Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20261
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது 41 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் ஒருவர் பேசுவது போலவும் இந்த கும்பல் ஏற்பாடு செய்திருந்தது. மீரட்டில் இருந்து ஒரு தொழிலாளி இந்த வேலைக்காக பிரத்யேகமாக அமர்த்தப்பட்டார். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்காக பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, ஆனால் அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலியான ஐபிஎல் சீசன் நடந்தது. உண்மையான ஐபிஎல் மே மாதம் முடிவடைந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த போலியான போட்டி தொடங்கியது என்று போலீசார் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GUJARAT POLICE குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொலிபூர் கிராமத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் பந்தயம் கட்டுவதில் ஆர்வமுள்ள ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்ற முயன்றனர். 21 தொழிலாளர்கள் கொண்ட குழு, ஐபிஎல் சீசன் முழுவதையும் தாங்களாகவே போலியாக உருவாக்கியது, அவர்கள் வெவ்வேறு ஜெர்சிகளுடன் வீரர்களாக ஆடுகளத்தில் தோன்றினர். மகுடம் சூடியது குஜராத் டைட்டன்ஸ் - ஐபிஎல் கோப்பையை தட்டிப்பறித்த ஹர்திக் படை ஏலம் போகாத வீரரின் அதிரடி ஆட்டம்: எலிமினேட்டரில் லக்னோவை வென்றது ஆர்.சி.பி நவீன கருவிகளுடன் தொடங்கிய ஆட்டம் இந்த போலி ஷோவில் ஐந்து ஹெச்டி கேமராக்கள், வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போட்டிகளின் தரத்தை மேம்படுத்த இணையத்தில் இருந்து கூட்டத்தின் சத்தத்தை பதிவிறக்கம் செய்தனர். போட்டிகள் முடிந்தவரை உண்மையானதாக தோன்ற யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்டது. டெலிகிராம் தளம் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தது. "இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்" என்று அழைத்துக் கொள்ளப்பட்ட இந்த ஆட்டம் காலிறுதிப் போட்டிவரை சென்றபோது, போலீசார் இதை கண்காணித்து இந்த மோசடி நபர்களை கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பாக நான்கு பேரை போலீசார் அதில் மூளையாக செயல்பட்ட நபரின் பெயர் ஷோயிப் தாவ்தா என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி பவேஷ் ரத்தோட் கூறும்போது, "ஷோயிப் குலாம் மாசியின் பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு ஹாலோஜென் விளக்குகளை நிறுவினார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 400 ரூபாய் தருவதாக உறுதியளித்து 21 விவசாய தொழிலாளர்களை தயார்படுத்தினார்கள். அடுத்து, கேமராமேன்களை நியமித்து, ஐபிஎல் அணிகளின் டி-ஷர்ட்களை வாங்கினர்," என்றார்."ஷோயிப் டெலிகிராம் சேனலில் நேரடி பந்தயம் எடுப்பார். அவர் ஒரு வாக்கி-டாக்கியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை சிக்னல் செய்யும்படி நடுவரான கோலுவிடம் அறிவுறுத்துவார். பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரிடம் அதையே கொலு தெரிவித்தார். எல்லாம் பந்தயம் கட்டுபவரின் எண்ணப்படியே நடப்பதாக நம்ப வைக்க இந்த கும்பல் செயல்பட்டது. உத்தரவுகளுக்கு ஏற்ப பந்து வீச்சாளர் மெதுவாக பந்தை போடுவார். பேட்ஸ்மேன் அதை எளிதாக ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸருக்கு அடிக்க முடியும்," என்று ரத்தோட் கூறினார். ஒரு கட்டத்தில் ரஷ்ய சூதாட்டக்காரர்கள் கும்பல் அமைத்த டெலிகிராம் சேனலில் குஜராத் கும்பல் பந்தயம் கட்டினார்கள். பின்னர் போலி நடுவரை வாக்கி-டாக்கி மூலம் தங்களுடைய விருப்பத்துக்கு தக்க ஆட வைத்து மோசடி செய்தனர் என்றும் போலீஸ் ஆய்வாளர் பவேஷ் ரத்தோட் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவில் கிரிக்கெட்டில் பந்தயம் கட்டுவது சட்டவிரோதமானது. தற்போது இந்த மோசடி ஆட்டத்தில் தொடர்புடையதாக பிடிபட்டுள்ள சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சதி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வியப்படைந்த ஹர்ஷா போக்லே Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், தன்னைப்போலவே வர்ணனை செய்து மோசடி செய்த கும்பல் கைது செய்த தகவலையறிந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்ததாக கூறியிருக்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே. https://www.bbc.com/tamil/sport-62127563
  2. பொருளாதார மந்தநிலை எனும் 'பேய்' வரப்போகிறதா?: எச்சரிக்கும் சமிக்ஞைகள் அடஹோல்ஃபா அமெரிஸஸ் பிபிசி முண்டோ சேவை 10 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதார மந்தநிலை என்று உலகம் அழைக்கும் அந்த 'பேய்' வரும் என்று கூறும் பொருளாதார நிபுணர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் நோக்கில் பொருளாதார பேக்கேஜ் என்ற பெயரில் அதிக செலவு செய்வது, சீனாவில் இருந்து உலகிற்கு அனுப்பப்படும் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் தடங்கல், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் பிற காரணங்கள் கடந்த பல தசாப்தங்களாக கண்டிராத நிலைக்கு பணவீக்கத்தை கொண்டுசென்றுள்ளன. இதைத் தடுக்க மத்திய வங்கிகள் கட்டாயத்தின் கீழ் வட்டி விகிதங்களை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. மறுபுறம், உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவுப் போக்கு தொடர்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்க குறியீடுகளை நம்மால் பார்க்கமுடிகிறது. அங்கு நீண்ட காலமாக சரிவு போக்கு நீடித்து வருகிறது. முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை இழப்பு ஏற்பட்டது போல காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் நமக்காக பொருளாதார மந்தநிலை காத்திருப்பது போலத்தெரிகிறது. மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் குறைவு மற்றும் அதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எதிர்மறையான (நெகட்டிவ்) வளர்ச்சி விகிதம் ஏற்படுவது ஆகும். பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு அழுத்தத்தில் இருந்தால், அது 'தொழில்நுட்ப மந்தநிலை' என்று அழைக்கப்படுகிறது. பத்து அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களில் ஏழு பேர், இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு மந்தநிலை வரும் என்று பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஷிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ் நடத்திய கூட்டு ஆய்வில் கூறியுள்ளனர். பங்குச் சந்தைகளில் 'பிளாக் வீக்' மற்றும் வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவு போன்றவைகளுக்கு முன்பாக, ஜூன் தொடக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. எனவே, மந்தநிலை நெருங்கிவிட்டதாகக்கருதும் பொருளாதார வல்லுனர்களின் எண்ணிக்கை இப்போது மேலும் அதிகரித்திருக்கும். மந்தநிலையின் பிடியில் சிக்கினால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். முதலீட்டுச் சூழல் பாதிக்கப்படலாம். நுகர்வு மற்றும் பரிவர்த்தனைகள் குறைவதால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்படலாம். வேலைகள் குறையும். மக்களும் வணிக நிறுவனங்களும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறுவார்கள். மேலும் பலர் திவாலும் ஆகலாம். இது குறித்து பிபிசி முண்டோ 4 பிரபல பொருளாதார நிபுணர்களிடம் பேசியது. எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் உலகின் பிற பொருளாதாரங்களில் மந்தநிலை ஏற்படும் அபாயத்தை அவர்கள் உண்மையில் காண்கிறார்களா என்று அவர்களிடம் கேட்டது. பட மூலாதாரம்,DAVID WESSEL படக்குறிப்பு, டேவிட் வெசல் '2023ல் மந்தநிலை ஏற்படும் சாத்தியகூறு 65 சதவிகிதம்' டேவிட் வெசல் வாஷிங்டன் டிசியில் உள்ள ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின், நிதி மற்றும் பணக்கொள்கைக்கான ஹட்சின்ஸ் மையத்தின் இயக்குநராக உள்ளார். "மந்தநிலையை கணிப்பது கடினமான பணியாகும். பொதுவாக முன்கூட்டியே நீங்கள் எதிர்பார்க்காத சூழ்நிலைகளில் மந்தநிலை வரும். பொருளாதார வல்லுநர்கள் மந்தநிலை வரப்போகிறது என்று முழு நம்பிக்கையுடன் பல முறை கூறுவார்கள். பின்னர் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் காண்பீர்கள்," என்று அவர் கூறுகிறார். "அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் மந்தநிலை ஏற்படுவதற்கான உறுதியான வாய்ப்பை நான் காண்கிறேன். இது நிகழக்கூடிய சாத்தியகூறு 65 சதவிகிதம்தான் உள்ளது. இதற்கு காரணமும் இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜே.போவெல், முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை குறைத்து வெற்றிகரமாக சமாளித்தார். தனது முந்தைய வெற்றியை சீர்குலைத்தவராக மக்கள் அவரை நினைகூருவதை அவர் விரும்ப மாட்டார்,"என்று டேவிட் வெசல் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறதா? ஜிடிபி வளர்ச்சி பற்றி ஓர் அலசல் இலங்கை நெருக்கடி: பணத்தை அச்சிட்டால் பொருளாதார பிரச்னை முடிந்துவிடுமா? " தேவையை குறைக்க, விலை உயர்வு அழுத்தத்தை குறைக்க மற்றும் பணவீக்கத்தின் பிடி இறுகுவதைத்தடுக்க இப்போது ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். இருப்பினும், பொருளாதாரத்தை மெதுவாக்கி, பணவீக்க விகிதத்தை 2 சதவிகித இலக்குக்கு கீழே குறைக்க, வட்டி விகிதங்களை உயர்த்துவது அல்லது அப்படியே வைத்திருப்பது போன்ற விஷயங்களில், பெடரல் ரிசர்வ் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும்."என்று அவர் கூறினார். "ஒவ்வொரு மாற்றுவழிக்கும் ஆதரவாக நல்ல வாதங்கள் இருக்கலாம். அவற்றை தளர்த்துவதற்கு பதிலாக விகிதங்களை கடுமையாக்கும் தவறை போவெல் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது மந்தநிலைக்கு வழிவகுக்கக்கூடும். ஆனால் இது ஒரு மிதமான மந்தநிலையாக இருக்கும். என் கணிப்பு தவறாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். உலகின் விநியோகச் சங்கிலிகளில் உள்ள எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். கொரோனாவின் மோசமான விளைவுகள் நீங்கவேண்டும். நமக்கும்,மத்திய வங்கிக்கும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவேண்டும்,"என்று வெசெல் குறிப்பிட்டார். "ஆனால் அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் வரக்கூடிய வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன்."என்று அவர் சொன்னார். பட மூலாதாரம்,GABRIEL GASAVE படக்குறிப்பு, கேப்ரியல் கேஸ்வே 'அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மந்தநிலை வரலாம்' கேப்ரியல் கேஸ்வே இன்டிபென்டன்ட் இன்ஸ்டிடியூட் சென்டர் ஃபார் க்ளோபல் ப்ராஸ்பெரிட்டியில் ஒரு ஆராய்ச்சி அசோசியேட் மற்றும் Elindependent.org (ஓக்லாண்ட், கலிபோர்னியா) இன் இயக்குனர். "ஒருவேளை 2023 இன் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குறிப்பிடத்தக்க மந்தநிலையை நாம் சந்திக்க நேரிடும் என்று நான் கருதுகிறேன். கொரோனா தொற்றுநோய், விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், உணவு பற்றாக்குறை, அதிகரிக்கும் எரிபொருள் விலைகள் போன்றவற்றால் இது ஏற்படாது. அதன் மூல காரணம் வேறு ஏதோ ஒன்றாக இருக்கும்," என்று கேஸ்வே கூறுகிறார். "உலக உருண்டையின் வலதுபக்கத்தில் தற்போது நிலவும் கோடைக்காலம் மற்றும் ஆண்டு இறுதியில் வரும் திருவிழாக்கள், போன்றவற்றால், மந்தநிலை மிதமான இயல்புடையதாக இருக்கும் என்று நான் மதிப்பிடுகிறேன். இந்த நேரத்தில் மக்கள் பயணம் செல்வார்கள், செலவழிப்பார்கள் மற்றும் அரசுகள் வழங்கும் நிதி உதவி வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் குதூகலமான காலம் எப்போதுமே தொடரமுடியாது," என்று கேஸ்வே விளக்குகிறார். " எப்போதோ ஒரு நேரத்தில் விஷயங்கள் பழையபடி ஆகிவிடும். விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.பல பொருளாதார வல்லுநர்கள் அந்த இயல்பான நிலையை மந்தநிலை என்று அழைக்கிறார்கள். இப்போது அமெரிக்காவின் கடன் பத்திரங்களின் வருமானம் அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. அதனால் சர்வதேச மூலதனம் அமெரிக்காவின்பால் ஈர்க்கப்படுவது அதிகரிக்கும்,"என்று அவர் கூறுகிறார்,. "எனவே உலகின் எவ்வளவு மூலதனம் அமெரிக்காவிற்குத் திரும்புகிறது என்பதைப் பார்ப்பது முக்கியம். மேலும் டாலர் எவ்வளவு வலுவடைகிறது மற்றும் பிற நாடுகளின் நாணயங்கள் எவ்வளவு வீழ்ச்சியடைகின்றன என்பதும் கண்காணிக்கப்படும். இவை அனைத்தும் பொருளாதாரம் மீது ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன,"என்று . கேஸ்வே குறிப்பிட்டார். பட மூலாதாரம்,LINDSEY PIEGZA படக்குறிப்பு, லிண்ட்சே பீயக்ஸா 'இந்த ஆண்டு இறுதிக்குள் மந்தநிலை வரலாம்' லிண்ட்சே பீயக்ஸா ஷிகாகோவின் ஸ்டிஃபெல் பைனான்சியலின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முதன்மை பொருளாதார நிபுணர் ஆவார். "பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் தனது தீர்மானத்தை புதுப்பித்து பலப்படுத்தியுள்ளது. ஜூன் மாதத்தில் வட்டி விகிதத்தை 0.75 சதவிகிதம் உயர்த்தி, ஜூலையில் மீண்டும் 0.75 சதவிகிம் உயர்த்துவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. ஃபெடரல் ரிசர்வ் மந்தநிலையைத் தூண்ட முயற்சி செய்யவில்லை என்று அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் கூறியிருந்தார். இப்போது நடப்பதன் காரணமாக ஒரு வேளை இந்த ஆண்டு இறுதியில் எதிர்மறையான வளர்ச்சி விகிதம் அல்லது ஸ்டாக்ஃப்ளேஷன்(ஒரே நேரத்தில் மந்தநிலை மற்றும் பணவீக்கம்) வரக்கூடும்,"என்று பீயக்ஸா கூறுகிறார். சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள் சீனாவில் குறைந்து வரும் மக்கள்தொகையால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? "சப்ளை சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் தற்போதைய போரினால் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கஷ்டப்படுகின்றனர். இப்போது ஃபெடரல் ரிசர்வ் முன்மொழியப்பட்ட விகிதத்தில் அதாவது சுமார் 4 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக விகிதங்களை உயர்த்தி வருவதால், பொருளாதாரம் பலவீனமாகும் ஆபத்து உள்ளது,"என்கிறார் அவர். "வட்டி விகிதத்தை உயர்த்தும் உத்தியானது, சாதாரண மக்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மூலதனத்தின் விலை உயர்ந்தால், நுகர்வு மற்றும் முதலீடு இரண்டும் குறைகிறது. இது தேவையையும் குறைக்கிறது. இது ஏற்கனவே நடந்துள்ளது. விற்பனை சரக்குகள் குறைந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், கொரோனா மற்றும் யுக்ரேன் போரின் காரணமாக ஏற்பட்ட விநியோகத் தேக்கம் குறைவது போலத்தெரியவில்லை,"என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,ANDRÉS MORENO JARAMILLO படக்குறிப்பு, ஆண்ட்ரிஸ் மொரேனோ ஜராமிலோ 'மந்தநிலை வராது' ஆண்ட்ரிஸ் மொரேனோ ஜராமிலோ, ஒரு பொருளாதார நிபுணர். அவர் ஒரு சுயாதீன நிதி ஆலோசகர் மற்றும் பங்கு சந்தை ஆய்வாளரும் ஆவார். " வளர்ச்சி விகிதம் வேகமாக குறைந்து வருவதால், நாம் மந்தநிலையை எதிர்கொள்வோம் என்று பல பொருளாதார வல்லுநர்கள் நம்புகிறார்கள். ஆனால் வட்டி விகித உயர்வால் இப்போது இந்த சுழற்சி தலைகீழாக மாறப் போகிறது என்று அப்படிப்பட்டவர்கள் நம்புகிறார்கள். நிச்சயமாக அது நடக்கலாம். ஆனால் எல்லா பிரச்சனைகளுக்குப் பிறகும், மந்த நிலை வரும் அளவிற்கு உலகின் புவிசார் அரசியல் நிலை மோசமடையவில்லை," என்று ஜராமிலோ கூறுகிறார். "இதுவரை மந்தநிலை பற்றித்தெரியவில்லை. மந்தநிலை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு தனது வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கைக்கு அமெரிக்கா நீண்ட நேரம் எடுத்தது. பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக வட்டி விகிதங்கள் சிறிய மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும்," என்று ஜராமிலோ தெரிவித்தார். "இது நடந்தாலும் மிகச்சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும். மந்தநிலை வருவதைத் தடுக்க அரசு தன்னால் முடிந்தவரை முயற்சிக்கும் என்று நான் நினைக்கிறேன். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் மாற்றும் இதுபோன்ற பல சம்பவங்கள் அல்லது புவிசார் அரசியல்கள் உள்ளன. அதனால்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகப் பொருளாதாரம் ஒரு சுழற்சியில் நகர்கிறது. வட்டி விகிதங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை இரண்டும் அந்த சுழற்சியின் ஒரு பகுதியாகும். ஏற்ற இறக்கம் நீடிக்கும் வரை இது கடுமையாக இருக்கும். ஆனால் இதுவரை எந்த ஏற்ற இறக்கமும் காணப்படவில்லை,"என்கிறார் அவர். "இந்த விஷயங்களை முடிவு செய்வதற்கே மத்திய வங்கி மற்றும் பொருளாதாரக் கொள்கை உள்ளது. இவற்றின்மூலம் அந்த சுழற்சிகளை பூர்த்தி செய்யமுடியும். மேலும் பொருளாதாரம் பணவீக்கத்தை அதிகரிக்கும் அளவுக்கு வேகமாக வளரக்கூடாது. பொருளாதாரம் வேகமாக சரியவும் கூடாது. ஏனென்றால் இது வேலையின்மை, மனச்சோர்வு மற்றும் பிற விஷயங்களுக்கு வழிவகுக்கும்,"என்று குறிப்பிட்டார் ஜராமிலோ. "நாம் பார்த்த கொரோனாவின் மோசமான விளைவு உலகிற்கு முற்றிலும் புதியது. இது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தை ஏற்படுத்தியது . அதன் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சிறிது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. ஆனால் அது மிகவும் அதிகமாக இல்லை," என்று அவர் குறிப்பிட்டார். "மிக மோசமான காலம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் இப்போது விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்கிறது. மேலும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படுவதால், பொருளாதாரத்தில் சிறிது தொய்வு ஏற்படக்கூடும். ஒருவேளை இது நெகட்டிவ் வளர்ச்சியையும் ஏற்படுத்தலாம். ஆனால் அது அத்தனை மோசமான விஷயமும் அல்ல," என்று ஜராமிலோ சுட்டிக்காட்டினார். https://www.bbc.com/tamil/global-62055287
  3. இலங்கை நெருக்கடி: 'தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்' - போராட்டக்காரர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜனாதிபதி பதவி விலக தயார் என்ற அறிவிப்பை விடுப்பதை விடுத்து, பிரதமரும் பதவி விலக வேண்டும் என கொழும்பு மாளிகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். தான் முன்பு கூறியதை போன்றே, எதிர்வரும் 13ம் தேதி பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை தெரிவித்தது. இந்த நிலையில், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். உரிய தீர்வு கிடைக்கும் வரை, தாங்கள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற போவதில்லை என போராட்டக்காரர்கள் இன்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினர், விசேட அதிரடிபடை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர், ஜனாதிபதி மாளிகையை அண்மித்து, கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பதவி விலக தயார் - இலங்கை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? எனினும், காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும், தொடர்ந்தும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி மாளிகை மாத்திரமன்றி, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகை ஆகியவற்றை பார்வையிடுவதற்கும் தொடர்ந்து மக்கள் வருகைத் தருகின்றனர். ஜனாதிபதி மாளிகையில் கடமைகளில் இருந்த ஊழியர்கள், ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதுடன், ஜனாதிபதி மாளிகையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் வெளியில் பாதுகாப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேவேளை, காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் 'கோட்டா கோ கம' போராட்டம் 94வது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் போராட்டத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 9ம் தேதிக்கு பின்னரான காலப் பகுதியில் போராட்டம் மீண்டும் வலுப் பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் - ஒருவர் பணி நீக்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை பதிவு செய்வதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் விசேட அதிரடி படையின் சிரேஸ்ட போலீஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடன் அமலுக்கு வரும் வகையில் இந்த பணி நீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அந்த தாக்குதலை தடுத்து நிறுத்தாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில், போலீஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது, போலீஸ் விசேட அதிரடி படையினர் கடந்த 9ம் தேதி தாக்குதல் நடத்தியிருந்தனர். https://www.bbc.com/tamil/sri-lanka-62120338
  4. அதிமுக நெருக்கடி: "கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே விவகாரத்தில் வைரமுத்து என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று தமது தீர்ப்பை அளித்தார். அதன் விரிவான தகவலை இங்கே வழங்குகிறோம். இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள முழு தகவலும் ஆய்வு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்டு, தற்போதைய மனுக்களில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணம் வழங்க முகாந்திரம் ஏதுமில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. தற்போது நீதிமன்றம் முன் வைக்கப்பட்டுள்ள பிரச்னை, அதிமுகவின் விவகாரம். கட்சி உள் விவகாரங்கள் அல்லது எந்தவொரு விவகாரத்திலும் ஒரு கட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானம், விதிகள் திருத்தம் போன்றவற்றில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு நுழையக்கூடாது என்பதே சட்டம். நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லாததால், இது நீதிமன்றங்கள் தலையிடக் கூடாத விஷயமாக கருதப்படும். இவை நீதிமன்ற அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டவை. சொந்த விதிகளுக்கு உள்பட்டு கட்சி விவகாரங்கள் நிர்வகிக்கப்படும்போது, அது பொதுக்குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படி நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்: கல்வீசி மோதல், கதவு உடைப்பு - நடந்தது என்ன? ஜனநாயகமே பெரியது ஜனநாயக அமைப்பில் பெரும்பான்மையினரின் விருப்பமே மேலோங்கியிருக்க வேண்டும். உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மையாக இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு முடிவு தீர்மானிக்கப்பட வேண்டும் என பொது விதி கூறுகிறது. ஒரு கட்சி/அமைப்பின் உள் நிர்வாக விஷயங்களில் பெரும்பான்மையினர் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தினால், நீதிமன்றங்கள் பெரும்பான்மையினரின் முடிவில் தலையிடாது. நிர்வாகத்தின் செயல்கள் கட்சியின் அதிகார வரம்புக்குள்ளேயே இருந்தால், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கும் இடையிலான எந்தவொரு சர்ச்சையும் சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்புக்குள்ளாக இருக்கும் விதிகளின்படியே தீர்மானித்துக் கொள்ளப்பட வேண்டும். அவை நீதிமன்றத்தால் தீர்க்கப்படக் கூடிய விஷயங்கள் அல்ல. பொதுக்குழுவுக்காக விடுக்கப்பட்ட கட்சி நோட்டீஸ் கட்சி விதிகளின்படி செல்லுமா என்பதை ஆராய்ந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுக்குழுவில் உள்ள 2,665 உறுப்பினர்களில் 2,190 உறுப்பினர்கள் 23.06.2022 நடந்த கூட்டத்திலேயே அடுத்த பொதுக்குழுவைக் கூட்ட கையொப்பமிட்டுள்ளதாக கூறியுள்ளார். பொதுக்குழுவை கூட்ட முகாந்திரம் உண்டு அதே கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்த பொதுக்குழு கூட்டம் 11.07.2022 அன்று நடைபெறும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தை கூட்டுவது குறித்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத்தலைவர் கூறியுள்ளார். இத்தனைக்கும், கட்சி விதி 19(vii)-இன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் 15 நாட்களுக்கு முன்கூட்டிய பொதுக்குழுவுக்கான முன்னறிவிப்பு தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய அறிவிப்பை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்று விதிகளில் கூறப்படவில்லை. அந்த வகையில், 11.01.2022 அன்று பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்து 23.06.2022 அன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பே நோட்டீஸாக கருதப்பட முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா? இந்த வழக்கில், மனுதாரர்கள் (ஓபிஎஸ், வைரமுத்து) நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளனர். கட்சி உறுப்பினர்களின் ஆதரவையோ நம்பிக்கையையோ பெற முடியாத நிலையில் அவர்கள் நீதிமன்றங்களை தங்களுடைய கருவிகளாகக் கொண்டு தங்களை மீட்கக் கோரி தங்களுடைய சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒரு தலைவர், பொதுக்குழுவை அணுகி, பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தி கட்சியின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமக்குள்ள யோசனைகள் மற்றும் திட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, மீண்டும் நீதிமன்றத்துக்கு விரைந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. தன்னால் சாதிக்க முடியாத முடியாததை, நீதிமன்றத்தின் மூலம் அடைய மனுதாரர் விரும்பியிருக்கிறார். நிச்சயமாக, நீதிமன்றங்கள் கட்சியின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கும். அதுவும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு முரணாக ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்கள் எதிர்க்கும் விஷயத்தில் நீதிமன்றம் தலையிடாது. ஏதேனும் கட்சி விதி மீறல் மற்றும் விதிகளுக்கு எவரும் இணங்காத பட்சத்தில், பொதுக்குழுவால் அது நன்கு அங்கீகரிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் பொதுக்குழுவின் முன்பாக தமது குறைகளை முன்வைக்கலாம் அல்லது முடிவை ஏற்கக் கூடாது என்று கூறலாம். ஒருவேளை தமது குரலை முன்வைக்க வாய்ப்பு மறுக்கப்படும்போது அவர் தமது உரிமையை கேட்டுப்பெற சிவில் நீதிமன்றத்தை அணுகலாமே தவிர இந்த நீதிமன்றத்தை அல்ல. மனுக்கள் தள்ளுபடி மேலே குறிப்பிட்ட விவாதங்களின்படி கட்சி அல்லது சங்கத்தின் உள் விவகாரங்களில், நீதிமன்றங்கள் பொதுவாக தலையிடாது. கட்சி மற்றும் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு என ஒரு குறிப்பிட்ட துணைச் சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறையை கொண்டு சிறந்த நிர்வாகத்தை வழங்கும். மேலும், கட்சியின் துணைச் சட்டங்களை உருவாக்குதல், திருத்துதல், மாற்றுதல், ரத்து செய்தல் ஆகியவற்றுக்கான அதிகாரம், சந்தேகத்திற்கு இடமின்றி, கட்சியின் பொதுக் குழுவிற்கு உள்ளது. அத்தகைய துணைச் சட்டங்களுடன் இணைக்கப்பட்ட எந்த சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாத நிலையில் பெரும்பான்மை முக்கிய பங்கினர் முடிவெடுக்கும் உள்விவகார செயல்பாட்டில், இந்த நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த அம்சங்களின் அடிப்படையில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணங்களை பெறும் வகையிலான வாதங்களை மனுதாரர் முன்வைக்கவில்லை. அதன்படி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியபடி, பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்திக் கொள்ளலாம். இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-62118505
  5. இலங்கை நெருக்கடி: 'பதவி விலக தயார்' - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தல் 24 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தான் முன்பு அறிவித்ததை போன்று பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டது. ஜனாதிபதி மாளிகையை அண்மித்து நேற்று ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே, ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டன. எனினும், இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ராணுவம் நேற்றிரவு அறிவித்திருந்தது. இவ்வாறான பின்னணியிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழின் கள அனுபவம் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தான் ஜூலை மாதம் 13ம் தேதி பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ஷ, அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி, கொழும்பு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, கடந்த 9ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தை நடத்தி, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் என்ன நடக்கிறது? இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எரிபொருள் வாங்க மிக நீண்ட வரிசையில் அவர்கள் காத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் 100 நாட்களுக்கும் மேலாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தன. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றைய முன் தினம் போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர். இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர். இதற்கிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்து சில சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த புத்தகங்கள் எரிந்தது குறித்து ரணில் பெரும் வருத்தம் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62119204
  6. "இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்" - எஸ்.ஜெய்சங்கர் 10 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஸ். ஜெயங்கர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்," என்று கூறினார்."இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை," என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். "இலங்கையில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது. கடுமையான நெருக்கடி நிலவும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இந்த சூழலை இலங்கையர்களால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 "தற்போதைய சூழ்நிலையின் சிரமங்களைக் கையாள்வதில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சோனியா காந்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் போராட்டக்காரர்கள் கொண்டு வந்த பிறகு, அங்கு பதற்றத்தைத் தணிக்க அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான முன்னெடுப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இன்றைய நிலவரத்தை இந்த பக்கத்தில் வழங்குகிறோம். இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற மலையகத் தமிழர் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் இலங்கை ஜனாதிபதி ஜூலை 13இல் பதவி விலகுவார் - சபாநாயகர் தகவல் இலங்கை: ரணில் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள் இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (10) அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாட்டின் மீது கொண்டுள்ள அளப்பரிய நேசத்தை கருத்திற்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றதாக கூறியுள்ளார். ஆனால், "பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் நாட்டு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை ஒரு தீர்வை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று நான் இப்போது கருதுகிறேன்," என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார். இலங்கையில் அமைச்சர் பொறுப்பு வகித்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஏற்கெனவே தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் வரிசையில் நான்காவதாக தம்மிக்க பெரேராவும் பதவி விலகியுள்ளார். எல்பிஜி எரிவாயு விநியோகத்துக்கு நடவடிக்கை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் இலங்கையில் தீவிரம் அடைந்துள்ள போராட்டங்கள் ஒருபுறமிருக்க அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை தெளிவாகவில்லை. இந்த நிலையில், அவரது செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கு வருகை தரும் எல்பிஜி தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், 3,700 மெற்றிக் தொன் எல்பி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் இன்று பிற்பகலில் வரவுள்ளது. அது வந்தவுடன் எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 3,740 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவின் இரண்டாவது தொகுதி நாளை (ஜூலை 11) நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கப்பல் பிற்பகல் பிற்பகல் 3 மணியளவில் கெரவலப்பிட்டியை வந்தடைந்ததன் பின்னர் சிலிண்டர்களை இறக்கி விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, 3,200 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு மூன்றாவது சரக்கு கப்பல் ஜூலை 15 ஆம் தேதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாதத்துக்காக மட்டும் 33,000 மெட்ரிக் டன் அளவுக்கு சிலிண்டர்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைத் தளபதி வேண்டுகோள் படக்குறிப்பு, ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி தற்போதைய அரசியல் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இலங்கை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவல்பூர்வ மாளிகையை சனிக்கிழமை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றிய பிறகு, பிரதமர் ரணிலின் தனிப்பட்ட வீட்டுக்கும் ஒரு கும்பல் தீ வைத்தது. இந்த சம்பவத்தால் கொழும்பு நகரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கூறியுள்ளார். அந்த சந்தேக நபர்களின் விவரம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, இலங்கை எண்ணெய் கழகம், நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தப் பணிக்காக திருகோணமலையில் உள்ள முனையம் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை எண்ணெய் கழகம் கூறியுள்ளது. செல்ஃபி, ஜிம், நீச்சல்: இலங்கை ஜனாதிபதி மாளிகையில் மக்கள் உற்சாகம் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? இலங்கை: சர்வதேச கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் சனிக்கிழமை நிகழ்வுகளுக்குப் பின்னர், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கையில் விரைந்து செயற்படுமாறு இலங்கை தலைமையிடம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. காங்கிரஸ் அறிக்கை இலங்கையின் நெருக்கடி சூழல் குறித்து காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த நெருக்கடியான தருணத்தில் காங்கிரஸ் கட்சி இலங்கை மக்களுடன் துணை நிற்கிறது. இலங்கை மக்கள் இந்த சூழலை கடந்து வருவர் என காங்கிரஸ் நம்புகிறது. இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்," என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் போலீஸ் கண்காணிப்பு முக்கிய சாலை சந்திப்புகளில் சனிக்கிழமை காலையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் பெரும்பகுதியினர் தங்களுடைய முகாம்களுக்கும் நிலையங்களுக்கும் திரும்பியிருக்கின்றனர். வெகு சிலரே வழக்கமான போலீஸ் பாதுகாப்புப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி மாளிகையை சனிக்கிழமை பிற்பகலில் முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை, மேலும் முன்னேறாமல் தடுக்கும் நடவடிக்கையில் அதிரடிப்படையினர் ஈடுபட்ட காணொளி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாளிகையின் மதில் சுவருக்கு வெளியே போராட்டக்காரர்கள் குழுமியிருக்க அவர்களை நோக்கி மாளிகைக்குள் நின்றிருந்த அதிரடிப்படையினர் இயந்திரத் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் காணொளியில் உள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 ஆனால், இடைவிடாது நடந்த துப்பாக்கி சூடுக்குப் பிறகும் போராட்டம் தணியாததால் காவல்துறையினர் ஒரு கட்டத்தில் மெல்ல, மெல்ல பின்வாங்கத் தொடங்கினார்கள். இதன் பிறகே போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை நுழைவாயில் கேட் மீது ஏறிக் குதித்து கதவைத் திறந்து நுழைந்தது தெரிய வந்துள்ளது.நாட்டின் பொருளாதார நிர்வாகம் சீர்கேடு அடைந்ததாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற போராட்டங்கள் சனிக்கிழமை உச்சத்தைத் தொட்டது. ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் ரணிலும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற குரலை ஒலித்தபடி பொதுமக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் தேதி விலகுகிறார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். "அமைதியான வழியில் அதிகார பரிமாற்றம் நடைபெற அவர் உறுதி அளித்துள்ளார்" என்று சபாநாயகர் கூறியுள்ளார். ஆனால், இந்த தகவலை கோட்டாபய தரப்பு பொதுவெளியில் இதுவரை நேரடியாக உறுதிப்படுத்தவில்லை. போராட்டத்தைக் கைவிட மறுக்கும் மக்கள்இதற்கிடையே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவார் என்ற அறிவிப்பு கொழும்பு நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவர்கள் பல இடங்களில் பாட்டுப்பாடியும் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், தங்களுடைய போராட்டங்களை கைவிட அவர்கள் தயாராக இல்லை. https://www.bbc.com/tamil/sri-lanka-62111280
  7. இலங்கை நெருக்கடி: புத்தகங்கள் கொளுத்தப்பட்டது குறித்து ரணில் கண்ணீர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு போராட்டக்காரர்கள் சிலரால் தீக்கு இரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில், கட்சி உறுப்பினர்களிடையே சிறப்பு கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய அவர், "சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை ஆனால் தாம் படித்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை எண்ணிதான் கவலைக் கொள்கிறேன்," என தெரிவித்தார். தான் மூன்று தலைமுறைகளாக சேர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மூன்று அறைகளில் சேமித்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகங்கள்தான் நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த வீட்டை அவர் ஏற்கனவே கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரிக்கு எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில்தான் இந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. "இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்" - எஸ்.ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழின் கள அனுபவம் அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை சரி செய்வதற்கு தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் , ஐஎம்எஃப் கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான இறுதி கட்ட நடவடிக்கை வரை தான் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோல நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கையின் கடைசி கட்டத்தில்தான் அரசியல் பழிவாங்கல் நிகழ்வாக தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணிலின் வீடு இந்த நிலையில் நேற்றைய சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடவில்லை. அமைதியை கோரும் ராணுவம் இலங்கை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் ஷெவேந்திர சில்வா, நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இலங்கையில் என்ன நடக்கிறது? இலங்கையில் 100 நாட்களை கடந்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்துதான் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-62113528
  8. சர்வதேச திரைப்படங்களை தொடர்ந்து திரையிட தியேட்டர்கள் இல்லை |CWC-Social Talk| S.Ramakrishnan Part 4
  9. பேகம் ஹஸ்ரத் வரலாறு: ஆஃப்ரிக்க அடிமையின் மகள் ஆங்கிலேயர்களை அலற விட்ட வீரக்கதை ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூலை 3, 1857. லக்னெளவில் உள்ள கைசர்பாக் அரண்மனை தோட்டத்தில் சாந்திவாலி பராத்ரியை நோக்கி ஒரு பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தின் நடுவே, 14 வயதுடைய மெலிந்த, கருமை நிறமுள்ள சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். பையனின் பெயர் பிர்ஜிஸ் கத்ரு. ஓராண்டு முன்பு நாடு கடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் மகன். லக்னெளவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாஜித் அலி ஷா விவாகரத்து செய்த ஒன்பது பெண்களில் பிர்ஜிஸ் கத்ருவின் தாயார் பேகம் ஹஸ்ரத் மஹாலும் ஒருவர். ஊர்வலத்தின் நோக்கம், 14 வயதான பிர்ஜிஸ் கத்ருவை புதிய நவாபாக அறிவிப்பதாகும். இதுகுறித்து, ரோஸி லியோலின் ஜோன்ஸ் தனது 'The Great Uprising in India: Untold Stories Indian and British' என்ற புத்தகத்தில், 'தங்களுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் வெறுமனே அடையாள ஊர்வலத்தில் பங்கேற்பதாக ஆங்கிலேயர்கள் நம்பினர். ஆனால், இது உண்மையல்ல. அவுத் பகுதியை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்ட பின்னர், ஓரங்கட்டப்பட்ட குழுவின் தலைவர்கள் ஒன்று கூடி பறிக்கப்பட்ட அரசை மீட்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கிய புனிதமான தருணம் இது," என்று எழுதுகிறார். சாவர்க்கர்: இந்தியாவில் இவர் சிலருக்கு ஹீரோ, சிலருக்கு வில்லன் - ஏன்? எமர்ஜென்சி: இந்திரா காந்தி சிறையில் அடைத்த இரு ராணிகளின் வரலாறு இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட 'அடிமை' குத்புதீன் ஐபக் டெல்லி, மீரட் மற்றும் கான்பூருக்குப் பிறகு, 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் தீ லக்னெளவையும் அடைந்தது. கிளர்ச்சியின் முதல் தீப்பொறி 1857 மே 30 ஆம் தேதி அப்பகுதியை அடைந்தது. அன்று நகரின் மாரியன் கன்டோன்மென்ட்டில் அதிகாரிகளின் வீடுகளுக்கு தீ வைத்து மூன்று பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்றனர் கிளர்ச்சியாளர்கள். இப்படியான சூழலில் ஜூலை 3ஆம் தேதி, பிர்ஜிஸ் கத்ரு, அவத்தின் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். ஆனால், அப்போது அவருக்கு வயது குறைவென்பதால், நிர்வாகப் பொறுப்பு முழுமையும் அவரது தாயார் பேகம் ஹஸ்ரத் மஹால் மீது விழுந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹஸ்ரத் மஹால் ஒரு ஆஃப்ரிக்க அடிமையின் மகள் வரலாற்றாசிரியர் ரோஸி லியோலின் ஜோன்ஸ் எழுதுகிறார், "ஹஸ்ரத் மஹால் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை அம்பர் ஒரு ஆஃப்ரிக்க அடிமை. அவரது தாயார் அம்பரின் ஆசை நாயகியாக இருந்த மகேர் அப்சா ஆவார். ஹஸ்ரத் மஹால் லக்னெளவில் உள்ள பரிகானா சங்கீத் பள்ளியில் இசை கற்றுக்கொண்டார். எனவே, அவர் 'மெஹக் பரி' என்று அழைக்கப்பட்டார். அவர் தனது திறமை அல்லது நல்ல தோற்றம் அல்லது இரண்டின் காரணமாகவும் வாஜித் அலி ஷாவின் கவனத்தை ஈர்த்தார். மேலும் வாஜித் அலி ஷா ஹஸ்ரத் மஹாலை 'முத்தா' முறை (ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனைவி ஆக்கிக்கொள்ளுதல்) மூலம் தனது தற்காலிக மனைவியாக்கிக் கொண்டார். 1845 ஆம் ஆண்டில் ஹஸ்ரத் மஹால் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அதன் காரணமாக அவருடைய நிலை உயர்ந்தது. அரண்மனை அந்தஸ்து வழங்கப்பட்டது." ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் நிலை மாறியது. வாஜித் அலி ஷா ஹஸ்ரத்தை விவாகரத்து செய்ததோடு தனது அந்தப்புரத்தில் இருந்தும் வெளியேற்றிவிட்டார். பட மூலாதாரம்,INDIAN POSTAL DEPARTMENT இதுகுறித்து ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'A Begum and the Rani Hazrat Mahal and Lakshmibai in 1857' என்ற புத்தகத்தில், 'வாஜித் அலி ஷா ஆங்கிலேயர்களால் லக்னெளவில் இருந்து வெளியேற்றப்பட்டு கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டபோது, அவரது குழுவில் ஹஸ்ரத் மஹால் இல்லை என்பதே இதன் பொருள். அவர் இனி ஒரு பேகம் அல்ல, ஆனால் அவருடைய மகன் நவாப் மற்றும் முகலாய பேரரசரின் ஆளுநரானதும், தானாகவே மீண்டும் பேகம் என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் தலைவியானார்," என்று எழுதியுள்ளார். 35000 கிளர்ச்சியாளர்களின் தலைவி 1857 ஜூலைக்குள் பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கியதற்காக சிப்பாய் மங்கள் பாண்டே பாரக்பூரில் தூக்கிலிடப்பட்டார். மீரட், கான்பூர் மற்றும் டெல்லி ஆகியவை கிளர்ச்சியின் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தன, ஜான்சியின் ஜோகுன் பாக் நகரில் பிரிட்டிஷ் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட பிறகு ராணி லக்ஷ்மிபாய் ஜான்சியைக் கட்டுப்படுத்த முயன்றார். சின்ஹட்டில் ஆங்கிலேயர்களின் தோல்வி பற்றிய செய்தி பரவியதும், கிளர்ச்சி வீரர்கள் லக்னெளவை அடையத் தொடங்கினர். அடுத்த எட்டு மாதங்களுக்கு, அதாவது மார்ச் 1858 வரை, ஹஸ்ரத் மஹால் லக்னெளவில் கிளர்ச்சியாளர்களை வழிநடத்தினார். இதற்கிடையில் மூன்று மாதங்கள் வரை, 37 ஏக்கர் பரப்பளவுள்ள குடியிருப்பு, முற்றுகைக்கு உட்பட்டது. பிரிட்டிஷ் மகளிர், குழந்தைகள், வீரர்கள், இந்திய வீரர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் ஊழியர்கள் என மூவாயிரம் பேர் இருந்தனர். பட மூலாதாரம்,PENGUIN ரெசிடென்சி சுமார் 35,000 கிளர்ச்சியாளர்களால் சூழப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. முகலாயர்களை வீழ்த்தி டெல்லியை கைப்பற்றிய ஹேமு விக்ரமாதித்யா வரலாறு பேரரசர் பிருத்விராஜ் சௌஹான் vs முகமது கோரி: வரலாற்றில் எது கற்பனை? எது உண்மை? ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் ஜேம்ஸ் நீல் என்ற ஆங்கிலேய அதிகாரி, லார்டு கேனிங்கிற்கு எழுதிய கடிதத்தில், 'குடியிருப்பின் உள்ளே நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு முன்னால், அதிகபட்சம் 15-20 நாட்கள்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்று லாரன்ஸ் நினைக்கத் தொடங்கினார்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கிளர்ச்சி பற்றிய செய்திகளை திரட்ட அனுப்பப்பட்ட 'தி டைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர் விவியம் ஹாவர்ட் ரஸ்ஸல், தனது அறிக்கையில், 'மூன்று மாத முற்றுகையின் போது, மூவாயிரம் பிரிட்டிஷ் மக்களில் பலர் தப்பிக்க முடிந்தது. சிலர் கொல்லப்பட்டனர். பேகம், அற்புதமான ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி, தன் மகனின் உரிமைக்காகப் போராடும்படி ஆவாத் முழுவதையும் அணிதிரளவைத்தார்' என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES லாரன்ஸ் குடியிருப்புக்குள்ளேயே இறப்பு 1857 ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு நாள், ஹென்றி லாரன்ஸ் எல்லா தளங்களையும் ஆய்வு செய்த பிறகு தனது குடியிருப்பு அறைக்குத் திரும்பினார். ஒரு நாள் முன்னதாக அவரது அறையில் ஒரு ஹோவிட்சர் ஷெல் வெடித்தது. ஆனால் அதில் லாரன்ஸ் காயமடையவில்லை. ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'டேட்லைன் 1857 ரிவோல்ட் அகென்ஸ்ட் தி ராஜ்' என்ற புத்தகத்தில், 'லாரன்ஸின் ஊழியர்கள் அவரை ரெசிடென்சியின் உட்புறம் நோக்கியிருந்த மற்றொரு அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். மறுநாள் அறையை மாற்றலாம் என்று லாரன்ஸ் முடிவு செய்தார். ஒரே இடத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்த நினைக்கும் வீரர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் எது நடக்காது என்று அவர் நினைத்தாரோ அது நடந்தது. லாரன்ஸ் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது, அவரது அறையில் மற்றொரு குண்டு வெடித்தது. ஹென்றி லாரன்ஸ் படுகாயமடைந்தார். காயம் மிகவும் கடுமையாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியாமல்போனது. அவர் ஜூலை 4ஆம் தேதி காலமானார். அவர் குடியிருப்புக்குள்ளே அமைதியாக அடக்கம் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு அவரது மரணம் பற்றி யாரும் அறிய அனுமதிக்கப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பேகம் ஹஸ்ரத் மஹாலின் அரசவை ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கான எல்லா முடிவுகளும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் அரசவையில் மேற்கொள்ளப்பட்டன. "பேகத்தின் இடத்தில் அரசவை கூடும்போது, அரசு உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள் அனைவரும் அதில் பங்கேற்பது வழக்கம். தாரா கோட்டியில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டன. 'தர்பார் பிர்ஜிஸ் கத்ரு' என்ற பெயரில் விளம்பரங்களை வெளியிடுவார்கள். மக்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற போராட வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த விளம்பரங்களில் ஆங்கிலேயர் ஆட்சியும் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டது," என்று நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார். இது தவிர, தர்பார் பிர்ஜிஸ் கத்ரு என்ற பெயரில் தாலுகாக்களின் தலைவர்களுக்கு ஹுகும்நாமா (உத்தரவு) வழங்கப்பட்டது. இந்த ஹுக்கும்னாமாக்கள் மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதும், மக்கள் மீதான அவற்றின் தாக்கமும், ஆங்கிலேயர்களை சாமானியர்கள் எதிர்த்தவிதத்தில் தெளிவாகத் தெரிந்தது. லக்னெள ரெசிடென்சியில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக கான்பூரில் இருந்து அனுப்பப்பட்ட ஹென்றி ஹேவ்லாக் மற்றும் ஜேம்ஸ் அவுட்ராம் ஆகியோரின் துருப்புக்கள் சாதாரண கிராமவாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன. பட மூலாதாரம்,TWITTER சண்டை நடப்பதற்கு இடையிலும், லக்னெள தெருக்களில் கொண்டாட்ட சூழல் நிலவியது. மக்கள் ஒருவருக்கொருவர் ஹல்வா, பூரி மற்றும் இனிப்புகளை விநியோகித்தனர். டெல்லியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் லக்னெளவை அடைந்த கிளர்ச்சியாளர்கள் 1857 செப்டம்பர் 25 ஆம் தேதி, ஹேவ்லாக் மற்றும் அவுட்ராமின் படைவீரர்கள் ரெசிடென்சிக்குள் நுழைந்தபோது கிளர்ச்சியாளர்களுக்கு முதல் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ஆங்கிலேய படைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்கள் உள்ளே சென்றபிறகு ஒரு வகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். தனது தோழர்களுடனான தொடர்பை இழந்தனர். சார்லஸ் பால் தனது 'ஹிஸ்டரி ஆஃப் தி இந்தியன் மியூட்டினி' புத்தகத்தில், 'அவுட்ராமின் ஒவ்வொரு சமரச முயற்சியும் பேகம் ஹஸ்ரத் மஹாலால் நிராகரிக்கப்பட்டது," என்று எழுதினார். ஏனெனில், அந்த நேரத்தில் டெல்லியை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதால், அங்கிருந்த கிளர்ச்சியாளர்கள் அவத் கிளர்ச்சியாளர்களுக்கு உதவ லக்னெள வந்தடைந்தனர். ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'அவத் இன் ரிவோல்ட்' புத்தகத்தில், '1858 ஜனவரி வாக்கில், லக்னெளவில் கிளர்ச்சி வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. ஆங்கிலேயர்கள் லக்னெளவை விட்டு வெளியேறினாலும், அவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள் என்பது அப்போதைய எண்ணமாக இருந்தது," என்று எழுதுகிறார். பேகம் ஹஸ்ரத் மஹால் லக்னெளவை வலுப்படுத்தி, ஆங்கிலேயர் அங்கு திரும்பிவருவதை முடிந்தவரை கடினமாக்க முயற்சி செய்தார். லக்னெளவின் பாதுகாப்பை வலுப்படுத்த சுமார் 15,000 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். கோமதி ஆற்றின் தண்ணீரை அங்கு கொண்டு வருவதற்காக கைசர்பாக்கைச் சுற்றிலும் ஆழமான அகழி தோண்டப்பட்டது. பட மூலாதாரம்,ANTHEM PRESS ஹஸ்ரத்மஹாலின் வீரர்கள் 1857 நவம்பரில் கோலின் காம்ப்பெல் தலைமையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ரெசிடென்சியில் சூழப்பட்ட பிரிட்டிஷ் மக்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் வெளியேற்றினர். 'இந்த மோதலில் 3,000 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் 80 பீரங்கிகள் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டதில் இருந்து ஆங்கிலேயர்கள் எவ்வளவு எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை அறிய முடிகிறது,' என்று சார்லஸ் பால் எழுதுகிறார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மூன்று பிரிட்டிஷ் பெண்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? குழந்தை கடத்தலால் திருடப்பட்ட தொல்குடித் தலைமுறைகள் - ஆஸ்திரேலியாவின் வலி நிறைந்த வரலாறு ஒரு வீரரைக் கூட இழக்காமல் முகலாயர்களை தோற்கடித்த ஷேர்ஷா: இந்திய நிர்வாகவியல் முன்னோடி 1857 டிசம்பர் மாத வாக்கில் காற்றின் திசை முற்றிலும் மாறத் தொடங்கியது. வாரணாசியில் கர்னல் ஜேம்ஸ் நீல் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை மாமரத்தில் தூக்கிலிட்டு அப்பகுதி முழுவதும் பீதியை கிளப்பினார். அலகாபாத் நகரத்தில் தீயிடப்பட்டது. பீரங்கி வாயில் கட்டி மக்கள் சுடப்பட்டனர். 'பேகத்திற்கும் அவரது வீரர்களுக்கும் மிகவும் தொந்தரவாக இருந்தது ஜேம்ஸ் அவுட்ராம் மற்றும் அவரது வீரர்கள் ஆலம்பாக் அரண்மனையில் தொடர்ந்து இருந்ததுதான்," என்று இரா முகோட்டி தனது 'ஹீரோயின்ஸ் பவர்ஃபுல் இந்தியன் விமன் ஆஃப் மித் அண்ட் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில் எழுதுகிறார். பேகத்தின் வீரர்கள் ஆலம்பாக் அரண்மனையை ஒன்பது முறை தாக்கினர். ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்களை அங்கிருந்து வெளியேற்றவோ அல்லது கான்பூரிலிருந்து அவர்களின் விநியோக பாதைகளை துண்டிக்கவோ முடியவில்லை. பேகம் ஹஸ்ரத் மஹால் தனது யானையின் மீது அமர்ந்து இதுபோன்ற ஒரு தாக்குதலில் ஈடுபட்டார். பட மூலாதாரம்,ALEPH BOOK COMPANY ஆனால், 'ஹஸ்ரத் மஹால் சண்டையில் பங்கேற்கவில்லை. அவர் அதைத் திட்டமிட்டதோடு கூடவே சண்டை தொடர்பான எல்லா உத்தரவுகளும் அவரது அரசவையில் இருந்தே வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் மன உறுதியை உயர்த்த அவர் பெருமுயற்சி மேற்கொண்டார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி குறிப்பிடுகிறார். 1856 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அவத்தை தங்கள் ராஜ்ஜியத்துடன் இணைத்தபோது, அவர்கள் ஒரு தோட்டாவைக் கூட சுடவில்லை. ஆனால், 1858 இல் லக்னெளவை மீண்டும் கைப்பற்றுவதற்கு அவர்கள் தங்கள் முழு பலத்துடன் சண்டையிட வேண்டியிருந்தது. பேகமை எதிர்த்த மௌலவி அகமதுல்லா ஆனால், பேகம், பிரிட்டிஷாரை விட தனது சொந்த மண்ணைச் சேர்ந்த மௌல்வி அகமதுல்லா ஷாவிடமிருந்து அதிக எதிர்ப்பை சந்தித்தார். ஆங்கிலேயர்களை வீழ்த்த கடவுளிடம் இருந்து நேரடியாக தான் உத்தரவு பெற்றதாக ஷா கூறினார். மக்கள் மத்தியில் பிரபலமான மௌலவி, தான் குவாலியரின் மெஹ்ராப் ஷாவின் சீடர் என்று கூறினார். ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'அவத் இன் ரிவோல்ட்' புத்தகத்தில், 'அகமதுல்லா ஆக்ராவில் ஒரு ஃபக்கீராக வாழ்ந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தினார். அப்போது அவருக்கு வயது நாற்பது. அவர் மிகக் குறைந்த கல்வியறிவு பெற்றவர். பாரசீக மற்றும் அரபு மொழிகளில் சிறிது பேசக்கூடியவர். சின்ஹட் போரின் போது அவர் உடனிருந்தார்," என்று எழுதியுள்ளார். பேகம் ஹஸ்ரத் மஹால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ,மெளல்வி லக்னெளவுக்குள் நுழைவதை விரும்பவில்லை. ஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது ஆங்கிலேயர்களின் அழுத்தம் அதிகரித்தபோது, மெளல்வியின் தீப்பறக்கும் பேச்சை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. கிளர்ச்சியாளர்கள் போரில் தோல்விகளை சந்திக்கத்தொடங்கியபோது, அவரை லக்னெளவுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஹஸ்ரத் மஹாலுக்கு ஏற்பட்டது. 1858 ஜனவரி மாதத்திற்குள் கிளர்ச்சியாளர்களின் இரண்டு குழுக்கள் உருவாயின. அவத்தின் வீரர்கள் பேகம் ஹஸ்ரத் மஹால் மற்றும் பிர்ஜிஸ் கத்ரு ஆகியோரை ஆதரித்தனர். மற்ற நகரங்கள் மற்றும் டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் மௌல்விக்கு ஆதரவாக இருந்தனர். பட மூலாதாரம்,ROLI BOOKS ஆங்கிலேயருக்கு ஆதரவாக நேபாள கூர்க்கா வீரர்கள் நேபாளத்தின் ஜங் பகதூர் ராணாவின் பயங்கரமான கூர்க்கா வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவ லக்னெளவை அடைகிறார்கள் என்ற செய்தி திடீரென்று வந்தது. 'கூர்க்கா வீரர்களுக்கு ஈடாக ஜங் பகதூருக்கு கோரக்பூர் நகரத்தையும், லக்னெளவை கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியையும் தருவதாக ஆங்கிலேயர்கள் கூறியிருப்பதை பேகம் அறிந்தார். இதை முறியடிக்க பேகம் ஹஸ்ரத் மஹால் ஜங் பகதூருக்கு மாற்று யோசனையை அளித்தார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி எழுதுகிறார். ராணா ஆங்கிலேயர்களுக்கு உதவாவிட்டால், கோரக்பூரைத் தவிர ஆசம்கர், ஆரா மற்றும் வாரணாசியையும் அவரிடம் ஒப்படைப்பதாக பேகம் அவருக்கு செய்தி அனுப்பினார். ஆனால், ஃபக்கீர் வேடத்தில் அனுப்பப்பட்ட பேகத்தின் தூதர்கள் வழியில் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதன் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிக்க கூர்க்கா வீரர்கள் தொடர்ந்து லக்னெள நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ஆங்கிலேயர்கள் நுழைவதற்குள் தப்பிய ஹஸ்ரத் மஹால் 1858 பிப்ரவரியில் பேகம் தனது தாலுகா தலைவர்களில் ஒருவரான மான் சிங்கின் துரோகத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், கேம்ப்பெல் தலைமையில், சுமார் 60,000 பிரிட்டிஷ் வீரர்கள் லக்னெளவை நோக்கி முன்னேறினர். இவர்களில் 40,000 வீரர்கள் சண்டையிடுவதற்காக ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்தனர். கடைசியில் ஆங்கிலேயர்கள் கைசர்பாக்கை கைப்பற்றினர். ஹஸ்ரத் மஹாலை பாதுகாக்க கிளர்ச்சியாளர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப்போராடினர். டபிள்யூ.ஹெச்.ரஸ்ஸல் தனது 'மை டைரி இன் இந்தியா' என்ற புத்தகத்தில், 'பேகம் இறுதிவரை மனம் தளரவில்லை. அவர் கைசர்பாக்கில் தொடர்ந்து தங்கினார். பிரிட்டிஷ் வீரர்கள் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன்பு அவர் 1858 மார்ச் 15 ஆம் தேதி தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்துச்சென்றார்" என்று குறிப்பிட்டுள்ளார். லக்னெளவுக்கு வெளியே உள்ள மூசா பாக் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இரண்டாவது போர்முனையைத் திறந்தார். அவர் 1858 மார்ச் 21 ஆம் தேதி மூசா பாக்கில் மௌல்வி அகமதுல்லாவுடன் ஆங்கிலேயருக்கு எதிரான கடைசி போரில் ஈடுபட்டார். ஆனால், இந்த போரில் ஆங்கிலேயர்கள் அவரை தோற்கடித்தனர். இதைத்தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் அனைவரும் கலைந்துவிட்டனர். மௌல்வி ரோஹில்கண்ட் நோக்கிச்சென்றுவிட்டார். அங்கு அவர் ஆங்கிலேயர்களை கொரில்லா போரால் திக்குமுக்காட வைத்தார். ஆனால், அவரது தோழர்களில் ஒருவர் அவருக்கு துரோகம் செய்து மெளல்வியின் தலையை வெட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நேபாளத்தில் தஞ்சம் புகுந்த பேகம் பேகம் ஹஸ்ரத் மஹால் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் நேபாளத்தின் எல்லையை நோக்கிச் சென்றார். அவர் காக்ரா நதியைக் கடந்து, பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பூந்தி கோட்டையைத் தனது தளமாக்கினார். பிரிட்டிஷ் ஜேம்ஸ் பாண்ட் அலெக்சாண்டர் பர்ன்ஸ் இப்படிப்பட்டவரா? ரவீந்திரநாத் தாகூர் 'ஜன கண மன' எழுதி பேரரசர் ஐந்தாம் ஜார்ஜை சிறப்பித்தாரா? - ஓர் அலசல் திப்பு சுல்தான் கொடுங்கோலனா? விடுதலைக்குப் போராடிய வீரனா? புந்தேல்கண்டிலிருந்து தப்பிய மராட்டியத் தலைவர் நானா சாஹேப்பும் அங்கு வந்தடைந்தார். லக்னெளவை விட்டு வெளியேறிய பிறகும் பேகத்துடன் 15,000 முதல் 16,000 வீரர்கள் இருந்தனர். அவரிடம் 17 பீரங்கிகளும் இருந்தன. இவ்வளவு தூரத்தில் இருந்தபோதிலும், அவத்தின் நிர்வாகத்தை நடத்தும் முயற்சிகளை அவர் கைவிடவில்லை. அங்கிருந்தும் பிர்ஜிஸ் கத்ரு என்ற பெயரில் ஆணைகள் வெளியிடப்பட்டன. வீரர்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், எல்லா நம்பிக்கைகளும் தீர்ந்து போகத் தொடங்கி ஆங்கிலேயர்கள் தங்களை பிடித்துவிடுவார்கள் என்று தோன்றியபோது, பேகம் நேபாளத்தில் தஞ்சம் அடைய முடிவு செய்தார். பேகம் ஹஸ்ரத் மஹால் நேபாளத்தில் அமைதியாக வாழ்வதாக உறுதியளித்தால், அவர் அங்கு தங்க அனுமதிக்கப்படுவார் என்றும், நேபாள நிலத்தில் தனக்கு எதிரான வன்முறை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஜங் பகதூர் ராணா அறிவித்தார். பின்னர் ஹஸ்ரத் மஹால் தனது வாழ்நாள் முழுவதையும் நேபாளத்தில் கழித்தார். பட மூலாதாரம்,HURST நேபாளத்தில் தனது இறுதிமூச்சை விட்ட பேகம் ஹஸ்ரத் மஹால் 1857 ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரில் ஈடுபட்ட ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியாத ஒரே தலைவர் ஹஸ்ரத் மஹால்தான். இதற்கிடையில், அவரது முன்னாள் கணவர் வாஜித் அலி ஷா, கிளர்ச்சியில் ஹஸ்ரத் மஹாலின் பங்கைக் கண்டு மிகவும் கோபமடைந்தார். ஹஸ்ரத் மஹால் தனது பெயரைப் பயன்படுத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கர்னல் கெவெனாக்கிடம் புகார் செய்தார். வாஜித் அலி ஷா தனது மீதமுள்ள வாழ்நாள் முழுவதையும் கல்கத்தாவிற்கு அருகில் உள்ள மத்தியா புர்ஜில் கழித்தார். பட மூலாதாரம்,PENGUIN பேகம் ஹஸ்ரத் மஹால் 1879 வரை உயிர் வாழ்ந்தார். இந்தியா திரும்பும் அவரது விருப்பத்தை கடைசி வரை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. எஸ்.என்.சென் தனது '1857' புத்தகத்தில், "ஆங்கிலேயர்கள் அவருக்கு வாஜித் அலி ஷாவைப் போல ஓய்வூதியம் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், பேகம் அதை நிராகரித்தார். அவர் நேபாளத்தில் காலமானார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், ஆங்கிலேயர்களுடன் நேருக்கு நேர் சமமாக போரிட்ட இந்தப் பெண்மணிக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விக்டோரியா மகாராணி அரியணை ஏறிய 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பேகத்தின் மகன் பிர்ஜிஸ் கத்ருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்குத் திரும்பி கல்கத்தாவில் வசிக்கத் தொடங்கினார். அங்கு அவர் 1893 ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலமானார். https://www.bbc.com/tamil/india-62107875
  10. அவங்கள் சுவருக்கு சுட்டு எச்சரிக்கிறார்கள் போல் இருக்கு.
  11. இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 10 ஜூலை 2022, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலையில் இருந்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இரவை அங்கே கழித்தனர். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஒவ்வொரு பிரிவாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு அறையையும் சுற்றால தலம் போல சுற்றிப்பார்த்து வருகின்றனர். அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள்ளே போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் போராட்டக்காரர்கள் நிரம்பியுள்ளனர். ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்றும் (ஜூலை 10) அங்கேயே உள்ளனர். முதன் முறையாக அந்த மாளிகைக்குள் நுழைவு வாயில் மீது ஏறிக் குதித்துச் சென்றவர் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்பதை அறிய முடிந்தது. அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள், அங்குள்ள பொருட்களை தொட்டுப் பார்த்தனர். ஆரம்பத்தில் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தத் தொடங்கினார்கள். இலங்கை ஜனாதிபதி ஜூலை 13இல் பதவி விலகுவார் - சபாநாயகர் தகவல் இலங்கை: ரணில் வீட்டை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள் கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் இலங்கைக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? தற்போது கொழும்பில் நடைபெறும் போராட்டங்களை உள்ளூர் பெளத்த பிக்குகள், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத பெரியவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் போன்றோரே செல்வாக்குடன் கட்டுப்படுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் ஜனாதிபதி மாளிகையில் பொருட்களை சேதப்படுத்தியவர்களை கண்டித்ததுடன் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஜனாதிபதி மாளிகையில் உள்ள பொருட்களை பாருங்கள், ரசியுங்கள் - பிறகு வெளியே சென்று விட்டு இந்த வாய்ப்பை அனுபவிக்க மற்றவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என்று மத பெரியவர்கள் அறிவுறுத்தினர். பட மூலாதாரம்,SAJID NAZMI இதன் பின்னர், போராட்டக்காரர்கள் பலரும் மாளிகையின் ஒவ்வொரு அறையாக சென்றனர். அங்குள்ள சமையலறைக்கு சென்ற குழுவினர் அங்கு முன்தினம் சமைக்கப்பட்டு மீதமிருந்த உணவு வகைகளை சாப்பிட்டனர். சிலர் குளிரூட்டியில் இருந்த ஜூஸ், மதுபான வகைகளை எடுத்துப் பருகினர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 வேறு சிலரோ, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கழிவறையை பார்வையிட்டனர். அந்த அறையும் குளிர்சாதன வசதியுடன் இருந்ததைப் பார்த்த போராட்டக்காரர்கள் ஆச்சரியத்தில் அதனுள்ளே சென்று பார்ததனர். சிலர் கழிவறைக்குள் சிறுநீர் கழித்து விட்டு வந்தனர். அருகே இருந்த குளியலறையே மிகப்பெரிய அறை போல இருந்ததை பார்த்து மக்கள் வியந்தனர். Twitter பதிவை கடந்து செல்ல, 4 Twitter பதிவின் முடிவு, 4 இதேவேளை, வேறு சில போராட்டக்குழுவினர் ஜனாதிபதி பயன்படுத்தியதாக நம்பப்படும் அறைக்குள் சென்று அங்கிருந்த அலமாரிகளை திறந்தனர். அதனுள் இருந்த கோட் சூட் ஆடைகளை அணிந்து படம் எடுத்துக் கொண்டனர். இலங்கை பொருளாதார நெருக்கடி - ஜனாதிபதி வீடுவரை விரிவடைந்த போராட்டங்கள் - முழு விளக்கம் இலங்கை: சர்வதேச கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் இலங்கை நெருக்கடி: கோட்டாபய எங்கே? இதுவரை நடந்தது என்ன? ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மிகப்பெரிய அறையில் உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. அந்த அறைக்குள் சென்ற சிலர், அங்கிருந்த கருவிகளை இயக்கி உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு அறையில் இருந்த சொகுசு மெத்தை படுக்கையில் குதித்தும் படுத்தும் ஆனந்தத்தில் சிலர் குரல் எழுப்பினர். இப்படியாக ஒவ்வொருவரும் அந்த படுக்கை மீது படுத்து உருண்டு புரண்டு சில நிமிடங்களுக்கு ஜனாதிபதி வாழ்ந்த வாழ்வை ரசித்து விட்டு வெளியே சென்றனர். ஜனாதிபதி மாளிகைக்கு பக்கவாட்டில் மிகப்பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தை பிரத்யேகமாக ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 5 Twitter பதிவின் முடிவு, 5 அந்த நீச்சல் குளத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க, ஒரு சிலர் அதனுள் ஆர்வ மிகுதியில் குதித்து நீச்சலடித்துக் குளித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES Twitter பதிவை கடந்து செல்ல, 6 Twitter பதிவின் முடிவு, 6 இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் கட்டுக்கடங்காமல் பெருங்கூட்டம் வரத் தொடங்கியது. இதையடுத்து போராட்டக்காரர்களை ஒழுங்குபடுத்தும் பணியை தாமாக முன்வந்து ஏற்ற மாணவர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் பிரதிநிதிகள், மாளிகையின் பிரதான வாயில் பகுதியை மூடினர். அவர்களே தங்களுக்குள்ளாக கூட்டத்தை ஒழுங்குபடுத்தத் தொடங்கினர். Twitter பதிவை கடந்து செல்ல, 7 Twitter பதிவின் முடிவு, 7 பகுதி, பகுதியாக போராட்டக்காரர்கள் உள்ளே வந்து ஜனாதிபதி வாழ்ந்த சொகுசான வாழ்க்கை அனுபவத்தையும் வசதிகளையும் பார்த்து விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இலங்கை ஜனாதிபதி மாளிகையின் தெருமுனை வரை கூட வழக்கமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அந்த பகுதி கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும். ஆனால், இலங்கையில் தீவிரமான மக்கள் போராட்டங்கள் காரணாக சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு அந்த சாலைகள் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதனால் போலீஸாரும் ராணுவத்தினரும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஒதுங்கிக் கொண்டனர். அவர்கள் மாளிகைக்கு வெளியேயும் அருகே இருந்த வீதிகளிலும் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். பெருங்கூட்டத்தால் ஏற்பட்ட களேபரங்களும் குதூகலமும் நிறைந்த சூழலில் தங்களுடைய ஜனாதிபதி இதுநாள் அனுபவித்து வந்த ஆடம்பர சொகுசு வாழ்வை சாமானியரான போராட்டக்குழுவில் இருந்த பொதுமக்களும் அனுபவித்தனர். அங்கிருந்து வெளியே சென்ற போராட்டக்காரர்கள் பலரும் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களிடம் வியப்புடன் விவரித்துச் செல்வதை பார்க்க முடிந்தது. சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்த நிலையில், போராட்டக்காரர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தனர். சிலர் பாட்டுப்பாடியும் நடனமாடியும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு எதிர்ப்பாளர் பியோனா சிர்மானா, "கோட்டாபய மற்றும் ரணிலை பதவியில் இருந்து அகற்றிய பிறகு, இலங்கைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கான நேரம் இது" என்று கூறினார்."இந்த இருவரும் முன்பே செல்லவில்லை. அதுதான் எனக்கு மிகவும் வருத்தம் தந்தது. அவர்கள் முன்பே சென்றிருந்தால் எந்த அழிவும் ஏற்பட்டிருக்காது," என்று அந்த பெண் கூறினார். https://www.bbc.com/tamil/sri-lanka-62109838
  12. 'ஐ' சைத் தொட்டுப் பார்க்க காசு கொடுத்த காலம் |CWC - Social Talk| Writer S.Ramakrishnan Part 3
  13. ஷின்சோ அபேவை சந்தேக நபர் துப்பாக்கியால் சுட என்ன காரணம்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடல் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டோக்யோவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் அவரது வடு உள்ளது. ஷின்சோ அபேயின் இறுதி நிகழ்வு, ஜூலை 12ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, வெள்ளிக்கிழமை காலையில், ஜப்பான் தெற்கில் அமைந்துள்ள நாரா நகரில், அந்நாட்டின் மேலவைக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அடையாளம் தெரியாத நபரால் ஷின்சோ அபே சுடப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவருடைய கொலை குறித்து விசாரணை நடத்தும் போலீசார், அதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர், "குறிப்பிட்ட அமைப்புக்கு" எதிரான வெறுப்புணர்வுடன் இருந்ததாக கூறுகின்றனர். அந்த அமைப்பில் ஷின்சோ அபே அங்கம் வகித்ததால், குற்றம்சாட்டப்பட்டுள்ள 41 வயதான டெட்சுயா யமாகாமி, அவரை சுட்டதாக நம்புவதாக போலீசார் தெரிவித்தனர். ஷின்சோ அபேயை சந்தேக நபர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: யார் இவர்? முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை: பாதுகாப்புக்கு பெயர்போன ஜப்பானில் குற்றம் நடந்தது எப்படி? மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் அஞ்சலிக்காக திரண்ட மக்கள் படக்குறிப்பு, கோப்புப்படம் ஷின்சோ அபேயின் உடலை தாங்கிய வாகனம் டோக்யோவில் உள்ள அவரது இல்லத்தை வந்தடைந்த நிலையில், ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் கறுப்பு உடையணிந்து வரிசையில் நின்று மரியாதை செலுத்தினர். ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெறும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி வகித்தவர் ஷின்சோ அபே. 67 வயதான அவர் கொல்லப்பட்டுள்ளது, துப்பாக்கி சார்ந்த குற்றங்கள் மிகவும் அரிதாக உள்ள ஜப்பான் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டார். ஜப்பானின் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்தவராவார். ஷின்சோ அபே கொலை குறித்து பேசிய அவர், தான் "வார்த்தைகள் அற்று இருப்பதாகவும்", ஜப்பானின் ஜனநாயகம் "வன்முறைக்கு எப்போதும் அடிபணியாது" என்றும் உறுதியளித்தார். சுட்டுவிட்டு தப்பியோடவில்லை ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்தும் அவரை கொலை செய்தவர் தனிநபரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாரா நகரில் உள்ள சாலையின் சந்திப்பு ஒன்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து அபே பேசிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அவர் பின்புறத்தில் இருந்து சுடப்பட்டார். அவரை சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர், இச்சம்பவம் நிகழ்வதற்கு முன்பு, ஷின்சோ அபேவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பெரிய துப்பாக்கியுடன் நின்றிருந்த அந்நபர் அபேவை சில மீட்டருக்கு நெருங்கி அவரை நோக்கி இருமுறை சுட்டதாக இக்கொலையை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஷின்சோ அபே உடனேயே கீழே விழுந்த நிலையில், இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். ஷின்சோ அபேயை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சிக்காத அந்நபரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அபேவை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உலோகம் மற்றும் மரக்கட்டையால் ஆனது என்றும் அது டேப் மூலம் சுற்றப்பட்டிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி மாளிகையை வரிசைகட்டி சுற்றிப்பார்க்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம் இலங்கையில் தணியாத பதற்றம், தொடரும் போராட்டம் - இன்றைய நிலவரம் எண்ணூரில் தொடர்கதையாகும் அனல்மின் நிலைய கழிவு மாசுபாடு - கொந்தளிக்கும் மீனவர்கள் மேலும் பிடிபட்ட நபரின் வீட்டிலிருந்து இதேபோன்ற இன்னும் சில நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டன. அபேயின் கழுத்தில் இரண்டு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தது, மேலும் இந்த தாக்குதலால் அவருடைய இதய செயல்பாடும் பாதிக்கப்பட்டது. தாக்குதலுக்குப்பின் சில நிமிடங்கள் அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும், பதிலளிக்கக்கூடியவராகவும் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால், சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நேரத்தில் அதுபோன்று எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உயிரை காப்பாற்ற சில மணிநேரங்கள் மருத்துவர்கள் முயற்சித்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் அவருடைய மரணம் அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சுட பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஜப்பானிய சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை முழுவதும் "We want democracy, not violence" ("எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும், வன்முறை அல்ல') என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. அதில் பலரும் இச்சம்பவத்திற்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜப்பானில் துப்பாக்கி வன்முறைகள் மிகவும் அரிதானது. ஜப்பானில் நாட்டுத் துப்பாக்கிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் அரசியல் வன்முறைகள் இதுவரை பெரும்பாலும் கேள்விப்படாத ஒன்றாகவே உள்ளது. ஜப்பானில் கடந்த 2014ஆம் ஆண்டில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் ஆறு என்றளவிலேயே இருந்தது, இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் துப்பாக்கி சார்ந்த கொலைகள் 33,599 ஆக இருந்தது. ஜப்பானில் ஒருவர் துப்பாக்கியை வாங்குவதற்கு கடுமையான தேர்வுகள் மற்றும் மனநல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதும், சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் ஏர் ரைபில்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சந்தேகத்துகிடமான நபர் க்ஷின்சோ அபேவுக்கு நெருக்கமாக நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஜப்பான் பிரதமராக முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் பதவியேற்றார் ஷின்சோ அபே. பின் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்த அவர், பின்னர் உடல்நிலை காரணமாக அப்பதவியிலிருந்து விலகினார். பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன் கடுமையான நிலைப்பாடுகளுக்காகவும் போருக்கு பிந்தைய ஜப்பானிய அரசியலமைப்பை திருத்த முயன்றதற்காகவும் இவர் அறியப்படுகிறார். அபே பிரதமராக இருந்த முதல் முறை அவரின் பொருளாதார கொள்கைகள் வளர்ச்சி பாதைக்கு நாட்டை அழைத்து சென்றன. அது 'அபேனோமிக்ஸ்' என்றும் அழைக்கப்பட்டது. அவருக்குப் பின் கட்சியில் அபேவுக்கு நெருக்கமான யோஷிடே சுகா பிரதமராக பதவியேற்றார், அவருக்குப் பின் ஃபுமியோ கிஷிடா பதவியேற்றார். பட மூலாதாரம்,ASAHI SHIMBUN/REUTERS 'வெறுக்கத்தக்க தாக்குதல்' உலகளவில் அறியப்பட்ட தலைவர்கள் பலரும் ஷின்சோ அபே கொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இதனை "வெறுக்கத்தக்க தாக்குதல்" என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமரை தொடர்புகொண்டு வருத்தத்தைப் பகிருந்துகொண்டார். மேலும், "இச்சம்பவம் ஜப்பானுக்கும் அபேயை அறிந்தவருக்கும் சோகமானது" என தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் இவ்வார இறுதிநாட்களில் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்றும் பைடன் உத்தரவிட்டுள்ளார். பிரேசிலில் மூன்று தினங்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் ஜேயர் போல்சனேரோ அறிவித்துள்ளார். மேலும் ஜப்பான் மக்களுக்கு தன் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, "ஷின்சோ அபே ஒரு உலகளாவிய அரசியல்வாதி" என தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் இத்தாக்குதலை "ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்" என தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சீனா மற்றும் தென் கொரிய சமூக ஊடகங்களில் இத்தாக்குதல் குறித்த மகிழ்ச்சியான கருத்துகளும் ஆதிக்கம் செலுத்தின. சீனாவும் தென் கொரியாவும் வரலாற்று ரீதியாக ஜப்பானுடன் சிக்கலான உறவுகளைக் கொண்டுள்ளன. ராணுவப் புத்திசாலித்தனத்திற்கு பெயர் பெற்ற அபே, தனது பதவிக் காலத்தில் இரு நாட்டு குடிமக்களாலும் வெறுக்கப்பட்டவராக இருந்தார். https://www.bbc.com/tamil/global-62104279
  14. அந்தக் குரலுக்கு உரியவர் அவர் தான், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசியது இத்தருணத்தில் பொருத்தமாக இருக்கிறது. அநேகமாக போர் முடிந்த பின் பேசியதாக இருக்கலாம்.
  15. நான்கு லட்சம் ரூபாய் மாத சம்பளத்தை வேண்டாம் என்றேன் |CWC - Social Talk| Writer S.Ramakrishnan Part 2 9.30 - 10.30 நிமிடங்கள் சொல்வது உண்மை தான்.
  16. என்னை ஆச்சரியப்படுத்திய ஆட்டோ டிரைவர்|Chai with Chithra - Social Talk| Writer S. Ramakrishnan Part 1
  17. இன்றைய நாளுக்கும் இந்த பாடல் வரிகளுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ?!
  18. பிரனிர்ஷா: இலங்கையின் சிங்கள இசை நிகழ்ச்சியில் முதல்முறையாக தமிழ் சிறுமி வெற்றி ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 ஜூலை 2022 இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். பதுளை மாவட்டம், பண்டாரவளை நகரில் வசிக்கும் 13 வயதான தியாகராஜா பிரனிர்ஷா என்ற சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இலங்கையில் பிரபல தனியார் சிங்கள தொலைக்காட்சி சேவையான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'வாய்ஸ் டீன்' இசை நிகழ்ச்சி போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். சுமார் 6 மாத காலமாக நடைபெற்ற இந்த போட்டியில், நூற்றுக்கணக்கான சிங்கள சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட ஒரே தமிழ் சிறுமி பிரனிர்ஷா. "குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறேன்" - ஓர் இலங்கை தாயின் கண்ணீர் கதை "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த யுபுன் அபேகோ தனது சாதனை பயணம் குறித்து, பிரனிர்ஷா, பிபிசி தமிழிடம் பேசினார். ''இந்த போட்டிக்கு முதல் முதலில் செல்லும் போது, எனக்கு வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. பங்குபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. வெற்றி பெற்றதன் பின்னர் மேடையில் இருக்கும் போதே, நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால், இதுவொரு சிங்கள தொலைக்காட்சி. சிங்கள மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. எனினும், நிறைய சிங்கள மக்கள் வாக்களித்திருந்தார்கள். சிங்கள மக்கள் தமிழ் மக்கள் இரண்டு பேரும் இணைந்து தான் எனக்கு வாக்களித்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது" என கூறினார். சிங்கள இசை நிகழ்ச்சி மேடையில் ஏன் பாட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்தது? இதுவொரு சர்வதேச போட்டி. இதில் அனைத்து மொழிகளிலும் பாட முடியும். பண்டாரவளை நகரிற்கும் ஆடிசனுக்கு வருகின்றார்கள் என கேள்விபட்டேன். சர்வதேச போட்டியொன்றில் பங்கு பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதுக்காகவே நான் போட்டியில் கலந்துக்கொண்டேன் என குறிப்பிட்டார். முதல் தடவையாக இந்த மேடையில் ஏறும் போது, உங்கள் மனதில் தோன்றியது என்ன? முதல் தடவையாக நான் அந்த மேடையில் ஏறும் போது, வித்தியாசமான ஒரு சுற்று. நடுவர்கள் மறுபுறம் திரும்பியிருப்பார்கள். இந்த முறைமை எனக்கு ரொம்பவே பிடிக்கும். இதில் நான் தெரிவு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. அதுலயும் போட்டியிட வேண்டும் என்ற கனவு மாத்திரமே இருந்தது. ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது." இந்த போட்டியில் திருப்பு முனையாக இருந்த சந்தர்ப்பம் எது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? நான் மூன்றாவது சுற்றில் பாடிய பாடலே திருப்பு முனையாக இருந்தது. மூன்றாவது சுற்றில் நான் சிங்கள பாடல் ஒன்றை பாடினேன். 'மகே ரட்டட தலதா" என்ற பாடலை பாடினேன். அந்த பாடலுக்கு நிறைய பேர் கமண்ட் பண்ணி இருந்தார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு தமிழ் சிறுமி, ஒரு சிங்கள பாடலை பாடும் போது, வித்தியாசமான உணர்வு இருந்தது என கூறினார்கள். இந்த பாடலே எனக்கு முழுமையான திருப்பு முனையாக அமைந்தது. நீங்கள் சிங்கள மொழி அறிந்தா இந்த இசை மேடைக்கு வந்தீர்கள்? ஆரம்பத்தில் எனக்கு சிங்கள வார்த்தைகள் மாத்திரமே தெரியும். அந்த வார்த்தைகளை எப்படி இணைத்து பேச வேண்டும் என எனக்கு தெரியாது. இந்த போட்டிக்கு வந்ததன் பிறகு தான் நான் சிங்களம் பேச கற்றுக்கொண்டேன். இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டு, 5 அல்லது 6 மாதம் இருக்கும். இந்த 5, 6 மாதங்களில் அங்குள்ளவர்களுடன் பேசும் போது, சிங்களம் கற்றுக்கொண்டேன் என கூறினார். பாடல்களில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது, அது உணர்வோடு வர வேண்டும். இந்த ஐந்து மாத காலப் பகுதியில் உச்சரிப்பு, உணர்வு அனைத்தையும் எப்படி பழகுனீர்கள்? பாடல்களை பாடும் போது, பாடல்களிலுள்ள வசனங்களுக்கான அர்த்தம் எனக்கு தெரியாது. அப்போது, பயிற்றுவிப்பாளர்களே எனக்கு சொல்லி கொடுத்தார்கள். இந்த பாடல் இந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது. இந்த பாடலுக்கான அர்த்தம் இது தான் என பயிற்றுவிப்பாளர்கள் கூறுவார்கள். ஒவ்வொன்றாக பயிற்றுவித்தார்கள். இந்த மேடையில் பெரும்பாலும் சிங்கள மக்களே இருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான சவால்களை நீங்கள் எதிர்நோக்கியிருந்தீர்கள்? எனக்கு நிறைய சந்தர்ப்பங்களில் சவால்கள் ஆரம்ப காலத்தில் இருந்தது. எனக்கு சிங்களம் பேச முடியாது. தொடர்பாடலை ஏற்படுத்த முடியாது. பயிற்றுவிப்பாளர்கள் சொல்லி கொடுக்கும் சில விடயங்களை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது. அங்குள்ளவர்கள் பேசுவதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது. நிறைய கஷ்டங்கள் இருந்தது. ஆனால், போக போக சிங்கள பாடல்கள் பாட சொல்லி, சிங்களம் பழகி, அதுக்கு பிறகு அவங்களோட வேலை செய்ய இலகுவாக இருந்தது. உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது லட்சியம். கட்டாயம் மருத்துவராகுவேன். சிறுவர்களுக்கான மருத்துவராக வேண்டும். அதோட சேர்த்து, இசையையும் தொடர வேண்டும் என்பது எனது ஆசை. எந்த வயதில் உங்களின் இசை பயணம் ஆரம்பமானது? நான் சின்ன வயதில் தேவாரம் பாடுவேன். பாடசாலை செல்வதற்கு முன்னரே நான் தேவாரம் பாடுவேன். அதை பார்த்து தான், பெற்றோர் என்னை வகுப்புக்களுக்கு சேர்க்க யோசித்தார்கள். வகுப்புக்களுக்கு சென்று படிபடியாக வந்தேன். இசையில் நான் இப்போது கர்நாட்டிக் படித்துக்கொண்டிருக்கின்றேன். அதை அப்படியே தொடர வேண்டும். இசையில் பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. மருத்துவரானாலும், இசையையும் தொடர்வேன். வாழ்க்கையில் நிறைய பாடல்களை பாட வேண்டும். நிறைய ஆல்பம் பாடல்களை பாட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. இலங்கையை பொருத்த வரை இசைத்துறையில் தமிழர்களுக்கு சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இலங்கை தமிழர்களுக்கான ஒரே களம் தென்னிந்திய களம். தென்னந்தியாவிற்கு செல்ல அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எனக்கு தெரியவில்லை அப்படி நடக்குமா என்று. அப்படி நடந்தால், ரொம்ப சந்தோஷமாக இருக்கும். தென்னிந்தியாவில் சந்தர்ப்பம் கிடைத்தால், செய்யலாமா? இல்லையா? என்பதை எதிர்காலத்தில் பார்க்க வேண்டும். அப்படி கிடைத்தால், ரொம்பவே சந்தோசம். 'சிங்களவர்களும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்' சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட இசை போட்டியில் வெற்றியீட்டிய தியாகராஜா பிரனிர்ஷாவிற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். ''தமிழ் இளைஞர் யுவதிகள் எப்படி சிங்கள மொழி மூலமான பாடல்களை பாடுவதோடு சிங்கள மொழியினை சரளமாக பேசுகிறார்களோ, அதேபோன்று சிங்கள இளைஞர் யுவதிகள் தமிழ் பாடல்களை பாடுவதன் மூலமாக மற்றும் தமிழ் மொழியினை பேசுவதன் மூலமாக இலங்கையர்களாகிய நாம் மத மொழி வேறுபாடுகளை மறந்து ஒரு உண்மையான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும் என நம்புகிறேன்." என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன், இலங்கையின் இசைத்துறை சார்ந்தோர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், தியாகராஜா பிரனிர்ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். https://www.bbc.com/tamil/arts-and-culture-62098521
  19. இலங்கை: சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMILA UDAGEDRA இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தீவிரம் ஆகியிருக்கிறது. கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததுடன், அந்த பகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னதாக, அவர்களை அந்த இடத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாரும் ராணுவத்தினரும் கடுமையாக முயன்றனர். பல கட்ட அடுக்கு தடுப்புகள் அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்ற போலீஸார், பிறகு தொடர்ச்சியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். அதன் காரணமாக சில நிமிடங்கள் தணிந்த போராட்டம் பிற்பகலில் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதனால் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸாரும், ராணுவத்தினரும் ஒதுங்கிக் கொண்டனர். இதற்கிடையே, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தலைநகர் கொழும்பில் திடீரென நேற்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் கடந்த சில நாட்களாக இலங்கையில் பதிவாகும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. பட மூலாதாரம்,AMILA UDAGEDARA மறைமுகமாக செய்ய முயற்சிக்க வேண்டாம் - மனித உரிமைகள் ஆணையம் இதேவேளை, இலங்கை போலீஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் சட்டவிரோதமானது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை இரவு அறிக்கை மூலம் தெரிவித்தது. அதில், "போலீஸ் தலைவரின் உத்தரவு மக்களின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான ஒன்று கூடும் உரிமையை பறிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. 'நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்ய முயற்சிக்காதீர்கள்' என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. "மக்களின் பேரணியைத் தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெற முடியாத நிலையில், சட்ட விரோதமான வழிகளில் பேரணியைத் தடுக்க அரசு முயற்சிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் எதிர்வினை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகமும் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சனிக்கிழமை, ஜூலை 9, கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, கூட்டங்களைக் கையாள்வதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், வன்முறையைத் தடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமை உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், "மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை அவதானிக்கவும் அது பற்றிய கருத்துக்களை வெளியிடவும் உரிமை உண்டு என்றும் பாதுகாப்புப் படையினருக்கு தெளிவாக அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,AMILA UDAGEDARA ஒரு பொது விதியாக, மக்கள் கூட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற மரபு உள்ளது. ஆனால் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், ராணுவ வீரர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு உட்பட்டு சட்ட அமலாக்கப் பணிகளைச் செய்யலாம். அப்படி பணியாற்றும்போது அவர்கள் சிவில் ஆளுகைக்கும் சிவில் சட்டங்களுக்கும் உட்பட்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 அமைதிவழி போராட்டம் மக்களின் உரிமை - ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்த நிலையில், அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசுப் படைகள் மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. #RightsUnderAttack என்ற ஹேஷ்டேக் என குறிப்பிட்டு அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்திற்கு செல்லும் குடிமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும்போது 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக்கூடாதவை', என்ன உடை அணிய வேண்டும், எதை எடுத்துச் செல்ல வேண்டும், கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பாளர்களின் உரிமைகள் என்ன போன்ற அறிவுறுத்தல்களை அந்த அறிக்கை தெளிவாகக் கொண்டிருக்கிறது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 https://www.bbc.com/tamil/sri-lanka-62106319
  20. இலங்கை நெருக்கடி: கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகள் என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. கோட்டாபயவின் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவரால் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என கூறியிருக்கிறார். அப்படியென்றால், நாட்டை தலைமையேற்று நடத்துவதில் யாருக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? ஏற்கெனவே நிதியில்லாமல், எரிபொருள் தீர்ந்து பெரும் சிக்கலில் இருக்கும் இலங்கையில் அடுத்த என்ன நடக்கப் போகிறது? கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அவரது அதிகாரபூர்வ மாளிகையில் இல்லை. அவரது அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அவரால் முழுமையாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. "இப்போதைக்கு அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பதவி விலகுவதுதான்" என்கிறார் இலங்கை அரசியல் நிபுணர் நிக்சன். கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் என்னவாகும்? இலங்கை அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர்தான் தற்காலிக ஜனாதிபதியாக செயல்படுவார். ஆனால் ஒரு மாதத்துக்குள்ளாக நாடாளுமன்றம் கூடி அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியில் தொடர முடியாது. தற்போதைய சூழலில் ரணில் தற்காலிக அதிபராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க ரணில் விக்கிரமிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்குமா? "வாய்ப்பில்லை" என்கிறார் நிக்சன். நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு அவர் மட்டும்தான் உறுப்பினர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அவருக்கு எதிராக களத்தில் இருக்கின்றன. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்கட்சிகள் கூறுகின்றன. இலங்கை நெருக்கடி: கோட்டாபய எங்கே? இதுவரை நடந்தது என்ன? இலங்கை: பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் - ரணில் விக்ரமசிங்க கோட்டாபய மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் - புகைப்பட தொகுப்பு ரணில் அதிபராக முடியவில்லை என்றால் என்ன நடக்கும்? அரசியல் சட்டப்படி பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் அதிபராக அறிவிக்கப்படலாம். தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபயவின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிர்கட்சிகள் ஆதரவளிப்பதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே அரசியல் சட்டப்படி அவருக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதிபராகலாம். ஆனால் அதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியம். எதிர்கட்சிகளின் திட்டம் என்ன? தங்களுக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தாங்களே அரசமைக்க முடியும் என்று சஜித் பிரேமதாஸவின் எஸ்ஜேபி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன. அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதையும் கோரியிருக்கின்றன. "தங்களில் ஒருவரே அதிபராகவும், பிரதமராகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்" என்கிறார் நிக்சன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஜித் பிரேமதாச கோட்டாபய பதவி விலக மறுத்தால் என்னவாகும்? "இது அரசியல் சிக்கலை ஏற்படுத்தும். அவர் பதவி விலக மறுத்தால் எதுவும் செய்ய இயலாது. அதே நேரத்தில் அவரது இல்லமும் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரால் செயல்படவும் முடியாது." என்கிறார் நிக்சன். ராணுவத்தைக் கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவதற்கான சாத்தியத்தையும் நிக்சன் மறுக்கவில்லை. அனைத்துக் கட்சி அரசு அமைய வாய்ப்பிருக்கிறதா? இதுவும் எதிர்கட்சிகளின் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் ஏற்கெனவே அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் செல்லவில்லை. தங்கள் தலைமையில்தான் அரசு அமைய வேண்டும் என்பதில் அவை தீவிரமாக இருக்கின்றன. தேர்தல் அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா? இப்போது தேர்தல் நடத்துவதற்கு அரசிடம் பணம் இல்லை. அதனால் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஜனாதிபதி மாறினால் பொருளாதார நெருக்கடியில் மாற்றம் வருமா? தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கே அரசியம் பணம் இல்லை. பல மருத்துவமனைகள் இப்போது நன்கொடையை நாடத் தொடங்கிவிட்டன. எரிபொருள் முற்றிலுமாகத் தீரப் போகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை செயல்படவில்லை. அதனால் யார் அதிபராக வந்தாலும் பொருளாதார நிலைமையில் "உடனடியாக மாற்றம் வர வாய்ப்பில்லை" என்று கூறுகிறார் நிக்சன். அதே நேரத்தில் அரசியல் நெருக்கடி நீடித்து வந்தால், ஐஎம்எஃப் உள்ளிட்ட நிதி அமைப்புகளிடம் இருந்து கிடைப்பது சிக்கலாகும் என்கிறார் நிக்சன். https://www.bbc.com/tamil/sri-lanka-62105420
  21. ஈலோன் மஸ்க்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியதன் காரணம் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக, அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தபின் நீண்ட காலமாக நடக்கும் கதையின் சமீபத்திய திருப்பம் இது. ட்விட்டர் ஸ்பேம்கள் மற்றும் போலி கணக்குகள் குறித்த போதுமான தகவல்களை அந்நிறுவனம் வழங்கத் தவறியதால் தான் இம்முடிவிலிருந்து பின்வாங்குவதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. பில்லியன் டாலர்களை இழக்கும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள் - ஈலோன் மஸ்க் கூறியது என்ன? ஈலோன் மஸ்க்குடன் உறவை முறித்துக் கொண்ட திருநங்கை மகள் "மொத்தமாக 4,400 கோடி டாலர் தருகிறேன்" - விலகி ஓடிய ட்விட்டரை ஈலோன் மஸ்க் கவர்ந்து இழுத்த கதை "ஈலோன் மஸ்க் உடன் ஒத்துக்கொள்ளப்பட்ட தொகை மற்றும் விதிமுறைகளுடன் ஒப்பந்தத்தை செயல்படுத்த ட்விட்டர் இயக்குனர் குழு உறுதிபூண்டுள்ளது," என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டேய்லர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது, ட்விட்டர் நிறுவனம் மற்றும் ஈலோன் மஸ்க் என இரு தரப்புக்கு இடையில் சாத்தியமான நீண்ட சட்டப் போராட்டம் ஏற்பட உள்ளதை குறிப்பதாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 100 கோடி ரூபாய் பிரேக் அப் கட்டணமும் (ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினால் செலுத்தப்படும் அபராதம்) அடங்கும். போலி கணக்குகள் குறித்த சர்ச்சை ட்விட்டர் உடனான இந்த ஒப்பந்தம் "தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக" மே மாதம் அறிவித்த மஸ்க், ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்த தரவுகளை அந்நிறுவனம் வழங்குவதற்காக தான் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். ட்விட்டர் மொத்த பயனாளிகளில் ஸ்பேம் மற்றும் பாட் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவானவையே என அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்ததற்கான ஆதாரத்தை ஈலோன் மஸ்க் கேட்டிருந்தார். ஈலோன் மஸ்க் கேட்டிருந்த இத்தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தர தவறிவிட்டதாக, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடிதத்தில், ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். "மஸ்க்கின் வலியுறுத்தல்களை ட்விட்டர் நிறுவனம் சில சமயங்களில் புறக்கணித்துவிட்டது. சிலசமயங்களில் அவற்றை நியாயமற்றதாக தோன்றும் காரணங்களுக்காக நிராகரித்துவிட்டது. சில சமயங்களில் முழுமையற்ற அல்லது பயன்படாத தகவல்களை கொடுக்கும்போது இணங்குவதாக கூறியுள்ளது" என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS ட்விட்டர் ஸ்பேம் கணக்குகள் பெரிதளவிலானோருக்கு தகவல்கள் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது, இவை ட்விட்டர் தளத்தை தவறாக கையாளும் வகையில் அமையப்பட்டது. சுமார் 10 லட்சம் ஸ்பேம் கணக்குகளை தினந்தோறும் நீக்கிவருவதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது. ட்விட்டரில் ஸ்பேம் அல்லது பாட் கணக்குகள் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதாக ஈலோன் மஸ்க் நம்புகிறார். ஒப்பந்தத்தில் இருந்து விலகும் மஸ்க்கின் அறிவிப்புக்குப் பின் ட்விட்டர் பங்குகள் 7 சதவீதம் சரிந்தது. அடுத்து என்ன நடக்கும்? "ஈலோன் மஸ்க் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த கட்டத்தில் அவர் பின்வாங்க முடியுமா என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. ட்விட்டர் தங்கள் ஒப்பந்தத்தை மீறியதாக மஸ்க் நிரூபிக்க வேண்டும். மேலும், ட்விட்டர் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், மஸ்க்கின் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்தும் தாக்கமும் ஒரு காரனமாக உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்ததிலிருந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது" என, பிபிசியின் வட அமெரிக்கா தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் எழுதிய பகுப்பாய்வில் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரராக அறியப்படும் மஸ்க், ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் நிறுவனம் தனது உரிமையின் கீழ் வந்ததும் ட்விட்டரின் விதிகளை தளர்த்துவதாக உறுதியளித்தார். ட்விட்டரில் சில கணக்குகளை முடக்குவது குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கை முடக்கியது உள்ளிட்டவற்றை நீண்ட காலமாக விமர்சித்துவந்தார். ட்விட்டர் நிறுவனம் பயனர்களுக்கு ட்வீட்களை எவ்வாறு வழங்குகிறது என்பதில் அதிக வெளிப்படைத்தன்மை வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார், இது தற்போது சிலரை விளம்பரப்படுத்தவும் பரந்த பார்வையாளர்களை வழங்கவும் அனுமதிக்கிறது. https://www.bbc.com/tamil/global-62104017
  22. இலங்கை நெருக்கடி: கோட்டாபய மாளிகைக்குள் நுழைந்த மக்கள் - போலீஸ் கண்ணீர் புகைகுண்டு வீச்சு 9 ஜூலை 2022, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அதிபர் கோட்டாபயவின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வளாகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். முன்னதாக அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர் இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் இல்லத்தின் பிரதான வாயில் மீது ஏறி இல்லத்துக்குள் நுழைந்தனர். ராணுவத்தினர் போராட்டம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தைக் கலைப்பதற்காக வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். பட மூலாதாரம்,SAJID NAZMI அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை காண முடிகிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. Facebook பதிவை கடந்து செல்ல, 1 தகவல் இல்லை மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. Facebook பதிவின் முடிவு, 1 நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்துவரும் காலி மைதானத்துக்கு வெளியேயும் ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். https://www.bbc.com/tamil/sri-lanka-62104386
  23. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை: பாதுகாப்பான நாட்டில் குற்றம் நடந்தது எப்படி? ரூபர்ட் விங்ஃபீல்ட் – ஹேய்ஸ் பிபிசி நியூஸ், நாரா 8 ஜூலை 2022, 11:16 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி வந்ததிலிருந்து, எனது நண்பர்கள் எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைதான் கேட்கின்றனர். இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஜப்பானில் எப்படி நடந்தது என்று? எனக்கும் அதே உணர்வுதான். இங்கு வாழ்பவராக நீங்கள் இருந்தால் மிக மோசமான குற்றங்கள் குறித்து எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்த விவரம் வெளியானபோது எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஷின்சோ அபே ஜப்பானின் முன்னாள் பிரதமர்தான், ஆனால் ஜப்பானின் புகழ் பெற்ற அரசியல் தலைவர் அவர். நீண்ட நாட்களுக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஜப்பானின் புகழ்பெற்ற அரசியல் தலைவராக திகழ்ந்தவர் அவர். YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 அப்படியிருக்கும்போது அபேவை யார் கொல்ல நினைத்திருப்பார்கள்? அதுவும் ஏன்? இதேபோன்றதொரு மோசமான அரசியல் வன்முறை குறித்து நினைவுகூர நான் விரும்புகிறேன். உடனே என் நினைவுக்கு வருவது 1986ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து பிரதமர் ஓலஃப் பால்மே சுடப்பட்ட நிகழ்வுதான். ஜப்பானில் இருப்பவர்கள், மோசமான வன்முறைகள் குறித்தோ அல்லது குற்றங்கள் குறித்தோ யோசிக்க வேண்டியதில்லை என்று சொன்னது மிகைப்படுத்தல் அல்ல. ஆம். ஜப்பானில்தான் புகழ்பெற்ற யாசுகா என்ற வன்முறை கும்பல் உள்ளது. ஆனால் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த தொடர்பும் ஏற்படாது. ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயலில் ஈடுபடும் யாசுகாவினர் கூட துப்பாக்கியை பயன்படுத்த யோசிப்பர். ஏனென்றால் சட்டவிரோதமாக நீங்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்காக நீங்கள் செலுத்தும் அபராதம் மிகப் பெரியதாக இருக்கும். மர்ம நபரால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் ஜப்பான் புதிய பிரதமர் யோஷீஹிடே சுகா யார்? - 10 முக்கிய தகவல்கள் ஜப்பானில் துப்பாக்கி வைத்திருப்பது என்பது மிக கடினம். துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றால், குற்றவியல் வழக்குகள் ஏதும் இருக்கக் கூடாது, கட்டாய பயிற்சி பெற்றிருக்க வேண்டும், மனநிலை சோதனையில் ஈடுப்படுத்தப்படுவீர்கள், மேலும் காவல்துறையினர் மற்றும் உங்கள் அக்கம்பக்கத்தினரிடம் எல்லாம் மிக தீவிரமான விசாரணைகள் நடைபெறும். அதேபோல துப்பாக்கி குற்றங்கள் இங்கு நடைபெறுவதும் இல்லை. ஒரு வருடத்திற்கு 10க்கும் குறைவான துப்பாக்கி தொடர்பான மரணங்களே இங்கு நடைபெறும். 2017ஆம் ஆண்டில் அது வெறும் மூன்றாக இருந்தது. சரி குற்றத்தில் ஈடுபட்டது யார்? அவருக்கு எங்கிருந்து துப்பாக்கி வந்திருக்கும்? அபேவை சுட்டதாக கைது செய்யப்பட்ட 41 வயது நபர், நாட்டின் முன்னாள் தற்காப்பு படை வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காப்புப் படை ராணுவத்திற்கு நிகரானது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷின்சோ அபேவைவை சுட்டுக்கொன்றவராக கருதப்படும் இந்த நபரை சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். சற்று உற்று நோக்கினால் அவர் கடற்படையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருந்துள்ளார். அதேபோல அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் வித்தியாசமாக உள்ளது. துப்பாக்கிச் சுடும் சம்பவம் நடைபெற்ற பின் பகிரப்பட்ட புகைப்படத்தில் துப்பாக்கி கீழே இருப்பதை பார்க்க முடிந்தது. அதில் அது வீட்டில் செய்யப்பட்ட துப்பாக்கியை போல உள்ளது. அது ஏதோ இணையதளத்தில் பார்த்து செய்யப்பட்ட துப்பாக்கியை போல இருந்தது. சரி. இது திட்டமிட்ட ஒரு அரசியல் தாக்குதலா? அல்லது புகழ்பெற்ற ஒரு நபரை சுட்டு தானும் பிரபலமாக வேண்டும் என்ற மோசமான ஆசையா? என்ன காரணம் என நமக்கு இதுவரை தெரியாது. ஜப்பானில் இதற்கு முன்பும் அரசியல் கொலைகள் நடந்துள்ளன. 1960ஆம் ஆண்டில் ஜப்பானின் சோஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்த இனேஜிரோ ஆசானுமா வலதுசாரி நபர் ஒருவரால் சாமுராய் வாலால் வயிற்றில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஜப்பானில் தீவிர வலதுசாரி நபர்கள் இன்றும் உள்ளனர். இருப்பினும் வலதுசாரி தேசியவாதியான அபே ஒரு தாக்குதல் இலக்காக இருக்க வாய்ப்பில்லை. கடந்த சில வருடங்களாக வேறு சில குற்றங்கள் இங்கு அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. தனிமையில் இருக்கும் ஒரு ஆண் பிறரிடம் வன்மத்தை வளர்த்து அதனால் ஏற்படும் குற்றம். 2019ஆம் ஆண்டு க்யூடூ என்னும் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோ அமைந்துள்ள கட்டடம் ஒன்றிற்கு ஒருவர் தீ வைத்ததில் 36 பேர் உயிரிழந்தனர். தனது வேலைகளை அந்த ஸ்டுடியோ திருடிவிட்டதால் அதன் மீது கோபமாக இருந்ததாகவும் எனவே அந்த குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஜப்பான் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதேபோன்று 2008ஆம் ஆண்டு மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், டோக்யோவின் அகிஹாபாரா மாவட்டத்தில் உள்ள கடைவீதியில் ட்ரக் ஒன்றை ஓட்டிச் சென்றார். பின் அங்கிருந்து வெளியேறி அங்குள்ளவர்களை கத்தியால் தாக்கினார். இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு முன்பு இணையத்தில், "அகிஹபாராவில் உள்ள மக்களை நான் கொல்லுவேன். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை, நான் அழகாக இல்லை என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறேன். நான் குப்பையைக் காட்டிலும் கேவலமாக மதிக்கப்படுகிறேன்" என்ற செய்தியை அந்த இளைஞர் பதிவிட்டிருந்தார். அபேவின் கொலை இதில் எந்த காரணத்திற்காக நடைபெற்றது என்று தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஜப்பானை நிச்சயம் மாற்றிவிடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஜப்பான் பாதுகாப்பான ஒரு நாடாக இருந்தாலும், இங்கு இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் தலைவர்கள் கடை வீதிகளில் உள்ள மக்களிடம் கைக் குலுக்கி சகஜமாக பேசுவார்கள். சாலைகளில் நின்று உரையாற்றுவார்கள். இதே காரணத்தால்தான் அபேவை துப்பாக்கிதாரியும் நெருங்கி தாக்க முடிந்தது. எனவே இன்றைய சம்பவத்திற்கு இந்த சூழ்நிலை நிச்சயமாக மாறிவிடும். https://www.bbc.com/tamil/global-62095013 கனடிய நண்பரின் தொலைபேசி இயங்கவில்லை என குழம்பி இருந்தேன். உங்கள் தகவலால் தெளிவு பெற்றேன். நன்றி கபிதன்.
  24. குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் புதுமை சிந்தனை மூலம் தங்களது வயல்களிலிருந்து இரட்டை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.