Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. காசா மோதல் பிராந்திய போராக மாறும் அபாயம் – ரஷ்யா எச்சரிக்கை! காசா பகுதியில் இடம்பெறும் மோதல், பிராந்திய போராக மாறும் அபாயம் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இடம்பெறும் மோதலுக்கு ஈரான் மீது பழி சுமத்துவது ஆத்திரமூட்டும் செயற்பாடு என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் துருக்கியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்றைய தினம் இஸ்ரேலுக்கு விஜயமொன்றை மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது இஸ்ரேல் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இஸ்ரேலுக்கான தங்களது ஆதரவையும் அவர் வெளிப்படுத்துவார் என பிரித்தானிய பிரதமர்; அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது பிரித்தானிய பிரதமரும் அங்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/277707
  2. ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி இணக்கம் ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். காசா எல்லைக்கான உதவிப் பொருட்கள் அடங்கிய சுமார் 20 ட்ரக் வாகனங்கள் செல்வதற்காக ரஃபா எல்லையை திறக்க எகிப்திய ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். காசா பிராந்தியத்திற்கான “நிலையான” மனிதாபிமான உதவிகளை எகிப்து உறுதிப்படுத்துவதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் சிக்கி 4500-இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/277612
  3. ஜேர்மனியில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் - 65 பொலிஸார் காயம் 174 பேர் கைது Published By: RAJEEBAN 19 OCT, 2023 | 03:37 PM ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 65 பொலிஸார் காயமடைந்துள்ளனர். உத்தரவினை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கற்கள் எரிபொருட்கள் வீசப்பட்தாலும் ஆர்ப்பாட்டக்காராகள் பொலிஸாரை மீறியதாலும் பொலிஸாருக்கு இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளன என பேர்ளின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 174 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள ஜேர்மனி பொலிஸார் 65 பேரை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அராபியர்கள் அதிகமாக வாழும் நியுகோலான் பகுதியில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் இடம்பெற்றுள்ளன. நியுகோலானை காசாவாக மாற்றுமாறு டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/167279
  4. இஸ்ரேலின் யுத்தம் - முற்றுகை காரணமாக காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனையும் மூடப்படும் ஆபத்து Published By: RAJEEBAN 19 OCT, 2023 | 11:29 AM அல்ஜசீரா யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற மிகவும் துயரமான சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காசாவின் அல்அஹ்லி மருத்துவமனையில் கொல்லப்பட்டுள்ள அதேவேளை வைத்தியர் சுபிசுகேய்க் தனது புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் சந்திக்கும் மற்றுமொரு துயரத்தை சந்திக்கின்றார். ஒக்டோபர் ஏழாம் திகதி மோதல் ஆரம்பித்து இரண்டு நாட்களின் பின்னர் காசா பள்ளத்தாக்கின் மீது முழுமையான தடையை விதித்தது, எரிபொருள் குடிநீர் உட்பட ஏனைய பொருட்கள் காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துருக்கி பாலஸ்தீன நட்புற மருத்துவமனையின் இயக்குநர் சுபிசுகேய்க் தனது மருத்துவமனையில் எரிபொருள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் மேலும் ஹீமோதெரபி சிகிச்சைக்கான மருந்துகளும் அவசியமாக தேவைப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் இயங்குவதை உறுதி செய்ய முயல்கின்றோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ள அவர் நோய்களை கண்டுபிடித்து கண்காணிப்பதற்கான கதிரியக்க சேவைகளை ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காசா தனது மின்;சாரத்தின் ஒருபகுதியை இஸ்ரேலில் இருந்தே பெறுகின்றது இதன் காரணமாக காசாவிற்கான மின்சார விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஏனைய மின்சாரத்தை இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மூலம் இயக்கப்படும் மின்பிறப்பாக்கி மூலம் காசா பெறுவது வழமை.ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் முழுமையான முற்றுகையால் அந்த மி;ன்நிலையம் முற்றாக செயல் இழந்தது. இஸ்ரேல் அதன் பின்னர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் தாக்குதல் காரணமாக 3000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்-இதில் மூன்றில் ஒருவர் குழந்தைகள். எனினும் காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனை எந்தநேரத்திலும் செயல் இழக்கும் நிலையேற்பட்டுள்ளமை ஏவுகணைகளில் இருந்து வெளியாகும் குண்டுசிதறல்கள் மாத்திரம் காசா மக்களை அச்சுறுத்தவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. காசாவில் 9000க்கும் புற்றுநோயாளிகள் உள்ளனர் என முன்னர் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது. துருக்கி பாலஸ்தீன நட்புறவு வைத்தியசாலை எரிபொருளில் இயங்கும் ஒரேயொரு மின்பிறப்பாக்கியின் உதவியுடன் இயங்கிவந்தது.தற்போது மின்சாரம் இல்லாததால் அந்த மின்பிறப்பாக்கியை பயன்படுத்த முடியாத நிலை உருவாக கூடும் இதனால் அந்த மருத்துவமனை அடிப்படை சேவைகளை கூட வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். இதன் காரணமாக உரிய தருணத்தில் - தொடர்ச்சியாக சிகிச்சைகளை பெறவேண்டிய நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படும். தீவிர சிகிச்சை பிரிவு இயங்குவதற்கு அதிகளவு மின்சாரம் தேவை என தெரிவிக்கும் வைத்தியர் சுகேக் தெரிவிக்கின்றார்.ஒக்சிசன் இயந்திரங்கள் இயங்கவும் அவை தேவை என்கின்றார் சுகேக் சில நோயாளிகளிற்கான ஹீமோதெரபி சிகிச்சையை நிறுத்தவேண்டியுள்ளது ஆனால் நோய் உடலிற்குள் பரவுவதை தடுப்பதற்காக அவர்களிற்கு சிகிச்சை அவசியம் என்கின்றார் சுகேக். யுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாளில் சில நோயாளிகள் சிகிச்சைக்குவரவில்லை -மருத்துவமனைக்கு செல்வது மிகவும் ஆபத்தான விடயமாக மாறியதே இதற்கு காரணம். https://www.virakesari.lk/article/167245
  5. பாதுகாப்பு சபையில் காசா தொடர்பான முக்கிய தீர்மானம் -அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. 18 OCT, 2023 | 08:14 PM இஸ்ரேலிற்கும் காசாவிற்கும் இடையிலான மோதலில் மனிதாபிமான இடைநிறுத்தங்களை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/167215
  6. காஸாவில் ஐ.நா. நிவாரண முகாம் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு - தங்கிருந்த 4 ஆயிரம் பேர் என்ன ஆனார்கள்? பட மூலாதாரம்,REUTERS 17 அக்டோபர் 2023 காஸாவில் ஐ.நா. நிவாரண முகமையானது அகதிகள் முகாமாக பயன்படுத்திய பள்ளி மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது. அல்-மகாஸி என்ற இடத்தில் இருந்த அந்த பள்ளியில் 4 ஆயிரம் பாலத்தீனர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தததாக ஐ.நா. கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண முகமை தெரிவித்துள்ளது. "இது மூர்க்கத்தனமானது. இது பொதுமக்களின் உயிர் மீதான அப்பட்டமான அலட்சியத்தை காட்டுகிறது. காஸாவில் ஐ.நா. நிவாரண முகமையின் இடம் உள்பட எந்தவொரு இடமும் பொதுமக்களுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதை இது உணர்த்துகிறது." என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c25qe780xleo இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது. அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:- இஸ்ரேல் விமான தாக்குதல்களில் 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை. காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயற்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/277433
  7. சத்திர சிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை கூரை இடிந்துவிழத்தொடங்கியது - காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து மருத்துவர் Published By: RAJEEBAN 18 OCT, 2023 | 11:02 AM கார்டியன் காசா மருத்துவமனையில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்து சம்பவம் போன்ற ஒன்றில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2007 இல் ஹமாஸ் அமைப்பினர் காசா பள்ளத்தாக்கை கைப்பற்றிய பின்னர் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரே நாளில் மிக அதிகளவானவர்கள் கொல்லப்பட்ட சம்பவமாக இது விளங்குகின்றது. ஹமாசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காசா சுகாதார அமைச்சு 500பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. பப்டிஸ்ட் மருத்துவமனை என அழைக்கப்படும் அல் அஹ்லி அல் அராபியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானதாக்குதலை மேற்கொண்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்கு விஜயத்திற்கு முன்னதாக ஹமாஸ் இஸ்ரேலிற்கு இடையிலான 11 நாள் யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த இரத்தக்களறி இடம்பெற்றுள்ளது. இது மத்திய கிழக்கில் வன்முறைகளை கட்டுப்படுத்த முயலும் அமெரிக்காவின் முயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன என முதலில் தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் பின்னர் இஸ்லாமிய ஜிகாத்தின் ரொக்கட்தவறுதலாக வெடித்ததால் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. எனினும் அழிவின் அளவு அந்த அமைப்பின் ரொக்கட் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது என கருதமுடியாத அளவிற்கு காணப்படுகின்றது. அல்ஜசீரா வெளியிட்டுள்ள வீடியோக்கள் மருத்துவமனையின் பல மாடிக்கட்டிடங்கள் தீப்பற்றி எரிவதை காண்பித்துள்ளன. உடல்கள் பெருமளவு இரத்தம் பெருமளவு இடிபாடுகளை காணமுடிகின்றது. அங்கிலிகன் தேவாலயத்திற்கு சொந்தமான அந்த மருத்துவமனை முன்கூட்டிய எச்சரிக்கை இன்றியே தாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சனிக்கிழமையும் இந்த மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்த மருத்துமனை காலை 7.30 மணிக்கு தாக்கப்பட்டுள்ளது அவ்வேளை இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்த பெருமளவானவர்கள் அங்கு காணப்பட்டனர். மேலும் இஸ்ரேல் தங்கள் குடியிருப்புகள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் மருத்துவமனை பாதுகாப்பான இடம் என கருதி அங்கு தஞ்சமடைந்த பல பொதுமக்களும் காணப்பட்டனர். நாங்கள் மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம், பாரிய சத்தம் கேட்டது கூரை இடிந்து சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்த அறையின் மீது விழத்தொடங்கியது, இது படுகொலை என வைத்தியர் ஹசன் அபு சிட்டா தெரிவித்துள்ளார். மருத்துவமனை நோயாளிகள்சுகாதார பணியாளர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்கள் மீதான இந்த அதிர்ச்சி தரும் தாக்குதலை எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது எனகுறிப்பிட்டுள்ள அவர் மருத்துவமனை ஒரு இலக்கல்ல இந்த இரத்தக்களறி நிறுத்தப்படவேண்டும் போதும் போதும் என தெரிவித்துள்ளார். உயிரிழந்த 300க்கும் அதிகமானவர்கள் அம்புலன்ஸ் மற்றும் காரில் காசாவின் பிரதான வைத்தியசாலையான அல்ஸிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஏனைய காயங்களால் காயமடைந்த பெருமளவானவர்கள் காணப்படுகின்றனர். காயமடைந்த மக்கள் தரையில் காணப்படுகின்றனர் வலியில் கதறுகின்றனர். நாங்கள் ஐந்து கட்டில்களை ஒரு அறைக்குள் புகுத்துவதற்கு முயல்கின்றோம் எங்களிற்கு சாதனங்கள் கட்டில்கள் மருந்துகள் வேண்டும் எங்களிற்கு எல்லாம் வேண்டும் என அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சியாட் செகாடா தெரிவித்துள்ளார். அடுத்த சில மணிநேரங்களில் காசாவின் மருத்துவபிரிவு செயல் இழக்கும் என கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்பதால் இந்த தாக்குதல் மிக மோசமான விடயம் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடி பாதுகாப்பான இடம் என தாங்கள் கருதிய இடத்தில் தஞ்சமடைந்திருந்தனர் - மருத்துவனையில் சர்வதேச சட்டங்களின் கீழ் அது பாதுகாப்பான இடம் எனவும் அவர் அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167143
  8. இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: ஹமாஸ் படை அறிவிப்பு பாலஸ்தீனர்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, அடக்குமுறை செய்வதாக கூறி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் படையினர் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் கடல், வான், சாலை வழியாக ஊடுருவிய ஹமாஸ் படையினர் தீவிர தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டவர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா தெருக்களில் குண்டு மழை பொழிந்து பெரும்பாலான கட்டிடங்களை தரை மட்டமாக்கியது. காசா நகருக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டது. இதற்காக வடக்கு காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. இஸ்ரேல் இராணுவத்தினர் தரைவழி தாக்குதல் எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 இலட்சம் பாலஸ்தீனர்கள் கடந்த 4 நாட்களில் தெற்கு காசாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாசின் இராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் அபு ஒபேதே ஒரு தொலைக்காட்சியில் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இஸ்ரேலின் தெற்கில் கடந்த 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு 200 பேரை பிணை கைதிகளாக பிடித்துள்ளோம். பிற இடங்களில் 50 பேரை கைது செய்துள்ளோம் எங்கள் மக்களுக்கு எதிராக தரை வழித் தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் எங்களை பயமுறுத்தவில்லை. இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். குண்டு வீச்சை நிறுத்தினால்தான் வெளிநாட்டு பிணை கைதிகளை விடுவிப்போம். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து நாங்கள் பிடித்து வைத்த பிணை கைதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாறு ஹமாஸ் இராணுவ செய்தி தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/277353
  9. அடுத்த சில மணிநேரங்களில் முன்கூட்டிய தாக்குதல் - இஸ்ரேலிற்கு ஈரான் எச்சரிக்கை Published By: RAJEEBAN 17 OCT, 2023 | 12:42 PM காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும் எச்சரித்துள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹ_சைன் அமிரப்துல்லா ஹியன் இதனை தெரிவித்துள்ளார். காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் வரவிருக்கும் மணிநேரத்தில் எதிர்ப்பு முன்னணி முன்கூட்டிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார். ஹெஸ்புல்லா உட்பட பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சேர்ந்தே இந்த எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியுள்ளன. https://www.virakesari.lk/article/167070
  10. 17 OCT, 2023 | 04:56 PM இலங்கையில் 14 வயதுக்குட்பட்ட 10 சதவீதமான குழந்தைகள் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர கருத்து தெரிவிக்கையில், தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில் குழந்தை தொழுநோயாளிகளின் சதவீதம் குறைந்தது 4 சதவீதமாக இருத்தல் அவசியம். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் இலங்கையில் சுமார் ஆயிரத்து 155 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்நோய் தொற்றில் 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும், இதனால் தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலம் பாதிக்கப்படும். இலங்கையில் இதன் அதிகரிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/167108
  11. பாலத்தீன மக்களுக்கு முழு ஆதரவு - ஹமாஸ் தலைவரிடம் மலேசிய பிரதமர் வாக்குறுதி பட மூலாதாரம்,GETTY IMAGES 15 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் பாலத்தீன மக்களுக்கு அசைக்கமுடியாத ஆதரவை வழங்குவதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவிடம் கூறியதாக மலேசிய பிரதமர் இப்ராஹிம் அன்வர் தெரிவித்துள்ளார். ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இப்ராஹிம் கூறினார். "காஸாவின் மோசமான சூழ்நிலையில், குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்தவும், ரஃபாவில் ஒரு மனிதாபிமான வழித்தடத்தை நிறுவவும் நான் வலுவாக வாதிடுகிறேன்," என்று எக்ஸ் வலைத்தளத்தில் இப்ராஹிம் பதிவிட்டார். "இஸ்ரேல், தங்கள் ஆக்கிரமிப்பு அரசியலை கடைப்பிடிப்பதை கைவிடுவதும், ஹமாஸுடன் உடனடியாக போர்நிறுத்தம் செய்வதும், நடந்துகொண்டிருக்கும் மோதலுக்கு முடிவுகட்ட ஒரு அமைதியான உடன்பாட்டை உண்மையாக பின்பற்றுவதும் கட்டாயமாகும்." என்று அவர் கூறினார். "மனிதாபிமான உதவிகளை வழங்குவற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், குறிப்பாக உணவு மற்றும் மருந்து வடிவில் தேவைப்படுபவர்களின் துன்பத்தைப் போக்குவதற்கு முடிவு செய்திருக்கிறோம்" பணயக் கைதிகளின் முதல் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ் படக்குறிப்பு, வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார் தங்களிடம் பணயக் கைதியாக உள்ள ஒரு பெண்ணின் காணொளியை ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-காஸம் பிரிகேட்ஸ் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு ஹமாஸ் வெளியிட்ட முதல் பணயக்கைதி வீடியோ இதுவாகும். காஸாவில் 199 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வீடியோவில், ஒரு இளம் பெண் தனது பெயர் மாயா ஷெம் என்றும், தனக்கு 21 வயது என்றும், இஸ்ரேலில் உள்ள ஷோஹாம் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். இஸ்ரேலில் நடந்த ஒரு விருந்தில் ஹமாஸால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறி, தன்னை விடுவிக்குமாறு அவர் கெஞ்சும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதே பெண் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறும் காட்சியும் இதில் அடங்கும். ஹமாஸால் மாயா கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பிபிசி பொதுவாக பணயக் கைதிகள் வீடியோக்களை வெளியிடுவதில்லை. வீடியோவில் இருந்து படங்களை காட்டலாம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். ஹமாஸின் செயல்களை நியாயப்படுத்த முடியாது - ஜஸ்டின் ட்ரூடோ பட மூலாதாரம்,REUTERS காஸாவில் மனிதாபிமான பாதை திறக்கப்பட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார். காஸாவில் முடங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை கனடா ஆதரிக்கிறது, ஆனால் "போர்களுக்குக் கூட விதிகள் உண்டு" என்று அவர் மேலும் கூறினார். "பயங்கரவாதம் எப்போதும் பாதுகாக்க முடியாதது, ஹமாஸின் பயங்கரவாத செயல்களை எதுவும் நியாயப்படுத்த முடியாது. ஹமாஸ் பாலத்தீனிய மக்களையோ அல்லது அவர்களின் நியாயமான விருப்பங்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று நாடாளுமன்றத்தில் ட்ரூடோ கூறினார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர், மூன்று பேரைக் காணவில்லை. காசாவுடனான எல்லையைத் திறக்குமா எகிப்து? காசாவுடனான எல்லையைத் திறக்க எகிப்து திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் காசாவில் சண்டை நிறுத்தம் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கமும் சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பு ஏதும் தங்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளது. காசாவுடனான அதன் எல்லையில் உள்ள ரஃபா கடவையை திறக்குமாறு எகிப்து இராஜதந்திரிகள் மற்றும் உதவி நிறுவனங்களின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. எனினும் இந்தப் பாதை வழியாக அனைத்து பாலத்தீனர்களும் செல்ல முடியாது. இரட்டை குடியுரிமை கொண்ட பாலத்தீனியர்களையும் காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரையும் மட்டுமே அதிகாரிகள் வெளியேற அனுமதிப்பார்கள். சனிக்கிழமையன்று அமெரிக்க அரசு அதன் குடிமக்களுக்கு தெற்கே செல்லுமாறு அறிவுறுத்திய பின்னர், பல பாலத்தீனிய-அமெரிக்கர்கள் ஏற்கனவே இந்தப் பாதைக்கு அருகில் கூடிவிட்டனர். உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை இந்த எல்லைப் பாதை மீண்டும் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் காசாவை விட்டு வெளியேற உதவுவதற்காக, அந்த நாடும் இந்த எல்லையைத் திறப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆக்‌ஷன் எய்ட் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காசாவுக்கு மிகவும் தேவையான மனிதாபிமான உதவிகளுக்கு இந்த எல்லைப் பாதை திறக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. இதனால் ஏராளமானோர் ரஃபா எல்லை அருகே கூடியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தெற்கு காசாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகம் தெற்கு காஸாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுமக்களுக்காக பாதுகாப்பான பகுதியாக தெற்கு காஸா இருக்கக்கூடும் என்பதை இது குறிப்பதாக பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டவுசெட் கூறுகிறார். தெற்கு காஸாவில் இஸ்ரேலிய வான்வழி குண்டுவீச்சு தொடர்ந்தாலும், இந்த நடவடிக்கை மூலம் மொத்தமாக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக பகுதி பகுதியாக சென்று தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள இரான், இப்பிரச்னையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக் கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அமெரிக்கா மேலும் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தவே அமெரிக்கா இவ்வாறு செய்துள்ளது. மறுபுறம், இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கே இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதால் நிலைமையை மோசமாக்கியுள்ளது- பட மூலாதாரம்,REUTERS அரபு நாடுகளில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் முகாம் அரபு நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கெய்ரோ விமான நிலையத்தில் பேசும்போது, இந்த விவகாரத்தை பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக சமீபத்திய நாட்களில் ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என்று கூறிய அவர், அதே நேரத்தில் மோதல் பரவுவதை தடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க குடிமக்கள் உட்பட பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தூதரக பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். "இஸ்ரேலுக்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும், இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் உரிமை உள்ளது," என்று அவர் கூறினார். மனிதாபிமான முயற்சிக்கு தலைமை தாங்குவதற்காக துருக்கிக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக டேவிட் சாட்டர்ஃபீல்ட்டை நியமித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்தியதரைக் கடலுக்கு செல்லும் விமான தாங்கி கப்பல்களை தற்போதைய சூழலை கட்டுப்படுத்துவதற்கானதாக பார்க்க வேண்டுமே தவிர ஆத்திரமூட்டலாக பார்க்கக் கூடாது என்றும் கூறினார். பட மூலாதாரம்,MENAHEM KAHANA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக் கைதிகளை மீட்பதே" நோக்கம் என்றார். காஸாவில் வசிக்கும் மக்களை வாடி காஸாவின் வடக்குப் பகுதி முழுவதையும் காலி செய்துவிட்டு தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இதனால் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், இவ்வளவு பெரிய அளவில் இடம் பெயர்வது "மிகவும் தீவிரமான மனிதாபிமான ரீதியிலான பாதிப்புக்கு" வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து தொடங்கிய இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் இதுவரை 2,000 பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பூமியின் முகத்தில் இருந்து ஹமாஸை நிரந்தரமாக ஒழித்துவிடுவோம் என்றும் காசா இனி ஒருபோதும் மாறாது என்றும் இஸ்ரேலிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சனிக்கிழமையன்று இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் கொடூரமான தாக்குதலில் 1,300 பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸ் உறுப்பினர்கள் ஒருவரையும் விடாமல் அழிப்போம்," என்று கூறினார். இதற்காக ஹமாஸுக்கு எதிராக “ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்” என்ற பெயரில் இஸ்ரேல் ஒரு போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன், காஸாவில் இதுபோன்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் "ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்" பிரசாரம் நடைமுறையில் எவ்வளவு தொலைவுக்கு சாத்தியமானது? மக்கள் தொகை அதிகமுள்ள காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் இதை நடத்துவது எவ்வளவு சவாலானதாக இருக்கும்? இஸ்ரேலிய தளபதிகள் தங்கள் நோக்கங்களை அடைய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES காஸா பகுதியில் தரைப்படை நடவடிக்கைகள் என்பது நகரின் குறுகிய தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகத் தேடுதல் மற்றும் சண்டையிடுதல் என்பதாகும். இதன் காரணமாக பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கும். இதுவரை இஸ்ரேல் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணயக் கைதிகளை மீட்பது ஏன் சவாலானது? சனிக்கிழமை நடந்த தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக் குழுவினால் பிடித்துச் செல்லப்பட்ட 150 பணயக் கைதிகளை மீட்பது ராணுவத்தின் மற்றொரு முக்கியமான பொறுப்பாக உள்ளது. அவர்கள் காஸாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஹரேசி ஹலேவி, ஹமாஸை வேரறுப்பதாக சபதம் செய்து அதன் அரசியல் தலைவரை குறிவைத்து காஸாவில் தாக்குதல் நடத்தினார். ஆனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகளாக ஹமாஸின் ஆட்சிக்கு சாட்சியாக இருந்த காஸா முற்றிலும் மாறும் என்று நம்பப்படுகிறது. இஸ்ரேலிய ராணுவ வானொலியுடன் தொடர்புடைய ராணுவ ஆய்வாளர் அமீர் பார் ஷாலோம் பேசியபோது, "இஸ்ரேல் ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களையும் அழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அதன் பின்னணியில் உள்ள சிந்தனை, மதரீதியாக ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய தாக்குதல் நிச்சயமாக இந்த அமைப்பை மிகவும் பலவீனப்படுத்தும். எப்பேற்பட்ட பணியையும் மேற்கொள்ளும் அதன் திறன் அழிக்கப்படும்," என்றார். இந்த நோக்கம் மிகவும் எதார்த்தமானது. இதுவரை, இஸ்ரேல் ஹமாஸுடன் நான்கு போர்களை நடத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஹமாஸை முற்றிலுமாக ஒடுக்குவதற்கான அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன. இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ், இந்தப் போரின் முடிவில் ஹமாஸிடம் "இஸ்ரேலிய குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்குப்" போதுமான ராணுவ பலம் இருக்காது என்று கூறியுள்ளார். தரைவழித் தாக்குதல் ஆபத்தானது காஸாவில் இஸ்ரேலின் "ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்" என்ற முழக்கம் வெற்றியடைவது பல காரணிகளைச் சார்ந்தது. இஸ்ரேல் தாக்கக்கூடும் என்பதை ஹமாஸ் அறிந்திருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் அதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்க வேண்டும். ஹமாஸ் பல்வேறு இடங்களில் வெடிமருந்துகளைப் புதைத்திருக்க வேண்டும், மேலும் எங்கு போரிடுவது என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும். அந்த அமைப்பு இஸ்ரேலிய ராணுவத்தைத் தாக்குவதற்கு காஸாவில் உள்ள தனது நிலத்தடி சுரங்க வலையமைப்பை முழுமையாகப் பயன்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2014ஆம் ஆண்டு காஸா நகரின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராணுவ டாங்கிகளை எதிர்க்கும் வகையில் கண்ணிவெடிகள், துப்பாக்கி சுடும் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஹமாஸுடன் நடந்த போர்களில் இஸ்ரேலின் காலாட்படை பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 11 லட்சம் பாலத்தீன குடிமக்களை 24 மணிநேரத்திற்குள் அப்பகுதியைக் காலி செய்து, தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் கூறியதற்கு இதுவொரு பெரிய காரணம். இந்தப் போர் பல மாதங்களுக்குத் தொடரலாம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதற்காக 3 லட்சத்து 60 ஆயிரம் ரிசர்வ் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், பின்வாங்குவதற்கான சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இஸ்ரேலால் எவ்வளவு காலம் தனது போரைத் தொடர முடியும் என்பதுதான் கேள்வி. அகதிகள் விவகாரங்களைக் கையாளும் ஐ.நா. அமைப்பு, காஸா "நரகத்தின் கிணறாக" மாறி வருவதாகக் கூறியுள்ளது. அங்கு இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடிநீர், மின்சாரம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது காஸாவின் கிட்டத்தட்ட பாதி மக்களை அந்தப் பகுதியை காலி செய்யும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை விவகாரங்களை உள்ளடக்கிய பிரபல இஸ்ரேலிய பத்திரிகையாளரான யோஸ்ஸி மெல்மான் பேசியபோது, "இஸ்ரேலிய ராணுவமும் அரசாங்கமும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை, குறைந்தபட்சம் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கருதுகின்றன. இப்போது அவர்களின் கொள்கை இதுதான். நம்மிடம் போதுமான நேரம் இருப்பதால் ஒன்றாக இணைவோம் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது," என்றார். எது எப்படி என்றாலும், மக்கள் பசியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் இஸ்ரேலின் நட்பு நாடுகளும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலை ஏற்படும் என்று அவர் நம்புகிறார். பட மூலாதாரம்,SAID KHATIB/AFP படக்குறிப்பு, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாகப் பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். பணயக் கைதிகளை மீட்பது கடினமான பணி சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் பணயக் கைதிகளாகப் பிடித்த 150 பேரில் இஸ்ரேலிய குடிமக்கள் மட்டும் இல்லை, ஏராளமான வெளிநாட்டு குடிமக்களும் உள்ளனர். இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் பலர் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பல நாடுகளின் அரசுகள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன், "பிரான்ஸ் தனது குடிமக்களை பாதுகாப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை," என்று நாட்டில் வசிக்கும் பிரெஞ்சு-இஸ்ரேலிய குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார். ஹமாஸுடன் பணயக் கைதிகள் இருப்பது இஸ்ரேலின் முழு நடவடிக்கையிலும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனுடன், இஸ்ரேலுக்குள் கூட இது தொடர்பாக அரசாங்கத்தின் மீது நிறைய அழுத்தங்கள் உள்ளன. அமீர் பார் ஷாலோம் தற்போதைய சூழ்நிலையை 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்பட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடுகிறார். 1972இல், பாலத்தீன துப்பாக்கி ஏந்திய குழுவினர் இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்து 11 பேரைக் கொன்றனர். அந்த நேரத்தில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிக் கொல்லும் நடவடிக்கையை அரசு தொடங்கியிருந்தது. இம்முறையும் அரசாங்கம் இதேபோன்ற ஒன்றைச் செய்ய விரும்புவதாக அவர் நம்புகிறார். இஸ்ரேலிய குடிமக்களைக் கடத்திய ஹமாஸை கண்டுபிடிக்க அரசு விரும்புகிறது. பட மூலாதாரம்,ATEF SAFADI/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள ஹமாஸ் ஆயத்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. காஸாவின் வெவ்வேறு இடங்களில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது இஸ்ரேலின் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சயரெட் மட்கல் படையினருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பணயக் கைதிகளைக் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் ஏற்கெனவே மிரட்டியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஹமாஸின் பிடியிலிருந்து கிலாட் ஷாலித் என்ற வீரரை விடுவிக்க இஸ்ரேல் ஆயிரம் பாலத்தீன கைதிகளை விடுவித்தது. ஹமாஸ் ஐந்து ஆண்டுகளாக கிலாட்டை பணயக் கைதிகளாக வைத்திருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டும். 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனர்களில் யாஹ்யா சின்வார் ஒருவர். சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகியிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியாது. மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளும் இந்தப் போரைக் கண்காணித்து வருகின்றன இஸ்ரேல் மேற்கொள்ளும் தரைவழித் தாக்குதலின் வெற்றி, அதன் அண்டை நாடுகள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். இஸ்ரேல் அரசு எகிப்தில் இருந்து முக்கியப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். எகிப்தின் வடக்கு எல்லை காஸாவின் தெற்குப் பகுதியை ஒட்டியுள்ளது. காஸாவிற்குள் இருக்கும் மக்களுக்கு ரஃபா எல்லைக் கடப்பு வழியாக உதவி வழங்க எகிப்து காஸா மீது அழுத்தம் கொடுக்க முடியும். இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் ஒஃபிர் விண்டர் இது குறித்துப் பேசியபோது, "இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை முன்னேறினால், காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது ஏராளமான மக்கள் எகிப்து நாட்டுக்கு அகதிகளாகச் செல்லக்கூடும். அதனால், போரிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். பட மூலாதாரம்,AHMED ZAKOT/SOPA IMAGES/LIGHTROCKET படக்குறிப்பு, கடந்த 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனரான யாஹ்யா சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். காஸாவிலிருந்து வெளியேறும் ஏராளமான மக்களுக்கு இடமளிக்க எகிப்து தனது எல்லைகளைத் திறக்க வேண்டும் என்று ஒஃபிர் விண்டர் கூறுகிறார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் தரப்பில் இருந்து அழுத்தம் அதிகரிக்கலாம். லெபனானை ஒட்டியுள்ள இஸ்ரேலின் வடக்கு எல்லையின் மீதும் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கிறது. லெபனானில் இருக்கும் ஆயுதமேந்திய தாக்குதல் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் இந்தப் பகுதி இஸ்ரேலுக்கு புதிய போர்க்களமாக மாறவில்லை. ஹிஸ்புல்லாவின் பிரதான ஆதரவாளரான இரான் ஏற்கெனவே இஸ்ரேலுக்கு எதிராக ஒரு "கூட்டணியைத்" தொடங்குவதாக அச்சுறுத்தியுள்ளது. தற்போதைய பதற்றத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, அவர் இரான் மற்றும் ஹிஸ்புல்லாவை பற்றித் தான் குறிப்பிட்டார். "எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் மற்றும் எந்தவொரு நபரும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தால், அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது - அதைச் செய்யாதீர்கள்" என்று ஜோ பைடன் கூறியிருந்தார். தனது செய்தியின் தீவிரத்தைக் காட்ட, அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA படக்குறிப்பு, தாக்குதல் தீவிரமடைந்தால் பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறும் ஆபத்து நிலவுகிறது. காஸாவுக்கான இஸ்ரேலின் இறுதி நடவடிக்கை என்ன? இந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் ஹமாஸை இஸ்ரேல் முழுமையாக பலவீனப்படுத்தினாலும், காஸாவில் அதன் இடத்தைப் பிடிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. இஸ்ரேல் 2005இல், தனது ராணுவத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை காஸாவில் குடியேற்றியது. மீண்டும் ஒருமுறை இந்தப் பகுதியில் குடியேற்றத்தை ஏற்படுத்தி தன்னை ஆக்கிரமிப்பாளராகக் காட்ட விரும்பாது. கடந்த 2007ஆம் ஆண்டு அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பாலத்தீன அதிகார அமைப்பு, மீண்டும் காஸா பகுதிக்குள் உருவாகும் சாத்தியம் இருப்பதாக ஒஃபில் விண்டர் நம்புகிறார். பாலத்தீன அதிகார அமைப்பு ஒரு கிளர்ச்சி அமைப்பு அல்ல. தற்போது மேற்குக் கரைப் பகுதியை அந்த அமைப்புதான் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பு மீண்டும் அதிகார பலம் பெறுவதை எகிப்து அரசும் வரவேற்கும் என அவர் நம்புகிறார். இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட காஸா உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது சவால் நிறைந்த ஒரு பணியாகவே இருக்கும். ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பே, இஸ்ரேல் அரசு காஸாவிற்கு "இரட்டை உபயோகப் பொருட்கள்" செல்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இவை ராணுவம், பொதுமக்கள் என இருதரப்பும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாகும். இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இஸ்ரேல் விரும்புகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, இஸ்ரேல்-காஸா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் இருந்து குடியிருப்புப் பகுதிகள் பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புகிறது. இதற்கு முன்பும் இஸ்ரேலில் இதுபோன்ற அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட்டின் முன்னாள் தலைவரான யோரம் கோஹென், தற்போதைய பாதுகாப்பு மண்டலத்தை குறைந்தது இரண்டு கிலோமீட்டர் (1.25 மைல்கள்) தொலைவுக்கு "கண்டவுடன் கூடும்" பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று நம்புகிறார். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலின் விளைவு எதுவாக இருந்தாலும், அதன் மூலம் இஸ்ரேல் தனது மூல நோக்கத்தை அடைய விரும்புகிறது. எதிர்காலத்தில் தன் மீது இதுபோன்ற தாக்குதல் நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவே இஸ்ரேல் விரும்புகிறது. https://www.bbc.com/tamil/articles/c25qe780xleo
  12. 2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் விரைந்தது இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படையின்யு.எஸ்.எஸ். ஐசனோவர் போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்து செல்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்புக்காக 2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த சூழலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். சில வீரர்கள் காயமடைந்தனர். வடக்கு எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் கூறும்போது, “வடக்கு காசாபகுதியில் பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்துதாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மிகப்பெரும் சவாலை சந்திக்க நேரிடும். நாங்கள் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படை சார்பில் யுஎஸ்எஸ் போர்டு போர்க்கப்பல் ஏற்கெனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது. தற்போது ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஐசனோவர் போர்க்கப்பலும் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது. https://thinakkural.lk/article/277229
  13. பற்றி எரியும் காசா! உக்கிரமடையும் இஸ்ரேலின் இராணுவ வியூகங்கள் முதலாவதாகவே ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அதிர்ச்சிகரமான தாக்குதலை கொடுத்துவிட்டார்கள். அந்த தாக்குதலில் இரண்டு நிலைமைகள் தீவிரமானது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார். இதனால் இஸ்ரேலின் பாதுகாப்பு வலயம் உடைந்தது என்றும் அவர் கூறினார்.
  14. தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி விசாரணைகளின் போது தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் அவரது சடலத்தை அடக்கம் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நிபுணர் மருத்துவக் குழு தகனம் செய்வது பொருத்தமற்றது என முன்வைத்த பரிந்துரைகளை ஆராய்ந்த மாஜிஸ்திரேட் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். https://thinakkural.lk/article/277180
  15. தென்காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை - இஸ்ரேல் 16 OCT, 2023 | 12:34 PM தென்காசாவில் யுத்த நிறுத்தம் என வெளியாகியுள்ள செய்திகளை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. ரபா எல்லை திறப்புடன் தென்காசாவில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படலாம் என எகிப்திய வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்திருந்தன. எனினும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் இதனை நிராகரித்துள்ளது. வெளிநாட்டவர்களை வெளியே கொண்டுவருவதற்காக யுத்தநிறுத்தமோ மனிதாபிமான உதவியோ இல்லை என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166972
  16. தென்காசாவில் யுத்தநிறுத்தம்- அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து இணக்கம் 16 OCT, 2023 | 11:50 AM அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து ஆகிய நாடுகள் தென்காசாவில் யுத்தநிறுத்தமொன்றிற்கு இணங்கியுள்ளன. எகிப்திய வட்டாரங்கள் இதனை ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன. எகிப்திய இஸ்ரேல் எல்லையில் உள்ள ரபா எல்லை பாதையை திறக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/166960
  17. காசா: பூமிக்கடியில் 500 கி.மீ. நீள சுரங்கப்பாதை நெட்வொர்க் - இஸ்ரேலால் முற்றிலும் அழிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 13 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி சுரங்கப்பாதைகளின் நெட்வொர்க் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர். மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி. ஒன்று தரைக்கு மேல் பொது மக்களுக்கானது, மற்றொன்று நிலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது என்றார். 500 கி.மீ. நீள சுரங்கப்பாதை நெட்வொர்க் அவர் மேலும் கூறுகையில், "இந்த சுரங்கப்பாதைகள் இவை காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்," என்று கூறினார். இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதை நெட்வொர்க் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசா பகுதியில் இருக்கும் இந்த சுரங்க கட்டமைப்புகள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்க அறைகள் எப்போது கட்டப்பட்டன? எதற்குப் பயன்பட்டன? கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு காசாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தைத் தொடங்கியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இந்த சுரங்க அறைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் இஸ்ரேலும் எகிப்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதன் வழியாகச் சென்று வருவதையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்தின. இந்த சுரங்கங்களின் செயல்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 2,500 சுரங்க கட்டமைப்புகள் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களால், வணிகப் பொருட்கள், எரிபொருள், மற்றும் ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2010ஆம் ஆண்டில் இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட அனுமதித்த பிறகு, கடத்தலுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீரைச் செலுத்தியும் அவற்றைத் தகர்த்தும் எகிப்து கடத்தலைக் கட்டுப்படுத்தியது. தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் சுரங்க கட்டமைப்புகள் இதைத்தொடர்ந்து, ஹமாஸும் பிற குழுக்களும் இஸ்ரேலிய படைகளைத் தாக்குவதற்காக இந்த சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கின. ஆயுதமேந்தியப் போராளிகள் 2006ஆம் ஆண்டில், இஸ்ரேலுடனான எல்லைக்கு அடியில் இருந்த ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்தி இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். மேலும் மற்றொரு வீரரைக் கைப்பற்றி, அவரை ஐந்து ஆண்டுள் சிறைபிடித்து வைத்திருந்தனர். மேலும், 2013ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் விசித்திரமான ஒலிகள் கேட்டதையடுத்து, அதைச் சோதித்த இஸ்ரேலிய பாதுகாப்புக் குழுவினர், அங்கு 1.6 கி.மீ. நீளமும், 18 மீட்டர் ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அது கான்கிரீட் கூரை மற்றும் கான்கிரீட் சுவர்களைக் கொண்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, காசாவின்மீது ஒரு பெரிய வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்த, இத்தகைய ‘பயங்கர சுரங்கங்களின்’ மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதைக் காரணமாகச் சொன்னது இஸ்ரேல். போரின்போது 30க்கும் மேற்பட்ட சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் ஒரு போராளிக் குழுவும் ஒரு சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க கட்டமைப்புகள் எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்காலிகமானவை. அவை அவ்வப்போது இஸ்ரேலின் பகுதிகளைக் கைப்பற்றவே கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், "காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன," என்கிறார் இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக். “ஹமாஸின் தலைவர்கள் இந்த சுரங்கங்களில் பதுங்கியுள்ளனர். அங்கு அவர்கள் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவியுள்ளனர். அங்கு மின்சாரம், மின்விளக்குகள், மற்றும் தண்டவாளங்கள் உள்ளன. அதற்குள் வசதியாக நிற்கவும் நகரவும் முடியும்,” என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், சிரியாவின் போராளிக் குழுக்கள், மற்றும் ஐ.எஸ் குழுவினர் ஆகியோரின் முறைகளைப் பார்த்து தங்கள் சுரங்கக் கட்டுமான உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார். இந்த சுரங்கங்கள் எப்படி கட்டப்பட்டன? காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன. காசாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்தச் சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் எல்லை தாண்டிய சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலின் கஃபார் ஆசா பகுதிக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையின் வெளியேறும் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது உறுதி செய்யப்பட்டால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் நிறுவி முடித்த, சுரங்கப்பாதைகளைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள் பதிக்கப்பட்ட நிலத்தடி கான்கிரீட் தடுப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும். இது உறுதிசெய்யப்பட்டால், பேரதிர்ச்சியாக இருக்கும் என்று ரீஷ்மண்ட்-பராக் கூறுகிறார். எந்த சுரங்கப்பாதை கண்டறியும் அமைப்பும் முழுமையானது அல்ல என்று அவர் கூறிகிறார். "அதனால்தான் சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார் அவர். இந்த சுரங்கங்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா? மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார். “சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர். இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் குழு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும், பணயக் கைதிகளை சுரங்கப் பாதைகளுக்குள் அனுப்பி வைக்கும் என்கிறார் அவர். கடந்த 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவில் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த சுரங்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை? மேலும், இந்தச் சுரங்கங்களுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், மொத்த சுரங்கப்பாதை நெட்வொர்க்கிலும் வெடிகளை வைக்கலாம், என்கிறார் அவர். “அவற்றில் இஸ்ரேலிய ராணுவத்தினரை நுழையவிட்ட பிறகு அதை வெடிக்க வைக்கலாம்.” இல்லையேல், ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்து இஸ்ரேலியப் படையினரைச் சிறைபிடிக்கலாம் அல்லது இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போகலாம், என்கிறார். சுரங்கத்துக்குள் செல்லாமல், கண்ணுக்குத் தெரியாத அவற்றை தரைக்கு மேலிருந்துச் சுற்றி வளைப்பதும் சிக்கலானது என்கிறார் அவர். ஆனால், இஸ்ரேல் ராணுவம் வேறு வகையான உத்திகளைப் பின்பற்றலாம், என்கிறார் சூஃபான் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் இயக்குநரான காலின் க்ளார்க். உதாரணத்திற்கு டிரோன்கள் அல்லது ஆளில்லா வாகனங்களை அனுப்பி இந்தச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களையும், அங்கிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம், என்கிறார் அவர். பூமியைத் துளைத்துச் சென்று பங்கர் சுரங்கங்களைத் தாக்கும் குண்டுகளையும் இஸ்ரேல் பயன்படுத்தாலாம். ஆனால் அவை கட்டுமானங்கள் நிறைந்த காசா பகுதியில் பெருமளவில் சேதத்தை விளைவிக்கும். https://www.bbc.com/tamil/articles/cn3927d12lmo
  18. போரில் அடுத்த டுவிஸ்ட்! இனி தான் அதிர்ச்சி காத்திருக்கிறது _Fr ஜெகத் கஸ்பார் பேட்டி
  19. காசா மோதல் தொடர்ந்தால் தலையிடவேண்டியிருக்கும் ஈரான் இஸ்ரேலிற்கு கடும் எச்சரிக்கை Published By: RAJEEBAN 15 OCT, 2023 | 04:06 PM இஸ்ரேல் காசாவில் தரைநடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஈரான் ஐநா ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் மோதல் மேலும் விரிவடைவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள ஈரான் காசாவில் மோதல்கள் தொடர்ந்தால் தலையிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளது. இராஜதந்திர வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. ஈரான் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அது பிராந்திய மோதலாக வெடிக்கும் ஆபத்துள்ளது. ஈரான் நேரடியாக இதில் தலையிடலாம் அல்லது சிரியாவில் ஆயுதகுழு ஊடாகவோ அல்லது ஹெஸ்புல்லா அமைப்பை ஆதரிப்பதன் மூலமோ தலையிடலாம். ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ் இஸ்ரேல் மோதலில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது -இந்த நோக்கத்துடன் வளைகுடாவிற்கு கப்பல்களையும் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பிவருகின்றது. https://www.virakesari.lk/article/166916
  20. ஹமாஸூக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்தது எப்படி? இஸ்ரேல் போரால் புதினுக்கு என்ன லாபம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, பிபிசி ரஷ்யா 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மறைவான மலைப்பிரதேசத்தில் மாபெரும் அதிகார பீடத்தில் அமர்ந்து உலகைக் குழப்ப முயலும் ஜேம்ஸ் பாண்ட் பாணி வில்லனாக விளாடிமிர் புதினைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அவர் ஒரு பொத்தானை அழுத்தினால் பால்கன் பகுதியில் பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுகிறது. மற்றொரு பொத்தானை அவர் அழுத்துகிறார், மத்திய கிழக்குப் பகுதியில் போர் வெடிக்கிறது. இது கவர்ச்சியானது. ஆனால் தவறானதும் கூட. இது கிரெம்ளின் மாளிகையில் இருக்கும் தலைவரின் உலகளாவிய செல்வாக்கை மிகைப்படுத்துகிறது. ஆம். ஹமாஸ் அமைப்புடன் ரஷ்யா தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது என்பதுடன் இரானின் நெருங்கிய நட்பு நாடாகவும் மாறியுள்ளது. அமெரிக்காவின் கூற்றுப்படி, மாஸ்கோவும் டெஹ்ரானும் இப்போது முழு அளவிலான பாதுகாப்பு கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. ஆனால், மாஸ்கோவிற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் நேரடித் தொடர்பு இருந்ததாகவோ அல்லது அதுபற்றி முன்கூட்டியே அறிந்திருந்ததாகவோ பொருள் கொள்ளக்கூடாது. "ரஷ்யா எந்த வகையிலும் இந்தப் போரில் ஈடுபட்டதாக நாங்கள் நம்பவில்லை," என்று மாஸ்கோவிற்கான இஸ்ரேல் தூதர் அலெக்சாண்டர் பென் ஸ்வி, இந்த வாரம் கொம்மர்சன்ட் செய்தித்தாளிடம் கூறினார். இஸ்ரேலில் ஹமாஸ் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற வாதம் "முழுமையான முட்டாள்த்தனம்" என்று கூறினார். பெர்லினில் உள்ள ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுத பரவல் தடுப்பு கல்வி மையத்தைச் சேர்ந்த சக நாட்டவரும், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு பகுதி குறித்த அரசியல் நிபுணருமான ஹன்னா நோட் கூறுகையில், "ஹமாஸுக்கு ரஷ்ய ஆயுதங்கள் நேரடியாக வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை,” என்றார். “ரஷ்யாவுக்கு ஹமாஸுடன் நீண்ட கால உறவு இருப்பது உண்மைதான். ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா ஒருபோதும் அறிவிக்கவில்லை. ஹமாஸ் பிரதிநிதிகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தனர். "ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரான் உதவியுடன் எகிப்தின் சினாய் வழியாக காசா பகுதிக்குள் நுழைந்தன என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், ஹமாஸ் அமைப்புக்கு ரஷ்யாவின் விரிவான ராணுவ ஆதரவு உள்ளது என்று நான் யூகிக்கமுடியாது," என்றார் அவர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனாதிபதி புதின் "மத்திய கிழக்கு போர்" என்று குறிக்கப்பட்ட பொத்தானை அழுத்தவில்லை. ஆனால் அவர் இந்த சண்டையைப் பயன்படுத்திக் கொள்ள தயாரா? நிச்சயமாக. எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அடுத்த வாரம் கத்தார் செல்லும் ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மிகைல் போக்டனோல், ஹமாஸ் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் போரால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்? மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போரின் எழுச்சி சர்வதேச அளவில் மாபெரும் செய்தியாக உருவெடுத்துள்ள நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் குறித்த செய்திகளில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்ப இஸ்ரேல் தொடர்பான நிகழ்வுகளை ரஷ்யா நம்பியுள்ளது. ஆனால் ரஷ்யா தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என்பதை விட கொஞ்சம் அதிகமாகவே ரஷ்யா இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் போரின் விளைவாக, யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் அளிக்கும் ஆயுதங்களில் கணிசமான அளவு இஸ்ரேலை நோக்கித் திரும்பும் என்பதே ரஷ்யாவின் பெரும் நம்பிக்கையாக உள்ளது. "இந்த நெருக்கடி யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவும் வேகத்தை நேரடியாக பாதிக்கும் என்று நம்புகிறேன்" என்று ரஷ்ய தூதர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் கிரெம்ளின் சார்பு இஸ்வெஸ்டியா செய்தித்தாளிடம் கூறினார். "யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குபவர்கள் இஸ்ரேலில் நடக்கும் போர் காரணமாக திசை திரும்பும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மேற்குலக நாடுகள் யுக்ரேனியர்களை கைவிட்டுவிடும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் ராணுவ உதவியின் அளவு குறையும். இது ரஷ்யாவுக்குச் சாதகமாக மாறக்கூடும்." ரஷ்யா விரும்பும் நிலை ஏற்படுமா? நிச்சயமாக ஏற்படும். நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேசுகையில், "நாங்கள் யுக்ரேனுக்கு ஆதரவாக நிற்பது போல், இஸ்ரேலுக்கும் ஆதரவாக நிற்க முடியும்,” என்றார். ஆனால் மத்திய கிழக்கில் ஒரு நீடித்த மோதல் இரண்டு தனித்தனியான போர்களில் ஒரே நேரத்தில் இரண்டு நட்பு நாடுகளை ஆதரிக்கும் அமெரிக்காவின் திறனை சோதிக்கும் விதத்திலேயே இருக்கும். ரஷ்யா தன்னை ஒரு சமாதான நாடாக தன்னை வடிவமைத்துக் கொள்வதன் மூலம் மத்திய கிழக்கில் தனது பங்கை அதிகரிக்க முயற்சிக்கிறது. இந்த பிராந்தியத்தில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கடந்தகால சர்வதேச முயற்சிகளில் இணைவதற்கு முன்னர் அது அதே மாதிரியான ஒரு நிலையை எடுத்திருந்தது. "போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஒரு பங்கை வகிக்க முடியும்" என்று அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். "நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்புகொண்டு வருகிறோம்." இந்த வாரம் மாஸ்கோவிற்கு வந்திருந்த இராக் பிரதமர், மத்திய கிழக்கில் "உண்மையான போர் நிறுத்தத்திற்கான முன்முயற்சியை" அறிவிக்குமாறு அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்தார். சமாதானம் செய்யும் நாடாக ரஷ்யா மாறுமா? அது கடினமான ஒரு விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டை நாடு மீது முழு அளவில் தாக்குதலை நடத்திவரும் நாடு இது. ஏறக்குறைய 20 மாதங்களுக்குப் பிறகு, யுக்ரேனில் ரஷ்யாவின் போர் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அளவில் மரணத்தையும் அழிவையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உங்களால் முடியும் என்று கூறுவதால் மட்டுமே, மோதலில் ஈடுபடுபவர்கள் உங்களை ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதமும் கிடைத்துவிடாது. மாஸ்கோ நீண்ட காலமாக மத்திய கிழக்கு பிராந்தியம் குறித்த ஒரு ஆர்வத்தை வைத்துக்கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் அமெரிக்காவுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியதால் சோவியத் யூனியன் அரபு சார்பு நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. சோவியத் யூனியனின் முடிவுக்குப் பிறகு, முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரேலுக்கு வந்ததன் காரணமாக, இஸ்ரேலுடனான ரஷ்யாவின் உறவுகள் மேம்பட்டன. ஆனால் அண்மைக்காலமாக விளாடிமிர் புதினின் ரஷ்யா, இஸ்ரேலின் எதிரிகளுடன், குறிப்பாக இரானுடன் நெருக்கமாகி விட்டது. இது ரஷ்ய-இஸ்ரேல் உறவுகளில் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் தான் மத்தியஸ்தம் செய்யமுடியும் என ரஷ்யா கூறுகிறது. அமெரிக்காவைக் கண்டிக்கும் ரஷ்யா அமெரிக்காவைக் குற்றம் சாட்டி ஏற்கனவே ரஷ்யா நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதைப் போலவே இங்கேயும் ஏதாவது செய்ய முடியுமா என்ற வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர், விளாடிமிர் புதினின் மையச் செய்தி என்னவென்றால், "மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கொள்கையின் தோல்விக்கு இது ஒரு எடுத்துக்காட்டு," என்பதே ஆகும். "அமெரிக்காவின் மேலாதிக்கம்" என்று எப்போதும் குறைகூறும் ரஷ்யாவின் பொதுவான வாதத்துக்கு இது நன்றாகப் பொருந்துகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்காவை மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பது, அமெரிக்காவின் செலவில் அப்பகுதியில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போருக்கும் அமெரிக்கா தான் காரணம் என அந்நாட்டை ஒரு மையக் குற்றவாளியாகக் கட்டமைப்பதில் ரஷ்யாவிற்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றி இதுவரை நான் பேசினேன். ஆனால் அங்கே ஆபத்துகளும் உள்ளன. "கவனமாக அளவிடப்பட்ட உறுதியற்ற தன்மைதான் ரஷ்யாவிற்குச் சிறப்பாகச் சேவை செய்கிறது" என்று ஹன்னா நோட் நம்புகிறார். "இந்த நெருக்கடி யுக்ரேனில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பினால் - அமெரிக்க உள்நாட்டு அரசியல் சூழலில் இஸ்ரேலின் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை, அதற்கு உண்மையான ஆபத்து உள்ளது - ஆம், ரஷ்யா ஒரு குறுகிய கால பயனாளியாக இருக்கலாம்." ஆனால் ஹமாஸுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்கும் இரான் உட்பட பரந்த பிராந்தியத்தை ஈர்க்கும் போரினால் ரஷ்யா பயனடையாது என்று நோட் கூறுகிறார். "இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஒரு முழுமையான போரை ரஷ்யா விரும்பவில்லை. விஷயங்கள் அதை நோக்கி நகர்ந்து, அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டால், ரஷ்யா இரானின் பக்கம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால், அதை ரஷ்யா விரும்புகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.” "இஸ்ரேலுடனான தனது உறவுகளை புதின் இன்னும் மதிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ரஷ்ய ராஜதந்திரம், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இடத்துக்குச் செல்ல விரும்புகிறது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த மோதல் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அழுத்தத்தை அவர்கள் உணரக்கூடும்." https://www.bbc.com/tamil/articles/c2l3p11jkd0o
  21. ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்த செய்தி- மன்னிப்பு கோரினார் சிஎன்என் செய்தியாளர் Published By: RAJEEBAN 15 OCT, 2023 | 11:14 AM ஹமாஸ் அமைப்பினர் குழந்தைகளின் தலையை துண்டித்தது குறித்த தனது செய்திக்காக சிஎன்னின் பிரபல செய்தியாளர் சரா சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார். ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்தது என இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தமைக்காகவே சிட்னெர் மன்னிப்பு கோரியுள்ளார். அவ்வாறான உணர்வுபூர்வமான மனதை வருத்தக்கூடிய செய்திகளை வெளியிடும்போது நிதானமும் எச்சரிக்கையும் துல்லியமும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் தன்னுடைய முன்னைய செய்தியில் தான் பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். நாங்கள் நேரலையில் இருந்தவேளை ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை துண்டித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது அதனை உறுதிப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். நான் எனது வார்த்தைகளில் மேலும் அவதானமாகஇருக்கவேண்டும் மன்னியுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166887
  22. கடத்தப்பட்ட இஸ்ரேலிய சிறுவர்கள் : ஹமாஸ் வெளியிட்ட காணொளி கடந்த சனிக்கிழமையன்று தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளைக் காட்டுவது போல் தோன்றும் புதிய காணொளி காட்சிகளை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஹமாஸ் டெலிகிராம் சனலில் வெளியிடப்பட்ட காணொளியில், “ஹமாஸ் போராளிகள், ஒப்பரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் முதல் நாளில் கிப்புட்ஸ் ‘ஹோலெட்’ சண்டைகளுக்கு மத்தியில் குழந்தைகளிடம் கருணை காட்டுகிறார்கள்” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. காணொளியில் உள்ள குழந்தைகளின் கிப்புட்ஸ் ஹோலிட் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில், பதின்மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். காணொளியில் உள்ள குழந்தைகளின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாததால், அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது கொல்லப்பட்டவர்களில் அவர்களின் பெற்றோரும் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்திய ஹமாஸ் காணொளியின் காட்சிகள் இஸ்ரேலிய குழந்தைகளை ஹமாஸ் மீண்டும் காஸாவிற்கு அழைத்துச் சென்றதைக் காட்டுவதாகத் தோன்றுவதாக ஹீப்ரு ஊடக ஆதாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. ஹமாஸ் உறுப்பினர்களின் இரக்கம் முதலாவதாக, ஹமாஸின் உறுப்பினர் ஒரு சிறு குழந்தையின் காலில் ஒரு கட்டு கட்டுவது போல் தோன்றுகிறது. அடுத்தடுத்த காட்சிகளில், இராணுவ சீருடையுடன் உள்ள ஆண்கள், தாக்குதல் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டு, முதுகில் தட்டிக் கொடுத்து, அவர்களிடம் பேசுகிறார்கள். ஒரு தீவிரவாதி ஒரு சிறு குழந்தையை ஊஞ்சலில் முன்னும் பின்னுமாக ஆட்டுவதைக் காட்டும் காட்சியில், குழந்தை அழுவதைக் கேட்க முடிகிறது. காணொளியில் சேர்க்கப்பட்டுள்ள இறுதி காட்சியில், ஒரு கப் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு சிரிக்கும் குழந்தையைக் காட்டுகிறது. ஆங்கிலத்தில், ஒரு ஆண் குழந்தையிடம், "பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரில்) என்று சொல்லுங்கள்" என்று கூறுகிறார். குழந்தை "பிஸ்மில்லா" என்று சொல்கிறது. "யாலா, குடிக்கவும்," அந்த மனிதன் குழந்தைக்கு சொல்கிறான். பின்னர் குழந்தை அந்த தண்ணீரை குடிக்கத் தொடங்குகிறது.. https://ibctamil.com/article/hamas-posts-kidnapped-israeli-children-1697285733
  23. யானையை குட்டியா இருந்து வளர்த்திருப்பாங்களோ?!
  24. இஸ்ரேல் வெள்ளை பொஸ்பரஸ் எறிகணையை பயன்படுத்துகின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை Published By: RAJEEBAN 14 OCT, 2023 | 01:13 PM இஸ்ரேல் காசாமீது வெள்ளை பொஸ்பரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை உறுதி செய்துள்ளது. வெள்ளை பொஸ்பரஸ் ஆட்டிலறி எறிகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவம் காசா மீது தாக்குதலை மேற்கொள்கின்றது என உறுதிசெய்ய முடிந்துள்ளது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீதான தாக்குதலிற்கு வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதம் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்துவருகின்றோம் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இஸ்ரேல் காசாவிற்கு மின்சாரத்தை வழங்கவேண்டும் 16 வருட முற்றுகையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. காசா மக்களிற்கு எதிரான கூட்டுதண்டனை சட்டவிரோதமானது யுத்த குற்றம் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166848
  25. பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல் Published By: RAJEEBAN 14 OCT, 2023 | 10:20 AM இஸ்ரேலின் டெல்அவிவில் பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசியின் செய்தியாளர்களும் அவர்களது அராபிய பிரிவின் குழுவினரும் ஹோட்டலிற்கு சென்று கொண்டிருந்த வேளை அவர்களது வாகனத்தை மறித்த இஸ்ரேலிய பொலிஸார் ஊடகவியலாளர்களை வாகனத்திலிருந்து பலவந்தமாக இறக்கி அவர்களை சோதனையிட்டுள்ளனர். பிபிசி செய்தியாளர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் இந்த சம்பவத்தை படம்பிடிக்க முயன்றவேளை பொலிஸார் கையடக்கதொலைபேசிகளை பறித்து நிலத்தில் வீசியதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. டெல்அவிவிலிருந்து செயற்படும் எங்கள் அராபிய பிரிவினர் ஊடகம் என தெளிவாக குறியிடப்பட்ட வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை இஸ்ரேலிய பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். காசா இஸ்ரேல் மோதல்கள் குறித்து செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் சூழல் அவசியம் என பிபிசியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166823

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.