "கடலின் ஹூவர்ஸ் (hoovers of ocean) என்றும், புல்டோசர்கள் போன்று மீன் மற்றும் பிறஅடித்தாள மீன் இனங்களை அழித்தொழிக்கின்றன. இலங்கைப் பெருங்கடலில் இந்த புல்டோசிங் அடித்தள விசைப்படகுகளின் செயற்பாடுகள் தொடர்ந்தால் விரைவில் எந்தமீனும் கடலில் பிடிக்க இயலாதநிலை ஏற்படும். அடித்தள இழுவைவிசைப்படகு கடல் தளத்தை சிதைத்து, கடல்சூழலை சீர்குலைத்து பழைய பவளப் பாறைகளை சேதப்படுத்துகின்றது. பிளாங்கடன்களின் வளர்ச்சியை பாதிக்கின்றது. மற்றும் இறுதியாக ஆழ்கல் இனங்களில்உள்ள கடல் பாறைமீன் (Reef Fish) இறால் மற்றும் பிறவகைகளை பாதிக்கின்றது. இது வாழ்விட சீரழிவுக்கு வழிவகுக்கும். கூடுதலாக இழுவைவிசை இழுத்தல் உண்மையில் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத முறையாகும். ஏனெனில் இலக்கு அல்லாத உயிரனங்களும் பிடிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலும் அழிக்கப்படுகின்றது. இவ்வாறான இழுவைவலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் கரைக்குவந்தபிறகும், கடலிலும் தாங்கள் விற்கக்கூடிய மீன்களை கரைக்கு வந்த பிறகும் தாங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு இலக்கு இல்லாத கடல் உயிரினங்களை, மீன் இனங்களை அப்புறப்படுத்துகின்றார்கள். இலங்கையின் கடலோரமக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல் அல்லது மீன்வளம் தொடர்பான தொழில்துறையை நம்பியுள்ளனர். அதுவே அவர்கள் அறிந்த ஒரே வாழ்வாதார நடவடிக்கையாகும். அந்தவாழ்வாதார ஆதாரம் அழிக்கப்பட்டால், மனித பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான மிகப்பெரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விளைவுகள் ஏற்படும். எல்லையைக்கடக்கும் மீன்பிடிக்கப்பல்/படகுகள் தவறுதலாக ஒரு சிறிய சதவீத நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கியது என்பது அனைவரும் அறிந்த உண்மை. பெரும்பாலான எல்லைக்கடப்புகள் வேண்டுமென்றே இலங்கைக்கடல் எல்லைகளுக்குள் ஆழமாகப் பயணிப்பதை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் மீன்பிடிப் படகுகள் இலங்கைப்பகுதியில் மட்டுமே நல்ல மீன்பிடி மைதானங்களை காண்கின்றன. எனவே அவற்றின் பெரும்பாலான மீன்பிடித்தல் அந்தப்பக்கத்தால் இடம்பெறுகின்றதென்பது வெளிப்படையான ரகசியமும், உண்மையுமாகும். இலங்கைக் கடற்பரப்பில் பிரதானமாக இறால் பெறப்படுவதால், பெரும்பாலான விசைப்படகுகள் பெலாஜிக் அல்லது விரிகடலுக்குரிய இழுவை வலைகளுடன் ஜோடியாக இழுவைசெய்யும் இந்திய விசைப்படகுகள், இலங்கைக் கடற்பரப்பை அடைகின்றன. ஒன்றை விட்ட ஒவ்வொரு நாளும், கிட்டத்தட்ட 500 இழுவைப் படகுகள் இலங்கைக்கடற்பரப்புக்குள் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. பல பாதுகாவலர்களும், சர்வதேச விஞ்ஞானிகளும் இழுவை வலைகள் கண்மூடித்தனமாக அனைத்து கடல் வளங்களையும் அழிப்பதால் அவற்றை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். மீன்வள விஞ்ஞானிகளின் ஆலோகனைகளின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இலங்கை கடற்பரப்பில் அடித்தள இழுவைப் படகுகளை இயக்கத்தடை விதித்தது. இலங்கையின் வடக்குப்பகுதியில் ஐந்து மாவட்டங்களில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஆகிய நான்கு மாவட்டங்களில் மீன்பிடியாளர்கள் தமது முழுமையான வாழ்வாதாரமாக மீன்பிடியையே நம்பியுள்ளனர். நீங்கள் சற்று சிந்தித்துப்பாருங்கள் இந்தக் குடும்பங்களின் உணவுத்தேவைகள், பிள்ளைகளின் கல்வித்தேவை உட்பட, அத்தியாவசியத் தேவைகள் இந்தக்கடலையே நம்பி, இதனால் கிடைக்கும் வருமானத்தை தமது வாழ்வாதாரமாக எண்ணி இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கொடூரமான வகையில், மிகவும் கொடூரமானமுறையில் சட்டவிரோதத் தொழில்கள் செய்து, இலங்கை அரசினால் தடை செய்யப்பட்டதாக அறியத்தந்திருக்கும் தொழில்களைக் கொள்ளையர்களைப்போல செய்துகொண்டிருக்கும், திருட்டுக்கும்பலை பிடிக்காமல் சட்டத்தின்முன் நிறுத்தாமல் இருக்க காரணம்தான் என்ன? உங்களுடைய மீன்பிடியாளர் சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம். வயிற்றில் அடிக்ககேண்டாம். எமது மீனவர்களை வாழவிடுங்கள். என்று தான் கேட்கின்றோம். சட்டவிரோத கடற்றொழில்களைச் செய்து மீனவர் சமூகத்தை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கையிலுள்ள சட்டவிரோதிகளையும், எல்லைதாண்டிவந்து எமது கடல்வளங்களை அழிக்கும் அயல்நாட்டு சட்டவிரோதிகளையும் தண்டியுங்கள். எமது மக்களை மேலும், மேலும் காயப்படுத்தாமல் கடற்படை, பொலிசார், கடற்றொழில் திணைக்களப்பணியாளர்கள் தங்களுடைய கடமைகளைச் சீராகச் செய்தால் நிலமைகள் சீராகும் எனத் தெரிவித்துக்கொள்கின்றேன். மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்து விடும். சட்டங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு, அதனை முழுமையாக செயற்படுத்தாமல் எமது மீனவமக்களின் வாழ்வை அழித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். கடற்றொழில் அமைச்சர் அவர்களே, எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தாங்களும் அறிவீர்கள். இந்தியஇழுவைப்படகுகள் தமது எல்லைகளைத்தாண்டி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைகின்ற விவகாரத்தில் இந்திய அரசாங்கம், இந்திய கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினரும் பிழையான விதத்தில் செயற்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன். இந்திய கடல்எல்லைரைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும். அதேபோல் இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர். அண்மையில் மியன்மார் நாட்டு அகதிகள் படகொன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வருகைதந்தது. குறித்த அகதிகள்படகு முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு வருகைதரும்வரை கடற்படையினருக்குத் தெரியாது. அவ்வாறெனில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர் இலங்கைக் கடற்பரப்பினைப் பாதுகாக்கவேண்டியது இலங்கைக் கடற்படையின் பொறுப்பாகும். அகவே இந்தவிடயத்தில் கடற்றொழில் அமைச்சரே நீங்கள் தலையீடுசெய்யுங்கள். மீனவமக்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் மீனவமக்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/208377
-
மட்டக்களப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்
மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. அகில இலங்கை ரீதியாக சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் எங்கோ ஒரு பிரதேசத்தில் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு சிறார்கள் முகம்கொடுத்து வருவதை அவ்வப்போது அறியக்கிடைக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெற்ற பிரதேசங்களாக வாகரை, மண்முனை வடக்கு மற்றும் கிரான் போன்ற பிரதேசங்கள் காணப்படுகின்றது. மேலும், சிறுவர் உரிமைமீறல் துஷ்பிரயோகம் இடம்பெறும் போது எமது சமூகமானது பார்வையாளராக செயற்படாது உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது எமது பொறுப்பாகும். சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு சட்டத்தின் மூலம் புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் தற்போது காணப்படுகின்றமை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களை பாதுகாப்பதற்கு பாடசாலை மட்டம் சமுதாய மட்டத்தில் பலமான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தும் பங்குதாரர்களினால் 100 வீதம் பங்களிப்பை வழங்கி வினைத்திறனான செயற்பாட்டை வழங்குமிடத்து சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க முடியும். மேலும் இக்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சமூகத்தில் சிறார்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அவதானிக்கப்படுமிடத்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்வதனால் பாதிப்பில் இருந்து சிறார்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/315734
-
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தவறுதலாக குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானங்கள் - ஏழு பேருக்கு காயம்
Published By: Rajeeban 06 Mar, 2025 | 10:52 AM தென்கொரிய போர்விமானங்கள் தவறுதலாக வீடுகள் மீது வீசிய குண்டுகள் காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். போர்விமான ஒத்திகையின் போது பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர், நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ள பொச்சியோன் என்ற நகரத்தின் குடியிருப்புகள் மீது விமானப்படையின் கேஎவ் 16 விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியுள்ளன. இதில் ஒரு குண்டு வெடித்துள்ளது, ஏனைய குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில் குண்டு செயல்இழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவருக்கு கழுத்திலும் தோளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுகள் விழுந்து வெடித்தபோது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த 60 வயது பெண்ணொருவரின் கழுத்தை குண்டு சிதறல்கள் தாக்கியுள்ளன. வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த வேளை பாரிய சத்தம் கேட்டது, நான் கண்விழித்தவேளை அம்புலன்சில்இருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் விமானங்கள் தவறுதலாக எம்கே 82 குண்டுகளின் 8 எறிகணைகளை வீசியுள்ளன. அவை சூட்டு எல்லைக்கு வெளியே விழுந்துள்ளன என தென்கொரிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதற்காக மன்னிப்பு கோரியுள்ள விமானப்படை விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தினால்ஒரு தேவாலயமும் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவேளை வெடிப்பு சத்தங்கள் கேட்டன என இடிபோலயிருந்தது, வீடு அதிர்ந்தது என யொன்காப்பிற்கு ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/208417
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தென்னகோன் இன்று சரணடைவார்? பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவர் குறித்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை. இந்நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ள நிலையில், இன்று அவர் தனது சட்டத்தரணிகளுடன் சரணடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/315702
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
சாம்பியன்ஸ் டிராஃபி: 25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மோதும் இந்தியா-நியூசிலாந்து; தென் ஆப்பிரிக்கா தோல்வி ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது. லாகூரில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் சேர்த்தது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 363 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராஃபியில் அடிக்கப்பட்ட அதிகபட்சமாகவும் நியூசிலாந்து ஸ்கோர் அமைந்தது. இதையடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, வரும் ஞாயிறன்று (மார்ச் 9) துபையில் நடக்கும் ஃபைனலில் இந்திய அணியுடன் மோதுகிறது. 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்? ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த இந்தியா - இந்த வெற்றியின் சிறப்பு என்ன? கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா 2வது முறை மோதல் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கும். அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியை ஃபைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது. ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தகுதி பெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கெடு விதித்தது ஏன்? நாடாளுமன்ற உரையின் 7 முக்கிய அம்சங்கள்5 மார்ச் 2025 தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?5 மார்ச் 2025 7-வது ஐசிசி ஃபைனல் ஒட்டுமொத்தத்தில் ஐசிசி ஒருநாள் ஃபார்மெட்டில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 5வது இறுதிப்போட்டியாகும். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000, 2009, 2025 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக் கோப்பையில் 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியிலும், 2021ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்றது. நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது. ரவீந்திரா 5வது சதம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார் நியூசிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா(108), கேன் வில்லியம்ஸன்(102) ஆகியோரின் சதம்தான் முக்கியக் காரணம். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு வித்திட்டனர். சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் ரவீந்திரா அடிக்கும் 2வது சதமாகும், ஒட்டுமொத்தமாக 5வது சதமாகும். ரவீந்திரா அடித்த 5 சதங்களும் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட தொடர்களில் அடிக்கப்பட்டவை. அதாவது, 2023 உலகக் கோப்பையில் 3 சதங்களும், இந்த தொடரில் 2 சதங்களும் ரவீந்திரா அடித்துள்ளார். இதுநாள் வரை, எந்த கிரிக்கெட் வீரரும் தனது முதல் 5 சதங்களை ஐசிசி தொடர்களில் மட்டும் அடித்தது இல்லை. வங்கதேசத்தின் மகமதுல்லா 4 சதங்கள் மட்டுமே ஐசிசி தொடர்களில் அடித்தநிலையில் அதையும் ரவீந்திரா முறியடித்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபியில் மட்டும் ரவீந்திராவின் சராசரி 67 ஆக இருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நேற்று 3வது சதத்தை வில்லியம்ஸன் பதிவுசெய்தார் வில்லியம்ஸனின் ஹாட்ரிக் சதங்கள் கேன் வில்லியம்ஸன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் சதத்தை பதிவுசெய்தார். ஏற்கெனவே 2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் சதத்தையும் (109), பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் 2வது சதத்தையும் (133), நேற்று 3வது சதத்தையும் வில்லியம்ஸன் பதிவுசெய்தார். அது மட்டுமல்லாமல், வில்லியம்ஸன் இந்த போட்டியில் முதல் 57 பந்துகளில் மெதுவாக பேட் செய்து 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் மட்டுமே சேர்த்து 70 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால், அடுத்த 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் சேர்த்து 167 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து சதம் விளாசினார். இது தவிர, நடுவரிசை பேட்டர்கள் டேரல் மிட்ஷெல்(49), கிளென் பிலிப்ஸ்(49) இருவரும் கேமியோ ஆடியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. பந்துவீச்சில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் லாகூரின் தட்டையான மைதானத்தை நன்கு பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும், கேப்டன் சான்ட்னர், முக்கிய விக்கெட்டுகளான பவுமா, வேன்டர் டூ சென், கிளாசன் விக்கெட்டுகளைச் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?5 மார்ச் 2025 ரமலான் நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு முறை என்ன?5 மார்ச் 2025 நியூசி-தெ. ஆப்ரிக்கா பந்துவீச்சு ஒப்பீடு நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்று 28 ஓவர்களை வீசி, 143 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு பயன்படுத்திய அளவு தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களால் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைகூட சாய்க்கவில்லை, 93 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணி 3 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட 4 வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசி 269 ரன்களை வாரி வழங்கினர். இதில், 3 ஸ்பெசலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 70 ரன்களுக்கு மேல் வழங்கினர். தென் ஆப்ரிக்க அணியின் டாப்ஆர்டர் பவுமா(56), வேன்டர் டூசென்(69) ஆகியோர் தவிர, நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைத்து பேட் செய்யாதது தோல்விக்கு முக்கியக் காரணம். 21-வது ஓவரிலிருந்து 40-வது ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்தது, 116 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் அதேசமயம், இதே ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்து, டெத் ஓவர்களை அருமையாகப் பயன்படுத்தியது. ஆறுதல் தந்த மில்லர் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு நேற்று ஒரே ஆறுதலான அம்சம், டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தது மட்டும்தான். சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த பேட்டர் என்ற பெருமையை மில்லர் பெற்றார். இதற்கு முன் சேவாக் 77 பந்துகளில் சதம் அடித்த நிலையில் அதை மில்லர், இதற்கு முன் ஜோஸ் இங்கிலிஸ் முறியடித்தனர். டெய்லெண்டர் லுங்கி இங்கிடியை வைத்துக்கொண்டுதான் மில்லர் தனது சதத்தில் 96 சதவிகித ரன்களையும் சேர்த்தார். 10-வது விக்கெட்டுக்கு இங்கிடி, மில்லர் 56 ரன்கள் சேர்த்தனர். மில்லர் 54 ரன்கள் சேர்த்தபோது இங்கிடி ஒரு ரன் சேர்த்தார். மில்லர் தனது கடைசி 26 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தார் தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு காரணம் என்ன? தென் ஆப்பிரிக்க அணியும், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் தோல்வியும் பிரிக்க முடியாததாகவிட்டது. இதுவரை பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்றிருந்தாலும், அரையிறுதி கடந்தது மிகச்சிலமுறைதான். அரையிறுதியோடு தென் ஆப்பிரிக்கா தனது போராட்டத்தை, பயணத்தை முடித்துக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இதுவரை 11 முறை ஐசிசி நாக்அவுட் சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்று அதில் 2 முறைதான் வென்றுள்ளது. 1998ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது இதைக் கடந்து பெரிதாக கோப்பையை வெல்லவில்லை. 2வது கோப்பையை நோக்கிய பயணம் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் தொடர்கிறது. கடைசி 5 அரையிறுதிகளில் ஒன்றில்கூட தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை. வலிமையான வேகப்பந்துவீச்சு, விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தும் இதுபோன்ற முக்கியத்துவமான போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணியால் வெற்றியை பெற முடியவில்லை. ஆடுகளத்தைப் பயன்படுத்தி நேற்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்யவில்லை, லைன் லென்த்தில்கூட பெரும்பாலும் வீசவில்லை, தட்டையான ஆடுகளத்தில் வேகத்தை அதிகப்படுத்தி, பவுன்ஸராக வீசியது நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எளிதானது. தென் ஆப்பிரிக்க பேட்டிங்கும் தொடக்கத்தில் சிறப்பாகவே இருந்தது, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் கேப்டன் பவுமா, வேண்டர் டூ சென் ஆடினர். 143 ரன்களுக்கு 2 விக்கெட் என, நியூசிலாந்து ரன்ரேட்டுக்கு இணையாகத்தான் தென் ஆப்பிரிக்கா இருந்தது. ஆனால், டூசென் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் தொடர்நது விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. குறிப்பாக 161 ரன்களில் இருந்து 218 ரன்களுக்குள், அதாவது 57 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு பெரிய காரணம். நடுவரிசை நம்பிக்கை பேட்டர்கள் மார்க்ரம் (31), கிளாசன்(3), முல்டர்(8), யான்சென்(3) ரன்கள் சேர்த்து ஏமாற்றினர். லாகூர் ஆடுகளம் தட்டையானது. இந்த ஆடுகளத்தில் 350 ரன்களுக்கு மேல் அடித்தால்கூட நல்ல பார்ட்னர்ஷிப் மட்டும் இருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். இதே மைதானத்தில்தான் இங்கிலாந்தின் 352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது. தென் ஆப்பிரி்க்காவின் கிளாசன், மார்க்கரம் ஆகிய இரு பெரிய பேட்டர்களும் நிலைத்து பேட் செய்திருந்தால் அடுத்தடுத்து அழுத்தத்தைக் கொடுத்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு திருப்பி இருக்கலாம். க்ளோயி ஸாவ்: 'நான் மனிதனாக நடத்தப்பட வேண்டும்' - ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது?5 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிளாசன் 'பார்ட்னர்ஷிப் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம்' தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில், "நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கு சற்று அதிகம்தான். நாங்களும் சிறப்பாகவே பேட் செய்தோம் என நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் 350 என்பது அடிக்கக்கூடிய ஸ்கோர்தான். இன்னும் இரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், டூசென், எனக்கும் தவிர வேறு பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். 35 ஓவர்கள் வரை நானும், டூசெனும் பேட் செய்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. பேட்டிங்கில் நடுவரிசை ஏமாற்றமளித்தது" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vydkwx8ezo
-
பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்பீட் கன்”
அண்ணை, அது 1200 மீற்றர் என்று நினைக்கிறேன்.
-
துருக்கியுடன் நாற்பது வருடகால யுத்தம் - யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் குர்திஸ் போராளிகள்
பிகேகே துருக்கி மோதல் - அப்துல்லா ஒகாலன் - எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டிய விடயங்கள் என்ன? Published By: Rajeeban 03 Mar, 2025 | 12:47 PM By Ben Hubbard newyork times முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின.ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. பல தசாப்தகால போராட்டத்தின் பின்னர் குர்திஸ் போராளிகள் அமைப்பு யுத்தநிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறுதனது அமைப்பினரை கேட்டுக்கொண்டார். சுமார் 4 தசாப்தங்களாக குர்திஸ்தான் தொழில்கட்சியான பிகேகேவுடன் துருக்கி மோதலில் ஈடுபட்டிருந்தது. பிகேகே துருக்கியின் குர்திஸ் சிறுபான்மை இனத்தவர்களிற்கு அதிகளவு உரிமைகளை கோரி போராடும் அமைப்பு. தசாப்தகால மோதலில் இதுவரை 40000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பிகேகே அமைப்பு பொதுமக்கள் மற்றும் துருக்கியின் இராணுவ இலக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவும், குர்திஸ் போராளிகள் மற்றும் அவர்களிற்கு ஆதரவளிக்கும் குர்திஸ் மக்கள் மீதான துருக்கியின் இராணுவ தாக்குதல்கள் காரணமாகவும் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. துருக்கியும் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் பிகேகே அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றன. தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் அப்துல்லா ஒகலான் தனது போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், இதனைதொடர்ந்து அந்த அமைப்பு யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. எனினும் 40 வருடகால யுத்தம் முடிவிற்கு வருமா என்பது உறுதியாக தெரிவிக்கப்பட முடியாத விடயமாக காணப்படுகின்றது, யுத்த நிறுத்தத்திற்கு பதில் துருக்கி அரசாங்கம் போராளிகளிற்கு எதனை வழங்குவதற்கு முன்வந்துள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை. பிகேகே குறித்தும் துருக்கிக்கு எதிரான அதன் போராட்டம் குறித்தும் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் பிகேகேயின் பின்னணி என்ன? இந்த அமைப்பு துருக்கிக்கு எதிராக 1980களின் பிற்பகுதியில் போரிட ஆரம்பித்தது, துருக்கியின் சனத்தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானவர்களாக உள்ள குர்திஸ் மக்களிற்கு சுதந்திரத்தை கோரியது. துருக்கியின் கிழக்கு தெற்கு மலைப்பகுதியிலிருந்து தங்கள் தாக்குதல்களை பிகேகே போராளிகள் ஆரம்பித்தனர். அவர்கள் துருக்கியின் தளங்கள் பொலிஸ் நிலையங்கள் போன்றவற்றை தாக்கினர். துருக்கி அரசாங்கம் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது, இதன் காரணமாக மோதல்கள் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கும் பரவின. பிகேகே அமைப்பு துருக்கியின் பல நகரங்கள் மீது குண்டுதாக்குதல்களை மேற்கொண்டது இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். எனினும் கடந்த ஒரு தசாப்தகாலமாக துருக்கி இராணுவம் துருக்கியின் தென்கிழக்கில் உள்ள முக்கிய குர்திஸ் நகரங்களில் இருந்து பிகேகே அமைப்பினரை பின்வாங்க செய்துள்ளது. ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி பிகேகே அமைப்பின் தலைவர்களையும் போராளிகளையும் கொலை செய்துள்ளது. இதன் காரணமாக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான போராளிகளின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இந்த மோதல் மிகப்பெரிய வன்முறையாக மாறாத ஒன்றாக காணப்படுகின்றது, எனினும் பிகேகே அவ்வப்போது மேற்கொண்ட தாக்குதல்கள் பரந்துபட்ட யுத்தம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. கடந்த வருடம் ஆயுதமேந்திய சிறிய எண்ணிக்கையிலான போராளிகள் துருக்கியின் விமானதயாரிப்பு நிறுவனமொன்றிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் ஐவர் கொல்லப்பட்டனர். குர்திஸ் இனத்தவர்கள் 40 மில்லியன் சனத்தொகையை கொண்ட இனக்குழுவே குர்திஸ்கள். அவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிபரங்கள் உள்ளன. ஈரான் ஈரான் சிரியா துருக்கியில் இவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் குர்திஸ் மொழியின் பல பேச்சுவழக்குகளை பேசுகின்றனர். அவர்களின் மொழி அராபிய, துருக்கி மொழிகளுடன் நேரடியாக தொடர்பில்லாதது. மேலும் இவர்கள் சுனி முஸ்லீம்கள். முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின. ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. அதன் பின்னர் பல நாடுகளில் குர்திஸ் மக்களின் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன. குர்திஸ் மக்கள் தங்களின் மொழி கலாச்சாரம் தொடர்பில் அரச ஒடுக்குமுறைகளை அனுபவித்துள்ளனர். சிரியாவில் குர்திஸ் இனத்தவர்கள் 2014 இல் சிரியாவின் வடக்கில் ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்பட்டவேளை குர்திஸ் மக்கள் அங்கிருந்து தப்பியோடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லையை கடந்து துருக்கிக்குள் நுழைந்த இவர்கள் அகதி முகாமகளை சென்றடைந்தனர். சிரியாவில் குர்திஸ் இனத்தவர்களின் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணியினர் நாட்டின் வடகிழக்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர், இவர்களின் வேர்கள் பிகேகேயுடன் தொடர்புபட்டவை இவர்கள் பிகேகே தலைவர் அப்துல்லா ஒகலானின் கொள்கையை பின்பற்றுகின்றனர். அவர்களிற்கு அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவளித்து வந்தது, ஐஎஸ் அமைப்பினை தோற்கடிப்பதில் இவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள். எனினும் சிரியாவின் சர்வாதிகாரி பசார்அல் அசாத்தின் வீழ்ச்சி இவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இவர்கள் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதுடன் டமஸ்கஸில் உள்ள சிரியாவின் புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளனர். https://www.virakesari.lk/article/208145
-
டிரம்ப்; அமெரிக்க காங்கிரசிற்கான உரை
டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கெடு விதித்தது ஏன்? நாடாளுமன்ற உரையின் 7 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், ஜூட் ஷீரின் பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன் 5 மார்ச் 2025, 14:52 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அதில் பேசும்போது, "அமெரிக்க கனவு நிறுத்த முடியாதது" என்று அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில், டிரம்பின் இந்த உரையே மிக நீளமானது. இதில் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டத்தை அதிபர் டிரம்ப் விவரித்தார். உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்த, டிரம்பின் ஆறு வார கால ஆட்சியை குடியரசுக் கட்சியினர் பாராட்டினர். ஜனநாயகக் கட்சியினரால் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் உரையாற்றினார். அமெரிக்க அரசின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, குடியேற்றத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவது, அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் நாடுகள் மீதான வரிவிதிப்பு, யுக்ரேன் போர் தொடர்பான கூட்டணியை ஆட்டம் காணச் செய்தது என்று அதிபர் டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நீளமான அவரது உரையின் 7 முக்கிய அம்சங்கள் என்ன? இந்தக் கட்டுரையில் காண்போம். 1. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை நாடாளுமன்றத்தில் பேசிய டிரம்ப், "பல தசாப்தங்களாக சில நாடுகள் நமக்கு எதிராகக் கடும் இறக்குமதி வரியை விதிக்கின்றன. தற்போது நமக்கான சந்தர்ப்பம் வந்துள்ளது. அந்தந்த நாடுகளுக்கு எதிராக நாமும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்" என்றார் அதோடு, "ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் எவ்வளவு வரி வசூலிக்கின்றன என்று தெரியுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். "எண்ணற்ற பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிக வரியை நம்மிடம் இருந்து வசூலிக்கின்றன. இது நியாயமற்றது. இந்தியா, அமெரிக்க வாகனங்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேல் வரி வசூலிக்கிறது. இந்த முறை அமெரிக்காவுக்கு நியாயமானதாக இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். அதனால், "ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. பிற நாடுகள் நமது பொருளுக்கு என்ன வரி வசூலிக்கின்றனவே, அதே அளவுக்கு நாமும் அவர்களிடம் இருந்து வசூலிப்போம்" என்றும் டிரம்ப் தெரிவித்தார். Play video, "இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை", கால அளவு 1,00 01:00 காணொளிக் குறிப்பு, 2. வரிவிதிப்புகளில் ஒரு பெரிய ஏற்ற இறக்கம் இருக்கும் இரண்டாவது நாளாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தைத் தொடர்ந்து, இந்த வாரம் அவர் தொடங்கிய வர்த்தகப் போரின் சாத்தியமான பொருளாதார விளைவுகளை டிரம்ப் குறைத்து மதிப்பிட்டார். இதில் மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரிகளும், சீனப் பொருட்கள் மீதான கூடுதல் 10% வரியும் அடங்கும். அதோடு, அவரது மற்ற கொள்கை நோக்கங்களை வரவேற்ற கைதட்டல்களுக்கு மத்தியில், பல குடியரசுக் கட்சியினர் எதிர்வினையாற்றாமல் அமர்ந்திருந்தனர். இது டிரம்பின் இறக்குமதி மீதான வரிகள் அவரது கட்சியை எவ்வாறு பிளவுபடுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது. "இந்த வரி விதிப்பு அமெரிக்காவை மீண்டும் பணக்கார நாடாக மாற்றுவது மற்றும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குவது பற்றியது" என்று அவர் சி.என்.என் ஊடகத்திடம் கூறினார். "அது நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் விரைவாக நடக்கும். சில இடையூறுகள் இருக்கும், ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது அதிகமாக இருக்காது." அமெரிக்க வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்கு ஏற்றவாறு வரி விதிப்பு ஏப்ரல் 2ஆம் தேதி "அமலுக்கு வரும்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். புதன்கிழமையன்று, நாளின் தொடக்கத்தில், டிரம்ப் மெக்சிகோ மற்றும் கனடாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்கக்கூடும் என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஃபாக்ஸ் பிசினஸிடம் கூறினார். நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது?5 மணி நேரங்களுக்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 3. யுக்ரேனுடனான கனிம ஒப்பந்தம் பட மூலாதாரம்,Getty Images யுக்ரேன் அதிபரிடம் இருந்து, ஒரு "முக்கியமான கடிதம்" தனக்கு நேற்று முன்தினம் கிடைத்ததாகவும், அது வொலோதிமிர் ஸெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்ட கருத்துகளுடன் பொருந்துவதாகத் தோன்றியதாகவும் டிரம்ப் கூறினார். போரை முடிவுக்குக் கொண்டு வரவும், "முடிந்தவரை விரைவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும்", டிரம்பின் "வலுவான தலைமையுடன்" இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் யுக்ரேன் அதிபர் கூறியிருந்தார். "அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியதற்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று டிரம்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். அமெரிக்க நட்பு நாடுகளுக்கு, அமெரிக்கா அனைத்து ராணுவ விநியோகங்களையும் நிறுத்திய, அடுத்த நாள் யுக்ரேன் அதிபர் அமைத்திக்கான கரங்களை நீட்டினார். கடந்த வாரம் அதிபர் அலுவலகத்தில் இரு தலைவர்களும் சந்தித்தனர். இரு நாட்டு அதிபர்களும், ஊடகங்கள் முன்பு காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். அதன் பிறகு, யுக்ரேனின் வளங்கள் உள்பட ஒரு பொருளாதாரக் கூட்டாண்மையில் இருந்து அமெரிக்கா லாபம் ஈட்ட அனுமதிக்கும் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டங்களை ரத்து செய்தனர். நாடாளுமன்றத்தில் தனது உரையின்போது, ஒப்பந்தம் நிறைவடைந்ததை அறிவிக்க டிரம்ப் இலக்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அது நிறைவேறவில்லை. எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 இலங்கையில் பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? என்ன காரணம்?7 மணி நேரங்களுக்கு முன்னர் 4. கிரீன்லாந்தை அமெரிக்கா கைக்குள் கொண்டு வரும் டிரம்பின் முயற்சி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரு நாட்டு அதிபர்களும், ஊடகங்கள் முன்பு காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். டிரம்பின் உரை 99 நிமிடங்களுக்கு நீடித்தது. அதன் பெரும்பகுதி உள்நாட்டுப் பிரச்னைகளை மையமாகக் கொண்டிருந்தாலும், டிரம்ப் சர்வதேச விவகாரங்களிலும் கவனம் செலுத்தினார். உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை விரிவுபடுத்த அவர் விரும்பும் இடங்கள் இருக்கின்றன. மேலும் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளைக் கைவிடவும் இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை டிரம்ப் தனது உரையில் வலியுறுத்தினார். "நாங்கள் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்" என்று அவர் கூறினார். மேலும் அவரது அரசாங்கம் பனாமா கால்வாயை "மீட்கும்" என்றும் அவர் கூறினார். முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சியில் இருந்த வீண் செலவுகள் என்று அவர் விவரித்த பட்டியலைப் பற்றி டிரம்ப் பேசும்போது, ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றிப் பேசினார். லைபீரியா, மாலி, மொசாம்பிக், உகாண்டா ஆகிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க உதவியால் நியாயமற்ற முறையில் பயனடைகின்றன என்று அவர் கூறினார். ஆனால், அவர் குறிப்பாக லெசோதோ பற்றி வலியுறுத்தினார். பால் புதுமையினரின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக 80 லட்சம் அமெரிக்க டாலர்களை பெற்ற போதிலும், அது "யாரும் கேள்விப்படாத" நாடாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?8 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?59 நிமிடங்களுக்கு முன்னர் 5. ஈலோன் மஸ்கிற்கு பாராட்டு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்பின் உரையை பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஈலோன் மஸ்க் கேட்டுக்கொண்டிருந்தார். தனது கோடீஸ்வர ஆலோசகரான ஈலோன் மஸ்கின் பெயரைத் தனது உரையின் ஆரம்பக் கட்டத்திலேயே டிரம்ப் குறிப்பிட்டார். அவரது உரையை பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஈலோன் மஸ்க் கேட்டுக் கொண்டிருந்தார். தொழில்நுட்ப தொழிலதிபரான ஈலோன் மஸ்கின் கீழ் செயல்படும் அரசு செயல்திறன் துறை, ஆயிரக்கணக்கான ஃபெடரல் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த பல பில்லியன் டாலர் உதவிகளை நிறுத்தியதோடு, அமெரிக்க அரசின் பல்வேறு திட்டங்களையும் குறைத்துள்ளது. அடர் நிற கோட்டும் நீல நிற டையும் அணிந்திருந்த ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான ஈலோன் மஸ்க் எழுந்து நின்று மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். "உங்களுக்கு நன்றி ஈலோன். அவர் மிகவும் கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் அப்படிச் செய்யவேண்டிய தேவையே இல்லை" என 78 வயதான அமெரிக்க அதிபர் தெரிவித்தார். "செலவுகளைக் குறைக்கும் ஈலோன் மஸ்கின் நடவடிக்கையால் தடுக்கப்பட்ட தேவையற்ற செலவுகளுக்கு சில எடுத்துக்காட்டுகளை" டிரம்ப் பட்டியலிட்டார். இது குடியரசுக் கடடியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அப்போது ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "மஸ்க் திருடுகிறார்" மற்றும் "பொய்" என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். அரசு செயல்திறன்துறை, 105 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமித்திருப்பதாகக் கூறுகிறது. ஆனால் இது தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியாத ஒன்று. 18.6 அமெரிக்க பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டதற்கான ரசீதுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பிழைகள் இருப்பது அவற்றை ஆய்வு செய்த அமெரிக்க ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்5 மார்ச் 2025 6. ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது ஜனநாயக கட்சியினர் "இது ஒரு பொய்" என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். டிரம்ப் உரையைத் தொடங்கிய ஐந்து நிமிடத்திற்குள், அதிபரை ஏளனம் செய்து இடயூறு விளைவிக்க வேண்டாம் என அவைத் தலைவரின் உத்தரவை மதித்து நடக்கத் தவறியதால் டெக்சாஸை சேர்ந்த அல் கிரீன், அவைக் காவலர்களால் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது மற்ற ஜனநாயக கட்சியினர் "இதுவொரு பொய்" என்ற பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். வெள்ளை மாளிகை, பிரதிநிதிகள் அவை, செனட் ஆகியவை குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஜனநாயக கட்சியினர் பெரும்பாலும் தலைவர் இல்லாமல், டிரம்பின் அடுக்கடுக்கான நடவடிக்கைகளுக்கு எதிரான செய்தியைக் கட்டமைக்க முயன்று கொண்டிருக்கின்றனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பல பெண்கள், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இளஞ்சிவப்பு உடைகளை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது கட்சியைச் சேர்ந்த பலர் டிரம்பின் உரையின்போது வெளிநடப்பு செய்தனர். அவர்களில் சிலர் 'எதிர்த்து நில்' எனப் பொருள்படும்படி Resist என்ற வார்த்தையைத் தங்களது சட்டையின் பின் பக்கம் எழுதியிருந்தனர். "அவர்களை மகிழ்விக்க நான் சொல்லக்கூடியது எதுவுமே இல்லை," என ஒருதலைப்பட்சமான வெறுப்பை ரசிப்பவர் போலத் தோன்றிய டிரம்ப் கூறினார். ஜனநாயக கட்சியின் தலைமை, கட்சியின் அதிகாரப்பூர்வ மறுப்பைத் தெரிவிக்க, எலிஸா ஸ்லாட்கின்னை தேர்வு செய்தது. இவர் நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற, கடும் போட்டி நிலவிய மிச்சிகன் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். டிரம்ப் "முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு வாரி வழங்கியிருப்பதாக" எலிஸா குற்றம் சாட்டினார். "அவர் நம்மை பொருளாதார மந்தநிலைக்குக் கொண்டு செல்லக் கூடும்" எனவும் அவர் எச்சரித்தார். இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது?5 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,"டிரம்ப் நம்மை பொருளாதார மந்தநிலைக்குக் கொண்டு செல்லக் கூடும்" என்று எலிஸா ஸ்லாட்கின் எச்சரித்தார் 7. பணவீக்கத்தை குறைப்பதற்கு முன்னுரிமை டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததும் பணவீக்கத்தை முறியடிப்பதாக வாக்காளர்களிடம் உறுதியளித்தார். மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சியை நோக்கி அமெரிக்காவை கொண்டு செல்வதன் மூலம் எரிசக்தி செலவுகளைக் குறைப்பதே தனது முன்னுரிமை என்றும் அவர் உரையில் கூறினார். "உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும்விட நம் காலடியில் அதிகளவில் திரவத் தங்கம் (liquid gold) உள்ளது. அதைக் கண்டறிந்து எடுக்க மிகவும் திறமையான குழுவை நான் முழுமையாக அங்கீகரித்துள்ளேன். இது 'ட்ரில் பேபி, ட்ரில் (drill baby, drill)' என்று அழைக்கப்படுகிறது" என்று டிரம்ப் தெரிவித்தார். சமீபத்திய வாரங்களில் வேகமாக உயர்ந்து வரும் முட்டை விலை தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. இந்த விலை உயர்வுக்குக் காரணம் யார் என்று டிரம்ப் தான் நினைப்பதைத் தெளிவுபடுத்தினார். "ஜோ பைடன் முட்டைகளின் விலையை, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர அனுமதித்துவிட்டார். அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் முயன்று வருகிறோம்," என்றார். கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து பல மில்லியன் முட்டையிடும் பறவைகளைக் கொல்லும்படி பைடன் நிர்வாகம் உத்தரவிட்டதால் முட்டை விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் கீழும் முட்டை விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கடந்த மாதம் பணவீக்கம் சற்றே அதிகமாக 3 சதவீதமாக இருந்தது. இருப்பினும் அது, 2022ஆம் ஆண்டு இருந்த அதிகபட்ச பணவீக்கமான 9.1 சதவீதத்தைவிட மிகக் குறைவு. செவ்வாய்க் கிழமை ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் நடத்திய ஓர் ஆய்வின்படி, அமெரிக்கர்களில் மூவரில் ஒருவர்தான் விலைவாசி உயர்வைக் கையாள டிரம்ப் மேற்கொள்ளும் முறைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czedyz03rreo
-
'விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதளஉலககுழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன"- முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா
Published By: Rajeeban 04 Mar, 2025 | 12:01 PM விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ள வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார் டெய்லிமிரருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் கேள்வி- யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையை நாங்கள் கருத்தில் கொள்வோம்இயுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்தோம் எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. தற்போது சிறிய ரக ஆயுதங்களை பலர் பயன்படுத்துவது போல உள்ளது? பதில்: யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என நினைத்தோம், ஆனால் எனது பதில் இல்லை என்பதே. யுத்தம் ஏன் இடம்பெற்றது என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கான அடிப்படை காரணங்களை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். வடக்குகிழக்கில் சில பிரச்சினைகள் உள்ளன, அவை அனைத்து அரசியல் விவகாரங்கள். ஆனால் அவற்றிற்கான பதில் இராணுவரீதியானது. ஆனால் பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது அதற்கு தீர்வை காணவேண்டும். சுமார் 30,000 பயங்கரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் பலர் கொல்லப்பட்டனர், பலர் சரணடைந்தனர் ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது? அவர்களிடம் ஆர்பிஜிக்கள் இருந்தன, விமானங்களை நோக்கி ஏவுகணைகளை அவர்கள் ஏவியுள்ளனர். அவர்களிடம் 30,000 சிறிய ஆயுதங்கள் இருந்தன. இரண்டு குழுக்கள் இருந்தன, கருணா குழுவிடம் கூட ஆயுதங்கள் இருந்தது. ஆனால் இந்த ஆயுதங்களை அவர்கள் ஒப்படைக்கவில்லை. அந்த ஆயுதங்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் எந்த அமைப்பும் அந்த ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன? எத்தனை ஆயுதங்களை ஒப்படைத்தனர்? என்ற விபரங்கள் இல்லை. இது குறித்து எந்த ஆராய்ச்சியும் இல்லை! இவ்வாறான ஆராய்ச்சிகளில் நாங்கள் பலவீனமானவர்களாக உள்ளோம். இதன் காரணமாக இந்த ஆயுதங்கள் எங்கும் உள்ளன, எல்லா இடங்களிலும் இவற்றை பயன்படுத்துகின்றனர். கொலை செய்வதற்கு ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர், பிஸ்டல்களும் உள்ளன. இந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு எந்த உரிய திட்டங்களையும் அரசாங்கங்கள் முன்னெடுக்கவில்லை. ஆகவே இங்கு பாக்கிஸ்தானின் பெசாவர், ஆப்கானிஸ்தான் போன்ற நிலை காணப்படுகின்றது. அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் என்றால் பிரச்சினையில்லை, ஆனால் அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவ்வாறான ஒன்று இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. எங்கள் தேசியபுலனாய்வு பிரிவுகள் பலவீனமானவையாக உள்ளன. அமெரிக்கா, நியுசிலாந்தில் அல்லது மத்திய கிழக்கில் சம்பவம் ஒன்று இடம்பெற்றால் அதனால் எங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா என நாங்கள் ஆராயவேண்டும். நியுசிலாந்து தேவாலய தாக்குதல் குறித்து எங்கள் புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்திருக்கவேண்டும். கேள்வி - தற்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பயங்கரவாதிகள் உடையவை, இராணுவத்தினருடையவை இல்லை என நீங்கள் எவ்வளவு உறுதியாக தெரிவிக்கின்றீர்கள்? பதில்- இராணுவத்தினரிடமிருந்து சில ஆயுதங்களை கொண்டு சென்றனர். ஆனால் அது குறித்து என்னிடம் போதிய விபரங்கள் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த ஆயுதங்களை பயன்படுத்தப்போவதில்லை இது உறுதியான விடயம். இலங்கை ஒரு சிறிய நாடு எவராலும் தெற்கு வடக்கு கிழக்கிற்கு இடையில் 8 மணித்தியாலங்களிற்குள் பயணம் செய்ய முடியும். விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களிற்கு கரங்களை சென்றடைந்துள்ளன. இவை அனைத்தையும் பணத்திற்காக செய்துள்ளனர். கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எங்கள் தேசிய பாதுகாப்பின் மீது விழுந்த பெரிய அடியாகும்.ஆனால் இந்த தாக்குதலிற்கு முன்னர் எங்களிற்கு இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல்களும் அறிக்கைகளும் கிடைத்துள்ளன. எவரும் இதனை கருத்திலெடுத்து செயற்படவில்லை. அரச புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் குறித்த உங்களின் அவதானிப்புகள் என்ன? பதில் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளி அந்தவேளை ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யாரும் இல்லை. ஏனென்றால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதால் அவர் முப்படைகளின் தளபதியாக பதவிவகித்தார், பாதுகாப்பு அமைச்சர் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் தேசிய பாதுகாப்பு பேரவையின் தலைவர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்தார். அரசமைப்பின்படி அவரே நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பு. இதன் காரணமாக எனக்கு தெரியாது என தெரிவித்துவிட்டு அவரால் தப்ப முடியாது. ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறும்போது அவருக்கு ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமை இல்லாமல் போய்விடும். அவர் என்ன செய்திருக்கின்றார் என்றால் கொல்லப்பட்ட அந்தமக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு அவர் குற்றவாளி என தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் நஸ்ட ஈட்டை மாத்திரம் வழங்க உத்தரவிட்டது. ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக காணப்படவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை அவர் சிங்கப்பூரிலிருந்தார், 22 மில்லியன் மக்களின் உயிருக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர் உடனடியாக நாடு திரும்பவில்லை. விமானப்பயணங்களை தாமதமாக்கிவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். இது அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/208221
-
”இந்தியா விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
இந்திய மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் : இந்தியாவுடன் முரண்பட நாங்கள் இடமளிக்கப்போவதில்லை : சீனாவின் தலையீடும் உள்ளது - செல்வம் 05 Mar, 2025 | 05:34 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எமது கடல் எல்லைக்குள் இந்திய மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். இந்த பிரச்சினையை காரணமாகக்கொண்டு இந்தியாவுடன் முரண்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதில் சீனாவின் தலையீடும் இருந்து வருகிறது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாகாப்பு மற்றும் சமூகவலுவூட்டவ் அமைச்சு மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், போர்க்காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் எமது மீனவர்களின் வாழ்க்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இந்திய மீனவர்களின் இழுவைப்படகு பிரச்சினை அங்கு பூதாகரமாக வெடித்திருக்கிறது.மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு காப்புறுதி திட்டம் ஒன்று கூட இதுவரை இல்லாமல் இருக்கிறது.அதனால் மீனவர்கள் தங்களின் உடமைகளை இழக்கும்போது அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவை பகைத்துக்கொள்ளாமல் இந்திய டோனர்கள் கடல் எல்லைக்குள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுத்தால், அவர்களின் பிரச்சினைக்கு மாற்று திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக எமது மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ப்பாக நாங்கள் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்ககை சந்தித்து கலந்துரையாடியபோது, ஆழ் கடல் மீன்பிடி முறையை அறிமுகப்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என நாங்கள் ஆலாேசனையாக தெரிவித்திருந்தோம். அதனால் அரசாங்கம் இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாட தமிழ் நாட்டு மற்றும் இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுங்கள். அதற்கு நாங்கள் எமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம். அப்போது இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க வருவதற்கான வழி முறையை நாங்கள் தெரிவிப்போம். அதனால் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முல்லைத்தீவு அல்லது மன்னாரில் மீன்பிடி வளாகத்தில் மீன்பிடி துறைமுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன் மூலம் மீனவர் பிள்ளைகளுக்கு கடல்சார் கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் மீனவர் சமூகத்தின் கல்வி நிலையில் முன்னேற்றத்தை மேற்கொள்ள முடியும். அதேநேரம் கடற்றொழில் நடவடிக்கையை முன்னேற்ற அமைச்சர் எடுக்கும் நடவடிக்கையை செயற்படுத்த வேண்டுமானால் அங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஊழல் அற்ற அதிகாரிகள் இருக்கவேண்டும். அதனால் அங்குள்ள நீண்கால அதிகாரிகளை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இந்திய இழுவைப்படகை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் நாங்கள் முரண்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இந்த விடயத்தில் சீனாவின் தலையீடும் இருந்து வருகிறது, சீனா இன்று வடக்கிலே எமது மீனவர்களுடன் எந்த அர்த்தத்தில் நாடுகின்றனர் என கேட்கிறேன். நிலங்களை கைப்பற்றுவதும் வளங்களை ஆக்கிரமிப்பதுமே சீனாவின் சிந்தனை. அதனூடாக வடக்கிலே எந்த நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. வடக்கில் இந்தியாவை தவிர வேறு ஒரு நாடு மூக்கை நுழைவிப்பதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை என்றார். https://www.virakesari.lk/article/208362
-
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?
பட மூலாதாரம்,Special Arrangement கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ''கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விடயம் தொடர்பான தரவுகளை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என்றே தற்போதைக்குக் கூற முடியும்' என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிழலுலக குழுக்களின் மோதல்கள், அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள், போதைப்பொருள் பயன்பாட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகின்றது. துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், அதன் பின்னணிகளும் இலங்கையில் 2024ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தத் சம்பவங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்தத் துப்பாக்கி சூடு சம்பவங்களில் 46 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தது. இந்த நிலையில், இலங்கையில் 2025ஆம் ஆண்டின் இதுவரையான 63 நாட்களில் 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் 12 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் திட்டமிட்ட நிழலுலக குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவை எனவும், ஏனைய 7 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்னைகளின் விளைவாக ஏற்பட்டவை எனவும் போலீஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தொடர்பாகவும், மொத்தமாக 64 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே அதிகம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இதன்படி, திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களுடன் தொடர்புடைய 50-க்கும் அதிகமான சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்கள் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸாரிடம் வினவியது. ''இந்தச் சம்பவங்கள் குறித்து இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிவரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டே கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அதைத் தற்போதைக்கு சரியாகக் கூற முடியாது'' என போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார். ரமலான்: நோன்பு இருக்கும் நேரத்தில் சோர்வின்றி உடற்பயிற்சி செய்வது எப்படி?47 நிமிடங்களுக்கு முன்னர் தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?44 நிமிடங்களுக்கு முன்னர் 2025 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பட மூலாதாரம்,NALINTHA JAYATHISSA FACEBOOK படக்குறிப்பு,அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கொழும்பு புதுகடை நீதிமன்ற சாட்சிக் கூண்டில் வைத்து, பிரபல நிழலுலக தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். வழக்கறிஞர் வேடத்தில் வந்த ஆண் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நிலையில், 8 மணிநேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபருடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணைத் தேடி, 11 போலீஸ் குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை சட்ட புத்தகத்திற்குள் மறைத்து மிக சூட்சமமான முறையில் இஷாரா செவ்வந்தியே கொண்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிரதான சூத்திரதாரியாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 12 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், போலீஸாரினால் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் உயிருக்கு, நிழலுலக எதிர்தரப்பினால் ஆபத்து காணப்படுகின்றமை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவிற்குத் தகவல் கிடைத்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், மித்தெனிய பகுதியில் கடந்த 18ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, மகன், மகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூவரும் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் 39 வயதான தந்தை, 9 வயதான மகன், 6 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்திருந்தனர். கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்தார். அதுமாத்திரமன்றி, பமுனுகம, மினுவங்கொடை, வெலிகம, கல்கிஸ்ஸை, அவுங்கல, இனிதும, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர் எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 கிழக்கு மாகாணத்தில் என்ன நடக்கின்றது? பட மூலாதாரம்,Special Arrangement ''திட்டமிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் குழுக்கள் செயற்படும் இரண்டு இடங்களை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளோம். ஒன்று மட்டக்களப்பு. மற்றைய இடம் வட மாகாணம். சில தரப்பினரால் தமக்கு செயற்படுத்தக்கூடிய திட்டமிட்ட குழுக்களை உருவாக்கியுள்ளனர். மட்டக்களப்பில் அவ்வாறான குழுவொன்று உள்ளது. யாழ்ப்பாணத்தில் அவ்வாறான சிறு குழுக்களை உருவாக்கியிருந்தனர். இவற்றை ஒரே நேரத்தில் செயற்படுத்துவதன் பின்னணியில் ஏதோவொரு சூழ்ச்சி காணப்படுகின்றது'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 25ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் (மார்ச் 4) அறிவித்துள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரயம்பதி கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 03) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார். கடலில் மிதந்து வந்த மர்மப் பொருளொன்று வெடித்ததிலேயே இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்ச நிலையை உருவாக்கினாலும், அது திட்டமிட்ட பாரதூரமான சம்பவம் அல்லவென்று பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து வெளியிட முற்பட்ட வேளையில், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?43 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா யுக்ரேனுக்கு ராணுவ உதவியை நிறுத்தியதன் பின்னால் உள்ள அரசியல் கணக்கு இதுவா?4 மார்ச் 2025 பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ''கௌரவ சபாநாயகர் அவர்களே! மிக முக்கியமான ஒரு விடயத்தை இந்தச் சபையில் எழுப்ப வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஆரயம்பதி பிரதேசத்தில் கத்தியால் வாள்வெட்டு சம்பவமொன்று நடந்தது. அதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (மார்ச் 03) இரவும் கல்லடியில், மட்டக்களப்பு நகரப் பகுதியில் ஒரு வாள்வெட்டு குழுவினால் வாள்வெட்டுச் சம்பவமொன்று நடந்திருக்கின்றது'' என இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட சபாநாயகர், ''சபை ஒத்தி வைப்பு வேளையில் இது தொடர்பில் உரையாற்றுங்கள். இது தேசிய பிரச்னை கிடையாது'' எனக் கூறிய நிலையில், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. ''ஜனாதிபதி அவர்களும் அண்மையில் சொன்னார். மட்டக்களப்பு மாவட்டத்திற்குள்ளே சில குழப்பங்கள் நடக்கலாம், இந்தப் பாதாள உலக குழுக்களினால். நேற்றைய தினம் இரவு நேரத்தில் கல்லடி பகுதியில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு ஆரயம்பதியில் நடந்திருக்கின்றது'' என்று பிரச்னையைக் கூற இராசமாணிக்கம் சாணக்கியன் மீண்டும் முயன்ற வேளையில், 'சந்தர்ப்பத்தை வழங்க முடியாது'' என சபாநாயகர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து, சபையில் மீண்டும் அமளிதுமளி ஏற்பட்டதை அடுத்து, அமளிதுமளியில் ஈடுபடுவோரை சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என சபாநாயகர் எச்சரித்திருந்தார். ''எமது பிரதேசங்களிலுள்ள மக்களை வாள்களைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டுகின்றார்கள். இந்தப் பிரச்னைகளை இந்த இடத்தில் கூறாமல் எங்கு சென்று கூறுவது? தயவு செய்து நாங்கள் கூறுவதைக் கேளுங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். நான் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். வேறு நபர்கள் கேட்டால் மணித்தியால கணக்கில் பேசுவதற்கு இடமளிக்கின்றீர்கள். ஏன் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்க முடியாது? நாங்கள் எழுந்தவுடன் ஏன் ஒலிவாங்கியை எங்களுக்கு வழங்க முடியாது. ஏன் நாங்கள் தமிழ் மொழியில் பேசுவதை உங்களால் கேட்க முடியாதா?" என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரைப் பார்த்து ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய நிலையில், ''அது இந்தச் சபையின் நடைமுறை' என சபாநாயகர் பதிலளித்திருந்தார். ''இந்தச் சம்பவம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றைக் கொண்டு வர முடியும்'' என சபாநாயகர் மீண்டும் சபைக்கு அறிவித்திருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சபையில் கருத்துகளை வெளியிட சந்தர்ப்பத்தை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தனர். இருந்த போதிலும், அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காது, சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு பதில் வழங்கியிருந்தார். எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து அவசரமாக கவனத்திற்குக் கொண்டு, இந்தப் பிரச்னைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேட்டுக்கொண்டார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?4 மார்ச் 2025 இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற கேரள நபர் சுட்டுக் கொலை - எல்லையில் என்ன நடந்தது?5 மார்ச் 2025 நிழலுலக குழுக்களின் மோதல், வாள்வெட்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? பட மூலாதாரம்,PARLIAMENT LIVE படக்குறிப்பு,இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சமூகத்தில் எழுந்துள்ள கேள்விக்கு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் பதில் வழங்கியிருந்தார். ''தேசியப் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. பொது மக்களின் உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகிறது. மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசாங்கம் செயற்படவில்லை என்றதைப் போன்றதொரு விடயத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. இந்த நிழலுலக மோதல்களில் எந்தவொரு சாதாரண மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், நிழலுலக மோதல்கள் காரணமாக சமூகத்தில் அச்ச நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், எந்தவொரு சாதாரண பொது மக்களினது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்போ அச்சுறுத்தலோ ஏற்படவில்லை. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இரண்டு விடயங்களை நாங்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளோம். ஒன்று இனவாதம். மற்றொன்று அடிப்படைவாதம்" என்று ஜனாதிபதி கூறினார். மேலும், "யுத்தத்தினால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்பட்டமையானது, அதனுள் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் காணப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில், அதிலம் இனவாதமும் அடிப்படைவாதமும் காணப்பட்டன. இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தைத் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்" என்று குறிப்பிட்டார். திட்டமிட்ட குற்றங்கள், இனவாதத்தில் முன்னேற்றம் தொடர்பான சட்ட வரைபொன்று தேவைப்படுவதாகக் கூறிய ஜனாதிபதி, நிழலுலக குழுக்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்று தேவைப்படுவதாகத் தெரிவித்தார். "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது ஒழிக்கும் கொள்கையிலேயே இருக்கின்றோம். நிழலுலக குழுக்கள் மற்றும் இனவாத செயற்பாடுகளைத் தடுப்பற்கு சாதாரண சட்டம் போதுமானதாக இல்லாத பட்சத்தில், அதற்காகப் புதிய சட்டம் தேவைப்படுகின்றது. அவ்வாறான புதிய சட்டத்தைக் கொண்டு வருவதன் ஊடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம்'' என்றும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c984jzm8371o
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை தெற்கு ஜோர்ஜியாவில் கரை ஒதுங்கியது Published By: Digital Desk 3 05 Mar, 2025 | 04:56 PM 2020 ஆம் ஆண்டு முதல் அந்தாட்டிக்காவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வந்த A23a என அறியப்படும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஒரு டிரில்லியன் மெற்றிக் தொன் (1.1 டிரில்லியன் டன்) எடையுள்ள A23a தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசமான தெற்கு ஜோர்ஜியா தீவில் கரை ஒதுங்கியுள்ளதாக செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் தேசிய துருவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த பனிப் பாறையை அளவிட்டப்போது 3,672 சதுர கிலோமீட்டர் (1,418 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருந்தது. இது ரோட் தீவை விட சற்று சிறியதும் லண்டனை விட இரண்டு மடங்கு பெரியதுமாக காணப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு அந்தாட்டிக்காவிலுள்ள ஃபில்ச்னர் பனிக்கட்டியிலிருந்து உடைந்தது. அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகர ஆரம்பித்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அது கடலுக்கடியில் உள்ள ஒரு மலையைச் சுற்றி பல மாதங்களாக சிக்கிக் கொண்டது. இதனால் வடக்கு நோக்கி அதன் எதிர்பார்க்கப்பட்ட பயணத்தை தாமதப்படுத்தியது. ஆனால் பனிப்பாறை கரையிலிருந்து 90 கிலோமீட்டர் (56 மைல்) தொலைவில் கண்டத் தகட்டில் தரையிறங்குவது போல் தோன்றுவதால் இந்தக் கவலைகள் குறைந்துவிட்டன. "பனிப்பாறை அப்படியே இருந்தால், தெற்கு ஜோர்ஜியாவின் உள்ளூர் வனவிலங்குகளை குறிப்பிடத்தக்களவு பாதிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," என பிரிட்டிஷ் அந்தாட்டிக் சர்வேவின் கடல்சார் ஆய்வாளர் ஆண்ட்ரூ மெய்ஜர்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாறாக, அதன் வருகை வனவிலங்குகளுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தக்கூடும். "நிலத்தடிப்படுத்தல் மற்றும் அதன் உருகலால் தூண்டப்படும் ஊட்டச்சத்துக்கள், கவர்ச்சிகரமான பெங்குவின் மற்றும் சீல்கள் உட்பட முழு பிராந்திய சுற்றுச்சூழல் அமைப்பிற்கும் உணவு கிடைப்பதை அதிகரிக்கக்கூடும்" என்று அவர் தெரிவித்துள்ளார். பனிப்பாறை தற்போது அதன் கட்டமைப்பைப் பராமரித்து வருவதாகத் தோன்றினாலும், சமீபத்திய தசாப்தங்களில் இந்தப் பாதையில் சென்ற பெரிய பனிப்பாறைகள் "விரைவில் உடைந்து, சிதறி, உருகும்" என்று மெய்ஜர்ஸ் தெரிவித்துள்ளார். "தற்போது அது தரைமட்டமாகிவிட்டது, அதிகரித்த அழுத்தங்கள் காரணமாக அது உடைந்து போகும் வாய்ப்பு அதிகம், ஆனால் இதை கணிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது," என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார். "பெரிய பனிப்பாறைகள் இதற்கு முன்பு வடக்கே வெகுதூரம் சென்றுள்ளன - ஒன்று பெர்த் அவுஸ்திரேலியாவிலிருந்து 1000 கிலோ மீற்றர் தொலைவில் ஒருமுறை வந்தது - ஆனால் அவை அனைத்தும் தவிர்க்க முடியாமல் உடைந்து பின்னர் விரைவாக உருகும்." A23a இறுதியில் உடைந்து போகும்போது, அது உருவாக்கும் சிறிய பனிப்பாறைகள் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும், ஏனெனில் அவற்றைக் கண்டறிந்து கண்காணிப்பது ஒரு மெகாபர்க்கை விட கடினமாக இருக்கும் என்று மெய்ஜர்ஸ் கூறினார். “மீன்பிடியாளர்களுடன் கலந்துரையாடல்கள், கடந்த கால பெரிய பனிப்பாறைகள் சில பகுதிகளை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அதிக அல்லது குறைவான வரம்புகளை சில காலமாக விலக்கி வைத்திருக்கின்றன, ஏனெனில் சிறிய - ஆனால் பெரும்பாலும் மிகவும் ஆபத்தான பனிப்பாறை துண்டுகளின் எண்ணிக்கை காரணமாக,” என தெரிவித்துள்ளார். இந்த குறிப்பிட்ட பனிப்பாறை பனி அடுக்கின் இயற்கையான வளர்ச்சி சுழற்சியினால் உடைந்து போயிருக்கலாம், புதைபடிவ எரிபொருள் சார்ந்த காலநிலை நெருக்கடியால் அல்ல என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் புவி வெப்பமடைதல் அந்தாட்டிக்காவில் கவலைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது உலகளாவிய கடல் மட்ட உயர்வுக்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/208339
-
டிரம்ப்; அமெரிக்க காங்கிரசிற்கான உரை
அமெரிக்க காங்கிரசிற்கான உரை - உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிரான கடும் தொனியை குறைத்தார் டிரம்ப்,- கிறீன்லாந்திற்கு தொடர்ந்தும் எச்சரிக்கை Published By: Rajeeban 05 Mar, 2025 | 04:41 PM உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் தயார் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். அமெரிக்க காங்கிரசிற்கான உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று உக்ரைன் ஜனாதிபதியிடமிருந்து மிக முக்கியமான கடிதம் கிடைத்தது என தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்தை ஏற்படு;த்துவதற்காக மிகவிரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளது, உக்ரைன் மக்களை விட வேறு எவருக்கும் சமாதானம் மிக முக்கியமானதாகயில்லை என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றுவதற்கு நானும் எனது அpணியினரும் தயாராகவுள்ளோம் என ஜெலென்ஸ்கி கடிதத்தில் தெரிவித்துள்ளதை டிரம்ப் வாசித்துள்ளார். ரஸ்யாவுடன் தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப் அவர்கள் பேச்சுவார்த்தைகளிற்கு தயார் என்பதை வெளிப்படுத்தும் வலுவான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார். அது அழகானது இல்லையா? இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவதற்கான தருணம் இது, கொலைகளை நிறுத்துவதற்கான தருணம் இது, அர்த்தமற்ற யுத்தத்தை நிறுத்துவதற்கான தருணம் இது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்க காங்கிரசிற்கான தனது உரையில் டிரம்ப் எந்த வழியிலாவது கிறீன்லாந்தினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவேன் என தெரிவித்துள்ளார். கிறீன்லாந்து மக்களை உள்வாங்குவதற்கு அமெரிக்கா தயார் என அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்காகவும் உலகின் பாதுகாப்பிற்காகவும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிறீன்லாந்து அமெரிக்காவிற்கு அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் எந்த வழியிலாவது நாங்கள் அதனை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவோம் என தெரிவித்துள்ளார். கிறீன்லாந்து மக்களிற்கு என்னிடம் இன்று செய்தியொன்று உள்ளது உங்கள் தீர்மானத்தை நீங்களே தீர்மானிக்கும் உரிமையை நாங்கள் வலுவாக ஆதரிக்கின்றோம். நீங்கள் விரும்பினால் நாங்கள் உங்களை அமெரிக்காவிற்குள் வரவேற்போம் பாதுகாப்பாக செல்வந்தர்களாக வைத்திருப்போம் என அவர் தெரிவித்துள்ளர். https://www.virakesari.lk/article/208367
-
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? பட மூலாதாரம்,TNDIPR கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு புதன்கிழமையன்று (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எந்தக் கட்சி, என்ன பேசியது? என்ன தீர்மானிக்கப்பட்டது? இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் அடுத்த மறுசீரமைப்பு 2026க்கு பிறகு நடத்தப்பட வேண்டுமென 2001ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் நடக்கும். ஆகையால், 1970களில் இருந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாகக் குறைக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சுட்டிக்காட்டினார். இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். மொத்தம் 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வெற்றிக் கழகம், அ.ம.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இதில் பங்கேற்றன. இந்தக் கூட்டம் மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை பத்து மணிக்குத் தொடங்கியது. எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 இலங்கையில் பள்ளி செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருவது ஏன்? என்ன காரணம்?7 மணி நேரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் பேசியது என்ன? பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு,தொகுதி மறுவரையறைக்கான காலத்தை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோதி நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டுமென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். "தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்தவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பு என்ற கத்தி தமிழ்நாட்டின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகள் இருக்கின்றன. இவை குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டில் (2026) மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கணக்கிட்டுத்தான் செய்வார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது," என்றார் அவர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "இப்போது உள்ள 543 தொகுதிகள் தொடர்ந்தால், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்கிறார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள்தான் கிடைக்கும். 12 தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த இரு முறைகளிலும் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்," என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Handout படக்குறிப்பு,"தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு 10 தொகுதிகள்தான் கிடைக்கும். 12 தொகுதிகளை இழக்க நேரிடும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆகையால், இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்கள் தொகை அடிப்படையில், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, 'மக்கள் தொகை கட்டுப்பாடு' எனும் கொள்கையை, முனைப்பாகச் செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாகவே அமையும்" என்று குற்றம் சாட்டினார். "இந்தத் தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது எழுப்பப்படும் குரலையே, மத்திய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும்" என்று கூறியதோடு, முதலமைச்சர் சில தீர்மானங்களை முன்மொழிந்தார். 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?8 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?6 மணி நேரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மனங்கள் பட மூலாதாரம்,TNDIPR அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்: இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான 'நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை' இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது. கடந்த 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பேய் உறுதி அளித்தார். தற்போதும் இந்த வரையறை 2026இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கைளையும் அவை சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல - மக்கள் மத்தியில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 'கூட்டு நடவடிக்கைக் குழு' ஒன்றை அமைத்திட வேண்டும். திருவண்ணாமலை, ராஜபாளையத்தில் பூமிக்கடியில் தங்கம்: ஆய்வில் தகவல் - இன்றைய முக்கிய செய்திகள்5 மார்ச் 2025 ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள்5 மார்ச் 2025 மற்ற கட்சிகளின் கருத்து என்ன? பட மூலாதாரம்,HAndout முதலமைச்சர் பேசி முடித்த பிறகு ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அ.தி.மு.க சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் கடுமையாக முயற்சி செய்து, மக்கள் தொகையைக் கடுமையாகக் குறைத்திருக்கின்றன. ஆனால், இதுபோன்ற கடும் முயற்சிகளை வட மாநிலங்கள் செய்யாததால் அந்த மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது," என்று கூறினார். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு அது தண்டனையாக அமையும் என்பதால், முன்பு அந்த முற்சிகளை மத்திய அரசு ஒத்திவைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, இப்போது மறுசீரமைப்பு முயற்சிகளை மீண்டும் மத்திய அரசு எடுத்து வருகிறது எனவும், தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், "ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு 7.18 சதவீதத்தில் இருந்து குறையக் கூடாது என்பதையும் பிரதமர் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தைத் திருத்த வேண்டும்" என்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பேசிய அன்புமணி ராமதாஸ், "சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது தமிழ்நாட்டிற்கு ஒரு தொகுதியைக்கூட குறைக்க மாட்டோம் என்றார். அதே நேரம் உத்தர பிரதேசம், பிகார் போன்ற வட மாநிலங்களுக்கு எவ்வளவு தொகுதிகளை உயர்த்துவோம் என்பதைச் சொல்லவில்லை. ஆகவே மத்திய அரசு அவர்களுக்குள் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. முதல்வர் அத்தனை தென் மாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து, சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். மேலும், இதேபோல, மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். பட மூலாதாரம்,handout வி.சி.க. தலைவர் திருமாவளன் பேசும்போது, "மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுடன், இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பொறுப்புணர்வோடு இந்தக் கூட்டம் நடக்கிறது. ஐம்பது மாநிலங்களைக் கொண்ட நாடு அமெரிக்கா. நூறு ஆண்டுகளாக ஒரே எண்ணிக்கையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள். அங்கேயும் இதேபோன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகம்தான் இருக்கிறது. ஆகவே நம் முதல் நிலைப்பாடு எண்ணிக்கையை மாற்ற வேண்டாம் என்பதாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், எண்ணிக்கை சமநிலை மாறக்கூடாது. அதில் உறுதியாக இருப்போம். முதல்வர் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்கத் தீர்மானித்திருக்கிறார். அது தேவை எனக் கருதுகிறேன்" என்றார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படும்? - அமெரிக்கர்களுக்கும் கூட சிக்கலா?4 மார்ச் 2025 பெருவெற்றிகளை பெற்ற ஔரங்கசீப் முகலாய பேரரசு வீழ்ச்சிக்கு காரணமானது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை4 மார்ச் 2025 பட மூலாதாரம்,X/@SPK_TNCC படக்குறிப்பு,காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை பேசும்போது, "தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் பேசும்போது, தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற மாட்டோம் என்கிறார். ஆனால், உத்தர பிரதேசத்திற்கோ, பிகாருக்கோ இடங்களின் எண்ணிக்கையை மாற்ற மாட்டோம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆகவே தமிழ்நாட்டின் உரிமைக்காக அனைவரும் ஒத்துழைப்போம்," என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "மக்கள் தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். எந்தத் தேவையும் இன்றி நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பதை யார் பேசுகிறார்கள், எதற்காகப் பேசுகிறார்கள் என்பது கவனத்திற்கு உரியது," என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், "மாநில உரிமைகளில் தலையிடுவதும், வருடாந்திர பட்ஜெட்டில் தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிப் பகிர்வை மறுப்பதும், பேரிடர்க் காலங்களில் நமது கூக்குரலுக்கு செவி சாய்க்காததும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பதும் என் பேச்சைக் கேட்டால்தான் நிதி தருவேன் என மிரட்டுவதும், ஒரு ஒன்றிய அரசின் செயலாகத் தெரியவில்லை. எப்போதுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் கொண்டு வராமல் இருப்பதுதான் ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் இந்தியாவின் பன்முகத் தன்மையையும் காக்கும்," என்றார். கூட்டத்தில் பேசிய அனைவருமே முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தே பேசினர். இதற்குப் பிறகு கூட்டம் முடிவுக்கு வந்தது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?27 பிப்ரவரி 2025 பூமியை நெருங்கி வரும் பிரமாண்ட 2024 YR4 விண்கல் நிலவில் மோதப் போகிறதா? நாசா புதிய தகவல்26 பிப்ரவரி 2025 'இதுவொரு நாடகம்' - ஜெயக்குமார் விமர்சனம் படக்குறிப்பு,அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. தொகுதி மறுவரையறை செய்ய நிதியும் ஒதுக்கப்படவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவே இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் என்ற நிலையில் எதற்கு எந்த அவசரம்? நாங்கள் மாநில உரிமையைக் காப்பதற்காக தீர்மானத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தோம். அது வேறு விஷயம். ஆனால், மாநில உரிமையை பற்றிப் பேசுவதற்கு, தி.மு.கவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த முகாந்திரமும் இல்லை," என்று விமர்சித்தார். மேலும், "இவர்கள் கச்சத்தீவு, நீட் தேர்வு, காவிரி போன்ற விஷயங்களில் உரிமையைப் பறிகொடுத்தார்கள். பொதுப் பட்டியலுக்குச் சென்ற கல்வியை, 17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கேற்றபோது மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இப்போது இருக்கும் சூழலைப் பார்க்கும்போது, ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றும் கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டிற்கு உள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவம் நீடிக்க வேண்டும் என்பதும், இது குறித்து பிரதமர் எழுத்து மூலமாக உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை அதற்கேற்றபடி திருத்த வேண்டும்" என்ற விஷயமும் தீர்மானத்தில் இணைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c78eng74z03o
-
”இந்தியா விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் சட்டவிரோத மீன்பிடியை இந்தியா தடுக்க வேண்டும்! - அமைச்சர் பிமல் Published By: Vishnu 05 Mar, 2025 | 08:43 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின் விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவான மீனவர்கள் உள்ளார்கள். அத்துடன் மீன்பிடி மற்றும் அதனுடனான தொழில்களில் அதிகளவானோர் ஈடுபடுகிறார்கள். வடக்கு பகுதியில் வாழும் மீனவர்கள் கஷ்டமான வாழ்க்கை முறைமையில் தான் உள்ளார்கள். கடற்றொழிலை மேம்படுத்துவதை போன்று அந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் அதற்கான பொறுப்பு கடற்றொழில் வளங்கள் அமைச்சுக்கு உண்டு. வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் அதனுடான இணை கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. வடக்கில் அதிகளவான கடற்றொழிலுடன் தொடர்புடைய வளங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் தெற்கில் உள்ள மீனவர்களை காட்டிலும் வடக்கில் உள்ள மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் கஸ்டப்படுகிறார்கள். இந்திய மத்திய அரசிடமும், தமிழ்நாடு அரசிடமும் விசேட கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் இலங்கையர்கள் படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் போது அவுஸ்திரேலிய அரசாங்கம் ' படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு வர வேண்டாம்' என்று பல விளம்பரங்களை அழுத்தமாக வெளியிட்டது. அத்துடன் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. மீன்பிடி கைத்தொழிலை தவிர்த்து வடக்கு மக்களுக்கு வேறு எந்த கைத்தொழில்களும் கிடையாது. வடக்கு மக்களின் ஒரே ஜீவனோபாயத்தை இல்லாதொழிக்க இடமளிக்க வேண்டாம் என்று இந்திய அரசிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள சட்டங்களை செயற்படுத்துங்கள். இவற்றை செயற்படுத்தாமல் வடக்கு மக்களின் நலன்புரி பற்றி பேச முடியாது. இதன்போது எழுந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டடணியின் தலைவர் மனோ கணேசன், உங்களின் கருத்து மிகவும் முக்கியமானது, இந்திய பிரதமர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். ஆகவே தயவு செய்து பேச்சுவார்த்தையில் ஒழுங்கில் இந்த விடயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். வடக்கு மக்களுக்கு இது பாரியதொரு பிரச்சினை. எமது சொத்துக்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள். யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகி விட்டது.இந்தியா உதவி செய்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள் நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். என்றார். தொடர்ந்து உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, இது பாரதூரமான பிரச்சினை. அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்தினால் நிறுத்த முடியும். இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல உதவிகளை செய்கிறது. வடக்கு மக்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வழங்கும் உதவிகள் உண்மையானதாக அமையாது. இந்திய மீனவர்களின் எல்லை மீறல் செயற்பாடு நாளாந்த பிரச்சினையாகவே காணப்படுகிறது. இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்க வேண்டும். இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். https://www.virakesari.lk/article/208391
-
பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்பீட் கன்”
05 Mar, 2025 | 05:29 PM (எம்.வை.எம்.சியாம்) வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் (Speed Guns ) உபகரணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் இந்த உபகரணத்தை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் எனவும் இதன்போது பதிவு செய்யப்படும் காணொளியை நீதிமன்றத்தில் வழக்கின் போது சாட்சியமாக பயன்படுத்த முடியும் எனவும் வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரனகல தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் இந்த வருடத்தின் பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 341 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை விபத்துக்களினால் உயிரிழப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. வீதி விபத்துக்கள் ஏற்பட பிரதான காரணம் அதிக வேகமாகும். எனவே வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் Speed Guns பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் நாட்டில் இவ்வாறான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இவை அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த உபகரணத்தை வெற்றிகரமான பயன்படுத்த முடியும். 1200 கிலோ மீட்டர் தூரத்தில் வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை இதன் மூலம் கண்டறியலாம். இதன்போது பதிவு செய்யப்படும் காணொளியை நீதிமன்றத்தில் வழக்கின் போது சான்றாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் வாகனம் செலுத்தப்பட்ட வேகம் சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனங்களின் இலக்கத்தகடுகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எனவே தவறிழைக்கும் தரப்பினர் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. தற்போது 30 ஸ்பீட் கன்கள் Speed Guns பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அவை அதிக வீதி விபத்துக்கள் பதிவாகும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 15 உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஒட்டுமொத்தமாக 45 பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு இவை வழங்கப்படவுள்ளன. இந்த உபகரணம் ஒன்றுக்காக அரசாங்கத்தினால் 33 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/208369
-
நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது?
பட மூலாதாரம்,Ranyarao/X படக்குறிப்பு,ரன்யா ராவ் கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி செய்தியாளர், பெங்களூரு 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழில் வாகா திரைப்படத்திலும், கன்னட மொழியில் இரு படங்களிலும் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ், துபையில் இருந்து திரும்பியபோது 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரன்யா ராவ், கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகள். பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு, செவ்வாய்க்கிழமை (மார்ச் 04) தங்கத்துடன் ரன்யா ராவ் வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது. ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது? உலகெங்கிலும் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பல ஆயிரம் கிலோ தங்கம் - இந்தியாவில் விலை குறைவது எப்போது? ஜமாஜாமா: 'நிலத்தடியில் 3 மாதம், ஒரு தளத்தில் எலும்புகள்' - தங்கச் சுரங்கத்தை கட்டுப்படுத்தும் இரக்கமற்ற கும்பல் கோலார் தங்க வயலில் தங்கம் எடுத்த தொழிலாளர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு "அவர் தங்கக் கட்டிகளை அவரது உடலில் மிகவும் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருந்தார்" என்று வருவாய் புலனாய்வுத் துறை புதன்கிழமை (மார்ச் 05) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவரது உடலில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறப்பு பெல்ட்டில், இந்த தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர ரன்யா ராவிடம் இருந்த 800 கிராம் தங்க நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்ட பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்டனர். அவரது வீட்டில் இருந்து 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும், 2.67 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. "1962 சுங்கச் சட்டத்தின் கீழ் இந்தப் பெண் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மொத்தமாக 17.29 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில், இந்த முறை சிக்கிய 14.8 கிலோ தங்கமே பெருமதிப்புடையது என்று வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கூறியுள்ளது. அப்பாராவ்: 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்தவரின் குடும்பத்தை தேடிச் சென்ற பிபிசி - தெரிந்தது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் எஃப்-35 அல்லது சுகோய்-57 இரண்டில் இந்தியா எந்த போர் விமானத்தை வாங்கும்? அமெரிக்கா - ரஷ்யா போட்டி5 மார்ச் 2025 யார் இந்த ரன்யா ராவ்? பட மூலாதாரம்,Ranyarao/X தற்போது 32 வயதாகும் நடிகை ரன்யா ராவ், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக 'மாணிக்யா' என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் ரன்யா திரை உலகில் தனக்கான முத்திரையைப் பதித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக "வாகா" என்ற திரைப்படத்தில் நடித்தார். 2017ஆம் ஆண்டில், பிரபல கன்னட நடிகர் கணேஷாவுக்கு ஜோடியாக 'பட்கி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். "கடந்த சில ஆண்டுகளாக, அவர் திரைப்படத் துறையில் அதிகமாக ஈடுபடவில்லை. ஆனால் அவர் பணியாற்றிய படங்களில், அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்" என்று பத்திரிகையாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளரான சுனைனா சுரேஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். ரன்யா பொறியியல் படித்து முடித்த பிறகு, திரையுலகில் அடியெடுத்து வைத்ததாக கன்னட திரையுலகைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு நபர் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரன்யா ராவ். அவரது தாயார், காபி செடி விளைவிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல்துறையின் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக உள்ளார். ரன்யா ராவின் நடவடிக்கைகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தனது மகள் மற்றும் மருமகனின் வணிகம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவரது தந்தை ராமச்சந்திர ராவ் உள்ளூர் ஊடகத்திடம் கூறினார். ரன்யா ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ராமச்சந்திர ராவின் அதிகாரப்பூர்வ கருத்து கிடைத்தவுடன் இந்தச் செய்தி புதுப்பிக்கப்படும். கிரிப்டோ ரிசர்வ்: டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?5 மார்ச் 2025 ரன்யா ராவ் பிடிபட்டது எப்படி? பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,ரன்யா ராவிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் படத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. ரன்யா ராவ் அடிக்கடி துபைக்கு சென்று வருவதால் அவர் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் பார்வையில் சிக்கியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 15 நாட்களில் நான்கு முறை அவர் துபைக்கு சென்று வந்ததால், அவர் மீதான சந்தேகம் மேலும் அதிகரித்தது. மற்ற பயணிகள் குடியேற்ற ஆவண சரிபார்ப்பு செயல்முறை வரிசை வழியாகச் செல்ல வேண்டியிருந்த நிலையில், ரன்யா ராவ் அந்த வழியில் செல்லாமல் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தான் காவல்துறை இயக்குநர் ஜெனரலின் மகள் என்றும், தனது அடையாளத்தை நிரூபிக்க ஒரு ப்ரோட்டோகால் கான்ஸ்டபிள் எப்போதும் தன்னுடன் இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகளிடம் ரன்யா ராவ் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ப்ரோட்டோகால் கான்ஸ்டபிள் அல்லது காவல்துறை அதிகாரிகளைக் குறை கூறுவது தவறு என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y0760gznko