Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. தமிழ்க் கல்வி அதிகாரிகளின் நியமனங்களை விரும்பாத பேரினவாத செயற்பாடுகள் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 09:39 AM (சிவலிங்கம் சிவகுமாரன்) அதிக தமிழ் பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்டிருக்கக் கூடிய அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களை நான்காக பிரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் திடீரென அவை மூன்றாக குறைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டமானது தொடர்ச்சியாக தமிழ்க் கல்வி அமைச்சை தக்க வைத்திருக்கும் பிரதேசமாகும். கல்வி இராஜாங்க அமைச்சும் இம்மாவட்டத்துக்கே கிடைத்திருந்தது. எனினும் இந்த பதவிகள், எந்தளவுக்கு நிர்வாக பொறுப்புகளை தமிழ் அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்பது கேள்விக்குரியே. நுவரெலியா மாவட்டத்துக்கு மேலதிக பிரதேச சபைகளை அமுல்படுத்த விடாது எந்த மறை கரங்கள் செயற்பட்டனவோ அதே போன்று தான் தற்போது கல்வி வலயங்களை பிரிக்கும் விவகாரத்திலும் அந்த பேரினவாத கரங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. தமிழ் சமூகம் செறிவாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் அவர்களுக்கான எந்த சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்க விடாது செய்யும் பேரினவாத சிந்தனைகள் கொண்ட அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் தமது காய் நகர்த்தல்களை கச்சிதமாக முன்னெடுத்திருந்தனர். இவர்களுக்கு பல அதிகாரிகளும் பின் நின்றனர். தகுதிகள் இல்லாவிட்டாலும் சிங்கள இன அதிகாரிகள் உயர் பதவிகளை அலங்கரித்தனர். இப்போது கல்விச்சேவைகளில் தமிழ் அதிகாரிகளை உள்ளீர்க்க விடாது இவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை, நுவரெலியா மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டும் காணாதது போன்று உள்ளனரா அல்லது வாய் திறக்க பயப்படுகின்றனரா என்பது தெரியவில்லை. அதுவும் மலையகத்தில் இனி அடக்குமுறை அரசியலுக்கு இடமில்லையென்றும், அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் உரிமைக்காக பாடுபடுவோம் என்றும் ஒரே மேடையில் தோன்றி மக்களை உற்சாகப்படுத்தியவர்கள் இனி துணிகரமாக இவ்வாறான சம்பவங்கள் குறித்து குரல் எழுப்பாமலிருந்தால் எப்படி? கல்வி வலயங்கள் பிரிப்பு அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள கல்வி வலயங்களை விஸ்தரிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களை விஸ்தரிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமிழ்க் கல்வி சமூகத்துக்கு வேண்டுமென்றே பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருகின்றன. அதிக தமிழ்ப் பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்ட நுவரெலியா –அட்டன் கல்வி வலயங்களில், அட்டன் கல்வி வலயத்துக்கு மாத்திரமே கடந்த சில வருடங்களாக தமிழ் வலயக்கல்வி பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் நுவரெலியா கல்வி வலயத்துக்கு தமிழ் வலயக் கல்வி பணிப்பாளர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை மத்திய மாகாண கல்வித் திணைக்களமும் நுவரெலியா மாவட்ட சிங்கள பிரதிநிதிகளும் என்றும் தருவதில்லை. மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை இது வரை நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அலங்கரித்து வந்தாலும் கூட இவர்களின் அதிகாரங்கள் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் எடுபடாது என்பதற்கு இது ஒன்றே உதாரணமாகும். அட்டவணை–1 இல வலயம் தமிழ்பாடசாலைகள் சிங்களபாடசாலைகள் 01 நுவரெலியா 131 30 02 ஹட்டன் 115 31 03 வலப்பனை 30 89 04 கொத்மலை 42 43 05 ஹங்குறன்கெத்த 12 69 நுவரெலியாவில் அமைந்துள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் அதிக தமிழ்ப்பாடசாலைகளைக் கொண்ட வலயங்களாக நுவரெலியாவும் அட்டனுமே உள்ளன. (அட்டவணை –1) 246 பாடசாலைகளிலும் சுமார் 78 ஆயிரம் வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில், கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நுவரெலியா வலயமானது, 1) நுவரெலியா கல்வி வலயம் 2) தலவாக்கலை கல்வி வலயம் என இரண்டாகவும் அட்டன் வலயமானது, 1) அட்டன் கல்வி வலயம் 2) நோர்வூட் கல்வி வலயம் எனவும் நான்கு புதிய வலயங்களாக பிரிக்கப்படுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் திடீரென இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு தலவாக்கலையின் ஒரு பகுதி மற்றும் கொட்டகலை அடங்கலாக அட்டன் கல்வி வலயம் என்றும் மஸ்கெலியா மற்றும் நோர்வூட் அடங்கலாக நோர்வூட் கல்வி வலயம் என்றும் அக்கரபத்தனை , டயகம பிரதேச பாடசாலைகளைக்கொண்ட நுவரெலியா வலயம் என மூன்றாக பிரிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் இந்த கல்வி வலயங்கள் பிரிக்கப்படுவதற்கான ஆலோசனைகளை யார் முன்னெடுத்தது, நுவரெலியா மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களுக்கு இந்த நடவடிக்கைகள் தெரியுமா, தெரிந்து கொண்டே அவர்கள் அமைதி காக்கின்றனரா, அல்லது நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்ப் பிரதிநிதிகள் எவருமே அரசாங்கத்தின் பக்கம் இல்லாத காரணத்தினால் அவர்களை அலட்சியப்படுத்தி விட்டு மத்திய மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் இதை முன்னெடுக்கின்றனரா ? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் அவசியமாகவுள்ளன. தமிழ்ப் பணிப்பாளர்களுக்கான வாய்ப்பை மறுதலித்தல் வலயக் கல்வி கட்டமைப்புகள் அமுல்படுத்தப்பட்டவுடன், வலயக்கல்விப் பணிப்பாளர்களாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் (SLEAS) கொண்டவர்களையே நியமிக்க வேண்டும் என்ற கொள்கை இருந்தது. ஆரம்பத்தில் மலையகப் பிரதேசங்களில் இப்பரீட்சைகளில் தோற்றும் அதிபர், ஆசிரியர்களின் அல்லது வலயக்கல்வி பணிமனையில் பணிபுரியும் உதவிக் கல்வி பணிப்பாளர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீட்சைகளிலும் சேவை மூப்பு அடிப்படையிலும் நான்கு கல்வி வலயங்களிலும் தரம் 1 மற்றும் 3 வரையான தமிழ் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் 18 பேர் உள்ளனர். (அட்டவணை –௨) ஆனால் இவர்களின் தகுதிக்கேற்றவாறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். உதாரணமாக ஹங்குரன்கெத்த கல்வி வலயப் பணிப்பாளராக தரம் 3 ஐ கொண்ட பெரும்பான்மையினத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் தரம் 1 மற்றும் 2 ஐ கொண்ட தமிழ் உத்தியோகத்தர்கள் இம்மாவட்டத்தில் இருக்கின்ற போதிலும் குறித்த கல்வி வலயத்தில் சிங்கள பாடசாலைகளைக் கருத்திற்கொண்டு அந்நியமனம் இடம்பெற்றுள்ளது. அட்டவணை –2 இல வலயம் கல்விநிர்வாகசேவை உத்தியோகத்தர்கள் 01 நுவரெலியா 06 02 அட்டன் 08 03 வலப்பனை 01 04 கொத்மலை 03 05 ஹங்குரன்கெத்த - நுவரெலியா கல்வி வலயத்தில் அதிக தமிழ்ப்பாடசாலைகள் இருந்தாலும் கூட அங்கு சிங்கள மொழி வலயக்கல்விப் பணிப்பாளர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக பல செய்திகள் பிரசுரமானதைத் தொடர்ந்து அங்கு மேலதிக கல்வி பணிப்பாளராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அடுத்த வருடமளவில் அவர் ஓய்வு பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதன் பிறகு அந்த வெற்றிடத்துக்கு எவரையும் நியமிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு எனலாம். நுவரெலியா கல்வி வலயத்துக்கு புதிய வலயக்கல்வி பணிப்பாளர் நியமனத்தின் பிறகு அவரை வரவேற்கும் நிகழ்வின் போது எந்த தமிழ்ப்பாடசாலை அதிபர்களுக்கும் அது குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்பது கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தது. முழுக்க முழுக்க சிங்கள பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மட்டும. இந்த நிகழ்வை முன்னின்று நடத்தினர். குறித்த கல்வி வலயத்தில் பணி புரியும் தமிழ் கல்வி அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அமைதியாக இருந்து விட்டனர். தற்போது அதிக தமிழ்ப் பாடசாலைகள் மற்றும் ஆசிரிய மாணவர்களைக் கொண்ட மூன்று கல்வி வலயங்களை உருவாக்கும் வாய்ப்பை பெரும்பான்மை அதிகாரிகள் தட்டிக் கழித்துள்ளனர். மட்டுமின்றி மூன்று கல்வி வலயங்களுக்கும் மூன்று தமிழ் வலயக்கல்வி பணிப்பாளர்களை உருவாக்கும் சந்தர்ப்பத்தையும் அவர்கள் கிடப்பில் போட்டுள்ளனர். இது தமிழ்க் கல்வி சமூகத்துக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியாகும். இது குறித்து நுவரெலியா மாவட்ட எம்.பிக்கள், முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் வாய் மூடி மெளனம் காப்பது தமது சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும். மட்டுமன்றி பல தியாகங்கள் ,சவால்களுக்கு மத்தியில் கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்து தமது சேவைகளையும் அனுபவங்களையும் சமூகத்துக்காக ஆற்றவும் பகிரவும் காத்திருக்கும் தமிழ் உத்தியோகத்தர்களின் முயற்சிகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் முற்றாக மழுங்கடிக்கச்செய்யும் செயலாகவும் இது உள்ளது. ஆனால் ஏனைய பிரதேசங்களில் அவ்வாறில்லை. ஒரு கல்வி வலயமானது 40 பாடசாலைகளையும் சராசரியாக 20 ஆயிரம் மாணவர்களையும் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன் அது சில இடங்களில் அமுல்படுத்தப்பட்டும் வருகின்றது. இதன் மூலம் கல்வி வளங்களை சரிசமமாக பகிர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் இதில் பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருகின்றன. நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலயங்களில் மாத்திரம் ஒரு வலயத்துக்கு சராசரியாக 40 ஆயிரம் மாணவர்கள் உள்ள அதே வேளை நூறுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் உள்ளன. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இந்த பாரபட்சங்கள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கும் நீதி கேட்பதற்கும் குறித்த கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களுக்கு பெரும் பங்குள்ளது. ஏனெனில் பல இளம் அதிபர்கள் அதிபர் சேவை தரம் 1 கொண்டிருக்கும் அதே வேளை எதிர்காலத்தில் கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைகளுக்கு முகங்கொடுத்து அடுத்த கட்டமாக கல்வி அதிகாரிகளாக வருதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அட்டன் கல்வி வலயத்தில் கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐ கொண்ட ஒரு பெண் அதிகாரியை வெறுமனே உட்கார வைத்திருக்கின்றனர். தமிழ்க் கல்வி அமைச்சு தொடர்ச்சியாக நுவரெலியாவுக்கே கிடைத்து வருகின்றது என்ற வரலாற்றுப் பெருமைகளைப் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன் உள்ளது? அந்த அமைச்சு மூலம் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளின் ஊடாக பல பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் கிடைத்திருக்கலாம். அதிபர் , ஆசிரியர் இடமாற்றங்களை தமது விருப்புக்கேற்றவாறு செய்திருக்கலாம். ஆனால் கல்வி நிர்வாக செயற்பாடுகளில் எத்தனை தமிழர்களுக்கு சந்தர்ப்பத்தை இந்த அமைச்சு பெற்றுக்கொடுத்திருக்கின்றது? அல்லது சிபாரிகளை செய்திருக்கின்றது? மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் அல்லது செயலாளர் என்ற பொறுப்புகளும் பதவிகளும் கடந்த காலங்களில் இந்த விடயத்தில் ஆற்றிய பங்களிப்புகள் என்ன? தற்போது மாகாண சபைகள் இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு இடம்பெறுகின்றன என எவரும் இந்த விவகாரத்தை தட்டிக் கழித்து விட முடியாது. நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அவர்களே கூற வேண்டும். https://www.virakesari.lk/article/140039
  2. இருபது20 குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க பிசிசிஐ ஆராய்கிறது By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 03:56 PM இருபது20 போட்டிகளுக்கான இந்திய குழாமில் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனிக்கு முக்கிய பதவியொன்றை வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 10 விக்கெட்களால் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து. இந்திய அணியை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் மஹேந்திர சிங் தோனிக்கு முக்கிய பதவியை வழங்கி அவரை குழாமில் வைத்துக்கொள்வவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளிhயகியுள்ளது. மற்றொரு முன்னாள் அணித்தலைவர் ராகுல் திராவிட் 3 வகைப் போட்டிகளுக்கும் இந்திய அணியின் பயிற்றுநராக உள்ளமை அவருக்கு பணிச்சுமையை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. இதனால், இருபது20 போட்டிகளுக்கான குழாமில் தோனிக்கு முக்கிய பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/140124
  3. ' சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் ' - பைடனுக்கு ஜி ஜின்பிங் பதிலடி By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:27 AM சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார். இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில், ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் (15, 16)நடைபெறுகிறது. இதில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், சீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மைக்காலமாக சீனா மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன் பாணியில் இருந்தால் சீனாவின் ஜனநாயகம் சீன பாணியில் தான் இருக்கும் என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நிலவுகிறது. இதனை பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், சில கல்வியாளர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது சர்வாதிகார போக்கு என்றும் சீனாவில் நீதித்துறை சுதந்திரமாக இல்லை, ஊடக சுதந்திரம் இல்லை என்று விமர்சித்து வருகின்றன. கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பைடன் உலகளவில் 100 தலைவர்களை திரட்டி இணையவழியில் ஒரு மாநாட்டை நடத்தினார். அதில் நாம் உரிமைகள், ஜனநாயகம் சரிவதை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து துணிச்சலுடன் மனிதகுல முன்னேற்றத்தையும், மனிதகுல சுதந்திரத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசியிருந்தார். இந்தக் கூட்டத்திற்கு சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இந்தக் கூட்டம் பிரிவினையை தூண்டுகிறது என்று சீனா விமர்சித்திருந்தது. இந்நிலையில் சீன ஜனநாயகத்தை தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சிக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/140050
  4. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்த சம்பவம் - சீற்றத்தில் தமிழ்நாடு By RAJEEBAN 15 NOV, 2022 | 04:51 PM மருத்துவர்களின் தவறினால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட்டுவலி சிகிச்சைக்கு சென்ற பிரியா என்ற மாணவியும் கால்பந்தாட்ட வீரங்கனை மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உயிரிழந்த மாணவி பிரியாவின் உடலை வாங்க மறுத்து, மாணவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை பேச்சுவார்த்தையின் முடிவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா (17). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த பிரியா இன்று காலை உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப்பின் மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், மாணவியின் கால்பந்தாட்ட விளையாட்டு நண்பர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் மாணவி பிரியாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை பேச்சுவார்த்தையின் முடிவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா, அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். சிகிச்சையின்போது அரசு மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியத்தால் விலைமதிப்பற்ற ஓர் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசு மருத்துவர்களின் அலட்சியமும், அரசு மருத்துவமனைகளின் தரமற்ற தன்மையும், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமையின்மையுமே மகள் பிரியா உயிரிழந்ததற்கு முக்கியக் காரணமாகும். கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் அர்ப்பணிப்புணர்வோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது மிக இன்றியமையாததாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும். தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்யத் தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாக செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. மகள் பிரியா தலைநகர் சென்னையைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை என்பதால் செய்தி ஊடகங்களின் மூலம் அவரது மரணமும், அரசு மருத்துவமனைகளின் அவலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நிகழும் குரலற்ற கிராமப்புற ஏழை மக்களின் மரண ஓலங்கள் அரசின் செவிகளை வந்தடையாமலே அடக்கி ஒடுக்கப்படுகின்றன என்பதே எதார்த்த உண்மையாகும். எனவே, தமிழ்நாடு அரசு இனியும் மகள் பிரியாவிற்கு நேர்ந்தது போன்று, அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் மற்றும் தவறான மருத்துவத்தினால் யாதொரு உயிரும் பறிபோகாதவாறு காக்க உரிய அறிவுறுத்தலையும், வழிகாட்டலையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தவறான அறுவை சிகிச்சையால் மகள் பிரியா உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த மகள் பிரியாவின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். “மாணவி பிரியாவை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை? யார் அனுமதி மறுத்தது? அதற்கு யார் காரணம்? மாணவியை அங்கிருந்து திருப்பி அனுப்பியது யார்? எனவே இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/140136
  5. ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் வடக்கு - கிழக்கு ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் - கலையரசன் By VISHNU 15 NOV, 2022 | 03:25 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதற்காக நாம் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும். பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் யுத்தக் கால பாதீடாக காணப்படுகிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தமிழ் மக்களை முற்றாக ஏமாற்றியுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்குமென 539 பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளதன் மூலம் இது ஒரு யுத்தகால வரவு செலவுத்திட்டம் போலவே உள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான எந்த அறிவிப்புக்களும் இதில் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு காணப்படுமென ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இத்தனை வரவேற்கின்றோம்.தற்போது வடக்கு ,கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு காணும் நடவடிக்கையின் முதல் கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நாம் அவருடன் தீர்வுக்காக இணைந்து பயணிக்க முடியும். வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நீதி அமைச்சரால் விசேட செயலணி அமைக்கப்பட்டதுபோல் கிழக்கிலும் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட செயலணி அமைக்கப்பட வேண்டும். அரசும் அமைச்சர்களும் வடக்கையும் கிழக்கையும் ஒரே மாதிரியாகவே பார்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/140111
  6. சிறையில் அரசியல் கைதி என எவரும் இருக்கக் கூடாது : அரசியல் கைதி பார்த்தீபனின் சகோதரி உருக்கமான வேண்டுகோள் By VISHNU 15 NOV, 2022 | 05:01 PM இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன் சிறையில் அரசியல்கைதி என எவரும் இருக்க கூடாதென உருக்கமான கோரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்கள் அண்ணாவும் நானும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலமாக விடுதலை விடுதலை எனக்கூறி அந்த விடுதலை கிடைக்கவில்லை. எதிர்வரும் பொங்கலுக்குள் அண்ணா வருவார் என்று நம்புகிறோம். அம்மா அப்பா இல்லாத நேரத்தில் எங்களுடன் இணைந்து அண்ணா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அண்ணா 18 வயதில் சிறைசென்று 46 வயதாகிவிட்டது. அண்ணாவின் விடுதலையை எதிர்பார்த்து அம்மா உயிரிழந்துவிட்டார். அண்ணாவின் வாழ்க்கை சிறையில் முடிந்துவிடாமல் அவரை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு அடிப்பபையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில், அண்மையில் விடுதலையான தமிழ் அரசியல் கைதி வேலாயுதம் வரதராஜன் கருத்து தெரிவிக்கையில், 23 வருட சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்று வந்துள்ளேன். எனது குடும்பத்துடன் இணைந்து மகிழ்வாக இருக்கின்றேன். அனைத்து தமிழரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. எமது விடுதலையை சாத்தியப்படுத்திய ஜனாதிபதிக்கும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவுக்கும் மிக்க நன்றிகளை தெரியப்படுத்த விரும்புகிறேன். எமது விடுதலைக்காக இதயசுத்தியுடன் செயற்பட்ட ஒவ்வொரு அமைப்புகளுக்கும் இவ்விடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இறுதி அரசியல் கைதி விடுதலை செய்யும் வரை இந்த விடயத்தை தொடர்ந்து முன்னெடுத்து அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்வாக வாழ வழிசெய்ய வேண்டும் நீண்ட காலம் சிறையிலிருந்து வரும் கைதிகள் மிகவும் பின் தங்கிய பூச்சிய நிலையிலேயே இருக்கின்றார்கள். அதனால் நமது சமூகத்தில் அக்கறை கொண்ட அமைப்புகள் விடுதலைப் பெற்று வந்தவர்கள் சமூகத்தில் வாழ்வை ஆரம்பித்து முன் கொண்டு செல்வதற்கு உதவி செய்ய வேண்டும் என கோரினார். அத்துடன், அண்மையில் விடுவிக்கப்பட 8 அரசியல் கைதிகளுக்கும் அமைப்பொன்றினால் உதவிதொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு இந்நேரம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். அதேவேளை குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் கருத்து தெரிவிக்கையில், சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 33 பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/140128
  7. சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை ப்ரியா இறந்தது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த கால்பந்து வீரரும் கல்லூரி மாணவியுமான ப்ரியா அரசு மருத்துமனையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்திருக்கிறார். அறுவை சிகிச்சையின்போதும், அதற்குப் பிறகும் நடந்தது என்ன? முழு விவரம். சென்னை புளியந்தோப்புக்கு அருகில் உள்ள கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. 17 வயதாகும் இவர் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக முழங்காலில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பரிசோதித்தபோது, எலும்புகளை இணைக்கும் தசைநார் கிழிந்திருந்தது (Ligament tear) கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக மாணவி சென்னை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறிய துளைமூலம் அறுவை சிகிச்சை (arthroscopy) செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த மாணவியின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த பத்தாம் தேதியன்று கொண்டுவரப்பட்டார். இதற்கடுத்து அவருடைய காலின் ஒரு பகுதி அழுக ஆரம்பிக்கவே, அதனை அகற்ற முடிவெடுக்கப்பட்டது. ஆனால், உடல்நிலை மோசமடைந்து, ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து அவர் உயிரிழந்தார். சென்னையில் 17 வயது கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையால் மரணம்: 2 மருத்துவர்கள் இடைநீக்கம்7 மணி நேரங்களுக்கு முன்னர் ப்ரியாவின் சிகிச்சையில் என்ன பிரச்னை? ப்ரியாவுக்கு பெரியார் நகரில் நடந்த அறுவை சிகிச்சையின்போது காட்டப்பட்ட அலட்சியமே அவருடைய உயிரை எடுத்திருக்கிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளின்போது, ரத்தப்போக்கை தடுப்பதற்காக பிரதானமான தமனியைச் (artery) சுற்றி Tourniquet எனப்படும் கயிறு போன்ற பட்டைகள் அழுத்திக் கட்டப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இந்த 'டார்னிக்' கழற்றப்படும். ஆனால், ப்ரியாவின் விஷயத்தில் இந்த டார்னிக்கைக் கழற்றுவதில் மருத்துவர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் மிகத் தாமதமாகவே அந்த டார்னிக் அகற்றப்பட்டுள்ளது. நீண்ட நேரம் டார்னிக் கட்டப்பட்டிருந்ததால், காலில் Vascular occlusion எனப்படும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால், டார்னிக் கட்டப்பட்டிருந்த பகுதிக்குக் கீழே இருந்த செல்கள் அழுக ஆரம்பித்தன. இந்த நிலையில்தான் அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு காலை, அழுகிய பகுதிவரை எடுக்க முடிவுசெய்யப்பட்டு எடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு அழுகிய செல்களை அகற்றும் Debridement treatment எனப்படும் சிகிச்சையும் ப்ரியாவுக்கு நேற்று அளிக்கப்பட்டது. ஆனால், சேதமடைந்த தசைப் பகுதியிலிருந்து Myoglobin எனப்படும் புரதம் உருவாகி, ரத்தத்தில் கலக்க ஆரம்பித்தது. இந்த 'மையோக்ளோபின்' சிறுநீரகத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நச்சுப் புரதம். இந்தப் புரதம் ரத்தத்தில் கலந்ததால், அந்த ரத்தத்தைச் சுத்திகரித்த சிறுநீரகம் செயலிழந்தது. இதையடுத்து கல்லீரலும், அதற்குப் பிறகு இருதயமும் செயலிழந்து மாணவி உயிரிழந்தார். உரிய காலத்தில் டார்னிக் அகற்றப்படாததே இந்த ஒட்டுமொத்தப் பிரச்னைக்கும் காரணம் என ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் தெரிவித்தார். இந்த விவகாரத்தை விசாரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு மருத்துவர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c19v73m07klo
  8. சிறுவர்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறையிட தொலைபேசி இலக்கங்கள் By VISHNU 15 NOV, 2022 | 03:17 PM சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளன. சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் 1938 என்ற இலக்கத்துக்கும் தெரிவிக்கலாம். வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இது தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/140109
  9. காந்தியை கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள் - ஓர் அலசல் 24 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MONDADORI VIA GETTY IMAGES படக்குறிப்பு, நாதுராம் கோட்சே உயர்நிலைப் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தையல்காரராகப் பணிபுரிந்தார் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை. இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய தலைவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெளியே வந்தபோது, அவரை நாதுராம் விநாயக் கோட்சே சுட்டுக் கொன்றார். 38 வயதான அவர் ஒரு வலதுசாரி கட்சியான இந்து மகாசபாவில் உறுப்பினராக இருந்தார். முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தானின் மீது மென்மையாகவும் நடந்து கொண்டதன் மூலம் காந்தி இந்துக்களுக்கு துரோகம் இழைத்ததாக இந்து மகாசபை குற்றம்சாட்டியது. 1947இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் உருவாக்கப்பட்ட பிரிவினைக்காக, ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கும் காந்தியே காரணம் என்று அந்த கட்சியினர் குற்றம்சாட்டினார்கள். காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு விசாரணை நீதிமன்றம் கோட்சேவுக்கு மரண தண்டனை விதித்தது. 1949ஆம் ஆண்டு நவம்பரில் அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்டார். (அவரது கூட்டாளியான நாராயண் ஆப்தேவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது). கோட்சே பெயரில் நூலகம் அமைத்த இந்து மகாசபா தலைவர்: எழும் கடும் எதிர்ப்பு காந்தியின் கொலையை காவல்துறை தடுத்திருக்க முடியாதா? இந்து மகாசபாவில் சேருவதற்கு முன்பு, கோட்சே இந்தியாவில் தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கருத்தியல் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (தேசிய தொண்டர் அமைப்பு) என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 95 ஆண்டுகள் பழமையான அந்த இந்து தேசியவாத அமைப்பின், நீண்டகால உறுப்பினராக இருப்பவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. அவரது அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்.எஸ்.எஸ் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்துவதாக ஒரு கருத்து உள்ளது. "தேசத்தின் தந்தை" என இந்தியர்களால் விரும்பி அழைக்கப்படும் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை, ஒரு தனி அடையாளத்துடனேயே ஆர்எஸ்எஸ் வர்ணித்து வருகிறது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இந்து வலதுசாரிகளின், ஒரு குழு கோட்சேவை மிகப்பெரிய நபராக உருவகப்படுத்தி, காந்தியின் கொலையை வெளிப்படையாகவே கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு பாஜக எம்பி ஒருவர் கோட்சேவை "தேசபக்தர்" என்று வர்ணித்தார். ஆனால், அந்த போக்கு பெரும்பாலான இந்தியர்களை கோபப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,UNIVERSAL HISTORY ARCHIVE/ UNIVERSAL IMAGES GROUP படக்குறிப்பு, காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார் இந்த விஷயத்தில் ஆர்எஸ்எஸ் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. கோட்சே காந்தியைக் கொல்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தங்களுடைய அமைப்பை விட்டு வெளியேறினார் என்று அந்த அமைப்பு, எப்போதுமே கூறி வருகிறது. ஆனால், அந்தக் கூற்று முற்றிலும் உண்மை இல்லை என்று சமீபத்தில் வெளிவந்த, புதிய புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய கோட்சே கூச்ச சுபாவமுள்ளவர். இந்து மகாசபையில் சேருவதற்கு முன்பு அவர் தையல்காரராகப் பணிபுரிந்து வந்தார். பிறகு பழ வியாபாரம் செய்தார். அதைத்தொடர்ந்து இந்து மகா சபையில் சேர்ந்து, அதன் நாளிதழின் பத்திகளை சரிபார்க்கும் வேலையை செய்து வந்தார். வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 150 பத்திகளை படிக்க அவர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் அந்த புத்தகம் கூறுகிறது. பட மூலாதாரம்,HAYNES ARCHIVE/POPPERFOTO படக்குறிப்பு, காந்தியின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியை புடைசூழ்ந்து அணிவகுத்துச் செல்லும் கடற்படை வீரர்கள். காந்தியைக் கொல்லும் செயலில் "எந்த உள்நோக்க சதியும் இல்லை" என்று அவர் கூறினார். அதனால் தமது கூட்டாளிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார். இந்துத்துவம் அல்லது இந்துமயம் என்ற கருத்தியலை தோற்றுவித்த, தனது தலைவரான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வழிகாட்டுதலின் கீழ் தான் காந்தியை கொலை செய்ததாக, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோட்சே நிராகரித்தார். (எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் சாவர்க்கர் விடுவிக்கப்பட்டாலும், காந்தியை வெறுத்த, அந்த தீவிர வலதுசாரி தலைவருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பு இருந்ததாகவே விமர்சகர்கள் நம்புகிறார்கள்.) காந்தியைக் கொல்வதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ் உடனான உறவை முறித்துக் கொண்டு விட்டதாகவும் கோட்சே நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், காந்தியின் படுகொலை பற்றிய புத்தகத்தை எழுதிய நூலாசிரியர் திரேந்திர ஜா, ஒரு தபால் ஊழியரின் மகனும் வீட்டை கவனித்து வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்த கோட்சே, ஆர்எஸ்எஸ்ஸின் "முக்கியமான உறுப்பினர்" என்று எழுதியிருக்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து கோட்சே நீக்கப்பட்டதற்கான "ஆதாரம்" இல்லை என்று அவர் பதிவு செய்துள்ளார். வழக்கு விசாரணைக்கு முன் பதிவு செய்யப்பட்ட கோட்சேவின் வாக்குமூலத்தில், "இந்து மகாசபாவில் உறுப்பினரான பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து விலகியதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை" என்று திரேந்திர ஜா கூறியுள்ளார். நீதிமன்றத்தில் கோட்சே அளித்த வாக்குமூலத்தில், ஆர்எஸ்எஸ்ஸை விட்டு வெளியேறிய பிறகு இந்து மகாசபாவில் சேர்ந்ததாக கூறியுள்ள அவர், எப்போது அதைச் செய்தார் என்பது குறித்து அமைதி காத்தார் என்று திரேந்திரா குறிப்பிட்டுள்ளார். "இது கோட்சேவின் வாழ்க்கையின் மிகவும் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக இருக்கும் ஒரு கூற்று" என்கிறார் திரேந்திர ஜா. பட மூலாதாரம்,SWATANTRYAVEER SAVARKAR RASHTRIYA SMARAK "ஆர்.எஸ்.எஸ்-சார்பு எழுத்தாளர்கள்" இதைப் பயன்படுத்தி, "காந்தியைக் கொல்வதற்கு ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்பே கோட்சே ஆர்.எஸ்.எஸ் உடனான உறவை முறித்துக் கொண்டு, இந்து மகாசபாவில் சேர்ந்தார் என்ற கருத்தை அமைதியாக புறந்தள்ளினார்கள்" என திரேந்திர ஜா நம்புகிறார். அமெரிக்க ஆராய்ச்சியாளரான ஜேஏ குர்ரன் ஜூனியர், "1930இல் கோட்சே ஆர்எஸ்எஸ்ஸில் சேர்ந்தார் என்றும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதில் இருந்து அவர் விலகினார் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜா தமது புத்தகத்தில் எழுதியுள்ளார். காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையின்போது அளித்த வாக்குமூலத்தில், கோட்சே இரண்டு அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் வேலை செய்ததாக கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் கோட்சேவின் குடும்பத்தினரும் தீவிரமாக பங்கெடுத்தனர். 2005இல் இறந்த நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சே வாழ்ந்த காலத்தில் தனது சகோதரர் "ஆர்எஸ்எஸ்ஸை விட்டு வெளியேறவில்லை" என்று கூறியிருந்தார். இதேபோல, கோட்சேவின் மருமகன் ஒருவர் 2015இல் ஒரு பத்திரிக்கையாளரிடம் பேசும்போது, கோட்சே 1932இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்தார். அந்த இயக்கத்தில் இருந்து அவர் "வெளியேறவில்லை" என்று கூறினார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்டகால பற்றாளர். ஆவண காப்பகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த விவரங்களை மிக ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்திய திரேந்திர ஜா அதன் சில கண்டுபிடிப்புகளை தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். கோட்சேவுக்கும் இரண்டு இந்து அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்புகளைப் பற்றியும் அவர் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து மகாசபாவும் ஆர்எஸ்எஸ்ஸும் "நீரில் பின்னிப்பிணைந்த திரவம் போன்ற உறவை" கொண்டிருந்தன. அவை ஒரே மாதிரியான சித்தாந்தத்தைக் கொண்டிருந்தன என்று அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார். காந்தி கொல்லப்படும் வரை இந்த இரு அமைப்புகளும் "எப்போதும் நெருங்கிய தொடர்புகள் மற்றும் சில சமயங்களில் அதன் உறுப்பினர்கள் இரண்டுக்கும் சேர்த்து வேலை செய்தனர்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (காந்தி கொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அப்போதைய அரசு தடை விதித்தது.) கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி? மகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்? 1930களின் மத்தியில் அந்த அமைப்பை விட்டு கோட்சே வெளியேறினார் என்று அவரே கூறியதைத்தான் ஆர்.எஸ்.எஸ் எப்போதும் எதிரொலித்தது. மேலும் இந்த கொலைக்கும் தமது அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கோட்சேவின் வாக்குமூலமே நிரூபிக்கிறது என்கிறது ஆர்எஸ்எஸ். கோட்சேவை ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று கூறுவது அரசியல் நோக்கத்திற்காக பொய்யை மட்டுமே முன்னிறுத்தும் செயல் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ராம் மாதவ் கூறியுள்ளார். பட மூலாதாரம்,UNIVERSAL HISTORY ARCHIVE ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரான எம்.எஸ்.கோல்வால்கர், காந்தியின் படுகொலையை "அளவிட முடியாத சோகம் - அதற்கு காரணம் அந்த மோசமான மேதை இந்திய நாட்டவர் மற்றும் அவர் ஒரு இந்து" என்று அழைத்தார். மிக சமீப காலத்தில், எம்.ஜி. வைத்யா போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கோட்சேவை "கொலைகாரன்" என்று அழைத்தனர், அவர் இந்தியாவின் மரியாதைக்குரிய நபரைக் கொன்றதன் மூலம் இந்துத்துவாவை "அவமதித்தார்" என்று கூறினார். விக்ரம் சம்பத் போன்ற எழுத்தாளர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபைக்கு இடையிலான உறவு ஒரு புயல் போல இருந்ததாக நம்புகிறார்கள். சாவர்க்கரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை இரண்டு தொகுதிகளாக எழுதிய சம்பத், "இந்துக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக" ஒரு "புரட்சிகர ரகசிய சங்கம்" போன்ற தன்னார்வத் தொண்டர்கள் குழுவை அமைப்பது என்ற இந்து மகாசபையின் முடிவு, ஆர்எஸ்எஸ் உடனான உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தியது," என்று கூறியுள்ளார். மேலும், சம்பத்தின் கூற்றுப்படி, இந்து மகாசபா தலைவர் சாவர்க்கரைப் போலல்லாமல் தனிநபர்களை சிலை வடிவில் வழிபாடு செய்யும் போக்கில் இருந்து ஆர்எஸ்எஸ் தள்ளியே இருந்தது. RSS: A View to the Inside, என்ற புத்தகத்தில் காந்தியின் கொலையில் ஆர்எஸ்எஸ் எவ்வாறு "முன்னாள் உறுப்பினர் (நாதுராம் கோட்சே) ஈடுபாட்டுடன் இருந்தது" மற்றும் அதன் பாசிச, எதேச்சதிகார மற்றும் இருட்டடிப்பு செய்யப்பட்டது போன்றவை குறித்து எழுத்தாளர்கள் வால்ட்டர் கே. ஆண்டர்சன், ஸ்ரீதர் டி டாம்ளே பேசியுள்ளனர். பட மூலாதாரம்,SWATANTRYAVEER SAVARKAR RASHTRIYA SMARAK படக்குறிப்பு, சாவர்க்கர் இறந்து ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகும் அவர் மத தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கிறார். இருந்தாலும் கூட, கோட்சே ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு பகுதியாக இருந்தார், அவர் ஒருபோதும் வெளியேறவில்லை என்ற சந்தேகங்கள் எந்த காலத்திலும் மறையவில்லை. 1949ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி கோட்சே தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முன், ஆர்எஸ்எஸ் பிரார்த்தனையின் போது உச்சரிக்கப்படும் முதல் நான்கு வாக்கியங்களைச் சொன்னார். இதுவும் கூட, "கோட்சே அந்த அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது" என்று ஜா குறிப்பிடுகிறார். "காந்தியின் கொலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ்ஸை விலக்கி வைப்பது வரலாற்றில் புனையப்பட்ட கதை," என்றும் கூறுகிறார் திரேந்திர ஜா. (மகாத்மா காந்தியை கொன்ற நாதூராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று. இதையொட்டி கோட்சே குறித்த இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) https://www.bbc.com/tamil/india-60108094
  10. காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதிக்கும் ஏற்படும் - ஹர்ஷ டி சில்வா By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 02:45 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சமூக பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கும் மக்களை அடக்குவதற்காக பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையிலும் அமைச்சரவை அமைச்சுக்கள், இராஜங்க அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலுக்கு நேர்ந்த கதியே இந்த வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு ஏற்படும். மக்களாணை இல்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை சிறிதேனும் கிடையாது. ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாராளுமன்றத்தை கலைத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் பொதுத்தேர்தலையும் நடத்துமாறு ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (நவ. 15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார சவால்களை வெற்றிக் கொள்ளும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். சமூக பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை.சந்தை பொருளாதாரம்,நிலைபேறான பொருளாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு தொடர்பில் வரவு - செலவுத் திட்டத்தில் எவ்வித விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. வரி அதிகரிப்பை மாத்திரம் பிரதான இலக்காக இந்த வரவு - செலவுத் திட்டம் காணப்படுகிறது.சமூக பாதுகாப்பு பேச்சளவில் மாத்திரம் ஒரு சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை. ஊழல் மோசடி மற்றும் வீண் செலவுகள் தற்போதைய பொருளாதார பாதிப்பிற்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டியுள்ள பின்னணியில் ஊழல் ஒழிப்பு மற்றும் மோசடி செய்யப்பட்ட அரச நிதிகளை மீளப் பெற்றுக்கொள்வது. https://www.virakesari.lk/article/140087
  11. சீனா தனது கண்காணிப்பு பாதுகாப்பு மூலம் டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான திட்டத்தினை உருவாக்குகின்றது By RAJEEBAN 15 NOV, 2022 | 04:28 PM ஸ்மார்ட் நகரங்களிற்கான கண்காணிப்புர் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் சீனா டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான அடிப்படைகளை உருவாக்குகின்றது என மனிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் ஸ்மார்ட் சிட்டி முயற்சி என்பது சுதந்திரத்திற்கு ஆபத்தானது என தெரிவித்துள்ள மனிலா டைம்ஸ் அரசியல்வாதிகள் அரசியல் வெற்றியை பெறுவதற்காக பெட்டிக்குள் சர்வாதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2013 இல் புதிய பட்டுப்பாதை திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் சீன ஜனாதிபதி தரவுகளை யார் கட்டுப்படுத்துகின்றார்களே அவரின் கரமே மேலோங்கி காணப்படும் என குறிப்பிட்டிருந்தார்.இது தற்செயலான கருத்து இல்லை எனவும் மனிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது. சிலர் டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான அடிப்படை திட்டம் என அழைக்கும் திட்டத்தை கட்டியெழுப்புவதற்கான தொழில்நுட்ப தாகத்தில் சீன ஜனாதிபதி காணப்படுகின்றார். ஸ்மார்ட் நகரம் என்பது மிகைப்படுத்தப்பட்ட விடயம்,இது சீனாவுடன் மாத்திரம் நின்றுவிடப்போகின்ற விடயம் அல்ல. இந்த திட்டத்தில் இணைந்துகொண்டுள்ள ஏனைய நாடுகள் தங்கள் பிரஜைகளின் பெருமளவு தரவுகளை சீனா கண்காணிப்பதற்கு அனுமதியளிக்கின்றன.அத்துடன் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களிற்காக பயணம் மேற்கொள்ளும் ஏனைய நாடுகளின் பிரஜைகளின் தரவுகளை சீனா கண்காணிப்பதற்கும் அனுமதிக்கின்றன. சீனா தனது ஏதேச்சதிகார கண்காணிப்பு தொழில்நுட்பங்களை தன்னை போன்ற சிந்தனை கொண்ட ஏனைய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதில் உலகின் முன்னணி நாடாக மாறுவதற்கும் இந்த திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் உதவப்போகின்றன. மிகப்பெரும் தரவு செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து கொள்ளும்போது அது கண்காணிப்பு சாதகமாக மாறும் இதனை அரசாங்கம் பயன்படுத்தும் என மனிலா டைம்ஸ் தெரிவிக்கின்றது. மேலும் சீனாவிடம் எந்த சாதனத்திலிருந்தும் தரவுகளை பெறுவதற்கான சட்டங்கள் காணப்படுகின்றன,சமூக நம்பிக்கை சுட்டியில் இடம்பெறுவதற்காக சீன நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த அனைத்து தரவுகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கின்றன. மேலும் சீன நிறுவனங்களும் அதன் பிரஜைகளும் வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் ஆகவே புதிய பட்டுப்பாதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் சீன உளவாளிகளே என்கின்றது மனிலா டைம்ஸ். ஜான் ஸ்ட்ராண்ட் மொபைல் டெலிகாம் நெட்வொர்க்குகளின் பாதுகாப்பில் முன்னணி நிபுணர். 102 ஐரோப்பிய மொபைல் நெட்வொர்க்குகளில் Huawei, ZTE மற்றும் பிற சீன அரசாங்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த அவரது அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் 5G கருவிப்பெட்டியை உருவாக்குவதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்று தி மணிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது. நெட்வொர்க்குகளின் தொழில்நுட்ப பாதுகாப்பு கூறுகளுக்கு கூடுதலாக, ஜான் சீன அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துவதற்கான அவர்களின் முயற்சி ஆகியவற்றைப் படிக்கிறார். சீனா தனது கண்காணிப்பை மெதுவாக்குவதாகத் தெரியவில்லை, அது ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளிலும் உட்பொதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/140133
  12. காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு நபரை தண்டனையை குறைத்து விடுதலை செய்கிறது மாகாராஷ்ரா அரசு. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாதவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு அநியாயமான விசயம். ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்! https://www.vinavu.com/2022/11/14/rajiv-gandhi-is-fascist-maruthu-video/
  13. டெல்லியில் காதலியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் -ஆறு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டெல்லி போலீசார் அஃப்தாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர் 52 நிமிடங்களுக்கு முன்னர் ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியின் மெஹ்ரோலி பகுதியில் நடந்த கொலை வழக்கில் துப்பு துலக்கப்பட்டுவிட்டதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இந்த சம்பவத்தில் லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்ததான குற்றச்சாட்டின்பேரில் அஃப்தாப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 18 ஆம் தேதி அஃப்தாப் தனது லின் இன் பார்ட்னரான ஷ்ரத்தாவை கொன்றுவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வெவ்வேறு இடங்களில் வீசியதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப்பும் , ஷ்ரத்தாவும் மும்பையில் வேலை செய்யும் போது நெருக்கமானார்கள். அவர்கள் இருவரும் காதலித்தனர். ஆனால் இந்த உறவு குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது. மஹாராஷ்டிரா மாநிலம் பால்கரில் அந்தப்பெண்ணின் குடும்பம் வசித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் கோபம் காரணமாக இருவரும் டெல்லி வந்து சத்தர்பூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு9 நவம்பர் 2022 ராஜீவ் கொலை வழக்கில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் செய்தவை என்னென்ன?12 நவம்பர் 2022 கேரள நரபலி: தோட்டம் முழுவதும் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் - பிபிசி தமிழ் கள நிலவரம்13 அக்டோபர் 2022 தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா, அஃப்தாப்பை வற்புறுத்தத் தொடங்கியதால், அவர்களுக்குள் தகராறு அதிகரிக்கத் தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த மே 18ம் தேதி திருமணம் தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் அஃப்தாப் அந்தப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டார். “கொலை செய்த பிறகு தனது காதலியின் உடலை பல துண்டுகளாக வெட்டியதாக அஃப்தாப் வாக்குமூலம் அளித்துள்ளார். உடலில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க, புதிய பெரிய சைஸ் ஃப்ரிட்ஜ் ஒன்றை வாங்கி அதில் சடலத்தின் துண்டுகளை வைத்துவிட்டார். பிறகு படிப்படியாக இரவு நேரத்தில் உடலின் துண்டுகளை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காடுகளில் வீசினார்,”என்று டெல்லி காவல்துறையின் கூடுதல் டிசிபி (தெற்கு) அங்கித் செளஹான் கூறினார். எப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது என்ன? பிபிசி மராத்தி சேவையின் செய்தியாளர் மயங்க் பாகவத் காவல்துறையிடம் இருந்து பெற்ற எப்ஐஆர் நகலில், இது தொடர்பான பல முக்கிய விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஷ்ரத்தாவின் தந்தை போலீசில் அளித்த புகாரில், தனது மனைவியும் தானும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும், ஷ்ரத்தா தனது தாயுடன் மகாராஷ்டிராவின் பால்காரில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, மெஹ்ரோலி காட்டில் சடலத்தின் மிச்சம் தேடப்படுகிறது இவரது மகள் ஷ்ரத்தா 2018 ஆம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார், அங்கு அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞரை சந்தித்தார். "2019 ஆம் ஆண்டில், ஷ்ரத்தா தனது தாயிடம் அஃப்தாப்புடன் லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவதாக கூறினார். ஆனால் நாங்கள் வேறு மதத்திலும், வேறு சாதியிலும் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதால் என் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்தார். நாங்கள் மறுத்தபோது தனக்கு 25 வயது ஆகிவிட்டதாகவும், சொந்த முடிவுகளை எடுக்க தனக்கு உரிமை இருப்பதாகவும் என் மகள் கூறினார்.” தாயுடன் தகராறு செய்த ஷ்ரத்தா வீட்டை விட்டு வெளியேறி அஃப்தாப்புடன் வாழத் தொடங்கினார். “ஷ்ரத்தாவும் அஃப்தாப்பும் நயா கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்து பின்னர் வசாய் பகுதியில் வசிக்கத் தொடங்கினர். என் மகள் இடையிடையே தன் அம்மாவை அழைத்து அஃப்தாப் அடிப்பதாக கூறினாள்,”என்று எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? ஷ்ரத்தா தன்னை சந்திக்க வந்ததாகவும், தன் பிரச்னையைச் சொன்னதாகவும் தந்தை கூறுகிறார். அதன் பிறகு அவர் அஃப்தாப்பை விட்டுவிடுமாறு ஷ்ரத்தாவிடம் கூறினார். ஆனால் அஃப்தாப் மன்னிப்புக்கேட்டதால் ஷ்ரத்தா மீண்டும் அவருடன் சென்றுவிட்டார். ஷ்ரத்தா தன் அறிவுரையை கேட்டு நடக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக ஷ்ரத்தாவின் தந்தை போலீசில் தெரிவித்தார். ஆனால் செப்டம்பரில் ஷ்ரத்தாவின் தோழி ஒருவர் தனது மகளுக்கு போன் செய்து, ஷ்ரத்தாவின் போன் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஷ்ரத்தா பற்றிய விவரம் எதுவும் கிடைக்காததால், அவரது தந்தை மகாராஷ்டிராவில் உள்ள மாணிக்பூர் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார். எஃப்ஐஆரில், அஃப்தாப் உடனான ஷ்ரத்தாவின் உறவையும் குறிப்பிட்டு, ஷ்ரத்தா காணாமல் போனதில் அஃப்தாப்பின் பங்கு இருக்கலாம் என்று தான் அஞ்சுவதாகவும் கூறியுளார். எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?15 ஆகஸ்ட் 2021 ரயில் முன் தள்ளி கொல்லப்பட்ட மாணவி: பெண்கள் மீது தொடரும் ஆணாதிக்க வன்முறை15 அக்டோபர் 2022 மாணவர் பருவத்தில் திருமணம், தாலி கட்டும் நிகழ்வுகள்: தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?13 அக்டோபர் 2022 தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவக்கி அஃப்தாப்பை தேடி வந்தனர். பின்னர் அஃப்தாப் கைது செய்யப்பட்டார். திருமணம் தொடர்பாக தங்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும், கோபத்தில் தான் கொலை செய்ததாகவும் விசாரணையின் போது, அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். இருவரும் டேட்டிங் செயலியில் சந்தித்தனர் “மகளை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் காணாமல் போய்விட்டதாக உணர்ந்த தந்தை, மும்பை காவல்துறையில் புகார் அளித்தார். ஷ்ரத்தா கடைசியாக இருந்த இடம் டெல்லி என்று மும்பை போலீசாரின் விசாரணையில், கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள மெஹ்ரோலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,”என்று டெல்லி காவல்துறையின் கூடுதல் டிசிபி (தெற்கு) அங்கித் செளஹான் தெரிவித்தார். இருவரும் ஒரு டேட்டிங் ஆப் மூலம் சந்தித்தது விசாரணையின்போது தெரிய வந்தது. மும்பையில் இருவரும் ஒன்றாகவே வசித்து வந்தனர். டெல்லியிலும் அது தொடர்ந்தது. டெல்லியில் வசிக்கும் போது இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. பல சமயங்களில் இந்த சண்டை கைகலப்பில் முடிந்தது. படக்குறிப்பு, இந்த குளிர்சாதன பெட்டியில் உடலின் துண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர் எல்லா டிஜிட்டல் மற்றும் அறிவியல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு, அவை ஆராயப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்., உடல் துண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாகக்கூறப்படும் குளிர்சாதன பெட்டியையும் போலீசார் மீட்டுள்ளனர். அஃப்தாப் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், மெஹ்ரோலி காட்டில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் ஷ்ரத்தா கொலை வழக்கில் போலீசார் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். கொலைக்குப் பிறகு ஷ்ரத்தாவின் கைபேசியை அஃப்தாப் தூக்கி எறிந்துவிட்டார். அதை மீட்கும் பொருட்டு மொபைல் போன் கடைசியாக செயல்பட்ட இடத்தை கண்டுபிடித்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மே மாதம் ஷ்ரத்தாவை கொன்ற பிறகும், ஜூன் மாதம் வரை ஷ்ரத்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அஃப்தாப் பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் ஷ்ரத்தா உயிருடன் இருப்பதாக அனைவரையும் நம்பவைக்கவே இதை அவர் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஷ்ரதாவின் உடலை துண்டுகளாக்குவதற்கு அஃப்தாப் பயன்படுத்திய ஆயுதத்தை இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. அஃப்தாப் உடலின் துண்டுகளை வீசிய டெல்லியில் உள்ள காட்டிற்கு, செவ்வாய்கிழமையன்று போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். https://www.bbc.com/tamil/articles/cz7l57700g1o
  14. வணக்கம் வாங்கோ. நீங்கள் புதிதாக இணைந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.
  15. உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம்: பீபா கோரிக்கை By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 02:27 PM உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்போது யுக்ரைனில் ஒரு மாத காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) கோரியுள்ளது. இந்தோனேஷியாவின் ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றும் நாடுகளின் தலைவர்களிடம் பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ இக்கோரிக்கையை விடுத்துள்ளார். உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 20 முதல் டிசெம்பர் 18 ஆம் திகதி வரை கத்தாரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை ரஷ்யா நடத்தியதையும், 2030 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்துவதற்கு ஸ்பெய்ன், போர்த்துகலுடன் யுக்ரைனும் இணைந்து விண்ணப்பித்துள்ளதையும் அவர் இன்பன்டினோ சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களையடுத்து, ரஷ்யாவுக்கு பீபா தடை விதித்துள்ளது. யுக்ரைனும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/140103
  16. மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 10:16 AM மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பநதிப்பதாக பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ கூறியுள்ளார். பிரிட்டனின் டோக் ரீவி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (13) அளித்த செவ்வியொன்றிலேயே ரொனால்டோ இப்பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ 5 தடவைகள் பெலன் டி'ஓர் விருது வென்றவர். போர்த்துகல் தேசிய அணியின் தலைவராகவும் விளங்குகிறார். ஸ்பெய்னின் ரியல் மட்றிட் கழகத்தில் 2009 முல் 2018 ஆம் ஆண்டு வரை விளையாடி வந்த ரொனால்டோ, 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜவென்டஸ் கழகத்தில் இணைந்தார். கடந்த வருடம் அவர் தனது முந்தைய கழகமான இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட்டில் மீண்டும் இணைந்தார். கிறிஸ்டியானா ரொனால்டோ அக்கழகத்தின் புதிய முகாமையாளராக நெதர்லாந்தின் எரிக் டென் ஹக் கடந்த மே மாதம் பதவியேற்ற பின்னர், அவருக்கும் ரொனால்டோவுக்கும் உறவு சுமுகமாக இல்லை. கடந்த மாதம் டொட்டென்ஹாம் கழகத்துக்கு எதிரான போட்டியில் மாற்றுவீரராக களமிறங்குவதற்கு ரொனாடோ மறுத்தார். இதனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அண்மைக்காலங்களில் மீண்டும் அவர் போட்டியில் பங்குபற்றியதுடன், அஸ்டன் வில்லா கழகத்துடனான போட்டியில் அணித்தலைவரகாவும் செயற்பட்டார். எனினும் உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புல்ஹாம் கழகத்துடனான மென்செஸ்;டர் கழக போட்டியில் ரொனால்டோ பங்குபற்றவில்லை. எரிக் டென் ஹக் இந்நிலையில் நேற்று முன்தினம் அளித்த செவ்வியில், மென்செஸ்டர் யுனைடெட் முகாமையாளர் எரிக் டென் ஹக் குறித்து ரொனால்டோ கூறுகையில், 'அவருக்கு நான் மதிப்பளிப்பதில்லை, ஏனெனில் எனக்கு அவர் மதிப்பளிப்பதில்லை. பயிற்றுநர் மாத்திரமல்ல, மேலும் 2 அல்லது 3 நபர்களும் தான். துரோகமிழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்' என்றார். கழகத்திழலிருந்து ரொனால்டோவை வெளியேற்றுவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா என கேட்கப்பட்டபோது, 'ஆம். துரோகமிழைக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் இங்கு இருப்பதை சிலர் விரும்பவில்லை. இந்த வருடத்தில் மட்டுமல்ல, கடந்த வருடத்திலும் அப்படித்தான்' என ரொனால்டோ பதிலளித்துள்ளார். https://www.virakesari.lk/article/140051
  17. சீனாவுடன் புதிய பனிப்போரா? சீன ஜனாதிபதியை சந்தித்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன? By RAJEEBAN 15 NOV, 2022 | 11:58 AM சீனாவுடன் புதிய பனிப்போரிற்கான தேவையுள்ளதாக என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா தாய்வான்மீது போர் தொடுக்கும் என கருதவில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் வடகொரியா குறித்தும், உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் குறித்தும் ஆராய்ந்துள்ளனர். உக்ரைனில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்ப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். சமாதானத்திற்கான சீனாவின் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தியுள்ள சீன ஜனாதிபதி குழப்பமான பிரச்சினைக்கு இலகுவான தீர்வில்லை எனவும் தெரிவித்துள்ளார். சீனாவால் வடகொரியாவை கட்டுப்படுத்த முடியும் என நான் உறுதியாக கருதுகின்றேன் என தெரிவிப்பது கடினம் என அமெரிக்க ஜனாதிபதி செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார். எனினும் வடகொரியா மற்றுமொரு அணுவாயுத பரிசோதனையில் ஈடுபடுவதை தடுக்கவேண்டிய கடப்பாடு சீனாவிற்குள்ளது என சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தாய்வான் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்வானிற்கு சென்றதை தொடர்ந்து பதற்ற நிலை அதிகரித்து காணப்பட்டது. சீனா உடனடியாக பாரிய போர் ஒத்திகையில் ஈடுபட்டதை தொடர்ந்து அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போர் குறித்த அச்சம் ஏற்பட்டது. தாய்வான் தொடர்ந்தும் சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாக காணப்படுகின்றது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் கடக்க முடியாத முதல் சிகப்பு கோடு அது என சீன ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது. தாய்வான் மீது சீனா தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என சமீப காலங்களில் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது உண்மையா புதிய பனிப்போர் உருவாகின்றதா என செய்தியாளர்கள் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள அவர் புதிய பனிப்போரிற்கான தேவையுள்ளதாக நான் உறுதியாக நம்பவில்லை,தாய்வான் மீது தாக்குதலை மேற்கொள்ளும் உடனடி நோக்கம் எதுவும் சீனாவிடம் உள்ளதாக நான் கருதவில்லை எனகுறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/140079
  18. அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு ; இவ் ஆண்டில் 600 சம்பவங்கள் பதிவு By T. SARANYA 15 NOV, 2022 | 10:09 AM விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். அவர்கள் கால்பந்து வீரர்கள் என தெரிய வந்து உள்ளது. காயமடைந்த 2 பேரில் ஒருவரது நிலைமை மோசமடைந்து உள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் பல்கலைக்கழக வளாக பகுதியில் தடையுத்தரவு விதிக்கப்பட்டது. இதில், சந்தேக நபரான கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் ஜூனியர் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீர்ர் என கூறப்படுகிறது. அவர் மீது கொலை மற்றும் கைத்துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்கள் டெவின் சாண்ட்லர், லேவல் டேவிஸ் ஜூனியர் மற்றும் டி சீயான் பெர்ரி என தெரிய வந்துள்ளது. இவ் ஆண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 600 துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக துப்பாக்கி வன்முறை சம்பவங்களின் தொகுப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. அவற்றில் இந்த சம்பவமும் ஒன்று. அமெரிக்காவில் பாடசாலை விளையாட்டு மைதானங்களில் இவ் ஆண்டில் இதுவரை 68 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கல்லூரி வளாகங்களில் நடந்த 15 சம்பவங்களும் அடங்கும். ஒவ்வொரு சம்பவத்திலும் குற்றவாளியால் குறைந்தது ஒருவர் சுடப்பட்டு உள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே கொடூர துப்பாக்கி சூடு கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. பிளாக்ஸ்பர்க் நகரில் உள்ள விர்ஜீனியா டெக்கில் 32 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 23 வயது மாணவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது வேதனை ஏற்படுத்துகிறது என்றும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். அதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், பெரிய அளவில் அதனால் பலன் ஏற்படாத சூழல் உள்ளது. தொடர்ந்து, நடப்பு ஆண்டில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. https://www.virakesari.lk/article/140047
  19. அவுஸ்திரேலியாவில் கடும்மழை, வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:43 AM அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கடும்மழையால் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் நியு சௌத்வேல்ஸ், வடகிழக்கு விக்டோரியா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை கடும்மழை பெய்துள்ளது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தெற்கு அவுஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த கடும்மழை மேசமான வெள்ள சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் கவலை தெரிவித்துள்ளார். மழை நீர் அகற்றும் பணியிலும், மிட்பு நடவடிக்கைகளிலும் அவுஸ்திரேலிய அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. நியூ சௌத்வேல்ஸ் பகுதிகளில் வீதிகள், பாலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மொலோங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொலோங் நகரில் வீதியில் தேங்கியிருக்கும் மழைநீரில் வீட்டு உபயோகப் பொருட்கள் தண்ணீரில் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அதிவிரைவு மீட்பு படையினர் மொலோங் நகரில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈகுவோரோ நகரில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் ஒழுங்கற்ற கால நிலை ஏற்பட்டு மிக கடும்மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒழுங்கற்ற காலைநிலையால் விக்டோரிய மாகாணத்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழைழ 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது. https://www.virakesari.lk/article/140057
  20. யாழில் ஹெரோயின், கசிப்புடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது! By VISHNU 15 NOV, 2022 | 01:32 PM யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சுமார் 21 லீற்றர் கசிப்புடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே கசிப்புடன் 27 வயது மற்றும் 42 வயதான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை அச்சுவேலி பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், திருநெல்வேலி, குட்டியப்புலம் மற்றும் இணுவில் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் 60 மில்லிகிராம், 55 மில்லிகிராம் மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, அச்சுவேலி பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/140081
  21. ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? – கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா கட்டுரை தகவல் எழுதியவர்,முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் பதவி,முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வேற்றுகிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் ஏலியன் படங்களைப் பார்க்கும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ எழுவதுண்டு. தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ஆம் வெளியான விண்வெளி குறித்த முதல் தமிழ் படம் கலை அரசி. எவ்வளவு காலமாக ஏலியன்கள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் கற்பனைகளும் இருந்து வருகின்றன என்பதற்கு அதுவே சாட்சி. அது சரி ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா? இதற்கு எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் தான் பதில் சொல்ல வேண்டும். “இருக்காங்க, ஆனா இல்ல...” வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?12 நவம்பர் 2022 பறக்கும் தட்டுகள்: வேற்றுகிரகவாசிகள் குறித்த நமது புரிதல் தவறா?2 ஜூலை 2022 லெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' தமிழர்களின் கண்டம் உண்மையில் இருந்ததா?27 ஜூன் 2022 ஆம், ஏலியன் விஷயமும் அப்படிக் கொஞ்சம் குழப்பமானது தான். சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக 1,150 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் வாஸ்ப்-96பி (WASP-96B) என்ற புறக்கோளில் நீராவி இருப்பதற்கான தடயத்தைக் கண்டுபிடித்தார்கள். நீராவி இருக்கிறது என்றால் அங்கு உயிர் வாழும் சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அப்படி உயிர் வாழும் சூழல் இருந்தால் அதில் உயிர்கள் வாழ்கின்றனவா என்று இன்னொரு கேள்வியும் எழுகிறது. அதற்குள் செல்வதற்கு முன்பாக, நாம் ஒரு கோளில் எப்படி உயிர்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் சூரியன் ஒரு நட்சத்திரம். அதை 8 கோள்கள் சுற்றி வருகின்றன. அதில் மூன்றாவதாகச் சுற்றி வரும் பூமியில் மட்டுமே நமக்குத் தெரிந்து இதுவரை உயிர்கள் வாழ்கின்றன. நம்முடைய பால்வெளி மண்டலத்தில் மட்டும் சுமார் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. பால்வெளி மண்டலத்தைப் போலவே 20,000 கோடி கேலக்சிகள் நம் பார்வைக்கு உட்பட்டுள்ள பிரபஞ்சத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளார்கள். இந்த நட்சத்திரங்களைச் சுற்றி நம்முடைய சூரிய மண்டலத்திலுள்ள கோள்களைப் போலவே பல்வேறு கோள்கள் சுற்றுகின்றன. சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்களைச் சுற்றும் கோள்களைத்தான் நாம் புறக்கோள்கள் என்று கூறுகிறோம். இதுவரைக்கும் நாம் இதுபோன்ற சுமார் 8,000 புறக்கோள்களை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால், இன்னும் கோடிக்கணக்கான கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. இயற்கை வேதிம வினைகளின் விளைவாக உருவானது தானே உயிர். ஆகவே, இந்தக் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் வெறும் பூமியில் மட்டும் தான் உயிர் உருவாகியிருக்கும் என்று நினைப்பதை ஒருவித அகங்காரம் என்றுதான் சொல்லவேண்டும். உயிர்கள் வாழக்கூடிய இன்னும் பல கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கலாம், இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES உயிர்கள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்து கோள்களிலுமே உயிர்கள் தோன்ற முடியாது. நட்சத்திரத்திற்கு மிகவும் அருகில் இருந்தால் அதீத வெப்பத்தால் கதிரியக்கம் கூடுதலாக இருக்கும். இதற்கான சான்றாக நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் புதன் கோளைச் சொல்லலாம். அது சூரியனுக்கு மிக அருகில் 5.8 கோடி கிமீ தொலைவில் இருப்பதால் அதீத வெப்பத்தோடும் கதிரியக்கம் மிக்கதாகவும் இருக்கிறது. ஆகவே அதில் உயிர்கள் தோன்ற முடியவில்லை. அதேபோல், நட்சத்திரத்திடம் இருந்து வெகுதூரத்தில் இருந்தாலும் தேவையான ஆற்றல் கிடைக்காது. இதற்கு சான்றாக சூரிய மண்டலத்தின் இறுதியில் இருக்கும் நெப்டியூனை சொல்லலாம். அது சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கி.மீ தொலைவில் இருப்பதால் சூரிய ஆற்றலே கிடைக்காமல் உறைந்த நிலையில் இருக்கிறது. இந்த இரண்டு சூழலிலும் உயிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் இப்படியில்லாமல், சரியான தொலைவில் ஒரு கோள் அமைந்திருந்தால் அங்கு உயிர் தோன்றுவதற்கான வாய்பு ஏற்படும். இதற்கு பூமியை சான்றாகச் சொல்ல முடியும். உயிர்களின் இயக்கம் கோளின் வளிமண்டலத்தை மாற்றி அமைத்துவிடும். பூமி உருவாகும்போது அதன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இருக்கவில்லை. ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெரும் உயிர்கள் உருவான பிறகு தான் வளிமண்டலத்தில் பெரும்பகுதி ஆக்சிஜன் உருவானது. வேதியியல் விதிகளின்படி குறைந்த அளவே கார்பன்மோனாக்சைட் உள்ள வளிமண்டலத்தில் கணிசமான மீத்தேன் மற்றும் கார்பன் டையாக்சைட் போன்றவை தானாக உருவாக முடியாது. எனவே, வேறொரு கோளில் குறைவான கார்பன் ஆக்சைட், ஆனால் கூடுதல் கார்பன் டையாக்சைட், கூடுதல் மீத்தேன் காணப்பட்டால் அதில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு கூடுதலாக இருக்கும். அங்கு உயிர்கள் வாழ்வதாக அனுமானிக்கலாம். இத்தகைய பல வேதிம நிலைகள் உயிரி சுட்டிகள் (Biosignature) என்று அழைக்கப்படுகின்றன. புறக்கோள்களின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து அதில் இருக்கும் வேதிமப் பொருள்களை ஆய்வு செய்யும் முனைப்பு உருவாகி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஏலியன்களைக் கண்டுபிடிக்க உதவும் ஃபார்முலா உயிர்கள் தொடர்ந்து வாழ்வதற்கான பல்வேறு சரியான காரணிகளைக் கண்டுபிடித்து, தொகுத்து எவ்வளவு கோள்களில் உயிர் இருக்கும் என்பதைக் கணிப்பதற்கான ஒரு ஃபார்முலாவை 1961ஆம் ஆண்டில் டாக்டர் ஃபிராங்க் டிரேக் முன்வைத்தார். இதன் அடிப்படையில் பல கோடி கோள்களில் உயிர்கள் தோன்றலாம், வளரலாம். எனவே, நமது பூமியில் மட்டுமே உயிர்கள் தோன்றியுள்ளன என்பது ஏற்புடைய பார்வையில்லை. சரி, அதான் ஏலியன்கள் இருப்பதற்காவ வாய்ப்புள்ளதே, பிறகு ஏன் எஸ்.ஜே.சூர்யாவை போல் குழப்ப வேண்டும்? பறக்கும் தட்டுகள் உண்மையா? இந்த இடத்தில் பலருக்கும் பிரபஞ்சத்தில் வேறு கோள்களில் உயிர் உள்ளது என்றால், பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் வந்துள்ளார்களா? பறக்கும் தட்டு மாதிரியான விஷயங்கள் உண்மையா என்ற கேள்வியும் எழலாம். நம்முடைய பொதுப்புத்தியில் ஏலியன் என்றால் பறக்கும் தட்டு மாதிரியான கற்பனைகள் வருவது இயல்பு. அப்படி வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்தத் தடயமும் இதுவரை இல்லை. ஒளியின் வேகத்தில் பயணித்தாலும்கூட, நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திர மண்டலமான 'பிராக்சிமா சென்டாரி'-க்கு போக நான்கு ஆண்டுகள் ஆகும். ஆக, பல நூறு ஆண்டுகள் பயணித்தால் மட்டும் தான் இந்த மாதிரியான நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே பயணம் மேற்கொள்ள முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES அவ்வளவு காலம் பயணித்து வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்தார்கள் என்றால், சில நாட்கள் மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடுவார்களா? மனிதர்கள் நிலவுக்குச் சென்றபோதே அங்கு ஒருநாள் தங்கி ஆய்வு செய்தார்கள். அப்படியிருக்கும் நட்சத்திரங்களுக்கு நடுவே பயணித்து இங்கு ஏலியன்கள் வந்தால் சில காலமாவது தங்கி இந்த பூமியைப் பற்றித் தெரிந்துகொள்ள, சில பத்தாண்டுகளுக்காவது தங்கி ஆய்வு செய்ய மாட்டார்களா? ஆனால், பறக்கும் தட்டு போன்ற கதைகளில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து சில நொடிகள் அல்லது சில மணிநேரங்களில் திரும்பிவிடுகிறார்கள். இது நம்பும்படியாக இல்லை. தயாரிப்பு: க. சுபகுணம், பிபிசி தமிழ் https://www.bbc.com/tamil/articles/cz58gzjmk10o
  22. ரஷ்யா உக்ரேனிற்கு இழப்பீடு வழங்கவேண்டும் - தீர்மானம் நிறைவேற்றியது ஐநா - இலங்கை வாக்கெடுப்பை தவிர்த்தது By RAJEEBAN 15 NOV, 2022 | 12:24 PM உக்ரேனிற்கு ரஸ்யா இழப்பீடு செலுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்;ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இலங்கை தவிர்த்துள்ளது. யுத்தம் தொடர்பில் ரஷ்யா உக்ரைனிற்கு இழப்பீடு செலுத்தவேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கியநாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. சேதம், இழப்பு காயம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்குவது குறித்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியுளது. ஐம்பது நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, நேபாளம், பங்களாதேஸ் உட்பட பல நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தவிர்த்துள்ளன. தீர்மானத்திற்கு ஆதரவாக 94நாடுகள் வாக்களித்துள்ளன,14 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. இந்த தீர்மானம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவிற்கான உக்ரைரேன் இராஜதந்திரி சர்வதேச சட்டங்களை மீறியமைக்காக ரஷ்யாவை பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/140071
  23. ஹிருணிக்கா உள்ளிட்ட 13 பேரும் பிணையில் விடுதலை By T. SARANYA 15 NOV, 2022 | 01:13 PM கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 13 பேரையும் தலா 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இன்று (15) உத்தரவிட்டுள்ளார். கறுவாத்தோட்டம் பொலிஸ் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹிருணிகா உள்ளிட்டோர் நேற்று (14) மாலை கைது செய்யப்பட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/140094
  24. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது தாக்குதல் - மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 15 NOV, 2022 | 01:39 PM (எம்.வை.எம்.சியாம்) மாத்தளை, ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொண்ட வாள் தாக்குதல் காரணமாக மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது இவ்வாறு வாள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் குறித்த ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அவரது மகள் மற்றும் இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூன்றரை வயது குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அயலவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 19 வயது மகளும் 15 வயது மகனும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த குடும்பத்துக்கும் சந்தேகநபரின் குடும்பத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்த பயன்படுத்திய ஆயுதத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/140099
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.