Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைகள்: ஐ.நா. தலைவர் கவலை தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர். ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காசா மக்கள் தொகையில் 18.7 இலட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது. காசாவில் “ஒரு மனிதாபிமான பேரழிவை” தடுக்க ஐ.நா. பாதுகாப்பு பேரவை அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமுல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு பேரவை போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார். அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர். வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/283912
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிய படையினர் காசாவின் தெற்கு நகரத்துக்குள் பிரவேசித்துள்ளார்! இஸ்ரேலிய தரைப்படைகள், மூன்று நாட்கள் நடத்திய கடுமையான தாக்குதலை தொடர்ந்து காசாவின் தெற்கு பகுதிக்குள் பிரவேசித்துள்ளன. தெற்கு நகரமான கான் யூனிஸின் வடக்கில் தரைவழி நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கையின்போது, ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு வார கால போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்ததில் இருந்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. போர் நிறுத்த காலத்தில் 240 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு ஈடாக காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 110 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. போரின் ஆரம்ப கட்டங்களில் காசாவின் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்துள்ள தெற்கு நகரான கான் யூனிஸில் ஹமாஸ் உறுப்பினர்கள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையிலேயே, குறித்த தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/283417
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்ய பெண்கள் 8 இற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்: புட்டின் வலியுறுத்தல் ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990 இல் இருந்து குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டும். அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷ்யாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என தெரிவித்துள்ளார். நம்முடைய பல இனத்தினர் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன. ரஷ்ய குடும்பங்களில் ஏராளமான நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் ஏழு, எட்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நினைவில் கொள்வோம். இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்கள் நடைமுறையாகவும், ரஷ்யாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகவும் வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம். ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு. ரஷ்யாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1 ஆம் திகதி கணக்கின்படி 14 கோடியே 64 இலட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999 ஆம் ஆண்டு புட்டின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும். https://thinakkural.lk/article/283176
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தலைவர்களுக்கு நாள் குறித்தது இஸ்ரேல் - சர்வதேச அளவில் தேடி கொலை செய்ய திட்டம் Published By: RAJEEBAN 05 DEC, 2023 | 03:38 PM காசாவில் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சர்வதேச அளவில் ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. காசாவிற்கு வெளியே கத்தார் துருக்கி லெபனானில் வசிக்கின்ற ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களை படுகொலை செய்வதற்கான அனுமதியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் இதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பல வருடங்களாக ஹமாஸின் முக்கிய தலைவர்களை கொலை செய்து வருகின்றது அதனை மேலும் விரிவுபடுத்தவுள்ளது. கத்தார் ரஸ்யா துருக்கி ஈரான் போன்ற நாடுகள் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளன, கடந்த காலங்களில் பெய்ரூட் லெபானில் இஸ்ரேல் பலரை கொலை செய்திருந்தது. ஹமாசின் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு;க்குமாறு 22 ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் ஹமாஸ் தலைவர்கள் நீண்டகாலம் உயிர்வாழப்போவதில்லை என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் மரணத்திற்காக குறிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எதிரான போராட்டம் உலகளாவியது காசாவில் உள்ளவர்களுக்கும் விமானங்களில் பயணிக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பின்னர் சில இஸ்ரேலிய அதிகாரிகள் ஹமாஸ் தலைவர் காலித் மெசாலையும் வெளிநாட்டில் வசிக்கின்ற தலைவர்களையும் கொலை செய்வதற்கான உடனடி அனுமதியை கோரினார்கள் என விடயங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் துருக்கி கத்தாரில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை பாதித்திருக்கும். இதேவேளை இஸ்ரேலின் இந்த திட்டம் பிழையான ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டது என இஸ்ரேலின் மொசாட்டின் முன்னாள் தலைவர் எவ்ரெய்ம் ஹலேவி தெரிவித்துள்ளார். ஹமாசை சர்வதேச அளவில் தேடிக்கண்டுபிடித்து அதன் தலைவர்கள் அனைவரையும் அழிக்க முயல்வது பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது மூலோபாய நோக்கங்களை அடிப்படையாக கொண்டது இல்லை நம்பமுடியாதது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/171027
- thumb0-04-06-4034b773ea0e80b960976d68e038de1438d9a88cce86f1b75335003953483fee_d5aaf79017047c15.jpg
-
03/12/2023 புலர் அறக்கட்டளையால் ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நாள் நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள்
-
thumb0-04-06-4034b773ea0e80b960976d68e038de1438d9a88cce86f1b75335003953483fee_d5aaf79017047c15.jpg
-
thumb0-04-06-239ec5c7e7fbe9e5ee3a82630904f25c5a2627c0ae8a7da432216668ec08d378_cba0cee60d14a8ad.jpg
-
thumb0-04-06-33acd60af24fb7afba4c5f4ed99c58b9feac72192447e54b793726a773d00900_da0ad420b1120826.jpg
-
thumb0-04-06-4e1c4967fc6857d5af4ab2e72cd4cd7fea3d9aec5965178fd20c0bc4bc21ed1c_2097d1b0db69f5d9.jpg
-
thumb0-04-06-4b8a80fa7f4fadba84a1a82ef6c60ab6423bd6e21c31bba72dc35afae13a47e3_f36bfb63661cbc02.jpg
-
thumb0-04-06-1b3c3c5e19975abe700baadfe0ac275a90b03b1edfa84d0d10f96658b6cc14f6_f2eadbd68a25717e.jpg
-
thumb0-04-03-fd7a0931a5ce33a847a18d380510fcb5a107f5245600323200b97fe40e8dd274_667a981c49fdfe83.jpg
-
thumb0-04-03-a33314faf5317de30fdac4a14c37d2cbc81495dfbb37c09465f9eb41e8efb3df_5110a6c8a47e194a.jpg
-
0-04-06-f3cb0cf57254d1e3123bdcaf1ec193be22a30c3c5dfd50b90234c23e401f777d_f7a43d95ced00dce.jpg
-
0-04-06-ac0b2770480392fc57e4d7cdcdee9b8185c0523bccc4e9e7123f22d9e2ad5ce9_7f9dbb2e55a98459.jpg
-
0-04-06-8775065d2ca037b0584ec4c0c2e8a638f8050482713cb33dc695061dadfcbfd2_e1dca88b85acb4c2.jpg
-
0-04-06-4124475f8ade4827821bac2f456329e38527f824c1db684fcbab60bcdd771b2a_51f1aa1b13411f9e.jpg
-
0-04-06-243372dbfbbdbe4ef0c673cf67cfebcc9125c39cfd6e9c1dd1650b3f28e78d54_d48e8ac297b5d5.jpg
-
0-04-06-74838ab34698bb6a3a5c2ae03d9cd05af6d9a79ca87b3ddbc918bb878902ba21_7a241e3dc2719ea7.jpg
-
0-04-06-13689e1900c4aeeb3204cb81f8c48475b21add4d603729a118bf5a29a98a2019_c20ada7921a63ad2.jpg
-
0-04-06-8452ca943d1a645d690840a58a805a3473e66636372a3411e5bcd8ea4503e3d5_b2d96a0463dfbbe0.jpg
-
- thumb0-04-06-4b8a80fa7f4fadba84a1a82ef6c60ab6423bd6e21c31bba72dc35afae13a47e3_f36bfb63661cbc02.jpg
- thumb0-04-06-4e1c4967fc6857d5af4ab2e72cd4cd7fea3d9aec5965178fd20c0bc4bc21ed1c_2097d1b0db69f5d9.jpg
- thumb0-04-06-33acd60af24fb7afba4c5f4ed99c58b9feac72192447e54b793726a773d00900_da0ad420b1120826.jpg
- thumb0-04-06-239ec5c7e7fbe9e5ee3a82630904f25c5a2627c0ae8a7da432216668ec08d378_cba0cee60d14a8ad.jpg
- thumb0-04-03-a33314faf5317de30fdac4a14c37d2cbc81495dfbb37c09465f9eb41e8efb3df_5110a6c8a47e194a.jpg
- thumb0-04-03-fd7a0931a5ce33a847a18d380510fcb5a107f5245600323200b97fe40e8dd274_667a981c49fdfe83.jpg
- thumb0-04-06-1b3c3c5e19975abe700baadfe0ac275a90b03b1edfa84d0d10f96658b6cc14f6_f2eadbd68a25717e.jpg
- 0-04-06-8775065d2ca037b0584ec4c0c2e8a638f8050482713cb33dc695061dadfcbfd2_e1dca88b85acb4c2.jpg
- 0-04-06-ac0b2770480392fc57e4d7cdcdee9b8185c0523bccc4e9e7123f22d9e2ad5ce9_7f9dbb2e55a98459.jpg
- 0-04-06-f3cb0cf57254d1e3123bdcaf1ec193be22a30c3c5dfd50b90234c23e401f777d_f7a43d95ced00dce.jpg
- 0-04-06-243372dbfbbdbe4ef0c673cf67cfebcc9125c39cfd6e9c1dd1650b3f28e78d54_d48e8ac297b5d5.jpg
- 0-04-06-4124475f8ade4827821bac2f456329e38527f824c1db684fcbab60bcdd771b2a_51f1aa1b13411f9e.jpg
- 0-04-06-8452ca943d1a645d690840a58a805a3473e66636372a3411e5bcd8ea4503e3d5_b2d96a0463dfbbe0.jpg
- 0-04-06-13689e1900c4aeeb3204cb81f8c48475b21add4d603729a118bf5a29a98a2019_c20ada7921a63ad2.jpg
- 0-04-06-74838ab34698bb6a3a5c2ae03d9cd05af6d9a79ca87b3ddbc918bb878902ba21_7a241e3dc2719ea7.jpg
-
உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்
01 DEC, 2023 | 05:30 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது. கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது. 2022 (2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது. இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம். அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது. https://www.virakesari.lk/article/170755
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அங்க போனீங்க.. இங்கயும் வாங்க.. எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ் காசா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார். “காசா எல்லைக்கு வந்து, காசா மக்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அழிப்பு நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம். 50 நாட்களுக்குள் பாதுகாப்பில்லா காசா மக்கள் வீடுகளின் மீது 40 ஆயிரம் தொன் வெடிபொருட்களை இஸ்ரேல் கொட்டித்தீர்த்துள்ளது.” “மேலும் இஸ்ரேல் உடனான உறவை நீடிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும்,” என ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த எலான் மஸ்க், ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் வெறுப்பு பரவுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். https://thinakkural.lk/article/283002
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் காசா யுத்தம் - கழுதைவண்டியில் பயணம் செய்யும் ஒருவர் ஏற்பட்டுள்ள அழிவுகளை காண்பிக்கின்றார் Published By: RAJEEBAN 30 NOV, 2023 | 12:37 PM abc இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் காரணமாக எரிபொருள் முற்றாக தீர்ந்துபோயுள்ள நிலையில் பொதுமக்கள் பணயத்திற்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கும் கழுதை வண்டில்களை பயன்படுத்திவருகின்றனர். கான் யூனிசில் இடம்பெற்ற குண்டுவீச்சில் தனது வீட்டை இழந்த முகமட் அல் நஜாரின் பிரதான போக்குவரத்து சாதனமாக கழுதை வண்டி மாறியுள்ளது. குசா என்ற பகுதியில் அவர் தற்போது வசிக்கின்றார், நடமாடுவது கடினம் இதனால் நாங்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். எனது பகுதியான கான் யூனிசிற்கு கழுதை வண்டியில் செல்வதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் எடுக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கழுதை வண்டி மிகவும் மெதுவாக நகர்வதால் காசாவின் யுத்த அழிவுகளை தெளிவாக பார்க்க முடிகின்றது. அழிக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு கழுதை வண்டி செல்கின்றது. சில கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன, உடைந்த கொன்கிறீட் அல்லது இரும்பு கம்பிகுவியலாக காணப்படுகின்றன - ஆங்காங்கே சிதறுண்டுகிடக்கும் உடைகளும் பொருட்களும் மாத்திரமே அங்கு காணக்கூடிய வண்ணமயமான பொருட்களாக உள்ளன. விசித்திரமாண கோணங்களில் வளைந்த நெளிந்த இருப்புதுண்டுகள் தகரங்களை காணமுடிகின்றது எங்கும் குப்பைகளும் இடிபாடுகளும் காணப்படுகின்றன. வீதியில் வாகனங்கள் எவற்றையும் பார்க்க முடியவில்லை, எப்போதாவது ஸ்கூட்டரை காணமுடிகின்றது - துவிச்சக்கரவண்டிகளே அதிகளவில் காணப்படுகின்றன. பல பகுதிகளில் வீதிகளில் இருமருங்கிலும் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. https://www.virakesari.lk/article/170630
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
சீக்கியப் பிரிவினைவாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியர்மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - என்ன நடந்தது? பட மூலாதாரம்,US DEPARTMENT OF JUSTICE 29 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீக்கியப் பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்தச் சதித்திட்டம் நியூயார்க்கில் நடத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர் மீது புதன்கிழமை (நவம்பர் 29) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை இந்திய அரசாங்க ஊழியர் ஒருவர் இயக்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இந்த விஷயத்தில், அவர்மீது கூலிக்குக் கொலை செய்ய முயன்றக்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். ஒருவருக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் கொடுத்து சீக்கியரை கொலை செய்ய முயன்றதாக அவர்கள் கூறினர். ஆனால் அடியாள் என நினைத்து பணம் கொடுக்கப்பட்ட நபர் அமெரிக்காவின் ரகசிய ஏஜென்ட் எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், யாரைக் கொலை செய்ய இந்தத் திட்டம் தீட்டப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அதிகாரிகளின் எதிர்வினை என்ன? இதுதொடர்பில் அமெரிக்கா தனது பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எழுப்பியக் குற்றச்சாட்டில், விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய அரசு முன்னதாக கூறியிருந்தது. குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த விவகாரத்தை இந்திய அரசாங்கத்தின் மிக மூத்த மட்டங்களில் எழுப்பியதாக அமெரிக்க அரசாங்கம் கூறியிருக்கிறது. அதற்கு இந்திய அதிகாரிகள் ‘ஆச்சரியம் மற்றும் கவலையுடன்' பதிலளித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது. "சீக்கியர்களுக்கு இறையாண்மை கொண்ட அரசை நிறுவ வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனை, நியூயார்க் நகரில் கொலை செய்யப் பிரதிவாதி இந்தியாவில் இருந்து சதி செய்தார்," என்று அமெரிக்க வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் கூறினார். மேலும் அவர், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களைப் படுகொலை செய்யும் முயற்சிகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் யார்? குற்றப்பத்திரிகையின்படி, நிகில் குப்தா சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கொலைத்திட்டத்திற்காக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் நியமிக்கப்பட்டார். மேலும், இத்திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டாளியைத் தொடர்பு கொள்ளுமாறு நிகில் குப்தாவிடம் அந்த இந்திய அதிகாரி சொன்னதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நிகில் குப்தா, நியூயார்க் நகரில் இந்தக் கொலையைச் செய்யக்கூடிய ஒருவரைச் சந்திக்க எண்ணியிருந்தார் என்றும் அது கூறுகிறது. ஆனால், அதற்கு பதிலாக, அந்த நபர் குப்தாவை, மாறுவேடத்தில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தியது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர், ஒரு லட்சம் டாலர்களுக்கு இந்தக் கொலையைச் செய்வதாக கூறியதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நிகில் குப்தா ஜூன் 9 அன்று ஒரு கூட்டாளி மூலம் $15,000 முன்பணமாகச் செலுத்தினார், என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி அமெரிக்க வழக்கறிஞர்கள் நிகில் குப்தாவுக்கு எதிராக முதற்கட்டக் குற்றச்சாட்டை வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே செக் குடியரசில் உள்ள அதிகாரிகள் அவரைல் கைது செய்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் அவரை இன்னும் காவலில் வைத்துள்ளனர். ஆவணங்களில் இந்தச் சதியின் இலக்கு குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் சீக்கிய பிரிவினைவாதக் குழு ஒன்றின் அமெரிக்கத் தலைவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,X படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னு இதற்கு முன்னர் எழுந்த குற்றச்சாட்டு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குர்பத்வந்த் சிங் பன்னு, எனும் சீக்கியத் தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதியைக் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த இந்தியா, ‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று கூரியிருந்தது. அதைத்தொடர்ந்து, புதன்கிழமை (நவம்பர் 29) இந்தியா இந்த விஷயத்தை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறது என்று வெளியுறவுத்துறைச் செயலாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையும் கனடாவின் குற்றச்சாட்டும் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது. சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான வாகன நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த இரண்டு பேர் அவரது டிரக்கில் வைத்து சுட்டுக் கொன்றனர். அப்போது நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ‚நம்பகமான அம்சங்களை‘ கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறியிருந்தார். இந்தக் கொலை தொடர்பான உளவுத்துறைத் தகவல்களை அமெரிக்காதான் கனடாவுக்கு வழங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்போது செய்தி வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா-கனடா உறவில் குறிப்பிடத்தகுந்த அளவில் விரிசல் ஏற்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c518leq9ynyo