Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் காசா யுத்தம் - கழுதைவண்டியில் பயணம் செய்யும் ஒருவர் ஏற்பட்டுள்ள அழிவுகளை காண்பிக்கின்றார் Published By: RAJEEBAN 30 NOV, 2023 | 12:37 PM abc இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் காரணமாக எரிபொருள் முற்றாக தீர்ந்துபோயுள்ள நிலையில் பொதுமக்கள் பணயத்திற்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கும் கழுதை வண்டில்களை பயன்படுத்திவருகின்றனர். கான் யூனிசில் இடம்பெற்ற குண்டுவீச்சில் தனது வீட்டை இழந்த முகமட் அல் நஜாரின் பிரதான போக்குவரத்து சாதனமாக கழுதை வண்டி மாறியுள்ளது. குசா என்ற பகுதியில் அவர் தற்போது வசிக்கின்றார், நடமாடுவது கடினம் இதனால் நாங்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். எனது பகுதியான கான் யூனிசிற்கு கழுதை வண்டியில் செல்வதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் எடுக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். கழுதை வண்டி மிகவும் மெதுவாக நகர்வதால் காசாவின் யுத்த அழிவுகளை தெளிவாக பார்க்க முடிகின்றது. அழிக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு கழுதை வண்டி செல்கின்றது. சில கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன, உடைந்த கொன்கிறீட் அல்லது இரும்பு கம்பிகுவியலாக காணப்படுகின்றன - ஆங்காங்கே சிதறுண்டுகிடக்கும் உடைகளும் பொருட்களும் மாத்திரமே அங்கு காணக்கூடிய வண்ணமயமான பொருட்களாக உள்ளன. விசித்திரமாண கோணங்களில் வளைந்த நெளிந்த இருப்புதுண்டுகள் தகரங்களை காணமுடிகின்றது எங்கும் குப்பைகளும் இடிபாடுகளும் காணப்படுகின்றன. வீதியில் வாகனங்கள் எவற்றையும் பார்க்க முடியவில்லை, எப்போதாவது ஸ்கூட்டரை காணமுடிகின்றது - துவிச்சக்கரவண்டிகளே அதிகளவில் காணப்படுகின்றன. பல பகுதிகளில் வீதிகளில் இருமருங்கிலும் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. https://www.virakesari.lk/article/170630
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
சீக்கியப் பிரிவினைவாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியர்மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - என்ன நடந்தது? பட மூலாதாரம்,US DEPARTMENT OF JUSTICE 29 நவம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீக்கியப் பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்தச் சதித்திட்டம் நியூயார்க்கில் நடத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர் மீது புதன்கிழமை (நவம்பர் 29) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை இந்திய அரசாங்க ஊழியர் ஒருவர் இயக்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இந்த விஷயத்தில், அவர்மீது கூலிக்குக் கொலை செய்ய முயன்றக்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். ஒருவருக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் கொடுத்து சீக்கியரை கொலை செய்ய முயன்றதாக அவர்கள் கூறினர். ஆனால் அடியாள் என நினைத்து பணம் கொடுக்கப்பட்ட நபர் அமெரிக்காவின் ரகசிய ஏஜென்ட் எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், யாரைக் கொலை செய்ய இந்தத் திட்டம் தீட்டப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அதிகாரிகளின் எதிர்வினை என்ன? இதுதொடர்பில் அமெரிக்கா தனது பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எழுப்பியக் குற்றச்சாட்டில், விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய அரசு முன்னதாக கூறியிருந்தது. குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த விவகாரத்தை இந்திய அரசாங்கத்தின் மிக மூத்த மட்டங்களில் எழுப்பியதாக அமெரிக்க அரசாங்கம் கூறியிருக்கிறது. அதற்கு இந்திய அதிகாரிகள் ‘ஆச்சரியம் மற்றும் கவலையுடன்' பதிலளித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது. "சீக்கியர்களுக்கு இறையாண்மை கொண்ட அரசை நிறுவ வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனை, நியூயார்க் நகரில் கொலை செய்யப் பிரதிவாதி இந்தியாவில் இருந்து சதி செய்தார்," என்று அமெரிக்க வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் கூறினார். மேலும் அவர், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களைப் படுகொலை செய்யும் முயற்சிகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் யார்? குற்றப்பத்திரிகையின்படி, நிகில் குப்தா சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கொலைத்திட்டத்திற்காக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் நியமிக்கப்பட்டார். மேலும், இத்திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டாளியைத் தொடர்பு கொள்ளுமாறு நிகில் குப்தாவிடம் அந்த இந்திய அதிகாரி சொன்னதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நிகில் குப்தா, நியூயார்க் நகரில் இந்தக் கொலையைச் செய்யக்கூடிய ஒருவரைச் சந்திக்க எண்ணியிருந்தார் என்றும் அது கூறுகிறது. ஆனால், அதற்கு பதிலாக, அந்த நபர் குப்தாவை, மாறுவேடத்தில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தியது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர், ஒரு லட்சம் டாலர்களுக்கு இந்தக் கொலையைச் செய்வதாக கூறியதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நிகில் குப்தா ஜூன் 9 அன்று ஒரு கூட்டாளி மூலம் $15,000 முன்பணமாகச் செலுத்தினார், என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி அமெரிக்க வழக்கறிஞர்கள் நிகில் குப்தாவுக்கு எதிராக முதற்கட்டக் குற்றச்சாட்டை வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே செக் குடியரசில் உள்ள அதிகாரிகள் அவரைல் கைது செய்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் அவரை இன்னும் காவலில் வைத்துள்ளனர். ஆவணங்களில் இந்தச் சதியின் இலக்கு குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் சீக்கிய பிரிவினைவாதக் குழு ஒன்றின் அமெரிக்கத் தலைவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,X படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னு இதற்கு முன்னர் எழுந்த குற்றச்சாட்டு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குர்பத்வந்த் சிங் பன்னு, எனும் சீக்கியத் தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதியைக் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த இந்தியா, ‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று கூரியிருந்தது. அதைத்தொடர்ந்து, புதன்கிழமை (நவம்பர் 29) இந்தியா இந்த விஷயத்தை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறது என்று வெளியுறவுத்துறைச் செயலாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையும் கனடாவின் குற்றச்சாட்டும் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது. சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான வாகன நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த இரண்டு பேர் அவரது டிரக்கில் வைத்து சுட்டுக் கொன்றனர். அப்போது நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ‚நம்பகமான அம்சங்களை‘ கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறியிருந்தார். இந்தக் கொலை தொடர்பான உளவுத்துறைத் தகவல்களை அமெரிக்காதான் கனடாவுக்கு வழங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்போது செய்தி வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா-கனடா உறவில் குறிப்பிடத்தகுந்த அளவில் விரிசல் ஏற்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c518leq9ynyo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல்: தோனிக்கு அடுத்து சிஎஸ்கேவுக்கு தலைமை தாங்கப் போவது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐ.பி.எல் டி20 தொடரில் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம், 5 முறை பைனல் வரை சென்றது என ஒவ்வொரு லீக்கிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் (சி.எஸ்.கே) அணி கலக்கி வருகிறது. எதிர்வரும் 2024 ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணி என்ன செய்யப் போகிறது, எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்க இருக்கிறது, என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி. அவரது வியூகம், களத்தில் எந்தெந்த வீரர்களை எப்படிப் பயன்படுத்தப் போகிறார், இந்த முறை கோப்பையை வெல்வாரா என்பதைக் காண ஒவ்வொரு லீக்கிலும் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். கேப்டனாத் தொடரும் தோனி ஐ.பி.எல் டி20 தொடர்களின் ஒவ்வொரு போட்டியையும், சி.எஸ்.கே அணி தொடக்கம் முதல் நாக்-அவுட் சுற்றுக்குச் செல்லும்வரை திட்டமிட்டு அணுகும். சி.எஸ்.கே இல்லாத நாக்-அவுட் சுற்றுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு அணியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி, வியூகங்களை வகுத்து வெற்றியடைபவர் தோனி. அதற்கு முக்கியக் காரணம் தோனியின் கேப்டன்ஷிப் மட்டுமல்ல, அணியில் இடம் பெறும் வீரர்களும்தான் என்று கூற வேண்டும். ஐ.பி.எல் ஏலத்தில் ஒவ்வொரு வீரரையும் சி.எஸ்.கே நிர்வாகம் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணிக்குள் கொண்டு வந்து சிறப்பாகச் செயல்படும். அந்தவகையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போது சி.எஸ்.கே அணியின் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருக்கிறது யாரெல்லாம் விடுவிக்கப்பட்டனர்? கடந்த சீசனில் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்ததையடுத்து, ரூ.6.75 கோடிக்கு வாங்கப்பட்ட அவரும் விடுவிக்கப்பட்டார். இது தவிர, தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். தற்போது சி.எஸ்.கே அணியின் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருக்கிறது. இந்தத் தொகையை வைத்து, எதிர்வரும் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறது, எந்தெந்த வீரர்களை கைப்பற்றுவதற்கு சி.எஸ்.கே நிர்வாகம் முயற்சிக்கும் என்பது குறித்து அலசலாம். ஆல்ரவுண்டர்கள் மீது தீராக் காதல் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆல்-ரவுண்டர்கள் மீது தீராக் காதல் கொண்டது. சி.எஸ்.கே அணி உருனதில் இருந்து அல்பி மோர்கல், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம், டுவைன் பிராவோ என ஆல்-ரவுண்டர்கள் மீதான காதல் தொடர்ந்து வருகிறது. ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன் மீதான நம்பிக்கை வைப்பதைவிட, ஆல்ரவுண்டர்கள் மீதுதான் கேப்டன் தோனியும், நிர்வாகமும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று ஐ.பி.எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.எஸ்.கே கேப்டன் தோனி ஒருமுறை அளித்த பேட்டியில்கூட “இனிவரும் காலங்களில் லீக் போட்டிகளில் ஸ்பெசலிஸ்ட் பேட்டர், பந்துவீச்சாளர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படாது. மாறாக ஆல்ரவுண்டர்கள் மீதே அதிக ஈர்ப்பு இருக்கும்,” எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில்கூட ஆல்ரவுண்டர்களைத்தான் சிஎஸ்கே நிர்வாகம் அதிகளவில் விலைக்கு வாங்கி, அணியில் தக்கவைத்தது. தற்போதைய நிலவரப்படி அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்ட நிலையில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்ற வகையில், ரஹானே, கெய்க்வாட், கான்வே, ஷேக் ரஷீத் ஆகியோர் மட்டுமே உள்ளனர். ஆனால், ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, ராஜ்வர்தன் ஹங்கேர்கர், மொயின் அலி, அஜெய் மண்டல், ஷிவம் துபே, நிசாந்த் சிந்து, சான்ட்னர், பகத் வர்மா ஆகியோர் உள்ளனர். கடந்த சீசனில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பெரிதாக எந்தப் பங்களிப்பும் அணிக்குச் செய்யவில்லை. அவரது தேசிய அணிக்கான பணியும் அவருக்கு அதிகம் என்பதாலும், உடற்தகுதிப் பிரச்சினை இருப்பதாலும் அவரை சி.எஸ்.கே நிர்வாகம் விடுவித்துள்ளது. மற்றவகையில் எப்போதுமே சி.எஸ்.கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு இடம் அதிகமாகவே இருக்கும். பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் விடுவிக்கப்பட்டதால், ஏலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களை ஃபார்மில் இருக்கும் வீரர்களை விலைக்கு வாங்க சி.எஸ்.கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டும் என்று கூறப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சி.எஸ்.கே அணியிலிருந்து அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டிருக்கிறார் நடுவரிசைக்கு வலுவான பேட்டர் யார்? அணியிலிருந்து அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டதால், நடுவரிசைக்கு பலமான பேட்டர் அவசியம் என்பதை சி.எஸ்.கே நிர்வாகம் நன்கு அறிந்துள்ளது. ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’ என்பதை சி.எஸ்.கே நிர்வாகம் நன்கு அறியும். களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சிக்கும். அதேபோல வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் சிசாண்டா மகாலா, ஆகாஷ் சிங், பிரிட்டோரியஸ், கெயில் ஜேமிஸன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்குப் பதிலாக அடுத்ததாகஏலத்தில் எந்தெந்த வீரர்களை தேர்ந்தெடுக்க பயிற்சியாளர் பிளெம்மிங்கும், கேப்டன் தோனியும், நிர்வாகமும் முடிவெடுப்பார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. சி.எஸ்.கே அணியிலிருந்து கடந்த இரு சீசன்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் ஏலத்தில் எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தா அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர்களான பெர்குஷன், டிம் சவுதி, கார்த்திக் தியாகி, உனத் கட், முஸ்தபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ஹசரங்கா, ஷாருக்கான் ஆகியோரை ஏலத்தில் எடுக்க சி.எஸ்.கே நிர்வாகம் போட்டிபோடலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐ.பி.எல் டி20 தொடர்களின் ஒவ்வொரு போட்டியையும், சி.எஸ்.கே அணி தொடக்கம் முதல் நாக்-அவுட் சுற்றுக்குச் செல்லும்வரை திட்டமிட்டு அணுகும் ராயுடுவுக்குப் பதிலாக யார்? சி.எஸ்.கே அணியிலிருந்து வலுவான நடுவரிசை பேட்டர் அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.பி.எல் ஏலத்தில் மணிஷ் பாண்டேவை சி.எஸ்.கே நிர்வாகம் விலைக்கு வாங்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்த மணிஷ் பாண்டேவை டெல்லி நிர்வாகம் அவரை விடுவித்துள்ளது. மணிஷ் பாண்டே என்றாலே ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முதலில் சதம் அடித்த வீரர் என்பதுதான் நினைவுக்கு வரும். திறமையான பேட்டரான மணிஷ் பாண்டேவுக்கு தொடக்கத்தில் இருந்தே எந்த அணியிலும் நீண்டகாலமாக நீடிக்கவில்லை, அதற்கு அவரிடம் நிலைத்தன்மையான பேட்டிங் இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட மணிஷ் பாண்டே, பின்னர் ஆர்.சி.பி, புனே வாரியர்ஸ், கே.கே.ஆர், சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ, டெல்லி கேபிடல்ஸ் என அடுத்தடுத்து மாறிவருகிறார். இதுவரை 302 டி20 போட்டிகளில் விளையாடிய மணிஷ் பாண்டே, 3 சதங்கள், 39 அரைசதங்கள் உள்பட 6,849 ரன்களைக் குவித்துள்ளார். திறமையான வீரர்களை தோனி தட்டிக்கொடுத்து தயார் செய்யக்கூடியவர் என்பதால், இந்த முறை சி.எஸ்.கே நிர்வாகம் ராயுடுவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவை வாங்க முயற்சிக்கும். ஏலத்தில் சி.எஸ்.கே-வின் கவனம் யார்மீது? இது தவிர, உலகக் கோப்பையில் கலக்கிய ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் பெயர் ஏலத்தில் சேர்க்கப்பட்டால், அவரை வாங்குவதற்கு சி.எஸ்.கே முயலும் என்று கூறப்படுகிறது. மேலும் பிக்ஹிட்டர் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தமிழக வீரரான ஷாருக்கானை தோனி நிச்சயம் பயன்படுத்த முயல்வார் என்பதால் அவருக்கும் சி.எஸ்.கே அணிக்குள் வர வாய்ப்புள்ளது. ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹசரங்கா, ஜேஸன் ஹோல்டர், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி ஆகியோரை வாங்குவதற்கு சி.எஸ்.கே அதிகமாக முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் சி.எஸ்.கே-வின் அடுத்த கேப்டன் யார்? இந்த சீசனுக்கும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்று இருப்பதால், வழக்கமான உற்சாகத்துடனும், துடிப்புடனும் ஒவ்வொரு போட்டியையும் அந்த அணி அணுகும். ஆனால், தற்போது தோனிக்கு 42 வயதாகிறது என்பதால், 2025-ஆம் ஆண்டின் சீசனிலும் தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவாரா என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை இந்த சீசனே தோனியின் கடைசி சீசனாகவும் இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அப்படி ஒருவேளை 2025-ஆம் ஆண்டின் சீசனுக்கு தோனி சி.எஸ்.கே அணியில் இல்லாவிட்டால் யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகும். ஏற்கெனவே ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததால் சி.எஸ்.கே அணி பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து, பின்னர் மீண்டும் தோனியே கேப்டன் பதவியே தொடர்ந்தார். அப்படியென்றால் அடுத்த கேப்டனாக யார் சி.எஸ்.கே அணிக்கு வரலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதியே அடுத்த கேப்டன் நியமிக்கப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹசரங்கா, ஜேஸன் ஹோல்டர், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி ஆகியோரை வாங்குவதற்கு சி.எஸ்.கே அதிகமாக முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது இவர்கள் இருவருக்கும் வாய்ப்புள்ளதா? சி.எஸ்.கே அணியின் வியூகம், அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்துக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. “சி.எஸ்.கே அணி எப்போதுமே தொலைநோக்கு சிந்தனையுடையது. நீண்டகால நலன் கருதித்தான் எந்த முடிவும் எடுக்கும். ஏற்கெனவே ஜடேஜாவை கேப்டனாக நியமித்து, அது தவறான முடிவு என்பதை உணர்ந்துவிட்டது. ஆதலால் அவர் பின்னால் கேப்டன் பதவியுடன் செல்லமாட்டார்கள்,” என்றார். “உள்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அல்லது வெளிநாட்டு வீரர் ஒருவரைத்தான் கேப்டனாக சி.எஸ்.கே நிர்வாகம் நியமிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் என்னைப் பொறுத்தவரை சி.எஸ்.கே அணிக்கு அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது டேவன் கான்வே நியமிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்றார் அவர். “ஏனென்றால், ஆசியவிளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக கேப்டன் பணியைச் செய்து தனக்குரிய பங்களிப்பை நிரூபித்துவிட்டார். சி.எஸ்.கே நிர்வாகம் இதைக் கணக்கில் எடுக்கலாம். நீண்டகாலநோக்கிலும் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பதவி தரப்படலாம். அதேபோல வெளிநாட்டு வீரர்களில் கான்வேக்கு அதிக வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்தார். யார் யார் அணிக்குள் வரலாம்? 2024 ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி எந்தெந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏலத்தில் எடுக்கும் என்று முத்துக் குமார் பேசுகையில், “சி.எஸ்.கே நிர்வாகம் ஸ்பெசலிஸ்ட் பேட்டர், பந்துவீச்சாளர்களைவிட ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். அதைத்தான் கேப்டன் தோனி விரும்புவார் என்று கேட்டிருக்கிறேன். அது மட்டுமல்லாமல், கடந்த முறை பென் ஸ்டோக்ஸிற்கு ரூ.16 கோடிக்கும் அதிகமாக செலவிட்டது சி.எஸ்.கே. ஆதலால் இந்த முறை ஏலத்தில் பெரிதாக ஆல்ரவுண்டர்களுக்கு செலவிடமாட்டார்கள், அதேநேரம் சிறந்த வீரர்களை நல்ல விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள், என்றார். மேலும் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களில் ரச்சின் ரவீந்திரா, ஜேஸன் ஹோல்டர், ஹசரங்கா, டிம் சவுதி, முஸ்தபிசுர் ரஹ்மான், முருகன் அஸ்வின் ஆகியோரை விலைக்குவாங்க சிஎஸ்கே முயலும். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி நீண்டகாலமாக பயணித்து வருகிறது,” என்றார். “ஆதலால், இந்த முறை உனத்கத் அல்லது முஸ்தபிசுர் ரஹ்மான் அணிக்குள் வரலாம். டுவைன் பிராவோவுக்கு அடுத்தார்போல் மேற்கிந்தியத்தீவுகள் ஆல்ரவுண்டர் யாரையும் சி.எஸ்.கே தேர்ந்தெடுக்கவில்லை. இந்த முறை ஹோல்டர் விலை மலிவாக இருந்தால் அவரையும் சி.எஸ்.கே விலைக்கு வாங்கவும் வாய்ப்புள்ளது. தோனி இதுபோன்ற வீரர்களை சிறப்பாகப் பயன்படுத்தக்கூடியவர்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cyj21vd1lw2o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலிடமிருந்து கிடைக்கும் தகவல்களையும் சந்தேகத்துடன் அணுகுங்கள் - அது பெருமளவு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது -அவுஸ்திரேலியாவின் 270 பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள் Published By: RAJEEBAN 29 NOV, 2023 | 12:02 PM ஹமாஸ் அமைப்பிடமிருந்து வெளிவரும் தகவல்கள் குறித்து வெளிப்படுத்தும் சந்தேகத்தை இஸ்ரேலிடமிருந்து வரும் தகவல்கள் குறித்தும் வெளிப்படுத்தவேண்டும் என 270 பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர் இஸ்ரேலிய காசா மோதல்களை எவ்வாறு பார்க்கவேண்டடும் என்பது குறித்து 270 பத்திரிகையாளர்கள் தங்கள் சகாக்களுக்கும் அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கும் பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஊடகநிறுவனங்களின் செய்தியாளர்கள் ஹமாஸின் தகவல்கள் குறித்து வெளிப்படுத்தும் அதே அளவு சந்தேக மனப்பான்மையை இஸ்ரேலின் தகவல்கள் குறித்தும் வெளிப்படுத்தவேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளனர் ஹமாஸின் தகவல்கள் குறித்து பயன்படுத்தும் சந்தேகத்தை இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்கும் பயன்படுத்துங்கள் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த மோதலில் இஸ்ரேலிய அரசாங்கமும் ஒரு பகுதி அது பெருமளவு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்பதற்கான அதிகளவு ஆதாரங்கள் வெளியாகின்றன என தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் பிழையான தவறான தகவல்களை பகிர்கின்றது என்பதற்கான பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்களும் வரலாறுகளும் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்தின் தகவல்களை உண்மையை ஆராயமல் ஒருபோதும் வெளியிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்கள் ஒருபத்திரிகையாளர்களாக இது எங்களின் அடிப்படை கடமை எனவும்தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பேரழிவை ஏற்படுத்தும் குண்டுவீச்சும் காசாவில் ஊடகங்களை தடுத்துள்ளமையும் முன்னொருபோதும் இல்லாத வகையில் பத்திரிகை சுதந்திரத்திற்கும் செய்தி சேகரிப்பதற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என 270 பத்திரிகையாளர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிருபர்கள் ஆசிரியர்கள் புகைப்படப்பிடிப்பாளர்கள் ஏனைய பணியாளர்கள் என்ற அடிப்படையில் எங்கள் சகாக்களும் அவர்களது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர்கள் இஸ்ரேலிய அரசாங்கம் பத்திரிகையாளர்களை இலக்குவைப்பது ஜெனீவா பிரகடனத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் அதிகாரமுள்ளவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதும் உண்மையையும் முழு சூழமைவையும் பொதுமக்களிற்கு தெரிவிப்பதும் அரசியல் அச்சுறுத்தல் இன்றி அதனை செய்வதும் எங்கள் கடமை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/170522
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செல்வதால் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் : அறிக்கை டிசம்பரில் Published By: VISHNU 29 NOV, 2023 | 05:31 PM ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்செயலாக வெளிவந்த கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழி மேலும் விரிவடைந்து செவல்வதாக தெரியவந்ததையடுத்து அகழ்வுப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் நிறுத்தப்படும் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் முதலாம் முதல் மீண்டும் ஆரம்பமாகுமென, நவம்பர் 29ஆம் திகதியான இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சடலங்களை அகழ்ந்து எடுக்கும் பணிக்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். “புதைகுழியானது கொக்கிளாய் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் 1.7 மீற்றர் நீளத்திற்கு நெடுஞ்சாலையை நோக்கி விரிவடைந்துள்ளமை ஸ்கேன் பரிசோதனை ஊடாக தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பிலேயே இன்று கலந்துரையாடப்பட்டது. இந்த புதைகுழி முற்று முழுதாக ஆராயப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அனைவரும் உள்ளனர். எனவே எதிர்வரும் வருடம் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.” அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வைத்தியர் வெளிப்படுத்தினார். "இந்த அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான உத்தரவை நீதவான அரசாங்க அதிபருக்கு வழங்கியுள்ளார். பகுப்பாய்வு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. " இரண்டாம் கட்ட புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்படுவதோடு இத்துடன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன. நவம்பர் 28 ஆம் திகதி வரை கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து குறைந்தது 39 பேரின் எலும்புகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. தற்போது 14 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் நேற்று வெளிப்படுத்தியிருந்தார். கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் அளவை தீர்மானிப்பதற்காக கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களாக ரேடார் கருவிகள் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதன் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து முல்லைத்தீவு நீதவான் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/170562
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி நஞ்சூட்டப்பட்டுள்ளார் - உக்ரைன் புலனாய்வு பிரிவு Published By: RAJEEBAN 29 NOV, 2023 | 11:14 AM உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி நஞ்சூட்ட்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் இராணுவ புலனாய்வுபிரிவு இதனை தெரிவித்துள்ளது. புலனாய்வு பிரிவின் தலைவர் கைரைலோ புடனோவின் மரியானா புடனோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது. எனினும் அவர் எப்போது நஞ்சூட்டப்பட்டார் யார் அதற்கு காரணம் என்ற விபரங்களை உக்ரைன் வெளியிடவில்லை. ரஸ்யாவிற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை முன்னெத்ததன் காரணமாக உக்ரைனில் மக்கள் அபிமானத்தை பெற்றவராக புலனாய்வு பிரிவின் தலைவர் காணப்படுகின்றார். ரஸ்யாவின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் உயிர் தப்பியுள்ளார். இந்த நஞ்சூட்டலிற்கு யார் காரணம் என்பது குறித்த விபரங்கள் வெளியாகத அதேவேளை உக்ரைன் புலனாய்வு பிரிவின் ஏனைய சிலரும் சிறிய நஞ்சூட்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிபிசியின் உக்ரைன் சேவை தெரிவித்துள்ளது. ரஸ்யா இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் இது உள்மோதல் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என ரஸ்ய ஊடகம்தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/170514
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் படுகொலைகளை பார்த்தேன் - வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களை பார்த்தேன் - பிரிட்டன் மருத்துவர் Published By: RAJEEBAN 28 NOV, 2023 | 03:02 PM காசாவில் 43 நாட்கள் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை படுகொலைகளை பார்த்ததாக பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சசை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் சுகாதார கட்டமைப்பை அழிப்பதே இஸ்ரேலின் யுத்தத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அல் அஹ்லி அராப் அல்சிபா மருத்துவமனைகளில் பயங்கரமான சம்பவங்களை பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படுகொலைகள் இடம்பெறுவதை நான் பார்த்திருக்கின்றேன். வாழத்தகுதியற்ற காசாவை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகயிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் மருத்துவகட்டமைப்பு காணப்படும் நவீன வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் அழிப்பதே இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். ஆறு வாரங்கள் காசாவின் மருத்துவமனைகளிற்கு இடையில் மாறிமாறி சென்று கொண்டிருந்த வேளை காயமடைந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது புலனாகியது என அவர் தெரிவித்துள்ளார். சில நாட்களின் பின்னர் நாங்கள் பொஸ்பரஸ் காயங்களை பார்த்தோம் என செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள அபுசிட்டா 2009 இல் காசா பள்ளத்தாக்கில் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களிற்கு சிகிச்சை வழங்கியுள்ளேன். இம்முறை நான் பார்த்த காயங்கள் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களை ஒத்தவையாக காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/170460
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி இருக்கிறது - சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:28 PM கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார். ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் - முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும். இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/170457
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Biggest Drone Attack நடத்திய Russia; Ukraine கொடுத்த பதிலடி... தீவிரமாகிறதா Ukraine - Russia War? யுக்ரேன் தலைநகர் கீயவில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை ரஷ்யா தொடுத்திருப்பதாக கீயவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ரஷ்யா மீது யுக்ரேன் குறைந்தது 24 டிரோன்கள் மற்றும் 2 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுத்ததாகவும் அதனை ரஷ்ய வான் படை முறியடித்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
World Biggest Iceberg: 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘பயணத்தை ’ தொடங்கியது A23a; இனி என்ன ஆகும்? சென்னையை விட 4 மடங்கு பெரியதான உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று 37 ஆண்டுகளுக்கு பிறகு நகரத் தொடங்கியுள்ளது. A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986-இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. Weddell Sea-யில் தரைதட்டிய இந்த பனிப்பாறை பனித்தீவாக மாறியது. கடந்த ஆண்டு வேகமாக விலகத் தொடங்கிய இந்த பனிப்பாறை தற்போது அண்டார்டிக் கடற்பரப்பைக் கடக்கவிருக்கிறது.
-
இலங்கையில் 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிப்பு
நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 27 NOV, 2023 | 05:53 PM நாட்டில் 1300 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார். இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாட்டில் 1,256 தொழு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது . கொழும்பில் 256 தொழுநோயாளர்களும் மட்டக்களப்பில் 130 தொழுநோயாளர்களும் களுத்துறையில் 92 தொழுநோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . நாட்டில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/170401
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ்அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் யார்? மும்பை இந்தியன்ஸ் அணி அன்று 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி ஹர்திக் பாண்டியாவை திரும்பப் பெற தற்போது எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? பின்னணியில் நடந்தது என்ன? ஐபிஎல் 2024ம் ஆண்டு சீசனுக்காக வரும் டிசம்பர் 19-ம் தேதி மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே பரஸ்பரத்துடன் நடந்து வருகிறது. ஐ.பி.எல். மினி ஏலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த பரஸ்பர பரமாற்றம் டிசம்பர் 12ம் தேதிவரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின் டிசம்பர் 19ம் தேதி நடக்கும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் வசம் இருக்கும் தொகைக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்க முடியும். அந்த வகையில் நேற்று ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்களைப் பரிமாற்றம் செய்தல், விடுவித்தல், விலைக்கு வாங்குதல் போன்றவை நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் விருப்பம் தெரிவித்தது. ஹர்திக் பாண்டியா - பின்னணியில் நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இது தொடர்பாக இரு அணிகளின் நிர்வாகிகளுக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவில் எந்த உறுதியான முடிவும் எட்டாததையடுத்து, மாலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியே ஹர்திக் பாண்டியாவை தக்கவைப்பதாக அறிவித்தது. ஆனால், கடைசி கட்டப் பேச்சுவார்த்தையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து வாங்க மும்பை இந்தியன்ஸ் முன்வந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வது குறித்து மும்பை அணி நிர்வாகவோ, குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகமோ இன்று காலை வரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இன்று காலை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி “ குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2 சீசன்களாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, தான் முதன்முதலாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புகிறார். இது தொடர்பாக இரு அணி நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிந்தது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டார். முதன் முதலில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து கடந்த சீசனில் பைனல்வரை அணியைஅழைத்துச் சென்றார். மற்றொரு தனி வர்த்தகத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை ஆர்.சி.பி. அணி விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் பட மூலாதாரம்,EMPICS மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா எம் அம்பானி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் அவரை இணைப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான ஹர்திக் இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அவரின் வருகை எங்களுக்கு உற்சாகமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தாய்வீடு திரும்புதல், ஹர்திக் அணியில் இருந்தாலே அணிக்குள் சமநிலையான போக்கு எந்த அணிக்கும் ஏற்படும். மும்பை அணியில் ஹர்திக் இருந்த போது வெற்றிகரமாக இருந்தது, 2வது முறையாக அணிக்குத் திரும்பிய ஹர்திக் பெரிய வெற்றியைத் தருவார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியாவுக்கு 15 கோடி ரூபாய் தவிர , பரிமாற்றக் கட்டணத்தையும் சேர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அன்று ரூ.10 லட்சம் இன்று ரூ.15 கோடி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரு சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டு, 30 இன்னிங்ஸ்களில் 833 ரன்கள் சேர்த்துள்ளார். ஹர்திக் பாண்டியா சராசரி 41.65 ஆகவும், 133 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார், 11 விக்கெட்டுகளையும் ஹர்திக் வீழ்த்தியுள்ளார். 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.10 லட்சத்துக்கு ஹர்திக் பாண்டியா அன்கேப்டு வீரராக வாங்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் அணியில் முக்கியமான இடத்தை ஹர்திக் பாண்டியா பெற்றார். இதையடுத்து, 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை விடுவித்து அவரை ஏலத்தில் மும்பை அணி எடுத்து பின்னர் 2022ம் ஆண்டு விடுவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது அனைவருக்குமே வியப்பாக இருந்தது. 2021 ம் ஆண்டு ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொலார்ட் ஆகியோரை மட்டும் தக்கவைத்து பெரும்பாலான வீரர்களை விடுவித்தது. இதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்து தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது. கேப்டனாக செயல்பட்ட முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார். கடந்த சீசனில், பைனல் வரை குஜராத் அணியை அழைத்துச் சென்ற பெருமை ஹர்திக் பாண்டியாவையே சாரும். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் மிகவும் மோசமாகச் செயல்பட்டது. நாக்அவுட் சுற்றுக்குள்கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 19 மினி ஏலத்துக்குள் ஏதேனும் பெரிய முடிவுடன் மும்பை இந்தியன்ஸ் வரும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி நிர்வாகம் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியை மீண்டும் அணிக்குள் கொண்டுவருவதற்காக 11 வீரர்களை விடுவித்து ரூ.15.25 கோடியை பெற்றுள்ளது. இது தவிர கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு ஆர்சிபி அணியிடம் விலைக்கு விற்பதால் கூடுதலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கையிருப்பு அதிகரிக்கும். குஜராத் அணிக்கு புதிய கேப்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா சென்றுவிட்டதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2024 சீசனில் யார் தலைமையில் களமிறங்கும் என்ற கேள் வி எழுந்தது. இதனிடையே, 2024 ஐபிஎல் சீசனுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக சுப்மான் கில்லை குஜராத் அணிநிர்வாகம் நியமித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அவர் இருந்துள்ளார். சீனியர் கிரிக்கெட்டில் சுப்மான் கில் முதல்முறையாக கேப்டன் பதவியை ஏற்க உள்ளார். அணி கேப்டனாக குஜராத் அணி நிர்வாகம் நியமித்தது குறித்து சுப்மான் கில் கூறுகையில் “குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்பதில் பெருமை கொள்கிறேன். என்னை அணித் தலைவராக நியமித்த அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இரு சீசன்கள் அற்புதமாக இருந்தது. எங்களின் அற்புதமான அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுப்மான் கில்லின் கேப்டன் அனுபவம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மான் கில்லுக்கு ஏற்கெனவே கேப்டன் அனுபவம் இருந்துள்ளது. 2018ம் ஆண்டு நடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தது பிரித்வி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த துலீப் டிராபி கோப்பைக்கான தொடரில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாகவும் சுப்மான் கில் செயல்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடந்த தியோதர் டிராபியிலும், இந்தியா –சி பிரிவு அணிக்கும் கேப்டனாக சுப்மான் கில் இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். இளம் வயதிலேயே இந்திய அணியை வழிநடத்திய பெருமை சுப்மான் கில்லுக்கு உண்டு. இதற்கு முன் விராட் கோலி 21 வயது 124 நாட்களில் 2009-10ம் ஆண்டு தியோதர் டிராபில் கேப்டனாக இருந்திருந்தார். அவரை முறியடித்த சுப்மான் கில் 20 வயது 57 நாட்களில் தியோதர் டிராபியில் இந்திய –சி அணிக்கு கில் கேப்டனாக செயல்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c4n02z16xypo
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ 26 NOV, 2023 | 06:46 PM விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்று மதிமுக செயலாளர் வைகோ கூறி உள்ளார். சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பழ நெடுமாறன் போன்றோர் விடுதலைப் புலிகளுடன் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது. பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து என வைகோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/170322
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் பிரபல கிரிக்கெட் வீரர் 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக காணப்படுகின்றது. 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஜோ ரூட் விளையாடி வந்தார். ஜோ ரூட்டின் இந்த தீர்மானத்தினை ஏற்றுக்கொள்வதாக ராஜஸ்தோன் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/282464
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மிதக்கத் தொடங்கியுள்ளது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல் அளவு கொண்டது. பனிப்பாறையின் தடிமன் 1,312 அடி. இந்த பனிப்பாறை கடந்த 30 ஆண்டுகளாக கடற்பரப்புடன் இணைந்திருந்ததாகவும், தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் பனி உருகுவதன் விளைவாக உடைந்து மிதந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் மேலும் விளக்கமளிக்கின்றனர். https://thinakkural.lk/article/282455
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
ஐந்து மனித எலும்பு கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு! முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் ஆறாம் நாள் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன. இதன்போது, ஐந்து மனித எலும்பு கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இதுவரையில் 35 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படாது எனவும் அந்த பணிகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, தடயவியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் மற்றும் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://thinakkural.lk/article/282416
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 19 நிமிடங்களுக்கு முன்னர் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ, தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ‘சேரி’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது. ‘சேரி’ என்ற சொல்லை அவர் குறிப்பிட்ட விதம் ‘இழிவான’ விதத்தில் இருந்தது என்பது தான் அதை எதிர்ப்பவர்களின் வாதம். அதைவிட, ‘சேரி’ (Cheri) என்பதற்கு பிரெஞ்சு மொழியில் `அன்புள்ள` என்றுதான் பொருள், அதைத்தான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகவும் குஷ்பூ விளக்கம் தந்திருந்தார். `வேளச்சேரி`, `செம்மஞ்சேரி` போன்ற வார்த்தைகள் அரசு பதிவுகளிலேயே இருப்பதாகவும் தன்னுடைய பதிவுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்பதும் குஷ்பூவின் வாதமாக உள்ளது. உண்மையில் `சேரி` என்ற வார்த்தையின் ஆதி என்ன? அதுவொரு இழிச்சொல்லா? நற்சொல் என்றால், ஏன் அதுவொரு இழிவான சொல்லாகப் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது? வரலாற்று ரீதியில் அந்த வார்த்தையை எதற்காகப் பயன்படுத்தினர்? இந்தக் கேள்விகளுக்கான விடையை இங்கு விரிவாகப் பார்ப்போம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் `சேரி` என்ற சொல் சமூக - பொருளாதார காரணிகளில் பின்தங்கியவர்கள் வசிக்கும் இடங்களைக் குறிப்பதாக சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை எந்த இடத்தில், எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அதன் அர்த்தமும் மாறுகிறது. குஷ்பூ `சேரி` எனக் குறிப்பிட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தலித்திய ஆதரவாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் `சேரி` என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிப்பதாக இருப்பதால், அவர்களை குஷ்பு `இழிவுபடுத்திவிட்டதாக` அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சேரி என்றால் என்ன? பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் `கூடிவாழும் இடம்` என்ற பொருளைக் கொண்டதாகவே `சேரி` என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சோழர் காலத்தில்தான், அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் வசிக்கும் இடங்களைக் குறிக்கும் விதமாக மாறியது என்பதே தமிழ் அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் நமக்குத் தரும் விளக்கமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதன்முதலில் சோழர்கள் காலத்தில் ‘தீண்டாச்சேரி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகளிலும் அதுபற்றிய குறிப்புகள் உள்ளன. சோழர்கள் காலத்தில் (குறிப்பாக, கி.பி. 12ஆம் நூற்றாண்டு) ‘தீண்டாச்சேரி’யில் வாழ்பவர்களை கிணறு வெட்டுதல், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தக்கூடாது என்ற விதிகள் இருந்திருக்கின்றன. அதாவது, தண்ணீர், உணவு போன்றவை சார்ந்த தொழில்களில் `தீண்டாச்சேரி`யில் இருப்பவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற விதிகள் இருந்திருக்கின்றன. பெரியபுராணத்திலும் ‘தீண்டாச்சேரி’ என்ற வார்த்தை, நந்தனார் குறித்துக் குறிப்பிடப்படும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தி இலக்கியங்கள் பலவற்றில் ‘சேரி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சோழர் காலத்தில்தான் மக்களை அவர்கள் சார்ந்த பிரிவு அல்லது தொழிலின் அடிப்படையில் வெவ்வெறு படிநிலைகளாகப் பிரித்ததாகவும் அதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடமாக `சேரி` இருந்ததாகவும் முனைவர் முத்து வெ. பிரகாஷ் கூறுகிறார். சேரி என்ற சொல் இழிசொல்லாக மாறியது எப்படி? பட மூலாதாரம்,@KHUSHSUNDAR “சேரி என்பது மக்கள் கூடி வாழும் இடம். சோழர் காலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் விதமாக இந்தச் சொல் மாறியுள்ளது. ராஜராஜ சோழன் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் நிர்வாக ரீதியாக ஒரு ஊரை வெவ்வேறு படிநிலைகளாகப் பிரித்தனர். கோவிலை மையமாக வைத்துதான் ஊர் உருவாகும். கோவிலை சுற்றித்தான் தெருக்கள் பின்னப்படும். அப்படி, ‘சேரி’ என்பது சமூக படிநிலையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இருக்கும் இடமாக கால மாற்றம் அடைந்தது," என்கிறார் முத்து வெ. பிரகாஷ். வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், சிந்து சமவெளி நாகரிகத்திலும் இத்தகைய பகுப்புகள் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது, முத்து வெ. பிரகாஷின் கூற்றுக்கு வலுசேர்க்கிறது. சோழர் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பிரிவினை, விஜய நகர காலத்தில் இன்னும் தீவிரமாகியுள்ளது. 150-200 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்த வார்த்தை, 19வது நூற்றாண்டில் குறிப்பிட்டதொரு புழக்கத்திற்கு வருகிறது. `குடியிருக்கும் இடம்` என்னும் பொருளை உடைய `சேரி` என்ற சொல்லை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட பிரிவினருக்காகப் பயன்படுத்தி அதை இழிசொல்லாக மாற்றிய போக்கு நிகழ்ந்திருக்கிறது என்கிறார், முனைவர் வெ. பிரகாஷ். சோழர் காலத்தில் 'சேரி' இழிசொல்லாக மாறியதா? பட மூலாதாரம்,GETTY IMAGES தொழில், பண்பாடு, பொருளாதாரம் சார்ந்தும் அந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. `பாக்கம்` என்பது கடற்கரை பகுதிகளைக் குறிப்பது போன்று, `சேரி` என்பது பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிதான் இருக்கும். `பாக்கம்`, `பேட்டை` என்ற பெயர்கள் பொதுமக்கள் அதிகம் அறியாத, புழக்கத்தில் இல்லாத வார்த்தையாக இல்லாதபோதும் சமகாலத்திலும் `சேரி` என்ற வார்த்தை இழிசொல்லாகப் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்விக்கு முத்து வெ. பிரகாஷ் பதிலளித்தார். “பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாத மக்கள் அங்கு இருந்துள்ளனர். இந்த வார்த்தை, பண்பாட்டு ரீதியிலான சொலவடையாக மாறிவிட்டது. ஒடுக்கப்பட்ட சாதியினர் குடியிருக்கும் இடம்தான் சேரி. இதற்கு பொருள் மாற்றம் ஏற்பட்டு சோழர் காலத்தில் அது தீவிரப்படுத்தப்பட்டு மக்களின் சிந்தனைக்குள் வேரூன்றி இப்படி மாறியுள்ளது," என்றார். தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் `சேரி` என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேர்மறையாக `ஊர், குடில்` என்ற பொருளிலேயே அவற்றில் வழங்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் `சேரி` படக்குறிப்பு, ஆ. சிவசுப்பிரமணியன் “கலித்தொகையில் ‘நம்சேரி` என்ற வார்த்தை வருகிறது. தொல்காப்பிய உரையில் ‘சேரி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஊர் எனக் குறிப்பிடுவதற்காக சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவிருத்தத்தில் `சேரிகை` என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது," என சங்க இலக்கிய ஆதாரங்களைக் கூறுகிறார் முத்து வெ. பிரகாஷ். வேறு மொழியில் `சேரி` என்ற வார்த்தை இல்லை என்பதே இருந்திருந்தால் மலையாளம் மொழியில் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர். இன்னும் சில உதாரணங்களை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியம் பகிர்ந்துகொண்டார். “சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் இளங்கோவடிகளும் மதுரையை நோக்கி வரும்போது, மாதரி என்ற பெண்ணின் வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காதை உள்ளது. அதற்கு ‘புறஞ்சேரி இறுத்த காதை’ என்று பெயர். `புறத்தே இருக்கக்கூடிய சேரியில் அவர்களைத் தங்கச் செய்தல்’ என்பது இதன் பொருள். பிராமணர்கள் இருக்கக்கூடிய இடம் ‘பார்ப்பன சேரி’ என்றும் சிலப்பதிகாரத்தில் உள்ளது," எனக் குறிப்பிடுகிறார் ஆ.சிவசுப்பிரமணியம். ஊரும் சேரியும் பட மூலாதாரம்,BHAKTAVATCHALA BHARATHI பேராசிரியரும் மானுடவியல் ஆய்வாளருமான பக்தவத்சல பாரதி `தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்` என்னும் நூலை எழுதியுள்ளார். தமிழ் சமூகம் திணை சார்ந்தது. ஒவ்வொரு திணைக்கும் ஒரு குறிப்பிட்ட ஊர்ப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், `சேரி` என்பது முல்லைத் திணைக்கு உரியதாக பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் `சேரி` முல்லை திணையில் காணப்பட்டாலும் பின்னர் கடற்கரையோர நகரங்களிலும் அவை இருந்துள்ளதாகச் சுட்டுகிறார். அதேபோன்று, `வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்` என்ற தமது நூலில் நொபுரு கரோஷிமா பல சேரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். கம்மாளச்சேரி, ஈழச்சேரி, தலைவாய்ச் சேரி, வண்னாரச்சேரி, பறைச்சேரி, தீண்டாச்சேரி, அறுவை வாணியச்சேரி உள்ளிட்ட பல சேரிகள் இருந்துள்ளன. `மக்களின் வாழிடம்` என்பதே `சேரி` என்ற சொல்லுக்குப் பொருளாக இருந்து வந்த நிலையில், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே குறிப்பிட்ட பிரிவினர் வாழும் இடமாக `இழிசொல்லாக` பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் அந்தப் புத்தகத்தில் நிறுவியுள்ளார். மேலும், ஊர் மேற்கிலும் சேரி கிழக்கிலும் அமைந்திருப்பதற்கு, பொதுவாக ஊரின் நில அமைப்பில் மேற்கு உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் இருக்கும், அதன் பொருட்டே ஊர் மேற்காகவும் சேரி கிழக்காகவும் அமைந்திருப்பதாக விளக்கியுள்ளார். சேயை வசவுச் சொல்லாகப் பயன்படுத்துவது சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES சமகாலத்தில் `சேரி` என்ற சொல் பெரும்பாலும் இழிசொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் என்றால் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் இடங்களையும் நகரங்களில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. சமூக - அரசியல்ரீதியாக `சேரி` என்ற சொல்லின் பயன்பாடு குறித்துப் பேசிய `தலித் முரசு` இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் கூறுகையில், “காலனி, சேரி இரண்டுமே குடியிருப்புதான். ‘ஏற்கெனவே இழிவானவர்கள் என சித்தரிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேசும்போது அதைக் கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும். `சேர்ந்து வாழும் இடம்` என்பதை வசவுச் சொல்லாக ஆக்கிவிட்டனர். எப்போதிருந்து தலித்துகள் இழிவானவர்களாகக் கருதப்பட்டார்களோ, மோசமாக நடத்தப்பட்டார்களோ அப்போதிருந்து அவர்களின் மொழி, உடை, பண்பாடு எல்லாமே இழிவானதாகத்தான் கருதப்படுகிறது. வார்த்தைகளை மாற்றத் தேவையில்லை. அதன் பொருளைத்தான் மாற்றிவிட்டனர்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cy7259nvg1po
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போர் நிறுத்தத்திற்கு பின்னர் ஹமாசின் சுரங்கங்கள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமாக சண்டையை தொடர திட்டமிட்டுள்ளோம். இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் பல சுரங்கங்கள் அழிக்கப்படும். மேலதிக இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் 27 ஆம் திகதி காலாவதியாகும். காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது” என்றார். https://thinakkural.lk/article/282390
-
களைத்த மனசு களிப்புற ......!
இந்த திரியையும் கவனியுங்கோ பையா.
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
Published By: DIGITAL DESK 3 24 NOV, 2023 | 03:50 PM 30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து ஏ23 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் ஒரு பனித் தீவாக மாறியது. 4,000 சதுர கிலோ மீட்டர் நீளம் கொண்ட லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தது. சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார். இந்த பனிப்பாறை 400மீ (1,312 அடி) தடிமன் கொண்டது. 310 மீ உயரம் கொண்ட லண்டன் ஷார்ட், ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடங்களின் உயரத்தை விட உயரம் கூடுதலாக உள்ளது. இது ஒரு பிரமாண்மான பனிப்பாறை என தெரிவிக்கப்படுகிறது. பனிப்பாறை கடந்த ஆண்டு வேகமாக நகர தொடங்கியது. அண்டார்டிக் கடற்பரப்பிற்கு அப்பால் கசியவுள்ளது. பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் என்றழைக்கப்படும் வெள்ளைக் கண்டம் இக்கண்டத்தின் பனி அடுக்கில் இருந்து பெருமளவில் வெடித்த பெரும் பாறைகளின் ஒரு பகுதியாகும். https://www.virakesari.lk/article/170152
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாக செல்லும் சாத்தியக்கூறுகள் : முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி 25 NOV, 2023 | 09:44 AM கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும். இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/170195
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நேற்று 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு : இன்று ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை 24 NOV, 2023 | 09:54 AM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (23) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது. நேற்று மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன் துப்பாக்கி குண்டு சன்னங்கள் மற்றும் குண்டு சிதறல்கள் இலக்கத் தகடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இதுவரையில் மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. நான்காவது நாளான நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 24 அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை நடைபெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/170109
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது – அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 23 NOV, 2023 | 01:13 PM காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவுஸ்திரேலியாவின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். காசாவிலும் மேற்குகரையிலுமிருந்து இஸ்ரேலிய படையினரை வெளியேற்றவேண்டும் இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை அவுஸ்திரேலியா நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. உணர்வுபூர்வமான உரைகளும் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை நோக்கி உணர்வுபூர்வமாக உரையாற்றிய மாணவர் ஒருவர் காசாமீதான இஸ்ரேலின்; ஆக்கிரமிப்பும் குண்டுவீச்சும் படுகொலை என தெரிவித்துள்ளார். காசாவில் இடம்பெறுவது பெரும் அநீதி என்பதாலேயே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 14000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இது இனப்படுகொலை ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்பதை தெரிவிக்கவே நாங்கள் பாடசாலைகளில் இருந்து வெளியே வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். மற்றுமொரு மாணவன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து கண்ணீருடன் உரையாற்றியுள்ளதுடன் காசா மோதலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்துள்ளார். https://www.virakesari.lk/article/170052
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்தியா சதித் திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES 24 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. ‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வாழும் ஒரு காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கொலை செய்வதற்கு இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அதை அமெரிக்கா முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதியில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் அமெரிக்காவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. செய்தியறிக்கையின்படி, இந்த சதித் திட்டத்தின் இலக்கு குர்பத்வந்த் சிங் பன்னு. இவர் சீக்கிய தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதி. காலிஸ்தானை உருவாக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பின் வழக்கறிஞர். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார். இவர் 2020ஆம் ஆண்டு இந்தியாவால் 'பயங்கரவாதி' என்று அறிவிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் வான்கூவரில் சுட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் மாதம், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்து 'நம்பகமான குற்றச்சாட்டுகள்' இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றது, அபத்தமானது’ என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த முறை, அமெரிக்காவில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்துக் கூறப்படும் செய்திகள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இந்தியா கூறியுள்ளது. பட மூலாதாரம்,NIA/SOCIAL MEDIA படக்குறிப்பு, இந்தியாவில் இருக்கும் பன்னுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மீது என்ன குற்றச்சாட்டு? பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு, பன்னுவை கொல்ல நடந்த சதித் திட்டம் பற்றிய தகவல்களை அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது. ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு பயணம் செய்த பிறகு, இது தொடர்பாக அமெரிக்கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அமெரிக்கா, ராஜ்ஜீய மட்டத்தில் இந்தியாவை எச்சரித்தது. மேலும் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒருவர் மீது நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது, என்று அந்த செய்தித்தாள் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது. தற்போது, இந்த வழக்கை பகிரங்கப்படுத்த வேண்டுமா அல்லது நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணையை கனடா முடிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை விவாதித்து வருவதாகவும் அந்தச் செய்தியறிக்கை கூறுகிறது. வான்கூவரில் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனேடிய அதிபர் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அமெரிக்கா இது பற்றிய விரிவான தகவல்களை அதன் நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது. இந்த வழக்குகளின் ஒரே மாதிரியான வடிவம் குறித்து இந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கையின்படி, அமெரிக்க நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐ இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதோடு 'சட்ட விஷயங்கள்' மற்றும் 'ரகசிய இராஜதந்திர தகவல்தொடர்புகள்' குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதில்லை என்றும் கூறியது. இந்தியா ஆட்சேபனை தெரிவித்த பிறகு சதித்திட்டம் தீட்டியவர்கள் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டார்களா, அல்லது எஃப்.பி.ஐ தலையிட்டு சதித்திட்டத்தை முறியடித்ததா என்பதை இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை என்றும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம்,X படக்குறிப்பு, நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் பன்னு அறியப்படுகிறார். யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னு? குர்பத்வந்த் சிங் பன்னு காலிஸ்தான் ஆதரவாளரான அமெரிக்க வழக்கறிஞர். அவரது வயது 40 முதல் 50 வயது வரை இருக்கலாம். இவர் அமிர்தசரஸ் அருகே உள்ள கான்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மகிந்தர் சிங் பஞ்சாப் மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் பணிபுரிந்தவர். பன்னு 1990களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இப்போது அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ளார். கனடாவில் காலிஸ்தான் சார்பு நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அவர் அடிக்கடி காணப்படுகிறார். நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார். பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, அவரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து அமெரிக்க நிர்வாகம் அவருக்குத் தெரிவித்ததா இல்லையா என்பதைக் கூற பன்னு மறுத்துவிட்டார். அவர், “அமெரிக்க மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்தட்டும்,” என்றார். பன்னு மேலும், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். பைடன் நிர்வாகம் இதுபோன்ற சவால்களைச் சமாளிக்கும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன்," என்றார். கடந்த வாரம், பன்னு, ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று சீக்கியர்களுக்கு எச்சரித்திருந்தார். அவ்வாறு செய்வது ‘உயிருக்கு ஆபத்தானது’ என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை பன்னு மீது ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பினையும் பாதிப்பதாகவும், அதனால் இதை இந்தியா தீவிரமாக விசாரித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது இந்தியாவின் பதில் என்ன? பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, குழுவாகச் செயல்படும் குற்றவாளிகள், சட்டவிரோத துப்பாக்கி வியாபாரிகள், பயங்கரவாதிகள், மற்றும் பலர் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது,’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், "இந்தத் தகவல் இரு நாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயம். இது குறித்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்," என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பையும் பாதிப்பதாகவும், அதனால் இந்தியா இதைத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்கா வழங்கிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c2q21lpx6d9o
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் ஐந்து மனித எச்சங்கள், துப்பாக்கிச்சன்னம் உள்ளிட்டவை மீட்பு Published By: DIGITAL DESK 3 23 NOV, 2023 | 10:31 AM முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. நாளை நான்காம் நாள் அகழ்வு பணி இடம்பெறவுள்ளது. அத்துடன் நேற்றையதினம் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு - இ0043, O+ எனவும் மற்றுமொரு குறியீடும் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/170027