Everything posted by ஏராளன்
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் 06 DEC, 2024 | 05:35 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இந்தியாவும் பங்களாதேஷும் தகுதிபெற்றன. ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஓர் அரை இறுதிப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்களால் இந்தியாவும், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்களால் பங்களாதேஷும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்தியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை இளையோர் அணி 8 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது 3 விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இந் நிலையில் ஜோடி சேர்ந்த சண்முகநாதன் ஷாருஜன், லக்வின் அபேசிங்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர்செய்தனர். ஆனால், அது போதுமானதாக அமையவில்லை. மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் பிரகாசிக்கவில்லை. லக்வின் 69 ஓட்டங்களையும் சண்முகநாதன் ஷாருஜன் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சேத்தன் ஷர்மா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இந்தியா 21.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ராஜஸ்தான் றோயல்ஸினால் ஐபிஎல் ஏலத்தில் 1.1 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கப்பட்ட 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷி 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார். பங்களாதேஷ் வெற்றி பங்களாதேஷுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டியில் மிகவும் இலகுவாக 7 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. ஏ குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பாகிஸ்தான் வெற்றிபெறும் என எதிர்பாரக்கப்பட்டது. ஆனால், மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 22.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இறுதிப் போட்டி துபாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/200609
-
நான்கு வருடங்களின் பின்னர் சிரியாவின் அலப்போ நகரம் மீண்டும் கிளர்ச்சியாளர்கள் வசம் - சர்வதேச ஊடகங்கள்
சிரியாவின் இரண்டாவது நகரமும் கிளர்ச்சியாளர்கள் வசம் 05 DEC, 2024 | 07:59 PM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை முற்றுகையிட்டிருந்த நிலையில் சிரிய படையினர் அந்த நகரிலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த சில மணித்தியாலங்களில் எங்கள் படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன, எங்கள் தரப்பில் பலர் மரணித்துள்ளனர். அந்த குழுக்கள் ஹமா நகரின் பல பகுதிகளிற்குள் நுழைந்துள்ளன என சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது. சிரிய அரசாங்கம் அலப்போவை அவர்களிடமிருந்து மீள கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள போதிலும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஹமா நகரை கைப்பற்றும் நிலையில் உள்ளனர். சிரியாவிற்கும் ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கும் மூலோபாய ரீதியில் ஹமா நகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிரியாவை ஆட்சி செய்பவர்களிற்கும் தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இந்த நகரம் மிகவும் முக்கியமானது. https://www.virakesari.lk/article/200535
-
விசிக - தவெக கூட்டணி சர்ச்சை: விஜய் குறித்த திருமாவளவனின் அறிக்கை உணர்த்துவது என்ன?
பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/TVK எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது. அம்பேத்கர் குறித்து 36 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் விஜயுடன் இந்த நூல் வெளியீட்டு விழா மேடையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல்கள், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்புகள் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பியது. திமுக தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, விஜயுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும் திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது. இந்ததச் சூழலில் இன்று (டிசம்பர் 6) இதற்கான விளக்கம் ஒன்றை அறிக்கையாக வெளியிட்ட திருமாவளவன், இந்தப் புத்தக வெளியீட்டு விழா சார்பாக உருவான விவாதங்கள் அனைத்தும் ஒருதலைபட்சமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஒரு சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விழா தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தது யார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். அதோடு, ஒரு நூல் வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியது என்ன? திருமாவளவன் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து த.வெ.க தரப்பு கூறுவது என்ன? தமிழக அரசியலில் இந்த நிகழ்வு எவ்வாறாகப் பார்க்கப்படுகிறது? எதனால் இந்த சர்ச்சை? கொள்கைகளும் கோட்பாடுகளும் வேறாக இருந்தாலும் இருவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்பது பல சமயங்களில் மக்கள் பார்த்த ஒன்றாகவே இருக்கிறது. பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL ஆனால் திருமாவளவன் விஜயுடன் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது, விஜயின் விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு பெரும் சர்ச்சையாக மாறியது. அக்டோபர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற அந்த மாநாட்டில் தன்னுடைய கட்சியின் அரசியல் எதிரி திமுக என்று கூறினார். "பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.கவின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி," என்றார் விஜய். பிறகு, கூட்டணி குறித்துப் பேசிய அவர், "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருப்பினும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கும், அதிகாரப் பகிர்வும் கொடுக்கப்படும்" என்று கூறினார். ஆனால், இந்த மாநாடு நடைபெறுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு" என்றும், 'அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் ஜனநாயகம், குவித்து வைப்பது அல்ல, இது யாரையும் மிரட்டுவதற்காகச் சொல்லப்படும் கருத்து அல்ல" என்றும் திருமாவளவன் கூறியிருந்தார். இந்தச் சூழலில் விஜய் தன்னுடைய மாநாட்டில் பேசியது, விசிக உடனான கூட்டணிக்கான அழைப்பாகக் கருத்தப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமாவளவன், தாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக நீடிப்பதாகவும், விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்றும் கூறினார். அதிருப்தி தெரிவித்த திருமாவளவன் பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X படக்குறிப்பு, விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதாலேயே அவருடன் கூட்டணி சேர்வோம் எனக் கூறுவது சரியல்ல என்று திருமாவளவன் குறிப்பிட்டார். அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்றே இந்த புத்தக வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, திருமாவளவன் அதைப் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. விஜயின் கட்சி அதிகாரப்பூர்வமாக நிறுவப்படுவதற்கு முன்பாகவே இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் திருமாவளவன் என்பது அவரது அறிக்கையின் மூலம் உறுதியாகிறது. டிசம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் "விஜய் விழாவில் பங்கேற்க இசைவளித்துள்ளதாகச் சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது" என்று மேற்கோள் காட்டிய திருமாவளவன், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளிவராத சூழலில் ஒரு தமிழ் நாளிதழ் இதைப் பெரிய செய்தியாக வெளியிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், "ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதை அரசியலாக்கியது," என்றும் தன்னுடைய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். "திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் ஐயத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும்தான் இதன் உள்நோக்கமாக இருக்க முடியும்," என்று பெயர் ஏதும் குறிப்பிடாமல் குற்றச்சாட்டை முன்வைத்தார் அவர். இந்த விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் உறுதியானதும், பலர் பல்வேறு ஊகங்களை பரப்பி வருவதாகக் கூறும் அவர், "இவர்களில் பெரும்பாலானோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்ற செயல் திட்டத்தோடு," இருப்பதாகக் குறிப்பிட்டார். 'காய் நகர்த்தும் அரசியல் எதிரிகள்' பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/X திருமாவளவனை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்ற விகடனின் முடிவை ஏன் யாரும் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்னெழுப்பியுள்ளார். மேலும், இதற்குத் தானும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், "உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்க மாட்டேன். அவரை (விஜயை) வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள்," என்று விகடன் பதிப்பகத்திடம் தான் கூறிவிட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். "என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?" என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன். திருமாவளவனின் முடிவு குறித்து த.வெ.க கூறுவது என்ன? பட மூலாதாரம்,TVK VIJAY/FACEBOOK படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "கொள்கைகளும் கருத்துகளும் வெவ்வேறாக இருந்தபோதும் இரண்டு வெவ்வேறு தலைவர்கள் ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதும், ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதும் இயல்பான ஒன்று. இந்த நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்காமல் போனது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது," என்று கூறினார். "அம்பேத்கரை எங்கள் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கிறோம். இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்குவாதிகள் என்று பலரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தொகுப்பே அந்த நூல். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோரின் கட்டுரைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தக வெளியீட்டு விழாவை அரசியல் நிகழ்வாகப் பார்ப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்," என்று கூறினார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் திருமாவளன் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தால், அம்பேத்கரின் தியாகங்களும், சமூக நீதி, சமத்துவ அரசியல் கருத்தாக்கங்களும் பல கோடி மக்களிடம் போய் சேர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட லயோலா மணி, "கூட்டணி வேறு, கொள்கை வேறு. சூழல் காரணமாகவே திருமாவளவனால் இந்த நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை," என்று மேற்கோள் காட்டினார். "திருமாவளவன் சுயம்பாக வந்த தலைவர். அவர் மீது எங்களுக்கு கோபமோ, விமர்சனமோ இல்லை," என்றும் அவர் கூறினார். இந்த அறிக்கையை எவ்வாறு அணுகுவது? பட மூலாதாரம்,@LOYOLAMANI/X படக்குறிப்பு, த.வெ.கவின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி (இடது) கூட்டணிகளைப் பொறுத்தவரை நிரந்தரமான கூட்டணி என்ற ஒன்று இல்லவே இல்லை எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான கிளாட்சன் சேவியர். "புத்தக வெளியீட்டு விழாவை ஒரு அறிவுசார் தளமாகவே பார்க்க வேண்டும். இன்றைய சூழலில், சமகால நிகழ்வுகள் குறித்த ஊடக மற்றும் பொதுமக்களின் நினைவானது ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கக் கூடியது. ஆனால் இந்த நிகழ்வில் திருமாவளவன் கலந்து கொள்ளாமல் இருப்பது குறித்து மௌனித்து இருந்தால் அது தொடர்பாகவும் விமர்சனங்கள் ஏற்படும். இத்தகைய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிக்கையாகவே இதை அணுக வேண்டும்," என்று கூறினார். மேலும், ஒரு அரசியல் மேடையை இரு தலைவர்கள் பகிர்ந்து கொண்டால் அது கூட்டணிக்கு வழிவகுக்கும் என்று கூறிவிட இயலாது, கொள்கை ரீதியாகப் பல பத்தாண்டுகளாக திருமாவளவன் உறுதியாக இருந்திருக்கிறார் என்றும் சேவியர் குறிப்பிட்டார். "திமுகவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதைச் செய்திருக்கலாம். அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, பாஜகவில் இணைந்து, மேலும் சில தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை அவர் உறுதி செய்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்திய அரசியல் சூழலில் அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு தலைவராக திருமாவளவன் அறியப்படுகிறார். தனது நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த தகவல்களை ஊடகத்திற்கு வெளியிட்டது யார் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இதில் அதிகமாக உள்ளர்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை," என்றும் கூறினார் அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் கிளாட்சன் சேவியர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnv3j011y3yo
-
இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - விசேட தேவையுடைய நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னி உரை!
விசேட தேவையுடையவர்களுக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவே எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது; சுகத் வசந்த டி சில்வா 06 DEC, 2024 | 05:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவை 7ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து 10ஆயிரம் ரூபாவரை நிச்சியமாக அதிகரிப்போம் என சுகத் வசந்த டி சில்வா தெரிவி்த்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், விசேட தேவையுடையவர்கள் என்பது இந்த உலகுக்கு அழகை கொண்டுவந்த தூதுக்குழுவினராகும். பன்முகத்தன்மையின் அடிப்படையிலேயே வர்ணமயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. உங்கள் மத்தியில் கண் பார்வை அற்ற என்னால், இந்த இடத்தில் பன்முகத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மனித சமூகத்தில் வர்ணமயங்கள் ஏற்பட்டிருப்பது இந்த பன்முகத்தன்மையினால் ஆகும். இது என்னுடைய கன்னி உரையாகும். அதேபோன்று இது வரலாற்று கதையாகும். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் 76 வருடங்களுக்கு பின்னர் விசேட தேவையுடைய ஒருவருக்கு பாராளுமன்ற வரம் கிடைத்திருக்கிறது. இந்த வரம் தற்செயலாகவோ வேறுமனே கிடைத்த வரம் அல்ல. இதற்காக பாடுபட்ட குழுவொன்று இருக்கிறது. 17இலட்சத்துக்கும் அதிக எனது விசேட தேவையுடைய சமூகம் சார்ப்பாக அந்த குழுவுக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும் விசேட வேவையுடைய சமூகத்துக்கு தற்போது வழங்கப்படும் 7500 ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை. அதனால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அந்த கொடுப்பனவை 10ஆயிரமாக நிச்சயமாக அதிகரிப்போம். மேலும் விசேட தேவையுடைய சமூகத்துக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதித்துவம் தேவையாகும். அதனை உணர்ந்துகொண்டது தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். எமது இந்த விசேட தேவைப்பாடு நாங்கள் பலவந்தமாக எடுத்துக்கொண்டது அல்ல. அந்தவகையில் விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு பல அடிப்படை தேவைகள் இருக்கின்ற. அந்த தேவைகளை இந்த அரசாங்கத்தில் நிவர்த்தி செய்ய என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன். குறிப்பாக ரயில் போக்குவரத்து சேவையில் விசேட தேவையுடைவர்களுக்கு என எந்த வசதியும் இல்லை. அதனால் ரயிலில் தனியான ஒரு பெட்டியை விசேட தேவையுடையவர்களுக்கு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/200593
-
அரசாங்கத்தின் கணக்கு வாக்குப்பதிவு சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்
06 DEC, 2024 | 06:21 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுர குமரதிசாநாயக்க அரசின் 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு வியாழக்கிழமை சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் இதன் மீதான விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை விவாத முடிவில் எதிர்க்கட்சிகள் கணக்கு வாக்குப்பதிவு மீது வாக்கெடுப்பை கோராத காரணத்தால் அது ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அஷோக்க ரன்வல சபைக்கு அறிவித்தார். அதன் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான கணக்கு வாக்குப்பதிவாக 9,60,500 கோடி ரூபாவுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றது. https://www.virakesari.lk/article/200616
-
காசாமருத்துவமனைக்குள் புகுந்து இஸ்ரேலிய படையினர் வெறியாட்டம் - நான்கு மருத்துவர்கள் உட்பட பலர் பலி- சிஎன்என்
06 DEC, 2024 | 08:03 PM இஸ்ரேலிய படையினர் வடகாசாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது மேற்கொண்ட தாக்குதலில் நான்கு மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் மருத்துவபணியாளர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட பின்னர் முக்கியமான மருத்துவ விநியோக பொருட்களை அழித்தனர் என மருத்துவமனையின் இயக்குநர் ஹ_சாம் அபு சாபியா தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை சீருடையணியாத இருவரை மருத்துவமனைக்குள் அனுப்பிய இஸ்ரேலிய படையினர் அனுப்பினர் அவர்கள் நோயாளிகளை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர், இரண்டுமணிநேர நடவடிக்கையின் போது பல மருத்துவபணியாளர்கள் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தவர்கள் உட்பட் இளைஞர்களை கைதுசெய்தனர், என அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையை இராணுவவாகனங்கள் சுற்றிவளைத்ததும், வானிலிருந்து தாக்குதல் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அபுசாபியா பின்னர் இஸ்ரேலிய படையினர் பலரை கைதுசெய்து கொண்டுசென்றனர் என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் மருத்துவமனையின் வடக்குமேற்கு திசைகளில் இருந்து தொடர்ச்சியாக விமானதாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னர் நேரடி தாக்குதல் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய படையினர் என்னிடம் அனைத்து நோயாளிகளையும் வெளியேறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டனர் அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூடச்செய்து கைதுசெய்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில மணிநேரத்தின் பின்னர் இஸ்ரேலிய படையினர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பணியாளர்கள் வீதிகளில் பல உடல்களையும் காயம்பட்ட பலரையும் பார்த்துள்ளனர். அபுசய்பியா சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள படத்தில் மருத்துவமனையின் பின்புறத்தில் 17 உடல்கள் காணப்படுவதை காணமுடிந்துள்ளது. https://www.virakesari.lk/article/200620
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
வாங்கிற்றாங்க பையா. இண்டியன் பிறீமியர் லீக் வரலாற்றில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனை ராஜஸ்தான் றோயல்ஸ் (RR) ஏலத்தில் எடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று நிறைவுக்கு வந்த 18ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்திற்கான வீரர்கள் ஏலத்தின்போது 13 வயதுடைய வைபவ் சூர்யாவன்ஷியை ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா ஏல விலையில் ராஜஸ்தான் றோயல்ஸ் தனது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அவரது அடிப்படை விலை 30 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இளஞ் சிங்கத்தை எப்படியாவது ஏலத்தில் வாங்கி விட வேண்டும் என்ற பேரவாவுடன் ராஜஸ்தான் றோயல்ஸும் டெல்ஹி கெப்பிட்டல்ஸும் ஏலப் போட்டியில் இறங்கின. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு அந்த சிறுவனை தனதாக்கிக்கொண்டது.
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் லஹிரு குமார 100 விக்கெட்கள் 06 DEC, 2024 | 03:35 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக ஒன்பதாவது வீரராக லஹிரு குமார 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்து வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பொறித்துக்கொண்டார். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆரம்ப வீரர் ஏய்டன் மார்க்ராம் அவரது 100ஆவது விக்கெட்டாகப் பதவானது. இந்தப் போட்டியில் லஹிரு குமார 4 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். தனது 33ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் லஹிரு குமார இதுவரை மொத்தமாக 103 விக்கெட்களைக் பைற்றியுள்ளார். முத்தையா முரளிதரன், ரங்கன ஹேரத், சமிந்த வாஸ், சுரங்க லக்மால், டில்ருவன் பெரேரா, ப்ரபாத் ஜயசூரிய, லசித் மாலிங்க, டில்ஹார பெர்னாண்டோ ஆகியோரைத் தொடர்ந்து இலங்கையர்களுக்கான 100 விக்கெட்கள் பட்டியலில் லஹிரு குமார இணைந்துகொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/200594
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்கிலாந்தை மீண்டும் மீட்டெடுத்த ப்றூக், போப் 06 DEC, 2024 | 02:53 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 280 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஹெரி ப்றூக் தொடர்ச்சியாக குவித்த இரண்டாவது சதம், ஒலி போப் பெற்ற அரைச் சதம் என்பன இங்கிலாந்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டு நல்ல நிலையில் இட்டன. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் இங்கிலாந்தின் முதல் நான்கு விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்த்தப்பட்டன. அந்த டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தனர். முதலாவது போட்டியில் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 141 ஓட்டங்ளைப் பகிர்ந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டியில் 174 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 217 ஓட்டங்களாக உயர்த்தினர். முதலாவது டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்களைக் குவித்த ஹெரி ப்றூக் இந்தப் போட்டியில் 123 ஓட்டங்களைப் பெற்றர். அப் போட்டியில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப், இப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரை விட வெறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் நேதன் ஸ்மித் 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார். ப்றைடன் கார்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/200587
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
ஸ்டார்க் பந்துவீச்சில் கவிழ்ந்த இந்திய அணி - எச்சரிக்கையுடன் களமாடும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக அடியெல்டில் இன்றைய நாள் ஆஸ்திரேலியா அணிக்கானது. பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள், பேட்டிங்கிலும் இந்திய வீரர்களுக்கு சவாலாக களத்தில் நிற்கிறார்கள். பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 2வது செஷனிலேயே 44.1 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெர்த் டெஸ்ட் போட்டியில் சேர்த்த ரன்களைவிட கூடுதலாக 30 ரன்களை இந்திய அணி சேர்த்துள்ளது என ஆறுதல் அடைந்தாலும், டிபெண்ட் செய்து பந்துவீசுவதற்கு இது போதுமானதாக இருக்காது. இதுபோன்ற குறைந்த ஸ்கோர் பந்துவீச்சாளர்களுக்கே சுமையைக் கூட்டும். மூன்றாவது செஷனில் இருந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 33 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்துள்ளது. விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்ற தீவிரமான எச்சரிக்கையுடன் ஆஸ்திரேலிய பேட்டர்கள் களமாடி வருகிறார்கள். இந்திய பந்துவீச்சை குறிப்பாக பும்ரா பந்துவீச்சைச் சமாளிக்க பிரத்யேக பயிற்சி(ஹோம் ஓர்க்) செய்துள்ளார்கள் என்பது பேட்டிங்கில் தெரிய வந்தது. மின்னொளியில் பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். ஆனால், மின்னொளியில் நடந்த 3வது செஷனில் இந்திய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது. அடுத்ததாக எந்த விக்கெட்டும் வீழ்த்த முடியாத அளவுக்கு இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலான பேட்டிங்கை ஆஸ்திரேலிய பேட்டர்கள் வெளிப்படுத்தினர். ரசிக்கக்கூடிய ஆரோக்கியமான போட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவின் நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷேன் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொண்டாடினர். ஆனாலும், பும்ராவின் பந்துவீச்சு மின்னொளியில், பிங்க் பந்தில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது. குறிப்பாக லாபுஷேனுக்கு பாடிலைனில் பும்ரா பந்து வீசுவதும், அவரைச் சீண்டுவதும், லாபுஷேன் பந்தை லீவ் செய்து ஆடுவதும், பந்தை கவனமாகக் கையாண்டு டிபெண்ட் செய்வதும் பார்ப்பதற்கு மிக அழகாக, ரசிக்கும்படியாக இருந்தது. இரு அணிகளின் வீரர்களும் ஒருவொருக்கொருவர் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாமல், ஆரோக்கியமான, ஆவேசமான, துல்லியமான பந்துவீச்சில் புன்னகையை வெளிக்காட்டும் பும்ரா, அதற்கு லாபுஷேனின் வார்த்தைகள், ஸ்லிப்பில் நின்றிருக்கும் இந்திய வீரர்களின் உற்சாகக் குரல் என டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆரோக்கியமாக நடைபெற்றது. பும்ராவின் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீச்சை மின்னொளியில் சமாளிக்க முடியாமல் லாபுஷேன், மெக்ஸீவினி இருவரும் கடும் அழுத்தத்தில் திணறுவதும், போராடியதும் பார்க்க அழகாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களிடம் போராட்ட குணத்தை வெளிப்படுத்திய லாபுஷேன், மெக்ஸ்வீனி இருவரும் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். லாபுஷேன் 20 ரன்களிலும், மெக்ஸ்வீனி 38 ரன்களிலும் களத்தில் உள்ளனர். பிங்க் பந்தில் எப்போதும் அசுரர்கள் என்பதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்த டெஸ்டிலும் நிரூபித்துள்ளனர். மிட்செல் ஸ்டார்க் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கம்மின்ஸ், போலந்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெஸ்ட் போட்டி தொடங்கி முதல் ஓவர் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலுக்கு கால்காப்பில் வாங்க வைத்து கோல்டன் டக்-அவுட்டில் ஸ்டார்க் வெளியேற்றினார். கடந்த டெஸ்டில் சீண்டியதற்கு ஜெய்ஸ்வாலுக்கு ஸ்டார்க் பதிலடி கொடுத்தார். பிங்க் பந்தில் வீசிய அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் 72 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பும்ரா பந்துவீச்சில் கைநழுவிய கேட்சுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர்கள் இதுவரை 9 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே பும்ரா பந்துவீச்சில் மெக்ஸ்வீனிக்கு அவுட்சைட் எட்ஜ் எடுத்து விக்கெட்டை இழக்க வேண்டியிருந்தது. ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பிடிக்க வேண்டிய கேட்சை பிடிக்காமல் கோட்டைவிட, அதை முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவும் பிடிக்காமல் தவறவிட்டு பந்து கையில் பட்டுச் சென்றது. சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர்கள் இதுவரை 9 கேட்சுகளை பிடிக்காமல் கோட்டைவிட்டுள்ளனர், அதில் 8 கேட்சுகளை ரிஷப் பந்த் மட்டுமே நழுவவிட்டுள்ளார் என்று கிரிக்இன்ஃபோ தரவுகள் கூறுகின்றன. வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது அதைக் கவனித்து ரிஷப் பந்த் நகராமல் தொடர்ந்து அதே இடத்தில் நிற்பதால்தான் கேட்சை அவரால் தாவிச் சென்று பிடிக்க முடியவில்லை. பும்ராவின் 50வது விக்கெட் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்கச் செய்த பும்ராவின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா(13) விக்கெட்டை பும்ரா வீழ்த்தியபோது, இந்த காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டில் பும்ரா 48 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ராவுக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் 46 விக்கெட்டுகளுடன் இந்த காலண்டர் ஆண்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவாஜாவுக்கு தொடர்ந்து இரு பந்துகளை உள்நோக்கி இன்ஸ்விங் செய்து, திடீரென கடைசிப் பந்தை இன்ஸ்விங் போல வீசி அதை அவுட்-ஸ்விங்காக பும்ரா மாற்றியது எந்த பேட்டரும் எதிர்பார்த்திராதது. இந்தப் பந்தை சற்றும் எதிர்பாராத கவாஜா பேட்டை வைத்து பந்தை தடுத்தவுடனே முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மாவிடம் அது கேட்சானது. பயம் அறியா நிதிஷ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய பேட்ஸ்மேன் நிதிஷ் குமார் கடந்த பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 50 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் முக்கியக் காரணமாக இருந்தது. அந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை நிதிஷ் பதிவு செய்தார், இந்த டெஸ்டிலும் அதிகபட்ச ஸ்கோரை அவர் எடுத்துள்ளார். இந்த டெஸ்டிலும் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமாரின் பேட்டிங்கும் அவரின் 42 ரன்களும் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. போலந்த் ஓவரில் 6,4,6 என நிதிஷ்குமார் அடிலெய்ட் மைதானத்தில் அடித்தது சிறப்பான ஆட்டமாக இருந்தது. அதிலும் போலந்த் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் நிதிஷ் அடித்த சிக்ஸரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர். நிதிஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 42 ரன்கள் சேர்த்து அச்சமில்லாத பேட்டிங்கை வெளிப்படுத்தினார். டாஸ் வென்றது மட்டுமே சாதகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்ற நிகழ்வு மட்டுமே சாதகமாக அமைந்தது. முதல் ஓவர், முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் கோல்டன் டக்-அவுட்டில் ஸ்டார்க் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு சுப்மான் கில், ராகுல் சேர்ந்து 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆறுதல் அளித்தனர். அதன் பிறகு வந்த விராட் கோலி(7), ரோஹித் சர்மா(3), ரிஷப் பந்த்(21) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்த டெஸ்டிலும் தொடர்ந்து வருகிறது. கோலி, ராகுல் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க் விராட் கோலிக்கும், கே.எல்.ராகுலுக்கும் ஒரே மாதிரியான பந்தை வீசி ஸ்டார்க் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஸ்டார்க்கின் அதிவேகப் பந்து அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்பில் செல்லும்போது அந்தப் பந்தை தொடலாமா அல்லது வேண்டாமா என்று யோசிக்கும் கனநேரத்தில் "எக்ஸ்ட்ரா பவுன்ஸில்" பந்து பேட்டில் பட்டு கேட்சானது. ராகுல், கோலி இருவரையும் யோசிக்க நேரம் அளிக்காமலே ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தினார். அதாவது பந்தை லீவ் செய்வதற்கு இருவரும் பேட்டை உயர்த்துவதற்கு முன்பே பந்து இருவரின் பேட்டிலும் பட்டு ஸ்லிப்பில் கேட்சானது. ராகுல், சுப்மான் கில் களத்தில் இருந்தவரை ஓரளவுக்கு ரன்கள் இந்திய ஸ்கோர்போர்டில் வந்தது. இருவரும் பெவிலியன் சென்ற பிறகு மூத்த வீரர்கள் ரோஹித், கோலி இருவரும் வந்த வேகத்தில் சென்றனர். தொடரும் ரோஹித்தின் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோஹித்தின் விக்கெட்டை கொண்டாடும் ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலந்த் ரோஹித் சர்மாவுக்கு டிபெண்ட்ஸ் ஆடுவதில் இன்னும் திணறுகிறார் என்பது இந்த ஆட்டத்திலும் தெளிவானது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக டிபெண்ட்ஸ் சதவீதம் 83 ஆக வைத்திருக்கும் ரோஹித் சர்மா, அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 79 ஆகக் குறைந்துவிட்டதாக கிரிக்இன்ஃபோ தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிகமாக பேட் செய்து அதிரடி(அட்டாக்கிங் பேட்டிங்) பேட்டிங் செய்து பழகிவிட்டதால், டெஸ்ட் போட்டியில் கால்களை நகர்த்தி டிபெண்ட்ஸ் ஆடுவது பெரிய சிரமமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் ரோஹித் சர்மா களமிறங்கியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நண்பகல் உணவு இடைவேளைக்குச் செல்லும்போதே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. 30வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. மிட்செல் ஸ்டார்க் வீசிய 39வது ஓவரில் அஸ்வின்(22), நிதிஷ் ராணா(0) இருவரும் ஓரே ஓவரில் ஆட்டமிழந்தது இந்திய அணியை பலவீனப்படுத்தியது. அதன் பிறகு நிதிஷ் ரெட்டிக்கு ஈடுகொடுத்து பும்ரா பேட் செய்து, ஸ்ட்ரைக்கை மாற்றினார். ஆனாலும் பும்ரா நிலைக்கவில்லை. நிதிஷ் கடைசிவரை போராடி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqjz05gl09vo
-
இலங்கை நாடாளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - விசேட தேவையுடைய நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னி உரை!
06 DEC, 2024 | 03:32 PM இலங்கையின் விழிப்புலனற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/200578
-
உலகம் மூன்றாவது அணுவாயுத யுகத்தின் விளிம்பில் - பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை
06 DEC, 2024 | 10:55 AM உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது, மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர், இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும், உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான ரஸ்ய எல்லையில் வடகொரிய படையினர் நிறுத்தப்பட்டுள்ளமையே இந்த வருடத்தின் முற்றிலும் வழமைக்குமாறான சம்பவம் என அட்மிரல் சேர் டொனி ரடக்கின் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/200556
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பும்ராவின் 'பந்து வீச்சு ஸ்டைல்' விமர்சிக்கப்படுவது ஏன்? ஆஸ்திரேலிய அணி கலக்கத்தில் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக கிரிக்கெட்டில் ஒரு வீரரை திறமையால் எதிர்கொள்ள முடியாத நிலையில், எதிரணியினர் மனரீதியாக தாக்கி அந்த வீரரின் மனஉறுதியுடன் மோதி வெற்றி பெறுவது தந்திர உத்தி. இந்த தந்திர உத்தியை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியினரும், ஊடகங்களும், கடந்த காலங்களில் பல நேரங்களில் கையாண்டுள்ளனர், இதற்காக விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். அந்த வகையில், இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்கள், கவுன்டி வீரர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருப்பவர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரி்த் பும்ராதான். ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்களில் அபாரமான வெற்றியைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, பும்ராவின் வேகப்பந்து வீச்சுதான். இந்த டெஸ்டில் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்த் டெஸ்டுக்கு இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு, பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் பும்ரா இருந்தார். அதிவேக பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைவிட, பும்ராவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அந்த அணியின் பேட்டர்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக பும்ரா இருந்தார் என்பதை அந்த அணி வீரர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். விமர்சனங்களில் சிக்கியவர்கள் ஆஸ்திரேலிய ஊடகங்களின் விமர்சனங்கள், வீரர்களின் ஸ்லெட்ஜிங்கில் சிக்கியவர்களில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், ஷாஹித் அஃப்ரிடி, ஷோயப் அக்தர் என பந்து வீச்சாளர்களின் பட்டியல் நீளும். அதேசமயம், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைப் பற்றி இந்திய நடுவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் அம்பலத்தில் ஏறவில்லை. ஆஸ்திரேலிய அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் பந்து வீச்சாளர்கள் மனரீதியாகத் தாக்கப்பட்டு, பந்துவீச்சு மீது அவதூறு கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது. 'பந்து வீச்சு வித்தியாசமாக இருக்கிறது' ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிட்னி மார்னிங் ஹெரால்டு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், "பும்ராவின் பந்து வீச்சு விளையாட முடியாத அளவுக்குக் கடினமாக இருக்கிறது. பும்ரா ஓடி வரும் ஸ்டைலும், பந்து வீச்சு முறையும் வித்தியாசமாக இருக்கிறது, மற்ற பந்து வீச்சாளர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறது. வித்தியாசத்தின் ஒட்டுமொத்த உருவமாக பும்ராவின் பந்து வீச்சு இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார். 'பேரன்களிடம் சொல்லி பெருமைப்படுவேன்' ஆஸ்திரேலிய அணியின் பேட்டர் டிராவிஸ் ஹெட் 'டான்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " நான் பார்த்த பந்து வீச்சாளர்களிலேயே சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவும் ஒருவர். அவரின் பந்து வீச்சை சமாளித்து பேட் செய்வது சவாலானது. என் பேரக்குழந்தைகளிடம் பும்ராவின் பந்து வீச்சை சமாளித்து, நான் பேட் செய்தேன் என்று பெருமையாகக் கூறுவேன்" எனத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "பும்ராவின் பந்து வீச்சை சமாளித்து, நான் பேட் செய்தேன் என்று பெருமையாகக் கூறுவேன்" என டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கவலை இந்த சூழலில், அடிலெய்ட் டெஸ்ட் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியினர் பும்ராவின் பந்து வீச்சைப் பார்த்து நடுக்கத்தில் உள்ளனர் என்பது தெளிவாகிறது. ஏனென்றால், அதிவேக பெர்த் ஆடுகளத்திலேயே பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொண்டு சிதறிய ஆஸ்திரேயாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள், அடிலெய்டில் பிங்க் பந்தில் பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியினரை தற்போது சூழ்ந்திருப்பது, "பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது" என்ற கவலைதான். டாப் ஆர்டர்கள் பரிதாபம் ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை கடந்த 7 டெஸ்ட்களில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் சிதைத்துள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தானின் அமர் ஜமால், ஷாஹின் ஷா அஃப்ரிடி, மிர் ஹம்சா, அல்சாரி ஜோசப், ஷாமர் ஜோசப், மாட் ஹென்றி, பென் சீர்ஸ் ஆகியோர், கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலிய டாப் ஆர்டர் பேட்டர்களை சிதைத்து, 4 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதிலிருந்து, டாப் ஆர்டர் பேட்டர்கள் எந்த அளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அன்று பிளின்டாப், இன்று பும்ரா கடந்த 2005ம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்டுக்கு கடும் பிரச்னையாக பிளின்டாப் பந்து வீச்சு இருந்தது. 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து பயணத்தில் கில்கிறிஸ்டை 6 முறை பிளின்டாப் ஆட்டமிழக்கச் செய்தார். பிளின்டாப் பந்து வீச்சை சமாளித்து ஆடமுடியாமல் கில்கிறிஸ்ட் விக்கெட்டை இழப்பது தொடர்ந்தது. இதை களைவதற்கு பேட்டிங் பயிற்சியாளர் பாப் மயூல்மேனிடம் பிரத்யேகமாக கில்கிறிஸ்ட் பயிற்சி எடுத்து 2007ம் ஆண்டு ஆஷஸ் தொடரை எதிர்கொண்டார். அந்த ஆஷஸ் தொடரில் பிளின்டாப் பந்து வீச்சை கில்கிறிஸ்ட் அனாசயமாக விளையாடினார். அதேபோல, பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் கலக்கம் கொண்டுள்ளது. பும்ராவின் பந்து வீச்சை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஸ்மித், லாபுஷேன், கவாஜா, மார்ஷ் என அனைவரும் பிரத்யேக பேட்டிங் பயிற்சி எடுத்து வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ராவின் பந்து வீச்சை சமாளிப்பதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிரத்யேக பயிற்சி எடுத்து வருகின்றனர் பும்ரா பந்து வீச்சை கண்டு ஏன் அச்சம்? பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு இருக்கும் பிரச்னை, "பும்ரா தனது கையில் வைத்திருக்கும் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளிதான். எப்போது, எப்படி பந்தை ரிலீஸ் செய்கிறார்" என்பதை ஆஸ்திரேலிய பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. இதனால் பும்ராவின் பந்து வீச்சில் அனைத்துப் பந்துகளையும் எதிர்கொண்டு விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் இருக்கிறார்கள். பும்ரா வீசும் ஓவரில் எந்த பந்து அவுட் ஸ்விங் (outswing) ஆகிறது, இன்ஸ்விங் (inswing) ஆகிறது, ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் (stump to stump) வருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திணறுகிறார்கள். வாசிம் அக்ரமின் விளக்கம் பும்ராவின் பந்து வீச்சு குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறுகையில், "பும்ரா தனது பந்து வீச்சில் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளி என்பது பேட்டர்களின் கால்களை நோக்கி இருக்கிறது. எந்த பந்து வீச்சாளரிடமும் இல்லாத ஸ்டைலில் பும்ரா வீசுவதால், அவரின் பந்து வீச்சை பேட்டர்கள் கணித்து ஆடுவது படுசிரமமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அங்குள்ள ஆடுகளங்களில் ஒரு பேட்டர் பேட்டின் நுனியில் பட்டு (அவுட்சைட் எட்ஜ்) ஆட்டமிழப்பதுதான் அதிகம். அதிகமான பவுன்ஸர், அதிகமான சீமிங் இதற்குக் காரணம். ஆஸ்திரேலிய வீரர்களின் உடல்வாகு, அதிகமான உயரத்தால், அவர்களின் பந்துவீச்சில் இருக்கும் வேகத்தால் எதிரணி பேட்டர்களை கிளீன் போல்ட் செய்ய சரியான லைன் அன்ட் லென்த்தில் பிட்ச் செய்வது கடினம். ஆதலால், ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை பேட்டர் ஒருவர் லீவ் செய்து பழகினாலே களத்தில் நிற்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "எந்த பந்து வீச்சாளரிடமும் இல்லாத ஸ்டைலில் பும்ரா வீசுவதால், அவரின் பந்து வீச்சை பேட்டர்கள் கணித்து ஆடுவது படுசிரமமாக இருக்கும்" - வாசிம் அக்ரம் பேட்டர்களுக்கு சவால் ஆனால், பும்ரா பந்து வீச்சைப் பொறுத்தவரை, பெர்த் டெஸ்டில் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் முறையைக் கையாண்டார். பும்ரா பந்துவீச்சில் எந்தப் பந்து இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. பும்ராவின் பந்து வீச்சில் இருக்கும் வேகம், பேட்டருக்கு அருகே அவரின் ரிலீஸ் பாயிண்ட் அமைந்திருப்பது, ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனால் பும்ராவின் பந்து வீச்சை லீவ் செய்து ஆஸ்திரேலிய பேட்டர்கள் ஆடுவது சிரமம். அவ்வாறு ஆடுவதும் ஆபத்தானது. ஏனென்றால், பும்ராவின் பந்துவீச்சு ரிலீஸ் பாயிண்ட் குழப்பமாக இருப்பதால், லீவ் செய்து விளையாட ஆஸ்திரேலிய பேட்டர்கள் முயன்றால், கால்காப்பில் வாங்கி ஆட்டமிழக்க நேரிடும். கடந்த பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் 5 பேர் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். அதில், 4 எல்பிடபிள்யூ பும்ரா எடுத்தது. பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், லாபுஷேன் 52 பந்துகளை வீணடித்து 2 ரன்கள் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்தப் பந்தை லீவ் செய்வது, எந்தப் பந்தில் ஷாட் அடிப்பது என்ற குழப்பத்தில் லாபுஷேன் ஆடினார். 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்தை லீவ் செய்ய முயன்றபோது கால்காப்பில் வாங்கி லாபுஷேன் ஆட்டமிழந்தார். பிரத்யேகப் பயிற்சி ஆதலால், பும்ராவின் பந்து வீச்சை அடிலெய்டு டெஸ்டில் சமாளித்து ஆடுவதற்கு ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பேட்டிங் ஆலோசகர் மைக் ஹசி, லாச்சலான் ஸ்டீவன்ஸ், பயிற்சியாளர் மெக்டோனல்ட் ஆகியோர் தலைமையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என கிரிக்இன்போ (cricinfo) தளம் தெரிவித்துள்ளது. பும்ரா பந்து வீச்சு மீது விமர்சனம் இதற்கிடையே, பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல், பந்தை எறிவது போன்று இருக்கிறது, அவரின் பந்து வீச்சை ஐசிசி ஆய்வு செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய கவுன்டி வீரர்கள் விமர்சித்துள்ளனர். இந்தியப் பந்து வீச்சாளர் ஒருவர் பந்தை எறிகிறார் என கூறுவதற்கு நடுவருக்கு அச்சமா என்றும் எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளனர். "பும்ராவின் பந்துவீச்சு ஆக்சன் சட்டவிரோதமானது, ஐசிசி விதிகளுக்கு புறம்பாக கை மணிக்கட்டை மடக்குகிறார், இதை ஆய்வு செய்ய வேண்டும்," என எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளனர். முதல்முறையாக குற்றச்சாட்டு ஆனால், பந்து வீச்சு எறிவது போல் இருக்கிறது என்ற பும்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டு, விமர்சனம் வைக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். பும்ராவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணி, 10 ஆண்டுகளுக்கு முன் பும்ராவின் பந்து வீச்சையும், இப்போதுள்ள பும்ராவின் பந்து வீச்சையும் வீடியாவாகப் பதிவு செய்து, "10 ஆண்டு சவால்" என எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பிபிஎல் தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்தை எறிவதாக குற்றசாட்டு வந்து அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் ஆஸ்திரேலிய அணியினரால் விமர்சிக்கப்படுகிறது. ஐசிசி விதி கூறுவது என்ன? இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் இயான் பாண்ட், பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் விதிகளுக்கு புறம்பாக இல்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில் " பும்ராவின் கையில் முழங்கை முதல் மணிக்கட்டுவரை நேராகவே இருக்கும் வளையாது. ஐசிசி விதிப்படி, "பந்து வீச்சாளர் பந்து வீசும்போது அவரின் முழங்கை 15 டிகிரி அப்பால் வளையக்கூடாது" என்பதுதான். அந்த வகையில், பும்ராவின் கைகள் முன்நோக்கி வளைந்திருக்கும். ஆனால் 15 டிகிரிக்கு அதிகமாக வளையாது. இதனால்தான், பும்ராவின் பந்து வீச்சு விதிகளுக்கு உட்பட்டது என்று ஐசிசி அங்கீகரித்துள்ளது. முகமது ஹஸ்னைன் பந்து வீச்சில் ஐசிசி விதிகள் பின்பற்றப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தார். பும்ராவுக்கு கிரேக் சேப்பல் ஆதரவு பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் குறித்து விமர்சித்த ஆஸ்திரேலிய ஊடகங்கள், விமர்சகர்களை முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வெளிவரும் "தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்" நாளேட்டில் கிரேக் சேப்பல் எழுதிய கட்டுரையில், "பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து முட்டாள்தனமாக கேள்வி எழுப்புவதை முதலில் நிறுத்துங்கள். பும்ராவின் பந்து வீச்சு ஸ்டைல் தனித்துவமானது, விதிகளுக்கு உட்பட்டது. அவர் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்." என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சைவிட அவர்களின் பேட்டிங்தான் கவலைக்குரியதாக இருக்கிறது என எழுதியுள்ள கிரேக், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, கூர்மையான தாக்குதலால் ஆஸ்திரேலிய அணி நிலைகுலைந்துள்ளது. மேலும், டாப் ஆர்டர் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது என்றும், அதிகமான மாற்றங்களைச் செய்யாமல் அடிலெய்ட் டெஸ்டில் விளையாட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். "லாபுஷேன் ஸ்திரமான ஃபார்மில் இல்லை. கடந்த 16 இன்னிங்ஸில் அவர் 330 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். பெர்த் டெஸ்டில் 52 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே லாபுஷேன் சேர்த்தபோதே, அவரின் பேட்டிங் பலவீனத்தை அறிய முடிந்தது. இதே, ஆஸ்திரேலிய அணி அடிலெய்ட் டெஸ்டிலும் விளைாயடும்போது யாரெல்லாம் மோசமாக விளையாடுகிறார்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிய முடியும்," என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு நடுக்கம் படக்குறிப்பு, பும்ராவை கண்டு ஆஸ்திரேலிய அணி அஞ்சுவதாக கூறுகிறார் எட்வர்ட் கென்னடி பும்ராவின் பந்து வீச்சு முறை சரியானதா, ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சிப்பது ஏன் என்பது குறித்து, சென்னை எம்ஆர்எப் அணியின் துணைப் பயிற்சியாளரும், டிஎன்பிஎல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் பயிற்சியாளருமான எட்வர்ட் கென்னடி பிபிசி தமிழுக்கு அளித்தப் பேட்டியில் " பும்ராவின் பந்து வீச்சில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத குறை இப்போதுதான் தெரிகிறதா? இது முற்றிலும் ஆஸ்திரேலிய அணியின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. சிறப்பாகப் பந்துவீசும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதுபோன்ற பந்து வீச்சில் குறை சொல்வதை ஆஸ்திரேலிய வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்" என்றார். மேலும், இதை ஊடகங்களும் ஆதரிப்பதாக அவர் கூறுகிறார். "பும்ராவின் பந்து வீச்சு அடிலெய்ட் மைதானத்தில் பிங்க் பந்தில் எகிறும், விளையாட முடியாத அளவு கடுமையாக இருக்கும். அவரை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவர் மீது அவதூறு பரப்பப்படுகிறது. இதற்கு பிசிசிஐ தகுந்த பதில் அளிக்க வேண்டும். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி பும்ரா பந்து வீச்சில் அஞ்சி நடுங்கி இருக்கிறது என்பதையே ரசிகர்கள் ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்கள்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cpvnzxnp4mlo
-
தென் ஆபிரிக்கா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
தென் ஆபிரிக்காவுக்கு உற்சாகமூட்டிய ரிக்ல்டன் சதம், பவுமா அரைச் சதம் 05 DEC, 2024 | 10:14 PM (நெவில் அன்தனி) இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் போர்ட் எலிஸபெத், சென் ஜோர்ஜ் பார்க் கெபெர்ஹா விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (05) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்காவுக்கு ரெயான் ரிக்ல்டன் குவித்த கன்னிச் சதம், அணித் தலைவர் டெம்பா பவுமா பெற்ற அரைச் சதம் என்பன உற்சாகத்தை கொடுத்தது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தத் தீர்மானம் மிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோரின் திறமையான பந்துவிச்சுகளில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. டோனி டி ஸோர்ஸி (0), ஏய்டன் மார்க்ராம் (20), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (4) ஆகிய முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். இந் நிலையில் ஜோடி சேர்ந்த ரெயான் ரிக்ல்டன், டெம்பா பவுமா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெம்பா பவுமா, தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் பெடிங்டன் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் ரிக்ல்டன், கைல் வெரின் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். ரிக்ல்டன் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 250 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். அவர் ஆட்டம் இழந்த சற்று நேரத்தில் மார்க்கோ ஜென்சென் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கய்ல் வெரின் 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் லஹிரு குமார 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 67 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரபாத் ஜயசூரிய 74 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/200536
-
வடக்கு-கிழக்கு பல்கலை மாணவர்கள் 200 பேருக்கு இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசில்
இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நிதியுதவித் திட்டத்திற்காக பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் அதேபோல பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த ஏனைய 100 மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்தும் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு வருடம் முழுவதும் மாதாந்த நன்கொடை உதவி வழங்கும் இந்தத் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு புலமைப் பரிசில் திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவால் வருடாந்தம் 710 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்காக வழங்கப்படுவதுடன் இதில் 200க்கும் அதிகமானவை முழுமையான நிதி அனுசரணையினைக் கொண்டதுடன் முழுமையான கல்விக்கடணம், மாதாந்த உதவித் தொகை, காகிதாதிகள் மற்றும் புத்தகங்களுக்கான கொடுப்பனவு, மற்றும் போக்குவரத்து செலவீனம் ஆகியவற்றை முழுமையாக உள்ளடக்கியதாக காணப்படுகின்றன. அத்துடன் பொறியியல் முதல் மனிதநேயம், விஞ்ஞானம், விவசாயம், பாரம்பரிய மருத்துவம் குறித்த கற்கைகள் வரையான பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, மற்றும் கலாநிதி கற்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. இந்திய அரசாங்கத்தின் விசேட நிதி உதவியை பாராட்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர், “இவ்வாறு வழங்கப்படும் மாதாந்த நன்கொடை உதவியானது நிதி ரீதியான அழுத்தங்களை நிவர்த்தி செய்வதில் மிகுந்த பயனுள்ளதாகவிருக்கின்ற அதேவேளை, எனது கல்வியில் அதிக கவனம் செலுத்துவதற்கும் இடமளிக்கின்றது. அத்துடன் இந்த நிதி உதவியானது, நிதி ரீதியான சுமைகள் குறித்து கவனம் செலுத்தாமல், சீரான வருகையினைப் பேணி எனது கல்வியில் கவனம் செலுத்தவும் வழிவகுக்கின்றது. எனது கல்வி ரீதியான செயல்திறனுக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் இந்த ஆதரவு கணிசமான பங்களிப்பினை வழங்குகின்றது”, எனத் தெரிவித்திருந்தார். அதேபோல, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவினைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த உதவித் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும்போது, ‘இந்த உதவி மிகவும் பயனுள்ளதாகும். மாதாந்த கல்விச் செலவீனத்தை இதனால் ஈடுசெய்யமுடிகின்றது. அத்துடன் எனது கல்வித்தேவைக்கான நூல்களை கொள்வனவு செய்தல், நிழற்பிரதி எடுத்தல், அச்சு செலவீனங்கள் மற்றும் எனது உணவுத் தேவைகள் போன்ற செலவீனங்களுக்கு இந்த நன்கொடை உதவி ஆதரவாக உள்ளது”, எனக் குறிப்பிட்டார். மேலும், கலைப் பீடத்தில் கலாசார சுற்றுலாத்துறை குறித்து பயின்றுவரும் மற்றொரு மாணவர், தனது கள விஜயங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு இந்த உதவி ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/313234
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு வார இறுதியில் பதில்; ரணில் தரப்பு அறிவிப்பு கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/313245
-
இணையத்தளம் மூலம் பண மோசடி; சந்தேக நபர் கைது
06 DEC, 2024 | 11:10 AM இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிமுகமான நபரொருவரிடம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி 05 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/200554
-
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நாளுக்குநாள் குவியும் தகவல்கள்; வடக்கு ஆளுநர் எடுத்த நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 302 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 37 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 44 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 80 பேரும், வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 63 பேரும் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய மாவட்டச் செயலர்கள், கடந்த காலங்களைவிட இம்முறை இடரின்போது உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அதிகளவில் இருந்ததாகக் குறிப்பிட்டனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தனது உரையில், நாம் ஒவ்வொருவரும் எமது குடும்பங்களைப் பாதுகாக்க முற்படும்போது நீங்கள் எங்கள் மக்கள் எல்லோரையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பங்கள் உண்டு. எனவே உங்களின் பாதுகாப்பும் மிக முக்கியம். ஒவ்வொரு பணியாளரது பாதுகாப்புத் தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் கவனம் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், நாம் எவ்வாறான தயார்படுத்தல்களுடன் இருந்தாலும் இடர்கள் வரும்போது சில வேளைகளில் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும். 4 நாள்களில் சுமார் 500 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றது. சகல இடங்களும் வெள்ளக்காடாகியது. ஆனாலும், சில நாள்களிலேயே வழமைக்கு திரும்பும் வகையில் நீங்கள் அனைவரும் பணியாற்றியிருக்கின்றீர்கள். உங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்க்கியிருந்தாலும் நீங்கள் நித்திரை முழித்து இரவிரவாக மக்களைப் பாதுகாக்க களத்தில் நின்றிருக்கின்றீர்கள். அப்படிச் செயற்பட்ட உங்களை பாராட்டி மதிப்பளிப்பது எமது கடமை. இது உங்களுக்கு உற்சாகமளிக்கும். சவால்களை நாம் சந்திக்கும் போதுதான் எமது சேவைகள் இன்னமும் மேம்படும். இந்த இடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். நாம் அவற்றை மீளாய்வு செய்யவேண்டும். சரியான தீர்மானங்களை விரைந்து எடுக்கவேண்டும். தலைமைத்துவத்துக்கு அதுதான் அழகு. விரைந்து தீர்மானங்களை எடுக்கத்தவறினால் பிரச்சினைகளுக்குத்தான் முகம்கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழைக்கு முன்னதாக வெள்ளவாய்க்கால்களை துப்புரவு செய்வதை எமது வருடாந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்குவதன் ஊடாக முன்னாயத்த நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கலாம். இதேவேளை மத்தி, மாகாணம் என்று பாராது இவர்கள் எமது மக்கள் என்ற அடிப்படையில் இந்த இடர் நடவடிக்கையின்போது சகல திணைக்களங்களும் செயற்பட்டன. அது வரவேற்கப்படவேண்டியதுடன் தொடரவேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மன்னார் மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/313228
-
டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் அழைத்து செல்லப்பட்டனர் - ஆறு மாதங்கள் தங்கியிருக்க அனுமதி- பிபிசி
பிரிட்டன் சென்றடைந்தமை குறித்து டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கை தமிழர்கள் நிம்மதி பெரூ மூச்சு - கடலில் அனைவரும் இறந்துவிடுவோம் என நினைத்ததாக தெரிவிப்பு 06 DEC, 2024 | 10:34 AM மூன்று வருடகாலமாக டியாகோகார்சியாவில் தீவில் சிக்குண்டிருந்தஇலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றடைய முடிந்துள்ளமை குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர். இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது, இந்துசமுத்திரத்தின் தொலைதூரதீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில் சிக்குண்டிருந்தவர்கள் பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் தங்கள் பயணம் முடிவிற்கு வந்துள்ளமை குறித்து நிம்மதி வெளியிட்டுள்ளனர். 47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம் என வரவேற்றுள்ளனர். இதேவேளை ருவாண்டாவிலிருந்து மேலும் எட்டு பேர் பிரிட்டன் வந்து சேர்ந்துள்ளனர்.இவர்களும் இலங்கை தமிழர்கள் இவர்களை அதிகாரிகள் மருத்துவசிகிச்சைக்காக ருவாண்டா அனுப்பியிருந்தனர். லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்ளனர். இவர்கள் தற்போது லண்டனின் புறநகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் உற்சாகத்துடன் ஒடித்திரிவதை அவதானிக்க முடிகின்றது. கடும் குளிர் முற்றிலும் பழக்கமில்லாத சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டமை குறித்து அவர்கள் நிம்மதியடைந்துள்ளதை உணரமுடிகின்றது. நாங்கள் பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்பதை நம்பமுடியாமல் உள்ளது, சொக்கத்தை அடைந்துள்ளது போல உணர்கின்றோம் என ஒருவர் தெரிவித்தார். கனடாவில் புகலிடம் பெறும்நோக்கில் இவர்கள் பயணித்த படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்ததால் இவர்கள் டியாகோகார்சியாவில் சிக்குண்டனர். எங்கள் நாட்டில் வாழ்க்கை நன்றாகயிருந்திருந்தால் நாங்கள் ஒழுகும் படகில் சமுத்திரங்கள் ஊடாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கமாட்டோம் என மற்றுமொரு இலங்கை தமிழர் தெரிவித்தார். நாங்கள் அனைவரும் கடலில் உயிரிழந்துவிடுவோம் என நான் நினைத்தேன், ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு முயல்வதா அல்லது அனைவரும் கடலில் மடிவதா சிறந்தது என என்னை நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேன். இலங்கை தமிழ் குடியேற்றவாசிகள் டியாகோகார்சியா தீவை சென்றடைந்ததை பிரிட்டனின் உள்துறை அமைச்சர்கள் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக கருதினார்கள். இவர்களின் தலைவிதி குறித்து நீண்ட சட்டப்போராட்டங்கள் இடம்பெற்றன.தமிழர்கள் அந்த தீவில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக சட்டத்தரணிகள் அந்த தீவிற்கு சென்றுவந்தனர். அந்த தீவில் மூன்றுநாட்கள் தான் தங்கியிருப்போம் என நினைத்தோம் ஆனால் மூன்றுவருடங்கள் தங்கியிருக்க நேர்ந்தது என பெண்ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/200552
-
மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை ‘காசா’வில் பயன்படுத்தும் இஸ்ரேல்
மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள் ஆவியாகின்றன, இதன் மூலம் சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கிடுவது தடுக்கப்படுகிறது. இஸ்ரேல் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்துவது காசாவில் புதிய அளவிலான அழிவை ஏற்படுத்தும். இது வரலாற்றில் வேறு எந்த மோதலையும் போல அல்ல. காசாவில் இஸ்ரேல் பயன்படுத்திய ஆயுதங்களின் வகைகள் மற்றும் பொதுமக்கள் மீது அவற்றின் தாக்கம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதேசமயம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஹமாஸ் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள Euro-Med Human Rights Monitor அமைப்பு, வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் மீதான இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் மறைந்து சாம்பலாக மாறியிருக்கலாம். அவர்களின் உடல் காணாமல் போயிருப்பது இஸ்ரேல் தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகளின் வகை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. மாயமாகியுள்ள 2,210 உடல்கள் காசா முழுவதும் உள்ள பல்வேறு கல்லறைகளில் இருந்தும், இஸ்ரேலிய ராணுவம் தாக்கிய பகுதிகளில் இருந்தும் சுமார் 2,210 உடல்கள் மாயமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. தெர்மோபரிக் குண்டுகள் உட்பட சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இது தொடர்பில், சர்வதேச விசாரணை நடத்தப்பட என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வகை குண்டுகள், முதலில் சிறிய தாக்கம் கொண்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி துகள்கள் நிரப்பிய மேகமூட்டத்தை உருவாக்குகிறது. அதன் பின் இரண்டாவதாக வெடிக்கும் சாதனம் எரியக்கூடிய பொருட்களை கொண்டு மேக பகுதியை பற்றவைத்து, 2500 டிகிரி செல்சியஸ் வரை மிக அதிக வெப்பநிலையை உருவாக்குகிறது. இது தோல் மற்றும் உட்புற உடல் பாகங்களை கடுமையாக எரித்து சிதைகிறது. குறிப்பாக இந்த மேகமூட்டம் அடர்த்தியாக ஏற்படுத்தப்படும் பகுதிகளில் உடல்கள் முழுமையாக உருகும் அல்லது ஆவியாகும் அளவிற்கு எரிகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/313231
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு அவசியமான விடயம் - நிறைவேற்றதிகார முறையையும் நீக்கவேண்டும் - சட்டத்தரணிகள் அமைப்பு
06 DEC, 2024 | 11:33 AM தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை காரணமாக சாத்தியமாகியுள்ள ஏதேச்சதிகார ஆட்சியானது ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டமானது இலங்கையில் உள்ள பயங்கரவாதஎதிர்ப்பு கட்டமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது,மேலும் சட்டபூர்வமான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் தனிநபர்கள் குழுக்கள் நிறுவனங்களிற்கு எதிராக இதனை பயன்படுத்தியுள்ளனர் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரஜைகளிற்கு சாதாரணமாக வழங்கப்படவேண்டிய மனித உரிமை பாதுகாப்புகளை முழுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கொடுரமான விதிமுறைகளிற்காக பெயர்போயுள்ளது இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டிணைவு,பயங்கரவாதம் பற்றிய தெளிவற்ற மற்றும் பரந்துபட்ட வரையறையின் அடிப்படையில் கைது செய்வதற்கான காவலில் வைப்பதற்கான அதிகாரங்களை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறான அதிகாரங்கள் நீதிஆய்விற்கு உட்படுத்தப்படுவதில்லை,மேலும் இது பரந்துபட்ட அசாதாரண ஜனாதிபதி அதிகாரங்களையும் வழங்குகின்றது என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் அமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது மனித உரிமைகளிற்கு மாத்திரமின்றி நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கும் அவசியமானது என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/200561
-
கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டோசினா பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் பீதி அடைந்தனர். கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அவசர குழுவினர் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து விவரங்கள் இதுவரை இல்லை. https://thinakkural.lk/article/313253
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
நானும் உப்புப் பிரியன் தான்! 10 பைக்கற்ற வாங்கி வைப்பம்!!
-
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை
05 DEC, 2024 | 11:58 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதுடன், சூரிய சக்திகள வேலைத்திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றில் பயனுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு வலியுறுத்திய ஜனாதிபதி, ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் செயல்திறன் அற்றவையாக காணப்படும் பட்சத்தில் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். வலுசக்தி அமைச்சர் மின் பொறியியலாளர் குமார ஜயகொடி, இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டீ.எம்.டபிள்யூ.ஜே.பண்டார, இலங்கை மின்சாரம் (தனியார்) நிறுவன தலைவர் பொறியியலாளர் ஜனக அலுத்கே, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ராஜகருணா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/200542
-
சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!
யாழில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் பலி யாழ்ப்பாணம் சுழிபுரம் சந்தியில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம் (05.12.2024) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் வாகனம் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளார். நேயாளர் காவு வண்டி மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த 15 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார். சம்பவம் குறித்து நேரில் கண்டவர்கள் கூறுகையில், “விபத்து ஏற்பட்டவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவரும் கீழே விழுந்திருந்தனர். உடனே '1990' சேவைக்கு அழைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நேயாளர் காவு வண்டி வரவில்லை. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு தொடர்பு எடுத்தும் அவர்கள் பல கேள்விகளை வினவினர். ஆனால், நோயாளர் காவு வண்டி வரவில்லை. இந்நிலையில், உறவினர்களுக்கு அறிவித்ததன் பின்னர் குறித்த மாணவனின் நண்பர்கள் வந்தனர். மேலதிக விசாரணைகள் இதனையடுத்து, பட்டா ரக வாகனத்தில் மாணவர்களை ஏற்றி சென்றோம். எனினும், தீவிர தன்மையை கருத்திற் கொண்டு மூன்றாம் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டபொழுது அங்கு மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அத்துடன், மற்றைய மாணவனை யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றினர். இதேவேளை, விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்த மோட்டார் வாகனம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் பின்னர் மீட்கப்பட்டது” என குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் விபத்து நிகழ்ந்ததில் ஒருவர் இறந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/school-student-killed-in-a-motor-vehicle-in-jaffna-1733386473