Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. “தாயை இழந்தேன், வாய்ப்பை இழந்தேன், எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவது?” - ராஜீவ் காந்தியோடு பலியான காங்கிரஸ் பிரமுகர் மகன் கேள்வி கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சம்பவத்தில் பலியான காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளளை அடுத்து, 30ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளதை அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். மறுபக்கம், அந்த சம்பவத்தில் தங்கள் குடும்பத்தை இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் கடுமையான விமர்சனத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த சமயத்தில், ஸ்ரீபெரும்புதூரில் தனு என்ற பெண் நடத்திய தற்கொலைப் படை மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், மனித வெடிகுண்டு தனு, ராஜீவ் காந்தி அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என 16 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் மோசமான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்திற்கு காரணம் விடுதலைப் புலிகள் என குற்றம்சாட்டப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர், 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்தனர். கடந்த மே மாதம், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்தது. தற்போது மீதமுள்ள ஆறு பேரும் விடுதலை பெற்றுள்ளனர். ராஜீவ் காந்தி கொலையுண்ட சமயத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு மகளிர் அணியைச் சேர்ந்த சந்தானி பேகமும் உயிரிழந்தார். அவரது மகன் அப்பாஸ் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் அந்தச் சம்பவத்தால் அனாதையாக வளர்ந்ததாகக் கூறுகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய அப்பாஸ், ''நாங்கள் மூவரும் சிறுவர்கள். என் அண்ணன்களுக்கு 12, 14 வயது, எனக்கு 10 வயது. எங்களின் தந்தை 1988இல் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால், எங்கள் தாயார் மட்டும்தான் எங்களை வளர்த்தார். அன்று அந்த கூட்டத்தில் அவர் இறந்துபோவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரும் எங்களை புறம்தள்ளினர். எங்களுக்கு உதவ யாரும் இல்லை. அரசாங்கம் அப்போது, ரூ.40,000 இழப்பீடு கொடுத்ததாகச் சொல்கிறார்கள். யார் அதைப் பெற்றார்கள் என்றுகூட எங்களுக்கு தெரியாது. இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் அனாதையாக வளர்ந்தோம்,'' என்கிறார் அப்பாஸ். படக்குறிப்பு, ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன் உள்ளிட்டோர் விடுதலை13 நவம்பர் 2022 ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதையும், வழக்கு கடந்து வந்த பாதையும்11 நவம்பர் 2022 ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"19 மே 2022 தற்போது சென்னை பாடி பகுதியில் கடிகார கடை ஒன்றை நடத்திவரும் அப்பாஸ், சிறுவயதில் பெற்றோரை இழந்து, படிப்பை இழந்து, முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறுகிறார். ''ஏழு பேரையும் விடுவித்தார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எங்கள் கண்ணீருக்கு யார் பதில் தருவார்கள். எங்களுக்காக யார் பேசுவார்கள்? அவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள், அவர்கள் குடும்பத்துடன் இருப்பார்கள், எங்களுக்கு நாங்கள் இழந்தவர்கள் மீண்டு வரப்போவதில்லை,''என்கிறார் அப்பாஸ். குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தபோது காவல் ஆய்வாளராக இருந்தவர் அனுசுயா எர்னஸ்ட். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அவர், ராஜீவ் காந்தி கொலையான நேரத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர். அவர் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''இப்போதும் என் முகத்தில் குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள் உள்ளன. என் இரண்டு விரல்களை அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் இழந்தேன். இன்னும் என் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. எனக்கு என்ன நீதி கிடைத்துள்ளது? என்னைப் போல காயம் அடைந்தவர்கள், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு யார் நீதி வாங்கி தருவார்கள்?,''என கேள்வி எழுப்புகிறார். படக்குறிப்பு, சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த அனுசுயா ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள், குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக பேசியதை பற்றி கேட்டபோது, ''அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. அவர்கள் நேரடியாக குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டனர். ஆனால் அவர்கள் மன்னித்துவிட்டனர். நாங்கள் தினமும் அந்த இழப்பின் சுவடுகளுடன் வாழ்கிறோம். எங்களுக்கு ஆதரவு தருபவர்கள் யாரும் இல்லை,''என்கிறார். மேலும், ''ஒரு (முன்னாள்) பிரதமரை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் விடுதலை தந்தால், யாருக்குதான் தூக்குதண்டனை கொடுப்பார்கள்? இந்த தீர்ப்பை வைத்து, இனி பலரும் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள்,''என்கிறார் அனுசுயா. குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கும் குடும்பங்கள் நீதி கேட்பது குறித்து, ராஜீவ் காந்தி கொலையான சமயத்தில் சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் பகவான் சிங்கிடம் கேட்டபோது, ''இந்த கொலையை திட்டமிட்ட விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லை. கொலையில் பலியான ராஜீவ் காந்தி குடும்பத்தினர் கூட, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல், கொலை வழக்கில் கைதானவர்கள் யாருக்கும் அந்த சம்பவம் நடக்கப்போகிறது என்று தெரியாது என்பது புலன்விசாரணையில் வெளியானது. அதனால், அவர்களை விடுவித்துள்ளது என்பது, நம் நீதிமன்றத்தின் தன்மையை உணர்த்துகிறது. இழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு பெரிய வலி ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், அதற்காக எத்தனை ஆண்டுகள் தண்டனை தந்தாலும், அது ஈடாகாது, மன்னிப்பது சரியான முடிவுக்காக இருக்கும்''என்கிறார். மேலும், ''குற்றவாளிகளை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன், தனது குறிப்பில், பேரறிவாளன் தன்னிடம் தெரிவித்த தகவல்களை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றார். அதனால், இந்த வழக்கும், அதன் விசாரணையிலும் பல ஓட்டைகள் உள்ளன. மேலும், அதனைப் பற்றி விசாரிக்க தொடங்கபட்ட விசாரணை ஆணையமும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஏழு பேர் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கவும் குரல் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்,''என்றார். https://www.bbc.com/tamil/articles/c3g9v0kq36lo
  2. 25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:39 PM அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கைப்பைகளை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/140336
  3. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை முகத்துக்கு நேராக குற்றம் சாட்டிய ஷி ஜின்பிங் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜஸ்டின் ட்ரூடோ - ஷி ஜின்பிங் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் முகத்துக்கு நேராகக் குற்றம் சாட்டிப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அரிய சம்பவம் இந்தோனீசியாவின் பாலி நகரில் தற்போது நடந்து முடிந்துள்ள ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டின்போது நிகழ்ந்தது. மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பேசிக்கொண்ட விஷயங்கள் ஊடகங்களில் கசிந்தது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மொழிபெயர்ப்பாளர் உதவியோடு குற்றம் சாட்டிப் பேசினார். கனடா தேர்தலில் சீனா உளவு பார்த்ததாகவும் தலையீடு செய்ததாகவும் கூறப்படுவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது ட்ரூடோ பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளார் ஷி ஜின்பிங். கைதான கனடா நாட்டவரை உளவாளிகள் என குற்றஞ்சாட்டும் சீனா4 மார்ச் 2019 ஹூவாவெய் நிதி அதிகாரி கைது: மனித உரிமை மீறல் என்கிறது சீனா6 டிசம்பர் 2018 பேச்சுவார்த்தை விவரம் கசிந்தது குறித்துப் பேசிய ஜின்பிங் ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையாக இல்லை என்றும் இத்தகைய நடத்தை பொருத்தமற்றது என்றும் நேருக்கு நேராகக் குற்றம் சாட்டியுள்ளார். இயல்பான சந்திப்பின்போது இப்படி நேருக்கு நேராகக் குற்றம் சாட்டுவது தலைவர்களுக்கு இடையில் அரிய நிகழ்வு. வீடியோவில் இருப்பது என்ன? பத்திரிகையாளர்கள் வீடியோவில் பதிவான இந்த நிகழ்வில் ஷி ஜின்பிங்கும் ட்ரூடோவும் அருகருகே நின்று பேசுகிறார்கள். "நாம் விவாதித்த எல்லாமும் செய்தித்தாள்களுக்கு கசியவிடப்பட்டிருக்கிறது. இது முறையற்றது" என்று ஷி ஜின்பிங், ட்ரூடோவிடம் சீன மொழியான மான்ட்ரினில் கூறுகிறார். இதற்கு சிரித்துக்கொண்டே தலையாட்டிய ட்ரூடோ, "கனடாவில் நாங்கள், சுதந்திரமான, வெளிப்படையான, மனம் திறந்த உரையாடலில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்," என்று பதில் அளிக்கிறார். "ஆக்கபூர்வமாக சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம். ஆனால், நாம் உடன்பாடு காணமுடியாத விஷயங்களும் இருக்கும்," என ட்ரூடோ கூறினார். அவர் பேசி முடிக்கும் முன்பாகவே குறுக்கிட்ட ஷி ஜின்பிங், "அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள்" என்று கூறிவிட்டு ட்ரூடோ கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு நகர்ந்து சென்றார். சீனாவுக்கான கனடா தூதரை நீக்கிய ஜஸ்டின் ட்ரூடோ - காரணம் என்ன?27 ஜனவரி 2019 கனடாவை சேர்ந்தவருக்கு சீனா தூக்குத்தண்டனை விதிப்பு: இரு நாட்டு உறவில் பதற்றம்15 ஜனவரி 2019 சீனா - கனடா இறுக்கம்: காரணம் என்ன? இரு தலைவர்கள் இடையிலான சுருக்கமான இந்த உரையாடல் சீனா - கனடா இடையே நிலவும் இறுக்கமான நிலையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. சீனாவின் ஹுவாவேய் நிறுவன அதிகாரி மெங் வாங்சூ என்பவரை 2018இல் கனடா கைது செய்தது. அதைத் தொடர்ந்து சீனாவில் இரண்டு கனடா நாட்டவர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் இறுக்க நிலை உருவானது. பிறகு இந்த மூவருமே விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சமீபத்தில் கனடாவில் ஹைட்ரோ-கியூபெக் நிறுவன ஊழியர் யூஷெங் வாங், வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் இந்த உரசல் தீவிரமாகியுள்ளது. கனடாவின் பொருளாதார நலன்களுக்குப் பாதகமாக, சீனாவுக்கு பலன் தரும் வகையில் வணிக ரகசியங்களைப் பெற்றதாக அவர் மீது கனடா போலீஸ் குற்றம் சாட்டியது. இது நடந்துகொண்டிருந்தபோது, ஷி ஜின்பிங், ட்ரூடோ ஆகிய இரு தலைவர்களும் ஜி20 மாநாட்டில் இருந்தனர். https://www.bbc.com/tamil/articles/ckvqd52lkjwo
  4. மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:35 PM படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியில் பணிபுரியும் போது அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/140338
  5. 12 இலங்கை பெண்கள் ஓமானில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை - காவிந்த ஜயவர்தன By T. SARANYA 17 NOV, 2022 | 03:45 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையைச் சேர்ந்த 12 பெண்கள் வீட்டுப்பணிக்காக அபுதாபிக்கு அழைத்து செல்லப்பட்டு ஓமானில் நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசேட கூற்றொன்றை முன்வத்து அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலில் அமர்த்துவதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த 12 பெண்கள் ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட குறித்த பெண்கள் அங்கு நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர். தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்போதைய பொருளாதார பாதிப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பினை தேடிச்செல்கின்றனர். இந்த நிலையில்,? எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய தன்மானத்தை அடகு வைக்க முடியாது.எனவே இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், விதிமுறைகளையும் நியதிகளையும் மீறி செயற்படுகின்றன. அதேபோன்றுதான் சிலரின் நடவடிக்கைகளினால் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்க ஏதுநிலை காணப்படுகின்றது. ஆகையினால் குறித்த சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொளப்படும் என்றார். https://www.virakesari.lk/article/140361
  6. வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் திடீர் மரணம் By T. SARANYA 17 NOV, 2022 | 09:47 AM வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு (16) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக தனது விடுதியில் இறந்துள்ளார். தனது சக ஆசிரிய மாணவர்களிடம் உணவு வாங்கி வருமாறு கூறிவிட்டு விடுதியில் படுத்திருந்துள்ளார். உணவு வாங்கிக் கொண்டு சக ஆசிரிய மாணவர்கள் அங்கு வந்த போது காய்ச்சல் காரணமாக குறித்த ஆசிரிய மாணவன் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதில், வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் விவசாய பாடப் பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான மட்டக்களப்பு, காரைத்தீவினை சேர்ந்த ஜிந்துஜன் என்பவரே மரணமடைந்தவராவார். இதேவேளை, உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/140291
  7. அபுதாபியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் -ஆள்கடத்தல் கும்பல் குறித்த புதிய தகவல் By RAJEEBAN 17 NOV, 2022 | 11:56 AM அபுதாபியில் சிக்குண்டுள்ள இலங்கை பெண்கள் இலங்கையை சேர்ந்த பிரபல தம்பதிகளிடம் உதவி கோரியுள்ளதை தொடர்ந்து ஆள்கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இலங்கையின் பிரபலமான தம்பதியினரிடம் பணியாளாக பணியாற்றிய பெண்ணொருவர் ஓமானிற்கு பணிப்பெண்ணாக செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார். சில நாட்களின் பின்னர் தனது மகளை தொடர்புகொண்டுள்ள அவர் தன்னையும் 16 பெண்களையும் அறையொன்றில் அடைத்துவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். தன்னுடைய கடவுச்சீட்டு கையடக்தொலைபேசியையும் அறையில் உள்ள ஏனைய பெண்களினது கடவுச்சீட்டுகளையும் கையடக்க தொலைபேசகளையும் பறித்து வைத்துள்ளனர் எனவும் அவர் தனது மகளிற்கு தெரிவித்துள்ளார். மறைத்து வைத்திருந்த தொலைபேசியை பயன்படுத்தி அவர் தனது மகளை தொடர்புகொண்டுள்ளார். மகள் பிரபல தம்பதியினரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்துள்ளார் இந்த பெண்களில் அனேகமானவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட தம்பதியினர் தெரிவித்துள்ளனர். மகளின் தகவலை தொடர்ந்து வட்ஸ்அப்பினை பயன்படுத்தி தேடியவேளை குறிப்பிட்ட பெண் அபுதாபியில் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். .மேலும் அந்த தம்பதியினர் வட்ஸ் அப்பினை பயன்படுத்தி அந்த பெண்ணின் ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர் இந்த ஆவணங்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட பெண் அபுதாபிக்கு விசிட் விசாவில் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. ஹட்டனில் உள்ள தரகர் மூலம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள முகவர் குறிப்பிட்ட பெண்ணை அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட முகவர் நிலையம் மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு குறிப்பிட்ட பெண்ணின் விபரங்களை அனுப்பியமையும் அவர்கள் குறிப்பிட்ட பெண்ணை ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் பணிபுரிந்தமையும் தெரியவந்துள்ளது. பலர் இந்த விடயத்தில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய நபரை கண்டுபிடிக்கமுடியவில்லைஇ என இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வரும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/140309
  8. அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற தனுஷ்கவுக்குத் தடை! இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாடவும் தடை By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 11:27 AM பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது. கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதின்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 150,000 அவஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது. அவர் மீதான வழக்க விசாரணை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனுஷ்கவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவத்றகும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது சம்மதமின்றி தன்னுடன் தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதிவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 7 ஆம் திகதி மறுத்திருந்தார். அதன்பின் தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பாக இரண்டாவது முயற்சியை அவரின் சட்டதரணிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், சிட்னி டோனிங் சென்ரரிலுள்ள உள்ளூர் நீதிமன்மொன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/140294
  9. விக்ரம் எஸ்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - சிறப்பம்சங்கள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,வெங்கட் கிஷண் பிரசாத் பதவி,பிபிசி செய்தி தெலுங்கு 16 நவம்பர் 2022 பட மூலாதாரம்,SKYROOT இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்படும். இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறிப்பதாக இந்த நிகழ்வு அமையவிருக்கிறது. ‘விக்ரம்’ எஸ் என்றால் என்ன? விக்ரம் எஸ் என்ற பெயர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது. விக்ரம் ராக்கெட் ஏவும் சீரிஸில் மூன்று வகையான ராக்கெட்டுகள் உள்ளன. அவை சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை வழங்குவதற்காக மேம்படுத்தப்படுகின்றன. முதல் வரிசையில் விக்ரம் I ரக ராக்கெட் உள்ளது. விக்ரம் II, விக்ரம் III ஆகியவற்றால் 'லோ எர்த் ஆர்பிட்டுக்கு' (தாழ்வான புவி வட்டப்பாதைக்கு) அதிக எடையுள்ள 'பேலோடை' (செயற்கைக்கோள்கள்) சுமந்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. விக்ரம் எஸ் மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். அதாவது மூன்று சிறிய செயற்கைக்கோள்களை 'லோ எர்த் ஆர்பிட்டில்' கொண்டு செல்லும். இதில் இரண்டு பேலோடுகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானவை. மூன்றாவது பேலோடு, வெளிநாட்டுக்கு சொந்தமானது. ராக்கெட்டின் முழுமையான பரிசோதனை 2022ஆம் ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக 'ஸ்கைரூட்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், துணை வட்டப்பாதை திட்டத்துக்கு 'பிரரம்ப்' (ஆரம்பம்) என்று ஸ்கைரூட் நிறுவனம் பெயரிட்டிருக்கிறது. ஸ்கைரூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, விக்ரம் எஸ் ராக்கெட் நவம்பர் 12 மற்றும் 16 க்கு இடையில் நடந்திருக்க வேண்டும். இருப்பினும், சாதகமற்ற வானிலை காரணமாக அதன் ஏவுதல் திட்டம் நவம்பர் 18 க்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சீறிப் பாய்ந்த ராக்கெட்: மனிதனை நிலவுக்கு அனுப்பும் ஆர்ட்டெமிஸ் -1 சோதனை வெற்றி16 நவம்பர் 2022 விண்வெளியில் 'உயிர்' இருக்கிறதா? கார்பன் டை ஆக்சைடை கண்டுபிடித்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி29 ஆகஸ்ட் 2022 மனித திசுக்களில் உருவாகும் கணினி சிப்: நியூரான் கணினி ஆக்கப்பூர்வமானதா? ஆபத்தானதா?27 ஆகஸ்ட் 2022 ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ மற்றும் பிற தனியார் இந்திய விண்வெளி நிறுவனங்கள் பட மூலாதாரம்,SKYROOT படக்குறிப்பு, ஸ்கைரூட் குழுவினர் பெரும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அமெரிக்காவில் சமீபத்திய ராக்கெட் ஏவும் திட்டங்களுக்காக சர்வதேச அளவில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. அந்தப் போக்கு இந்தியாவிலும் வந்திருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தனா, நாக பரத் டாக்கா ஆகியோர் இணைந்து 2018ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இந்த பணிக்காக ஒருங்கிணைப்பு வசதி, ஏவுதளம், தூரத் தொடர்பு, கண்காணிப்பு ஆதரவு ஆகியவை இஸ்ரோவால் தங்களுக்கு வழங்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தன் சமீபத்தில் கூறினார். "இந்த திட்டத்துக்காக இஸ்ரோ பெற்றுக் கொண்ட கட்டணம் பெயரளவுக்கானதுதான்" என்று அவர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் அதன் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகியிருக்கிறது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் மற்றும் ஸ்பேஸ்கிட்ஸ் தவிர, கோயம்புத்தூரைச் சேர்ந்த பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் சில இந்திய நிறுவனங்களாகும். ஸ்கைரூட் உயர்தர தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக எண்ணிக்கையிலும் மிகவும் மலிவு விலையிலும் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் என்று நம்புகிறது. அடுத்த தசாப்தத்தில் சுமார் 20,000 சிறிய செயற்கைக்கோள்களை தங்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்துவதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. "விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை ஏவுவது ஒரு டாக்சியை முன்பதிவு செய்வது போல விரைவில் எளிதாகிவிடும் - அது விரைவான, துல்லியமான மற்றும் மலிவானதாக அமையும்", என்று ஸ்கைரூட் அதன் இணையதளத்தில் கூறியுள்ளது. தமது ராக்கெட்டுகள் எந்த ஏவுதளத்திலிருந்தும் 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கைரூட் குறிப்பிட்டுள்ளது. இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் பட மூலாதாரம்,SKYROOT இந்திய விண்வெளி் துறையில் பொது-தனியார் பங்கேற்புக்கான அடித்தளம் 2020ஆம் ஆண்டில் தொடங்கியது. ஜூன் 2020 இல், பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் இந்தத் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கிய போது அது தனியார் நிறுவனங்களுக்கு வழி வகுத்தது. IN-SPACEe என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இஸ்ரோ மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களை இணைக்கிறது. 2040ஆம் ஆண்டில், உலகளாவிய விண்வெளித் தொழில் சுமார் $1 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா இந்த லாபம் கொழிக்கும் சந்தையில் தடம் பதிக்க ஆர்வமாக உள்ளது - தற்போது உலகின் விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2% ஆக உள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்க தனியார் நிறுவனங்களை இந்தியா ஊக்குவிக்கிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் பயணம் பட மூலாதாரம்,SKYROOT விண்வெளித் துறையில் இந்தியாவின் பயணம், 1960களில் டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலின் கீழ் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) வடிவில் தொடங்கப்பட்டது. இந்திய விண்வெளித் துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அஸ்ட்ராகான் ஒப்லாஸ்டில் இருந்து முதல் இந்திய செயற்கைக்கோள் ஆர்யபட்டா ஏவப்பட்டது. இந்திய மண்ணில் முதல் ராக்கெட் ஏவுதல் நவம்பர் 21, 1963 அன்று நடந்தது. அமெரிக்க நைக்கி அப்பாச்சி சவுண்டிங் ராக்கெட் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் வெறும் 715 கிலோ எடை கொண்டது. 30 கிலோ எடையுடன் 207 கிலோமீட்டர் உயரத்தை எட்டும் வகையில் அது இருந்தது. இந்தியாவின் சமீபத்திய பணியுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022,ஆகஸ்டில் ஏவப்பட்ட சிறிய செயற்கைக்கோள் ராக்கெட் (SSLV) 120 டன் எடை கொண்டது. அதன் நீளம் 34 மீட்டர். 500 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் 500 கிலோ செயற்கைக்கோள்களை அதனால் அனுப்ப முடியும். சப்ஆர்பிட்டல் ராக்கெட் என்றால் என்ன? பட மூலாதாரம்,SKYROOT விக்ரம் எஸ் என்பது மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும் ஒற்றை-நிலை துணை சுற்றுப்பாதை ராக்கெட் ஆகும். விக்ரம் தொடரின் விண்வெளி ஏவுதல் வாகனங்களில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்பங்களை சோதிக்கவும் சரிபார்க்கவும் இது உதவும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் தலைமை செயல் அதிகாரி நாக பரத் டாக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரோவின் முன்னாள் மூத்த விண்வெளி விஞ்ஞானி ஒருவர் துணை ராக்கெட்டுகள் பற்றி விளக்கினார். “சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகள் விண்வெளியில் எரிந்து பூமியில் விழுகின்றன. வானத்தில் எறியப்பட்ட கல்லைப் போல, இந்த ராக்கெட் பூமியில் மீண்டும் விழுவதற்கு முன்பு ஒரு பரவளைய பாதையாக வரும். இந்த ராக்கெட்டுகள் 10 முதல் 30 நிமிடங்களில் கீழே விழுந்துவிடும். “இந்த ராக்கெட்டுகள் சவுண்டிங் ராக்கெட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாட்டிகல் மொழியில், ஒலி என்றால் அளவிடுவது என்று பொருள். இந்த ராக்கெட்டுகள் வளிமண்டல அளவை ஒத்து பயணிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார். வட்டப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை ராக்கெட்டுகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் வேகம். ஒரு ராக்கெட் வட்டப்பாதையில் சுற்றுப்பாதை வேகத்தை எட்ட வேண்டுமானால் அவை மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையெனில் அது பூமியில் விழுந்துவிடும். ஒரு ராக்கெட் இந்த வேகத்தை அடைவது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலான பணியாகும். எனவே இதை சாத்தியம் ஆக்குவது ஒரு விலையுயர்ந்த விவகாரமும் கூட. ஆனால் சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகளில் அப்படி இருக்காது. அவற்றுக்கு இத்தனை வேகம் தேவையில்லை. அவை தங்கள் வேகத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பறந்து, இயந்திரங்கள் செயலிழந்த பிறகு கீழே விழும். உதாரணமாக, இந்த ராக்கெட்டுகளுக்கு மணிக்கு 6,000 கிமீ வேகமே போதுமானதாக இருக்கும். வரலாற்றில், 1942ஆம் ஆண்டில் நாஜி விண்வெளி பொறியாளர்களால் முதன்முதலில் துணை சுற்றுப்பாதை ராக்கெட் V-2 பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம், தங்கள் கூட்டாளிகளுக்கு ஆயுதங்களை நாஜிக்கள் வழங்கினர். அந்த ராக்கெட்டின் வேகம் காரணமாக எதிரிகளால் அதை தடுக்க முடியவில்லை. https://www.bbc.com/tamil/articles/c51ejlzlqpjo
  10. 'தலைவன்' தோனி வந்தால் இந்திய அணி கோப்பைகளைக் கைப்பற்றிவிடுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,எம். மணிகண்டன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியிலேயே வெளியேறியதும், சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவிய பெயர்களுள் ஒன்று மகேந்திர சிங் தோனி. ஐசிசி கோப்பைகளை இந்தியாவுக்காக அதிகமாகப் பெற்றுத் தந்தவர் என்பது அவரது சிறப்பு. ஆனால் இந்திய அணி இன்னொரு உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரால் உதவ முடியுமா? இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அவரை எந்த இடத்தில் பொருத்திக் கொள்ள முடியும்? இந்திய அணிக்கு தோனியின் தேவை இருக்கிறதா? “கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் திறன் என்பது மிகவும் முக்கியமானது. தோனி மற்ற எல்லா கேப்டன்களையும் விட அதில் சிறந்தவர்” என்கிறார் இந்திய மகளிர் அணியில் ஆடி வரும் ஹேமலதா. மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது டி20 உலகக் கோப்பையையும், 50 ஓவர் உலகக் கோப்பையைும் இந்திய அணி கைப்பற்றியது. கூடவே சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி தொடர்கள் எதிலும் கோப்பையைக் கைப்பற்றவில்லை. டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் தோல்விக்குக் காரணமான ‘பழைய உத்தி’; இதை மாற்ற முடியுமா?11 நவம்பர் 2022 சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ப்ராவோ – நிர்வாகம் சொன்ன காரணம் இதுதான்15 நவம்பர் 2022 கோப்பையை பறிகொடுத்த பாகிஸ்தானை 'கர்மா' என சீண்டிய இந்திய வீரர் முகமது ஷமி: என்ன தகராறு?13 நவம்பர் 2022 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, இப்போது மீண்டும் ஒரு டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வருகிறது. தோனிக்கு பிறகு நீண்ட கால கேப்டன்களாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இருந்திருக்கிறார்கள். ஆயினும் கோப்பைகள் கிடைக்கவில்லை. தோனி போன்ற கேப்டன் இல்லாததே இந்திய அணி கோப்பைகளை வெல்ல முடியாமல் போவதற்குக் காரணம் என்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இப்படியொரு சூழலில் மகேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்காக புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தோனி ஏற்கெனவே அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். மீண்டும் அவர் அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் செயல்பட்டது போன்றே ஆலோசகர் என்கிற அளவிலான பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரைப் போல அல்லாமல், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று சிறப்பான தொடக்கத்தை தந்தது. ரன்கள் எடுப்பதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட நட்சத்திர வீரரான விராட் கோலி இந்தத் தொடரில் அதிரடியாக மீண்டு வந்தார். குரூப் -2 பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி அந்தப் பிரிவிலேயே முதலாவதாக வந்தது. உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 12 சுற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றிருந்தது. இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்கள். அர்ஷ்தீப் சிங் நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனாலும் கோப்பையை வெல்வதற்கு இது போதுமானதாக இல்லை. இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தி மோசமாக விமர்சிக்கப்பட்டது. “இந்தியா பழைய பாணி கிரிக்கெட்டை ஆடிக் கொண்டிருக்கிறது” என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே சாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் 6 ஓவர்களில் இந்திய அணி மிகக் குறைவான ரன்களையே எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் பவர் பிளே முடியும் வரை நீடித்து நிற்காததால் விரைவாக அடித்து ரன்களைக் குவிக்க வேண்டிய தருணங்களில் இந்திய அணி தடுமாறியது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 62 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடக்க ஓவர்களிலேயே இந்தியா விக்கெட்டை இழந்துவிட்டதால், விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களைச் சேகரிக்கத் தொடங்கினார். 10 ஓவர்களில் ரன்ரேட் குறைவாக இருந்ததால், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக ஆட முயன்று அவுட் ஆகி வெளியேறினார். “கிரிக்கெட்டில் எவ்வளவோ மாறிவிட்டது. ஆனால் இன்னும் இந்திய அணி பழைய வகையில் இருந்து வெளியே வர மறுக்கிறது” என்று குறிப்பிடுகிறார் விளையாட்டு விமர்சகர் தினேஷ் அகிரா. "திறமையான வீரர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது. அணுகுமுறையில்தான் தவறு இருக்கிறது. டி20 கிரிக்கெட்டை ஒரு நாள் கிரிக்கெட்டின் நீட்சியாகத்தான் இந்திய அணி பார்க்கிறது. இங்கிலாந்து போன்ற அணிகள் வீரர்களை வரிசையை மாற்றி களமிறக்குகின்றன. எதிர் தரப்பில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து ரன்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டார்கள் என்றால், அதற்கு ஏற்ற பேட்ஸ்மேனை கொண்டு வரிசையை மாற்றுகின்றன. ஆனால் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களையோ, மிடில் ஆர்டரையோ மாற்றத் தயங்குகிறது. ” என்கிறார் தினேஷ் அகிரா. பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் குறைபாடா? டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததுடன், ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட திறன்களும் விமர்சிக்கப்படுகின்றன. கேப்டனாக இருப்பது தனிப்பட்ட வகையிலும், தனிப்பட்ட முறையில் ரன் குவிக்கத் திணறுவது கேட்டன்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது. “நிறைய தருணங்களில் ரோஹித் சர்மா கோபப்படுவதை பார்க்க முடிந்தது. தொடர் முழுக்கவே அவர் அழுத்தத்துடன் இருப்பது போலவே தோன்றியது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்த ரோஹித் சர்மாவை சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்க முடியவில்லை” என்கிறார் தினேஷ் அகிரா. ஆயினும் கேப்டன்சியை காட்டிலும் ஒட்டுமொத்த அணுகுமுறையே உடனடியாக மாற்றப்பட வேண்டியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். “ஒருவர் மீது மட்டும் குறையைக் கூறி தப்பிக்க முடியாது” என்கிறார் அவர். அணித் தேர்வில் இருந்து சரி செய்யப்பட வேண்டியது என்கிறார் அவர். தோனியின் தனித்தன்மை என்ன? தோனி இந்திய அணிக்கு கேப்டனாக வந்தது ஒரு நெருக்கடியான காலகட்டம். தனிப்பட்ட முறையும் தோனிக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் சோதனைகள் ஏற்பட்டிருந்தன. 2007-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இலங்கையிடமும், வங்கதேசத்திடமும் எதிர்பாராத வகையில் தோல்விகளைச் சந்தித்து வெளியேறியிருந்தது. இந்த இரு போட்டிகளிலும் பூஜ்ஜியம் ரன்களை எடுத்த தோனி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவரது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் சுமார் ஆறு மாத இடைவெளியில் இந்திய கிரிக்கெட் மீதும் தன்மீது இருந்த விமர்சனங்களை தோனியால் துடைத்தெறிய முடிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட தோனி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்கப் பிறகு இந்தியாவுக்கு ஓர் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் திறன் தோனியிடம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். “தோனி ஒரு கற்பனை வளம் மிக்க கேப்டன்” என்கிறார் தினேஷ் அகிரா. மிகக் குறைந்த அளவு திறமை கொண்ட வீரர்களை வைத்தே, பெரிய அளவு சாதிப்பதற்கு இந்தக் கற்பனை வளம் உதவுகிறது என்கிறார் அவர். “2015 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரைக்கும் இந்திய அணி சென்றதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்தத் தொடருக்கு முன்பு இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டே இருந்தது. எதிர்பார்ப்பே இல்லாமல்தான் உலகக் கோப்பைக்குச் சென்றது. அத்தகைய அணியை அரையிறுதி வரைக்கும் அழைத்துச் சென்றார் தோனி. இருக்கும் வீரர்களைக் கொண்டு அணியை தோனியால் வெற்றிபெற வைக்க முடியும். அது ஒரு மேதையின் திறன். அந்தத் திறமை அடுத்த வந்த கேப்டன்களிடம் இல்லை” என்கிறார் தினேஷ். மைதானத்தில் பதற்றமில்லாமல் இருந்தபடியே சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடிய திறனைப் பற்றி ஹேமலதா குறிப்பிடுகிறார். “கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் இவரை பந்துவீச அழைக்க வேண்டும். அடுத்த போட்டியில் இந்த வீரரை களமிறக்க வேண்டும் என்பதையெல்லாம் தோனி அற்புதமாகத் தீர்மானிக்கக்கூடியவர்” என்கிறார் ஹேமலதா. இவர் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் ஆடி வருபவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணிக்கு மீண்டும் தோனி வந்தால் என்னவாகும்? இந்திய அணியின் தொடர் தோல்விகளால், வெற்றிகரமான கேப்டன் என்ற முறையில் தோனியின் பெயர் இப்போது விவாதத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் அணியை அப்படியே வைத்துக் கொண்டு தோனியை வரவழைத்து எதுவும் செய்ய முடியாது என்கிறார் தினேஷ் அகிரா. இந்த அணியில் ஏற்கெனவே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கிறார். பெரிய அளவு அடையாளம் இல்லாதவர்கள் பயிற்சியாளர்களாக இருக்கும் அணிகளுக்கு ஆலோசகர் போன்ற பொறுப்புகளில் புகழ்பெற்ற ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் ஏற்கெனவே புகழ்பெற்ற வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டால் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. “அணியைக் கலைத்துப் போட்டு, இளைஞர்களைக் கொண்டு வந்துவிட்டு, தோனியை ஆலோசகராக நியமித்தால் சரியாக இருக்கும்” என்கிறார் தினேஷ் அகிரா. தோனி இன்னும் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்து அறிவித்திருக்கிறது. "தலைவன் (எம்.எஸ். தோனி) தான் அணியை வழிநடத்தப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் சிறப்பானதைச் செய்வார், அணி சிறப்பாகச் செயல்படும்" என்று அறிவித்தார் சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி விஸ்வநாதன். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனி மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பது அதன் அடுத்தகட்ட அறிவிப்புகளில்தான் அறிய முடியும். https://www.bbc.com/tamil/articles/cp65e40jpjxo
  11. சோமாலியா வறட்சி: இரண்டு சகோதரிகளின் உயிரைக் காப்பாற்ற போராடும் சிறுவன் பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON படக்குறிப்பு, தாஹிர் 46 நிமிடங்களுக்கு முன்னர் தாஹிரின் சகோதரர் பசியால் இறந்துவிட்டார். தற்போது அவருடைய இரண்டு சகோதரிகள் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் போராடிக்கொண்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ஒரு குடும்பத்தை மீண்டும் சந்திக்க பிபிசியின் ஆண்ட்ரூ ஹார்டிங் பைடோவாவுக்கு சென்றார். எச்சரிக்கை - இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம். பதினோரு வயது தாஹிர் பைடோவாவின் எல்லையில் இருக்கும் தன்னுடைய குடிசை வீட்டில் இருந்து பிரதான சாலைக்கு அருகில் உள்ள தகரத்தால் மேற்கூரை போடப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்கிறார். தன்னிடம் உள்ள ஒரே சட்டை மற்றும் கால் சட்டையை அவர் அணிந்துள்ளார். மேலும் அவர் கையில் ஒரு புதிய புத்தகம் உள்ளது. பள்ளியின் ஒரே ஆசிரியரான அப்துல்லா அகமது, கரும்பலகையில் வாரத்தின் ஆங்கில நாட்களை எழுதுகிறார். தாஹிரும் அவருடைய 50 வகுப்பு தோழர்களும் ‘சனி, ஞாயிறு, திங்கள்...’ என்று சத்தமாக வாசிக்கிறார்கள். சில நிமிடங்களுக்கு குழந்தைகள் உற்சாகமாக இருந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் கொட்டாவி விடவும் இருமவும் தொடங்கினர். பசி மற்றும் உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகளான இவை, பைடோவாவைச் சுற்றியுள்ள பாறை நிலம் முழுவதும் கடுமையான சத்தம் போல எதிரொலித்தது. 40 ஆண்டுகளாக சோமாலியாவைத் தாக்கிய மிக மோசமான வறட்சியால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சமீபத்திய மாதங்களில் பைடோ அடைக்கலம் கொடுத்துள்ளது. "இந்தக் குழந்தைகளில் குறைந்தது 30 குழந்தைகள் காலை உணவை உட்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சில சமயங்களில் தங்கள் பசியைச் சொல்ல என்னிடம் வருகிறார்கள்" என்கிறார் அகமது. பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON படக்குறிப்பு, சோமாலியா பள்ளி இந்தக் குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கு அல்லது வகுப்பிற்கு வருவதற்கு கூட சிரமப்படுவதாகவும் அவர் கூறுகிறார். ஆறு வாரங்களுக்கு முன்பு, தெற்கு சோமாலியாவின் இந்தப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது, தங்கள் குடிசைக்கு வெளியே தாய் ஃபாத்துமாவின் அருகில் அமர்ந்து, தாஹிர் அழுதுகொண்டிருந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது தம்பி சலாத் வறண்டு கிடக்கும் கிராமத்தில் இருந்து பைடோவாவுக்குச் செல்லும் வழியில் பட்டினியால் இறந்தார். இங்கிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் சலாத் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த இடத்தைச் சுற்றி அடைக்கலம் தேடி புதிதாக வந்தவர்கள் கட்டிய குடிசைகள் உள்ளன. பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON படக்குறிப்பு, மகன் மற்றும் மகள்களுடன் ஃபாத்துமா தன்னுடைய சகோதரிகளைப் பற்றி தான் கவலைப்படுவதாக தாஹிர் கூறுகிறார். கடுமையாக இருமிய ஆறு வயது மரியம், தனக்கு தலைவலிப்பதாக கூறினார். அருகே நான்கு வயது மாலியூன் சோம்பலாக அமர்ந்திருந்தார். "இவள் உடல் சூடாக இருக்கிறது. இவளுக்கு அம்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் அம்மை இருக்கலாம்" என்று ஃபாத்துமா மாலியூனின் நெற்றியில் கை வைத்தார். ஊட்டச்சத்து குறைபாட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்த பல இளம் குழந்தைகள் சமீப மாதங்களில் பைடோவாவில் பரவிய தட்டம்மை மற்றும் நிமோனியாவிற்கு பலியாகினர். பைடோவாவின் மாகாண மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிர சிகிச்சை வார்டில் உள்ள உடல் மெலிந்த குழந்தைகளின் கைகளில் மருந்துகளையும், மூக்கில் ஆக்ஸிஜன் குழாய்களையும் சொருகுகிறார்கள். பல குழந்தைகளின் கை மற்றும் கால்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டது போன்று கருமையாகவும் கொப்புளமாகவும் இருந்தன. இது நீண்ட நாள் பட்டினியின் கடுமையான எதிர்வினை. பட மூலாதாரம்,BBC/ ED HABERSHON "எங்களுக்கு கூடுதலாக சில உதவிப்பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை போதுமானதாக இல்லை" என்கிறார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அப்துல்லாஹி யூசுப். "தற்போது உலகம் சோமாலியாவின் வறட்சியைக் கவனிக்கிறது. சர்வதேச நன்கொடையாளர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இதற்கு எங்களுக்கு போதுமான உதவி கிடைக்கிறது என்று அர்த்தமல்ல. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். இது நம்பிக்கை இழந்த சூழல்" என்றும் அவர் கூறுகிறார். ஆறு வாரங்களுக்கு முன்பு அவர் நிலைமை அச்சுறுத்துவதாகக் கூறினார். ஆனால், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதாக அவர் கூறுகிறார். சில நாட்களாக பெய்த மழை குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைவிட பயிர் செய்வதில் சில குடும்பங்களின் கவனத்தைத் தூண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். மோசமடையும் சூழல் மீண்டும் முகாமிற்கு திரும்புவோம், பொதுக் குழாயில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கேனில் பிடித்த தண்ணீரை ஃபாத்துமா வீட்டிற்கு கொண்டுவந்தார். தாஹிர் ஒரு கிண்ணத்தை சுத்தம் செய்வதற்காக குடிசையிலிருந்து வெளியே வருகிறார். "என் பையன் எனக்குப் பெரிய உதவி. அவன் பெண் குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்கிறான்" என்கிறார் ஃபாத்துமா. அவர் தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, அவருடைய தொலைபேசி ஒலித்தது. 60 வயதான அவர் கணவர் அதான் நூர், இஸ்லாமிய போராளிக் குழுவான அல்-ஷபாப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர்களுடைய கிராமத்தில் இருந்து அழைத்தார். அவருடன் பேசி முடித்ததும், “அவர் சோளம் பயிரிட்டிருப்பதாக கூறினார். அவர் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் வந்துவிடுவார். ஆனால், எங்கள் கால்நடைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். பயிர்களை மட்டும் வைத்து பிழைப்பு நடத்த வழியில்லை, அதனால் நான் இங்கு இருக்கிறேன். அந்த வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று ஃபாத்துமா கூறினார். "நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. உணவு, பாதுகாப்பு மற்றும் தண்ணீரைத் தேடி நிறைய பேர் இங்கு வருகிறார்கள். பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர். அரசு மற்றும் சர்வதேச சமூகம் இந்த நிலைமையை பஞ்சமாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று சமூக கூட்டத்தில் பேசிய பைடோவாவின் மேயர் அப்துல்லா கூறினார். சோமாலியா வறட்சி - 'இறந்த குழந்தையை புதைக்க முடியாத அளவுக்கு பசிக்கொடுமை'6 அக்டோபர் 2022 சோமாலியாவில் அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் - அல்-ஷபாப் காரணமா?30 செப்டெம்பர் 2019 வான் தாக்குதல்: இஸ்லாமிய போராளி இயக்கத்தின் மூத்த தளபதி பலி9 மார்ச் 2020 அந்தக் கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்கு உள்ளே ராணுவ ஜெனரல் ஒருவர் உள்ளூர் மக்களை அல்-ஷபாப்பிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தார். வெடிக்கும் சாதனங்கள் மற்றும் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். சோமாலிய அரசுப் படைகளும் போராளிப் படைகளும் தாக்குதலை விரிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில கிராமப்புற சமூகங்களை அணுகுவதை மேலும் கடினமாக்குகிறது. ஃபாத்துமா தனது இரண்டு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையும் அவர்கள் குடிசையின் அழுக்குத் தரையில் ஒரு போர்வையில் படுக்க வைத்தார். குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாம் கேட்டபோது பாரம்பரிய மூலிகை மருந்துகளை பின்பற்றுவதாக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் சோர்வாக இருந்த பாத்துமாவும் குழந்தைகளின் அருகில் படுத்துக் கொண்டார். தன்னுடைய போர்வையில் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தாஹிர், அவர்கள் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். பின்னர், அந்த சொற்றொடரை மேலும் இரண்டு முறை அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/crgk2pg24m2o
  12. இல்லை, அவர் அமெரிக்காவில் உள்ள ஆண். மற்றவர் பெயர் பிரபா சிதம்பரநாதன், அவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.
  13. கடன்பெற்று விருந்து உண்பதை தவிர்க்கும் புதிய பொருளாதார முறை By T. SARANYA 16 NOV, 2022 | 04:08 PM ரொபட் அன்டனி மிகவும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாட்டின் 77 ஆவது மற்றும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பொருளாதார நடைமுறைகளை மாற்றியமைத்து புதிய சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார முறை என்ற அடிப்படையிலான ஒரு பொருளாதார முறைமையை ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2023 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது வழமைப்போன்று இதுவரை காலமும் முன்வைக்கப்பட்டு வந்த பொருட்களின் விலையைக் குறைத்தல், சம்பள அதிகரிப்பு, மற்றும் நிவாரணம் போன்ற பிரபல்யமிக்க தீர்மானங்களை எடுக்காமல் நீண்டகால அபிவிருத்தியை நோக்கிய கட்டமைப்பு மாற்றத்துக்கான திட் டங்கள் அதிகளவில் பட்ஜட்டில் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் வரவு செலவுத்திட்டத்தின் இலக்குகளை பார்க்கும்போது 7-8 சதவீத பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதமாக அதிகரித்தல், 2023-2032 வரை புதிய ஏற்றுமதி ஊடாக டொலர் 3 பில்லியன் வருடாந்தம் அதிகரித்துக்கொள்ளல், வருடாந்தம் டொலர் 3 பில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக பெறல், எதிர்வரும் பத்து ஆண்டுகளினுள் உயர்தேர்ச்சிபெற்ற சர்வதேசளவில் போட்டிமிக்க தொழிற்படையை உருவாக்குதல் ஆகிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள இந்த புதிய சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார முறையில் மூன்று விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டி, இரண்டாவதாக சூழல் நட்பான பசுமை மற்றும் நீல பொருளாதாரம் மற்றும் மூன்றாவதாக டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் பொருளாதார சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, குறிப்பாக மாதம் சம்பளம் பெறுகின்றவர்கள், சிறிய நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள், முறைசாரா வர்த்தக முயற்சியாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு உடனடி நிவாரணங்கள் பட்ஜட்டில் முன்வைக்கப்படவில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் மதிப்பீடாக காணப்படுகின்றது. மாறாக சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடைகின்ற 2048 ஆம் ஆண்டு ஆகின்றபோது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான பின்னணியுடன் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் தயாரிக்கப்பட்டுள்ளதாக வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனாதிபதி ரணில் அறிவித்திருக்கிறார். மிக முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து கடன்பெற்று விருந்து உண்பதற்கு இவ்வரவுசெலவுதிட்ட ஊடாக எதிர்பார்க்கவில்லை என்று ஜனாதிபதி மிகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இது இவ்வாறு இருக்க கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமுத்திர வளங்கள், கைத்தொழில், வியாபாரம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள், போன்ற அனைத்தும் நவீனமயப்படுத்தபடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க வருமானத்தை 2025 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றது. அது தற்போது 8.3 வீதமாக காணப்படுகின்றது,. முக்கியமாக வரி வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தற்போது 60 வீதத்தை தாண்டியுள்ள பணவீக்கமானது நடுத்தர காலத்தில் குறைக்கப்படும் என்றும் இவற்றுக்கு இசைவாக, வங்கி வட்டி வீதங்களும் படிப்படியாக மிதமான மட்டத்தினை கொண்டுசெல்லப்படும் என்றும் பட்ஜட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் மிகவும் நெருக்கடியான சவாலான காலகட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 2 க்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு காலகட்டத்தில் பட்ஜட் ஒன்றை தாக்கல் செய்வது என்பது இலகுவான விடயமல்ல. எப்படி முன்வைத்தாலும் அவற்றின் விளைவுகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை தவிர் 2 க்க முடியாது. மறுசீரமைப்பு யோசனைகள் இந்நிலையில் நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு செயற்பாடுகள் முக்கியமானதாகவே காணப்படுகின்றன. முக்கியமாக பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை நோக்கியதாக பல்வேறு மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால திட்டங்கள் காணப்படுகின்றன. எனினும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர் தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பது இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக தற்போது பாதிக்கப்பட்ட இருக்கின்ற மற்றும் பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களை எதிர்நோக்கியிருக்கின்ற மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் இதில் முன்வைக்கப்படவில்லை என்பதாகும். எனவே இது குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும். காரணம் தற்போதைய நிலைமையில் நாடு நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிப்பது மட்டுமன்றி உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கான மீட்சித் திட்டங்களும் அவசியமாகின்றன. அந்தவகையில் இந்த குறைபாட்டை அடுத்து வரும் காலங்களில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய சமூக திறந்த பொருளாதார முறைமை ஒன்றை இதனூடாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதில் அவர்களுக்கு கசினோவுக்கு வரி விதித்தல், நிறுவன ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தல், வரி முகாமைத்துவம், தனியார்மயப்படுத்தல் செயற்பாடுகள், ஏற்றுமதி இறக்குமதியில் காணப்படும் கட்டுப்பாடுகளை தளர்த்தல், வெளிநாட்டு முதலீடுகளில் காணப்படுகின்ற கட்டுப்பாடுகளை தளர்த்தல், செஸ் வரிகளை படிப்படியாக நீக்குதல், சர்வதேசத் வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்குதல், வரி வருமானத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு யோசனைகளை முன்வைத்திருக்கிறார். சமூக நிவாரணம்? ஆனால் இங்கு சமூக நீதி அதாவது தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கான நிவாரணங்கள் எங்கே என்பது முக்கியமான விடயமாகவுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி, சில்வா பொருளாதார ரீதியில் இந்த வரவு செலவுத்திட்டம் சிறந்ததாக காணப்படுகிறது. ஆனால் அந்த வரவு செலவுத்திட்டத்தின் சமூக ரீதியான அரசியல் ரீதியான நிவாரணம் எங்கே? அந்த இந்த வரவு செலவுத் திட்டம் சமூக நீதியை தவற விட்டு விட்டது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் தாக்கம், நாடு முடக்கப்பட்டமை, டொலர் நெருக்கடி, பொருட்களின் விலை அதிகரித்தமை, எரிபொருட்கள் விலை அதிகரிப்பு, சேவைகளின் பொருட்களின் கட்டணங்கள் விலைகள் கடுமையாக உயர்வடைந்தமை, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டமை 70 வீதத்தை தாண்டிய பணவீக்கம் போன்ற பல நெருக்கடிகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாத சம்பளம் பெறுகின்ற மக்கள், அன்றாடம் தொழில் செய்து பிழைப்பை நடத்திக்கொண்டுள்ள மக்கள் கடுமையானதொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றனர். இந்த மக்களுக்கான உடனடி மீட்சித்திட்டங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்ற விடயம் முன்வைக்கப்படுகிறது. எனினும் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. பட்ஜட் மீதான நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படும் என்ற விடையத்தை வெளிப்படுத்தியிருந்தார். நிவாரண உதவி கோரியுள்ள 37 இலட்சம் குடும்பங்கள் அதாவது அரசாங்கம் கடந்த மாதம் அரசாங்கத்தின் நிவாரண உதவி தேவைப் படுகின்ற மக்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நாட்டில் காணப்படுகின்ற 57 இலட்சம் குடும்பங்களில் 37 லட்சம் குடும்பங்கள் தமக்கு நிவாரண உதவிகள் அவசியம் என்றுகோரி விண்ணப்பித்துள்ளன. ஜனவரி மாதமளவில் இது தொடர்பான தெரிவுகள் இடம்பெற்று ஏப்ரல் மாதத்தில் இருந்து தகுதியான குடும்பங்களுக்கு வாழ்வதற்கான நிவாரண உதவி பெற்றுக் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார். அந்தவகையில் அந்த செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அவை தாமதப்படுத்தப்படாமல் தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான பொருளாதார மற்றும் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிவாரண உதவிகள் வழங்கப்படுவது இன்றியமையாதது. இதேவேளை 2023 க்ககான வரவு-செலவுத் திட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடத்திற்கு சமுர்த்தி கொடுப்பனவுக்காக 20750 மில்லியன் ரூபாவும் முதியோருக்கான கொடுப்பனவுக்காக 3000 மில்லியன் ரூபாவும் குறைந்த வருமானம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியாக 250 மில்லியன் ரூபாவும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுக்காக 200 மில்லியன் ரூபாவும் மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவிக்காக 18800 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டு நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மேலும் சிறுவர் போஷாக்குக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க 250000 ரூபா சலுகைக் கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயங்கள். ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் ஏற்றுமதி வருமானத்தை வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 10 முதல் 12 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கின்றன. அதனை தற்போது 15 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைத்திருக்கின்றார். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் தற்போது வருமான வரி விகிதம் 30 வீதத்தை தாண்டிய எல்லையில் அமைந்திருக்கிறது. அதாவது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக வருமானம் உழைக்கின்ற சகலரும் 30 வீதத்தை தாண்டி வரி செலுத்தவேண்டும். இவ்வாறு அதிகளவு வரியை விதிக்கும்போது எவ்வாறு ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று சுங்க வரிகள் 0, 5, 10, 15, வீதமாக இருந்த நிலையில் தற்போது அவை 0, 10, 15, 20 என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆடை துறையிலேயே அதிகளவு ஏற்றுமதி வருமானம் பெறப்படுகின்றது. ஆனால் அதற்கான உள்ளீடுகள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவேண்டும். அந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும்போது இந்த சுங்கவரி அதிகரிக்கப்படுமாயின் அதுவும் ஏற்றுமதி வருமானத்தில் தாக்கத்தை செலுத்தும். இந்த பட்ஜட் தொடர்பாக பொருளாதார நிபுணர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் துறை விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி இவ்வாறு விபரிக்கிறார். அதாவது நடுத்தர வர்க்க பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த வரவுசெலவுத்திட்டம் பூர்த்திசெய்யவில்லை. நீண்டகால ரீதியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வண்ணம் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய உடனடி பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. உழைக்கும் வர்க்கம் வாழ்க்கைச் செலவு உயர்வினால் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. அவர்களை 2024ஆம் ஆண்டு வரை பொறுத்திருக்குமாறு இந்த வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் 2024 ஆம் ஆண்டு வரை அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது என்பது இங்கு கூறப்படவில்லை. அதேபோன்று மறுசீரமைப்புக்கள் இருக்கின்றன. 8 வீத பொருளாதார வளர்ச்சி, முதலீடுகளை அதிகரித்துக்கொள்ளல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. அவை இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலப்பகுதியில் இருந்து முன்வைக்கப்படுகின்ற யோசனைகளாகும். ஆனால் அது எவ்வாறு அடையப்படும் என்று விபரமில்லை. மேலும் இறக்குமதி சுங்க வரியும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது. இந்த பட்ஜட்டில் வரி வருமானத்தை அதிகரிப்பது ஒரு நோக்கமாக கொண்டு இருப்பதாக காணமுடிகிறது. வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டுமானால் அது படிப்படியாக செய்யப்பட வேண்டும். இன்றேல் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு கணேசமூர்த்தி கூறுகிறார். பொருளாதார சுமையை குறைக்கவேண்டும் எப்படியிருப்பினும் நெருக்கடியான காலகட்டத்தில் தற்போது இந்த வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நீண்டகால பொருளாதாரத் திட்டங்களை தவிர் 5 க்க முடியாது. அதற்கான பொருளாதார கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் அதேநேரம் தற்போது உடனடியாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான நிவாரண உதவிகள் உறுதிப்படுத்தப்படுவதும் அவசியமாகும். இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் விவாதிக்கப்பட்டுவருகின்றது. டிசம்பர் மாதம் நடுப்பகுதிவரை விவாதம் நடைபெறும் நிலையில் அந்த விவாதங்களின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். வாழ்க்கை செலவு உயர்வினால் நசுங்கிப் போயிருக்கும் மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டியதும் அவசியமாக இருக்கின்றது. நீண்டகால மற்றும் குறுகியகால திட்டங்கள் என்பன சமாந்தரமாக பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/140245
  14. மாவை ஐயா தமிழரசுக் கட்சித் தலைவர். சுமந்திரன் ஐயா அந்த தலைவர் பதவியில் உட்கார காத்திருப்பவர்!😂
  15. அவங்க அப்பாவிற்கு சுகவீனம் என்பதால் சிறிது காலம் யாழுக்கு வரமுடியாது என்று காணாமல் போகிறோம் பகுதியில் பதிந்து இருந்தவ.
  16. ஆமாம் முதலாவது பெண் போட்டியாளராக நிலாக்காவை வருக வருக என வரவேற்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
  17. அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது சேவையாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர் - மஹிந்த அமரவீர By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 03:14 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) 15 இலட்சம் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை அரச நிர்வாகத்தில் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது சேவையாளர்களுக்கு நட்டஈடு வழங்கி பதவி நீக்கம் செய்ய நேரிடும். வெற்றிடமாகியுள்ள அத்தியாவசிய அரச சேவைகளுக்கான நியமனங்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான செயற்பாட்டை அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது. எதிர்க்கட்சியும்,ஆளும் தரப்பினுரரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரம் நெருக்கடியான சூழலை வெற்றிக் கொண்டு நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். நாடு எதிர்க்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான நிலையில் இருந்து எவரும் விடுப்பட முடியாது. ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நடந்தவறை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல் கட்சிகள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் சபையில் உரையாற்றினார். தேசிய பிரச்சினை தொடர்பில் காலம் காலமாக பேசப்படுகிறது.தேசிய பிரச்சினைக்கு இந்த அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும். தற்போதைய பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன உள்ளார்கள், தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார். கட்சியை பலப்படுத்துவதை விட தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கம் இவர்களுக்கு உண்டு. தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் தரப்பினரும் ஒருசில விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும்.புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும். சிறைச்சாலையில் பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே கூட்டமைப்பினர் நம்பிக்கையுடன் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். வடக்கு மாகாணத்தில் உழுந்து பயிர்ச் செய்கை அதிகளவில் உற்பத்தி செய்யடுகிறது. சகோதரத்துவத்துவடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியும். அரச வருமானத்தை தடுக்கும் வகையில் போராட்டங்கள் இடம்பெற்றால் நாட்டில் மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். போராட்டங்கள் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைய கூடாது.சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்படுத்தப்பட்டால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டாம்,அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அரசியல்வாதிகள் குறிப்பிடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் குறிப்பிப்படும் கருத்துக்கள் நாட்டுக்கு செய்யும் துரோகமாக கருதப்படும். அரச சேவையின் ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய 15 இலட்சம் அரச சேவையாளர்கள் அரச கட்டமைப்பில் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது. ஒரு சில அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது நட்டஈடு வழங்கி அரச சேவையாளர்களை குறைக்க நேரிடும். மறுபுறம் அத்தியாவசிய அரச பதவிகளில் வெற்றிடம் காணப்படுகிறது. வெற்றிடமாக உள்ள அரச பதவிகளுக்கான நியமனங்களை கூட வழங்க முடியாத நிதி நெருக்கடி காணப்படுகிறது.அரச சேவை தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/140228
  18. யுத்தமில்லாத நாட்டில் இராணுவத்திற்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கம் - செல்வம் அடைக்கலநாதன் By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 03:11 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. யுத்தம் இல்லாத நாட்டில் ஏன் இவ்வளவு இராணுவம்? ஏன் இந்தளவு இராணுவ முகாமக்கள்? ஏன் இந்தளவு நிதி ஒதுக்கம் எனக்கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தே வாக்களிக்கும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ.16) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது, இலங்கையில் முப்படைகளையும் சேர்த்து 9 இலட்சம் வரையிலான படை வீரர்கள் உள்ளனர். இவர்களில் பெருமளவானோர் வடக்கில் உள்ளனர். இவர்களின் முகாம்களுக்காக மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள், விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அபகரிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் மக்களின் காணிகளில் இராணுவத்தினரே வசிக்கின்றனர். விவசாயிகளின் காணிகளில் இராணுவத்தினரே விவசாயம் செய்கின்றனர். உணவகங்களை, சலூன்களைக்கூட இராணுவத்தினர்தான் நடத்துகின்றனர். நாட்டின் வேறு ஏதாவது பகுதிகளில் இவ்வாறு நடக்கின்றதா? வடக்கில் மட்டும் ஏன் இந்த நிலை? யுத்தம் இல்லாத இலங்கையில் ஏன் இவ்வளவு இராணுவம்? ஏன் இந்தளவு இராணுவ முகாமக்கள்? ஏன் இந்தளவு நிதி ஒதுக்கம் ? இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான வாக்களிப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்த்தே வாக்களிக்கும் . இதேவேளை, ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் கிருபாகரன், எல்.நிமலன், குகதாசன் ஆகியோர் மீது பதுளை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களால் புதிதாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பில் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/140224
  19. தமிழ் சினிமா 'திலீபன்': திரைக்கு வர தயாராகி வரும் ஒரு போராளியின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,கல்யாண் குமார் பதவி,பிபிசி தமிழுக்காக 16 நவம்பர் 2022, 12:07 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'இயக்குநர்' ஆக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்திறங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்தான், பெங்களூரு வாழ் தமிழரான ஆனந்த் மூர்த்தி. பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட வரலாற்றில் தன் ஒவ்வொரு படமும் தடம் பதிக்க வேண்டும் என்பதை தமது கொள்கையாகக் கொண்டிருக்கிறார் ஆனந்த் மூர்த்தி. அதனால் சொந்த மன்ணிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலையும் அவர்களின் உரிமைக்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும் திரையில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பினார். அந்த வகையில் இவர் இயக்கி இருக்கும் முதல் படம் தான் 'திலீபன்'. யசோதா - திரைப்பட விமர்சனம்11 நவம்பர் 2022 லவ் டுடே - சினிமா விமர்சனம்5 நவம்பர் 2022 லவ் டுடே திரைப்பட விமர்சனம் - 'கோமாளி' பட இயக்குநரின் நடிப்பு எப்படி?5 நவம்பர் 2022 விடுதலைப் புலிகள் இயக்கத்தில், யாழ் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக பதவி வகித்த திலீபன் என்ற இளைஞர், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி, தங்கள் இயக்கத்தின் சார்பில் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் சேர்த்து, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை வழியில், நல்லூர் என்ற இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தைத் துவக்கினார். ஆரம்பத்தில் பொதுமக்களில் ஐநூறு, ஆயிரம் என்று அங்கே கூடிய கூட்டம், செப்டம்பர் 26, உண்ணாவிரதத்தின் 12ஆம் நாள் - திலீபன் உயிரை நீத்த நாளன்று லட்சக்கணக்கில் அதிகரித்தது. இயக்கத்திற்காக தன் உயிரையே கொடுத்த திலீபனின் தியாகம், உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடையே பெரும் தாக்கத்தையும் அவர் மீது மரியாதையையும் ஏற்படுத்தியது. திலீபனின் வரலாறைத் தேடி... வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் அந்த இளைஞர் திலீபனின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட ஆனந்த் மூர்த்தி, திலீபனைப் பற்றி ஆய்வு செய்ய, இலங்கைக்கு ஐந்து முறை போய் வந்திருக்கிறார். அவர் குறித்த வீடியோக்கள், புத்தகங்களை தொடர்ந்து தேடி அலைந்திருக்கிறார். திலீபனோடு பழகிய மிகச் சிலரை சந்தித்துப் பேசிய ஆனந்த் மூர்த்தி, மிகவும் சிரமப்பட்டு தகவல்களை சேகரித்ததாகக் கூறுகிறார். ஆரம்பத்தில் அதை நாற்பது நிமிட படமாக எடுக்கவே திட்டமிட்டிருந்தார். அதற்கான திரைக்கதையைக் கேட்ட இயக்குநர் பாலா, அதைத் தானே தயாரிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் திலீபனாக நடிக்க ஏற்ற ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது ஏற்கெனவே ’புன்னகை பூ’ என்ற படத்தில் நடித்திருந்த நடிகர் நந்தா, அதற்குப் பொருந்தி வந்திருக்கிறார். திலீபனின் முக ஒற்றுமைக்காக – அவரின் முன் வரிசை தெற்றுப் பல் அமைப்பிற்காக நந்தா, பல் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரிஜினல் பல்வரிசைக்கு மேலே அந்த செயற்கை தெற்றுப் பல்செட்டை அணிந்து நடித்திருக்கிறார். நாள் முழுவதும் அந்த பல்செட்டை பொருத்தியதால் உள்ளிருக்கும் ஒரிஜினல் பற்களிடையே ரத்தம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் நந்தா. திலீபனின் வீடியோக்களை போட்டுப் பார்த்து தன்னை அந்தப் பாத்திரத்தில் பொருத்திக் கொண்டதோடு, உடல் எடையையும் கணிசமாகக் குறைந்திருக்கிறார். திரைப்படமாக உருவெடுத்தது எப்படி? பல்வேறு காரணங்களால் திலீபன் குறிந்த அந்த நாற்பது நிமிட படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கவே, அதை ஒரு முழு நீள திரைப்படமாகவே எடுக்கலாம் என்று முடிவெடுத்த நடிகர் நந்தா, அதன் தயாரிப்பு பொறுப்புகளை, தானே எடுத்துக் கொள்வதாகவும் சொல்லி இருக்கிறார். ”படத்தின் நம்பகத்தன்மைக்கு நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் பிரதிபலிக்கும்” என்கிறார் நந்தா. இதில் கிட்டுவாக நடித்திருக்கும் வினோத் சாகர், தமிழில் வெற்றி பெற்ற ராட்சசன் படத்தில் மாணவிகளிடம் பாலியல் வன்முறை செய்யும் ஆசிரியராக நடித்து புகழ் பெற்றவர். தற்போது மலையாளப்பட உலகில் சுமார் பத்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார். “ திலீபன் படத்தில் கிட்டு பாத்திரத்திற்கான நடிகர் தேர்வுக்காக நான் போனபோது என்னை முதலில் 'ரிஜெக்ட்' செய்துவிட்டார் அதன் இயக்குநர். காரணம் என் உடல்வாகு மற்றும் எனக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு! பிறகு அவரது உதவியாளர்கள் என்னைப்பற்றி எடுத்துச்சொல்லியுள்ளனர். கிட்டு குறித்த வீடியோக்களை என்னிடம் காண்பித்தனர். பல நாட்களுக்கு, அதை பார்த்துப்பார்த்து, நான் அந்த கேரக்டருக்குள் நுழைந்து பயணம் செய்தேன். அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். என்பதால் மேடை நாடகங்களின் மூலமாக நடிப்பை அனுபவமாகப் பெற்றிருந்தேன். அடுத்தமுறை இயக்குநரைப் பார்த்தபோது இலங்கைத் தமிழ் உள்பட பக்காவாக என்னை தயார் செய்து கொண்டு போனேன். அவரால் நம்பவே முடியவில்லை. “கிட்டுவாகவே மாறி விட்டீர்களே” என்று என்னை கட்டியணைத்து, இந்த வரலாற்று ரீதியான படத்தில் நடிக்க வைத்தார்’ ’’ என்கிறார் வினோத் சாகர். இதில் பிரபாகரனாக ஸ்ரீதர் என்கிற நடிகரும், கேப்டன் மில்லர் பாத்திரத்தில் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, பின்னர் காதல் என்ற படத்தின் மூலம் பிரபலமான பரத் நடித்திருக்கிறார். திலீபனின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய, இலங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும், கேரளாவின் பல கிராமங்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன. அசுரன், கொம்பன், விருமன் போன்ற வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ்தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த படைப்பாளி திலீபன் படத்திற்காக ஆரம்பத்தில் இிருந்தே அதன் தயாரிப்பு வடிவமைப்பு, இலங்கை தமிழை அந்தந்த நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பது உட்பட அனைத்திலும் ஒரு ஆலோசராக உடனிருந்து பயணித்தவர், தங்க வேலாயுதம். இவர் விடுதலை புலிகள் இயக்கத்தின் கலைப்பிரிவின் பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் ஆரம்பம் முதலே செயல்பட்டவர். விடுதலைப் புலிகளால் தேவர் அண்ணா என்று அழைக்கப்பட்ட இவர், பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இயக்கத்தின் முன்னணி தலைவர்களோடும் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் உத்தரவின்படி திலீபனின் அந்த 12 நாள் உண்ணாவிரத போராட்டத்தை உடனிருந்து கவனித்துக் கொண்டவர். திலீபனின் இறுதி யாத்திரையையும் அருகிலிருந்து நேரடியாகப் பார்த்தவர். “ 1987 செப்டம்பர் 26 திகதி சனிக்கிழமை காலை 10.48 மணி திலீபன் உடல் நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் சிவகுமார், அழுதவாறே திலீபனின் மறைவை உறுதிப்படுத்தினார். தியாக தீபம் திலீபன் அந்த கணத்தில் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டான். அந்த பேரமைதியை கிழித்துக் கொண்டு அனைவரும் கதறி அழத் தொடங்கினர். எங்கும் அழுகை ஒலி. அந்த பன்னிரெண்டு நாட்களும் திலீபன் உண்ணாநோன்பில் இருந்த மேடையை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த திலீபனின் தந்தை், முதல் முறையாக மேடையில் ஏறி, திலீபனின் உடல் மீது விழுந்து கதறி அழத் தொடங்கினார். உடனடியாக திலீபனின் மரணச் செய்தி, இந்திய அதிகாரிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தேசிய தலைவர் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டது. அது கிடைத்தவுடன் பேச்சுவார்த்தையை இடையில் நிறுத்திவிட்டு எங்கள் தேசிய தலைவர் திரும்பினார்” என்று அந்த நிகழ்வை அப்படியே, தான் எழுதியிருக்கும் ‘என் நினைவில் தமிழீழம்’ என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார், தேவர் அண்ணா. இதுவரை எடுக்கப்பட்ட திலீபன் படத்தைப் பார்த்த தேவர் அண்ணா, பிபிசி தமிழிடம் பேசினார். “இந்த படத்தைப் பொறுத்தவரை திலீபனின் வாழ்க்கை வரலாறை எந்ததவறும் இல்லாமல் திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் இதன் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி. மற்றவர்களைப் போல ஏனோதானோவென்று இந்தப் படத்தை எடுத்து முடித்திடாமல், ஒவ்வொரு காட்சிக்கான சின்னச்சின்ன விஷயங்களிலும் என்னிடம் கலந்தாலோசித்து அதை மிகத்தெளிவாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். படம் முழுமையடைந்து உலகம் முழுதும் தியேட்டர்களில் ரிலீசாகும் தேதியை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்கிறார் தேவர் அண்ணா என்கிற தங்க வேலாயுதம். திலீபன் படம் வெளிவருமுன்பே இரண்டாவது படத்தின் கதையையும் ரெடி செய்திருக்கிறார் ஆனந்த் மூர்த்தி. மலேசிய தமிழர்கள் பற்றிய அந்தக் கதையில், ஹீரோவாக நடிக்க, நடிகர் சசிகுமார் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. https://www.bbc.com/tamil/articles/cw0j9x1kwjko இது பிபிசி தமிழில் தான் வந்துள்ளது! நம்புங்கோ.
  20. Earbuds ஆபத்து: செவித்திறன் குறைந்தவரின் காதுக்குள் ஐந்து ஆண்டுகளாக இருந்த 'இயர் பட்ஸ்' - என்ன நடந்தது? 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனது செவித்திறன் குறைந்து வருவதாக நினைத்துக்கொண்டிருந்த ஒருவரின் காதுக்குள் 5 ஆண்டுகளாக இயர்பட்ஸ் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அது அகற்றப்பட்டுள்ளது. பிரிட்டனின் டோர்செட் பகுதியின் வேமெளத்தைச் சேர்ந்தவர் வாலஸ் லீ. இதுநாள்வரை இரைச்சல் மிக்க விமானத் துறையில் பணியாற்றியது அல்லது ரக்பி போட்டியின் போது ஏற்பட்ட பழைய காயம் தன்னுடைய செவித்திறன் குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்தார். அண்மையில் அவர், உடலின் உட்பகுதியை வீட்டிலேயே பரிசோதிக்கும் எண்டோஸ்கோப் கருவியை வாங்கினார். அதன் மூலம் பரிசோதித்த போது, காதுக்குள் வெள்ளை நிறத்திலான சிறிய பொருள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து, மருத்துவரைச் சந்தித்தார் வாலஸ் லீ . அதன் பிறகு காதுக்குள் சிக்கியிருந்த பொருள் இயர்பட்ஸ் என்று கண்டறியப்பட்டு அது அகற்றப்பட்டது. இதன் பிறகு தனக்கு உடனடி நிவாரணம் கிடைத்ததாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறுகிறார் வாலஸ். இங்கிலாந்து கடற்படையின் முன்னாள் வீரரான இவர், விமான பயணத்தின் போது இது சிக்கியிருக்கலாம் என்று நம்புகிறார். “நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உள்ள என் குடும்பத்தை சந்திக்கச் சென்றபோது, விமானத்தின் சத்தத்தைப் பொறுத்து வெவ்வேறு அளவுகளில் வைக்கக்கூடிய இந்த சிறிய இயர்பட்ஸ்களை வாங்கினேன். அதில் ஒன்று காதிற்குள் சிக்கி அங்கேயே இருந்துள்ளது" என்று வாலஸ் லீ கூறினார். 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சரிய கதை15 நவம்பர் 2022 டிண்டர்: டேட்டிங் செயலிக்கு வாடிக்கையாளர்கள் அதிக பணம் செலவிடுகிறார்களா?8 நவம்பர் 2022 குழந்தைகள் இடையே கிட்டப்பார்வை குறைபாடு அதிகரிக்கிறதா?26 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,WALLACE LEE படக்குறிப்பு, காதுக்குள் சிக்கியிருந்த இயர்பாட்ஸ் தன்னுடைய மனைவிக்கு இருப்பதைப் போல தனக்கும் செவித்திறன் குறைவதைக் கவனித்த அவர், காது கேட்கும் திறனை இழந்து விடுவோமோ என்று அஞ்சியுள்ளார். இந்த அடைப்பை வெற்றிகரமாக நீக்கிய காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணர் ஆச்சரியமடைந்ததாக வாலஸ் லீ கூறினார். “மருத்துவர் அதை வெளியே எடுக்க முயற்சித்த போது, நீண்ட காலமாக காது மெழுகோடு இருந்ததால் அது அசையக் கூடவில்லை. எனவே சிறிய அளவிலான முள் கருவி கொண்டு அவர் முயற்சித்த போது அது வெளியே வந்தது” என்று வாலஸ் லீ கூறினார். உடனடியாக அந்த அறையில் அனைத்து சத்தங்களையும் தன்னால் சிறப்பாக கேட்க முடிந்ததாக கூறிய அவர், மீண்டும் முதல்முறை சரியாக கேட்டது போல நிம்மதியாக இருந்ததாகக் கூறுகிறார். காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் நீல் டி சொய்சா பிபிசியிடம் கூறுகையில், “வீட்டில் உங்கள் காதுகளை பரிசோதிப்பது பெரிய அளவில் தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை. எனினும், காதுக்குள் சிக்கியிருக்கும் பொருட்களை மருத்துவர்கள் உதவியின்றி நீக்க முயற்சிப்பது தொற்று ஏற்பட அல்லது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/czdypxzv0pko
  21. யாழில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அடகு வைக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு! By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 04:52 PM யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சுன்னாகம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எனினும் இன்று வரை நான்குக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் நான்கு நாட்களுக்கென வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று 20 இலட்சம் ரூபாய்விற்கு அடகு வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நெல்லியடி பகுதியில் பதிவாகியுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்குமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/140249
  22. போலந்து ஏவுகணை : வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல: நேட்டோ By DIGITAL DESK 3 16 NOV, 2022 | 06:42 PM போலந்தில் ஏவுகணை வீழ்ந்து வெடித்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டமைக்கான அறிகுறி இல்லை என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று கூறியுள்ளார். போலந்து கிராமமொன்றில் நேற்றிரவு ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்ததால் இருவர் உயிரிழந்தனர். நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் இச்சம்பவம் இடம்பெற்றமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இது தொடர்பாக கூறுகையில், 'இச்சம்பவம் தொடர்பில் எமது விசாரணைகள் தொடர்கின்றன. அதன் பெறுபேறுக்கு நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், அது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவு என்பதற்கான அறிகுறிகள் இல்லை' என்றார். யுக்ரைனிய படையினர் ஏவிய விமான எதிர்ப்பு ஏவுகணையொன்றின் விளைவாக இச்சம்பவம் இருக்கலாம் எனவும் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் கூறினார். எனினும் இது யுக்ரைனின் தவறு அல்ல எனவும், யுக்ரைன் மீது ரஷ்யா சட்டவிரோத யுத்தத்தை தொடர்வதால் ரஷ்யாவே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இதேபோன்ற கருத்தை போலந்து ஜனாதிபதி அண்ட்றே டூடாவும் தெரிவித்துள்ளார். இது ஒரு துரதிஷ்டமான விபத்து என அவர் குறிப்பிட்டுள்ளார். யுக்ரைன் படையினர் ஏவிய சோவியத் காலத்து ஏவுகணையொன்றின் விளைவாக இது இருப்பதற்கான அதி வாய்ப்புள்ளது என ஜனாதிபதி அண்ட்றே டூடா கூறினார். முன்னதாக, மேற்படி ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார். பைடனின் இக்கருத்தை ரஷ்யா பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/140276
  23. திலினி பிரியமாலி உட்படலானோருக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்! By T. SARANYA 16 NOV, 2022 | 04:41 PM திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி, அவரது கணவர் எனக் கூறப்படும் இசுரு பண்டார, கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, பொரளை சிறிசுமண தேரர் உள்ளிட்ட ஐவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (16) உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/140256
  24. ஓமான் கடற்பரப்பில் இஸ்ரேலிய பிரஜைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஆளில்லா விமான தாக்குதல் By RAJEEBAN 16 NOV, 2022 | 03:54 PM இஸ்ரேலின் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஓமான் கடற்பரப்பில் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரான் இஸ்ரேல் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓமான் கடலோரத்தில் செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது நாங்கள் இதனை விசாரைணை செய்து வருகின்றோம் என குறிப்பிட்ட பகுதியில் கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வரும் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. லைபீரிய கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த பசுபிக் ஜேர்கோன் என்ற எண்iணை கப்பலே ஆளில்லா விமான தாக்குதலிற்குள்ளாகியுள்ளது. எண்ணெய் கப்பல்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஏவுகணை தாக்குதலிற்கு உட்பட்டுள்ளது, நாங்கள் கப்பலில் உள்ளவர்களுடன் தொடர்புகொண்டுள்ளோம் காயங்களோ கடல்மாசடைதலோ இடம்பெறவில்லை என குறிப்பிட்ட கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது.. கப்பலின் மேல் பகுதியில் சிறிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் அதனால் பாதிப்புகள் இல்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலிற்கு எவரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில் ஈரான் மீதே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/140236
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.