Everything posted by ஏராளன்
-
புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு பரிந்துரை :; வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் எதிர்ப்பு
Published By: VISHNU 16 FEB, 2024 | 06:30 AM வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம்,தெங்கு அபிவிருத்திசபை, பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியாபிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது. இதன்போது பூங்காவீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காணியினை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர் தீலிபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். புலனாய்வு பிரிவு அனைத்து இடங்களிலும் இயங்கமுடியும், அது ரகசியமாக இருக்கவேண்டிய அமைப்பு. எனவே நகரப்பகுதியில் அதற்கு காணி வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/176495
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
சர்ஃபராஸ் கான்: பெருங்கனவு நிறைவேறிய நாளில், ஜடேஜா மன்னிப்புக் கோரும் அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 பிப்ரவரி 2024, 03:21 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் அபுவின் நெடுங்காலப் பெருங்கனவு நிறைவேறி இருக்கிறது. இதில் அபு வேறுயாருமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முதன் முதலாக களமிறங்கிய மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கானின் தந்தைதான். தொடக்கப் போட்டியிலேயே சிறப்பாக ஆடி தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் சர்ஃபராஸ் கான். சர்ஃபராஸ் கானுக்கு தந்தையாகவும், சிறுவயதிலிருந்தே பயிற்சியாளராகவும், கிரிக்கெட்டில் வழிகாட்டியாகவும் இருந்து இந்திய அணிக்குள் செல்ல மூலகாரணமாக இருந்தவர் அபு என்ற நெளசத்கான் கான். இந்திய அணிக்காக பல போராட்டங்களுக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றார் மும்பையைச் சேர்ந்த வலதுகை பேட்டர் சர்ஃபராஸ் கான். முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே கரங்களால் இந்திய அணியின் தொப்பியைப் பெற்று களமிறங்கியபோது, மைதானத்தில் இருந்த தந்தை நெளசத் கானும், சர்ஃபராஸ் கான் மனைவியும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்த தருணத்துக்காகத்தான் நெளசத்கான் நீண்டகாலம் காத்திருந்தார். தேசத்துக்காக தன் மகன் விளையாட வேண்டும், இந்திய அணிக்குள் இடம் பெற வேண்டும் என்ற பல ஆண்டுகள் கனவு நேற்று நெளசத்கானுக்கும், சர்ஃபராஸ் கானுக்கும் நிறைவேறி இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "நினைக்கும் நேரத்தில் சூரியன் உதிக்காது" போட்டி நடந்து கொண்டிருக்கும்போது வர்ணணையாளர் பகுதிக்கும் சர்ஃபராஸ்கான் தந்தை நெளசத் கான் சென்றார். அங்கு வர்ணணையாளர் பணியில் இருந்த ஆகாஷ் சோப்ரா, நெளசத் கானிடம் “ இந்திய அணியில் உங்கள் மகன் அறிமுகத்துக்கு நீண்டகாலம் ஆகிவிட்டதா, அதிக காலம் காத்திருக்க வேண்டியது இருந்ததா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நெளசத்கான் பதில் அளிக்கையில் “ நம்முடைய விருப்பப்படி சூரியன் உதயமாகாது. இரவைக் கடந்தால்தான் சூரியன் உதயமாகும், ஆதவனைப் பார்க்க முடியும்” என்று ஆழ்ந்த பதிலைத் தெரிவித்தார். அற்புதமான பேட்டிங் நெளசத் கானின் பதிலைப் போலவே, ஆழ்ந்த அர்த்தமுள்ளதாகவும், இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போலவும், சர்ஃபராஸ் கான் பேட்டிங் நேற்று அமைந்திருந்தது. ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுக போட்டியேலேயே சர்ஃபராஸ் கான் 96 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து, 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜாவின் தவறால் சர்ஃபராஸ் கான் 62 ரன்களில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், நிச்சயமாக அறிமுகப் போட்டியேலேய சதம் கண்டிருப்பார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்திக் சாதனை சமன் இங்கிலாந்து அணியில் நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், ஆன்டர்சன், ஹார்ட்லே, ரூட் ஆகியோரின் பந்துவீச்சை மிகவும் அனாசயமாகக் கையாண்டு சர்ஃபராஸ் கான் ரன்களைச் சேர்த்து அரைசதம் கடந்தார். அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சர்ஃபராஸ்கான் சமன் செய்தார். சர்ஃபராஸ்கானின் பேட்டிங் செய்யும் போது ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஸ்வீப் ஷாட், ஃபுல் ஷாட், ஸ்குயர்கட், லேட் கட், ஸ்கொயர் ட்ரைவ் என பல கோணங்களில் ஷாட்களை அடித்து ரன்களைச் சேர்த்தார். குறிப்பாக ஃபேக் ஃபுட்டில் சென்று சுழற்பந்துகளை தேர்டு மேன் திசையில் தட்டிவிடும் நுட்பத்தை சர்ஃபராஸ்கான் அருமையாகச் செய்தார். ரசிகர்கள் ஆதங்கம் இப்படிப்பட்ட பேட்டருக்கா இத்தனை ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தையும் காண முடிந்தது. உண்மையில், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் பட்டிதர் போன்ற வீரர்கள் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் அதிகமாக விளையாடாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் வந்தனர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். சர்ஃபராஸ் கான் மீதான ரசிகர்களின் அன்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால், அரைச் சதம் அடித்த பிறகு ரன் அவுட் ஆனபோது, அதற்கு காரணமான ரவீந்திர ஜடேஜாவை திட்டித் தீர்க்கும் அளவுக்கு இருந்தது. தனது தவறுக்காக ஜடேஜாவை சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கோரி பதிவிடும் வகையில் ரசிகர்கள் தங்களது அன்பை சர்ஃபராஸ் கானுக்கு தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பையின் ரன்மெஷின் ஆனால், சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்குள் வருவதற்கு முன் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர், மும்பை அணிக்காக பல போட்டிகளில் பல சதங்களையும், ஏராளமான ரன்களையும் குவித்து மும்பையின் ரன்மெஷின் என்று வர்ணிக்கப்பட்டவர். குறிப்பாக 2019 முதல் 2022 சீசன் வரை ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்து, சர்ஃபராஸ் கான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார். கடைசியாக 2022-23 சீசனில்கூட ரஞ்சிக் கோப்பையில் 6 போட்டிகளி்ல 500 ரன்களுக்கு மேல் குவித்து தனது சராசரியை 90 ரன்களுக்கு மேல் வைத்திருந்தார். தனது பேட்டிங்கில் எந்தவிதமான குறையும் பெரிதாகக் கூற முடியாத அளவுக்கு சர்ஃபராஸ் கான் ஆட்டம் அமைந்திருந்தும் அவருக்கான வாய்ப்புக் கதவுகள் இந்திய அணியில் திறக்கப்படவில்லை. இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என்பதை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா என பலரும் தங்களின் ஆதங்கங்களை பல நேரங்களில் வெளிப்படுத்தினர். 45 முதல் தரப்போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் கான் 14 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 3,912 ரன்கள் சேர்த்தபின்புதான் இந்திய அணி அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. இதில் சர்ஃபராஸ் கான் ஒருமுறை முச்சதம், இரட்டை சதமும் அடித்துள்ளார். முதல்தரப் போட்டிகளில் சர்ஃபராஸ் கான் 70 ஸ்ட்ரைக் ரேட்டும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 94 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். பிராட் மேனுக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் அதிகமான ரன் சராசரி கொண்ட வீரர் என்ற பெருமையை சர்ஃபராஸ் கான் பெற்றிருந்தார். இருப்பினும், சர்ஃபராஸ் கானின் பேட்டிங் திறமை மீது இந்திய அணித் தேர்வாளர்கள் மீது நம்பிக்கை ஏற்படாமல் இருந்தபோது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சர்ஃபராஸ் கானை தேர்ந்தெடுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிக்கெட்டுக்காக படிப்பு நிறுத்தம் உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கார்க் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது சர்ஃபராஸ் கான் குடும்பம். ஆனால், ஒரு கட்டத்தில் சர்ஃபராஸ் கான் தந்தை மற்றும் குடும்பத்தினர் மும்பைக்கு வந்து அங்கு தங்கிவிட்டனர். 1997, அக்டோபர் 22ம் தேதி மும்பையில் பிறந்தவர் சர்ஃபராஸ் கான். வலது கை பேட்டர், வலது கை சுழற்பந்துவீச்சாளர், தேவைப்பட்டால் மட்டும் விக்கெட் கீப்பிங் செய்யும் பழக்கம் கொண்டவர். சர்ஃபராஸ் கானுக்கு சிறுவயதிலேயே கிரிக்கெட் திறன் இருப்பதை அவரின் தந்தை நெளசத் கான் கண்டறிந்தார். குறிப்பாக பந்தை டைமிங் பார்த்து தட்டிவிடும் திறன் சர்ஃபராஸ் கானுக்கு அதிகம் இருந்தது. இதையடுத்து, இந்தத் திறமையை மேம்படுத்தும் நோக்கில் சர்ஃபராஸ் கானுக்கு தீவிரமாக பயிற்சியை நெளசத் கான் அளித்தார். ஆனால், காலநிலை சரியில்லாதது, மழை போன்றவற்றால் மைதானத்துக்கு செல்ல முடியாத சூழல் பல நேரங்களில் இருந்தது. இதனால் தனது வீட்டின் அருகே, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, செயற்கை பிட்ச் அமைத்து அதில் மகனுக்கு நெளசத் கான் பேட்டிங் பயிற்சி அளித்து உருவாக்கினார். தீவிரமான கிரிக்கெட் பயிற்சி காரணமாக, சர்ஃபராஸ் கான் படிப்பு 4 ஆண்டுகள் பாதித்தது. வீட்டிலேயே ஆங்கிலம், இந்தி, கணித வகுப்புகள் சர்ஃபராஸ்கானுக்கு எடுக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES சச்சின் சாதனையை முறியடித்தவர் பள்ளிக்களுக்கான கிரிக்கெட் போட்டியான ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் தனது 12 வயதில் 2009ம் ஆண்டு பங்கேற்றார். அந்த போட்டியில் 12 சிக்ஸர்கள், 56 பவுண்டரிகல் உள்பட 421 பந்துகளில் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை சர்ஃபராஸ் கான் முறியடித்தார். இந்த ஆட்டம்தான் சர்ஃபரஸ் கான் யார் என்பதை வெளி உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சியது. அதன்பின் மும்பை அணியில் 19 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் சர்ஃபராஸ் கான் இடம் பெற்று, இந்திய அணியின் 19வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இடம் பெற வாய்ப்பளித்தது. இதுவரை சர்ஃபராஸ் கான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்று 2 உலகக் கோப்பை(2014, 2016) தொடர்களில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக அரைசதங்கள் (7அரை சதம்) அடித்த வீரர் என்ற பெருமையையும், 2016ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 355 ரன்கள் குவித்து 2வது அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சிறப்பையும் சர்ஃபராஸ் கான் பெற்றார். ஆனாலும், சர்ஃபராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சையோடுதான் தொடங்கியது. 2011ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கான் பங்கேற்றபோது அவருக்கு 15 வயது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு எலும்பு வளர்ச்சி பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின் சர்ஃபராஸ் கானுக்கு நடத்தப்பட்ட எலும்பு வளர்ச்சி பரிசோதனையில் அவர் அதிக வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அவரின் பயிற்சியாளரான நெளசத்கான் ஏற்கவில்லை. எனவே 2வது அதிநவீன பரிசோதனைக்குச் சர்ஃபராஸ் உட்படுத்தப்பட்டார். இதில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சர்ஃபராஸ் கான் சான்றிதழில் அளித்த வயதும், அவரின் எலும்பு வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருப்பதாக உறுதியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமார், சர்ஃபராஸ் சர்ச்சை இது தவிர 2015ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. அந்த வெற்றிக்குப்பின், சர்ஃபராஸ் கானும், சூர்யகுமார் யாதவும் சர்ச்சைக்குரிய வகையில் செய்கையில் ஈடுபட்டும், தகாத வார்த்தைகளில் பேசியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவர் மீதான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் இருவரும் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர், 2 ஆண்டுகளுக்கு இருவருக்கும் போட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் ஒழுக்கம் கண்காணிக்கப்பட்டது. திரும்பிப் பார்க்க வைத்த ரஞ்சி சீசன் சர்ஃபராஸ் கான் ரஞ்சி தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக 2014ம் ஆண்டு மேற்கு வங்க அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் 2015-16 சீசனில் உத்தர பிரதேச அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார். 2019-20ம்ஆண்டு ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக ஆடிய சர்ஃபராஸ் கான் உத்தர பிரதேச அணிக்கு எதிராக முச்சதம் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2022ம் ஆண்டு நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சர்ஃபராஸ் கான் மும்பை அணிக்காக விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். சிறுவயதில் விக்கெட் கீப்பராக இருந்துள்ள சர்ஃபராஸ் கான், சீனியர் அணிக்காக விளையாட வந்தபோது முதன்முறையாக விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டு புதிய அவதாரமெடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிராட் மேனுக்கு அடுத்ததாக ரன் சராசரி கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் சர்ஃபராஸ் கான், ஏறக்குறைய 2,500 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்துள்ளார். 2019 முதல் 2022 வரை ஒவ்வொரு சீசனிலும் 900 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து முதல் தரப்போட்டியில் புதிய வரலாற்றை சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார். டான் பிராட்மேனுக்கு அடுத்தாற்போல் உள்நாட்டுப் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள இளம் வீரர் எனும் பெருமையும் சர்ஃபராஸ் கானுக்கு இருக்கிறது. இளம் வயதில் ஐபிஎல் அறிமுகம் ஐபிஎல் டி20 தொடரில் தனது 17வயதிலேயே சர்ஃபிராஸ் கான் அறிமுகமாகினார். 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சர்ஃபராஸ் கான் ஆட்டத்தைப் பார்த்த ஆர்சிபி அணி அவரை ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. 2015 சீசன் முதல் 2018 சீசன் வரை ஆர்சிபி அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார். 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், அதன்பின் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சர்ஃபராஸ் கானை விலைக்கு வாங்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்த சீசனில் சர்ஃபராஸ் கான் விக்கெட் கீப்பர் பேட்டராகவும் செயல்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c1e1d44490eo
-
மரணம்
எதுவுமே எழுதத் தோன்றவில்லை. ஓம் சாந்தி.
-
அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றுவோம் - ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸ்ஸர்
11 FEB, 2024 | 07:22 PM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி ஐக்கிய நூற்றாண்டு முன்னணி அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் போட்டியிடும். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே நாங்கள் வேட்புமனு கொடுப்போம் என்று ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸ்ஸர் தெரிவித்தார். பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை பலப்படுத்த வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை. அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை. எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பின் ஊடாக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? பதில் நான் உயர்தரம் கற்றதன் பின்னர் புலமை பரிசில் பெற்று அமெரிக்காவில் உயர்கல்வி கற்க சென்றேன். அங்கு சர்வதேச தொடர்புகள் தொடர்பாக கற்றேன். அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பி இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பை நிறுவி செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். கேள்வி : இந்த அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்? அதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? பதில் 2006 ஆம் ஆண்டு இதனை நாங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம். 2008 இல் இதனை இலாப நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்தோம். சகலரும் ஒன்றிணைந்த இலங்கை அடையாளம் என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கமாகும். அனைத்து இலங்கையர்களும் பிரதான பிரஜைகள், அனைவருக்கும் நீதி, சமத்துவம், மற்றும் செழிப்பான நாடு என்பனவே எமது பிரதான நோக்கங்களாக இருக்கின்றன. எமது முன்னைய சந்ததியினருக்கு இதனை செய்ய முடியவில்லை. நாம் அதனை செய்ய முயற்சிக்கிறோம். நீதி கிடைக்கின்ற, சகலரும் வாழ முடியுமான ஒரு நாட்டை உருவாக்குவது எமது நோக்கமாகும். எமது தாத்தா பாட்டியை எம்மால் மாற்ற முடியாது. ஆனால் எமது பிள்ளைகளை மாற்ற முடியும். நாம் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபோது எனக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இலங்கையில் இளைஞர் யுவதிகளில் 70 வீதமானோர்க்கு தமது இனம் தமது மதங்களுக்கு அப்பால் நண்பர்கள் இல்லை என்பதாகும். நண்பர்கள் இல்லாவிடின் வெறுப்பு ஏற்படுவது இலகுவாகும். பிரச்சினைகள் இலகுவாகவே ஏற்படும். புரிந்துணர்வு இருக்காது. தொடர்பாடலே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இலங்கையில் 10,400 பாடசாலைகள் இருக்கின்றன. அவற்றில் 112 பாடசாலைகள் மட்டுமே இரண்டு மொழிகளையும் மூலமாக கொண்டவையாக இருக்கின்றன. மறுபுறம் அரசியல்வாதிகள் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி ஊழல்களை செய்து மக்களை அச்சுறுத்தி தலைவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர். உங்களுக்கு யாரும் இல்லை, நாங்கள் மட்டுமே இருக்கின்றோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஆனால் இன்று இனவாதம் மதவாதத்தை ஏற்படுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடு எங்கு இருக்கின்றது என்பது தெரிகிறது. கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? பதில் எமது அமைப்பில் கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இலங்கை முழுவதும் 9 மாகாணங்களில் 9 அலுவலகங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமாக எதிர்கால தலைவர்கள் மாநாடு என்ற கருப்பொருளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கிறோம். இதற்காக ஐந்துநாட்கள் முகாம் நடத்தி நாட்டின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுகிறோம். அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்துகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 500 பாடசாலைகளில் இவ்வாறு வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக பாடநெறிகள் காணப்படுகின்றன. திறமை விருத்தி, தொழில் முயற்சியாண்மை, உள்ளிட்ட பல பாடத்திட்டங்கள் அங்கே காணப்படுகின்றன. இளைஞர்கள், யுவதிகள் அங்கு சென்று தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். இளைஞர்கள் யுவதிகளால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும். இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும், இந்த நாட்டுக்காக ஏதாவது செய்யும் முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறோம். ஆனால் இதற்கு சகலரும் ஒற்றுமைப்பட வேண்டும். ஏனையவர்களின் துயரத்தை புரிந்து கொள்வது அவசியம். எமக்கு மட்டுமே துயரம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். மற்றவர்களின் துயரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எமது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்குதல், நீதியை நோக்கி பயணித்தல், என்பனவாகும். அதாவது கொரோனா வராமல் இருப்பதற்கு தடுப்பூசி ஏற்றுவதைப் போன்று இனவாதம் வராமல் இருப்பதற்கான தத்துவங்களை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறோம். நாங்கள் சகல பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம். அதேபோன்று ஐந்தாம் ஆண்டிலிருந்து எட்டாம் ஆண்டு வரையான மாணவர்களுக்காக சிறுவர் நிகழ்ச்சித்திட்டங்களையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். கேள்வி : நீங்கள் சர்வதேச நிறுவனங்களுடனும் தொடர்பு பட்டிருக்கின்றீர்கள். இதனை எவ்வாறு முன்னெடுக்கின்றீர்கள் ? பதில் எமது இந்த முயற்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் எமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உலகில் செயற்படுகின்ற 25 கீழ்மட்ட நிறுவனங்களில் ஒன்றாக நாம் அங்கீகரிக்கப்பட்டோம். உலகில் இருக்கின்ற சிறந்த இளைஞர்களை கொண்டியங்கும் எட்டு நிறுவனங்களில் ஒன்ற ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். இதனைப் பார்த்த பல சர்வதேச நிறுவனங்கள் எமது இந்த திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன. இளைஞர்களை ஒருமுகப்படுத்திய, நீதியை நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற, நாட்டை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்பாட்டை ஏனைய பல நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. அதனடிப்படையில் கொங்கோ நாட்டில் இருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து எமது இந்த செயற்பாடு தொடர்பாக கற்றறிந்து அங்கு இதனை ஆரம்பித்து செயல்படுத்துகின்றனர். நானும் யாழ்ப்பாணம் மாத்தறை மாவட்டங்களில் இளைஞர்களை அழைத்துக் கொண்டு கொங்கோ நாட்டுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை கற்றறிந்தோம். கென்யா உகண்டா போன்ற நாடுகளிலும் எமது அமைப்பை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 13 நாடுகளில் எமது இந்த செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகிறது. கேள்வி : சரி இந்த பின்னணியில் ஏன் அரசியல் கட்சி ஒன்றை அதாவது நூற்றாண்டு ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள் ? பதில் நாம் இந்த எமது இலங்கை ஐக்கியப்படுகிறது என்ற செயற்பாட்டை முன்னெடுத்து செல்லும்போது பல அரசியல் கட்சிகள் இனவாதத்தைக் கொண்டு அரசியல் செய்வதை நாம் அவதானித்தோம். நாம் இனவாதத்தை போக்கி நல்லிணக்கத்தை மேற்கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு மாறாக செயல்படும் போது இதனை மாற்றுவது கடினமானதாக எமக்கு தெரிந்தது. எனவே நாம் எமது அரசியல் கல்வியகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து முதலில் நூற்றாண்டு கல்வியாகத்தை ஆரம்பித்தோம். அதாவது இலங்கை சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளாகும் போது 2048 இல் நாம் எவ்வாறான இலக்குகளை அடைய வேண்டும் என்பது தொடர்பாக சிந்தித்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். பத்து இலக்குகளை அடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அதில் ஆறு கொள்கை திட்டங்களை நாங்கள் இளைஞர் யுவதிகளுக்கு கற்பிக்கின்றோம். அரசியல்,சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் நல்லாட்சி மற்றும் சகலரும் இணைந்த முன்னெடுப்பு ஆகிய விடயங்களை கற்பிக்கின்றோம். மூன்று மாதங்கள் அவர்களுக்கு திறமைகளை நாம் கற்பிப்போம். பின்னர் ஏனைய பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படும். அப்போது அந்த பாடத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட இலங்கை முழுவதும் இருந்து 1000 இளைஞர்கள் விண்ணப்பித்தனர். இதனூடாக இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். ஆனால் அவ்வாறு எமது கல்வியகத்தில் கல்விகற்ற எதிர்கால தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளில் இடம் கிடைக்கவில்லை. எனவே தான் நாம் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது. நாம் அதனை ஆரம்பித்தோம். அதனூடாக எதிர்கால தலைவர்கள் என்ற பாடத்திட்டத்தை கற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளையும் நாடாமல் எமது கட்சியிலே சேர்ந்து போட்டியிட முடியும். கேள்வி : அப்படியானால் அடுத்துவரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவீர்களா? பதில் அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே நாங்கள் வேட்புமனு கொடுப்போம். ஒவ்வொரு வருடமும் பிரகடனம் செய்ய வேண்டும். இப்போது பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 15 பேர் அளவிலேயே சொத்துப்பிரகடனம் செய்துள்ளனர். 35 வீதமான வேட்பாளர்கள் 35 வயதுக்கு கீழ் பட்டவர்கள். தற்போது பாராளுமன்றத்தில் 35 வயதுக்குட்பட்ட 11 பேர் மட்டுமே இருக்கின்றனர். அதில் 10 பேர் அரசியல் ரீதியான குடும்பங்களை பின்னணியாக கொண்டவர்கள். இலங்கையில் 1931 ஆம் ஆண்டு ஐந்து வீத பெண் பிரதிநிதித்துவம் இருந்தது. 2023 ஆம் ஆண்டிலும் பாராளுமன்றத்தில் ஐந்து வீத பெண்களே இருக்கின்றனர். எனவே எமது கட்சியில் வேட்பாளர்களில் 50 வீதமானோர் பெண்கள். கேள்வி : உங்கள் கட்சியின் கட்டமைப்பு என்ன? பதில் எமது கட்சிக்கு ஒரு நிறைவேற்று குழு உள்ளது. அதன் ஊடாக தலைவர் நியமிக்கப்படுவார். தற்போது இந்த வருடத்துக்கு நானே எமது கட்சியின் தலைவராக இருக்கின்றேன். அதேபோன்று சிரேஷ்ட பிரஜைகள் எமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். சகல மாகாணங்களில் இருந்தும் நிறைவேற்று குழுவில் உறுப்பினர்கள் உள்ளனர். கேள்வி : உங்கள் கட்சியின் இலக்கு என்ன? பதில் சுதந்திரம் பெற்ற நூறு வருடங்கள் நிறைவடையும்போது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம். நிச்சயமாக எதிர்கால சந்ததியினருடன் இணைந்து அதனை செய்ய முடியும். ஊழலற்ற பொருளாதார சுபிட்சமான நாட்டை உருவாக்க வேண்டும். மக்கள் வறுமையாக இருப்பதே அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைகிறது. எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற கல்விமான்கள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். கேள்வி : இலங்கையில் நீங்கள் அடையாளம் காண்கின்ற இளைஞர் யுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன? பதில் முக்கியமான சில பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டு இருக்கின்றோம். முதலாவதாக எமது கல்வி திட்டத்தை குறிப்பிட வேண்டும். எமது கல்வி திட்டத்தில் மேலே பயணிப்பதற்கு ஏணி இருக்கின்றது. ஆனால் ஏனியை பிடித்து எங்கே செல்வது என்பது இங்கு தெளிவாக இல்லை. அடுத்ததாக வேலையின்மை காணப்படுகிறது. தமது திறமைக்கேற்ற தொழிலை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது இலங்கையில் இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். அதனால் திறமையானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். சிறுபான்மை இளைஞர்களுக்கு தமது அடையாளம் தொடர்பான ஒரு பிரச்சினை காணப்படுகிறது. அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இல்லை. தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பவில்லை. வடக்கில் உள்ள எனது சகோதர சகோதரிகளின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டி இருக்கிறது. அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கே ஆற்றுப்படுத்தல் இல்லை. இறந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிமை இருக்க வேண்டும். கேள்வி : தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கு உங்கள் திட்டங்கள் என்ன? பதில் இலங்கையில் இருந்த சென்ற 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு விருப்பமாக இருக்கின்றனர். ஆனால் இங்குள்ள நிலைமை அவர்களை தடுக்கிறது. அந்த மூன்று மில்லியன் மக்கள் தமது நாடுகளின் பொருளாதாரத்துக்காக கிட்டத்தட்ட 200 பில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்கின்றனர். இலங்கையின் பொருளாதாரம் வெறுமனே 80 பில்லியன் டொலர்களாகும். இங்கு தொழில்சார் தன்மை வெளிப்படைத்தன்மை ஊழலற்ற தன்மை இருந்தால் நிச்சயமாக அந்த முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும். தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இளைஞர்கள் 7 பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர். அதனை 20 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எம்மால் முடியும். அடுத்ததாக வர்த்தகங்களை செய்வதற்கான இலகு தன்மை உறுதிப்படுத்தப்படுவது அவசியம். அந்தநிலையை உறுதிப்படுத்தினால் இங்கு அதிகளவு வெளிநாட்டவர்கள் வியாபாரம் செய்ய வருவார்கள். சகல விடயங்களும் டிஜிட்டல் மையமாக வேண்டும். அனைத்து முதலீடுகளும் கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மையத்தில் இடம் பெற வேண்டும். இவர்களுக்கு எரிபொருள் க்யூ ஆர் கோட்டா முறையை செய்வதற்கே மூன்று மாதங்கள் சென்றன. இந்தியா இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து சீனா போன்ற நாடுகளில் இருந்து வர்த்தக சந்தர்ப்பங்களை நாங்கள் பெற வேண்டும். சுற்றுலாத்துறை ஊடாக வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் டொலர்களே உச்சபட்சமாக இலங்கை பெற்றிருக்கின்றது. நான்கு வருடங்களில் அதனை 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும். சிறுவர்களை இலக்கு வைத்த சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையை சர்வதேச மாநாட்டு தலமாக உருவாக்க முடியும். அதுமட்டுமின்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை நேசிக்கின்ற நாடுகள் இருக்கின்றன. எம்மால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறது. கேள்வி : இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் நீண்ட காலமாக தமக்கான அரசியல் தீர்வை கோரி வருகின்றனர். அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன? பதில் பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை பலப்படுத்த வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை. அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை. எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கம் தலைமைத்துவம் வழங்க முடியும். ஆனால் அதிகாரங்களை பரவலாக்கும் போது அங்கு வெளிப்படை தன்மையும் போட்டித் தன்மையும் உருவாகின்றன. ஆனால் இங்கு சகலதையும் மத்திய அரசாங்கம் வழங்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாகாணம் தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கான உரிமையை வழங்க வேண்டும். பொருளாதாரம் சட்டம் ஒழுங்கு காணி உரிமை போன்ற விடயங்கள் வழங்கப்படுவது அவசியமாகும். கொழும்பில் இருக்கின்ற மாணவிக்கும் மொனராகலையில் வளர்கின்ற மாணவிக்கும் இடையிலான திறமைகளில் வித்தியாசம் இருக்கும். மேலும் இங்கு சகலர் மத்தியிலும் அவநம்பிக்கை காணப்படுகிறது. முதலில் மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். கேள்வி : இந்த நாட்டில் ஒரு அரசியல் கலாசார மாற்றத்தை செய்ய முடியும் என்று எப்படி நீங்கள் இவ்வளவு திடமாக நம்புகிறீர்கள் பதில் உலகில் இதற்கு முன்னர் பல நாடுகள் மாறி இருக்கின்றன. எம்மைவிட யுத்தம் இருந்த எம்மைவிட வறுமையாக இருந்த நாடுகள் இன்று முன்னேறி இருக்கின்றன. சிங்கப்பூர் வியட்நாம் இந்தோனேசியா மலேசியா ருவாண்டா கானா போன்றவற்றை குறிப்பிடலாம். நாம் இன்றும் எமது இனம் எமது மதம் தொடர்பாகவே சிந்திக்கின்றோம். அந்த செயற்பாடு மாறவேண்டும் திருடர்கள் எமது வீட்டை உடைத்து திருடிவிட்டு செல்லலாம். அதனை நாம் தடுக்க வேண்டும். மாறாக நாம் வீட்டை விட்டு ஓடிவிட முடியாது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கின்றது. ஆற்றுப்படுத்தல் இல்லை. 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடந்ததை இன்னும் தமிழ் மக்கள் மறக்காமல் இருக்கலாம். நான் அண்மையில் கனடாவுக்கு சென்றபோது அங்கு ஒருவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் தற்போது நடைபெற்றது போன்று என்னுடன் பேசினார். அந்த வேதனையை யாரும் ஆற்றுப்படுத்த இன்னும் முயற்சிக்கவில்லை என்பதே இங்கே குறைபாடாக இருக்கிறது. குறைந்தபட்சம் அரசாங்கம் இதுவரை மன்னிப்பு கேட்டிருக்கின்றதா ? கேள்வி : உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில்... பதில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படுவது அவசியம். உலகத்திற்காக அல்ல, எமக்காக அதனை செய்ய வேண்டும். https://www.virakesari.lk/article/176128
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் - ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருப்பதாக தெரிவிப்பு Published By: RAJEEBAN 15 FEB, 2024 | 05:04 PM இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர் மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர்மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர். நாசெர் மருத்துவமனைக்குள் துல்லிய மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். தென்காசாவில் உள்ள நாசெர் மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை தடுத்துவைத்திருந்தனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் போல தோன்றுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய இராணுவம் கட்டிடத்தின் சில பகுதிகளை புல்டோசர்களை பயன்படுத்தி தரைமட்டமாக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தின் மத்தியில் நாசெர் மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/176467
-
மரணம்
ரஞ்சித் அண்ணை யாழின் 26ஆம் அகவைக்கான சுய ஆக்கங்களில் பதிந்திருக்கலாமே?!
-
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - அழுத்தங்கள் - திருத்தங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம்
நிகழ்நிலை காப்பு திருத்தச் சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் Published By: VISHNU 15 FEB, 2024 | 06:14 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு விரைவில் அதனை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சில் வியாழக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக 2017இல் இருந்த அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர அன்று நடவடிக்கை எடுத்துவந்தது. குறித்த சட்டம் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து இதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு அதனைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கும் பொறுப்பை அன்று ஊடக அமைச்சுக்கு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சமூகவலைத்தளங்களின் தலைமையகத்துடனும் இது தொடர்பாகக் கலந்துரையாடச் சிங்கப்பூருக்கும் எமது தரப்பினர் சென்றிருந்ததுடன் அவர்களும் இங்குவந்து இதுதொடர்பாக கலந்துரையாடியபோது, சட்ட ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்காமல் சுய கட்டுப்பாட்டுக்குச் செல்வதற்கு அப்போது இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததால், 2023வரை அதன் பிரகாரமே செயற்பட்டு வந்தது. என்றாலும் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக 2023 வரை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன. அதனைக் கருத்திற்கொண்டே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்தது, பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தது. இலங்கை வரலாற்றில் இந்த சட்டமூலத்திற்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் சுமார் 45க்கும் மேற்பட்ட மேன்முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் மற்றும் நிலைப்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டபோதும் சில திருத்தங்களை சட்டப்பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தின் குழுநிலையின்போதும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. என்றாலும் அந்த திருத்தங்கள் அனைத்தையும் கடந்த வாரம் பொது மககள் பாதுகாப்பு அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருந்தது .தற்போது அது சட்ட வரைபு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அங்கு சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் அது சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும். அவர் குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்ற சான்றிதழை வழங்கிய பின்னர் அமைச்சரவை மீண்டும் அதனை அனுமதிக்க வேண்டும். அமைச்சரவை அனுமதித்த பின்னர் எந்த வேளையும் வர்த்தமானியில் பிரசுரிக்க முடியும். வர்த்தமானி வெளியிடப்பட்டு 7 தினங்களுக்கு பின்னர் எந்த வேளையும் அதனை பாராளுமன்றத்துக்கு முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பிக்க முடியும். அவ்வாறு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து 2வாரங்களுக்குள் அதுதொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம். எனவே இவ்வாறான சட்டங்களை கொண்டுவரும்போது பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் பொது மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலுமே இதனை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. சமூகவலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். அதனால் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களுடன் மீண்டும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/176473
-
சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக - இரா.சம்பந்தன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த இடைக்கால தடை! Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 03:06 PM (துரைநாயகம் சஞ்சீவன் ) இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்து கட்டளையொன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற்கு குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடைபெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றதும் என வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே, குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் யாப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால், குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இதன்போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு - கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, எஸ். ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176446 இலங்கை தமி்ழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு யாழிலும் தடை Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 04:21 PM தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக தடை உத்தரவு வழங்கக் கோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் மாநாட்டை நடத்த நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடாத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (15) வழக்குதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை அடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த தமிழரசுக் கட்சியின் மாநாட்டை நடத்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றமும் மாநாட்டிற்கு தடை விதித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176456
-
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய தேவை கிடையாது - டலஸ் 15 FEB, 2024 | 05:38 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை கிடையாது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைதியாக இருப்பது அதிருப்திக்குரியது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடையும். ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் பதவி பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டின் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியமைப்பின் ஊடாக நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் திறமையானவர். மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பனவற்றை இல்லாதொழித்ததை போன்று ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் மாதங்களில் பொறுப்பாக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் விடயம் தற்போது பேசுபொருளாக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பில் 1994ஆம் ஆண்டு முதல் பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை. இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஆகவே நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக தற்போது குறிப்பிடப்படுவதில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/176439
-
தமிழ்நாடு: மாடுகளுக்கு பரவும் பெரியம்மை நோய் மனிதர்களுக்கும் பரவுமா?
கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகக் கன்றுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவக் காரணம் என்ன? பெரியம்மை பாதித்த மாடுகளைப் பராமரிப்பது எப்படி? மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகள் இருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் மாடுகளின் தோல் முழுவதிலும் கொப்புளம் கொப்புளமாக பெரியம்மை பாதிப்பு (LSD-Lumpy Skin Disease) ஏற்பட்டது. வட மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் சில கன்றுகள் இறந்துள்ளன என்றாலும் மாடுகளின் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் தற்போது வரை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு பால் உற்பத்திக் குறைவு, மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, சில நேரங்களில் மரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மைக்கு நேரடியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆடுகளுக்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் செலுத்தப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.மேலும், மாடுகளுக்கு ஏற்படக்கூடிய அம்மை பாதிப்பைத் தடுக்க நேரடியாக தடுப்பூசி தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஈரோடு விவசாயி குமார் கூறும்போது, "எங்களது பகுதியில் 15 விவசாயிகளின் 30க்கும் மேற்பட்ட கன்றுகள், இளம் வயது மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் அவற்றில் சில கன்றுகள் இறந்துள்ளன. அம்மை நோயால் பாதிக்கப்படும் கன்றுகளைப் பாதுகாக்க நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் குறிப்பாக கன்றுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி வருகின்றனர். இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கைகளை அரசு எடுத்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும்," எனக் கூறினார். 'ஆயிரக்கணக்கான கால்நடைகள் பாதிப்பு' இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மரபுசார் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். என். புண்ணியமூர்த்தி பிபிசியிடம் பேசினார். தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கால்நடைகளுக்கு பெரியம்மைத் தொற்று பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இந்தத் தொற்று ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர்.என்.புன்னியமூர்த்தி கூறினார். மேற்கொண்டு பேசியவர், "வடமாநிலங்களில் மாடுகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்ததன் காரணமாக அதிக அளவில் மாடுகள் உயிரிழந்தன. ஆனால், அந்தப் பரவல் தமிழ்நாட்டுக்கு வந்தபோது பெரிய அளவில் இறப்புகள் இல்லை. ஆனால், தற்போது வரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கின்றன. தற்போது ஆயிரக்கணக்கான மாடுகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் பாதிப்புக்கு நேரடியாக சிகிச்சை முறை கிடையாது. சித்த மருத்துவ முறையில் தீர்வு இருக்கிறது," என்று கூறினார். சித்த மருத்துவமுறை கால்நடைகளை காப்பது எப்படி? "பெரியம்மை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடல் முழுவதும் கொப்பளங்கள் வெடிக்கும். இதனால் மாட்டின் தோல் மென்மையடையும். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துவது அவசியம். பெரியம்மை பாதிக்கப்பட்ட மாட்டிற்கு 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, கல் உப்பு, நாட்டு சர்க்கரை ஆகியவற்றைக் கலவையாகச் சேர்த்து தினசரி நான்கு வேளை ஆரம்பத்தில் கொடுக்க வேண்டும். பின்பு அதை மூன்று வேளையாக மாற்றி ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்தால் நல்ல பலன் இருக்கும்," என்கிறார் டாக்டர் என்.புன்னியமூர்த்தி. அதேபோல், "தோல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புகளுக்கு, நான்கு பல் பூண்டு, மஞ்சள் தூள், குப்பைமேனி தலை, வெண்ணெய் அல்லது வேப்பெண்ணையை நன்றாகக் காய்ச்சி கொப்பளங்கள் இருக்கும் பகுதியின் மீது தொடர்ந்து தேய்த்து வருவதன் மூலம் கொப்பளங்கள் ஆறிவிடும். ஒரு வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய கன்றுகள் தற்போது இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை தானாக உண்ணும் திறன் படைத்தவையாக இருக்காது. எனவே இதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் தனிக் கவனம் எடுத்து கன்றுகளைப் பராமரித்தால் மட்டுமே அவற்றைப் பாதுகாக்க இயலும்," என்றார். மாட்டிடமிருந்து மனிதர்களுக்கு பெரியம்மை பரவுமா? "உலக விலங்குகள் நல மையம்( WOAH - World organization for animal health) இந்தத் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்பதை உறுதி செய்துள்ளது. எனவே, விவசாயிகள் அச்சமின்றி தங்களது கால்நடைகளுக்கு வரக்கூடிய பெரியம்மை நோய்க்கான சிகிச்சையை அருகிலிருந்து வழங்கலாம்," எனக் குறிப்பிட்டார் புண்ணிய மூர்த்தி. கால்நடைகளுக்கு மூன்று தவணை தடுப்பூசி இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு கால்நடைத்துறை உயர் அதிகாரி கூறும்போது "கடந்த 2019ஆம் ஆண்டு மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு பரவியது. இதைத் தொடர்ந்து ஆடுகளுக்கு அம்மைக்காகச் செலுத்தப்படும்( GFV - Goat Fox vaccine) தடுப்பூசி மாடுகளுக்கும் செலுத்தப்பட்டு அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டில் மூன்று முறை தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த 62 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாடுகளுக்குப் பரவும் பெரியம்மை பாதிப்பு பற்றிய தகவல்கள் மாவட்டங்களில் இருந்து பதிவாகவில்லை. அது பெறப்பட்டால் அதற்கு ஏற்பத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று கூறினார். கன்றுகள் உயிரிழப்பது ஏன்? இந்தத் தடுப்பூசி நான்கு மாத கன்று முதல் செலுத்தப்படுகிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் மாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அதன் கன்றுக்கு இந்த நோய்த் தாக்கம் ஏற்படுகிறது. கன்றை விவசாயிகள் முறையாகப் பராமரிக்காத காரணத்தால் அது உயிரிழக்க நேரிடுகிறது, முறையாக கால்நடை மருத்துவமனையை அணுகுவதன் மூலம் கன்றுகள் உயிரிழப்பு தடுக்கப்படுவதாக", மதுரை கால்நடை மருத்துவர் பழனிவேல் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/c1v165wnxwxo
-
ரஃபாவில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பலி - மசூதிகள் மீதும் இஸ்ரேல்தாக்குதல்
ரஃபாவில் மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மை மிக்க திட்டம் எதுவும் சர்வதேச சமூகத்திடம் இல்லை - அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 15 FEB, 2024 | 01:59 PM ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை பாதுகாப்பதற்கான நம்பகதன்மை மிக்க நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டம் எதனையும் சர்வதேச சமூகம் இதுவரை முன்வைக்கவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் கரிசனைகளையே அவுஸ்திரேலியா வெளியிடுவதாக தெரிவித்துள்ள பெனிவொங் அவுஸ்திரேலியாவின் நெருங்கிய நாடுகளின் கரிசனைகளை நாடாளுமன்றத்தில் வாசித்துள்ளார். எனது கருத்துக்கள் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஃபா பகுதி மீது இஸ்ரேல் முன்னெடுக்ககூடிய பாரிய நடவடிக்கை குறித்த எங்கள்ஆழ்ந்த கரிசனைகளை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு தஞ்சமடைந்துள்ள மில்லியன் கணக்காண மக்களிற்கு பேரழிவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நெரிசலாக வாழும் பகுதிகளில் இராணுவ நடவடிக்கை என்பது ஆபத்தானது பொதுமக்களிற்கு இழப்புகள் ஏற்படலாம் எனவும்; அவர் தெரிவித்துள்ளார். இது நியாயப்படுத்த முடியாதது என அவுஸ்திரேலியா கருதுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176436
-
காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்
15 FEB, 2024 | 11:41 AM அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தனது நான்குவருடக கால தோழியுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். காதலர் தினத்தன்று தனது நான்குவருடகால தோழிக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோதிரத்தை வழங்கி தான் அவரை திருமணம் செய்ய விரும்புவதை தெரிவித்துள்ளார். பதவியிலிருக்கும் போது திருமணபந்தத்தில் இணைந்துகொண்ட முதலாவது அவுஸ்திரேலியபிரதமர் அன்டனிஅல்பெனிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவள் ஆம் என தெரிவித்தாள் என்ற பதிவுடன் இந்த விடயத்தை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். வாழ்க்கையின் ஏனைய பகுதி முழுவதும் ஒன்றாகயிருப்பது என தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒருவரையொருவர் சந்திக்க முடிந்ததால் நாங்கள் அதிஸ்டசாலிகள் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். அல்பெனிசிற்கு 60 வயது அவருடைய வாழ்க்கை துணையான ஹெய்டனிற்கு 40 வயது என்து குறிப்பிடத்தக்கது. இருவரும் நான்கு வருடங்களிற்கு முன்னர் சந்தித்தனர். அவுஸ்திரேலிய நாடாளுமன்ற சகாக்களும் நியுசிலாந்து பிரதமர் உட்பட பலரும் வாழ்த்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/176428
-
மரணத்திலும் பிரியாத காதல்: கருணை கொலை மூலம் அன்பு மனைவியுடன் கைகோர்த்தபடி மரணித்த நெதர்லாந்து முன்னாள் பிரதமர்
தங்களை கருணை கொலை செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று நெதர்லாந்து முன்னாள் பிரதமர் தன் மனைவியுடன் கை கோர்த்தபடி மரணித்த சம்பவம் நடந்துள்ளது. தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரை மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து கண்ணியமாக மரணிக்க செய்வதை பல்வேறு நாடுகளும் அனுமதித்து உள்ளது. இந்நிலையில் உலகில் முதன்முறையாக 2002ம் ஆண்டு கருணை கொலைக்கு நெதர்லாந்து நாடு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கியது. அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கிறிஸ்டியன் ஜனநாயக அப்பீல் கட்சியின் தலைவருமான டிரைஸ்-வான்-ஆகட் ( 94 வயது), இவர் 1977-ம் ஆண்டு முதல் 1982 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இவரது மனைவி இகுனி (93 வயது) இவரும் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு டிரைஸ்வான் ஆகட்டிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த இகுனி, நெதர்லாந்து சட்டப்படி தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கைவிடுத்தார். இதனை ஏற்று அரசு சட்டவிதிகளின் கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. அப்போது இருவரும் கை கோர்த்தபடி மரணித்தனர். இருவரும் இணைந்தபடி மரணித்திருப்பது பார்ப்போரை நெகிழ செய்தது. https://thinakkural.lk/article/291964
-
டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு
கண்ணீர் புகை குண்டு ட்ரோன்களுக்கு ‘பதிலடி’யாக பட்டம் பறக்கவிட்ட பஞ்சாப் விவசாயிகள்! 15 FEB, 2024 | 11:01 AM புதுடெல்லி: இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ள அதேவேளையில், போராட்டக் களம் புதன்கிழமை விவசாயிகளின் நூதன யுக்தி ஒன்றுக்குச் சாட்சியானது. அரசு தங்களுக்கு எதிராக ஏவி விடும் கண்ணீர் புகை குண்டுகளை சுமந்து வரும் ட்ரோன்களுக்கு பதிலடியாக பட்டங்களைப் பறக்க விட்டு விவசாயிகள் செயலிழக்கச் செய்தனர். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குவது, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி போவதில் பஞ்சாப் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதற்காக டெல்லி நோக்கி பேரணி தொடங்கினர். அவர்களின் பேரணியை பஞ்சாப் - ஹரியாணா எல்லையின் ஹரியாணா போலீஸார் தடுத்தனர். இதற்காக சிமென்ட் தடுப்புகள், முள் வேலிகள், அமைத்து, போலீஸார், துணை ராணுவத்தினரை நிலை நிறுத்தியிருந்தனர். தங்களின் கொள்கையில் உறுதியாக இருந்த விவசாயிகள் தடைகளை மீறி முன்னேற முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீச்சி அடித்தும், தடியடியும் நடத்தினர். இதனால் அங்குள்ள ஆம்லாவின் ஷம்பு பகுதியில் பதற்றம் நிலவியது. இரவு இடைநிறுத்தம் செய்யப்பட்ட போராட்டம் காலையில் மீண்டும் தொடங்கியது. விவசாயிகள் தடுப்புகளை நெருங்காமல் இருக்க ஹரியாணா போலீஸார் மீண்டும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கூட்டத்துக்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீச போலீஸார் ட்ரோன்களை பயன்படுத்தினர். இந்த நிலையில், தங்கள் மீது அரசு ஏவி விடும் ட்ரோன்களை எதிர்கொள்ள விவசாயிகள் ஒரு நூதன யுக்தியைக் கையாண்டனர். ட்ரோன்களுக்கு எதிராக பட்டங்களை பறக்க விட்டு அவற்றை செயலிழக்கச் செய்தனர். ட்ரோன்களின் காத்தாடிகளில், பட்டங்களின் மாஞ்சா நூலைச் சிக்க வைத்து அவற்றை செயலிழக்கச் செய்வதுதான் இந்த புத்திசாலித்தனான நடவடிக்கைகளின் செயல் திட்டம். இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுமாறு விவசாயிகள் நடந்து கொள்ளக் கூடாது. விவசாய சங்கங்களுடன் நேர்மறையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எங்களின் முயற்சிகள் தொடரும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், தற்போது பேசப்பட்டு வரும் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார். இன்றைய இரண்டாவது நாளில் ஷம்பு எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தேர், "விவசாயிகளின் போராட்டம், அரசியல் சாராமல், அமைதியான முறையில் நடந்து வரும் நிலையில், அரசு அவர்களை இழிவுபடுத்துகிறது. முதன் முறையாக விவசாயிகளுக்கு எதிராக துணை ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவே விரும்புகிறோம். நாங்கள் அரசாங்கத்துடன் மோத விரும்பவில்லை. நாங்கள் நேற்றும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம். இன்றும் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். தங்கள் முயற்சியில் மனம் தளராத இளம் விவசாயிகள் டிராக்டரின் உதவியுடன் தடைகளை உடைக்க முயன்றனர். அவர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. விவசாயிகள் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் பாட்டில் ஈர உடைகள், கண்ணீர் புகை குண்டின் தாக்கத்தை குறைக்கும் உபகரணங்களுடன் களத்தில் நின்றனர். https://www.virakesari.lk/article/176416
-
நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்
கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம் ரோபோ உதவியுடன் நடத்தப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சையில், அந்த எந்திரனின் தவறான செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அமெரிக்காவில் பரிதாபமாக இறந்திருக்கிறார். எந்திரன்களின் அனுகூலங்கள் மருத்துவத்துறையிலும் அதிகரித்துள்ளன. மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலின் பேரில், அவருக்கு வாய்த்திராத துல்லியம், ஓர்மை ஆகியவற்றுடன், ஓய்வின்றி அறுவை சிகிச்சைகளை நடத்தி முடிப்பதில் எந்திரன்கள் சிறப்பானவை. மேலும் ரிமோட் சிஸ்டம் அடிப்படையில் தொலைவில் இருந்து இந்த எந்திரனை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழி நடத்துவது எளிது. இப்படி நேர்மறை சாதகங்களை கொண்டிருந்தபோதும் இந்த எந்திரன்கள், மனித நுணுக்கம் மற்றும் ஆய்ந்தறியும் அறிவு இல்லாததன் காரணமாக விபரீதத்துக்கு வழி செய்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார். அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது. பல்வேறு கரங்கள் கொண்ட ’டா வின்சி’ என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், ’டா வின்சி’ எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது. ஆனால் அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ராவை, முந்திக்கொண்டு சாகடித்திருக்கிறது ’டா வின்சி’ ரோபோவின் தவறான அறுவை சிகிச்சை. ஹார்வி தொடுத்திருக்கும் நீதிமன்ற வழக்கில், டா வின்சி ரோபோவின் பாதகங்கள் குறித்தும், அதன் தயாரிப்பு நிறுவனம் ரோபோவை முறையாக இயக்க வாய்ப்பில்லாத மருத்துவமனைகளுக்கும் அதனை விற்றது குறித்தும் தரவுகளோடு விளக்கி இருக்கிறார். மேலும் டா வின்சி இதற்கு முன்னதாக நடத்திய அறுவை சிகிச்சைகளால் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பான விசாரணையும் கோரியிருக்கிறார். https://thinakkural.lk/article/291961
-
அமெரிக்க கன்சாஸ்சிற்றியில் Football Parade இல் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 20 பேர்வரை காயம்.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி 22 பேர் காயம் Published By: RAJEEBAN 15 FEB, 2024 | 07:37 AM அமெரிக்காவின் கன்சாஸ் நகரில்இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர். கன்சாஸ் நகரத்தில் இடம்பெற்ற அணிவகுப்பின் இறுதியிலேயே superbowl parade துப்பாக்கி சூட்டுசம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வில் இறுதியில் இடம்பெற்ற வன்முறையை தொடர்ந்து மக்கள் அச்சத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்து 22 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பல சிறுவர்கள் உள்ளனர். எட்டுப்பேர்ஆபத்தான நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவரை கைது செய்துள்ள அதிகாரிகள் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்த பெண் ஒரு டிஜே என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/176410
-
இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி தோல்வியடைந்தது
பெரிய வெங்காய ஏற்றுமதி மீதான தடையில் இருந்து இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை, இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக விலையில் வாங்குவதற்கு ஏனைய சந்தைகளை நாடுகிறார்கள். வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், இலங்கை போன்ற நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு விலை இருமடங்காக உயர்ந்ததை அடுத்து, டிசம்பர் 8, 2023 அன்று ஏற்றுமதியைத் தடை செய்தது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கொள்கை முடிவை இந்தியா எடுத்துள்ளது. எவ்வாறாயினும், தடை செய்யப்பட்ட போதிலும் விசேட ஏற்பாடுகளின் கீழ் இந்தியாவில் இருந்து 100,000 தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கை விலக்கு கோரியது. இந்த முயற்சி பலனளிக்கவில்லை, எனவே உள்ளூர் சந்தையில் விலைகள் அதிகமாகவே காணப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை .350-375 ரூபாவாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெரிய வெங்காயம் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு தொன் 1200 அமெரிக்க டொலர்கள் விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. சாதாரண சூழ்நிலையில், இலங்கை ஒரு மாதத்திற்கு சுமார் 20,000 தொன்களை இறக்குமதி செய்கிறது. “விலை மிக அதிகமாக இருப்பதால், இப்போது 12,000-15,000 தொன்னாகக் குறைந்துள்ளது. பாகிஸ்தான் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை விதித்துள்ளது,” என்றார். இதற்கிடையில், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒரு ஆதாரம், தடை இன்னும் நீக்கப்படவில்லை, எனவே இந்தியா இலங்கைக்கு ‘பெங்களூர் ரோஸ் ஒனியன்’ எனப்படும் மற்றொரு வகை வெங்காயத்தை வழங்கியுள்ளது. https://thinakkural.lk/article/291987
-
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் திறப்பு!
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 02:50 PM அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜெய்கா (JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் ,அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் சற்றுமுன்னர் திறந்துவைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/176443
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று மீண்டும் நீதிமன்றுக்கு.. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அவரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர் இதனையடுத்து அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். https://thinakkural.lk/article/291929
-
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமித்த முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக்க "பதில் உதவியை எதிர்பார்க்கும்" நோக்கங்களுக்காக மட்டுமே இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவு தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 12, 2019 முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தகவலை மார்ச் 13, 2024க்குள் தனது இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும், அரசியல் கட்சிகளால் எடுக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் வாங்குபவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என மத்திய அரசு வாதிட்டது தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம். இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம். தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திர திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது தேர்தல் பத்திரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன? இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பப்படுகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவை மீறுவதாக வாதிடப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட ஒரு பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து இந்த மனு கேள்வியெழுப்பியிருக்கிறது. இது அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் குறைக்கும் என்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்க அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர். தேர்தல் பத்திரத் திட்டம் பட்ஜெட்டில் உள்ளது. பட்ஜெட் என்பது ஒரு பண மசோதா என்பதால் மாநிலங்களவை அந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதாக நிறைவேற்றும் வகையில், பண மசோதாவில் தேர்தல் பத்திரத் திட்டம் சேர்க்கப்பட்டது என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன இந்தத் திட்டத்தில் எந்தக் கட்சி அதிகம் பயன்பெற்றிருக்கிறது? 2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது. அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது. Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும் 2021-22 நிதியாண்டுக்கும் இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள் 48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன. இந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன), அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை பெற்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது? 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ADRன் மனுவின்படி, கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை 'நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை' என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/cn0ng6q06lno
-
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிழக்கு மாகாண ஆளுநரால் சுயத்தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு LED தொலைக்காட்சிகளும் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் சாதனைகள் நிகழ்த்திய தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/291896
-
கசிப்பு அருந்திய மாணவன் பாடசாலையில் சுகயீனமுற்றதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்!
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 04:19 PM பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (14) இந்த மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார். இதுகுறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான வீதியில் வைத்து தான் கசிப்பு அருந்தியதாக கூறினார். இதனையடுத்து அந்த மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தான் கசிப்பு அருந்தியதனை குறித்த மாணவன் வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பசறை ஆதார வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.virakesari.lk/article/176459
-
யாழில் விற்கப்பட்ட ஐஸ்கிறீமில் தவளை!
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த குளிர்பான விற்பனை நிலையத்தில் நேற்று (14) ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தநிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/article/291932
-
யாழ். வட்டுக்கோட்டையில் விபத்து ; இருவர் காயம்
Published By: DIGITAL DESK 3 15 FEB, 2024 | 03:28 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176451
-
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடி : இருவர் கைது
கம்பஹாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் பல்வேறு தரப்பினரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் கம்பஹா – வேபட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்த தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி என்பன குற்றவியல் விசாரணை திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291973