Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. ஈரானிய ஆர்ப்பாட்டங்கள்: முதலாவதாக ஒருவருக்கு மரண தண்டனை By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 11:42 AM ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் முதல் தடவையாக ஒருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தலையை மறைக்கும் ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாஷா அமினி எனும் யுவதி, பொலிஸ் காவலில் இருந்தபோது கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்ததையடுத்து, ஈரானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஏற்கெனவே சுமார் 2,000 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், மேலும் 750 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்துடன் தொடர்பில் ஒருவருக்கு முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை இணையத்தளமான மிஸான் தெரிவித்துள்ளது. அரச கட்டடங்களுக்கு தீவைத்தல், பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தல், தேசிய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களுக்காக ஒன்றுதிரண்டமை மற்றும் சதிசெய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த இணைத்தளம் தெரிவித்துள்ளது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானதிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் 326 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நோர்வேளையை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் எனும் அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139958
  2. பிரியங்காவை சிறையில் சந்தித்தவேளை - மனம் திறந்தார் நளினி By RAJEEBAN 14 NOV, 2022 | 02:58 PM பிரியங்கா காந்தி தன்னை சிறையில் சந்தித்தவேளை தனது தந்தை ராஜீவ்காந்தியின் படுகொலை குறித்து கேள்விகளை எழுப்பினார் என நளினி ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். விடுதலையான பின்னர் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனக்கு தெரிந்த அனைத்தையும் பிரியங்காவிடம் தெரிவித்தேன் என தெரிவித்துள்ள நளினி பிரியங்கா உறுதியானவராக காணப்பட்டாரா அல்லது உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டாரா என்ற கேள்விக்கு பிரியங்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு பல வருடங்களிற்கு பின்னரே பிரியங்கா தன்னை சந்தித்த போதிலும் தனது தந்தையின் மரணத்தினால் ஏற்பட்ட காயங்கள் ஆறாத நிலையில் பிரியங்கா காணப்பட்டார் என நளினிதெரிவித்துள்ளார். பிரியங்கா அழுதாரா என்ற கேள்விக்கு ஆம் என நளினி குறிப்பிட்டுள்ளார். ராஜீவ்காந்தி 1991இல் கொலை செய்யப்பட்டார் 2008 இல் நளினியை பிரியங்கா வேலூர் சிறைச்சாலையில் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்து எதனையும் தெரிவிக்க முடியாது ஏனென்றால் அவை பிரியங்காவின் விருப்பத்துடன் தொடர்புபட்டவை எனவும் நளினி தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி குடும்பத்தை சந்திப்பதில் ஏதாவது தயக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு அவர்கள் விரும்பினால் நான் அவர்களை சந்திப்பேன் ஆனால் படுகொலை வழக்கு காரணமாக தயக்கம் கொண்டிருந்தேன் எனவும் நளினி தெரிவித்துள்ளார். 30 வருடங்கள் சிறையில் கற்றுக்கொண்ட பாடம் குறித்த கேள்விக்கு சிறைச்சாலை என்பது மிகப்பெரிய பல்கலைகழகம் அங்கு நான் பல விடயங்களை கற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். உங்கள் சிறைவாழ்க்கை குறித்தும் நீதிக்கான போராட்டம் குறித்தும் நூல் ஒன்றை எழுதும் எண்ணமுள்ளதா என்ற கேள்விக்கு நான் தற்போது எனது கணவர் மகளுடன் இணைந்து வாழ்வது குறித்தே கவனம் செலுத்துகின்றேன் என நளினி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139998
  3. வரவு - செலவுத் திட்டத்தில் ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசிப்பு - அநுரகுமார By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 05:38 PM (இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்) பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்கும் பரிந்துரையை ஜனாதிபதி முன்வைக்கவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக ஒன்றரை ரில்லியன் வரி வருமானத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (14) ஜனாதிபதியால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டதன் பின்னர் பாதீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதேனும் நிவாரனம் கிடைக்கப் பெறுமா என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பு முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்கும் வகையில் காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு குறைந்தப்பட்சமேனும் நிவாரனம் வழங்கும் எவ்வித பரிந்துரைகளும் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. மாறாக வரி அதிகரிப்பை மாத்திரம் வரவு செலவுத் திட்டம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரி அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் ஒன்றரை ரில்லியன் ரூபா அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரி அதிகரிப்பு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். பொருளாதார ரீதியில் இருந்து நாட்டு மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை. மறுபுறம் இலாபம் பெறும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி அரச வருமானத்தை குறுகிய காலத்தில் ஈட்டிக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கடன் பெறுவது அரசாங்கத்தின் பிறிதொரு கொள்கையாக உள்ளது. நாட்டு மக்களுக்கு பயனற்ற வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/140018
  4. ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ரவிகருணாநாயக்க By RAJEEBAN 14 NOV, 2022 | 05:44 PM ரவிகருணாநாயக்க ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரவிகருணாநாயக்கவை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் என கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் இதனை விரும்புகின்றார் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் இது குறித்து ரவிகருணாநாயக்கவுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளன. ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஆளுநராக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை ரவிகருணாநாயக்கவையும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளராக ஹரீன்பெர்ணான்டோ நியமிக்கப்படுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/140025
  5. கிழக்கு ஆளுனர் மற்றும் வியட்நாம் தூதுவருக்கிடையில் சந்திப்பு By T. SARANYA 14 NOV, 2022 | 04:50 PM கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு இயன்றளவு வசதிகளை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார். இந்த சந்திப்பிற்கு முன்னதாக, அதே ஹோட்டல் வளாகத்தில் ஆளுநருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றதுடன், இரு நாடுகளின் சுற்றுலா, பொருளாதார மற்றும் கலாசார விடயங்கள் பலவும் கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஹரி பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/140014
  6. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு தட்டுப்பாடு : ஒரு ரிக்கெற்றை இரண்டாக வெட்டி வழங்க வேண்டியுள்ளதாம்! By T. SARANYA 14 NOV, 2022 | 04:10 PM பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலாபம் மற்றும் லுணுவில நிலையங்களில் 20 ரூபா பெறுமதியான பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வெயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையங்களாக காணப்பட்டும் பயணச்சீட்டுகளுக்கு இல்லாததால் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/140011
  7. தமிழகத்தில் பருவ மழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது பட மூலாதாரம்,GETTY IMAGES 14 நிமிடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பருவ மழையால் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிப்பு வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது மழை பெய்தது வருகிறது. இதனால் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் அதிகமான பாதிப்பை சந்தித்தது. பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது, விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் இதுவரை இல்லாத கனமழை மயிலாடுதுறையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இதனை அடுத்து தற்போது பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் கனமழை: சென்னை உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?7 மணி நேரங்களுக்கு முன்னர் இன்னொரு வெள்ளத்தை தாங்குவதற்கு தயாராக இருக்கிறதா சென்னை?1 நவம்பர் 2022 கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏற்கனவே இரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் கிட்டத்தட்ட இருபது ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையையும் சேர்த்து ஒரு லட்சம் ஏக்கர் அளவில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்படுகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாப்படுகை, அருண்மொழித்தேவன், நீடூர், மணலூர் ,வில்லியநல்லூர் , பாண்டூர் , மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் வழிந்தோடி விளைநிலத்தில் கலந்து வருவதால் நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி அழுகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால்கள் முறையாக தூர்வாராமல் விட்டதால் பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு தற்போது தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும் , உடனடியாக வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் இரு தினங்களுக்கு கனமழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கக் கூடிய நிலையில் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகப்படியாக சீர்காழியில் 436 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 250.15 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வரலாறு காணாத அதீத கனமழையால் மயிலாடுதுறை, சீர்காழி நகர் பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதுபோல பல்வேறு கிராமப் பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனை எடுத்து மயிலாடுதுறை ஒன்றியம் அருள்மொழித்தேவன், அருவாபடி, கீழ மருதநல்லூர், ஆனதாண்டாபுரம். சேத்தூர், பொன்வாசநல்லூர், பட்டவர்த்தி. புலவனூர், உள்ளிட்ட சுமார் 2500 ஏக்கர் சம்பா சாகுபடி விலை நிலங்கள் கடந்த 2 தினங்களாக பெய்த கன மழையால் மூழ்கி சேதமடைந்துள்ளது. 15000 குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. 257 கிராமங்கள் மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 15000 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது இதனால் 58 முகாம்கள் அமைக்கப்பட்டு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மழையில் 189 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாவட்டத்தில் பயிரிடப்பட்ட ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 850 ஏக்கரில் 87 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. பத்து துணை மின் நிலையங்கள் சேதமடைந்தும், 2260 மின்மாற்றிகள் 200 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் திருச்சி தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 354 மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் விட்டாரு, உப்பனாறு, அய்யாவினாறு, மற்றும் வடிகால் வாய்க்கால் கன்னி வாய்க்கால் போன்றவற்றை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சரிவரத் தூர் வரப்படாததால் பயிர்கள் அனைத்தும் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் வடிகாலில் சென்றால்தான் மீதமுள்ள பயிர்கள் அழுகி விணாகமல் தப்பிக்கும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனாலும் வருகிற 16 முதல் மழை திரும்ப தொடரும் என அரசு அறிவித்ததால் விவசாயிகள் பெறும் கவலை கொண்டுள்ளனர். சில பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்தது. படக்குறிப்பு, கடலூர் வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு இந்த நிலையில் சீர்காழியின் எருக்கூரை அருகே ராமு-சங்கீதா தம்பதியரின் மகள் அச்சுதா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, வாய்க்காலில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கதவணை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து மீட்கப்பட்ட குழந்தையை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு வந்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவால் மாற முடியுமா?12 நவம்பர் 2022 நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் காலையில் பல் துலக்கிவிட்டுதான் டீ, காபி குடிக்கவேண்டுமா?12 நவம்பர் 2022 சிதம்பரம் சுற்றியுள்ள கிராமங்களில் பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதிலும் சிதம்பரம் சுற்றுவட்டார கிராமங்கள் பெரிதாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை, கடவாச்சேரி, பெராம்பட்டு, தெற்கு பிச்சாவரம் உள்ளிட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் அதிக சேதத்தை ஏற்படுத்தியது பருவ மழையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், திருநாரையூர், எடையார். விநத்தம். சம்பரானபுத்தூர், வல்லம்படுகை உள்ளிட்ட 10 கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணியில் முழ்கியுள்ளது. இதனிடையே கனமழையால் சீர்காழியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மெய்ய நாதன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, விவசாய இயக்குனர் சுப்பையா, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டடு ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி உரிய நிவாரணம் பெற்று தருவதாக சட்டமன்ற பேரவை உறுப்பினர் ராஜகுமார் வாக்குறுதி அளித்தார் . மின் விநியோகம் சீர் செய்யப்படுகிறது - மின்துறை அமைச்சர் அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், "பருவமழையினால் மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் மின்விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் 36 மணி நேரத்தில் சரி செய்து சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நீர்சூழ்ந்த பகுதியில் உள்ள மின்மாற்றிகள் நீர் வடிந்த பிறகு தான் சரி செய்ய முடியும்," என செந்தில் பாலாஜி தெரிவித்தார் தமிழகத்தில் மயிலாடுதுறை பகுதிகளில் பாதிப்பு அதிகம் - முதல்வர் இந்நிலையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்ட முதல்வர், பல்வேறு பகுதிகளில் முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், “மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற வகையில் விளை நிலங்கள் பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்," என தெரிவித்தார். "பேரிடர் பாதித்த ஒன்றியங்களாக அறிவிக்க கோரிக்கை" மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பாதிப்பு ஏற்படுள்ளதாக தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "பருவ மழையில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், திருநாரையூர், எடையார். விநத்தம். சம்பரானபுத்தூர், வல்லம்படுகை உள்ளிட்ட 10 கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணியில் முழ்கியுள்ளது. அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீரில் பயர்கள் மூழ்கியது மற்றும் கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளும் மூழ்கியது. இறந்துபோன கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மீதி இருக்கும் ஆடு. மாடுகளுக்கு உரிய மருத்துவ வசதி செய்ய வேண்டும்," என்றார் அவர். "அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் இந்த மாத மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட இந்த இரண்டு ஒன்றியங்களை பேரிடர் பாதித்த ஒன்றியங்களாக அறிவிக்க வேண்டும். மழை பாதிப்பு தொடர்பாக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாலும், அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்," என்று இளக்கீரன் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjend5ppvglo
  8. வரி மேல் வரி விதிப்பை மக்களால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும் : வரவு - செலவுத் திட்டம் குறித்து சஜித் கேள்வி By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 05:56 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலில்லை, வரி மேல் வரி விதிப்பை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும். மக்களுக்காக அரசாங்கம் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (நவ. 14) ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் எவ்வித பதிலுமில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசாங்கம் முழுமையாக புறக்கணித்துள்ளது,நடுத்தர மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்வாங்கப்படவில்லை. பாரம்பரியமான வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். நாட்டு மக்களின் நலனுக்காகவே அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை அவர் விளங்கிக் கொள்ளவில்லை. வரிக்கு மேல் வரி விதிப்பு இதனை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும். நிவாரணத்தை தவிர்த்து நாட்டு மக்கள் சுயமாக முன்னேற்றமடையும் யோசனைகள் குறிப்பிடப்படவில்லை.சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை பாதிப்பிற்குள்ளாக்கி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்றார். https://www.virakesari.lk/article/140026
  9. செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? 3.5 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய பாறைகள் சொல்லும் ரகசியங்கள் ஜோனதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FRANCES WESTALL / CNRS ORLÉANS ஆஸ்திரேலியாவில் உள்ள பில்பாரா பகுதியில் 3.5 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தனவா என்பதை அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது. அந்த பாறைகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் அந்த பாறைகள் பழமையான நுண்ணுயிரிகளால் தங்கள் அம்சங்களை பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழமையான பாறைகள் குறித்து நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண் ஊர்தி கண்டறியும்போது இந்த ஆஸ்திரேலிய பாறைகளின் அம்சங்களை அது ஒத்து இருக்கிறதா என ஆராய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக உயிர்கள் இருந்தனவா என்பதற்கான ஆதாரத்தை பெர்சவரன்ஸ் ரோவர் தேடி வருகிறது. நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி? கரு முட்டையை நோக்கி விந்தணு நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? தொழில்நுட்பம் மூலம் பங்குச் சந்தையில் பல கோடி சம்பாதிக்க முடிந்தால் என்னவாகும்? நாசாவுடன் பணிபுரியும் லண்டனின் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அந்த பாறைகளின் அம்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர். குவிமாடங்களை போல காட்சியளிக்கும் அந்த பாறைகள் பழமையான நுண்ணியிரிகளால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாயில் ஜெசெரோ என்ற மிகப்பெரிய பள்ளத்தை ஆராய்ந்து வருகிறது. அடுத்த வருடம் பல இடங்களை ஆராய்ந்து பூமியில் உள்ள பாறைகளில் இருப்பதை போன்ற அம்சங்களை அங்குள்ள பாறைகளில் அது கண்டறியலாம். பட மூலாதாரம்,FRANCES WESTALL / CNRS ORLÉANS ஸ்ட்ரோமாடொலைட்ஸ் (stromatolites) எனப்படக்கூடிய பூமியின் பழமையான புதை படிமங்களுக்கான எடுத்துக்காட்டுகள் இவை. இவை பாக்டீரியா மற்றும் வண்டல் படிமங்களால் உருவான சில மில்லி மீட்டர் அளவிலான அடுக்குகள் ஒன்றோடு ஒன்று குவிந்து ஒரு குவிமாடம் போன்ற அமைப்பை உருவாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட மாதிரிகள் சில பூமியில் ஆதிகாலத்தில் தோன்றிய உயிர்களின் அடையாளங்களாக இருக்கலாம் என புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு ஸ்ட்ரோமாடொலைட்ஸின் சில பகுதிகளை லண்டன் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தை சேர்ந்த கீரான் ஹிம்மே லூவிஸ் மற்றும அவரது குழுவினர் சோதித்தபோது அவை 3.48 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான புதை படிமங்கள் என்பதைக் கண்டறிந்தனர். பேலியோ உணவு முறையை பின்பற்றுவதால் நீரிழிவு நோய் ஏற்படுமா? "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்"- எச்சரிக்கும் ஐ.நா பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்கள் எதிர்கொள்ளும் ஆபத்து அவை நுண்ணியிரிகளின் படிமங்களைக் கொண்டிருக்கவில்லை. அல்லது கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததைச் சுட்டிக் காட்டும் எந்த ஒரு கரிம கலவையையும் அவை கொண்டிருக்கவில்லை. ஆனால் பாறையின் உயிரியல் தோற்றத்தை நிரூபிக்க முடியும் என அருங்காட்சியகத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதிக ரிசல்யூஷன் மற்றும் புகைப்படங்களை ஆராயும் தொழில்நுட்பங்களை கொண்டு இந்த பாறை அமைப்புகளை ஆராய்ந்தனர். சுற்றுச்சூழலில் இயல்பாக உருவாகக் கூடியவற்றுக்கு மாறாக, உயிரிகளின் வாழ்க்கை நடவடிக்கைகளால் மட்டுமே இத்தகைய ஸ்ட்ரோமாடொலைட்கள் உருவாகமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்கப்பட்ட ஓர் அம்சம் ஸ்ட்ரோமடோலைட்ஸின் அலை போன்ற மேல் பகுதி. அது ஒளியியை நோக்கி வளரக்கூடிய நுண்ணுயிரிகளால் எழும்பக் கூடியது. இந்த அலைகள் போன்ற அமைப்புகள் முப்பரிமாணத்திலும் (இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக, முன்னிருந்து பின்னாக) ஒரே விகிதத்தில், ஒரே வடிவத்தில் உயிர்கள் வளராது என்பதால் உருவாகின்றன. "இம்மாதிரியான கட்டமைப்புகளை நவீன பூமியில் உள்ள சூழலில் நாம் கண்டுள்ளோம். இதேபோன்று அந்த ஆஸ்திரேலிய பாறைகளில் நாம் காணமுடிகிறது," என விஞ்ஞானி ஹிக்மேன் லூயிஸ் பிபிசியிடம் தெரிவித்தார். செவ்வாய்க்கும் பெர்சவரன்ஸ் ரோவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் ஜெசெரோ பள்ளத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தில் அதில் ஓர் ஆழமான ஏரி இருந்தது தெரியவருகிறது. பள்ளத்தின் விளிம்பில் கார்போனேட் பாறைகள் உள்ளன. அது கரையோரங்களில் கொட்டப்பட்ட வண்டல்களை குறிக்கும் ஜெசெரோவில் ஸ்ட்ரோமடோலைட்ஸை வளர்க்கும் நுண்ணுயிரிகள் இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கு உள்ள ஏரி 3.7 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த வருடத்தின் முடிவில் பெர்சவரன்ஸ் ரோவர் ஜெசெரோ பள்ளத்தாக்கின் விளிம்பில் பயணிக்கும். அப்போது பில்பாரா ஸ்ட்ரோமடோலைட்ஸில் பார்த்த சில அம்சங்கள் அந்த பாறைகளில் உள்ளதா என்பதை ஆராயும். செவ்வாயில் உள்ள பெர்சவரன்ஸ் ரோவரின் ஆய்வுகள் சிலவற்றை புரிந்துகொள்ள ஆஸ்திரேலியாவில் கண்டறிந்த சில தகவல்கள் தங்களுக்கு பயனளிக்கும் என நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் எர்த் சயின்ஸ் கலெக்ஷன்ஸ் பிரிவின் தலைவர் பேராசிரியர் கரோலின் ஸ்மித் கூறுகிறார். "ரோவரில் உள்ள இமேஜிங் அமைப்பை கொண்டு நாங்கள் அதை கண்டறிய முயற்சிப்போம். ஆனால் அது செவ்வாயில் ஸ்ட்ரோமடோலைட்ஸ் உள்ளதா, இருந்தால் அது எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. நாம் தவறான இடத்தில் அதை தேடிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதை காண முடியாது," என்று அவர் எச்சரிக்கிறார் பின்னாளில் ஆராய்வதற்கு ஏதுவான சில மாதிரிகளை சேகரிப்பதுதான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கிய நோக்கமாகும். செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா என்பதை நிரூபிப்பது கடினம். ஆனால் ஹிக்மே லூயிஸ் அதற்கான மாதிரியை உருவாக்கியதாக நம்புகின்றார். ஸ்ட்ரோமடோலைட்ஸில் உள்ள பல அடுக்குகள் அவை எவ்வாறு உருவாகின, எங்கிருந்து உருவாகின என்பதை நமக்கு காட்டும் என்கிறார் ஹிக்மேன். https://www.bbc.com/tamil/science-63610640
  10. சாம் கரன்: வேகத்தால் உலகை மிரட்டிய சிஎஸ்கேயின் ‘சுட்டிக் குழந்தை’ கட்டுரை தகவல் எழுதியவர்,எம்.மணிகண்டன் பதவி,பிபிசி தமிழ் 13 நவம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் ரசிகர்களும் இவரை சுட்டிக் குழந்தை என்பார்கள். 24 வயதான இந்தக் ‘குழந்தை' வேகமும் குறி தவறாத துல்லியத் தன்மை கொண்ட தனது பந்துவீச்சால உலக கிரிக்கெட் அணிகளை மிரட்டியிருக்கிறது. டி20 உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் பந்துவீச்சாளர் ஒருவர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்படுவது இதுதான் முதல்முறை. வார்னர்களும் கோலிகளும் மட்டுமே இந்தப் பெருமையைப் பெறுவார்கள் என்ற பழைய வரலாற்றை உடைத்துப் போட்டிருக்கிறார் சாம் கரன். இதற்கு முன் இதை வென்றவர்கள் அனைவருமே பேட்ஸ்மேன்கள்தான். இந்தத் தொடரிலும் பட்லர், ஹேல்ஸ், சூர்யகுமார் யாதவ் விராட் கோலி உள்ளிட்ட 8 பேர் சாம் கரனுக்கு போட்டியாக இருந்தார்கள். ஆனால் டெத் ஓவரில் மிரட்டி பாகிஸ்தானை சுருட்டிய மாயாஜாலத்தால் மற்ற அனைவரையும் ஓரங்கட்டினார் சாம் கரன். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதையும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருக்கும் முதல் வீரரும் இவர்தான். இது மட்டும் இல்லை. டி20 உலகக் கோப்பைத் தொடர் நாயகன் விருதை வென்ற இளம் வீரரும் இவர்தான். இங்கிலாந்தின் வேகத்திலும் சுழலிலும் சிக்கிய பாகிஸ்தான் - வீழ்ந்த 3 தருணங்கள்14 நவம்பர் 2022 டி20 உலககோப்பை: தோல்வியால் வருந்திய சோயிப் அக்தர், ‘கர்மா’ என குறிப்பிட்டு சீண்டிய முகமது ஷமி13 நவம்பர் 2022 பந்துவீச்சில் அச்சுறுத்திய பாகிஸ்தான் கோட்டைவிட்டது எங்கே?13 நவம்பர் 2022 “மிகவும் புத்திசாலித்தனமான, கட்டுப்பாடான பந்துவீச்சாளர்” என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சாம் கரனுக்கு புகழாரம் சூட்டுகிறார். ‘ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்’ என்று ஐசிசி கூறுகிறது. ஒருவேளை இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றால் அப்போது சாம் கரன்தான் பந்துவீச வேண்டும் என்று தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன். பேட்டுக்கும் காலுக்கும் இடையேயுள்ள ஒரு சிறிய இடைவெளியில் ஸ்டம்புகளைக் குறிவைத்து யார்க்கர்களை வீசுவதில் வல்லவர் சாம் கரன் என்று அவர் கூறுகிறார். சாம் கரன் அப்படி என்ன செய்துவிட்டார் என்றா கேட்கிறீர்கள்? இடது கை வேகத்தில் தொடர் முழுவதும் மிரட்டிய அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இதில் அடங்கும். இறுதிப் போட்டி மாத்திரமல்லாமல் தொடர் முழுவதுமே அவர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார் அவர். குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் 10 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்துடனான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது 26 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கையுடன் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தார். அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மட்டும்தான் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை. 4 ஓவர்களில் 42 ரன்களை வாரிக்கொடுத்தார். இறுதிப் போட்டியில் பந்துவீச்சு முழுவதுமே அவரது தாக்கத்தைக் காண முடிந்தது. 4 ஓவர்களில் அவர் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானின் விக்கெட்டும் இதில் அடங்கும். டெத் ஓவர்களில் இவருடைய பந்துகளைத் தொட முடியவில்லை. இவர் வீசிய 24 பந்துகளில் 15 பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. ஒரு பவுண்டரியும் சிக்சரும்கூடக் கிடையாது. இந்தப் போட்டியில் மூன்றாவது ஓவரிலேயே அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவரது அடுத்த ஓவரில் பெரிதும் நம்பப்பட்ட ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை குறுக்காக ஆட முயன்றபோது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை தகர்த்தது. அந்த ஓவரில் சாம் கரன் கொடுத்து ஒரேயொரு ரன் மட்டுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES டெத் ஓவர் தொடங்கும் 17-ஆவது ஓவரை வீசுவதற்கு மீண்டும் வந்த சாம் கரன், மசூத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. 19-ஆவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட். டெத் ஓவர்களில் பாகிஸ்தானை திணறடித்துவிட்டது அவரது பந்துவீச்சு. கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட சாம் கரன், இந்தத் தொடரில் அந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இப்போதே சாம் கரனுக்கு ஐபிஎல்லில் விலை அதிகமாகிவிடும் என்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கிவிட்டன. இத்தனை பெருமைக்குரிய சாம் கரன் ஆட்ட நாயகன் விருதைப் பெறும்போது என்ன சொன்னார் தெரியுமா? “என்னை விட பென் ஸ்டோக்ஸே இதற்குத் தகுதியானவர்” பட மூலாதாரம்,GETTY IMAGES இரட்டை சாம்பியனான இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையில் 1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல அதிசயத்தை நிகழ்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை இங்கிலாந்து அணி தனது மிரட்டலான பந்துவீச்சால் தகர்த்தது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் தனது உறுதியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சும், சுழற் பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தன. பாகிஸ்தான் பேட்ஸ் மேன்களை எந்த வகையிலும் நிலைத்து நின்று ஆட முடியாதபடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் இங்கிலாந்தின் பந்துவீச்சு இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித், வேகப் பந்துவீச்சாளர் சாம் கரன் ஆகியோரின் பந்துவீச்சு பாகிஸ்தானை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியதுடன் நிலைத்து நின்று ஆட முடியாதபடியும் செய்தன. இந்த வெற்றியின் மூலம் ஒரே நேரத்தில் 50 ஓவர் போட்டியிலும் 20 ஓவர் போட்டியிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றிருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cxev28617g7o
  11. தாள்களை கையிலேந்தி சபைக்கு வந்த நிதியமைச்சர் : ஒரு தடவை கூட கைதட்டு பெறாத வரவு - செலவுத் திட்ட உரை By VISHNU 14 NOV, 2022 | 05:30 PM (இராஜதுரை ஹஷான், எம்,ஆர்.எம்.வசீம்) 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (14) திங்கட்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் உரையாற்றினார். ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றி நிறைவு செய்தததை தொடர்ந்து ஆளும் தரப்பினர் மாத்திரம் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். பலத்த பாதுகாப்பு சபாநாயகர் தலைமையில் இன்று (14) பாராளுமன்றம் கூடிய போது பாராளுமன்றத்தினதும், பாராளுமன்ற சுற்று வட்டத்தினதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டன. ஆயுதமேந்திய இராணுவத்தினர் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டனர். பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் இன்று பிற்பகல் 01.30 மணியளவில் படைகள சேவிதல் செங்கோலை ஏந்திய வண்ணம் சபையின் பிரதான வாயிலாக சபைக்கு வருகை தந்தார். படைகள சேவிதருடன் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம்,பிரதி செயலாளர் நாயகம் ஆகியோர் வருகை தந்தனர். முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு அனுமதி பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக கூடியது. வழக்கமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது பொது மக்கள் கலரி மூடப்பட்டு அரச அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை முதல் தடவையாக குறிப்பிட்ட சில பாடசாலைகளை சேர்ந்த 450 பாடசாலை மாணவ தலைவர்கள் நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்ட உரையை அவதானிப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று வழக்கத்திற்கு மாறாக சபாநாயகர் கலரியிலும் வெளிநாடுகளின் தூதுவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் என 40 இற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர். தாள்களை கையிலேந்தி சபைக்கு வந்த நிதியமைச்சர் வழக்கமாக வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவதற்காக நிதியமைச்சர் சபைக்குள் வருகை தரும் போது கையில் வரவு செலவுத் திட்ட உரை அடங்கிய பெட்டியை அல்லது கோப்பினை கொண்டு வருவார். ஆனால் தற்போதைய நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க தனது வரவு செலவுத் திட்ட உரை அடங்கிய தாள்களையே கையில் கொண்டு வந்தார். 01 மணித்தியாலமும்,15 நிமிட உரை பாராளுமன்றம் பிற்பகல் 01.30ற்கு கூடிய நிலையில் சபாநாயகர் தின பணிகளை முடித்து நிதியமைச்சரை வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுமாறு அறிவித்ததை தொடர்ந்து அரச தரப்பினரின் வரவேற்புடன் அமைச்சர்கள் புடைசூழ சபைக்குள் வந்த நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான தனது வரவு செலவுத் திட்ட உரையை பிற்பகல் 01.35 மணிக்கு ஆரம்பித்து 1 மணிநேரமும்,15 நிமிடங்களும் உரையாற்றி 2.50 இற்கு நிறைவு செய்தார். ஒரு தடவை கூட கைதட்டு பெறாத உரை வழக்கமாக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் நிதியமைச்சர்கள் மக்கள் சார்ந்த நிவாரன அறிவிப்புக்கள் மேலும் சில அறிவிப்புக்களை வெளியிடும் போது அரச தரப்பினர் சில வேளைகளில் எதிர்க்கட்சியினர் கூட அந்த அறிவிப்புக்களை மேசைகளில் தட்டி வரவேற்பது வழக்கம். ஆனால் இன்று நிதியமைச்சரின் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் நீண்ட உரையின் போது அவரின் ஒரு அறிவிப்பிற்கு கூட அரச தரப்பினரோ, எதிர்க்கட்சியினரோ கைதட்டவில்லை. மாறாக இரு தரப்பினரும் இருகிய முகங்களுடன் உரையை செவிமெடுத்துக் கொண்டிருந்தனர். சபைக்கு வராத தலைவர்களும், தாமதமாக வந்த தலைவர்களும் வரவு செலவுத் திட்ட உரை இடம்பெற்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஷ்வரன், இ.பி.டி.பியின் தலைவரும், அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா ஆகியோர் சபைக்கு வருகை தராத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகி 40 நிமிடங்களுக்கு பின்னரும், அதே போன்று சில அமைச்சர்களும் சபைக்கு தாமதமாகவே வருகை தந்தனர். வெற்றிடமான நிலையில் பல ஆசனங்கள் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது எதிர்க்கட்சி தரப்பினரின் ஆசனங்கள் மட்டுமன்றி, ஆளும் தரப்பிலும் பல ஆசனங்கள் வெறிச்சோடி கிடந்தன. நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சில உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட உரையின் போது இடை நடுவில் எழுந்து சென்ற போதும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ போன்றவர்கள் இறுதி வரை அமர்ந்திருந்து உரையை செவிமெடுத்தனர். தேநீர் உபசாரம் இரத்து வரவு செலவுத் திட்ட உரையை நிறைவு செய்யும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களை தேநீர் உபசாரத்தில் பங்கேற்றுமாறு நிதியமைச்சர் அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை தேநீர் உபசாரம் இரத்து செய்யப்பட்டதால், நிதியமைச்சரால் அழைப்பு விடுக்கப்படவில்லை. https://www.virakesari.lk/article/140019
  12. கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே: தமிழ்நாட்டின் பகுதிகள் பறிபோகும் என எல்லையோரத் தமிழர்கள் அச்சம் கட்டுரை தகவல் எழுதியவர்,பி.சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநில அரசு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் ரீ சர்வேவை தொடங்கியது. கேரள மாநில அரசு நடத்தும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால், தமிழகம் கிட்டத்தட்ட சுமார் 1000 சதுர கிலோமீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் உள்ளதாக, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரனை சந்தித்து இதுதொடர்பான ஆவணங்களை அளித்தனர். கேரளா அரசு 14 மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களில் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் இடங்களை அறிவித்திருந்தது. இந்த சர்வே பணியில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள், 4 வருடங்களில் தொடர்ச்சியாக பணி செய்து முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தை ஒட்டியிருக்கும் கேரளத்தின் 7 மாவட்டங்களிலுள்ள, 15 தாலுக்காக்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேனி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இன்று தலைமைச்செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தமிழக வருவாய்த்துறை செயலாளர் மற்றும் நில அளவைத் துறை செயலாளர் ஆகியோருடன் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. தமிழக எல்லையோரம் கேரளாவில் உள்ள கட்டக்கடை நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு , புனலூர் கோணி , பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம், பாலக்காடு, மன்னார்காடு, சித்தூர், நிலம்பூர், வைத்திரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய 15 தாலுகாக்களில் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தி வைக்க கேரள மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த உரையாடலில், ஜமீன் பட்டா அடிப்படையிலும், 1956 மொழிவழி பிரிவினை கமிட்டி கொடுத்த நில வரைவியல் அடிப்படையிலும் அளவீடு நடத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழக கேரள எல்லை முறையாக வரையறை செய்யப்பட வேண்டும் என்று சொன்னதையும் வருவாய்த்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர். இரண்டொரு நாட்களில் வருவாய்த் துறை மற்றும் சர்வே துறை சார்ந்த துணை செயலாளர் மட்டத்திலான இரண்டு அதிகாரிகள் தேனிக்கு வரவிருக்கிறார்கள். அவர்களோடு எங்கள் சங்க நிர்வாகிகளையும் இணைத்துக் கொள்ள அமைச்சர் சொல்லியுள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்தனர். மலேசியாவுக்கு மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு - அதிர்ச்சிக்குறிப்புகள்6 நவம்பர் 2022 தமிழக நரபலிகளின் பயங்கர வரலாறு - தேர் ஓட்ட, புதையல் எடுக்க நடந்த படுகொலைகள்15 அக்டோபர் 2022 இந்தியாவை பாமாயில் நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய தெலங்கானா1 நவம்பர் 2022 எல்லையோரத் தமிழர்களின் அச்சம் என்ன? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் சொல்வதென்ன? பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருஙகிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசினார். தமிழக-கேரள எல்லையையே அளவிட்டு முழுமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மறு அளவீடு முழுமை பெறும். மாநில எல்லையை முறையாக அளவீடு செய்யாமல், எந்த அடிப்படையில் வருவாய் நிலங்களை கேரள மாநில அரசு மறு அளவீடு செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். 1956 இல் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக கேரள எல்லைகள் பிரிக்கப்படவில்லை. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாகாணங்களுக்கும், தமிழகத்திற்கும் எந்த முரணும் இல்லை. அதனால் எல்லைகள் பிரிக்கப்படவில்லை என்றார். பசல் அலி தலைமையிலான கமிஷன் 1956 மொழிவாரியாக மாநில எல்லைகளை பிரிக்க சொன்னது. ஆனால் முறையாக, கமிட்டி கொடுத்த வரையறையின் அடிப்படையில் 'தமிழக கேரளா எல்லைகள்' பிரிக்கப்படவில்லை எனவும் அன்வர் பாலசிங்கம் சுட்டிகாட்டினார். தமிழக கேரள எல்லையிலுள்ள 822 கிலோ மீட்டர் தூர எல்லையில் பாதியைக்கூட இதுவரை இரு மாநில அரசுகளும் அளக்கவில்லை. கேரளாவின் 15 தாலுக்காக்களில், இந்த டிஜிட்டல் ரீ சர்வே செய்யப்பட்டால், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலுள்ள மிகப்பெரிய நிலபரப்புகளை தமிழகம் இழப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. உதாரணமாக 2017ல் உத்தமபாளையம் கோட்டாட்சியர் மற்றும் தேவிகுளம் சப் கலெக்டர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு சர்வேயில், கம்பம் மெட்டில் உள்ள கேரள போலீஸ் சோதனைச்சாவடி தமிழக எல்லைக்குள் வருகிறது என இரு மாநில அதிகாரிகளும் இணைந்து அளவீடு செய்தனர். ஆனால், இன்று வரைக்கும் கேரளா சோதனைச்சாவடி தமிழகத்திற்குள்தான் இருக்கிறது, அதை நம்மால் எடுக்க முடியவில்லை. 1956 எல்லை பிரிப்பின்போது, கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து, ஏ.கே. கோபாலன் முதல் ஈ எம் எஸ் நம்பூதிரபாட் வரை கூட்டணி அமைத்து, நவீன கேரளாவை உருவாக்கினார்கள். அவர்களுடைய குறிக்கோள் தமிழக எல்லைகளாகத்தான் இருந்து. இந்த டிஜிட்டல் ரீ சர்வேவால், சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் வரையுள்ள, தமிழக பகுதிகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. 1986 ஆம் ஆண்டில் கேரளாவிலுள்ள உடும்பஞ்சோலை, பீர்மேடு பகுதியில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான 1240 ஏக்கர் நிலத்தை, தமிழக வனத்துறை அதிகாரிகள் அதிரடி ஆபரேசன் நடத்திதான், மீட்டார்கள். மீட்கவில்லை எனில் இன்றைக்கு அது கேரளாவின் சொத்தாக மாறியிருக்கும் எனவும் அன்வர் பாலசிங்கம் கூறுகிறார். தமிழகத்தில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை கேரளாவின் சொத்தாக இருக்கிறது. குற்றாலத்தில் 64 ஏக்கர் நிலம் கேரளா அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. செங்கோட்டை அருகே 24 ஏக்கர் நிலம் கேரள வனத்துறையினரின் வசம் உள்ளது. மூணாறில் தமிழக அரசின் பேருந்துகள் நிறுத்துவதற்கு கொடுக்கப்பட்ட 5 சென்ட் நிலத்தையும் தற்போது கேரளா அரசு எடுத்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கேரளாவிற்கு சொந்தமான நிலம் தமிழக அரசால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கு கேரளாவில் ஒரு பிட்டு நிலம் இல்லை என்று அவர் கூறுகிறார். மொழிவாரியாக மாநிலஙகள் பிரிக்கப்பட்ட போது, பழனி மலைக்குன்றில் வரும் காந்தலூர், மறையூர்,கீழாந்தூர், கோவிலூர் ஆகிய ஊர்கள் தமிழக வனப்பகுதிக்குள் வருகிறது. மூணாறில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள சட்ட மூணாறு வரைதான் கேரளாவுக்கு சொந்தம், எப்படி மற்ற பகுதிகள் கேரளாவிற்குள் சேர்ந்தது என கேள்வி எழுப்பினார். தேவிகுளம் தாலுகாவில் டாடா வசம் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்டங்களை, மறு அளவீடு செய்ய வேண்டும் என்று கடந்த 2004 ஆம் ஆண்டு, நான் தலைவராக இருந்த கேரள தமிழர் கூட்டமைப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தது. கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதமாக எழுந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில், அன்றைக்கு கேரள மாநில முதல்வராக இருந்த வி.எஸ் அச்சுதானந்தன் சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி டாட்டா வசமுள்ள நிலங்களை சர்வே செய்ய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடைய மேற்பார்வையில், ஏஜென்சி நியமித்து ஓராண்டுக்குள் மறு அளவீடு செய்யப்படும் என்று அறிவித்தார். முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டது கேரள மாநில வருவாய்த்துறை. இப்போது விஷயம் மறுபடியும் சூடு பிடித்திருக்கிறது. 1956ல் நடத்தப்பட்ட மொழிவாரி மாநில பிரிவினையின் போது தமிழக, கேரளா எல்லையோர கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை அடித்து விரட்டிய பட்டம் தாணுப்பிள்ளை அரசாங்கம், அதை நாணல் காடுகளாகவும்,அட்டைக் காடுகளாகவும் வகைப்படுத்தி, அதில் மலையாளிகளை வலுக்கட்டாயமாக குடியேற்றியது. அப்படி குடியேற்றப்பட்ட மலையாளிகள் தான் இன்று தமிழக-கேரள எல்லையில் உள்ள, தமிழகத்திற்கு சொந்தமான வன நிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றி, கேரளாவில் பட்டாவை முறையாக பெற்று, ஆண்டனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக சர்வே துறையில் தமிழக வனநிலமாக குறிக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் ,கேரள வருவாய்த் துறையால் ஒரு மலையாளியின் நிலமாக வகைப்படுத்தப்பட்ட கதைதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. எல்லையில் இத்தனை குளறுபடிகளை வைத்துக்கொண்டு, இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களை மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருப்பது உண்மையிலேயே கண்டனத்திற்குரியது. 1905ல் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பதிவேடுகள். 1966இல் நடத்தப்பட்ட மறு அளவீட்டில் எடுக்கப்பட்ட குறிப்புகள் என அத்தனையையும் காற்றில் பறக்க விட்டு, டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறது கேரள மாநில அரசு. கேரளா அரசு ஒரு விரிவான தீர்வு சட்டத்தை தயாரித்து வருவதாகவும், அதன் வரைவு வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர், பொது விவாதத்திற்கு வைக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருக்கிறார். இடுக்கி மாவட்டத்தில் நிலம் அதிகம் வைத்திருக்கும், தமிழ் விவசாயிகளை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு, இந்த டிஜிட்டல் சர்வேயில் அதிகம் இருப்பதாக கூறினார். செப்டம்பர் 15 2020 இல் வழங்கப்பட்ட அரசாணையின் படி,அதாவது மறு அளவீட்டுக்குப் பிறகு ,ஒரு நில உரிமையாளருக்கு கூடுதலாக 5 சதவீத நிலம் இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், அதிகப்படியான நிலத்தின் உரிமையை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவருக்கு கூடுதலாக இரண்டு சென்ட் அதிகமாக இருந்தால் உரிமை வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 10 சென்ட் நிலம் வைத்திருக்கும் ஒருவருக்கு மறு அளவீட்டில் 16 சென்ட் நிலம் வந்தால் அவருக்கு பிரித்து கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும். 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த அரசாணையையும், அதற்கு முன்னால் 1991ல் போடப்பட்ட அரசாணையையும் கவனமாக கேரள மாநில அரசு ரத்து செய்துவிட்டது. தமிழ்நாட்டு பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது ஏன்?8 நவம்பர் 2022 நியாண்டர்தால் பெண்களை இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தினார்களா மனிதர்கள்?8 நவம்பர் 2022 "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்"- எச்சரிக்கும் ஐ.நா7 நவம்பர் 2022 இப்போது புதிய மறு அளவீடு. Real Time Kinematic இயந்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக இயங்கும் CORS குறிப்பு நிலையங்களின் நெட்வொர்க் போன்ற சேவைகளின் மூலம் உங்கள் சமீபத்திய நில விவரங்களை உடனடியாக இணையத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. தாசில்தாருக்கும்,மாவட்ட ஆட்சியருக்கும் நில மறு அளவீடு தொடர்பாக கொடுக்கப்பட்ட உரிமைகளை கேரள மாநில அரசு ரத்து செய்திருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. அதுபோல் பீர்மேடு தாலுகாவில் உள்ள, வாகமன், மஞ்சு மலை, பெருவந்தானம், குமுளி, வண்டிப்பெரியாறு,பீர்மேடு வரை,மறு அளவீடு செய்வதற்கு முன்னால்,140 ஆண்டுகளாக அந்த மலையகத்தில் பணிபுரியும், தமிழக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளுக்கான மனைகளை வழங்காமல் மறு அளவீடு செய்யவும் அனுமதிக்க மாட்டோம். அதுபோல இதுவரை எந்த அளவீடும் செய்யப்படாமல், இருக்கும் டாடா நிறுவனத்தின், கண்ணன் தேவன் மலையும் முழுமையாக அளவீடு செய்யப்பட வேண்டும். மொத்த டாட்டாவின் நிலத்தில் 20% நிலம்,அங்கு 142 ஆண்டுகளாக பணிபுரியும் தமிழ் மக்களுக்கு வருவாய் நிலங்களாக ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட வேண்டும். இடுக்கி மாவட்டத்தில் மறு அளவீடு செய்வதற்கு முன்னால், தேனி, திருப்பூர் இடுக்கி, வயநாடு, நீலகிரி, பாலக்காடு, கோவை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டால் தமிழக கேரள எல்லையோரங்களில், எந்தப் பிரச்சனையும் எழாது. இல்லை உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக கேரள எல்லையை அளவீடு செய்யாமல் தேவிகுளம் பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களில், மறு அளவீட்டை கேரள அரசு நடத்துமானால், சட்டப்படி அதை தடுத்து நிறுத்துவோம் என அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் பிபிசி தமிழிடம் பேசினார். கேரளா அரசு தமிழக கேரள எல்லையை இன்னமும் அளக்காமல், கிடக்கும் நிலையில், எந்த அடிப்படையில் தமிழகத்தோடு எல்லையை பகிர்ந்து கொள்ள இருக்கிறது எனக்கேள்வி எழுப்பினார். கேரள மாநில அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பிரச்னைக்குரிய இடுக்கி, பாலக்காடு, வயநாடு, கொல்லம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், மத்திய பார்வையாளர் இல்லாமல் டிஜிட்டல் சர்வே நடத்துவதை அனுமதிக்க முடியாது. நீலகிரி மாவட்டத்தோடு நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய மூன்று தாலுகாக்களில் மொத்தமுள்ள 49 வருவாய் கிராமங்களில், டிஜிட்டல் சர்வே நடத்தும் முன் நீலகிரி - வயநாடு மாவட்ட, மாநில எல்லைகள் அளவீடு செய்யப்பட வேண்டும். அதேபோல், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர், ஆலத்தூர், மன்னார்காடு உள்ளிட்ட மூன்று தாலுகாக்களும், கோவை மாவட்டத்தோடு நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதிலும் குறிப்பாக மன்னார்க்காடு தாலுகாவில் வரும் அட்டப்பாடி, தமிழ் விவசாயிகள் 8,000 பேருக்கு மேல் வாழும் ஒரு விவசாய பூமி. இங்கு ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் விவசாயிகளிடம் நிலவரி வசூலிப்பது தொடர்பான பிரச்னை எழுந்தபோது, அன்றைக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சம்சுதீனிடம் முறையிட்டும், அட்டப்பாடி விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் பிரமாண்டமான உண்ணாவிரதத்தை நடத்தினோம். படக்குறிப்பு, தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதி ஏற்கனவே அட்டப்பாடி விவசாயிகள் மீது எரிச்சலில் இருக்கும் மன்னார்காடு தாலுகா நிர்வாகம், இப்போது தமிழ் விவசாயிகளை பழிவாங்க வாய்ப்பு நிறையவே இருக்கிறது. எனவே மத்திய பார்வையாளர் இல்லாமல், மன்னார்காடு, ஆலத்தூர், சித்தூர், தாலுக்காக்களில் டிஜிட்டல் ரீசர்வேயை அனுமதிக்க முடியாது. கேரளா ஒரு முழுமையான மாநிலம் இல்லை என்பதற்கு, அதனுடைய முழுமையடையாத, நில அளவை முறையே முதல் சாட்சியாகும். அரசாங்கங்கள் மாறும் போதெல்லாம் நில அளவை குறித்து விவாதம் எழுப்புவதும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நீதிமன்றங்களுக்கு செல்வதும், தொடர் கதையாக இருந்து வருகிறது. மத்திய பார்வையாளர் இல்லாமல் டிஜிட்டல் ரீ சர்வேயை கேரளா அரசு நடத்தினால், கம்பம் மெட்டு மற்றும் ஆனைகட்டி பகுதியில் இருக்கும் கேரளா எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார். படக்குறிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் வருவாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில், கேரளத்தில் பட்டா நிலம் வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளை விரட்டியடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் அவர்களை கேரளாவிற்கு அனுப்பி, தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார். தேவிகுளம்,சுல்தான் பத்தேரி, சித்தூர், ஆலத்தூர், புனலூர், நெய்யாற்றின்கரை உள்ளிட்ட 15 தாலுகாக்களில் மத்திய பார்வையாளர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக் காவலர்களை கொண்டு நிலங்களை மறு அளவீடு செய்ய கேரள அரசு முன்வர வேண்டும். இல்லையென்றால் இந்த டிஜிட்டல் அளவீட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு இந்த 15 தாலுக்காவை ஒட்டி இருக்கும் தமிழக பகுதிகளில் ஒரு குழுவை அமைத்து டிஜிட்டல் ரீ சர்வேவை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். கட்ந்த நவம்பர் 1 ஆம் தேதி கேரளா அரசு டிஜிட்டல் ரீ சர்வேயை தொடங்கியதை கண்டித்து, அதே தினத்தில் கம்பத்தில் இரு விவசாய அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கடந்த 7 ஆம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். படக்குறிப்பு, தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக முறையிட்டனர். அதில் கேரள மாநிலத்தின் தொடுபுழா உதவி இயக்குநர் கடந்த 13 ஆம் தேதி தேனி நில அளவை உதவி இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையை பகிரும் கேரளா மாநிலத்தின் , உடும்பன் சோழா வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்கானல், சதுரங்கப்பாறை , கருணாபுரம், சாந்தன்பாறை ஆகிய கிரமங்களில் முதல் கட்டமாக நவீன மறு நில அளவை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். நவீன நில அளவை செய்வது தொடர்பாக கேரளாவில் நடைபெறும் கூட்டத்தில், கலந்துகொள்ள தேனி மாவட்ட நில அளவை உதவி இயக்குநருக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்திருந்தனர். உதவி இயக்குநர் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நேரம் மற்றும் தேதி தெரிவிப்பதாக பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழக கேரளா எல்லைப்பகுதிகளில் கேரள அரசு நவீன மறு நில அளவை பணியை துவங்கும் முன், இரு மாநில எல்லைகள் தொடர்பான நில அளவை மற்றும் இதர ஆவணங்களுடன், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நில அளவை , வருவாய்த்துறை அலுவலர்களின் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதன் பின்னரே மூல ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, இரண்டு மாநில எல்லைப்பகுதிகளில் கூட்டு புலத்தணிக்கை மேற்கொண்டு, நவீன மறு நில அளவைப்பணி குறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கேரளா அரசு டிஜிட்டல் ரீ சர்வேவை நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி விட்டார்கள். கேரளா, தமிழக அரசுக்கு தெரியாமல் எல்லைப்பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வே நடத்த முடியாது. மத்திய அரசின் அதிகாரிகளை வைத்து டிஜிட்டல் சர்வே நடத்தப்படுகிறது. இரு மாநில அரசுகளும் இணைந்து தான் எல்லைப்பகுதியில் டிஜிட்டல் ரீ சர்வே எடுக்க முடியம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் வருவாய் ஆவணங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தடவை டிஜிட்டல் ரீ சர்வேவால் 2011 ஆம் ஆண்டைப்போல் தமிழர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் இருக்காது. இதில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக இருப்பதாகவும், கேரளா அரசு நம்மை கலந்தாலோசிக்காமல், செய்யக்கூடாது என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளதாக கூறினார். இதுவரை இரு மாநில அரசுகளும் இணைந்து டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கவில்லை. கூட்டம் போட்டு பேசிவிட்டுதான் எடுக்க இருக்கிறோம். கேரளா அரசின் டிஜிட்டல் ரீ சர்வேவை கண்டித்து போராட்டம் நடத்திய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர், தன்னை சந்தித்து, கடந்த 11 ஆம் தேதி இதுகுறித்து மனு அளித்தனர். இதனையடுத்து தலைமைச்செயலகத்தில் வருவாய் மற்றும் சர்வே துறை முதன்மைச்செயலாளர்கள் தலைமையில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினரும் கலந்துகொள்ள உள்ள கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழக கேரளா எல்லையை ஒட்டி இருக்கும் 7 மாவட்ட ஆட்சியர்கள், இந்த டிஜிட்டல் ரீ சர்வேவின் போது நேரடியாக களத்தில் இருந்து அளக்க முதலமைச்சர் உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார். கேரளா வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் பிபிசி தமிழுக்கு இதுபற்றி விளக்கம் அளித்தார். டிஜிட்டல் ரீ சர்வே குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். கேரளா வருவாய்த்துறை மற்றும் சர்வே துறை அதிகாரிகள் தமிழக அரசின் வருவாய் மற்றும் சர்வே துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். தானும் நேரடியாக தமிழக அரசுடனும், வருவாய்த்துறை அமைச்சருடனும் பேசியுள்ளதாக தெரிவித்தார். தமிழக மக்கள் மற்றும் தமிழக கேரளா விவசாயிகளின் கருத்துகளை முழுமையாக கேட்காமல் சர்வே நடத்தப்படாது. கேரளத்தில் டிஜிட்டல் ரீ சர்வேவை வைத்து தமிழகம் கேரளாவில் பிரச்னையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்றார். விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் நிலங்களை முறையாக ஆவணப்படுத்தவே இந்த டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் ஒப்புதலோடுதான் இந்த டிஜிட்டல் ரீ சர்வே எல்லைப்பகுதியில் நடக்க இருக்கிறது என்றார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்திற்கு பிறகு, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cql0nlenng4o
  13. திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன் தவிர மற்ற 3 பேரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை By RAJEEBAN 14 NOV, 2022 | 04:45 PM ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையாகி உள்ளவர்களில் முருகனை தவிர ஏனைய இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த போலி பாஸ்போர்ட், விசா மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். . இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர் வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ஒரு பிரிவில் இவர்கள் 4 பேருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.175 பணம் வழங்கப்படுகிறது. வெளியில் இருந்தும் அவர்கள் உணவை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்கிடையே வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்த பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என 4 பேரும் வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று ஒருவருக்கொருவர் பேச கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விடவேண்டும், தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. - கலெக்டர் தகவல் இதுபற்றி அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வெளியே வந்த கலெக்டர் மா.பிரதீப் குமார் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது:- வெளிநாட்டினருக்கு இங்கு வீடு மற்றும் நிரந்தர தங்குமிடம் எதுவும் இருக்காது. எனவே வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி தண்டனையிலிருந்து விடுதலை பெற்றவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பது வழக்கம். . அதன்படியே சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை சிறப்பு முகாமில் ஏற்கனவே உள்ள வெளிநாட்டவருடன் சேர்த்து தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் தனியாக தங்க வைக்கிறோம். இந்த 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களா அல்லது இங்கேயே இருக்கப்போகிறார்களா என்பதை முதலில் உறுதி செய்ய உள்ளோம். இதில் முருகன் தவிர மற்ற 3 பேரும் (சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்) இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் தாங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டும் என்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். மற்ற சிறைவாசிகளுக்கு உள்ளதுபோல் இந்த 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். . அதேவேளையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நளினி, கலெக்டரிடம் தனது மகன் லண்டனில் வசிப்பதாகவும், அங்கு தனது கணவரையும் அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு கலெக்டர் பிரதீப் குமார், இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்குமாறு கூறினார். https://www.virakesari.lk/article/140015
  14. இலங்கை பட்ஜெட் 2023: முக்கிய அறிவிப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 46 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக இருக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று சமர்பித்தார். நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 அளவில் கூடிய வேளையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப உதவியளிக்குமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதி சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து, இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத்திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் சமூக நலன்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்தது ஏன் - முழு விளக்கம்6 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை பட்ஜெட் 2023: பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள உதவுமா?9 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகும் இலங்கை பிரஜைகள் தாயகம் வர முடியுமா?11 நவம்பர் 2022 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான நாட்டை கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. அடுத்த வருடம் பொருளாதாரத்தை ஸ்திரதன்மைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அறிவிப்பு நிதி அமைச்சர் என்ற விதத்தில், ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு. ஏற்றுமதி ஊடான பொருளாதாரம், சுற்றாடல் ஆகியவற்றை இலக்காக கொண்ட டிஜிட்டலை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் வகையிலான சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை குறைப்பு, நிவாரணம் போன்றவை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு முதலீடு இல்லாது போயுள்ளமை தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக இலாபத்தை தமதாக்கிக் கொள்ள உலக சந்தையில் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுடன் தொடர் வர்த்தக தொடர்புகளை முன்னெடுக்க கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகின்றது. முதலீட்டுக்கான சூழலை உருவாக்குவதற்கு அவசியத்தை ஏற்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள், தனியார் உரிமையாளர்களை உள்வாங்கி, விவசாயத்துறைக்கு தனியார் சட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவீன விவசாய ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்த்துள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்கி, மேம்படுத்துவதற்கு விசேட நிபுணர் குழுவொன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. கறுவா ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரத்தியேக திணைக்களமொன்றை ஸ்தாபிப்பதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவற்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை பிரிவுகள் குறித்து பரிசீலனை செய்வதற்கு புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. வரி மறுசீரமைப்பு குறித்து புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தனியார் துறையில் பாதிக்கப்படுவோரை பாதுகாக்கும் வகையில் விசேட காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இரத்தினக்கல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு புதிய வலயங்களை உருவாக்குதல் மற்றும் புதிய தொழில்பயிற்சிளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தனுஷ்க குணத்திலக்க: ஆணுறையின்றி வல்லுறவு, கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு10 நவம்பர் 2022 'விடுதலை புலிகள்' இலங்கை இறுதி யுத்தத்தில் சரணடைந்தனரா? ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் சொன்னது என்ன?9 நவம்பர் 2022 300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு8 நவம்பர் 2022 முதலீட்டு ஊக்குவிப்புக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலநிலை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை ஊக்குவித்து, இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. விநியோக உலகத்தின் முதல் 70 நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை கொண்டு செல்வதற்காக 2023ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்திற்கு விநியோக சேவை வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் மோட்டார் வாகனங்களை தயாரித்தல் மாத்திரமன்றி, இலத்திரனியல் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 18 வருட சேவை காலத்தை நிறைவு செய்த படையினருக்கு ஓய்வூதியத்தை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வரி அறவீடுகளை அதிகரிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. வட் வரி அதிகரிப்பு கட்டாயம் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த வரி அதிகரிப்பின் ஊடாக பணம் அச்சிடுவதை நிறுத்த முடியும் என அவர் கூறுகின்றார். https://www.bbc.com/tamil/articles/cy0n45rzk3do
  15. பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய பொலிஸ் அதிகாரியை சேவையிலிருந்து நீக்கவும் - கீதா குமாரசிங்க By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 05:31 PM போராட்டத்தின்போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை சேவையிலிருந்து உடனடியாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று (14) தெரிவித்தார். மக்களைக் காக்க வேண்டிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை மிகவும் விரும்பத்தகாத மற்றும் அவமானகரமான முறையில் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்திய செயலுக்கு தாம் மிகவும் வருந்துவதாகவும் இந்தச் செயலை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 9,000 பெண்கள் கடமையாற்றி வருவதாகவும், தாய்மார்கள் இவ்வாறானவற்றை எதிர்பார்த்து தமது பெண் பிள்ளைகளை பொலிஸ் சேவைக்கு அனுப்புவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/140022
  16. தமிழ்நாட்டில் கனமழை: சென்னை உலகளாவிய கவனம் பெறுவது ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் முக்கிய சாராம்சம் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது. மழைப் பொழிவின் போது மேற்பரப்பில் நீர் தேங்காமல் நிலத்தடியில் செல்ல வழி செய்வது வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி கோடைக்கால நீர்த்தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த பேரழிவுகரமான வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஏழு ஆண்டுகளில் மழைப் பொழிவைக் கணிப்பது மேன்மேலும் கடினமாகி வருகிறது. அதைத் தாக்குப்பிடிக்கும் திறன் இந்த ஏழு ஆண்டுகளில் சென்னை பெருநகரத்திற்கு வந்துள்ளதா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வல்லுநர்களிடம் பேசினோம். சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1.2 கோடி மக்கள் வாழும் கடற்கரை நகரத்தின் தெருக்களிலும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்கியிருப்பதைக் காண முடிகிறது. இனி வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யும் என்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நிலையில் இருக்கின்றனர். அக்டோபர் 31ஆம் தேதியன்று தொடங்கிய பருவமழைக்கு நடுவே நடந்த மழை தொடர்பான சம்பவங்களில் நவம்பர் 5 வரை தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தரவு கூறுகிறது. இன்னொரு வெள்ளத்தை தாங்குவதற்கு தயாராக இருக்கிறதா சென்னை?1 நவம்பர் 2022 ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?28 அக்டோபர் 2021 மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக கால நிலைமாற்றம் காரணமா?12 நவம்பர் 2022 மழை பெய்வது தீவிரமடைது மட்டுமின்றி, முன்பு போல் கணிக்க முடியாத வகையிலும் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் அதிகாரிகள் விரைந்து செயலாற்றுவது கடினமாக இருப்பதாகக் கூறுகிறார் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல். பொதுவாக, பருவமழையின் இடையிலும் இறுதியிலும் தான் சென்னை போன்ற நகரங்களில் வெள்ளநீர் தேங்குவது நிகழும். ஆனால், இந்த ஆண்டில் பருவமழை தொடங்கிய மூன்று நாட்களில் இருந்தே தமிழகத் தலைநகரின் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கத் தொடங்கிவிட்டது. 2021ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் 3 நாட்களில் பெய்த சராசரி மழை அளவு 147.27மிமீ. இந்த ஆண்டின் நவம்பர் தொடக்கத்தில் பெய்த மூன்று நாள் மழை அளவு 205.63மிமீ. “உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது. வானிலையைக் கணிப்பது சரியாக இருந்தால் முன்னறிவிப்பு செய்து எச்சரிக்க முடியும். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு ஆனால், காலையில் கணிப்பது மாலையில் மாறிவிடுகிறது. இந்தச் சிக்கல் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாகி வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, பருவமழை தொடங்கிய 24 மணி நேரத்தில் 140மிமீ அளவிலான மழைப்பொழிவு நிகழும் என்று யாரும் கணிக்கவில்லை. அது எதிர்பாராத வானிலை நிகழ்வு,” என்கிறார் இடைநிலை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவர் முனைவர் எஸ். ஜனகராஜன். இந்த எதிர்பாராத கனமழையால் தண்ணீர் தேங்கியிருந்த பகுதிளில் தமிழக அரசு மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை நீக்கியது. நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்புக் குழுக்களும் முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், “பருவமழையின் தொடக்கத்திலேயே குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகும் அளவுக்கு இருப்பதே சென்னையின் பேரிடர் பாதுகாப்பு நிலை எந்தளவுக்கு உள்ளது” என்பதைக் காட்டுவதாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹாரிஸ் சுல்தான். காலநிலை சீராக இல்லாமல் ஒழுங்கற்றதாகி வருவதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி முனைவர்.ராக்சி மேத்யூ கோல். அவர், “பருவமழை வடிவம் மிகவும் ஒழுங்கற்றதாகிவிட்டது. மேக வெடிப்புகள், கன மழை போன்றவை கணிக்க முடியாதவையாகி வருகின்றன. இவற்றை முன்னறிவிப்பது ஒருபுறம் இருக்கட்டும், கண்காணிப்பதே சவாலானது. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மேக வெடிப்புகள் பெரிய வெள்ளத்திற்கு வழிவகுத்தது அதற்கொரு சான்று. சமீபத்திய தசாப்தங்களில் இவை அடிக்கடி நடப்பதைக் காண்கிறோம்,” எனக் கூறுகிறார். சென்னை மாநகராட்சி இம்முறை முன்னெச்சரிக்கையோடு 2022 பருவமழையைத் தாக்குப்பிடிக்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் கடந்த சில மாதங்களில் மும்முரமாக இறங்கியது. ஆனால், “அந்த கட்டமைப்புகள் போதாது என்பதை பருவமழை தொடக்கத்திலேயே காட்டிவிட்டதாக” கூறுகிறார் ஹாரிஸ் சுல்தான். சென்னை மாநகராட்சி மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாகப் பலனளிக்காதது ஏன்? மழைப்பொழிவின் போது மேற்பரப்பில் நீர் தேங்காமல் நிலத்தடியில் செல்ல வழி செய்வது வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி கோடைக்கால நீர்த்தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அண்னா பல்கலைக்கழகத்தின் நிலவியல் பேராசிரியர் எல்.இளங்கோ. சென்னையின் நீர்த் தேவையை கோடைக் காலங்களில் பூர்த்தி செய்வதற்கான போராட்டம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. நகரத்தில் பல்வேறு நீர்நிலைகள் இருந்தாலும், நீர்த்தேவையில் மூன்றில் ஒரு பங்கு தேவைக்கு நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது. அதை மீள்நிரப்பு செய்வதற்கு மழைப்பொழிவு அவசியம். அதற்கான “கட்டமைப்பு இங்கு இல்லை. அதிகப்படியான மழை பெய்யும்போது அதைச் சேமித்து வைத்தால் தானே அடுத்த ஆண்டுகளில் ஏற்படக்கூடிய கோடை வறட்சியை நகரம் எதிர்கொள்ள முடியும்!” என்கிறார் சுல்தான். மழையின்போது தேங்கும் வெள்ளநீரை உடனடியாக அகற்றிவிட்டோம் என்று அரசு பெருமை பேசுவதையும் தாண்டி, வெள்ள நீர் தேங்காமல் இருக்கவும் அடுத்த ஆண்டு கோடைக்காக கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கவும் வழி செய்ய வேண்டும் என்கிறார் சுல்தான். நகரக் கட்டமைப்பு எப்படியிருக்க வேண்டும்? தென்னிந்திய நகரங்களில் மழைப்பொழிவு ஒழுங்கற்றதாக உள்ளது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை அளவு ஒரே நாளில் பெய்து தீர்த்துவிட்டு நின்றுவிடுவது, வரலாறு காணாத அளவுக்கு மழைக்காலம் முழுவதும் கொட்டித் தீர்ப்பது என்று ஒழுங்கற்ற பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. “மழைநீர் எங்கு பொழிகிறதோ அங்கேயே எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரித்து, சேமிக்க வேண்டும். அரசு, தனியார் என்று அனைத்து கட்டடங்களின் கூரைகளிலும் மழைநீரைப் பிடித்து நிலத்தடியில் சேகரிக்கும் கட்டமைப்பு வேண்டும். இதைச் செய்தால், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பான நகரமாக மட்டுமின்றி வறட்சியில் இருந்தும் சென்னை பாதுகாப்பாக இருக்கும்,” எனக் கூறுகிறார் பேராசிரியர் ஜனகராஜன். இதை ஏற்றுக்கொள்ளும் ஹாரிஸ் சுல்தான், “கட்டடங்களில் அமைக்கப்படும் வடிகால் அமைப்புகளோடு தெருக்களில் அமைக்கப்படும் வடிகால் அமைப்புகளை இணைக்க வேண்டும். அவற்றை நகரத்தின் நீர்த்தேக்கங்களோடு இணைக்க வேண்டும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம், சென்னை எதிர்கொள்ளும் ஒழுங்கற்ற பருவநிலை நிகழ்வுகளைச் சமாளிக்கலாம்,” எனக் கூறுகிறார். தமிழகத் தலைநகரம் உலகளாவிய கவனம் பெறுவது ஏன்? இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, கடல்மட்டத்தில் இருந்து தாழ்வான சமவெளியில் அமைந்துள்ளது. சென்னை காலநிலை மாற்ற விவாதங்களில் உலகளாவிய கவனம் பெறுவதற்கு அதன் நிலவியலும் ஒரு காரணம் என்கிறார் நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன். மேலும், “சமீபத்திய ஐபிசிசி அறிக்கையில் ஆறு இடங்களில் சென்னையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் நகரம் மொத்தமும் நிலவியல்ரீதியாக பேரிடர்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 0 முதல் 5 மீட்டர் என்ற அளவில் தான் சென்னையின் பெரும்பான்மை பகுதிகள் உள்ளன. அதனால் தான் சென்னை உலகளாவிய கவனம் பெறுகிறது,” என்றார். ஐபிசிசி அறிக்கை கடல் மட்ட உயர்வால் இந்தியாவின் மும்பை, சென்னை ஆகிய நகரங்கள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று எச்சரித்துள்ளது. பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வதால், நகரங்களின் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மிகப்பெரும் பேரழிவுகளைச் சந்திக்கவுள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று. உலகளவில் 2050ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய அளவில் வெள்ள சேதங்களை எதிர்கொள்ளும் 20 கடலோர நகரங்களில் சென்னையும் ஒன்று. உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நகரங்களில் 56 சதவீதம், சூறாவளி, வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு ஆகிய 6 பேரிடர்களில் ஏதேனும் ஒன்றிலாவது பாதிக்கப்படுகின்றன. சென்னை, நகோயா, டெஹ்ரான் ஆகிய பெருநகரங்கள் 80 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள். தென்னிந்திய நகரங்களில் காலநிலையின் தாக்கம் இனி எப்படியிருக்கும்? “பலவீனமான புயலில் இருந்து மிகக் கடுமையான சூறாவளியாக உருவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை எடுத்துக் கொண்ட சூறாவளிகள், இப்போது ஒரே நாளுக்குள் தீவிரமடைந்து வருகின்றன. இது, முன்னறிவிப்பு செய்வது, பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு இனி மிகச் சொற்ப நேரத்தையே வழங்கும்,” என்கிறார் ராக்சி மேத்யூ கோல். நாம் நகரங்களை “மறுவடிவமைப்பு” செய்ய வேண்டும் என்கிறார் ராக்சி, “இப்போது காலநிலை மாற்றம், புயல்களின் தீவிரம் ஆகியவை நம் முன்னறிவிப்பு கட்டமைப்புகளுக்கு மேலதிக சவால்களைக் கொடுக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் முன்னறிவிப்புகளுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, தீவிரமடைந்து வரும் புயல்கள், உயரும் கடல் மட்டங்களுக்கு ஏற்ப கடலோர சமூகங்களுக்கு உதவும் நீண்ட கால கொள்கைகளை நாம் வகுக்கவேண்டும்.” என்கிறார் ராக்சி. https://www.bbc.com/tamil/articles/c980gwjrjdwo
  17. 'இந்தி தெரியாதா?' - தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சையத் ஷாஹிசாதி "பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியாதா?" என்று புதுச்சேரி அதிகாரிகளிடம் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி கேட்ட விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவது பற்றி ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்திருந்தார். நவம்பர் 11ஆம் தேதி புதுச்சேரி தலைமை செயலகத்தில் சையத் ஷாஹிசாதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வக்ஃப் வாரிய அமைச்சர், பல்வேறு துறைச் செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். EWS இடஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புது சிக்கல்களை கொண்டுவருமா?12 நவம்பர் 2022 EWS இடஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புது சிக்கல்களை கொண்டுவருமா?12 நவம்பர் 2022 நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆய்வுக் கூட்டத்தில் நடந்தது என்ன? ஆய்வுக் கூட்டம் தொடங்கியதும் சிறுபான்மையினர் பயன்பெறும் நலத்திட்டங்கள் குறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேசத் தொடங்கினார். அவர் அங்கு முழுமையாக இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிய இந்தி மொழி அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலருக்கும் புரியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் சிலர் புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்தி தெரியாது, அதனால் இந்தியில் பேசுவது அவர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே ஆங்கிலத்தில் பேச வேண்டுகோள் என்று வைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு ''தேசிய மொழியான இந்தி அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருப்பது எப்படி'' என்று சையத் ஷாஹிசாதி கேட்டதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சையத் ஷாஹிசாதி இந்தி மொழியில் பேசினார். அதை மற்றொரு அதிகாரி மூலம் மற்றவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ததாகக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி அதிகாரிகளிடம் இந்தி தெரியாதது குறித்துப் பேசியதாகக் கூறப்படும் விஷயம் புதுச்சேரி முழுவதும் பரவத் தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவர் கடுமையான கண்டனம் இதற்குப் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். "இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில் நாடு முழுக்க ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கலாசாரம் என்று கொண்டுவர முயன்று வருகிறது. இது நாட்டை அனைத்து வகையிலும் சீரழிக்கவே செய்யும். ஆனால் ஒன்றிய அரசின் இந்த மனப்பான்மைக்கு ஒத்துழைப்பு தரும் அரசியல்வாதிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் மேலும், மேலும் பதவி உயர்வை வழங்கி வருகின்றனர். இதனால் அவர்களும் ஒன்றிய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்," என்றார் அவர். "அந்த வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி அதிகாரிகள் மத்தியில் இந்தியிலேயே பேசினார். புதுச்சேரி அதிகாரிகள் யாருக்கும் இந்தி தெரியாது, எனவே ஆங்கிலத்தில் பேசினால் நீங்கள் சொல்ல வரும் கருத்தைப் புரிந்து கொள்வோம் என்று தெரிவித்தனர். " ''இதை ஏற்று ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாறாக 'இந்தி தேசிய மொழி உங்களுக்குத் தெரியாதா? இந்தியைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்?' என்று கேட்டு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதை புதுச்சேரி திமுக வன்மையாகக் கண்டிக்கிறது," என்றார் அவர். "இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு தமிழ் பேசும் அதிகாரிகள் மத்தியில் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி புதுச்சேரிக்கு வரும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் தேசிய ஒருங்கிணைப்பு மொழியான ஆங்கிலமும் புதுச்சேரி அலுவல் மொழியான தமிழும் தெரிந்தவர்களை அனுப்பி வைக்கவேண்டும் வலியுறுத்துகிறேன்," என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்தார். கருப்புக் கொடி இதனிடையே திட்டச் செயல்பாடுகள் குறித்து சையத் ஷாஹிசாதி விளக்கமளிக்கப் புதுச்சேரி தலைமை செயலகத்தில் சனியன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்த புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆணைய உறுப்பினரின் செயலைக் கண்டித்தும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தலைமை செயலகம் முன்பு ஒன்று திரண்டனர். சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினருக்கு எதிராகவும் ஆளுநர், முதல்வரைக் கண்டித்தும் கருப்புக் கொடியைக் காட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சமூக அமைப்பினரைக் காவல் துறையினர் கைது செய்தனர். "இந்தி மட்டுமே தெரியும்" - சையத் ஷாஹிசாதி இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி மற்றும் வக்புவாரிய அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் ஒன்றாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சிறுபான்மையின மக்களுடன் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு வக்பு வாரிய தலைவர் நியமனம், வக்பு வாரிய இட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, ஹஜ் புனிதப் பயணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது ஆய்வுக் கூட்டத்தில் சையத் ஷாஹிசாதி இந்தி மொழியில் பேசியதால், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. எனக்கு இந்தி மட்டும் தான் தெரியும், அதனால் இந்தியில் பேசுகிறேன்," என்றார் சையத் ஷாஹிசாதி. இதையடுத்து புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரிடம், ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இந்தி தெரியாதா என்று சையத் ஷாஹிசாதி கேள்வி எழுப்பியதாக வெளியான சர்ச்சை குறித்து பிபிசி கேள்வி எழுப்பியது. அப்போது, "பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்தியுமே தெரியும் என்ற அடிப்படையில் தான் கேட்டார். மற்றபடி சர்ச்சை எதுவும் எழவில்லை," என்று பதிலளித்தார். இந்திய சட்டப்படி இந்தி உள்ளிட்ட 22 மொழிகள் அலுவல்பூர்வ மொழிகள் மட்டுமே; இந்தியாவுக்கு தனி தேசிய மொழி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட இந்தி சர்ச்சை குறித்து மீண்டும் அதே கேள்வியை எழுப்பவே, "பிரிட்டிஷ் மொழி ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழி இந்தி தெரியதா?' என்றுதான் கேட்டார்," என்று அமைச்சர் சாய் ஜெ. சரவணக்குமார் தெரிவித்தார். "வெறுப்புணர்வைக் காட்ட இந்தியைப் பயன்படுத்துகின்றனர்" பிரதமர் நரேந்திர மோதியிடம் தங்கள் விஸ்வாசத்தை நிரூபிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று இந்தி மொழியை ஆயுதமாகக் கையாள்வதாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகத் துணைத் தலைவர் இளங்கோவன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். "இந்தியாவின் ஆட்சி மொழி எல்லா மாநில மொழிகளும் தான் என்று இந்திய அரசமைப்பு சட்டம் சொல்கிறது. அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப ஆட்சி மொழி உள்ளதே தவிர இந்தி தான் இந்தியாவின்‌ ஆட்சி மொழி என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் அனைத்து மாநிலங்களுக்குமான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார். இதை வட மாநிலங்களில் இருந்து வரும் அதிகாரிகள் புரிந்துகொள்வது இல்லை. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தி படிக்க மாட்டார்கள், சாதி அமைப்புகளை எதிர்ப்பாளர்கள் என்ற பரவலான கருத்து உள்ளது. அதன் அடிப்படையில் இங்கு வரும் அதிகாரிகள் அதன் வெறுப்புணர்வை இவ்வாறு காட்டுகின்றனர். இதேபோன்று தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பெரிய சர்ச்சையாக வெடித்தது, அதனால் 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் உலகளவில் டிரெண்ட் ஆனது," என்றார் இளங்கோவன். https://www.bbc.com/tamil/articles/ck7x2xn324po
  18. இலங்கை புதியதோர் எதிர்காலத்தை நோக்கி - 2023 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் முழுமையான உரை 14 NOV, 2022 | 05:01 PM 2023 ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகள் மீது நாட்டின் சாதகமான வேறுபாட்டினை உருவாக்குகின்ற பயணத்தில் கைகோர்க்குமாறும் உறுதுணையைளிக்குமாறும் நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என ஜனாதிபதியும் நாட்டின் 23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் நாம் இம்முன்மொழிவுகளை பின்னணியாக்கி கொண்டு, புதிய பொருளாதார அடிப்படை ஒன்றினை தயார்படுத்துவோம். அதற்கென தேசிய பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கிக் கொள்வோம். அடுத்து வரும் 25 ஆண்டுகள் முழுவதும் அக்கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைபடுத்துவோம் எனவும் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நாட்டின் 23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த பயணத்திற்கு பங்களிப்பு வழங்குவதற்கு தேவையான பின்னணியை இப்போது நான் இந்த பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன். ஒரு பக்கத்தில் பாராளுமன்றத்தின் துறைசார் செயற் குழுக்கள், மறுபக்கத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்ற மக்கள் சபை, அதற்கு மேலதிகமாக அரச நிதி மற்றும் அரச நிதி சேவை பற்றிய செயற் குழுக்கள் பலவற்றை நாம் முன்மொழிந்துள்ளோம். நான் அண்மையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தது போன்று, இந்த செயற்குழு இதுவரையிலும் இந்த பாராளுமன்றத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. விசேடமாக நான் சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத்திட்ட முன்மொழிவு அரச உத்தியோகத்தர்களின் மூலம் அரச பொறிமுறைகளினூடாக நடைமுறைப் படுத்தும் போது துறைசார் செயற்குழுக்களுக்கு பாரியளவு வேலைகளை நிறைவேற்ற முடியும். அரசாங்க செலவினத்தை குறைத்துக்கொள்ளும் முயற்சிக்கும் நிதி பற்றிய செயற்குழுக்களுக்கு பயன்மிக்க விதத்தில் தலையீடு செய்யவும் முடியும். அதனால், அந்த சகல செயற்குழுக்களையும் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு நான் இந்த பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். அப்போது புதிய பயணத்திற்கு, புதிய தோற்றத்தின் முயற்சிக்கான சந்தர்ப்பத்தை எமக்கு உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த சந்தர்ப்பத்திலிருந்து அதிகபட்ச பயனைப்பெற்று நாம் எமது உண்மையான தேசிய வளங்களுக்கு, எமது இளைஞர் பரம்பரைக்கு சிறந்த எதிர்காலமொன்றை உருவாக்கிக்கொடுப்பதற்கு முயற்சிப்போம். அதற்கமைவாக புதிய பொருளாதார அடிப்படையினூடாக நாட்டை மீண்டும் உயர்த்தி வைக்கும் முயற்சிக்கு செயல் வடிவிலான மற்றும் செயல் ரீதியான பங்களிப்பை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முழுமையன உரைக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் https://cdn.virakesari.lk/uploads/medium/file/194828/77th_Budget_Speech-2023__Tamil_.pdf https://www.virakesari.lk/article/140016
  19. மின்னல் தாக்கி ஒருவர் பலி : இருவர் காயம் : நவகத்தேகம பகுதியில் சம்பவம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 12:25 PM (எம்.வை.எம்.சியாம்) புத்தளம், நவகத்தேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நவகத்தேகம - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது காயமடைந்த மூவரும் அம்புலன்ஸ் மூலம் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 39 வயதுடைய ஒருவர் எனவும் அவர் கிரிமெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/139969
  20. நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,பத்மா மீனாட்சி பதவி,பிபிசி தெலுங்கு சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுடெல்லியில் வசிக்கும் 35 வயதான குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. "இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு நீரிழிவு நோய் வந்திருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னுடைய பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தது. நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரகம் செயல் இழந்தது போன்ற சிக்கல்கள் எழுந்ததால் அவர்கள் உயிரிழந்தனர்," என பிபிசியிடம் அவர் கூறினார். ஜோதி இப்போது மருந்துகள் எடுத்துக் கொள்கிறார். நடுத்தர வயது கொண்டவர்களிடம் நீரிழிவு நோய் ஏன் அதிகரித்துள்ளது? "நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள்," என இந்திய நீரிழிவு நோய் பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார். அவர் பிபிசியிடம் மின்னஞ்சல் வழியே தனது கருத்துகளை பரிமாறிக்கொண்டார். அதிக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல் ஆகியவையும் நீரிழிவு நோய்க்கு இட்டுச்செல்வதற்கான முக்கியமான காரணங்கள் என்றும் அவர் கூறினார். திருமணத்திற்கு முன் திடீரென ஜிம்முக்கு போவது சரியா? - இளைஞர்களுக்கு உடல்நலம் பற்றி எச்சரிக்கை13 நவம்பர் 2022 காலையில் பல் துலக்கிவிட்டுதான் டீ, காபி குடிக்கவேண்டுமா?12 நவம்பர் 2022 ஆண்களும் தாய்ப்பால் கொடுக்க முடியுமா?20 ஆகஸ்ட் 2022 ஜோதி போன்ற நடுத்தர வயதில் உள்ளவர்கள் நீரிழிவால் பாதிக்கப்படுவது ஏன்? அவருடைய குடும்பத்தினரின் முந்தைய நீரிழிவு வரலாறு அல்லது அவரது வாழ்க்கை முறை காரணமாக அவருக்கு நீரிழிவு வந்ததா? குடும்பத்தினருக்கு ஏற்கனவே நீரிழிவு இருந்ததற்கான வரலாறு, வாழ்க்கை முறை பழக்கங்கள் ஆகியவை நீரிழிவு நேரிடுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கின்றன என மருத்துவர் மிஸ்ரா கூறுகிறார். ஆலுபூரி, பன்னீர், கோழி இறைச்சி, பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் என தன்னுடைய தினசரி உணவுத் திட்டத்தின்படி உணவு உட்கொள்வதாக ஜோதி கூறினார். நீரிழிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டவுடன் தன்னுடைய உணவு பழக்கத்தை மாற்றினாரா என்று கேட்டபோது, "எங்களுடைய தினசரி உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யவில்லை. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உணவை விரும்புகின்றனர். நல்ல உணவு உண்ணாமல் வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே, நீரிழிவுக்காக மருந்துகள் எடுத்துக் கொண்டபோதிலும், நான் விரும்புவதை உண்கின்றேன்," என்றார். நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது என அமெரிக்காவின் நீரிழிவு மையம் மற்றும் எண்டோகிரைனாலஜியின் நிர்வாக இயக்குநர், உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் லக்ஷ்மி லாவண்யா அலபதி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா மாறி வருகிறதா? உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. சர்வதேச நீரிழிவு நோய் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி உலகம் முழுவதும் 50.37 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். 2019ஆம் ஆண்டு புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது 16 சதவிகிதம் அதிகமாகும். தோராயமாக 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டில் 13.4 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட நான்கு பேரில் ஒருவர் டைப்-2 நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர் என தெரியவருகிறது. கோவிட் பெருந்தொற்று அதிகம் இருந்த காலகட்டத்தில் கூட, நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவருகிறது. நீண்ட நேரம் பணியாற்றுவது, பல்வேறு சுழற்சி முறைகளில் பணியாற்றுவது ஆகியவை ஒருவரை அழுத்தத்தை நோக்கி இட்டுச் செல்லும். இதுவே நீரிழிவு நோய் நேரிடுவதற்கான காரணமாகவும் இருக்கலாம் என மருத்துவர் மிஸ்ரா குறிப்பிடுகிறார். "குடும்பத்தில் முன்பு நீரிழிவு பாதித்த வரலாறு உண்டு என்பது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு விரைவில் என்னை பாதிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்றார் ஜோதி. வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே நீரிழிவு நோய் பாதிக்கும் என்பது தவறான எண்ணம் என கூறும் மருத்துவர் அனூப் மிஸ்ரா, யார் ஒருவரையும் எந்த வயதிலும் நீரிழிவு நோய் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாம் செய்யும் வேலை நமது வாழ்க்கை முறை மீது தாக்கம் செலுத்தி நீரிழிவுக்கான காரணியாக அமையலாம். (சித்தரிக்கும் படம்) இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் இளம் பெண்களிடம் நீரிழிவு நோய் பரவல் என்பது 2000ஆம் ஆண்டில் இருந்தே அதிகரித்து வருவதாக மருத்துவர் அனூப் மிஸ்ரா கூறுகிறார். இது குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் விவரிக்கிறார். இந்த ஆய்வுகளில், குறிப்பாக நகரங்களில் வசிக்கும் இளைஞர்களிடம் அதிக எண்ணிக்கையில் நீரிழிவு நோய் நிகழ்வுகள் காணப்படுவது தெரியவந்திருப்பதாக கூறினார். இந்தியாவின் நீரிழிவு நோய் வழிகாட்டு முறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் 1.29 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு இருப்பது உறுதியானது. 12 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படி அவர்கள் உறுதி செய்கின்றனர்? காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது உடலின் க்ளுக்கோஸ் அளவு வரம்பு 70-100 ஆக இருந்தால் இது வழக்கமான அளவாகும். இந்த வரம்பு 100-125 மில்லி கிராம்களாக இருந்தால் இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்றும், 126க்கு அதிகமாக இருப்பது நீரிழிவு நோய் அறிகுறி என்றும் கணக்கிடப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதை காட்ட, மருந்து நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் இந்த க்ளுக்கோஸ் அளவுகள் குறைக்கப்பட்டிருப்பதாக சில நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தவிர மருத்துவம் மற்றும் இதயவியல் பேராசிரியர் மருத்துவர் பிஎம்.ஹெக்டேவும் இதே கேள்வியை எழுப்புகிறார். அண்மையில் இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்தும் உடற்பயிற்சி: யார், என்ன பயிற்சி செய்ய வேண்டும்?26 ஏப்ரல் 2017 நிமோனியா என்றால் என்ன? முதல் அறிகுறி எது? சிகிச்சைகள் என்ன?12 நவம்பர் 2022 மழைநீர் சத்துகள் நிறைந்ததா? அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா?4 நவம்பர் 2022 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் உயர்த்தப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தரநிலைகள் காரணமா? உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தரநிலைகள் உலகம் முழுவதும் பொருந்தக்கூடியது என மருத்துவர் லட்சுமி லாவண்யா அலபதி கூறுகிறார். மருந்து நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் அதிக அளவு கொடுக்கின்றனவா? "இது தவறான கருத்து. தவிர, உண்மையில் மருத்துவர்கள்தான் நோயாளிகளிடம் மாற்றம் செய்யும்படி அறிவுறுத்த வேண்டும்," என்கிறார் மருத்துவர் லட்சுமி. "குறைந்த அளவிலான மருந்தில் இருந்துதான் சிகிச்சைகள் தொடங்கப்பட வேண்டும். நீரிழிவு நோய் தாக்கத்தின் அளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கப்பட வேண்டும். மருந்துகளின் அளவை குறைக்க வேண்டிய தேவை அல்லது அதிகரிக்க வேண்டிய தேவைக்கு ஏற்ப மருந்துகள் மாற்றப்பட வேண்டும்," என்றும் அவர் சொல்கிறார். 2019ஆம் ஆண்டில் 10.5 லட்சம் பேர் நீரிழிவு நோயால் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இந்த பின்னணியில் உலக சுகாதார அமைப்புடன் கூடுதலாக உலகம் முழுவதும் பரவியுள்ள சில இதர சுகாதார அமைப்புகள், முன்கூட்டியே கண்டறிவது குறித்து பரிந்துரைக்கின்றன என மருத்துவர் லட்சுமி கூறுகிறார். கோவிட் பெருந்தொற்று தாக்கத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாக மருத்துவர் மிஸ்ரா கூறுகிறார். சாதாரண நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, கோவிட் தொற்று காரணமாக க்ளுக்கோஸ் அளவு அதிகரித்திருக்கிறது. நீரிழிவு நோய் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என மேலும் அவர் கூறினார். நீரிழிவு நோயின் வரலாறு நீரிழிவு நோய் குறியீடு ('The Diabetes Code) என்ற புத்தகத்தில் மருத்துவ வரலாற்றில், நீரிழிவு நோய் என்பது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என மருத்துவர் ஜேசன் ஃபாங் குறிப்பிடுகிறார். கி.மு. 1550ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பண்டைய எகிப்திய மருத்துவ நூலான எபர்ஸ் பாப்பிரஸ், மற்றும் பண்டைய இந்து வேதங்களிலும் நீரிழிவு நோய் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு நோய் என்ற பெயர் எப்படி கொடுக்கப்பட்டது? கி.மு 250ஆம் ஆண்டில் மெம்பிஸின் அப்போலோனியஸ் என்ற கிரேக்க மருத்துவர் நீரிழிவு நோய் என்ற பெயரை உருவாக்கினார் அதிக அளவு சிறுநீர் கழித்தல் என்பதுதான் இதன் பொருளாகும். 1675ஆம் ஆண்டில் டயாபடீஸ் என்பதுடன் மெலிட்டஸ் (தேன்) என்ற பதத்தை தாமஸ் வில்லிஸ் என்பவர் சேர்த்தார். எனினும், 1797ஆம் ஆண்டு வரை நீரிழிவு நோய்க்கு முறையான சிகிச்சையை யாரும் கண்டறியவில்லை. ஸ்காட்டிஷ் ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் ரோவ், உணவு திட்டம் மூலம் கார்ப்போஹைட்ரேட் அளவை குறைக்கும் முதல் பரிசோதனையை மேற்கொண்டார். அபோலி நாயர் பௌஹார்ட் (1806-1886) என்ற மருத்துவர், நீரிழிவு நோயாளிகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த உணவு திட்டத்தை முதன் முதலாக முறைப்படுத்தினார். 1910ஆம் ஆண்டு நீரிழிவு நோய்க்கு இன்சுலின் பற்றாக்குறைதான் காரணம் என்பதை சர் எட்வர்ட் ஷார்ப் ஷேஃபர் என்பவர் கண்டுபிடித்தார். 'இன்சுலா' என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து இன்சுலின் என்ற ஆங்கில வார்த்தை வந்தது. கணையத்தில் உள்ள லாங்கர்ஹான்ஸ் என்ற திசு கட்டமைப்பின் செல்களில் இன்சுலின் உற்பத்தி செய்வதால் இது அந்தப் பெயரைப் பெற்றது. டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஃபிரடெரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் ஜான் மெக்லியோட் ஆகியோர் 1921ஆம் ஆண்டு இன்சுலினை கண்டுபிடித்தனர். பேண்டிங் மெக்லியோட்டுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல் , அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறியது. எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளதாக மருத்துவர் லட்சுமி லாவண்யா கூறுகிறார். இதன் காரணமாக என்ன பிரச்னைகள் எழுகின்றன? ரத்தத்தின் அதிக குளுக்கோஸ் அளவு என்பது ரத்த குழாய்களை பாதிக்கலாம். காலில் தொற்று ஏற்படுதல் மற்றும் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பார்வையின்மை, சீறுநீரகம் செயல் இழத்தல் மற்றும் மாரடைப்பு போன்ற உடல் நலக்கோளாறுகள் நேரிடுவதற்கு முதன்மையான காரணியாக நீரிழிவு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. நீரிழிவு நோய் நிலையில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமா? அண்மைக் காலமாக, பல்வேறு அமைப்புகளின் விளம்பரங்களில், நீரிழிவு நோய் நிலையில் மாற்றம் என கோரப்படுவதை பரவலாக இணையவெளியில் காணமுடிகிறது. தங்கள் அமைப்புகளால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின்படி நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக நோயாளிகளின் அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றனர். நூற்றுக் கணக்கான நல மையங்கள், சாத்வீக உணவு முன்னெடுப்பாளர்கள் மற்றும் இணையவழி வணிக தளங்கள் (குறைந்த குளுக்கோமிக் உள்ளடக்கம் கொண்டவை) லோகி (LOGI ) எனப்படும் உணவு வகையை விற்பனை செய்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது என்ற அறிகுறியையும் இவை குறிப்பிடுகின்றன. உணவு திட்டம் (டயட் ப்ளேன்) மற்றும் உடற்பயிற்சியின் மூலம் நீரிழிவு நோயை எளிதாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என மருத்துவர் பிஎம்.ஹெக்டே கூறுகிறார். "வாழ்க்கை முழுவதும் மருந்து எடுத்துக்கொண்டால்தான் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்ற தீர்வை எதிர்பாரதவிதமாக உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோய் அமைப்புகள் கொண்டிருக்கின்றன," என மருத்துவர் ஜேசன் ஃபாங் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES உணவே மருந்து "உணவே மருந்து," என விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரக்யானந்த் சொல்கிறார். 44ஆவது வயதில் பிரக்யானந்துக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் குறிப்பிட்ட அளவுக்கு அதிமாகவே இருந்தன. எனினும், எந்தவித மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமல் தனது நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பிபிசியிடம் அவர் குறிப்பிட்டார். "ஒரு நாள் இனிப்பு உண்ட பிறகு, தலை சுற்றுவது போல உணர்ந்தேன். என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உடனடியாக நான் ஆய்வகத்துக்கு சென்று எனது ரத்தத்தை பரிசோதனை செய்தேன். உணவு உண்ணாமல் இருக்கும்போது என் உடல் ரத்தத்தில் சர்க்கரை அளவு 280 ஆக இருந்தது கண்டறியப்பட்டது. உணவு உண்ட பிறகு அந்த அளவு 400க்கும் அதிகமாக இருந்ததும் தெரியவந்தது," என்று பிரக்யானந்தா நினைவு கூர்ந்தார். மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற உடன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அலோபதி மருந்துகளுடன் ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துக் கொள்ளத் தொடங்கினேன் என்று அவர் கூறினார். இந்த மருந்துகளை எடுத்துக் கொண்ட ஓராண்டு கழித்து அவர் ஹோமியோபதி மருந்துகளையும் எடுத்துக் கொண்டார். ஹோமியாபதி மருந்துகள்தான் குணப்படுத்துவதாக இருந்ததாக கூறினார். ஆனால், இதோடு அவர் நிறுத்தவில்லை. அவர் ஆந்திர பல்கலைக்கழகத்தில் யோகா முதுநிலை படிப்பில் சேர்ந்தார். மருந்துகள் எடுத்துக் கொண்டதுடன் கூடுதலாக யோகா மற்றும் தியான பயிற்சிகளையும் மேற்கொண்டதாக மேலும் அவர் கூறினார். உணவு திட்டம் குறித்தும் உணவு திட்டத்தில் சிறுதானியங்களை சேர்ப்பது குறித்தும் மருத்துவ வல்லுநர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகளின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார். ஏறக்குறைய நான்கரை ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு சில மூலிகைகள், சிறுதானியங்கள் ஆகியவை இணைந்த எளிதாக தயாரிக்கப்படும் சில உணவு வகைகளை தாம் தயாரித்ததாக பிபிசியிடம் அவர் தெரிவித்தார். அவினாஷ் எனப்படும் தனது ஸ்டார்ட் அப் நிறுவனம், ஹைதராபாத் நகரில் உள்ள சிறுதானிய ஆராய்ச்சிக்கான இந்திய மையத்தின் வாயிலாக நிதி உதவி அளிப்பதற்காக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு2 நவம்பர் 2022 வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?12 நவம்பர் 2022 பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம்13 நவம்பர் 2022 அனைத்து நிகழ்வுகளிலும் நீரிழிவு மாற்றம் சாத்தியமா? நீங்கள் ஓர் உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளை முறைப்படி மேற்கொண்டால், சில வகையான நீரிழிவு நோய்களில் மாற்றம் ஏற்படும் என மருத்துவர் லட்சுமி சொல்கிறார். அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல் , அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறியது. எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளதாக மருத்துவர் லட்சுமி லாவண்யா கூறுகிறார். நீரிழிவு நோய் ஏற்படுதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். "சில நேரங்களில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் அல்லது கோவிட் தொற்று காரணமாகவும் அல்லது பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும் போதும் கூட நீரிழிவு நோய் அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோய் ஏற்படும்போது வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் மருந்துகள் ஆகியவற்றின் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும்," என்கிறார் மருத்துவர் லட்சுமி. "ஆனால், உடலில் உள்ள இன்சுலினை உருவாக்கும் பீட்டா செல்கள் பாதிப்படைந்தால், அதன் செயல்பாடுகள் குறையும். அப்போது நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்காது," என்றார் அவர். தவிர, முழுமையான இன்சுலின் குறைபாடு இருக்கும்போது நீரிழிவு நோயில் மாற்றம் என்பது சாத்தியமில்லை. நீரிழிவின் தாக்கம் குறைந்திருக்கின்றதா என்று பார்ப்பதற்கான ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் சோதனையை ஒருவர் நிறுத்தக் கூடாது என்று அவர் கூறுகிறார். இவையெல்லாம் மருத்துவர்களின் மேற்பார்வையில் மட்டுமே செய்யப்பட்ட வேண்டும், சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு மாற்றம் குறித்த பிரசாரங்கள் "உடல்நல மையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது. உணவு முறை மற்றும் உடற்பயிற்சியோடு கூடுதலாக, மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்," என்றும் அவர் கூறுகிறார். ஒவ்வொருவருக்கும் பொதுவான உணவு திட்டம் இருக்க முடியாது, இது தனிப்பட்ட நபர்களின் உடல் அமைப்பு, உடல் நலத்தின் நிலை ஆகியவற்றைப் பொறுத்தது என்று மேலும் அவர் கூறினார். தவிர பிரக்யானந்தாவும், இதே கருத்தை முன் வைக்கிறார். யோகா, பிராணயாமம், உணவு பழக்கங்கள் மூலமே தனது நீரழிவு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறினார். என்ன மாதிரியான உணவு திட்டம் ஏற்றது? 1923ஆம் ஆண்டில் சர் வில்லியம் அஸ்லர் என்பவர் எழுதிய ஒரு மருத்துவ அறிக்கையில், கார்ப்போஹைட்ரேட்டை கிரகிக்கும் உடலின் திறனில் இழப்பு ஏற்படுவதே நீரிழிவு நோயின் அறிகுறி என கூறப்பட்டுள்ளது. "ஆனால், இன்சுலின் வருகையால், கார்போஹைட் எடுத்துக்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது, " என ஜேசன் ஃபாங் கூறுகிறார். உணவு திட்டத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் கார்ப்போஹைட்ரேட்களை குறைப்பதன் மூலம் இன்சுலின் அளவை குறைப்பதை இது பரிந்துரைக்கிறது. உண்ணாமல் இருப்பது, உணவு திட்டம் மற்றும் ஊட்டசத்து ஆகியவை முழுமையாக 2ஆம் வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிறந்தாகும் என சர்க்கரை நோய் கல்வியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். சுபா ஸ்ரீ ரே கூறுகிறார். அதிக நார்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை கொண்ட உணவுகளை நீங்கள் உண்ணலாம் என்றும் அவர் கூறுகிறார். ஆரஞ்சு, தர்பூசணி, கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம். பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், ஓட்ஸ், அரிசி கேக்குகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை உடல்நலனுக்கு நல்லது என இதில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார். சர்க்கரை நிறைந்த இனிப்புகளுக்கு மட்டுமின்றி, சோடா, பிஸ்கெட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள், கேக் வகைகள், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நாம் உட்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது என சுபஸ்ரீ கூறுகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருப்பது சிறந்த சிகிச்சை என ஜேசன் ஃபாங் கூறுகிறார். பல நூற்றாண்டுகளாக இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு கட்டுக்குள் வந்த பின்னரும் கூட, ஒருவர் வாழ்க்கை முறை மாற்றத்தை புறக்கணித்தால், மீண்டும் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்," என பிரக்யானந்தா எச்சரிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cjqweq0yxk4o
  21. சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அதே சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 12:05 PM 17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் எனக் கூறப்படும் தொலைபேசி பழுதுபார்ப்பவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் அதனைப் பழுதுபார்த்து தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் தனது கைத்தொலைபேசியை சோதித்தபோது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தனது முகநூல் கணக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டிருந்தமையினால் மீண்டும் குறித்த நபரிடம் கூறி புதிய முகநூல் கணக்கு ஒன்றை செயற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு நாட்களுக்குப் பின்னர் பல நண்பர்கள் குறித்த சிறுமியை தொலைபேசியில் அழைத்து, "என்ன செய்கிறீர்கள், பைத்தியக்காரத்தனமான காரியங்களைச் செய்யாதீர்கள்" என்று கூறியபோதே தனது முகநூல் கணக்கு இவ்வாறு திருடப்பட்டமை தெரிய வந்ததாகவும் அந்தச் சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139964
  22. துருக்கி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி – பெண் பயங்கரவாதியாக இருக்கலாம் என சந்தேகம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மத்திய இஸ்தான்புல்லியின் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற வெடிவிபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 4:20 மணியளவில் தக்சிம் சதுக்கம் பகுதியிலுள்ள ஒரு கடை வீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இஸ்தான்புல் நகர ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்தார். இது குறித்து ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள துருக்கி உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் சுலைமான் சாய்லு, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். இக்கட்சி துருக்கியில் இருக்கும் குர்திஸ்தான் பகுதியை தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்று கோரும் ஆயுதக் குழுவாகும். துணை அதிபர் ஃபுவாட் ஒக்டே, குண்டுவெடிப்பு ஒரு பெண்ணால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அதிபர் தாயீப் எர்துவான் கூறினார். அவர் இஸ்தான்புல்லில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது, “கொடூரமான தாக்குதல்” என்று இந்தத் தாக்குதலைக் குறிப்பிட்டு கண்டனம் செய்தார். மேலும் “பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்” காற்றில் பரவியிருப்பதாகக் கூறினார். நீதி அமைச்சர் பெகிர் போஸ்டாக் துருக்கிய ஊடகத்திடம் பேசியபோது, குண்டுவெடிப்பு நடைபெறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு பெண் ஒருவர் அந்தப் பகுதியிலுள்ள பெஞ்சில் 40 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்திருந்தார் என்றார். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்தியாவின் இடைமறிப்பு ஏவுகணைக்கு பாகிஸ்தானிடம் பதில் உள்ளதா?8 நவம்பர் 2022 13 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி: 37 முறை யாரும் வெல்ல முடியாதது ஏன்?7 நவம்பர் 2022 மலேசியாவுக்கு மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு - அதிர்ச்சிக்குறிப்புகள்6 நவம்பர் 2022 அரசாங்க அமைச்சர் டெரியா யானிக் ஒரு ட்வீட்டில், அரசாங்க அமைச்சக ஊழியர் மற்றும் அவருடைய இளம் மகள் இந்தச் சம்பவத்தில் பலியானவர்களில் உள்ளதாகக் குறிப்பிட்டார். “இஸ்திக்லால் தெருவைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் முன்னும் பின்னுமாகச் சென்றகொண்டிருந்தன. ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்தன,” என்று அப்பகுதியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஆர்லா குரின் தெரிவித்தார். பரபரப்பாக இருக்கும் தெருவில் வழக்கமாகத் தங்கள் கடைகளின் வாசலில் நின்று கொண்டிருக்கும் பல கடைக்காரர்கள் திகைத்துப் போனார்கள். இந்தச் சம்பவம் நகரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று அவர் கூறினார். குண்டுவெடிப்பு நடந்தபோது இஸ்திக்லால் தெருவில் உள்ள இன்டர்நெட் கஃபே ஒன்றில் இருந்த ஹயாத், சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டதாகக் கூறினார். “மக்கள் ஓடுவதையும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையை நோக்கி இன்டர்நெட் கஃபே வழியாகச் செல்வதையும் நான் கண்டேன். அது கட்டுப்பாடற்ற உணர்ச்சிப்பெருக்கு நிறைந்து இருந்தது," என்று அவர் கூறினார். நேரில் பார்த்த மற்றொரு சாட்சியான ஜெமால் டெனிஸ்ஜி, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 50மீட்ட தொலைவில் இருந்தார். “கருப்புப் புகை மூடியது. சத்தம் கிட்டத்தட்ட காது கேட்காத அளவுக்கு மிகவும் வலுவாக இருந்தது,” என்று ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார். தாக்குதலைத் தொடர்ந்து இஸ்தான்புல் மக்களிடையே “அச்சம் நிலவுகிறது” என்று 20 வயதான ஐயுப் பிபிசியிடம் கூறினார். மேலும், மக்கள் தக்சிம் போன்ற நெரிசலான பகுதிகளில் இருந்து விலகியிருக்கத் தேர்வு செய்யலாம் என்றும் கூறினார். இந்தத் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து துருக்கிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES “பயங்கரவாதத்தை எதிர்ப்பதில்” அதன் நேட்டோ கூட்டாளியுடன் “தோளோடு தோள் நிற்பதாக” அமெரிக்கா கூறியதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கேரின் ஜான் பியர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் துருக்கியில் எழுதியுள்ள ஒரு ட்வீட்டில், “உங்கள் வலியை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் உடங்களுடன் இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டார். யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, துருக்கிய மொழியில் எழுதிய ஒரு ட்வீட்டில், “நட்புமிக்க துருக்கிய மக்களின் வலி எங்கள் வலி,” என்று குறிப்பிட்டார். பாகிஸ்தான், இத்தாலி, க்ரீஸ் உள்ளிட்ட நாடுகளும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தின. இஸ்திக்லால் தெரு, கடைகள் நிரம்பிய நகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்று. இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டில் தற்கொலை குண்டுதாரியால் இலக்கு வைக்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cl4gn3g77eeo
  23. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது By T. SARANYA 14 NOV, 2022 | 01:37 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பல குற்றச்சாட்டுக்களின் கீழ் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139984
  24. ஆகா ஓகோ கூட்டமைப்புத் தலைமை ஜனாதிபதிக்கு எதிராக திரும்பிட்டாம்! அதால அவர்களை விழுத்தி ஏவல் நாய்களை கொண்டு வரப்போறாராம்!
  25. 2 பிள்ளைகளின் தாய் கொலை : 7 மாதங்களின் பின் கைதான ஹோட்டல் உரிமையாளர்! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 10:51 AM இரண்டு பிள்ளைகளின் தாயான துஷாரி தில்ஹானி என்பவர் 7 மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டு பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் மலசலகூட குழியில் வீசப்பட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிரிஇப்பன்ஆர பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் என தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்துக்குத் தப்பிச் சென்ற சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க அவ்வப்போது தனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் உயிரிழந்த பெண்ணை இரவு விடுதியிலிருந்து பாணந்துறை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அறையில் தங்கவைத்து மூவருடன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/139949
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.