Everything posted by ஏராளன்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் ரஷ்யா டிரோன் தாக்குதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷ்யா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். https://thinakkural.lk/article/285711
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவில் விசேட சுற்றிவளைப்பு சோதனை Published By: VISHNU 22 DEC, 2023 | 04:27 PM மன்னார் - பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (22) காலை முதல் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு சோதனைகளை முன்னெடுத்தனர். பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளுக்குச் சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போதைப் பொருள் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலே பேசாலை பொலிஸ் பிரிவில் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதோடு சில போதைப்பொருட்களும் சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. https://www.virakesari.lk/article/172298
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! இந்தியன் பிரிமீயர் லீக்கின் (ஐ.பி.எல்) மினி ஏலம் நேற்றைய கடந்த (19) திகதி டுபாயில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இது தொடர்பில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தன. அதில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மிட்சல் ஸ்டார்க் அதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அவுஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் பெற்றார். இந்நிலையில் “கொல்கத்தா அணி அதிக தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாது” என ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வரிசை இது தொடர்பாக அவர் கூறுகையில் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. பந்துவீச்சில் இருக்கும் பலம் அந்த அணியின் துடுப்பாட்டத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன். கொல்கத்தா அணியில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் திறமையானவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த துடுப்பாட்ட வரிசையை வைத்து கொண்டு கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகம் தான். துடுப்பாட்ட வரிசை மிக மோசமானது இல்லை என்றாலும், அவர்களால் நிச்சயம் முதல் 4 இடங்களுக்குள் வர முடியாது என்பதே எனது கருத்து. கொல்கத்தா அணியின் பலவீனம் துடுப்பாட்ட வரிசையே கொல்கத்தா அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2024க்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முழு அணி நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கே.எஸ். பாரத், ஸ்டார்க். , அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், கஸ் அட்கின்சன், சாகிப் ஹுசைன். https://ibctamil.com/article/ipl-2024-ab-de-villiers-about-kkr-team-csk-auction-1703253255
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
யாழில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 30 பேர் கைது யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் மோப்ப நாயின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசேட சோதனை இந்நிலையில் பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் இன்று (22.12.2023) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆறு பேர் போதைப் பொருள் குற்றப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுவரும் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மோப்ப நாயின் உதவியுடன் தீடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகிறது. https://tamilwin.com/article/special-anti-narcotics-operation-in-jaffna-1703252285
-
செய்யாத குற்றத்திற்கு சிறைத் தண்டனை அனுபவித்த நபர் 48 வருடங்களின் பின் விடுதலை
Published By: DIGITAL DESK 3 22 DEC, 2023 | 12:09 PM அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் தான் செய்யாத குற்றத்திற்கு 48 வருடகால சிறைதண்டனை அனுபவித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. 22 வயதில் சிம்மன்ஸ் சிறை தண்டனை பெற்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது, சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை நீதிமன்றம் இரத்து செய்தது. இதனையடுத்து, சிம்மன்ஸ் விடுதலையானார். க்ளின் சிம்மன்ஸ் அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில் (National Registry of Lxonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராவார். அவர் கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார். ஓக்லஹாமா மாநில குற்றவியல் சட்டத்தின்படி தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ($1,75,000) வரை இழப்பீட்டு தொகை பெற முடியும். தற்போது கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சிம்மன்ஸ் குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறைத் தண்டனை அனுபவித்ததை குறித்து சிம்மன்ஸ் கூறியதாவது, பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள். ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் என தெரிவித்தார். மேலும், அவர் இழந்த இளமை பருவங்களை யார் தருவார்கள்? என சிம்மன்ஸ் விடுதலை குறித்து பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/172271
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இப்பவே 4 பேர் தயார் தானே! ஈழப்பிரியன் அண்ணை சுவியண்ணை கிருபனண்ணை ஏராளன் அப்பிடியே 15-20 பேர் வந்து குதிப்பினம் பாருங்கோ.
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
உலகக் கோப்பை அணியில் புறக்கணக்கப்பட்ட வீரரின் சதத்தால் தென்னாப்பிரிக்க தொடரை வென்ற இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான ஆட்டத்தால் கிடைத்த சதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெல்ல இந்தியாவுக்கு உதவியிருக்கிறது. வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்கின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் பாரல் நகரின் போலந்த் பார்க்கில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றக் காரணமாக அமைந்தன. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்து. 297 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 78 ரன்களில் தோற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES கணக்குத் தீர்த்தது இந்திய அணி இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் போட்டிகளில் நிலைத்தன்மை ஆட்டத்துக்கு தடுமாறி வந்த சஞ்சு சாம்ஸன்(108) நேற்று முதல் சதத்தை பதிவு செய்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சஞ்சு சாம்ஸனின் முதல் சதம் வீணாகப் போகாமல் இந்திய அணியின் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது என்றென்றும் அவருக்கு மறக்காத வண்ணங்களைச் சேர்க்கும். இந்தத் தொடரில் அற்புதமாக பந்துவீசி முதல் போட்டியில் 5 விக்கெட், இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்த அர்ஷ்தீப் சிங்கிற்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே கே.எல்.ராகுல் கேப்டன்ஷியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க வந்திருந்தபோது, 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் அதே கே.எல்.ராகுல் தலைமையில் இளம் அணி புறப்பட்டு வந்து ஒருநாள் தொடரை வென்று, டி20 தொடரை சமன் செய்து, தென் ஆப்பிரி்க்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் சாம்ஸன், திலக் வர்மா அமைத்த கூட்டணி முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. பந்துவீச்சில் வாஷிங்டன் வீசிய 10 ஓவர்களும், அர்ஷ்தீப் ஓவர்களும் தென் ஆப்பிரிக்க அணியின் ரன்ரேட் குறைவுக்கும், விக்கெட் சரிவுக்கும் காரணம் என்று கூற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்சன் பற்றி கேப்டன் ராகுல் கூறியது என்ன? வெற்றிக்குப்பின் கேப்டன் ராகுல் கூறுகையில் “உலகக் கோப்பை பைனல் தோல்வி தென் ஆப்பிரிக்க வந்த எனக்கு எங்கள் அணி வீரர்கள் அருமையான வெற்றியை அளித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சாம்ஸன் அருமையாக ஆடி வருகிறார். துரதிர்ஷ்டமாக அவருக்கு 3ஆவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு வழங்க முடியவில்லை. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கெனவே 3ஆவது இடத்தை ஜாம்பவான்கள் நிரப்பியுள்ளனர். இனிமேல் 3வது இடத்துக்கான வாய்ப்பு சாம்ஸனுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். அடுத்து டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவோம்” எனத் தெரிவித்தார். சுந்தர், அர்ஷ்தீப் நிகழ்த்திய மாயாஜாலம் வாஷிங்டன் சுந்தர் நீண்டகாலத்துக்கு பின் ஒருநாள் தொடரில் இடம் பெற்று நேற்று தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தண்ணிகாட்டினார் என்றுதான் கூற முடியும். 10 ஓவர்கள் வீசிய சுந்தர் 38 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதிலும் மார்க்ரம், முல்டர் ஆகிய இரு விக்கெட்டுகளும் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்க உந்துகோலாக இருந்த விக்கெட்டுகளாகும். டி20 தொடரில் சொதப்பலாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் ஒருநாள் தொடரில் பந்துவீச்சுக்கான ரிதத்தை பிடித்துவிட்டார் என்றுதான் கூற முடியும். இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் ரன்களை வழங்கினாலும், லைன் லென்த்தை அடையாளம் கண்டபின் தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்கு தனது சீமிங், ஸ்விங் பந்துவீச்சில் சிம்மசொப்னமாகவே அர்ஷ்தீப் இருந்தார். அதிலும் பேட்டிங்கில் நங்கூரமிட்ட சோர்சியை(81) ஸ்விங் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கவைத்து விக்கெட் எடுத்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நங்கூரமிட்ட பார்ட்னர்ஷிப் சாம்ஸன்-திலக் வர்மா இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு பொறுப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 136 பந்துகளில் 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் சேர்ந்தபின் ரன் ரேட் மிகவும் மந்தமாக 11 முதல் 30 ஓவர்கள் வரை 73 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். டி20, ஒருநாள் தொடரில் பெரிதாக சோபிக்காத திலக் வர்மா இந்த ஆட்டத்தில் பொறுமையாக பேட் செய்தார். தனது முதல் பவுண்டரியைக்கூட 39 பந்துகளில்தான் அடித்தார். அதிலும் 9 ரன்களில் இருந்து பவுண்டரி அடித்து 13 ரன்களாக திலக் வர்மா உயர்த்தினார். அதன்பின் சாம்ஸனும், திலக் வர்மாவும் களத்தில் நங்கூரமிட்டபின் ரன்கள் குவியத் தொடங்கின. 31 முதல் 40 ஓவர்களில் 73 ரன்களை இருவரும் வேகமாகச் சேர்த்தனர். திலக் வர்மா பொறுமையாக பேட் செய்து 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வெற்றியுடன் முதல் சதம் சாம்ஸனின் ஒருநாள் போட்டி அதிகபட்சமே 86 ஆகத்தான் இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் மிகுந்த பொறுமையாக, தனக்கே உரிய ஸ்டைலில் ஷாட்களைத் தேர்ந்தெடுத்து சாம்ஸன் மிகுந்த நிதானத்துடன் பேட் செய்து முதல் சதத்தை 110 பந்துகளில் பதிவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். சாம்ஸன் மீது நிலைத்தன்மையற்ற பேட்டர் என்ற விமர்சனம் நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது, அதற்கு சிறந்த பதிலடியாகவே தனது சதத்தின் மூலம் சாம்ஸன் வழங்கியுள்ளார் என்றுதான் கூற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் ரன் வேகம் இந்திய அணிக்கு ஃபினிஷ் டச் கொடுத்தது ரிங்கு சிங்கின் பேட்டிங்தான். அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்களும், சிறிய கேமியோ ஆடிய சுந்தர் 14 ரன்களும் சேர்த்தனர். இந்தத் தொடர்முழுவதும் அக்ஸர் படேல் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்திய அணி முதல் பவர்ப்ளேயில் 59 ரன்கள் சேர்த்தாலும், அடுத்த 20 ஓவர்கள் மந்தமாக ரன் சேர்த்தது. ஆனால் கடைசி 20 ஓவர்களில் மட்டும் 164ரன்கள் சேர்த்தது, கடைசி 10 ஓவர்களில் மட்டும் 93 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. இந்திய அணிக்கு மாற்றத்துக்காக ரஜத் பட்டிதார், சுதர்ஷனுடன் சேர்த்து தொடக்க ஆட்டக்காரராக் களமிறக்கப்பட்டார். அதிரடியாக பட்டிதார் தொடங்கினாலும், 22ரன்களில் பர்கர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த இரு போட்டிகளில் அரைசதம் அடித்த சுதர்ஷன் இந்த ஆட்டத்தில்10 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிம்மசொப்னமான சுந்தர், அர்ஷ்தீப் இந்திய அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை அர்ஷ்தீப், சுந்தர் இருவரின் பந்துவீச்சும் மாஸ்டர் கிளாஸ் என்றுதான் குறிப்பிட வேண்டும். தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் என்றாலே வேகப்பந்துவீச்சுக்கு உகந்தது என்பதை மாற்றும்வகையில் சுந்தர் நேற்று பந்துவீசினார். தனது பந்துவீச்சில் துல்லியத்தன்மையை மாற்றாமல், லைன் லென்த்தில் வீசி தென் ஆப்பிரி்க்க பேட்டர்களை சுந்தர் திணறடித்தார். தனது சீனியர் அக்ஸர் படேலே வீட சுந்தர் அருமையாகப் பந்துவீசினார். அதிலும் தனது பந்துவீச்சின் வேகத்தில் வேறுபாடுகளைக் காண்பித்து பேட்டர்களை திணறடித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்து லேகாத்தான் டர்ன் ஆகியது என்றாலும், பேட்டர்கள் பேட்டை வைக்க அச்சப்படும் “கிரே ஏரியா” வில் பந்தை பிட்ச் செய்து திணறடித்தார்.சுந்தர் வீசிய 10 ஓவர்களில் 2 பவுண்டரி மட்டுமே வழங்கினார், 31 டாட் பந்துகளை வீசியுள்ளார். ஏறக்குறைய 5 ஓவர்கள் மெய்டனாகவே எடுத்துக்கொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES 7 ஓவர்கள் மெய்டன்கள் அதேபோல அர்ஷ்தீப் சிங்கும் தனது முதல் ஸ்பெல்லில் மட்டுமே ரன்களைக் கொடுத்தார். அதன்பின் லைன்லென்த்தனை கண்டறிந்தபின் அதிலிருந்து நகற்றாமல் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார். 9 ஓவர்கள் வீசிய அர்ஷ்தீப் ஒரு மெய்டன் கொடுத்து 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 39 டாட் பந்துகள் என்றால், ஏறக்குறைய 7.3 ஓவர்களை அர்ஷ்தீப் மெய்டன்களாக வீசி, தனது 10 பந்துகளில் மட்டும்தான் 30 ரன்களை கொடுத்தார் என்று எடுக்கலாம். தென் ஆப்பிரிக்காவின் ஆறுதல் இதுதான் தென் ஆப்பிரிக்க அணியைப் பொருத்தவரை இந்த ஒருநாள் தொடரில் அவர்களுக்கு கிடைத்த ஒரு ஆறுதல், கண்டுபிடிப்பு என்பது டோனி சோர்சி மட்டும்தான். 3போட்டிகளில் ஒரு சதம், இந்த ஆட்டத்தில் 81 ரன்கள் என சோர்சி தேர்ந்த பேட்டர் போன்று பேட் செய்தார். எதிர்கால தென் ஆப்பிரிக்க அணிக்கு நிரந்தரமான இடத்துக்கு அச்சாரமிட்டுள்ளார். இதைத் தவிர இளம் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பெரிதாக 3 போட்டிகளிலும் சோபிக்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் மார்க்ரமின் ஸ்வீப் ஷாட் குறிதத் மோசமான ஆலோசனைதான் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். ஏனென்றால் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் என்று வலுவாக இருந்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த 20 ஓவர்களில் 77 ரன்களுக்கு மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றி தருணம் கிடைக்கவில்லை தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ துரதிர்ஷ்டமாக எங்களால் வெற்றியோடு முடிக்கமுடியவில்லை. அருமையான ஆடுகங்கள், எங்களுக்கு வெற்றிக்கான அந்தத் தருணம் கிடைக்கவில்லை. இந்த ஆடுகளத்தில் 290 ரன்கள் சேஸிங் செய்யக்கூடியதுதான், ஆனால், மொமென்ட்டத்தை தவறவிட்டோம். டாஸ் வெற்றி பெரிதாக பங்காற்றவில்லை. அடுத்துவரும் டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது, இரு அற்புதமான இடங்களில் நடக்கும் போட்டி சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சரிந்த விக்கெட்டுகள் அதிலும் 17 ரன்களுக்குள் 4 விக்கெட்டிலிருந்து 6-வது விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரி்க்கா, அதேபோல, 26 ரன்களுக்குள் கடைசி 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு சோர்சி, ஹென்ட்ரிக்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளித்து 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் என்று வலுவாகத்தான் இருந்தனர். ஆனால், அர்ஷ்தீப் சிங் தனது பந்துவீச்சில் லைன்லென்த்தை பிடித்தபின் தென் ஆப்பிரிக்கா ரன்ரேட் படுத்துவிட்டது. அர்ஷ்தீப் வீசிய 9-வது ஓவருக்கு திணறிய ஹென்ட்ரிக்ஸ் அதே ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் பந்துவீச அழைக்கப்பட்டவுடன் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார். அக்ஸர் ஓவரை எதிர்கொண்டு ஆட திணறிய டூசென், பந்து டர்ன் ஆகாது என்ற நினைப்பில் பேக்ஃபுட் எடுத்து ஆட முற்பட்டு கிளீன் போல்டாகினார். கேப்டன் மார்க்ரம், சோர்சியுடன் சேர்ந்து சிறிது நேரம் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுந்தர் பந்துவீச்சை அடிக்க திணறிய மார்க்ரம், அற்புதமான பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தமாக வாஷிங்டன் சுந்தரின் ஆப்ஸ்பின்னை சமாளித்து ஆட தென் ஆப்பிரிக்க பேட்டர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூற முடியும். https://www.bbc.com/tamil/articles/cg3x5y1v5q0o
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
IPL 2024 தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம் 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. அந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று (19) துபாயில் நடைபெற்றது. இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணியும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது. 2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக விளையாடும் அணிகளின் விபரம் பின்வருமாறு, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் MS Dhoni (C) Devon Conway Ajinkya Rahane Aravelly Avanish Ruturaj Gaikwad Shaik Rasheed Moeen Ali Shivam Dube Rajvardhan Hangargekar Ajay Mandal Daryl Mitchell Nishant Sindhu Rachin Ravindra Mitchell Santner Deepak Chahar Tushar Deshpande Mukesh Choudhary Mustafizur Rahman Matheesha Pathirana Simarjeet Singh Prashant Solanki Shardul Thakur Maheesh Theekshana Sameer Rizvi டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் David Warner (C) Ricky Bhui Yash Dhull Prithvi Shaw Rishabh Pant Abishek Porel Harry Brook Shai Hope Tristan Stubbs Lalit Yadav Axar Patel Mitchell Marsh Sumit Kumar Khaleel Ahmed Kuldeep Yadav Lungi Ngidi Vicky Ostwal Jhye Richardson Swastik Chikara Praveen Dubey Mukesh Kumar Anrich Nortje Rasikh Salam Ishant Sharma Kumar Kushagra குஜராத் டைட்டன்ஸ் அணியில் Shubman Gill (c) David Miller Robin Minz Wriddhiman Saha Sai Sudharsan M Shahrukh Khan Matthew Wade Kane Williamson Azmatullah Omarzai Abhinav Manohar Rashid Khan Vijay Shankar Rahul Tewatia Spencer Johnson Kartik Tyagi Josh Little Mohammed Shami Darshan Nalkande Noor Ahmad Sai Kishore Mohit Sharma Jayant Yadav Umesh Yadav Sushant Mishra கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் Shreyas Iyer (c) Srikar Bharat Manish Pandey Rahmanullah Gurbaz Ramandeep Singh Nitish Rana Jason Roy Sherfane Rutherford Rinku Singh Venkatesh Iyer Sunil Narine Anukul Roy Andre Russell Vaibhav Arora Gus Atkinson Harshit Rana Mujeeb Ur Rahman Chetan Sakariya Mitchell Starc Suyash Sharma Varun Chakravarthy Angkrish Raghuvanshi Sakib Hussain லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியில் KL Rahul (c) Quinton de Kock Nicholas Pooran Ayush Badoni Devdutt Padikkal Ashton Turner Krishnappa Gowtham Deepak Hooda Arshin Kulkarni Kyle Mayers Krunal Pandya Marcus Stoinis David Willey Arshad Khan Mohsin Khan Ravi Bishnoi Manimaran Siddharth Mayank Yadav Yudhvir Singh Mohsin Khan Amit Mishra Naveen-ul-Haq Shivam Mavi Mark Wood Yash Thakur மும்பை இந்தியன்ஸ் அணியில் Hardik Pandya (c) Rohit Sharma Ishan Kishan Nehal Wadhera Tim David Vishnu Vinod Suryakumar Yadav Dewald Brevis Shreyas Gopal Mohammad Nabi Tilak Varma Piyush Chawla Anshul Kamboj Shams Mulani Romario Shepherd Jason Behrendorff Jasprit Bumrah Gerald Coetzee Kumar Kartikeya Akash Madhwal Dilshan Madushanka Arjun Tendulkar Nuwan Thushara Naman Dhir Shivalik Sharma பஞ்சாப் கிங்ஸ் அணியில் Shikhar Dhawan (c) Harpreet Singh Rilee Rossouw Jonny Bairstow Prabhsimran Singh Jitesh Sharma Sam Curran Liam Livingstone Shivam Singh Atharva Taide Rishi Dhawan Shashank Singh Sikandar Raza Chris Woakes Arshdeep Singh Nathan Ellis Vidwath Kaverappa Kagiso Rabada Rahul Chahar Harpreet Brar Harshal Patel Prince Choudhary Ashutosh Sharma Tanay Thyagarajan Vishwanath Singh ராஜஸ்தான் ரோயல் அணியில் Sanju Samson (c) Shubham Dubey Yashasvi Jaiswal Tom Kohler-Cadmore Rovman Powell Jos Buttler Shimron Hetmyer Dhruv Jurel Riyan Parag Kunal Singh Rathore Ravichandran Ashwin Donovan Ferreira Nandre Burger Avesh Khan Yuzvendra Chahal Navdeep Saini Kuldeep Sen Abid Mushtaq Trent Boult Prasidh Krishna Sandeep Sharma Adam Zampa சன்ரைஸஸ் ஹைதராபாத் Aiden Markram (c) Mayank Agarwal Fazalhaq Farooqi Marco Jansen Heinrich Klaasen Bhuvneshwar Kumar Umran Malik Mayank Markande T Natarajan Glenn Phillips Nitish Kumar Reddy Abdul Samad Abhishek Sharma Anmolpreet Singh Sanvir Singh Upendra Yadav Pat Cummins Travis Head Shahbaz Ahmed Jaydev Unadkat Wanindu Hasaranga Akash Singh Jhatavedh Subramanyan Rahul Tripathi Washington Sundar ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் Faf du Plessis (c) Shahbaz Ahmed Finn Allen Manoj Bhandage Michael Bracewell Akash Deep Josh Hazlewood Kedar Jadhav Dinesh Karthik Siddarth Kaul Virat Kohli Rajan Kumar Mahipal Lomror Glenn Maxwell Wayne Parnell Harshal Patel Suyash Prabhudessai Anuj Rawat Karn Sharma Himanshu Sharma Avinash Singh Mohammed Siraj Vijaykumar Vyshak Sonu Yadav https://thinakkural.lk/article/285384
-
புதிய கொவிட் பிறழ்வு வேகமாக பரவுவதாக WHO எச்சரிக்கை
புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285478
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
போதைப்பொருள் : 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது - டிரான் அலஸ் 21 DEC, 2023 | 03:48 PM (எம்.மனோசித்ரா) போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 4665 பிரதான சந்தேகநபர்களின் பெயர்ப்பட்டியல் புலனாய்வுப்பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த 4 நாட்களில் 731 சந்தேகநபர்களும், பெயர் பட்டியலில் இல்லாத 8458 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இந்த சுற்றிவளைப்புக்களில் இதுவரை 431 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும், 162 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு, கிழக்கில் 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று, நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தத்துக்கும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது 3 வகைகளின் கீழ் அவற்றுடன் தொடர்புடையவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவது பாரியளவில் போதைப்பொருள் கட்டத்தலில் ஈடுபடுபவர்களாவர். இரண்டாவது அவற்றை விநியோகிப்பவர்கள். மூன்றாவது போதைப்பொருள் பாவனையாளர்கள். நாம் போதைப்பொருள் பாவனையாளர்களை விடுத்து ஏனைய இரு பிரிவினரையும் இலக்காகக் கொண்டே எமது சுற்றுவளைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதான போதைப்பொருள் கடத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் அடுத்த இரு பிரிவினரையும் கட்டுப்படுத்துவது மிக இலகுவானதாகும். போதைப்பொருளை விநியோகிப்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவினரால் 4665 சந்தேகநபர்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த 4 நாட்களில் இவர்களில் 731 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புக்களின் போது பட்டியலில் இல்லாதவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஒட்டு மொத்தமாக 8458 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை) இவர்களில் 346 பேரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது. 61 பேரிடம் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 697 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின், ஐஸ், கொக்கைன், கஞ்சா, ஹஷீஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 431 மில்லியன் ரூபாவாகும். அதே போன்று கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள், காணி, கட்டடங்கள், தங்கம் மற்றும் பணம் என்பவற்றின் பெறுமதி 162 மில்லியன் ரூபாவாகும். இந்த சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும். கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும். 2024 ஜூன் 30ஆம் திகதியாகும் போது போதைப்பொருள் பாவனை தொடர்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். எனவே இரு வாரங்களில் சுற்றிவளைப்புக்கள் நிறுத்தப்பட மாட்டாது. எவ்வித அறிவிப்புக்களும் இன்றி விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோரை களமிறக்கி சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டால் மக்கள் மத்தியில் வீண் அச்சம் ஏற்படும். அதனைக் கருத்திக் கொண்டே முன்னரே அறிவித்து சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான போதைப்பொருள் கட்டத்தல்காரர்களை தப்பிக்கச்செய்வது எமது நோக்கமல்ல. கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் புலனாய்வு பிரிவினரால் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களும் பிரத்தியேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/172219
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இலங்கையில் 4 நாட்களில் 8,000 பேர் கைது, கோடிக்கணக்கான சொத்துக்கள் பறிமுதல் - என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் 'யுக்திய' என்ற பெயரில் விசேட சோதனை நடவடிக்கைகளை இலங்கை போலீசார் ஆரம்பித்துள்ளனர். இடைக்கால போலீஸ் மாஅதிபராக தேசபந்து தென்னக்கோன் பதவியேற்று, ஓரிரு தினங்களிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய ரீதியில் போலீஸார் 24 மணிநேர சோதனைகளை நடாத்தி வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கைகளின் ஊடாக, இதுவரை 8,000-திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிழல் உலக கோஷ்டிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளின் போது, எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார். ''பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் போலீஸார் மற்றும் முப்படைகளுடன் இணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயற்பட்டார்கள். நாடு தற்போது யுத்தத்திற்கு சமமாக ஒரு நிலைமையையே எதிர்நோக்கியுள்ளது. பேசிக் கொண்டு மாத்திரம் இருக்காது, இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்தியுள்ளோம்," என்கிறார் டிரான் அலஸ். மேலும், "இந்த உண்மையான தேடுதல் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமக்கு கிடைக்கும் அனைத்து விதமான தகவல்கள் குறித்தும் நாம் ஆராய்ந்து பார்ப்போம். சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்," என அவர் கூறுகின்றார். ''தமது குழந்தைகள், குடும்பம் தொடர்பில் சிந்தித்து, இந்த பேரழிவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு போலீஸாரிடத்திலிருந்து எந்தவித மன்னிப்பும் கிடையாது. சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் தொடர்பிலும் இவ்வாறான நடவடிக்கைகளே எடுக்கப்படும். போலீஸாருக்கு எதிராகவோ அல்லது வேறு ஏதேனும் குற்றங்களுக்காக அந்த ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு முன்னதாகவே போலீஸார் தமது ஆயுதங்களை பயன்படுத்த வேண்டி ஏற்படும்," என்கிறார் அவர். "இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடக்கும். தமது குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் என குடும்பத்தின் மீது அன்பு கொண்ட அனைவரும் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்," என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, இடைக்கால போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர் கைது நடவடிக்கைகள் நாட்டில் நிலைக்கொண்டுள்ள குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் 'யுக்திய' என்ற பெயரில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய, கடந்த சில நாட்களாக 24 மணிநேர தொடர் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் ஊடாக, இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாங்களில் மாத்திரம் 2,008 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், யுக்திய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 17-ஆம் தேதி முதல் நேற்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த காலப் பகுதி வரை 6,583 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன், மேலும் பல சந்தேக நபர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குழுக்களுக்கு சொந்தமான சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். பேருந்துகள், கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள், தங்காபரணங்கள், பணம் உள்ளிட்ட சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்க சொத்துக்களை போலீஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதுடன், இந்த சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். புதிய சோதனை நடவடிக்கைகளின் நோக்கம் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் வலையமைப்பை வீழ்த்துவதே, போலீஸ் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தேடுதல் நடவடிக்கைகளின் நோக்கம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். ''இந்த யுக்திய தேடுதல் நடவடிக்கை கடந்த 17-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. போலீஸ் திணைக்களத்தின் முழுமையான படையணி இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழிப்பதே எமது திட்டம். இந்த தேடுதல் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும்," என்கிறார் நிஹால் தல்துவ. ''இந்த போதைப்பொருள் வலையமைப்பில் இதற்கு முன்னர் நாம் அடையாளம் கண்டுக்கொண்ட நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்றும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இலக்காகக் கொண்டு இந்தச் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம். இந்த வலையமைப்பை வீழ்த்தி, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோன்று, இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில், திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யும் இயலுமை கிடைக்கும்," என்கிறார். ''அதன்பின்னர், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். கைது செய்யப்படும் நபர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் எதிர்கால தேடுதல்களை முன்னெடுப்போம்," என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். படக்குறிப்பு, சோதனையில் ஈடுபட்டிருக்கும் போலீசார் இதுவரை நடந்த தேடுதல்கள் என்ன செய்தன? போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களின் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. 2005-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் 'போதைக்கு முற்றுப்புள்ளி' என வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் போலீஸாரினால் 'ஒபரேஷன் க்ளீன் அப்’ தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த பெருந்தொகையான போதைப்பொருட்களை அரச புலனாய்வு பிரிவு, போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகி, பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த மாகந்துர மதுஷ் உள்ளிட்ட பல சந்தேகநபர்களை பாதுகாப்பு பிரிவினர் நாட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். இவ்வாறான திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த பின்னணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில், இடைக்கால போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னக்கோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் இணைந்து தற்போது யுக்திய திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c88250jz41vo
-
பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Published By: DIGITAL DESK 3 21 DEC, 2023 | 04:15 PM (எம்.வை.எம்.சியாம்) குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் நாள் சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 92 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய முப்படைகளின் ஒத்துழைப்புகளுடன் நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக நேற்றுமுன்தினம் அதிகாலை 12.30 மணி தொடக்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர சுற்றிவளைப்புகளில் 2,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை நான்கு நாள் முடிவில் 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றுள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்செவன அடுக்குமாடி குடியிருப்பில் முப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு சொந்தமான சுமார் 920 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் இரு பஸ்கள், இரு கார்கள், இரு மோட்டார் சைக்கிள்கள், 4 காணிகள் மற்றும் வீடொன்றும் உள்ளடங்குவதாகவும் இந்த சொத்துக்களை சந்தேகநபர்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் பெயர்களில் கொள்வனவு செய்து அதனை மறைத்து வைத்திருந்ததாகவும் இது தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இதனிடையே 2 கிலோ 400 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் ,ஒரு கிலோ 200 கிராம் ஐஸ், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 12 கிராம் ஹஷீஷ், 5 கிலோ 200 கிராம் மாவா, 17,054 போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 73,833 கஞ்சா சொடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/172227
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள், யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்ய தளபதிகளால் ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். 21 டிசம்பர் 2023, 07:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் போரில் ரஷ்ய தளபதிகளின் தவறான போர் உத்திகள் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ரஷ்ய படைகளின் குற்றச்சாட்டு பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. போருக்கு சென்ற போது தங்களது மூத்த அதிகாரிகள் தங்களை ‘இறைச்சி’ என்று அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர் ரஷ்ய ராணுவ வீரர்கள். ‘தகுதியற்ற’ தளபதிகள் மற்றும் அவர்களது ‘மீட்-கிரைண்டர்’ உத்திகள் யுக்ரேன் போரில் ஏற்பட்டுள்ள ரஷ்ய தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தப் போர் தொடங்கியபோது, ரஷ்யா தனது 155-ஆவது கடற்படை மற்றும் காலாட்படையை ஒரு உயர்தர பிரிவாகக் கருதியது. ஆனால் போர் முன்னேற்றம் அடைந்த சமயத்தில் தான், இந்தப் பிரிவின் பலவீனங்கள் போர்க்களத்திலேயே அம்பலமாக தொடங்கின. பிபிசி புலனாய்வின் படி, இந்த படைப்பிரிவில் மட்டும் ஒரே தாக்குதலில் குறைந்தபட்சம் 60 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி கொல்லப்பட்ட ராணுவவீரர்களில் 25 வயதாகும் ரமாஸ் கோர்காட்ஸேவும் ஒருவர். இவர் ரசியாவின் கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர். ராப் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட ரமாஸ் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். போருக்கு செல்வதற்கு முன்பு “ ரஷ்யா உங்களுடன் நிற்கிறது. ரஷ்ய ராணுவவீரர்கள் உங்களுக்காக சண்டையிடுகிறார்கள்” என்ற பாடலை கூட ரமாஸ் கோர்காட்ஸே பாடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். ராணுவ சீருடையில் தான் இருப்பது போன்ற போட்டோக்களை கூட அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு படத்தில் யுக்ரேனுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் கடைசியாக உண்ட பீட்சா மற்றும் பீருடன் இருக்கும் படமும் அடங்கும். அவர் தனிப்பட்ட முறையில் போர்களை எதிர்த்தாலும், அரசு உத்தரவின்படி அக்டோபர் 2022 இல் தென்கிழக்கு யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் 155 வது கடற்படை காலாட்படை பிரிவில் சேர்ந்தார். அந்த நேரத்தில் தான், இந்த பிரிவு பூச்சா மற்றும் இசியம் பகுதிகளில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதை ரஷ்யா மறுத்தது. ரமாஸ் கோர்காட்ஸேவின் தாய் ரஷ்ய செய்தி ஊடகமான மகடன் பிராவ்தாவிடம், “யுக்ரேனில் அவனுக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் என்னிடம் சொன்னான், ‘இறப்பது மோசமான விஷயம் அல்ல, ஆனால் என்னைப் போன்றவர்களை சுடுவதே மோசமான விஷயம்’ என்று அவரது மகன் தன்னிடம் கூறியதாக” தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,INSTAGRAM படக்குறிப்பு, ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்கியது உக்ரேனிய இராணுவம் புதிய ரத்தமும் சதையும் கோர்காட்ஸே விரைவிலேயே உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான பாவ்லிவ்கா மற்றும் வுலேடாரைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார். இந்த போரின் ரத்தக் களரியான மோதல் ஒருகாலத்தில் 15 ஆயிரம் சுரங்க தொழில் குடும்பங்கள் வாழ்ந்த பகுதியான வுஹ்லேடரில் நடைபெற்றது. இந்த பகுதி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்க உக்ரேனிய ராணுவம் இந்த இடத்தை தான் பயன்படுத்தியது. அதே நேரத்தில், கோர்காட்ஸே அருகிலுள்ள வோல்னோவாகா பகுதியில் ஏற்பட்ட அழிவு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதற்கு பின், வுலேடார் பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தனது தாய்க்கு அவர் அனுப்பும் தகவல்கள் நின்று விட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 155 வது படைப்பிரிவின் வீரர்கள் பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக்குக்கு கடிதம் எழுதியுள்ளனர். காட்டிக்கொடுத்த கடிதங்கள் தங்களது பிரிவுகளில் இருந்து வீரர்கள் காணாமல் போகும் செய்திகள் மிக வழக்கமானதாகி விட்டது என்று 155 ஆவது படைப்பிரிவு வீரர்கள் கடிதம் ஒன்றை எழுதினர். நவம்பர் மாத தொடக்கத்தில், 155 ஆவது படைப்பிரிவின் வீரர்கள் ரஷ்ய மாகாணமான பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக் கோஜெமியாகோவுக்கு டெலிகிராம் வழியாக அந்த கடிதத்தை அனுப்பினார்கள். அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. போர்க்களத்தில் நிலவும் குழப்பமான சூழலை விவரித்தும், இராணுவ தளபதிகளை கடுமையாக விமர்சித்தும் அந்த வீரர்களால் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. "எதிர்பாராத தாக்குதல்களுக்கு" மத்தியில் நான்கு நாட்களில் மட்டும் "சுமார் 300 பேர் வரை உயிரிழப்புகள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்" என்று அந்த வீரர்கள் தெரிவித்திருந்தனர். மேலதிகாரிகள் தங்களை 'இறைச்சி' என்று அழைப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடற்படையினரின் கூற்றுக்களை நிராகரிக்கும் ஒரு அரிதான பொது மறுப்பு வெளியிட நிர்பந்தமாக அமைந்தது. “ஆம், அங்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன, கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அந்த கடிதத்தில் இருப்பது போல் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என்று தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் ஓலெக் கோஜெமியாகோவ். இந்த வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் கொடுப்பதற்கான உறுதியையும் வழங்கினார் கவர்னர். போர் பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பிபிசி - ஐ புலனாய்வு பிரிவு ஆய்வு செய்தது. யுக்ரேனின் உளவு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள், அதே தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதைக் காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES வெவ்வேறு நாட்களில், யுக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் பல கவச வாகனங்களை பாவ்லிவ்காவுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் வைத்து ஒரே பகுதியில் வெடிக்கச் செய்துள்ளது. இது ரஷ்யர்கள் ‘தரைவழிப் போரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை' என்பதை உறுதிப்படுத்துவதாக கூறுகிறார் 2004 இல் ரஷ்ய கடற்படையினருடன் பணிபுரிந்த பாதுகாப்பு ஆய்வாளர் டைஃபன் ஆஸ்பர்க். “பயன்படுத்த ஒரே ஒரு திறந்தவெளி சாலை மட்டுமே உள்ள இடத்தில் எங்கு சுடுவது என்று யுக்ரேன் படைகளுக்கு தெரியும்” என்று கூறுகிறார் அவர். கண்ணிவெடி அகற்றப்படாமலும், வான்வழி உளவு செயல்பாடுகள் இன்றியும், போதிய உளவுத்துறை இன்றியும் நடைபெறும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தற்கொலைச் செயலாகும்" என்கிறார் அவர். “கீவை கைப்பற்றும் முயற்சியில் ஏற்கனவே 155வது படைப்பிரிவு பெரும் இழப்பை சந்தித்து விட்டது” என்கிறார் லண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த போர் நிபுணர் வில்லியம் ஆல்பர்ட்க். "அந்த வீரர்களுக்கு போதுமான பயிற்சி அல்லது போதுமான உபகரணங்கள் கூட தரப்படவில்லை என்பது போல் தெரிவதாக" கூறுகிறார் அவர். இதர ராணுவ ஆய்வாளர்கள் வுலேடருக்கு முன்தயாரிப்பின்றி படைகளை அனுப்பும் முடிவை, ‘மீட் - கிரைண்டர் உத்தியை’ கொண்டு விவரிக்கின்றனர். பட மூலாதாரம்,OK.RU படக்குறிப்பு, 7000 கிலோமீட்டர் வரை பயணித்து யுக்ரேன் சென்றுள்ளார் ஸ்வெட்லானா ஒரு தாயின் பயணம் தனது மகன் குறித்த எந்த தகவலுமே டிசம்பர் வரை வராததால் கோர்காட்ஸேவின் தாயார் ஸ்வெட்லானா விரக்தியில் இருந்தார். எனவே, அவரே கோர்காட்ஸேவை தேடுவதற்காக போர்ப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்தார். யுக்ரேன் செல்ல 7000 கிலோமீட்டர் வரை பயணித்ததாக அவர் கூறுகிறார். அதை தாண்டி அங்கே சென்றடைந்த போது தான் தனது மகன் இறந்துவிட்டார் என்பது அவருக்கு தெரிந்தது. கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படுவதற்கு முந்தைய நாள், பாவ்லிவ்காவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கோர்காட்ஸே நுழைந்துள்ளார். அப்போது ஆளில்லா விமானம் வீசிய கைக்குண்டு வெடித்ததில் அவரது கால்கள் வெடித்து சிதறியுள்ளது. பின் அவர் காயம் காரணமாக இறந்துள்ளார். படக்குறிப்பு, 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு 155 படைப்பிரிவில் எத்தனை பேர் இறந்துள்ளனர்? உயிரிழப்புகள் குறித்து ரஷ்யாவின்அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், பிபிசி ரஷ்ய சேவையின் ஓல்கா இவ்ஷினா, ரஷ்யாவின் சுயாதீன செய்தி இணையதளமான மீடியாஜோனா மற்றும் இறந்தவர்களைக் கணக்கிடும் தன்னார்வலர்களின் வலையமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதிகாரபூர்வ அறிக்கைகள், சமூக வலைதள பதிவுகள், ஊடக அறிக்கைகள் மற்றும் ரஷ்யாவில் உள்ள கல்லறைகளின் போட்டோக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 155-ஆவது கடற்படை காலாட்படை பிரிவில் மார்ச் 6, 2022 முதல் பிப்ரவரி 22, 2023 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 157 ஆக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாவ்லிவ்கா மற்றும் வுலேடார் பகுதிகளில் நடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 தாக்குதல்களில் தான் அதிக வீரர்கள் இறந்துள்ளதும் இந்த தரவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. குறைந்தது 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு. “தற்போது கிடைத்துள்ள எண்ணிக்கையை விட 155-ஆவது படைப்பிரிவில் இறந்துள்ள போர்வீரர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள தரவுகளை விட ரஷ்ய இழப்புகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக” கூறுகிறார் ஓல்கா இவ்ஷினா. பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், இந்த போரில் இழப்புகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டும் என தெரிவித்துள்ளது. இதில் தோராயமாக 70 ஆயிரம் இறப்புகளும் அடக்கம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. முடிவு என்ன? ரஷ்யா வுலேடார் மீது அடுத்த தாக்குதலை அறிவித்த அதே சமயத்தில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தனது சொந்த நகரமான யாகோட்னோய் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது கோர்காட்ஸேவின் உடல். அதிலிருந்து சில நாட்கள் கழித்து, 155 வது படைப்பிரிவின் வீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மற்றொரு கடிதத்தில் , தரைவழி நிலை குறித்து மேலும் பேரழிவு தரக்கூடிய மதிப்பீடு குறித்து கூறப்பட்டுள்ளது. ரஷியாவின் கடற்படை வீரர்கள் குறித்து அதிபர் புதினிடம் கேட்டபோது, “கடற்படை வீரர்கள் தற்போது நன்றாகவே பணிபுரிந்து வருவதாகவும், தைரியத்துடன் சண்டையிட்டு வருவதாகவும்” கூறியுள்ளார். கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. சமீபத்தில் கூட கவச வாகனங்கள் வெடி வைத்து தகர்க்கப்படக்கூடிய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/czkjln27ynmo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இவ்வளவு ஏலத் தொகை கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை! - மிட்செல் ஸ்டார்க் 20 DEC, 2023 | 09:34 PM ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய மதிப்பின்படி, 24 3/4 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறார். 33 வயதான இவர் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட்டுகளை (10 ஆட்டம்) கைப்பற்றியிருந்தார். இந்த ஏலம் தொடர்பில் அவர் கூறுகையில், உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (அவுஸ்திரேலியா பெண்கள் அணியின் தலைவர்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார். ஏலத்தில் எனது தொகை விபரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லிவிட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்லில் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/172173
-
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் - டக்ளஸ்
தவிச்ச வடக்கிற்கு தண்ணீர் வழங்கும் பாலியாறு Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 11:50 AM மு.தமிழ்ச்செல்வன் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தகவல்களின் படி உலகில் வாழ்கின்ற சுமார் 8 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்று பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. இன்னும் சில வருடங்களில் இந்த 2.2 பில்லியன் மக்களுடன் யாழ்ப்பாணம் மக்களும் இணைந்துகொள்வார்கள் என்ற நிலைமையை தற்போது தடுத்திருக்கிறது பாலியாறு. பாலியாறு குடிநீர் திட்டமானது வடக்கிற்கு தண்ணீர் வழங்குகின்ற ஒரு பாரிய திட்டமாக காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாலியாறு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களில் உள்ள சனத் தொகையை விட யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 6 இலட்சத்து 26 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்கள் முழுக்க முழுக்க தங்களது நீர் தேவையினை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோ பாதுகாப்பற்றதாக மாறிசெல்கிறது. குடாநாடு என்பதனால் நன்னீர் உவராக மாறும் தன்மை அதிகரித்து செல்வது, அதிக சனத்தொகை என்பதனால் அடர்த்தி மிக்க குடியிருப்புகள் காரணமாக நிலத்தடி மாசுப்படுதல் (மலக்கழிவுகள் நிலத்தடி நீரில் அதிகம் கலந்திருப்பது), நிலத்தடி நீர் குறைவடைந்து செல்வது போன்ற நிலைமைகளால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் குளங்கள், ஆறுகள் என்பன அதிகமான காணப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் தங்களது நீர்த்தேவையினை நிலத்தடி நீரில்மட்டுமன்றி ஆறுகள்,குளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை இல்லை. இதன்காரணமாக யாழ்ப்பாணத்தின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவை தொடர்பில் பல காலங்களாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ள போதும் அவற்றின் சாதக பாதக காரணிகளை கருத்தில் கொண்டு பாலியாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு முன்னாய்ந்த நடவடிக்கைகளுக்கு 250 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்துள்ளது. பாலியாறு இலங்கையின் வடக்கே வட மாகாணத்திற்குள் காணப்படுகின்ற ஓர் ஆறு. 68.4 கிலோ மீற்றர் நீளமுள்ள பாலியாறு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் ஆரம்பித்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை கடந்து கடலுக்குள் கலக்கிறது. பாலியாறு குடிநீர் திட்டம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாற்றை வழி மறித்து 4.6 கிலோமீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும். 1 இலட்சத்து 18,363 ஏக்கர் ( 479 சதுர கிலோ மீற்றர்) பரப்பளவு நீரேந்து பிரதேசங்களில் வருடந்தோறும் 1,317 மில்லி மீற்றர் சராசரி மழைவீழ்ச்சியிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீரைக்கொண்டு 2,562 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற மழை நீரானது வருடத்திற்கு 151 எம்சிஎம் அளவு எந்தவித பயனும் இன்றி வீணாக கடலில் சேர்கிறது. பல மில்லியன் ரூபாக்கள் செலவில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 41.2 எம்சிஎம் அளவு நீர் குடிநீருக்கு பெறப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் மீற்றர் கியூப் நீர் குடிநீருக்காக பெறப்படும். பயன்பெறும் பிரதேசங்கள் அமைக்கப்படவுள்ள பாலியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும், மன்னாள் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்படவுள்ளது. திட்டத்தின் ஏனைய நன்மைகள் பாலியாறு குடிநீர் திட்டத்தினால் பின்வரும் நன்மைகள் ஏற்படும் திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். • 358 ஹெக்டயருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசனம் • வருடம் ஒன்றுக்கு 800,000 மெட்றிக்தொன் மீன் பிடி • சுற்றுலா பயணிகள் வருகையின் மூலமான வருமானம் • மிதக்கும் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி • சுற்றுச்சூழல் நன்மை கருதி செக்கனுக்கு 08 மீற்றர் கியூப் நீர் வெளியேற்றப்படுகின்றமை • நிலம் உவராகி வருகின்றமையினை தடுத்தல் • நீர் தேக்குவதன் மூலம் ஏற்படும் மக்களின் குடிபெயர்ச்சி இன்மை திட்டத்தின் சவால்கள் • பாலியாறு திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது நீர் சேமிக்கப்படுகின்ற 2,562 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்ற அடர்த்தியற்ற ஒதுக்கப்பட்ட காடுகள் நீருக்குள் சென்றுவிடுகின்ற நிலைமை ஏற்படும். • நீர்த்தேக்க பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகள் என்பதனால் வனவளத் திணைக்களத்தின் அனுமதி பெறுவது • இப் பாரிய முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி மூலங்களை கண்டுபிடித்தல் வடக்கு குடிநீருக்கான பொருத்தமான திட்டம் மேற்படி இந்த திட்டமானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான திட்டமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான குடிநீருக்கு ஆறுமுகம் திட்டம், இரணைமடு திட்டம், கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம், வடமராட்சி நீர்த்தேக்கம் பாலியாறு திட்டம் என பல திட்டங்கள ஆராயப்பட்டன. ஆனால் அந்த திட்டங்களில் எல்லாம் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. நடைமுறைப்படுத்துவதில் சமூக பொருளாதார நெருக்கடிகள் உருவாகின. ஆனால் பாலியாறு திட்டத்தின் மூலம் அவ்வாறான எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை, அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்களும், உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதல் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதே இதன் வெற்றியாகும். பாலியாறு திட்டத்தின் ஊடான நீர் பங்கீட்டில் கூட எவ்வித சவால்களும் உருவாகவில்லை. ஆகவே பாலியாறு திட்டம் குடிநீருக்கு தவிச்ச வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்கும் ஒரு பொருத்தமான திட்டமே. https://www.virakesari.lk/article/172130
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சம்மதம் தெரிவிக்கும் இஸ்ரேல், எகிப்து செல்லும் ஹமாஸ் தலைவர்: காசாவில் மீண்டும் போர் நிறுத்தம்? ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்பதற்காக காசாவில் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் 90க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது. காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார். இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார். இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதால் நிறைவேற முடியாத நிலையில் இருந்து வருகிறது. https://thinakkural.lk/article/285375
-
உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்
உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் தொடர்பான அறிவித்தல்! உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இவ்வருடமும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். 2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் முறையாகத் தோன்றி, பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரம் கற்கத் தகுதிபெற்று, அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி பயிலும், விண்ணப்பதாரரின் குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 100,000 வுக்கு குறைவாக காணப்படுகின்றமை இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது. இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளங்கள்: presidentsoffice.gov.lk ஜனாதிபதி நிதியம்: presidentsfund.gov.lk மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு: pmd.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள், 2023 டிசம்பர் 22-ஆம் திகதிக்கு முன், தாங்கள் பரீட்சை எழுதிய பாடசலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதால், எனவே தகுதியுடைய சகல மாணவர்களும் டிசம்பர் 22 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுத்துள்ளது. https://thinakkural.lk/article/285415
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ரச்சின் ரவீந்திரா, மிட்செலை சென்னை அணி வாங்கியது ஏன்? தோனிக்கு பிறகு கேப்டன் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 19 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம், கிரிக்கெட் மீதான காதல், அணியின் மீதான பற்று அவரை தொடர்ந்து இயங்க வைக்கிறது” சிஎஸ்கே அணி குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில். இதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் மகேந்திர சிங் தோனி இப்போதைக்கு ஓய்வு அறிவிக்க மாட்டார் என்பதையே அவர் சூசமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனக்கு ஈடான சிறந்த கேப்டனை கண்டுபிடிக்கும் வரை, உருவாக்கும் வரை தோனி கேப்டனாகத் தொடர்வார் என்று கூட வைத்துக்கொள்ளலாம் என்று பிளெம்மிங் பேச்சின் மூலம் தெரிகிறது. தோனியும் வியூகமும் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி களத்துக்கு வந்துவிட்டாலே, அவர் எவ்வாறு வீரர்களைக் கையாள்வார், எந்தெந்த வீரர்களுக்கு எப்போது பந்துவீச வாய்ப்பளிப்பார், பீல்டிங் வியூகம் என அனைத்துமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எதிர் அணியினரும் எதிர்பார்ப்புடன் பார்க்கக் காத்திருப்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் வேண்டாம் என நிராகரிக்கப்பட்ட பல வீரர்களை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கி அவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி அவர்களை வேறு கோணத்தில் காட்டியதுண்டு. உதாரணமாக ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி போன்றோர் நடுவரிசையில் நிதானமாக ஆடக்கூடிய பேட்டர்கள். ஆனால், சிஎஸ்கே அணிக்கு வந்தபின் அவர்களின் பேட்டிங் வியூகமும், ஸ்டைலும் மாறிவிட்டது. எந்த வீரர்களாக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிட்டாலே அவர்களை தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் திறமை தோனிக்கும், சிஎஸ்கே பயிற்சிக்கும் இருக்கிறது என்று அந்த அணியில் உள்ள பல வீரர்கள் பேட்டியிலேயே தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES விடுவிக்கப்பட்ட வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியிலிருந்து அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் ஏலத்திலும் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கு வலை சி.எஸ்.கே அணி ஏலத்துக்குள் நுழையும் போது அதன் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருந்தது. கிறது. இந்தத் தொகையை வைத்து, ஏலத்தைச் சந்தித்தது. முதலில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீது குறி வைத்தது. ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் என்று ஏற்கெனவே பிபிசி செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தநிலையில் அது உண்மையாகிது. உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று சிறப்பாகச் செயல்பட்ட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திராவுக்கு அடிப்படை விலை ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்து. ஆனால், கடும் போட்டிக்குப்பின் அவரை ரூ.1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ரச்சின் ரவீந்திரா அவசியம் ஏன்? சிஎஸ்கே அணிக்கு கெய்க்வாட்டுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்க சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவசியம் தேவை. அதனால்தான் தொடக்க ஆட்டகாரருக்காக இடதுகை பேட்டர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியுள்ளது சிஎஸ்கே. அது மட்டுமல்லாமல் ரவீந்திரா சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்பதால், நடுப்பகுதி ஓவர்களிலும் ரவீந்திராவை தோனியால் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். இதுபோன்ற இளம் வீரர்களை தோனி சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக்குவார் என்பதில் சந்தேகமில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ராயுடு இடத்தை நிரப்பும் மிட்செல் அடுத்ததாக நியூசிலந்து ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் கடந்த சீசனில் விலை போகவில்லை. ஆனால் இந்த முறை ஏலத்தில் அவரை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாயிலிருந்து ரூ.13 கோடி அதிகமாக ரூ.14 கோடிக்கு வாங்கியது. சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதனால்தான் ஆல்ரவுண்டர்கள் ஏலத்தில் வரும்போது அவர்களை தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்குவதை சிஎஸ்கே வியூகமாக வைத்துள்ளது. ஏற்கெனவே ரவீந்திராவை வாங்கியநிலையில் டேரல் மிட்செலை வாங்கியுள்ளது. டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்துள்ள மிட்செலின் ஸ்ட்ரைக் ரேட் 137க்கும் மேல் வைத்திருக்கிறார். ஒன்டவுன் மற்றும் நடுவரிசையில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக களமிறக்க மிட்ஷெலை விலைக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு தூண் போல் இருந்துவந்தார். ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’. களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சித்து டேரல் மிட்ஷெலை வாங்கியுள்ளது. ராயுடு இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், அவரின் இடத்துக்கு வலுவான ஒரு பேட்டர் தேவை என்பதால், டேரல் மிட்செல் வாங்கப்பட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியில் மீண்டும் ஷர்துல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர் நீண்டகாலமாக இருந்து வந்தார், கடந்த இரு சீசன்களுக்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டநிலையில் மீண்டும் வாங்கப்பட்டுள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூரை வைத்துக்கொண்டு பல போட்டிகளை தோனி வென்று காட்டியுள்ளார். தோனிக்கு ஏற்ற தளபதியாக இருவரும் பலநேரங்களில் பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அணியை வெல்ல வைத்துள்ளனர். ஆதலால், மீண்டும் ஷர்துலை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசிவரை பேட்ஸ்மேன் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தம் இன்றைய அணிகளுக்கு இருக்கிறது. ஷர்துல் தாக்கூர் நன்றாகவே பேட்டிங் செய்யக்கூடியவர், பிஞ்ச் ஹிட்டராக செயல்படக்கூடியவர் என்பதால், அவரை ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது. யார் இந்த சமீர் ரிஸ்வி? இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அன்கேப்டு வீரரும், 20 வயதான சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். உத்தரப்பிரேதசத்தைச் சேர்ந்த பேட்டர் சமீர் ரிஸ்வி. இவரின் அடிப்படை விலையே ரூ.20 லட்சம்தான். ஆனால், இவரை வாங்குவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், சிஎஸ்கேவும் கடும்போட்டியிட்டன, இடையே டெல்லி கேபிடல்ஸ் அணியும் சேர்ந்து போட்டியிட்டது. உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில் 9 இன்னிங்ஸில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் சேர்த்தால் சமீர் ரிஸ்வி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டார். 20வயதான ரிஸ்வி பிக்ஹிட்டர், பெரிய ஷாட்களை அடிக்கும் வல்லமை படைத்தவர். சமீபத்தில் நடந்த முஸ்தாக் அலி தொடரில் 18 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசியுள்ளார். தான் சந்தித்த ஒவ்வொரு 11 பந்துகளிலும் ஒரு சிக்ஸரை ரிஸ்வி பறக்கவிட்டதால் சிஎஸ்கே அவரை கொத்திக் கொண்டது. இதுவரை 11 டி20 போட்டிகளில் மட்டுமே ரிஸ்வி விளையாடி 295 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் சராசரி வைத்துள்ளார். வலதுகை பேட்டரான ரிஸ்வி ஆடவருக்கான மாநில அளவிலான 23வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் அடித்து இறுதிப்போட்டியில் 84 ரன்கள் சேர்த்து உத்தரப்பிரதேசம் வெல்ல காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் 37 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசி இருந்தார். இதனால், ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணியில் கிரேட் ஃபினிஷராக தோனி இருந்தாலும் அவரின் பணிச் சுமையைக் குறைக்க மற்றொரு வீரரை உருவாக்குவதும் அவசியம். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே நிர்வாகம் விலைக்கு வாங்கி உருவாக்க இருக்கிறது. மேட்ச் பினிஷிங்கில் சிறப்பாகச் செயல்படும் ரிஸ்வியின் ஸ்ட்ரைக் ரேட் 130 மேல் வைத்துள்ளார். மேலும், டெத் ஓவர்களை விளாசி, பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர் என்பதால், பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு இதுபோன்ற பேட்டர்கள் அவசியம் என்பதால் ரிஸ்வியை சிஎஸ்கே வாங்கியுள்ளது. முதல் வங்கதேச வீரர் சிஎஸ்கே அணியில் இடதுகை பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் பல நேரங்களில் துருப்புச் சீட்டாக இருந்துள்ளனர். ஆதலால்தான் கடந்த காலங்களில் இருந்தே இடதுகை பேட்டர்களுக்கும், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியம் அளிக்கப்படும். இந்தமுறை ஏலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இடம் பெறுவது இதுதான் முதல்முறையாகும். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய திறமை படைத்தவர். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாகவும் பந்துவீசும் திறமை கொண்டவர் என்பதால் முஸ்தபிசுர் ரஹ்மானை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், இவர் போன்ற வீரர் கிடைக்கும்போது, சரியான தருணத்தில் பயன்படுத்தி, வெற்றியும் பெறுவார், அந்த வீரரையும் உலகறியச் செய்வார். புதிய பந்தில் பந்துவீச தீபக் சஹர், பதீரணாவுடன் அல்லது மாற்றாக ஒரு பந்துவீச்சாளர் தேவை என்பதால், முஸ்தபிசுர் ரஹ்மான் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்கு வரும் சீசனில் தொடக்கப் பந்துவீச்சாளராகக் கூட முஸ்தபிசுர் மாறினாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை. பேட்டிங்கில் நடுவரிசையில் அம்பதி ராயுடு இடத்தை நிரப்ப டேரல் மிட்ஷெலும், கெய்க்வாட்டுடன் ஆட்டத்தைத் தொடங்க ரச்சின் ரவீந்திராவும் வாங்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் டேவன் கான்வே ஆட்டத்தைத் தொடங்கினாலும், இந்த சீசனில் ரவீந்திரா அல்லது கான்வே என மாற்றி மாற்றி பயன்படுத்தப்படக்கூடும். இதில் கூடுதலாக ரவீந்திரா ஆல்ர்வுண்டர் என்பதால் அதிகமான வாய்ப்புக் கிடைக்கலாம். தோனிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் யார்? தோனி இல்லாத சிஎஸ்கே அணி, சிஎஸ்கே அணியையும் தோனியையும் பிரிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற வார்த்தைகளை கால மாற்றத்தால் ஏற்கத்தான் வேண்டும். ஆனால், தோனிக்குப்பின் அடுத்த கேப்டன் யார் என்பதை ரசிகர்களும், பல முன்னாள் வீரர்களும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதற்குரிய சரியான பதில் சிஎஸ்கே நிர்வாகத்திடம் இல்லை. ஏற்கெனவே ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து கையைச் சுட்டுக்கொண்டதால், அடுத்த கேப்டனாக இளம் வீரரிடம்தான் பொறுப்பு வழங்கப்படும். அந்த இளம் வீரருக்கு தோனி குறைந்தபட்சம் சில சீசன்களுக்கு பயி்ற்சி அளிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வரலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவை வாங்கியபின், அவரின் பெயரும் கேப்டனுக்கு பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது. சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதி இளம் வீரர் ஒருவர் கேப்டனாக வரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி விவரம் மகேந்திர சிங் தோனி(கேப்டன்), மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, அஜெய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதீரணா, அஜின்கயே ரஹானே, ஷேக் ரஷீத், மிட்ஷெல் சான்ட்னர், மிட்ஷெல், சிமர்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஸனா, சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான். https://www.bbc.com/tamil/articles/cv2jx2g073ro
-
இந்தியா தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்
தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் ரன் எடுக்க இந்திய வீரர்கள் திணறியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நன்றே பர்கரின் துல்லியமான பந்துவீச்சு, டோனி ஜோர்ஜியின் முதல் சதம் ஆகியவற்றால் ஜீபெரா நகரில் நேற்று நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. முதலில் பேட் செய்த இந்திய அணி 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 212 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை துரத்திச் சென்ற தென் ஆப்பிரிக்க அணி, 45 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து 4-வது ஒருநாள் வெற்றியை இந்திய அணி பதிவு செய்யவிடாமல் தென் ஆப்பிரிக்கா தடுத்துவிட்டது. அடுத்துவரும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியையும் தென் ஆப்பிரிக்கா வென்றால்தான் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி தனது பெயரையும் காப்பாற்றிக்கொள்ள முடியும். ஏனென்றால், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சொந்த மண்ணில் நடந்த எந்த ஒருநாள் தொடரையும் தென் ஆப்பிரிக்க அணியால் கைப்பற்ற முடியவில்லை. ஒருவேளை இந்தியாவிடம் 3வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தால், தொடர்ந்து 4-வது ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்து தென் ஆப்பிரிக்கா அவப்பெயரைப் பெறும். இந்திய அணிக்கு எதிராக தனது 4-வது போட்டியிலேயே சதம் விளாசி வெற்றிக்குத் துணை புரிந்த டோனி ஜோர்ஜி (119) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்க வீரர் ஹென்ட்ரிக்ஸ் (52), டூசென் (36) ஆகியோர் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இதில் தொடக்க விக்கெட்டுக்கு ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் 130 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினர். ஆடுகளத்தின் தன்மை அறியவில்லையா? இந்தப் போட்டி நடந்த மைதானம், ஜோகன்னஸ்பர்க் ஆடுகளம் போல் அதிக ரன்களை அடிக்கும் விக்கெட் இல்லை. இந்த மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டி 4 ஆண்டுகளுக்குப்பின் நேற்றுதான் நடந்தது. கடந்த 12 ஆண்டுகளில் இங்கு 8 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஒரு போட்டியில்கூட எந்த அணியும் 300 ரன்களை எட்டியது இல்லை. இந்த ஆடுகளம் மெதுவான, பந்துகள் தாழ்வாக வரும் விக்கெட்டைக் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்களில் குறைந்த தரம் கொண்ட மைதானத்தில் முக்கியமானதாகும். இத்தகைய விவரங்களைத் தெரிந்திருந்தாலும் இந்திய அணியின் பேட்டர்கள் நேற்றைய ஆட்டத்தில் சிறிதுகூட பொறுமை காட்டவில்லை. இந்திய பேட்டர்கள் பேட் செய்யும் போது பந்து எந்த வேகத்தில் வருகிறது, நின்று வருகிறதா அல்லது ஸ்விங், சீமிங் இருக்கிறதா என்பதை பெரிதாக கவனித்தது போல் தெரியவில்லை. ஏனென்றால், கெய்க்வாட் ஆட்டமிழந்தவிதம், பந்தின் வேகத்தை சற்றுகூட கவனிக்காமல் கால்காப்பில் வாங்கி பர்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் லிசாட் வில்லியம்ஸ், பர்கர், ஹென்ட்ரிக்ஸ் ஆகிய மூவரும் தொடக்கத்திலிருந்து லைன் லென்த்தை நகற்றாமல் பந்துவீசி நெருக்கடியில் தள்ளினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது. தாக்குப்பிடிக்காத இந்திய பேட்டர்கள் தென் ஆப்பிரிக்காவின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான நார்ஜே, ரபாடா, யான்சென் ஆகியோர் இல்லாத நிலையில் 2-வது நிலை பந்துவீச்சாளர்களுக்கே இந்திய அணி பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த ஆடுகளத்தில் பெரிய ஸ்கோர் அடிப்பது கடினமானது. 250 ரன்கள் சேர்த்துவிட்டாலே சேஸிங் செய்வது கடினம் என்பது தெரியும். அதற்கு ஏற்றாற்போல் விக்கெட்டை நிலைப்படுத்தும் அளவுக்குகூட இந்திய பேட்டர்கள் விளையாடவில்லை. ஆனால், இந்திய பேட்டர்கள் புரிந்து கொண்டதைவிட, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டு பந்துவீசினர். தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த இந்த வெற்றி வேகப்பந்து வீச்சாளர்கள் பெற்றுக் கொடுத்த வெற்றியாகும். தொடக்கத்திலேயே இந்திய பேட்டிங்கை நிலைகுலைய வைத்து, பெரிய ரன்ஸ்கோர் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து வீசிய ஓவரில் மட்டும் 118 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளன. அதாவது இவர்கள் வீசிய 28 ஓவர்களில் 20 ஓவர்கள் டாட் பந்துகளாகும். மீதமுள்ள 8ஓவர்களில்தான் இந்திய பேட்டர்கள் 113 ரன்களை அடித்துள்ளது என்பதாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து 28 ஓவர்கள் பந்துவீசி 113 ரன்கள் கொடுத்து 6 இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர் கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்ய 8 பந்துவீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்களும் இந்த விக்கெட்டில் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் 3 பேரும் லைன் லென்த்தில் வீசி தொடக்கத்தில் நெருக்கடி அளித்தனர். இதனால் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ரன்ரேட் மெதுவாகவே உயர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் தவறான லென்த்தின் பந்துவீசிய போதெல்லாம் டோனி கோர்ஸி, ஹென்ட்ரிக்ஸ் இருவரும் சேர்ந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதில் டோனி கோர்ஸியை ஆட்டமிழக்கச் செய்யவும், முதல் விக்கெட்டை எடுக்கவும் 8 பந்துவீச்சாளர்களை கேப்டன் ராகுல் பயன்படுத்தியும் நீண்ட முயற்சிக்குகப்பின்புதான் பலன் கிடைத்தது. பேட்டிங் பலவீனம் வெளிப்பட்டதா? ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலவீனம், இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் வெளிப்பட்டுவிட்டது. இளம் வீரர்களுக்கு பேட்டிங் அனுபவம் இன்னும் தேவை என்பதை வெளிக்காட்டியுளளது. குறிப்பாக கெய்க்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்ஸன், ரிங்கு சிங் ஆகியோர் இந்தியாவில் உள்ள பேட்டிங்கிற்கு சாதகமான, அல்லது எந்த நாட்டிலும் இருக்கும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில்தான் விளையாடுவதற்கு தகுதியுள்ளவர்கள். இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய பொறுமையும் இல்லை, ஷாட்களை தேர்ந்தெடுத்தவிதமும், பந்துகளை கையாண்டவிதமும் மோசமாக இருந்தது. அதிலும் இந்திய அணிக்கு நடுவரிசை, ஒன்டவுன் வரிசைக்கு நல்ல பேட்டர் தேவை என்பதால், திலக் வர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இப்போதுவரை பெரிதாக எந்த ஸ்கோரும் அவர் செய்யவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார் ‘மாறாத’ சஞ்சு சாம்ஸன் நிலைத்தன்மை இல்லாத காரணத்தால்தான் இந்திய அணிக்குள் நிலையாக இடம் பெறமுடியாமல் சஞ்சு சாம்ஸன் தவித்து வந்தார். அதை மீண்டும் இந்த ஆட்டத்தில் நிரூபிதித்துவிட்டார். அனுபவம் வாய்ந்த பேட்டரான சாம்ஸன் 12 ரன்களில் ஹென்ட்ரிக்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். சாம்ஸனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து தேர்வாளர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினர், ஆனால், அதிலும் சாம்ஸன் சொதப்பிவிட்டார். இனிவரும் காலங்களில் சாம்ஸனுக்கான வாய்ப்பை மங்கச் செய்திருக்கிறது. ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ரிங்கு சிங் தொடர்ந்து 3வது ஆட்டமாக சொதப்பியுள்ளார். கடைசி டி20 போட்டி, முதல் ஒருநாள் ஆட்டத்தைத் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் மிகசொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி கடைசி 4 விக்கெட்டுகளை வெறும் 42 ரன்களுக்கு இழந்தது. நம்பிக்கை நாயகன் சுதர்ஷன் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை சாய் சுதர்ஷன். தொடர்ந்து 2வது அரைசதத்தை அடித்து இந்திய அணி ஸ்கோர் உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார். தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் வீசும் எந்த தவறான பந்தையும் தண்டிக்க சுதர்ஷன் தவறவில்லை. ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடிய அனுபவத்தால் மிகவும் நிதானமான ஆட்டத்தை சுதர்ஷன் கையாண்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய சுதர்ஷன், நேற்று கேசவ் மகராஜ் ஓவரில் சிக்ஸர் அடித்து அசத்தினார். நிதானமாக ஆடிய சுதர்ஷன் 65 பந்துகளில் தனது 2-வது அரைசதத்தை நிறைவு செய்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல்-சுதர்ஷன் இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இதுதான் இந்திய அணியில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். அதன்பின் கேப்டன் ராகுலுக்கு ஒத்துழைத்து பார்ட்னர்ஷி அமைக்க எந்த வீரர்களும் தயாராக இல்லை என்பதால்தான் ஸ்கோர் குறைவுக்கு காரணமாகும். பெரிய ஸ்கோருக்கு ஏன் செல்லவில்லை? 136 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 75 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்ஸன் (12), ரிங்கு சிங் (17) அக்ஸர் படேல் (7) என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் சாம்ஸன், ரிங்குசிங், அக்ஸர், திலக் வர்மா, கெய்க்வாட் ஆகிய 4 பேட்டர்கள் சாராசரியாக 20 ரன்கள் சேர்த்திருந்தாலே, இந்திய அணியின் ஸ்கோர் 280 ரன்களைத் தொட்டிருக்கும். இந்திய அணியின் ஸ்கோரில் கேப்டன் ராகுல் சேர்த்த 56 ரன்கள், சுதர்ஷன் சேர்த்த 62 ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், 90 ரன்கள் கூட மற்ற 8 பேட்டர்களும் சேர்க்கவில்லை என்பது வருத்ததத்குரியது என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்பிரிக்க பேட்டர்களும் இந்த ஸ்கோர் சேஸிங் செய்யக்கூடியது என்றாலும் எளிதானது அல்ல என்பதைப் புரிந்து பேட் செய்தனர் தோல்விக்கு என்ன காரணம்? இதுபோன்ற சவாலான ஆடுகளத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வலிமை என்ன என்பதை இந்த ஆட்டம் வெளிப்படுத்திவிட்டது. சுதர்ஷன், ராகுல் போன்ற நிதானமான ஆட்டத்தைக் கையாளக் கூடிய, பாரம்பரிய ஆட்டத்தை கையாள்பவர்கள்தான் இந்த ஆடுகளத்தில் நிலைக்க முடியும் என்பதை மற்ற பேட்டர்களுக்க உணர்த்திவிட்டனர். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் கடும் நெருக்கடி அளித்து, லைன் லென்த்தில் பந்துவீசியதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி இருவரும் மிகவும் பொறுமையாக ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடினர். இதனால், முதல் 35 பந்துகளில் ஹென்ட்ரிக்ஸ் 22 ரன்களும், ஜோர்ஜி முதல் 31 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர். ஆனால், தவறான லைன்லென்த்தில் பந்துவீசப்பட்டபோது ஜோர்ஜி, ஹென்ட்ரிக்ஸ் அதை பவுண்டரிக்கு அனுப்பி தண்டித்தனர். இதனால் அர்ஷ்தீப், முகேஷ் இருவரும் தங்களின் முதல் ஸ்பெல்லில் கட்டுப்பாக பந்துவீசி சராசரியாக 15 ரன்களுக்குள்ளாகவே கொடுத்தனர். ஆவேஷ்கான் பந்துவீச்சில் அதிகமான ஷார்ட் பந்துகள் வீசப்பட்டதால், ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜி பவுண்டரிகளாக விளாசி ரன்களைச் சேர்த்தனர். குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் பந்துவீச்சை குறிவைத்த இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களா விளாசி வெற்றியை எளிதாக்கினர். குல்தீப் யாதவும், ஆவேஷ்கானும் ஓவருக்கு 6 ரன்கள் வீதத்தில் விட்டுக்கொடுத்து தென் ஆப்பிரிக்க பேட்டர்களின் பணியை எளிதாக்கினர். இதுபோன்ற குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்யும்போது, பந்துவீச்சாளர்கள் எந்த அளவு சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து, கட்டுக் கோப்பாக பந்துவீசுகிறார்களோ அந்த அளவுக்கு போட்டி கடும் இறுக்கமாகச் செல்லும். ஆனால், குல்தீப், ஆவேஷ் கான் பல தவறான பந்துகளை வீசி ரன்களை வாரி வழங்கினர். https://www.bbc.com/tamil/articles/c4nyxdrg177o
-
ஐஸ்லாந்தில் 14 மணித்தியாலத்தில் 800 முறை நிலநடுக்கம் !
ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 10:36 AM ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை திங்கட்கிழமை (18) இரவு முதல் வெடிக்க ஆரம்பித்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில்திங்கட்கிழமை வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் எரிமலை வெடிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/172116
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து ஆடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விதான்ஷு குமார் பதவி, விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி ஹிந்திக்காக 19 டிசம்பர் 2023, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியக் கிரிக்கெட்டில் சமீபத்தில் எழுந்துள்ள புயல் இந்திய அணியுடன் தொடர்புடையது அல்ல. ஐ.பி.எல்.லின் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸுடன் தொடர்புடையது. சர்ச்சையின் மையத்தில் இருப்பவர் - ரோகித் சர்மா. அடுத்த சீசனில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தவுடன், இணையத்தில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமடந்துள்ளனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை இழந்தது. அறிவிப்பு வந்த முதல் நாளில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கத்தை நான்கு லட்சம் பேர் ‘அன்ஃபாலோ’ செய்திருக்கிறார்கள். ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் தொப்பிகளுக்கு தீ வைக்கும் படங்கள் இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினர். அதேசமயம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த நடவடிக்கையைப் பற்றித் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார் முன்னாள் இந்திய வீரர்கள் கூறுவது என்ன? முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் இடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் இடத்துக்கு இணையானதுதான் என்றார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரோகித் சர்மா அணியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். என்னுடைய பார்வையில் இது தோனி சென்னை அணியில் வகிக்கும் அதே இடம்தான். ரோகித் சர்மா தனது ரத்தம் மற்றும் வியர்வையால் மும்பை அணியை கட்டமைத்துள்ளார். மேலும் ஒரு கேப்டனாக அவர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்,” என்றார். இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும் தற்போதைய இந்திய டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவ், ‘உடைந்த இதயம்’ எமோஜியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதுவும் வைரலாகியிருக்கிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஆதரித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் அவர் கூறுகையில், “இதில் எது சரி, எது தவறு என்று பார்க்காமல், அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேட்டிங்கில் ரோகித்தின் பங்களிப்பும் சரிந்திருக்கிறது,” என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரோகித்தின் சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது மும்பை அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடித்தந்தவர் இந்த முறை ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் நீக்குவது குறித்து உண்மையில் யாருக்கும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஐ.பி.எல் தொடரின் மிக வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். அவரது சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது. அவர் 2011-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். முதல் வருடத்தில் அவர் 33.81 சராசரியில் 372 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, அவர் மும்பை அணிக்காக 31 சராசரியில் 5,230 ரன்கள் எடுத்தார், இதில் 40 அரை சதம் மற்றும் 1 சதம் அடங்கும். இந்த காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது. இது அவரது அணிக்கு வலுவான தொடக்கத்தைப் பெற அடிக்கடி உதவியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது பேட் சற்று அமைதியாகிவிட்டாலும், இந்த ஃபார்ம் விரைவில் மேம்படக்கூடும். மேலும் பல வருட டி20 கிரிக்கெட்டை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். 2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரிக்கி பாண்டிங் பாதியிலேயே விட்டுச் சென்றபோது ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை வென்றது. கேப்டனாக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில், ரோகித் சர்மா 158 போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கினார். இவற்றில் 87 போட்டிகளில் வெற்றி பெற்றார், அவர் 67 இல் தோல்வியடைந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அணியின் இந்த முடிவுக்கு ரோகித்தின் ஃபார்ம் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் குஜராத் அணிக்குக் கொடுத்தது. ஹர்திக் புதிய அணியை முதல் சீசனிலேயே சாம்பியனாக்கினார். அதே சமயம் கடந்த ஆண்டு குஜராத் இரண்டாவது இடத்தில் இருந்தது. சமீப ஆண்டுகளில் மும்பையால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அந்த அணி கடைசியாக 2020-இல் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார். 2022-ஆம் ஆண்டில், அவர் 14 போட்டிகளில் 19 சராசரியுடன் 268 ரன்கள் எடுத்தார். அதே சமயம் 2023-இல் 16 போட்டிகளில் 20.75 சராசரியில் 332 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டு சீசன்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. T20-இல் கூட, ரோகித் சர்மா நவம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை, மேலும் அவரிடமிருந்து கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் சென்றது. இருப்பினும், ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு ரோகித், விராட் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு டி20-யில் இருந்து ஓய்வு அளிக்க இந்திய நிர்வாகம் விரும்பியதாகவும், இது டி20-யில் அவர்களின் வாழ்க்கை முடிவடையும் என்பதற்கான அறிகுறி அல்ல என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோகித் தனக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா? ரோகித்தின் அடுத்த முடிவு என்ன? தற்போது ரோகித் சர்மாவின் அடுத்த நகர்வில்தான் அனைவரது பார்வையும் பதிந்துள்ளது. அவர் ஹர்திக்கின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவாரா அல்லது வேறு ஏதேனும் அணியில் கேப்டன் பதவியைப் பெற விரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித்துக்கு வணக்கம் தெரிவித்து பதிவிட்டபோது, அதை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் லைக் செய்திருந்தார். ஐ.பி.எல் ஏலம் இன்று (டிசம்பர் 19) நடைபெற உள்ளது. பரிமாற்றச் சாளரம் டிசம்பர் 20-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அனைத்து அணிகளும் தங்கள் அணியை மேலும் வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில அணிகள் ரோகித் சர்மாவின் பெயரைக் கருத்தில் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2022 மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை ரூ. 16 கோடிக்கு மும்பை தக்க வைத்துக் கொண்டது. எனவே அவரை வாங்க விரும்பும் அணியிடம் குறைந்தபட்சம் ரூ.16 கோடி இருக்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மா இதைச் செய்ய விரும்புவாரா அல்லது அவருக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா? ஒன்று மட்டும் நிச்சயம், அவர் எங்கிருந்தாலும் பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெறுவார். https://www.bbc.com/tamil/articles/cldr2re36l4o
-
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் - டக்ளஸ்
19 DEC, 2023 | 02:57 PM வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/ கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லயின் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள், யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172068
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
காரைநகரில் கைதான 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 19 DEC, 2023 | 10:26 AM யாழ். காரைநகர் கோவளம் கடற்கரையில் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்து யாழ்ப்பாணம் - காரைநகர்- கோவளம் கடற்பரப்பில் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பதின்நான்கு பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்தில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் அவர்கள் 14பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரு மீனவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/172024
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐ.பி.எல் ஏலம் நாளை 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது. குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தை தொகுத்து வழங்கியிருந்தார். இம்முறை ஐ.பி.எல் ஏலத்திற்காக 333 வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 77 வீரர்கள் மாத்திரமே ஐ.பி.எல் அணிகளுக்காக ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். https://thinakkural.lk/article/285105
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
அந்த இடம் முள்ளிக்குளம் என நினைக்கிறேன். அவர் திருமணம் செய்யவில்லை.