Everything posted by ஏராளன்
-
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்
முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் - மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப்பின் கனவுப்பயணம் ஆரம்பம் Published By: RAJEEBAN 18 JAN, 2024 | 02:32 PM சிலருக்கு முதல்போட்டி என்பது கனவு போல அமைவதுண்டு. மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சம்மெர் ஜோசப்பின் முதல் போட்டியும் ஒரு கனவே! முதலில் அவரின் ஆரம்பம் - கயானாவின் 350 பேரை கொண்ட பராகரா என்ற ஊரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் இவர். அதன் பின்னர் அவர் தனது முதல் டெஸ்டில் மேற்கிந்திய அணியின் அதிக ஓட்டங்களை பெற்ற 11 வீரர் என்ற சாதனையை முறியடித்தார், 36 ஓட்டங்களை அவர்பெற்றார் அதில் ஜோஸ் ஹசெல்வூட்டின் பந்தில் பெறப்பட்ட சிக்சரும் அடங்கும். அதன் பின்னர் தனது பந்து வீச்சை ஆரம்பித்தவேளை டெஸ்ட்போட்டிகளில் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்திய 23 வீரர் - மேற்கிந்திய அணியின் இரண்டாவது வீரர் என்ற சாதனைபட்டியலில் அவர் தனது பெயரை பதிவு செய்துகொண்டார். முதல் பந்தில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித்தினை முதலாவது பந்தில் ஆட்டமிழக்க செய்ததை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என சாமர் ஜோசப் முதல்நாள் நிறைவின் பின்னர் தெரிவித்தார். நான் அதனை படமெடுத்து எனது வீட்டில் ஒட்டிவைப்பேன் என்றார் அவர். தனது முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்துவேன் என அவர் தனது அணியினரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அது ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் என நான் எதிர்பார்க்கவில்லை, அது எனக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்தது நான் மிகவும் சாதகமான மனோநிலையுடன் விளையாடினேன் உலகின் தலைசிறந்த அணியுடன் விளையாடும்போது சாதகமான மனோநிலை அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். முதல் இனிங்சில் மேற்கிந்திய அணி 188 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை ஜோசப் பந்து வீச ஆரம்பித்தார் - அவ்வேளை ஸமித் இரண்டு பவுண்டரிகளுடன் நிதானமாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். கெமரோச், அல்சாரி ஜோசப் போன்றவர்களின் பந்து வீச்சு சவாலாகயிருக்கவில்லை. முதல் பந்தை வீசுவதற்காக ஓடிவந்த ஜோசப் ஆனால் அவரது ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு மீண்டும் பந்து வீச ஆரம்பித்தார். ஒவ்ஸ்டம்பிற்கு வெளியே 137 கிலோமீற்றர் வேகம் ஸ்மித் தடுமாறினார் துடுப்பை உரசிக்கொண்டு சென்ற பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது மூன்றாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ஜஸ்டின் கிரீவ்ஸ் இவரும் முதல் டெஸ்டில் விளையாடுகின்றார் அந்த கட்ச்சினை பிடித்தார். நான் முதல் பந்திற்காக ஓடியவேளை பதட்டமாக உணர்ந்தேன் அதன் காரணமாகவே இடையில் நின்று மீண்டும் திரும்பி வந்து பந்துவீசினேன் மீண்டும் முதல்பந்திற்காக எனது மனதை உறுதியாக்கி கொண்டு வந்து பந்துவீசினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் ஸடீவ் ஸ்மித் துடுப்பெடுத்தாடுவதை வீடியோக்கள் மூலம் அவதானித்துள்ளேன். அவர் ஓவ் ஸ்டம்பிற்கு வெளியே பலவீனமானவர் என்பதை உணர்ந்தேன் அவர் அங்கும் இங்கும் திரும்பும் ஒருவர் என்பதால் ஒவ்ஸ்டம்பிற்கு மேலே பந்தை வீச தீர்மானித்தேன் அதேபோ பந்து வீசினேன்; பந்து சிறியளவு ஸ்விங் ஆனது துடுப்பின் நுனியில் பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிக்களிப்பில் அவர் மைதானத்தின் கிழக்கு பகுதியை நோக்கி ஓடினார், இன்னமும் அதிக தூரம் ஓடமுடியுமென்றால் நான் ஒடியிருப்பேன் அவ்வளவு மகிழ்ச்சியாகயிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/174240 சமர் ஜோசப்பின் 5 விக்கெட் வீழ்த்தும் காணொளி இணைப்பு கீழே www.cricket.com.au/videos/3860616/shamar-joseph-five-wicket-haul-debut-australia-west-indies-adelaide-oval-smith-labuschagne-green-bow Australia v West Indies 2023-24 | First Test | Day 1
-
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: எதற்காக? என்ன நடக்கிறது?
தற்காப்பு நடவடிக்கை - பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்து 18 JAN, 2024 | 11:25 AM புதுடெல்லி: பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஈரான் தற்காப்பு நடவடிக்கையாகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது. நேற்று (ஜன.17) வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்த சம்பவம் ஈரான் - பாகிஸ்தான் என்ற இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினையின் விளைவு என்றாலும் இந்தியா தீவிரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஈரானின் தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளது. ஈராக், சிரியா, பாகிஸ்தான்.. அடுத்தடுத்த தாக்குதல் ஏன்? 24 மணி நேரத்தில் ஈராக், சிரியா, பாகிஸ்தான் என மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதன் மூலம் சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கு ஓர் எச்சரிக்கையை அழுத்தமாக ஈரான் கடத்த விரும்புவதாக சர்வதேச விவகாரங்கள் தொடர்பான வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், தன்னைச் சுற்றியுள்ள பலவீனமான, அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையற்ற நாடுகளில் இருந்து தனது இறையான்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் அமைப்புகளைத் துவம்சம் செய்ய தயங்காது என்ற செய்தியை ஈரான் வலுவாகக் கடத்தும் விதமாகவே மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் காட்டம்; ஈரான் மவுனம்: ஈரான் நடத்திய தாக்குதல் சட்டவிரோத செயல் என்றும், பிரச்சினையை பேசி தீர்க்காமல் தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கக்கூடிய செயல் என்றும், இது இரு நாட்டு உறவை வெகுவாக பாதிக்கும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் எந்த பதிலும் அளிக்கவில்லை. இரு நாடுகளும் சுமார் 959 கி.மீ தூரத்துக்கு எல் லையை பகிர்ந்துள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள ஈரானின் சிஸ்தான் பகுதியில் ஈரானின் சிறுபான்மையினராக இருக்கும் சன்னி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஜெய்ஷ் அல்-தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருக்கும் பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ், ஹவுதி, அமெரிக்க தலைமையிலான படைகள், ஈரான் ஆகியவை மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளால், பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகள் அமைந்துள்ள மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது. https://www.virakesari.lk/article/174216
-
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் - மஹிந்த ராஜபக்ஷ
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ரணிலும் உள்ளார் - நாமல் 18 JAN, 2024 | 11:20 AM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஏற்கனவே எங்களுடன் இருக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயரும் உள்ளது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174219
-
தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க ரணில் முயற்சி - விமல் வீரவன்ச
Published By: DIGITAL DESK 3 18 JAN, 2024 | 10:41 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார். சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் உண்மையை கண்டறிதல் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எதிரான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முன்னெடுத்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கினார். இந்த தீர்மானத்தை நாட்டு மக்களும்,பாராளுமன்றமும் அப்போது அறிந்திருக்கவில்லை. நாட்டுக்கு எதிராக ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களில் இருந்து விலகுவதாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.அந்த வாக்குறுதிகளுக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தோற்றுவித்தார்கள். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \ 1 தீர்மானத்துக்கு இணையனுசரனை வழங்கும் இணக்கப்பாட்டில் இருந்து இலங்கை விலகியுள்ள நிலையில் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களில் பல சட்ட வகிபாகத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்,2017 ஆம் ஆண்டு நாடு கடத்தல் சட்டம்,இழப்பீட்டுக்கான அலுவலக சட்டம், பலவந்தமாக தடுக்கும் சட்டம், பாதிக்கபபட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் என்பன இயற்றப்பட்டுள்ளன. அண்மையில் பாராளுமன்றத்தில் ஒற்றுமை மற்றும் தேசிய நல்லிணக்கத்துக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளன. உண்மையை கண்டறிதல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபித்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்ட வரைபுக்கான வர்த்தமானி புதுவருட தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளன. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் பணிப்புரைக்கு அமைய 2015 ஆம் ஆண்டு முதல் திருட்டுத்தனமாக இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தையும் வலுப்படுத்தும் வகையில் உண்மையை கண்டறிதல் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு அமைய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டால் தற்போது நடைமுறையில் உள்ள சாட்சி கட்டளைச் சட்டம் வலுவிழக்கப்படும். இராணுவத்தினருக்கு எதிராக எவர் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். பொய் சாட்சியம் வழங்கலாம்.சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படுகிறார். ஆச்சரியம் என்னவென்றால். யுத்த வெற்றியை பிரதான தேர்தல் பிரசாரமாக கொள்ளும் ராஜபக்ஷர்கள் இராணுவத்தினருக்கு எதிரான சட்டமூலங்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள். ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/174211
-
ஹமாஸ் ஆயுதக் குழுவை இஸ்ரேல்தான் உருவாக்கியதா? உண்மை என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லைத் எஸ்சம் பதவி, பிபிசி நியூஸ், அரபு சேவை 17 ஜனவரி 2024 பல ஆண்டுகளாக, ஹமாஸ் ஆயுதக் குழு என்பதே "இஸ்ரேலிய செயல் திட்டம்" தான் என்று கூறுபவர்களும் உள்ளனர். இஸ்ரேலுக்கு எதிரான பாலத்தீன போராளிக் குழுவின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கூற்று மீண்டும் வலுப்பெற்றது. ஹமாஸின் பிறப்பிடத்தை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்துவது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மிகவும் பழைய குற்றச்சாட்டு. இஸ்லாமிய இயக்கத்தின் உறுப்பினர்கள் இதை திட்டவட்டமாக நிராகரிக்கிறார்கள். மூத்த இஸ்ரேலிய அதிகாரிகளைப் போலவே, இந்தக் கூற்றை ஆதாரமற்றது என்று அவர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு முன்பே, இந்த குற்றச்சாட்டை ஒரு முன்னாள் பாலத்தீன அமைச்சர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் மீண்டும் மீண்டும் பல வெளிநாட்டு செய்தித்தாள்களுடன் பேசியபோது தெரிவித்திருந்தார். முக்கிய ஆர்வலர்களும் சமீபத்திய வாரங்களில் சமூக ஊடகங்களில் அவரைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர். இந்த கூற்று பல தசாப்தங்களுக்கு முன்னர் முன்னாள் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக், அமெரிக்க காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியின் செனட்டராலும் இஸ்ரேலின் உள் பாதுகாப்பு சேவையான ‘ஷின் பெட்’ அதிகாரிகளாலும் பகிரங்கமாக கூறப்பட்டது. ஆனால் இதிலெல்லாம் உண்மை இருக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் ஆயுதக் குழுவை உருவாக்கியதே இஸ்ரேல் தானா என்ற கேள்வியுடன் கூடிய விவாதம் பல நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக செயல்பட்டு வரும் ஹமாஸ் ஹமாஸ் 1987 இல் முதன்முதலில் தோன்றிய போது எங்கிருந்தும் தோன்றவில்லை. அதற்கு முன்பே, அது ஏற்கனவே வெகுதொலைவைக் கடந்துவிட்டது. அதை மிகவும் எளிமையான முறையில் இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்: பாலத்தீன பிரதேசங்களில் இயக்கத்தின் முதல் வேர்கள் 1940 களின் நடுப்பகுதியில் காஸாவில் முஸ்லீம் சகோதரத்துவத்தின் முதல் கிளைகளை நிறுவியதன் மூலம், ஜெருசலேமின் ஷேக் ஜர்ரா சுற்றுப்புறத்திலும் மற்றும் பிற இடங்களிலும் தோன்றின. 1967ஆம் ஆண்டு ஆறு நாள் போரில் இஸ்ரேலுக்கு எதிரான தோல்வியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட "பின்னடைவு" மற்றும் சாத்தியமான ஆயுதம் பற்றிய முதல் யோசனைகளுக்குப் பிறகு, முஸ்லீம் சகோதரத்துவத்தின் இளைஞர்கள் அரபு தலைவர்களுடன் விரக்தியடைந்ததன் விளைவாக இரண்டாவது கட்டமாக மோதல் ஏற்பட்டது. முஸ்லீம் சகோதரத்துவத்தின் பதிவுகளின்படி, பாலத்தீன பிரதேசங்களில் இஸ்லாமிய அமைப்பின் வரலாற்றின் பெரும்பகுதி மதம், ஆதரவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அவர்கள் மத மற்றும் சமூக நிறுவனங்களையும் மசூதிகளையும் கட்டியெழுப்பினார்கள். இந்த ஆவணங்கள், பாலத்தீன பிரதேசங்களில் அதன் முதல் ஆண்டுகளில், முஸ்லிம் சகோதரத்துவம் ராணுவ பயிற்சிக்கு பதிலாக இளைஞர்களின் அறிவுசார், கலாச்சார மற்றும் ஆன்மிக பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1966 ஆம் ஆண்டு பிரபல இஸ்லாமிய சிந்தனையாளர் சயீத் குத்புக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. "ஆயுதப் போராட்டத்தின்" அறிகுறிகள் இந்நிலையில், 1950 மற்றும் 1960 களில் பல்வேறு காலகட்டங்களில் நாசரிஸ்ட் மற்றும் பாத்திஸ்ட் அரேபிய தேசியவாத அமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற அமைப்புகளில் சமய ரீதியிலான சவால்கள் எழுந்ததன் காரணமாக இஸ்லாமியர்கள் பாலத்தீன பிரதேசங்களில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தற்போது வெளிநாட்டில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவராகச் செயல்பட்டு வரும் ஹமாஸின் முன்னாள் தலைவர் காலித் மெஷால் சுட்டிக்காட்டியுள்ளார். மிஷாலின் பத்திரிகை அறிக்கைகளின்படி, இஸ்லாமியர்கள் எங்கும் வரவேற்கப்படவில்லை. இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் 1967 முதல் 1987 இல் இஸ்லாமிய இயக்கம் பிறக்கும் வரை ஹமாஸின் எழுச்சிக்கு வழிவகுத்த நிகழ்வுகளை மையப்படுத்துவோம். 1967 போரில் அரேபியர்களின் தோல்விக்குப் பிறகு "இஸ்ரேலுக்கு எதிரான போரில்" பயன்படுத்தப்பட்ட வழிமுறையின் மாற்றத்திற்கான காரணிகளில் ஒன்று வடிவம் பெறத் தொடங்கியது. ஹமாஸ் இயக்கத்தின் முதல் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கோஷே, “தி ரெட் மினாரெட்” (The Red Minaret) என்ற தலைப்பில் தனது நினைவுக் குறிப்புகளில் இந்தத் தோல்வி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் இளைஞர்களுக்கு ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றிப் பேசுகிறார். ஜோர்டானில் சகோதரத்துவத்தின் கன்ட்ரோலர் ஜெனரல் அழைப்பு விடுத்திருந்த இஸ்லாமிய மாநாட்டில் தானும் தனது தலைமுறையைச் சேர்ந்த மற்ற இளைஞர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கோஷே உறுதியளிக்கிறார். ஏனெனில் அது பாலத்தீனத்தின் எதிர்காலத்திற்கான தெளிவான தீர்வுகளை முன்வைக்கவில்லை என்பதுடன் அது இஸ்லாமிய ஜிஹாத்தை உருவாக்கவும் அழைப்பு விடுக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1960 களின் பிற்பகுதியில், சகோதரத்துவ இளைஞர்கள் ஃபதா இயக்கத்தின் பதாகையின் கீழ் இஸ்ரேலுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கோஷே மேலும் "தி ரெட் மினாரெட்" இல் கூறுகையில், இந்த பிரச்னை, ஏற்கெனவே இஸ்ரேலுக்கு எதிராகப் போராடி வந்த இஸ்லாமிய சகோதரத்துவத்தின் இளைஞர்களை மூத்தவர்களின் அறிவுரைகளை மீறி ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தியது. இதற்கு "சீர்திருத்த இயக்கம்" என்ற காரணமும் கூறப்பட்டது. இதன் விளைவாக, அந்த நேரத்தில் ஜோர்டானில் "ஷேக் விதிகள்" என்று அறியப்பட்டதற்குள், சகோதரத்துவத்தின் இந்த இளம் உறுப்பினர்களை தயார் செய்து அவர்களுக்கு போர் திறன்களை வழங்க ஃபத்தா இயக்கத்துடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் எட்டப்பட்டது . இந்த அளவுருக்களைப் பின்பற்றும் பயிற்சி 1968 இல் தொடங்கி "கருப்பு செப்டம்பர்" (ஜோர்டானிய உள்நாட்டுப் போர் என்றும் அழைக்கப்படுகிறது) நிகழ்வுகள் மற்றும் திருத்த இயக்கத்தில் சகோதரத்துவத்தின் தலைமையின் கண்டுபிடிப்புக்குப் பிறகு 1970 இல் முடிந்தது என்று கோஷே கூறுகிறார். இந்த நேரத்தில், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் "கிளாசிக்கல் தலைவர்கள்" மற்றும் "இளைய தலைமுறை" இடையே பல உள் மோதல்களை சந்தித்தது. இளைஞர்கள் இஸ்ரேலுக்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தள்ளப்பட்டதால், தலைவர்கள் இஸ்ரேலுடன் போரிடுவதை விட "அரசு கட்டமைப்பிற்கு" முன்னுரிமை அளித்து, இயக்கத்தின் பல உறுப்பினர்களை சிதைத்து "தேசிய குழுக்கள் மற்றும் இயக்கங்கள்" ஆயுதப் போராட்டத்தைத் தழுவிய போராளிகளை உருவாக்க வழிவகுத்தது. இது குழுவின் மீது அதிக அழுத்தத்தைக் கொண்டு வந்தது. ஏற்கனவே அதன் எதிரிகளின் பெருக்கம் மற்றும் பிற பாலத்தீன அறிவுசார் மற்றும் தேசிய இயக்கங்களின் ஆதிக்கம் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டது. "யாசர் அராபத்தை சமாளிக்க ஹமாஸை இஸ்ரேல் உருவாக்கியது" இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தோன்றிய இஸ்லாமியக் குழுவிற்கும் இடையிலான "உறவு பற்றிய சந்தேகம்" குழுவின் கஷ்டங்களின் கடைசி இரண்டு தசாப்தங்களில், அதாவது 1970கள் மற்றும் 1980களில் தோன்றியது. ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேலிய உருவாக்கம் என்று குற்றம் சாட்டிய போது , இந்தச் சந்தேகத்தை எழுப்பியவர்களில், எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கும் ஒருவர் . முபாரக் ஒரு பழைய வீடியோவில், பல எகிப்திய வீரர்களைச் சந்தித்து, "பாலத்தீன விடுதலை அமைப்புக்கு (பிஎல்ஓ) எதிராகச் செயல்பட ஹமாஸை இஸ்ரேல் உருவாக்கியது," என்ற பிரசாரத்தை முன்னெடுத்தார். முபாரக் மட்டும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை - 1988ல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினரான ரான் பால், 2009ல் தனது நாடாளுமன்ற உரையின் போது,“யாசர் அராபத்தை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் ஹமாஸை உருவாக்க இஸ்ரேல் ஊக்குவித்து உதவியது என்பதை நாங்கள் நிரூபிப்போம்,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோர்டானில் ஃபதா இயக்கத்தினர் பாலத்தீனத்தை விடுவிப்பதற்கான ஒரு பாதையாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாகப் போராடினர். மேலும், முன்னாள் அமைச்சரும், பாலத்தீன தூதுக்குழுவின் உறுப்பினருமான ஹசன் அஸ்ஃபோர், “1993 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தையின் போது, சில அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு - ஒரு அமெரிக்க திட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஹமாஸ் பிறந்தது. அது பாலத்தீன விடுதலை அமைப்புக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றது,” என செப்டம்பர் 2023 இல் பிபிசியிடம் பேசுகையில் தெரிவித்தார். இதைப் பற்றி, கத்தார் பல்கலைக் கழகத்தின் பாலத்தீன சர்வதேச உறவுகளின் பேராசிரியர் அகமது ஜமில் அஸமிடம் பேசினோம். இந்த குற்றச்சாட்டுகள் ஒரு தனிநபருக்கு மட்டும் பொருந்தக் கூடியது அல்ல என்று அவர் கூறினார். மேலும், பாலத்தீன அதிகாரத்திற்கு எதிராக இயக்கப்பட்ட சக்திகள் எந்த விதத்திலும் சிறிய அளவில் மோசமானவையாக இருந்தது இல்லை என்றும் கூறினார்: "இந்த குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாக இஸ்ரேலியர்களும் உள்ளனர். பாலத்தீனர்களிடையே உள்ள உள் பிளவுகளும் இந்த குற்றச்சாட்டுகளை தோற்றுவிப்பதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன.” முபாரக்கின் பழைய அறிக்கைகளை குறிப்பிட்டு, அஸம் பிபிசியிடம் பேசியபோது, "எகிப்திய ஆட்சியின் பேச்சு அதன் நலன்களுக்கு ஏற்ப மாறியது. ஒருவேளை இந்த குற்றச்சாட்டுகள் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் விரோதப் பின்னணியில் அல்லது ஹமாஸுடனான பதற்றத்தின் போது ஏற்பட்டிருக்கலாம். அதேவேளையில், ஹோஸ்னி முபாரக்கும் அவரது உளவுத்துறை இயக்குநரான உமர் சுலைமானும் வெவ்வேறு காலகட்டங்களில் ஹமாஸுடன் மிகவும் நேர்மறையான உறவைக் கொண்டிருந்தனர். காஸா பகுதிக்குள் ஆயுதங்கள் நுழைவதை எளிதாக்கும் அளவிற்கு அது இருந்தது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1967-ல் டேவிட் பென்-குரியன் (இஸ்ரேலின் நிறுவனர்களில் ஒருவர்) மற்றும் ஐசக் ராபின் (இஸ்ரேலிய ராணுவத்தின் தலைவர்) ஆகியோர் ஜெருசலேமின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள டோம் ஆஃப் தி ராக் முன் ஒரு ராணுவக் குழுவை வழிநடத்திய போது எடுத்த படம். ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான "தடை செய்யப்பட்ட உறவு" பற்றிய குற்றச்சாட்டுகள் 1967 போருக்குப் பிறகு, முஸ்லீம் சகோதரத்துவம் பாலத்தீன பிரதேசங்களில் "மசூதி கட்டம்" என்று அழைக்கப்படுவதைத் தொடங்கிய கட்டங்களில் கட்டமைக்கப்பட்டது என்று கூறலாம். சில மதிப்பீடுகளின்படி, 1975 வரை நீடித்த இந்த நிலை, "மசூதிகளைக் கட்டுவது", "புதிய தலைமுறை இளைஞர்களை அணி திரட்டுவது மற்றும் சியோனிச இயக்கத்தை எதிர்கொள்ள அவர்களின் கோட்பாட்டை ஒருமுகப்படுத்தி ஆழப்படுத்துவது" என்று கல்வியாளர் காலித் ஹ்ரூப் கூறுகிறார். 1967 போரின் விளைவாக இஸ்லாமியர்கள் கணிசமான முதலீடுகளைச் செய்ததாக ஹ்ரூப் மதிப்பிடுகிறார். தோல்வியடைந்த போருடன் மிகவும் தொடர்புடையதாக இருந்த நாசரிச தேசியவாத பேச்சுக்கு எதிராக மாற்று இஸ்லாமிய கருத்துக்கள் வெளிப்பட்டன. தொடர்ந்து பேசிய அவர், "நிறுவனக் கட்டமைப்பின் அடுத்த கட்டம் 1970 களின் நடுப்பகுதியில் இருந்து 1980 களின் பிற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய மாணவர் குழுக்கள், கிளப்புகள், தொண்டு அமைப்புக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அப்போது நிறுவப்பட்டன. அவை புதிய இஸ்லாமிய இளைஞர் குழுக்களின் சந்திப்பு மையங்களாக மாறின," என தெளிவுபடுத்தினார். நியூயார்க் டைம்ஸ் 1981 இல் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் அவர் காஸாவில் அப்போதைய இஸ்ரேலிய ராணுவ ஆளுநரான யிட்சாக் செகேவுடன் பேசியதாகத் தெரிவித்தார். "இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சில இஸ்ரேலிய உதவிகளைப் பெறுகின்றனர்," என்று டைம்ஸிடம் செகேவ் கூறினார். "இஸ்ரேலிய அரசாங்கம் எனக்கு ஒரு தொகையைக் கொடுத்தது. ராணுவ அரசாங்கம் மசூதிகளுக்கான ஆதரவை வழங்குகிறது." அந்தக் கட்டுரையில், இதற்கான ஒரு நியாயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம் பாலத்தீன விடுதலை அமைப்புடன் போட்டியிடுவதை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இஸ்ரேலிய பாதுகாப்புச் சேவையின் தலைவராகப் பணியாற்றிய யாகோவ் பெரி, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், "நான் 1988 முதல் 1995 வரை ஏஜென்சியின் தலைவராக இருந்தேன். ஹமாஸ் இயக்கத்தின் எழுச்சியை நான் அப்போது கண்டேன். அது ஒரு சமூக இயக்கத்தை ஒத்திருந்தது. மேலும் அது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையை செய்தது,” எனத் தெரிவித்தார். "பாலத்தீன விடுதலை அமைப்புக்கு மாற்றாக ஷின் பெட் எனப்படும் பாதுகாப்புச் சேவை, ஹமாஸ் அரசியல் எந்திரத்தை ஆதரிப்பதாக இஸ்ரேலில் உள்ள பலர் கருதினர். ஆனால் அது உண்மையல்ல." என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல தலைமுறைகளை தயார் செய்து சமூகத்தை சீர்திருத்த முயற்சிப்பதற்கு முன் "ஆயுதப் போராட்டம்" என்ற அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஸ்லிம் சகோதரத்துவம் நம்பியது. ஹமாஸ் இயக்கத்தின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் அறிக்கைகளை ஒருவர் அலசினால், அவர் இஸ்ரேலிய நிதி விவகாரத்தை ஒரு பிரச்னையாகப் பார்த்ததாகத் தெரியவில்லை. இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக சம்பளம் வழங்கியதை யாசின் உறுதிப்படுத்தினார். மேலும், "வேலை செய்ய ஒப்புக்கொண்ட ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வூதியம் மற்றும் சம்பளம் வழங்கத் தொடங்கினர்," என்றார். காஸா ஆக்கிரமிப்பிற்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்யும் நோக்கில் இஸ்ரேல் சம்பளம் வழங்கி வருவதாக யாசின் மேலும் தெரிவித்தார். ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ட்ரூமன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் ரோனி ஷேக்ட், பிபிசிக்கு அளித்த பேட்டியின் போது, மத சமூக இயக்கங்களுடன் இஸ்ரேலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சகோதரத்துவம் அந்த நேரத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் கூறினார். 1970 களில் பாதுகாப்புச் சேவை அதிகாரியாக இருந்த ஷேக்ட், இஸ்ரேல் ஒருபோதும் இஸ்லாமியர்களுக்கு நிதியளிக்கவில்லை என்றும், அதன் பங்களிப்புகள் உரிமம் வழங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்டவை என்றும் கூறினார். முன்னாள் உளவுத்துறை அதிகாரியின் பேச்சு அகமது அஸ்மின் பேச்சுடன் ஒத்துப்போகிறது. இஸ்லாமிய இயக்கம் இஸ்ரேலை எதிர்கொள்ள விரும்பவில்லை - "ஆயுதப் போராட்டம்" என்ற அணுகுமுறையை ஏற்காத இயக்கங்களின் இருப்பை ஊக்குவித்தது - ஒரு "விருப்பமற்ற" சூழ்நிலையை ஏற்படுத்தியது என்று இருவரும் நம்புகிறார்கள். இஸ்ரேல் தனது கவனத்தை இஸ்லாமியர்களிடமிருந்து திருப்பியது. ஆனால் இது சகோதரத்துவத்தை ஆதரித்தது என்று அவர்கள் நம்பவில்லை. இஸ்லாமிய சமூகத்துடனான இஸ்ரேலிய அரசாங்கத்தின் உறவின் தன்மை மற்றும் "இஸ்ரேலின் நிதியுதவி அல்லது இஸ்லாமிய மசூதிகளை நிர்மாணிப்பதற்கான அனுமதி" பற்றிய கேள்விகளின் பின்னணியில், 1992 இல் பிரிட்டிஷ் எழுத்தாளர் மைக்கேல் டெம்பர் ஒரு புத்தகத்தை புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், 1967ல் இஸ்ரேலிய ராணுவ கவர்னர் எடுத்த முதல் நடவடிக்கைகளில் ஒன்று, காஸா பகுதியில் மத விவகாரங்களுக்கு இஸ்ரேலிய அதிகாரியை பொறுப்பாளராக நியமிப்பது என்றும், ராணுவ அரசை இஸ்லாமிய இயக்கம் மற்றும் பிரிவுகளுடன் இணைப்பதே அவரது வேலை என்றும் கூறுகிறார். 70களின் பிற்பகுதியிலும் 80களின் நடுப்பகுதியிலும் பாலத்தீன விடுதலை அமைப்பின் முன் சமநிலையைக் கண்டறிவதற்கான வழிமுறையாக இஸ்ரேல் இந்த மசூதிகளைக் கட்ட அனுமதித்ததாக பிரிட்டிஷ் எழுத்தாளர் தெரிவித்தாலும், மசூதிகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு இடையே நிதி சுதந்திர ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைப் பற்றி அவர் பேசவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1970 களில் இஸ்ரேல் வளர்ந்து வரும் இஸ்லாமிய இயக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றது. காஸாவிற்குள் இஸ்லாமிய இயக்கத்தின் வளர்ச்சியை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பயன்படுத்திய அணுகுமுறையில் இஸ்ரேல் உடன்படவில்லை. இஸ்ரேலில் "ஹமாஸை ஆதரிப்பதற்கும் உருவாக்குவதற்கும் வருத்தம்" தெரிவிக்கும் முன்னாள் அதிகாரிகள் இருக்கும்போது, காஸாவில் அந்த நேரத்தில் ராணுவ உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஷாலோம் ஹராரியின் சாட்சியங்களும் உள்ளன. “இஸ்ரேல் ஒருபோதும் ஹமாஸுக்கு நிதியளிக்கவில்லை. இஸ்ரேல் ஒருபோதும் ஹமாஸுக்கு ஆயுதம் வழங்கவில்லை. "இஸ்லாமியர்களைப் பற்றிய எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன, ஆனால் அதற்குக் காரணம் அலட்சியமே தவிர, அவர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அல்ல" என்று அவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார் . இந்த சூழலில், அஹ்மத் யாசின் கூறுகையில், “இஸ்ரேல் இஸ்லாமிய நிறுவனங்களை கண்காணித்து வருகிறது. அது மற்ற நிறுவனங்களை கண்காணிக்கிறது என்பதுடன் சமநிலையை கண்டறிய முயற்சிக்கிறது," என்றார். ஹமாஸ் இயக்கத்தின் எழுச்சிக்கு இஸ்ரேல் பங்களிப்பதாக குற்றம் சாட்டுபவர்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முக்கிய காரணங்களில் இஸ்லாமிய சங்கம் மற்றும் இஸ்லாமிய அகாடமி நிறுவப்பட்டதும் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டின் அந்த நிலை இஸ்ரேலிய சட்டத்தின் குடையின் கீழ் நடந்ததாக சகோதரத்துவ நூல்கள் கூறுகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவர் அஹ்மத் யாசின் அந்தக் காலத்தைக் குறிப்பிட்டார்: “நாங்கள் ஆக்கிரமிப்புடன் மோதலில் ஈடுபட முடியாது. அப்போது தான் இஸ்லாமிய நிறுவனங்கள் பற்றிய யோசனை எழுந்தது. 1976 இல் இஸ்லாமிய சங்கம் ஒரு மசூதியில் ஒரு மண்டபமாக இருந்தது என்பதுடன் முக்கியமாக விளையாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.” 1990 ஆம் ஆண்டு அவர்களின் புத்தகமான “இன்டிஃபதா” வில் இஸ்ரேலிய எழுத்தாளர்களான எஹுட் யாரி மற்றும் ஜீவ் ஷிஃப் ஆகியோர், “இஸ்ரேலிய சிவில் நிர்வாகம் இஸ்லாமிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. அது பின்னர் முதல் இன்டிஃபதாவின் தொடக்கத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இஸ்ரேல் அவர்களை உள்ளூர் சமூகங்களில் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் நிலைகளை ஏற்க அனுமதித்தது. மேலும் அனைத்து வகையான நிறுவனங்களையும் நிறுவ அனுமதித்தது," என்று குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1992-ல்முஸ்லீம் சகோதரத்துவம் நீண்ட சவால்களை எதிர்கொண்ட பின்னர் ஹமாஸை உருவாக்கும் முடிவு எடுக்கப்பட்டது, இரண்டு இஸ்ரேலிய எழுத்தாளர்களும், " பாலத்தீன விடுதலை அமைப்பின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் அதேவேளையில், இஸ்லாமியர்கள் மீது கட்டுப்பாட்டை செலுத்தி அவர்களின் எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று இஸ்ரேல் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டது. இஸ்ரேல் பாடம் கற்றுக் கொண்டது. ஆனால் அது மிகவும் தாமதமாக," எனக்குறிப்பிட்டுள்ளனர். ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் கோஷே கூறுகிறார்: “பிஎல்ஓவின் மத சார்பற்ற போக்கையும் சகோதரத்துவத்தின் மதப் போக்கையும் சமப்படுத்த இஸ்லாமிய அகாடமிக்கு உரிமம் வழங்குவது இஸ்ரேல் நம்புவதைப் போல் சகோதரத்துவத்தின் அல்லது ஷேக் யாசினின் தவறு அல்ல. சியோனிஸ்டுகள் தங்கள் மதிப்பீடுகளில் தவறு செய்தால், முடிவு அவர்களின் தலையில் தான் விழும். சில அறிஞர்கள் இஸ்ரேலிய அதிகாரிகள் இஸ்லாமிய இயக்கத்தை நிறுவனங்களை நிறுவ அனுமதித்தது மட்டுமல்லாமல், மற்ற தேசிய பிரிவுகளுக்கு அனைத்து வகையான நிறுவனங்களையும் நிறுவ அனுமதித்தனர் என்று குறிப்பிடுகின்றனர். கிளப்புகள், சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பத்திரிகை அலுவலகங்கள் போன்றவை அதில் அடங்கும். 1988 இல் வெளியிடப்பட்ட "சாரிட்டபிள் சொசைட்டீஸ் இன் த வெஸ்ட் பேங்க் அண்ட் காஸா ஸ்ட்ரிப் " (Charitable Societies in the West Bank and Gaza Strip) என்ற புத்தகத்தின் ஆசிரியர் அப்துல்லா அல் ஹூரானி, 1987 இன் முதல் இன்டிஃபதாவிற்கு முன்னர் காஸாவில் உள்ள சங்கங்களின் எண்ணிக்கை 62 ஐ எட்டியது என்றும், அவற்றில் 4 மட்டுமே சகோதரத்துவத்துடன் தொடர்புடையவை என்றும் கூறுகிறார். அதில் இஸ்லாமிய அகாடமி மற்றும் இஸ்லாமிய சங்கம் ஆகியவை மிக முக்கியமானவை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். சர்வதேச உறவுகள் பேராசிரியர் அஹ்மத் ஜமில் ஆஸ்ம் கூறுகையில், இஸ்ரேல் ஒரு மூலோபாய மற்றும் தந்திரோபாய தவறை செய்துவிட்டது என்றார். "அதற்கு ஒரு தெளிவான மூலோபாயம் இல்லை, இஸ்ரேல் எப்போதும் ஒரு பெரிய சக்தியாக அதன் மேன்மையை மட்டுமே நம்பியுள்ளது." "உதாரணமாக, 1967 இல் காஸாவை ஆக்கிரமித்த பிறகு, அது நிதி உதவி அளிப்பதாகத் தெரிவித்து சமூகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தது. குறிப்பிடத்தக்க குடும்பங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் தலைமையை உயர்த்தியது மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்த அனுமதித்தது. ஆனால் முடிவெடுப்பது பாதுகாப்பு அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதே நேரம் ஆக்கிரமிப்பின் உண்மையான பரிமாணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய யதார்த்தமான புரிதலின் அடிப்படையில் அல்ல. இந்த முறைகளை ஆக்கிரமிப்பு எதிர்ப்பிற்கு மாற்றாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது." ஹீப்ரு பல்கலைக் கழகத்தின் ட்ரூமன் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர் ரோனி ஷேக்ட் பிபிசியிடம் கூறுகையில், எதிர்காலத்தில் இஸ்லாமிய இயக்கம் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கைகள் கிடைத்திருந்தாலும், இஸ்ரேல் அதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றும், மேலும் இது குறித்து பேசும் போது குழப்பம் தான் இறுதியில் இருந்தது என்றும் தெரிவித்தார். காஸாவில் அப்போதைய இஸ்ரேலிய ராணுவ ஆட்சியாளர் யிட்சாக் செகேவ், "புரட்சிக்கு முன்னர் தெஹ்ரானில் இருந்த நிலைமையுடன் அவர்களுக்கு இருந்த ஒற்றுமையின் காரணமாக" பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியதாக ஷேக்ட் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸா சமூகம் ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்கும் ஒரு கட்டமைப்பு மாற்றம் மற்றும் சமூக இயக்கங்களைக் கண்டு வளர்ந்து வந்தது. மேலும் பேசிய ஷேக், "ஷேக் அகமது யாசின் இஸ்ரேலை ஏமாற்றி, கம்யூனிஸ்டுகளுடன் சண்டையிடச் செய்தார். அதே நேரத்தில் மழலையர் பள்ளிகளை உருவாக்கவும் இளம் தலைமுறைகளை வளர்க்கவும் உழைத்து, இஸ்ரேலை எதிர்க்க அவர்களைத் தயார்படுத்தினார்," எனத் தெரிவித்தார். ஹமாஸை ஒழிப்பதன் மூலமும் பாலத்தீனர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார நலன்களை வழங்குவதன் மூலமும் ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என்று யூத அரசு இன்னும் நினைக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர் நம்புகிறார். "அது உண்மையல்ல. ஹமாஸ் ஒழிக்கப்பட்டால், அதற்குப் பிறகு புதிய தேசிய எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகும்," என்கிறார் ஷேக்ட். 1983ல் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் சகோதரத்துவத்தின் வழிமுறையில் தீவிர மாற்றம் ஏற்பட்டது. அந்த குழு ஜோர்டானில் ஒரு மாநாட்டை நடத்திய போது, அதில் " மேற்குக் கரையிலும் காஸாவிலும் உள்ள அதன் பணியாளர்களை ராணுவ நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும் அவற்றைத் தொடங்கவும் கூடிய விரைவில் அனுமதிப்பது என்று முடிவு செய்தது. அவர்களுக்கு பொருத்தமான நிபந்தனைகள் இருந்ததால் இது சாத்தியம்,” என்று முதல் ஹமாஸ் செய்தித் தொடர்பாளரின் நினைவுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டிற்கு ஒரு வருடம் கழித்து, இஸ்ரேல் காஸா பகுதியில் உள்ள முதல் ராணுவ தளத்திற்கு ஒரு மரண அடியை அளித்தது என்பதுடன் அதன் உறுப்பினர்கள் அனைவரையும் பிடித்து வைத்தது. 13 ஆண்டுகளாக தங்களை வழிநடத்திய அகமது யாசினுக்கு போராளிகள் பதில் அளித்தனர். இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யும் வகையில் யாசினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 80 ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். ஆனால் யாசின் சில மாதங்கள் மட்டுமே காவலில் இருந்தார். இஸ்ரேலுக்கும் பாலத்தீன-ஜெனரல் கட்டளை அமைப்பின் விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையே ஒரு பெரிய கைதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் அவர் பயனடைந்தார். 1985 இல் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்த ஆரம்ப அடி வேதனையாக இருந்தபோதிலும் - குறிப்பாக இயக்கத்தின் "ராணுவ" பிரிவு ஆரம்பமானது. அனுபவமற்றது மற்றும் மிகவும் எளிமையான திறன்களை மட்டுமே அது கொண்டிருந்தது. அந்தக் குழுவின் சித்தாந்த அடித்தளங்கள் உறுதியாக இருந்தன என்பதுடன் அது தன்னை மறுசீரமைக்கவும் அனுமதித்தது. சோதனை மற்றும் பிழை மூலம், இஸ்லாமியர்கள் இறுதியாக தங்கள் ராணுவப் பிரிவை ஒழுங்கமைக்க முடிந்தது. ஆனால் அந்த நேரத்தில் கூட, இஸ்லாமிய அமைப்புகளின் மூலோபாய மாற்றத்திற்கு இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தோன்றியது. அல்லது பாலத்தீன எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் - இஸ்லாமியர்களை அபிவிருத்தி செய்ய அனுமதித்த அவர்கள் அடைந்த எல்லையை அது அறிந்திருக்கவில்லை. இவையும், "ஆயுதப் போராட்டத்தை" நோக்கிய சகோதரத்துவத்தின் கவனமும், முதல் இன்டிஃபாடா தொடங்கிய மறுநாளான டிசம்பர் 14, 1987 அன்று ஹமாஸ் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்புடன் பகிரங்கமாக வெளிப்பட்டது. ஹமாஸ் இயக்கத்தின் வரலாறு தெளிவின்மை மற்றும் ஆவணங்களின் பற்றாக்குறையால் வகைப்படுத்தப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. பாலத்தீன பிரதேசங்களில் முஸ்லிம் சகோதரத்துவம் உருவானதில் இருந்து அதைச் சூழ்ந்துள்ள பாதுகாப்பு நிலைமைகள் (அரசியல் மற்றும் சமூக சூழல்கள் தவிர) இந்த பதிவுகள் இல்லாததற்கு இயக்கத்தின் பல உறுப்பினர்கள் தான் காரணம் என்று கூறுகின்றனர். எவ்வாறாயினும், இஸ்ரேல் ஹமாஸை "உருவாக்கியதா" என்ற கேள்விக்கு கேள்வியின் தவறான தன்மையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பதிலளிக்க முடியும். இஸ்ரேல் ஹமாஸை "உருவாக்கவில்லை". மாறாக ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு பாலத்தீன எதிர்ப்பின் மத்தியில் உருவாக்கப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவத்தின் நீண்ட சமூகப் பணியின் சிக்கலான வலைப்பின்னல், உறுதிப்படுத்தியபடி ஹமாஸின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. என ஷேக்ட் மற்றும் அஸ்ம் கூறுகின்றனர். எனவே, இஸ்ரேல் அதன் தொடக்கத்தின் போது குறைந்தபட்சம் இயக்கத்தை புறக்கணித்திருக்கும் அல்லது பாலத்தீனப் போராட்டத்தில் ஏற்கனவே வளர்ந்து வரும் சக்தியாக மாறியபோது அதன் இருப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் மீது விவாதத்திற்கு இடமிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய இயக்கத்தின் வரலாற்றுச் சூழல் மற்றும் அது தோன்றிய சூழ்நிலைகள் ஹமாஸை "இஸ்ரேல் தான் உருவாக்கியது" என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதை நிரூபிக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cz5xdxpv8xlo
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
Published By: DIGITAL DESK 3 18 JAN, 2024 | 09:47 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சட்டமியற்றும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது. அடுத்த வாரம் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக 224 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு நாட்டு மக்கள் தேர்தல் ஊடாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தினர். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சிவில் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர். சுதந்திர ஊடக மையத்தின் செயலாளர் லசந்த சில்வா குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் சொல்லொன்னா துயரங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்குவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். ஆகவே, மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு மதிப்பளித்து மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும். ஊடக மற்றும் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முன்னிலைப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும். மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படும் தரப்பினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார். தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் சட்ட வகிபாகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும்,பாராளுமன்றத்துக்கு மக்களாணை என்பதொன்று கிடையாது. பல பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பொருளாதார காரணிகளுடன் தொடர்புப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதும் பயங்கரவாத செயற்பாடு என்று சித்தரிக்கும் வகையில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்டங்களுக்கு கையுயர்த்துவதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நதீஷானி பெரேரா குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முடக்கும் வகையில் சட்டமியற்றும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கும், மக்கள் பிரநிதிகளுக்கும் கிடையாது. ஊழல் முறைகேடுகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்றும்,பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதையும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாறாக மக்களின் உரிமைகளை முடக்கும் வகையில் சட்டமியற்றப்படுகிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோத செயற்பாடாகும் என்றார். மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிடுகையில், பாரதூரமான இரண்டு சட்டமூலங்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அந்த சட்டத்தை உருவாக்க அரசாங்கம் உத்வேகத்துடன் செயற்படுகிறது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும்,ஆகவே மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.நிக்ஷன் குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்க்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தை முழுமையாக முடக்கும்.சமூக வலைத்தளங்களை இலக்காகக் கொண்டு இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.அரசாங்கத்துக்கு சார்பாக ஒருசில ஊடகங்கள் செயற்படுகின்றன நிலையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றன. இந்த சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.இவர்களின் சுயாதீனத்தன்மை ஜனாதிபதிக்கு பொறுப்புடையதாக உள்ள நிலையில் 22 மில்லியன் மக்களின் கருத்து சுதந்திரத்தை ஐந்து பேர் எவ்வாறு தீர்மானிக்க முடியும். அத்துடன் இந்த சட்டமூலம் தொடர்பில் மக்களின் அபிலாசைகள் மற்றும் நிலைப்பாடு ஏதும் கேட்கப்படவில்லை.நாட்டு மக்களிடமிருந்து அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/174206
-
பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணை தாக்குதல்: எதற்காக? என்ன நடக்கிறது?
இரான் எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்: பாகிஸ்தான் கூறும் காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஜனவரி 2024, 06:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் இரான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இரண்டு நாட்கள் கழித்து, இன்று காலை, பாகிஸ்தான் இரான் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சிக்கலாகி வருகிறது. இரானில் ஆயுதக்குழுவினர் பதுங்கியிருக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தான் இரானில் நடத்திய தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாக இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எல்லைப் பகுதியில், பயங்கரவாதிகள் தஞ்சமடைய இடம் கொடுத்திருப்பதாக இரு நாடுகளுமே ஒருவரையொருவர் பல காலமாக குற்றம் சாட்டிவருகின்றனர். பாகிஸ்தானுடனான எல்லையில் சரவன் நகரில் பல குண்டு வெடிப்புகளின் சத்தம் கேட்டதாக புதன்கிழமை மாலை இரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. “இன்று காலை, பாகிஸ்தான் இரானின் சிஸ்தான்-பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்கள் மீது திட்டமிடப்பட்ட மற்றும் குறிப்பிட்ட துல்லியமான ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டது. 'மர்க் பார் சர்மாச்சார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் புலனாய்வு தகவல்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,EPA இரான் நடத்திய தாக்குதல்களை மிகக் கடுமையாக பாகிஸ்தான் விமர்சித்திருந்தது. அதன் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள ஆயுதக்குழுகளை இலக்காகக் கொண்டே தனது தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் கூறியது. ஆனால் அதை மறுத்த பாகிஸ்தான், இரண்டு குழந்தைகள் உட்பட தனது குடிமக்கள் இந்தத் தாக்குதலில் பலியானதாகக் கூறியது. இரானில் தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் இரானிடம் பல முறை தனது கவலைகளை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக, இரானுடனான உரையாடல்களில், தீவிரவாதிகள் குறித்த தனது கவலைகளை பாகிஸ்தான் வெளிப்படுத்தி வந்தது. தங்களை சர்மாச்சார்கள் என்று அழைக்கும் பாகிஸ்தான் வம்சாவழி தீவிரவாதிகளுக்கு இரானுக்குள் கண்காணிக்கப்படாத இடங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களாக மாறியுள்ளன என்பதை பாஸ்கிஸ்தான் இரானுக்கு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீவிரவாதிகளின் இருப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் கொண்ட பல ஆவணங்களையும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கூறிய தகவல்கள் அடிப்படையில், இரான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் பாகிஸ்தான் அதன் காரணமாகவே, இந்த சர்மாச்சார்கள் என்று அழைக்கப்படுபவர்கள், எந்த தண்டனையும் இல்லாமல் அப்பாவிகளான பாகிஸ்தான் மக்களை தாக்கிக் கொண்டே இருந்தனர் என்றும் கூறுகிறது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலுm, “இன்று காலை எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்த சர்மாச்சார்கள் என்று அழைக்கப்படுபவர்களால் நடத்தப்படவிருந்த பெரிய அளவிலான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நம்பகமான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிராகத் தனது தேசிய பாதுகாப்பைப் உறுதி செய்வதற்கான பாகிஸ்தானின் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துவதாகும். இந்த மிகவும் சிக்கலான நடவடிக்கையின் வெற்றி, பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் திறனுக்கு ஒரு சான்று. தனது மக்களின் பாதுகாப்பையும், அவர்களின் உயிரையும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காத பாகிஸ்தான் அதைப் புனிதமான மற்றும் மதிப்பிற்குரிய ஒன்றாகக் கருதுகிறது. பாகிஸ்தான் இரான் இஸ்லாமிய குடியரசின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை முழுமையாக மதிக்கிறது. இன்றைய நடவடிக்கையின் ஒரே நோக்கம், பாகிஸ்தானின் சொந்த பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதே ஆகும். அது மிக முக்கியமானது மற்றும் சமரசம் செய்ய முடியாதது ஆகும்," என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS அதோடு, பொறுப்புமிக்க சர்வதேச சமூக உறுப்பினராக, பாகிஸ்தான் ஐநா சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை உயர்த்திப் பிடிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "உறுப்பு நாடுகளின் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாகிஸ்தான் மதிக்கிறது. அதேநேரம் பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் செயல்களை அனுமதிக்காது. ஐக்கிய நாடுகளின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு எங்கள் நியாயமான உரிமைகளைப் பயன்படுத்தி இதைச் செய்வோம். இரான் ஒரு சகோதர நாடு. பாகிஸ்தான் மக்கள் இரான் மக்கள் மீது மிகுந்த மதிப்பும், பாசமும் கொண்டுள்ளனர். தீவிரவாதம் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை நாங்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் கூட்டு தீர்வுகளைத் தேட தொடர்ந்து முயல்வோம்,” என்று கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c3gygwzz3v4o
-
டாடோ என்கின்ற டாலிபோ
அப்ப டாடோ உயிர் தப்பிவிட்டாரா? இல்லை காயங்களால் மரணித்துவிட்டாரா?
-
தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
சிறாவயல் மஞ்சுவிரட்டு: விதிகளை மீறுவதே விபத்துகளுக்கு காரணம் என ஆட்சியர் குற்றச்சாட்டு படக்குறிப்பு, சிராவயல் மஞ்சுவிரட்டில் 12 வயது சிறுவன் மற்றும் 32 வயது இளைஞர் மாடு முட்டி இறந்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பிரபலமான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் மாடுபிடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாடுகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அதேநேரம் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மாடுபிடி நிகழ்வுகளில் வீரர்கள், மாடுகள், பார்வையாளர்கள் எனப் பலர் காயமடைந்த சம்பவங்களும் நேர்ந்துள்ளன. அதில் சிறாவயல் மஞ்சுவிரட்டில் 12 வயது சிறுவன் மற்றும் 32 வயது இளைஞர் ஒருவரும் மாடு முட்டி இறந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே போல் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டில் 52 வயதான பூமிநாதன் எனபவர் மாடு மோதியதில் உயிரிழந்தார். சிறாவயல் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நடப்பதற்குக் காரணம் என்ன? சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டுக்கும், இதர பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் வேறுபாடு என்ன? எதனால் சிராவயலில் இருவர் இறக்க நேர்ந்தது? மஞ்சுவிரட்டு என்றால் என்ன? படக்குறிப்பு, மந்தை விரட்டு என்பதே மஞ்சுவிரட்டு பொதுவாகவே நம்மில் பலரும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் ஒன்றுதான் என்றே இத்தனை நாளாய் நம்பி வந்திருப்போம். ஆனால், என்னதான் இவற்றின் அர்த்தம் ஒன்று என்றாலும் அது நடைபெறும் விதமும், இடமும் ஒன்றல்ல. அதை வரலாற்றுப் பார்வையில் அணுகினால் மட்டுமே அதன் பரிணாம வளர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதற்காக மஞ்சுவிரட்டு என்றால் என்ன என்ற கேள்வியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவரும், இலக்கிய செயற்பாட்டாளருமான அ. ராமசாமியிடம் கேட்டபோது ‘மந்தை விரட்டு என்பதே மஞ்சுவிரட்டு என்று மருவி விட்டதாகவும், மந்தையில் மாடுகளை விரட்டுவதே மஞ்சு விரட்டு’ என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, மாடு பிடிக்கும் நிகழ்வின் மூன்றாவது கட்டம்தான் ஜல்லிக்கட்டு. "இதன் முதல் கட்டம் என்பது ஏறு தழுவுதல். சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல்களில் காணப்படும் வார்த்தை இதுதான். அதற்குப் பிறகு வந்தது மஞ்சுவிரட்டு, அதற்குப் பின்பு மூன்றாவது கட்டமாக வந்ததுதான் இந்த ஜல்லிக்கட்டு.” தனது சிறு வயதுகளில் பெரும்பாலான கிராமங்களில் ஏறு தழுவுதல் நடந்து வந்ததாகவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டதாகவும் கூறுகிறார் இவர். அதற்குக் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் வேளாண் முறையில் ஏற்பட்ட மாற்றம், மாடுகளின் தேவை குறைப்பு, இயந்திர உபயோகம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் முந்தைய காலத்தில் ஏறு தழுவதல் என்று அழைக்கப்பட்ட மாடுபிடிக்கும் கொண்டாட்டமே தற்போது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் சில இடங்களில் மட்டும் இன்னமும் மஞ்சுவிரட்டு முறை இருக்கிறது. அதில் முக்கியமான இடங்களாக சிறாவயல், பொன்னமராவதி ஆகிய இடங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு பிரபலமாக உள்ளது. மஞ்சுவிரட்டுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன வித்தியாசம்? படக்குறிப்பு, மஞ்சுவிரட்டில் மாடுகளை பெரிய மைதானத்தில் விரட்டி விடுவார்கள் ஜல்லிக்கட்டை போல மஞ்சுவிரட்டில் வாடிக்கட்டி அதன் வழியே மாடுகளை ஒவ்வொன்றாக அனுப்பும் வழக்கம் கிடையாது. ஆனால், தற்போது நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, மஞ்சுவிரட்டிலும் ஜல்லிக்கட்டை போல வாடி கட்டுதல், விதிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன. “மஞ்சுவிரட்டில் மாடுகளை பெரிய மைதானத்தில் விரட்டி விடுவார்கள். அதற்குள் மாடுகளும் இருக்கும், மனிதர்களும் இருப்பார்கள். அவர்கள் மாடுகளை விரட்டிக் கொண்டே சென்று அதை அணைய முயல்வார்கள். அப்படியான ஒழுங்கமைக்கப்படாத ஒரு முறைதான் அது,” என்கிறார் அ.ராமசாமி. ஆனால், ஜல்லிக்கட்டு போலன்றி, மஞ்சுவிரட்டில் தொழுவம் போல வாடி அமைக்கப்பட்டிருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத்தலைவர் பி . ராஜசேகரன். “மஞ்சுவிரட்டு தொழுவில் அறை அறையாக இருக்கும். அதில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். நிகழ்ச்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு தொழுவாக அவிழ்க்கப்படும். வாடிவாசலின் அருகில் இருந்து இந்த மாடுகளைப் பிடிக்காமல் கொஞ்ச தூரம் ஓடவிட்டு விரட்டிப் பிடிப்பார்கள். பிடிக்கும் நபருக்கு பரிசுகள் எதுவும் கொடுக்கப்படாது. மாடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கை மணி அல்லது துணியை வீரர்கள் அவிழ்த்துக் கொள்வார்கள். அதுதான் வெற்றிச் சின்னம். பின்னர் அந்த மாட்டுக்காரரே வந்து ஏதாவது பணம் கொடுத்து அந்த மணியை வாங்கிக் கொள்வார்,” என்று மஞ்சுவிரட்டின் அமைவு குறித்து விளக்குகிறார் ராஜசேகரன். ஏறுதழுவலில் இருந்து ஜல்லிக்கட்டு வரை எப்போதுமே ஒரு சிறிய விஷயத்தில் இருந்து ஒரு பழக்கம் தொடங்கும்போது பெரிய ஒழுங்கமைக்கப்படாத (Unorganized) நிலைக்குச் சென்று, பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) நிலையை அடையும் என்கிறார் அ. ராமசாமி. “முதலில் ஒவ்வொரு வீட்டிலும் ஏறுகளை(மாடு) வளர்த்து அதைக் கொண்டாடும் விதமாக கிராமங்களில் ஏறு தழுவுதல் எழுந்தது. இது ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி கொண்டாட்டமாக நடைப்பெறும். பின்னர் பெரிய கொண்டாட்டமாக ஒரு ஊர் மட்டுமில்லாமல், பல ஊர்கள் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக மஞ்சுவிரட்டு உருவானது. இதில் ஊர்களின் சார்பாக மாடுகள் கலந்துகொள்ளும். குறிப்பிட்ட மாட்டை தனிநபர் வளர்த்திருந்தால்கூட அந்த ஊரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்தான் மாடு களத்திற்குள் அறிவிப்போடு இறக்கப்படும். இதில் பரிசுகள் எதுவும் வழங்கப்படாது,” என்கிறார் அவர். ஜல்லிக்கட்டு உருவான காலம் படக்குறிப்பு, ‘ஜ’ என்ற சமஸ்கிருத வார்த்தையுடன் கூடிய ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை பெரியளவில் உருவானது 16-17ஆம் நூற்றாண்டில்தான். அடுத்தடுத்து வந்த சமூக வளர்ச்சியில் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் இருந்த நிலக்கிழார்கள் மற்றும் பெரும் நிலவுடைமைதாரர்களான ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள் மாடுகளை வளர்த்து தங்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளை அடக்கும் போட்டிகளை நடத்தியதாகக் குறிப்பிடுகிறார் அ. ராமசாமி. அப்போதுதான் பரிசுகள் வழங்கும் வழக்கமும் உருவானதாகக் கூறுகிறோர் அவர். இந்த சமயத்தில்தான் ‘ஜ’ என்ற சமஸ்கிருத வார்த்தையுடன் கூடிய ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை பெரியளவில் உருவானது என்றும் அவர் தெரிவிக்கிறார். “சோழர் மற்றும் பாண்டிய மன்னர் காலகட்டங்களிலேயே அரசர்களின் நிலங்களை நிர்வகித்து வந்த மண்டலாதிபதிகளின் தலைமையில் ஏறு தழுவுதல் நடைபெற்றது. ஆனால், அது வேளாண்மைக்குப் பயன்படுத்தும் மாடுகளைக் கொண்டாடவும், பொழுதுபோக்காகவும் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் தற்போது, மதுரை மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான ஜல்லிக்கட்டு உருவாக்கத்திற்குப் பின்னால் அந்தப் பகுதியில் இருந்த ஜமீன்களின் பாத்திரம் முக்கியமானதாக இருந்துள்ளது. அவர்கள்தான் பரிசுகள் கொடுத்துள்ளனர். இவர்களுடைய மாடுதான் பெரும்பாலும் முதலில் வாடியில் விடப்படும். அதை யாரும் தொட மாட்டார்கள். அப்படியான பாரம்பரியம் இருந்துள்ளது. அதன் பின்னர் பெரிய நிலக்கிழார்கள், பணக்காரர்கள் இந்த மாடுகளை வளர்த்துள்ளனர்,” என்கிறார் அவர். இப்படித்தான் ஏறுதழுவலில் தொடங்கி மஞ்சுவிரட்டாகி ஜல்லிக்கட்டாக பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் மஞ்சுவிரட்டின் விதிகள் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிராவயல் மஞ்சுவிரட்டு படக்குறிப்பு, 12 வயது ராகுல் என்ற அரசுப் பள்ளி மாணவனும், 32 வயது இளைஞர் முத்துமணி என்பவரும் மாடு மோதியதில் உயிரிழந்துள்ளனர். சிறாவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுபினர் எஸ்.மாங்குடி அவர்கள் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டைத் துவக்கி வைத்தார். இதில் 271 காளைகள் மற்றும் 81 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை சில வீரர்கள் மற்றும் மாடுகள் மட்டுமே காயம் பட்டிருந்தனர். ஆனால், சிறாவயல் மஞ்சுவிரட்டில் பார்வையாளர்களாக வந்திருந்த 6ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது ராகுல் என்ற அரசுப்பள்ளி மாணவனும், 32 வயது இளைஞர் முத்துமணி என்பவரும் மாடு மோதியதில் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து தலா 3 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் கேட்டபோது, “சிறாவயல் மஞ்சுவிரட்டைப் பொறுத்தவரை பெரிய அளவிலான பரப்பளவில் மைதானம் அமைத்து வாடிவாசல் வழியாகவே மாடுகள் வெளியே அனுப்பப்பட்டன. மற்றபடி மாடுகளுக்கான மருத்துவ தகுதிகள், பாதுகாப்பு அம்சங்கள், மாடுகளுக்கான பதிவு, வீரர்களுக்கான பதிவு என அனைத்துமே ஜல்லிக்கட்டு விதிகளை ஒத்தது போலத்தான் பின்பற்றப்பட்டன. எனவே, வாடிவாசல் மைதானத்திற்குள் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஒரு சில மாடுபிடி வீரர்கள் மட்டுமே சிறிய அளவு காயமடைந்தனர். ஆனால், இது பெரிய மைதானம் என்பதால் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வெளியில் சிலர் விதிகளை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இதனால், அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் சிலர் விபத்திற்கு ஆளாகியுள்ளனர்,” என்று கூறியுள்ளார். இந்த முறை மூன்று அடுக்கு செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு பதிவுகளோடு வரும் மாடுகள் மட்டுமே அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்புப் பணியில் 800 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேநேரம் 1 லட்சம் பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டைக் காண வந்திருந்தனர். இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தும்கூட சிலர் இதைத் தாண்டி விதிகளை மீறி தங்களது கட்டுமாடுகளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர். மாடுபிடி வீரர்கள் கூறுவது என்ன? படக்குறிப்பு, கடந்த பத்து வருடங்களாகத்தான் வாடி முறையை பின்பற்றுகிறார்கள். சிறாவயல் மஞ்சுவிரட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாடு விட்டு வருபவர் செந்தில்குமார். எதனால் வாடியில் மாடுகளை விடாமல் மக்கள் கூடியுள்ள திறந்த வெளியில் மாடுகளை விடுகிறீர்கள் என்று கேட்டபோது, “முன்பெல்லாம் இதுபோன்ற வாடி முறைகள் கிடையாது. திறந்த வெளியில்தான் மாடுகள் அவிழ்த்து விடப்படும். அதுதான் பாரம்பரியமான வழக்கம். ஆனால், கடந்த பத்து வருடங்களாகத்தான் வாடி முறையைப் பின்பற்றுகிறார்கள். அதிலும் கடந்த 3 ஆண்டுகளாகவே டோக்கன் முறையில் நடத்தப்படுகிறது,” என்றார். மேலும், மஞ்சுவிரட்டுக்காக ரூ. 30,000 முதல் ரூ. 60,000 வரை செலவு செய்து இரண்டு மாதங்கள் மாட்டைத் தயார் செய்வதாகவும், அரசு விதிகளை மதித்து ஆன்லைனில் பதிவு செய்தாலும்கூட பலருக்கும் டோக்கன் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார் அவர். அதே நேரம் பெரும்பாலும் முக்கியஸ்தர்களின் மாடுகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார். “இதுபோன்ற சூழலில்தான் நாங்கள் மாடுகளை வாடிக்கு வெளியில் திறந்த வெளியில் அவிழ்க்க வேண்டியிருக்கிறது. எனவே அனைவருக்கும் எளிய முறையில் அனுமதி வழங்கினால் நாங்களும் வாடி வழியாகவே மாடுகளை அவிழ்ப்போம்,” என்று உறுதியாகக் கூறுகிறார். ஆனால், “அப்படி முக்கியஸ்தர்கள் மாடுகள் என்று பார்த்தெல்லாம் யாருக்கும் டோக்கன் வழங்குவதில்லை. இந்த முறை விண்ணப்பம் செய்திருந்த 270க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது," என்றார் ஆஷா அஜித். "மாடுகளுக்கான தகுதியாக அதன் மருத்துவ சான்றிதழ் மட்டுமே பார்க்கப்படும். அதைத் தாண்டி அந்த மாடு மருத்துவ ரீதியாகத் தகுதியில்லை என்றால் மட்டுமே அவை நிராகரிக்கப்படும். எனவே இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல,” என்று பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித். மஞ்சுவிரட்டின் எதிர்காலம் என்ன? படக்குறிப்பு, மஞ்சுவிரட்டும் தற்போது ஜல்லிக்கட்டு போலவே நடத்தப்படுகிறது. சிவகங்கை பகுதியில் மட்டுமே அதிகமாக மஞ்சுவிரட்டு பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே பெரும்பான்மையாக ஜல்லிக்கட்டு விதிகள் மஞ்சுவிரட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழுமையாக மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டாக மாறும் வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தோம். இதற்குப் பதிலளித்த அவர், “எதிர்காலத்தில் மஞ்சுவிரட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசியுள்ளோம். அது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். மஞ்சுவிரட்டும் தற்போது ஜல்லிக்கட்டு போலவே நடத்தப்படுகிறது. வாடியின் அமைப்பும், மைதானத்தின் அளவும் மட்டுமே வேறுபடுகிறது. ஆகையால் ஏற்கெனவே ஜல்லிக்கட்டு விதிகளைப் போலவே இதிலும் பின்பற்றப்படுகிறது. விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது வழக்குகளும் போடப்படுகிறது. அதைத் தாண்டியும் ஒரு சிலர் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார் ஆஷா அஜித். https://www.bbc.com/tamil/articles/c04y37zk0v1o
-
இலங்கை ஸிம்பாப்வே கிரிக்கெட் போட்டி
இலங்கையுடனான ரி -20 வரலாற்றில் முதல் வெற்றியை சுவைத்தது ஸிம்பாப்வே 16 JAN, 2024 | 11:06 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (16) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க ஸிம்பாப்வே 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 5 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் ஸிம்பாப்வே வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும். இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 - 1 என ஸிம்பாப்வே சமப்படுத்திக்கொண்டுள்ளது. முதலாவது போட்டியில் இலங்கை 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. க்ரெய்க் ஏர்வின் குவித்த அரைச் சதம், கடைசி 2 ஓவர்களில் லூக் ஜொங்வே, க்ளைவ் மதண்டே ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதிசெய்தன. மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் டினாஷே கமுன்ஹூகம்வே (12) ஆட்டம் இழந்தார். எனினும் க்ரெய்க் ஏர்வின், ப்றயன் பெனெட் (25) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸிம்பாப்வே அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் சிக்கந்தர் ராஸா (8), சோன் வில்லியம்ஸ் (1), சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய க்ரெய்க் ஏர்வின், ரெயான் பேர்ல் (13) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். க்ரெய்க் ஏர்வின் 54 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார். ஸிம்பாப்வேயின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டில்ஷான் மதுஷன்க வீசிய 19ஆவது ஓவரில் 10 ஓட்டங்களும் மெத்யூஸ் வீசிய கடைசி ஓவரில் 24 ஓட்டங்களும் குவிக்கப்பட ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது. கடைசி ஓவரில் மெத்யூஸ் வீசிய முதல் பந்து சிக்ஸ் ஆனதுடன் நோபோலாகவும் அமைந்தது. ப்றீ ஹிட்டான அடுத்த பந்தில் பவுண்டறியும் 2ஆவது பந்தில் சிக்ஸும் விளாசப்பட்டன. 3ஆவது பந்தில் ஓட்டம் பெறப்படவில்i9ல. 4ஆவது பந்தில் லூக் ஜொங்வே கொடுத்த இலகுவான பிடியை மஹீஷ் தீக்ஷன தவறவிட்டார். அடுத்த பந்தில் க்ளைவ் மதண்டே அபாரமாக சிக்ஸ் விளாசி ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது. உதவி அணித் தலைவர் சரித் அசலன்க, முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து அணியை சிறந்த நிலையில் இட்டதுடன் இரசிகர்களுக்கும் விருந்து படைத்தனர். முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. பெத்தும் நிஸ்ஸன்க (4), குசல் பெரேரா (0), குசல் மெண்டிஸ் (4), சதீர சமரவிக்ரம (19) ஆகிய நான்கு முன்வரிசை வீரர்களும் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது இலங்கை 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலன்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 5ஆவது விக்கெட்டில் 79 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். சரித் அசலன்க 39 பந்துகளில் 5 பவுண்டறிகள். 3 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைக் குவித்தார். ஏஞ்சலோ மெத்யூஸ் 51 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்க வேகமாக ஓட்டம் பெற விளைந்து 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஒரு பந்தை எதிர்கொண்ட அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஓட்டம் பெறவில்லை. பந்துவீச்சில் லூக் ஜொங்வே 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: லூக் ஜொங்வே. https://www.virakesari.lk/article/174114
-
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 19 முதல் 21 வரை
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு 64 ஆயிரம் பார்வையாளர்களை எதிர்பார்கிறோம் - யாழ் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் Published By: VISHNU 17 JAN, 2024 | 08:51 PM லங்கா எக்கிபிஷன் நிறுவனம், யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 முதல் 21 வரை யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச்சந்தை இம்முறை 14 ஆவது ஆண்டாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகவுள்ளது என யாழ் வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இது தொடர்பாக யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கண்காட்சியில் சிறந்த தொழில் முயற்சியில் ஈடுபடும் மூதலிட்டாளர்களை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையிலான கண்காட்சியாக இது ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இம்முறை 64 ஆயிரம் பேர் கொண்ட பார்வையாளர்களாக வருவதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 350 காட்சிக் கூடாரங்கள் காணப்படுகின்றது. இவற்றில் கட்டிட துறை பகுதி, தொழில்நுட்ப பகுதிகள், கணணியல் துறை பகுதிகள், ஊள்ளூர் உற்பத்தி காட்சிக் கூடாரங்கள், வெளிநாட்டு கல்வியற் பிரிவுகள், தனியார், அரச, கல்வியிற் காட்சிக் கூடங்கள், வாகன விற்பனை சந்தைகள், சிற்றுண்டி வகைகள், மின்னியல் சாதனங்கள் மற்றும் மின்சார பொருட்கள் இதன்போது காட்சிப்படவுள்ளது. மேலும் சிறு முயற்சியாளர்களுக்கு 10 இலவசமாக கூடாரங்களும், தொழில்முனைவோர்களுக்கும் 10 இலவசமாக கூடாரங்களும் வழங்கப்படவிருக்கின்றது. சிறிய முதலீட்டினை கொண்டுள்ளவர்களுக்கு முன்னுரை அடிப்படையில் இவை வழங்கப்பட்டுள்ளது இந்த பிரதேசத்தில் சிறந்தமூதலீட்டினை ஊக்குவிப்பதனை ஒரு இலக்காக கொண்டு 14 ஆவது ஆண்டு வர்த்தக் கண்காட்சி விளங்குகின்றது. இம்முறை 2000 பேர் அளவிலான தென்னிலங்கை முதலீட்டாளர்களும் இங்கு வந்து தமது சந்தைவாய்ப்பை மேற்கொள்ளவுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/174196
-
குளோனிங் முறையில் உருவான முதல் ரீசஸ் குரங்கு
Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 05:26 PM சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர். குறித்த ரீசஸ் குரங்கிற்கு வயது இரண்டு எனவும் பெயர் “ரெட்ரோ” எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது. ரீசஸ் குரங்கு மூலம் மருந்துவ பரிசோதனை விரைவுபடுத்த முடியும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் பரிசோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரீசஸ் குரங்கு குளோன் செய்யப்பட்டதற்கு விலங்குகள் நலக் குழு ஒன்று ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. பாலூட்டி இனங்களில் பாலின கலப்பு மூலம் தந்தை மற்றும் தாயின் மரபணுக்கள் இணைந்து சந்ததியை உருவாக்கும், குளோனிங் முறையில் ஒரு விலங்கின் மரபணு மாதிரி நகலை தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்படுகிறது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி என்ற செம்மறி ஆடு, பிரிட்டனில்,1996 ஜூலை 5ல் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174174
-
துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும் : கோட்டாவின் முட்டாள்தனமான தீர்மானத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது - ஹிருணிக்கா Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 04:57 PM என் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இது தனிமனித வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும் என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார். கோட்டாவின் முட்டாள்தனமான தீர்மானத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொது மன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்த கூடாது என்பதற்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/174182
-
அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?
தமிழ் பேசும் அயலான் - 1,500 பேரின் உழைப்பில் தத்ரூபமாக உருவானது எப்படி? பட மூலாதாரம்,SIVAKARTHIKEYAN/@X கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம், உண்மைக்கு மிக நெருக்கமான முழுநீள VFX காட்சிகளுக்காக அதிகம் பாராட்டை பெற்றுள்ளது. தமிழில் பேசும் ஏலியனாக தோன்றியுள்ள ‘டேட்டூ’ கதாபாத்திரம் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த ஏலியனை உருவாக்க 1,500 பேர் சேர்ந்து உழைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். “இந்திய சினிமாவிலேயே VFX கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட முழு நீளக்கதை இதுவரை வெளிவந்ததில்லை. அதை முதலில் செய்திருப்பது அயலான் என்பதில் எங்களுக்கு பெருமை” என்றார் VFX காட்சிகளை தயாரித்த பேந்தம் எஃப் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிஜாய் அற்புதராஜ். “இந்தப் படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. அப்போது வெளிவந்திருந்தால், இந்த முயற்சிகள் இன்னமும் புதிதாக பார்க்கப்பட்டு இருக்கும். கடந்த ஆறு ஆண்டுகளில் வேறு பல படங்கள் VFX தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளன. இருந்தாலும் நாங்கள் அயலானில் செய்திருப்பதை எந்த படமும் செய்யவில்லை” என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ அம்பத்தூரில் உருவாக்கப்பட்ட VFX ஹாலிவுட் படங்களைத்தான் தமிழில் மொழி மாற்றம் செய்து பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் அயலான் திரைப்படம் அதை மாற்றியமைத்துள்ளது என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.ரவிக்குமார், “அயலான் படத்துக்கு அவதார் படக்குழுவினர் பங்களித்ததாக சமூக ஊடகங்களில் சிலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. அம்பத்தூரில் உள்ள குழுவினர் தான் இந்த VFX அனைத்தையும் உருவாக்கியது” என்கிறார். அடுத்தடுத்த திரைப்படங்களும் அறிவியல் தொழில்நுட்பத்துடனே அமைந்திடும் என்பதுடன், இன்னும் பிரமாண்டமான வடிவத்தில் அயலான்-2 உருவாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் அவர். பட மூலாதாரம்,RAVIKUMAR ஏலியனுக்கு எது அடிப்படை? அயல் கிரகத்தில் வாழும் உயிரினங்களை காட்சிப்படுத்துவதற்கு கற்பனையை மட்டுமே நாட வேண்டியுள்ளது. இப்போது பயன்படுத்தப்பட்டுள்ள ஏலியன் உருவத்திற்காக ஆய்வுகள் செய்து முடிவுக்கு வந்தோம் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். அதுபற்றி அற்புதராஜ் கூறும்போது “இந்த கதாபாத்திரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. எனவே ஏலியனின் உருவம் குள்ளமாக இருக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே இயக்குநர் சொல்லிவிட்டார். பார்ப்பதற்கு க்யூட்டாக கார்ட்டூன் கதாபாத்திரம் போல இருக்க வேண்டும் அதேநேரம் பொம்மை படம் என்றும் யாரும் கூறிவிடக்கூடாது அதற்கேற்ற வகையில் உருவம் மற்றும் நிறம் தேர்வு செய்யப்பட்டது. கிரே ஏலியன் (Grey alien) என்று கருத்தாக்கத்தை கொண்டுதான் இந்த ஏலியன் உருவாக்கப்பட்டது. கிரே ஏலியன் என்பது உலகம் முழுக்க இருக்கக்கூடிய ஒரு கருத்தாகும். ஏலியன் வந்ததை நேரில் பார்த்ததாக சொல்லக் கூடியவர்கள் அது எப்படி இருந்தது என்று விவரித்த விவரங்களைக் கொண்டு ஹாலிவுட் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட உருவம் தான் இந்த கிரே ஏலியன். எனவே இது யார் ஒருவருக்கும் சொந்தமானது அல்ல. அதன் அம்சங்களை எடுத்துக்கொண்டு நமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொண்டோம்” என்கிறார் அற்புதராஜ். பட மூலாதாரம்,X/@BEJOYRAJ ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் டைனோசர் என்ற அழிந்துபோன உயிரின வகையின் தோற்றத்தை மீண்டும் வடிவமைத்திருப்பார்கள். அதே போன்ற ஒரு முயற்சிதான் அயலான் என்கிறார் ரவிக்குமார், “ஜுராசிக் பார்க், டைட்டானிக் போன்ற படங்கள் எப்படி பிரமாண்டமாக இருக்கின்றனவோ, அதுபோன்ற படங்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதில் முதல் படியை எடுத்து வைத்திருக்கிறோம். இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் நம் ஊரிலேயே இருக்கின்றன.” என்று குறிப்பிட்ட அவர் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன என்றும் சுட்டிக்காட்டுகிறார். “ஹாலிவுட் நம்மை விட இன்னும் முன்னேறியதாக இருக்கிறது. அவர்களின் சந்தை பெரியது. எல்லா துறைகளிலும் இருப்பது போல, அவர்களின் நிபுணத்துவமும் இதிலும் அதிகம். எனவே, இப்போதிருக்கும் சூழலில் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,X/@@RAVIKUMAR_DIR அயலானின் தமிழ் முக பாவனைகள் டேட்டூ என அழைக்கப்படும் தமிழ் ஏலியன், பேச்சில் மட்டுமல்லாது முக பாவனைகளின் வழியாகவும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. “ஏலியன் திரையில் தோன்றினால் மட்டும் போதாது. இந்தப் படத்தில் ஏலியன் சிரிக்க வேண்டும், அழ வேண்டும், கோபப்பட வேண்டும். மனிதரை போல பல உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதை பார்க்கும் ரசிகர்களுக்கு புரியும்” அதற்காக பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம் என விவரித்தார் அற்புதராஜ். “முக பாவனைகளை துல்லியமாக வெளிக்கொணர ஏலியனின் வாய், கண் மற்றும் கன்னத்தில் உள்ள சதைகள் மிக முக்கியமானவை. Performance capture என்ற தொழில்நுட்பத்தின் மூலம், எங்கள் குழுவினர் பல பேரின் முக பாவனைகள் பதிவு செய்யப்பட்டு, அவை ஏலியனுக்கு ஏற்ற விதத்தில் பொருத்தப்பட்டன. இதனை சாத்தியமாக்கிட ஒருவர் ஹெல்மெட் போன்ற கருவியை தலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். அதன் மீது இருக்கும் ‘கோ ப்ரோ’ என்ற கேமரா முகபாவனைகளை பதிவு செய்துகொள்ளும். பின்னர் அதனை கணிணி வழியாக அயலானுக்கு மாற்றினோம்” என்று விளக்கினார். பட மூலாதாரம்,RAVIKUMAR மேலும் உடல் அசைவுகளை மொத்தமாக பதிவு செய்துகொள்ளும் தொழில்நுட்பமும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, அதுபற்றி அற்புதராஜ் விளக்கும்போது, “மற்ற படங்களில் ஸ்டுடியோவில் தான் மோஷன் கேப்சர் நடைபெறும். அதாவது ஒரு நபரின் உடல் அசைவுகளை பதிவு செய்யும் முறை. ஆனால் அயலான் திரைப்படத்திற்காக படப்பிடிப்பு தளத்திலேயே, பாடி சூட் என்பதை ஒருவர் அணிந்து கொண்டு, அவருடைய அசைவுகள் பதிவு செய்யப்பட்டன” என்று விளக்கினார். பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ 1,500 பேர் உழைப்பு அயலான் திரைப்படத்தை உருவாக்குவதில் 1,500 பேர் உழைத்துள்ளார்கள் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, Phantom FX என்ற நிறுவனத்தில் மட்டும் 650 பேர், மற்றும் அந்த நிறுவனத்தை சார்ந்து இயங்கிய சிறிய நிறுவனங்களின் வழியாக 800 பேர் பணியாற்றியுள்ளனர். ஒரு வாகனம் உற்பத்தி செய்யும்போது எப்படி துணை நிறுவனங்களிலும் உற்பத்தி நடக்குமோ அப்படித்தான் இந்த படத்திற்கான வேலைகளும் நடந்தன என படக்குழுவினர் விளக்கினார்கள். “VFX குழுவில் 16 துறைகள் உள்ளன. இந்த துறையின் செயல்பாடுகள் ஒரு பொம்மலாட்ட தயாரிப்பு போன்றவைதான். முதலில் பொம்மைகளுக்கான உருவத்தை தயாரிக்க வேண்டும். அது VFX -ல் மாடலிங் எனப்படும். அந்த பொம்மைக்கு கம்பிகள் கட்டி அதை அசைக்க வேண்டும். அது ரிக்கிங் எனும் துறையால் செய்யப்படும். அடுத்து அந்த பொம்மையை நடக்க வைக்க வேண்டும். அது அனிமேஷன் என்னும் துறை செய்யும். அதன் சருமம் எப்படி இருக்க வேண்டும் என்பதை டெக்ஸ்சர் துறை தீர்மானிக்கும். அதே போன்று ஆடைகள், தலைமுடி என ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் வெவ்வேறு துறையினர் செய்தனர். ஒரு ஷாட் முழுமை பெற 40 பேர் தேவைப்படும். அயலான் படத்தின் மொத்த செலவில் 50%க்கும் மேல் VFXக்காக செலவிடப்பட்டது. ஏனென்றால், VFXஎன்பது இந்தப் படத்தில் ஒரு பகுதி அல்ல, படம் முழுக்கவே VFX தான்.” என்று கூறுகிறார் அற்புதராஜ். பட மூலாதாரம்,BEJOYARPUTHARAJ ஒரு திரைப்படத்தை முழு நீள VFX தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் போது அதற்கான செலவுதான் முதல் சவாலாக உள்ளது. இத போன்ற தமிழில் செய்ய முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. இதுபோன்ற தடைகளையும் தயக்கங்களையும் அயலான் உடைத்துள்ளதாக அற்புதராஜ் கூறுகிறார். தற்போது வரை இந்தப் படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. “VFX செய்ய, மும்பை செல்ல வேண்டும், ஹாலிவுட் செல்ல வேண்டும். அங்கு சென்று அதிகமான செலவு செய்தால் தான் தரமான VFX கிடைக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் அயலான் உடைத்துள்ளது. எங்கள் நிறுவனம் 15 வருடங்களாக இங்குதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்களை முழுமையாக யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என நம்பிக்கையுடன் பேசுகிறார் அற்புதராஜ். https://www.bbc.com/tamil/articles/ce4d3dv777do
-
14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் : அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது - நீதி அமைச்சர்
Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 04:31 PM 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14 அரசியல் கைதிகளே உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு இன்று புதன்கிழமை (17) விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பிரபா மற்றும் கௌதமன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபை மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பு என்பவற்றின் ஒழுங்கமைப்பில் திவாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கந்தக்காடு முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அங்கு புனர்வாழ்வு பெறுபவர்கள், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மற்றும் யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மூன்று பிரிவுகளாக கந்தக்காடு முகாம் இயங்கி வருகின்றது. அங்கு இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அதன் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. அது இளம் சமுதாயத்தையும் பாதித்துள்ளது. யுக்திய நடவடிக்கை மூலம் போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. அத்துடன், அரசியல் கைதிகள் விடயத்தில் 5 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 14 அரசியல் கைதிகளே உள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. மேலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது. யாருக்கு ஆதரவு என கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குள் பேசுகிறார்கள். இன்னும் யார் வேட்பாளர் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. கட்சியுடன் கலந்துரையாடியே அது தொடர்பில் முடிவு எடுக்க முடியும் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174179
- தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
-
துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு - எம்.ஏ.சுமந்திரன் Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 03:12 PM இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று புதன்கிழமை (17) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி இருந்து இந்த வழக்கை வாதாடி இருக்கின்றேன். இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம் வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன. விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில் ரட்நாயக்கவிற்கு கொடுத்த மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174165
-
நிகோலஸ் வின்டன்: ஷிண்ட்லர் போல ஹிட்லரிடம் இருந்து யூதர்களை காப்பாற்ற இவர் என்ன செய்தார்?
பட மூலாதாரம்,PA படக்குறிப்பு, 1938 இல் செக்கோஸ்லோவாக்கியாவை விட்டு வெளியேற வின்டன் 669 குழந்தைகளுக்கு உதவினார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹிட்லரின் படையினர் செக்கோஸ்லோவாக்கியாவின் வடக்குப் பகுதியான சூடேட்டென்லாந்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியதைக் கண்டு, ஆயிரக்கணக்கான யூத குடும்பங்கள், தலைநகரான ப்ராக் நோக்கி பயத்தில் வெளியேறினர். அவர்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். குறைந்தபட்சம் அவர்கள் இன்னும் சில வாரங்களே உயிர்வாழ முடியும். இங்கிலாந்து தொழிலதிபர் நிகோலஸ் வின்டனின் திட்டத்தினால் பல குடும்பங்களுக்கு விடிவு காலம் கிடைத்தது. 1938 ஆம் ஆண்டில், வின்டன் ஒருங்கிணைத்த திட்டத்தால் செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து 669 யூத குழந்தைகளை இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு முகாம்களில் சேர்க்க முடிந்தது. இவரின் இந்த செயல், போரின்போது குறைந்தது 1,200 யூதர்களை போலந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் பணியமர்த்தி உயிரைக் காப்பாற்றிய ஜெர்மன் குடிமகன் ஆஸ்கர் ஷிண்ட்லரின் செயல்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. ஆனால் ஷிண்ட்லரின் கதையைப் போலல்லாமல், வின்டன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மறக்கப்பட்டிருந்தார். 1988-இல் அவரது மனைவி கிரேட், ஹோலோகாஸ்ட் ஆராய்ச்சியாளர் ஒருவருடன் இணைந்து, அரை நூற்றாண்டுக்கு முன்பு தனது கணவர் காப்பாற்றிய குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை பகிர்ந்தபோதுதான், இவர் கதை வெளிச்சத்துக்கு வந்தது. விண்டனின் வீரச் செயல் பற்றிய கதை, ஆண்டனி ஹாப்கின்ஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் '‘ஒன் லைப்" என்ற படத்தின் மூலம் திரையில் வெளியாக இருக்கிறது. படக்குறிப்பு, அந்தோனி ஹாப்கின்ஸ் "எ லைஃப்" படத்தில் வின்டனாக நடிக்கிறார். பனிச்சறுக்கு பயணமில்லை நிகோலஸ் வின்டன், 1909 ஆம் ஆண்டு யூத வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவர்கள் தங்கள் குடும்பப்பெயரை வெர்டைமரில் இருந்து வின்டன் என மாற்றி, ஆங்கிலிகன் தேவாலயத்தில் நிக்கோலஸிற்கு ஞானஸ்நானம் செய்தனர். ஐரோப்பாவில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் அவரது உறவினர்களிடமிருந்து நிக்கோலஸிற்கு, ஐரோப்பாவில் யூத மக்களின் மீது நாஜிக்களின் ஆதிக்கம் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி ஒரு தனி கண்ணோட்டம் கிடைத்தது. அதனால்தான் 1938-இல் அவர் தனது நண்பரான மார்ட்டின் பிளேக்கிடமிருந்து பெற்ற கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக திட்டமிட்டிருந்த அவரது பனிச்சறுக்கு (Skiing) பயணத்தை ரத்து செய்தார். "என்னிடம் மிகவும் சுவாரஸ்யமான வேலை இருக்கிறது. எனக்கு உங்கள் உதவி தேவை. ஸ்கீயிங் பொருட்களை கொண்டு வருவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று பிராகிலிருந்து பிளேக் எழுதினார். அங்கு அவர் செக்கோஸ்லோவாக்கியாவின் இங்கிலாந்து அகதிகள் குழுவில் பணியாற்றினார். இந்த அழைப்பு இதற்கு முன்னெப்போதுமில்லாத மனிதாபிமான நெருக்கடி குறித்து விண்டனை ஆராயச் செய்யும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செக்கோஸ்லோவாக்கியாவின் சூடேட்டென்லாண்ட் பகுதியில் உள்ள ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஹிட்லரை இரு கரம் நீட்டி வரவேற்றனர். செயல்படுத்தப்பட்ட திட்டம் என்ன? வின்டன் ப்ராக் வந்தபோது, கடும் பனிக்காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான அகதிகள் முகாம் நிரம்பியிருப்பதைக் கண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் வரும் சூழ்நிலைகளை கண்டதே அவரை ஒரு திட்டத்தை வகுக்க நேரிட்டது. வின்டன் செல்வாக்கு மிகுந்த இங்கிலாந்து குடிமகனாக இருப்பதால், இளைய அகதிகளை ஐக்கிய ராஜ்யத்திற்கு (United Kingdom) அனுப்பிவைக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். விண்டனும் அவரது சக பணியாளர்களுமான மார்ட்டின் பிளேக் மற்றும் டோரீன் வாரினரும் ப்ராக் நகரில் ஒரு ஹோட்டலை தங்கள் செயல்பாட்டு மையமாக மாற்றி, தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப விரும்பும் குடும்பங்களின் விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர். லண்டனில், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசாங்கம் விதித்திருந்த கடுமையான நிபந்தனைகளின் காரணமாக, அக்குழந்தைகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் நூற்றுக்கணக்கான ஆவணங்களை நிர்வகிப்பது விண்டனின் பணியாக இருந்தது. ஐக்கிய ராஜ்யத்தில் உறவினர்கள் இல்லாத ஒவ்வொரு அகதிகளுக்கும் மாற்றுக் குடும்பங்களைக் கூட விண்டன் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிகோலஸ் வின்டன் 2015 இல் தனது 106 வயதில் இறந்தார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வின்டன் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டியிருந்தது. மேலும் இங்கிலாந்து குழந்தைகளை நகர்ப்புற மையங்களில் இருந்து இடமாற்றம் செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் திட்டங்களிலிருந்தும் அவருக்கு உதவி கிடைத்தது. 1939 ஆம் ஆண்டில், வின்டன் ப்ராக் நகரிலிருந்து எட்டு ரயில்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து, 669 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். இதை அப்போரில் இருந்து தப்பித்து 2020 ஆம் ஆண்டு இறந்த, ரூத் ஹலோ 2015 இல் பிபிசியுடன் பேசுகையில் தெரிவித்தார். "ஒரு ஸ்டீம் என்ஜின் இருந்தது. பழைய பெட்டிகள் மரப் பலகைகளால் செய்யப்பட்டு இருந்தன". "எங்கள் அனைவரிடமும் எண் குறியீடுகளுடன் இருக்கும் ஒரு அட்டைப் பலகை கயிற்றில் தொங்கவிடப்பட்ட பின்னரே அவர்கள் எங்களை வண்டிகளில் ஏற்றினார்கள்" என்று ஹலோவா பிபிசியிடம் கூறினார். அந்தப் பயணத்தை ஒரு "சாகசமாக" பார்த்ததால் "உற்சாகமாக" இருந்ததாகவும், ஆனால் ரயில் நிலையத்தில் "ஜன்னல்களுக்கு எதிராக அழுத்தப்பட்ட பெற்றோர்களின் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் இருக்கும் முகங்களை அவர்கள் மறக்கவேயில்லை" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ராக்கிலிருந்து லண்டனுக்குப் புறப்படும் 8 ரயில்களுக்கான தளவாடங்களை வின்டன் ஒருங்கிணைத்தார். போரின் போது ஹலோவா, செக் மொழி பேசாத ஒரு பிரிட்டிஷ் குடும்பத்துடன் வாழ வேண்டியிருந்தது. “ஆனால் அவர்களுக்கு தான் நன்றியுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் அவர்களால்தான் போருக்குப் பிறகு எனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முடிந்தது. தாயுடன் மீண்டும் இணைந்தது என் பிரார்த்தனைகளுக்குக் கிடைத்த பதில்," என்று அவர் விவரித்தார். ப்ராக் நகரிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்ட ஒன்பதாவது ரயில், போர் தொடங்கியதால் அதன் இலக்கை அடையவில்லை. அதில் பயணிக்கவிருந்த 250 குழந்தைகள் கைதிகள் முகாம்களில் இறந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது 669 யூத குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இங்கிலாந்து தொழிலதிபர் நிகோலஸ் வின்டனின் கதை சுமார் 50 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ராக் ரயில் நிலையத்தில் வின்டனின் நினைவாக ஒரு சிலை உள்ளது. வின்டன் இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாக வதந்திகள் வந்தாலும், அவரே இக்கதையை தனது மனைவியிடம் சந்தர்ப்பங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கூறியதாகவும் இங்கிலாந்து செய்தித்தாளான தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். வின்டன் 1988 இல் பிபிசியின் "தட்ஸ் லைப்" (That's life) என்ற நிகழ்ச்சியினால், தனது முயற்சிக்கான பலனைக் காண முடிந்தது. தனது கணவர் காப்பாற்றிய குழந்தைகளின் பெயர் பட்டியலை ஆராய்ச்சியாளர் எலிசபெத் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து வெளியிட்ட விண்டனின் மனைவிக்கு நன்றிகள். செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து வின்டன் ஏற்பாடு செய்த எட்டு ரயில்களில் தப்பி ஓடிய குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் பெயர்ப் பட்டியலை பழைய புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொது திடீரென்று பார்க்க நேரிட்ட தொகுப்பாளர் எஸ்தர் ரான்ட்சனிற்கு கூட நன்றிகள். படக்குறிப்பு, நிகோலஸ் வின்டன் பிபிசி நிகழ்ச்சியின் போது அவர் காப்பாற்றிய பல குழந்தைகளை சந்திக்க முடிந்தது. சுமார் 7 வயது சிறுமியின் புகைப்படத்தைப் பார்த்து, "இது வேரா கிஸ்ஸிங்," என்று ரான்ட்சன் கூறினார். “அவளது பெயரை (வின்டனின்) பட்டியலில் கண்டோம். வேரா கிஸ்சிங் இன்றிரவு எங்களுடன் இருக்கிறார். அவள் நிகோலஸ் விண்டனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறாள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்". வின்டன் தனக்கு அடுத்திருந்த பெண்ணை உணர்ச்சியுடன் பார்த்து அவரிடமிருந்து இதமான அணைப்பைப் பெற்றார். மேலும் அந்த நபர் தான் அணிந்திருந்த கண்ணாடிக்கு பின்னால் வடியும் கண்ணீரைத் துடைத்தார். உடனே, ஏராளமான பார்வையாளர்கள் எழுந்து நின்றனர், எல்லோரும் இவரால் மீட்கப்பட்ட குழந்தைகள் என்று ரான்ட்சன் அடையாளம் காட்டினார். பார்வையாளர்கள் கரகோஷத்தை எழுப்பினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணி எலிசபெத் II -ஐ வின்டன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசினார். வின்டன் 2003 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் II ஆல் கௌரவிக்கப்பட்டார். மேலும் அவரது மகள் எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இப்போது இந்த புதிய திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. ஆனால் அங்கீகாரம் இருந்தபோதிலும், நண்பர்களால் நிக்கி என்றழைக்கப்படும் வின்டன், அவர் செய்தது வீரச் செயல் இல்லை என்று உறுதியாக நம்பினார். 2015 இல் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் நிக், "என்னுடைய தந்தை கூறியது என்னவென்றால், ஏதாவது நடக்கும் அல்லது யாரவது செய்வார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக ஒரு மாற்றத்தை உருவாக்க மக்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறியதாகத் தெரிவித்தார். "அதைத்தான் அவர் தனது எல்லா உரைகள் மற்றும் எனது சகோதரி எழுதிய புத்தகத்தின் மூலமாகவும் மக்களுக்குச் சொல்ல முயன்றார்." என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cd1kvynj133o
-
வாழ்வு தந்தவள் இவளே!
உங்கள் கவிதைக்கு நன்றி பசுவூர்க்கோபி.
-
உயிர் உருவானது எப்படி? அறிவியலுக்கு இன்னும் புலப்படாத 5 புதிர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரபஞ்சம் எதனால் ஆனது என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே தொடர்கிறது. 16 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இயற்கை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதை விட சில விஷயங்கள் மிகவும் உற்சாகமானவையாக இருக்கின்றன. ஒரு புதிரை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளும் போது அந்த அற்புதமான தருணத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பொதுவாக அந்த புத்திசாலித்தனமான மனங்களில் ஒன்று அல்லது பலர் அதைப் புரிந்து கொண்டதற்காக தங்கள் ஆன்மாவையும், இதயத்தையும், வாழ்க்கையையும் பயன்படுத்தினர். அறிவியல் பல்வேறு ஆராய்ச்சிகளில் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் பல கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் சில நீண்ட காலமாக உள்ளன. மற்றவை நாம் அதிக அறிவைப் பெறுவதால் புதிய கேள்விகளாக உருவெடுத்தன. நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தெரியாததை நீங்கள் அறிவீர்கள். எனவே, மிதிவண்டி எப்படி நிமிர்ந்து நிற்கின்றது? என்பது முதல் புரிந்துகொள்ள முடியாத அரிய பகா எண்கள் வரை அறியப்படாத தகவல்கள் ஒரு பரந்த கடல் போல் உள்ளன. அருமை. கேள்விகள் ஒருபோதும் தீர்ந்துவிடக்கூடாது. ஏனெனில் அவை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதால் மட்டுமல்ல. தத்துவ ஞானி தாமஸ் ஹோப்ஸ் கூறியது போல் ஆர்வம் என்பது மனதின் காமம் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், நாங்கள் உங்களுக்கு 5 கேள்விகளை அளிப்பதாக மட்டுமே உறுதியளித்திருந்தால் எந்த ஐந்தைத் தேர்ந்தெடுப்பது? சரி, மிகுந்த சிரமத்துடன், அறிவியலுக்கு இன்னும் புலப்படாத 5 புதிர்களைப் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொடக்கத்தில் பூமி ஒரு குழம்பைப் போல் இருந்திருக்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 1. பிரபஞ்சம் எதனால் ஆனது? பிரபஞ்சமே கேள்விகளின் ஆதாரமாக உள்ளது: அது உருவானதுக்கு முன்பு என்ன இருந்தது; இது எல்லையற்றதா அல்லது வெறுமனே மகத்தானது தானா; இது தனித்துவமானதா அல்லது பலவற்றில் ஒன்றா...? ஆனால் இந்த நேரத்தில் விஞ்ஞானிகள் அதன் கட்டமைப்பின் 5% தன்மையை மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பாக இது சிறிய விஷயம் இல்லை என்றாலும், ஆர்வத்தைத் தூண்டும் ஒன்றாக உள்ளது. அணுக்கள், அவற்றின் கூறுகள் - புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்கள் - மற்றும் நியூட்ரினோக்கள், எதுவும் இல்லாதது போல் பொருள் வழியாக (பூமி முழுவதும் கூட) செல்லக்கூடிய மழுப்பலான துகள்கள் பற்றி பேசுகிறோம். இவை அனைத்தும் இப்போது நமக்குப் பரிச்சயமானவையாகத் தெரிகின்றன. ஆனால் அணுவைப் பற்றிய சிந்தனை கிமு 5 ஆம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், கிரேக்கர்கள் அதற்கு ஒரு பெயரைக் கொடுத்திருந்தாலும், அது 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேதியியலாளர் ஜான் டால்டன் மிகவும் உறுதியான வாதத்தை உருவாக்கினார். இது அனைத்து பொருட்களும் மிகமிகச் சிறிய, பிரிக்க முடியாத, அணுத் துகள்களால் ஆனது என்ற ஆச்சரியமான முடிவுக்கு இந்த வாதம் இட்டுச் சென்றது. அதனால், பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது. ஆனால் அதிலும் ஒரு பெரிய மர்மம் உள்ளது. அது கணிசமானது. அதே நேரம் மற்ற 95% எதனால் ஆனது என்ற கேள்வி எழுகிறது இல்லையா? அதில் இதுவரை அறியப்பட்ட விஷயம் என்னவென்றால், தோராயமாக 27% அளவுக்கு இருள் தான் பரவியிருக்கிறது என்பதே. இது முதன்முதலில் 1933 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களை ஒன்றாக இணைக்கும் கண்ணுக்கு தெரியாத பசையாக செயல்படுகிறது. அது பெரும் நிறையைக் கொண்டிருப்பதாலும், ஈர்ப்பு விசையாலும், அறியப்பட்ட 5% பொருண்மையை ஈர்க்கும் போது அளக்க முடியும் என்பதால், அது அருகாமையில் இருப்பதாக அறியப்படுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத அளவில் மர்மமானதாக இருந்தால், இன்னும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பிரபஞ்சத்தின் 68% அளவுக்கு இருண்ட ஆற்றல் உள்ளது. 1998 முதல் அதன் இருப்பை நாங்கள் அறிவோம். இது ஈதரைப் போன்றது என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள். இது இடத்தை நிரப்புகிறது என்பதுடன் பெருகிய முறையில் அதிக வேகத்தில் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை இயக்குகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்றும் இன்னும் கொஞ்சம் தெரிய வேண்டுமென்றால், அதற்குப் பல கருதுகோள்கள் உள்ளன. ஆனால் பல தசாப்தகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மர்மம் நீடிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 2. உயிர் எப்படி உருவானது? "தொடக்க கால குழப்பம்" என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தால், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று பொருள். சோவியத் ஒன்றியத்தில் 1920களில் அலெக்சாண்டர் ஓபரின் மற்றும் பிரிட்டிஷ் மரபியலாளர் ஜேபிஎஸ் ஹால்டேன் ஆகியோரால் ஒரே நேரத்தில் மற்றும் தன்னிச்சையாக முன்மொழியப்பட்ட கருதுகோள், இதற்கான பதிலளிக்கப் போட்டியிடும் பல கோட்பாடுகளில் ஒன்று. பூமியின் தொடக்க காலத்தில், கடல்கள் வாழ்க்கைக்கு முக்கியமான எளிய ரசாயனங்களால் நிரம்பியிருந்தன. வளிமண்டலத்தில் வாயுக்களின் கலவை மற்றும் மின்னல் ஆற்றல், அமினோ அமிலங்கள், புரதங்களின் கட்டுமானத் தொகுதிகள் ஆகியவை இருந்தன. பல விஞ்ஞானிகளுக்கு, பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் சிறந்த பதில் இதுதான். ஆனால் அது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்படாதது அது மட்டும் அல்ல. உண்மையில், வாழ்க்கையைப் பற்றி அறிய, அது எங்கிருந்து தொடங்கியது என்பதில்கூட அனைவரிடமும் உடன்பாடு இல்லை. கடலில், மற்ற புவி வெப்பக் குளங்களில், பனிக்கட்டியில் அல்லது பூமியிலிருந்து வெகு தொலைவில் அது இருப்பதாக நம்பும் அறிஞர்கள் உள்ளனர். (மேலும் அது சிறுகோள்கள் அல்லது விண்வெளி தூசியுடன் இங்கு வந்தது என்றும் பலர் கருதுகின்றனர்). பிறகு எப்போது? ம்ம்... சரியாகத் தெரியவில்லை; உயிரின் தோற்றத்தின் தருணமும் சந்தேகத்தில்தான் உள்ளது. பூமி உருவான பிறகு, 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், பழமையான உறுதிப்படுத்தப்பட்ட புதைபடிவங்களின் காலத்திலும் இது நிகழ்ந்தது என்பது நமக்கு உறுதியாகத் தெரியும். ஆனால் பொறிமுறை என்ன என்பது இன்னும் சிக்கலானது. அமினோ அமிலங்கள் புரதங்களில் ஒன்று சேர்க்கப்படுவது சாத்தியம்தான். ஆனால் ஜீன்களை எடுத்துச் செல்லவும், தன்னைப் பிரதியெடுக்கவும், ஒரு நொதியைப் போல மடிந்து செயல்படவும் கூடிய டிஎன்ஏவின் நெருங்கிய உறவினரான ஆர்என்ஏவுடன் வாழ்க்கை தொடங்கியது என்ற கருதுகோள் போல பிரபலமாக இல்லை. மற்றொரு யோசனை என்னவென்றால், முதல் உயிரினங்கள் எளிய நிறைகள் அல்லது குமிழ்கள், "புரோட்டோசெல்கள்" வாழ்க்கையின் கூறுகளுக்கு கொள்கலன்களாகச் செயல்பட்டன என்பதுதான். எனவே அறிவியலின் மிக ஆழமான கேள்விகளில் ஒன்றுக்கு இன்னும் உடன்பாடான பதில் இல்லை. வாழ்க்கை ஏன் தொடங்கியது என்ற இந்தக் கேள்வியைக் கேட்க நாங்கள் துணியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 3. நம்மை மனிதனாக்குவது எது? இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்று. மனிதன் மட்டும் ஏன் விதிவிலக்காக தோன்றினான்? மொழி, நம்மைப் பிரதிபலிக்கும் போது நம்மை அடையாளம் கண்டுகொள்வது, கருவிகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் திறன் அல்லது சிக்கலான சிக்கல்களைத் தீர்க்கும் திறன் போன்றவை மனிதனை பிற அனைத்து உயிரினங்களிலிருந்தும் விதிவிலக்காக்குகிறது. ஆனால் ஆக்டோபஸ்கள் மற்றும் காகங்கள் போன்ற விலங்குகள், பெயரிடுவதற்காக மட்டுமே இந்த இரண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன, படிப்படியாக அந்த மேன்மை வளாகத்தை எடுத்துக்கொண்டன. மற்றும் டிஎன்ஏ பற்றி என்ன சொல்வது? மனித மரபணு சிம்பன்சியின் மரபணுவுடன் 99% ஒத்துப் போகிறது. இது குடும்பத்தின் ஒரு பகுதி என்று சார்லஸ் டார்வின் சுட்டிக்காட்டியதாகத் தோன்றியபோது பலரைப் பயமுறுத்தியது. நமது மூளை பெரும்பாலான விலங்குகளின் மூளையை விட பெரியது என்பது உண்மைதான்: உதாரணமாக, கொரில்லாக்களை விட மூன்று மடங்கு அதிகமான நியூரான்கள் நம்மிடம் உள்ளன. ஆனால் யானை போன்ற விலங்குகள் ஒருவேளை நம்மை மிஞ்சும் என்பதை எண்ணி பார்த்தால் அதற்கு பதில் இருப்பதாகத் தெரியவில்லை. தடிமனான முன் புறணி இருப்பதாலா? அல்லது எதிர் கட்டைவிரலா? ஒருவேளை நமது கலாசாரம், அல்லது சமைக்கும் திறன் அல்லது நெருப்பில் நமது தேர்ச்சி? ஒருவேளை ஒத்துழைப்பு, இரக்கம் மற்றும் திறன்களின் பகிர்வு என பலதரப்பட்ட விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இவற்றில் ஏதேனும் நம்மை மனிதர்களாக்குகிறதா அல்லது வெறுமனே ஆதிக்கம் செலுத்துகிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 4. உணர்வு என்றால் என்ன? திடீரென்று உணர்வுகள் நம்மை மனிதனாக ஆக்குகின்றன. ஆனால் அது என்னவென்று புரியாமல் அறிவது கடினம். நிபுணர்களின் கூற்றுப்படி, உணர்வுகளைக் கொண்டுள்ள உறுப்பு மனித மூளை. அறியப்பட்ட பிரபஞ்சத்தில் மிகவும் சிக்கலான விஷயம், பத்தாயிரம் கோடி இடைவிடாத செயலில் உள்ள நரம்பு செல்கள் உயிரியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதுடன் சிந்திக்கவும் உதவுகின்றன. இது ஒலிகள், நறுமணங்கள் மற்றும் அனைத்து வகையான சுற்றுச்சூழல் சமிக்ஞைகளுக்கும் பதிலளிப்பது மட்டுமல்லாமல் தகவல்களைத் தக்க வைக்கவும் அனுமதிக்கிறது. மேலும், பல தகவல்களை ஒருங்கிணைத்து செயலாக்குவதன் மூலம், எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக நம்மைத் தாக்கும் அந்த உணர்ச்சித் தூண்டுதல்களை நாம் ஒருமுகப்படுத்தலாம் என்பதுடன் தடுக்கவும் செய்யலாம். கூடுதலாக, எது உண்மையானது அல்லது எது இல்லாதது என்பதை வேறுபடுத்திப் பார்க்கவும், பல எதிர்கால காட்சிகளை கற்பனை செய்யவும் இது நமக்கு உதவுகிறது. ஆனால் இது ஒரு கணினி அல்ல, அதைவிட உயர்வானது. இது நமக்கு ஒரு உள் வாழ்க்கையை அளிக்கிறது: நாம் நினைப்பது மட்டுமல்ல, நாம் சிந்திக்கிறோம் என்பதையும் அறிவோம். நாம் தனித்துவமாக இருப்பதன் தனித்துவமான அனுபவத்தை சுயம் எவ்வாறு உருவாக்குகிறது? சுருக்க சிந்தனையை எப்படி சாத்தியமாக்குகிறது? ‘நனவு’ என்பது மூளையைப் பற்றிய மிகவும் ஆச்சரியமான விஷயம் என்பதுடன் நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். 5. நாம் ஏன் கனவு காண்கிறோம்? விஞ்ஞானிகள் மற்றும் தூக்க நிபுணர்கள் நாம் எப்போது கனவு காண்கிறோம் என்பதை நன்றாக அறிந்துள்ளனர். பொதுவாக தூக்க சுழற்சியின் விரைவான கண் இயக்கத்தின் (REM) பகுதியின் போது கனவுகள் தோன்றுகின்றன. நாம் ஏன் கனவு காண்கிறோம் என்பது யாரும் தெரியாத புதிராகவே இருக்கிறது. கனவுகள் திருப்தியற்ற (பெரும்பாலும் பாலியல்) ஆசைகளின் வெளிப்பாடுகள் என்று சிக்மண்ட் பிராய்ட் நம்பினார்; மற்றவர்கள் ஓய்வில் இருக்கும் மூளையின் சீரற்ற பிம்பங்களைத் தவிர கனவுகள் என்பவை வேறில்லை என்று ஊகிக்கிறார்கள் . சில ஆய்வுகள் கனவுகள் நினைவகம், கற்றல் மற்றும் உணர்ச்சிகளில் ஒரு பங்கு வகிக்கும் என்பதைக் காட்டுகின்றன. அவை அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தை பிரதிபலிக்கும் அல்லது விடுவிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் அல்லது சவாலான அனுபவங்களை அவிழ்ப்பதற்கான ஒரு மயக்கமான வழியாகவும் இருக்கலாம். சாத்தியமான அச்சுறுத்தல்களை உருவகப்படுத்த அல்லது சமூக சூழ்நிலைகளை முன்கூட்டியே ஒத்திகை பார்க்க அனுமதிப்பதன் மூலம் நமது கனவுகள் ஒரு வகையான உயிர் வாழும் பொறிமுறையை வழங்க முடியும் . ஆனால் ஒருவேளை அவை ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் மூலம் மட்டுமே தோன்றுகின்றன என்று கருத முடியாது. திடீரென்று அவை நாம் தூங்கும் போது நமது மூளையின் இடைவிடாத செயல்பாட்டின் துணை விளைபொருளைத் தவிர வேறில்லை என்பதே உண்மை. இன்னும் கவிதையாக, கால்டெரோன் டி லா பார்காவை நினைவு கூர்ந்தால், அவை: கனவுகள், வாழ்க்கையைப் போலவே, கனவுகளும் கனவுகள் மட்டுமே. https://www.bbc.com/tamil/articles/cq51vpw052eo
-
ஆணைக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் - ஜனாதிபதிக்கு மனித உரிமை ஆணைக்குழு கடிதம்
உண்மையை கண்டறிவதற்கு புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கு முன்னர் கடந்த கால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் - ஜனாதிபதிக்கு மனித உரிமை ஆணைக்குழு கடிதம் Published By: RAJEEBAN 17 JAN, 2024 | 04:39 PM இலங்கை அரசாங்கம் மற்றுமொரு உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு முன்னர் கடந்தகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உண்மை ஐக்கியம் நல்லிணக்கம குறித்த ஆணைக்குழு சட்ட மூலம் குறித்த தனது அவதானிப்புகள் குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. உத்தேச உண்மை ஐக்கியம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு முழுமையானதாக காணப்படலாம் எனினும் இது இலங்கையில் ஆயுதமோதல்களின் போது இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்ட பல பொறிமுறைகளில் இதுவும் ஒன்று. அவ்வாறான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளுடன் தங்கள் சாட்சியங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். உதாரணத்திற்கு நாங்கள் அவ்வாறான ஒரு பொறிமுறையை நினைவுபடுத்துகின்றோம் 2010இல் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு. 2011 நவம்பரில் இந்த ஆணைக்குழு வெளியிட்ட தனது இறுதி அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்தது. இந்த பரிந்துரைகள் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் தோன்றிய பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டவை. பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தங்களின் பயங்கரமான அனுபவங்களை கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் பகிர்ந்துகொண்டனர். மேலும் தங்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் வெளியான எல்எல் ஆர்சியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்த்தனர். எனினும் இந்த பரிந்துரைகளில் பெருமளவானவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தங்களின் அதிர்ச்சி தரும் அனுபவங்களை மீண்டும் ஒருமுறை பகிர்ந்துகொள்வதை கட்டாயமாக்கும் உண்மையை கண்டறியும் புதிய ஆணைக்குழுவிற்கு வளங்களை ஒதுக்குவதற்கு முன்னர் கடந்தகாலத்தின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். இந்த சட்டமூலத்தில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ள அதேவேளை கடந்த காலத்தின் உண்மையை அறியும் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் கீழ உயர்மட்ட குழுவை ஏற்படுத்தவேண்டும். இந்த குழு உரியநிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குழுவின் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் உள்ளடக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட சமூகங்களிற்கு மீண்டும்பாதிப்புகளை ஏற்படுத்தும் மற்றுமொரு பொறிமுறை உண்மையை கண்டறிவதற்கு உதவப்போவதில்லை என நாங்கள் கருதுகின்றோம் முன்னைய ஆணைக்குழுக்களால் உண்மைகள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டிய நேரம் இது. மேலும் உண்மைக்கான கூட்டு உரிமையை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் பரந்துபட்ட மக்கள் மத்தியில் அவ்வாறான உண்மைகளை பகிர்ந்துகொள்வதற்கு உதவவேண்டும். இதன் காரணமாக முன்னைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புகள் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். முன்னைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழுக்களினால் கண்டறியப்பட்ட விடயங்களை முழுமையாக நாட்டிற்கு தெரியப்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்படுகின்றது. இந்த திட்டங்கள் முன்னைய ஆணைக்குழுக்களின் கண்டுபிடிப்புகளை தேசிய பாடத்திட்டத்திற்குள் உள்வாங்கலாம். இது தொடர்பான தேடல்களில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்களிற்கு உதவலாம். ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் மூலம் இதனை நடைமுறைப்படுத்தலாம். உண்மை மற்றும் பொறுப்புக்கூறலின் ஒன்றுடன் ஒன்று சார்ந்திருந்தல் தன்மையை இலங்கையின் தற்போதைய நிலைமாற்றுக்கால நீதி நிகழ்ச்சி நிரலிற்குள் உள்வாங்குவதற்காக(கடந்த காலத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட் ஆணைக்குழுக்கள் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய குற்றங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை சுமத்துதலை பரிந்துரை செய்துள்ளதை கருத்தில் கொள்ளும்போது) முன்னுரிமைக்குரிய விடயமாக அவ்வாறான குற்றச்சாட்டுகள் மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சுயாதீன பொறிமுறையை உருவாக்குமாறு பரிந்துரை செய்கின்றோம். அவ்வாறான பொறிமுறை போதியளவு வளங்களையும் நிபுணத்துவத்தையும் கொண்டிருக்கவேண்டும் - தேவைப்பட்டால் சர்வதேச நிபுணத்துவத்தையும் உள்வாங்கலாம். https://www.virakesari.lk/article/174176
-
துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நாட்டின் நலனை கருத்தில் கொண்டே துமிந்தவிற்கு பொதுமன்னிப்பை வழங்கினேன் - நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக் கடதாசியில் கோட்டா Published By: RAJEEBAN 17 JAN, 2024 | 03:04 PM நாட்டின் நலனை கருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக் கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார். எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன எனவும் சத்தியக் கடதாசியில் தெரிவித்துள்ள கோட்டாபய நான் தேசிய நலனை கருத்தில் கொண்டே பொதுமன்னிப்பை வழங்கினேன் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த சத்தியக் கடதாசியும் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/174161
-
IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜோர்ஜியாவாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 17 JAN, 2024 | 05:07 PM சுவிற்ஸர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva) மற்றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் (Gita Gopinath) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவும் உடனிருந்தார். https://www.virakesari.lk/article/174186
-
களைத்த மனசு களிப்புற ......!
பார்த்தேன் ரசித்தேன் சுவி அண்ணை.
- டாடோ என்கின்ற டாலிபோ