Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20261
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. புதிய தொழிலாளர் சட்ட விதிகள்: ஊதியம், பணிநேரம், பிஎஃப் குறித்து என்ன சொல்கின்றன? பத்மா மீனாட்சி பிபிசி 29 ஜூன் 2022, 00:44 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 29 சட்ட விதிகளில் ஊதியம் பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன. இந்த சட்ட விதிகளின் பலன்கள் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு பணியாளர்களையும் சென்றடைய வேண்டும் என அரசு கருதும் நிலையில், இச்சட்ட விதிமுறைகள் ஊழியர்களுக்கு இழப்பையே ஏற்படுத்தும் என தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சட்ட விதிமுறைகள் மாநில அரசுகள் மற்றும் இந்திய அரசு பணிகளில் உள்ள ஊழியர்களுக்குப் பொருந்தாது. இந்த விதிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முக்கியமான மாற்றங்கள் குறித்துப் பார்ப்போம். தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்களா? தமிழ்நாட்டில் மூடப்படும் ஃபோர்டு ஆலை: கலங்கும் தொழிலாளர் குடும்பங்கள் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம்: தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்ப்பது ஏன்? ஊதியம் புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்படை சம்பளமாக காட்டப்பட வேண்டும். இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின் பங்கு அதிகரிக்கும். இதனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் 'டேக் ஹோம்' வருமானம் குறையும் என, தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த மாற்றத்தால் அவர்களின் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் பி.எஃப் மற்றும் கிராஜூவிட்டி தொகை உயர்ந்து அவர்கள் மதிப்பான வாழ்க்கையை வாழ உதவும் என அரசு கூறுகிறது. "வருமானத்தில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளமாகவும், மீதம் உள்ள 50 சதவீதத்தை அலவன்ஸாகவும் பெறும்போது புதிய விதிகள் உங்களை பாதிக்காது," என வரிகள் குறித்த நிபுணரான கௌரி சத்தா பிபிசியிடம் முன்பு தெரிவித்திருந்தார். புதிய விதிகளின்படி, ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமமாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு மட்டுமே பலனளிக்கும் என, சிஐடியூ தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் சிந்து பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பணிநேரம் புதிய விதிகள் அமலுக்கு வந்தால், ஊழியர்கள் எத்தனை மணிநேரம் பணிபுரிய வேண்டும் என்பதிலும் மாற்றங்கள் வரும். தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் பணிநேரம் 8-9 மணிநேரங்களாக உள்ளது. ஆனால், புதிய விதிகளின்படி இது 12 மணிநேரமாக நீட்டிக்கப்படலாம் என, சிஐடியூவின் ஆந்திரபிரதேச மாநில தலைவர் நரசிங் ராவ் கூறுகிறார். "வார பணிநேரமான 48 மணிநேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்," என ஐதராபாத்தை சேர்ந்த நிதி ஆய்வாளர் கே.நாகேந்திர சாய் பிபிசியிடம் தெரிவித்தார். "புதிய விதிகளின்படி இந்த 48 மணிநேரம் என்பது நீட்டிக்கப்படாது. எனவே, ஒருவர் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் வார விடுப்பு வழங்கப்பட வேண்டும். தனிப்பட்ட நிறுவனங்களைப் பொறுத்து இந்த 48 மணிநேர பணி என்பது 4 நாட்கள், 5 நாட்கள் அல்லது 6 நாட்களில் பிரித்து வழங்கப்படலாம். இது ஒரு ஊழியரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கலாம், இம்மாற்றம் அவர்களுக்கு பலனளிக்காது," என்றார் அவர். பாதுகாப்பு, உடல் நலம், பணிச்சூழல் (தொழில் பாதுகாப்பு, உடல் நலம், பணிச் சூழல் விதிமுறைகள்) குறித்துப் பேசும் சட்டப்பிரிவு 25 (1)இன் கீழ், ஊழியர்களை ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய வைக்கக் கூடாது. ஆனால், பிரிவு 25(1)(பி)இன் படி, நிறுவனங்கள் அவர்களை 12 மணிநேரம் வரை வேலை செய்ய வைக்க முடியும். பிரிவு 26(1)இன் படி, ஊழியர்கள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு மேல் வேலை செய்யக் கூடாது. இந்த விதியை தளர்த்தும் அதிகாரம், பிரிவு 26(2)இன் படி அரசுக்கு உள்ளது. ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படவில்லையென்றால், அவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அந்த விடுமுறைகளை ஈடுகட்ட வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக நேர பணி (ஓவர் டைம்) அதிக நேரம் பணி செய்தல் முன்பு மாதத்திற்கு 50 மணிநேரங்களாக இருந்தது, இது 125 மணிநேரங்களாக அதிகரிக்கலாம். அதிக நேரம் பணி செய்வதற்கான ஊழியர்களின் விருப்பம், புதிய விதிகளின்படி தேவைப்படாது. அதிக நேர பணிநேரங்கள் குறித்து எவ்வித குறிப்பிட்ட விதிமுறைகளும் இந்த மாற்றங்களில் இல்லை என, தொழிலாளர் சங்க தலைவர்கள் கூறுகின்றனர். ஊழியர்கள் கூடுதல் நேரம் பணி செய்வது குறித்து முடிவெடுக்கும் முழு உரிமையும் நிர்வாகத்திற்கே இருக்கும். அதிக நேரம் பணி செய்ததற்காக வழங்கப்படும் ஊதியம் குறித்து புதிய விதிமுறைகளில் வரையறுக்கப்படவில்லை என, நரசிங் ராவ் கூறுகிறார். புதிய விதிகளின்படி, விடுமுறைகள் பெறுவதற்கு ஊழியர் ஒருவர் ஆண்டில் 180 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும், இது முன்பு 240 நாட்களாக இருந்தது. ஊழியர்களுக்கான மொத்த விடுப்பு எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது. பட மூலாதாரம்,DIGVIJAY SINGH பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை புதிய விதிமுறைகள் வழங்குகின்றன. பெண்களின் ஒப்புதலுடன் அவர்களை இரவு நேர பணியிலும் அனுமதிக்கலாம். ஆனால், நிறுவனங்கள் அவர்களுக்கான போதுமான பாதுகாப்பு மற்றும் பணியிட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். பி.எஃப் இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் பி.எஃப்-ல் 12 சதவீதத்தை தன் பங்காக வழங்குகிறது. புதிய விதிகளின்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்படும். "அடிப்படை தேவை மொத்த வருமானத்தில் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதால், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் பி.எஃப் பங்களிப்பு அதிகரிக்கும். இது நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். எனினும், ஊழியர்களின் ஓய்வுக்கு பிந்தைய பலன்கள் அதிகரிக்கும். பி.எஃப் பங்களிப்பு அதிகரிப்பதால், அரசாங்கத்தின் கருவூலத்திற்கு வரவு அதிகரிக்கும்," என நாகேந்திர சாய் தெரிவித்தார். புதிய விதிகளின்படி கிராஜூவிட்டி பங்கும் அதிகரிக்கும். எனவே புதிய விதிகளின்படி கிராஜூவிட்டியை கணக்கிடும் நடைமுறைகளில் மாற்றங்கள் இருக்கும். கிராஜூவிட்டி தொகையை ஊழியர்களுக்கு வழங்குவதற்கான குறைந்தபட்ச பணி ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளது. இது ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும், அவர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்குக் கிடைக்கும் சமூக பாதுகாப்புப் பலன்களும் கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES சுகாதார காப்பீடு அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையையும் இ.எஸ்.ஐ வரம்புக்குட்பட்ட கிளினிக்குகளிலும் பெறுவார்கள். இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் அதன் கிளைகள் மாவட்ட அளவிலும் நீட்டிக்கப்படும். இஎஸ்ஐ பலன்கள் தோட்ட தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்படும் என அரசு கூறியுள்ளது. இ.எஸ்.ஐ, பி.எஃப் இரண்டுக்கும் யூ.ஏ.என் எண் உள்ளது. இந்த எண் ஆதாருடன் இணைக்கப்படும். ஒப்பந்த பணிகள் தொழில் உறவுகள் சட்டப்பிரிவு 2, ஒப்பந்தப் பணிகளை சட்டப்பூர்வமாக்குகிறது. இதன்கீழ் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியர்களை நியமிக்கலாம். அந்த காலம் முடிந்தவுடன், எவ்வித முன்கூட்டிய நோட்டீஸோ அல்லது இழப்பீடோ இல்லாமல் அவர்களை பணியிலிருந்து நீக்கலாம். ஆனால், அவர்கள் ஒராண்டை நிறைவு செய்திருந்தால், நிரந்தர பணியாளர்களை போன்றே அவர்களுக்கும் கிராஜூவிட்டி பலன் உண்டு. "11 மாதங்களுக்கு மட்டுமே ஒப்பந்த பணி வழங்கப்பட்டிருந்தால், கிராஜூவிட்டிக்கான தகுதி இருக்காது. இந்த நடைமுறையை நிர்வாகங்கள், தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும்" என்கிறார், சிந்து. "பாலியல் தொழில் வருமானத்தில்தான் என் மகனை வளர்த்தேன்" - ஒரு பாலியல் தொழிலாளியின் டைரி விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை "16 தறி ஓட்டினாலும் கூலி பத்தலை" - விசைத்தறி தொழிலாளர்களின் கவலைகள் தேசிய இணையதளம் இதற்கான தேசிய இணையதளத்தில் அனைத்து ஊழியர்களும் தங்களை மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் தேசியளவில் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை அவர்கள் பெற முடியும். இவ்விதியின்கீழ், வேறு மாநிலங்களில் பணி செய்துவரும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போக்குவரத்துச் செலவுகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் பணியில் இணைந்ததற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டிலிருந்து பணி வீட்டில் இருந்து பணிசெய்யும் ஊழியர்களை, வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. "இந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கு, எந்த ஒரு மாநிலமும் சிறப்புத் தொழிலாளர் சட்டங்களை இயற்றுவதும் பெரும் தடையாக அமையலாம். நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களின் வணிக நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் தங்களைப் பதிவுசெய்தால், அவை மாநில சட்டங்களின் வரம்புக்கு உட்பட்டவை. நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களில், பணியாளர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது", என்கிறார் சாய். https://www.bbc.com/tamil/india-61972369
  2. சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி. வளர்ந்த நாடுகளிலும்கூட உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கூறப்படும் வேளையில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. சாலைகள்தோறும் திறந்தவெளி உணவகங்கள், அவற்றில் பரிமாறப்படும் விதவிதமான உணவு வகைகள், நிறைந்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்பது சிங்கப்பூரின் அடையாளங்களில் ஒன்றாக இன்றளவும் நீடித்து நிற்கிறது. இந்நிலையில், அந்தத் தீவு நாட்டில் உணவுப் பாதுகாப்பு குறித்த பேச்சும் கவலையும் அதிகரித்துள்ளது. யுக்ரேன் போரால் உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை விலைவாசி உயர்வு: இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி உலக நாடுகளுக்கும் பரவுமா? "சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர் இறக்குமதியை நம்பியுள்ள சிங்கப்பூர் உலகின் மிகச் சிறிய தீவு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் மிகவும் குறைவு. இதனால் தனது உணவுத்தேவையை பூர்த்தி செய்துகொள்ள 90 விழுக்காடு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதற்காக சுமார் 170 நாடுகளைச் சார்ந்துள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக, உலகெங்கும் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரில் உணவுப் பொருட்களின் விலை, ஒப்பீட்டு அளவில், கடந்த ஆண்டைவிட நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் 4.1%ஆக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இது 3.3% ஆக இருந்தது என சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் கண்காணிக்கவும் சிங்கப்பூர் உணவு முகமையை (Singapore Food Agency) கடந்த ஆண்டு அமைத்தது சிங்கப்பூர் அரசு. தற்போது இத்தீவு நாட்டின் உணவு உற்பத்தி பத்து விழுக்காடாக உள்ள நிலையில், அதை 30 விழுக்காடாக அதிகரிப்பது என்பது இந்த முகமையின் பணிகளில் ஒன்றாக உள்ளது. இதையடுத்து, பல்வேறு விதமான பண்ணைகள் தொடங்கி ஹைட்ரோபோனிக்ஸ் வரை அனைத்து விதமான நவீன உத்திகளிலும் முதலீடு செய்கிறது சிங்கப்பூர் அரசு. படக்குறிப்பு, கோப்புப்படம் ஏற்றுமதி தடைகளால் கவலைப்படும் சிங்கப்பூர் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகள், உள்நாட்டுத் தேவையை முதலில் ஈடுகட்டும் விதமாக பல்வேறு உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான வேளையில், பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தோனேசியா. மறுபக்கம், மலேசியாவும் கோழிகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. சிங்கப்பூருக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏனெனில், இத்தீவு நாட்டின் கோழிகளுக்கான தேவையில் சுமார் 34 விழுக்காட்டை பூர்த்தி செய்வது மலேசியாதான். 48% கோழிகள் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மலேசியாவில் இருந்து புதிதாக கோழிகளை இறக்குமதி செய்ய முடியாவிட்டாலும், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கோழிகளை வைத்து நிலைமையைச் சமாளிக்கிறது சிங்கப்பூர். ஆனால், அந்த கோழிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளில் வழக்கமான சுவை இல்லை என வாடிக்கையாளர்கள் புலம்புவதாக உணவகம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர். ஏற்றுமதி, இறக்குமதி விவகாரங்களால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலை, முப்பது முதல் 45 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, உணவுகளின் விலையை உயர்த்தாமல் இருப்பது இயலாத காரியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அண்மையில் தனது உணவகத்தில் பரிமாறப்படும் சில உணவு வகைகளின் விலையை உயர்த்தியபோது வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கமும் அச்சமும் தமக்கு இருந்ததாகச் சொல்கிறார் சிங்கப்பூரில் ஜப்பானிய உணவகத்தை நடத்தி வரும் சியோ. உணவு வகைகளின் விலையை குறைந்தபட்சம் 20 முதல் 35 விழுக்காடு வரை உயர்த்தினால் மட்டுமே இத்தொழிலில் தாக்குப்பிடிக்கவும் நிலைத்து நிற்கவும் முடியும் என்ற நிலை காணப்படுவதாக சியோ சொல்கிறார். ஆனால், இந்த அளவு விலையை உயர்த்தும் பட்சத்தில், தமது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களா எனும் சந்தேகம் எழுவதாக அவர் கவலைப்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் உணவுப் பண வீக்கத்தின் தாக்கத்தை உணர்கிறது சிங்கப்பூர் உணவுப் பண வீக்கத்தின் (food inflation) தாக்கத்தை சிங்கப்பூரர்கள் நன்கு உணர்ந்து வருவதாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அனைத்துலக அளவில் உணவுப் பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், உக்ரேன், ரஷ்யா போரின் காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. எனவே, உணவுப் பற்றாக்குறை என்பது அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். சில நாடுகள் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன எனில், அதனால் ஏற்படக்கூடிய வெற்றிடத்தை வேறு நாடுகளின் மூலம் நிரப்பிவிட இயலாது என்பதையும் துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ரஷ்யா, உக்ரேன் நாடுகளால் உணவு, உணவுப்பொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு ஏற்பாடுகளின் மூலம் நிரப்ப குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏற்றுமதி தொடர்பாக உக்ரேனுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அனைத்துலக உணவு விநியோகச் சங்கிலிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருக்க, உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்துவிட்டாலும்கூட, உணவுப்பொருட்களின் விலைகள் போருக்கு முந்தைய நிலைக்கு உடனடியாகத் திரும்ப வாய்ப்பில்லை என்பதும் பொருளியல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியன ஏற்கெனவே நிலவும் உணவுப் பற்றாக்குறையையும் உணவுப் பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதே இந்நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது. உணவுகளின் விலை சுமார் 20 விழுக்காடு வரை அதிகரிக்கும் என உலக வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சவாலான சூழ்நிலையில், சிங்கப்பூர் அரசாங்கம் தன் குடிமக்களுக்கான உணவுப் பாதுகாப்பை நல்லவிதமாக உறுதி செய்து வருகிறது என்றபோதிலும், அதன் எதிர்கால நிலை குறித்து இப்போதே கணிக்க இயலாது என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES 30க்குள் 30 : சிங்கப்பூர் அரசாங்கம் நிர்ணயித்துள்ள புதிய இலக்கு எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 30க்குள் - 30 (30 by 30) என்ற திட்டத்தை வகுத்துள்ளது. இந்த சுய உற்பத்தித் திட்டமானது, நெருக்கடியான தருணங்களில் ஓரளவு கைகொடுக்கும் என்றாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிகளுக்கு மாற்றாக அமைந்துவிடாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியையும், குடும்பங்களின் சராசரி வருமான்தையும் அதிகரிப்பதற்கான திட்டங்களில் முதலீடு செய்வதிலேயே சிங்கப்பூர் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. மாறாக, வேளாண் நடவடிக்கைகளில் முதலீடுகள் செய்யப்படவில்லை. "எனவே, பணம் இருக்கும் வரையிலும் விநியோகச் சங்கிலியில் எந்தவித தடையும் ஏற்படாத வரையிலும் தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய இயலும் என்பதே சிங்கப்பூர் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கக்கூடும்," என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சிங்கப்பூரில் செயற்கை உணவுப் பொருள் திட்டம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக, மிகப்பெரிய செயற்கைக் கோழி இறைச்சி உற்பத்தி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது. முப்பது விழுக்காடு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டத்துக்கு இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கும் என்றாலும், இயற்கையான உணவுக்கு முன்னுரிமை என்று மக்கள் முடிவெடுக்கும்போது சிக்கல் எழக்கூடும். மேலும், உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களின் விலையானது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களைவிட குறைவாக இருப்பதும் முக்கியம். இல்லையெனில், மக்கள் உள்நாட்டு உணவுப் பொருட்களை ஒதுக்கும் வாய்ப்புண்டு. இல்லையெனில், அப்பொருட்களுக்கு அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டியிருக்கும் என்பதும் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நெருக்கடி: வீசிய ரொட்டித் துண்டுகளை உண்டு வாழும் மக்கள் யுக்ரேன் போரால் உலகம் உணவு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் - எச்சரித்த ஐ.நா இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிறந்த கதை தெரியுமா? உணவுப் பற்றாக்குறையை சமாளிக்கும் சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறையை சிங்கப்பூர் எப்படி சமாளித்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக உருவெடுத்துள்ளது. உணவுப் பற்றாக்குறை எனும் பிரச்சினை தலைதூக்கும் என்பதை முன்கூட்டியே சிங்கப்பூர் கணித்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். எனவே, உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதி தடை சிங்கப்பூருக்கு கவலை தந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார். சிங்கப்பூர் போன்ற இறக்குமதி செய்யப்படும் உணவு, உணவுப்பொருட்களைச் சார்ந்துள்ள நாடுகளுக்கு தற்போதைய நிலை நிச்சயம் பெரும் சவாலாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், கொரோனா கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கிய நாள் முதலே, இதுபோன்ற பிரச்சினைகள் எழும் வாய்ப்புள்ளதை சிங்கப்பூர் எதிர்பார்த்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இன்று அந்நாடு உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க காரணமாக அமைந்தன. கோழி, முட்டை, காய்கறிகள் உட்பட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை முன்பே கணித்த சிங்கப்பூர் அரசு, அவற்றின் கையிருப்பு அளவை அதிகப்படுத்தி உள்ளது. வழக்கமாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளைத் தவிர, மேலும் பல பகுதிகளில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். பிரேசில், உக்ரேன், போலந்து ஆகிய நாடுகளில் இருந்து கோழிகளையும் முட்டைகளையும் அதிக அளவில் இறக்குமதி செய்துள்ள சிங்கப்பூர், காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்ற சில நாடுகளை அடையாளம் கண்டு இறக்குமதியாளரை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-61973629
  3. உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEIL JUGGINS/ALAMY சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதா? உங்களின் ஆரோக்கியம் குறித்து இந்த சுருக்கங்கள் சொல்வது என்ன? இந்த சுருக்கங்கள் குழப்பமான ஒன்று. தண்ணீரில் நனையும்போதும் நம் விரல்களில் மட்டுமே சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கால்கள், கைகள், முகம் என மற்ற உடல் பாகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை. வெந்நீரில் 40 டிகிரி செல்சியஸ் சூட்டில் (104 ஃபேரன்ஹீட்) கை, கால் விரல்கள் சுருங்குவதற்கு சுமார் 3.5 நிமிடங்கள் போதும். குளிர்ந்த நீரில் சுமார் 20 டிகிரி செல்சியஸ் (68 ஃபேரன்ஹீட்) சூட்டில், இதே மாற்றம் நிகழ்வதற்கு 10 நிமிடங்களாகும். கை, கால் விரல்கள் அதிகபட்ச சுருக்கத்தை அடைவதற்கு சுமார் 30 நிமிடங்களாகும் என்கிறது பல ஆய்வுகள். சவ்வூடுபரவல் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் செல்களுக்குள் நீர் பாய்வதால், தோலின் மேல் அடுக்குகள் வீங்கி, இருபுறமும் உள்ள கரைசல்களின் செறிவை சமப்படுத்த ஒரு சவ்வு முழுவதும் நீர் மூலக்கூறுகள் நகரும் போது, விரல் நுனியில் சுருக்கம் ஏற்படுவதாக பொதுவாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், 1935 வரையிலான நீண்ட காலத்திற்கு முன்பே, இந்த மாற்றத்திற்கு அதிக செயல்முறைகள் நிகழ்ந்திருக்கும் என, விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். காதலா, காமமா - உங்களுக்கு வந்திருப்பது என்ன? பிரேக்-அப் ஏன் நடக்கிறது? அறிவியல் விளக்கம் உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் எது? 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? "நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது" மேற்கையிலிருந்து செல்லும் முக்கிய நரம்புகளில் ஒன்றான இடைநிலை நரம்பில் பலத்த காயம் ஏற்பட்டவர்களின் விரல்களில் இத்தகைய சுருக்கங்கள் ஏற்படவில்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வியர்த்தல், ரத்தக் குழாய்களில் சுருக்கங்கள் ஏற்படுதல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் இந்த இடைநிலை நரம்பு உதவுகிறது. இதன்மூலம், தண்ணீரில் நனைவதால் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். பட மூலாதாரம்,ANDRII BILETSKYI/ALAMY சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் நரம்பியல் நிபுணர்கள் ஈனர் வைல்டர் ஸ்மித் மற்றும் அடெலின் சொவ் இருவரும் 2003ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விரல்களில் சுருக்கங்கள் ஏற்பட தொடங்கும்போது, விரல்களில் ரத்த ஓட்டம் பெருமளவு குறைவதை கண்டறிந்துள்ளனர். "விரல்கள் சுருங்கும்போது அதன் நிறம் வெளிரிப்போகும். இது அப்பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படுகிறது," என, மான்செஸ்டர் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரும் உளவியலாளருமான நிக் டேவிஸ் கூறுகிறார். "விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுவது நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், அதுவொரு காரணத்திற்காக நடைபெறுகிறது என்று அர்த்தம். அதாவது, இந்த சுருக்கங்கள் சில பலன்களை அளிக்கின்றன" என டேவிஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,ALAMY பொருளை இறுகப்பிடிப்பதில் உதவுகிறதா? 2020ஆம் ஆண்டில் லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் 500 பேர் பங்கேற்ற ஆய்வு ஒன்றில், ஒரு பிளாஸ்டிக் பொருளை இறுகப்பிடிக்க எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை டேவிஸ் கணக்கிட்டார். அப்போது, விரல்கள் ஈரமாக இல்லாமல் இருந்தவர்களுக்கு விரல்களில் இத்தகைய சுருக்கங்களுடன் இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவான ஆற்றலே தேவையாக இருந்தது. ஆனால், இதுவே ஈரமான பொருட்களை இத்தகைய சுருக்கங்களை கொண்ட விரல்கள் கையாளும்போது எளிதாக இருப்பது தெரியவந்தது. "நீங்கள் எதையாவது இறுகப்பிடிக்க கடினமாக அழுத்த வேண்டிய அவசியமில்லை என்றால், உங்கள் கைகளில் உள்ள தசைகள் சோர்வடையும், எனவே, நீங்கள் அந்த கடினமான வேலையை நீண்ட நேரம் செய்யலாம்," என்று அவர் கூறுகிறார். அவருடைய இந்த முடிவுகள், மற்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளுடன் ஒத்துப்போனது. அதாவது, ஈரமான பொருட்களை கையாள்வதை, நம் கைகளில் ஏற்படும் இத்தகைய சுருக்கங்கள் எளிதாக்குவது தெரியவந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில், ஒரு கொள்கலனில் உள்ள வெவ்வேறு வடிவிலான கண்ணாடி மார்பிள்களையும் தூண்டில் வெயிட்டுகளையும் மற்றொரு கொள்கலனுக்கு மாற்ற வேண்டும். இதில், ஒரு கொள்கலனில் உள்ள பொருட்கள் ஈரமானவை அல்ல. ஆனால், மற்றொரு கொள்கலனில் உள்ள பொருட்கள் தண்ணீருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்தன. விரல்களில் சுருக்கம் இல்லாமல் செய்தபோது அப்பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்ற 17 சதவீதம் அதிகமாக நேரம் எடுத்தது. ஆனால், விரல்களில் சுருக்கத்துடன் செய்தபோது 12 சதவீதம் விரைவாக அவற்றை வேறுகொள்கலனுக்கு மாற்றினர். ஆனால், ஈரமில்லாத பொருட்களை வேறு கொள்கலனுக்கு மாற்றுவதில் விரல்களில் சுருக்கத்துடன் செய்ததற்கும் அவை இல்லாமல் செய்ததற்குமான கால அவகாசத்தில் மாற்றம் இல்லை. நாம் சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் என்ன நடக்கும்? டீடாக்ஸ் டயட்டால் உடலில் நச்சுகளை வெளியேற்ற முடியுமா? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் அறிவியல் பரிணாம மாற்றதால் ஏற்பட்டதா? ஈரமான பொருட்களையும் அதன் மேற்பரப்பையும் இறுகப்பிடிக்க உதவுவதற்காக மனிதர்கள் கடந்த காலத்தில் சில சமயங்களில் விரல் சுருக்கங்களை பரிணாம மாற்றத்தின் வழியாக அடைந்திருக்கலாம் என்பதை இந்த ஆய்வுகளின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன. நம் முன்னோர்கள் ஈரமான பாறைகளில் நடப்பதற்கோ, மரங்களின் கிளைகளை இறுகப்பிடிப்பதற்கோ, அல்லது ஷெல் மீன்கள் உள்ளிட்ட இரையை பிடிப்பதற்கோ இது உதவியிருக்கலாம். மனிதக்குரங்குகளிடத்தில் இப்படி தண்ணீரில் நனையும்போது விரல்கள் சுருங்குகிறதா என்பது குறித்து இனிதான் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், வெந்நீரில் அதிக நேரத்திற்கு குளிக்கும் ஜப்பானின் மகாக்வே குரங்குகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், மற்ற விலங்குகளிடத்திலும் இது நடக்கிறதா என்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை. ஆனால், இதன் அர்த்தம் மற்ற விலங்குகளிடத்தில் இது நடக்காது என்பது அல்ல. விரல்கள் சுருக்கமடைவது நன்னீரைவிட உவர் நீரில் குறைவாகவே ஏற்படுகிறது. இதன்காரணமாக, முன்னோர்கள் கடற்கரைகளை ஒட்டி வாழ்வதை விட நன்னீரை ஒட்டிய சூழல்களில் வாழ உதவிய ஒரு தழுவலாக இவை இருக்கலாம். ஆனால், இவை எதற்கும் உறுதியான பதில்கள் இல்லை. இது தற்செயலான உடலியல் விளைவாகவும் இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். பட மூலாதாரம்,BENJAMIN TORODE/GETTY IMAGES உடல்நலனுக்கும் சுருக்கங்களுக்கும் என்ன தொடர்பு? இத்தகைய சுருக்கங்கள் நம் உடல் ஆரோக்கியம் குறித்த ஆச்சர்யமான தகவல்களையும் வழங்குகிறது. சொரியாசிஸ், வெண்படலம் உள்ளிட்ட தோல் நோய்கள் உள்ளவர்களுக்கு இத்தகைய சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் உள்ளவர்களுக்கு உள்ளங்கைகள் மற்றும் விரல்களில் அதிக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. மேலும், இந்த நோயை மரபு ரீதியாக கடத்துபவர்களிடத்திலும் இது ஏற்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சில சமயங்களில் குறைவான சுருக்கங்களே ஏற்படுகின்றன. இதயம் செயலிழந்தவர்களிடத்திலும் சுருக்கம் குறைவாகவே காணப்படுகிறது. இதய செயல்பாடுகளில் ஏற்படும் சில தடைகளால் இவ்வாறு ஏற்படுகிறது. ஒரு கையில் ஏற்படும் சுருக்கம், இன்னொரு கையில் ஏற்படுவதை விட குறைவாக ஏற்படுவது, பார்கின்சன் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. அதாவது, உடலின் ஒரு பாகத்தில் அனுதாப நரம்பு மண்டலம் சரியாக செயல்படாததால் இது ஏற்படுகிறது. (பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் ரிச்சர்ட் க்ரே என்பவர் எழுதியது) https://www.bbc.com/tamil/science-61972598
  4. இலங்கை போதைப் பழக்க நீக்க மையம்: 600 பேர் தப்பியோடியதன் பின்னணி 29 ஜூன் 2022, 10:49 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,COMMISSIONER GENERAL OF REHABILITATION இலங்கையின் பொலன்னறுவை - கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பியோடியுள்ளனர். புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு 8 மணியளவில் மோதலொன்று இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்த அமைதியின்மையின்போது, 36 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்குள் தொடர்ந்து அமைதியின்மை வலுப் பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அமைதியின்மை வலுப் பெற்றதை தொடர்ந்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பிரதான நுழைவாயிலை, சிலர் உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், சுமார் 500 முதல் 600 பேர் வரையானோர், பிரதான நுழைவாயிலின் ஊடாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது ஏன்? - முழுமையான விளக்கம் இவ்வாறு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர். கந்தகாடு பகுதியில் தற்போது போலீஸார் மற்றும் ராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. தப்பியோடிவர்கள் யார்? போதைப்பொருளுக்கு அடிமையாகும் நபர்களை தடுத்து வைத்து, புனர்வாழ்வு அளிக்கும் நிலையமாக கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் விளங்குகின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளை மீட்டெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறை வைக்கப்படுபவர்கள், இந்த புனர்வாழ்வு திட்டத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறை வைக்கப்படுபவர்களின் கல்வி நிலை, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பின்னணிக்கு ஏற்ற வகையில், இந்த புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்படும். உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் திட்டங்கள், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படும் என புனர்வாழ்வு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில், சுமார் 1000 பேர் புனர்வாழ்வுக்கான ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-61973679
  5. இலங்கையில் விடுதலைப் புலிகளை விடுவிக்க, தன்பாலின உறவை அனுமதிக்க 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரை ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து 29 ஜூன் 2022, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால், இந்த அறிக்கை, ஜனாதிபதியிடம் இன்று (29) முற்பகல் கையளிக்கப்பட்டது. இலங்கையில் ''ஒரே நாடு - ஒரே சட்டம்" என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. தொழில் வல்லுநர்கள், அரசு சாரா அமைப்புக்கள், மதக் குழுக்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 1,200ற்கும் அதிகமான சாட்சிகளை உள்ளடக்கிய, 43 பரிந்துரைகளுடனான 8 அத்தியாயங்களை கொண்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்ட நிலையில், அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிரதான பரிந்துரைகள் குறித்து, பிபிசி தமிழ் ஆராய்ந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம் இலங்கையில் போதைப் பழக்க நீக்க மையத்தில் இருந்து 600 பேர் தப்பியோட்டம் இலங்கையில் தன்பாலின உறவு கொள்ளுதல் மற்றும் தனிபாலின திருமணம் ஆகியவற்றிற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்பாலின உறவு கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ''ஒரே நாடு - ஒரு சட்டம்" ஜனாதிபதி செயலணி, தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என பரிந்துரை செய்துள்ள ஜனாதிபதி செயலணி, அவ்வாறு தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கினால், அது தன்பாலின உறவுகளை ஊக்குவிக்க வலிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் மற்றும் ராணுவத்தினரை, உரிய புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PMD யுத்த குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தம்மால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதகமான பதிலை வழங்கியதாக, ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரைத்தவை என்னென்ன? 1.அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்கு பயன்படுத்தும் நிதி, எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து, கணக்காய்வு செய்வதற்கு புதிய சட்டமொன்று எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட வேண்டும். 2. நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக, குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் வழக்கு விசாரணைகள் நிறைவு பெறும் வரை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சு பொறுப்புக்களை அவர்களுக்கு வழங்காத வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்;. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக, மக்களே தெரிவு செய்யும் பட்சத்தில், அவர்களை உறுப்பினர் பதவியில் மாத்திரம் இருக்க அனுமதி வழங்க முடியும். 3. அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளை நடத்துவதற்கு, கணக்காய்வு ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட வேண்டும். 4. மதங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத மாற்று நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். 5. தன்பாலின உறவு கொள்வது தவறு என குற்றவியல் கோவை சட்டத்தின் 365 ''அ" சரத்தில் உள்ளது. அந்த சரத்தை, குற்றவியல் கோவை சட்டத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6. திருநங்கை சமூகத்தின் பாலினம், சமூக அந்தஸ்த்து ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் வகையிலான அடையாள சான்றிதழ் ஒன்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் திருநங்கை சமூகம், சட்டத்திற்கு அமைவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேணடும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 7. திருநங்கை சமூகத்தின் நலத்திட்டத்திற்கு, அரச தலையீட்டில் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். 8. யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள ராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலி தரப்பினரை சமூகமயப்படுத்தும், புனர்வாழ்வு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு, அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். (இந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள், சமூகமயப்படுத்தலின் போது, சமூகத்தில் வாழக்கூடியவர்கள் என்பதை புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது உறுதிப்படுத்தியதன் பின்னரே விடுவிக்க வேண்டும்) பட மூலாதாரம்,GETTY IMAGES 9. நீதிமன்ற நடவடிக்கைகளை ஒளி மற்றும் ஒலி வடிவில் பதிவு செய்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 10. மொழி, இனம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி வழங்கக்கூடாது. அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு காலவகாசம் வழங்கி, கட்சிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கட்சிகளின் பெயர்களை மாற்றாத பட்சத்தில், கட்சியை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 11. நீதிமன்ற அவமதிப்பு குறித்த தண்டனைக்கான காலம் உள்ளிட்ட விடயங்களை நிர்ணயம் செய்யும் வகையிலான புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். 12. கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (இலங்கையில் சில குழந்தைகள் மதம் சார்ந்த கல்வியை மாத்திரம் கற்பதை தவிர்த்து, 16 வயது வரை கல்வி அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய, பாடசாலை கட்டாய கல்வி அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்விக்கு மேலதிகமாக வேறு கல்விகளை கற்க முடியும்) 13. விற்பனை நிலையங்களில் ஹலால் பொருட்களுக்கு வேறு பிரிவொன்றை ஆரம்பிக்க வேண்டும். (2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கண்காணிப்பு குழுவொன்றினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.) 14. பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும். 15. ஜாதியை வெளிப்படுத்தி, ஊடகங்களில் விளம்பரம் பிரசுரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 16. விசேட தேவையுடையவர்களின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்திற்கு அமைவானதாக, விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும். விசேட தேவையுடைவர்களுக்கான தற்போது காணப்படுகின்ற பிரத்தியேக பாடசாலைகளை தவிர்த்து, அவர்களை ஏனைய மாணவர்களுடன் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். 17. ஆதிவாசி சமூகத்தின் கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வன பாதுகாப்பு கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும். (ஆதிவாசிகள் வனப் பகுதிக்கு சென்றால், தற்போது கைது செய்வதற்கான அதிகாரம் பாதுகாப்பு பிரிவிற்கு உள்ளது). இந்த கட்டளை சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகளுக்கான அதிகார சபையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். 18. கைதிகளுக்கான சுகாதாரம், இடவசதி, உணவு போன்ற விடயங்களை உறுதி செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் கைதிகள் தொடர்பிலான சட்டத்தை பின்பற்றி, சிறைச்சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். 19. தந்தை சொத்துக்களை தமது பிள்ளைகளுக்கு கையளிக்காது உயிரிழக்கும் பட்சத்தில், அந்த சொத்து மூத்த ஆண் பிள்ளைக்கு சேரும் என்ற சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, மூத்த பிள்ளைக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 20. தனது கணவர் உயிரிழக்கும் பட்சத்தில், இஸ்லாமிய பெண்களுக்கு 4 மாதங்கள், 10 நாட்களுக்கு வழங்கப்படும் விடுமுறை தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு, மத வேறுபாடுகள், கணவர் அல்லது மனைவி என்ற வேறுபாடுகள் இன்றி, ஒரு மாத கால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருடமொன்றில் வழங்கப்படும் விடுமுறைகளில் இந்த விடுமுறை உள்வாங்கப்பட வேண்டும். 21. மீண்டும் இணைந்து வாழ முடியாது என இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு விவாகரத்தை வழங்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (தவறான நடத்தை மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தற்போது விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.) 22. தேசவழமை சட்டம், முஸ்லிம் சட்டம், மலைநாட்டு சட்டம் ஆகியன முழுமையாக நீக்கப்பட்டு, பொது சட்டத்தின் கீழ், அந்த சட்டங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணியினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் சமர்பித்து, அதற்கான அனுமதிகளை பெற இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலணி தெரிவிக்கின்றது. https://www.bbc.com/tamil/sri-lanka-61983001
  6. சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோரும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், சினிமா செய்தி தொடர்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், கலை இயக்குநர்கள், கதாசிரியர்கள், விஷுவல் எபெஃக்ட் கலைஞர்கள், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள், கௌரவ உறுப்பினர்கள் என உலகெங்கும் உள்ள 397 திரைத் துறையினர் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அகாடமியில் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 44% பெண்கள், 50% பேர் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். 37% பேர் போதிய பிரதிநித்துவம் இல்லாத இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் சாய் பல்லவி வைரல் காணொளி: "மதத்தின் பெயரால் தாக்குதல் நடந்தால் அது பாவம்!" 1986இல் வெளியான விக்ரம் திரைப்படம் எப்படியிருந்தது? முதல் முஸ்லிம் சூப்பர்ஹீரோவை கொண்ட 'மிஸ் மார்வெல்' அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக இருப்பவர்கள் சிறந்த படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களில் எவற்றுக்கு அந்த விருதை வழங்கலாம் என்று வாக்களிக்கலாம். ஒவ்வொரு துறையிலும் அதிக உறுப்பினர்களின் வாக்குகளைப் பெரும் படங்கள் அந்தந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும். இது மட்டுமல்லாது அகாடமி உறுப்பினர்கள் இந்த அமைப்பின் விருது மற்றும் சினிமா சார்ந்த பிற நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும். பட மூலாதாரம்,TWITTER/ITSKAJOLD பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் என்பது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைத் துறையினரை உள்ளடக்கிய ஓர் அமைப்பு. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி திரைத்துறையினர் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிறந்த திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகள் வழகுவதுடன் திரைத்துறையின் வளர்ச்சிக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது. இந்த அகாடமியின் ஆளுநர்கள் குழு சார்பிலும் ஆண்டுதோறும் மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் திரைத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்களுக்கும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பிக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வாங்கிய அரியானா டீ போஸ் அகாடமி உறுப்பினராவதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார். 'Student Academy Awards' எனும் பெயரில் மாணவர்கள் எடுக்கும் படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் உள்ளிட்டவற்றுக்கு 1972 முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களாக அகாடமி விருதை பெற்றவர்கள் பிற்காலத்தில், இதே அகாடமி வழங்கும் உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதையும் வாங்கிய நிகழ்வு 11 முறையும், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிகழ்வு 63 முறையும் நடந்துள்ளதாக அகாடமி இணையதளம் தெரிவிக்கிறது. அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் எனும் திரைப்படத் துறை சார்ந்த அருங்காட்சியகம் ஒன்றையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களில் பணியாற்றுபவர்கள் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும். கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வெவ்வேறு துறையினருக்கும் தனித்தனியாக இதில் மொத்தம் 17 கிளைகள் உள்ளன. விண்ணப்பம் போட்டால் உறுப்பினராக முடியுமா? இதில் திரை துறையைச் சார்ந்த எந்த ஒருவரும் விண்ணப்பிப்பதன் மூலம் உறுப்பினராகி விட முடியாது. ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் இரண்டு பேர் முன்மொழிவதன் மூலம் மட்டுமே இதில் உறுப்பினராக முடியும். தமிழும் சிங்களமும் இணைந்திருக்கும் இலங்கை சினிமா; நீடிக்கும் சிக்கல்கள் என்னென்ன? "தனுஷுடன் சேர்ந்து நடிக்க இதுதான் காரணம்"- செல்வராகவன் பேட்டி ஓ.டி.டி-யில் Binge watching: இதற்கு பின்னால் உள்ள உளவியல் என்ன? ஆண்டுதோறும் இவ்வாறு முன்மொழியப்படும் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களில் தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு உறுப்பினராக சேர்வதற்கான அழைப்பு அனுப்பப்படும். அவ்வாறே 2022ஆம் ஆண்டுக்கான அழைப்பு உலகெங்கும் 397 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அன்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் புதிதாக உறுப்பினராவதற்கு ஒருவரின் பெயரை மட்டுமே முன்மொழிய முடியும் என்று இந்த அமைப்பின் அலுவல்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. அகாடமியின் 17 கிளைகளில் ஒருவர் எதில் அங்கம் வைக்கிறாரோ அதே துறையைச் சேர்ந்தவரின் பெயரை மட்டுமே முன்மொழிய முடியும். 'மெம்பர்ஸ் அட் லார்ஜ்' என்று அழைக்கப்படும் கௌரவ உறுப்பினர்களுக்கான பெயர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாலும் பரிந்துரை செய்யப்படலாம். https://www.bbc.com/tamil/arts-and-culture-61977558
  7. எனக்கும் கணிதம் வேப்பங்காயாய் இருந்தது பத்தாம் வகுப்பில் குமார் மாஸ்ரரின் கற்பித்தலால் சாதாரண தரத்தில் C எடுத்தது மறக்க முடியாதது. சின்னையா மிஸ் போல நிறைய பேர் இருக்கினம். உங்களுடைய எழுத்து நானும் உங்கள் வகுப்பில் ஒருவனாக கற்பதாக எண்ண வைத்தது. நன்றி உங்கள் பகிர்வுக்கு.
  8. உதய்பூர் படுகொலை: தலைவெட்டி வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; பிரதமர் மோதிக்கும் மிரட்டல் - நடந்தது என்ன? 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, கன்ஹையா லால் தேலி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தையல்கடை நடத்தி வரும் ஒருவரை கடைக்குள் புகுந்த இருவர் கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தாங்கள் வெளியிட்ட காணொளியில், பாஜகவின் முன்னாள் உறுப்பினர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்த கொலை ஒரு பதிலடி என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் அந்த காணொளியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தையல் கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலியை கொலை செய்ததாக கருதப்படும் முகமது ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகிய இருவரையும் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீமில் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத சம்பவமா என்ற கோணத்திலும் விசாரணை இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்ட போலீசார் முயற்சித்து வருகின்றனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், இதுகுறித்து மேலதிக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த ஒரு குழுவை இந்திய உள்துறை அமைச்சகம் சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த சம்பவம், தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் காவல்துறையின் கூற்றுப்படி, தனது மகன் கன்ஹையா லால் தேலி ஃபேஸ்புக்கில் ஒரு ஆட்சேபனைக்குரிய இடுகையை தவறாகப் பதிவு செய்ததாக அவரது தந்தை கூறியுள்ளார். தலையை வெட்டி இளைஞர் கொலை: வீடியோ எடுத்து மிரட்டல் - ராஜஸ்தானில் பதற்றம் நூபுர் ஷர்மா விவகாரம்: அரபு நாடுகளில் எழும் எதிர்ப்பு; இந்தியாவின் பதில் என்ன? இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவர்கள் முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் ராஜ்சமந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதிர் சௌத்ரி கூறியதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உதய்பூர் போலீசார் சொல்வது என்ன? பட மூலாதாரம்,ANI இதுகுறித்து உதய்பூர் எஸ்பி மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு கொடூரமான கொலை. சில குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில குற்றவாளிகளை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் கொலை நடந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அனைத்து ஆவணங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தற்போது நடப்பு நிலைமையை நாங்கள் சமாளித்து வருகிறோம். எல்லாவற்றையும் பரிசீலித்து ஆட்சியருடன் ஆலோசித்து வருகிறோம்," என்றார். இந்த நிலையில், சம்பவ இடத்தில் 600 கூடுதல் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஹவா சிங் குமாரியா தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நூபுர் ஷர்மாவுக்கு எதிராக பதிவை எழுதியவரைக் கொல்லுமாறு முஸ்லிம் ஒருவர் தூண்டிவிடும் வீடியோ ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட கன்ஹையா லால் தேலி பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட கன்ஹையா லால் தேலி ஆடைக்காக அளவுகளை எடுத்தபோது. கன்ஹையா லால் தேலி, உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். செவ்வாய்க்கிழமை மதியம் துணி தைக்க வந்திருப்பதாக்கூறி இவரின் கடைக்கு வந்தவர்கள் அவரை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து வாளால் வெட்டினர். இதில் கன்ஹையா லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. ஒருவர் வாளால் வெட்ட மற்றொருவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார். இந்து அமைப்புகளின் கோபம் இந்த சம்பவத்தையடுத்து இந்து அமைப்புகள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. நகரின் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. காலவரையற்ற கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோத், அமைதி காக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் "உதய்பூரில் நடந்த இளைஞரின் கொடூரமான படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். குற்றவாளிகள் அனைவர் மீதும் (இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள்) கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவல்துறை குற்றத்தின் வேர் வரை செல்லும். அமைதி காக்குமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்."என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். "இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் சூழலைக் கெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீடியோவைப் பகிர்வதால், சமூகத்தில் வெறுப்பைப் பரப்பும் குற்றவாளியின் நோக்கம் வெற்றியடையும்"என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தலைவர்கள் கண்டனம் இந்தியாவையே உலுக்கியுள்ள இந்த படுகொலைக்கு நாடுமுழுவதும் கண்டம் வலுத்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "உதய்பூரில் நடந்த கொடூர கொலை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார். "இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து வெறுப்பை வெல்ல வேண்டும். அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 "உதய்பூரில் நடந்த கொடூர கொலை கண்டிக்கத்தக்கது. சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே எங்கள் கட்சியின் அடிப்படை நிலைப்பாடு" என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-61977624
  9. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி? 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INSTAGRAM திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதுதொடர்பான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனில்லாத நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணியளவில் அவர் உயிரிழந்தார். பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார் மீனா. இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையில், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு செய்திகள் வலம்வரும் நிலையில், சக திரைக்கலைஞரான குஷ்பு விளக்கமொன்றை அளித்துள்ளார். "ஊடகங்கள் சற்று பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவருக்கு 3 மாதங்களுக்கு முன்பாக கோவிட் ஏற்பட்டது. அதனால், அவரது நுரையீரலின் நிலை மோசமடைந்தது. கோவிட் காரணமாக அவர் மரணமடைந்ததாகக் கூறி தவறான செய்தியை பரப்பாதீர்கள். அச்சத்தை ஏற்படுத்தாதீர்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 வித்யாசாகரின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-61977629
  10. பிளாஸ்டிக் உற்பத்திக்கு இந்தியா முழுவதும் தடை: ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (29/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தினத்தந்தி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டு 12ம் தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்தது. குறைவான பயன்பாடு கொண்ட, அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்தும் இந்தியா முழுவதும் 1ஆம் தேதி முதல் தடை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் புதிய வணிக உரிமங்களை வழங்க உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும். தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதனை அமல்படுத்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதை சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. தடை விதிக்கப்படும் பொருட்கள்: பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி பிளாஸ்டிக் குச்சி பிளாஸ்டிக் கொடி மிட்டாயில் இருக்கும் பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் குச்சி அலங்கார வேலைகளுக்கான தெர்மாகோல் சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள் பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச எரிபொருள் சந்தை - கொள்முதலில் இந்தியா - இலங்கை இணைவா? பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இந்தியாவிடமிருந்து 4 தவணையாக எரிபொருளை ஒரு தவணைக்கு 40,000 டன் வீதம் இலங்கை அரசு வாங்க உள்ளதாக டெய்லி மிர்ரர் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. உலகச் சந்தையிலிருந்து மொத்தமாக எரிபொருளை சில தள்ளுபடிகளுடன் வாங்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில். இரு நாட்டு உறவு மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு, இணைந்து எரிபொருள் வாங்குவதற்கான முன்வடிவை இலங்கை இந்தியாவிடம் அளித்துள்ளது. அதாவது, உலக சந்தையிலிருந்து இந்தியா வாங்கும் அதே தள்ளுபடி சலுகைகளுடன் இலங்கைக்கும் சேர்த்து எரிபொருள் வாங்கும்படியான கோரிக்கை முன்வடிவு இது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த யோசனையை அண்மைக்காலங்களில் தெரிவித்து வந்தார். தற்போது நான்கு தொகுப்புகளாக எரிபொருள் கொள்வனவை முன்னெடுக்க இலங்கை அரசு யோசனை தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாவதாக டீசல் கப்பல் வந்து சேரும். பின்னர் தேவையின் அடிப்படையில் பெட்ரோல் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை விற்கப்பட்டு பணமாக மாற கூடுதலாக ஒருவார கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கை இந்தியாவிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெற்றுள்ளது என்று டெய்லி மிர்ரர் செய்தி தெரிவிக்கிறது. https://www.bbc.com/tamil/india-61977070
  11. நண்பர் அதிபராக இருக்கிறார், கல்விப் பணிப்பாளருடனான கலந்துரையாடலில் பிள்ளைகளுக்கு திரும்ப எழுத்து பழக்க வேண்டி வரும் என எச்சரித்ததாக கூறினார்.
  12. மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு? க. சுபகுணம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 28 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சென்னையில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் மாதவன், இந்தியாவின் செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளி திட்டத்தைப் பற்றிப் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் "நம் நாட்டில் தான் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், நட்சத்திரம், கோள்கள் அனைத்தும் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. அதற்கும் பஞ்சாங்கத்திற்கும் இன்றுள்ள ராக்கெட்ரிக்கும் ஏதும் தொடர்புள்ளதா?" என்று கேட்கிறார். அதற்குப் பதிலளித்த நடிகர் மாதவன், "நாம் மேற்கொண்ட மார்ஸ் மிஷனுக்காக அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகள் பலமுறை 800 மில்லியன், 900 மில்லியன் என்று செலவழித்து, 30-ஆவது முறை, 32-ஆவது முறையில் தான், அதிநவீன இன்ஜின் தொழில்நுட்பத்தின் மூலமாக, செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்புவதில் வெற்றி பெற்றார்கள். ஆனால், இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகச் சிறியது. அவர்களுடைய விண்கலம் செல்லும் தொலைவை விடக் குறைவாகத்தான் செல்லும். நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் - சொல்லும் செய்தி என்ன? சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வீடியோ பதிவிடும் முதல் வீராங்கனை விண்வெளியில் அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவுத் திட்டங்கள் அப்படியிருக்கும்போது, 2014ஆம் ஆண்டில், நம்பி நாராயணின் மருமகன் அருணன் மங்கள்யான் திட்டத்தின் இயக்குநராக இருந்தபோது, எந்த நேரத்தில், எந்த நொடியில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தைச் செலுத்தினால், செவ்வாய் கிரகத்தை செயற்கைக்கோள் சென்றடையும் என்பது பஞ்சாங்கத்தில் இருக்கும் 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்த செலஸ்டியல் வரைபடத்தைப் பயன்படுத்தி இந்தியா அனுப்பியது. பஞ்சாங்க வானியல் வரைபடத்தைப் பார்த்து, பூமியைச் சுற்றி, நிலவைச் சுற்றி என்று ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி, ஒரு விளையாட்டு பொம்மையைப் போல் செவ்வாய் கிரகத்திற்குத் தட்டிவிட்டார்கள். அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது. இப்போதும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த செயற்கைக்கோள் சாத்தியமானதற்கு நம்முடைய பஞ்சாங்கம் தான் காரணம்," என்று தெரிவித்திருந்தார். இதற்காக சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டபோது, நடிகர் மாதவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், "ஆல்மனாக் என்பதை தமிழில் பஞ்சாங்கம் என்று குறிப்பிட்டதற்கு எனக்கு இது தேவை தான். இந்த அளவுக்கு எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரண்டே இன்ஜின்களை வைத்து செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும் திட்டத்தைச் சாத்தியப்படுத்திய சாதனையை நம்மால் மறுத்துவிட முடியாது. விகாஸ் இன்ஜின் ஒரு ராக்ஸ்டார்," என்று குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 பஞ்சாங்கம் இந்தியாவுக்கு மட்டுமானதில்லை நடிகர் மாதவன் கூறுவதைப் போல் மங்கள்யான் திட்டத்தில் பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டதா, பஞ்சாங்கத்தில் செலஸ்டியல் வரைபடம், ராக்கெட் ஏவுவதற்கான அறிவியல் போன்றவையெல்லாம் பேசப்பட்டுள்ளனவா என்பதைப் பற்றியும் பஞ்சாங்கத்தின் பின்னணி பற்றியும் அறிந்துகொள்ள ஓய்வுபெற்ற அணுத்துறை விஞ்ஞானியும் ப்ரேக்த்ரூ சயின்ஸ் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினருமான டாக்டர்.வெங்கடேசனிடம் பேசினோம். அவர், "பஞ்சாங்கம் என்பதன் அடிப்படையில் இருக்கக்கூடிய நாட்காட்டி முறைக்கும் க்ரிகோரியன் நாட்காட்டி என்றழைக்கப்படும் நாட்காட்டி முறைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அது, தினசரி வானியல் நிகழ்வுகளைக் கண்காணித்து, கிரகங்கள், நட்சத்திரங்கள், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், அதேபோல் நிலவின் உதயம் மற்றும் அஸ்தமனம், அதன் வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றைக் கணக்கிடுவதன் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அப்போது மனிதர்களால் பார்க்க முடிந்தது ஐந்து கிரகங்களை மட்டுமே. ஆகையால், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று அவற்றுக்குப் பெயரிட்டனர். அதுபோக, ஞாயிறு என்று சூரியனையும் திங்கள் என்று நிலவையும் அடையாளப்படுத்தினர். இவற்றை அடிப்படையாக வைத்து, இந்திய நாகரிகங்களில் செய்யப்பட்ட கணிப்புகள் மற்றும் கண்காணிப்புகளின் மூலமாகச் செய்யப்பட்ட கணக்கீடுகள் ஆகியவை, ஏற்கெனவே, கிரேக்க, ரோம, அரேபிய நாகரிகங்களைப் போன்றவற்றோடு பரிமாறிக் கொள்ளபட்டுள்ளன. அவற்றில் இத்தகைய அறிவுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. யுவான் சுவாங் போன்ற அறிஞர்கள் வருகையின்போது, அரசர்கள் வருகையின்போது உடன் வரும் பண்டிதர்களுடன் பரிமாறிக் கொள்வது என்று, நம்மிடமிருந்து மற்ற நாகரிகங்கள் வானியல் கண்காணிப்பு முறைகளைப் பெற்றுக் கொள்வதும் மற்ற நாகரிங்களிடம் இருந்து நாம் நாகரிகங்கள் பெற்றுக் கொள்வதும் நடந்துள்ளன. ஆகவே பஞ்சாங்கம் என்பது இங்கு மட்டுமே இருக்கக்கூடிய பிரத்யேகமான விஷயமல்ல. உலகம் முழுக்கவுள்ள நாகரிகங்கள் முக்காலத்தில் இத்தகைய வானியல் கண்காணிப்பு மற்றும் கணக்கீடுகளைச் செய்துள்ளார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று பஞ்சாங்கம் என்று சொல்லும்போது மக்கள் அதைப் புரிந்துகொள்ளும் விதத்திற்கும் முன்னர் பஞ்சாங்கம் என்ற பெயரில் இருந்த அறிவுத் தொகுப்புக்கும் வேறுபாடு உள்ளது. எப்போது மழை வரும், வேளாண்மையில் விதைகளை விதைப்பதற்குச் சரியான நேரம் எது என்பனவற்றை முடிவு செய்வதற்கு, எந்தக் காலகட்டத்தில் போருக்குச் சென்றால் வசதியான சூழல் நிலவும் என்பனவற்றைப் போல, காலநிலை மற்றும் பருவநிலைகளைப் புரிந்துகொண்டு பயன்பாட்டு அடிப்படையில் செயல்பட பஞ்சாங்கம் உதவியது. இதைத் தாண்டி தனிமனித வாழ்வில் அதைப் பயன்படுத்தி எதிர்காலத்தை யூகிக்கும் பாதையில் அதைக் கொண்டு சென்றார்கள். அது அறிவியல்பூர்வமாகச் சாத்தியமில்லாதது. அதை சோதிடம் என்று கூறுகிறோம். அது அறிவியலுக்குப் புறம்பானது. பஞ்சாங்கத்திலுள்ள பழங்கால அறிவியல் கணக்குகள் தோராயமாக சரியானவைதான். அவை அறிவியல்பூர்வமானவை தான். ஆனால், இங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்கு மங்கள்யான் திட்டத்தில் பஞ்சாங்கம் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மையில்லை," என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பழங்கால அறிவியலே பஞ்சாங்கம் மேலும், "இப்படியான ஒரு திரைப்படத்தின் மூலமாக, பஞ்சாங்கத்தை வைத்து தான் செவ்வாய் கிரக பயணப் பாதையைக் கணக்கிட்டார்கள் என்று கூறுவது, தவறான புரிதலைத் தருகிறது. உண்மை என்னவென்றால், பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கும் கோட்பாடுகள், கோள்களின் கால, இடமாற்ற கணக்கீடு முறைகள் சரியானவை தான் . ஆனால், துல்லியமானவை அல்ல. ஏனெனில், சூரியன், நிலவு மற்றும் ஐந்தே கிரகங்களைக் கணக்கில் கொண்டு பஞ்சாங்கம் வடிவமைக்கப்பட்டது. அவற்றின் நகர்வுகளையும் அவற்றின் நிலையான நட்சத்திரங்களையும் வைத்து மேற்கொள்ளப்பட்ட பழங்கால அறிவியல் தான் பஞ்சாங்கம். ஆனால், இந்தக் காலத்து அறிவியல் அதையெல்லாம் பல மடங்கு தாண்டிவிட்டது. அதுமட்டுமின்றி, ராக்கெட் மற்றும் செயற்கைக் கோளின் எறிதடங்களை முன்னமே துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அதன்படி, ராக்கெட் ஏவப்பட்டு, திட்டமிட்ட பாதையில் பயணிக்கும். இதுகுறித்து நடிகர் மாதவன் கூறியதெல்லாம் சரிதான். ஆனால், ராக்கெட் எறிதடங்களை, செயற்கைக் கோளின் சுற்றுவட்டப் பாதையைக் கண்டறிவதற்கு பஞ்சாங்கத்தைத் தான் பயன்படுத்தினார்கள் என்பது தவறு. அது மிகவும் மேம்படுத்தப்பட்ட நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியோடு மிகத் துல்லியமாகக் கணக்கிடுப்பட்டுள்ளதாகும். 'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்? ஸ்டீஃபன் ஹாக்கிங்: காலப் பயணிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை கடவுள் குறித்து ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியது என்ன? நாம் பழங்கால வானியலை மதிக்க வேண்டியது அவசியம். இதேபோல், கிரேக்க, ரோம, அரேபிய, சீன நாகரிகங்களில் கூட இருக்கிறது. இவையெல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவையனைத்தையும் நாம் மதிக்க வேண்டும். ஆனால், இப்போது சீன வானியல், அமெரிக்க வானியல், இந்திய வானியல் என்று தனித்தனியாக இல்லை. உலகளவில் நவீனமயமான மேம்படுத்தப்பட்ட ஒற்றை அறிவியலையே பின்பற்றுகிறோம். இன்று பஞ்சாங்கத்தை வைத்து மங்கள்யான் திட்டத்தைச் சாத்தியப்படுத்தினார்கள் என்று கூறுவது, மக்கள் மனதிலுள்ள சில மூட நம்பிக்கைகளோடு தொடர்புள்ள பஞ்சாங்கத்தை அதாவது சோதிடத்தை போற்றுவதாகிவிடும். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதாகச் சொல்வதையும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மங்கள்யான் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியதையும் தொடர்பு படுத்தியதாகிவிடும். மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கைகளும் வலுப்பட்டுவிடும். அது அறிவியல்பூர்வமற்ற செயல்," என்று கூறினார். கலிலியோவும் பஞ்சாங்கமும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்ட அறிவியலுக்கும் இப்போதுள்ள அறிவியலுக்குமான வேறுபாடு, அது இப்போதைய கணக்கீடுகளைப் போல் துல்லியமாக இல்லாததன் காரணம் ஆகியவை குறித்து கேட்டபோது, "பஞ்சாங்கத்தின் வானியல் பார்வை, பூமியை மையமாகக் கொண்டிருந்தது. பூமியைச் சுற்றித்தான் சூரியன், நிலவு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை சுழன்றன என்ற பார்வையில் வானியல் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டன. பூமியை மையமாகக் கொண்டது என்பதை அறிவியல்பூர்வமாக மாற்றி சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றுகின்றன என்பதை கலிலியோ நிரூபித்ததே, வெள்ளி கிரகத்தின் வளர்பிறை, தேய்பிறை வடிவங்களை வைத்து தான். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் அதன் உள்வட்டத்தில் புதன், வெள்ளி ஆகிய கோள்கள் உள்ளன. பூமிக்கு வெளி வட்டத்தில் செவ்வாய் உள்ளது. ஆக உள்வட்டத்தில் இருக்கக்கூடிய கோள்கள் அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே வரும்போது, சூரிய ஒளி அதன் மீது படுவதற்கும் சூரியனுக்குப் பின்புறத்தில் இருந்து நாம் பார்க்கும்போது நிலவைப் போல் முழுதாகவோ அல்லது பிறையாகவோ தெரிவதும் வெள்ளி கிரகத்தில் சாத்தியம். பட மூலாதாரம்,GETTY IMAGES கலிலியோ அதை தொலைநோக்கி முலமாகப் பார்த்தார். இப்போதுகூட அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். நம் கண்களுக்கு முழுதாக இருப்பதைப் போல் தெரியக்கூடிய அந்த வெள்ளி கிரகம், தொலைநோக்கியில் பார்த்தால் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் தெரிவதை, பூமியை மையமாக வைத்துச் சுழலும் கோள்கள் என்ற கோட்பாட்டின் படி விளக்க முடியாது. அப்படி விளக்க முடியவில்லையே என்றபோது தான், கலிலியோ சூரியனை மையமாக வைத்துக் கணக்கிட்டுப் பார்த்தார். அப்போது, அதற்கான அறிவியல்பூர்வ விளக்கம் பொருந்தி வந்தது. சூரிய மையக் கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெள்ளி பிறையின் தோற்றத்தைச் சரியாகக் கணக்கிடுவதிலேயே புவிமைய கோட்பாடு கணக்கில் தவறும்போது, செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையைக் கணக்கிடுவதிலும் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தினால் நிச்சயமாகப் பெரியளவில் வேறுபாடு இருக்கும்," என்று கூறினார் டாக்டர்.வெங்கடேசன். மேலும், "நடிகர் மாதவன் நம்பி நாராயணன் போன்ற ஒருவரின் வாழ்க்கையைப் படமாக நடித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம். அறிவியல் சார் திரைக்கதைகள் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், இதுபோன்ற திரைப்படங்களில் நடிப்பவர்கள், அதீத உற்சாகத்தால் அறிவியலைத் தவறாகப் புரிந்துகொள்வதைத் தவிர்த்தால், அத்தகைய போலி அறிவியல் நம்பிக்கைகள் மக்களிடையேயும் அதிகரிப்பதைத் தடுக்கும்," என்று கூறினார். https://www.bbc.com/tamil/science-61952289
  13. இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படையினர் ஆகிய அடையாளம் காணப்பட்ட சில பிரிவினர் மாத்திரம், அத்தியாவசிய சேவையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தரப்பினர் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பொருளாதார சரிவிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் ரணில் அரசின் திட்டங்கள் என்னென்ன? இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது ஏன்? - முழுமையான விளக்கம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், எரிபொருள் இறக்குமதி தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றிரவு கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எட்டியதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த ஏனைய தரப்பினர், தமது வீடுகளில் இருந்தவாறு தமது பணிகளை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள அசௌரியமான சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை முறையாக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அவ்வாறு இல்லையென்றால், பெட்ரோலிய கூட்டுதாபனம் வசம் காணப்படுகின்ற, குறிப்பிட்டளவு எரிபொருளை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இதேவேளை, பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலான தீர்மானத்தை, அந்தந்த பாடசாலைகளின் பிரதானிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருக்கு எடுக்க முடியும் என கல்வி அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ஹேமந்த ஹேரத் பாரியளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்தாத, கிராமிய மட்டத்திலுள்ள பாடசாலைகளை நடத்தி செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதைதவிர, பிரதான நகரங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதிக்கு பின்னர் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதிக்கு பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை முறையாக விநியோகிக்கும் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதற்கான பொது போக்குவரத்து சேவைகளை, அரச பேருந்துகளை பயன்படுத்தி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை பெரும்பாலும் இடைநிறுத்துவதற்கு ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி துறை ஆகியவற்றை, கையிருப்பில் காணப்படுகின்ற எரிபொருளை கொண்டு, முன்னெடுத்து செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவசர நோய் நிலைமைகளின் போது என்ன செய்வது? இலங்கையில் தனிநபர்களுக்கு எரிபொருள் விநியோகம் எதிர்வரும் ஜுலை மாதம் 10ம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமது வீடுகளிலுள்ளவர்கள் அல்லது அயலவர்களுக்கு ஏதேனும் அவசர நோய் நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களின் உயிரை காப்பாற்றும் வகையில் செயற்பட முடியாத நிலைமையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். அவசர நோய் நிலைமையை எதிர்கொள்ளும் நோயாளி ஒருவரை, விரைவில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் தற்போது பாரிய சவால் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமையினால், பிறந்து இரண்டு நாளேயான சிசுவொன்று பதுளை மாவட்டத்தில் உயிரிழந்திருந்தது. அதேபோன்று, நிகவரெட்டிய பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கர்ப்பிணித் தாய் ஒருவர், தனது சிசுவை, வீட்டிலேயே ஈன்றெடுத்த சம்பவமொன்றும் பதிவாகியிருந்தது. கடந்த காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாதிப்புக்களை எதிர்நோக்கி மக்கள், இன்று முழுமையாகவே எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவசர தேவைகளின் போது என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார அமைச்சிடம், பிபிசி தமிழ் வினவியது. நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அவசர ஆம்புலன்ஸ் சேவையை, அவசர நிலைமைகளின் போது பயன்படுத்த முடியும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். இந்த ஆம்புலன்ஸ் சேவையானது, நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், மக்கள் தமக்கான போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை அடையாளம் கண்டு, அதற்கான முன் ஆயத்த திட்டங்களை செய்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், அவசர நோய் நிலைமைகள் ஏற்படும் போது, உதவிகளை வழங்கும் வகையில், தமது பிரதேசங்களில் அவசர தேவைக்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில், வாகனமொன்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு, சுகாதார தரப்பினர், பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர். அவசர நோய் நிலைமைகளின் போது, 1990 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார துறையினர் கேட்டுக்கொள்கின்றனர். போலீஸ் நிலையமொன்றில் ஒரு ஆம்புலன்ஸ் மாத்திரமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், அவசர தேவைகளின் போது, போலீஸார் தமது வாகனங்களில் உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றார்களா என, பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவிடம் வினவியது. பட மூலாதாரம்,GETTY IMAGES ''போலீஸ் அதிகாரிகள், மக்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்கின்றனர். போலீஸாருக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேவை தற்போது காணப்படுகின்றது. எனினும், பொதுமக்களுக்காக செய்ய இயலுமான அனைத்து விதமான சேவைகளையும் அர்ப்பணிப்புடன் செய்ய நாம் தயாராகவுள்ளோம்" என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ஊடக நிறுவனங்களை நடத்திச் செல்வதில் சிரமம் போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படை ஆகியன எரிபொருள் விநியோகிப்பதற்கான அத்தியாவசிய சேவைகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊடகத்துறையை இதில் சேர்க்கவில்லை. இதனால், இலங்கையில் ஊடகத்துறையை நடத்திச் செல்வதில் தற்போது பாரிய சிரமங்கள் காணப்படுகின்றன. ஊடக நிறுவனங்களிலுள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசலை விநியோகிப்பது தொடர்பில் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றுடன், ஊடகத்துறை அமைச்சு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார். எனினும், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தேவையான பெட்ரோலை விநியோகிக் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுப் போக்குவரத்து இயங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் ரயில்கள் இன்று சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும், தனியார் பஸ்களின் போக்குவரத்து இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன், மக்கள் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தும் முச்சக்கரவண்டி போக்குவரத்து தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வழங்கப்படுகின்றமையினால், மக்கள் இன்று பல்வேறு விதமான துன்பங்ளை அனுபவித்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/sri-lanka-61935978
  14. 90-92(போக்குவரத்து நெருக்கடி) வரை நாங்கள் கொஞ்சப் பேர் யாழ் இந்துவில் தவணைப் பரீட்சை எழுதுவது, அருகில் இருக்கும் விக்ரோறியாவில் கல்வி கற்பது என ஒழுங்கு படுத்தி இருந்தவை. அப்ப பஞ்சலிங்கம் சேர் யாழ் இந்துவின் அதிபர், விக்ரோறியா கல்லூரியில் சந்திரபாலன் சேர். இருவரிடமும் கதைத்து எமது கல்வி தொடர வாய்ப்பளித்தனர். இரு அதிபர்களும் எனது வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.
  15. பிறந்தநாள் வாழ்த்துகள் ஈழப்பிரியன் அண்ணை, வாழ்க வளத்துடன்.
  16. "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 40 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EYESWIDEOPEN தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலையின் முதலாம் ஆண்டில் பள்ளி செல்லும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் குறைந்தது 511 பேருக்குத் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது என்கிறது, சமக்ரா சிக்‌ஷா அபியானின் சமீபத்திய புள்ளிவிவரம். சமக்ரா சிக்‌ஷா அபியான் என்பது பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை எடுக்கப்பட்ட இந்த 'அவுட் ஆஃப் ஸ்கூல் சில்ட்ரன்' புள்ளிவிவரம் (Out of School Children), நீண்டகாலமாக பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இவர்களுள் பெரும்பாலானோர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவிட்டனர் என இந்த ஆய்வு கூறுகிறது. திருமணம் செய்துவைக்கப்பட்ட பள்ளி மாணவிகளில் 11ஆம் வகுப்பு மாணவிகள் 417, பத்தாம் வகுப்பில் 45 பேர், ஒன்பதாம் வகுப்பில் 37 பேர் , எட்டாம் வகுப்பு மாணவிகளில் 10 பேரும் அடக்கம். இந்த ஆய்வு விவரங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை, சமக்ரா சிக்‌ஷா அபியான் தரப்பிலிருந்து அதிகாரிகள் கருத்துக் கூற முன்வரவில்லை. தடைகளைத் தாண்டி கனவுகளைத் துரத்தும் இந்தியாவின் குழந்தை மணப்பெண்கள் குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது? தமிழகத்தில் நடந்த 318 குழந்தை திருமணங்கள் - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி காரணம் குழந்தை திருமண தடைச் சட்டம் 2006இன்படி, திருமணம் நடைபெற ஒரு பெண் 18 வயது பூர்த்தி செய்தவராகவும், ஆண் 21 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டும். இந்திய அரசின் ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி (NFHS 5), தமிழ்நாட்டில் 12.8% குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. குழந்தைத் திருமணங்களின் தேசிய சராசரி 23.3 சதவீதமாக இருக்கிறது. அதேபோன்று, 2019ஆம் ஆண்டில் 2,209 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக, தமிழ்நாடு சமூக நலத்துறையிடமிருந்து பெறப்பட்ட ஆர்டிஐ தகவல் கூறுகிறது. இதே எண்ணிக்கை பெருந்தொற்று காலத்தில் 2020ஆம் ஆண்டில், 3,208 ஆக உயர்ந்துள்ளது. "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருந்தாலும், பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏன் குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் நடைபெறுகின்றன என்பது குறித்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் 'தோழமை' அமைப்பின் இயக்குநர் தேவநேயன் பிபிசி தமிழிடம் பேசினார். "குழந்தைத் திருமணம் என்பது தமிழ்நாட்டின் பிரச்னை மட்டும் அல்ல. உலகளாவிய பிரச்னை. குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன என பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொண்டதே வரவேற்கத்தக்கது. இதற்கான தீர்வு கல்வித்துறையோ, சமூக நலத்துறையிடமோ மட்டும் அல்ல. குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கான முதன்மை காரணத்தைக் கண்டறிய வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்போது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என பொதுச் சமூகம் நினைக்கிறது. ஆனால், குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தச் சென்றால் எங்களை விரட்டிக்கொண்டு வருவார்கள். குழந்தைத் திருமணங்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என சமூகம் நினைக்கவில்லை. சில பழங்குடி இனங்களில் பெண்கள் பூப்பெய்திய உடனேயே அவருக்குத் திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக குழந்தைத் திருமணம் செய்து வைக்கின்றனர்" என்றார் தேவநேயன். பெற்றோர்கள் குழந்தைத் திருமணங்கள் செய்துவைக்கும் நிலையில், சமீப காலமாக வளரிளம் பெண்கள் தாங்களாகவே விரும்பி திருமணம் செய்வது அதிகரித்துவருவதாக தேவநேயன் கூறுகிறார். "வளரிளம் பெண்களுக்கு வாழ்க்கை திறன் கல்வி நடத்தப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உள்ளனர். அப்படி தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்த 17 வயது சிறுமி ஒருவர், 'எனக்கு கன்னி கழிஞ்சிடுச்சு, அதனால் திருமணம் செய்துகொண்டதாக' என்னிடம் கூறினார். இம்மாதிரியான விஷயங்களில் பெண் குழந்தைதான் தவறு செய்துவிட்டாள் என பேசுவார்கள். 18 வயதுக்குள்ளான ஆண் - பெண் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிகழ்வுகளும் உள்ளன. இதுவும் மிக ஆபத்தான போக்கு" என தெரிவித்தார் தேவநேயன். "குழந்தைத் திருமணங்களை தடுத்தால் எங்களை விரோதியாக நினைக்கிறார்கள்" குழந்தைத் திருமணங்களை தடுக்கச் செல்லும்போது, தானே சம்மதித்துத்தான் திருமணம் நடைபெறுவதாக, தங்கள் பெற்றோருக்காக சிறுமிகள் மாற்றிப் பேசுவார்கள் என, 'தோழமை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கூறுகிறார். "கொரோனா காலத்தில் பெரும்பாலும் வளரிளம் பெண்கள் தாங்கள் விரும்பியவருடன் இணைந்து கர்ப்பமான சம்பவங்கள் உள்ளன. அதனை மறைப்பதற்காக பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்தனர். கொரோனா காலத்தில் வீட்டோடு திருமணம் செய்துவைக்கலாம், வரதட்சணை வேண்டாம் என மாப்பிள்ளை வீட்டார் கூறியதால் பொருட்செலவுகளை குறைப்பதற்காகவும் 18 வயதுக்குக் கீழான பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இம்மாதிரியான குழந்தைகளை மீட்கும்போது அவர்களின் பெற்றோர் தன் மகள் 18 வயதுக்குக் கீழானவர் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இதுதவிர, 'நானே சம்மதித்துத்தான் திருமணம் நடைபெற்றது' என அந்த பெண் குழந்தைகளும் விடாப்பிடியாக கூறுவார்கள். பெற்றோர்களுக்காக மாற்றி சொல்வார்கள். குழந்தைகளை மீட்கச் சென்றால், ஒரு கிராமமே எங்களை விரோதி போன்று பார்க்கும். அந்த பகுதிகளில் குழந்தைகளுக்கென எந்தவொரு விழிப்புணர்வு திட்டத்தையும் செயல்படுத்தவிட மாட்டார்கள்" என தெரிவித்தார். "திறன் வளர்ப்பு கல்வி அவசியம்" கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு திறன் வளர்ப்பு மையங்களை ஏற்படுத்துவது, வளரிளம் பெண்கள் தாங்களாகவே விரும்பி 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் என்கிறார், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார். பட மூலாதாரம்,SARANYA JAIKUMAR/FACEBOOK "கட்டாய கல்விச் சட்டம் 14 வயதுவரைதான் உள்ளது. அதன்பிறகு ஒரு மாணவர் படிக்கவில்லையென்றால் வேலைக்கு சென்றுவிடுவார். ஆனால், பெண் பிள்ளைகளை பொறுத்தவரையில் கல்வியை தொடர முடியாமல் போனால், அவர்கள் வேறு யாரையும் காதல் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு முன்கூட்டியே திருமணம் செய்துவைக்கின்றனர். முழுநேர பள்ளிக்கு மாற்றாக திறன் வளர்ப்பு மையங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் இல்லை. அவற்றை ஏற்படுத்தி அவர்கள் தொழில் முனைவோராக ஆவதற்கான திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஆசிரியர்களே ஏற்படுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார். இன்னும், 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, 18 வயதானவுடனேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அப்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ஆம் வகுப்பை தற்போது முடித்துள்ள 17 வயது மாணவி ஒருவருக்கு ஜூன் 30 அன்றுதான் 18 வயது தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னரே அவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தனக்கு செப்டம்பர் 1 திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார். குழந்தைத் திருமண தடைச் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது. அம்மாணவி கூறுகையில், "தனியார் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே வீட்டில் திருமண பேச்சை எடுத்துவிட்டனர். உறவினர் ஒருவரை திருமணம் செய்துவைக்க உள்ளனர். 12ஆம் வகுப்பில் 398 மதிப்பெண்கள் பெற்றேன். தேர்வு சமயத்திலேயே திருமண பேச்சை எடுத்ததால், என்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. திருமணம். எனக்கு 17 வயது நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த 17ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனக்கு வழக்கறிஞராக வேண்டும் என்பது விருப்பம். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அப்பா மீதுள்ள அன்பை வைத்து 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்கின்றனர். திருமணத்தின்போது எனக்கு 18 வயதாகிவிடும் என்பதாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதாலும் இவ்வாறு செய்கின்றனர்" என்றார். "பாலின நீதியை கற்றுத்தர வேண்டும்" தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறும் குழந்தைத் திருமணங்களை தடுப்பது குறித்துப் பேசிய தேவநேயன், "ஒரு பெண் குழந்தை 5 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கணினியிலேயே 'பாப் அப்' ஆகும் முயற்சி பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தினால், குழந்தைத் திருமணங்கள் குறையும். ஆண் குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், பாலின நீதி குறித்து கற்றுத்தர வேண்டும். போக்சோ சட்டம் குறித்து சொல்லித்தர வேண்டும். 'தாலிக்குத் தங்கம்' என்பதே அரசாங்கம் வரதட்சணை கொடுப்பது போன்றுதான். அதற்கு பதிலாக, இப்போது மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 கொடுப்பது மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதும் தீர்வாக இருக்க முடியாது. 18-21 வயது வரையிலான இடைப்பட்ட காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதில் கேள்வி எழுகிறது. இதனால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கவே செய்யும். குழந்தைத் திருமணங்களால் நடைபெறும் பாதிப்புகள், பதின் பருவத்தில் கர்ப்பமாகுதலின் பாதிப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வது குறைந்துவிட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்" என்றார், தேவநேயன். https://www.bbc.com/tamil/india-61965501
  17. இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இன்று (27) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்ணும் அவரின் இலங்கைத் தோழியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர். மூடப்பட்ட அறையில் வைத்து குறித்த வழக்கை விசாரித்த நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா; இலங்கைப் பெண்ணை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததோடு, அடுத்த மாதம் 29ஆம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார். அதுவரை அந்தப் பெண்ணை அவரின் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்குமாறும் உத்தரவிட்டார். அதேவேளை இந்தியாவிலிருந்து வந்துள்ள - இலங்கைப் பெண்ணின் தோழியை, இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார். இந்தியா, தமிழகம் - குன்னத்தூரிலிருந்து - தனது இலங்கைத் தோழியை திருமணம் செய்யும் நோக்குடன் இலங்கை வந்த 24 வயதுடைய தமிழ் பெண்ணும், இலங்கையைச் சேர்ந்த அவரின் முஸ்லிம் தோழியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். தோழியை தேடி வந்த இந்திய பெண் சேர்ந்து வாழ விருப்பம்: மனநல அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவு தன்பாலின ஈர்ப்புக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய பிரிட்டன் சௌரவ் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி இந்தியப் பெண்ணுடைய இலங்கைத் தோழியின் தந்தை, அக்கரைப்பற்று போலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்படி இரு பெண்களையும் கைது செய்த பொலிஸார், கடந்த 22ஆம் தேதி நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போது தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக, அந்தப் பெண்கள் இருவரும் நீதிமன்றில் தெரிவித்தார்கள். இதையடுத்து அவர்கள் இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து - மனநல மருத்துவ அறிக்கையைப் பெற்று, இன்று 27ஆம் தேதி (இன்று) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பணித்த நீதவான், அதுவரையில் அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் முதலாவது சந்தேக நபராக இலங்கைப் பெண்ணும், இரண்டாவது சந்தேக நபராக இந்தியப் பெண்ணும் பெயரிடப்பட்டனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இலங்கைப் பெண்ணின் தந்தையான முறைப்பாட்டாளரின் சார்பாக சட்டத்தரணிகள் ஏ.எம். ஜெனீர் மற்றும் எம்.ஐ. றிஸ்வான் ஆகியோர் ஆஜராகினர். சந்தேக நபர்களான இரண்டு பெண்களின் சார்பாகவும் சட்டத்தரணி சதுர்திகா ஆஜரானார். இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்பொன்று மேற்கொண்டது. பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிப்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் இன்றைய வழக்கு விசாரணையின் போது; இலங்கையில் பெண்ணும் பெண்ணும் திருமணம் முடிப்பது குற்றம் என, சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அதேவேளை அவ்வாறான திருமணத்துக்குரிய சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இல்லை என்பது பற்றி குறிப்பிடப்பட்டதாகவும், வழக்கில் ஆஜரான சட்டத்தரணியொருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "அதேவேளை இலங்கை வந்துள்ள இந்தியப் பெண், இலங்கையின் குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில் எவ்வித குற்றமும் மேற்கொள்ளவில்லை எனும் விடயம் - வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டப்பட்டது". எனவும் சட்டத்தரணி கூறினார். "இந்தக் காரணங்களை முன்னிறுத்தி, இந்தியப் பெண்ணை இந்த வழக்கிலிருந்து நீதவான் விடுவித்ததோடு, சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக, குறித்த பெண்ணை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக, அவரின் நாட்டுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்" எனவும் அந்த சட்டத்தரணி குறிப்பிட்டார். இதற்கிணங்க வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியப் பெண்ணை அவருக்காக ஆஜரான சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பிலுள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் அழைத்துச் சென்றனர். இதேவேளை, வழக்கின் முதலாவது சந்தேக நபரான இலங்கைப் பெண்ணை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த நீதிமன்றம், எதிர்வரும் 29ஆம் தேதி - அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதுவரையில் அந்தப் பெண்ணை அவரின் குழந்தையுடன் பெண்கள் காப்பகமொன்றில் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார். இதேவேளை இன்று நீதிமன்றில் ஆஜரான சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், இலங்கைப் பெண்ணினுடைய குழந்தையின் எதிர்காலம் குறித்து, நீதவானிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததாகவும் அறிய முடிகிறது. இலங்கையின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் நபரொருவர் தனது பராமரிப்பிலுள்ள குழந்தையொன்றைப் பிரிந்து வெளிநாடு செல்வது குற்றம் என்பதால், சந்தேக நபரான இலங்கைப் பெண், அவரின் குழந்தையை தொடர்ந்தும் பராமரிக்க வேண்டும் என இன்று நீதிமன்றில் வலியுறுத்தப்பட்டதாகவும் வழக்கில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். இலங்கைப் பெண்ணின் கணவர், தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்களும் இன்று நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர். வழக்கின் பின்னணி இந்தியா குன்னத்தூரைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழ் பெண்ணொருவர், கடந்த 20ஆம் தேதி, இலங்கை - அக்கரைப்பற்றிலுள்ள தனது முஸ்லிம் தோழியின் (வயது 19) வீட்டுக்குக்கு வந்திருந்தார். இவர்கள் சில காலமாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பேசிப் பழகி வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்யத் தீர்மானித்தனர். இந்த நிலையில் இலங்கை வந்த இந்தியப் பெண், தனது தோழியை இந்தியா அழைத்துச் சென்று திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியதோடு, அதற்கு மறுத்தால் தான் தற்கொலை செய்யப் போவதாக தங்களை மிரட்டியதாக இலங்கைப் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இலங்கைப் பெண்ணின் தந்தை, இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை கடந்த 22ஆம் தேதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போது குறித்த பெண்கள் இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநல வைத்தியரிடம் காண்பித்து, மருத்துவ அறிக்கையைப் பெற்று, அதனை 27 ஆம் தேதி (இன்று) சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அதுவரை அவர்கள் இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறும் இதன்போது நீதவான் கட்டளையிட்டிருந்தார். மனநல மருத்துவ அறிக்கை என்ன கூறுகிறது? நீதிமன்ற உத்தரவுக்கிணங்க மேற்படி பெண்கள் இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனையடுத்து வழங்கப்பட்ட வைத்திய அறிக்கையில், சம்பந்தப்பட்ட பெண்கள் இருவரும் எவ்வித உள நோய்க்கும் ஆளாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது. தன்பாலின உறவு என்பது - ஓர் உளநோய் அல்ல என்று, மனநல மருத்துவர் யூ.எல். சறாப்டீன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது. https://www.bbc.com/tamil/sri-lanka-61963619
  18. அது வந்து இவ வெளிப்படையாச் செய்து பிடிபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுவிட்டது. மற்றவை செய்யும் களவு பிடிபடவில்லை!🤭
  19. அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது? 28 ஜூன் 2022, 03:59 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர். நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர் பிழைத்தவர்கள், "தொடுவதற்கே சூடான நிலையில்" இருந்தனர். வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) மற்றும் வெப்ப சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இருந்து 250கி.மீ தொலைவிலுள்ள சான் அன்டோனியோ, ஆட்கடத்தல்காரர்களுக்கான முக்கியமான போக்குவரத்துப் பாதை. ஆட்கடத்தல்காரர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு, அவர்களை தொலைதூரப் பகுதிகளில் சந்தித்து, ஏற்றிச் செல்ல அடிக்கடி லாரிகளைப் பயன்படுத்துகின்றனர். "அவர்களுக்கு குடும்பங்கள் இருந்தன. அவர்களுக்கான ஒரு சிறந்த வாழ்க்கையைக் கண்டுபிடிக்க முயன்றிருக்கலாம். இதுவொரு பயங்கரமான துயரம்," என்று சான் அன்டோனியோ மேயர் ரான் நிரன்பெர்க் கூறினார். ரோ Vs வேட்: கருக்கலைப்பு குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொல்கிறது? அமெரிக்கா: தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி சூடு - 19 குழந்தைகள் உயிரிழப்பு சிகரெட் பழக்கத்தை விடுவது ஏன் கடினம்? அவசரக்கால முதல்நிலை கவனிப்பை வழங்கக்கூடியவர்கள் ஆரம்பத்தில் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 6 மணியளவில் இறந்தவர்களைப் பற்றிய தகவலறிந்த பின்னர், சம்பவ இடத்திற்கு வந்ததாக சான் அன்டோனியோ தீயணைப்புப் பிரிவின் தலைவர் சார்லஸ் ஹூட் செய்தியாளர்களிடம் கூறினார். "ஒரு லாரியைத் திறக்கும்போது அதற்குள் நாங்கள் இறந்த உடல்களின் அடுக்குகளைப் பார்த்திருக்கக்கூடாது. நாங்கள் யாரும் அதைக் கற்பனை செய்துகொண்டு வேலைக்கு வருவதில்லை," என்று அவர் கூறினார். டிரைவரால் கைவிடப்பட்ட வாகனத்தில் குளிரூட்டும் வசதியில்லை என்றும் அதற்குள் குடிநீர் இல்லை என்றும் அவர் கூறினார். KSAT என்ற உள்ளூர் தொலைக்காட்சி சேனலின்படி, சான் அன்டோனியோவின் தென்மேற்குப் பகுதியில் ரயில் பாதைகளுக்கு அடுத்ததாக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் உட்பட ஏராளமான அவசர உதவியாளர்கள் பெரிய லாரியைச் சுற்றியிருப்பதைக் காண முடிந்தது. அரசியல் பிரச்னையாகவுள்ள புலம்பெயர் குடியேற்றம் அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சான் அன்டோனியோவின் காவல்துறை தலைவர் வில்லியம் மேக்மனுஸ், இதன் விசாரணை திங்கள் கிழமை மாலை, மத்திய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மூன்று பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, More than 60 firefighters attended the scene, the local fire chief said மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரர்ட், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் குவாட்டமாலா நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இருப்பதாகக் கூறினார். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரிய வரவில்லை. டெக்சாஸின் குடியரசுக் கட்சி ஆளுநர் கிரெக் ஆப்போட், "அவரது கொடிய திறந்த எல்லைக் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவு" என்று இதை விவரித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்த மரணங்களுக்குக் குற்றம் சாட்டினார். ஆப்போட்டுக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பெடோ ஒரௌர்க், இது பெரும் வேதனையைத் தருவதாகவும், "ஆட்கடத்தல் வளையங்களை அகற்றி, சட்டப்பூர்வ இடப்பெயர்வுக்கான விரிவாக்கப்பட்ட வழிகளை மாற்றுவதற்கு" அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்காவில் புலம்பெயர் குடியேற்றம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உள்ளது. அங்கு கடந்த ஆண்டு மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த பதிவு செய்யப்படாத ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மிகவும் ஆபத்தான, பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்து வந்திருந்தனர். கோடை மாதங்களில் சான் அன்டோனியோ மிகவும் வெப்பமாக இருக்கும். திங்கள் கிழமையன்று 39.4 டிகிரி செல்ஷியஸ் (103F) வெப்பநிலையை அடைகிறது. https://www.bbc.com/tamil/global-61962497
  20. இலங்கை: “போதிய மருந்து கையிருப்பு இல்லை, கவனமாக இருங்கள்” - எச்சரிக்கும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (28/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளால், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியம் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார். அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் நேற்று (27/06/2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இருக்கும் மருந்துகளின் கையிருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது என்று குறிப்பிட்டார். இலங்கையில் அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் - அரசு முடிவு "சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர் இலங்கை வந்த இந்தியத் தூதுக்குழு: தொடர்ந்து இந்தியா, தமிழ்நாடு வழங்கும் உதவிகள் என்ன? அலுவலக கடமைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்பட்டால், நோயாளிகளுக்கு போக்குவரத்து வசிதிகளை வழங்குவதிலும் அதுபோல வைத்தியர்கள், வைத்தியாசாலை ஊழியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருந்துகள் குறித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்த நேரத்தில் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறியள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-61961996
  21. இன்று எனது நண்பன் மகனை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு ஏற்றி வரும்போது வழியில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் முடிந்து தள்ளிக்கொண்டு நடந்து வந்தவர்களாம், வெயில் சுட்டு மகனுக்கு காய்ச்சல். அவருடைய மனைவி தாதியாக பணிபுரிகிறார், வேலை முடிந்து தெல்லிப்பளையில் இருந்து யாழ் சென்று அங்கிருந்து ஊர் வந்து சேர 8.30 மணி.
  22. ஓபிஎஸ் Vs இபிஎஸ்: அதிமுக எம்ஜிஆர் உயில் என்ன சொல்கிறது? இரட்டை இலைக்கு சிக்கல் வருமா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அ.தி.மு.கவில் உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், 'உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான சின்னத்தில் யார் கையொப்பமிடுவார்கள்?' என்ற கேள்வி எழுந்துள்ளது. ' தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால், சின்னத்துக்குச் சிக்கல் வரும் என்ற அச்சத்தில் இரண்டு தரப்புமே தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 510 பதவிகள் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் ஜூலை மாதம் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ' 498 ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 12 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் என 510 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி 27 அன்று முடிவடைய உள்ளது. வேட்புமனுக்களை ஜூன் 30 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். இதனைத் தொடர்ந்து ஜூலை 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 34 பணியிடங்களுக்கு கட்சி சார்பில் தேர்தல் நடைபெற உள்ளது. இவர்களுக்கு சின்னத்தை ஒதுக்கீடு செய்யும் ஏ படிவம், பி படிவம் ஆகியவற்றில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட வேண்டும். இவ்விரு பதவிகளும் காலாவதியாகவிட்டதாக கூறப்படுவதால், 'யார் கையொப்பமிடுவார்கள்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரட்டை இலைச் சின்னம் கிடைக்குமா? இதுதொடர்பாக, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும் வழக்குரைஞருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக கேட்டபோது, ''இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம். இதுதொடர்பாக, விரைவில் தகவல் வெளியிடப்படும்'' என்கிறார். 'ஓபிஎஸ் அனுதாப அரசியல் செய்கிறாரா?' - அவரது பயணம் பலனளிக்குமா? அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவை இழந்தது எப்படி? இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக பிபிசி தமிழுக்காக பேசிய மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி, ''அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதால் சின்னத்தில் கையொப்பமிட இரு தரப்புக்குமே அதிகாரம் இல்லை. அதுவரையில், இடைக்காலமாக சின்னத்தைப் பயன்படுத்துவார்களா எனத் தெரியவில்லை. இந்தப் பிரச்னையில் ஓ.பி.எஸ் தரப்பினர் நீதிமன்றம் செல்லவே வாய்ப்பு உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது சிறிய அளவில் உள்ளதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவும் வாய்ப்புகள் உள்ளன'' என்கிறார். மேலும், ''தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கை ஓங்கியிருப்பதால், சின்னம் தொடர்பாக அவரே முடிவெடுக்கலாம். பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறுவதால் அதன் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்'' என்கிறார். அச்சத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்? அதேநேரம், தேர்தல் ஆணையத்தை அணுகினால் சின்னம் முடங்கிவிடும் என்ற அச்சத்தில் இரு தரப்பும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக பேசிய அவர், ''சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இவர்கள் சென்றால், யாராவது ஒருவருக்கு சின்னத்தைக் கொடுப்பதற்கு பா.ஜ.க முயன்றால் சின்னத்துக்கு சிக்கல் ஏற்படும். இதனை யூகத்தின் அடிப்படையில் கூறுகிறேன். இந்த விவகாரத்தில் தேர்தல் உடனே ஆணையம் முடிவெடுப்பதற்கும் வாய்ப்பில்லை. குறிப்பாக, 'ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு சின்னம் இல்லை' எனக் கூறுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்குப் பயந்து கொண்டே இரண்டு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. காரணம், சின்னம் முடங்கியதாகத் தகவல் வெளியானால் அது தொண்டர்களை காயப்படுத்திவிடும். 'நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு சின்னத்தை எப்படி முடக்கலாம்?' என்ற கேள்வி வரும்'' என்கிறார். பட மூலாதாரம்,FB/ OPANNEERSELVAM தொடர்ந்து பேசிய ஷ்யாம், '' அ.தி.மு.கவில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை எப்படிக் களைவது என்பதற்கான தீர்வை அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர் முன்வைத்துள்ளார். அவர் எழுதிய உயிலின் நகல் என்னிடம் உள்ளது. எம்.ஜி.ஆர் மறைந்த 16 ஆவது நாளில் தலைமைக் கழகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதற்கு வி.என்.ஜானகி ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் இந்த உயிலை என்.சி.ராகவாச்சாரி வாசித்தார். எம்.ஜி.ஆர் உயில் சொல்வது என்ன? 23 பக்கங்கள் உள்ள அந்த உயிலில், பல விஷயங்களை எம்.ஜி.ஆர் சொல்கிறார். குறிப்பாக, 'என்னுடைய சத்யா ஸ்டூடியோ பங்கு உள்பட அனைத்தையும் கட்சியின் நிர்வாகச் செலவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சி பிளவுபட்டாலோ, கலைக்கப்பட்டாலோ கட்சியின் தற்போதைய 80 சதவீத அங்கத்தினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்கள்தான் கட்சி' என்கிறார். அதாவது, 'கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர்' என்பதுதான் எம்.ஜி.ஆர் ஃபார்முலா. இந்த விவகாரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை அவர் கூறவில்லை. இந்த உயிலை வாசிக்கும்போது அவைத் தலைவராக வள்ளிமுத்து இருந்தார். கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் குறித்த எந்தப் பேச்சும் அந்த உயிலில் இல்லை. அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவீதம் பேர் யார் பக்கம் என்ற அடிப்படையில்தான் இவர்கள் முடிவெடுக்க முடியும். 'என் பக்கம், உன் பக்கம்' என எந்த அடிப்படையில் தற்போதுள்ளவர்கள் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை. தவிர, எம்.ஜி.ஆர் உயில் என்பது வெளிப்படையான ஆவணம். 'என்.சி.ராகவாச்சாரியும் அவரது மருமகனும் இறந்துவிட்டால் நீதிமன்றமே இந்த உயிலை செயல்படுத்த வேண்டும்' எனவும் எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்'' என்கிறார். '' உயிலில் உள்ள 'தற்போதைய' என்ற காலகட்டத்தை தற்போதுள்ள சூழலோடு பொருத்திக் கொள்ளலாம். பொதுவாக உயிலில் சொத்தைப் பற்றித்தான் பலரும் எழுதுவார்கள். ஆனால், கட்சியைப் பற்றி எம்.ஜி.ஆர் எழுதுவதற்குக் காரணம் அவரது சொத்தான சத்யா ஸ்டூடியோவை கட்சிக்குக் கொடுத்ததால்தான். அவரது சொத்துக்களை அனுபவிப்பவர்கள், அவர் சொன்னதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்யா ஸ்டூடியோவின் இன்றைய மதிப்பு என்பது 200 கோடி ரூபாயைத் தாண்டும். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான அலுவலகத்தில் அமர்ந்துதான் பேசுகிறார்கள். கபடி விளையாட்டும் உப்புக் கோடும் இதுபோன்ற சிக்கலான நேரங்களில், 1987 ஆம் ஆண்டு அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை எடுப்பதைவிடவும் ஜெயலலிதா மறைந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உள்ள அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் பட்டியலை வைத்து முடிவு செய்யலாம். இதுதொடர்பாக, அ.தி.மு.க தொண்டர்களை வாக்களிக்க வைத்து, 'யார் பக்கம் அதிக உறுப்பினர்கள் உள்ளனர்?' என்பதை முடிவு செய்யலாம்'' என்கிறார் ஷ்யாம். ''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வை அ.தி.மு.க நிர்வாகிகள் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். '' அதற்கு வாய்ப்புள்ளது. இரட்டை இலைச் சின்னம் என்பது முக்கியம். இலை இல்லாவிட்டால் அ.தி.மு.கவே முடங்கிப் போனதாகத்தான் அர்த்தம். தற்போதுள்ள நிலையில் கட்சியில் இருந்து ஒருவரை நீக்கினாலும் அதைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள். அவ்வாறு வெளியில் கூறிவிட்டால் இன்னொரு நபர் தேர்தல் ஆணையம் செல்வதற்கு வாய்ப்புள்ளது'' என்கிறார். ''அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டம் செல்லாது என ஓ.பி.எஸ் கூறியுள்ளது எடுபடுமா?'' என்றோம். '' கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி யாரும் வெளியில் கூறவில்லை. இரண்டு தரப்பும் கபடி விளையாட்டில் உள்ள உப்புக் கோடு நிலையில்தான் உள்ளனர். அந்தக் கோட்டைத் தாண்ட முடியாத அவஸ்தையில்தான் இரு தரப்பினரும் உள்ளனர்'' என்கிறார். https://www.bbc.com/tamil/india-61953774
  23. கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழ்நாடு முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும்படி பெங்களூருவில் உள்ள தகவல் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். வழக்கறிஞரும் ஆர்டிஐ செயல்பாட்டாளருமான டி.நரசிம்மமூர்த்தி, இந்த கடிதத்தை பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிபதிக்கும் எழுதியிருக்கிறார். அதில், நகைகள், புடவைகள் மற்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள பல சொத்துக்களை ஏலம் விடலாம் என்றும் அந்தப் பணத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். விதான் சவுதாவில் உள்ள கர்நாடக மாநில கருவூலத்தில் இப்போது ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் உள்ளன. "ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்றால், அவற்றை உணர்பூர்வமானதாக கருதி அவரது தீவிர தொண்டர்கள் வாங்குவார்கள். அதன் மூலம் கற்பனை செய்ய முடியாத பொது ஏலத் தொகையைப் பெற முடியும்,'' என்று நரசிம்மமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். கருவூலத்தில் கிடக்கும் பல்வேறு பொருட்களில், புடவைகள், நகைகள் மற்றும் சால்வைகள் அடங்கும். லட்சக்கணக்கான ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் இருப்பதால் நல்ல தொகையை ஈட்ட முடியும்," என்றும் தமது யோசனை குறித்து பிபிசியிடம் பேசிய நரசிம்மமூர்த்தி கூறினார். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு (சிறப்பு நீதிமன்றம்) மாற்றப்படும் முன்பே, இந்த பொருட்கள், 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றத்தின் உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்டன. ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2017 வரை ஜெயலலிதா: வழக்கு முதல் இலங்கை தமிழர் விவகாரம் வரை - ஒரு பத்திரிகையாளனின் நினைவலைகள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமை செயல்பாட்டாளர் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் விவரம் தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள், ரத்தினக்கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் போன்றவை உள்பட 468 நகைகள் பட்டியலில் உள்ளன. மேலும், சில வகை மின்னணு பொருட்கள், ரொக்கம், விலை உயர்ந்த சேலைகள், சால்வைகள், காலணிகளும் அந்த பட்டியலில் உள்ளன. இதில் புடவைகளின் எண்ணிக்கை மட்டும் 11 ஆயிரத்து 344, சால்வைகளின் எண்ணிக்கை 250, காலணிகள் 750 என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் 1996ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஜெயலலிதாவின் இல்லத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட குறிப்பேட்டில், 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசி மற்றும் இன்டர்காம்கள், 131 சூட்கேஸ்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 9 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்டுகள், 750 காலணிகள், 31 டிரெஸ்ஸிங் கண்ணாடி டேபிள்கள் மற்றும் 215 படிக வெட்டுக் கண்ணாடிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. புடவைகளின் தரம் குறையும் - நிபுணர்கள் ஜவுளி நிபுணர்கள், "ஜவுளிப் பொருட்களில் சில வகை பொருட்கள் மடிந்த நிலையில் நீண்ட காலம் இருந்தால் அவை நாளடைவில் தரத்தை இழந்து, நிறமும் மங்கலாகலாம்," என்று தெரிவிக்கின்றனர். சால்வைகள் கெட்டுப்போகலாம். இதே போல், காலணிகள் மற்றும் பிற தோல் அல்லது பொருட்கள் அவற்றின் தரம் மற்றும் வலிமையை இழக்கலாம். அப்படியானால், ஏ,பி,சி பட்டியலில் உள்ள பொருட்கள் தரமற்றதாகவும் அதன்பின் எந்தப் பயன்பாட்டிற்கும் தகுதியற்றதாகலாம் என்று கடிதத்தில் நரசிம்மமூர்த்தி கூறியுள்ளார். எனவே உரிய சட்ட நடைமுறைகளில் நீதி பரிபாலன முறைகளுக்கு உட்பட்டு எது தகுதியாக இருக்குமோ அதைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இணைப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொருட்களை ஏலத்தில் விற்க உரிய அதிகாரிகள் மூலம் அனுப்பலாம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மாநில கருவூலத்தில் வரவு வைத்து மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று நரசிம்மமூர்த்தி கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.bbc.com/tamil/india-61954468
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.