Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இஸ்ரேலிய படையினர் காசாவில் மேற்கொண்ட தாக்குதலில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்கள் மீட்பு- இஸ்ரேல் செய்தித்தாள்கள் Published By: RAJEEBAN 14 OCT, 2023 | 10:01 AM இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் காசாவில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்ட தரைநடவடிக்கையின் போது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஹரேட்சும் ஜெரூசலேம்போஸ்ட்டும் தெரிவித்துள்ளன. பெருமளவு உடல்களை மீட்ட இஸ்ரேலிய படையினர் அவற்றை இஸ்ரேலிற்கு கொண்டுவந்தனர். அவற்றில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளமை தெரியவந்துள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன காசா மீதான பாரிய தரைத்தாக்குதலிற்கு முன்னதாக சிறிய தரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி ஆயுதங்களை அகற்றும் நோக்கத்துடனும் பணயக்கைதிகளை மீட்கும் நோக்கத்துடனும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. பணயக்கைதிகளை மீட்பதற்கு உதவக்கூடிய ஆதாரங்களை படையினர் சேகரித்துள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ந்தும் காசவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றன. https://www.virakesari.lk/article/166819
  2. சுக்கு நூறாக உடையும் இஸ்ரேல்! பெரும் நெருக்கடியில் அமெரிக்கா(Video) இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையில் போர் நிலை வலுப்பெற்று வரும் சூழலில் அமெரிக்கா தனது நாட்டுக்குள்ளேயே பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் இந்த போர் விரிவாக்கம் அடைவதற்கான வாய்ப்புக்களை நிறையவே கொண்டிருக்கின்றது. எதிர்பாராத நேரத்தில் இந்த யுத்தம் வெடித்திருக்கின்றது. மேலும், இஸ்ரேலை எந்தவொரு சூழ்நிலையிலும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், https://tamilwin.com/article/israel-palestine-war-update-usa-action-1697201650
  3. செம துணிச்சல்.. 60 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்று 250 பிணைகைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்! த்ரில் வீடியோ இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணை கைதிகளாக பிடித்து சென்று கொன்று வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல் ராணுவம் ஸ்கெட்ச் போட்டு ஹமாஸ் அமைப்பின் 60க்கும் அதிகமான தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி 250 பணயக்கைதிகளை பத்திரமாக மீட்ட த்ரில் வீடியோ வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுமட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் அங்கு வந்திருந்த வெளிநாட்டு மக்களை அவர்கள் பணயக்கைதிகளாக(பிணைக்கைதிகள்) பிடித்து சென்றனர். இது இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே இன்று 7 வது நாளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் தற்போது வரை 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதவிர இஸ்ரேல் நாட்டு மக்களை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இவர்களை இஸ்ரேல் படைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது வரை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்தது. இப்போது தரைவைழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் பேரை உடனடியாக தெற்கு பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்காக 24 மணிநேரம் டைம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காசாவில் மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை மீட்க அந்நாட்டு ராணுவம் மீட்க முயற்சித்து வருகிறது. ஐடிஎப் எனும் இஸ்ரேலிய ராணுவத்தினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பணயக்கைதிகளாக உள்ள தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா எல்லையில் சுபா மிலிட்டரி கேம்ப் பகுதியில் உள்ள கட்டடத்தில் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து ஹமாஸ் அமைப்பு மிரட்டி வருவது தெரியவந்தது. இதையடுத்து பணயக்கைதிகளாக உள்ள 250 பேரையும் பத்திரமாக மீட்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டடது. அதன்படி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு பணயக்கைதிகளை மீட்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்டநேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியாக 60 ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்று பணயக்கைதிகளாக இருந்த 250 பேரை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் எப்படி பணயக்கைதிகளை மீட்டனர் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛60க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹமாசின் தெற்கு கடற்படை பிரிவின் துணை தளபதியான முகம்மது அபு அலி உள்பட 26 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.oneindia.com/news/international/israeli-military-forces-kill-60-hamas-terrorists-and-rescue-250-hostages-near-gaza-video-released-547879.html?story=1
  4. உருக்குலைந்த காசா நகரம்: உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள் இஸ்ரேல்-ஹமாஸ் படையினருடன் ஏற்பட்டு உள்ள போர் இன்று 7 ஆவது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் படையினர் வசிக்கும் காசா பகுதிகளை இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரவு மிக கடுமையான தாக்குதல் நடந்ததால் காசா பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கடந்த 6 நாட்களில் மட்டும் 6 ஆயிரம் சக்தி வாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் விமானங்கள் வீசி உள்ளன. இந்த வான்வழி தாக்குதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 2,500 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன. இதன் காரணமாக காசா நகரம் உருக்குலைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இதற்காக குவித்துள்ளது. காசா நகருக்குள் இஸ்ரேல் தரை படை நுழைந்து தாக்குதல் நடத்தினால் உயிர் சேதம் மிக அதிகளவில் இருக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். இன்று காலை வரை 4.50 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி விட்டனர். காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் காசா பகுதியில் வாழும் மக்களின் நிலைமை படுமோசமாக மாறி வருகிறது. ஐ.நா. சபை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உதவி செய்து கண்காணித்து வருகிறார்கள். காசாவில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முகாம்களை ஐ.நா. சபை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சம் அடைய வரும் மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல் ஐ.நா. சபை அதிகாரிகள் திணறியபடி உள்ளனர். காசாவில் உள்ள உணவு ஆலைகள் இன்று முதல் உணவு விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் காசாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக கடைகளில் அரசு விநியோக பகுதிகளில் குவிந்துள்ளனர். இன்று காலை காசாவில் உணவுக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது. காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. பிணை கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தற்போது காசாவில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் பிணை கைதிகளாக உள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு அரபு நாடுகளும், பாலஸ்தீன பிரதமரும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதை ஹமாஸ் படையினர் ஏற்க மறுத்து இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது. காசாவில் மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக காசா முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 10 இலட்சம் பேர் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் இல்லாத நிலையில் மருந்தும் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். என்றாலும் இஸ்ரேல் இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை. இதன் காரணமாக காசா பகுதி மேலும் உருக்குலைய தொடங்கி உள்ளது. இது ஹமாஸ் இயக்கத்தினருக்கு நீண்ட கால பாதிப்பை கொடுக்கும் என கருதப்படுகிறது. https://thinakkural.lk/article/276930
  5. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா முயற்சி இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரினால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள இராணுவ அமைச்சில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஜோர்டான் சென்றடைந்தார். அவர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபரைச் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/276862
  6. இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கும் ஹமாஸ் குழுவினரின் நூறு அடி ஆழ ரகசிய சுரங்கங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி அறைகளின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர். மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி. ஒன்று தரைக்கு மேல் பொது மக்களுக்கானது, மற்றொன்று நிலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது என்றார். எவ்வளவு நீளமானவை இந்தச் சுரங்கங்கள்? அவர் மேலும் கூறுகையில், "இந்த சுரங்கப்பாதைகள் இவை காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்," என்று கூறினார். இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதைகள் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசா பகுதியில் இருக்கும் இந்த சுரங்க கட்டமைப்புகள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்க அறைகள் எப்போது கட்டப்பட்டன? எதற்குப் பயன்பட்டன? கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு காசாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தைத் தொடங்கியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இந்த சுரங்க அறைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் இஸ்ரேலும் எகிப்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதன் வழியாகச் சென்று வருவதையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்தின. இந்த சுரங்கங்களின் செயல்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 2,500 சுரங்க கட்டமைப்புகள் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களால், வணிகப் பொருட்கள், எரிபொருள், மற்றும் ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டன. கடந்த 2010ஆம் ஆண்டில் இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட அனுமதித்த பிறகு, கடத்தலுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீரைச் செலுத்தியும் அவற்றைத் தகர்த்தும் எகிப்து கடத்தலைக் கட்டுப்படுத்தியது. தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் சுரங்க கட்டமைப்புகள் இதைத்தொடர்ந்து, ஹமாஸும் பிற குழுக்களும் இஸ்ரேலிய படைகளைத் தாக்குவதற்காக இந்த சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கின. ஆயுதமேந்தியப் போராளிகள் 2006ஆம் ஆண்டில், இஸ்ரேலுடனான எல்லைக்கு அடியில் இருந்த ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்தி இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். மேலும் மற்றொரு வீரரைக் கைப்பற்றி, அவரை ஐந்து ஆண்டுள் சிறைபிடித்து வைத்திருந்தனர். மேலும், 2013ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் விசித்திரமான ஒலிகள் கேட்டதையடுத்து, அதைச் சோதித்த இஸ்ரேலிய பாதுகாப்புக் குழுவினர், அங்கு 1.6 கி.மீ. நீளமும், 18 மீட்டர் ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அது கான்கிரீட் கூரை மற்றும் கான்கிரீட் சுவர்களைக் கொண்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, காசாவின்மீது ஒரு பெரிய வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்த, இத்தகைய ‘பயங்கர சுரங்கங்களின்’ மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதைக் காரணமாகச் சொன்னது இஸ்ரேல். போரின்போது 30க்கும் மேற்பட்ட சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் ஒரு போராளிக் குழுவும் ஒரு சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க கட்டமைப்புகள் எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்காலிகமானவை. அவை அவ்வப்போது இஸ்ரேலின் பகுதிகளைக் கைப்பற்றவே கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், "காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன," என்கிறார் இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக். “ஹமாஸின் தலைவர்கள் இந்த சுரங்கங்களில் பதுங்கியுள்ளனர். அங்கு அவர்கள் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவியுள்ளனர். அங்கு மின்சாரம், மின்விளக்குகள், மற்றும் தண்டவாளங்கள் உள்ளன. அதற்குள் வசதியாக நிற்கவும் நகரவும் முடியும்,” என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், சிரியாவின் போராளிக் குழுக்கள், மற்றும் ஐ.எஸ் குழுவினர் ஆகியோரின் முறைகளைப் பார்த்து தங்கள் சுரங்கக் கட்டுமான உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார். இந்த சுரங்கங்கள் எப்படி கட்டப்பட்டன? காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன. காசாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்தச் சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் எல்லை தாண்டிய சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலின் கஃபார் ஆசா பகுதிக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையின் வெளியேறும் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது உறுதி செய்யப்பட்டால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் நிறுவி முடித்த, சுரங்கப்பாதைகளைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள் பதிக்கப்பட்ட நிலத்தடி கான்கிரீட் தடுப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும். இது உறுதிசெய்யப்பட்டால், பேரதிர்ச்சியாக இருக்கும் என்று ரீஷ்மண்ட்-பராக் கூறுகிறார். எந்த சுரங்கப்பாதை கண்டறியும் அமைப்பும் முழுமையானது அல்ல என்று அவர் கூறிகிறார். "அதனால்தான் சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார் அவர். இந்த சுரங்கங்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா? மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார். “சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர். இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் குழு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும், பணயக் கைதிகளை சுரங்கப் பாதைகளுக்குள் அனுப்பி வைக்கும் என்கிறார் அவர். கடந்த 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவில் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர். இந்த சுரங்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை? மேலும், இந்தச் சுரங்கங்களுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் ரீஷ்மண்ட்-பராக். ஹமாஸ் குழுவினர், மொத்த சுரங்கப்பாதை வலைப்பின்னலிலும் வெடிகளை வைக்கலாம், என்கிறார் அவர். “அவற்றில் இஸ்ரேலிய ராணுவத்தினரை நுழையவிட்ட பிறகு அதை வெடிக்க வைக்கலாம்.” இல்லையேல், ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்து இஸ்ரேலியப் படையினரைச் சிறைபிடிக்கலாம் அல்லது இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போகலாம், என்கிறார். சுரங்கத்துக்குள் செல்லாமல், கண்ணுக்குத் தெரியாத அவற்றை தரைக்கு மேலிருந்துச் சுற்றி வளைப்பதும் சிக்கலானது என்கிறார் அவர். ஆனால், இஸ்ரேல் ராணுவம் வேறு வகையான உத்திகளைப் பின்பற்றலாம், என்கிறார் சூஃபான் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் இயக்குநரான காலின் க்ளார்க். உதாரணத்திற்கு டிரோன்கள் அல்லது ஆளில்லா வாகனங்களை அனுப்பி இந்தச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களையும், அங்கிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம், என்கிறார் அவர். பூமியைத் துளைத்துச் சென்று பங்கர் சுரங்கங்களைத் தாக்கும் குண்டுகளையும் இஸ்ரேல் பயன்படுத்தாலாம். ஆனால் அவை கட்டுமானங்கள் நிறைந்த காசா பகுதியில் பெருமளவில் சேதத்தை விளைவிக்கும். https://www.bbc.com/tamil/articles/cn3927d12lmo
  7. 13 OCT, 2023 | 01:05 PM 2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை எதிர்த்து மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தாக்கல் செய்த மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (12) அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் கொலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் தாக்கல் செய்த பல மனுக்களை பரிசீலித்த பின்னரே, பிரிவு 12(1)இன் கீழ் இந்த மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பொது மன்னிப்பு தொடர்பான பல ஆவணங்களை உச்ச நீதிமன்றத்துக்கு வழங்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. மனுக்கள் மீதான தங்கள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவும், அந்த ஆட்சேபனைகளுக்கு மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கி, இந்த வழக்கை அடுத்த வருடம் மே மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. https://www.virakesari.lk/article/166771
  8. காசா மக்கள் இடம்பெயரவேண்டும் என்ற உத்தரவை இஸ்ரேல் இரத்துச்செய்யவேண்டும் - ஐநா 13 OCT, 2023 | 10:27 AM காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதி நோக்கி இடம்பெயரவேண்டும் என விடுத்துள்ள உத்தரவை இஸ்ரேல் இரத்துச்செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே பெரும் துன்பகரமானதாக காணப்படுகின்ற சூழ்நிலை பெரும் பேரழிவு நிலையாக மாறாலாம் என்பதால் இந்த உத்தரவை இஸ்ரேல் இரத்துச் செய்யவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் அதிகாரிகள் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறவேண்டும் எனவும் இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை இன்று ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166747
  9. இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் இன்னுமொரு போர்முனையில் மோதல்கள் வெடிக்கலாம் - ஈரான் Published By: RAJEEBAN 13 OCT, 2023 | 06:22 AM காசாமீதான இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சு தொடர்ந்தால் வேறு போர்முனைகள் திறக்கப்படலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் வேறு போர்முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் ஈரான் வெளிவிவகார அமைச்சுh ஹ_சைன் அப்டொலாகியன் தெரிவித்துள்ளார். ஹெஸ்புல்லா குழு குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். காசாமீதான தொடரும் வன்முறைகள் யுத்தகுற்றங்கள் மற்றும் முற்றுகை காரணமாக இன்னொரு போர்முனை திறக்கப்படுவது யதார்த்தமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166741
  10. இரண்டாம் உலகப்போர் உத்தியைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவிய ஆயுதக்குழு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,HAMAS படக்குறிப்பு, ஹமாஸின் 'அல்-கஸ்ஸம் பிரிகேட்ஸ்' ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியபோது தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டனர். கடந்த சனிக்கிழமை ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியபோது, அந்நாட்டிற்குள் படையெடுத்து வந்த ஆயுதக்குழுவினர் பாராசூட் மூலமாகவும் நாட்டிற்குள் நுழைந்தார்கள். 'இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ்' ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவினர் ஒரு இசை விழாவிற்குச் சென்றவர்கள் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தீடீர் தாக்குதலை 'அல்-அக்ஸா தாக்குதல்' எனக் கூறினர். பாலத்தீன ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகவும், கடல் மற்றும் நில வழியாகவும் ஊடுருவியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தாெடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் உறுதிப்படுத்தினார். அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகத் தரையிறங்குவது போன்ற படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,HAMAS படக்குறிப்பு, சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊவடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர். வான் வழியாக எல்லையைக் கடந்த ஆயுதக்குழுவினர் பாலத்தீன ஆயுக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலையும் காசாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியை பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வான்வழியாகக் கடந்துள்ளனர். ஜெனரேட்டர் மற்றும் பிளேடுகளால் இயக்கப்படும் அந்த பாராசூட், காசாவை சுற்றியுள்ள பகுதிக்கு முன்னேறும்போது இயக்கப்பட்டன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர். ஹமாஸ் இரண்டாம் உலகப்போரின் உத்தியைப் பின்பற்றியதா? எல்லையை ஊடுருவிச் செல்லும் நோக்கத்தில், ஹமாஸின் ராணுவப் பிரிவினர் வான்வழித் தாக்குதல் நடத்த ராணுவ பாராசூட்டுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினர். இரண்டாம் உலகப் போரின்போதும் ஜெர்மனி மற்றும் அதன் நேச நாடுகள் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்தும் பிரிவினரைத்தான் முதலில் சண்டையிட அனுப்பினார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாராகிளைடர்கள் தரையில் இருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். 1987இல் நடந்த கிளைடர் தாக்குதல் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல், பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் - ஜெனரல் கமாண்ட் அமைப்பைச் சேர்ந்த பாலத்தீனர்கள் இருவர், சிரியாவை சேர்ந்த ஒருவர் துனிசியாவை சேர்ந்த ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட கிளைடர் ஆபரேஷனை நினைவுபடுத்துகிறது. நவம்பர் 1987இல் இஸ்ரேலிய ராணுவ தளத்தைத் தாக்க அவர்கள் லெபனானில் இருந்து புறப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நவம்பர் 26, 1987இல், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ராணுவ முகாமில், ஆறு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஏழு பேர் காயமடைந்தனர். இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடரை ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் பார்வையிட்டார். பாராசூட் மூலம் ஊடுருவிய ஹமாஸ் ஆயுதுக்குழு மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட்களை பயன்படுத்தி, திசை திருப்புவதற்குப் பயன்படும் கட்டுப்பாட்டைக்கொண்டு, போர் விமானங்களைத் தரையிலிருந்து ஏவ முடிந்தது. இதனால், அவர்கள் மலையில் ஏறாமல், விமானத்தில் இருந்து தரையிறங்காமல் பயணிக்கலாம். இந்த இஞ்சின் பொருத்தப்பட்ட பாராசூட்களை மணிக்கு 56கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும். பாராகிளைடர்கள் தரையிலிருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். பாராகிளைடிங் இணையதளங்களில் உள்ள தகவலின் படி, இந்த பாராகிளைடர்களால் 230 கிலோ எடை வரை சுமக்க முடியும். இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ் ராணுவத்தின் ஊடகப் பிரிவினர் பகிர்ந்துள்ள வீடியோக்களில், அவர்கள் தரையிலிருந்து பாராகிளைடர்களை ஏவுவதைக் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு பேரால் இயக்கப்படுகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள மற்ற காட்சிகள், ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலிய தளங்களில் தரையிறங்கும் முன்பாகவே வானிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகின்றன. காசாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் வேலியைத் தாண்டி பாராசூட் மூலம் ஊடுருவியவர்களை 'சகர் படை' என அழைக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸ் ஆயுதக்குவினர் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் எல்லைப்பகுதியை ஊருடுவிச் செல்கின்றனர். இஸ்ரேலிய ராணுவம் பாராசூட்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை? ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில், அவர்கள் காசாவில் இருந்து ராக்கெட்டுகளை ஏவி, அதன் மறைவில் ஆயுதமேந்திய பாராகிளைடர்கள் மூலம் அவர்கள் பறப்பதைக் காட்டுகிறது. சில பாராகிளைடர்கள் குறைந்த உயரத்தில் பறப்பது போன்றும், மற்றவை உயரமாகப் பறப்பது போன்று இருந்தன. காசாவை சுற்றியுள்ள வான் பகுதியில் அவை மிகவும் தெளிவாகக் காணப்பட்டன. இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ஆயுதக்குழுவினர் வான்வழியாக ஊடுருவியதை இஸ்ரேலிய படைகளால் ஏன் கணிக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை இஸ்ரேலிய ராணுவம் இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை. குறிப்பாக, பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. 'அயர்ன் டோம்' இஸ்ரேலியர்கள் நேரடியாக மனிதர்களை ரோந்துக்கு பயன்படுத்துவதை விட தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருந்தார்களோ? 'அயர்ன் டோம்' மற்றும் 'ரேடார்' போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பாராசூட் போன்ற சிறிய பறக்கும் பொருட்களைக் கணிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பலமுனைத் தாக்குதல் ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை ஏவுவதன் மூலம் தனது திடீர் தாக்குதலை ஆரம்பித்தது என்று அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழுவின் தளபதி முஹம்மது அல்-டீஃப் முதல் நாளில் அறிவித்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர். ராக்கெட் ஏவுதலை திசைமாற்றப் பயன்படுத்தி, ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தரைவழியிலும், துப்பாக்கிப் படகுகளைப் பயன்படுத்தி கடல்வழியிலும், பாராசூட்டை பயன்படுத்தி வான்வழியிலும் ஊடுருவியுள்ளனர். ஊடக மற்றும் ராணுவ அறிக்கைகளின் படி, பாராசூட் தாக்குதல் மற்றும் அந்த பாராசூட்களால் வான் பாதுகாப்பு திறனை முறியடிக்கும் உத்தியே ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எல்லைக்குள் ஊடுருவுவதற்கு ஒரு தீர்க்கமான காரணியாக இருந்ததாகக் கூறுகிறார்கள். முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர். தற்போது, "அவர்களைக் கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். படக்குறிப்பு, கடத்தப்பட்டவர்களை கொலை செய்துவிடுவோம் என ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். https://www.bbc.com/tamil/articles/crg1rl67nvqo
  11. பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை எரிபொருள் இல்லை மின்சாரமில்லை - இஸ்ரேல் திட்டவட்டம் Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 04:46 PM ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் வரை காசாமீதான முற்றுகையை தளர்த்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் பிரேத அறைகளாக மாறுவதை தவிர்க்கவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை குழு மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இஸ்ரேல் இதனை தெரிவித்துள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்படும் வரை காசாவிற்கு எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்கப்போவதில்லை என இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். மனிதாபிமானமா, கடத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாகும்வரை மீண்டும் இஸ்ரேல் திரும்பும்வரை மின்சாரத்தை மீண்டும் வழங்கப்போவதில்லை எரிபொருள் வாகனங்கள் எவையும் காசாவிற்குள் நுழையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மனிதாபிமானத்திற்கு மனிதாபிமானம் எங்களிற்கு ஒழுக்கநெறி குறித்து எவரும்போதிக்ககூடாது என அவர்தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மின்சாரம் எரிபொருள் விநியோகத்தை துண்டித்துள்ளது. https://www.virakesari.lk/article/166724
  12. உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்- ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தல் ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 இலட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது. இதையடுத்து, “உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, “இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும்” என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/276784
  13. அல்அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்ததற்கு பழிவாங்குவதற்காக இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் இரகசிய தளபதி - Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 12:45 PM ரொய்ட்டர் ஹமாஸ் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பேரழிவு தாக்குதலை இஸ்ரேல் தனது செப்டம்பர் 11 என தெரிவிக்கின்றது, இந்த தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான பாலஸ்தீன போராளி முகமட் டெய்வ் அதனை அல் அக்சா வெள்ளம் என்கின்றார். ஹமாஸ் சனிக்கிழமை காசாவின் மீது ஆயிரக்கணக்கான ரொக்கட்களை ஏவிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலால் அதிகம் தேடப்படும் முகமட் டெய்வ் ஒலிநாடா மூலம் வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்தார். ஜெரூசலேத்தின் அல் அக்சா மசூதி மீதான தாக்குதலிற்கான பதிலடியே இது என அவர் குறிப்பிட்டார். 2014 இல் காசாவில் முகமட் டெய்வின் மனைவியும் கைக்குழந்தையும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவேளை அவர்களை காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியா புதைகுழியில் புதைப்பதற்கு தயாராகும் பொதுமக்கள் ------------------------ மே 2021 இல் ஜெரூசலேத்தின் அல்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொலை செய்த இந்த தாக்குதலை டெய்வ் திட்டமிட ஆரம்பித்தார் என காசாவில் உள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெரூசலேமின் அக்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் நுழைந்தமை அராபிய -இஸ்லாமிய உலகத்தினை சீற்றமடையச்செய்திருந்தது - இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதமான இடம் இந்த மசூதி. ரம்ழான் மாதத்தில் அந்த மசூதிக்குள் நுழைந்த படையினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கியதும் முதியவர்கள் சிறுவர்களை வெளியே இழுத்துவந்ததும் அதனை காண்பிக்கும் வீடியோக்களும் கடந்த வார தாக்குதல் திட்டமிடப்படுவதற்கு காரணமாக அமைந்தன என தெரிவித்துள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இவை அனைத்தும் சீற்றத்தையும் ஆத்திரத்தையும் தூண்டின எனவும் குறிப்பிட்டுள்ளன. ஜெருசலேத்தின் இறைமை மற்றும் மதம் தொடர்பான சர்ச்சைகளின் முக்கிய அம்சமாக நீண்ட காலமாக காணப்படும் இந்த மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தமை ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் 11 நாள் மோதலிற்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவங்களிற்கு இரண்டு வருடங்களின் பின்னர் -1973 இஸ்ரேலிய அராபிய மோதலின் பின்னர்- முதல் தடவையாக இஸ்ரேலிற்குள் ஹமாஸ் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் போர்பிரகடனம் செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது - 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டெய்வ் இஸ்ரேலின் பல கொலைமுயற்சிகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார். 2021 இல் இறுதியாக இஸ்ரேல் அவரை இலக்குவைத்தது. டெய்வ் ஒருபோதும் மக்கள் முன்னிலையில் தோன்றாதவர் - உரையாற்றாதவர்- இதன் காரணமாக சனிக்கிழமை ஏழாம் திகதி அவர் ஹமாஸ் தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டவேளை - ஏதோ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்ற உணர்வு பாலஸ்தீனியர்கள் மத்தியில் காணப்பட்டது. இன்று அல்அக்சாவின் சீற்றம் வெளிப்படுகின்றது -நமது மக்களின்- தேசத்தின் சீற்றம் வெடிக்கின்றது- எங்கள் முஜாஹிதீன்களிற்கான செய்தி இது -குற்றவாளிகளுக்கு தங்கள் காலம் முடிவடைந்து விட்டது என்பதை புரிய வைப்பதற்கான நாள் இன்றைய நாள் என டெய்வின் பதிவு செய்யப்பட்ட அந்த செய்தி தெரிவித்தது. இரண்டு மூளைகள் - ஒரு சூத்திரதாரி டெய்வின் மூன்று படங்களே உள்ளன - முதலாவது 20 வயதில் எடுக்கப்பட்டது- இரண்டாவது முகக்கவசம் அணிந்த படம் - மூன்றாவது அவர் உரையாற்றும்போது காணப்படும் நிழல். அவர் எங்கிருக்கின்றார் என்பதும் தெரியாது - காசாவில் உள்ள சுரங்கப்பாதைகளிற்குள் அவர் இருக்கவேண்டும். இந்த தாக்குதலின் திட்டமிடல்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் டெய்வ் நேரடியாக ஈடுபட்டிருந்தார் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரமொன்று தெரிவித்தது. ஹமாசின் இல் ஹசாம் பிரிகேட்டின் தளபதியான டெய்வும் காசாவில் உள்ள ஹமாசின் தளபதி யெஹ்சியா சின்வரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டனர் என ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தாக்குதலை முழுமையாக வடிவமைத்தவர் யார் என்பது வெளிப்படையான விடயம். இரண்டு மூளைகள் உள்ளன, ஆனால் ஒரு சூத்திரதாரி என தெரிவிக்கும் ஹமாஸிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் ஒருசில ஹமாஸ் தலைவர்களிற்கு மாத்திரம் தெரிந்திருந்தன என குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் எவ்வளவு தூரம் இரகசியமாக வைக்கப்பட்டன என்றால் இஸ்ரேலின் முக்கிய எதிரியும் ஹமாசிற்கு நிதி வழங்கும் முக்கிய நாடான ஈரானிற்கு கூட இந்த நடவடிக்கை குறித்த மேலோட்டமான விடயங்களே தெரிந்திருந்தன - தாக்குதல் எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் ஈரானிற்கு கூட தெரியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/166618 https://www.facebook.com/q7medianews/videos/849917096648063/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing
  14. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 5 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே, இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் மாயமாகினர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். அமெரிக்கர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. https://thinakkural.lk/article/276705
  15. பிரேத அறைகளாக மாறும் காசாவின் மருத்துவமனைகள் Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 01:38 PM காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக மாறுகின்றன என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசாவின் ஒரேயொரு மின்நிலையமும் செயல் இழந்துள்ளது . இதன் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் செயற்படுகின்றன. மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு புதிதாக எரிபொருள் தேவை காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேலே வழங்கிவந்தது எனினும் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து மின்சாரவிநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது. வன்முறை அதிகரிப்பால் ஏற்படும் மனித துயரங்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளன என தெரிவித்துள்ள மத்திய கிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பிராந்திய இயக்குநர் பப்ரிசியோ கார்போனி பொதுமக்களின் துயரங்களை குறைக்குமாறு நான் சம்மந்தப்பட்ட தரப்பினை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். காசா மின்சாரத்தை இழப்பதால் மருத்துவமனைகள் மின்சாரத்தை இழக்கின்றன புதிதாக பிறந்த குழந்தைகளும் முதியவர்களும் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166707
  16. ‘ஹமாஸின் சுரங்கப் பாதைகளைக் குறிவைக்கிறோம்’ – இஸ்ரேல் ராணுவம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தெற்கு காசாவிலிருக்கும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் உருவான பள்ளம் 10 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதையடுத்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கினறனர். இந்நிலையில், தற்போது தாங்கள் ஹமாஸ் அமைப்பின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹமாஸ் குழுவால் அமைக்கப்பட்டசுரங்கப்பாதைகள் இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்தச் நிலத்தடிச் சுரங்கங்களின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “20 வருடங்கள் முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்தச் நிலத்தடிச் சுரங்கப் பாதைகளை அமைத்தனர்,” என்றார் அவர். மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி, ஒன்று தரைக்குமேல் பொதுமக்களுக்கானது, மற்றொன்று நலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது, என்றார். “ஹமாஸின் அந்த நிலத்தடிச் சுரங்கங்களைத் தாக்குவதற்காகத்தான் முயற்சி செய்கிறோம்,” என்றார் கான்ரிகஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காசா மீது 6 நாட்களாக குண்டுமழை பொழிந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம் ‘பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை மின்சாரம் தண்ணீர் இல்லை’ வியாழனன்று, இஸ்ரேலின் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹமாஸ் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரமோ தண்ணீரோ, எரிபொருளோ வழங்கப்படமாட்டாது என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். லெபனான் மீதும் தாக்குதல் முன்னர், காசா மீது 5 நாட்களாக குண்டுமழை பொழிந்துவந்த இஸ்ரேல் ராணுவம், திடீரென அண்டை நாடான லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்திற்குச் சொந்தமான கண்காணிப்புச் சாவடியை தங்களது போர் விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் அரிதான தொலைபேசி அழைப்பு - முகமது பின் சல்மானுடன் இரான் அதிபர் பேசியது என்ன? இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானும் இஸ்ரேல்-காசா மோதல் குறித்து புதன்கிழமையன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக தெஹ்ரானில் உள்ள அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகால விரோதப் போக்கிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சீனா பேச்சுவார்த்தை நடத்திய பிறகான முதல் தொலைபேசி அழைப்பு இதுவாகும். ரைசியும் முகமது பின் சல்மானும் "பாலத்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று விவாதித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சௌதி பட்டத்து இளவரசர் "அனைத்து சர்வதேச, பிராந்திய கட்சிகளுடனும் தொடர்புகொள்வதில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும்" செய்து வருவதாக சவுதி அரச செய்தி நிறுவனமான எஸ்பிஏ தெரிவித்துள்ளது. எந்த வகையிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சௌதி அரேபியா ஏற்காது என்பது பட்டத்து இளவரசர் மீண்டும் வலியுறுத்தியதாக எஸ்.பி.ஏ. தெரிவித்துள்ளது. காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தம் காசாவில் புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் காசாவின் எல்லையில் குவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இதுவரை வான் வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் விரைவில் காசா பகுதியில் தரை வழியாகத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது. ஆயுதமேந்திய வீரர்கள், காலாட்படை வீரர்கள், பீரங்கிப் படைகள் ஆகியோர் தவிர சுமார் 3 லட்சம் ரிசர்வ் படைகளும் காஸா எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. முன்னதாக சிரியாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. இதேபோல் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளது. விமானங்களை கண்காணிப்பதற்காக ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தி வந்த இடத்தை தாக்கி அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. சண்டையில் இதுவரை இஸ்ரேலிய தரப்பில் 1,200 பேரும் காசாவில் 1100 பேரும் உயிரிழந்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cmlrvevweezo
  17. இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நிரம்பி வழியும் காசா மருத்துவமனை காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் இராணுவம். இந்த நிலையில், காசா மருத்துவமனைகளில் 2,000 படுக்கைகளே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மருத்துவ உதவி கிடைக்காமல் ஏராளமானோர் தவித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள், மருந்துகளுக்கு தட்டுப்பாடு, தாக்குதலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேதம் என தகவல் வெளியாகி உள்ளது. https://thinakkural.lk/article/276584
  18. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள், ஹமாஸ் பயங்கரவாதிகள் உடல்கள்: சிதைந்து போன எல்லையோர இஸ்ரேல் கிராமம் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர். காசா எல்லையில் இருந்து சில நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் இருக்கும் இஸ்ரேல் கிராமம் க்ஃபர் அஜா. சுமார் 700 பேர் கொண்ட இந்த கிராமம், பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பள்ளிக்கூடம், தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது. கடந்து சனிக்கிழமை இந்த கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன. இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெருக்களில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் ஒரு செழிப்பான கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் இரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/276574
  19. அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேல் வந்தடைந்தது ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது. இந்த போர் நேரத்தில் இருநாட்டு இராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/276548
  20. காசா பல்கலைகழகத்தை குண்டுவீசி அழித்தது இஸ்ரேலின் விமானப்படை Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 03:38 PM காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைகழகத்தி;ன் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதை இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது. காசா பல்கலைகழகம் தனது தாக்குதலில் அழிக்கப்பட்டதை டுவிட்டரில் இஸ்ரேல் விமானப்படை உறுதி செய்துள்ளது. ஹமாஸ் பொறியியலாளர்களிற்கு பயிற்சி வழங்கும் முக்கிய நிலையமாக காணப்பட்டதால் அதனை குண்டுவீசி அழித்துள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. இங்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166640
  21. இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை - ஆராய்கின்றது அமெரிக்கா Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 10:05 AM காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழி பாதை குறித்து அமெரிக்கா, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆராய்ந்துவருகின்றன. இஸ்ரேல் தொடர்ந்தும் காசாமீது தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா அங்கு சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் இதனை தெரிவித்துள்ளார். அமைப்புகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 900 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 4600 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. காசாவிலிருந்து சுமார் 260.000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளன. 2014 இல் 50 நாள் மோதல்களின் பின்னர் இவ்வளவு பெரிய அளவில் பொதுமக்கள் இடம்பெயர்ந்தது இதுவே முதல்தடவை என ஐநா தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் ஐநா தெரிவித்துள்ளது. காசாவில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். குண்டுவீச்சில் 1000த்திற்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/166600
  22. இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல் - பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்? பட மூலாதாரம்,REUTERS/AMIR COHEN 12 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு விதித்த கெடு முடிவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. காசாவை ஒட்டியுள்ள அஷ்கெலான் என்ற நகரை நோக்கி ஹமாஸ் குழுவினர் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேநேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால், இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் குழுவினர் திடீரென சுமார் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் சென்றுவிட்டனர். இதனால் நிலைகுலைந்து போன இஸ்ரேல் உடனே சுதாரித்துக் கொண்டு, அடுத்த சில மணி நேரத்தில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டது. அதுமுதற்கொண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்குள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயுதம் தாங்கிய நபர்களையும் முறியடிக்க இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக, காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலான் நகரை மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்தது. ஆகவே, அந்நகர மக்கள் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கெடு விதித்தது. டெலிகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "காசா கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரின் குடியிருப்பாளர்கள் மாலை 5 மணிக்குள் (இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 மணி) வெளியேற வேண்டும்" என்று எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்ததையும் ஹமாஸ் நினைவுகூர்ந்தது. கெடு தாண்டியதும் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே, ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது. காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. கண்ணாடி சிதைவுகள் பட்டதால் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பட மூலாதாரம்,ATEF SAFADI/EPA-EFE/REX/SHUTTERSTOCK காசாவில் தாக்குதலை தொடரும் இஸ்ரேல் அஷ்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஜக்காரியா அபு மும்மர், ஜாவத் அபு ஷாமல் ஆகிய 2 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஹமாஸில் அதிகாரம் வாய்ந்த அரசியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இருதரப்பிலும் பலி 2,000ஐ நெருங்குகிறது அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 870-ஆக உயர்ந்துவிட்டதாக காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் 4,000 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை முதல் குறைந்தது 1,008 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிட்ட இத்தூதரகம், 3,418க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாலத்தீனர்களுக்கு பாதையை மூடிய எகிப்து இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக ரஃபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா பாதை தான் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறும் ஒரே வழி. இப்பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக எகிப்து தற்போது இந்தக் பாதையை மூடியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பாதை திறந்திருந்தாலும், அதனை கடந்து செல்ல நீண்ட காத்திருப்போர் பட்டில் இருக்கிறது. அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே அந்த பாதையை கடந்து செல்ல முடியும். இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி ஓடும் பாலத்தீனர்கள் அங்கிருந்து வெளியேறும் ஒரே வழியும் அடைபட்டிருப்பதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர். இஸ்ரேலிய பணயக் கைதிகள் என்ன ஆனார்கள்-? ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், சனிக்கிழமை இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 100 முதல் 150 பேர் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம், கடத்தப்பட்டவர்களின் 50 குடும்பங்களுடன் பேசியுள்ளதாகவும், இராணுவம் தகவல்களை உறுதிசெய்யும்போது மேலும் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களைத் தொடங்கினால் கடத்தப்பட்டவர்களைக் கொன்றுவிடுவோம் என்று நேற்று இரவு ஹமாஸ் அமைப்பு மிரட்டியது. சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் கூறியது. ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா, சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளார். "எதிரி நாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எங்களைத் தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினரிடமும் இந்த கோப்பு போர் முடிவதற்கு முன்னர் திறக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளோம்" என்று அவர் கூறினார். மேலும், "மற்றும் அது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விலையில் மட்டுமே இருக்கும்." என்றார். இஸ்ரேல் சனிக்கிழமை தெற்கு இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட 100 முதல் 150 பேர் வரை ஹமாஸ் வசம் உள்ளதாக மதிப்பிடுகிறது. பட மூலாதாரம்,TWITTER பணயக் கைதிகளை விடுவிக்க ரகசிய பேச்சுவார்த்தையா? இரு தரப்புமே பணயக் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறினாலும், கத்தார் மத்தியஸ்தத்தின் பேரில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் வசம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினரை விடுவிக்க இஸ்ரேல் கோரியிருப்பதாக தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு குடிமக்கள் 30 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படும் இஸ்லாமிய ஜிஹாத் குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. https://www.bbc.com/tamil/articles/cmlrvevweezo
  23. இஸ்ரேலின் பேர்ள் ஹாபர் தருணம்? ஏன் இஸ்ரேலின் அதிநவீன எல்லை பாதுகாப்பினால் சனிக்கிழமை தாக்குதலை தடுக்க முடியவில்லை? Published By: RAJEEBAN 09 OCT, 2023 | 02:41 PM சிஎன்என் துப்பாக்கிதாரிகள் வான் மூலமும் கடல்வழியாகவும் வான்வெளி மூலமாகவும் வந்தார்கள் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் பணயக்கைதிகளாக பொதுமக்களை பிடித்துச்சென்றார்கள் மக்களின் உயிருக்கு அஞ்சி வீடுகளிற்குள் முடங்கிஇருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தினார்கள். வான்வெளி பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகளுடன் உதயமான அன்றயை தினம் மதியத்திற்குள் இஸ்ரேல் தனது 75 வருட வரலாற்றில் மோசமான நாளை எதிர்கொண்டது. வறுமையில் சிக்குண்டுள்ள மக்கள் கடும் நெருக்கமாக வாழும் காஜா பள்ளத்தாக்கை சேர்ந்த ஹமாஸ் குழுவை சேர்ந்தவர்கள் அன்றிரவிற்குள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து பல நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்திவிட்டனர். இஸ்ரேலிற்கு பயங்கரவாத தாக்குதல் புதிய விடயம் என்ற போதிலும் சனிக்கிழமை தாக்குதல் முன்னொருபோதும் இல்லாதது, முன்னெச்சரிக்கை இல்லாதது மாத்திரம் இதற்கு காரணமல்ல - இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலால் பெரும் ஆச்சரியத்தில் அதிர்ச்சியில் சிக்கவேண்டி வந்ததும் முக்கியமான விடயம். பல தசாப்தங்களில் இஸ்ரேல் தொழில்நுட்ப சக்தியாக மாறியுள்ள போதிலும் மிகவும்திறமையான ஆயுதப்படைகள் உலகின் முன்னணி புலனாய்வு பிரிவு போன்றவற்றை கொண்டுள்ள போதிலும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகள் பெருமளவு கேள்விகளை எதிர்கொள்கின்றனர். 17 வருடங்களிற்கு பின்னர் இஸ்ரேலிற்குள் இடம்பெற்ற தாக்குதலில் போர்வீரர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர், தனது முகாம்களிற்குள் நகரங்களிற்குள் இவ்வாறான ஊருடுவல்களை இஸ்ரேல் எதிர்கொண்டது இல்லை. 1948 சுதந்திரத்திற்கான போரின் போது கிப்புட்டிஜம் என்ற நகரத்திற்குள் ஊடுருவல் இடம்பெற்றது. உலகின் மிகவும் வறுமையான பகுதியை சேர்ந்த பயங்கரவாதிகளால் இவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள முடியும்? முழு அமைப்பு முறையும் தோல்வியடைந்தது தனியாக ஒன்று மாத்திரம் இல்லை முழுப்பாதுகாப்பு அமைப்பும் தோல்வியடைந்துள்ளது. இஸ்ரேலின் முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அதன் பொதுமக்களிற்கு பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது என இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் சர்வதேச பேச்சாளர் ஜொனதன் கொனரிகஸ் தெரிவித்துள்ளார். இது இஸ்ரேலிற்கான பேர்ள் கார்பர் துறைமுக தருணம் என குறிப்பிட்டுள்ள அவர் நேற்றுவரை யதார்த்தம் காணப்பட்டதா இன்று முதல் காணப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். சனிக்கிழமை சம்பவங்கள் மற்றும் புலனாய்வு தோல்விகள் குறித்த கேள்விகளை இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் தவிர்த்துவருகின்றது. இஸ்ரேல் தற்போது பொதுமக்களை பாதுகாப்பதிலும் தற்போதைய மோதல்களிலுமே ஈடுபட்டுள்ளது என இராணுவ பேச்சாளர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். பின்னர் புலனாய்வு தகவல்கள் விடயத்தில் என்ன நடைபெற்றது என்பதை பேசுவோம் என அவர் தெரிவித்துள்ளார். போதியளவு பாதுகாக்கப்படவில்லை. இந்த தாக்குதல் இன்னுமொரு எதிர்பாராத மோதலின் 50 வருடத்தன்று இடம்பெற்றுள்ளது. 1973ம் ஆண்டு அராபிய கூட்டணி நாடுகள் இஸ்ரேலிற்கு எதிராக யொம் கிப்பூர் தினத்தன்று தாக்குதலை மேற்கொண்டிருந்தன- யொம் கிப்பூர் என்பது யூதர்களின் முக்கியமான தினங்களில் ஒன்று. எனினும் அந்த தாக்குதல்கள் இஸ்ரேலிற்கு ஆச்சரியமளித்துள்ளன என முன்னாள் பிரதமர் நவ்டலி பெனெட் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். இராணுவ வரலாற்றில் எப்போதும் பெரிய ஆச்சரியங்கள் உள்ளன - பேர்ள் ஹாபர் பார்பரோசா யொம்கிப்பூர் யுத்தம் என தெரிவித்துள்ள அவர் புலனாய்வுகள் ஒரு அளவிற்குதான் துல்லியமாக செயற்படமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். 2005 இல் காசாவிலிருந்து விலகியதிலிருந்து தனது எல்லையை பாதுகாக்க அது மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளது ,காசாவிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளும் எந்த ஆயுதத்தையும் தாக்கிவந்துள்ள இஸ்ரேல் பயங்கரவாதிகள் வான்வெளி ஊடாகவோ அல்லது சுரங்கப்பாதை ஊடாகவோ தனது பகுதிக்குள் வருவதை தடுத்துவந்துள்ளது. ரொக்கட் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஐயன்டொம் என அழைக்கப்படும் வலுவான ரொக்கட் பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்கியுள்ளது ,இது அமெரிக்காவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் சென்சர்கள் மற்றும் நிலத்தடி சுவர்களுடன் கூடிய எல்லையை உருவாக்கியுள்ளது. சனிக்கிழமை இந்த அமைப்புமுறைகள் எங்கு தோல்வியடைந்தன என்பதை இஸ்ரேல் ஆராயும் ஹமாஸ் 2000க்கும் மேற்பட்ட ரொக்கட்களை ஏவியது என தெரிவித்துள்ள இஸ்ரேல் அவற்றில் எத்தனை இடைமறிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. எல்லை வேலிகள் குறித்தும் இஸ்ரேல் கருத்துக்கூறவில்லை. காசாவிற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய சமூகங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சுவார்த்தை அதிகாரி அரோன் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இதனை எதிர்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166466
  24. என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின - ஹமாஸ் தாக்குதலில் சிக்கிய பெண் Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 04:52 PM என்மீது விழுந்த உடல்களே என்னை காப்பாற்றின என ஹமாசின் தாக்குதலில் சிக்குண்டு உயிர்தப்பிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். ஹமாசின் தாக்குதலில் சிக்குண்ட பெண்ணொருவர் தனது 24 வயது மகன் எலியன் கடத்தப்பட்டுள்ளார் என அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். அந்த தருணத்திலிருந்து உண்பதும் உறங்குவதும்; கடினமாக உள்ளது அவர் எங்கிருக்கின்றார் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையிலேயே நான் எப்போதும் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்தவேளை இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரில் அவரது மகனும் ஒருவர் . சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 270 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. உடல்கள் என்மீது விழுந்தன உடல்களே என்னை காப்பாற்றின துப்பாக்கிபிரயோகத்திலிருந்து அவை என்னை காப்பாற்றின என அந்த பெண் தெரிவித்துள்ளார். நானும் மகனும் ஒருவரையொருவர் இருக்கமாக பிடித்துக்கொண்டு நின்றோம் தீடிரென ஒருவர் மகனை இழுத்துச்சென்றார் நான் அவனை இழந்தேன் என அபுட் என்ற பெண்மணி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166576

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.