Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. படக்குறிப்பு, நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது. எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள் மீள்வதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோரமண்டல் ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகம் வழியாக கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப்லைனைப் பயன்படுத்தி கரையில் உள்ள கோரமண்டல் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. பட மூலாதாரம்,CCAG/X படக்குறிப்பு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மக்கள் நள்ளிரவில் கசிந்த அமோனியா நேற்று இரவு 12.45 மணிக்கு அந்த குழாயிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டுள்ளது. கசிவு ஏற்படத் தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து, கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமோனியா கசியத் தொடங்கியவுடன், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கோரமண்டல் நிறுவனம் சார்பாக செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பதிக்க வேண்டும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பட மூலாதாரம்,CCAG/X படக்குறிப்பு, வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் அன்புமணி ராமதாஸ் கூறியது என்ன? இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.” என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை- பூவுலகின் நண்பர்கள் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவமக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர்" "ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்" "30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மூலம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி வருத்தமளிக்கிறது. இதுமட்டுமின்றி எண்ணூரில் கடற்கரையோரம் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஏராளம் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. "கசிவால் பாதிப்படைந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனமே வழங்க வேண்டும்" என்று அந்த இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோரமண்டல் உள்ளிட்ட சிவப்பு வகை தொழிற்சாலைகளின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cyxvww5e67go
  2. கே.எல் ராகுல் போராட்டத்தால் தப்பித்த இந்தியா, வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரபாடா தனது துல்லியமான பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தபோதிலும், கே.எல்.ராகுலின் தீர்மானமான போராட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஓரளவு கவுரமான ஸ்கோருடன் தப்பித்துள்ளது. செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், 59 ஓவர்களுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களுடன் ஓரளவுக்கு பாதுகாப்பான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட கே.எல்.ராகுல் 70 ரன்களுடனும், சிராஜும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கே.எல்.ராகுல் மட்டும் நடுவரிசையில் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்க்காமல் இருந்திருந்தால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 2021ம் ஆண்டில் இதே செஞ்சூரியன் ஆடுகளத்தில் இந்திய அணி 113 ரன்களில் வென்றபோது ராகுல் சதம் அடித்திருந்தார். அதேபோன்ற ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார். ஆனால், கே.எல்.ராகுல் களத்தில் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, 80 சதவீதம் மிகுந்த கட்டுப்பாடுடன், ஒழுக்கத்துடன் அடிக்கப்பட்ட ஷாட்கள், பாரம்பரிய கிரிக்கெட் முறையை பின்பற்றியவிதம் ஆகியவைதான் அவரை களத்தில் நங்கூரமிடச் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்தியா 250 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்க இருக்கும் நிலையில், ஆடுகளம் காலையில் ஈரப்பதத்துடன் இருக்கும். களத்தில் டெய்லெண்டரான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மட்டுமே உள்ளனர். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்விங் பந்துவீச்சையும், காலை நேரத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும் ஆடுகளத்தில் வேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். ஸ்ட்ரைக்கே ராகுல் தொடர்ந்து வைத்துக்கொள்ளும்பட்சத்தில் இந்திய அணி 250 ரன்கள் வரை சேர்க்கலாம். இல்லாவிட்டால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க நேரிடலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் ஷர்துல் தாக்கூர் மற்றும் கே.எல்.ராகுல் வரலாறு படைக்குமா இந்தியா இந்திய அணி கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் விளையாடியுள்ளன. ஆனால், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை. 2010-11ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் தொடரை மட்டும் கங்குலி கேப்டன்ஷியில் தொடரை சமன் செய்தது. மற்றவகையில் இதுவரை எந்த தொடரையும வென்றதில்லை. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி 2006, 2010, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது தென் ஆப்பிரிக்காவில் நடந்த 15 டெஸ்ட்போட்டிகளில் இந்திய அணி 4 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது, 17 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது, 10 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. அதிலும் முதல் டெஸ்ட் நடந்துவரும் செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 2021ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அந்த நம்பிக்கையில்தான் இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்திய அணி தற்போது தலைமுறை மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் போன்றோருக்கு பதிலாக இளம் வீரர்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருக்கிறது. இதனால்தான் ஒவ்வொரு ஆட்டமும் இந்திய அணிக்கு கத்தியின் மீது நடப்பது போல்இருக்கிறது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் கலந்து போட்டியை எதிர்கொண்டு வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க அணி வாய்ப்பை இழந்த தென்ஆப்பிரிக்கா இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. தென்ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டனர், கேட்சுகளையும் பீல்டர்கள் கோட்டைவிட்டனர். தென் ஆப்பிரிக்காவில் காகிசோ ரபாடா, யான்செனைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 3 பந்துகளை தவறான லென்த்தில்தான் பந்துவீசினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் இன்னும் கட்டுக்கோப்புடனும், ஒழுக்கத்துடனும் பந்துவீசியிருந்து, பீல்டர்கள் கேட்சுகளை கோட்டைவிடாமல் இருந்திருந்தால், இந்திய அணியை 150 ரன்களில் சுருட்டியிருக்கலாம். முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா கை ஓங்கியிருக்கும். அந்த வாய்ப்பை பந்துவீச்சாளர்கள், பீல்டர்கள் தவறவிட்டனர். திசைமாறிய ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராத் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா செஞ்சூரியன் ஆடுகளம் கடினமானது, வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமானது. இந்த ஆடுகளத்தில் காலை நேரத்தில் நிலவும் ஈரப்பதம், கடினத்தன்மையைப் பயன்படுத்தி, இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவருக்கும் 2 கேட்சுகளை கோட்டைவிட்டபோது, ஆட்டம் திசைமாறியது. ரபாடா கூட தொடக்கத்தில் சிறிது லைன் லென்த்தை கண்டுபிடித்து பந்துவீச சிரமப்பட்டார். ஆனால், சரியான இடத்தைக் கண்டறிந்து அதில் பந்துவீசத் தொடங்கியும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 14-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனையும் படைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷர்துல் தாக்கூர் தவறான ஷாட்கள் இந்திய அணி டெஸ்ட் அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மாவுடன் களமிறங்கியது. முதல் 11 ஓவர்களில் 17 முறை தவறான ஷாட்களை ஆடி 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பது தெரிந்ததே, அதைத் தெரிந்து கொண்டு பேட்டை நீட்டி விளையாடுவது இதுபோன்ற நிலைக்குத் தள்ளிவிடும். அதிலும் ரோஹித் சர்மாவின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட ரபாடா ஷார்ட் பந்துவீச, சொல்லிவைத்தார்போல் ஃபைன்லெக் திசையில் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார். அனுபவம் குறைந்த ஜெய்ஸ்வால் அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் சென்ற பந்தை தேவையின்றி தொட்டு 17 ரன்னில் பர்கரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதுபோன்ற வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 3 ஸ்லிப் பீல்டர்களை நிறுத்திவைத்து பந்துவீசும்போது, அவுட்சைட் ஆஃப்திசையில் செல்லும் பந்துகளுக்கு மதிப்பளித்து லீவ் செய்ய வேண்டும் இல்லாவிட்டால், இக்கட்டான நேரத்தில் இதுபோன்று விக்கெட்டுகளை இழக்கநேரிடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே கில் பேட்டிங்கில் ஃபார்ம் இழந்து தவித்து வருகிறார். டெஸ்ட் போட்டியிலும் அவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. பர்கர் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து கில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டுகளுமே தவறான ஷாட்களை ஆடியதால், இழக்க நேர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட கோலி, ஸ்ரேயாஸ் அடுத்துவந்த விராட் கோலி, ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமாக ஆடி மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். இருவரும் 4 ரன்கள் சேர்த்திருந்தபோது கேட்சை தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் கோட்டைவிட்டனர். ஆனால், அந்த வாய்ப்பைக் கூட கோலியும், ஸ்ரேயாஸும் பயன்படுத்தவில்லை. ஏற்கெனவே செய்த தவறுக்குத்தான் 3 விக்கெட்டுகளை இந்திய அணிஇழந்திருந்த நிலையில், கோலிக்கும், ஸ்ரேயாஸுக்கும் கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை தக்கவைக்க இருவருமே தவறவிட்டனர். ரபாடா வீசிய துல்லியமான பந்தை டிபென்ட் செய்து பேக்ஃபுட்டில் ஆட ஸ்ரேயாஸ் முயன்றபோது க்ளீன் போல்டாகியது. 31 ரன்னில் ஸ்ரேயாஸ் வெளியேறினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அடுத்த சிறிது நேரத்தில் ரபாடாவின் மின்னல் வேக ஸ்விங் பந்துவீச்சுக்கு விராட் கோலி இரையாகினார். ரபாடா 142 கி.மீ வேகத்தில் வீசிய அவுட் ஸ்விங்கில், கோலியின் பேட்டில் பட்டு பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. விராட் கோலி 38 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சரிவிலிருந்து மீட்ட ராகுல் கே.எல்.ராகுல் களத்தில் இருந்தபோது இந்திய அணி 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அடுத்துவந்த அஸ்வினும் 8 ரன்னில் வெளியேறினார். 92 ரன்கள் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், அடுத்த 28 ரன்களுக்குள், மேலும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபின், தொடர்ந்து நெருக்கடி கொடுக்க தென் ஆப்பிரி்க்கப் பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் உணவு இடைவேளைக்குப்பின் லைன் லென்த்தை தவறவிட்டு, தவறான லென்த்தில் பந்துவீசியதால், கே.எல்.ராகுல் ஷாட்களை அடித்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். கே.எல்.ராகுல் தன்னுடைய பேட்டிங்கில் எந்த தவறான ஷாட்களையும் பெரும்பாலும் அடிக்காமல் 80 சதவீத ஷாட்களை கட்டுக்கோப்பாகவே ஆடினார். அதனால்தான் இதுபோன்ற ஆடுகளத்தில் அரைசதம்அடித்தநிலையிலும் களத்தில் நங்கூரமுடிந்தது. கே.எல்.ராகுல் தான் சந்தித்த ஒவ்வொரு 9 பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி அடித்தால்தான் உணவு இடைவேளைக்குப்பின் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்காமல் முழுக்க டிபென்ஸ் ப்ளே ஆடுவதற்கு ஏதுவாக இல்லை. இருப்பினும், ராகுலின் நேர்த்தியான பேட்டிங், பொறுமை, தவறான பந்துகளை மட்டுமே ஷாட்களாக மாற்றுவது என பாரம்பரிய கிரிக்கெட்டை மறக்காமல் பேட் செய்தார். கடந்த 2021ம் ஆண்டு செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்களில் வென்றது. அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் சதம்தான் இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாகஅமைந்தது. அதுபோல் இந்த ஆட்டத்திலும் கே.எல்.ராகுல் சதமும், இந்திய அணியின் வெற்றியும் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cjrge27jzeyo
  3. ஆழிப்பேரலையை நினைவுகூரும் சிற்ப கண்காட்சி! 26 DEC, 2023 | 02:42 PM ஆழிப்பேரலை பேரிடர் ஏற்பட்டு 19 ஆம் ஆண்டை நினைவுகூரும் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வும் அத் தாக்கத்தை எடுத்துக்காட்டும் சிற்பக் கண்காட்சியும் தெல்லிப்பழை ஆனந்தன் சிற்பாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது. ஆழிப்பேரலை தாக்கத்தை சித்தரிக்கும் விதமாக செதுக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு முன்னால் சுடரேற்றி உயிரிழந்த மக்கள் அஞ்சலி செலத்தியதையடுத்து இவற்றுடன் தத்துரூபமாகச் செதுக்கப்பட்ட பல்வேறு சிற்பங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172502
  4. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை.
  5. சர்ச்சைக்குரிய தடுப்பூசி இறக்குமதி : கெஹெலியவிடம் வாக்குமூலம் பதிவு! சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். இதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பிலுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று (26) முற்பகல் சென்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, சர்ச்சைக்குரிய தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் சுகத் ஜானக பெர்னாண்டோ ஆகியோர் முன்னதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்தோடு இந்த சம்பவம் தொடர்பில் மருத்துவ விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட நால்வர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/285992
  6. Published By: DIGITAL DESK 3 26 DEC, 2023 | 02:30 PM தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்போது ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் அங்கு ஆஜராகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172505
  7. சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி ! 26 DEC, 2023 | 09:07 AM சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் 'தேசிய பாதுகாப்பு தினம்' இன்று செவ்வாய்கிழமை (26) அனுஷ்டிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் இலங்கையில் 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 5,000க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது. இன்று அனுஷ்டிக்கப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சுனாமி அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172482
  8. போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புட்டின் ரஷ்யா கடந்த ஆண்டு தனது அண்டை நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது போர் தொடுத்தது. அந்த போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து மிகப்பெரிய பாதிப்புகளை ரஷ்யா ஏற்படுத்தி உள்ளது. என்றாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதிலடி தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள். உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படைகள் கணிசமான இடத்தை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளன. என்றாலும் உக்ரைனை இது வரை ரஷ்யாவால் பணிய வைக்க இயலவில்லை. உக்ரைன் நாட்டுக்கு சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி செய்து வருகின்றன. இதன் காரணமாக ரஷ்யாவால் முழுமையாக போரை முடிக்க இயலவில்லை. இந்த நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன. இதையடுத்து உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதை அவர் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியிடவில்லை. மிக இரகசியமாக அவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. உக்ரைனுக்கும் தனக்கும் நெருக்கமாக இருக்கும் சிலர் மூலம் போர் நிறுத்தம் செய்ய கடந்த செப்டெம்பர் மாதம் புட்டின் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மீண்டும் அவர் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. https://thinakkural.lk/article/285883
  9. மத்திய காசா மீது பயங்கர தாக்குதல்: 60 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி என காசாவின் அனைத்து பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் இராணுவம் சொல்கிறது. தற்போது இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் இராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 154 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 15 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள மகாஜி அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 15 வீரர்களை இழந்ததையடுத்து, மிகவும் அதிகப்படியான விலை என இஸ்ரேல் இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 240 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர். தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. தற்போது காசா முழுவதும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20,400 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். https://thinakkural.lk/article/285880
  10. யாயினி அக்காவும் லைக்கை போட குழம்பிற்றியள் போல!
  11. சுமே அக்காவின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி "மனமும் இடம்பெயரும்" புத்தகமாக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற வாழ்த்துகள்.
  12. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, நாளை நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாளை ( 26) 2004 சுனாமியின் 19 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும், இது இந்தியப் பெருங்கடலில் 10 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியது. https://thinakkural.lk/article/285915
  13. நந்தன் அண்ணைக்கு சத்திரசிகிச்சை(Laparoscopy) செய்து பித்தப்பை!(சரியோ தெரியவில்லை) கல் எடுத்தது.
  14. அதே வானம் அதே பூமி புத்தக வெளியீட்டிற்கு பேராசானுக்கு வாழ்த்துகள்.
  15. சும்மா கையால தொடுறதுக்கு ஏனண்ணை ஏணி?!😜
  16. காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 70க்கும் மேற்பட்டோர் பலி Published By: DIGITAL DESK 3 25 DEC, 2023 | 11:59 AM காசாவின் அல்மக்காசி அகதி முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 70க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தினத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பெருமளவு மக்கள் வசிப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். காயமடைந்த பலர் அருகில் உள்ள அல் அக்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகத்தில் இரத்தத்துடன் காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மூன்று வீடுகளிற்கு மேல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகளவு மக்கள் வசித்த குடியிருப்பு பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது மகளையும் பேரப்பிள்ளையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஒருவர் தாங்கள் காசாவிலிருந்து தப்பிவெளியேறியவர்கள் என தெரிவித்துள்ளார். அவர்கள் அழிக்கப்பட்ட கட்டிடமொன்றின் மூன்றாம் மாடியில் வசித்தனர் கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்ததில் அவர்கள் அனைவரும் எனது பேரப்பிள்ளைகள் மகள் கணவர் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றோம் பொதுமக்கள் அனைவரும் இலக்குவைக்கப்படுகின்றனர் பாதுகாப்பான இடம் இல்லை எங்களை காசாவிலிருந்து வெளியேற சொன்னார்கள் நாங்கள் மத்திய காசாவிற்கு வந்து உயிரிழக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/172437
  17. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அண்ணை. எனக்கு வழிகாட்டினது கள உறவுகள் தானே!😜 மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை.
  18. Published By: VISHNU 24 DEC, 2023 | 02:05 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும். ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பூஜா வஸ்த்ராக்கர், ஸ்நேஹ் ரானா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் முதல் இன்னிங்ஸில் 406 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியாவின் 7ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 274 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 122 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர். இங்கிலாந்துக்கு எதிராக வெதர்பி மைதானத்தில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அப்போதைய அணித் தலைவர் ஷுபங்கி குல்கர்னி, மினோட்டி தேசாய் ஆகியோர் பகிர்ந்த 106 ஓட்டங்களே இந்தியாவின் 8ஆவது விக்கெட்டுக்கான முன்னைய சாதனை இணைப்பாட்டமாக இருந்தது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் 197 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 261 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனை அடுத்து 75 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து உரிய வெற்றி இலக்கை அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 219 (தஹிலா மெக்ரா 50, பெத் மூனி 40, அலிசா ஹீலி 38, பூஜா வஸ்த்ராக்கர் 53 - 4 விக்., ஸ்நேஹ் ரானா 56 - 3 விக்., தீப்தி ஷர்மா 45 - 2 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 406 (தீப்தி ஷர்மா 79, ஸ்ம்ரித்தி மந்தனா 74, ஜெமிமா ரொட்றிக்ஸ் 73, ரிச்சா கோஷ் 52, பூஜா வஸ்த்ராக்கர் 47, ஷஃபாலி வர்மா 40, ஏஷ்லி கார்ட்னர் 100 - 4 விக்., (அனாபெல் சதர்லண்ட் 41 - 2 விக்., கிம் கார்த் 58 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 261 (தஹிலா மெக்ரா 73, எலிஸ் பெரி 45, பெத் மூனி 33, அலிசா ஹீலி 32, ஸ்நேஹ் ரானா 63 - 4 விக்.), ஹார்மன்ப்ரீத் கோர் 23 - 2 விக்., ராஜேஷ்வரி கயக்வாட் 42 - 2 விக்.) இந்தியா (வெற்றி இலக்கு 75) 2ஆவது இன்: 75 - 2 விக். (ஸ்ம்ரித்தி மந்தனா 38 ஆ.இ., ரிச்சா கோஷ் 13, ஜெமிமா ரொட்றிக்ஸ் 12 ஆ.இ.) ஆட்டநாயகி: ஸ்நேஹ் ரானா. https://www.virakesari.lk/article/172379
  19. இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஏராளனை வாழ்த்துங்களேன்!😜
  20. உலகளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 வீதத்தால் அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் Published By: DIGITAL DESK 3 23 DEC, 2023 | 06:09 PM உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் 52 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி, 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 வீதத்தால் குறைந்துள்ளதோடு, 3,000க்கும் மேற்பட்ட புதிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த டிசம்பர் 17ஆம் திகதி நிலவரத்தின்படி, கொவிட் வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து மொத்தமாக 772 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 7 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வைத்தியசாலைகளில் 118,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 1,600க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 18ஆம் திகதி வரை கொவிட் வைரஸ் திரிபான BA.2.86 ஒமிக்ரோனின் புதிய துணை வகையான JN.1 வைரஸின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், JN.1 வைரஸின் ஆபத்து தற்போது குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் தொடங்குவதால், JN.1 பல நாடுகளில் சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும். தொடர்ந்து, JN.1 வைரஸ் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அது இடர் மதிப்பீட்டை தேவைக்கேற்ப புதுப்பிக்கும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொவிட் தடுப்பூசிகள் JN.1 மற்றும் SARS-CoV-2இன் பிற மாறுபாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கும். கொவிட்-19 வைரஸால் பரவும் சுவாச நோய் மட்டுமல்லாது இன்ஃப்ளூயன்ஸா, ஆர்எஸ்வி மற்றும் குழந்தைகளிடையே நிமோனியா பரவல் ஆகியனவும் அதிகரித்து வருகின்றன. இதனால் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்தல், கொரோனா பரிசோதனை செய்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/172341
  21. ஐபிஎல் தொடரில் விலகும் ஹர்திக் பாண்டியா? காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஓல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து ஹார்திக் விலகினார். தொடர்ந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்த நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்பதால் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். தற்போது ஹர்திக் பாண்டியா விலகும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் சர்மாவே செயல்படுவாரா அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://thinakkural.lk/article/285791
  22. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து புது வாழ்வைத் தொடங்க இருந்தார்கள் அந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள். திருமணமான புதிது என்பதால், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கடை வீதியில் உள்ள துணிக் கடைகளில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து பறந்தனர். பட்டப் பகலில், பேருந்து நிலையத்திற்கு அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அந்த இளைஞர், செய்வதறியாத தவித்து அந்த இளம்பெண் அழுகுரலில் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளே அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள்தான், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமியின் 22 வயது மகன் சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கெளசல்யா. சங்கர் கொலை வழக்கில், 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, கெளசல்யா மற்றும் சங்கரின் சகோதரர்கள் என மூன்று தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால், அந்த வழக்கு இன்று வரை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படவில்லை. 'சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை' படக்குறிப்பு, மார்ச், 2016இல் நடந்த தாக்குதலின்போது, காயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கெளசல்யாவும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிகு்கம்போது காதலித்து வந்துள்ளனர். இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2016இல் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததுதான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறும் கெளசல்யா, சாதியின் குருதிவெறிக்குப் பலியான சங்கரின் இழப்பு இன்றும் தன்னை வாட்டுவதாகக் கூறினார். “இப்போது வரை என்னால் அந்த இழப்பைக் கடக்கவே முடியவில்லை. சிறைவாசிகள் காலையில் வெளியே வந்து, மாலையில் அறையில் அடைக்கப்படும்போது ஏற்படும் வெறுமையைப் போலத்தான் என் வாழ்வும் உள்ளது. சங்கரின் இழப்பு எனக்குத்தான். அவன் இல்லாத வெறுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது,” என்றார் கெளசல்யா. சம்பவம் நடந்த இடத்திலேயே சங்கர் பலியான நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளசல்யா, அதே ஆண்டு மே மாதம் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சங்கரின் குடும்பத்தினர், அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் உயிர் பிழைத்த கெளசல்யா, சங்கரின் கொலைக்கு நீதி பெறுவதில் உறுதியுடன் இருந்தார். “என்னால், ஒரு சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை. அந்தச் சம்பவம் இன்னும் என்னைத் துறத்திக்கொண்டே இருக்கிறது. சங்கருக்கு பிறகு, ஒவ்வொரு முறையும், யாரோ ஒருவர் சாதியின் பெயரால் கொல்லப்படும்போதும், நானே கொல்லப்படுவதாக உணர்கிறேன். சங்கருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்,” என்றார் கெளசல்யா. சங்கர் கொல்லப்பட்ட வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த எம். மணிகண்டன், எம்.மைக்கேல், பி செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார், மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர். வழக்கை எப்படி நிரூபித்தது போலீஸ்? பட மூலாதாரம்,KOUSALWAY/ FACEBOOK சங்கரின் கொலை வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த 11 பேரில், 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சம்பவம் பட்டப் பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்ததால், சம்பவம் முழுவதும் அங்கிருந்த கடைகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலமாகவும், நேரடி சாட்சியான கெளசல்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபித்ததாகக் கூறினார் அப்போது இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர். “இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகள் முக்கிய ஆதரமாக இருந்தன. இதற்காக, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை இல்லாத அளவில், சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாகப் பெரிதாக்கி, சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டி நிரூபித்தோம். அது தவிர, கெளசல்யாவின் தந்தை சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும், இந்த சதித் திட்டத்திற்கு அவர் எப்படி மூளையாகச் செயல்பட்டார் என்பதை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் உரையாடல்கள் மற்றும் பணப் பரிமாற்றத்தை வைத்து நிரூபித்தோம்,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த விசாரணை அதிகாரி. மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்காக கெளசல்யாவின் தந்தைதான் தலைமறைவாக இருக்க ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்ததையும் உறுதி செய்ததாகக் கூறினார் அந்த விசாரணை அதிகாரி. “சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், அதை நிரூபிப்பதற்கும் நேரடி சாட்சிகள் உள்ளன. ஆனால், இந்த நோக்கத்தையும், கூலிப் படையினருக்கு சின்னச்சாமி மூளையாக இருந்தார் என்பதையும் நிரூபிப்பதுதான் சற்று சவாலாக இருந்தது. ஆனால், சின்னச்சாமி சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசிக்கு இந்தக் கூலிப்படையினர் அழைத்துள்ளனர். மேலும், பழனியில் அவர்கள் தங்கியிருந்த அறையை இவர்தான் புக் செய்துள்ளார்,” என்றார் அந்த அதிகாரி. கெளசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை பட மூலாதாரம்,HANDOUT இந்த வழக்கின் விசாரணை மிகவும் துரிதமாக நடந்தது. சம்பவம் நடந்த மூன்று மாதங்களில், விசாரணையை முடித்து 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். கடந்த 2017 நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு விசாரணை முழுவதுமாக முடிவடைந்து, டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அப்போதைய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில் தீர்ப்பு வருவதால், அனைத்து தரப்பினரும் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். அதேநேரத்தில், திருப்பூர் நீதிமன்ற வளாகத்திலும், நீதிமன்றத்திற்கு வெளியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். டிசம்பவர் 12ஆம் தேதி, 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட எட்டு பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல், ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த சிலர், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் அவரது தாய் மாமா பாண்டித்துரை விடுதலையானதற்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த சிலர், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அழைத்துச் சென்றனர். “இது முழுக்க முழுக்க சாதி வன்மத்தில் நிகழ்த்தப்பட்ட கொலை. இதற்கு ஒரு கூட்டமே ஆதரவாக உள்ளது. இது மட்டும் இல்லை. அன்னலட்சுமியை சாதி சங்கத்தினர் ஒரு கூட்டத்திற்கு அழைத்து பாராட்டு விழா நடத்தி, வழக்கின் செலவிற்காகப் பணமும் கொடுத்துள்ளனர். இதையெல்லாம் யாரும் கருத்தில் கொள்வதே இல்லை. இப்படி இருக்கும் சூழலில் எப்படி என்னால் நிம்மதியாக வாழ முடியும்?” எனக் கேட்டார் கெளசல்யா. உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட சின்னச்சாமி பட மூலாதாரம்,GETTY IMAGES அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அரசுத் தரப்பும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மூன்று ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, 2020இல் முடிவடைந்தது. இந்த வழக்கில், ஜூன் 22, 2020இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியை குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்த நீதிமன்றம், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தன்ராஜையும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மணிகண்டனையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முறையாக நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினார் கெளசல்யா. “திருப்பூரில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஒவ்வொரு முறையும் என்ன நடக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தினர். நானும் நீதிமன்றத்தில் ஆஜரானேன். ஆனால், உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, நான் ஒரு முறைகூட அழைக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்போதுதான் எனக்குத் தெரியும்,” என்றார் கெளசல்யா. ஆண்டுகள் ஓடினாலும், சங்கரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை எனக் கூறும் சங்கரின் சகோதரர் விக்னேஷ், அண்ணன் சாவுக்கு எப்படியாவது நீதியைப் பெற வேண்டும் என்றார். “அண்ணா சங்கர் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். அவன் இருக்கும் வரை, அவன் தான் எங்களைப் பார்த்துக்கொண்டான். இப்போது, அவனும் இல்லை, எங்கள் அப்பாவும் சமீபத்தில் உயிரிழந்தார். அவன் இறப்புக்குக் கிடைக்கும் நீதி மட்டுமே எங்களுக்கு உண்மையான ஆறுதலாக இருக்கும்,” என்றார் விக்னேஷ். மூன்று ஆண்டுகளாகியும் விசாரணைக்கு எடுக்கப்படாத வழக்கு பட மூலாதாரம்,NATHAN G உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து தமிழ்நாடு அரசு சார்பிலும், கெளசல்யா சார்பிலும், சங்கரின் சகோதரர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை ஒரு முறைகூட அந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் கெளசல்யா. “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைப்பதற்கே பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வரைச் சந்திக்க பலமுறை முயன்றும், இன்று வரை அவரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. சிலர் மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் வழியாக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்கச் சொல்கிறார்கள். இதற்கு எப்படி கட்சிப் பிரமுகர்களை அணுகுவது என்று தெரியவில்லை,” என்றார் கெளசல்யா. மேலும், திமுக அரசு இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவதாக கெளசல்யா குற்றம் சாட்டினார். “ஆளுநர் தொடர்பான வழக்குகளுக்கு எல்லாம் அவசரம் காட்டும் திமுக அரசு, இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. இதுவொரு தனிநபர் கொலை வழக்கு மட்டுமல்ல. இந்த வழக்கின் தீர்ப்பு, இதுபோன்ற மற்ற சம்பவங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த வழக்கில் எங்களுடன் துணை நிற்போம் எனக் கூறிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் எங்களைக் கைவிட்டுவிட்டார்,” என்றார் கெளசல்யா. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விளக்கம் கேட்க பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும் தயார் அன்னலட்சுமியிடமும் பிபிசி பேச முயன்றது. அப்போது அவர்கள், “எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்கிறோம்,” என்றனர். 'ஆணவக் கொலையில் திமுக அலட்சியம்' இந்த வழக்கில் கெளசல்யா சார்பாக மேல்முறையீடு செய்துள்ள எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், திமுக அரசு ஆணவக்கொலை வழக்கில் மற்ற கட்சிகளைப் போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “மற்ற கட்சிகளைப் போல் அல்ல திமுக. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவற்றை ஆதரித்த பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சி, ஆணவக்கொலை வழக்குகளில் மெத்தனம் காட்டுவது கவலையாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார். நாங்களும் அவரைச் சந்தித்து, அதற்கான சட்ட முன்வடிவத்தையும் கொடுத்து வந்தோம். ஆனால், இன்று வரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் கதிர். https://www.bbc.com/tamil/articles/cjkgn33kgyzo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.