Everything posted by ஏராளன்
-
ராமநாதபுரம்: மேலும் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளா? புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 56 நிமிடங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகளை அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என அரசியல் மட்டங்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலத்தின் போது ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இப்போது ஏன் சர்ச்சையாகியிருக்கிறது? ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்துஓ.என்.ஜி.சி நிறுவனம், இந்தத் திடத்திற்காகத் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை வட்டத்திலும் சோதனைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,PROFEESOR JAYARAMAN படக்குறிப்பு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ‘விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும்’ ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் 35 எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது 28 கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே புதிய சோதனை கிணறுகள் அமைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி அளிக்க கூடாது, என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் காவிரி படுகை முழுவதும் அறிவிக்கப்படவில்லை. கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார். தமிழகத்தில் உணவுப் பொருட்கள் விளையும் அனைத்து பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “கடந்த ஆண்டு, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படாத பகுதியில் தலா 5 புதிய கிணறுகள் என மொத்தம் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அதற்கு அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு அனுமதி தர மறுத்து விண்ணப்பங்களை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே முடிவை ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்,” என்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும், என்றார் பேராசிரியர் ஜெயராமன். “ஆனால் அவ்வாறு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் பல முன்னுதாரணங்கள் முன் வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார். மேலும் பேசிய அவர், "கடந்த 15 ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்த இடங்களில் குழாய் மற்றும் சிமெண்ட் தளத்தில் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து நிலத்தடி நீர் மாசுபடுகிறதாகவும், அதனால் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதே அரசுக்கு அவர்கள் வைக்கும் வேண்டுகோள்" எனவும் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பத்தால் என்ன ஆபத்து? ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 30க்கும் மேற்பட்ட எண்ணெய் எரிவாயு கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாகக் கிணறுகள் தோண்டப்படுவதால் என்ன பிரச்னை ஏற்படப் போகிறது? இதற்கு பதிலளித்த பேராசிரியர் ஜெயராமன், "கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட கிணறுகளில் ஆழம் குறைவாக இருப்பதால் தளர்வான பகுதியில் இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது என்றும், இதனால் பூமிக்கு அடியில் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றும் கூறினார். “ஆனால், தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்தின் படி ஒரு ரசாயனக் கலவை பூமிக்குள் செலுத்தப்பட்டு நிலத்தடியில் இருக்கக் கூடிய வண்டல் பாறை, களிப்பறை ஆகியவை செயற்கையாக நொறுக்கப்பட்டு எண்ணெய் மற்றும் மீத்தேன் எரிவாயு வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூமிக்குள் செலுத்தப்படும் இந்த ரசாயனங்கள் அபாயகரமானவையாக உள்ளன,” என்றார். மேலும் பேசிய அவர், இந்த நொறுக்குதல் முறையைச் செயல்படுத்த, மண்ணுக்கு அடியில் செலுத்துவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றார். “இதனை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன் விவசாயம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்படும்,” என்றார். படக்குறிப்பு, ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவிருக்கும் இடங்கள் அதேபோல், மண்ணுக்கு அடியில் செலுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் உறிஞ்சி வெளியே எடுக்கப்படும் போது, அது முழுமையான வெளியே வராமல் மண்ணுக்கு அடியில் தங்கி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றார். மேலும், வெளியே வரும் நீர் அருகில் உள்ள நீர் நிலைகளில் கலந்து அதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை பாதிப்பு ஏற்படும், என்றும் கூறினார். “டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகளை மக்கள் நேரடியாக உணர்ந்ததால் மக்கள் போராடி இந்த திட்டங்களை கைவிட முயற்சி செய்தனர். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை செயல்பட்டு வரும் எரிவாயு கிணறுகள் பாதிப்பு ஏற்படாததால் மக்கள் அதனுடைய ஆபத்துகளை இன்னும் உணராமல் இருக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது செழிப்படைந்து வருவதால் இங்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் முனைப்பு காட்டுவதாக தெரிகிறது,” என்றார் பேராசிரியர் ஜெயராமன். பட மூலாதாரம்,FACEBOOK/SUNDARRAJAN படக்குறிப்பு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் ‘புதிய கிணறுகளுக்கான கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்’ தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் தெரிந்தும் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீது தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியதை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும், என்றார். “மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளைத் தளர்த்தி மாநில அரசின் அனுமதியுடன் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை புதிதாக அமைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் எங்கும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்,” என்றார். மேலும், “தமிழகத்தில் எந்த இடத்திலும் புதிய கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் புதிய கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் அனுமதி கோரியுள்ளதை பார்க்கும் போது மாநில அரசால் அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் அடிப்படையில் புதிய கிணறுகளை தமிழகத்தில் அமைத்திட அனுமதி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அனுமதி கோரி இருப்பதாக தோன்றுகிறது,” என்றார் சுந்தர்ராஜன். ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் நிபுணர் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது, என்று கூறிய அவர், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுந்தர்ராஜன் தெரிவித்தார். பட மூலாதாரம்,NAVASKANI படக்குறிப்பு, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ‘ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம்’ இது குறித்து ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பிபிசி தமிழிடம் பேசுகையில், தமிழக அரசு நிச்சயமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்காது என்ற நம்பிக்கை உள்ளது என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு எரிவாயு கிணறுகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வரும்அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசு அனுமதி நிராகரித்த நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நீதிமன்றத்தின் வாயிலாக புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி பெற்று கிணறுகள் அமைத்தால் மக்களை ஒன்று திரட்டி அதை தடுத்து நிறுத்துவோம். ராமநாதபுரம் மாவட்டம் மண்ணில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க விடமாட்டோம்,” நவாஸ்கனி தெரிவித்தார். பட மூலாதாரம்,MEYYANATHAN படக்குறிப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’ இது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனுடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், தமிழ்நாட்டில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதிப்பதில்லை, என்றார். “தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதால் டெல்டா மாவட்டத்தை தவிர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியது குறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார்,” என்றார். மேலும் பேசிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 கிணறுகள் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரி இருந்தததாகவும், பின்னர் பல்வேறு காரணங்களால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறினார். தற்போது அதே 20 கிணறுகளை புதிதாக அமைத்திட அனுமதி கோரியுள்ளனரா, அல்லது வேறு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து விட்டு தெரிவிப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cx91ljpgjjxo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசுடான மோதலின் பின்னர் காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு - பெஞ்சமின் நெட்டன்யாகு Published By: RAJEEBAN 07 NOV, 2023 | 04:23 PM ஹமாசுடனான யுத்தத்தின் பின்னர் காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்கும் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காலவரையறையற்ற காலத்திற்கு காசாவின் பாதுகாப்பை இஸ்ரேல் பொறுப்பேற்க்கும் என அவர் தெரிவித்துள்ளார். காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்காகவும் பணயக்கைதிகள் வெளியேற உதவுவதற்காகவும் மோதல்களின் போது தந்திரோபாய ரீதியில் சிறிய இடைநிறுத்தங்களை செய்ய தயார் எனவும் இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஏபிசி நியுசிற்கான பேட்டியின் போது மோதல் முடிவடைந்த பின்னர் காசாவை யார் நிர்வகிக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவின் பாதுகாப்பை காலவரையற்ற காலத்திற்கு இஸ்ரேல் இராணுவம் பொறுப்பேற்கும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் பாதுகாப்பை பொறுப்பேற்காவிட்டால் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவான யுத்தநிறுத்தம் தனது நாட்டின் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் இஸ்ரேலின் நெருங்கிய நண்பனான அமெரிக்கா போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றது போல மனிதாபிமான காரணங்களிற்காக சண்டையை இடைநிறுத்த தயார் சூழ்நிலைகளின் அடிப்படையில் அது பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/168750
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசா மீது அணுவாயுத தாக்குதல்களை நடத்தவேண்டும் - கருத்து தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் இடைநிறுத்தம் Published By: RAJEEBAN 06 NOV, 2023 | 01:23 PM காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடும்கண்டனங்களை எதிர்கொண்டது. பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கலாச்சார அமைச்சரும் அதிதீவிரவாத அரசியல்வாதியுமான அமிச்சே எலியாகு பாலஸ்தீன பிரதேசங்கள் மீது இஸ்ரேலின் பதிலடி குறித்து தான் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். காசா பள்ளத்தாக்கை மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதை அவர் ஆதரித்துள்ளார். பாலஸ்தீன மக்களின் நிலை குறித்த கேள்விக்கு அவர் அவர்கள் அயர்லாந்திற்கு செல்லலாம் அல்லது பாலைவனம் செல்லலாம் என தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள அரக்கர்கள் தங்களிற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். காசா பள்ளத்தாக்கிற்கு உயிர்வாழ உரிமையில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ஹமாஸ் பாலஸ்தீன கொடியை ஏந்துபவர்கள் எவரும் உயிர்வாழ தகுதியுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168649
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் பிரதமர் பதவி விலகவேண்டும் - ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 05 NOV, 2023 | 12:58 PM இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பதவி விலகவேண்டும் என கோரி ஆயிரக்கணக்கானவர்கள் அவரது இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் கடந்த மாதம் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதல் இஸ்ரேல் ஹமாஸ் மோதலிற்கு வழிவகுத்துள்ள நிலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய பிரதமரின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலிய பிரதமர் பதவி விலகவேண்டும் பணயக்கைதிகளை மீட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/168552
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
நவம்பர் முதலாம் திகதி கௌரவத்திற்குரிய நீதிபதி தினேஸ்சாப்டரின் மரணவிசாரணை குறித்து இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தார். நீண்டகால வலிமிகுந்த காத்திருப்பு முடிவிற்கு வந்தமை குறித்து தினேசின் குடும்பத்தவர்களாகிய நாங்கள் நிம்மதியடைகின்றோம்.அந்த விசாரணைகளில் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக தினேஸ் சாப்டர் தற்கொலை செய்துகொண்டார் என்ற பிழையான கதையாடல்களால் இழைக்கப்பட்ட அநீதியை தவிர்ப்பதற்கு நாங்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உள்ள ஐ.நா பள்ளி அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழப்பு இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2 ஆவது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பள்ளிக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/280060
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அம்புலன்ஸை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி 03 NOV, 2023 | 08:58 PM காசாவில் கடுமையான காயங்களிற்குள்ளானவர்களுடன் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது. https://www.virakesari.lk/article/168462
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நேரலையில் தோன்றிய பின்னர் வீடு திரும்பிய ஊடகவியலாளர் குடும்பத்துடன் இஸ்ரேலின் விமானக்குண்டு வீச்சில் பலி- நாங்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்கின்றோம் - காசா ஊடகவியலாளர்கள் அதிர்ச்சி Published By: RAJEEBAN 03 NOV, 2023 | 11:55 AM காசாவின் தென்பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பாலஸ்தீன தொலைக்காட்சியின் செய்தியாளரும் அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் நசேர் மருத்துவமனைக்கு வெளியே நேரலையில் செய்தியை வழங்கிக்கொண்டிருந்த முகமட அபு ஹட்டாப் அரைமணித்தியாலத்தின் பின்னர் வீடு திரும்பியவேளை விமானக்குண்டுவீச்சில் பலியாகியுள்ளார் என அவரது ஊடகம் அறிவித்துள்ளது. அவரது மரணம் அவரது சக ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது சகா கொல்லப்பட்ட செய்தியை வாசித்த அறிவிப்பாளர் சல்மான் அல் பசீர் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். எங்களால் இதற்குமேலும் தாங்கிக்கொள்ள முடியாது நாங்கள் களைப்படைந்துவிட்டோம் நாங்கள் இங்கே பாதிக்கப்பட்டவர்கள் மரணத்திற்காக காத்திருக்கும் தியாகிகள் என அந்த அறிவிப்பாளர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஒருவர் பின்ஒருவராக உயிரிழக்கின்றோம் எங்களை பற்றியே காசாமீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாரிய அழிவு குறித்தோ எவருக்கும் கவலையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பாதுகாப்பே இல்லை நினைத்ததை செய்வதற்கான தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பசீர் தான் அணிந்துள்ள பாதுகாப்பு கவசம் ஹெல்மெட்டை அகற்றிவிட்டு இது எங்களிற்கு பாதுகாப்பளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரெஸ் என்ற அடையாளத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் இது வெறும் சுலோகம் மாத்திரமே எங்களிற்கு எந்த பாதுகாப்பும் இல்லை எனவும்தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கள் பாலஸ்தீன மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக மாறியுள்ளன எங்கள் சகா முகமது அபுஹட்டாப் அரைமணித்தியாலத்திற்கு முன்னர்தான் இங்கிருந்தார் தற்போது அவர் தனது குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168404
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் உணவை பெறுவது மிகவும் ஆபத்தான கடினமான விடயம் - ஒரு பாண் துண்டிற்காக பெரும் சிரமங்களை சந்தித்தேன் - எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள அவுஸ்திரேலிய பெண் Published By: RAJEEBAN 02 NOV, 2023 | 12:34 PM காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். காசா தொடர்ச்சியான குண்டுவீச்சினை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான ரபா எல்லை ஊடாக உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களத்தில் பதிவு செய்த 23 அவுஸ்திரேலிய பிரஜைகள் அங்கிருந்து வெளியேறலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வொங் தெரிவித்துள்ளார். நாங்கள் இதற்கான முயற்சிகளில் நீண்ட காலமாக ஈடுபட்டிருந்தோம் எனது எகிப்திய சகாவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன் நான் நிம்மதியாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ரபா எல்லை ஊடாக வெளியேறியவர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய பெண் மொனா தனது குடும்பத்தை உணவும் நீரும் இல்லாத காசாவில் விட்டுவிட்டு வந்துள்ளமை குறித்து கடும் வேதனை வெளியிட்டுள்ளார். காசாவில் உணவை பெறுவது மிகவும் கடினமானது ஆபத்தானது உங்களால் அதனை கற்பனை செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் நான் உண்ண விரும்பாத ஒரு துண்டு பாணை பெற்றுக் கொள்வதற்காக நான் மிகவும் கஸ்டப்பட்டேன். சிறுவர்களிற்காகவே அதனை நான் பெற்றுக்கொண்டேன் எங்கள் குடும்பத்தில் 17 சிறுவர்கள் உள்ளனர் உணவு இல்லை கடந்த இரண்டு நாட்களாக நீரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நான் எனது குடும்பத்தை பார்க்கப் போகின்றேன் என சந்தோசமடைகின்றேன் எனினும் அதேவேளை நான் எனது சகோதரர்களை முழு குடும்பங்களையும் அங்கு விட்டுவிட்டு வருகின்றேன் இதனால் நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் நிலைமை மிக மிக மோசமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை தாங்கள் எகிப்திற்குள் தப்பிவந்ததும் அவுஸ்திரேலியா அரசாங்கம் தங்களை சிறந்த விதத்தில் பராமரித்துள்ளது என மெல்பேர்னை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/168318
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது: ஐ.நா. கண்டனம் இஸ்ரேல் இராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் இராணுவம் ஜபாலியா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகினர். காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றத்துக்கு சமமானது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்தது மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்திற்க் கொண்டு அவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என பதிவிட்டுள்ளது. https://thinakkural.lk/article/279855
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் நடத்திய அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 195 பேர் பலி: ஹமாஸ் அமைப்பு தகவல் இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2 ஆவது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் வீடுகளுக்குள் இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 777 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 120 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன என தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/279850
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கு பைடன் அழைப்பு - தற்போதைய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் சண்டையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவிந் மினசோட்டாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும்போது அவர் கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு கூறினார். "ஒரு தற்காலிக சண்டை நிறுத்தம் தேவை என்று நான் நினைக்கிறேன். சண்டையை நிறுத்துவது என்றால், பணயக் கைதிகளை காப்பாற்ற நேரம் கொடுங்கள் என்கிறேன்," என்று அவர் கூறினார். மனிதாபிமான உதவி, ஹமாஸ் பிடியில் உள்ள 240 பணயக் கைதிகள் ஜோ பைடன் குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. அந்த நிகழ்ச்சியில் "இப்போது போர்நிறுத்தம்" என்று பாடிய பெண்ணை பாதுகாவலர்கள் வெளியேற்றினர். பின்னர் பேசிய பைடன், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்களுக்கு தற்போதைய நிலைமை "நம்பமுடியாத அளவிற்கு சிக்கலானது" என்று கூறினார். "நான் இரு தனி நாடுகள் தீர்வை ஆதரித்தேன்; தொடக்கத்தில் இருந்தே அதுதான் என் நிலைப்பாடு" என்று பைடன் மேலும் கூறினார். "உண்மை என்னவென்றால், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு வெளிப்படையான பயங்கரவாத அமைப்பு." என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "காயமடைந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர்" 20,000 க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளனர் என்று எல்லைகள் அற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக 335 வெளிநாட்டவர்கள், 76 படுகாயமடைந்த, நோய்வாய்ப்பட்டவர்கள் ரஃபா எல்லைப் பாதை வழியாக வெளியே கொண்டு வரப்பட்டதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை எகிப்திய கள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதைக் கண்டதாக ஏஎஃப்பி தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்றுமாறு எம்.எஸ்.எஃப். அழைப்பு விடுத்துள்ளது. சண்டையை நிறுத்துவதுடன், முக்கியமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. "காஸாவில் அனைவரும் உணவு கேட்கிறார்கள், தண்ணீர் கேட்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்தபோது அதிர்ச்சியடைந்தேன்" என்று போர் தொடங்கியதில் இருந்து காஸாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐ.நா அதிகாரி பிலிப் லாஸரினி கூறினார். https://www.bbc.com/tamil/articles/crg1mk99g3vo
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கத்தாரில் மரண தண்டனை: இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை காக்கும் வழிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிசி நிருபர் 31 அக்டோபர் 2023 இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அனைவரின் பார்வையும் இந்தியா அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை நோக்கிதான் இருக்கிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறுகையில் கத்தார் அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாகவும் இந்த விவகாரத்தில் சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்திருந்தது. கடந்த திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்தார். அதன்பின்பு பேசிய அவர், “முன்னாள் அதிகாரிகளின் குடும்பத்தினரின் வலியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தியர்களை விடுவிக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். அவர்களின் குடும்பங்களோடும் நெருங்கிய தொடர்பில் நாங்கள் இருப்போம்” என நம்பிக்கை தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி பிரதமர் மோதியின் நம்பகமான அதிகாரியிடம் பொறுப்பு 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை காப்பாற்றும் இந்திய அரசின் முயற்சிகளை தலைமை தாங்கும் பொறுப்பு பிரதமர் நரேந்திர மோதியின் நம்பிக்கைக்குரிய இராஜதந்திரியான (Diplomat) தீபக் மிட்டலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரியான தீபக் மிட்டல் தற்போது பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவர் கத்தாருக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். மேலும், அவர் கத்தார் அரசாங்கத்தில் உயர்மட்டத்தோடு நல்ல உறவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடனான வெளியுறவு பேச்சுவார்த்தைகளை கையாள்வதில் சிறந்த நிபுணராக தீபக் மிட்டல் அறியப்படுகிறார். 2019 ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணையின் போது, பாகிஸ்தானின் மூத்த அதிகாரி கைகுலுக்க கை நீட்டிய போது தீபக் மிட்டல் கைகளை கூப்பி 'நமஸ்தே' எனக்கூறி பதிலளித்தார். அந்தப்படம் உடனே வைரலானது. அதிலிருந்து மிட்டல் வெளிச்சத்திற்கு வந்தார். ஏப்ரல் 2020ல், மிட்டல் கத்தாருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டில், கத்தாரில் இந்திய தூதராக பணியாற்றியபோது, உயர் தலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்சாயுடன் மிட்டல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக இந்தியா நடத்திய முறையான இராஜதந்திர பேச்சுவார்த்தை அதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிட்டலின் இந்த புகைப்படம் வைரலானது. 8 பேரையும் காக்கும் வழிகள் என்ன? இந்த நேரத்தில் அனைவரிடமும் இருக்கக்கூடிய முக்கியக் கேள்வி 8 இந்தியர்களையும் காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் என்ன என்பதுதான். நிபுணர்களை பொறுத்தவரை கத்தாரோடு இந்தியாவிற்கு இருக்கக்கூடிய நட்புறவை பயன்படுத்துவதுதான் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஏ.கே. மஹபத்ரா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மேற்காசியத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். அவர் கூறுகையில், “முதலாவதாக, இந்தியாவிற்கு கத்தார் எதிரி நாடு கிடையாது. இந்தியாவோடு கத்தாருக்கு நட்புறவும் பொருளாதார உறவும் உள்ளது. இந்தியாவிற்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு கத்தாரிலிருந்துதான் வருகிறது. 6 முதல் 7 லட்சம் இந்தியர்கள் கத்தாரில் பணிபுரிகின்றனர். இந்திய நிறுவனங்கள் கத்தாரில் முதலீடு செய்திருக்கிறார்கள். எனவே இந்த ஒரு விவகாரத்தால் இத்தனை விஷயங்களையும் இரண்டு நாடுகளும் பாழாக்கிக் கொள்ளமாட்டார்கள்” எனத் தெரிவித்தார். “இந்தியர்களின் கைது குறித்து கத்தார் எந்த ஒரு விவரத்தையும் தெரிவிக்காததால் இந்தியா முதலில் வெளியுறவின் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்க வேண்டும்” என மஹபத்ரா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இந்த விவகாரத்தில் பிராந்திய அளவில் இந்தியா கத்தார் மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம் எனத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஹமாஸ் அமைப்பின் அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு பிறகு மேற்கு ஆசியாவில் நாடுகள் மத்தியில் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது. இரான், துருக்கி, கத்தார் மற்றும் ஒரு அளவிற்கு பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு பக்கமும் மற்ற அரபு நாடுகள் ஒரு பக்கமும் எனப் பிரிந்துள்ளனர்.” “ஓமன் மற்றும் குவைத் போன்ற அரபு நாடுகளுக்கு கத்தாரோடு நல்ல உறவு உள்ளது. எனவே இந்த நாடுகளோடு பேசி கத்தார் மீது இந்தியா அழுத்தம் தரலாம். மேலும், அமெரிக்கா மூலமாகவும் கத்தார் மீது இந்தியா அழுத்தம் தரலாம். கத்தாரில் இன்னும் அமெரிக்காவின் அதிகாரம் உள்ளது. அமெரிக்காவின் கடற்படை தளம் ஒன்று கத்தாரில் உள்ளது” என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலீஃபா அல் தானியுடன் பிரதமர் நரேந்திர மோடி (2016 புகைப்படம்) இந்தியர்களுக்கு கத்தார் அரசரின் மன்னிப்பு கிடைக்குமா? மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களுக்கு அந்நாட்டு உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. மேல்முறையீடு செய்வதில் இந்தியர்களுக்கு இந்திய அரசு முழு உதவியையும் வழங்கி வருகிறது. இந்த மேல்முறையீட்டில் என்ன முடிவுகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சட்ட நடிவடிக்கைகள் மூலம் 8 இந்தியர்களையும் இந்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை என்றால் கத்தார் அரசரின் மன்னிப்பு மட்டும்தான் இந்தியர்களை காப்பாற்றும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெளியுறவு நிபுணரும் எழுத்தாளருமான ப்ரம்ம செலானி கூறுகையில், “இந்த தண்டனையை எதிர்த்து இந்தியர்கள் அடுத்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டால் கத்தாரின் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.” “இந்த வழக்கின் அரசியல் தன்மையை பார்க்கும்போது, 8 இந்தியர்களின் தண்டனை ரத்து செய்யப்படுவது கத்தார் அரசரின் கையில்தான் உள்ளது. கத்தார் அரசரான ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனிக்கு எந்த ஒரு குற்றவாளியின் தண்டனையையும் ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. கத்தாரின் தேசிய தினத்தில் நிறைய கைதிகளை கத்தார் அரசு விடுதலை செய்யும். ஒரு வேளை 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது இந்தியா-கத்தார் உறவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹம்த் அல் தானி பேராசிரியர் ஏ.கே. மஹாபத்ரா கூறுகையில், "கத்தாரில் நடப்பது ஜனநாயக ஆட்சி கிடையாது. அது முடியாட்சி. இந்த வழக்கில் கத்தாரின் ஆட்சியாளர்களும் மன்னிப்பு வழங்கலாம். அவர்கள் விரும்பினால், மரண தண்டனைக்கு பதிலாக சில ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கொடுக்கலாம். அதன்பின்பு 8 இந்தியர்களுக்கும் வரி விதிக்கப்பட்டு பிறகு அவர்களை இந்தியாவிற்கும் கொண்டு வரலாம்" எனத் தெரிவித்தார். ஜோர்டான் மற்றும் லிபியாவுக்கான இந்திய தூதராக அனில் திரிகுணாயத் பணியாற்றியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஆசியப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். திரிகுணாயத்தும் இதை ஒப்புக்கொள்கிறார். அவர் கூறுகையில், "இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தை ஒரு வழி. கத்தாருடன் இந்தியா வைத்திருக்கும் உறவுகளை கருத்தில் கொண்டு, கத்தாரின் அரசர் இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம். இது தான் கடைசிவழி மற்றும் இரு அரசாங்கங்களின் பேச்சுவார்த்தை மூலம்தான் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண முடியும்” எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "கைதிகளை மாற்றிக்கொள்வது குறித்து கத்தாருடன் இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறது. கத்தார் அரசரின் இந்தியா வருகையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் இவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு அவர்களை கத்தாரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவது பற்றி இந்தியா பேச்சுவார்த்தை நடத்தலாம்” என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தோஹாவில் கிரிக்கெட் விளையாடும் இந்திய இளைஞரின் படம். கத்தாரில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். சர்வதேச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்? பேராசிரியர் மஹாபத்ராவின் கூற்றுப்படி, இந்த பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு காணப்படவில்லை என்றால், இந்தியாவுக்கு வேறு ஒரு வழி உள்ளது. குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் செய்தது போல் சர்வதேச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தலாம் என்று அவர் கூறுகிறார். அனில் திரிகுணாயத் கூறுகையில், சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்வதே இந்தியாவிற்கான கடைசி வழியாக இருக்கும் என்றும் இந்த வழியை முயற்சி செய்து பார்ப்பதற்கான அவசியம் இருக்காது. அரசியல்ரீதியான பேச்சுவார்த்தையில்தான் எல்லாம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கத்தாரிடம் இருந்துதான் இந்தியா அதிக எரிவாயு இறக்குமதி செய்வதாகவும் இருநாடுகளுக்கும் பெரிய அரசியல் பிரச்சனையும் எதுவும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை மூலம் மட்டும்தான் இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார். இந்தியாவிற்கு கத்தார் சொல்ல விரும்பும் செய்தி என்ன? பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய எரிவாயு வளம் நிறைந்த நாடுதான் கத்தார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக கத்தார் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஹமாஸுடன் ஆழமான உறவுகளை வைத்திருப்பதாக கத்தார் மீது குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் கத்தாரின் பேச்சுவார்த்தையினால்தான் இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளின் விடுதலை சாத்தியமானது. எனவே இஸ்ரேலுடன் கத்தாருக்கு நல்ல உறவு இல்லை என்பது தெளிவாகிறது. இந்த எட்டு இந்தியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கத்தார் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் அவர்கள் கத்தாரில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனையடுத்து, இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் அணுகுமுறைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதும் விவாதிக்கப்படுகிறது. பேராசிரியர் மொஹபத்ரா கூறும்போது, "இஸ்ரேல்-பாலத்தீனம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தங்களுக்கு பிடிக்கவில்லை என கத்தார் மறைமுகமாக கூற விரும்புகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வது கத்தாருக்கு எளிதானது அல்ல, ஏனென்றால் அவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 8 இந்தியர்களின் மரண தண்டனைக்கும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் அணுகுமுறைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என விவாதிக்கப்படுகிறது. அனில் திரிகுணாயத் கூறுகையில், "இந்த 8 பேர் மீதான வழக்கு ஒரு வருடமாக நடந்து வருவதால், இந்த இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இதுவரை வெளியான அறிக்கைகளில், தீவிரவாதம் குறித்த விவகாரங்களில் இந்தியா எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்றும் வன்முறையை எப்படியும் நியாயப்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது”. பல துறைகளில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் நம்பியிருக்கும் நிலையில் கத்தாருடன் இந்தியா நேரடி மோதலில் ஈடுபடுவது விவேகமற்றது என்று பேராசிரியர் மஹாபத்ரா கூறுகிறார். அவர் கூறுகிறார், "தற்போதைய சூழலை மோசமாக்காமல் இந்திய அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cv232mkdzvko
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் விமானதாக்குதல் - 50க்கும் அதிகமானவர்கள் பலி Published By: RAJEEBAN 31 OCT, 2023 | 08:55 PM காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இஸ்ரேல் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பொதுமக்கள் இடிபாடுகளிற்குள் இருந்து உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகின்றன. https://www.virakesari.lk/article/168193
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : பற்களை வைத்து எலும்புக்கூடுகளின் வயதை கண்டறிய தீர்மானம் - சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ Published By: VISHNU 31 OCT, 2023 | 07:42 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பற்களின் அடிப்படையில் வயது நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். "தற்போது மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மாவட்ட வைத்தியசாலையின் உடற்கூறாய்வு நிலையத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நாங்கள் அவற்றின் பற்களை எக்ஸ்ரே எடுத்து அவர்களின் வயதை அனுமானிக்க உத்தேசித்துள்ளோம். மேலும் இந்த பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பல் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளோம். இனிவரும் காலங்களில் எக்ஸ்ரே எடுத்து முடிந்த பின்னர் அவர்கள் வந்து நேரடியாக இந்த எலும்புக்கூட்டுத் தொகுதியை பரிசோதிக்கும்போது நாங்களும் கூடவே இருந்து எங்களுடன் தொடர்புடைய விடயங்களை கையாள்வோம்." கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நவம்பர் 20ஆம் திகதியிலிருந்து மீள ஆரம்பிக்க ஒக்டோபர் 30ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்கால அகழ்வு பணிகளுக்காக சுமார் 25 இலட்சம் ரூபாய் நிதி எஞ்சியுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, அனைத்து எலும்புக்கூடுகளையும் அகழ்ந்து எடுத்ததன் பின்னர் அதுத் தொடர்பில் ஆராய்ந்து, இது தொடர்பிலான தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டார். "இதுத் தொடர்பிலான முடிவுகளை பொறுத்தவரையில் இவ்வாறான சிறு சிறு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மீட்கப்பட்ட எலும்புபக்கூடுகளின் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுவிட்டன. நாங்கள் கிடங்கில் உள்ள எலும்புக்கூடுகளை முழுமையாக எடுப்போம், அதன் பின்னர் ஆராய்ந்து முடிவுகளை சொல்வதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பத்தில் சொன்னால் சில சிக்கல் எழலாம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அவர்களின் சட்டத்தரணிகள் கிடங்கில் உள்ள அனைத்து எலும்புக்கூடுகளையும் எடுப்போம் எடுத்த பின்னர் எஞ்சிய பணிகளை மேற்கொள்வோம் என கூறியிருக்கின்றார்கள்." செப்டெம்பர் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவடைந்ததோடு, கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காக அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக புதைகுழியை அகழ்ந்தெடுக்கும் விசாரணையில் முன்னோடியாக செயற்படும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டிருந்தார். "கிடைத்த ஆதாரங்களை முறையாக ஆய்வு செய்வதற்காக இந்த 2 மாத காலத்திற்கு இது நிறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஏனைய பொருட்களை ஆராய்ந்து உண்மைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், இந்த அகழ்வு மற்றும் விசாரணையை தொடரலாமா வேண்டாமா என நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை வரை காத்திருக்கிறோம். என்ன தீர்மானம் எடுக்கப்படும் என்பதுதான் விடயம்." முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் புதைகுழியை அகழ்ந்தெடுக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாட்களின் பின்னர் 17 எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாயை பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் இந்த வருடம் ஜூன் 29ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/168189
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேலும் ஒரு இஸ்ரேல் பெண்ணை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 24 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 கடந்துள்ளது. இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த தலா 2 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். அவர்கள் எகிப்து வழியாக மீட்கப்பட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது. இந்நிலையில், தங்களிடம் பிணைக்கைதியாக இருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர் நேற்று விடுவித்தது. அவர் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நலமுடன் உள்ளார் என இஸ்ரேல் உளவு நிறுவனம் ஷென் பெட் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/279301
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸை இஸ்ரேலால் முற்றிலுமாக அழிக்க முடியுமா? பணயக்கைதிகள் என்ன ஆவார்கள்? பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி பதவி, பிபிசி செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் ஹமாஸ் இந்த உலகத்திலிருந்து துடைத்து எறியப்படும் என இஸ்ரேலின் தலைவர்கள் சூளுரைத்துள்ளனர். காஸா இதற்கு முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பாது என்றும் கூறியுள்ளனர். “ஒவ்வொரு ஹமாஸ் ஆளும் செத்து மடிவார்” என்று ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். ஹமாஸின் “தீவிரவாத இயந்திரம்” மற்றும் அதன் அரசியல் கட்டமைப்பு முழுவதும் தகர்க்கப்படும் என்று உறுதிபூண்டார். தனது இந்த இலக்குகளை அடைய தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் ஒழிக்கப்பட்டதாக இஸ்ரேல் திருப்தியடையும் போது, காஸாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறும். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், “புதிய பாதுகாப்பு அமைப்பு” குறித்து பேசுகிறார், அதில் அன்றாட வாழ்வில் இஸ்ரேலுக்கு எந்த பங்கும் இருக்காது என்றும் கூறுகிறார். ‘ஆப்ரேன் ஸ்வார்ட்ஸ் ஆப் ஐயன்’இன் நோக்கம், காஸாவில் இதுவரை ராணுவம் திட்டமிடாத வகையிலான லட்சியத்தை கொண்டுள்ளது. இதை அடைய பல மாதங்கள் ஆகலாம். ஆனால், இந்த இலக்குகள் யதார்த்தமானவையா? இஸ்ரேலின் படைத்தளபதிகள் இதனை எவ்வாறு அடைய போகிறார்கள்? காஸாவுக்குள் நுழைவது என்பது வீடுவீடாக சென்று சண்டையிடுவதாகும். இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிருக்கு ஆபத்தானதாகும். ஹமாஸ் ஆட்சி புரியும் காஸாவில் உள்ள அதிகாரிகள், இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர். இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கு காஸாவில் அடையாளம் காண முடியாத இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 230 பணயக் கைதிகளை மீட்கும் பொறுப்பும் உள்ளது. “ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரையும் இஸ்ரேலால் அழிக்க முடியாது. ஏனென்றால் அது தீவிரவாத இஸ்லாமின் கருத்தாகும்” என இஸ்ரேலின் ராணுவ வானொலியின் ராணுவ நிபுணர் அமிர் பர் ஷாலோம் கூறுகிறார். “ஆனால், இயங்க முடியாத அளவுக்கு அதை வலுவிழக்க செய்ய முடியும்” என்றார். பட மூலாதாரம்,AHMED ZAKOT/SOPA IMAGES/LIGHTROCKET ஹமாஸை வலுவிழக்க செய்வது, அதனை முழுவதுமாக ஒழிப்பதை விட சாத்தியமான இலக்காகும். ஹமாஸுடன் இஸ்ரேல் ஏற்கெனவே நான்கு போர்களை சந்தித்துள்ளது. ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை தடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. ஹமாஸ் இனிமேலும் இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தவோ கொலை செய்யவோ திறன் கொண்டதாக இருக்கக் கூடது என்பது தான் முக்கியமான இலக்கு என இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கிறார். ஹமாஸை ஒழிப்பது சிக்கலானது என டெல் அவிவ் பல்கலைக் கழகத்தின் பாலத்தீன ஆய்வுகளுக்கான பிரிவின் தலைவர் மைக்கேல் மில்ஸ்டைன் ஒப்புக் கொள்கிறார். உலகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மீது தாக்கம் செலுத்துகிறது இஸ்லாமிய சகோதரத்துவம் எனும் கருத்து. அந்த கருத்தின் உப கிளையாக உள்ள ஹமாஸை ஒழிக்க முடியும் என நினைப்பது பாசாங்காகும் என்று அவர் கூறுகிறார். ஹமாஸின் ராணுவ படையில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தவிர, அதன் சமூக நல கட்டமைப்பில் 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை உள்ளனர் என குறிப்பிடுகிறார் மைக்கேல் மில்ஸ்டைன். இந்த போரின் விளைவை பொறுத்தே அடுத்த 75 ஆண்டுகளுக்கு இஸ்ரேலின் இருப்பு அமையும் என பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் எவ்வளவு காலம் நீடிக்கும்? ராணுவ தாக்குதல் பல காரணிகளை நம்பி உள்ளது. ஹமாஸின் ஆயுதப் பிரிவு-இஸ்ஸேடைன் அல்-கசாம்- இந்நேரம் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி இருப்பார்கள். வெடிகுண்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு, எதிர்பாராத தாக்குதல்களும் திட்டமிடப்பட்டிருக்கும். தனது நீண்ட சுரங்கங்களை பயன்படுத்தி இஸ்ரேலிய படைகளை தாக்கக் கூடும். 2014ம் ஆண்டில், இஸ்ரேலிய காலாட்படை பட்டாலியன்கள் டாங்கி-எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் ஊடுருவல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்தன, அதேநேரத்தில் காஸா நகரின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற சண்டையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வடக்கு பகுதியிலிருந்து வெளியேறி, வாடி காஸா ஆற்றின் தெற்கு செல்ல வேண்டும் என்று பொதுமக்களை இஸ்ரேல் வலியுறுத்துவதன் ஒரு காரணம் இதுவே. நீண்ட நெடிய போருக்கு தயாராக இருக்கும் படி இஸ்ரேலியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் 3,60,000 ரிசர்வ் படையினர் பணிக்கு வந்துள்ளனர். போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் சர்வதேச சமூகத்திடமிருந்து வழங்கப்படும் நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதலை எத்தனை நாட்கள் தொடர முடியும் என்பது தான் கேள்வி. அதிகரிக்கும் உயிரிழப்புகள், தண்ணீர், மின்சார வழங்கல் துண்டிப்பு, மனித பேரழிவுக்கான ஐ.நா எச்சரிக்கை என நிலைமை சிக்கலாகி வருகிறது. “சர்வதேச சமூகம், குறைந்தது மேற்கத்திய தலைவர்களின் ஆதரவு இருக்கிறது என அரசும் ராணுவமும் கருதுகிறது. ‘நாம் அணி திரட்டலாம், நமக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது’ என்பது தான் இப்போதைய தத்துவம்” என இஸ்ரேலின் முன்னணி பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பத்திரிகையாளர்களில் ஒருவரான யோசி மெல்மான் கூறுகிறார். ஆனால், மக்கள் பசி பட்டினியால் வாடும் காட்சிகளை பார்த்தால் இஸ்ரேலின் நண்பர்களும் தலையிடுவார்கள். பொதுமக்கள் உயிரிழப்பு அதிகமானால் அழுத்தமும் அதிகமாகும். “இது மிக சிக்கலானது ஏனென்றால், இதற்கு நேரம் தேவை. ஆனால் அமெரிக்க நிர்வாகம் காஸாவில் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் இருக்க விடாது” என்கிறார் மைக்கேல் மில்ஸ்டைன். பணயக்கைதிகள் என்ன ஆவார்கள்? பணய கைதிகளில் பலர் இஸ்ரேலியர்கள், ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களும், இரு நாட்டு குடியுரிமை பெற்றவர்களும் அதிகம் உள்ளனர். அதாவது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளின் அரசுகளுக்கு பணய கைதிகளை பாதுகாப்பாக மீட்பதில் பங்கு உண்டு. இஸ்ரேலுக்கு இருப்பது நேரடியான வாய்ப்புகள், ஒன்று பணய கைதிகளின் வாழ்வை விட்டு வைப்பது அல்லது உள்ளே சென்று ஹமாஸுக்கு அதிகபட்ச தீங்கை விளைவிப்பது என பிரெஞ்சு மூலோபாய நிபுணர் கர்னல் மைக்கேல் கோயா கூறுகிறார். ஹமாஸ் பணயக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்களின் மனதை உலுக்கும் கோரிக்கைகள் இஸ்ரேல் தலைவர்களுக்கு கூடுதல் அழுத்தம் தந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக ஹமாஸ் பணய கைதியாக வைத்திருந்த கிலாத் ஷாலித் என்ற ராணுவ வீரரை விடுவிக்க , இஸ்ரேல் 1,000 கைதிகளை 2011ம் ஆண்டு விடுவித்தது. ஆனால் அதுபோன்று மிகப் பெரிய எண்ணிக்கையில் கைதிகளை விடுவிப்பது குறித்து இஸ்ரேல் யோசித்து தான் செயல்படும். ஏனென்றால் கடந்த முறை விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வர் தற்போது காஸாவில் ஹமாஸின் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். பட மூலாதாரம்,SAID KHATIB/AFP கூர்ந்து கவனிக்கும் அண்டை நாடுகள் தரைவழித் தாக்குதல் எத்தனை காலம் நீடிக்கும் என்பது இஸ்ரேலின் அண்டை நாடுகளின் எதிர்வினையை பொருத்தது. காஸாவின் எகிப்து எல்லையாக அமைந்த ரஃபாவை கடப்பது மனிதாபிமான புள்ளியாக மாறியுள்ளது, குறைந்த அளவிலான உதவிகள் மட்டுமே காஸாவிற்குள் வருகின்றன. வெளிநாட்டுப் குடிமக்களும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பாலத்தீனியர்களும் வெளியேறுவதற்காகக் காத்திருக்கின்றனர். "இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸாவின் பாதிப்பு எத்தனை அதிகமாகிறதோ, அவ்வளவு அழுத்தத்தை எகிப்து எதிர்கொள்ளும். பாலத்தீனர்களை எகிப்து கைவிடவில்லை என்று தோற்றமளிக்க வேண்டிய அழுத்தம் அது," என்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் ஒஃபிர் விண்டர் கூறுகிறார். ஆனால் அது கெய்ரோ வரையிலும் தொடராது, ஏனென்றால் காஸா மக்களை அது பெருமளவில் வடக்கு சினாயை கடக்க அனுமதிக்காது. சினாய் தீபகற்பத்திற்குள் காஸா மக்களை நிறுத்தும் எந்தவொரு முயற்சியும் எகிப்தியர்களை "லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக் களத்தில் இணைவதற்கு" தூண்டுவதாக அமையும் அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல்-சிசி எச்சரித்துள்ளார். ஜோர்டானின் மன்னர் அப்துல்லா, பாலத்தீன மக்கள் காஸாவில் இருந்து அகதிகளாக வெளியேற்றுவதற்கான எந்தவொரு சாத்தியமான முயற்சிக்கும் "எல்லை உண்டு" என பேசினார்: "ஜோர்டானிலும் அகதிகள் கூடாது, எகிப்திலும் அகதிகள் கூடாது, " என்று அவர் எச்சரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையும் தீவிர கண்காணிப்பிற்கு உட்பட்டுள்ளது. ஏற்கனவே பல எல்லை தாண்டிய தாக்குதல்கள் இஸ்லாமிய போராளிக் குழுவினரால் நடந்து வருகின்றன. இரு தரப்பிலும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்றாலும், இதுவரை இஸ்ரேலுக்கு எதிரான ஒரு புதிய அணிச்சேர்க்கை அமையுமளவு வன்முறை இல்லை. ஹெஸ்பொலாவிற்கு பிரதான ஆதரவாளராக உள்ள இரான், இஸ்ரேலுக்கு எதிராக "புதிய தாக்குதல் முனைகளை" தொடங்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் எச்சரிக்கையில் அதுதான் மையமாக இருந்தது. "எந்த நாட்டிற்கும், எந்த அமைப்புக்கும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எவருக்கும், ஒரு வார்த்தை சொல்கிறேன்: வேண்டாம்!" என்று அவர் கூறினார். USS ஜெரால்ட் போர்ட் மற்றும் USS ஐசனோவர் ஆகிய இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், அந்த எச்சரிக்கையை முன்னிட்டே மத்திய தரைக் கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 2,000 அமெரிக்க துருப்புகள் சூழ்நிலைக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES 20 லட்சம் மக்களின் எதிர்காலம் என்ன? ஹமாஸ் கணிசமான அளவு பலவீனமடைந்தால், அதன் இடத்தில் என்ன உருவாகும் என்பதே கேள்வி. 2005 -ம் ஆண்டில் இஸ்ரேல் தனது ராணுவத்தையும் ஆயிரக்கணக்கான குடியேறிகளையும் காஸா பகுதியிலிருந்து வெளியேற்றியது. தான் அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "அது ஒரு பெரிய தவறு" ஆகும் என்றார். ஒரு சக்தியின் வெற்றிடம் மிகவும் தீவிரமான அபாயங்களை உருவாக்கும் ஒரு சிக்கலைத் தீர்ப்பதில், புதிதாக பத்து சிக்கல்கள் உருவாகிடும் ஆபத்தும் இருப்பதாக மைக்கேல் மில்ஸ்டைன் எச்சரிக்கிறார். 2007-ம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பினால் காஸாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பாலத்தீன அமைப்பு (PA) மீண்டும் படிப்படியாகத் திரும்புவதற்கு அதிகார மாற்றம் வழிவகுக்கும் என்று ஆபிர் வின்டர் நம்புகிறார். பாலத்தீன அமைப்பு தற்போது மேற்குக் கரையின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் அங்கும் அது பலவீனமாக உள்ளது, அதனை காஸாவுக்குத் திரும்பும்படி வற்புறுத்துவதும் மிகவும் சிக்கலாக இருக்கும் என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES 1999 -ல் செர்பியப் படைகள் வெளியேறிய பின்னர் ஐ.நா கொசோவோவை இயக்கியது போல் சர்வதேச சமூகம் ஒரு இடைக்கால தீர்வை வழங்கக்கூடும். ஆனால் ஐ.நா. மீது இஸ்ரேலில் பரவலான அவநம்பிக்கையே உள்ளது. எகிப்து, அமெரிக்கா, PA மற்றும் பிற அரபு நாடுகள் சேர்ந்து காஸாவின் மேயர்கள், பழங்குடியினர், குலங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் நிர்வாகத்தை உருவாக்குவது மற்றொரு தேர்வாக இருக்கலாம் என்று மைக்கேல் மில்ஸ்டைன் கூறுகிறார். எகிப்தின் அதிபர் காஸாவைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் "பேச்சுவார்த்தை மூலமாக ராணுவம் நீங்கலான பாலத்தீன அரசினை நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கியிருப்பின், இப்போது போர் உருவாகியிருக்காது" என சுட்டிக்காட்டினார். பேரழிவை எதிர்கொண்ட காஸாவின் உள்கட்டமைப்பினை, முந்தைய போர்களுக்குப் பிறகு செய்ததைப் போன்றே இம்முறையும் மறு கட்டமைக்க வேண்டும். ராணுவ மற்றும் குடிமை தேவைகளுக்கான "இரட்டை பயன்பாடு கொண்ட பொருட்கள் "காஸாவிற்குள் நுழைவதில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இஸ்ரேல் விரும்பும். இஸ்ரேலிய மக்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்குவதற்காக காஸாவை சுற்றிலும் வேலியுடன் கூடிய இடையக மண்டலம் வேண்டும் என்ற கருத்துகளும் உள்ளன. போரின் முடிவு எதுவாக இருந்தாலும், அக்டோபர் 7 அன்று நடந்த தாக்குதல் மீண்டும் நடந்துவிடாமல் உறுதி செய்யவே இஸ்ரேல் நினைக்கிறது. https://www.bbc.com/tamil/articles/c4n41y3n07po
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாழிணைய உறவு சகோதரி யாயினியின் தந்தையார் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் சகோதரிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கத்தார்: முன்னாள் கடற்படையினர் மரண தண்டனை பற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை தளபதி பட மூலாதாரம்,ANI 4 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த இந்திய அரசு, இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இது குறித்து இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கத்தார் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் இந்திய கடற்படை ஊழியர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றுவது இந்தியாவுக்கு பெரிய ராஜ்ஜீய சவாலாகக் கருதப்படுகிறது. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் கடந்த ஆண்டு(2022) ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரில் கைது செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டதற்கும் அவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் எந்தக் காரணமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியின்படி, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. இந்தியர்களின் மரண தண்டனை குறித்து இந்திய கடற்படை தளபதி என்ன கூறினார்? பட மூலாதாரம்,ANI கத்தாரில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர். ஹரிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் அவர் பேசுகையில் சட்ட நடவடிக்கைகள் மூலம் இந்திய அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், "சம்பந்தப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு என்னெவென்று இன்னும் கத்தார் பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினரையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்தித்தார். மேலும், இந்திய அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவத்தோடு இந்த விவகாரத்தைக் கவனித்து வருவதாகவும் இந்தக் கடினமான நேரத்தில் அதிகாரிகளின் அதிகாரிகளின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் ஆறுதலாக இருக்கும்," எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கத்தார் அரசு கைது செய்தது. கடந்த மார்ச் மாதம் அவர்கள் மீது உளவு பார்த்ததாகக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளும் இந்திய குடிமகன்களுமான கைது செய்யப்பட்ட 8 பேரும் கத்தாரை சேர்ந்த ஜஹிரா அல் அலாமி எனும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் கடற்படைக்காக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இந்த திட்டத்தின் நோக்கமானது ரேடாரில் சிக்காத நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட இத்தாலிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது. இந்தியாவைச் சேர்ந்த 75 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அதில் பெரும்பாலானோர் இந்திய கடற்படையில் முன்னாள் அதிகார்கள். கடந்த மே மாதத்தில், 2022ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த நிறுவனத்தை மூடப்போவதாக நிறுவனம் சார்பில் தெரிவித்திருந்தனர். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன? பட மூலாதாரம்,HINDUSTAN TIMES மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது. அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார். இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார். தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர். குடும்பத்தினர் என்ன கூறுகின்றனர்? எட்டு பேரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட பிறகு, ஒரு இந்திய இணைய ஊடகம் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மருத்துவர் மிது பார்கவா மற்றும் கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் ஆகியோரிடம் பேசியது. அப்போது, கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோதி அரசுக்கு மிது கார்கவா வேண்டுகோள் விடுத்திருந்தார். தனது சகோதரர் வயது முதிர்ந்தவர் என்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் 63 வயதில் தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைth தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று மிது தெரிவித்திருந்தார். பூர்ணேந்து திவாரி சிறையில் இருந்து தங்களின் 83 வயதான தாயுடன் பேசியதாகவும், மகனின் பாதுகாப்பு குறித்து தாயார் கவலைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். கேப்டன் நவ்தேஜ் சிங் கில்லின் பிறந்த நாளான செப்டம்பர் 6ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்பியதாகவும் அதற்கு அவர் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்ததாகவும் அவரது சகோதரர் நவ்தீப் கில் கூறினார். பின்னர் அவருடனான தொலைபேசி தொடர்பு நின்றுபோனது. நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நவ்தீப் கில், தனது சகோதரருக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறினார். தனது சகோதரர் ஓய்வு பெறும் வரை இந்திய கடற்படையில் பணியாற்றியதாகவும் தனது அண்ணனை இந்தியாவுக்கு கொண்டு வருவது அரசின் பொறுப்பு என்றும் நவ்தீப் கூறினார். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cn03vpzyzg2o
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் 30 OCT, 2023 | 12:40 PM புதுடெல்லி: உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். அப்போது, "இந்த வழக்குக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் " என்று தெரிவித்தார். இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "கத்தார் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ள 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன். அப்போது, அரசு இந்த வழக்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை எடுத்துரைத்தேன். அந்தக் குடும்பத்தினரின் வலிகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். கூடவே 8 பேரையும் விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை, இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை, கத்தார் உளவுத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமைச் சிறையில் இருந்து வந்தனர். இது தொடர்பான வழக்கு அக்.26 வியாழக்கிழமை கத்தார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கத்தார் நாட்டில் பணிபுரிந்த இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தத் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும், அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வழக்குக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்’’ எனத் தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/168062
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாரிய மனித புதைகுழிகள் - உரிமை கோரப்படாத உடல்கள் - இஸ்ரேலின் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களிற்கு இறுதிமரியாதை செலுத்தும் உரிமையையும் இழந்துள்ள காசாமக்கள் Published By: RAJEEBAN 30 OCT, 2023 | 09:59 AM இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தங்கள் அன்புக்குரியவர்களை தங்களிடமிருந்து பறிப்பதுடன் அவர்களிற்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகளையும் பறிப்பதாக பாலஸ்தீனியர்கள் தெரிவிக்கின்றனர். துயரங்களின் மத்தியில் - உயிரிழந்தவர்களிற்கு கௌரவத்தையும் பறிகொடுத்தவர்களிற்கு சிறிய ஆறுதலையும் கொடுப்பவையாக இந்த இறுதிமரியாதைகளே காணப்பட்டன. மருத்துவமனைகளும் பிரேத அறைகளும் நிரம்பிவழிவதன் காரணமாகவும் இடைவிடாத தொடர்ச்சியான விமானக்குண்டுவீச்சு காரணமாகவும் இறுதிநிகழ்வுகளும் நினைவுகூருவதும் சாத்தியமற்ற விடயங்களாக மாறியுள்ளன. புதியவர்களை புதைப்பதற்காக ஏற்கனவே காணப்படும் புதைகுழிகளை தோண்டி அகலமாக்கவேண்டிய நிலையில் குடும்பங்கள் காணப்படுகின்றன. மருத்துவமனைகளில் இடமின்மை காரணமாக மருத்துவமனை பணியாளர்கள் உடல்களை புதைத்த பின்னரே உறவினர்களிற்கு தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் எவராவது கொல்லப்பட்டால் அவர்களை அடையாளம் காண்பதற்காக குடும்ப உறுப்பினர்களின் கரங்களில் பிரஸ்லட் அணிவிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களாக காசாவில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. குழந்தைகள் சிறுவர்களின் கைகால்களில் மார்க்கர்களால் அவர்களின் பெயர்களை எழுதுகின்றனர். கடந்த மூன்று வாரங்களாக முற்றுகையிடப்பட்டுள்ள காசாமீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் உலகில் மக்கள் மிகவும் நெரிசலாக வாழும் பகுதிகள் மீது தலைசுற்றவைக்கும் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளன. 8000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களில் 3300 பேர் சிறுவர்கள் மேலும் 1650 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர் இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள். https://www.virakesari.lk/article/168043
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசுடனான யுத்தத்தில் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம் - இஸ்ரேல் 29 OCT, 2023 | 10:50 AM காசாவில் தரை நடவடிக்கைகளிற்காக இஸ்ரேலிய படையினர் தயாராகும் படங்களை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது. ஹமாசுடனான யுத்தத்தின் இரண்டாவது கட்டத்திற்குள் இஸ்ரேல் நுழைந்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காசா பள்ளத்தாக்கு முழுவதும் படையினரை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் நீண்ட கடினமான யுத்தம் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் நாங்கள் படைகளை விலக்கிக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167987
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாசின் வான்படை தளபதி கொலை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7 ஆம் திகதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 21 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், காசாவில் ஹமாசின் வான்படை தளபதி இஸ்லாம் அபு ருக்பே கொல்லப்பட்டான் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் உளவு அமைப்பான ஷின்பெட் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை ருக்பே நிர்வகித்து வந்தார். இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் மூளையாக செயற்பட்டது ருக்பே என விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 14 ஆம் திகதி ஹமாஸ் விமானப்படையின் முந்தைய தளபதி முராத் அபு முராத் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/279039
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம்- WHO தலைவர் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். வான்தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சில தினங்களாக பீரங்கிகள் மூலமாக காசாவில் சிறுசிறு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 20 இலட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெ காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேபோல் யுனிசெப் தலைவர் ரஸல், “எங்களுடன் பணிபுரியம் சக அதிகாரிகள் உடனான தொடர்பை இழந்து விட்டோம். அவர்கள் பாதுகாப்பு விசயம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/279007
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
பகல சுகுணாகர்: கத்தாரில் 8 இந்தியர்கள் செய்த குற்றத்தையே கூறாமல் மரண தண்டனை விதிப்பதா? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, பகல சுகுணாகர் உள்ளிட்ட இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் இந்திய கடற்படையின் எட்டு முன்னாள் ஊழியர்களுக்கு கத்தாரில் உள்ள கத்தார் முதன்மை நீதிமன்றம் அக்டோபர் 26 அன்று மரண தண்டனை விதித்தது. இவர்களில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பகல சுகுணாகரும் ஒருவர். கைது செய்யப்பட்டவர்களில், நவ்தேஜ் சிங் கில், சவுரப் வசிஷ்ட் மற்றும் பிரேந்திர குமார் வர்மா ஆகியோர் கேப்டன்களாகவும், பூர்ணேந்து திவாரி, அமித் நாக்பால், ராகேஷ் மற்றும் சுகுணாகர் ஆகியோர் தளபதிகளாகவும் பணிபுரிந்தனர். இவர்கள் அனைவரும் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இத்தாலியிடமிருந்து மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் கத்தாரின் ரகசியத் திட்டத்தின் விவரங்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் கைது செய்யப்பட்டதாக பகல சுகுணாகரின் உறவினர் கபூர் கல்யாண சக்ரவர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார். கபூர் கல்யாண சக்ரவர்த்தியின் சகோதரி முன்னாள் இந்திய கடற்படைத் தளபதி பகல சுகுணாகரை மணந்தார். சுகுணாகரின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகப் பதிலளித்து சுகுணாகரையும் மற்ற ஏழு பேரையும் சேர்த்து விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் கல்யாண சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டார். கத்தார் சிறையில் இருக்கும் சுகுணாகருடன் தனது சகோதரியைத் தவிர வேறு யாரும் பேச முடியாது என்றும் அவர் கூறினார். உண்மையில் பகல சுகுணகர் யார்? இந்த வழக்கின் மற்ற விவரங்கள் என்ன? இந்த வழக்கில் குடும்ப உறுப்பினர்களின் வாதம் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் கல்யாண சக்கரவர்த்தி மற்ற விவரங்களை விளக்கினார். கீழே தொகுக்கப்பட்டுள்ள அனைத்தும் அவருடைய சொற்களில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. சுகுணாகர் இந்திய கடற்படையில் விசாகப்பட்டினம், மும்பை மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பணியாற்றினார். கடந்த 2013ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற சுகுணாகர், பின்னர் கத்தாரை சேர்ந்த அல் தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 7 பேருக்கு அக்டோபர் 26ஆம் தேதி மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் சுகுணாகர் உள்ளிட்ட 8 பேருக்கும் அவர்கள் மீதான குற்றச்சாட்டையே பகிரங்கமாக கூறாமல் மரண தண்டனை என்று அறிவிப்பது எந்த அளவுக்கு நியாயம்? பட மூலாதாரம்,ANI இந்த எட்டு பேரும் கத்தாரில் உள்ள அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனம் கத்தார் கடற்படைக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் ரகசியத் திட்டத்திற்காக அல் தஹ்ரா நிறுவனம் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை பணியமர்த்தியிருந்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 30 அன்று கத்தாரின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு அவர்கள் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து சில மின்னணு ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் தொடங்கியது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி 8 மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் அந்த மனுக்களை நிராகரித்தது. இதற்கிடையில், கடந்த 26ம் தேதி, 'கத்தார் முதன்மை நீதிமன்றம்' அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. படக்குறிப்பு, அல் தஹ்ரா நிறுவனத்தின் பழைய இணையதளம் தற்போது செயல்படுவதில்லை. நிறுவனத்தின் இணையதளம் செயல்படவில்லை அல் தஹ்ரா நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் தோஹாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. கத்தார் கடற்படைக்கு பயிற்சி, பராமரிப்பு மற்றும் தளவாட உதவிகளை வழங்குவதாக இந்நிறுவனத்தின் பழைய இணையதளம் கூறியுள்ளது. ஆனால், தற்போது அந்த இணையதளம் செயல்படுவதில்லை. புதிய இணையதளத்தில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகளின் விவரங்களும் அதில் இடம்பெறவில்லை. நிறுவனத்தின் பெயரும் தஹ்ரா க்ளோபல் (Dahra Global) என மாற்றப்பட்டுள்ளது. நான் எப்போதும் இந்த இணையதளத்தை கவனித்து வருகிறேன். அதனால்தான் என்னால் இவற்றைச் சரியாகச் சொல்ல முடிகிறது. இந்த 8 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய தூதரகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 30 ஆம் தேதி, எட்டு பேருக்கும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்களின் கைது குறித்து சுகுணாகர் கவலை தெரிவித்ததால், இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் அக்டோபர் 3ஆம் தேதி அவர்களைச் சந்தித்தார். அப்போதிருந்து, குடும்ப உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தோஹாவில் இருந்தால், அவர்கள் சிறைக்குச் சென்று அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இஸ்ரேல் சார்பில் ரகசிய ஏஜென்டுகளாகச் செயல்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. படக்குறிப்பு, சுகுணாகர் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்ததாக அவரது மைத்துனர் கல்யாண சக்கரவர்த்தி கூறுகிறார். உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் விசாகப்பட்டினம் பகல சுகுணாகர் ஒருவர் ஆவார். விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த அவர், அங்கு தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர், கொருகொண்டா சைனிக் பள்ளியில் பயின்றார். அதன்பின், கடற்படை பொறியியல் கல்லூரியில் படித்து, கடற்படையில் சேர்ந்தார். தனது கடும் உழைப்பால் பின்னர் தளபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவரது பணிக்காலத்தில் ஒரு முறை, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படையில் சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு ஓய்வு பெற்று தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் சமீபத்தில் என் சகோதரி சிறைக்குச் சென்று சுகுணாகரைச் சந்தித்தார். அவர் சொன்ன விவரங்களின்படி, அங்கே உடல்நலம் குறித்த விஷயங்களைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. அதற்கும் மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது. கல்யாண சக்ரவர்த்தி இதுகுறித்து கூறுகையில், ‘‘சுகுணாகருடன் பேச, சந்திக்க எனது சகோதரியைத் தவிர வேறு யாருக்கும் கத்தார் அரசு வாய்ப்பளிக்கவில்லை,” என்றார். பட மூலாதாரம்,HINDUSTAN TIMES படக்குறிப்பு, மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பிரதமர் மோதி கத்தார் எமிருடன் பேசவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பிரதமர் பேசினால் போதும் முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்துக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தங்களுக்கு முன் உள்ள அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியது. 'அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரிந்த எட்டு இந்திய ஊழியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். முழு தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட நிபுணர்களிடம் நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். இது குறித்து கத்தார் அதிகாரிகளிடமும் பேசுவோம்” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கத்தார் அரசிடம் பிரதமர் மோதி பேசினால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று கல்யாண சக்கரவர்த்தி கூறினார். இந்த வழக்கில் அரசு ஏற்கனவே தீவிரம் காட்டிவருவதாகவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அரசை விட விரைவாக வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்திய அரசின் பதில் என்ன? இந்த வழக்கு தொடர்பாக சுகுணாகரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விசாகப்பட்டினத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யான ஜி.வி.எல். நரசிம்ம ராவை சந்தித்தனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கத்தாருக்கான இந்திய தூதர் விபுலிடம் பேசியதாக ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்தார். கத்தார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரத்தை அறிந்த எம்.பி ஜி.வி.எல். நரசிம்ம ராவ், இந்த உத்தரவின் இரண்டு வரிகள் மட்டுமே நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் முழு தீர்ப்பும் கிடைக்கும் என்றும் உள்ளூர் நீதிமன்றம் கூறியதாக தெரிவித்தார். 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கத்தாரில் அதிகாரம் மிக்க "கோர்ட் ஆஃப் கேசேஷன்" நடைமுறையும் இருக்கும் இருக்கும் என்றும் ஜிவிஎல் நரசிம்ம ராவ் நினைவூட்டினார். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னாள் கடற்படை ஊழியர்களை விடுவிக்க “முயற்சித்து வருகிறோம்” என்றார் அவர். முன்னாள் கடற்படை வீரர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இந்திய அரசு, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று அவர் கூறினார். ஜி.வி.எல். நரசிம்மராவ், ராஜ்யசபா எம்பி மட்டுமல்லாது, வெளியுறவுத் துறைக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjr0j1wre1ro