Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் - சிஎன்என் Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 10:49 AM ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது. இஸ்ரேல் மீதான பயங்கரமான அதிரடி தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் சிறிய குழுவினர் காசாவில் உருவாக்கப்பட்ட சுரங்கப் பாதைகளிற்குள் தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்தி தொடர்பாடல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்காவிடம் பகிரப்பட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டு வருடகாலமாக இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என விடயங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவினரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஹமாஸ் அமைப்பினர் தங்கள் மத்தியில் தொடர்பாடல்களில் ஈடுபடுவதற்கு உதவியுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன. இரண்டு வருட கால திட்டமிடல்களின் போது ஹமாசின் விசேட குழுவொன்று சுரங்கப்பாதைக்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி தனக்குள் தொடர்பாடல்களில் ஈடுபட்டது ஆனால் தாக்குதல் ஆரம்பமாகிய இறுதி நிமிடம் வரை தன்னை இரகசியமாகவே வைத்திருந்தது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஏழாம் திகதியே தாக்குதலில் இணைந்துகொள்ளுமாறு ஏனைய ஹமாஸ் உறுப்பினர்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன. திட்டமிடல்கள் இடம்பெற்ற இரண்டு வருடங்களில் அமெரிக்க புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்கள் கணிணிகளை இணையங்களை பயன்படுத்துவதை தவிர்த்தார்கள் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட விசேட குழுவினரிற்கு அப்பால் இந்த தாக்குதல் திட்டம் குறித்து அதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பழையபாணி திட்டமிடல்களில் ஈடுபட்டது, தனிப்பட்ட ரீதியில் சந்திப்புகள் இடம்பெற்றன - டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது என இஸ்ரேல் பகிர்ந்து கொண்டுள்ள புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. டிஜிட்டல் சாதனங்களின் சமிக்ஞைகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இடைமறித்து கேட்ககூடும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன எனவும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏன் ஹமாஸ்தாக்குதல் குறித்து இறுதிவரை எதனையும் அறியமுடியாத நிலையிலிருந்தன என்பதற்கான காரணங்கள் இதன் மூலம் தெளிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/167697
  2. காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலி Published By: SETHU 24 OCT, 2023 | 01:04 PM காஸாவில் ஒரே நாளில் 436 பேர் பலிஇஸ்ரேலின் தாக்குதல்களினால் பலஸ்தீனத்தின் காஸாவில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவின் வடபிராந்தியத்தில் ஜபாலியா, பேய்த் லாஹியா பகுதிகளிலும் காஸாவின் மத்திய பகுதியிலுள்ள அல் ரேமால், காஸாவின் மேற்குப்பகுதியிலுள்ள அல் ஷாதி முகாம், தென்பகுதியிலுள்ள கான் யூனிஸ் ஆகிய பகுதிகளில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கான் யூனிஸ் நகரில 48 பேரும், ரஃபாவில் 57 பேரும், காஸா மத்திய பகுதியின் அல் வுஸ்தாவில் 168 பேரும் காஸா சிற்றியில் 66 பேரும் வடக்கில் 44 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என பலஸ்தீன சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 7 ஆம் திகதியின் பின் இதுவரை இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் 5,087 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்னர். இவர்களில் 2055 சிறார்கள், 1119 பெண்களும் அடங்குவர் என காஸாவிலுள்ள ஹமாஸ் நிர்வாகத்திலுள்ள காஸா சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது. அத்துடன் 14,245 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களினால் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் 222 பேர் ஹமாஸினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167642
  3. இஸ்ரேலின் காசா முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் - பராக் ஒபாமா Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 01:14 PM காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒக்டோர்பர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டடுள்ளமையும் விமானக்குண்டுவீச்சுகளும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள பராக் ஒபாமா இது இறுதியில் மத்தியகிழக்கில் அமைதி ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இஸ்ரேலிற்கு ஆதரவளித்தால் கூட இஸ்ரேல் ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது குறித்து நாங்கள் தெளிவாகயிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை தனது மக்களை இவ்வாறான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்கான இஸ்ரேலின் உரிமையை அவர் நியாயப்படுத்தியுள்ளார். மத்தியகிழக்கில் இடம்பெறும் விடயங்களை உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது மனித உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேலின் இராணுவ தந்திரோபாயங்கள் எவையும் இறுதியில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167646
  4. காஸாவுக்குள் தரைவழியாகவும் இஸ்ரேலியப் படை தாக்குதல் Published By: SETHU 24 OCT, 2023 | 02:32 PM ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பிராந்தியத்துக்குள் இஸ்ரேலியப் படையினர் தரைவழியாக நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். காஸாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தரைவழி முற்றுகைகளை இஸ்ரேலியப் படையினர் நடத்தியதாகவும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காஸா எல்லை வேலியின் மேற்குப் பகுதிக்குள் இஸ்ரேலியப் படையினர் சென்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸிடமிருந்து அப்பகுதியை சுத்தப்படுத்துவதற்காகவும் ஆயுதங்களைத் தேடியும், பணயக்கைதிகளை கண்டுபிடிப்பதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இஸ்ரேலியப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரி இதேவேளை காஸா எல்லைக்குள் இஸ்ரேலியப் படையினருடன் தாம் போராடியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் நகருக்கு கிழக்குப் பகுதியில் இம்மோதல் நடந்ததாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினரின் இரு புல்டோஸர்கள், தாங்கி ஆகியனவற்றை தாம் அழித்ததாகவும், இஸ்ரேலியப் படையினர் வாகனங்களைக் கைவிட்டு வேலிக்கு கிழக்கே தப்பிச் சென்றனர் எனவும் ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஞாயிறு இரவு காஸாவுக்குள் மேலும் முற்றுகைகைள இஸ்ரேலியப் படையினர் நடத்தினர் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி நேற்று தெரிவித்தார். 222 பணயக் கைதிகள் பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அதேவேளை, இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, காஸாவில் பணயக்கைதிகளாக 222 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். 24 மணித்தியாலங்களில் 320 தாக்குதல்கள் காஸா பிராந்தியத்தில் 24 மணித்தியாலங்களில் 300 இற்கும் அதிகமான தாக்குதல்களை தான் நடத்தியதாக இஸ்ரேல் நேற்று (23) தெரிவிததுள்ளது. 24 மணித்தியாலங்களில் 320 இற்கும் அதிகமான இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்று தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்கப்பாதைகள், ஹமாஸின் செயற்பாட்டு கட்டளை மத்திய நிலையங்கள் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கத்தின் கண்காணிப்பு நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில் 800 பேர் கைது பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்தில் தேடப்பட்ட 800 பலஸ்தீனியர்களை கடந்த 7 ஆம் திகதியிலருந்து தான் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் 500 இற்கும் அதிகமானோர் ஹமாஸ் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் கூறுகிறது. நேற்றுமுன்தினம் மாத்திரம் மேற்குக்கரையில் 37 ஹமாஸ் அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதேவேளை, மேற்குக்கரையின் ரமல்லா நகருக்கு அருகிலுள்ள ஜலாஸோன் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படையினர் நேற்றுமுன்தினம் நடத்திய முற்றுகைகளில் இரு பலஸ்தீனர்கள் உயிரழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது. நிவாரணங்களுடன் 34 லொறிகள் கடந்த 7 ஆம் திகதியின் பின்னர் கடந்த சனிக்கிழமை முதல் தடவையாக காஸாவுக்குள் நிவாரணப் பொருட்களை ஏற்றிய லொறிகள் எகிப்திலிருந்து காஸாவுக்குள் பிரவேசித்தன. கடந்த சனி, ஞாயிறு தினங்களில் 34 லொறிகள் காஸாவுக்குள் சென்றுள்ளதாக எகிப்திய செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், காஸாவிலுள்ள சுமார் 24 இலட்சம் மக்களுக்காக தினமும் 100 லொறி நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167654
  5. ஹமாஸ் மேலும் இருவரை விடுதலை செய்தது -கத்தார் எகிப்தின் முயற்சிகளிற்கு பலன் Published By: RAJEEBAN 24 OCT, 2023 | 11:01 AM ஹமாஸ் தனது பிடியிலிருந்த மேலும் இரு பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. 85 வயதான யொசெவ்ட் லிவ்சிட்ஸ் 79 வயதான நுரிட் கூப்பர் என்ற இரண்டு பெண்களையே ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இவர்களை கடந்த 7 ம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்ரேலின் தென்பகுதி நகரான நிர் ஒஸ் கிப்புட்சிலிருந்து ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்திருந்தது. ஹமாஸ் அவர்களின் கணவன்மார்களை விடுதலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை தயார் விடுதலை செய்யப்பட்டமை ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலையாவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக யொசெவ்ட் லிவ்சிட்ஸின் மகள் தெரிவித்துள்ளார். கத்தார், எகிப்து மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி காரணமாக இருவரும் விடுதலை செய்யப்பட்டமை நல்ல விடயங்கள் இடம்பெறலாம் என்பதற்கான அறிகுறி என சரோனே லிவ்சிட்ஸ் தெரிவித்துள்ளார். தாயார் விடுதலை செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது உங்களிற்கு என்ன உணர்வு ஏற்பட்டது என்ற சிஎன்என்னின் கேள்விக்கு வார்த்தைகளால் அதனை வர்ணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனது தாயாரலும் நன்கு நடக்கவும் பேசவும் முடியும் அவர் நடந்து எல்லையை கடந்துள்ளார் என நினைக்கின்றேன் இது மிகவும் ஆச்சரியமான விடயம் என மகள் தெரிவித்துள்ளார். உருவாகிவரும் பெரும் கதையில் இது ஒரு சிறிய ஒளிக்கீற்று என தெரிவித்துள்ள அவர் எப்போது எனது தாயாரை கட்டித்தழுவுவேன் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளேன் எனது சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். லிவ்சிட்சின் தந்தை தொடர்ந்தும் ஹமாசின் பிடியில் உள்ளார், என்னுடைய தந்தை இன்னமும் அங்கிருக்கின்றார் பலர் அங்கு உள்ளனர் அனைவர் குறித்த நற்செய்திக்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167629
  6. மூனா என்ற கவி அருணாசலம் ஐயாவிற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  7. நிர்வாகிகள் கவனத்திற்கு 1) புதிய பதிவுகள் என்று போடாது புதுப்பிக்கப்பட்ட பதிவுகள் என்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 2) சூடான பதிவுகளுக்குள் கூடுதல் பதிவுகள் வந்த திரிகள் காட்டவில்லையே? 3) "முகப்பில் ஊர்ப்புதினம், உலக நடப்பு, அறிவியல் தொழில் நுட்பம் போன்ற எல்லாத் தலைப்புகளையும் அழுத்தினால்(Ex:- "https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/) கருத்துக்களத்தினூடாகச் சென்று ஒவ்வொரு தலைப்பாக திரிகளை பார்வையிடவோ தொடங்கவோ முடிவது போல் நேரடியாக அணுக இலகுவாக இருக்கும் அல்லவா? @நியானி @nunavilan @இணையவன் @நிழலி @மோகன்
  8. காஸாவுக்குள் இரவோடு இரவாக தரை வழியே நுழைந்த இஸ்ரேலிய படைகள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,EPA 23 அக்டோபர் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தொடர்ந்து நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், மீண்டும் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காஸா துண்டு நிலப் பகுதியில் மேலும் 320 இடங்களக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதனிடையே தங்களுடையே இல்லங்கள் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி தாக்கப்பட்டதாக பாலத்தீன ஆட்சியகம் கூறியுள்ளது. கடந்த சில மணிநேரங்களில் காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அருகில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த மருத்துவமனைகளில் காஸாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை ஆகியவை அடங்கும் என்று பாலத்தீனிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தனது டெலிகிராம் சேனலில், அல்-குத்ஸ் அருகே நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது குவைத் மருத்துவமனைக்குப் பின்னால் நடந்ததாகக் கூறி இடிந்த ஒரு கட்டிடத்தின் படங்களையும் அது வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ மற்றும் படங்களை பிபிசியால் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதா என்பதை உறுதிப்படுத்துமாறு பிபிசி இஸ்ரேல் தற்காப்புப் படைகளைக் கேட்டுள்ளது, மேலும் அவர்கள் சோதனை செய்வதாக எங்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் எங்களுக்குத் தெரிந்தவுடன் சமீபத்திய மேம்பாடுகளை உங்களுக்குக் கொண்டு வருவோம். பட மூலாதாரம்,REUTERS காஸாவில் பலி 5,000-ஐ தாண்டியது - ஒரே நாளில் 436 பேர் பலி காஸாவில் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 436 பேர் பலியானதாகவும், இதுவரை மொத்தம் 5,087 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த தகவல்படி, கொல்லப்பட்டவர்களில் 2,055 பேர் குழந்தைகள், 1,119 பேர் பெண்கள், 217 பேர் மூத்த குடிமக்கள். அத்துடன், 15,273 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர். காஸாவில் மற்ற அரசு அமைப்புகளைப் போல சுகாதாரத்துறையும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,EPA காஸாவுக்குள் இரவோடு இரவாக புகுந்த இஸ்ரேலிய தரைப்படை காஸா மீது 2 வாரங்களுக்கும் மேலாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், முதன் முறையாக தரைவழியே எல்லை தாண்டியுள்ளது. தரைவழியே படையெடுக்க காஸா எல்லையை ஒட்டி ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளில் ஒரு பிரிவினர் இரவோடு இரவாக எல்லை தாண்டி காஸாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. காஸா பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரவில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முழுவீச்சிலான தரைவழி படையெடுப்பின் தொடக்கம் அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல் ஞாயிற்றுக் கிழமை ஒரு அரிய நிகழ்வில், இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. மேற்குக் கரையில் ஹமாஸ் குழு ஒரு மசூதியை ‘பயங்கரவாத வளாகமாகப்’ பயன்படுத்துவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குக் கரையின் வடக்கில் உள்ள ஜெனின் நகரத்தில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது. அல்-அன்சார் என்றழைக்கப்படும் இந்த மசூதி தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக பாலத்தீன அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின இஸ்ரேலிய ராணுவம் மேற்குக் கரையில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து சோதனையிட்டாலும், அது காஸாவில் நடத்துவதுபோல வான்வழித் தாக்குதல்களை மேற்குக் கரையில் அரிதாகவே பயன்படுத்துகிறது. சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின. கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு ‘பயங்கரவாதத் தாக்குதலுக்கு’ தயாரகி வந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருக்கிறது. அவர்கள் பயன்படுத்திய இடம் மசூதியின் கீழ் இருப்பதாகவும், ஜூலை முதல் பயன்பாட்டில் இருப்பதாகவும் அது கூறியது. வளாகத்தின் நுழைவாயில்கள், ஆயுதங்கள், கணினிகள் மற்றும் தளத்தில் படமாக்கப்பட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் புகைப்படங்களுடன் அது கூறிய படங்களை வெளியிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாப்டுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம் என்று தெரிவித்துள்ளார் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரலாம் காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார். "செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது," என்று அவர் கூறினார். "காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது," என்றார் அவர். மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மனிதாபிமான உதவிகள் மேலும் 14 டிரக்குகள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார். பாலத்தீனியர்களுக்கு இது ‘மற்றொரு சிறிய நம்பிக்கை’ என்று அவர் கூறினார். ஆனால் இன்னும் அதிகமான உதவிகள் தெவைப்படும் என்று கூறினார். தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கும் அதேவேளை வெகுவாக பதிக்கப்பட்டிருகும் காஸா, ‘ஒரு நாளைக்கு ஒரு சில டிரக்குகளை அனுப்புவது மட்டுமே போதுமானதாக இல்லை’ என்று கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர் ‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’ இந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், "ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது" என்று கூறியுள்ளார். ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cv2lzp4z17no
  9. பேசும்போதே உடைந்து அழுத Palestine Representative; "இஸ்ரேல் ஒரு குடும்பத்தை கூட விட்டு வைக்கல" ஐநா அவையில் கண்ணீர்விட்டு அழுத பாலத்தீன பிரதிநிதி - அதே நிகழ்வில் இஸ்ரேல் பிரதிநிதி என்ன சொன்னார்?
  10. ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் #ஊடறுப்பு #அருஸ் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கிடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இஸ்ரேல் உடனடியாகவே 3 இலட்சம் அளவிலான ரிசர்வ் படையினரை திரட்டி தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக சொல்லியிருந்தாலும் இதுவரையில் அது தீவிரப்படுத்தப்படவில்லை. இதற்கு அமெரிக்காவும் காரணம்.
  11. பச்சை சிவப்பு இன்னும் வரவில்லையே?! பழைய 5 வகையான விருப்புக்குறிகளே காட்டுகிறது.
  12. நன்றி மோகன் அண்ணா புதிய முயல்வுகளுக்கு...
  13. ஐ.நா.வில் கதறி அழுத பாலத்தீன தூதர்: குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? என்று கண்ணீர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐ.நா. வின் மூன்றாவது குழுவின் வருடாந்திர கூட்டத்தின் தயாரிப்பு ஆலோசனையின் போது பாலத்தீன தூதர் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தன. 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூன்றாவது குழுவான சமூக, மனிதநேய, கலாச்சார மேம்பாட்டுப் பிரிவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல், இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கான கூட்டத்தின் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இஸ்ரேல் நாட்டின் ராணுவ தாக்குதலும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பேசிய ஐ.நா. அமைப்பிற்கான பாலத்தீன தூதரக அதிகாரியான சஹர் கே.ஹெச் சாலெம், "11 நாட்களாக, காஸா பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இப்படி நேரடி தாக்குதல்களின் காரணமாக உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர்,” என்றார். மேலும், "காஸாவில் உள்ள ஒரு பாலத்தீன குடும்பத்தைக் கூட இஸ்ரேல் காப்பாற்றவில்லை," என்றும், காயமடையாதவர்கள் இடம்பெயர்கிறார்கள், அல்-அஹ்லி மருத்துவமனையில் பாதுகாப்பு இருப்பதாக நினைத்து அங்கு அடைக்கலம் தேடியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற தாக்குதல்கள் தான் இஸ்ரேலை பாதுகாப்புடன் இருப்பதாக உணர வைக்கிறதா என்றும் இது இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற ஆதரவின் தேவையை நிறைவேற்றுகிறதா என்றும், பாலத்தீன குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீடுகளின் மீது குண்டு வீசிக் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கைகளை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார். "குழந்தைகள் கூட குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? " பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மண்லமும் இடிபாடுகளும் வழக்கமான காட்சிகளாக மாறிவிட்டன. பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள் என்றும், பள்ளிகள் மற்றும் ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும், அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், "சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன" என்பதுடன் உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார். இதில், "மோசமான விஷயம் என்னவென்றால், 22 மருத்துவமனைகளில் இருப்பவர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதை, உலக சுகாதார அமைப்பு (WHO) நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை என்று முத்திரை குத்தியுள்ளது." என வேதனையுடன் கூறினார். "காஸாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள். ஆனால் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று கருதி இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. இந்த பேரழிவு எப்போதும் போல போரில் விளைந்த ஒரு சேதமாக கருதப்படக்கூடாது. இது மனிதாபிமானமற்றது மற்றும் சர்வதேச சட்ட அடிப்படையிலான ஒழுங்கு விதிகளை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிகோலுகிறது." என்றார் அவர். துயரத்துடன் தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேலின் குற்றங்களுக்கு எதிராக நிற்கவும், அந்நாட்டு அரசு தொடங்கியுள்ள மனிதத் துன்பங்களை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். "எங்களுக்கு நீதி தேவையே ஒழிய பழிவாங்குதல் அல்ல" என்ற அவர், உலகத்தின் ஆதரவு பாலத்தீனர்களுக்கு மிகவும் தேவையானது என்று கூறினார். இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் சார்பில் அந்நாட்டின் இளைஞர் பிரதிநிதியான கார்மேலி பேசிய போது, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல்களை நினைவு கூர்ந்தார். இதன் விளைவாக ஏராளமான கொலைகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். "ஹமாஸ் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. குடிமக்களோ, தனிநபர்களோ பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதமுடியாது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளது," என்று அவர் கூறினார். தற்காப்புக்கான இஸ்ரேலின் உரிமையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போதைய நிகழ்வுகளை ஹமாஸ் ஆயுதக் குழு அரசியல் ஆக்குவதற்கு எதிராக எச்சரித்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து வெளியேற ஒரு பெண்ணுக்கு அங்கிருந்த நபர் ஒருவர் உதவினார். இஸ்ரேலின் ராணுவம் காஸா மீது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக எச்சரித்துள்ளது. மேலும், இன்னும் வடக்கு பகுதியில் உள்ள பாலத்தீனர்கள் தென்பகுதியை நோக்கிச் செல்லுமாறும் எச்சரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு போரின் அடுத்த கட்டங்களில் தனது படைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க உதவும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். இதற்கிடையில், காஸா மீதான விமானத் தாக்குதல்களில் 55 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. மேற்குக் கரையில் உள்ள மசூதியில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. தரைவழித் தாக்குதல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் படையெடுப்பிற்கு ஆயத்தமாகும் வகையில், காஸாவின் எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. இருப்பினும் அந்தத் தாக்குதல் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை. காஸாவுக்குள் அதிக உதவிகளை அனுப்பிவைக்க முடியும் என்று ஐ.நா. நம்புகிறது. சண்டை தொடங்கிய பிறகு முதல் முறையாக நேற்று அத்தியாவசியப் பொருட்கள் பொருட்கள் மக்களைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி 1,400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று இரண்டு வாரங்கள் ஆகிறது. காஸாவில் இதுவரை 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படக்குறிப்பு, காஸாவில் தவிக்கும் மக்களுக்கு மருத்துவர்களும், அறுவை சிகிச்சைக் குழுவினரும் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மருத்துவர் குழுக்களுக்கு அனுமதி கோரும் செஞ்சிலுவைச் சங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) காஸாவில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமானப் பொருட்களுடன் சென்று பணியாற்ற மருத்துவ பணியாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சாரா டேவிஸ் பிபிசி பிரேக்ஃபாஸ்டிடம் கூறுகையில், "இப்போது மிகவும் தேவையானது மனிதாபிமான பொருட்கள் மற்றும் காஸாவுக்குள் அத்தியாவசிய உதவிகள் தொடர்ந்து வருவதே ஆகும்,” என்றார். தங்களுக்குத் தேவைப்படுவது அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவது மட்டுமல்ல என்று கூறும் அவர், “காஸாவில் படுகாயங்களுடன் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் குழுவினரையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும்,” என்றார். இஸ்ரேல் ஒப்புக்கொண்டபடி காஸாவில் தவிப்பவர்களுக்கு உதவ 20 டிரக்குகள் உதவிப்பொருட்களுடன் பயணிக்க எகிப்துக்கும் காஸாவிற்கும் இடையிலான எல்லைக் கடப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இதேபோன்ற உதவிகள் தேவை என்று டேவிஸ் கூறினார். "இத போன்ற உதவிகள் தொடர வேண்டும். 20 டிரக்குகள் மூலம் அளிக்கப்படும் உதவியால் மட்டும் பொது மக்கள் உயிர்வாழ முடியாது. இது உண்மையில் மிகவும் மோசமான நிலைமை," என்று அவர் கூறினார். "நாங்கள் காஸாவில் செயல்படும் எங்கள் குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் விவரிக்கும் காட்சிகள் பயங்கரமானவையாக இருக்கின்றன." பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஹமாஸ் அமைப்பிடம் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கை தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக பிரதமர் அறிவிப்பு இந்நிலையில், தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் முயற்சிகள் தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். ரஃபா கடவுப் பாதை வழியாக அவர்களை மீட்க, பிரிட்டன் அரசு"சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறியுள்ளார். டெலிகிராப்பில் இது குறித்து எழுதியுள்ள அவர், எகிப்து-காஸா இடையே ரஃபா பாதையை மீண்டும் திறக்கப்படுவதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து வெளியேற உதவுவது மட்டுமின்றி உதவிகளை வழங்குவதற்கும் பயன்படக் கூடிய ஒரே வழி அந்த பாதைதான் என்று அவர் கூறியுள்ளார். மேலும், "பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து நீர் விநியோகங்களும்" காஸாவுக்குள் " சாத்தியமான இடங்களில்" நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் காஸாவில் சராசரியாக தினசரி நீர் நுகர்வு ஒரு நபருக்கு வெறும் மூன்று லிட்டர் தான் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச தினசரி தண்ணீர் தேவை 100 லிட்டராக உள்ளது. ஹமாஸின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் குடும்பங்களைச் சந்தித்ததையும், இரு தரப்பும் இணைந்து பேசி தீர்வை எட்டுவதற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுனக் விவரித்தார். இது "கவனம் மற்றும் எச்சரிக்கைக்கான காலம் என்பது மட்டுமல்ல, தார்மீக தெளிவுக்கான காலமும் கூட" என்பதுடன் "பயங்கரவாதத்தின் கசப்பான அனுபவங்களுக்கு எதிராக மனிதகுலம் வெற்றி பெறுவதற்கான தருணம்" என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c03dd5e6p8mo
  14. மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப் நிறுவனர் இயான் பிரேமர் கூறியதாவது: இஸ்ரேல் இராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. காசா பகுதிமக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் ஒரு இலட்சம் வீரர்கள், 2 இலட்சம் அதிநவீன ஏவுகணைகள், ஏராளமான பீரங்கிகளை கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் நேரடியாக போரில் இறங்கினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கினால் முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு ஏற்படும். பாலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. இதே சூழல் நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. எனவே,இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 3-ம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருக்கிறது. இவ்வாறு இயான் பிரேமர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/278105
  15. காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதேவேளை, சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்கள் வாழும் மேற்கு எல்லையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/278066
  16. மேற்குகரை அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி Published By: RAJEEBAN 22 OCT, 2023 | 09:13 AM இஸ்ரேல் மேற்குகரையின் அகதிமுகாமின் மீது மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நுர் சாம்ஸ் அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் நிவாரண முகவர் அமைப்பு யுஎன்ஆர்டபில்யூஏ தெரிவித்துள்ளது. ஒரு இஸ்ரேலிய படைவீரர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தனது சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/167470
  17. கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள், நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
  18. வடகொரியாவின் ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ் படையினர்! பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் வடகொரியாவின் எப் – 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படும் எப் – 7 ரக ஏவுகணைகள் ஹமாஸ்படையினர்க்கு வழங்கப்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது. இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளை ஆய்வு செய்தபோது, அவை வடகொரியாவின் எப்7 ஏவுகணைகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த மோதல் காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/277892
  19. இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் 21 OCT, 2023 | 02:46 PM இஸ்ரேல் ஹமாஸ் மோதல் வெடித்து இரண்டு வாரங்களின் பின்னர் முதல் தடவையாக மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் காசா சென்றுள்ளன. எகிப்திலிருந்து ரபா எல்லை ஊடாக வெள்ளை கொடியுடன் ஐநா வாகனங்கள் செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வாகனங்களில் இருந்து பாலஸ்தீனத்திலிருந்து சிறிய வாகனங்களிற்குள் விநியோகத்திற்காக பொருட்கள் ஏற்றப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/167438
  20. அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் விடுதலை செய்தது ஹமாஸ் Published By: RAJEEBAN 21 OCT, 2023 | 07:29 AM ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிற்குள் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதியாக பிடிபட்ட இரண்டு அமெரிக்கர்களை விடுதலை செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தாயையும் மகளையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள கிபுட்ஸ் நகல் ஒஸ்ஸில் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலின் போது பிடிபட்ட ஜூடித் நட்டாலியா ரானன் இருவரையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பு தன்னிடம் உள்ள 200க்கும் அதிகமானபணயக்கைதிகளில் இருவரை விடுதலை செய்துள்ளது- கட்டார் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. யூடித் ரனானும் அவரது 17 வயது மகள் நட்டாலியாவும் தென் இஸ்ரேலில் உள்ள தங்கள் உறவினர்களை சந்திக்கசென்றிருந்தவேளை 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டது. விடுதலைசெய்யப்பட்ட பணயக்கைதிகள் இருவரையும் காசாவிலிருந்து இஸ்ரேலிற்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உதவியுள்ளது. https://www.virakesari.lk/article/167405
  21. 65 வயது பெண்ணின் அதிர வைக்கும் வீரம்: பிரமித்த பைடன் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் தப்பித்துள்ளனர். உலகையே உலுக்கிய அத்தாக்குதல் நடைபெற்ற அன்று இஸ்ரேலில் ஒரு வீட்டிற்குள் 5 ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அங்கு ரேச்சல் எட்ரி மற்றும் அவர் கணவர் டேவிட் வசித்து வந்தனர். இருவரையும் அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர். ஒரு கையில் கையெறி குண்டும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கொன்று விட போவதாக மிரட்டினர். இந்நிலையில் வெளியே சென்றிருந்த காவல்துறை அதிகாரியான அவரது மகன் அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்டார். உள்ளே பயங்கரவாதிகள் இருப்பதனால் மகன் வந்தால் நேர கூடிய ஆபத்தை குறித்து எச்சரிக்க நினைத்த ரேச்சல், அவரை உள்ளே வர விடாமல் சைகை மூலமாக கையை மென்மையாக உயர்த்தி 5 விரல்களை விரித்து காட்டினார் காவல் அதிகாரியான அவர் மகன் உடனடியாக சுதாரித்து கொண்டார். தொலைவில் சென்று தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவரை ஒதுங்கி நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தி பணய கைதிகளை மீட்கும் கொமாண்டோவினர் வரவழைக்கப்பட்டனர். இதற்கிடையே தங்களை மீட்கும் அதிரடி படையினர் வரும் வரையில் ரேச்சல் அந்த பயங்கரவாதிகளுடன் பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு ரேச்சல், காபி மற்றும் குக்கீஸ் .பிஸ்கட் ஆகியவை வழங்கி உபசரித்தார். மேலும் பேச்சை வளர்க்க அரபி மொழி குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து நேரத்தை கடத்தினர். அதிரடி படையினர் திட்டமிட்டபடி வந்து அந்த பயங்கரவாதிகளை கொன்று இத்தம்பதியினரை மீட்டனர். இச்சம்பவம் குறித்து ரேச்சல் தெரிவித்ததாவது: அவர்கள் பசியுடனிருந்தனர். பசி இருந்தால் கோபம் அதிகரிக்கும். எனவே நான் அவர்களை உபசரித்து முதலில் பசியாற்றினேன். அவர்கள் என் குழந்தைகளை குறித்து கேட்கும் போது பேச்சை மாற்றுவேன். நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும் என அடிக்கடி சொல்லி கொண்டிருந்தேன். அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ அனைத்தும் வழங்கினேன். எனக்கு நீங்கள் அரபி மொழியை கற்று கொடுத்தால் நான் உங்களுக்கு எங்கள் ஹீப்ரூ மொழியை கற்று தருவதாக கூறி சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்வா சாவா பிரச்சனை என நான் நன்கு உணர்ந்திருந்தேன் என்றார். இந்நிலையில், இஸ்ரேலின் போர் வியூகம் குறித்து பேசவும், இப்போர் அண்டை நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசிக்கவும், நேற்று இஸ்ரேலுக்கு அவசர பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி தப்பித்தவர்களை சந்தித்தார். தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை சந்தித்த பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார். சுமார் 20 மணி நேரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தம்பதியர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/277877
  22. காசா எல்லையில் நூற்றுக்கணக்கான பீரங்கிகள், இராணுவ வீரர்களை குவித்த இஸ்ரேல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7 ஆம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து 14 ஆவது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் இராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் இராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது தொடர்ந்து கூறும்போது, லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ரொக்கெட்டுகளில் 4 ரொக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது. இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன என இஸ்ரேல் படைகள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ரொக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன. பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பும் தாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. https://thinakkural.lk/article/277838
  23. காஸாவுக்குள் நுழைய தயக்கம் காட்டும் இஸ்ரேல் - காரணமான நான்கு விஷயங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் தரைவழி தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்து சில நாட்கள் ஆன பின்பும் இன்னும் காஸாவுக்குள் இஸ்ரேல் நுழையவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 49 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கம் ஹமாஸை ஒழித்துக் கட்டுவது. அதற்காக, கடந்த சில நாட்களாகவே காஸாவுக்குள் தனது படைகள் நுழையப் போவதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தது 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து இஸ்ரேல் காஸா மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இஸ்ரேல் மூன்று லட்சம் வீரர்களை ரிசர்வ் படைக்கு அழைத்துள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள் மெர்காவா டாங்கிகள், பீரங்கிகள், நவீன ஆயுதங்களுடன் இஸ்ரேல்-காஸா எல்லையில் தயார் நிலையில் உள்ளனர். இஸ்ரேல் கப்பல் படை மற்றும் விமானப்படை, ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் மறைவிடங்கள், ஆயுதக் கிடங்குகள் ஒவ்வொன்றையும் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இதில் பல பாலத்தீன மக்கள் உயிரிழந்தும் காயமுற்றும் இருக்கின்றனர். சில ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் குண்டுவெடிப்பு காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் நிலைமையை இன்னும் மோசமாக்கி பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இஸ்ரேல் ஏன் இன்னும் காஸாவுக்குள் நுழையாமல் இருக்கிறது? இதற்கு சில காரணங்கள் உள்ளன. காரணம் 1 - பைடன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அவசர பயணத்தின் மூலம், அமெரிக்கா இஸ்ரேல் விவகாரம் குறித்து எவ்வளவு கவலை கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவுக்கு இரண்டு கவலைகள் உள்ளன: ஒன்று அதிகரித்து வரும் மனிதநேய நெருக்கடி, மற்றொன்று மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இந்த மோதல் பரவும் அபாயம். கடந்த 2005இல் வெளியேறிய காஸாவில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய இஸ்ரேலின் எந்தவொரு முயற்சிக்கும் தனது எதிர்ப்பை அமெரிக்க அதிபர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அப்படி ஆக்கிரமிப்பது “மிகப் பெரிய பிழை” என அவர் குறிப்பிட்டார். அதிகாரபூர்வமாக, அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இருக்கும் நெருங்கிய நண்பருக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தவும், காஸா குறித்த இஸ்ரேலின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளவும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்திருந்தார். ஆனால், வெளியில் சொல்லப்படாத மற்றொரு காரணம், அவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கடுமையான போக்கை சற்று கட்டுப்பட்டுத்துமாறு கூறியிருக்கலாம். இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், எப்படி, எப்போது வெளியேறப் போகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். டெல் அவிவில் அமெரிக்கா அமர்ந்திருக்க, காஸா மீது இஸ்ரேல் முழு வீச்சில் ராணுவ படையெடுப்பு நடத்தினால், அது இஸ்ரேலுக்கும் நல்லதல்ல, அமெரிக்காவுக்கும் நல்லதல்ல. காஸாவில் அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இடையே இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர், இஸ்ரேலின் கூற்றை ஒப்புக் கொண்டு, இந்தத் தாக்குதல் தவறாக ஏவப்பட்ட பாலத்தீன ராக்கெட்டால் நிகழ்ந்த்து என்றார். ஆனால் பாலத்தீன அதிகாரிகள் இது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்றனர். இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதையும், குண்டு வெடிப்புக்கு என்ன காரணம் என்பதையும் கண்டறியும் முயற்சியில் பிபிசி ஈடுபட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல்-காஸா மோதல் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவலாம் என அமெரிக்கா கவலைப்படுகிறது. காரணம் 2- இரான் கடந்த சில நாட்களாகவே காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கிடைக்காமல் இருக்காது என கடுமையான எச்சரிக்கை விடுத்து வருகிறது இரான். இதற்கு நடைமுறையில் என்ன அர்த்தம்? மத்திய கிழக்கில் ஏராளமான ஷியா ஆயுதக் குழுக்களுக்கு இரான் நிதியளித்து, ஆயுதங்கள் வழங்கி, பயிற்சியும் வழங்கி வருகிறது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த குழு, இஸ்ரேலின் வடக்கு எல்லைக்கு அருகில் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா. கடந்த 2006ஆம் ஆண்டு இரு நாடுகளும் முடிவுறாத மோசமான போரை நிகழ்த்தினர். இதில் மறைத்து வைக்கப்பட்ட கன்னிவெடிகள் மற்றும் எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக, இஸ்ரேலின் நவீன போர் டாங்கிகள் வீழ்த்தப்பட்டன. அதன் பிறகு ஹெஸ்புல்லா இரானின் உதவியுடன் மேலும் அதிக ஆயுதங்களுடன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது ஹெஸ்புல்லாவிடம் நீண்ட தூரத்தில் துல்லியமாக ஏவக்கூடிய சுமார் 1,50,000 ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்தால், ஹிஸ்புல்லா இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க ஆரம்பிக்கும். இஸ்ரேல் இரு முனைகளிலும் போரிட நேரிடும். ஆனால், மத்திய தரைக்கடலில் இஸ்ரேலுக்கு உடனடியாக உதவிட இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு போரை ஹெஸ்புல்லா விரும்புமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எனினும் கடந்த முறை ஹெஸ்புல்லாவுடன் போரிட்டபோது இஸ்ரேலிய போர்க்கப்பலை ஹெஸ்புல்லா தனது ஏவுகணையால் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. காரணம் 3: மனிதநேய நெருக்கடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு எல்லையில் போர் தொடுக்க வாய்ப்புள்ளது. உலக நாடுகளின் மனித நேய நெருக்கடி குறித்த பார்வையுடன் ஒப்பிடுகையில், ஹமாஸை வேரறுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இஸ்ரேலிடம் அந்தப் பார்வை குறைவாகவே உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான ரத்தவெறி கொண்ட தாக்குதலுக்குp பிறகு உலக நாடுகளின் கரிசனம் இஸ்ரேல் பக்கம் இருந்தது. ஆனால், காஸா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்கள் காரணமாக, பாலத்தீன மக்களின் உயிரிழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, இந்த வான்வழித் தாக்குதலை நிறுத்தச் சொல்லி உலக நாடுகள் இஸ்ரேலிடம் கோரி வருகின்றன. காஸாவுக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கத்தான் போகிறது. எதிர்பாராத தாக்குதல், ஸ்னைப்பர்கள் மூலம் இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்படுவார்கள். சண்டையின் பெரும்பகுதி பல மைல்கள் தூரம் கொண்ட சுரங்கங்களில் நடைபெறலாம். காரணம் 4: உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலத்தீன மக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஹமாஸின் பயங்கர தாக்குதலை கணிக்கத் தவறியதற்காக ஷின்பெத், உள்நாட்டு உளவுத்துறை பழியை ஏற்றுக்கொண்டது. ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, ஷின்பெத்துக்கு காஸாவின் உள்ளே உளவாளிகள் உள்ளனர். எனினும் தெற்கு இஸ்ரேலில் அன்று நடந்த தாக்குதல், 1973 யோம் கிப்பூர் போருக்குப் பிறகான மிகப்பெரிய உளவுத்துறை தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக பதற்றத்துடன் அவசர அவசரமாக இஸ்ரேல் உளவுத்துறை, பாதுகாப்பு படையினருக்குத் தேவையான ஹமாஸ் குழு தலைவர்களின் பெயர்களையும், இடங்களையும், பணயக் கைதிகளின் இடங்களையும் எடுத்துக் கொடுத்திருக்கும். தரை வழித் தாக்குதலை துல்லியமாக நடத்த மேலும் சில தகவல்களைப் பெற இஸ்ரேல் உளவுத்துறைக்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம். அப்போதுதான் குறிப்பாக இலக்கைத் தாக்க முடியும். இல்லையென்றால் வடக்கு காஸாவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் இருந்து தப்பித்து இயங்கி வரும் ஹமாஸ் மற்றும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்கள் இந்நேரம் மறைந்திருந்து தாக்குவதற்கும், இஸ்ரேலிய படைகளுக்கான வலைகளை விரிக்கவும் திட்டமிட்டிருக்கும். நிலத்துக்கு அடியில் இருக்கும் சுரங்கங்களில் இன்னும் ஆபத்தானதாக இருக்கும். அந்த இடங்களைக் கண்டறிந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரை எச்சரிப்பதில் இஸ்ரேல் உளவுத்துறையும் உன்னிப்பாக இருக்கும். https://www.bbc.com/tamil/articles/c89w52p49evo
  24. இஸ்ரேலில் ஜேர்மன் அரச தலைவருக்கு ஏற்பட்ட நிலை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு சென்ற ஜேர்மன் பிரதமர், ஹமாஸ் அமைப்பின் ஏவுகணை தாக்குதலில் விமான நிலையத்தில் படுக்க வைக்கப்பட்ட காட்சி எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 17ம் திகதி தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள விமான நிலையத்திற்கு ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் நாடு திரும்புவதற்காக வந்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் இதன்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டார். பின் சில நிமிடங்களுக்கு பின்னர் அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டார். https://ibctamil.com/article/condition-of-the-german-prime-minister-in-israel-1697718919
  25. பாலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு துருக்கி தலையிடும் -எர்டோகன் கடும் எச்சரிக்கை 19 OCT, 2023 | 05:30 PM பாலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்காக தலையிடுவேன் என துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் எச்சரித்துள்ளார். காசா பள்ளத்தாக்கில் இடம்பெறும் முன்னர் ஒருபோதும் இல்லாத இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையை முடிவிற்கு கொண்டுவருமாறு மனித குலத்தை கேட்டுக்கொள்கின்றேன் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் நாங்கள் செய்வோம் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167304

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.