Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20094
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. புல்டோசர்கள்: கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் வாகனம் அவற்றை இடிக்கும் ஓர் ஆயுதமாக மாறியது எப்படி? கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட புல்டோசர்கள், வீடுகள், அலுவலகங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில், புல்டோசர்கள் சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தின் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழிக்க இந்தியாவின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் அரசு கைகளில் ஆயுதமாக மாறி விட்டதாக பலர் கூறுகின்றனர். இந்த வாகனங்கள் மற்ற மாநிலங்களை விட அரசியல் ரீதியான முக்கியமான மாநிலமான உத்தர பிரதேசத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்களது அத்தகைய நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பிரயாக்ராஜ் நகரில் (முன்னதாக அலகாபாத்) அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை அதிகாரிகள் இடித்தப்போது, அது சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்று கூறினார்கள். ஆனால், ஜாவேத்தின் குடும்பம் இதை மறுத்துவிட்டது. இது குறித்து விமர்சகர்கள், அந்த கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதற்கும், அந்த வீடு இடிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர். அரசுக்கு எதிராக அவர் குரல் எழுப்பியதால்தான் அவரது வீடு இடிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். வீடுகள் இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, காவல்துறை அவரைக் கைது செய்தது. பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபியைப் பற்றிக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக முஸ்லிம்கள் அங்கு நடத்திய வன்முறைப் போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபராக காவல்துறை குற்றம் சாட்டியது. முன்னதாக நூபுர் ஷர்மா பாஜக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் போராட்டக்காரர்கள் அவரைக் கைது செய்யக் கோரி போராட்டம் செய்தனர். "தாங்கள் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை" என்று பாஜக தலைவர்கள் தங்கள் செயலை ஆதரித்துப் பேசினர். ஆனால், இந்த வீடுகள் இடிக்கப்படும் சம்பவங்கள் இந்தியாவிலும், உலக அளவிலும் விமர்சிக்கப்பட்டுள்ளன. இது பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தியதுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த அதிகாரப்பூர்வமான நடவடிக்கைக்குப் பின்னால் மிகவும் மெல்லிய, மேலொட்டமான சட்டமே உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சட்டத்தின் வலிமை மீதே புல்டோசரை ஏற்றுகிறார்கள்," என்றும் அவர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மிகவும் அரிதான நடவடிக்கையாக, நாட்டின் தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகளும் செல்வாக்குமிக்க வழக்கறிஞர்களும் இந்த விவகாரம் குறித்துக் கடிதம் எழுதினார்கள். அதில், இந்த புல்டோசர்கள் பயன்பாடு, சட்டத்தின் விதிகளை ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு மட்டுப்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், முஸ்லிம் குடிமக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஓர் அழுத்தமான கட்டுரை எழுதினார். அதில் அவர், "புல்டோசருக்கும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நான் யார் நான் எந்த விஷயத்திற்காகத் துணை நிற்கிறேன் என்பதற்கும் சம்பந்தம் உள்ளது" என்று எழுதியுள்ளார். "பொதுவில் நான் என்ன கூறுகிறேன் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. என் நம்பிக்கைகள், என் சமூகம், என் இருப்பு, என் மதம் ஆகியவற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு. என் கருத்து வேறுபாட்டுக்கான குரலுக்கும் இது பொருந்தும். ஒரு புல்டோசர் என் வீட்டைத் தரைமட்டமாக்கும் போது, அதை இடிக்க முயல்வது, நான் கட்டிய கட்டடத்தை மட்டுமல்ல, பேசுவதற்கான எனது தைரியத்தையும்தான்." புல்டோசர்களின் பயன்பாடு குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் "அவற்றின் பயன்பாடு சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். பழிவாங்கும் வகையில் இருக்க முடியாது," என்று கூறியுள்ளது. புல்டோசர்கள் பற்றிய இந்த சர்ச்சை சமீபத்தில் வந்ததல்ல. ஒரு வீட்டை புல்டோசர் மூலம் தகர்ப்பது சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா? உத்தர பிரதேசத்தில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு: அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம் - 10 தகவல்கள் அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு - யார் இவர்? இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் உத்தர பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது, அங்கு ஒரு முக்கியமான காட்சியைக் கண்டேன். அப்போது உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுதேர்தலுக்கான பணியில் இருந்தார். (அவர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.) ஒரு பேரணியில், அவருடைய ஆதரவாளர்கள் குழு ஒன்று, சிறிய மஞ்சள் பொம்மை புல்டோசர்களை கொண்டு வந்தனர். அந்த பிளாஸ்டிக் புல்டோசர்களைக் காற்றில் அசைத்தவாறு, அவர்கள் தொலைக்காட்சி கேமராக்கள் முன், அந்த புல்டோசரை பாபா (யோகி ஆதித்யநாத்) திரும்பக் கொண்டு வருவார்," என்று ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர். "புல்டோசர் பாபா" என்பது ஆதித்யநாத்துக்கு உள்ளூர் பத்திரிகைகள் வழங்கிய பெயர். ஆனால் அவரது முக்கிய போட்டியாளரான அகிலேஷ் யாதவ் அதை ஒரு பேரணியில் பயன்படுத்தியதால், அந்த பெயர் ஆதித்யநாத்துடன் நிலைத்து போனது. இதை அகிலேஷ் யாதவ் ஏளனம் செய்யப் பயன்படுத்தினார். ஆனால் பாஜக அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது. ஏனெனில் அது அவரது வலிமையான பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தது," என்று மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் பிரதான் கூறுகிறார். மேலும், பல இடங்களில், ஆதித்யநாத்தின் தேர்தல் பேரணிகளில் புல்டோசர்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் வெற்றி பெற்ற பிறகு, அந்த இயந்திரங்கள் மாநில சட்டமன்றக் கட்டடத்தின் முன் கொண்டாட்டத்தின் அடையாளமாக அணிவகுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். எட்டு காவல்துறையினரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிரபல குற்றவாளி விகாஸ் துபே மற்றும் தாதா-அரசியல்வாதியான முக்தார் அன்சாரி ஆகிய இருவருக்கும் எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புல்டோசர்களைப் பயன்படுத்த ஆதித்யநாத் முதன்முறையாக உத்தரவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் அலோக் ஜோஷி கூறுகிறார். தேசிய தொலைக்காட்சிகளில், அவர்களுடைய சொத்துகள் இடிக்கப்படும் காணொளிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பட்டன. குற்றவாளிகளை எதிர்த்துக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த காரணத்திற்காக, மக்களிடையே அவருடைய அரசுக்கு வரவேற்பு கிடைத்தது. "ஆனால், எதிர்க்கட்சியையும் அரசை விமர்சிப்பவர்களையும், குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஓர் உத்தியாக இது பயன்படுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது," என்று ஜோஷி கூறுகிறார். சஹாரன்பூர் மற்றும் பிரயாக்ராஜ் பகுதிகளில் கட்டட இடிப்பு வேலைகள் நடப்பதற்கு முன், குற்றவாளிகளையும் மாஃபியாக்களையும் புல்டோசர்கள் கொண்டு தொடர்ந்து நொறுக்கப்படுவார்கள் என்று அவர் நடத்திய கூட்டத்தில் ஆதித்யநாத் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES திடமான அரசு நிர்வாகத்தின் அடையாளமாக இருந்த புல்டோசர்கள் என்பதிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை உறுதிப்படுத்தவும் நாட்டின் சட்டத்தை மீறி, இந்த அரசு புல்டோசர்களை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக மாற்றியுள்ளது என்று பிரதான் தெரிவிக்கிறார். "இப்படித்தான் உள்ளூர்வாசிகள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். இது எப்படி இருக்கிறது எனில், "நீ என் மீது ஒரு கல் எறிந்தால், நான் உன் வீட்டையே இடிப்பேன். உன் குடும்பத்திற்கு நான் பாடம் புகட்டுவேன்," என்பது போல் இருக்கிறது". "ஆனால், யாருடைய சொத்துக்கள் மீதும் புல்டோசரை பயன்படுத்துவதற்கு இந்த நாட்டின் சட்டத்தில் அனுமதி இல்லை. ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்தால், மொத்த குடும்பத்தையும் தூக்கிலிடுவீர்களா? ஆனால், இந்த அரசு தானே வழக்கறிஞராக, நீதிபதியாக, மரண தண்டனை விதிப்பவராகச் செயல்படுகிறது," என்கிறார். இந்து, முஸ்லிம் வெறுப்புணர்வை தூண்டுகிறதா புல்டோசர் அரசியல்? கள நிலவரம் முஸ்லிம்களை லத்தியால் தாக்கும் உ.பி போலீஸ் - இந்தியாவை உலுக்கிய வைரல் காணொளி முஸ்லிம் வெறுப்பால் இந்தியா வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? இந்த புல்டோசர்கள் பயன்பாடு உலகளவில் கவனம் பெற்றிருக்கலாம். ஆனால், ஆதித்யநாத்திற்கு இது பெரும் அரசியல் ஆதாயத்தைப் பெற்று தந்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோதியின் ஒப்புதலையும் பெற்றிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் அவர் அந்த மாநிலத்திற்கு வருகை தந்தபோது, "மாஃபியாக்கள் மீது புல்டோசர் பயன்படுத்தப்படும்போது, அது சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்கிறது. ஆனால், அதைக் கட்டியவர்களும் அந்த வலியை உணர்வார்கள்," என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார். பிரதமரின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மத்தியப் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் மத வன்முறைக்குப் பிறகு புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் சிறு வணிகங்களை அழிப்பதன் மூலம் அவர்கள் குறிவைக்கப்பட்டனர். "ஒருவர் குற்றம் செய்திருந்தாலும், அவர் தண்டனை பெற்ற பிறகும், ஒருவரின் வீட்டை இடிக்க வேண்டும் என்று எந்த நீதிமன்ற உத்தரவும் கூறவில்லை. அதிகாரிகள் புல்டோசரை அனுப்பும்போது, அது ஓர் அரசியல் செய்தியைத்தான் கூறுகிறது - எங்களுக்கு எதிராக யார் போராடினாலும், புல்டோசர் மூலம் தூக்கி எறியப்படுவார்கள் என்பதே அது," என்று ஜோஷி கூறுகிறார். https://www.bbc.com/tamil/india-61854366
  2. தந்தையர் தினம்: "அப்பாதான் எனக்குத் தோழி" - ஒரு தந்தை, மகளின் பாசக் கதை நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 18 ஜூன் 2022 மனைவி படுக்கையில் பல ஆண்டுகளாக முடங்கிருக்கிறார். மற்றொரு புறம் பதின்ம வயது மகள் கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டிய சூழல். ஓட்டுநர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த 55 வயதான இளங்கோவன், தனது மனைவியின் உடல் நலத்தைப் பேணுவதிலும், மகளின் எதிர் காலத்தைக் கவனிப்பதிலும் தனி ஒரு ஆளாக வாழ்க்கையை எதிர்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மனைவி இறந்துவிட, மகளுக்கு தாயுமாகவும் இருக்க வேண்டிய நிலைமை இளங்கோவனுக்கு ஏற்பட்டது. எதிர்காலம் இருண்டு போயிருந்தது. அந்தக் கடினமான தருணத்தை கடந்து தனது மகளுக்கு பேரன்பும், ஆதரவும் அளித்து வளர்த்திருக்கிறார் இளங்கோவன். "பெண்ணுக்கு அவளது அப்பா பாதுகாப்பாளராகவும், அம்மா ஒரு தோழியாகவும் இருக்கிறார். ஆனால் இவ்விரண்டையும் எனது அப்பா செய்தார்." என்கிறார் இளங்கோவனின் மகள் கிருத்திகா. புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவனின் மனைவி பானு. தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சிறு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரது 47 வயதில் காலமானார். பிரிட்டிஷ் வரலாற்றில் மறக்கப்பட்ட லண்டனின் இந்திய ஆயாக்கள் - இவர்கள் செய்தது என்ன? இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி தமிழ் மாணவி கலையரசி: யார் இவர்? இவர்களுடைய மகள் கிருத்திகாவுக்கு பதின்ம வயது நெருங்கியபோதே பானு நோய்வாய்ப்பட்டார். பதின்ம வயது முடியும் நேரத்தில் அவர் இறந்துவிட்டார். "பெண் குழந்தையை தந்தை தனியாக வளர்க்க வேண்டும் என்பது மிகவும் கடினமானது. ஒரு பெண் பிள்ளை 18 வயதில் இருக்கும் போதுதான் அம்மாவின் தேவைகள் அதிகமாக இருக்கும். அப்போதுதான் அம்மாவிடம் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால் அந்த சமயத்தில் என் அம்மா என்னுடன் இல்லை. அதுபோன்ற நேரத்தில் என் அப்பா அவருடைய கஷ்டங்கள் அனைத்தையும் அவருக்குள் வைத்துக்கொண்டு, என்னை அழகாகப் பார்த்துக்கொண்டார். அது அவரால் மட்டுமே முடியும்," என்கிறார் மகள் கிருத்திகா. பொறியியல் முதலாம் ஆண்டு முடித்தபோது கிருத்திகாவின் தாய் பானு இறந்துவிட்டார். அதன் பிறகு ஓட்டுநர் வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே கிருத்திகாவை படிக்க வைத்திருக்கிறார் இளங்கோவன். "நான் எனது மனைவி இருவருமே வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தை நிர்வகிக்கும் சூழலில்தான் எங்களது வாழ்க்கை இருந்தது. அவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியபோது, திடீரென ஒரு நாள் அவரால் நடக்க முடியாமல் போனது. இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருக்குச் சிறு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அவரது உடல் நிலையைச் சரி செய்ய அலோபதி தொடங்கி இயற்கை மருத்துவம் வரை அனைத்தையும் முயன்றோம். ஆனால் இந்நோயைக் குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அப்போது முதல் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக எனது மனைவி நடக்க முடியாமல் முடங்கி இருந்தார்," என்று தனது வாழ்க்கையின் கடினமான தருணங்களை நினைவுகூர்கிறார் இளங்கோவன். மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் சம்பாதிக்கும் ரூபாய் 15 ஆயிரம் சம்பாதிப்பதில், ரூபாய் 12 ஆயிரம் வரை மாதம் மருத்துவச் செலவிற்குப் போய்விடும் என்று கூறும் இளங்கோவன், தனது மகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறுகிறார். "எனது மனைவி உடல்நலம் முடியாமல் முடங்கிருந்த காரணத்தினால் அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால், நான் ஓட்டுநராக பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து எனது மனைவி மற்றும் மகள் இருவரையும் பார்த்துக்கொள்ளப் பொருளாதார சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டேன். அதனால் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓட்டுநர் வேலைக்கு அழைக்கும்போது சென்று வருவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சமாளித்து வந்தேன்." பொறியியல் படித்து முடித்த கிருத்திகா தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு நெடுங் காலமானது, அவ்வாறு அம்மாவின் தேவையை அறியும் போது அவருடைய வெற்றிடம் எனக்கு உணர தொடங்கியதாக கூறுகிறார் மகள் கிருத்திகா. "எனது அம்மா இல்லாத சூழ்நிலையில், அம்மாவின் கடமைகளை எனது அப்பாவே செய்ய வேண்டியிருந்தது. அதையும் முழுமையாகச் செய்தார். பொதுவாக ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் சிறிய வயதில் அம்மா தான் பிடிக்கும், அப்பா தான் பிடிக்கும் என்றிருப்பார்கள். ஆனால், அம்மா, அப்பா இருவருமே ஒரு பிள்ளையை வளர்ப்பதில் அவர்களுக்கான வேலையைச் செய்கின்றனர் என்பதை வளர்ந்த பிறகு தான் உணர்கிறோம். ஒரு பெண்ணிற்கு அவளது அப்பா எவ்வளவு பாதுகாப்பாளராக , அதே போன்று அம்மா ஒரு தோழியாக இருக்கிறார். ஆனால் இவ்விரண்டையும் எனது அப்பா செய்தார். அம்மா இல்லை என நான் உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக என்னை அவ்வளவு கவனிப்பாகப் பார்த்துக் கொண்டார்." பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டபோது அதை தாங்கி குடும்பத்தை வழிநடத்திய இளங்கோவன் இப்போது முழுநேரமாக எங்கும் வேலைக்குச் செல்லவில்லை. மாறாக பொருளாதாரச் சுமை முழுவதையுமே மகளே ஏற்றுக் கொண்டிருக்கிறார். "எனக்கும் அப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் எனது கஷ்டங்களை நேரம் கொடுத்துக் கேட்பார். சில விஷங்களை அப்பாவிடம் வெளிப்படையாகப் பேச முடியாது. அதை அம்மாவிடம் மட்டுமே சொல்ல முடியும். அந்த மாதிரியான சில தருணங்களிலும் அவர் எப்போதும் என்னுடன் இருந்திருக்கிறார். குறிப்பாக சில நேரங்களில் எனக்கு உடல் நிலை முடியாமல் இருந்த காலத்தில் மருத்துவமனை செல்லவேண்டும் என்றால் பொதுவாக அந்த வயதில் அம்மாவுடன் தான் செல்வார்கள். ஆனால் அந்த மதிரியான பல்வேறு சூழ்நிலையில் எனது அப்பா தான் கூட வருவார்." என்கிறார் கிருத்திகா. "இந்த மதிரியான தருணங்களில் அம்மாவின் வெற்றிடம் தெரியும். ஆனால் அதற்கிடையில் என்னை அழகாக எனது அப்பா பார்த்துக்கொண்டார். எனது கவலை, கஷ்டம் அனைத்திலும் உடனிருக்கும் அப்பா, இதுவரையிலும் ஒரு நாளும் அவரது கஷ்டத்தை என்னிடம் காட்டியதும், சொல்லியதும் இல்லை. என்னை ஒரு தேவதை போல்தான் என் அப்பா வைத்திருந்தார்" எனக் கூறுகிறார் கிருத்திகா. https://www.bbc.com/tamil/india-61852739
  3. முஸ்லிம்களை லத்தியால் தாக்கும் உ.பி போலீஸ் - இந்தியாவை உலுக்கிய வைரல் காணொளி ரஜினி வைத்தியநாதன் & தில்நவாஸ் பாஷா பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, போலீஸார் தாக்கும் காணொளியில் இடம்பெற்றவர்களில் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் லத்தியால் கடுமையாகத் தாக்கும் காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகியிருக்கிறது. அதை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து, அந்தக் கொடூரமான செயலை, அந்த ஆண்களுக்கு வழங்கப்பட்ட "பரிசு" என்று பாராட்டினார். "இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினர், அவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும்," என்றும் கூறுகின்றனர். "அவர் என் தம்பி. அவரை தொடர்ந்து கடுமையாக அடிக்கிறார்கள், அவர் வலியால் கத்துகிறார்," என்று ஸெபா, தனது தம்பி சயீஃபின் வேதனையான காணொளியை தன் கையிலிருக்கும் கைபேசியில் பார்த்தபடி கண்ணீருடன் உடைந்து, கைகள் நடுங்கக் கூறினார். உத்தர பிரதேச நகரமான சஹாரன்பூரில் உள்ள தனது வீட்டில் உறவினர்கள் ஆறுதல் கூறியபடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையே உட்கார்ந்திருந்த ஸெபா, "என்னால் இதைப் பார்க்கக்கூட முடியவில்லை. அவர் மிகவும் மோசமாகத் தாக்கப்படுகிறார்," என்று கூறுகிறார். ஒரு வீட்டை புல்டோசர் மூலம் தகர்ப்பது சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா? அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு - யார் இவர்? பிரதமர் நரேந்திர மோதியின் மௌனம் தற்செயலானது அல்ல: ஹமித் அன்சாரி பிபிசிக்கு பேட்டி ஸெபாவின் சகோதரர் உட்பட காவலில் உள்ள இஸ்லாமிய ஆண்களை இரண்டு காவலர்கள் அடிக்கும் துன்பகரமான காட்சிகளை அந்தக் காணொளி காட்டுகிறது. அதிகாரிகள் லத்திகளால் ஒவ்வோர் அடி அடிக்கும்போதும் அவர்கள் அலறும் சத்தம் காணொளியில் கேட்கிறது. அடி வாங்கும்போது, பச்சை நிற சட்டை அணிந்த ஒருவர் கைகளை மடக்கி பிரார்த்தனை செய்தார். வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள சயீஃப் சரணடைவதைப் போல் கைகளைத் தூக்குவதைக் காணலாம். "போராட்டங்களில் பங்கெடுக்கவே இல்லை" 24 வயதான சயீஃப், கடந்த வாரம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட டஜன் கணக்கான இஸ்லாமிய ஆண்களில் ஒருவர். ஆளும் இந்து தேசியவாத பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் முகமது நபி பற்றிய ஆவேசமான கருத்துகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்லாமிய நாடுகளின் கண்டனங்களுக்கு மத்தியில், பாஜக நூபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. மேலும், எந்த மதமாக இருப்பினும் அதை அவமதிப்பதை எதிர்ப்பதாகக் கூறியது. படக்குறிப்பு, ஸெபா, தனது தம்பி சயீஃபின் வேதனையான காணொளியை தன் கையிலிருக்கும் கைபேசியில் பார்த்தப்படி, கண்ணீருடன் உடைந்து, கைகள் நடுங்கப் பேசினார் சஹாரன்பூரில் நடந்த போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தன. நகரத்திலுள்ள மசூதியிலிருந்து அதற்கு அடுத்து இருந்த கடைகளைக் கடந்து மக்கள் கூட்டம் அணிவகுத்தது. பதற்றங்கள் அதிகரித்ததால், இந்தியாவின் பெரும்பான்மையான இந்துக்களுக்குச் சொந்தமான சில கடைகள் தாக்கப்பட்டன. மேலும், இரண்டு வணிகர்கள் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் தடியடி நடத்தினர். காவல்துறை ஆவணங்கள், சயீஃப் மற்றும் 30 பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் ஒரு பொது ஊழியரைத் தடுக்க தானாக முன்வந்து காயப்படுத்தியதாகவும் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் குற்றம் சாட்டுகிறது. அட்டை விற்று சராசரியான வாழ்க்கையை வாழும் சயீஃபின் குடும்பம், அவர் போராட்டங்களில் பங்கெடுக்கவே இருக்கவில்லை என்று கூறுகிறார்கள். படக்குறிப்பு, 24 வயதான சயீஃப், கடந்த வாரம் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட டஜன் கணக்கான இஸ்லாமிய ஆண்களில் ஒருவர் அவர் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி, மாலை 5 மணியளவில், நண்பருக்காக பேருந்து டிக்கெட் எடுக்க வீட்டிலிருந்து சென்றார். அப்போது, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சஹாரன்பூரில் இருக்கும் கோத்வாலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸெபா அங்கு அவரைச் சந்தித்தபோது, அவர் தன் சகோதரனின் உடலில் காயங்களைக் கண்டதாகவும் அவரால் உட்காரக்கூட முடியவில்லை என்றும் கூறினார். காவல்துறையின் மிருகத்தனத்தை தெளிவாகக் காட்டும் இந்தக் காணொளி, பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷலப் திரிபாதி, "கிளர்ச்சியாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்ட பரிசு" என்று குறிப்பிட்டு பகிர்ந்த பிறகு, வைரலானது. இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவரான திரிபாதி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகர். கட்சி நிர்வாகிகள், பாஜக அரசாங்கத்திலுள்ள எவரிடமிருந்தும் இதற்கு எந்தக் கண்டனமும் வரவில்லை. காவல்துறையின் அறிக்கை 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற சூழல் அதிகரித்து வருவதாகவும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து, நாட்டின் சிறுபான்மை இஸ்லாமியர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. சஹாரன்பூரில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர், அவர்களுடைய உறவினர்கள் போலீஸ் காவலில் தாக்கப்பட்டதாக அரை டஜன் இஸ்லாமிய குடும்பங்களின் சாட்சியங்களை பிபிசி சேகரித்துள்ளது. காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளிகளில் இருந்த அவர்களை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மற்ற காட்சிகளில் ஆண்களை வேறோர் இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வேனில் செல்வதைக் காணலாம். இந்தப் படத்தில் கோத்வாலி காவல் நிலையத்திற்கான அடையாளம் தெளிவாகத் தெரியும். படக்குறிப்பு, வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள சயீஃப் உட்பட இஸ்லாமியர்கள் சஹாரன்பூர் காவல்நிலையம் முன்பாக நிற்கின்றனர் காவல்துறையின் அறிக்கையும் காவல் நிலையத்தை மேற்கோள் காட்டியுள்ளது. இருந்தபோதிலும், உள்ளூர் காவல்துறையினர் இந்த சம்பவம் அங்கு நடக்கவில்லை என்று மறுத்தனர். "சஹாரன்பூரில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இரண்டு மூன்று காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஸ்லோ மோஷனில் ஒரு காணொளியைப் பார்த்தால், வேறு சில மாவட்டங்களின் பெயரைக் காணலாம்," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஆகாஷ் தோமர் பிபிசியிடம் கூறினார். காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து வருவதாகவும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். காணொளியில் காணப்பட்ட மற்ற ஆண்களின் குடும்பத்தினர், அவர்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்காகவும் அவர்களைப் பார்க்கவும் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஃபமிதாவின் 19 வயதான மகன் சுபான், கைது செய்யப்பட்ட தனது நண்பன் ஆசிஃப் என்ன ஆனார் என்பதைத் தெரிந்துகொள்ளச் சென்றபோது, அவரும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார். படக்குறிப்பு, கைது செய்யப்பட்டவர்கள் கொண்டு செல்லப்பட்ட கோத்வாலி காவல் நிலையம் வெளிர் மஞ்சள் நிற உடையில், ஒரு காவலர் தனது திசையில் ஒரு தடியால் அடிக்கும்போது சுபான் விழுவதைக் காணொளியில் பார்க்கலாம். வெள்ளிக்கிழமை, சுபான் போராட்டம் நடந்த பகுதியிலுள்ள குறிப்பிட்ட மசூதிக்குக் கூடச் செல்லவில்லை, அங்கு நடந்த போராட்டத்திலும் பங்கெடுக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள். அதுகுறித்துப் பேசியபோது, "என் மகன் இரக்கமின்றி தாக்கப்பட்டான்," என்று ஃபமிதா கதறி அழுதார். வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி 84 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் என கருதப்படும் சந்தேக நபர்களை மட்டுமே கைது செய்கிறோம் என்று காவல் கண்காணிப்பாளர் குமார் பிபிசியிடம் தெரிவித்தார். "நாங்கள் ஒருவரைக் கைது செய்யும்போது, முதலில் வன்முறை போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட காணொளியைக் காட்டுகிறோம். பிறகு தான் கைது செய்கிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் இவரது கூற்றை, போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சிலரிடமிருந்து கிடைத்த தகவல்களுடன் ஒப்பிடும்போது அதிகாரியின் விளக்கத்தில் முரண்பாடு காணப்படுகிறது. உருளும் புல்டோசர்கள் காவல் நிலையத்திலிருந்து நகரம் முழுவதும், சட்டத்தின் வலிமை வேறு வழிகளில் காட்டப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இஸ்லாமிய ஆண்களின் வீடுகளின் சில பகுதிகளை புல்டோசர்கள் இடித்துள்ளன. லட்சக்கணக்கான இந்தியர்கள் முறையான திட்டமிடல் அனுமதியின்றி தற்காலிக வீடுகளில் வாழ்கிறார்கள். ஆனால், இதை தண்டனைக்கான வழிமுறையாகப் பயன்படுத்துவது, பாஜகவின் பொதுவான வழிமுறைகளில் ஒன்றாகிவிட்டது. சமீபத்திய போராட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் உத்தரவுக்கு உயர்மட்ட அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டத்தை மீறுவோர் மீது புல்டோசர் நடவடிக்கை தொடரும் என்று ட்வீட் செய்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 கடந்த சனிக்கிழமை மதியம், முஸ்கானுடைய வீட்டின் முன் கேட்டை ஒருவர் இடிக்கத் தொடங்கினார். அங்கு வந்த காவல்துறையினர், முஸ்கானின் சகோதரரின் படத்தைக் காட்டி, அங்கு வசிக்கிறாரா என்று கேட்டனர். 17 வயதான இளைஞர் அதற்கு முந்தைய நாளில் கைது செய்யப்பட்டிருந்தார். "என் தந்தை அது தனது மகன் தான் என்பதை உறுதி செய்ததோடு, என்ன விஷயம் என்று கேட்டார். அவர்கள் பதிலளிக்காமல் புல்டோசரை பயன்படுத்தத் தொடங்கினார்கள்," என்று கூறினார் முஸ்கான். வெள்ளிக்கிழமையன்று வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக, கூட்டத்தினரிடையே முஸ்கானின் சகோதரர் உரை நிகழ்த்துவதாக ஒரு காணொளியை பிபிசிக்கு காட்டினார். முஸ்லிம் வெறுப்பால் இந்தியா வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? நூபுர் ஷர்மா விவகாரம்: கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியா; இஸ்லாமிய நாடுகளுடனான உறவில் பாதிப்பா? இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவைச் சேர விடாமல் பாகிஸ்தான் தடுத்த வரலாறு அதில் அவர் கூடியிருந்தவர்களிடம், "இந்த நாட்டு இஸ்லாமியர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இஸ்லாமியர் எழும்போதெல்லாம், கோபத்துடன் எழுந்தான் என்பதற்கு வரலாறு சாட்சி," என்று அவர் கூறுகிறார். "அவன் அழிவை ஏற்படுத்துபவன் இல்லை. இவை அனைத்துமே பொய்," என்று முஸ்கான் தனது சகோதரருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார். கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டதாக நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். "நாங்கள் விசாரித்தபோது, அவருடைய குடும்பம் உறவினர் ஒருவரின் அங்கீகரிக்கப்படாத வீட்டில் வசித்து வருவதைக் கண்டறிந்தோம். முனிசிபல் குழு போலீஸ் பாதுகாப்புடன் சென்று நடவடிக்கை எடுத்தது. கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவோருக்கு எதிராக சட்ட விரோதமாக ஏதும் நடந்தால், புல்டோசர் உருளும்," என்று பிபிசியிடம் கூறினார் மூத்த காவல்துறை அதிகாரி ராஜேஷ் குமார். புல்டோசர் நடவடிக்கை அனைத்தும் சட்டப்படி செய்யப்பட்டது, சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யப்படவில்லை என்று யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகரான நவ்நீஹ் சேகல் பிபிசியிடம் கூறினார். படக்குறிப்பு, முஸ்கான் மற்றும் அவருடைய 17 வயது சகோதரரின் பாதி இடிக்கப்பட்ட வீடு முன்னாள் நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் உட்பட இந்தியாவின் உயர்மட்ட சட்ட வல்லுநர்கள் குழு, இந்த சமீபத்திய போலீஸ் தடியடி மற்றும் புல்டோசர்களின் தேவையற்ற பயன்பாடு குறித்து நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அவர்களின் கடிதம், ஆதித்யநாத், "போராட்டக்காரர்களை மிருகத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் சித்ரவதை செய்ய" காவல்துறைக்கு தைரியம் அளித்ததாகக் குற்றம் சாட்டுகிறது. மேலும், இந்த சமீபத்திய நடவடிக்கைகள் "தேசத்தின் மனசாட்சியை உலுக்குவதாக" கூறுகிறது. மேலும், "ஆளும் நிர்வாகத்தின் இத்தகைய மிருகத்தனமான ஒடுக்குமுறை, சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் சீர்குலைப்பது, குடிமக்களின் உரிமைகளை மீறுவதாகும். மேலும், அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைக் கேலிக்கூத்தாக்குகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச உரிமைகள் குழுவான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்திய அரசாங்கம் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளையும் அடக்குகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது. "இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் துணிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து கொடூரமாக ஒடுக்குகிறது. சர்வதேச உரிமைகள் குழுவான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இந்திய அரசாங்கம் எந்த விதமான கருத்து வேறுபாடுகளையும் அடக்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது: "இந்திய அரசாங்கம் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தத் துணிந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, கொடூரமாக ஒடுக்குகிறது," என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா வாரியத்தின் தலைவர் ஆகர் படேல் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/india-61851223
  4. நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது? சே.பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். தொட்டில் குழந்தை திட்டம் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதன்முறையாக சேலத்தில் இதை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டன. தற்போதைய சூழலில் இந்த உயரிய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பது சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரும் பொதுவான விளக்கம். அண்மையில் உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு கோரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பூவா, தலையா சொல்லி கரு பாலினத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி மையங்கள் நம் குழந்தைகளுடன் நாமும் வளர்வோம் - மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு 'காதலுக்குக் கண்கள் இல்லை' - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரை 52 குழந்தைகள் குப்பையிலும் தெரு ஓரங்களிலும் மீட்கப்பட்டன. இவற்றில் நான்கு குழந்தைகள் நாய்களும் எலிகளும் கடித்து பரிதாபமாக உயிரிழந்தன. ஒருவேளை தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் திட்டம் மீண்டும் முழுவீச்சில் நடைமுறைக்கு வரப்படவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் முக்கிய இடங்களில் அரசின் தொட்டில்கள் ஆட வேண்டும். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலோரின் கோரிக்கையாக உள்ளது. "தொட்டில் குழந்தை திட்டத்தைத் தற்போது செயல்படுத்துவதற்கு முதலில் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்," என்கிறார் குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் முகமது. மேலும் இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் என்று ஒன்று இருப்பதை அரசு மறந்துவிட்டது. மக்களிடம் இதுகுறித்துப் பெரிதாக எந்தவொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத்துறை என்ற அமைப்பு இருப்பது பெரும்பாலான கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகளை வீதியில் வீசுவதற்கு முன்பு குழந்தைகளுக்கு என்றே தனியாக அரசுத்துறை இருப்பது தெரிந்திருந்தால் குழந்தையை வீதியில் வீசுவது தவிர்க்கப்பட்டிருக்கும். சரியான முறையில் மக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதைச் சரியாகச் செயல்படுத்தினால் நிச்சயமாக குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும்," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தையை வளர்க்க, பாதுகாக்க இயலாது என உணரும் எவருடைய குடும்பமும் தயங்காது 1098 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவித்து, "குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது கூறினார் குழந்தைகள் நலத்துறையின் முன்னாள் உறுப்பினர் குளோரி ஆனி. மேலும், "குழந்தையை வீதியில் வீசி எறியாமல் அரசிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தை பாதுகாப்பான ஓர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு, அரசு முறைப்படி தத்துக் கொடுக்கப்பட்டு, நல்லதொரு குடும்ப சூழ்நிலையில் வளரும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியமாக காவல்நிலையங்களில் பதாகைகள் வைக்க வழிவகைகளைச் செய்தல் வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அநீதியின் விளைவாக, குழந்தைகளை ஈனுமளவுக்கு நிலைமை கைமீறிச் செல்லும் பட்சத்தில், அவர்களுக்கு சட்ட நெறிமுறைகளுடன் கூடிய மறுவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நலத்துறையுடன் அணுகி காவல்துறை ஆவண செய்ய வேண்டும். மேலும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற பொது இடங்களிலும், 'குழந்தைகளை வளர்க்க இயலாது எனில் 1098 என்ற எண் வழியாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தை அணுகி குழந்தைகளை ஒப்படையுங்கள், ரகசியம் பேணப்படும். சட்டத்திற்குப் புறம்பாகத் தத்துக் கொடுத்தல், குழந்தை திருமணம் ஆகியவை தண்டனைக்கு உரிய குற்றம், போக்சோ (POCSO) வழக்கு பதியப்படும், போக்சோ வழக்கில் பிணை கிடையாது', என்ற வாசகங்கள் அடங்கிய பலகை/பதாகைகள் , போஸ்டர்கள் பொருத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும்," என்றார். "1992 ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டம் வந்தபோது இருந்த குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை விடத் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளன. சமூக நலத் துறையாக இருந்தது தற்போது சமூகப் பாதுகாப்புத்துறையாக மாறியுள்ளது. இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரும் 'தோழமை' அமைப்பின் இயக்குநருமான தேவநேயன். மேலும் இவர், "குழந்தைகள் இந்த தேசத்தின் சொத்து. இவர்கள் எளிதில் நாசமாக்கப்படலாம். 18 வயதுக்குட்பட்ட சிறுமி அறியாத பழக்கத்தாலோ பாலியல் வல்லுறவினாலோ குழந்தையை ஈன்றால், அதற்குத் தாய் குற்றவாளி இல்லை. அந்தக் குழந்தையும் குற்றவாளி இல்லை. 1991இல் தொட்டில் குழந்தை திட்டத்தில் நிறைய குழந்தைகள் வீசப்பட்டன. தற்போது விழிப்புணர்வு காரணமாக இந்த எண்ணிகை வெகுவாகக் குறைந்துள்ளது. முறை தவறிய உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் துாக்கி வீசப்படும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதற்கு அமைப்பு இருப்பது பெற்றோர்கள் சமுதாயத்திற்கு முழுமையாகத் தெரியவில்லை என்பது ஒரு குறையாக உள்ளது. இதுபோல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய் மற்றும் குழந்தையை சமூகம் தவறாகப் பேசக்கூடாது. குழந்தையைத் துாக்கி எறியும் தாய்மார்கள் கர்ப்பகால சிகிச்சை பெற்றார்களா என்பதைக் கண்டறிய வேண்டும். இதுபோன்ற குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தாய்மார்கள் பாதிக்கப்பட்டிருந்தால் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சமீபகாலமாக இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதுபோன்ற இளம் பெண்களுக்கு வாழ்கை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை எனப் பல துறைகளுக்குத் தொடர்புள்ளது. படக்குறிப்பு, "இப்போதுள்ள பிரச்னை என்னவென்று பார்த்தால் பல்நோக்குத் துறை அமைப்புகளும் ஒருங்கிணைந்து வேலை செய்யாமல் இருப்பதுதான் பிரச்னை," என்கிறார் தேவநேயன் ஆனால் மேற்கண்ட இந்த பல்நோக்கு துறைகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதா என்று பார்த்தால் கிடையாது. மேற்கண்ட துறைகள் அனைத்தும் ஒன்றிணைந்து சீராகச் செயல்பட்டால் மட்டுமே குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் முன்பே தடுத்து நிறுத்த முடியும்," என்றார். சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். மேலும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கிய நாள் முதல், தற்போது வரை தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறார்கள். அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் உள்ள தொட்டில்களில் குழந்தைகளை விட்டுச் செல்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை உசிலம்பட்டிக்குச் சிறப்பு கவனம் செலுத்தி, அங்கிருக்கும் மக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற இந்த துயரச் சம்பவத்தை அடுத்து இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். சமூக நலத்துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை,காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குழந்தைகளுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார். https://www.bbc.com/tamil/india-61846282
  5. காளான் வளர்ப்பு: வீட்டுக்குள் இருந்தபடி வியாபாரம் செய்யும் பெண்கள் பிரீத்தி குப்தா & பென் மோரிஸ் பிபிசி மும்பை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANIRBAN NANDY படக்குறிப்பு, ஃபுல்ரிடா எக்காவுக்கு காளான் வளர்ப்பு பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய உதவியது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்திலுள்ள சிலிகுரி அருகே வசிக்கும் ஃபுல்ரிடா எக்கா, தான் ஒரு புதிய வருமான ஆதாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அவருடைய கணவர் இறந்துவிட்டார். அவருடைய பருவாகல் வேலையான தேயிலை பறிக்கும் வேலை, குடும்பத்தை நடத்தப் போதுமான வருமானத்தை வழங்கவில்லை. பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடியபோது அவருக்கு காளான் வளர்க்கும் தொழில் கிடைத்தது. இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் உதவியோடு அவர் அந்தத் தொழிலைத் தொடங்கினார். இப்போது அவர் தினமும் இரண்டு அல்லது மூன்று பைகள் காளான்களை விற்கிறார். இதன்மூலம் அவர் ஒரு மாதத்திற்குச் சுமார் ஏழாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். வெள்ளை மலர் காளான்கள் கூரையில் தொங்கும் பெரிய பைகளில் வளர்க்கப்படுகின்றன. ஃபுல்ரிடா எக்கா, வழக்கமாகத் தனது வீட்டில் 10 காளான்களை வைத்திருப்பார். அவை ஒரு மாதத்திற்குச் சுமார் 48 பைகளுக்கான காளான்களை உற்பத்தி செய்கின்றன. அவர், "அவை வளர்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், இதன்மூலம் இப்போது நானும் என் குடும்பமும் வெறும் வயிறோடு தூங்க மாட்டோம் என்று எனக்குத் தெரியும்," என்கிறார். காளான் வளர்ப்பு, எக்காவின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சிலர் காளான் வளர்ப்பு இந்திய விவசாயத் துறையில் பெரியளவு பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். சென்னையில் சொந்த வீடு வாங்க இது சரியான தருணமா? பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்? ஆப்கானிஸ்தான் நெருக்கடி: வீசிய ரொட்டித் துண்டுகளை உண்டு வாழும் மக்கள் 20 ஆண்டுகள் உழைப்பில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் 100 வகையான காளான்களை அடையாளம் கண்ட ரூஃப் ஹம்சா போடா, "காளான் உற்பத்தியில் சிறந்த நாடாக மாறுவதற்குத் தேவையான அனைத்து கூறுகளும் இந்தியாவிடம் உள்ளது," என்கிறார். "பெரியளவிலான காட்டு காளான் பன்மையை இந்தியா கொண்டுள்ளது. நிறைய உரம் தயாரிக்கும் பொருட்கள், மலிவான ஊதியத்தோடு கூடிய உழைப்பு மற்றும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளின் ஆதரவு ஆகியவை இங்குள்ளன," என்று அவர் விளக்குகிறார். உணவுப் பழக்கம் இத்தகைய சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், உலகின் காளான் உற்பத்தியில் இந்தியா வெறும் 2% மட்டுமே உள்ளது. சீனா தான் 75% பங்களிக்கிறது. ரூஃப் ஹம்சா போடாவின் கூற்றுப்படி, பிரச்னையின் ஒரு பகுதி தேசியளவிலான உணவுப் பழக்கம். இந்தியாவில் பலர் காளான்களைச் சாப்பிட விரும்புவதில்லை. அவை விசித்திரமானவை, கொடியவை என்று நினைக்கிறார்கள். "காட்டு காளான்களை, அவற்றின் உண்ணக்கூடிய தன்மையைப் பொறுத்து அடையாளம் காண்பதில் அதிகமான ஆய்வுகள் செய்யப்படவில்லை. காளான்கள் எவ்வளவு நன்மை பயக்கும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, காளான் சாகுபடி எவ்வளவு மலிவானது என்பனவற்றைப் பிரபலப்படுத்துவதில் தடைகள் உள்ளன," என்று அவர் கூறுகிறார். ஆகவே, இதில் புதிய வாய்ப்புகளைப் பெற விரும்பும் தொழில்முனைவோருக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, லீனா தாமஸ் மற்றும் அவருடைய மகன் ஜித்து இருவரும், ஜித்துவின் படுக்கையறையில் காளான்களை வளர்க்கும் பரிசோதனையைச் செய்தார்கள். பட மூலாதாரம்,LIVE LIFE HAPPILY படக்குறிப்பு, கூரைகளில் கட்டித் தொடங்கவிட்ட பைகளில் வளரும் காளான்கள் இணையத்தில் நெகிழி பாட்டில்களில் காளான்கள் வளர்க்கப்படுவதைப் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்தால் தான் இந்த முயற்சியைத் தொடங்கினேன் என்கிறார் ஜித்து. ஆரம்பத்தில் கிடைத்த வெற்றி அவரை காளான் வளர்ப்பு குறித்துப் படிக்கத் தூண்டியது. எனவே அவருடைய பொழுதுபோக்கு விரைவில் ஒரு செழிப்பான வணிகமாக மாறியது. இப்போது, கேரளாவைச் சேர்ந்த இந்தத் தாயும் மகனும் தொழில்முனைவோராக லீனாஸ் காளான் என்ற நிறுவனத்தின் பெயரில், ஒரு நாளைக்கு 100 கிலோ காளான்களை உற்பத்தி செய்யக்கூடிய 2000 காளான் படுக்கைகளை வைத்துள்ளனர். "காளான்கள் வளர்வதற்கு மிகக் குறுகிய காலமே எடுத்துக் கொள்வதைப் போன்ற பல நன்மைகள் காளான் வளர்ப்பில் உள்ளன. ஆனால், இதற்காக இது எளிதான பணி என்று அர்த்தமில்லை. இது உடையக்கூடியது, மிகவும் உணர்திறனுடையது. வெப்பநிலையில் சிறிய மாற்றமோ பூச்சி பிடித்தலோ காளான்களை முழுவதுமாக அழித்துவிடும்," என்று விளக்குகிறார் லீனா. இந்த நிறுவனத்தின் பசுமை இல்லங்கள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை காளான்களுக்கு உகந்த அளவில் வைத்திருக்க, ஈரமான பட்டைகள் மீது வெளிப்புறக் காற்றை இழுக்க விசிறிகளைப் பயன்படுத்துகின்றன. இதில், கரிம வாயுவின் அளவும் கண்காணிக்கப்படுகிறது. "இது, இவ்வளவு முயற்சிகளை எடுப்பதற்கு உரிய மதிப்புள்ள ஒன்றுதான். இவற்றுக்குக் கிடைக்கும் நல்ல விலை, காளான்களை லாபகரமானதாக்குகிறது. புதிதாக அறுவடை செய்யப்பட்ட காளான்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் அதே நாளில் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கப்படுகின்றன," என்கிறார் ஜித்து. பட மூலாதாரம்,LEENA'S MUSHROOM FARM படக்குறிப்பு, லீனா தாமஸ் மற்றும் அவருடைய மகன் ஜித்து ஒரு சிறிய முயற்சியாக காளான் வளர்க்கத் தொடங்கினார்கள் கல்விக்கு உதவிய காளான் பரிமலா ரமேஷ் உத்கவே இதில் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தார். காளான் மற்றும் பூஞ்சை வளர்ப்பு குறித்த ஆழமான அறிவை வளர்த்துக்கொள்ள நுண்ணுயிரியல் படித்தார். காளான்களை வளர்ப்பதோடு, 2019-இல் நிறுவப்பட்ட பயோபிரிட் என்ற அவருடைய தொழிலை, காளான் பொடிகள் மற்றும் சுகாதார சேர்ப்புகளைத் தயாரிப்பதற்காக காளான்களை உலர்த்துகிறது. இவர், இதில் வெற்றி கிடைத்தாலும் கூட, காளான் வளர்ப்பது எளிதல்ல என்கிறார். "மக்கள் காளான்களை வேகமாகப் பணம் சம்பாதிப்பதற்கான தொழிலாகப் பார்க்கிறார்கள். ஆனால், அது தொழில்நுட்ப திறன்களோடு இணைக்கப்பட வேண்டும்," என்கிறார் பரிமலா ரமேஷ் உத்கவே. உத்கவேயின் கூற்றுப்படி, பல தொடக்க நிலை காளான் தொழில்கள் தோல்வியடைகின்றன. ஐஐடி-காரக்பூரின் கிராமப்புற வளர்ச்சி ஆய்வாளர் அனிர்பன் நேண்டி மற்றும் அவருடைய மனைவி பவுலமி சாக்கி நேண்டி, காளான் சந்தையில் சிறிய தொழில்முனைவோருக்கு நிறைய இடம் இருப்பதாகக் கருதுகிறார்கள். பட மூலாதாரம்,LEENA'S MUSHROOM FARM லிவ் லைஃப் ஹேப்பில் என்ற அவர்களுடைய அரசு சாரா அமைப்பு, மேற்கு வங்கத்தில் உள்ள ஃபுல்ரிடா எக்கா உட்பட 8,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு லாப நோக்கில் காளான்களைச் சொந்தமாக வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுத்தது. "இந்தப் பெண்கள் ஏழைகள், நிலமோ சரியான வாழ்வாதாரமோ இல்லாதவர்கள்," என்கிறார் அனிர்பன் நேண்டி. கிராமப்புறங்களில் உள்ள பல பெண்கள் கணவரை இழந்த பிறகு, தேயிலை பறிப்பதில் போதுமான பணம் சம்பாதிக்க முடியாமல் பொருளாதார நெருக்கடியில் உள்ளார்கள். "காளான்களை வளர்க்கக் கற்றுக்கொள்வது, ஒரு சாத்தியமான, சமாளிக்கக்கூடிய வேலை. பெண்கள் தங்கள் வீட்டின் ஒரு மூலையில், பகுதி நேர வேலையாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ, நிலத்திற்கான தேவையின்றி வளர்க்கலாம்," என்று அவர் கூறுகிறார். அதோடு, நேண்டி தம்பதியின் கூற்றுப்படி, வாடிக்கையாளர்களிடையே தேவையும் நிறைய உள்ளது. "குறிப்பாக டார்ஜிலிங் போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில், விரைவான வருமானம் கிடைப்பதை இது உறுதி செய்கிறது," என்று அனிர்பன் நேண்டி விளக்குகிறார். காளான் மூலம் கிடைக்கும் அந்தக் கூடுதல் வருமான உண்மையாகவே வாழ்வை மாற்றும். "இந்தப் பெண்கள் தங்கள் வீட்டில் பேரம் பேசும் ஆற்றலைப் பெற்று, முடிவெடுப்பவர்களாக மாறிவிட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு பெண் தன் மகளுக்குச் சிறு வயதிலேயே திருமனம் செய்து வைக்க மறுத்துவிட்டார். ஏனெனில், காளான் வளர்ப்பின் மூலம் தனது மகளின் கல்விக்கு அவரால் செலவு செய்ய முடிந்தது," என்கிறார் அனிர்பன் நேண்டியின் மனைவி பவுலமி சாக்கி நேண்டி. https://www.bbc.com/tamil/india-61847280
  6. கக்கன் பிறந்தநாள்: தமிழக அரசியல் களத்தில் அவரின் பங்களிப்பு என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 18 ஜூன் 2020 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கக்கன் தோளில் கை போட்டபடி காமராஜர் இந்திய அரசியல் அமைப்பு அவையின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என சேவையாற்றிய பூ. கக்கனின் பிறந்த நாள் இன்று. தமிழக அரசியல் களத்தில் கக்கனின் பங்களிப்பு என்ன? அரசியலில் பல பதவிகளை வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களில் கக்கனும் ஒருவர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தும்பைப் பட்டி கிராமத்தில் பூசாரிக் கக்கன் - குப்பி தம்பதிக்கு 1909ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி முதலாவது மகனாகப் பிறந்தார் கக்கன். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். பள்ளிக் கல்வியை மேலூர் தொடக்கப்பள்ளி, திருமங்கலம் பி.கே.என். நாடார் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்த அவர், எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை. இதற்குப் பிறகு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான அ. வைத்தியநாதரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது. படக்குறிப்பு, மீனாட்சியம்மன் கோயில் நுழைவின்போது அ. வைத்தியநாதருடன் கக்கன் கக்கனை வழிநடத்திய வைத்தியநாதர் மதுரையில் உருவாக்கப்பட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் பணிகளில் கக்கனை ஈடுபடுத்தினார் வைத்தியநாதர். கிராமங்களில் இரவுப் பள்ளிகளைத் துவங்குவது, அவற்றுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, மேற்பார்வை பார்ப்பது ஆகியவையே இவரது ஆரம்ப காலப் பணிகளாக இருந்தன. மேலூரில் துவங்கி, சிவகங்கை வரை அனைத்து ஒடுக்கப்பட்டோர் கிராமங்களிலும் இரவுப் பள்ளிகளைத் துவங்க உதவினார் கக்கன். 1932ல் சிறாவயலில் பொதுவுடமைச் சிந்தனையாளர் பா. ஜீவானந்தம் தலைமையில் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த சொர்ணம் பாரதியை சீர்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார் கக்கன். 1934ல் மதுரைக்கு வந்த மகாத்மா காந்தியைச் சந்தித்த கக்கன், சேவாசங்கப் பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். 1939ல் காங்கிரசில் இணைந்த கக்கன், அ. வைத்தியநாதரின் கோவில் நுழைவுப் போராட்டத்தில் துணை நின்றார். 1938ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் தலைவர் அ. வைத்தியநாதர், அந்தச் சங்கத்தின் செயலர் கோபலஸ்வாமி ஆகியோருடன் ஆலம்பட்டி ஸ்வாமி முருகானந்தம், கக்கன், சேவாலய ஊழியர் முத்து, மதிச்சயம் சின்னய்யா, விராட்டிபத்து பூவலிங்கம் ஆகிய ஐந்து பட்டியலினத்தவரும் விருதுநகர் கவுன்சிலர் சண்முகானந்த நாடாரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து, வரலாற்றில் இடம் பிடித்தனர். பெரியார் எந்த அளவு வட இந்திய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்? யார் இந்த அண்ணா? தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஏன் இவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறார்? அ. வைத்தியநாதரை கிட்டத்தட்ட தனது வளர்ப்புத் தந்தையைப் போலவே கருதினார் கக்கன். 1955ல் அவர் உயிரிழந்தபோது, அவரது மகன்களைப் போல தானும் தலையை மழித்துக்கொண்டார். 1941-42ல் பட்டியலின மாணவர்களுக்காக மேலூரில் கக்கன் துவங்கிய தங்கும் விடுதி, அவர் மறைவுக்குப் பிறகும் பல ஆண்டுகள் இயங்கிவந்தது. மதுரை மண்ணில் வெற்றிப் பெற்ற கக்கன் இதற்குப் பிறகு தொடர்ச்சியாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கக்கன், சிறைக்குச் செல்ல நேரிட்டது. அலிப்பூர் சிறையில் 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார் கக்கன். கட்சியிலும் அவருக்குப் பொறுப்புகள் தேடிவந்தன. இந்தியாவின் விடுதலை நெருங்கியபோது, 1946 ஜனவரியில் அமைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டசபையின் உறுப்பினராகப் பதவியேற்றார் கக்கன். இந்தியா குடியரசு ஆன பிறகு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் கக்கன். 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன், வெற்றிபெற்று பொதுப் பணித்துறை அமைச்சரானார். அதற்குப் பிறகு 1962ல் சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கக்கன், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். கக்கன் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் அதில் பலர் இறந்ததும் கக்கனின் பொது வாழ்வில் மிகப் பெரிய விமர்சனத்திற்குரிய நிகழ்வாக அமைந்ததது. இந்த நிகழ்வு குறித்து குடும்பத்தினரிடம் ஏதாவது கக்கன் பகிர்ந்துகொண்டிருக்கிறாரா? "நான் அப்போது பதின்ம வயதுச் சிறுவன். என்னிடம் ஏதும் அவர் சொன்னதில்லை. ஆனால், ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. அப்போது நடந்துகொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எனக்குப் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. பதினான்கு வயதுச் சிறுவனான நானும் சில இடங்களில் போராட்டத்தில் போய் நின்றேன். இது ஏதோ ஒரு பத்திரிகையில் சிறிய செய்தியாக வந்துவிட்டது. இதைப் பார்த்த அப்பா, வீட்டிற்கு வந்தவுடன் அவர் உதை, உதையென உதைத்துவிட்டார். இப்போதும் அதை மறக்க முடியாது" என்கிறார் சத்யநாதன். ப.சிங்காரம்: ‘போரும், வாழ்வும்’ - கடல் தாண்டிய தமிழ்ச் சமூகத்தின் பெரும் கலைஞன் #தமிழர்_பெருமை படிக்க எளிய வகையில் அனந்தரங்கம் பிள்ளை டைரி குறிப்புகள் இதற்குப் பிறகு 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டாலும் தி.மு.க. வேட்பாளர் ஓ.பி. ராமனிடம் தோல்வியடைந்தார் கக்கன். அ. வைத்தியநாதருக்குப் பிறகு, காமராஜரையே தலைவராக ஏற்றுக்கொண்ட கக்கன், கடைசிவரை அவரது தலைமையின் கீழேயே செயல்பட்டார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரசாகவும் இந்திரா காங்கிரசாகவும் பிரிந்தபோது, கக்கன் ஸ்தாபன காங்கிரசிலேயே இருந்தார். இவர் யார் தெரியுமா? - கக்கனுக்காக கோபித்து கொண்ட எம்.ஜி.ஆர் கக்கனின் வாழ்வில் மிகவும் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம், அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, மதுரை அரசு மருத்துவமனையில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு, முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் தலையீட்டால், நல்ல வார்டிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம். இது குறித்து அவரது மகன் சத்யநாதனிடம் கேட்டபோது, "அப்பாவுக்கு நீண்டகாலமாகவே பார்க்கின்சன் நோய் இருந்துவந்தது. அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று வருவார். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், அரசு மருத்துவமனையில் சி வார்டில் இடம் கிடைக்கும். அதாவது ஒரு அறையில் எட்டு கட்டில்கள் இருக்கும். அதுதான் சி - வார்ட். அப்படித்தான் ஒரு முறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரைச் சந்திப்பதற்காக அங்கே வந்தார். உடன் காளிமுத்துவும் வந்தார். அவர் முதல்வரிடம், கக்கனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதைப் பற்றிச் சொன்னார். அதைக் கேட்ட முதல்வர் அவரையும் சந்தித்துவிட்டுப் போகலாம் என்றார். அப்படிச் சந்திக்கச் சென்றபோது அவர் சி வார்டில் ஒரு கட்டிலில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார். உடனடியாக டீனை அழைத்த முதல்வர், இவர் யார் தெரியுமா, இந்திய அரசியல் சாஸன அவையில் இடம்பெற்றிருந்தவர். இப்படி செய்கிறீர்களே என்று கோபித்துக்கொண்டார். உடனடியாக ஏ வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்" என நினைவுகூர்கிறார் கக்கனின் மகன் டாக்டர் பி.கே. சத்யநாதன். கக்கன் - சொர்ணம் பாரதி தம்பதிக்கு பத்மநாதன், பாக்கியநாதன், கஸ்தூரி பாய், காசி விஸ்வநாதன், சத்தியநாதன், நடராஜ மூர்த்தி என 6 குழந்தைகள். மூத்தவர் பத்மநாதன் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக இருந்தார். காசி விஸ்வநாதன் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றினார். பாக்கியநாதன் சென்னை சிம்சனில் பணியாற்றினார். டாக்டர் சத்யநாதன் ஆலந்தூரில் மருத்துவ அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றுள்ளார். கக்கன் போராட்டம், சிறை என்று இருந்த காலத்தில் சொர்ணம் பாரதியின் வருவாயிலேயே குடும்பம் நகர்ந்தது. படக்குறிப்பு, கக்கனின் மகன் டாக்டர் பி.கே. சத்யநாதன் "பரிசுப் பொருட்களைக்கூட வாங்க மறுத்தவர் கக்கன்" "மிகவும் நேர்மையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய அடிப்படையான குணங்கள். அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், எங்கே சாப்பிடுவது என்பதில்கூட மிகக் கவனமாக இருந்தார். யாராவது பரிசுப் பொருட்களைக் கொடுத்தால், அவற்றை ஏற்க மாட்டார். ஒருவரிடம் ஏதாவது பரிசுப் பொருட்களை வாங்கிவிட்டால், பிறகு அவருக்குப் பதிலுக்கு ஏதாவது செய்தாக வேண்டியிருக்கும். அமைச்சராக அப்படிச் செய்வது சரியாக இருக்காது என்று சொல்வார்" என நினைவுகூர்கிறார் சத்யநாதன். பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு நீர்த்தேக்கங்களைக் கட்டியதன் பின்னணியில் கக்கனின் பங்களிப்பு இருந்தது. மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதிலும் பெரும் பங்குவகித்தார் கக்கன். 1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார் கக்கன். அதற்குப் பிறகு மெல்ல மெல்ல பொது வாழ்க்கையிலிருந்து விலகினார். 1981ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். https://www.bbc.com/tamil/india-53089262
  7. 2 கிழமை பாடசாலை, அரசு அலுவலகங்கள் பூட்டு. எரிபொருள் விநியோகம் சீராகும் வரை. காசு கட்டி லைசன்ஸ் எடுத்தால் விபத்துகள் ஏற்படும் தானே!
  8. எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள் - 400 மீட்டருக்கும் கீழாக முகாமை மாற்றும் நேபாளம் நவீன் சிங் கட்கா பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எவெரெஸ்ட் மலைச்சிகரத்தை ஏற வருபவர்கள் ஓய்வெடுக்க ஆரம்பநிலை மலையேற்ற இடமான அடிவார முகாம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை இடமாற்றம் செய்ய நேபாளம் தயாராகி வருகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் மனித செயல்பாடுகள் ஆகியவற்றால் இந்த இடம் பாதுகாப்பற்றதாகி வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. வசந்த காலத்தில் எவரெஸ்ட் மலை ஏறக்கூடிய சுமார் 1,500 பேர் வரை பயன்படுத்தும் விதமான இந்த பேஸ் கேம்ப், வேகமாக உருகி வரும் கும்பு பனிமலைக்கு அருகில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து தற்போது இருப்பதை விட குறைவான உயரத்தில் ஒரு புதிய மாற்று இடத்தில் இந்த 'பேஸ் கேம்ப்' அமைக்கப்படும் என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். உருகும் பனி நீரானது பனிமலையின் நிலைத்தன்மையை உருக்குலைக்கிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் என்றால், முகாம்களில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே விரிசல்கள் ஏற்படுகின்றன என்று மலையேற்ற வீரர்கள் தெரிவிக்கின்றனர். விளம்பரம் எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போக வாய்ப்பு' பனி உருகுவதால் எவரெஸ்ட் சிகரத்தில் தென்படும் சடலங்கள் அண்டார்டிகாவில் அபூர்வ பனிப்பாறை - நாசா புகைப்படம் இது குறித்து நேபாள சுற்றுலாத்துறை இயக்குநரான `தாரநாத் அதிகாரி` பிபிசியிடம் பேசும்போது, "மாற்று இடத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக பங்குதாரர்கள் அனைவரிடமும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,PRAKASH MATHEMA படக்குறிப்பு, எவரெஸ்ட் அடிவார முகாம் "மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ளும் விவகாரம் தான் இது. அதுபோக மலையேறும் வணிகத்தின் நிலைத்தன்மைக்கும் இது இன்றியமையாததாகி விட்டது." முகாம் தற்போது 5,364 மீட்டர் உயரத்தில் உள்ளது. புதிய முகாம் இதிலிருந்து 200 மீ முதல் 400 மீ வரையிலான தூரத்துக்கு குறைவான பகுதியில் இருக்கும் என்று அதிகாரி கூறினார். எவரெஸ்ட் பகுதியில் மலையேறுவதை எளிதாக்குவதற்கும் கண்காணிப்பதற்கும் நேபாள அரசாங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இமயமலை பகுதியில் இருக்கும் ஏராளமான பனிமலைகளில் ஒன்றான கும்பு பனிமலை புவி வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 2018 இல் லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அடிவார முகாமுக்கு அருகில் உள்ள பனிமலைப்பகுதி ஆண்டுக்கு 1 மீ என்ற விகிதத்தில் உருகி வருவதாகத் தெரிய வந்தது. பனிமலையின் பெரும்பகுதி பாறைக் குப்பைகளால் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கிடையில் வெளியே தெரியும் பனிப்பகுதிகளும் உள்ளன. இந்த பனிப்பகுதிகள் உருகுவதால் பனிப்பாறை சீர்குலைகிறது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஸ்காட் வாட்சன் பிபிசியிடம் கூறினார். அப்படி பனிப்பகுதிகள் உருகும்போது, மேலே இருக்கும் பாறைக்கழிவுகளான சிறு சிறு பாறைகள் உருண்டு கீழே விழுவதன் மூலம் நீர்நிலைகளும் உருவாகின்றன. பட மூலாதாரம்,WORLD VLOG CHALLENGE பனிப்பாறைகளின் மேற்பரப்பில் அதிகரிக்கும் இதுபோன்ற பாறை விழும் நிகழ்வுகளும், அதிகரித்து வரும் உருகிய நீர் அளவும் பேராபத்தாகவே பார்க்கப்படுகிறது. மேலும், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 9.5மில்லியன் கனமீட்டர் நீரை இந்த பனிப்பாறைகள் இழக்கின்றன என்றும் ஆய்வாளர் வாட்சன் தெரிவிக்கிறார். உறங்கும்போது விரிசல்கள்: பேஸ் கேம்ப்புக்கு இடையே செல்லும் ஒரு நீர் பாதையானது மெல்ல, மெல்ல விரிவடைந்து கொண்டே வருகிறது என்று நேபாள அதிகாரிகளும் மலையேறிகளும் சொல்கின்றனர். அதுபோலவே மேற்பரப்பில் பிளவுகள் ஏற்படுவதும் கூட, முன்பை விட தற்போது அதிகமாக நடைபெறுகின்றன என்றும் தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில், "அதிர்ச்சியூட்டும் விதமாக, நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம் தரையில் விரிசல்கள் ஏற்படுவதைப் பார்க்கிறோம்" என்கிறார் அடிவார முகாமில் தங்கியிருந்த நேபாள ராணுவ அதிகாரியான கர்னல் கிஷோர் அதிகாரி. வசந்த காலத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தூய்மைப் பிரசாரத்துக்கு தலைமை தாங்கியபோது இவர் அடிவார முகாமில் தங்கியிருந்தார். "நிலத்தில் ஏற்படும் விரிசல்கள் வேகமாக பெரிதாகிக்கொண்டிருந்தன. நாங்கள் உள்ளே விழுந்திருக்கக்கூடும். இந்த உறைய வைக்கும் அனுபவம் எங்கள் பலருக்கும் மறுநாள் காலையில் கிடைத்தது' என்கிறார் சாகர்மாதா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழுவின் அடிவார முகாம் மேலாளர் ஷெரிங் என்சிங் ஷெர்பா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எவரெஸ்ட் பனிப்பாறைகள் நகர்கிற, விழுகிற பெரும் சப்தங்களும் கூட அடிக்கடி கேட்கின்றன. ஒரு சம தளமான இடம் உருவில் பெருத்து உயர்வதற்கு முன்பெல்லாம் இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும். ஆனால், தற்போது ஒவ்வொரு வாரமும் நடக்கிறது. அத்துடன் அதிகமான மக்கள் இங்கு இருப்பது கூட பிரச்னைக்கு கூடுதல் காரணமாக மாறுகிறது. குறிப்பாக பேஸ் கேம்ப்பில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 4,000 லிட்டர் சிறுநீர் கழிக்கப்படுகிறது. மேலும், சமையலுக்காக பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களால் உருவாகும் வெப்பமும் பனிப்பாறை உருகுவதில் பங்கு வகிக்கிறது. இந்த நிலையிலும், தற்போது இருக்கும் அடிவார முகாம் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குப் பயன்படலாம் என்று தெரிவிக்கிறார் ஷெர்பா. ஆனால், 2024ஆம் ஆண்டுக்குள் இந்த இடமாற்றம் நடந்தாக வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாங்கள் அடிவார முகாமில் சூழலியல் மற்றும் தொழில்நுட்ப ரிதியீலான ஆய்வுகளை செய்தோம். ஆனால், இடமாற்றம் செய்யும் முன்பாக இங்கிருக்கும் உள்ளூர் மக்களிடன் கலாசாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் நேபாள சுற்றுலா துறை இயக்குநர். https://www.bbc.com/tamil/global-61842651
  9. திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் - பின்னணி என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FERNANDO தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போராட்டம் நடப்பது ஏன்? இது குறித்து அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். இதன்படி, இலங்கைத் தமிழர்கள் 104 பேர் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனீசியா உட்பட வெளி நாட்டினர் என மொத்தம் 145 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். சிறப்பு முகாமிற்குள் சமைத்து உண்ணும் வசதி, செல்போன் பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு தினசரி உணவுப் படியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி கடவுச் சீட்டு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர் “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை” – தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்து, குடும்பத்தினருடன் வாழ வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்களில் பலர் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி என பல வடிவங்களில் அடிக்கடி போராட்டங்களை நடத்துகிறார்கள். மீண்டும் போராட்டம் பட மூலாதாரம்,EPYSTON இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த மே மாதம் 20ஆம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். இலங்கைத் தமிழர்கள் டிளச்சன், கபிலன், எப்சிபான், தினேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினால், உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, மேலும் 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர்கள் 9 பேரும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாம், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், சிறப்பு முகாமில் உள்ள மற்ற இலங்கைத் தமிழர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதையடுத்து, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மகேந்திரன், மயூரதன் ஆகிய இருவரும் தற்போது, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் 60 பேர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகள் என்ன ? பட மூலாதாரம்,FERNANDO போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெர்ணாண்டோ பிபிசி தமிழிடம் கூறுகையில், 'விசா காலம் முடிந்து தங்கியிருந்ததாகவும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாகவும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கைது செய்யப்பட்டேன். வழக்கு முடிந்து 3 மாதங்களாகியும் என்னை விடுதலை செய்யவில்லை. சிறப்பு முகாமில் இருக்கும் காலத்தை வழக்கின் தண்டனைக் காலமாக கருத வேண்டும். வழக்கு முடிந்தவர்களை விடுதலை செய்து, வழக்கமான முகாம், வெளிப்பதிவு, இலங்கைக்கு என அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம்.''என்றார். மேலும், ''பலர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு முடிந்து ஆண்டுக் கணக்கில் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களை நடத்தி வந்தாலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. உயிருக்கு ஆபத்த நிலை ஏற்பட்ட பிறகே மருத்துவ வசதி கூட கிடைக்கிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு எங்களுக்கு உதவ வேண்டும்,'' என்றார். 'மனித உரிமை மீறல்' - இலங்கைத் தமிழர் பட மூலாதாரம்,MAHENDRAN அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், '' கடந்த 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டேன். என் மீதான வழக்கு முடிந்தும் விடுதலை செய்யவில்லை. இதனால் 8 ஆண்டுகளாக சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறப்பு முகாமிலேயே அடைத்து வைத்துள்ளனர். உறவினர், குடும்பத்தினரை காண முடியாமல் தவித்து வருகிறேன். அதிகாரிகளே நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள். மனித உரிமை மீறலை செய்கிறார்கள். பட மூலாதாரம்,FERNANDO பல முறை அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதேயில்லை. சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆகையால்தான் மீண்டும் மீண்டும் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,''என்றார். மேலும், "தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு பொய் என்று நான் நிருபித்துள்ளேன். இதனால், என்னை பழிவாங்க வேண்டும் என்று, பொய்யான காரணங்களை சொல்லி என்னை சிறப்பு முகாமிலேயே முடக்கி வைத்துள்ளனர். எட்டாண்டுகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு என்ன இழப்பீடு கொடுக்கப்போகிறார்கள்? என் இளமையே தொலைந்து போனாலும், பல்லாயிரம் மரக் கன்றுகளை வளர்த்து விநியோகித்து வருகிறேன். அவைகளாவது சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்,'' என்கிறார் மகேந்திரன். சீமான் வலியுறுத்தல் ''சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வதை கூடமாக உள்ள சிறப்பு முகாம்களை மூட வேண்டும். காவல் துறையின் க்யூ பிரிவை கலைக்க வேண்டும். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் '' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அதிகாரிகள் தரும் விளக்கம் இது குறித்து தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ''திருச்சியில் உள்ளது இலங்கைத் தமிழர்களுக்கான சிறப்பு முகாம் அல்ல. குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு, பிணையில் இருக்கும் வெளிநாட்டினரை தங்க வைத்துள்ள முகாம். இதில், இலங்கை மட்டுமின்றி பிற நாட்டினரும் உள்ளனர். பிணையில் வெளிவரும் வெளிநாட்டினர் தப்பிச் சென்று விடுவதால், இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தவறான தகவல்களை சொல்கிறார்கள். யாரையும் பொய் வழக்கில் கைது செய்யவில்லை. ஒரு வழக்கு முடிந்திருந்தாலும் வேறு வழக்கு முடியாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். வழக்கு முடிந்த சிலரை விடுதலை செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன,'' என்றார். "இந்த நெருக்கடியை முன்பே தடுத்திருக்கலாம்" - என்ன சொல்ல வருகிறது இலங்கை மத்திய வங்கி? பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் - அதிகாரிகள் கூறுவது என்ன? இது குறித்து அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''தமிழ்நாட்டில் மொத்தம் 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 58,325 பேர் தற்போது உள்ளனர். ஆனால், திருச்சி சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமே உள்ளனர். மறுவாழ்வு முகாம்களில் இருந்து, குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, கிட்டத்தட்ட 30 பேர் மட்டுமே சிறப்பு முகாமில் உள்ளனர். மற்றவர்கள் வெளிப்பதிவு மற்றும் சட்டவிரோதமாக வந்த போது கைது செய்யப்பட்டவர்கள். சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து உள்துறையும் மாவட்ட ஆட்சியரும்தான் முடிவு செய்ய முடியும்,'' என்றார். https://www.bbc.com/tamil/india-61843432
  10. டீசல் விலை ஏற்றம், தட்டுப்பாடு வேலை செய்த வாகனங்கள் எல்லாம் பறந்திட்டுது. இப்ப 100 மீற்றர் காப்பற் போட்டிருந்தால் 500 மீற்றருக்கு இடையில போடவில்லை. மானிப்பாய் நகர் பகுதிகளிலும், வேறு பல இடங்களிலும் வீதி அகலிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பில்ல போல.
  11. 20 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யாது குண்டுங் குழியுமாக இருந்த AB17 வீதி அம்போனு விட்டாச்சு. இனி எத்தனை வருடங்கள் ஆகுமோ?
  12. எல் சால்வடோர்: பிட்காயின் மூலம் அன்றாட தேவைகளை வாங்கும் உலகின் முதல் நாடு ஜோ டைடி பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பிட்காயின் மூலம் இந்த நாட்டில் எதையும் வாங்கலாம் நொறுக்குத்தீனிகள் முதல் பெட் ரோல்,டீசல் உட்பட வீடுகள் வரை என அனைத்தையும் எல் சால்வடோரில் நீங்கள் பிட்காயின்கள் மூலம் வாங்க முடியும். எல் சாண்டே கடற்கரை நகரம் சுமார் 3,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை பெற்று பிட்காயின் பீச் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்த அரசு எப்போது, எந்தப் பணத்தைக் கொண்டு பிட்காயின்களை வாங்கினார்கள் என்பதே எங்களுக்குத் தெரியாது என்று தெரிவிக்கிறார் பொருளியல் அறிஞர் டாட்டியானா. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் மதிப்பு கடந்த வாரங்களில் தொடந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த பலரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த வரிசையில், மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 மாதங்களுக்கு முன்பு, மில்லியன் கணக்கிலான அமெரிக்க டாலர்களை பிட்காயினில் முதலீடு செய்து, பிட்காயின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாகவும் மாற்றிய நாடான எல் சால்வடோர், தற்போது அன்றாட செலவுகளைக் கூட பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. நொறுக்குத்தீனிகள் முதல் பெட் ரோல்,டீசல் உட்பட வீடுகள் வரை என அனைத்தையும் எல் சால்வடோரில் நீங்கள் பிட்காயின்கள் மூலம் வாங்க முடியும். கூகுள் பே, பேடிஎம் என டிஜிட்டல் பணம் மூலம், இந்தியாவின் தெருக்களில் கிடைக்கும் மிகச்சிறு பொருட்களைக் கூட எப்படி வாங்க முடிகிறதோ அதுபோல கிரிப்டோகரன்சி மூலம் எல் சால்வடோரில் பொருட்களை வாங்க முடியும். கிரிப்டோகரன்சி என்றால் என்ன? கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது? இந்தியாவுக்கு தனி கிரிப்டோ கரன்சி: அரசின் அடுத்த அதிரடி என்ன? 2008ஆம் ஆண்டுவாக்கில், கிரிப்டோகரன்சி குறித்து இணையதளங்கள் பேசத்தொடங்கிய காலகட்டத்தை இப்போது நினைத்துப்பார்த்தால் இந்த பிட்காயின் பரிவர்த்தனைகள் எவ்வளவு தூரம் வந்திருக்கின்றன என்பது தெரிகிறது. கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்குவது என்ற அந்நாட்டு அதிபர் நயிப் புக்கேலேவின் முடிவால், அந்த நாட்டில் அனைத்து தொழில்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமாக அதாவது எல் சால்வடோரின் இன்னொரு பணமாக பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்பட்டது (டாலரைப் போலவே) என்றுதான் பொருள். ஆனால், அண்மைக்காலமாக நடந்து வரும் கிரிப்டோகரன்சியின் சரிவால் ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக நாட்டின் பொதுப்பணத்தில் 100 மில்லியன் டாலருக்கு பிட்காயின்கள் வாங்கிய கொள்கை முடிவின் மீது. ஒவ்வொரு முறை பிட்காயின் வாங்கப்பட்டபோதும் அதனை அதிபர் ஒரு ட்வீட்டுடன் கொண்டாடியது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 பிட்காயின் பீச் எல் சால்வடோரின் பிட்காயின் இயக்கம் தொடங்கியது எல் சாண்டே கடற்கரையில் இருந்துதான். தென்கடற்கரையில் இருக்கும் சிறிய அளவிலான அலைச்சறுக்கு மற்றும் மீன்பிடி நகரமான இங்குதான், கிரிப்டோகரன்சியை விரும்பும் குழு ஒன்றுக்கு தனது முதல் நன்கொடையை பிட்காயின்களாக அளித்தார் ஒரு அடையாளம் தெரியாத நபர். அந்த நபர் யாரென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பேச்சுவார்த்தை என்னவென்றால், இந்தக் காயின்களை டாலர்களாக மாற்றாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதுதான். படக்குறிப்பு, பிட்காயின் பீச் பொருட்களை வாங்கி விற்கும் பரிவர்த்தனையானது முழுக்க முழுக்க பிட்காயின்கள் மூலமாகவே முழுமையாக நடைபெறும் `பிட்காயின் பொருளாதார` சூழலை உருவாக்குவதுதான் இந்த யோசனைக்கான காரணம். இதன் மூலம் பிட்காயினை கொடுத்து பொருள்வாங்கி பிட்காயினாகவே சில்லறையையும் வாங்க முடியும். இது ஒரு ஆழமான யோஈசனைதான். குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர, உலகமெங்கும் ஆன்லைன் வர்த்தகமாக மட்டுமே இருக்கும் பிட்காயின்களை, அங்காடித்தெருக்களில் பயன்படுத்த முடியும் என்பது சாத்தியமற்ற யோசனையாகவே இருக்கும், பெயர் தெரியாத அந்த முதல் நன்கொடையாளர் கொடுத்த பிட்காயின்களில் தொடங்கி இன்று வரை, எல் சாண்டே கடற்கர நகரம் சுமார் 3,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை பெற்றுள்ளது. இதன் விளைவாக, இந்த நகரம் பிட்காயின் பீச் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இந்த பிட்காயின்கள் மூலம் பயன்பெற்ற முதல் பயனர்களில் கத்ரீனா கோண்ட்ரியெரஸும் ஒருவர். படக்குறிப்பு, கத்ரீனா இரண்டாண்டுகளுக்கு முன்பு, கொரோனா காலத்தில், கத்ரீனா ஒரு உயிர்காத்தல் தொடர்பான பயிற்சியை மேற்கொண்டார். இந்தப் பயிற்சியை ஒருங்கிணைத்தவர்கள் போக்குவரத்து மற்றும் உணவுக்கான தொகையை பிட்காயின்களாக வழங்கினர். பின்னர் இந்தப் பயிற்சியை முடித்த பிறகு 6 மாதங்கள் நாங்கள் வேலை செய்தோம். அதற்கான சம்பளமும் பிட்காயின்களாகவே எங்களுக்கு வழங்கப்பட்டது என்கிறார் கத்ரீனா. அதுபோக பிட்காயின் சுற்றுலாப்பயணிகள், யூ ட்யூபர்கள் என தங்கள பிட்காயின்களை செலவிடுவதற்காக இங்கு வரும் பயணிகளால், இந்த நகரத்தில் உள்ள தொழில்கள் சில, 30% வரை உயர்வைக் கண்டுள்ளன. ஆனாலும், பிட்காயினை ஏற்றுக்கொள்வது என்பதில் இன்னும் சீரானநிலை இல்லை. மானியங்கள்: நாட்டின் பிட்காயின் சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருந்தாலும், பிட்காயினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்த தொழில்களுக்கும் கட்டாயப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அரசு தெரிவிக்கிறது. மேலும் பிட்காயினைப் பயன்படுத்தினால் அரசு சார்பில் ஊக்கத்தொகை ஏதும் வழங்கப்படுவதும் கிடையாது. எப்படிப்பார்த்தாலும் ரொக்கப் பணம்தான் ராஜா. சால்வடோரில் 50%க்கும் மேற்பட்ட மக்களிடம் வங்கிக்கணக்கே கிடையாது. ஆனால், அதிபர் புக்கேலே, 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை, சலுகை விலையில் பிட்காயின்களை வாங்க வழிவகை செய்யும் சிவோ என்ற மொபைல் செயலிக்காக செலவிட்டுள்ளார். இந்த செயலி ஒரு பரிவத்தனை செயலி. நாம் பயன்படுத்தும் கூகுள் பே, ஃபோன் பே போல. இந்தச் செயலியை ஒருவர் தரவிறக்கி பதிவு செய்தால் 30$ மதிப்புள்ள பிட்காயின்கள் வழங்கப்படும். இதன் விளைவாகத்தான் 6.5மில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 4 மில்லியன் முறை இந்தச் செயலி தரவிறக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலானோர் இதனை டாலர் பரிவர்த்தனைகளுக்காகவே பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர், தன் குடும்பத்துக்கு டாலர்களை எந்த விதமான குடுதல் கட்டணங்களும் இன்றி அனுப்ப இந்த செயலியைப் பயன்படுத்துகிறார். பட மூலாதாரம்,BITCOIN 2021 / BITCOIN MAGAZINE படக்குறிப்பு, அதிபர் நயிப் புக்கேலே இதன் மூலம், சிவோ செயலி மீது தொடக்கத்தில் இருக்கும் ஆர்வம் தொடர்ந்து இருப்பதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்தச் செயலியை பயன்படுத்துவதால் கிடைக்கும் அடுத்த நன்மை ஒரு செல்லப்பிராணிகளுக்கான மருத்துவமனையில் இருந்தது. இங்கு செல்லப்பிராணிகளுக்கான எல்லாவிதமான சிகிச்சைக்கும் வெறும் 25 செண்ட் தான். இதனை சிவோ செயலி மூலமாகவே செலுத்தலாம். (பிட்காயினாக செலுத்துவதற்கு முன்னுரிமை தரப்படும்) இதன்மூலம் லாபம் கிடைப்பதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பிட்காயின்கள் மூலம் எப்படி லாபம் ஈட்டப்படுகிறது? இந்தப் பணம் எப்படி அந்த மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறது ஆகிய கேள்விகளுக்கு அரசாங்க அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. பொது நிதி பொருளாதார பயன்பாட்டில் இதன் நிலையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி, பிட்காயினை சட்டப்பூர்வமாக்கிய நடவடிக்கையை திரும்பப்பெறுமாறு சர்வதேச பண நிதியம் எல் சால்வடோரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டாட்டியானா மாரோக்கின் போன்ற பொருளியல் அறிஞர்களும் இதுகுறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளனர். எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்த அரசாங்கத்திடம் போதுமான பணம் இல்லை. எனவே மேலும் மேலும் பொதுநிதியை கிரிப்டோகரன்சியில் கொட்டி ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்கிறார் டாட்டியானா. மேலும், வெளிப்படைத்தன்மை இல்லை என்று சொல்லும் டாட்டியான இந்த அரசு எப்போது எந்தப் பணத்தைக் கொண்டு பிட்காயின்களை வாங்கினார்கள் என்பதே எங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவிக்கிறார். பிட்காயினின் மதிப்பு குறைந்து வந்தாலும், சால்வடோர் மக்கள் அதிபர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் வால்டீஸ். அதிபரின் ஒவ்வொரு முடிவுமே சரியான நேரத்தில் எடுக்கப்படுகின்றன. மக்கள் அவரது முடிவுகள் மீதும் நாட்டின் பொருளாதாரத்தின் போக்குமீதும் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். கிரிப்டோகரன்சியின் மதிப்பு குறைவதற்கு முன்பாக, பிற நாடுகள் கூட எல் சால்வடோரின் இந்த முடிவை பின்பற்றுவது குறித்து ஆலோசித்து வந்தன. மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அதிபரும் கூட பிட்காயினை உலகளாவிய பணம் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். மேலும், எல் சால்வடோர் இதில் மேற்கொண்டு தொடர்ந்துசெல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/global-61832639
  13. இலங்கை நெருக்கடி: சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருக்க வேண்டும் - மத்திய வங்கி ஆளுநர் பென் சு பொருளாதாரப் பிரிவு ஆசிரியர், நியூஸ்நைட் 22 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார். வெளியிலிருந்து உதவி கேட்க தாமதம் செய்தது தவறு என, பிபிசி நியூஸ்நைட் நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டாலர்கள் உதவி இந்த ஆண்டு இலங்கைக்குத் தேவை. மேலும், கடந்த மாதம் வரலாற்றில் முதல் முறையாக தான் கட்ட வேண்டிய வெளிநாட்டுக் கடனை இலங்கை கட்டத் தவறியது. "சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால், கடனை திருப்பி செலுத்துவதற்கான நடைமுறைகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கியிருந்தால், நாட்டில் இத்தகைய துன்பங்கள் நேராமல் இந்த சூழ்நிலையை சமாளித்திருக்கலாம்" என நந்தலால் வீரசிங்கே தெரிவித்தார். கடும் எரிபொருள் பற்றாக்குறை, உணவுப்பொருட்களின் விலை உயர்வு, மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சந்தித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது ஏன்? - முழுமையான விளக்கம் பழைய படகுகளில் இலங்கை அகதிகளை அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் - அதிகாரிகள் கூறுவது என்ன? வெளிநாடு செல்லும் இலங்கை ஆசிரியர்கள்: கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம் ஐநா உலக உணவு திட்டத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மூன்றில் இரண்டு பங்கு இலங்கை குடும்பங்கள், எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரிட்டனிடமிருந்து 1948ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருவதாக வீரசிங்கே தெரிவித்தார். பட மூலாதாரம்,CENTRAL BANK OF SRI LANKA படக்குறிப்பு, நந்தலால் வீரசிங்கே வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், இலங்கைக்கு செல்லவுள்ளனர். அவர்களுடன் நடைபெறும் சந்திப்புகளில் முக்கிய பங்கேற்பாளராக வீரசிங்கே இடம்பெற உள்ளார். ஆனால், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கேப்ரால் ராஜினாமா செய்த நிலையில், அப்பதவியில் நியமிக்கப்பட்ட வீரசிங்கே, முழு பதவிக்காலமான ஆறு ஆண்டுகளுக்கு இம்மாத இறுதியில் நியமிக்கப்படுவாரா என்பதில் உறுதியற்ற சூழல் நிலவுகிறது. "இப்பதவியில் தொடர்வதற்கான எனது விருப்பத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன்," என்றார் வீரசிங்கே. "நான் இப்பதவியை ஏற்றுக்கொண்டபோது, இரு மாதங்கள் மட்டுமே பணியாற்றிவிட்டு திரும்பிச் சென்றுவிடுவேன் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அதுதான் நிலைமை எனில், நான் வந்திருக்க மாட்டேன். இந்த சூழல் என்பது இரு மாதங்களில் சரிசெய்யப்படக்கூடிய ஒன்று அல்ல. நிலைமை சரியாவதற்கு முன் முதலில் நிலைமை மோசமாகும்" என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளில் சிக்கலாக இருப்பது, சீனாவிடமிருந்து கணிசமான கடனை வாங்கியதாகும், அது இலங்கையின் மொத்தக் கடனில் 15% என்று வீரசிங்கே தெரிவித்தார். கடன் வழங்கிய மற்ற அமைப்புகளுக்கு அதனை திருப்பி செலுத்தும் தகுதி குறிப்பிட்ட நாட்டுக்கு உள்ளது என்று உறுதிப்படுத்தினால்தான், அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி செய்யும் என்பது அந்நிதியத்தின் கொள்கையாக உள்ளது. "இலங்கையின் நல்ல நண்பன் என்ற முறையில் சீனா உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என வீரசிங்கே தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பணியாளர்கள், வீரசிங்கே அதே பொறுப்பில் நீடிக்க வலியுறுத்தி அந்நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். "இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க நினைப்பது, தேசப்பற்று அல்லாத, முற்றிலும் உள்நோக்கம் கொண்டதாக நாங்கள் கருதுகிறோம்," என அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். வரும் ஆண்டில் வளர்ந்துவரும் 12க்கும் மேற்பட்ட நாடுகள் கடனை திருப்பி செலுத்த முடியாத அபாயத்தில் இருப்பதாக, உலக வங்கி எச்சரித்துள்ளது. மாலத்தீவு, ருவாண்டா, எத்தியோப்பியா, செனெகல் உள்ளிட்ட நாடுகளும் நிதி நெருக்கடி விளிம்பில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எகிப்து, கானா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக கருதப்படுகின்றன. https://www.bbc.com/tamil/sri-lanka-61836561
  14. அக்னிபத்: வேலூரில் போராட்டம் - "இளைஞர்களின் ராணுவ கனவைக் கலைக்கும் திட்டம் இது" பிரசன்னா பிபிசி தமிழுக்காக 16 ஜூன் 2022 இந்திய அரசு தற்போது அறிவித்துள்ள "அக்னி பத்" திட்டத்தை ரத்து செய்ய கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய, 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்தும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களது, கல்வி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பொது நுழைவு தேர்வு இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பல்வேறு நிர்வாக காரணங்களால் தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது. இதில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் காரணமாக தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. இதனால் ராணுவத்திற்கு செல்ல ஆர்வமுள்ள இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆகவே நிலுவையில் உள்ள எழுத்து தேர்வை உடனடியாக நடத்த கோரியும் நாடு முழுவதும் ஆங்காங்கே பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரிலும் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபத்: மோதி அரசின் திட்டத்தால் யாருக்கு பயன்? அக்னிபத் திட்டம்: தமிழ்நாடு, பிகார் உள்பட பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் "ராணுவத்தில் சேருவது கனவு" "ராணுவத்தில் சேருவதை நாங்கள் வேலையாகப் பார்க்கவில்லை. அது எங்கள் கனவு. அது அதை பறிக்க பார்க்கிறார்கள். 'அக்னிபத்' மூலம் 4 ஆண்டுக்கு மட்டும் ஆள் எடுத்துவிட்டு பின்னர் வெளியேற்றப்பட்டால் நாங்கள் வயதை தொலைத்து விட்டு என்ன செய்வது?" என கவலை தெரிவிக்கிறார் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த தாஸ். "ராணுவத்தில் பணிபுரியும்போது மாதம் கிடைக்கும் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வளர்க்கும் மாடுகளிடமிருந்து பால் கறந்து சம்பாதிக்க இயலும். பணம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, ராணுவ உடை அணிந்து இருக்க வேண்டும் ராணுவ உடையை எங்களுடைய உயிராக நாங்கள் நினைக்கிறோம்" என்கிறார் தாஸ். 'அக்னிபத்' திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதில் சேரும் 25% இளைஞர்கள் பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதாவது 100ல் 25 பேருக்கு முழு நேர சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும் என பாதுகாப்புத் துறை அறிவித்திருக்கிறது. நான்கு வருட சேவைக்குப் பிறகு தக்கவைக்கப்படும் 25 சதவிகித வீரர்கள், 'அக்னிவீர்' என்று அழைக்கப்படுவார்கள். இந்தத் திட்டம் நாடு முழுவதும் ராணுவத்தில் சேரக் காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. வேலூர் மாவட்டம் ராணுவ பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தற்போது எழுத்துத் தேர்வுக்காக காத்திருப்பதாக தாஸ் கூறுகிறார். "அக்னி பத்" திட்டம் ராணுவ அலுவலக பணிக்கு செல்வோருக்கு பொருந்தாது என்பதால், இதிலும் பாகுபாடு பார்க்கபடுவதாக அவர் கூறுகிறார். 2019-ல் நடந்த உடல் தகுதி தேர்வு முடித்து தற்போது வரை தேர்வு நடைபெறும் என காத்துக் கொண்டிருக்கிறோம். இதில் பலருக்கும் வயது கடந்துவிட்டது என்கிறார் அவர். "ராணுவத்தில் பணிபுரிந்த எங்கள் உற்றார் உறவினர்கள் தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களின் வழியில் தேசத்தின் மீது அதீத பற்று கொண்ட ராணுவத்தில் சேர்ந்து இந்த தேசத்திற்கு பணிபுரிய வேண்டும் என வாழ்நாள் கனவாக இதை நாங்கள் உயிருக்கும் மேலாக நினைத்து வருகிறோம். அதை அடைவதற்கு பல வருடங்கள் உழைத்து இருக்கிறோம். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு சிறுவயதிலிருந்தே எங்களை நாங்கள் செதுக்கிக் கொண்டு இருக்கிறோம் எளிதாக உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற இயலாது. தற்பொழுது அனைத்தும் கைகூடி வரும் நிலையில் எல்லாம் கை மீறிச் செல்கிறது" என்றார். படக்குறிப்பு, போராட்டம் நடத்திய இளைஞர்களுடன் பேச்சு நடத்தும் அதிகாரிகள் "கிராமப்புற இளைஞர்களுக்கு பாதிப்பு" இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் எடுப்பதற்கான எழுத்துத் தேர்வும் நடைபெறாததால் ராணுவ வேலைவாய்ப்பு கனவில் இருந்த வட மாவட்ட இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல். "எங்கள் கிராமத்திலிருந்து ராணுவத்தில் சேர்ந்து தாய் நாட்டிற்காக சேவை புரிந்து ஓய்வு பெற்று மீண்டும் எங்கள் கிராமத்திற்கு வந்த முன்னாள் படை வீரர்கள், நாங்கள் சிறுவர்களாக இருக்கும் சமயத்தில் எங்களை நல்வழிப்படுத்தி எங்களுக்கு தகுந்த பயிற்சி அளித்திருக்கிறார்கள்" என்கிறார் சக்திவேல். "அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை கொட்டி கொடுக்கும் துறையாக ராணுவம் உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிரேட்ஸ்மேன் பணி தொடங்கி, ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பத்தாம் வகுப்பில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சோல்ஜர் பணியும், பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் பயின்றவர்களுக்கு டெக்னிக்கல், அறிவியல் பாடத்தில் பயின்றவர்களுக்கு நர்சிங் அசிஸ்டன்ட் , இதர பாடத்தில் பயின்றவர்களுக்கு கிளர்க் போன்ற பணிகளும் கிடைக்கும்." என்கிறார் சக்திவேல். "ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை கலைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யும்படியும், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ தேர்வை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்." என்றார் அவர். https://www.bbc.com/tamil/india-61831083
  15. கும்பகோணம் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டனரா? - பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கும்பகோணத்தில் சில நாட்களுக்கு முன்பாக புதுமணத் தம்பதி கொல்லப்பட்ட விவகாரம் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. பட்டியலினத்தவர் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஆணவக் கொலையின் மறுவடிவமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு... கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சோழபுரத்தில் திருமணமான சில நாட்களில் புதுமணத் தம்பதி, பெண்ணின் உறவினர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆணவக் கொலை குறித்த பலத்த விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், கொலையில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களும், பெருமிதம் கொண்டு கொலையில் ஈடுபட்டார்களா என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சாதி தொடர்பான பெருமிதத்தால் நடத்தப்பட்டதா அல்லது பின்னணியில் வேறு காரணங்கள் இருந்தனவா என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தனர். உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது சோழபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளது துளுக்கவேலி ஆண்டவன் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதிக்கு சக்திவேல், சதீஷ், சரவணன் என மூன்று மகன்களும் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சேகரும் சக்திவேலும் கொத்தனாராக வேலை பார்த்து வருகின்றனர். சதீஷ் எம்.பி.ஏவும் சரவணன் டி.எம்.இயும் முடித்துவிட்டு திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். சகோதரர்கள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டது. சரண்யா சென்னையில் சில தனியார் மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். தேன்மொழிக்கு மனநலம் அவ்வப்போது பாதிக்கப்படும் பிரச்னை இருந்த நிலையில், அவரைக் கடந்த டிசம்பர் மாதம் சென்னைக்கு அழைத்துவந்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தார் சரண்யா. பணியாற்றும் நேரம் போக, மீதி நேரத்தில் அவரை மருத்துவமனையில் இருந்து பார்த்துக்கொண்டார் அவர். கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும் பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடலிங் செய்வது பிடிக்காமல் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னார் கிராத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி - வடிவேல் தம்பதியின் ஒரே மகன் மோகன். இவர் வேதியியலில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். வடிவேல் சிறு வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரி மட்டும் பொன்னூர் கிராமத்தில் மகன் அனுப்பிவந்த மாதாந்திரத் தொகையில் வாழ்க்கை நடத்திவந்தார். இவரும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதவாக்கில் இவரது மனநலம் மிகவும் மோசமடையவே, இவரைச் சென்னையில் உள்ள அரசு மனநலக் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தார் மோகன். அந்தத் தருணத்தில், தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க சரண்யாவும் அங்கிருந்த நிலையில், இருவரும் பழக ஆரம்பித்தனர். சரண்யாவின் வீட்டில் எதிர்ப்பு ஏன்? மோகனைப் பொறுத்தவரை, மனநலம் பாதிக்கப்பட்ட தாயைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலையில், காதலைத் தொடர பெரிய எதிர்ப்பு ஏதும் இருக்கவில்லை. ஆனால், சரண்யாவின் சகோதரர் சக்திவேல் இந்த காதலை ஏற்கவில்லை. இதற்குக் காரணம் இருந்தது. சரண்யாவின் மூத்த சகோதரரான சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு திருமணம் செய்வது குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பிலிருந்தே பேசிவந்தனர். ரஞ்சித்தும் சரண்யாவும் சில நாட்கள் பழகியும் வந்தனர். ஆனால், ரஞ்சித்திற்கு குடி, போதை போன்ற பழக்கங்கள் இருக்கவே, அவரை சரண்யாவுக்குத் திருமணம் செய்து வைப்பது குறித்து சதீஷும் சரவணனும் மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சரண்யாவும் ரஞ்சித்தைவிட்டு விலக ஆரம்பித்திருந்தார். ஆனால், மூத்த சகோதரரான சக்திவேல் இதனை ஏற்கவில்லை. தனது மைத்துனருக்கே சரண்யாவைத் திருமணம் செய்துவைக்க வேண்டுமெனக் கூறி சண்டையிட்டுவந்தார். இந்த நிலையில், சரண்யாவும் மோகனும் காதலிக்கும் விவகாரம் தெரியவந்தபோது அதற்கு அவரது பெற்றோரோ, சக்திவேல் தவிர்த்த மற்ற இரு சகோதரர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், சக்திவேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த நிலையில்தான் கடந்த 9ஆம் தேதி வியாழக்கிழமையன்று தனது தாய் பரமேஸ்வரி மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகில் உள்ள கோவில் ஒன்றில் சரண்யாவைத் திருமணம் செய்தார். விருந்துக்காக அழைக்கப்பட்ட தம்பதி கொலை இந்தத் திருமணம் குறித்த தகவலை தனது சகோதரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார் சரண்யா. இதற்குப் பிறகு சரண்யாவை அழைத்த சக்திவேல், திங்கட்கிழமையன்று மோகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் அவரது பெயரில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்டுத் தரும்படியும் கேட்டிருக்கிறார். இதையடுத்து மோகனும் சரண்யாவும் துளுக்கவேலிக்கு வந்துள்ளனர். சக்திவேலும் சரண்யாவும் கும்பகோணத்திற்குச் சென்று நகைகளை மீட்ட பிறகு, வீட்டுக்கு வந்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு, பிற்பகலில் சென்னைக்குச் செல்வதற்காக மோகனும் சரண்யாவும் புறப்பட்டனர். சரண்யா, சக்திவேல், மோகன் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியில் வந்ததும், வீட்டின் மற்ற பெண்களை வீட்டுக்குள் போட்டுப் பூட்டினார் சக்திவேல். உடனடியாக ரஞ்சித்திற்குக் குரல் கொடுக்க, ஆயுதத்துடன் ஒளிந்திருந்த அவர் முதலில் மோகனைப் பின்னாலிருந்து கழுத்தில் வெட்டியதாகவும் அங்கிருந்து தப்பி ஓடிய சரண்யாவை அடுத்த திருப்பத்திலேயே துரத்திப் பிடித்த சக்திவேல் அவரது கழுத்தைப் பிடித்து நெரிக்க, அங்கு ஓடி வந்த ரஞ்சித் சரண்யாவையும் வெட்டியதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கொலையான இருவரில் சரண்யா பட்டியலினத்தையும் மோகன் செங்குந்த முதலியார் இனத்தையும் சேர்ந்தவர்கள். ஆகவே, முதல் பார்வையில், இந்தக் கொலை சாதிக்கு வெளியே நடந்த திருமணத்தால் நிகழ்ந்த கொலையென்று கருதப்பட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்திய ஆணவக் கொலை என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட ஆரம்பித்தது. "சாதிக்காக நடந்த கொலையில்லை" ஆனால், இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுக்கிறார்கள் சக்திவேலின் குடும்பத்தினர். "இது நிச்சயமாக சாதிக்காக நடந்த கொலையில்லை. எங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை. அம்மா மன நலம் சரியில்லாதவர். நானும் என் அண்ணனும் திருப்பூரில் இருந்தோம். அம்மா, என் மனைவி, என் அண்ணன் மனைவி மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல இப்படிச் செய்திருக்கிறார்கள்" என்கிறார் சரண்யாவின் சகோதரரான சரவணன். சரண்யாவின் மற்றொரு சகோதரரான சதீஷ் வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருப்பதை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். தனக்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடி சரண்யா, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்ததில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்கிறார் சதீஷ். குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். வேறு எதையும் பேசும் நிலையில் அவர்கள் இல்லை. சரண்யாதான் அந்த வீட்டின் ஆணி வேர் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். தன் சகோதரர்களைப் படிக்கவைத்து, தன் தாய்க்கு மருத்துவம் பார்த்து மிகப் பொறுப்புடன் நடந்துகொண்ட பெண் என்கிறார்கள் அவர்கள். தனது மனநல பிரச்னையிலிருந்து மீண்ட அவரது தாய், மீண்டும் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்திருக்கிறார். படக்குறிப்பு, மோகனின் தாய் பரமேஸ்வரி சுயநினைவின்றி புலம்பும் தாய் ஆனால், சரண்யாவைத் திருமணம் செய்ததால் கொல்லப்பட்ட மோகனின் கதை இன்னும் பரிதாபமானது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ள உள்ளடங்கிய கிராமம் பொன்னூர். ஊர் கடைசியில் அமைந்திருக்கும் ஆலமரத்தின் கீழ் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் மோகனின் தாய் பரமேஸ்வரி. "நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. வேணாம் வேணாம்னு.. இப்படி நடந்துருச்சு. தீடீர்னு கூட்டினு போய் கல்யாணம் பண்ணுனான். செத்துப்போய்ட்டான்" என்று சுயநினைவின்றி புலம்புகிறார் அவர். மோகன் ஐந்தாவது படிக்கும்போதே அவரது தந்தை வடிவேல் இறந்துவிட, மிகச் சிரமப்பட்டு அவரை படிக்கவைத்து ஆளாக்கியவருக்கு தன் மகன் இறந்துவிட்டதைக்கூட முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்குகளை முடித்து ஒரு நாளுக்கு மேலாகியும் குளிக்காமலும் உடுத்திய உடையை மாற்றாமலும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார் அவர். "இனிமே என்ன இருக்குது.. நானும் கெளம்ப வேண்டியதுதான்" என்கிறார். ஊர்க்காரர்களைப் பொறுத்தவரை, மோகனை விருந்துக்கு அழைத்துச் சென்று கொன்றுவிட்டதாக பெண் வீட்டாரின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆதரவின்றி இருக்கும் மோகனின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென்கிறார்கள். சோழவரம் காவல்துறையைப் பொறுத்தவரை, ஜாதி ஆணவத்தில் நடந்த கொலையாகத் தெரியவில்லை என்கிறது. தன்னை சரண்யா நிராகரித்துவிட்ட ஆணவத்தில் ரஞ்சித்தும் அவரால் துண்டப்பட்டு சக்திவேலும் இந்தக் கொலையில் ஈடுபட்டதாக காவல்துறை கருதுகிறது. இப்போது ரஞ்சித், சக்திவேல் ஆகிய இருவரும் சிறையில் இருக்கிறார்கள். காதல் திருமணத்திற்குப் பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் இதனை ஆணவக் கொலை என்றுதான் அழைக்க வேண்டும் என்று சிலரும், ஆணாதிக்கக் கொலை என்று அழைக்க வேண்டுமென சிலரும் விவாதித்துவருகிறார்கள். இது அப்பட்டமான ஆணாதிக்க ஆணவப் படுகொலை என்கிறார், மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பின் கதிர். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கதிர், "இந்தப் படுகொலையில் நேரடியாக சாதி இல்லை என்றாலும் இவை ஆணவக் கொலைகள் தான். ஒரு பெண்ணின் இணைந்து வாழக்கூடிய அல்லது திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு எதிராக குறுக்கீடு செய்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ அவற்றை ஆணவக் குற்றங்கள் என்று தான் பார்க்க வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவாதங்களுக்கு அப்பால், வெகு தூரத்தில் ஒரு ஆலமரத்தடியில் தனியாக அமர்ந்து உயிரோடில்லாத மகனோடு பேசிக்கொண்டிருக்கிறார் பரமேஸ்வரி. https://www.bbc.com/tamil/india-61836122
  16. ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம் 17 ஜூன் 2022, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து அந்த முடிவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது. இரண்டரை ஆண்டுகாலம் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் வைத்திருந்த ஆளுநர் பிறகு அதை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்தார். இதை தமிழ்நாடு அரசு ஆட்சேபித்தது. பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன? பேரறிவாளன் விடுதலை: ஒரு நீண்ட போராட்டத்தின் கதை அத்துடன், பேரறிவாளனும் தம்மை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், ஒரு சிறைவாசியை விடுதலை செய்ய மாநில அமைச்சரவை முடிவெடுத்து அதனை பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பிய பிறகு, 161வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது அதிகாரத்தை செயல்படுத்தாமல் இருப்பது அல்லது அப்படி செயல்படுத்துவதில் விவரிக்க முடியாத தாமதத்தை ஏற்படுத்துவது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரியது என்று கூறியதுடன், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை இரண்டரை ஆண்டு காலம் கழித்து குடியரசுத் தலைவருக்கு மாநில ஆளுநர் அனுப்பியிருக்கும் செயலை அரசமைப்புச் சட்டம் ஆதரிக்கவில்லை; அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டுக்கும் அது விரோதமாக இருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் கருத்தை ஆளுநர் பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம். பட மூலாதாரம்,KEYSTONE/GETTY IMAGES அத்துடன், மீண்டும் இந்த விவகாரத்தை ஆளுநருக்கே திரும்பி அனுப்புவது பொருத்தமற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக கூறியது. இந்த தீர்ப்பு பேரறிவாளனை விடுதலை மட்டும் செய்யவில்லை. தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் நடவடிக்கை அல்ல என்பதையும் குறிப்பிட்டது. ஆனாலும், அந்த தீர்மானம் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது. இந்நிலையில், மேலும் இதே வழக்கில் சிறையில் உள்ள 6 பேரில் நளினி மற்றும் ரவிச்சந்திரன், தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகினர். உயர் நீதிமன்றம் என்ன சொன்னது? தங்களை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் கால தாமதம் செய்வதால், சிறையிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென நளினி தரப்பு வாதிட்டது. இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்திற்கு 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்படவில்லை என்பதால், தாங்கள் விடுவிக்க முடியாது என்று கூறி நளினி மற்றும் ரவிச்சந்திரனின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு துவங்கியபோது, பேரறிவாளன் விடுதலையை முன்வைத்து இந்த வழக்கில் வாதங்களைச் செய்யப் போகிறீர்கள் என்றால், தாங்கள் இந்த வழக்கை விசாரிக்கப்போவதில்லையென்றும், நேரடியாக உச்ச நீதிமன்றத்தையே அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதனால், இரு வழக்குகளையும் தொடர்புபடுத்தாமல் தனது வாதங்களை முன்வைத்தார் நளினி தரப்பு வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன். தன்னை விடுவிக்க வேண்டுமென 2014லும் 2018லும் தமிழ்நாடு அரசு முடிவுசெய்த நிலையிலும் தாங்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று வாதிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் போல அரசியல் சாஸனத்தின் 142வது பிரிவைப் பயன்படுத்தி விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது உயர் நீதிமன்றம். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அப்படி விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. https://www.bbc.com/tamil/india-61836834
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.