Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. கண்டபடி எழுதினா வெட்டுவிழும் என்று சொல்றீங்க? யாழ்ப்பாணத்தில கிரிமினல் வழகக்கு பேசி உடைப்பதில் நீங்க சொன்ன பிறக்கிறாசி தானாம் முதல்வர்.
  2. ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகும் இலங்கை பிரஜைகள் தாயகம் வர முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 11 நவம்பர் 2022, 14:01 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த ஆறு பேரில் நால்வர் இலங்கை பிரஜைகள். நளினியின் கணவரான முருகன் என்றழைக்கப்படும் ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ் மறறும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர். இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்கள். ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் 1990ம் ஆண்டு தமிழகத்திற்கு பயணித்து, அங்கு அகதி அந்தஸ்த்தை கொண்டவர்கள். இவ்வாறு இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த நான்கு இலங்கையர்களுக்கும் இலங்கைக்கு வருகைத் தர சந்தர்ப்பம் உள்ளதாக என்பது தற்போது கேள்விகுரியதாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் தொடர்ந்து தடை அமலில் உள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, விடுவித்து விடுதலையான இலங்கை பிரஜைகளால் நாட்டிற்கு மீள வர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இலங்கைக்கு வர முடியுமா? ஒருவேளை இலங்கைக்கு வருகை தரும் இவர்களை, விடுதலைப் புலிகளாக கருதி இலங்கை அரசாங்கம் அவர்களை மீள கைது செய்ய முடியுமா? இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்கள், மீண்டும் நாட்டிற்கு வருகை தர சந்தர்ப்பம் உள்ளதா? என்பது குறித்து பிபிசி தமிழ், சட்ட நிபுணர்கள் சிலரிடம் வினவியது. படக்குறிப்பு, ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா இவ்வாறு எழுந்த கேள்விகளை, பிபிசி தமிழ், இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவிடம் வினவியது. ''அவர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தருவதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது. அவர்களுக்கு கடவுச்சீட்டு உள்ளது என்றால், அவர்களுக்கு விசா உள்ளது என்றால், நிச்சயமாக நாட்டிற்கு வருகை தர முடியும். எனினும், ஏதேனும் குற்றச்சாட்டு தொடர்பில் இவர்களின் பெயர்கள் சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களை கைது செய்ய முடியும்," என்கிறார் சில்வா. இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ளவர்களை மீள அதே குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய முடியுமா? என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவிடம் நாம் வினவினோம். ''அந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்ய முடியாது. இலங்கைக்குள் ஏதேனும் குற்றம் செய்திருக்க வேண்டும். உதாரணமாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியிருந்தால், அல்லது வேறு விதமான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தால், அவர்களை கைது செய்ய முடியும்" என அவர் பதிலளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, சாந்தன் உள்பட 6 பேர் விடுதலை - யார் இவர்கள்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு6 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதையும், வழக்கு கடந்து வந்த பாதையும்6 மணி நேரங்களுக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணையக்குழு என்ன சொல்கிறது? இதே கேள்விகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவாவிடம் நாம் வினவினோம். படக்குறிப்பு, சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா ''அவர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தர முடியும். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் தொடர்ந்தும் தடை காணப்படுகின்றது. இவர்கள் உறுப்பினர்கள் என்றால், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்களும் கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேக நபர்கள் மாத்திரமே. எனினும், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயர் அவர்கள் மீது பொறிக்கப்படவில்லை. வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்படுகின்றார்கள் என்றால், அவர்களுக்கு தண்டனை இல்லாது செய்தே, விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி என்றால், அவர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. இலங்கை பிரஜையொருவருக்கு எந்தவொரு நேரத்திலும் இலங்கைக்கு வருகைத் தர முடியும். எந்தவொரு நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் முடியும் என ஆட்டிக்கல் 14ல், இறுதியாக கூறப்பட்டுள்ளது. வேறு குற்றங்களை செய்திருந்தால், கைது செய்யப்படலாம். ஆனால், வேறு குற்றங்கள் கிடையாது. அப்படி என்றால், கைது செய்ய முடியாது" என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார். Play video, ""ராஜீவ் காந்தி இறந்தப்போ நான் பாதுகாப்புப் பணியில் இருந்தேன்"", கால அளவு 4,09 04:09 காணொளிக் குறிப்பு, இன்னும் என் உடம்பில தோட்டாக்கள் இருக்கு - ராஜீவ் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த பெண் இதேவேளை, குறித்த நான்கு பேரும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அது அவர்களுக்கு பிரச்சினையாக உருவாகலாம் என மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். சந்தேகம் எழுப்பும் வழக்கறிஞர் படக்குறிப்பு, சட்டத்தரணி இளையதம்பி தம்பையா ''விடுதலைப் புலி உறுப்பினர்களாக இருந்து, அவர்கள் இந்த தாக்குதலை நடத்த உதவி செய்துள்ளார்கள் என குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களுக்கு பிரச்சினை உள்ளது. விடுதலைப் புலிகள் தடை விதிக்கப்பட்ட அமைப்பு. இலங்கை அரசாங்கம் தடையை நீக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சிலரின் பெயர்களை, தடை பட்டியலிலிருந்து இலங்கை நீக்கியுள்ளது. இவர்கள் மீது தடை இருந்தால், அந்த தடையை நீக்க வேண்டும். இந்தியாவிலும் அவர்களுக்கு பிரச்சினை உள்ளது. அவர்களை முகாம்களுக்கே அனுப்புவார்கள். அவர்களை இந்தியாவில் நடமாட விடமாட்டார்கள். சொந்த நாட்டு பிரஜைகள் இல்லாதமையினால், அவர்களை முகாமிற்கே அனுப்புவார்கள். ஆனாலும், இந்தியா விஸா கொடுத்தால், அவர்களுக்கு அங்கு இருக்க முடியும். நாடு கடத்தினாலும், இலங்கை ஏற்குமா என்ற கேள்வி இருக்கின்றது. எங்களுக்கு இலங்கைக்கு போக முடியாது, தங்குமிட விசாவை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுக்க முடியும். அதற்கு மறுப்பு தெரிவிக்கப்படும் பட்சத்தில், அந்த நாட்டு நீதிமன்றத்தை நாட முடியும். இவர்களை வருகைத் தர இலங்கை அனுமதி வழங்கினால், பிரச்சினை கிடையாது" என மூத்த சட்டத்தரணி இளையதம்பி தம்பையா குறிப்பிடுகின்றார். https://www.bbc.com/tamil/articles/clk2kp3e7ngo
  3. காலநிலை மாற்றத்தால் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருகுகின்றனவா? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்குத்தொடர்ச்சி மலையில் நீலகிரி வரையாடுகளின் வாழ்விடப் பரப்பு குறைய ஆக்கிரமிப்புத் தாவரங்களும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன உலகளவில் காடுகள் அதிகமுள்ள 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில், ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடந்த ஐ.நாவின் 26வது காலநிலை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பூமியின் காடுகளைப் பாதுகாக்க உறுதிபூண்டனர். ஆனால், கிளாஸ்கோ பிரகடனத்தில் காடுகள் பாதுகாப்புடன் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளை இணைக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு ஈடுபாடு இல்லாததால், அதில் இந்தியா உடன்படவில்லை. இந்த முடிவு மேற்குத்தொடர்ச்சி மலையைப் போன்ற பல்லுயிரிய வளம் மிக்க பகுதிகளுக்கு மேலும் அபாயத்தைக் கூட்டலாம் என்று விமர்சிக்கப்பட்டது. இப்போது 27வது காலநிலை மாநாடு எகிப்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதேவேளையில், இன்றளவும் மேற்கு மலைத்தொடரைப் போன்ற காட்டுப் பகுதிகளுக்கான அபாயங்களும் நீடிக்கவே செய்கின்றன. இந்த முறை இந்தியா காடுகள் பாதுகாப்பில் என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாளும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் நிலப்பரப்பில் உள்ள மாநிலங்கள் திடீர் வெள்ளம், நிலச்சரிவு என்று ஏற்கெனவே பல்வேறு பேரிடர்களை ஒவ்வோர் ஆண்டும் எதிர்கொண்டு வருகின்றன. அப்படியிருக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜேஜிஆர் அட்மோஸ்ஃபியர்ஸ் (Journal of Geophysical Research: Atmospheres) வெளியிட்ட ஓர் ஆய்வு, இந்த நூற்றாண்டின் இறுதி வரை இந்தப் பிரச்னைகளின் விகிதம் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஆண்டுவாரியாக அதிகரித்த வண்ணம் இருக்கும் என்று எச்சரித்தது. எறும்புகளால் கால்நடைகளை இழக்கும் திண்டுக்கல் கிராமம்: அச்சத்தில் பொதுமக்கள் - கள நிலவரம்16 ஆகஸ்ட் 2022 காலநிலை நெருக்கடி குறித்த அறிக்கை சென்னையை எச்சரிப்பது ஏன்?14 மார்ச் 2022 மேற்குத் தொடர்ச்சி மலை: மாதவ் காட்கில் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்கிறதா கஸ்தூரி ரங்கன் அறிக்கை?13 டிசம்பர் 2021 காடழிப்பு, கட்டுமானங்களின் பெருக்கம், தீவிர வானிலை நிகழ்வுகள் என்று பல்வேறு பிரச்னைகளை மேற்கு மலைத்தொடர் சந்தித்து வருகின்றது. அவற்றோடு ஆக்கிரமிப்பு தாவரங்களின் பெருக்கமும் மனிதர்களால் பெரியளவில் விரிவுபடுத்தப்படும் தோட்டப்பயிரிடுதல்களும் மலைத்தொடர் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் கணிசமான பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. வேதிமத்தை வெளியிடும் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் “ஆக்கிரமிப்பு தாவரங்கள் மேற்கு மலைத்தொடரில் அதிகமாகப் பரவியுள்ளன. இந்தத் தாவரங்களால், வாழ்விட ஆக்கிரமிப்பு நிகழ்கிறது. அது உள்ளூர் தாவரங்களின் பரவலைத் தடுத்து, அவற்றின் பெருக்கத்தைப் பாதிக்கிறது,” என்கிறார் தாவரவியல் ஆய்வாளர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. பூக்கள் மற்றும் காட்டுயிர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்துவன் மூலம் மட்டுமே ஒரு சூழலியல் அமைப்பின் சமநிலையைப் பராமரிக்க முடியும். ஆனால், பெரும்பாலும் சோலைக் காடுகள், பசுமைமாறாக் காடுகள், புல்வெளிகள், சமவெளிக் காடுகள், சதுப்புநிலம் என்று அனைத்து நிலப்பகுதிகளிலும் அயல் தாவரங்கள் காணப்படுகின்றன. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கடந்த காலங்களில் புல்வெளிக் காடுகள், சோலைக் காடுகளை அழித்து யூகலிப்டஸ், வாட்டல் போன்ற மரங்களுக்கான பரந்த தோட்டப் பயிரிடுதல்கள் நிகழ்ந்தன. சமீபத்தில் 2020ஆம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்பிற்கான சர்வதேச ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு உட்பட பல்வேறு ஆய்வுகள், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடங்கள் குறைவதற்கான காரணங்களில் ஆக்கிரமிப்புத் தாவரங்களின் பெருக்கமும் ஒன்று எனக் கூறுகின்றன. சமீப காலங்களில் காட்டெருதுகள் கொடைக்கானல் நகரப்புற பகுதிகளுக்குள் அடிக்கடி வருகின்றன. அதற்கும், காடுகளில் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பெருக்கத்தால் உணவு கிடைக்காதது ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த மண்ணோடு தொடர்பற்று இங்கு வந்து பரவிய அயல் தாவரங்கள் அனைத்தையுமே ஆக்கிரமிப்பு தாவரங்கள் எனக் கருதிவிட முடியாது என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி, “உள்ளூர் தாவரங்களின் பெருக்கம் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவற்றையே ஆக்கிரமிப்பு தாவரங்கள் எனக் குறிப்பிட வேண்டும். அத்தகைய தாவரங்களுக்கும் உள்ளூர் தாவரங்களுக்கும் இடையே வாழ்விடப் போட்டி நடக்கிறது. அதில், இடம் மட்டுமின்றி மண் வளம் போன்ற அனைத்தையுமே உள்ளூர் தாவரங்களிடம் இருந்து அவை எடுத்துக் கொள்கின்றன,” என்கிறார். அவற்றுக்கு இனப்பெருக்கத் திறனும் அதிகம். பெரும்பான்மையான ஆக்கிரமிப்பு தாவரங்கள் விரைவாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன. அதிக இடத்தை ஆக்கிரமிக்கின்றன. மற்ற தாவரங்களுக்கான சத்துகளையும் சேர்த்து அதிகமாக எடுத்துக் கொள்கின்றன. இப்படி அனைத்திலும் உள்ளூர் தாவரங்கள் அவற்றோடு போட்டியிட வேண்டியுள்ளது. “இப்படி உள்ளூர் தாவரங்களுக்கு போட்டி அதிகமாகும்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து, ஆக்கிரமிப்பு தாவரங்கள் பெருகுகின்றன. உள்ளூர் தாவர வகைகள் குறையும்போது, அது அந்தப் பகுதியின் பருவநிலை தாங்குதிறனையும் பாதிக்கக்கூடும்,” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. “பல்லாண்டுகள் காலகட்டத்தில், தாவரங்கள், மண், பருவநிலை ஆகியவற்றுக்கு இடையே ஓர் ஒத்திசைவு ஏற்பட்டிருந்தது. குறிப்பிட்ட காலத்தில் பூப்பது, காய்ப்பது, செழித்து வளர்வது என்று அனைத்துமே அதைச் சார்ந்தது தான். இந்த உறவு பாதிக்கப்படும்போது, தாவரங்களின் வாழ்வியல் சுழற்சி பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு தடைகள் ஏற்படும்,” என்றும் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேயிலை தோட்டத்திற்குள் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டெருதுகள் அதுமட்டுமின்றி, “ஆக்கிரமிப்பு தாவரங்களின் வேர்ப்பகுதி வெளியிடும் அல்லிலோ வேதிமங்கள் என்ற ஒருவகையான வேதிமங்கள், உள்ளூர் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். தாவரத்தைச் சுற்றியிருக்கும் வேர் மண்டலத்தில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் இதனால் பாதிக்கப்படும்,” என்கிறார். வேர்களில் இருக்கும் நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் ஆகியவை தாவரத்தோடு ஒரு கூட்டு வாழ்க்கையை வாழ்கின்றன. அவை மீது ஏற்படும் தாக்கம், தாவரத்தின் வளர்ச்சி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான பாதிப்புகள் மலைப்பகுதியில் தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களுக்கான தாங்குதிறன் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார். “ஆக்கிரமிப்பு தாவரங்களைப் பொறுத்தவரை செடிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைவிட, தோட்டப் பயிரிடுதல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். அவை மண்ணை இறுகப் பிடிக்காது. அதனால் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன,” எனக் கூறுகிறார் தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன். அதேவேளையில், “தோட்டப் பயிரிடுதல்கள் அதிகமாகியுள்ளன. ஆனால், அது மனிதர்களால் நடப்பட்டவை தான். அவை தாமாகப் பரவவில்லை. அதுபோக, லன்டானா போன்றவை அதிகமாகியுள்ளன. இப்போது அதுகுறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளதால் நாம் அதைப் பற்றிச் சிந்திக்கிறோம். ஆனால், பொதுவாக ஆக்கிரமிப்பு தாவரங்கள் அதிகமாகிவிட்டதாகச் சொல்வதே ஓர் அனுமானத்தில் தான் சொல்லப்படுகிறது. சமதளத்தில் பரவியுள்ள ஆக்கிரமிப்புத் தாவரங்கள் அளவுக்கு இன்னும் மலைத்தொடரில் அதிகமாகப் பரவவில்லை,” என்கிறார் பேராசிரியர் நரசிம்மன். பட மூலாதாரம்,GETTY IMAGES “தேயிலை, காபிக்கான தோட்டப் பயிரிடுதல்களைத் தொடங்கியது முதலே, மூணாரின் உள்ளூர் தாவரங்களின் பரவலில் மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன,” என்கிறார் இயற்கையியலாளர் ரெ.பாபு. கேரள சுற்றுலா துறையின் கேரளா டூரிசம் அண்ட் டிராவல் கல்வி நிறுவனத்தில் சுற்றுலாத் துறை உதவி பேராசிரியராக இருக்கும் பாபு, மூணார் பகுதியில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருகியதால் ஏற்பட்டும் மாற்றங்களைச் சிறு வயது முதல் அவதானித்து வருபவர். அவர் தற்போது அந்தப் பகுதியில் அயல் தாவரங்கள் ஆக்கிரமிப்பு தாவரங்களாக ஏற்படுவதில் இருக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். மேற்குத்தொடர்ச்சி மலை எதிர்கொள்ளும் அபாயங்கள் 2011ஆம் ஆண்டு மாதவ் காட்கில் தலைமையிலான ஆய்வுக்குழுவின் அறிக்கையில், இந்த மலைத்தொடர் காலநிலை நெருக்கடிக்கு மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டது. காலநிலை மாறி வருவதன் காரணமாக, பருவநிலையிலும் மழைப்பொழிவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மலைத்தொடர் முழுவதும் ஏற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இது ஒருபுறம் இருக்க, மேற்கு மலைத்தொடரில் காணப்படும் ப்ளாக் அண்ட் ஆரஞ்ச் ஈபிடிப்பான், நீலகிரி ஈபிடிப்பான் ஆகிய இரண்டு வகையான பறவைகள், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால் அவற்றின் வாழ்விடப் பரவலில் 31 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை இழக்கக்கூடும் என்று கரன்ட் சயின்ஸ் என்ற ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை கடந்த ஆண்டு குறிப்பிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீலகிரி ஈபிடிப்பான் பறவைகள் காலநிலை மாற்றத்தால் மட்டுமே பாதிக்கப்படவில்லை, ஆக்கிரமிப்புத் தாவரங்களின் பெருக்கத்தாலும் அவை பாதிக்கப்படுகின்றன என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட திரிச்சூரில் இருக்கும் காடியல் கல்லூரியின் காட்டுயிர் அறிவியல் துறை பேராசிரியர் முனைவர்.பி.ஒ.நமீர். “இந்த ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பரவியுள்ள நிலப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவி வெகுவாகப் பரவுகின்றன. இதனால், இவை பரவும் நிலத்திலுள்ள தாவரங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆக்கிரமிப்புத் தாவரங்களில் பலவும் வறண்ட பகுதிகளில் வேகமாகப் பரவுகின்றன. வெப்பநிலை உயர்வால் பசுமை மற்றும் ஈரம் நிறைந்த பகுதிகள் வறண்டு வருவது, அந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு,” என்கிறார் நமீர். தென்னிந்தியாவின் காலநிலை நெகிழ்வுத்தன்மையைப் பேணிக்காப்பதில் மேற்கு மலைத்தொடருக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. சுமார் 1600 கி.மீட்டருக்கு நீண்டிருக்கும் இந்த மலைத்தொடர் தான் தென்மேற்குப் பருவமழையை முதலில் சந்திக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டில் மழைப்பொழிவின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாக ஒரு பகுப்பாய்வு கூறுகிறது. பூனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல ஆய்வு நிறுவனத்தின் காலநிலை மாற்ற ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்த ஹம்சா வரிகொடென் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 1901 முதல் 2015 வரையிலான மழைப்பொழிவு தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அப்போது, 1931 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான 85 ஆண்டுகளில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் மழைப்பொழிவு பத்தாண்டுகளுக்கு 3 சதவீதம் என்ற விகிதத்தில் குறைந்து வந்தது தெரிய வந்தது. அதேநேரத்தில், நாட்டின் வடக்குப் பகுதியில் பத்தாண்டுகளுக்கு 2 சதவீதம் என்ற விகிதத்தில் மழை பொழியும் அளவு அதிகரித்துள்ளது. காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா?15 ஜனவரி 2022 காணாமல்போகும் காட்டுயிர்: இந்தியாவில் 10 ஆண்டுகளில் 984 புலிகள் பலி - காரணம் என்ன?2 ஜனவரி 2022 மான் வேட்டை, தொடரும் மரணங்கள் - யார் காரணம்? சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது?20 மார்ச் 2022 மாறி வரும் வாழ்விட சூழல் “மூணாறு பகுதிகளில், புளிச்சான் கீரை எனச் சொல்லப்படும் தாவர வகை இப்போது அதிகமாகக் காணப்படுவதில்லை. முன்னர், புளிக்குப் பதிலாக இந்தக் கீரை வகையைத் தான் அதிகம் பயன்படுத்தினோம். தேயிலை தோட்டங்களில் வேதிமங்களைப் பயன்படுத்தியதில் இதுபோன்ற பல கீரை வகைகள் இப்போது காணாமல் போய்விட்டன,” ரெ.பாபு. மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு உயிரினங்கள் பெயர் போனவை. அந்த மலைத்தொடருக்கு மக்கள் ஈர்க்கப்படுவதற்கான காரணங்களில் பட்டாம்பூச்சிகளுக்கும் ஒரு பங்குண்டு. ஆனால், கடந்த ஆண்டுகளில் பட்டாம்பூச்சிகளுக்கான வாழ்விடங்கள் மலைத்தொடரில் குறைந்து வருவதாக பாபு கூறுகிறார். “மேற்குத்தொடர்ச்சி மலையில் பட்டாம்பூச்சிகள் சார்ந்து வாழக்கூடிய தாவர வகைகள், ஆக்கிரமிப்புத் தாவரங்களின் பரவலால் குறைந்துவிட்டன. ஒவ்வோர் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களும் கடைசி இரண்டு மாதங்களும் பட்டாம்பூச்சிகள் சீசனாகவே இருந்தது. மூணார் பகுதியைப் பொறுத்தவரை, நவம்பர், டிசம்பரில் தென்பகுதியில் இருந்து வட பகுதிக்கு கூட்டமாக இடம் பெயரும் பட்டாம்பூச்சிகள், ஜனவரி, பிப்ரவரியில் வடபகுதியில் இருந்து தென்பகுதிக்கு இடம்பெயரும். இப்போது அத்தகைய இடப் பெயர்வைக் காண முடிவதில்லை,” என்கிறார் பாபு. பட மூலாதாரம்,GETTY IMAGES மேலும், இதுகுறித்து ஆய்வு செய்தபோது “இவை சார்ந்து வாழக்கூடிய தாவர வகைகளின் பெருக்கம் குறைந்ததும் ஒரு காரணமாக இருப்பது தெரிய வந்தது. அந்தத் தாவரங்கள் குறைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், அவற்றின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்புத் தாவரங்கள் கைப்பற்றிக் கொண்டன” என்கிறார். ஓர் ஆய்வாளராகத் தனக்கு அனைத்து தாவரங்களும் ஒன்று தான் எனக் கூறும் கிருஷ்ணமூர்த்தி, “இங்கிருந்தும் பல தாவரங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளன. உள்ளூர் தாவரங்களுக்கு அபாயத்தை விளைவிக்கக்கூடிய பல தாவரங்கள், மக்களுடைய வாழ்வியலுக்கு உதவுகின்றன. சீமைக் கருவேல மரத்திற்கும் இது பொருந்தும். சீமைக் கருவேலம் இல்லையென்றால் கிராமங்களில் பெரும்பாலான வீடுகளுக்கு விறகு கிடைக்காது. இப்படியாக, ஆக்கிரமிப்புத் தாவரங்களாக உள்ளூர் தாவரங்களுக்கு அபாயமாக விளங்கும் அயல் தாவர வகைகளை, பயன்பாட்டு ரீதியில் திசை திருப்புவது அவற்றைக் கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தரலாம். கர்நாடகாவிலும் கூட லேன்டானா கேமராவில் இருந்து நாற்காலிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல், பார்த்தீனியம் செடியில் இருந்து நார் எடுக்கலாம். அனைத்து தாவரங்களுக்குமே ஏதேனும் பயன்பாட்டுரீதியிலான பண்பு இருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கினால் கட்டுப்படுத்தவும் முடியும். https://www.bbc.com/tamil/articles/cjkxk1ne7dgo
  4. சம்பந்தனுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் சென்று வாழ்த்து ! 11 NOV, 2022 | 08:47 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும்,இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது. இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார். மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்க்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு, மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139769
  5. மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்க நடவடிக்கை : கல்வி அமைச்சர் By DIGITAL DESK 2 11 NOV, 2022 | 02:08 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளதால் ஆகாரம் பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் வீதம் ஏனைய காலங்களைவிட அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் இருக்கும் மொத்த அரச பல்கலைக்கழங்களில் ஒரு இலட்சத்தி 40ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருஇலட்சத்தி 10ஆயிரம் மாணவர்களுக்கு மகபொல உதவித்தொகையாக 5500ருபா வழங்கப்படுகின்றது. அதனுடன் மேலதிகமாக 500ரூபா வழங்கப்படுகின்றது. நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் 3மாதங்கள் நிலுவை இருந்தது. ஆனால் அந்த நிலுவை முடிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கி வருகின்றோம். இது தொடர்பாக திறைசேரி, நிதி அமைச்சுடன் நான் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அத்துடன் மாணவர்களின் போஷாக்கு தொடர்பாக கல்வி அமைச்சில் தனிப்பிரிவு இருக்கின்றது. அதன் பிரகாரம் தொகுதி, வலயம் மற்றும் மாகாண மட்டத்தில் மாதாந்தம் மாணவர்களின் போஷாக்கு தொடர்பான அறிக்கை பெற்று வருகின்றோம். நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறுமை நிலை அதிகரிப்பு காரணமாக ஏனைய காலங்களைவிட மாணவர்களுக்கு ஆகாரம் கிடைக்காத நிலையே இருக்கின்றது. அத்துடன் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்காக வருடாந்தம் 4பில்லியன் ருபா ஒதுக்கப்படுகின்றது. அதில் மாணவர் ஒருவருக்கு 60 ரூபாவரை செலவிட முடியும். அந்த தொகையை 75ரூபாவரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதேநேரம் இந்த தொகைக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனாவின் உதவி மற்றும் ஏனைய நன்கொடைகள் ஊடாக மொத்தமாக 11 இலட்சம் பேருக்கு பகல் உணவு வழங்கி வருகின்றோம். இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் இதுதொடர்பாக தனி நிதியம் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அதுதொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/139725
  6. ஈழப்பிரியன், suvy, வாத்தியார், பிரபா, முதல்வன், Kandiah57, ஏராளன், சுவைப்பிரியன் 8 பேரும் தான் இப்ப, ஆனா 19ஆம் திகதிக்கு முன் பல பேர் வர வாய்ப்பிருப்பதாக பட்சி சொல்லுது! எதுக்கும் திரியை பத்த வைச்சுக் கொண்டே இருங்க, அப்ப தான் பலரும் பார்த்து உள்ள குதிப்பினம்.
  7. கனவு தானே அண்ணை, கண்டால் தப்பா? போட்டியில் பங்குபற்றுவோர் குறைவென்றால் போட்டியே இல்லைங்கிறார் கிருபன் அண்ணை. அது தான் கொஞ்சம் கூவிப் பார்த்தனான். 🤭
  8. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, சாந்தன் உள்பட 6 பேர் விடுதலை - யார் இவர்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி (கோப்புப்படம்) 45 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, தற்போது அந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மேலும் ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியின் கணவரான ராஜீவ் காந்தியைக் கொல்ல நடந்த சதிக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் ஆறு பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த ஆறு பேர் யார், அவர்களைப் பற்றிய சிறிய குறிப்புகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்: ராஜீவ் கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு3 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதையும், வழக்கு கடந்து வந்த பாதையும்4 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்20 மே 2021 எஸ். நளினி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி கோப்புப்படம் ராஜீவ் காந்தி கொலையில் பிரதான குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி ஸ்ரீஹரன். இந்தியாவின் மிக நீண்ட காலம் சிறை தண்டனை பெற்ற பெண் ஆக இவர் கருதப்படுகிறார். 53 வயதாகும் நளினி, கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை மட்டுமே அவர் சிறைக்கு வெளியே பரோலில் வந்தார். 2016இல் முதன் முதலாக இவர் 12 மணி நேரம் பரோலில் வந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இரண்டாவதாக 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு 51 நாள் பரோல் வழங்கப்பட்டது. மகள் ஹரித்ராவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி அவர் பரோலில் வெளியே வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தமிழக அரசு நளினியை பரோலில் விடுவிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். ஸ்ரீஹரன் என்கிற முருகன் படக்குறிப்பு, முருகன் ஸ்ரீஹரன் என்றழைக்கப்படும் முருகன்தான் இந்தக் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என்று இந்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) என்ற தமிழ் போராளிக் குழுவின் தீவிர உறுப்பினராக அவர் இருந்தார். இலங்கையைச் சேர்ந்த இவர் இளம் வயதிலேயே எல்டிடிஈ இயக்கத்தில் சேர்ந்தார். முருகன், இந்திய குடிமகளான நளினியை மணந்தார். 1992 இந்த தம்பதி சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ராபர்ட் பயஸ் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான பி. ராபர்ட் பயஸ் இலங்கை குடிமகன். முன்னாள் பிரதமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிர உறுப்பினர்களுக்கு பயஸ் அடைக்கலம் அளித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அது புலனாய்வில் உறுதிப்படுத்தப்பட்டது. பயாஸ் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று புலனாய்வுத்துறையால் சந்தேகிக்கப்பட்டவர். அவர் போராளிக் குழுவின் தளங்களை அமைப்பதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் என்றும் மற்ற குற்றவாளிகள் தங்கியிருந்த இடங்களை வாடகைக்கு எடுத்து ராஜீவ் காந்தி படுகொலைக்கான திட்டமிடலுக்கு உடந்தையாக இருந்தார் என்கிறது சிபிஐ. ஜெயகுமார் படக்குறிப்பு, ராபர்ட் பயாஸ் (கீழ் வரிசையில் இரண்டாவது), ராபர்ட் பயாஸ் (கீழ் வரிசையில் மூன்றாவது) சாந்தன்(முதல்வரிசையில் மூன்றாவது) விடுவிக்கப்பட்டுள்ள மற்றொரு கைதியான ஜெயகுமார், ராபர்ட் பயஸின் மைத்துனர். குற்றவாளிகள் படுகொலை நிகழ்த்த ஒரு வீட்டை தமிழ்நாட்டில் ஏற்பாடு செய்ய உதவியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ரவிச்சந்திரன் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு இலங்கை பிரஜை ரவிச்சந்திரன். இந்தியாவில் பயண நிறுவனம் ஒன்றை நிறுவி, முன்னாள் பிரதமரைக் கொல்ல விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதற்காக ஒரு வாகனத்தை வாங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. டி.சுதேந்திரராஜா என்கிற சாந்தன் என்கிற சின்ன சாந்தன் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான சுதேந்திரராஜா விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர். பொட்டு அம்மானால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொலையாளிகள் குழுவில் இருந்த ஒன்பது பேரில் இவரும் ஒருவர். கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கும் சுருக்கமான பின்னணியும் படக்குறிப்பு, கோப்புப்படம் ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில், இலங்கையைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் நேரடியாக பங்கேற்றவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஏழு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தியின் மனைவியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி ஸ்ரீஹரனின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2008ல் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்தார். மேலும் 6 குற்றவாளிகளின் தண்டனையும் 2014-ல் குறைக்கப்பட்டது. அதே ஆண்டு, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடங்கினார். கடந்த மே மாதம் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவிக்க உச்ச நீதிமன்றம் தனது அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தியது. அவரது விடுதலை தொடர்பாக மாநில ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்தார் என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க நேர்ந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த அடிப்படையே தற்போது மீதமுள்ள ஆறு பேரின் விடுதலைக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. முன்னதாக, குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை 2018ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநருக்கு பரிந்துரை செய்ததாகவும், அதற்கு ஆளுநர் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. https://www.bbc.com/tamil/articles/cp9r9xgwr2vo
  9. பந்தயத்தின்போது தீப்பற்றிய கார் : ஜப்பானில் சம்பவம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 01:46 PM ஜப்பானில் நடைபெற்ற காரோட்டப் பந்தயத்தின் போது காரொன்று தீப்பற்றி அழிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹையுண்டாய் (Hyundai) அணியின் கார் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியது. அக்காரின் சாரதிகளான ஸ்பெய்னைச் சேர்ந்த டெனி சோர்டோ மற்றும் கென்டிடோ கரேரா ஆகியோர் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மரங்கள் அடர்ந்த வீதியொன்றின் ஊடாக இக்கார் சென்றுகொண்டிருந்தபோது அது திடீரென தீப்பற்றியது. காரின் சாரதி டெனி சோர்டோ இதுதொடர்பாக கூறுகையில், காரின் ஆசனங்களுக்கு இடையிலிருந்து பெற்றோல் வாசனையும் தீயும் வருவதை தான் உணர்ந்ததாக கூறினார். அதையடுத்து அவர்கள் உடனடியாக காரிலிருந்து வெளியேறினர். தீயணைப்பு உபகரணமொன்றின் மூலம் தீயை அணைப்பதற்கு ,வீரர்கள் முயற்சித்தனர். ஆனால், அக்கார் வேகமாக தீப்பற்றி எரிந்தது. அதனால் அவர்கள் வேறு வழியின்றி காரை கைவிட்டனர். டெனி சோர்டோ மற்றும் கென்டிடோ கரேரா ஆகியோருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. https://www.virakesari.lk/article/139735
  10. உயிர்மை நடத்திய எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல் ‘இடக்கை’, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘என்ன சொல்கிறாய் சுடரே’ ஓவியங்கள் தொடர்பான் நூல் ‘ஆயிரம் வண்ணங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழாவில் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்புரை.
  11. ஜனாதிபதி மாளிகை அறையிலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் By T. SARANYA 11 NOV, 2022 | 03:05 PM (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய இருவரினதும் குறைப்பாடுகள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (11) ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறியமை உளிட்ட கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு இதனை கோட்டை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தவறுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு பரிந்துரைகளை அரச சேவை ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ளதாக குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை, அரசியல்வாதி ஒருவருக்கு கையளிக்க, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகேவுக்கு கட்டளையிட்டதாக கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/139746
  12. உதவி செய்யப் போனேன் என்று சொன்னது ஒரு குற்றமா?
  13. அம்பாறையில் தானாம் வெள்ளப் பெருக்கு! ஓகோ, விடயம் தெரியாமல் உதவப் போயிட்டமோ?!
  14. விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி -நளினியின் தாயார். By RAJEEBAN 11 NOV, 2022 | 03:18 PM விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என நளினியின் தாயார் தெரிவித்துள்ளார் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட நிலையில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து 30 ஆண்டுகள் சிறையிலிருந்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவர்களின் விடுதலை குறித்து நளினியின் தாயார் பத்மா தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘ நளினியின் விடுதலைக்காக பாடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார். மேலும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களைத்தாண்டி எத்தனையோ மனிதநேயம் படைத்த பலர் எங்களுக்காகப் போராடினர். அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் விடுதலையாகும் இந்த ஆறுபேரும் அனைவருக்கும் ஒத்துழைத்து நல்ல முறையில் இருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். என் மகளும் நன்றாக படித்துள்ளார், அது அவருக்கு கைகொடுக்கும். என் மகள் நல்ல முறையில் வாழ வேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139748
  15. உங்களைப் பார்த்து பழகிறேன் அண்ணை.🤭 கிருபன் அண்ணைக்கு உதவியா இருப்பம் என்று தான்!
  16. டொங்காவில் 7.1 ரிக்டர் பாரிய பூகம்பம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 06:03 PM பசுபிக் சமுத்திர நாடான டொங்காவுக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.1 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டது. டொங்காவின் நேயாஃபூ நகரிக்கு தென்கிழக்கே 200 மீற்றர் தூரத்தில் இப்பூகம்பம் ஏற்படடதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துளளது. இப்பூகம்ப மையத்திலிருந்து 300 கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதிகிளல் சுனாமி அலைகள் தாக்கலாம் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மத்தியநிலையம் எச்சரித்துள்ளது. https://www.virakesari.lk/article/139768
  17. அரச பொறுப்புகளை துறந்தார் நோர்வே இளவரசி By T. SARANYA 11 NOV, 2022 | 03:40 PM நோர்வே இளவரசி தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆபிரிக்க அமெரிக்க ஹொலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார். புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இளவரசி மார்த்தா லூயிஸ்-ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடி மாற்று மருத்துவம் குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இளவரசி மார்த்தா லூயிஸ் கூறியிருப்பதாவது, "நோயாளிகளுக்கு வழக்கமான மருத்துவத்துடன், மாற்று மருத்துவ முறைகள்(யோகா, தியானம், அக்குபஞ்சர்) மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார். இந்த விஷயத்தை நோர்வே அரச குடும்பமும் உறுதி செய்துள்ளது. 51 வயதான நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ், தனது 'இளவரசி' பட்டத்தைத்தக்க வைத்துக் கொள்வார், ஆனால் எந்த வணிக நடவடிக்கைகளிலும் அதைப் பயன்படுத்த மாட்டார் என்று தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139750
  18. ஒரே பதட்டமா இருக்கே அண்ணை! ஆனாலும் நீங்க சொல்வதில் உண்மை இருக்கு😂
  19. இன்னும் 8நாட்களே உள்ளதால் கள உறவுகள் தாமதிக்காது போட்டியில் பங்குபற்றுங்கோ.
  20. ஆறு தமிழர் விடுதலை- தமிழக முதல்வர் வரவேற்பு By RAJEEBAN 11 NOV, 2022 | 03:58 PM ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை என்பது, மாநில அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு ஆதாரமாக தீர்ப்பு அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, இன்று நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை, தண்டனை பெற்றிருந்தவர்களின் கல்வித் தகுதி, சிறையிருந்த காலத்தில் அவர்களது நன்னடத்தை, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா அமர்வு தீர்ப்பளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக-வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்குபோதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, முதன்முதலில் 2000-ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதன்பிறகு இவர்கள் அனைவரின் விடுதலையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம். பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை வைத்து வாதாடினோம். மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில்தான் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. 7 பேர் விடுதலையில் இது முதல் கட்ட வெற்றியாக அமைந்தது. அடுத்தபடியாக நளினி, ரவிச்சந்திரன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோரின் விடுதலையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இன்றைக்கு அவர்களுக்கும் பேரறிவாளனின் தீர்ப்பு பொருந்தும் என்று கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. மனிதநேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/139756
  21. கடவுசீட்டு மோசடி ; இலங்கையர்கள் ஐவர் பெங்களூரில் கைது 11 NOV, 2022 | 04:24 PM போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மத்திய கிழக்கிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஐவர் பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டிற்காக 50,000 முதல் 150,000 வரை செலுத்த தயாராகயிருந்த ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வி எஸ் ரவிகுமார், மணிவேலு, சிஜூ, நிரோசா மற்றும் விசால் நாரணயணன் என்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெங்களூர் மற்றும் மங்களுரை சேர்ந்த இருவரே போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/139757
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.