Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அக்கா. மிக்க நன்றி அண்ணை. எனக்கு வழிகாட்டினது கள உறவுகள் தானே!😜 மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை. மிக்க நன்றி அண்ணை.
  2. இன்றைய தினம் பிறந்தநாள் காணும் ஏராளனை வாழ்த்துங்களேன்!😜
  3. ஐபிஎல் தொடரில் விலகும் ஹர்திக் பாண்டியா? காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஓல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து ஹார்திக் விலகினார். தொடர்ந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. இந்த நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்பதால் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். தற்போது ஹர்திக் பாண்டியா விலகும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ரோஹித் சர்மாவே செயல்படுவாரா அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. https://thinakkural.lk/article/285791
  4. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், பிரபாகர் தமிழரசு பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து புது வாழ்வைத் தொடங்க இருந்தார்கள் அந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள். திருமணமான புதிது என்பதால், ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் கடை வீதியில் உள்ள துணிக் கடைகளில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம கும்பல் இருவரையும் வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திலிருந்து பறந்தனர். பட்டப் பகலில், பேருந்து நிலையத்திற்கு அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் அந்த இளைஞர், செய்வதறியாத தவித்து அந்த இளம்பெண் அழுகுரலில் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளே அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள்தான், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வேலுச்சாமியின் 22 வயது மகன் சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கெளசல்யா. சங்கர் கொலை வழக்கில், 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, கெளசல்யா மற்றும் சங்கரின் சகோதரர்கள் என மூன்று தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால், அந்த வழக்கு இன்று வரை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படவில்லை. 'சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை' படக்குறிப்பு, மார்ச், 2016இல் நடந்த தாக்குதலின்போது, காயங்களுடன் கெளசல்யா உயிர் தப்பினார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கெளசல்யாவும் தனியார் பொறியியல் கல்லூரியில் படிகு்கம்போது காதலித்து வந்துள்ளனர். இதற்கு கெளசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2016இல் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததுதான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறும் கெளசல்யா, சாதியின் குருதிவெறிக்குப் பலியான சங்கரின் இழப்பு இன்றும் தன்னை வாட்டுவதாகக் கூறினார். “இப்போது வரை என்னால் அந்த இழப்பைக் கடக்கவே முடியவில்லை. சிறைவாசிகள் காலையில் வெளியே வந்து, மாலையில் அறையில் அடைக்கப்படும்போது ஏற்படும் வெறுமையைப் போலத்தான் என் வாழ்வும் உள்ளது. சங்கரின் இழப்பு எனக்குத்தான். அவன் இல்லாத வெறுமையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது,” என்றார் கெளசல்யா. சம்பவம் நடந்த இடத்திலேயே சங்கர் பலியான நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெளசல்யா, அதே ஆண்டு மே மாதம் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சங்கரின் குடும்பத்தினர், அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் உயிர் பிழைத்த கெளசல்யா, சங்கரின் கொலைக்கு நீதி பெறுவதில் உறுதியுடன் இருந்தார். “என்னால், ஒரு சாதாரண வாழ்வை வாழ முடியவில்லை. அந்தச் சம்பவம் இன்னும் என்னைத் துறத்திக்கொண்டே இருக்கிறது. சங்கருக்கு பிறகு, ஒவ்வொரு முறையும், யாரோ ஒருவர் சாதியின் பெயரால் கொல்லப்படும்போதும், நானே கொல்லப்படுவதாக உணர்கிறேன். சங்கருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன்,” என்றார் கெளசல்யா. சங்கர் கொல்லப்பட்ட வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த எம். மணிகண்டன், எம்.மைக்கேல், பி செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார், மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர். வழக்கை எப்படி நிரூபித்தது போலீஸ்? பட மூலாதாரம்,KOUSALWAY/ FACEBOOK சங்கரின் கொலை வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டிருந்த 11 பேரில், 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சம்பவம் பட்டப் பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்ததால், சம்பவம் முழுவதும் அங்கிருந்த கடைகளின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலமாகவும், நேரடி சாட்சியான கெளசல்யாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டிருந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபித்ததாகக் கூறினார் அப்போது இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளில் ஒருவர். “இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகள் முக்கிய ஆதரமாக இருந்தன. இதற்காக, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை இல்லாத அளவில், சிசிடிவி காட்சிகளைத் துல்லியமாகப் பெரிதாக்கி, சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டி நிரூபித்தோம். அது தவிர, கெளசல்யாவின் தந்தை சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும், இந்த சதித் திட்டத்திற்கு அவர் எப்படி மூளையாகச் செயல்பட்டார் என்பதை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் உரையாடல்கள் மற்றும் பணப் பரிமாற்றத்தை வைத்து நிரூபித்தோம்,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த விசாரணை அதிகாரி. மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்காக கெளசல்யாவின் தந்தைதான் தலைமறைவாக இருக்க ஒரு தனியார் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்ததையும் உறுதி செய்ததாகக் கூறினார் அந்த விசாரணை அதிகாரி. “சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கும், அதை நிரூபிப்பதற்கும் நேரடி சாட்சிகள் உள்ளன. ஆனால், இந்த நோக்கத்தையும், கூலிப் படையினருக்கு சின்னச்சாமி மூளையாக இருந்தார் என்பதையும் நிரூபிப்பதுதான் சற்று சவாலாக இருந்தது. ஆனால், சின்னச்சாமி சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து தொலைபேசி உரையாடலில் இருந்துள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசிக்கு இந்தக் கூலிப்படையினர் அழைத்துள்ளனர். மேலும், பழனியில் அவர்கள் தங்கியிருந்த அறையை இவர்தான் புக் செய்துள்ளார்,” என்றார் அந்த அதிகாரி. கெளசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு தண்டனை பட மூலாதாரம்,HANDOUT இந்த வழக்கின் விசாரணை மிகவும் துரிதமாக நடந்தது. சம்பவம் நடந்த மூன்று மாதங்களில், விசாரணையை முடித்து 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர். கடந்த 2017 நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு விசாரணை முழுவதுமாக முடிவடைந்து, டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அப்போதைய திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில் தீர்ப்பு வருவதால், அனைத்து தரப்பினரும் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். அதேநேரத்தில், திருப்பூர் நீதிமன்ற வளாகத்திலும், நீதிமன்றத்திற்கு வெளியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். டிசம்பவர் 12ஆம் தேதி, 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட எட்டு பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல், ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த சிலர், கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் அவரது தாய் மாமா பாண்டித்துரை விடுதலையானதற்கு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்த சிலர், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அழைத்துச் சென்றனர். “இது முழுக்க முழுக்க சாதி வன்மத்தில் நிகழ்த்தப்பட்ட கொலை. இதற்கு ஒரு கூட்டமே ஆதரவாக உள்ளது. இது மட்டும் இல்லை. அன்னலட்சுமியை சாதி சங்கத்தினர் ஒரு கூட்டத்திற்கு அழைத்து பாராட்டு விழா நடத்தி, வழக்கின் செலவிற்காகப் பணமும் கொடுத்துள்ளனர். இதையெல்லாம் யாரும் கருத்தில் கொள்வதே இல்லை. இப்படி இருக்கும் சூழலில் எப்படி என்னால் நிம்மதியாக வாழ முடியும்?” எனக் கேட்டார் கெளசல்யா. உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட சின்னச்சாமி பட மூலாதாரம்,GETTY IMAGES அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அரசுத் தரப்பும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மூன்று ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, 2020இல் முடிவடைந்தது. இந்த வழக்கில், ஜூன் 22, 2020இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியை குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்த நீதிமன்றம், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மேலும், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தன்ராஜையும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மணிகண்டனையும் உயர்நீதிமன்றம் விடுவித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முறையாக நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டினார் கெளசல்யா. “திருப்பூரில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, ஒவ்வொரு முறையும் என்ன நடக்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்தினர். நானும் நீதிமன்றத்தில் ஆஜரானேன். ஆனால், உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, நான் ஒரு முறைகூட அழைக்கப்படவில்லை. தீர்ப்பு வரும்போதுதான் எனக்குத் தெரியும்,” என்றார் கெளசல்யா. ஆண்டுகள் ஓடினாலும், சங்கரின் இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை எனக் கூறும் சங்கரின் சகோதரர் விக்னேஷ், அண்ணன் சாவுக்கு எப்படியாவது நீதியைப் பெற வேண்டும் என்றார். “அண்ணா சங்கர் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். அவன் இருக்கும் வரை, அவன் தான் எங்களைப் பார்த்துக்கொண்டான். இப்போது, அவனும் இல்லை, எங்கள் அப்பாவும் சமீபத்தில் உயிரிழந்தார். அவன் இறப்புக்குக் கிடைக்கும் நீதி மட்டுமே எங்களுக்கு உண்மையான ஆறுதலாக இருக்கும்,” என்றார் விக்னேஷ். மூன்று ஆண்டுகளாகியும் விசாரணைக்கு எடுக்கப்படாத வழக்கு பட மூலாதாரம்,NATHAN G உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து தமிழ்நாடு அரசு சார்பிலும், கெளசல்யா சார்பிலும், சங்கரின் சகோதரர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை ஒரு முறைகூட அந்த வழக்கு விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் கெளசல்யா. “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைப்பதற்கே பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக முதல்வரைச் சந்திக்க பலமுறை முயன்றும், இன்று வரை அவரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. சிலர் மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் வழியாக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்கச் சொல்கிறார்கள். இதற்கு எப்படி கட்சிப் பிரமுகர்களை அணுகுவது என்று தெரியவில்லை,” என்றார் கெளசல்யா. மேலும், திமுக அரசு இந்த வழக்கில் மெத்தனம் காட்டுவதாக கெளசல்யா குற்றம் சாட்டினார். “ஆளுநர் தொடர்பான வழக்குகளுக்கு எல்லாம் அவசரம் காட்டும் திமுக அரசு, இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. இதுவொரு தனிநபர் கொலை வழக்கு மட்டுமல்ல. இந்த வழக்கின் தீர்ப்பு, இதுபோன்ற மற்ற சம்பவங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த வழக்கில் எங்களுடன் துணை நிற்போம் எனக் கூறிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் எங்களைக் கைவிட்டுவிட்டார்,” என்றார் கெளசல்யா. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விளக்கம் கேட்க பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும் தயார் அன்னலட்சுமியிடமும் பிபிசி பேச முயன்றது. அப்போது அவர்கள், “எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் சொல்லிக் கொள்கிறோம்,” என்றனர். 'ஆணவக் கொலையில் திமுக அலட்சியம்' இந்த வழக்கில் கெளசல்யா சார்பாக மேல்முறையீடு செய்துள்ள எவிடன்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், திமுக அரசு ஆணவக்கொலை வழக்கில் மற்ற கட்சிகளைப் போலச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “மற்ற கட்சிகளைப் போல் அல்ல திமுக. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவற்றை ஆதரித்த பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சி, ஆணவக்கொலை வழக்குகளில் மெத்தனம் காட்டுவது கவலையாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார். நாங்களும் அவரைச் சந்தித்து, அதற்கான சட்ட முன்வடிவத்தையும் கொடுத்து வந்தோம். ஆனால், இன்று வரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் கதிர். https://www.bbc.com/tamil/articles/cjkgn33kgyzo
  5. உக்ரைன் கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் ரஷ்யா டிரோன் தாக்குதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷ்யா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். https://thinakkural.lk/article/285711
  6. “கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி! இந்தியன் பிரிமீயர் லீக்கின் (ஐ.பி.எல்) மினி ஏலம் நேற்றைய கடந்த (19) திகதி டுபாயில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இது தொடர்பில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தன. அதில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மிட்சல் ஸ்டார்க் அதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அவுஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் பெற்றார். இந்நிலையில் “கொல்கத்தா அணி அதிக தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாது” என ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தா அணியின் துடுப்பாட்ட வரிசை இது தொடர்பாக அவர் கூறுகையில் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. பந்துவீச்சில் இருக்கும் பலம் அந்த அணியின் துடுப்பாட்டத்தில் இல்லை என்றே நான் கருதுகிறேன். கொல்கத்தா அணியில் இருக்கும் துடுப்பாட்ட வீரர்கள் திறமையானவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த துடுப்பாட்ட வரிசையை வைத்து கொண்டு கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகம் தான். துடுப்பாட்ட வரிசை மிக மோசமானது இல்லை என்றாலும், அவர்களால் நிச்சயம் முதல் 4 இடங்களுக்குள் வர முடியாது என்பதே எனது கருத்து. கொல்கத்தா அணியின் பலவீனம் துடுப்பாட்ட வரிசையே கொல்கத்தா அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2024க்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸின் முழு அணி நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, கே.எஸ். பாரத், ஸ்டார்க். , அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மனிஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், கஸ் அட்கின்சன், சாகிப் ஹுசைன். https://ibctamil.com/article/ipl-2024-ab-de-villiers-about-kkr-team-csk-auction-1703253255
  7. இப்பவே 4 பேர் தயார் தானே! ஈழப்பிரியன் அண்ணை சுவியண்ணை கிருபனண்ணை ஏராளன் அப்பிடியே 15-20 பேர் வந்து குதிப்பினம் பாருங்கோ.
  8. IPL 2024 தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம் 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. அந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று (19) துபாயில் நடைபெற்றது. இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணியும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது. 2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக விளையாடும் அணிகளின் விபரம் பின்வருமாறு, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் MS Dhoni (C) Devon Conway Ajinkya Rahane Aravelly Avanish Ruturaj Gaikwad Shaik Rasheed Moeen Ali Shivam Dube Rajvardhan Hangargekar Ajay Mandal Daryl Mitchell Nishant Sindhu Rachin Ravindra Mitchell Santner Deepak Chahar Tushar Deshpande Mukesh Choudhary Mustafizur Rahman Matheesha Pathirana Simarjeet Singh Prashant Solanki Shardul Thakur Maheesh Theekshana Sameer Rizvi டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் David Warner (C) Ricky Bhui Yash Dhull Prithvi Shaw Rishabh Pant Abishek Porel Harry Brook Shai Hope Tristan Stubbs Lalit Yadav Axar Patel Mitchell Marsh Sumit Kumar Khaleel Ahmed Kuldeep Yadav Lungi Ngidi Vicky Ostwal Jhye Richardson Swastik Chikara Praveen Dubey Mukesh Kumar Anrich Nortje Rasikh Salam Ishant Sharma Kumar Kushagra குஜராத் டைட்டன்ஸ் அணியில் Shubman Gill (c) David Miller Robin Minz Wriddhiman Saha Sai Sudharsan M Shahrukh Khan Matthew Wade Kane Williamson Azmatullah Omarzai Abhinav Manohar Rashid Khan Vijay Shankar Rahul Tewatia Spencer Johnson Kartik Tyagi Josh Little Mohammed Shami Darshan Nalkande Noor Ahmad Sai Kishore Mohit Sharma Jayant Yadav Umesh Yadav Sushant Mishra கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் Shreyas Iyer (c) Srikar Bharat Manish Pandey Rahmanullah Gurbaz Ramandeep Singh Nitish Rana Jason Roy Sherfane Rutherford Rinku Singh Venkatesh Iyer Sunil Narine Anukul Roy Andre Russell Vaibhav Arora Gus Atkinson Harshit Rana Mujeeb Ur Rahman Chetan Sakariya Mitchell Starc Suyash Sharma Varun Chakravarthy Angkrish Raghuvanshi Sakib Hussain லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியில் KL Rahul (c) Quinton de Kock Nicholas Pooran Ayush Badoni Devdutt Padikkal Ashton Turner Krishnappa Gowtham Deepak Hooda Arshin Kulkarni Kyle Mayers Krunal Pandya Marcus Stoinis David Willey Arshad Khan Mohsin Khan Ravi Bishnoi Manimaran Siddharth Mayank Yadav Yudhvir Singh Mohsin Khan Amit Mishra Naveen-ul-Haq Shivam Mavi Mark Wood Yash Thakur மும்பை இந்தியன்ஸ் அணியில் Hardik Pandya (c) Rohit Sharma Ishan Kishan Nehal Wadhera Tim David Vishnu Vinod Suryakumar Yadav Dewald Brevis Shreyas Gopal Mohammad Nabi Tilak Varma Piyush Chawla Anshul Kamboj Shams Mulani Romario Shepherd Jason Behrendorff Jasprit Bumrah Gerald Coetzee Kumar Kartikeya Akash Madhwal Dilshan Madushanka Arjun Tendulkar Nuwan Thushara Naman Dhir Shivalik Sharma பஞ்சாப் கிங்ஸ் அணியில் Shikhar Dhawan (c) Harpreet Singh Rilee Rossouw Jonny Bairstow Prabhsimran Singh Jitesh Sharma Sam Curran Liam Livingstone Shivam Singh Atharva Taide Rishi Dhawan Shashank Singh Sikandar Raza Chris Woakes Arshdeep Singh Nathan Ellis Vidwath Kaverappa Kagiso Rabada Rahul Chahar Harpreet Brar Harshal Patel Prince Choudhary Ashutosh Sharma Tanay Thyagarajan Vishwanath Singh ராஜஸ்தான் ரோயல் அணியில் Sanju Samson (c) Shubham Dubey Yashasvi Jaiswal Tom Kohler-Cadmore Rovman Powell Jos Buttler Shimron Hetmyer Dhruv Jurel Riyan Parag Kunal Singh Rathore Ravichandran Ashwin Donovan Ferreira Nandre Burger Avesh Khan Yuzvendra Chahal Navdeep Saini Kuldeep Sen Abid Mushtaq Trent Boult Prasidh Krishna Sandeep Sharma Adam Zampa சன்ரைஸஸ் ஹைதராபாத் Aiden Markram (c) Mayank Agarwal Fazalhaq Farooqi Marco Jansen Heinrich Klaasen Bhuvneshwar Kumar Umran Malik Mayank Markande T Natarajan Glenn Phillips Nitish Kumar Reddy Abdul Samad Abhishek Sharma Anmolpreet Singh Sanvir Singh Upendra Yadav Pat Cummins Travis Head Shahbaz Ahmed Jaydev Unadkat Wanindu Hasaranga Akash Singh Jhatavedh Subramanyan Rahul Tripathi Washington Sundar ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் Faf du Plessis (c) Shahbaz Ahmed Finn Allen Manoj Bhandage Michael Bracewell Akash Deep Josh Hazlewood Kedar Jadhav Dinesh Karthik Siddarth Kaul Virat Kohli Rajan Kumar Mahipal Lomror Glenn Maxwell Wayne Parnell Harshal Patel Suyash Prabhudessai Anuj Rawat Karn Sharma Himanshu Sharma Avinash Singh Mohammed Siraj Vijaykumar Vyshak Sonu Yadav https://thinakkural.lk/article/285384
  9. கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள், யுக்ரேன் போரில் ரஷ்யா கோட்டை விட்டது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்ய தளபதிகளால் ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். 21 டிசம்பர் 2023, 07:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேன் போரில் ரஷ்ய தளபதிகளின் தவறான போர் உத்திகள் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் ரஷ்ய படைகளின் குற்றச்சாட்டு பிபிசி ஐ (BBC Eye) புலனாய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. போருக்கு சென்ற போது தங்களது மூத்த அதிகாரிகள் தங்களை ‘இறைச்சி’ என்று அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர் ரஷ்ய ராணுவ வீரர்கள். ‘தகுதியற்ற’ தளபதிகள் மற்றும் அவர்களது ‘மீட்-கிரைண்டர்’ உத்திகள் யுக்ரேன் போரில் ஏற்பட்டுள்ள ரஷ்ய தோல்வியின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தப் போர் தொடங்கியபோது, ரஷ்யா தனது 155-ஆவது கடற்படை மற்றும் காலாட்படையை ஒரு உயர்தர பிரிவாகக் கருதியது. ஆனால் போர் முன்னேற்றம் அடைந்த சமயத்தில் தான், இந்தப் பிரிவின் பலவீனங்கள் போர்க்களத்திலேயே அம்பலமாக தொடங்கின. பிபிசி புலனாய்வின் படி, இந்த படைப்பிரிவில் மட்டும் ஒரே தாக்குதலில் குறைந்தபட்சம் 60 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி கொல்லப்பட்ட ராணுவவீரர்களில் 25 வயதாகும் ரமாஸ் கோர்காட்ஸேவும் ஒருவர். இவர் ரசியாவின் கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்தவர். ராப் பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட ரமாஸ் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். போருக்கு செல்வதற்கு முன்பு “ ரஷ்யா உங்களுடன் நிற்கிறது. ரஷ்ய ராணுவவீரர்கள் உங்களுக்காக சண்டையிடுகிறார்கள்” என்ற பாடலை கூட ரமாஸ் கோர்காட்ஸே பாடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். ராணுவ சீருடையில் தான் இருப்பது போன்ற போட்டோக்களை கூட அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் ஒரு படத்தில் யுக்ரேனுக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் கடைசியாக உண்ட பீட்சா மற்றும் பீருடன் இருக்கும் படமும் அடங்கும். அவர் தனிப்பட்ட முறையில் போர்களை எதிர்த்தாலும், அரசு உத்தரவின்படி அக்டோபர் 2022 இல் தென்கிழக்கு யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் 155 வது கடற்படை காலாட்படை பிரிவில் சேர்ந்தார். அந்த நேரத்தில் தான், இந்த பிரிவு பூச்சா மற்றும் இசியம் பகுதிகளில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதை ரஷ்யா மறுத்தது. ரமாஸ் கோர்காட்ஸேவின் தாய் ரஷ்ய செய்தி ஊடகமான மகடன் பிராவ்தாவிடம், “யுக்ரேனில் அவனுக்கு நண்பர்கள் இருப்பதாக அவன் என்னிடம் சொன்னான், ‘இறப்பது மோசமான விஷயம் அல்ல, ஆனால் என்னைப் போன்றவர்களை சுடுவதே மோசமான விஷயம்’ என்று அவரது மகன் தன்னிடம் கூறியதாக” தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,INSTAGRAM படக்குறிப்பு, ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்கியது உக்ரேனிய இராணுவம் புதிய ரத்தமும் சதையும் கோர்காட்ஸே விரைவிலேயே உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான பாவ்லிவ்கா மற்றும் வுலேடாரைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டார். இந்த போரின் ரத்தக் களரியான மோதல் ஒருகாலத்தில் 15 ஆயிரம் சுரங்க தொழில் குடும்பங்கள் வாழ்ந்த பகுதியான வுஹ்லேடரில் நடைபெற்றது. இந்த பகுதி உயரமான இடத்தில் அமைந்துள்ளது. ரஷ்யாவின் விநியோக பாதையை குறிவைத்து தாக்க உக்ரேனிய ராணுவம் இந்த இடத்தை தான் பயன்படுத்தியது. அதே நேரத்தில், கோர்காட்ஸே அருகிலுள்ள வோல்னோவாகா பகுதியில் ஏற்பட்ட அழிவு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதற்கு பின், வுலேடார் பகுதியில் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தனது தாய்க்கு அவர் அனுப்பும் தகவல்கள் நின்று விட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 155 வது படைப்பிரிவின் வீரர்கள் பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக்குக்கு கடிதம் எழுதியுள்ளனர். காட்டிக்கொடுத்த கடிதங்கள் தங்களது பிரிவுகளில் இருந்து வீரர்கள் காணாமல் போகும் செய்திகள் மிக வழக்கமானதாகி விட்டது என்று 155 ஆவது படைப்பிரிவு வீரர்கள் கடிதம் ஒன்றை எழுதினர். நவம்பர் மாத தொடக்கத்தில், 155 ஆவது படைப்பிரிவின் வீரர்கள் ரஷ்ய மாகாணமான பிரிமோர்ஸ்கி க்ரேயின் ஆளுநர் ஓலெக் கோஜெமியாகோவுக்கு டெலிகிராம் வழியாக அந்த கடிதத்தை அனுப்பினார்கள். அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. போர்க்களத்தில் நிலவும் குழப்பமான சூழலை விவரித்தும், இராணுவ தளபதிகளை கடுமையாக விமர்சித்தும் அந்த வீரர்களால் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தது. "எதிர்பாராத தாக்குதல்களுக்கு" மத்தியில் நான்கு நாட்களில் மட்டும் "சுமார் 300 பேர் வரை உயிரிழப்புகள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்" என்று அந்த வீரர்கள் தெரிவித்திருந்தனர். மேலதிகாரிகள் தங்களை 'இறைச்சி' என்று அழைப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடற்படையினரின் கூற்றுக்களை நிராகரிக்கும் ஒரு அரிதான பொது மறுப்பு வெளியிட நிர்பந்தமாக அமைந்தது. “ஆம், அங்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளன, கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அந்த கடிதத்தில் இருப்பது போல் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என்று தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்டுள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் ஓலெக் கோஜெமியாகோவ். இந்த வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் கொடுப்பதற்கான உறுதியையும் வழங்கினார் கவர்னர். போர் பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பிபிசி - ஐ புலனாய்வு பிரிவு ஆய்வு செய்தது. யுக்ரேனின் உளவு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோக்கள், அதே தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதைக் காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES வெவ்வேறு நாட்களில், யுக்ரேனிய இராணுவம் ரஷ்யாவின் பல கவச வாகனங்களை பாவ்லிவ்காவுக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் வைத்து ஒரே பகுதியில் வெடிக்கச் செய்துள்ளது. இது ரஷ்யர்கள் ‘தரைவழிப் போரின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை' என்பதை உறுதிப்படுத்துவதாக கூறுகிறார் 2004 இல் ரஷ்ய கடற்படையினருடன் பணிபுரிந்த பாதுகாப்பு ஆய்வாளர் டைஃபன் ஆஸ்பர்க். “பயன்படுத்த ஒரே ஒரு திறந்தவெளி சாலை மட்டுமே உள்ள இடத்தில் எங்கு சுடுவது என்று யுக்ரேன் படைகளுக்கு தெரியும்” என்று கூறுகிறார் அவர். கண்ணிவெடி அகற்றப்படாமலும், வான்வழி உளவு செயல்பாடுகள் இன்றியும், போதிய உளவுத்துறை இன்றியும் நடைபெறும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தற்கொலைச் செயலாகும்" என்கிறார் அவர். “கீவை கைப்பற்றும் முயற்சியில் ஏற்கனவே 155வது படைப்பிரிவு பெரும் இழப்பை சந்தித்து விட்டது” என்கிறார் லண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த போர் நிபுணர் வில்லியம் ஆல்பர்ட்க். "அந்த வீரர்களுக்கு போதுமான பயிற்சி அல்லது போதுமான உபகரணங்கள் கூட தரப்படவில்லை என்பது போல் தெரிவதாக" கூறுகிறார் அவர். இதர ராணுவ ஆய்வாளர்கள் வுலேடருக்கு முன்தயாரிப்பின்றி படைகளை அனுப்பும் முடிவை, ‘மீட் - கிரைண்டர் உத்தியை’ கொண்டு விவரிக்கின்றனர். பட மூலாதாரம்,OK.RU படக்குறிப்பு, 7000 கிலோமீட்டர் வரை பயணித்து யுக்ரேன் சென்றுள்ளார் ஸ்வெட்லானா ஒரு தாயின் பயணம் தனது மகன் குறித்த எந்த தகவலுமே டிசம்பர் வரை வராததால் கோர்காட்ஸேவின் தாயார் ஸ்வெட்லானா விரக்தியில் இருந்தார். எனவே, அவரே கோர்காட்ஸேவை தேடுவதற்காக போர்ப்பகுதிக்கு செல்ல முடிவெடுத்தார். யுக்ரேன் செல்ல 7000 கிலோமீட்டர் வரை பயணித்ததாக அவர் கூறுகிறார். அதை தாண்டி அங்கே சென்றடைந்த போது தான் தனது மகன் இறந்துவிட்டார் என்பது அவருக்கு தெரிந்தது. கவர்னருக்கு கடிதம் அனுப்பப்படுவதற்கு முந்தைய நாள், பாவ்லிவ்காவில் உள்ள ஒரு கட்டிடத்தில் கோர்காட்ஸே நுழைந்துள்ளார். அப்போது ஆளில்லா விமானம் வீசிய கைக்குண்டு வெடித்ததில் அவரது கால்கள் வெடித்து சிதறியுள்ளது. பின் அவர் காயம் காரணமாக இறந்துள்ளார். படக்குறிப்பு, 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு 155 படைப்பிரிவில் எத்தனை பேர் இறந்துள்ளனர்? உயிரிழப்புகள் குறித்து ரஷ்யாவின்அதிகாரப்பூர்வ தரவுகள் ஏதும் இல்லாத நிலையில், பிபிசி ரஷ்ய சேவையின் ஓல்கா இவ்ஷினா, ரஷ்யாவின் சுயாதீன செய்தி இணையதளமான மீடியாஜோனா மற்றும் இறந்தவர்களைக் கணக்கிடும் தன்னார்வலர்களின் வலையமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதிகாரபூர்வ அறிக்கைகள், சமூக வலைதள பதிவுகள், ஊடக அறிக்கைகள் மற்றும் ரஷ்யாவில் உள்ள கல்லறைகளின் போட்டோக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 155-ஆவது கடற்படை காலாட்படை பிரிவில் மார்ச் 6, 2022 முதல் பிப்ரவரி 22, 2023 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 157 ஆக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாவ்லிவ்கா மற்றும் வுலேடார் பகுதிகளில் நடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் 2022 தாக்குதல்களில் தான் அதிக வீரர்கள் இறந்துள்ளதும் இந்த தரவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. குறைந்தது 60 கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன மாலுமிகளை அடையாளம் கண்டுள்ளது பிபிசி அய் குழு. “தற்போது கிடைத்துள்ள எண்ணிக்கையை விட 155-ஆவது படைப்பிரிவில் இறந்துள்ள போர்வீரர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதுள்ள தரவுகளை விட ரஷ்ய இழப்புகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக” கூறுகிறார் ஓல்கா இவ்ஷினா. பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், இந்த போரில் இழப்புகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டும் என தெரிவித்துள்ளது. இதில் தோராயமாக 70 ஆயிரம் இறப்புகளும் அடக்கம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. முடிவு என்ன? ரஷ்யா வுலேடார் மீது அடுத்த தாக்குதலை அறிவித்த அதே சமயத்தில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தனது சொந்த நகரமான யாகோட்னோய் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது கோர்காட்ஸேவின் உடல். அதிலிருந்து சில நாட்கள் கழித்து, 155 வது படைப்பிரிவின் வீரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மற்றொரு கடிதத்தில் , தரைவழி நிலை குறித்து மேலும் பேரழிவு தரக்கூடிய மதிப்பீடு குறித்து கூறப்பட்டுள்ளது. ரஷியாவின் கடற்படை வீரர்கள் குறித்து அதிபர் புதினிடம் கேட்டபோது, “கடற்படை வீரர்கள் தற்போது நன்றாகவே பணிபுரிந்து வருவதாகவும், தைரியத்துடன் சண்டையிட்டு வருவதாகவும்” கூறியுள்ளார். கோர்காட்ஸே இறந்து ஓராண்டுகள் ஆகியும் கூட ரஷ்ய ராணுவத்தால் வுலேடார் பகுதியை கைப்பற்ற முடியவில்லை. சமீபத்தில் கூட கவச வாகனங்கள் வெடி வைத்து தகர்க்கப்படக்கூடிய தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/czkjln27ynmo
  10. இவ்வளவு ஏலத் தொகை கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை! - மிட்செல் ஸ்டார்க் 20 DEC, 2023 | 09:34 PM ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்திய மதிப்பின்படி, 24 3/4 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறார். 33 வயதான இவர் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 16 விக்கெட்டுகளை (10 ஆட்டம்) கைப்பற்றியிருந்தார். இந்த ஏலம் தொடர்பில் அவர் கூறுகையில், உண்மையில் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது மனைவி அலிசா ஹீலி (அவுஸ்திரேலியா பெண்கள் அணியின் தலைவர்) தற்போது இந்தியாவில் விளையாடி வருகிறார். ஏலத்தில் எனது தொகை விபரத்தை நான் பார்ப்பதற்கு முன்பே எனக்கு சொல்லிவிட்டார். இனி கொஞ்சம் நெருக்கடி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் கடைசியாக விளையாடிய ஐ.பி.எல்லில் பெற்ற அனுபவம், அதை சமாளிக்க உதவும் என்று நம்புகிறேன். முடிந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன் என்றார். https://www.virakesari.lk/article/172173
  11. தவிச்ச வடக்கிற்கு தண்ணீர் வழங்கும் பாலியாறு Published By: DIGITAL DESK 3 20 DEC, 2023 | 11:50 AM மு.தமிழ்ச்செல்வன் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தகவல்களின் படி உலகில் வாழ்கின்ற சுமார் 8 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்று பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை. இன்னும் சில வருடங்களில் இந்த 2.2 பில்லியன் மக்களுடன் யாழ்ப்பாணம் மக்களும் இணைந்துகொள்வார்கள் என்ற நிலைமையை தற்போது தடுத்திருக்கிறது பாலியாறு. பாலியாறு குடிநீர் திட்டமானது வடக்கிற்கு தண்ணீர் வழங்குகின்ற ஒரு பாரிய திட்டமாக காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாலியாறு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களில் உள்ள சனத் தொகையை விட யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 6 இலட்சத்து 26 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்கள் முழுக்க முழுக்க தங்களது நீர் தேவையினை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோ பாதுகாப்பற்றதாக மாறிசெல்கிறது. குடாநாடு என்பதனால் நன்னீர் உவராக மாறும் தன்மை அதிகரித்து செல்வது, அதிக சனத்தொகை என்பதனால் அடர்த்தி மிக்க குடியிருப்புகள் காரணமாக நிலத்தடி மாசுப்படுதல் (மலக்கழிவுகள் நிலத்தடி நீரில் அதிகம் கலந்திருப்பது), நிலத்தடி நீர் குறைவடைந்து செல்வது போன்ற நிலைமைகளால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் குளங்கள், ஆறுகள் என்பன அதிகமான காணப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் தங்களது நீர்த்தேவையினை நிலத்தடி நீரில்மட்டுமன்றி ஆறுகள்,குளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை இல்லை. இதன்காரணமாக யாழ்ப்பாணத்தின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவை தொடர்பில் பல காலங்களாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ள போதும் அவற்றின் சாதக பாதக காரணிகளை கருத்தில் கொண்டு பாலியாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு முன்னாய்ந்த நடவடிக்கைகளுக்கு 250 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்துள்ளது. பாலியாறு இலங்கையின் வடக்கே வட மாகாணத்திற்குள் காணப்படுகின்ற ஓர் ஆறு. 68.4 கிலோ மீற்றர் நீளமுள்ள பாலியாறு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் ஆரம்பித்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை கடந்து கடலுக்குள் கலக்கிறது. பாலியாறு குடிநீர் திட்டம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாற்றை வழி மறித்து 4.6 கிலோமீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும். 1 இலட்சத்து 18,363 ஏக்கர் ( 479 சதுர கிலோ மீற்றர்) பரப்பளவு நீரேந்து பிரதேசங்களில் வருடந்தோறும் 1,317 மில்லி மீற்றர் சராசரி மழைவீழ்ச்சியிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீரைக்கொண்டு 2,562 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற மழை நீரானது வருடத்திற்கு 151 எம்சிஎம் அளவு எந்தவித பயனும் இன்றி வீணாக கடலில் சேர்கிறது. பல மில்லியன் ரூபாக்கள் செலவில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 41.2 எம்சிஎம் அளவு நீர் குடிநீருக்கு பெறப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் மீற்றர் கியூப் நீர் குடிநீருக்காக பெறப்படும். பயன்பெறும் பிரதேசங்கள் அமைக்கப்படவுள்ள பாலியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும், மன்னாள் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்படவுள்ளது. திட்டத்தின் ஏனைய நன்மைகள் பாலியாறு குடிநீர் திட்டத்தினால் பின்வரும் நன்மைகள் ஏற்படும் திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். • 358 ஹெக்டயருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசனம் • வருடம் ஒன்றுக்கு 800,000 மெட்றிக்தொன் மீன் பிடி • சுற்றுலா பயணிகள் வருகையின் மூலமான வருமானம் • மிதக்கும் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி • சுற்றுச்சூழல் நன்மை கருதி செக்கனுக்கு 08 மீற்றர் கியூப் நீர் வெளியேற்றப்படுகின்றமை • நிலம் உவராகி வருகின்றமையினை தடுத்தல் • நீர் தேக்குவதன் மூலம் ஏற்படும் மக்களின் குடிபெயர்ச்சி இன்மை திட்டத்தின் சவால்கள் • பாலியாறு திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது நீர் சேமிக்கப்படுகின்ற 2,562 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்ற அடர்த்தியற்ற ஒதுக்கப்பட்ட காடுகள் நீருக்குள் சென்றுவிடுகின்ற நிலைமை ஏற்படும். • நீர்த்தேக்க பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகள் என்பதனால் வனவளத் திணைக்களத்தின் அனுமதி பெறுவது • இப் பாரிய முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி மூலங்களை கண்டுபிடித்தல் வடக்கு குடிநீருக்கான பொருத்தமான திட்டம் மேற்படி இந்த திட்டமானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான திட்டமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான குடிநீருக்கு ஆறுமுகம் திட்டம், இரணைமடு திட்டம், கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம், வடமராட்சி நீர்த்தேக்கம் பாலியாறு திட்டம் என பல திட்டங்கள ஆராயப்பட்டன. ஆனால் அந்த திட்டங்களில் எல்லாம் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. நடைமுறைப்படுத்துவதில் சமூக பொருளாதார நெருக்கடிகள் உருவாகின. ஆனால் பாலியாறு திட்டத்தின் மூலம் அவ்வாறான எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை, அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்களும், உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதல் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதே இதன் வெற்றியாகும். பாலியாறு திட்டத்தின் ஊடான நீர் பங்கீட்டில் கூட எவ்வித சவால்களும் உருவாகவில்லை. ஆகவே பாலியாறு திட்டம் குடிநீருக்கு தவிச்ச வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்கும் ஒரு பொருத்தமான திட்டமே. https://www.virakesari.lk/article/172130
  12. சம்மதம் தெரிவிக்கும் இஸ்ரேல், எகிப்து செல்லும் ஹமாஸ் தலைவர்: காசாவில் மீண்டும் போர் நிறுத்தம்? ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்பதற்காக காசாவில் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் 90க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது. காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார். இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார். இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதால் நிறைவேற முடியாத நிலையில் இருந்து வருகிறது. https://thinakkural.lk/article/285375
  13. உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் தொடர்பான அறிவித்தல்! உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இவ்வருடமும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். 2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதல் முறையாகத் தோன்றி, பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரம் கற்கத் தகுதிபெற்று, அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி பயிலும், விண்ணப்பதாரரின் குடும்பத்தின் மாத வருமானம் ரூ. 100,000 வுக்கு குறைவாக காணப்படுகின்றமை இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதியாகக் கருதப்படுகிறது. இந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளங்கள்: presidentsoffice.gov.lk ஜனாதிபதி நிதியம்: presidentsfund.gov.lk மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு: pmd.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்த பின், குறித்த மாணவர்கள், 2023 டிசம்பர் 22-ஆம் திகதிக்கு முன், தாங்கள் பரீட்சை எழுதிய பாடசலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதால், எனவே தகுதியுடைய சகல மாணவர்களும் டிசம்பர் 22 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுத்துள்ளது. https://thinakkural.lk/article/285415
  14. ரச்சின் ரவீந்திரா, மிட்செலை சென்னை அணி வாங்கியது ஏன்? தோனிக்கு பிறகு கேப்டன் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 19 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “எம்எஸ் தோனிக்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாகத் திட்டம் வைத்திருக்கிறோம். அவரின் ஓய்வு பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், எப்போதுமே தோனி சுறுசுறுப்பாக இருக்கிறார், கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறாரே. அவரின் உற்சாகம், கிரிக்கெட் மீதான காதல், அணியின் மீதான பற்று அவரை தொடர்ந்து இயங்க வைக்கிறது” சிஎஸ்கே அணி குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில். இதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் மகேந்திர சிங் தோனி இப்போதைக்கு ஓய்வு அறிவிக்க மாட்டார் என்பதையே அவர் சூசமாகத் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனக்கு ஈடான சிறந்த கேப்டனை கண்டுபிடிக்கும் வரை, உருவாக்கும் வரை தோனி கேப்டனாகத் தொடர்வார் என்று கூட வைத்துக்கொள்ளலாம் என்று பிளெம்மிங் பேச்சின் மூலம் தெரிகிறது. தோனியும் வியூகமும் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி களத்துக்கு வந்துவிட்டாலே, அவர் எவ்வாறு வீரர்களைக் கையாள்வார், எந்தெந்த வீரர்களுக்கு எப்போது பந்துவீச வாய்ப்பளிப்பார், பீல்டிங் வியூகம் என அனைத்துமே ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எதிர் அணியினரும் எதிர்பார்ப்புடன் பார்க்கக் காத்திருப்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் வேண்டாம் என நிராகரிக்கப்பட்ட பல வீரர்களை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கி அவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி அவர்களை வேறு கோணத்தில் காட்டியதுண்டு. உதாரணமாக ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி போன்றோர் நடுவரிசையில் நிதானமாக ஆடக்கூடிய பேட்டர்கள். ஆனால், சிஎஸ்கே அணிக்கு வந்தபின் அவர்களின் பேட்டிங் வியூகமும், ஸ்டைலும் மாறிவிட்டது. எந்த வீரர்களாக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிட்டாலே அவர்களை தங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் திறமை தோனிக்கும், சிஎஸ்கே பயிற்சிக்கும் இருக்கிறது என்று அந்த அணியில் உள்ள பல வீரர்கள் பேட்டியிலேயே தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES விடுவிக்கப்பட்ட வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியிலிருந்து அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் இடத்தை நிரப்பும் வகையில் ஏலத்திலும் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கு வலை சி.எஸ்.கே அணி ஏலத்துக்குள் நுழையும் போது அதன் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருந்தது. கிறது. இந்தத் தொகையை வைத்து, ஏலத்தைச் சந்தித்தது. முதலில் சிஎஸ்கே அணி நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீது குறி வைத்தது. ஐபிஎல் ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் என்று ஏற்கெனவே பிபிசி செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தநிலையில் அது உண்மையாகிது. உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பெற்று சிறப்பாகச் செயல்பட்ட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திராவுக்கு அடிப்படை விலை ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்து. ஆனால், கடும் போட்டிக்குப்பின் அவரை ரூ.1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ரச்சின் ரவீந்திரா அவசியம் ஏன்? சிஎஸ்கே அணிக்கு கெய்க்வாட்டுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்க சிறந்த தொடக்க ஆட்டக்காரர் அவசியம் தேவை. அதனால்தான் தொடக்க ஆட்டகாரருக்காக இடதுகை பேட்டர் ரச்சின் ரவீந்திராவை வாங்கியுள்ளது சிஎஸ்கே. அது மட்டுமல்லாமல் ரவீந்திரா சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்பதால், நடுப்பகுதி ஓவர்களிலும் ரவீந்திராவை தோனியால் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். இதுபோன்ற இளம் வீரர்களை தோனி சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு துருப்புச்சீட்டாக்குவார் என்பதில் சந்தேகமில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ராயுடு இடத்தை நிரப்பும் மிட்செல் அடுத்ததாக நியூசிலந்து ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. ஆல்ரவுண்டர் டேரல் மிட்செல் கடந்த சீசனில் விலை போகவில்லை. ஆனால் இந்த முறை ஏலத்தில் அவரை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாயிலிருந்து ரூ.13 கோடி அதிகமாக ரூ.14 கோடிக்கு வாங்கியது. சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதனால்தான் ஆல்ரவுண்டர்கள் ஏலத்தில் வரும்போது அவர்களை தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்குவதை சிஎஸ்கே வியூகமாக வைத்துள்ளது. ஏற்கெனவே ரவீந்திராவை வாங்கியநிலையில் டேரல் மிட்செலை வாங்கியுள்ளது. டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்துள்ள மிட்செலின் ஸ்ட்ரைக் ரேட் 137க்கும் மேல் வைத்திருக்கிறார். ஒன்டவுன் மற்றும் நடுவரிசையில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக களமிறக்க மிட்ஷெலை விலைக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு தூண் போல் இருந்துவந்தார். ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’. களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சித்து டேரல் மிட்ஷெலை வாங்கியுள்ளது. ராயுடு இடத்தை நிரப்புவது கடினம் என்றாலும், அவரின் இடத்துக்கு வலுவான ஒரு பேட்டர் தேவை என்பதால், டேரல் மிட்செல் வாங்கப்பட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணியில் மீண்டும் ஷர்துல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர் நீண்டகாலமாக இருந்து வந்தார், கடந்த இரு சீசன்களுக்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டநிலையில் மீண்டும் வாங்கப்பட்டுள்ளார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூரை வைத்துக்கொண்டு பல போட்டிகளை தோனி வென்று காட்டியுள்ளார். தோனிக்கு ஏற்ற தளபதியாக இருவரும் பலநேரங்களில் பந்துவீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அணியை வெல்ல வைத்துள்ளனர். ஆதலால், மீண்டும் ஷர்துலை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைசிவரை பேட்ஸ்மேன் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தம் இன்றைய அணிகளுக்கு இருக்கிறது. ஷர்துல் தாக்கூர் நன்றாகவே பேட்டிங் செய்யக்கூடியவர், பிஞ்ச் ஹிட்டராக செயல்படக்கூடியவர் என்பதால், அவரை ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது. யார் இந்த சமீர் ரிஸ்வி? இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அன்கேப்டு வீரரும், 20 வயதான சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம். உத்தரப்பிரேதசத்தைச் சேர்ந்த பேட்டர் சமீர் ரிஸ்வி. இவரின் அடிப்படை விலையே ரூ.20 லட்சம்தான். ஆனால், இவரை வாங்குவதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், சிஎஸ்கேவும் கடும்போட்டியிட்டன, இடையே டெல்லி கேபிடல்ஸ் அணியும் சேர்ந்து போட்டியிட்டது. உத்தரப்பிரதேச டி20 லீக் தொடரில் 9 இன்னிங்ஸில் 2 சதங்கள் உள்பட 455 ரன்கள் சேர்த்தால் சமீர் ரிஸ்வி அனைவராலும் உற்றுநோக்கப்பட்டார். 20வயதான ரிஸ்வி பிக்ஹிட்டர், பெரிய ஷாட்களை அடிக்கும் வல்லமை படைத்தவர். சமீபத்தில் நடந்த முஸ்தாக் அலி தொடரில் 18 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசியுள்ளார். தான் சந்தித்த ஒவ்வொரு 11 பந்துகளிலும் ஒரு சிக்ஸரை ரிஸ்வி பறக்கவிட்டதால் சிஎஸ்கே அவரை கொத்திக் கொண்டது. இதுவரை 11 டி20 போட்டிகளில் மட்டுமே ரிஸ்வி விளையாடி 295 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் சராசரி வைத்துள்ளார். வலதுகை பேட்டரான ரிஸ்வி ஆடவருக்கான மாநில அளவிலான 23வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் அடித்து இறுதிப்போட்டியில் 84 ரன்கள் சேர்த்து உத்தரப்பிரதேசம் வெல்ல காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் 37 சிக்ஸர்களை ரிஸ்வி விளாசி இருந்தார். இதனால், ரிஸ்வியை ரூ.8.40 கோடிக்கு விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணியில் கிரேட் ஃபினிஷராக தோனி இருந்தாலும் அவரின் பணிச் சுமையைக் குறைக்க மற்றொரு வீரரை உருவாக்குவதும் அவசியம். அதனால்தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே நிர்வாகம் விலைக்கு வாங்கி உருவாக்க இருக்கிறது. மேட்ச் பினிஷிங்கில் சிறப்பாகச் செயல்படும் ரிஸ்வியின் ஸ்ட்ரைக் ரேட் 130 மேல் வைத்துள்ளார். மேலும், டெத் ஓவர்களை விளாசி, பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர் என்பதால், பெரிய ஸ்கோரை எடுப்பதற்கு இதுபோன்ற பேட்டர்கள் அவசியம் என்பதால் ரிஸ்வியை சிஎஸ்கே வாங்கியுள்ளது. முதல் வங்கதேச வீரர் சிஎஸ்கே அணியில் இடதுகை பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் பல நேரங்களில் துருப்புச் சீட்டாக இருந்துள்ளனர். ஆதலால்தான் கடந்த காலங்களில் இருந்தே இடதுகை பேட்டர்களுக்கும், ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியம் அளிக்கப்படும். இந்தமுறை ஏலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இடம் பெறுவது இதுதான் முதல்முறையாகும். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய திறமை படைத்தவர். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெத் ஓவர்களில் சிறப்பாகவும் பந்துவீசும் திறமை கொண்டவர் என்பதால் முஸ்தபிசுர் ரஹ்மானை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியிடம், இவர் போன்ற வீரர் கிடைக்கும்போது, சரியான தருணத்தில் பயன்படுத்தி, வெற்றியும் பெறுவார், அந்த வீரரையும் உலகறியச் செய்வார். புதிய பந்தில் பந்துவீச தீபக் சஹர், பதீரணாவுடன் அல்லது மாற்றாக ஒரு பந்துவீச்சாளர் தேவை என்பதால், முஸ்தபிசுர் ரஹ்மான் வாங்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணிக்கு வரும் சீசனில் தொடக்கப் பந்துவீச்சாளராகக் கூட முஸ்தபிசுர் மாறினாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை. பேட்டிங்கில் நடுவரிசையில் அம்பதி ராயுடு இடத்தை நிரப்ப டேரல் மிட்ஷெலும், கெய்க்வாட்டுடன் ஆட்டத்தைத் தொடங்க ரச்சின் ரவீந்திராவும் வாங்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் டேவன் கான்வே ஆட்டத்தைத் தொடங்கினாலும், இந்த சீசனில் ரவீந்திரா அல்லது கான்வே என மாற்றி மாற்றி பயன்படுத்தப்படக்கூடும். இதில் கூடுதலாக ரவீந்திரா ஆல்ர்வுண்டர் என்பதால் அதிகமான வாய்ப்புக் கிடைக்கலாம். தோனிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் யார்? தோனி இல்லாத சிஎஸ்கே அணி, சிஎஸ்கே அணியையும் தோனியையும் பிரிக்க முடியாது. ஆனால், இதுபோன்ற வார்த்தைகளை கால மாற்றத்தால் ஏற்கத்தான் வேண்டும். ஆனால், தோனிக்குப்பின் அடுத்த கேப்டன் யார் என்பதை ரசிகர்களும், பல முன்னாள் வீரர்களும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதற்குரிய சரியான பதில் சிஎஸ்கே நிர்வாகத்திடம் இல்லை. ஏற்கெனவே ஜடேஜாவிடம் கேப்டன்சியைக் கொடுத்து கையைச் சுட்டுக்கொண்டதால், அடுத்த கேப்டனாக இளம் வீரரிடம்தான் பொறுப்பு வழங்கப்படும். அந்த இளம் வீரருக்கு தோனி குறைந்தபட்சம் சில சீசன்களுக்கு பயி்ற்சி அளிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் வரலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில் ரச்சின் ரவீந்திராவை வாங்கியபின், அவரின் பெயரும் கேப்டனுக்கு பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது. சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதி இளம் வீரர் ஒருவர் கேப்டனாக வரலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி விவரம் மகேந்திர சிங் தோனி(கேப்டன்), மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், டேவன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, அஜெய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதீரணா, அஜின்கயே ரஹானே, ஷேக் ரஷீத், மிட்ஷெல் சான்ட்னர், மிட்ஷெல், சிமர்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஸனா, சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான். https://www.bbc.com/tamil/articles/cv2jx2g073ro
  15. ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து ஆடுவாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விதான்ஷு குமார் பதவி, விளையாட்டு பத்திரிகையாளர், பிபிசி ஹிந்திக்காக 19 டிசம்பர் 2023, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியக் கிரிக்கெட்டில் சமீபத்தில் எழுந்துள்ள புயல் இந்திய அணியுடன் தொடர்புடையது அல்ல. ஐ.பி.எல்.லின் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸுடன் தொடர்புடையது. சர்ச்சையின் மையத்தில் இருப்பவர் - ரோகித் சர்மா. அடுத்த சீசனில் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தவுடன், இணையத்தில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமடந்துள்ளனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை இழந்தது. அறிவிப்பு வந்த முதல் நாளில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கத்தை நான்கு லட்சம் பேர் ‘அன்ஃபாலோ’ செய்திருக்கிறார்கள். ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் தொப்பிகளுக்கு தீ வைக்கும் படங்கள் இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினர். அதேசமயம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்த நடவடிக்கையைப் பற்றித் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார் முன்னாள் இந்திய வீரர்கள் கூறுவது என்ன? முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் இடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனியின் இடத்துக்கு இணையானதுதான் என்றார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரோகித் சர்மா அணியில் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். என்னுடைய பார்வையில் இது தோனி சென்னை அணியில் வகிக்கும் அதே இடம்தான். ரோகித் சர்மா தனது ரத்தம் மற்றும் வியர்வையால் மும்பை அணியை கட்டமைத்துள்ளார். மேலும் ஒரு கேப்டனாக அவர் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்,” என்றார். இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரும் தற்போதைய இந்திய டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவ், ‘உடைந்த இதயம்’ எமோஜியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதுவும் வைரலாகியிருக்கிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஆதரித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா சோர்வாக இருப்பதாகவும், அணிக்கு புதிய சிந்தனை தேவை என்றும் கூறினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் அவர் கூறுகையில், “இதில் எது சரி, எது தவறு என்று பார்க்காமல், அணியின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பேட்டிங்கில் ரோகித்தின் பங்களிப்பும் சரிந்திருக்கிறது,” என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரோகித்தின் சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது மும்பை அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடித்தந்தவர் இந்த முறை ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் நீக்குவது குறித்து உண்மையில் யாருக்கும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஐ.பி.எல் தொடரின் மிக வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். அவரது சிறப்பான பேட்டிங் பாணியும், கேப்டன்ஷிப்பில் நிபுணத்துவமும் அவரை அணிக்கு மாற்று இல்லாத வீரராக்குகிறது. அவர் 2011-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். முதல் வருடத்தில் அவர் 33.81 சராசரியில் 372 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, அவர் மும்பை அணிக்காக 31 சராசரியில் 5,230 ரன்கள் எடுத்தார், இதில் 40 அரை சதம் மற்றும் 1 சதம் அடங்கும். இந்த காலகட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக இருந்தது. இது அவரது அணிக்கு வலுவான தொடக்கத்தைப் பெற அடிக்கடி உதவியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது பேட் சற்று அமைதியாகிவிட்டாலும், இந்த ஃபார்ம் விரைவில் மேம்படக்கூடும். மேலும் பல வருட டி20 கிரிக்கெட்டை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். 2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரிக்கி பாண்டிங் பாதியிலேயே விட்டுச் சென்றபோது ரோகித் சர்மா கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை வென்றது. கேப்டனாக இருந்த ஏறக்குறைய 10 ஆண்டுகளில், ரோகித் சர்மா 158 போட்டிகளில் அணிக்குத் தலைமை தாங்கினார். இவற்றில் 87 போட்டிகளில் வெற்றி பெற்றார், அவர் 67 இல் தோல்வியடைந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அணியின் இந்த முடிவுக்கு ரோகித்தின் ஃபார்ம் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் குஜராத் அணிக்குக் கொடுத்தது. ஹர்திக் புதிய அணியை முதல் சீசனிலேயே சாம்பியனாக்கினார். அதே சமயம் கடந்த ஆண்டு குஜராத் இரண்டாவது இடத்தில் இருந்தது. சமீப ஆண்டுகளில் மும்பையால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அந்த அணி கடைசியாக 2020-இல் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோகித் சர்மாவின் குறைவான ரன்களையே எடுத்தார். 2022-ஆம் ஆண்டில், அவர் 14 போட்டிகளில் 19 சராசரியுடன் 268 ரன்கள் எடுத்தார். அதே சமயம் 2023-இல் 16 போட்டிகளில் 20.75 சராசரியில் 332 ரன்கள் எடுத்தார். கடந்த இரண்டு சீசன்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்த அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. T20-இல் கூட, ரோகித் சர்மா நவம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை, மேலும் அவரிடமிருந்து கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியாவிடம் சென்றது. இருப்பினும், ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு ரோகித், விராட் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு டி20-யில் இருந்து ஓய்வு அளிக்க இந்திய நிர்வாகம் விரும்பியதாகவும், இது டி20-யில் அவர்களின் வாழ்க்கை முடிவடையும் என்பதற்கான அறிகுறி அல்ல என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரோகித் தனக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா? ரோகித்தின் அடுத்த முடிவு என்ன? தற்போது ரோகித் சர்மாவின் அடுத்த நகர்வில்தான் அனைவரது பார்வையும் பதிந்துள்ளது. அவர் ஹர்திக்கின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவாரா அல்லது வேறு ஏதேனும் அணியில் கேப்டன் பதவியைப் பெற விரும்புவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித்துக்கு வணக்கம் தெரிவித்து பதிவிட்டபோது, அதை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவும் லைக் செய்திருந்தார். ஐ.பி.எல் ஏலம் இன்று (டிசம்பர் 19) நடைபெற உள்ளது. பரிமாற்றச் சாளரம் டிசம்பர் 20-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அனைத்து அணிகளும் தங்கள் அணியை மேலும் வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில அணிகள் ரோகித் சர்மாவின் பெயரைக் கருத்தில் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2022 மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை ரூ. 16 கோடிக்கு மும்பை தக்க வைத்துக் கொண்டது. எனவே அவரை வாங்க விரும்பும் அணியிடம் குறைந்தபட்சம் ரூ.16 கோடி இருக்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மா இதைச் செய்ய விரும்புவாரா அல்லது அவருக்குப் பிடித்த அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் செலவழித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பாரா? ஒன்று மட்டும் நிச்சயம், அவர் எங்கிருந்தாலும் பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெறுவார். https://www.bbc.com/tamil/articles/cldr2re36l4o
  16. 19 DEC, 2023 | 02:57 PM வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/ கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லயின் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள், யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/172068
  17. காரைநகரில் கைதான 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 19 DEC, 2023 | 10:26 AM யாழ். காரைநகர் கோவளம் கடற்கரையில் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்து யாழ்ப்பாணம் - காரைநகர்- கோவளம் கடற்பரப்பில் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பதின்நான்கு பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்தில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் அவர்கள் 14பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரு மீனவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/172024
  18. ஐ.பி.எல் ஏலம் நாளை 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் நாளை டுபாயில் இடம்பெறவுள்ளது. குறித்த ஏலத்தை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மல்லிகா சாகர் பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தை தொகுத்து வழங்கியிருந்தார். இம்முறை ஐ.பி.எல் ஏலத்திற்காக 333 வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் 77 வீரர்கள் மாத்திரமே ஐ.பி.எல் அணிகளுக்காக ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். https://thinakkural.lk/article/285105
  19. அந்த இடம் முள்ளிக்குளம் என நினைக்கிறேன். அவர் திருமணம் செய்யவில்லை.
  20. ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த கெப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதி சடங்குகள் : 'உக்ரைனைக் காக்க தன் உயிரைக் கொடுத்த மாவீரன்' என புகழாராம்! Published By: DIGITAL DESK 3 18 DEC, 2023 | 11:29 AM உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த கெப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதி சடங்குகள் உக்ரைன் இராணுவத்தினரின் மரியாதை மற்றும் உக்ரைன் மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் உக்ரைனின் மிலிதோன் நகரில் நடைபெற்றது. 'உக்ரைனைக் காக்க தன் உயிரைக் கொடுத்த மாவீரன்' என்று கப்டன் ரனீஷ் என புகழராம் சூட்டி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. கெப்டன் ரனிஷின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட வீதியின் இருபுறமும் வாகனங்களில் சென்ற உக்ரைனியர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி, தலைகுனிந்து மரியாதை செலுத்தினர். https://www.virakesari.lk/article/171931
  21. ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ?!😂 ஐ மீன் மீம் கிரியேட்டர சொன்னேன்!🤣
  22. காசாவில் இஸ்ரேலிய படையினர் சினைப்பர் தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த இரண்டுபெண்கள் பலி Published By: RAJEEBAN 17 DEC, 2023 | 11:58 AM காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும் Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது. தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர், காயமடைந்த ஒருவரை தூக்கி சென்றவர் கொல்லப்பட்டார் என Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது. 54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது, இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalem தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171876
  23. காஸா: வெள்ளைத் துணி ஏந்திய பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது ஏன்? பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 16 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது. கொல்லப்பட்ட மூன்று பணயக் கைதிகளை தங்களது கையில் வெள்ளைத் துணியை வைத்திருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இது ராணுவ விதிமீறல் என்பதால், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது. கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o
  24. இஸ்ரேலிய பணயக் கைதிகளையே தவறுதலாக கொன்ற ராணுவம் - கொந்தளிக்கும் மக்கள் பட மூலாதாரம்,HOSTAGE AND MISSING FAMILIES FORUM படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவம் தவறுதலாக மேற்கொண்ட தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல் நடவடிக்கையின் போது தவறுதலாக மூன்று பணயக் கைதிகளை 'அச்சுறுத்தல்' எனக் கருதி கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. உயிரிழந்தவர்களில் 28 வயதான யோதம் கைம், 22 வயதான சமர் தலால்கா மற்றும் 26 வயதான அலோன் ஷம்ரிஸ் ஆகியோர் அடங்குவர். ராணுவம் வருத்தம் தெரிவித்ததுடன், காஸாவின் வடக்கே ஷேஜாயாவில் மூவரும் இறந்ததாக அறிவித்தது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக் குழு, 200க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாகப் பிடித்து மீண்டும் காஸாவுக்கு கொண்டு சென்றது. கடந்த சில நாட்களில் ஹமாஸ் பல டஜன் பணயக் கைதிகளை விடுவித்தாலும், அந்தக் குழுவிடம் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சொந்த நாட்டவர்களே உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. "காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பணயக் கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் தேசியப் பணி" என்றும் ராணுவம் கூறியுள்ளது. தெருவில் இறங்கிய மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தின் தவறான தாக்குதலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலைச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, அந்நகரில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஆயுதக் குழுவுடன் அரசு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் சுவரொட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுவரொட்டிகளில் “அவர்களை வீட்டிற்கு அழைத்து வாருங்கள்” மற்றும் “இப்போது பணயக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுங்கள்,” என்று எழுதப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் இஸ்ரேலை அடைந்துள்ளன. அங்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காணும் பணிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த 3 பேரின் உடல்களுக்கும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது உயிரிழந்த யோதம் கயீம் என்பவரை அக்டோபர் 7ஆம் தேதி, கிப்புட்ஸ் கஃப்ர் அஸாவில் இருந்து ஹமாஸ் குழுவினர் கடத்திச் சென்றனர். யோதம் ஒரு இசைக்கலைஞர் என்பதுடன், அவர் விலங்குகளை நேசிப்பவராகவும் இருந்தார். அவருக்கு இத்தாலிய உணவுதான் மிகவும் பிடித்த உணவு என்றும் தெரியவந்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய நாளில், யோதம் கயீம் தனது குடும்பத்தினரை அழைத்து, தங்களது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகக் கூறினார். இதற்கிடையில், யோதம் கயீம் காற்றோட்டமாக இருப்பதற்காகத் தனது வீட்டின் ஜன்னலை திறந்தபோது, ஹமாஸ் குழுவினர் அவரைக் கடத்திச் சென்றனர். மகன் இறப்பதற்கு முன் பிபிசி செய்தியிடம் பேசிய அவரது தாயார், தாக்குதல் நடந்த அன்று அவர் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவருடன் பேசியதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இறந்த இரண்டாவது நபர், 26 வயதான அலோன் ஷம்ரிஸ், அக்டோபர் 7ஆம் தேதி காஃப்ர் அஸபவில் இருந்தார். இதுதவிர, 22 வயதான சமீர் தலால்கா, கிப்புட்ஸ் நிர் அம் என்ற இடத்தில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டார். மோட்டார் சைக்கிள் ஆர்வலரான சமீர், கிராமப்புறங்களுக்குச் செல்வதையும் தனது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதையும் அதிகம் விரும்புவராக இருந்திருக்கிறார். அவர் ஹுரா நகரில் வசித்து வந்த நிலையில் கிப்புட்ஸில் ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தார். இவர் அக்டோபர் 7ஆம் தேதி காலையில் வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கிறார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, சமீர் தலால்கா தனது சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு துப்பாக்கி தோட்டாவால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார். தாக்குதல் நடந்த அன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் தனது மகனுடனான தொடர்பை இழந்ததாக அவரது தந்தை உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். சமீர் தலால்கா காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட படம் டெலிகிராமில் பகிரப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் சொந்த மக்கள் 3 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்ன சொன்னார்? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த மரணங்களை 'தாங்க முடியாத சோகம்' என்று வர்ணித்துள்ளார். "இந்தக் கடினமான வேளையில்கூட, நமது காயங்களைக் குணப்படுத்துவோம், பாடங்களைக் கற்றுக்கொள்வோம். மேலும் எங்கள் நாட்டுப் பணயக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா என்ன சொன்னது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இஸ்ரேலிய ராணுவத்தின் இந்தக் கொலைகள் ஒரு பெரிய தவறு என்றும், இந்த நடவடிக்கை எப்படி நடந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் அமெரிக்காவிடம் இல்லை என்றும் கூறினார். சமீபத்தில், காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் மீது அமெரிக்கா மிகக் கண்டிப்புடன் இருந்தது. காஸாவில் நடந்து வரும் கண்மூடித்தனமான குண்டுவெடிப்பால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருவதாக டிசம்பர் 13ஆம் தேதியே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். 2024ஆம் ஆண்டிற்கான நிதி திரட்டுவது தொடர்பான நிகழ்வில் பைடன் பேசுகையில், ”இஸ்ரேலின் பாதுகாப்பு அமெரிக்காவை சார்ந்து இருக்கலாம், ஆனால் தற்போது அது அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளைச் சார்ந்துள்ளது. ஆனால் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களின் காரணமாக இஸ்ரேல் அந்த ஆதரவை இழக்கும் நிலை உள்ளது,” என்றார். இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் தொடர்பாக பைடனுக்கு அமெரிக்காவில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்தும் இந்த அழுத்தம் வெளிப்படுகிறது. பைடனின் அறிக்கை அமெரிக்க நிர்வாகத்தின் அறிக்கைகளைப் போன்றது. இதில் இஸ்ரேல் போரின்போது மனித உயிர்களைக் காப்பாற்றுவது பற்றியும் பேசப்பட்டிருந்தது. மூத்த அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலின் ராணுவ நிலைப்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரு நாள் முன்னதாக, காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 153 நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இது தவிர, 23 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன. ராணுவ நடமுறைகள் குறித்து எழும் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காஸாவில் ஹமாஸ் குழுவினர் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 18,800 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர் என்பதுடன் ஹமாஸ் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. ஹமாஸின் ஆக்கிரமிப்பில் இருந்து பணயக் கைதிகளை விடுவிக்க பயன்படுத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். ஹமாஸால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்களில் ஹான் அவிக்டோரியும் ஒருவர். "பணயக் கைதிகளை ராணுவத்தின் மூலம் மீட்க முடியும் என்று மக்கள் கூறுவதை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அவர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வர எந்த ராணுவ நடைமுறையும் பின்பற்றப்படவில்லை," என்று அவர் கூறினார். அவர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் எழுதியபோது, இஸ்ரேல் தனது மக்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9x2ddj67n4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.