Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 7 07 JAN, 2025 | 09:03 AM கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் திங்கட்கிழமை (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்டீரியாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கால்நடைகளின் சிறுநீருடன் நீர் கலந்திருக்கும் பகுதிகளில் மனிதர்கள் நடமாடும் போது தோலில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் அல்லது காயங்கள் ஊடாக குறித்த கிருமி பரவுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதன் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், தலைவலி, கண் சிவப்பாக இருத்தல், உடல் நோவு, தசை நோவு, வயிற்று நோவு, இருமல், மூச்சு எடுத்தலில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும். எனவே காய்ச்சல் ஏற்பட்டாலும் இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இதைவிட தற்போதைய பனியுடனான காலநிலையில் சளி அதிகரித்து நிமோனியா போன்ற காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு அதனைவிட மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதிலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/203177
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை (கோப்புப்படம்) சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 என்ற அளவில் மேற்பரப்புக்கு கீழே 10 கிலோமீட்டர் (சுமார் ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகளின்படி, பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு சிறிய நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளன. அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. ஒரு புவியியல் பிழைக் கோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் பூகம்பங்கள் பொதுவானவை திபெத்தின் புனித நகரங்களில் ஒன்றாக ஷிகாட்சே கருதப்படுகிறது. இது திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும். அவரது ஆன்மீக அதிகாரம் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக உள்ளது நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து விழும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியாகியுள்ளன. சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறினார். 5 என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது"என்று ஜியாங் கூறினார். நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது மற்றும் ஆளில்லா விமானங்களையும் அனுப்பியுள்ளது. அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் அதிர்வு இதற்கிடையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக ஏஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். நிலநடுக்க அதிர்வுக்கு பிறகு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புகளை நேபாள அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக ஏஃப்பி தெரிவித்துள்ளது. "அதிர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, இங்குள்ள அனைவரும் கண்விழித்துகொண்டனர். இதுவரை சேதமும் ஏற்பட்டதாக எந்த தகவலுக்கு எங்களுக்கு வரவில்லை" என்று எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள நாம்சே பகுதியின் அரசு அதிகாரி ஜகத் பிரசாத் ஏஃப்பியிடம் தெரிவித்தார். ''ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை'' என்கிறார் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்ட உதவி தலைமை மாவட்ட அதிகாரி ரூபேஷ் விஸ்வகர்மா. " பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நான் வெளியே வந்து பார்த்தேன், இங்கு எந்த சேதமும் இல்லை. லோபுச்சேவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று விஸ்வகர்மா பிபிசி நேபாள சேவையிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார். தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் செய்தித் தொடர்பாளர் மனிகா ஜா பிபிசியிடம், "இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம் அல்ல, சீனாதான். ஆனால் அதன் தாக்கம் நேபாளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது." என்றார். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியானது, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதும் புவியியல் பிழைக் கோடுக்கு அருகே அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி அடிக்கடி நில அதிர்வுகளுக்கு உள்ளாகிறது. 2015ம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே 7.8 ரிக்டர் அளவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த துயர நிகழ்வில் கிட்டத்தட்ட 9,000 மக்கள் இறந்தனர் மற்றும் 20,000 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj90mv1399yo
  3. நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 7 07 JAN, 2025 | 08:47 AM நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும். அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஜனாபதிபதி அநுரகுமார திசாநாயக்க சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் குறித்து விசேடமாக சுட்டிக்காட்டியிருந்தார். 'அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்திற்குள்ளும் ஊழல் மோசடி வீண் விரயம் என்பன பரவியுள்ளன. எமது முழு நாட்டுக்குள்ளும் புற்றுநோயினைப் போல பரவியுள்ளது. ஊழல் மோசடியை நிறுத்த நாம் பாரிய முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பெரும் பணி உள்ளது. அதற்கான பணியை ஆற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்திய வழக்குகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தன்மை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார். அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை வீழ்ச்சியடையச் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும் சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதனை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/203172
  4. இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு கம்பீரின் தவறான முடிவுகளே காரணமா? விஸ்வரூபம் எடுக்கும் கேள்விகள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,மனோஜ் சதுர்வேதி பதவி,மூத்த விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி இந்தி 6 ஜனவரி 2025 இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் தொடரை இழந்ததை தொடர்ந்து, அணியில் மாற்றம் தேவை என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதோடு, அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீதும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பல வெற்றிகளை குவித்த இந்திய அணி, திடீரென துவண்டு போய் காணப்படுகிறது. கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் அதன் பிறகு, நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய அணி `ஒயிட் வாஷ்' ஆனது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா அணி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை எதிர்கொண்டது. மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டி 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா? கம்பீரின் தவறான முடிவுகளே காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது என்பதே உண்மை. ஆனால் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலிருந்து இந்திய அணியின் பேட்டிங்கின் பலவீனம் வெளிப்படத் தொடங்கியது. மூன்றாவது டெஸ்டில் இந்தியா பலவீனமான பேட்டிங் காரணமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்டில் பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கொடுப்பதற்காக சுப்மன் கில் வெளியேற்றப்பட்டது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலவீனப்படுத்தியது. சிட்னி டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் இடம்பெறச் செய்தது தவறான முடிவு. இரண்டாவது சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுடன் பேட்டிங்கும் வலுப்பெறும் வகையில் ஆல்ரவுண்டராக கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த டெஸ்ட் போட்டி முழுவதும் அவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். பேட்டிங்கிலும் அவரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. ஆகாஷ்தீப் அல்லது ஹர்ஷித் ராணா போன்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிட்னியில் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும், இந்திய அணிக்கு சாதகமான முடிவுகள் கிடைத்திருக்கலாம். மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டியால் புதிய யூகம்5 ஜனவரி 2025 சச்சினால் ஒரே நாளில் பிரபலமான 10 வயது சிறுமி - ஜாகீர் கான் போன்று பந்துவீசும் இவர் யார்?31 டிசம்பர் 2024 கம்பீர், உதவியாளர்கள் மீது கவாஸ்கர் விமர்சனம் பட மூலாதாரம்,IZHAR KHAN/GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் கவாஸ்கர் பயிற்சியாளரின் விருப்பத்திற்கேற்பவே உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய உதவியாளர்களின் நியமனமும் அப்படி தான் நடந்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கவாஸ்கர் பேசுகையில், உதவியாளர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்க வேண்டும்' என்று கூறினார். பேட்டிங்கில் ஏன் முன்னேற்றம் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார். "நம்முடைய பேட்ஸ்மேன்களால் சிறப்பான பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாது என்பது கூடபரவாயில்லை. சில சமயம் பெரிய பேட்ஸ்மேன்களுக்கு கூட சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். ஆனால் சாதாரண பந்துகளை கூட அவர்களால் எதிர்கொள்ள முடியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது" என்று கவாஸ்கர் குறிப்பிட்டார். ஜூன்-ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில் இந்த உதவியாளர்களை தக்க வைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார் கவாஸ்கர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சி இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் தொடங்கும் என்றும், இந்த சுழற்சியின் இறுதிப் போட்டி ஜூன் 2027 இல் நடைபெறும் போது, அணியின் மூத்த வீரர்கள் யார் என்பதை மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்போதைய சூழலை மனதில் வைத்து இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார் கவாஸ்கர். டெஸ்ட் தொடர்களுக்கான சுற்றுப்பயணங்களின் போது பயிற்சி போட்டிகளை நடத்துவது தேவை என்று கவாஸ்கர் கருதுகிறார். சில காலமாக பயிற்சி ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. "சிறப்பாக விளையாடும் வீரர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாட விரும்பாமல் இருக்கலாம். ஆனால் ப்ளேயிங் லெவனில் இல்லாத வீரர்களை தயார்படுத்த இந்த போட்டிகள் மிகவும் முக்கியம். அந்த வீரர்கள் தேவைப்படும் நேரத்திற்கு ஏற்றவாறு தயாராக முடியும்." என்றார் கவாஸ்கர். 60 ஆண்டு பழமையான விருத்தாசலம் பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் கல்லூரி - தற்போதைய நிலை என்ன?6 ஜனவரி 2025 தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர்: என்ன நடந்தது?6 ஜனவரி 2025 கம்பீர் பயிற்சியின் கீழ் நடக்கும் அடுத்த டெஸ்ட் தொடரும் கடினமானது பட மூலாதாரம்,LIGHTROCKET VIA GETTY IMAGES படக்குறிப்பு,கௌதம் கம்பீர் வரயிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடருடன் கெளதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓராண்டு காலத்தை நிறைவு செய்வார். இதுவரை அவரின் பயிற்சியின் கீழ் நடந்த அனைத்து ஆட்டங்களையும் பார்க்கும் போது, டி20யில் மட்டும்தான் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர 10 டெஸ்ட்களில் மூன்றில் வெற்றியும், 6 தோல்வியும், ஒன்று டிராவும் ஆகியுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டில் இந்தியா தோல்வியடைந்தது, ஒன்று டையில் முடிந்துள்ளது. இங்கிலாந்தில் ஒரு தொடரில் விளையாடுவது எளிதல்ல. இங்கிலாந்தில் கம்பீரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றால், அவர் மீதான விமர்சனம் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. 'வெளிப்படையாகப் பேசத் தயக்கம்’ பட மூலாதாரம்,PATRICK HAMILTON/AFP படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை இந்த தொடரில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு சிறந்த இந்திய வீரர்களின் மோசமான ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனால் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அணியில் மாற்றம் வருமா என்பது குறித்து கேட்டபோது, கம்பீர், "இதை விவாதிப்பதற்கான சரியான நேரம் இது இல்லை. இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதே கேள்வி? விளையாட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. விளையாட்டின் ஃபார்ம் மாறுகிறது. வீரர்கள் மத்தியில் மாற்றம் ஏற்படுகிறது, அணுகுமுறை மாறுகிறது, எல்லாம் மாறுகிறது." "இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் எது நடந்தாலும் அது இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காகவே இருக்கும்" என்றார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அணி தொடர்பாக சில கடினமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதை கம்பீரின் இந்த கருத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர் தனது முடிவுகளை பற்றி இப்போது வெளிப்படையாக கூறவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. மூன்றே நாளில் முடிவுக்கு வந்த கடைசி டெஸ்ட் - கோலி, ரோஹித் பற்றி கம்பீர் கூறியது என்ன?5 ஜனவரி 2025 கோலி, ரோஹித் மட்டும்தானா? இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணமான 7 முக்கிய விஷயங்கள்5 ஜனவரி 2025 உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட அறிவுறுத்தும் கம்பீர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய அணி வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட முடியாத வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்தியா வரையறுக்கப்பட்ட ஓவர்கள் (டி20, ஒருநாள்) கொண்ட தொடர்களில் விளையாட உள்ளதாகவும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளதாகவும் கம்பீர் கூறினார். இப்போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள், வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இந்த போட்டிகளில் விளையாடினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் செயல்திறனை மேம்படுத்த முடியும். உண்மையில் முன்பு, வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவதன் மூலம் தங்கள் ஆட்டத்தின் குறைபாடுகளை மேம்படுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது வீரர்களின் விளையாட்டில் உள்ள குறைபாடுகள் நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் உள்ளன. இதற்குக் காரணம், இந்த குறைபாடுகளை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. உதாரணமாக, விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முயன்று அவுட் ஆகிறார். இந்த தொடரிலும் பலமுறை இதே முறையில் அவுட்டாகியுள்ளார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது, பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. (இந்த கட்டுரையில் இடம் பெற்ற கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvg6dg54d42o
  5. சென்னை பெங்களூரு குஜராத்தில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு: நிபுணர்கள் சொல்வது என்ன? 07 JAN, 2025 | 10:44 AM பெங்களூருஃசென்னை: தமிழ்நாடு கர்நாடகா குஜராத் உட்பட நாட்டில் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண வைரஸ்தான் அச்சப்படத் தேவையில்லை என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. கொரோன வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக உலகம் மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய புதிய தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் 2 ஹெச்எம்பிவி (HMPV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள பேப்டிஸ்ட் மருத்துவமனையில் டிசம்பர் கடைசி வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு முதலில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. மூச்சுக்குழாய் நிமோனியா தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3-ம் தேதி சளி காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 8 மாத ஆண் குழந்தைக்கு இதே வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஇ உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் கண்டறியப்பட்ட குழந்தை குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில் ‘‘ஹெச்எம்பிவி வைரஸ் பரவல் குறித்து பீதியடைய தேவையில்லை. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை நலமோடு வீடு திரும்பியுள்ளது. மற்றொரு குழந்தையும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பும். இந்த வைரஸ் புதிதாக கண்டறியப்பட்ட ஒன்று அல்ல. 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும்'' என்றார். இதற்கிடையே மூன்றாவது பாதிப்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தைக்கு இதே வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி சளி காய்ச்சல் இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு ஜனவரி 5-ம் தேதி ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 3 குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எப்படி பரவுகிறது? - மத்திய சுகாதாரத்துறை விடுத்த செய்திக் குறிப்பில் ‘‘இருமல் காய்ச்சல்இமூக்கடைப்பு தொண்டை வலி சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். இருமல் தும்மல் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. சிறு குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். வைரஸ் பரவியுள்ள இடங்களை தொட்டுவிட்டு பிறகு அப்படியே வாய் மூக்கு கண்களை தொடும்போது இந்த வைரஸ் உடலில் பரவுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹெச்எம்பிவி வைரஸால் தற்போது சென்னையில் ஒருவரும் சேலத்தில் ஒருவரும் என 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று ஆகும். இதைவிட இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டால்தான் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதனால் சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் புதிதாக வந்தது இல்லை. இதை பெரிதுபடுத்தி கூறுவதும் அச்சுறுத்துவதும் தவறான செயல் ஆகும். பெரும்பாலான குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் பரவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும்இ விழிப்புணர்வு நடவடிக்கையாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள்இ முதியவர்கள்இ இணை நோயாளிகள்இ எதிர்ப்பாற்றல் குறைப்பு சிகிச்சையில் இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம். இதன்மூலம் வைரஸ் தொற்றுகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சாதாரண வைரஸ்தான்: தமிழக சுகாதாரத் துறை கூறியதாவது: ஹெச்எம்பிவி வைரஸ் என்பது பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள சாதாரண வைரஸ் தொற்றுதான். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு வேண்டுமானால் நுரையீரலில் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதுவும் உரிய சிகிச்சை பெற்றால் குணமடைந்துவிடலாம். பெரியவர்களுக்கோஇ வளரிளம் பருவத்தினருக்கோ அது அச்சுறுத்தக் கூடிய பாதிப்பாக இருப்பதில்லை. இன்ஃப்ளூயன்சாஇ ஆர்எஸ்வி சுவாச தொற்றுகளை காட்டிலும் பலவீனமான நோயாகவே ஹெச்எம்பிவி உள்ளது. https://www.virakesari.lk/article/203191
  6. புதிய இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் Published By: DIGITAL DESK 2 06 JAN, 2025 | 05:28 PM இலங்கையின் 25 வது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவி ஏற்பின் பின் கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இந்த விஜயம் இன்று திங்கட்கிழமை (06) இடம்பெற்றது. தலதா மாளிகையின் தியவடன நிலதே பிரதீப் நிலங்க தேல அவரை வரவேற்றார். அதேநேரம் ஶ்ரீ தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வருகை தந்திருந்த வௌிநாட்டு யுவதி ஒருவர் இராணுவத் தளபதி சல்யூட் அடித்து மரியாதை தெரிவித்து அங்கு குழுமி இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. https://www.virakesari.lk/article/203149
  7. பட மூலாதாரம்,SOCIAL MEDIA கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்து போராட்டங்கள் நடத்தவோ, ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ சமீப காலமாக அனுமதி கொடுக்கப்படுவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடக்கிறது? போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு தமிழ்நாட்டில் கடந்த நான்கைந்து மாதங்களாகவே, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து போராட அனுமதி கோரினால் அவை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கட்சிகளும், இயக்கங்களும் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் பல கட்சிகளுக்கும் இதுபோல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் டிசம்பர் 31ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியினரையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் காவல்துறை கைதுசெய்தது. பத்திரிகையாளர்களிடம் கூட பேசவிடாமல் காவல்துறை கைது செய்து அழைத்துச் செல்வதாக சீமான் குற்றம்சாட்டியிருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வந்த ஓரிரு நிமிடங்களில் வெளியேறிய ஆளுநர் ரவி - என்ன நடந்தது? அண்ணா பல்கலை. மாணவி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி டிஜிபி அறிக்கை அண்ணா பல்கலை. விவகாரம்: கையில் சிலம்புடன் போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பூ - என்ன பேசினார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன? 9 கேள்விகளும் பதில்களும் - முழு விவரம் ஜனவரி 2ஆம் தேதியன்று இதே பிரச்னைக்காக பா.ம.க மகளிரணி சார்பில் சௌமியா அன்புமணியின் தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும் எண்ணிக்கையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்கு வந்த சௌமியா அன்புமணி உடனடியாக கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் கைதுசெய்வதாக அவரும் குற்றம்சாட்டினார். இதேபோல, மதுரையில் பா.ஜ.க சார்பில் நீதி கேட்புப் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். குஷ்பு உள்பட அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதே விவகாரத்திற்காக அ.தி.மு.கவின் மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் ஜனவரி ஆறாம் தேதி நடைபெற இருந்தது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஜோதிடர் 'உதவியால்' பெரும் கோடீஸ்வரரான டால்மியா, நேரு மருமகனால் சிறைக்குச் சென்றது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் பனிப்புயல்: 30 மாகாணங்களில் கடுங்குளிர், 7 மாகாணங்களில் அவசர நிலை - 1,500 விமானங்கள் ரத்து3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு,அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மட்டுமல்ல, வேறு சில பிரச்னைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பியவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அதானி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரமும் பெரிதாக வெடித்தது. இதுகுறித்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜனவரி 5 ஆம் தேதி நடத்த அறப்போர் இயக்கத்தின் சார்பில் காவல்துறையிடம் டிசம்பர் 10ஆம் தேதியே அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால், ஜனவரி 3ஆம் தேதி இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியது. இதனால், தனது அலுவலகத்திலேயே அந்த இயக்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கடந்த டிசம்பர் 17ஆம் தேதி போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக ஆற்காட்டில் பேருந்து நிலையம் அருகில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து டிசம்பர் 13ஆம் தேதி போராட்டம் நடத்த நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்கு மதுரை மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்தது. அதேபோல, சாம்சங் ஊழியர்கள் பிரச்னையின் போது, போராடிய ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி போராட்டம் நடத்த சிஐடியூஉள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அனுமதி கோரின. அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அப்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டித்தது. மரணத்தை வென்ற முதியவர்: நின்று போன இதயம் ஆம்புலன்ஸ் வேகத்தடையில் ஏறி, இறங்கியதும் மீண்டும் துடித்தது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரசுக்கு இந்தியாவிலும் 2 பேர் பாதிப்பு - எவ்வாறு பரவும்? எப்படி தடுப்பது?49 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@TNCPIM படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டும் முரசொலி விமர்சனமும் இந்தப் பின்னணியில்தான், விழுப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்," தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு நடத்த அனுமதி தர மறுப்பது ஏன்? நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன்... தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர பிரகடனம் செய்துவீட்டீர்களா? இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும். சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்க வேண்டாம்." என்று தி.மு.க அரசை விமர்சித்திருந்தார். இது கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்றது. அடுத்த நாளே இது தொடர்பாக, முரசொலியில் கே. பாலகிருஷ்ணனைத் தாக்கி கடுமையான கட்டுரை ஒன்று வெளியானது. "'தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?' என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு 'தினமலர்' கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியது. மேலும், "சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, 'தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை' என்று 'ட்ரெண்ட்' உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டியஅவசியம் என்ன வந்தது?" என்றும் முரசொலி கேள்வி எழுப்பியது. அதானி விவகாரத்தில் போராட அனுமதிப்பதில் என்ன பிரச்னை? இப்படி கூட்டணிக் கட்சிகளுக்கே போராட அனுமதி மறுப்பது அரசியல் தலைமைக்குத் தெரிந்துதான் நடக்கிறதா எனக் கேள்வியெழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். மணி. "இது துரதிர்ஷ்டவசமானது. எடப்பாடி ஆட்சிக் காலத்தில் பல போராட்டங்கள் நடந்தன. ஆனால், இப்போது எல்லாப் போராட்டங்களுக்கும் அனுமதி மறுக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அனுமதி மறுக்கிறார்கள் என்றால், அந்த விவகாரம் அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்பதால் மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதானி விவகாரத்தில் யாராவது போராட விரும்பினால் அதை அனுமதிப்பதில் என்ன பிரச்னை? இது மிகப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் அரசியல் விலை என்ன என்பது தி.மு.கவுக்கு புரிந்திருக்கிறதா என்றே தெரியவில்லை" என்கிறார் மணி. சமீபத்தில் விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தபோது, அக்கட்சி பேரணி ஒன்றை நடத்த அனுமதி கோரியது. ஆனால், விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதற்கு அனுமதி மறுத்தது. "இப்படி ஒரு கூட்டணிக் கட்சி தனது மாநில மாநாட்டை ஒட்டி நடத்தும் பேரணிக்கே அனுமதி மறுப்பது என்றால், அதனை வெறும் காவல்துறை தலைமை மட்டுமே முடிவெடுக்காது. அரசியல் தலைமைதான் முடிவெடுத்திருக்கும். அம்மாதிரி சூழலில் கே. பாலகிருஷ்ணனின் கேள்வி நியாயமானதுதானே? அப்படி அரசுத் தலைமை முடிவெடுக்காமல் காவல்துறைதான் முடிவெடுத்தது என்றால் அது மிக மிக மோசமான விஷயம். அப்படி நடப்பது இந்த அரசுக்கே பாதகமாக முடியும்" என்கிறார் மணி. நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட்- இந்தியாவில் தமிழ்நாடு 3-ஆம் இடம்; மக்களுக்கு என்ன பாதிப்பு?2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,@JAYARAMARAPPOR படக்குறிப்பு,அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் "ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது" இப்படி போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளையே மறுப்பதாகும் என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன். "அரசமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி கூடுவது, பேசுவது என்பதெல்லாம் அடிப்படை உரிமை. எங்களுடைய போராட்டத்திற்கு அதிக கூட்டம் வரலாம்; அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கும் பாதிக்கப்படலாம் என அனுமதி மறுத்தார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் கூறியிருக்கிறது. இருந்தும் இப்படிச் செய்கிறார்கள். எங்களுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்றத்திற்கும் செல்ல முடியவில்லை. இதுபோல ஜனநாயக உரிமைகளை மறுக்கப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும்" என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன். ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி?4 ஜனவரி 2025 தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?3 ஜனவரி 2025 படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் திமுக விளக்கமும் எதிர் கேள்வியும் ஆனால், இந்தக் கூற்றுகளை எல்லாம் மறுக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன். "நாம் ஒரு போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டும் என்றால் குறைந்தது 7 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோர வேண்டும். நடத்தவிருக்கும் இடம், எவ்வளவு பேர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது போன்ற எல்லாத் தகவல்களையும் தர வேண்டும். ஆனால், அரசியலைப் பொருத்தவரை, ஒரு விஷயம் வெளியாகும்போது போராட்டம் நடத்த ஏழு நாட்கள் காத்திருக்க முடியாது. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். தி.மு.கவும் அடுத்த நாளே போராட்டம் நடத்த விரும்பும். கடந்த ஆட்சியில் எங்களுக்கும் அனுமதி தரவில்லை. கொடுக்கவும் முடியாது. நாங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம், கைதுசெய்து விடுவிப்பார்கள். இது வழக்கமான நடைமுறைதானே" என்கிறார் அவர். ஆனால், "நாளை ஆளுநரைக் கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. போராட்டம் நடத்துவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என காவல் துறை சொல்கிறது. ஆனால், நாளை போராட்டத்தை இன்று எப்படி தி.மு.க. அறிவிக்கிறது?" எனக் கேள்வி எழுப்புகிறார் ஜெயராமன். கூட்டணிக் கட்சியின் போராட்டங்களுக்கே அனுமதி தரவில்லையென்றால் எதிர்க்கட்சிகளின் நிலை என்ன எனக் கேள்வி எழுப்புகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள்2 ஜனவரி 2025 க்ரிம்ஸி: கோடிக்கணக்கான பறவைகளோடு 20 மனிதர்கள் மட்டுமே வாழும் ஆர்டிக் தீவு2 ஜனவரி 2025 படக்குறிப்பு,தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் "பொள்ளாச்சி விவகாரத்தில் தி.மு.க. எவ்வளவு போராட்டங்களை நடத்தியது. இப்படி போராட்டங்களை ஒடுக்கினால் அது நெருக்கடியாகத்தான் முடியும். கூட்டணிக் கட்சியே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கிறது என்றால், எதிர்க்கட்சிகளின் நிலை என்ன? போராட்டங்களை எதிர்கொள்ள தயாரில்லை என்றால் ஆட்சியிலேயே இருக்க முடியாது. இதையெல்லாம்விட மோசம், தொல்லியல் துறை நடத்தும் நிகழ்ச்சியில் கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது என்பது. இதையெல்லாம் யார் முடிவெடுக்கிறார்கள், என்றே தெரியவில்லை" என்கிறார் குபேந்திரன். ஆனால், தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போதே, தங்கள் கட்சியின் இளைஞரணி மாநாட்டையே பல முறை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது என்கிறார் கான்ஸ்டைன்டீன். "நாங்கள் இளைஞரணி மாநாட்டிற்கு முதலில் சங்ககிரியில் ஒரு இடத்தைத் தேர்வுசெய்தோம். அதனை காவல் துறை ஏற்கவில்லை. பிறகு நகரத்திற்குள் ஒரு இடத்தைச் சொன்னோம். அதற்கும் அனுமதி தரவில்லை. பிறகு அயோத்தியாபட்டணம் தாண்டி ஒரு இடத்தைத் தேர்வுசெய்தோம். பிறகுதான் அனுமதி அளித்தார்கள். ஆகவே, காவல்துறை ஆளுங்கட்சிக்கே அனுமதி மறுத்தது எனச் சொல்ல முடியுமா? எல்லாவற்றையும் பார்த்துத்தான் அனுமதி அளிப்பார்கள். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் இதைப் பேசினால் புரிந்துகொள்ள முடியும். பல காலம் அரசியல் கட்சியில் செயல்பட்டவர்கள் இப்படியெல்லாம் குற்றம்சாட்டுவது விந்தையாக இருக்கிறது" என்கிறார் கான்ஸ்டைன்டீன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj0r544j2dqo
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கடுமையான பனிப்புயலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, மிக மோசமான பனிப்பொழிவு மற்றும் குளிரான வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் நிலைமைகள் ஏற்கனவே மோசமடைந்துள்ளன, பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக சில விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. மிசிசிப்பி மற்றும் புளோரிடா போன்ற கடுமையான குளிரை இதுவரை எதிர்கொள்ளாத அமெரிக்காவின் சில பகுதிகளில் கூட, வானிலை மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கிழக்கு நோக்கி நகரும் போது, இன்னும் மிகக்குறைந்த வெப்பநிலையை அமெரிக்கர்கள் எதிர்கொள்வார்கள் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆர்க்டிக் பகுதியைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் ஒரு பகுதியான துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாஷிங்டன் டி.சி-இல் 5 முதல் 9 அங்குலம் வரையிலான பனிப்பொழிவு உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிக்கு சான்றளிக்க அமெரிக்க நாடாளுமன்றம், திங்கள்கிழமை (ஜனவரி 6) பிற்பகலில் கூடவுள்ளது. ஆனால் மோசமான வானிலை காரணமாக சில உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளிலிருந்து தலைநகருக்கு பயணிப்பதில் சிக்கல் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ், அண்டை நாடுகள் கவலை - இந்தியா கூறுவது என்ன?45 நிமிடங்களுக்கு முன்னர் அதிபர் பதவியின் கடைசி கட்டத்தில் இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க பைடன் முடிவு5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கென்டக்கி, விர்ஜீனியா, கான்சஸ், ஆர்கன்சா மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு நோக்கி நகரும் புயல் அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ள இது வழிவகுக்கும் என்று 'அக்யூவெதர்' முன்னறிவிப்பாளர் டான் டிபோட்வின் கூறினார். "மிகவும் குறைவான வெப்பநிலை, ஒரு வாரத்திற்கு நீடிக்கக்கூடும்" என்று அவர் கூறினார். இந்த பனிப்புயலுக்கு காரணமான துருவச் சுழல் (Polar Vertex), பொதுவாக வட துருவத்தைச் சுற்றியே இருக்கும். ஆனால் அது நகர்ந்து விரிவடையவும் கூடும். அவ்வாறு நகர்வதால், தெற்கு பகுதிகளில் வழக்கத்தை விட மிகக் குறைவான வெப்பநிலை நிலவும். சனிக்கிழமை (ஜனவரி 4) மாலை பனிப்புயல் தாக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே, சமீப நாட்களாக துருவ சுழல் அமெரிக்காவில் விரிவடைந்து வந்தது. இது வரும் நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் மோசமான பனிப்பொழிவு மற்றும் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை நிலவக்கூடும். கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பயணிப்பதை முடிந்தளவு தவிர்க்குமாறும், அமெரிக்காவின் வழக்கமான திங்கட்கிழமை காலை போல இருக்காது என்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரியில், சராசரி வெப்பநிலை -1 செல்ஸியஸாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு இந்த வருடம்தான், மிகவும் குளிரான ஒரு ஜனவரி மாதத்தை அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கிறது. 2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பல பனிப்புயல்கள் வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கின, இதனால் நியூயார்க் நகரம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு இருந்தது. அமெரிக்க அதிபராக தயாராகும் டிரம்புக்கு ஆபாசப் பட நடிகை வழக்கில் என்ன தண்டனை? நீதிமன்றம் புதிய அறிவிப்பு4 ஜனவரி 2025 தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை ஏன் கைது செய்ய முடியவில்லை - தடுப்பது யார்?5 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் தொடங்கிய இந்த புயல் அடுத்த ஓரிரு நாட்களில் கிழக்கு நோக்கி நகரும் 1,500 விமானங்கள் ரத்து பனிப்புயல் காரணமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 46 விமான நிலையங்களுக்கு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. கான்சஸ் மற்றும் மிசௌரி முதல் பென்சில்வேனியா மற்றும் நியூ ஜெர்சி வரை பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மாற்றத்திற்கான நிபந்தனைகளின் முழு பட்டியலையும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. கண்காணிப்பு வலைத்தளமான ஃப்ளைட்அவேர் படி, 2,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. அமெரிக்காவிற்கு உள்ளே வரக்கூடிய மற்றும் வெளியே செல்லக்கூடிய 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கான்சஸ் நகர சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கிருந்து புறப்படக்கூடிய 86% விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gl1ynwj0jo
  9. Published By: DIGITAL DESK 7 06 JAN, 2025 | 07:06 PM (செ.சுபதர்ஷனி) கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் சுமார் 6,700 பேர் விசர்நாய் கடிக்கு ஆளானவர்கள் என அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும் அரச வைத்தியர் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடக குழு உறுப்பினருமான வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், கடந்த வருடம் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் 42,700 நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,700 பேர் விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகியவர்கள் என வைத்தியசாலை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அவ்வாறு விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகிய 6,700 நோயாளர்களில் சுமார் 95 சதவீதமானோர் தாம் வாழும் வீட்டை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வளர்ப்பு பிராணிகள் மூலம் விசர்நாய் கடி நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஐவரில் ஒருவர் விசர்நாய் கடி நோயாளராவார். ஆகையால் வளர்ப்பு நாய்கள் மற்றும் உரிமையாளர்கள் இல்லாத வீதியில் நடமாடும் நாய்களுக்கு ஊசி வழங்குவதை உள்ளூராட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அத்தோடு வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு உரிய ஊசிகளை வழங்கி அதற்கான அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/203159
  10. படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே கட்டுரை தகவல் எழுதியவர், பிரியங்கா ஜக்தாப் பதவி, பிபிசி மராத்திக்காக ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் போது, திடீரென அந்த நபரின் உடலில் அசைவு தெரிந்து, அந்த நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தால் எப்படி இருக்கும்? இந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் நடந்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தின் தீவிரம் அதிகம். முதியவரின் உறவினர்களால் இது ஒரு அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டாலும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. கோலாப்பூரில் உள்ள கஸ்பா-பவ்டாவைச் சேர்ந்த ஒரு முதியவர் மரணப் படுக்கையில் இருந்து 'திரும்பி வந்தார்' என்று அப்பகுதி முழுவதும் பேசப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து இந்த செய்தி ஊடகங்களிலும் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இறந்து போன முதியவர் மீண்டும் உயிர் பெற்று வந்தது பெரிய அதிசயம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இது அதிசயமா அல்லது மருத்துவ அலட்சியமா என்பதுதான் கேள்வி. உண்மையில் என்ன நடந்தது? முதியவருக்கு என்ன ஆனது? ரத்தன் டாடாவுக்கு அவரது வீட்டிற்கே சென்று பாரம்பரிய தமிழ் மருத்துவம் செய்த கோவை வைத்தியர் தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் கொரில்லா- புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு இந்த குரங்குகள் உதவுமா? சென்னை, மும்பை, டெல்லி மருத்துவமனைகளில் பெண் மருத்துவருக்கு பாதுகாப்பு எப்படி? பிபிசி கள ஆய்வு 'முதியவர் இறந்து கொண்டிருக்கிறார்' பாண்டுரங் உல்பேவின் பேரன் ஓம்கார் ரமணே இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார். டிசம்பர் 16-ஆம் தேதி மாலை பாண்டுரங் உல்பேக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால், மாலை 6:30 மணியளவில் அவரது குடும்பத்தினர் கங்கவேஷில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். முதியவருக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னார். பாண்டுரங் உல்பேவின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. எனவே, அவரது ஒரே மகள் மற்றும் மருமகன் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையில், சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது, பாண்டுரங் உல்பேவின் உடல் முற்றிலும் அசைவற்றுப் போனது. இதயத் துடிப்பும் நின்றுவிட்டது. இறுதியாக, பாண்டுரங் உல்பேவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மதியம் 12.30 மணியளவில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து வருவதாகத் தெரிவித்தனர் என்று ஓம்கார் கூறுகிறார். மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவில் பாண்டுரங் உல்பேவை குடும்பத்தினர் ஆம்புலன்சில் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவனையில் இருந்து கிளம்பும் போது கூட அவரது உடல் அசைவற்று இருந்துள்ளது. எனவே அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் கருதினர். அவரது இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் தொடங்கினர். காதலி சத்தியத்தை நம்பி ஒரே வீட்டில் 50 ஆண்டு காத்திருந்த இவர் என்ன ஆனார்? காதலி எங்கே போனார்?4 ஜனவரி 2025 தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி?4 ஜனவரி 2025 எல்லாவற்றையும் மாற்றிய வேகத்தடை படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே வீட்டில் பாண்டுரங் உல்பேவின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். உல்பே சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, பாண்டுரங்கின் உடல் கடுமையாக ஆட்டம் கண்டது. சிறிது நேரம் கழித்து, அவரது விரல்கள் அசைந்ததை பேரன் ஓம்கார் ரமணே கவனித்தார். தாத்தாவின் விரல்கள் அசைவதைக் கண்டவுடன், தன்னிடம் இருந்த ஆக்ஸிமீட்டரைக் கொண்டு அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்ததாக ஓம்கார் கூறினார். அதன் பிறகு, தாத்தா உயிருடன் இருப்பதை உணர்ந்த அவர், உடனடியாக ஆம்புலன்ஸை கஸ்பா பவ்டாவில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு திருப்பினார். இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர், இதன் காரணமாக, டிசம்பர் 17 அன்று பிற்பகல் 3 மணியளவில் உல்பே சுயநினைவுக்கு திரும்பினார். அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பூரண குணமடைந்து டிசம்பர் 30-ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீடு திரும்பிய பிறகு, அவரது வீடியோ மற்றும் இந்த சம்பவங்களின் முழுப் பின்னணி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. ஆனால், எந்த மருத்துவமனைக்கு அவரை முதலில் அழைத்துச் சென்றார்கள், எந்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் எனக் கூறியது என்று எந்தத் தகவலையும் தெரிவிக்க குடும்பத்தினர் தயாராக இல்லை. மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவர், இது அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம் என்று கூறினார். மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்9 மணி நேரங்களுக்கு முன்னர் 'ரூ.25 லட்சத்தை இழந்தேன்' - இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மணமான பெண்கள் ஊதியத்தை என்ன செய்கிறார்கள்?4 ஜனவரி 2025 சிவில் சர்ஜன் என்ன சொன்னார்? படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே பாண்டுரங் உல்பேவுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள, பிபிசி மராத்தி கோலாப்பூர் மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவரான மருத்துவர் சுப்ரியா தேஷ்முக்கிடம் பேசியது. இது தொடர்பாக பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினரிடம் தகவல் கேட்டுள்ளதாக அவர் கூறினார். "பாண்டுரங் உல்பேவின் ஈசிஜியில் நேர் கோடு தோன்றியதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்ததாக ஓம்கார் ரமணே எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்" என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார். இருப்பினும், விதிகளின்படி, அவ்வாறு நேர் கோடு தோன்றியதுமே எந்த நோயாளியும் உடனடியாக இறந்ததாக அறிவிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார். "ஒரு மணி நேரத்திற்குப் பிறகே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். அதுவரை நோயாளியின் இதயத்துடிப்பை மீட்டெடுக்க பல்வேறு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம் "என்றும் அவர் கூறினார். "முதியவர் விஷயத்தில் இப்படி எதுவும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஆம்புலன்சில் உறவினர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்" என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவரின் அலட்சியம் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த தேஷ்முக்,"சம்பந்தப்பட்ட மருத்துவர் இரண்டு முக்கிய தவறுகளை செய்துள்ளார். முதல் தவறு, இதயம் துடிப்பதை கவனிக்காமல் நோயாளி இறந்துவிட்டதாக உடனடியாக அறிவித்தது, இரண்டாவது தவறு, பிரேத பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது." "இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை அவசியம் என்று கூறிய மருத்துவர் தேஷ்முக், இறப்புச் சான்றிதழை வழங்காமல் இதயம் துடிக்கவில்லை என்று வெறுமனே கூறி பாண்டுரங் உல்பேவை வீட்டுக்கு அனுப்பியது பெரிய தவறு" என்று தெரிவித்தார். தென் கொரியா: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரை கைது செய்வது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?8 மணி நேரங்களுக்கு முன்னர் IND vs AUS: 10 ஆண்டு ஆதிக்கத்தை இழந்த இந்தியா - 5 மாதங்களில் இந்திய அணியில் மாற்றமா? கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி4 மணி நேரங்களுக்கு முன்னர் இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிர் பிழைத்தது எப்படி? படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே அப்படியானால், பாண்டுரங் உல்பே எப்படி சுயநினைவுக்கு வந்தார் என்று மருத்துவர் தேஷ்முக்கிடமும் கேட்டோம். "மாரடைப்புக்குப் பிறகு, இதயம் திடீரென நின்றுவிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க, நோயாளிக்கு இதய மசாஜ் அல்லது இதயத்தில் ஊசி செலுத்தப்படும். ஆம்புலன்ஸ் வேகத்தடையின் மேல் ஏறிய போது பாண்டுரங் உல்பேவின் உடல் ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி அவரது இதயத்தை செயல்பட செய்திருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில், பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவரோ, சம்பந்தப்பட்ட மருத்துவமனையோ இந்த விவகாரம் குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையின் பெயரை தெரிவிக்க பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். குடும்பத்தின் மூத்தவர் மரணப் படுக்கையில் இருந்து மீண்டு வந்திருப்பது அந்த குடும்பத்திற்கு ஒரு அதிசயமான நிகழ்வு. ஆனால் வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வியும் உள்ளது. எனவே 'அந்த' மருத்துவரின் அலட்சியம், குடும்பத்தினருக்கு பெரிய சோகத்தை கொடுத்திருக்கும். https://www.bbc.com/tamil/articles/c0lgd0zk4pro
  11. 04 JAN, 2025 | 10:51 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது. தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 615 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 551 ஓட்டங்கள் பின்னிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, சகல விக்கெட்களையும் இழந்து 615 ஓட்டங்களைக் குவித்தது. தனது இன்னிங்ஸை 176 ஓட்டங்களிலிருந்து இன்று காலை தொடர்ந்த ரெயான் ரிக்ல்டன் இரட்டைச் சதம் குவித்து அசத்தினார். 343 பந்துகளை எதிர்கொண்ட ரெயான் ரிக்ல்டன் 29 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 259 ஓட்டங்களைக் குவித்தார். போட்டியின் முதலாம் நாளன்று டெம்பா பவுமாவுடன் 4ஆவது விக்கெட்டில் 235 ஓட்டங்களைப் பகிர்ந்த ரிக்ல்டன் இன்றைய தினம் கய்ல் வெரினுடன் 6ஆவது விக்கெட்டில் 148 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சனுடன் 7ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களையும் பகிர்ந்தார். கய்ல் வெரின் சரியாக 100 ஓட்டங்களைப் பெற்றதுடன் தென் ஆபிரிக்காவின் முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்த மூன்றாவது வீரரானார். முதல் நாளன்று டெம்பா பவுமா 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மார்க்கோ ஜென்சன் 62 ஓட்டங்களையும் கேஷவ் மஹராஜ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் அபாஸ் 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சல்மான் அகா 148 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குரம் ஷாஸாத் 123 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிர் ஹம்ஸா 127 ஓட்டங்களையும் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/202982
  12. Published By: DIGITAL DESK 2 05 JAN, 2025 | 05:44 PM (நமது நிருபர்) நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது. கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் பிரதமர் இதன்போது தனது விசேட அவதானத்தை செலுத்தினார். அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கல்வி உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/203039
  13. மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டியால் புதிய யூகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்டர் - கவாஸ்கர் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சிட்னியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. சிட்னி டெஸ்ட் தொடங்கி மூன்றாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியானது இந்த தொடரை இழந்து, கோப்பையையும் பறிகொடுத்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் படுதோல்வியுடன் தாயகம் திரும்ப உள்ளது. ஆஸ்திரேலியா அணியுடன் கற்றுக்கொண்டவற்றை வைத்து இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்று அணியின் கேப்டன் பும்ரா கூறினார். மேலும் வரும் 5 மாதங்களில் இந்திய அணியில் அதிக மாற்றங்கள் வரக்கூடும் என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதனால், இந்திய அணியில் எவ்வாறான மாற்றங்கள் வரக்கூடும் என்று ரசிகர்களிடையே இப்போதே பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது? பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா? இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டி வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்த நிலையில் அந்த வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள்9 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிட்டே தீர வேண்டும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்துவது எப்படி?4 ஜனவரி 2025 போட்டிச் சுருக்கம் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்தன. 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது நாளான இன்று, கூடுதலாக 16 ரன்கள் சேர்த்தநிலையில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 39.5 ஓவர்களில் 157 ரன்களை குவித்தது. இதையடுத்து, 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. விமர்சனங்களுக்கு ஆஸ்திரேலியா பதிலடி பெர்த் டெஸ்டில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தபின் ஆஸ்திரேலியாவின் பேட்டிங், பந்துவீச்சு பற்றி அந்நாட்டு ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 10 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி?4 ஜனவரி 2025 மதுரையில் காவி உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார்- கிறிஸ்தவ மிஷனரிகள் எப்படி செயல்பட்டன?24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியை தனி ஒருவனாக தாங்கிப் பிடித்த பும்ரா பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தோளில் தூக்கி சுமந்து, திருப்புமுனையை ஏற்படுத்தியது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை. பும்ரா என்ற ஒற்றை பந்துவீச்சாளரை நம்பிதான் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை எதிர்கொண்டது. இந்தத் தொடரில் மட்டும் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே டெஸ்ட் தொடரில் ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது. 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை பும்ரா தற்போது முறியடித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் தொடர்நாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. பும்ரா வீசும் ஒவ்வொரு 28 பந்துகளுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை வீழ்த்துபவராக இந்த தொடரில் இருந்தார். ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?3 ஜனவரி 2025 வானியல் அதிசயம்: 2025ஆம் ஆண்டின் சிறந்த எரிகல் பொழிவை எங்கு, எப்போது பார்க்கலாம்?2 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் தொடர்நாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார். தோல்விக்கு காரணங்கள் என்ன? இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2வது நாளான நேற்று திடீரென முதுகு பிடிப்பு ஏற்பட்டு பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அணியின் மருத்துவரின் உதவியோடு விளையாட்டு அரங்கிலிருந்து வெளியேறி பும்ரா மருத்துவனைக்குப் புறப்பட்டார். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த பும்ரா 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் போலந்து பந்துவீச்சில் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். ஆனால், முதுகு தசைப்பிடிப்பு காரணமாக முன்னெச்சரிக்கையாக 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசவில்லை. இதனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் மட்டுமே பந்துவீசினர். பும்ரா இல்லாமல் இந்திய அணி பந்துவீசியதும் தோல்விக்கான முக்கியக் காரணமாகும். அது மட்டுமல்லாமல் போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் போது இந்திய அணி முன்னிலைக்காக குறைந்தபட்சம் 350 ரன்களாக இலக்கு வைத்திருந்தால்தான் வெற்றியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது. சிட்னி போன்ற கிரீன்டாப் பிட்சில் 162 ரன்கள் இலக்காக வைத்துக்கொண்டு போட்டியை வெல்வது சாத்தியமில்லாதது. அதிலும் பும்ரா அணியில் பந்துவீசியிருந்தால்கூட வெற்றி கிட்டும் என்று நம்பலாம். ஆனால், பும்ரா இல்லாமலும், வெற்றியைக் கைப்பற்ற போதுமான ஸ்கோரும் இல்லாத நிலையில் தோல்வி அடைவது உறுதியானது. இந்தத் தொடரை இந்திய அணி இழப்பதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங் மட்டும்தான். அனுபவமான வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி, ரஹானே ஆகியோர்களை உள்நாட்டு போட்டியில் விளையாட வைத்துவிட்டு அனுபவம் குறைந்த கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்றோரை நம்பினர். ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தநிலையில் இருவரும் பேட்டிங்கில் சொதப்பினர். இதில் கோலி முதல் போட்டியில் சதம் அடித்ததோடு சரி மற்ற எந்த போட்டியிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரோஹித் சர்மா எந்தப் போட்டியிலும் ஒற்றை இலக்க ரன்னையே கடக்கவில்லை. இந்தத் தொடரில் கோலியின் பேட்டிங் சராரசி 23.75 ஆக இருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடரில் சதம் அடித்தபின் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து சொதப்பி மோசமான சராசரி வைத்துள்ள 3வது பேட்ஸ்மேனாக கோலி இருக்கிறார் என்று கிரிக்இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25 டெஸ்ட் சீசனில் கோலியும், ரோஹித் சர்மாவும் 10 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளனர். இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சரியில்லையா அல்லது தேர்வே சரியில்லையா, அல்லது தேர்வுக்குழுவே சரியில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது, என வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள்2 ஜனவரி 2025 ஒரே அறையில் ஒன்றாக தூங்க விரும்பாத மில்லினியல் தம்பதியர் - என்ன காரணம்?1 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES போராடிய பிரிசித், சிராஜ் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக இந்திய அணி நி்ர்ணயித்திருந்தது. இது வெற்றி பெற போதுமான இலக்கு அல்ல என்பது தெரிந்தபோதிலும் பும்ரா இல்லாத சூழலில் இந்திய அணி களமிறங்கியது, கேப்டன் பொறுப்பை கோலி ஏற்று செயல்பட்டார். சாம் கோன்ஸ்டாஸ், கவாஜா அதிரடியாகத் தொடங்கினர். கோன்ஸ்டாஸ் ஒரு கேமியோ ஆடி 17 பந்துகளில் 22 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லாபுஷேன் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ஸ்டீவ் ஸ்மித்தும் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதைப் பார்த்தபோது இந்திய வீரர்களுக்கு சற்று நம்பிக்கை துளிர்விட்டது. . கவாஜா, டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கவாஜா 41 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். 104 ரன்களுக்கு 4 வது விக்கெட்டைஆஸ்திரேலியா இழந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை விரைவாக உடைத்திருந்தால் நிச்சயம் ஆட்டம்மாறியிருக்கும். 5வது விக்கெட்டுக்கு வெப்ஸ்டர், டிராவிஸ் ஹெட் கூட்டணி நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அறிமுக வீரர் வெப்ஸ்டர் 39, ஹெட் 34 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அமெரிக்க கருவூலத்துறை கணினிக்குள் சீனா ஊடுருவியதா? என்ன நடந்தது?31 டிசம்பர் 2024 சிங்கப்பூர் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழும் ரகசியம்31 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா "உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும்' இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா போட்டி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இந்த தோல்வி சிறிது வருத்தமாக இருக்கிறது, இருப்பினும் உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும், உடல்நிலையோடு சண்டையிட முடியாது. சில நேரங்களில் அதற்கும் மதிப்பளிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பிட்சில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், முதல் இன்னிங்ஸில் இருந்தே சிறிய பிரச்சினை எனக்கு ஏற்பட்டது. மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீசலாம் என்று முடிவு செய்துதான் உடற்தகுதி நிபுணர்களுடன் பேசினேன் ஆனால், அவர்கள் வேண்டாம் என்று கூறினர். இந்தத் தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவுடன் கடுமையாக போட்டியிட்டோம், சவாலான தொடராக இருந்தது. இந்த டெஸ்டிலும் அப்படித்தான் இருந்தது. ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன, அதிகமாகக் கற்றுக்கொண்டோம். இளம் வீரர்கள் பலர் அணிக்குள் வந்துள்ளர், அவர்களும் கற்றுக்கொண்டது எதிர்காலத்தில் உதவும், அணியை மேலும் பலமாக்கும். இந்த கற்றுக்கொண்ட உணர்வோடு அடுத்தக் கட்டத்துக்கு நகர்வோம். சிறந்த தொடராக அமைத்து தந்தமைக்கு ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார். அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது?29 டிசம்பர் 2024 பாலை காய்ச்சாமல் அப்படியே பருகலாமா? மருத்துவர்கள் விளக்கம்28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 5 மாதங்களில் மாற்றம் வரும் என கம்பீர் தகவல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "அணியின் ஒரு பிரிவு மட்டுமே காரணம் என்று சொல்லி அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அணியின் ஒவ்வொரு பிரிவிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது", என்றார். வரும் ஜூன் மாதம், இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து கம்பீர் பேசுகையில், அடுத்த ஐந்து மாதங்களில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், "அடுத்த ஐந்து மாதங்களுக்கான திட்டம் குறித்து பேசுவது இப்போது மிகவும் சீக்கிரமாக இருக்கும். அணியின் ஃபார்ம், அணுகுமுறை, வீரர்கள் என அனைத்திலும் மாற்றங்கள் வரக்கூடும்", என்றும் குறிப்பிட்டார். ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மாவின் விலகல் குறித்து கேட்டதற்கு, "அவராக முன்வந்துதான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்", என்று கம்பீர் பதில் அளித்தார். பேட்ஸ்மேன்களின் செயல்திறன் பற்றிய கேள்விக்கு, "எல்லா வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், ஒரு அணிக்கு தேவையான சிறப்பான வீரர்களை பெற முடியாது", என்று தெரிவித்தார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு யூகங்கள் குறித்து பேசிய கௌதம் கம்பீர், "அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு இந்த விளையாட்டின் மீது இன்னும் பசி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் என்ன செய்தாலும், இந்திய கிரிக்கெட்டின் நலனை முன்வைத்தே செய்வார்கள்", என்று கூறினார். கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி பல தோல்விகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது, உள்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை 3-0 என இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியது. இப்போது பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என 10 ஆண்டுகளுக்குப்பின் இழந்துள்ளது. இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் இருந்தபோது வீரர்களுடன் சுமூகமான தொடர்பு, பேச்சு, அனுசரணையான போக்கு இருந்தது. அதேபோன்ற போக்கு கம்பீர் பயிற்சியாளராக வந்தபின் வீரர்களிடம் இல்லை, வீரர்களைக் கையாள்வதும் சரியான முறையில் இல்லை, வீரர்கள் ப்ளேயிங் லெவனில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தால் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் தொடர்வது இந்திய அணிக்கு பாதுகாப்பானதாக இருக்காது, அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிறது என்பதால் அதற்குள் முடிவு செய்வோம், அதிபட்சமாக ஜனவரி 12ம் தேதிக்குள் ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'விடாமுயற்சி' தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?4 ஜனவரி 2025 ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை... சுயாதீன இசைக் கலைஞர் சந்திக்கும் சவால்கள் என்ன?30 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எங்களுக்கு சிறப்பான நாள் 10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில் "என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், எங்கள் அனைவருக்கும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. எங்கள் திட்டங்கள் குறித்து தெளிவான பார்வையுடன் செயல்பட்டோம். ரன்களைக் குறைவாகக் கொடுக்க வேண்டும், விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர். உண்மையில் பெருமையாக இருக்கிறது. இந்தத் தொடரை கைப்பற்ற குழுவாக அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளோம். சில வெற்றிகள் எப்போதும் மறக்கமுடியாததாக அமைந்துவிடுகிறது. இந்த வெற்றியை, நாங்கள் அடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். இளம் வீரர்களின் பங்களிப்பும் அற்புதமாக இருந்தது. ரசிகர்களும் எங்களுக்கு தொடர் முழுவதும் நல்ல ஆதரவு அளித்தனர். இந்த 2025ம் ஆண்டில் இந்தநாள் எங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czr3dn4lddyo
  14. Nimisha Priya: Yemen-ல் Kerala Nurse-க்கு மரணதண்டனை; இறுதி நாட்கள் நெருங்குகிறதா? பின்னணி என்ன? கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். அவரை மீட்க முயற்சிகள் நடந்துவரும் நிலையில், குருதிப்பணம் அளித்தால் அவர் தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது. ஒரு இந்திய பெண்ணுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? குருதிப்பணம் என்றால் என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
  15. க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தால் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளோம் முறையாக செயற்படாவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை Published By: VISHNU 05 JAN, 2025 | 05:53 PM (இராஜதுரை ஹஷான்) 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டத்தால் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். பதில் பொலிஸ்மா அதிபருடன் இவ்வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ' க்ளீன் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சேவையில் ஈடுபடும் பேருந்துகளை இடைநிறுத்தி பொலிஸார் சோதனை செய்கிறார்கள். க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை முதலில் அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பேருந்தின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகளில் அலங்காரங்கள் மற்றும் பொருத்தமற்ற ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை இணைப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொலிஸார் முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த வாரம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர். பொலிஸாரின் செயற்பாடுகளினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் இந்த வாரம் பதில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். நாம் முன்வைக்கும் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். பொலிஸார் சிவில் உடையில் பேரூந்தில் பயணித்தவாறு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. மோட்டார் வாகன கட்டளைச்சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. ஆகவே பொலிஸார் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும். தனியார் பேருந்து சாரதிகள் கவனயீனமாக செயற்படுவதால் வாகன விபத்து இடம்பெறுவதாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 3500 முதல் 4000 பேரூந்துகள் உள்ளன. தனியார் துறையில் 13500 பேருந்துகள் உள்ளன. ஆகவே தனியார் பேருந்துகளை காட்டிலும் அரச பேருந்துகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகுகின்றன என்றார். https://www.virakesari.lk/article/203051
  16. 05 JAN, 2025 | 03:53 PM இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மகாநாட்டில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த மகாநாடு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை விழுப்புரத்தில் கட்சியின் தேசிய மத்தியகுழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மகாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. இராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட மத்திய குழு, மாநிலச் செயற்குழு, மாநிலக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்களும் தமிழகம் முழுவதிலும் இருந்து 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்மொழிய தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் எம்.சின்னத்துரை வழிமொழிந்தார். 'இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும் - மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை உறுதிசெய்திடவும் கோரும் தீர்மானம்” என்ற தலைப்பிலான அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது; இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவமின்மைக்கும் நீண்டகாலமாக இனவெறித் தாக்குதலுக்கும் ஆளாகிவந்த நிலையில், அது உள்நாட்டு யுத்தத்துக்கும் அமைதியின்மைக்கும் வழிவகுத்தது. அதனால் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர். தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மைச் சமூகங்களினதும் ஆதரவுபெற்ற தேசிய மக்கள் சக்தி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறது. இந்த சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலையும் உறுதிசெய்ய வேண்டும் என்று இந்த மகாநாடு கேட்டுக்கொள்கிறது. நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்துவரும் மாகாணசபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்றும் மகாநாடு கேட்டுக்கொள்கிறது. இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்களின் நம்பிக்கையைப் பெறும்வகையில் உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வுகளைக் காணவேண்டும். மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தின்போது எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த மகாநாடு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது. https://www.virakesari.lk/article/203025
  17. வாள் எடுத்துப் போர் புரிந்த காலத்தில் இரு தரப்பும் தயார்நிலையில் இருந்து சண்டையிட்டு மாண்டனர். ஆனால் ஆயுதம் ஏதுமில்லாதவரை வாளால் வெட்டுவது!!
  18. ஒருசிலர் தூக்கத்தில் இருக்கும்போதே இறந்துபோனது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தூக்கத்தில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து விளக்குகிறார். தூக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  19. "அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது" - விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது - டிரம்பின் ஹோட்டலின் முன்னால் வாகனத்தை வெடிக்க வைத்தவரின் கையடக்க தொலைபேசியில் குறிப்பு 05 JAN, 2025 | 11:38 AM அமெரிக்காவின் லாஸ்வெகாசில் கடந்த வாரம் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலின் முன்னால் வெடித்து சிதறிய வாகனத்தை செலுத்திய நபர் அமெரிக்கா வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது என குறிப்பொன்றை எழுதிவைத்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மத்தியு லிவெல்ஸ்பேர்கெர் அமெரிக்கா விழித்துக்கொள்வதற்காக தான் இந்த வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக எழுதியுள்ளார். லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்து சிதறிய டிரக் வண்டியின் வாகனச்சாரதி அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிபவர் என விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான கிறீன் பெரெட்டில் பணியாற்றியவர் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். விசேட படைப்பிரிவின் சிரேஸ்ட தரத்தில் உள்ள ஒருவர் ஜேர்மனியில் பணியில் உள்ள இவர் சம்பவம் இடம்பெற்றவேளை விடுமுறையில் இருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரணித்த வேளை அவர் விடுப்பிலிருந்தார் என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் எனினும் அவர் தன்னைதானே சுட்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றவேளை உயிரிழந்தார் என்பதை தெரிவிக்கவில்லை. டிரம்ப் சர்வதேச ஹோட்டலிற்கு வெளியே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் நோக்கம் குறித்து கண்டறிவதற்காக அதிகாரிகள் மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் இலத்திரனியல் சாதனங்களை தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர். மத்தியு லிவெல்ஸ்பேர்கெரின் ஐபோனில் கண்டெடுக்கப்பட்ட குறிப்புகளில் அவரது தனிப்பட் துயரங்கள் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகள் குறித்த பல விடயங்கள் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'இராணுவத்தில் உள்ள எனது சகாக்கள்முன்னாள் போர்வீரர்கள் மற்றும் அனைத்து அமெரிக்கர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. தங்களை வளப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மாத்திரம் செயற்படும் பலவீனமான தகுதியற்றவர்களால் நாங்கள் ஆளப்படுகின்றோம்" என அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது குறிப்பில் அவர் "நாங்கள் அமெரிக்காவின் மக்கள் உலகில் வாழ்ந்த தலைசிறந்த மக்கள்ஆனால் நாங்கள் தற்போது நோய்வாய்ப்பட்டு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம்" என தெரிவித்துள்ளார். "இது ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை, இது விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்புஅமெரிக்கர்கள் விந்தையான வேடிக்கையான விடயங்கள் குறித்தும் வன்முறைகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றார்கள் இதன் காரணமாக இவ்வாறானதொரு சம்பவத்தின் மூலமே எனது செய்தியை தெரிவிக்க முடியும் என கருதினேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 'நான் ஏன் தனிப்பட்ட முறையில் இதனை செய்தேன்"? நான் இழந்த சகோதரர்கள் பற்றிய என் மனதை நான் தூய்மைப்படுத்தவேண்டும். நான் பலியெடுத்த உயிர்கள் குறித்த வாழ்க்கையின் சுமைகளில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவேண்டும" என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202998
  20. வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது; இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்குப் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது பொலிஸாருக்கு ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். https://thinakkural.lk/article/314348
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் 4 ஜனவரி 2025 தமிழகத்தில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; கடந்த கோடையில் நிலவிய கடும் வெப்பத்தால் தேங்காய் உற்பத்தி குறைந்ததே இதற்குக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது விலை உயர்ந்தாலும் தங்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். பதுக்கலும் மற்றொரு முக்கியக் காரணமென்று இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக அரசின் வேளாண் துறை செயலர் அபூர்வா மறுத்துள்ளார். உற்பத்தி குறைவா? பதுக்கலா? இவை இரண்டில் தமிழ்நாட்டின் தேங்காய் விலை அதிகரிக்க என்ன காரணம்? மக்கானா: வட இந்தியாவில் அதிகரிக்கும் தாமரை விதை விவசாயம் - நவீனமயமாகும் அறுவடை முறை நைஜீரியா: வெள்ளத்தால் அழிந்த விவசாயம், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் வறட்சி நிலத்தில் பேரீச்சை சாகுபடி- ஆண்டுக்கு ரு. 30 லட்சம் வரை வருமானம் ஈட்டும் விவசாயி தேங்காய் விலை மூன்றே மாதங்களில் 50% உயர்வு மத்திய அரசின் வேளாண் துறை புள்ளி விபரங்களின்படி, தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் பிபிசி தமிழிடம் பகிர்ந்த புள்ளி விபரங்களின்படி, தமிழகத்தில் 4.72 லட்சம் ஹெக்டேர் (11.66 லட்சம் ஏக்கர்) தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 கோடியே 26 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் தென்னை பயிரிடும் பரப்பும், தேங்காய் உற்பத்தியும் அதிகமாக இருந்தாலும், தேங்காயின் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. உதாரணமாக, கோவை உழவர் சந்தையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 20 ரூபாயாக இருந்த சிறிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசி வாரத்தில் 30 ரூபாயாகவும், 35 ரூபாயாக இருந்த பெரிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசியில் 50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் இந்த விலை இன்னும் அதிகம். அஜ்மீர் தர்காவுக்கு சால்வை வழங்கிய பிரதமர் மோதி: இந்து சேனா எதிர்ப்பது ஏன்?3 ஜனவரி 2025 தமிழ்நாட்டில் இரண்டு மடங்கு அதிகரித்த ரேபிஸ் நோய் மரணங்கள் - என்ன காரணம்?3 ஜனவரி 2025 தேங்காய் விலை நிர்ணயம் எப்படி? பட மூலாதாரம்,THANGAVEL படக்குறிப்பு,கொப்பரை வர்த்தகத்தில் நீண்ட கால அனுபவம் உடைய கப்பளாங்கரை தங்கவேல் கொப்பரை விலை (எண்ணெய் எடுப்பதற்கான தேங்காய்), எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே தேங்காய்க்கான விலையும் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை நிலையம் (NAFED-National Agricultural Cooperative Marketing Federation of India Ltd) ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவிலான கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. இவற்றைத் தவிர்த்து தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. சந்தை நிலவரத்தைப் பொருத்தே, இவற்றின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. ''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் விளையும் தேங்காயில் 20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்ளூர்ச் சந்தையில் 10 சதவீதம் விற்கப்பட்டது; மீதி 70 சதவீதம் கொப்பரை (தேங்காய் எண்ணெய்) உற்பத்திக்குப் போனது. சமீப காலமாக அரபு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சமையலுக்கு தேவை அதிகரிப்பு, சபரிமலை சீசன் போன்றவற்றால் தேங்காய் தேவை இப்போது அதிகமாகியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு டன் பச்சைத் தேங்காய் ரூ.55 ஆயிரம், கருப்புத் தேங்காய் (கொப்பரைக்கான தேங்காய்) ரூ.61 ஆயிரம், கொப்பரை கிலோ ரூ.148 என்று விலை உள்ளது.'' என்றார் கப்பளாங்கரை தங்கவேல். தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலப் பிரதிநிதியாக உள்ள இவர், கொப்பரை வர்த்தகத்தில் நீண்ட கால அனுபவம் உடையவர். மனு ஸ்மிருதி குறித்த பேச்சு: திருமாவளவனுக்கு எதிரான மனு தள்ளுபடி - நீதிமன்றம் சொன்னது என்ன?3 ஜனவரி 2025 கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் - மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?3 ஜனவரி 2025 ''பொதுவாக ஒரு தேங்காயின் எடை 500 கிராம் இருக்கும். அதன்படி இன்று நிர்ணயிக்கப்படும் ஒரு கிலோ 61 ரூபாய் விலைக்கு விவசாயிக்கு ஒரு தேங்காய்க்கு 30 ரூபாய் 50 பைசா கிடைக்க வேண்டும். ஆனால் அந்த விலை கிடைப்பதில்லை. இப்போது விளையும் தேங்காய் எதுவுமே அதிகபட்சம் 350 கிராம் எடைக்குள்ளாகவே இருப்பதே அதற்குக் காரணம்.'' என்கிறார் பரம்பிக்குளம்–ஆழியார் பாசனத் திட்டத்தின் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம். இவ்வாறு தேங்காய் எடை குறைந்ததற்கும், விவசாயிகளுக்கு விலை குறைவாகக் கிடைப்பதற்கும் வெவ்வேறு விவசாயிகளும் பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் கோடையில் ஏற்பட்ட கடும் வெப்பம் என்பதே, இவர்களில் பலரும் கூறும் ஒருமித்த கருத்தாகவுள்ளது. ''தென்னைக்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாண்டினால் பல பாதிப்புகள் ஏற்படும். கடந்த கோடையில் 40 டிகிரிக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவானது. அதனால் பாளைகள் வெடித்து குரும்புகள் உதிர்ந்துவிட்டன. காய்ப்புத் திறன் குறைந்து விட்டது. இதனால் வழக்கமான விளைச்சலில் 60 சதவீதம்தான் விளைச்சல் கொடுத்தது. தேவைக்கேற்ற வரத்து இல்லாததே இப்போதைய விலையேற்றத்துக்கு மிக முக்கியக் காரணமாகவுள்ளது.'' என்றார் தங்கவேல். வங்கதேசம்: இந்தியா, சீனா உடனான உறவு குறித்து அந்நாட்டு ராணுவ தளபதி கூறியது என்ன?2 ஜனவரி 2025 அங்குரிபாய்: கஞ்சா விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய பெண் - யார் இவர்?3 ஜனவரி 2025 பட மூலாதாரம்,KALI PRAKASH படக்குறிப்பு,விவசாயி காளி பிரகாஷ் கோடையில் பதிவான அதிகப்படியான வெப்பம் தவிர, கேரளா வாடல் நோயும் தேங்காய் உற்பத்தி குறைய முக்கியக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். கேரளா வாடல் நோய் காரணமாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் பொள்ளாச்சி அருகேயுள்ள தா.கி.புதுாரைச் சேர்ந்த விவசாயி காளி பிரகாஷ். கேரளாவிலிருந்து அரை கி.மீ. துாரத்தில் இவரது தோட்டம் உள்ளது. ''ஏழாண்டுகளுக்கு முன்பே, எனது தோட்டத்தில் கேரளா வேர் வாடல் நோயின் தாக்கம் துவங்கிவிட்டது. அந்த பாதிப்பால் 50 வண்டி தேங்காய் எடுத்த தோப்பில் இப்போது 5 வண்டி தேங்காய் மட்டுமே கிடைக்கிறது.'' என்றார் காளி பிரகாஷ். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தின் பின்னணி என்ன?1 ஜனவரி 2025 ரயிலில் பயணிக்கப் போகிறீர்களா? ரயில்கள் புறப்படும், சேரும் நேரத்தில் மாற்றம் - முழு விவரம்1 ஜனவரி 2025 விவசாயிகள் ஆதங்கம் படக்குறிப்பு,பரம்பிக்குளம்–ஆழியார் பாசனத் திட்டத்தின் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கேரளா வாடல் நோய்க்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுக்காமல், அவற்றை வெட்டுவது மட்டுமே இதற்குத் தீர்வு என்று ஆலோசனை தருவதாக விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். பாதிப்பைக் கணக்கிடுகையில், தமிழக அரசு தரும் இழப்பீடும் மிகமிகக் குறைவு என்பது விவசாயிகள் பலருடைய ஆதங்கமாகத் தெரிகிறது. ''ஒரு தென்னை மரத்தை வெட்டி அகற்றுவதற்கு ஆயிரம் ரூபாய் தமிழக அரசு தருகிறது. அதிலும் எத்தனை மரங்களை அகற்றினாலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ.32 ஆயிரம் மட்டுமே தருவது எந்த விதத்திலும் விவசாயிக்கு உதவுவதாக இல்லை.'' என்றார் பரமசிவம். கேரளா வாடல் நோய்க்கு தீர்வு காண்பதற்கு தென்னை ஆராய்ச்சி நிலையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழ் கேட்டதற்கு, இதன் தலைவர் சுதா லட்சுமி சில விளக்கங்களை அனுப்பியுள்ளார். அதில், ''நோய் பாதிப்புள்ள பகுதிகளில், செயல் விளக்கத்திடல் அமைத்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். உயிரி இடுபொருட்களான பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பம்புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்கள் வழங்குகிறோம்.'' என்று தகவல் தெரிவித்துள்ளார். தீவிரமாக நோய் தாக்குதலுக்குள்ளான மரங்களை, தென்னை வளர்ச்சி வாரியத்தின் பங்களிப்புடன் முற்றிலும் அகற்றுவதற்கு விவசாயிகளுக்கு துணை நிற்பதாகவும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார். கேரளா வாடல் நோயால் தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருவதால் தென்னை பயிரிடும் பரப்பு குறைந்து வருவதாக விவசாயிகள் பலரும் தகவல் தெரிவித்தனர். அதுபற்றிய கேள்விக்கு பிபிசி தமிழுக்கு பதிலளித்துள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சுதா லட்சுமி, ''இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளில், தென்னை சாகுபடி பரப்பு 17.9 சதவீதம் அதிகரித்துள்ளது; அதே காலகட்டத்தில் தமிழகத்தில் 35.27 சதவீதம் அதிகரித்துள்ளது; கேரளா வாடலால் மரத்தை வெட்டி அகற்றினாலும் மறுநடவு செய்வதால் குறிப்பிடத்தக்க அளவு சாகுபடி பரப்பு குறையவில்லை.'' என்று கூறியுள்ளார். 'இஸ்ரேல் அமெரிக்காவை கடவுள் பழிவாங்கட்டும்' - காஸாவில் கதறும் பெண்28 டிசம்பர் 2024 இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய்களை பதுக்குகின்றனவா? வெயிலின் தாக்கம், கேரளா வாடல் நோய் பாதிப்பால் தேங்காய் உற்பத்தி குறைந்திருப்பதுடன், சில எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதுமே தற்போதைய விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலப் பிரதிநிதி தங்கவேல், ''கடந்த ஆண்டில் தேசிய வேளாண் விற்பனை நிலையம் மூலமாக 8 லட்சம் மூட்டைகள் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை ஜனவரி, பிப்ரவரியில் விற்பனை செய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சிலர் அவசரமாக தனியார் நிறுவனம் மூலமாக விற்று விட்டனர். கோவை, திருப்பூரில் மட்டும் 6 லட்சம் மூட்டைகள் தனியார் குடோன்களில் தேங்கியுள்ளன. தற்போதைய விலையேற்றத்துக்கு இதுவும் முக்கியக் காரணம். இதைத் தடுக்க வேண்டும்.'' என்றார் அவர். விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து, தமிழக அரசின் வேளாண் துறை செயலாளர் அபூர்வாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''கொப்பரைக்கு மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை நிலையம்தான் விலை நிர்ணயிக்கிறது. தமிழகத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED) மூலமாக தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு எங்கு விலை அதிகம் கிடைக்கிறதோ அங்குதான் அவர்கள் விற்பனை செய்வார்கள். தேங்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி விற்பனை செய்வதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இருந்தாலும் அதுகுறித்து ஆய்வு செய்வோம்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rqeey5247o
  22. 04 JAN, 2025 | 07:17 PM (எம்.வை.எம்.சியாம்) வடக்கு மக்கள் எமக்குப் பெற்றுத் தந்த மக்களாணையின் அர்த்தத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவையை பெற்றுக் கொடுப்போம். அதேபோன்று சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய ஒழுக்கமான சமூகத்தையும் உருவாக்க நாம் முன்னிற்போமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து வடக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு சென்றிருந்தோம். யாழ் உள்ளிட்ட வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் பொலிஸ் பிராஜ குழுக்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தினோம். இந்த வேலைத்திட்டத்தில் பொலிஸாருக்கு உள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் என்ன என்பது தொடர்பில் அவதானம் செலுத்தினோம். குறிப்பாக கடந்த இரண்டு பிரதான தேர்தலின் போதும் வடக்கு மக்கள் எமக்கு பெற்றுத்தந்த மக்கள் ஆணையின் நோக்கத்தை நாம் ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். இந்த மக்களுக்கு சிறந்த மனித நேய பொலிஸ் சேவை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோன்று அந்த மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் வினைத்திறனான பொலிஸ் சேவைப் பெற்றுக் கொடுக்கவும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். மேலும் வடக்கில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் பொலிஸ் திணைக்களங்களுக்கு தமிழர்களை உள்ளீர்ப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தினோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் திட்டம் மாத்திரம் அல்ல. நாட்டின் முழு கட்டமைப்பையும் சீரமைக்கும் தேசிய வேலைத்திட்டமாகும். அதற்குஅப்பால் சென்று ஒழுக்கமான சமூகமொன்றை உருவாக்குதல்,சட்டத்தின் ஓழுங்கை உறுதிப்படுத்தல், இலஞ்சம், ஊழல், மோசடி, வீண் விரயம் அற்ற நாட்டை கட்டியெழுப்புதல் என்பவையும் இதிலடங்கும். இவை அனைத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை மாத்திரம் அல்ல.கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத் திட்டத்தின் நோக்கமும் கூட.எனவே இந்த இலக்குகளை அடைய பொலிஸாரின் தலையீடு மிக முக்கியமானதாகும். இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பொலிஸார் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்ய வேண்டும். நிச்சயம் இந்த திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் உலகபாதாளா குழுக்களின் செயற்பாடுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியும். எனவே இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் மிகவும் திட்டமிட்ட வகையிலும் நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றார். https://www.virakesari.lk/article/202975
  23. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் "கடல் உங்கள் ஆணவத்தைக் கொன்றுவிடும்." தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானி சுப்பிரமணியன் அண்ணாமலையைச் சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எதிரொலிக்கிறது. முனைவர் சுப்பிரமணியன், இந்தியாவின் சமுத்ரயான் திட்டத்தின்கீழ் உருவாகி வரும் மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் ஆற்றல் பிரிவின் தலைவராக இருக்கிறார். "இந்த உலகில் எதைப் பற்றியும் யாருக்கும் முழுதாகத் தெரிந்துவிடாது. பெருங்கடல் அதை மிகச் சரியாக உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அத்தகைய பெருங்கடலுக்குள் நேரில் மனிதர்களை அனுப்பிப் பார்ப்பது கடல் ஆய்வில் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். அதைத்தான் மத்ஸயா 6000 நீர்மூழ்கி செய்யப் போகிறது," என்று கூறினார் அவர். பூமியை விட்டுப் பிரியும் நிலா: எதிர்காலம் என்ன ஆகும்? ஆழ்கடல் அற்புதம்: சூரிய ஒளி புகாத ஆழத்தில் ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி ஆவது எப்படி? ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம் இன்று முதல் பூமியை வலம் வரும் 'இரண்டாம் நிலா' - வெறுங்கண்களால் பார்க்க முடியுமா? சமுத்ரயான் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கியை வடிவமைத்து வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கருத்துரு மற்றும் வடிவமைப்பில், அதன் வளாகத்திலேயே உருவாக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியை பிபிசி தமிழ் குழுவினர் பார்வையிட்டோம். இந்த நீர்மூழ்கியை சென்னை கடல் பகுதியில் விரைவில் விஞ்ஞானிகள் பரிசோதனை செய்யவிருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக 2026இல் ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தத் திட்டம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்ஸயா 6000 குழுவினரை சந்தித்தோம். தமிழ்நாட்டை அச்சுறுத்தும் ஸ்க்ரப் டைபஸ் தொற்று - எந்த 7 மாவட்டங்களில் அதிகம் பரவுகிறது? தடுப்பது எப்படி?4 ஜனவரி 2025 க்ரிம்ஸி: கோடிக்கணக்கான பறவைகளோடு 20 மனிதர்கள் மட்டுமே வாழும் ஆர்டிக் தீவு2 ஜனவரி 2025 ஆழ்கடலுக்குச் செல்லப்போகும் இந்திய விஞ்ஞானிகள் படக்குறிப்பு, மத்ஸயா 6000 நீர்மூழ்கியில் மூன்று பேர் ஆழ்கடலுக்குச் செல்வார்கள் என்று தெரிவித்தார் திட்ட இயக்குநர் முனைவர் வேதாச்சலம் இந்த ஆண்டு முழுவதும் பல கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விஞ்ஞானிகள், அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால் 2026இல் மத்திய இந்தியப் பெருங்கடலின் 6000 மீட்டர் ஆழத்தில் இந்திய விஞ்ஞானிகள் தடம் பதிப்பார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு சீனா, உலகின் மிகவும் ஆழமான மரியானா ஆழ்கடல் அகழிக்கு 10,909 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை நீர்மூழ்கியில் அனுப்பியது. அதோடு, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மனிதர்களை இதுவரை அனுப்பியுள்ளன. அந்தப் பட்டியலில் விரைவில் இந்தியாவும் இணையப் போவதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக கடல் தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், பல நீர்மூழ்கிகளை வடிவமைத்துள்ளது. "இந்தியாவிலேயே நீர்மூழ்கியை தயாரிக்கும் திறனுடைய ஒரே நிறுவனம் இதுதான். ஆகவே, எங்கள் விஞ்ஞானிகளே இதை முற்றிலுமாகத் திட்டமிட்டு, வடிவமைத்து, நாட்டில் முதல்முறையாக மனிதர்களை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்லக்கூடிய நீர்மூழ்கியை உருவாக்கியுள்ளோம்," என்கிறார் திட்ட இயக்குநர் முனைவர் வேதாச்சலம். ''மத்ஸயா 6000 நீர்மூழ்கி, அதை இயக்கப்போகும் ஒரு மாலுமி, அவருக்குத் துணையாக இருக்கும் இணை-மாலுமி மற்றும் ஒரு விஞ்ஞானி ஆகியோரை ஆழ்கடலுக்குள் கொண்டு செல்லும்" என்று விளக்கினார் அதன் திட்ட இயக்குநரான முனைவர் வேதாச்சலம். இதன் வடிவமைப்புப் பணியில் இருந்தே இதில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானியான ரமேஷ் ராஜுவே மாலுமியாக நீர்மூழ்கியை இயக்கப் போவதாகக் கூறும் வேதாச்சலம், "அவருக்குத் துணைபுரியும் இணை-மாலுமியாக இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒருவர் இருப்பார் மற்றும் மூன்றாவதாக ஆழ்கடலை ஆய்வு செய்யப் போகும் விஞ்ஞானி ஒருவர் உடன் செல்வார்," என்று தெரிவித்தார். "இந்த நீர்மூழ்கியின் மூலம், உலகளவில் இதைச் சாதித்துக் காட்டிய மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும்" என்று பிபிசி தமிழிடம் கூறிய மத்ஸயா 6000 குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் முகம் பெருமிதத்தால் பூரித்தது. மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் மறுஆய்வு முடிவால் என்ன நடக்கும்? சுற்றுச்சூழல் நிபுணர்கள் தகவல்29 டிசம்பர் 2024 புத்தாண்டு உறுதிமொழியை கடைபிடிப்பதில் பலரும் தோல்வியடைவது ஏன்?31 டிசம்பர் 2024 இந்தியா மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பப்போவது எப்படி? பட மூலாதாரம்,NIOT திட்ட இயக்குநர் வேதாச்சலத்தின் கூற்றுப்படி, மத்ஸயா 6000 நீர்மூழ்கி, ஆய்வு செய்யவுள்ள பகுதிக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கடலில் இறக்கப்படும். "கப்பலில் இருந்து பெருங்கடலின் மேற்பரப்பில் இறக்கிவிடப்பட்டு, மனிதர்களை அமர வைத்த பிறகு, அங்கிருந்து நேராகக் கீழ்நோக்கி அனுப்பப்படும்," என்று அவர் விளக்கினார். நீளமான டைட்டானியம் உலோகத்தால் ஆன ஒரு கட்டமைப்பில் பேட்டரி முதல் நீர்மூழ்கி இயங்கத் தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் விஞ்ஞானிகள் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அதன் முன்பகுதியில் இருந்த உருளை வடிவ பாகத்தில்தான் மூன்று பேர் உட்கார்ந்து பயணிக்கப் போகிறார்கள். மத்ஸயாவின் மின்னணு அமைப்புகளை வடிவமைக்கும் முனைவர் ரமேஷ்தான் அதை இயக்கவும் போகிறார். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளில்லா தானியங்கி நீர்மூழ்கிகளைக் கடலில் இயக்கிய அனுபவமுள்ளவர். நீர்மூழ்கி கீழ்நோக்கிச் செல்லும்போது அதிக ஆற்றலைச் செலவழிப்பதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட ஆழத்தை நெருங்கும்போது நீர்மூழ்கியின் அனைத்து செயல்பாடுகளும் தொடங்கும் எனவும் கூறுகிறார் ராஜேஷ். பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்28 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 சமுத்ரயான் திட்டத்தின் நோக்கம் என்ன? இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதி பல்லுலோகம் (Polymetal) நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் மத்ஸயா குழுவின் மூத்த விஞ்ஞானியான முனைவர் சத்யநாராயணன். "நிக்கல், தாமிரம், மாங்கனீசு, கோபால்ட் போன்ற உலோகங்களின் கலவையான பல்லுலோகம் இந்திய பெருங்கடலில் மிக அதிக அளவில் இருக்கிறது. இது சர்வதேச கடற்பரப்பில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் ஆழ்கடலில் தரைப் பரப்பில் பரவிக் கிடக்கிறது," என்று கூறினார் அவர். அவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் முதல்கட்டமாக ரோசுப் 6000 (ROSUB 6000) என்ற ஆளில்லா நீர்மூழ்கியை உருவாக்கியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, மனிதர்களைக் கடலுக்குள் அனுப்பி அப்பகுதிகளை ஆய்வு செய்ய கடந்த மூன்று ஆண்டுகள் உழைப்பில் மத்ஸயா உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்துப் பேசியபோது, "நாம் எவ்வளவுதான் ஆளில்லா தொழில்நுட்பங்களை அனுப்பினாலும், நமது கண்களால் பார்த்து ஆய்வு செய்யும்போது இன்னும் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும்," என்று தெரிவித்தார் சத்யநாராயணன். "இந்திய பெருங்கடலின் ஆழ்கடல் பரப்பில் இருக்கும் கனிம வளங்கள் முதல் உயிரினங்கள் வரை பலவற்றையும் மத்ஸயா ஆய்வு செய்யும். மத்ஸயாவின் முன்பகுதியில் இரண்டு நீளமான ரோபோடிக் கைகள் இருக்கின்றன. அதோடு ஒரு கூடை வடிவ சேமிப்பு அமைப்பும் இருக்கிறது. அதில் 200 கிலோ வரை மாதிரிகளைச் சேகரிக்க முடியும்," என்கிறார் ரமேஷ். அவரது கூற்றுப்படி, ஆழ்கடல் ஆய்வுகளில் பாறை அல்லது கனிமம் போன்ற மாதிரிகளைச் சேகரிக்க வேண்டிய தேவை ஏற்படும்போது, ரோபோடிக் கைகளைப் பயன்படுத்தி அவற்றை எடுத்து, சேமிப்புக் கூடையில் வைத்து மேலே கொண்டுவர முடியும். இயேசுவின் குழந்தைப் பருவ வாழ்க்கை எப்படி இருந்தது? பழங்கால பிரதிகளில் கிடைத்த தகவல்27 டிசம்பர் 2024 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானை குட்டியின் உடல் மீட்பு - சுவாரஸ்ய தகவல்கள்26 டிசம்பர் 2024 இந்திய விஞ்ஞானிகளின் புதுமையான பேட்டரி தொழில்நுட்பம் படக்குறிப்பு,தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மத்ஸயா 6000 நீர்மூழ்கியில் லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பயன்படுத்துகின்றனர் இந்த நீர்மூழ்கியில், இதுவரை எந்தவொரு நாடும் செய்திராத, வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ளதாக மத்ஸயா குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வழக்கமாக லெட்-ஆசிட் பேட்டரி, சில்வர்-துத்தநாக பேட்டரி, லித்தியம் அயான் பேட்டரி போன்றவையே பயன்படுத்தப்படும். ஆனால், மத்ஸயா நீர்மூழ்கியில் விஞ்ஞானிகள் லித்தியம் பாலிமர் பேட்டரிகளை பயன்படுத்துகின்றனர். அதுகுறித்துப் பேசியபோது, "இந்தியாவில்தான் முதல்முறையாக இத்தகைய மேம்பட்ட பேட்டரிகளை பயன்படுத்துகிறோம்," என்று கூறினார் சுப்பிரமணியன் அண்ணாமலை. "இதன் அளவு, கொள்ளளவு, எடை ஆகியவை குறைவு. அதனால், நீர்மூழ்கியில் இது எடுத்துக்கொள்ளப் போகும் இடத்தின் அளவும் குறைவு. உதாரணமாக, நமது வீடுகளில் பயன்படுத்தும் பேட்டரிகளைவிட ஐந்து முதல் ஆறு மடங்கு குறைவான இடத்தையே இவை எடுத்துக்கொள்ளும். ஆனால், அதிகளவிலான மின்சாரத்தை இவற்றால் வழங்க முடியும்," என்று விவரித்தார் அவர். நீர்மூழ்கி பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழம் வரை செல்வதற்கு நான்கு மணிநேரம் ஆகும். ஆழ்கடலில் ஆய்வுப் பணிகளை நான்கு மணிநேரம் மேற்கொள்ளும். மொத்தமாக 12 மணிநேரம் ஆழ்கடலில் இந்த நீர்மூழ்கி இயங்கும். ஆனால், பாதுகாப்பு கருதி சுமார் 108 மணிநேரத்திற்குத் தேவையான மின்சார இருப்பு இருக்கும் அளவுக்கு பேட்டரிகளை பொருத்தியுள்ளதாகக் கூறுகிறார் திட்ட இயக்குநர் வேதாச்சலம். சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்23 டிசம்பர் 2024 ஆழ்கடலில் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன? படக்குறிப்பு,ஆழ்கடலில் ஜிபிஎஸ் கருவிகள் பயன்படாது என்கிறார் முனைவர் பால நாக ஜோதி முதல் சவால் காரிருள். மேற்பரப்பில் இருப்பதைப் போன்று ஆழ்கடலில் சூரிய ஒளி புகாது. அதுமட்டுமின்றி, அங்கு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வேலை செய்யாது. அத்தகைய சூழலில் நீர்மூழ்கியின் இருப்பிடத்தைக் கண்டறிவது முதல் அதன் பாதையில் இருக்கும் இடர்பாடுகளை அறிவது வரை அனைத்துமே சவால் நிறைந்திருக்கும். இதைச் சமாளிக்க ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கிலம், டால்பின் போன்ற ஆழ்கடல் உயிரினங்களைப் போல ஒலியைப் பயன்படுத்தி தனது சுற்றத்தை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பமே ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம். இதே வகையில் ஒலி அலைகளை அனுப்புவதன் மூலமே மேலே கப்பலில் இருந்து நீர்மூழ்கியுடனான தொடர்புகளும் அமையும். மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் திசையறிதல் குறித்த பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானியான முனைவர் பால நாக ஜோதி இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார். "ஆழ்கடலில் ஒரு பொருளின் நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்டறிவது மிகவும் சவாலானது. அங்கு ஜிபிஎஸ் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக, ஒலி நிலைப்படுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். அதாவது, ஆழ்கடல் உயிரினங்களைப் போலவே, கடலடியில் மத்ஸயா 6000இன் இருப்பிடத்தை அறிவது, அதன் பாதையைத் தீர்மானிப்பது, அதில் பயணிப்போருடன் தொடர்புகொள்வது ஆகியவற்றைச் செய்வோம்," என்று விளக்கினார் பால நாக ஜோதி. இதைவிட மிக முக்கியமான மற்றொரு சவால் அதீத அழுத்தம். நிலப்பரப்பில் இருக்கும் சரசாரி அழுத்தத்தைவிட ஆழ்கடலில் அழுத்தம் பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று விவரித்தார் சத்யநாராயணன். "ஆழ்கடலில் ஒவ்வொரு 1000 மீட்டருக்கும் அழுத்தம் 100 மடங்கு அதிகரித்துக்கொண்டே போகும். ஆக, 6000 மீட்டர் ஆழத்தில் இங்கு நாம் உணரும் அழுத்தத்தைவிட 600 மடங்கு அதிக அழுத்தம் இருக்கும். அதைச் சமாளிக்க, டைட்டானியம் உலோகத்தில் நீர்மூழ்கி உருவாக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார். மேலும், மனிதர்கள் அமர்ந்து பயணிக்கும் உருளை வடிவ உட்பகுதியை டைடானியம் உலோகத்தில் தயாரித்துக் கொடுக்க இஸ்ரோ உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு 'கணித' பயம் வருவது ஏன்? கற்றல் குறைபாட்டின் அறிகுறியா?22 டிசம்பர் 2024 குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 மத்ஸயா 6000 ஆபத்துகளை சமாளிக்கும் திறன் கொண்டதா? படக்குறிப்பு,இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடலுக்கு பயணிக்கும் குழுவில் இருப்பது குறித்துப் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார் முனைவர் ரமேஷ் ராஜு அடிப்படையில் இந்த நீர்மூழ்கி ஆழ்கடலில் செயல்படப் போவது மொத்தமாக 12 மணிநேரம் மட்டுமே. ஆனால், எதிர்பாராத விதமாக ஏதேனும் சவால்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு மேலே வருவதில் சிக்கல் ஏற்பட்டால், அதிலுள்ள மூன்று பேரும் பாதுகாப்பாக இருக்க ஏதுவாக 108 மணிநேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி, மத்ஸயாவின் இரட்டையர் கட்டமைப்பு ஒன்று பெருங்கடலின் மேற்புறத்தில் கப்பலில் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு அதை இயக்கும் மாலுமி, இணை-மாலுமி, விஞ்ஞானி ஆகிய மூவருக்கும் மாற்றாக வேறு மூன்று பேர் இருப்பார்கள். அவர்கள் தொடர்ச்சியாக ஆழ்கடல் பணியின்போது கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்றும் நீர்மூழ்கியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதில் வழிநடத்துவார்கள் என்றும் கூறினார் திட்ட இயக்குநர் வேதாச்சலம். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்த நீர்மூழ்கி, ஆழ்கடல் தேடுதல், மீட்புப் பணி, கனிம வளங்களின் ஆராய்ச்சி, அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த ஆய்வு எனப் பலவற்றுக்கும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் உதவிகரமாக இருக்கும் என்கிறார் சத்யநாராயணன். "இந்தியாவில் இப்படியொரு விஷயத்தை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பது மட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நிகழும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று சமுத்ரயான் திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, இந்தியாவின் கடல் ஆய்வுகளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமையும். அத்தகைய திட்டத்தின்கீழ் ஆழ்கடலுக்குள் பயணிக்கப் போகும் நாட்டின் முதல் குழுவில் தானும் உள்ளது பெருமையாக இருப்பதாகக் கூறுகிறார் ரமேஷ் ராஜு. அதோடு, இது முழுவதுமாக தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளின் கைகளிலேயே தயாராவாதல், அச்சம் ஏதுமின்றி முழு நம்பிக்கையோடு இருப்பதாகவும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyx77p0xg9o
  24. நாட்டில் சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்றுமுன்தினம் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, கரிம உரம் மற்றும் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு கரிம சீனி உற்பத்தி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனி உற்பத்தியை விநியோகிப்பதற்கான முறையான விநியோக வலையமைப்பை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை சுட்டெண்ணை தயாரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314360
  25. நான் வாசித்ததில் பூவரசங்கதியால் நட்டு வளர்ப்பது போல பெரிய உரப்பை போன்ற பாக்கில் எருவூட்டப்பட்ட மண்ணைப்போட்டு அங்கே கதியால் போன்ற பெரிய மாந்தடியை நட்டு வளர்ப்பதாக படத்தோடு குறிப்பிட்டு இருந்தார்கள். இதன் மூலம் குறுகிய காலத்தில் மாம்பழங்களை பெறலாம் என்பதும் ஒரு காரணம். எனக்கு உங்களது காணொளிப் பகிர்வின்படி மாந்தடியை வெட்டி வேர்வளர்ச்சியைத் தூண்டும் பொடி அல்லது கத்தாளைப்பசையை பூசி நட்டு வளர்த்துப் பார்க்கும் எண்ணம் பிறந்துள்ளது. ஏற்கனவே பெரியம்மாவின் மகன்(தம்பி) மூலம் மாந்தடி நட்டுப் பார்த்து வெற்றி பெறவில்லை. வேர்வளர்ச்சியை தூண்டும் முறையும் தெரியவில்லை, வெட்டி 2/3 நாளின் பின்னர் தான் மாந்தடி நடப்பட்டது. 7 POWERFUL FREE HOMEMADE ROOTING HORMONES| Natural Rooting Hormones

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.