Everything posted by ஏராளன்
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
முல்லைத்தீவு மனித புதைகுழியில் துப்பாக்கித் தோட்டாக்கள் - விடுதலைப் புலி பெண் போராளிகள் புதைக்கப்பட்டார்களா? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 8 செப்டெம்பர் 2023 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இலக்கங்கள் அடங்கிய சாட்சியங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெண் போராளிகளின் ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இலக்கங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். படக்குறிப்பு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகளின்போது இந்த சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இன்றைய மூன்றாம் நாள் அகழ்வு நடவடிக்கைகளின்போது இரண்டு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகளுடன் பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், மேலாடைகள் சிலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், துப்பாக்கித் தோட்டாக்கள் என சந்தேகிக்கப்படும் உலோக பொருட்களையும் இன்றைய தினம் மீட்டுள்ளனர். இதேவேளை, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளுக்குக் கீழே மேலும் பல மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை இலகுப்படுத்தும் வகையில், இன்றைய தினம் இரண்டு எலும்புக்கூடுகளை அகழ்வாளர்கள் தோண்டி எடுத்துள்ளதுடன், அவை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் குழு வருகை குறித்த இடத்திற்கு யாழ்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழுவொன்று, பேராசிரியருடன் வருகை தந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உள்ளாடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் இலக்கங்கள் இன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். ''இன்றைய தினம் எடுக்கப்பட்ட இரண்டு எலும்பு எச்சங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுடையது என நம்பப்படுகின்றன. அதேநேரம், முதலாவது மனித எச்சத்திலிருந்து துப்பாக்கி ரவையொன்றும் (தோட்டா), ஆடைகளுக்கான இலக்கங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலாவது இலக்கமாக நீளமான பச்சை நிற கால் சட்டையில் 3204 என்ற இலக்கமும், அதேநேரம் முழு நீள மேல்சட்டையும், 3174 இலக்கமுடைய பெண்கள் அணியும் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, இரண்டாவது மனித எச்சமும் எடுக்கப்பட்டுள்ளது. நீளமான பச்சை நிற கால்சட்டையும், முழு நீள மேல்சட்டையும் எடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடையில் 1564 என்று இலக்கமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் எடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் இடையில் துப்பாக்கி ரவைகள் (தோட்டா) எடுக்கப்பட்டுள்ளன," என காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆடைகளிலுள்ள இலக்கங்கள் கைகளால் கறுப்பு நிற ஊசியில் தைக்கப்பட்டடிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு, குறித்த இடத்திற்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் குழுவொன்று, பேராசிரியருடன் வருகை தந்துள்ளனர். மனித புதைகுழியில் துப்பாக்கி தோட்டாக்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்த இடமாக முல்லைத்தீவு காணப்படுகின்றது. இலங்கையில் முப்பது ஆண்டுக் காலங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி நிறைவுக்கு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், மே 18ஆம் தேதி ஆயிரக்கணக்கான தமது உறவுகளை இலங்கை ராணுவம் கொலை செய்ததாக யுத்தத்தின் நேரடி பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள குடும்பங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பலர் நந்திக்கடல் பகுதியில் வைத்தே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே இடத்தில் வைத்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது. படக்குறிப்பு, முல்லைத்தீவு அருகே கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழி அகழ்வுப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். முப்பது ஆண்டுகளாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதி இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த நந்திக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலேயே கொக்குத்தொடுவாய் பகுதி அமைந்துள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதியானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். இந்த மனித புதைகுழியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானது எனக் கருதப்படும் சீருடைகள் காணப்பட்டமையால், இது விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளியிடுகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 27 ஆண்டுகளாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடமொன்றில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள காரணத்தால், காணாமல் ஆக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களால் வெளியிடப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் இலங்கை ராணுவத்திடம் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் வினவியது. ''எம்மால் அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போதும் கிடைக்கின்றன,” என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார். மேலும், “சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே இது எந்த காலப் பகுதிக்குச் சொந்தமான எச்சங்கள் என்பதைக் கூற முடியும். அத்தோடு இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்," எனவும் அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cv2jn01pqw5o
-
இசைந்து வரும் ஏனம் - சுப.சோமசுந்தரம்
ஐயா உங்கள் முகப் புத்தக இணைப்பினூடாக வாசித்தேன், இங்கேயும் அவ்வெழுத்துப் பொக்கிசத்தைப் பகிரலாமே?
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் செய்திசேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் இடையூறு 08 SEP, 2023 | 08:11 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த மூன்றாவது நாள் அகழ்வாய்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகைதந்திருந்தனர். இந்நிலையில் மனிதப்புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு இவ்வாறு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதிவழங்கப்பட்டது. அப்போது அங்கு குறித்த மனிதப்புதைகுழியின் பாதுகாப்புக்கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பில் ஈடுபடமுடியாதென ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தினர். அத்தோடு நீண்டதூரத்திலிருந்து (கொக்கிளாய் பிரதான வீதியில்) இருந்தே செய்திசேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களைப் பொலிசார் எச்சரித்துமிருந்தனர். இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்திசேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை கடந்த (07) வியாழன் அன்று இரண்டாவதுநாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந் நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயர்த்தனத்தின் பின்னர், இந்தவிடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிற்பாடு ஊடகவியலாளர்கள் செய்திசேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164140
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
08 SEP, 2023 | 08:15 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது. இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில், ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன. அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது. மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர். குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர். அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164150
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்க அமெரிக்கா தீர்மானம் Published By: RAJEEBAN 07 SEP, 2023 | 11:49 AM உக்ரைனிற்கு யுரேனியம் டாங்கி எறிகணைகளை வழங்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனிற்கான அமெரிக்காவின் நிதிமனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக இந்த உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனின் உக்ரைன் தலைநகருக்கான விஜயத்தின்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஸ்யா இந்த நடவடிக்கைக்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்க தீர்மானித்துள்ள 31எம்1 ஏ1 ஏபிரகாம் டாங்கிகளில் பயன்படுத்துவதற்கு 120 எம்எம் யுரேனியம் எறிகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உக்ரைன் தலைநகருக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது அமெரிக்காவின் புதிய நிதி உதவி திட்டத்தை அவர் அறிவிப்பார். உக்ரைனிற்கு பிளிங்கென் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் மீது ரஸ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனினும் ஒடெசா பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் தலைநகரில் பிளிங்கென் ரஸ்யாவுடனான போரில் கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/164011
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : 2 ஆம் நாள் அகழ்வில் பெண்களின் உள்ளாடையுடன் மனித எச்சம் உள்ளிட்ட இரு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்பு Published By: VISHNU 07 SEP, 2023 | 06:51 PM கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் மார்புக் கச்சையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இரண்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந் நிலையில் குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டுதுப்பாக்கிச் சன்னங்கள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தடையப் பொருட்களும் அகழ்வின்போது மீட்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப் பணி தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில், இரண்டாம் நாள் அகழ்வுப் பணிகளில் இரண்டு மனித உடல்களின் எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு உலோகத் துண்டுகளும் இவேறு சில ஆதாரப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு பகுதி அளவில் இதுவரை எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான அடையாளங்கள் எவையும் இல்லை. இருப்பினும் மீட்கப்பட்ட ஆடைகளில் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டிருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எது எவ்வாறாயினும் இவற்றை விரிவாக ஆராய்ந்து, பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இதுதொடர்பில் கூறமுடியும் என்றார். மேலும் குறித்த அகழ்வுப்பணி இடம்பெறும் இடத்தில் யாழ்ப்பாண மாவட்ட சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164058
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், இராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலதிகமாக 175 மில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷ்ய படைகளின் முன் பகுதியை தாக்க உதவியாக இருக்கும். இந்த தொகுப்பில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ரொக்கெட்களுக்கு எதிராக செயற்படக்கூடிய வான் ஏவுகணைகள், ஜாவெலின் எதிர்ப்பு கவச ரொக்கெட்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும் என் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. https://thinakkural.lk/article/272200
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்துக்கள் நுழைந்த புலனாய்வாளர்கள் 06 SEP, 2023 | 09:26 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06)நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்குவிசாரணையின்போது குறித்தபகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமைதொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந் நிலையில் அகழ்வாய்வின் முதலாம்நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வய்வு தொடர்பிலும், பொலிசாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள்மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/163991
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரயான் - 3: தூங்கும் விக்ரம் லேண்டர் உயிர்த்தெழப் போவது எப்போது? பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் மையத்தில் ஒரு சிறிய புள்ளியாகத் தென்படுகிறது. "சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது" என்று நாசா குறிப்பிட்டுள்ளது. சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று நிலாவில் அதிகம் ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தின் தரையில் இறங்கியது. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து, நிலாவைச் சுற்றிவரும் தனது லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள கேமரா இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக நாசா கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலாவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. கடந்த மாதம், விக்ரம் லேண்டர் - பிரக்யான் என்ற ரோவரை அதன் வயிற்றில் சுமந்து கொண்டு - நிலாவின் தென் துருவத்திலிருந்து சுமார் 600 கிமீ தொலைவில் தரையைத் தொட்டது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயர் இந்தியாவுக்குக் கிடைத்தது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. லேண்டர் மற்றும் ரோவர் நிலாவின் மேற்பரப்பில் சுமார் 10 நாட்கள் செலவிட்டன. தரவு மற்றும் படங்களை சேகரித்தன. "தங்கள் பணி நோக்கங்களை கடந்து விட்டதாக" இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கூறுகிறது. கடந்த வார இறுதியில், சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டதாக கூறியது. "சூரிய சக்தி குறைந்து பேட்டரி தீர்ந்தவுடன் லேண்டரும் ரோவரும் தூங்கிவிடும்" என்று இஸ்ரோ கூறியது. சந்திரனில் சூரியன் கதிர் விழும் அடுத்த நாள் தொடங்கும் போது செப்டம்பர் 22-ஆம் தேதி லேண்டரும் ரோவரும் மீண்டும் உயிர்த்து எழும் என்று நம்புவதாக இஸ்ரோ மேலும் கூறியது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும் செயல்படுவதற்கும் சூரிய ஒளி தேவைப்படுகிறது. பட மூலாதாரம்,ISRO படக்குறிப்பு, பிரக்யான் ரோவர் நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தியது இந்திய விண்வெளி நிறுவனம் லேண்டர் மற்றும் ரோவரின் இயக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளது பற்றிய வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கியுள்ளது. இந்த வார தொடக்கத்தில், சந்திர மேற்பரப்பில் விக்ரம் ஒரு "வெற்றிகரமான ஹாப் பரிசோதனை" செய்ததாக இஸ்ரோ கூறியது. இந்தப் பரிசோதனையின்போது விக்ரம் லேண்டர் மீண்டும் ஒருமுறை நிலவின் தரைப்பரப்பில் இருந்து குதித்து மீண்டும் தரையிறங்கியது. சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் "அதன் சிறு ராக்கெட்டுகளை உயிர்ப்பித்தவுடன் அது சுமார் 40 உயரத்துக்கு குதித்து 30-40 தொலைவில் தரையிறங்கியது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் இருந்து பொருள்களை கொண்டு வரவும், மனிதர்களை அழைத்துச் செல்லவும் விண்கலம் பயன்படுத்தப்படலாம் என்று அது மேலும் கூறியது. https://www.bbc.com/tamil/articles/c72e3x1ze1vo
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம் ! 06 SEP, 2023 | 09:00 AM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கடந்த ஆகஸ்ட் (31)அன்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் கடந்தவாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் செப்டெம்பர் (05)நேற்று குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கமுடியவில்லை. அதனடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மனிதபுதைகுழி அமைந்தபகுதி குற்றப் பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த புதைகுழிப்பகுதிக்கு பாதுகாப்பு கூரைகள் அமைக்கப்பட்டு இந்த அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ, தொல்லியல் துறைசார்ந்தோர், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,தடையவியல் போலிசார், சமூக ஆர்வலர் அ.பீற்றர்இளஞ்செழியன், கிரமாஅபிவிருத்திச்சங்கத் தலைவர் கி.சிவகுரு பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/163920
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
சந்திரனில் 40 சென்ரிமீற்றர் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர்: புதிய இடத்திலும் ஆய்வுக்கருவிகள் சோதனை Published By: SETHU 05 SEP, 2023 | 01:47 PM சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்த, சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், தரையிலிருந்து 40 சென்ரிமீற்றர் மேலெழும்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இஸ்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. இது சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தனது கட்டளைகளின்படி, விக்ரம் லேண்டரின் என்ஜின்கள் இயங்க ஆரம்பித்து, எதிர்பார்க்கப்பட்டவாறு 40 சென்ரிமீற்றர் உயரத்துக்கு அந்த லேண்டர் கிளம்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர், 30 முதல் 40 சென்ரிமீற்றர் அளவிலான தூரம் நகர்ந்து மீண்டும் சந்திரனின் தரையில் அது இறங்கியது. என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று முற்பகல் தெரிவித்தது. இது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் சந்திரனில் மேற்கொண்ட இரண்டாவது ‘மென் தரையிறக்கம்’ எனவும், இது சந்திரயான் -3 திட்டத்தின் இலக்குகளை விஞ்சிய செயற்பாடு எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரனின் தரையிலிருந்தவாறு விக்ரம் தரையிறங்கிக் கலம் மீண்டும் இயங்க ஆரம்பித்து, அக்கலம் தாவி இறங்கியமையானது முக்கியமான ஒரு பரிசோதனையாக கருதப்படுகிறது. சந்திரனிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் எதிர்காலத் திட்டங்களுக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இப்பரிசோதனைக்கான திட்டம் குறித்து இஸ்ரோ முன்னர் அறிவித்திருக்கவில்லை. கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் (தரையிறங்கி) கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் எனும் தரையூர்தி (ரோவர்) வெளியில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. சந்திரனின் தென் துருவத்தில் அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், மங்கனீஸ், டைட்டானியம், ஒட்சிசன் உட்பட பல மூலகங்கள் இருப்பது பிரக்யான் ஊர்தியிலுள்ள ஆய்வுக்கருயின் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உறங்கு நிலையில் விக்ரம், பிரக்யான் இதேவேளை, சந்தியான்-3 திட்டத்தின் இலக்குகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரனில் செப்டெம்பர் 4 ஆம் திகதி சூரியன் மறைய ஆரம்பிக்கும் நிலையில் விக்ரம் மற்றும் பிரக்யானை உறங்கு நிலைக்கு செல்கின்றன அறிவித்துள்ளது. சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்குச் சமனாகும். இதனால் சந்திரனில் சூரிய ஒளி கிடைக்கும் ஒரு பகல் பொழுது (பூமியில் 14 நாட்கள்) மாத்திரம் விக்ரம் லேண்டர், மற்றும் பிரக்யான் ஊர்தி ஆகியன தரவுகளை அனுப்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த 14 நாட்களுக்கு கருவிகள் இயங்குவதற்கு சூரிய ஒளி கிடைக்காது என்பதே இதற்குக் காரணம். சந்திரனின் தென் துருவத்தில் மீண்டும் செப்டெம்பர் 22 ஆம் திகதியின் பின்னரே சூரிய ஒளி கிடைக்கலம். மீண்டும் சூரிய ஒளி கிடைத்தால் விக்ரம் மற்றும் பிரக்யான் மீண்டும் இயங்க ஆரம்பிக்குமா என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று பிற்பகல் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட பதிவொன்றில் 'இந்திய நேரப்படி அன்று (திங்கள்) இரவு 8.00 மணி முதல் விக்ரம் உறங்குநிலைக்கு செல்கிறது. அதற்குமுன் விக்ரமின் புதிய இடத்தில் வைத்து, அதன் ஆய்வுக்கருவிகளான சாஸ்ட், ரம்பா-எல், இல்சா (ILSA) ஆகியன பரிசோதனைகளில் ஈடுபட்டன. அவற்றின் தரவுகள் பூமியில் சேகரிக்கப்பட்டன. இப்போது அக்கருவிகள் அனைத்து வைக்கப்பட்டுள்ளன. லேண்டரின் ரிசீவர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரக்யானுக்கு அருகில் விக்ரம் உறங்கும். செப்டெம்பர் 22 ஆம் திகதி அவை மீண்டும் விழித்தெழும் என நம்புகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (சேது) https://www.virakesari.lk/article/163870
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம் Published By: VISHNU 05 SEP, 2023 | 05:06 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார். அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும், எத்தனை இருக்கும் என்பது தொடர்பாக கூற முடியும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/163888
-
வடக்கு ரயில் மார்க்கத்தை ஜனவரி முதல் மூட நடவடிக்கை
நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும். இதனிடையே, கொழும்பு முதல் பாணந்துறை வரையிலான ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களனி மிட்டியாவத்தை ரயில் பாதையின் வேகக் கட்டுப்பாட்டை நீக்கி, வேகத்தை அதிகரிப்பதற்கான புனரமைப்பு பணிகளையும் இம்மாத முற்பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271824
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
ISRO-ன் புது Video: Vikram Lander-ஐ India-ல் இருந்தே நகர்த்திய ISRO; இனி நிலவுக்கு சென்று வரலாம்?
- ஓயாத நிழல் யுத்தங்கள் – 1
-
குட்டிக் கதைகள்.
பகிர்வுக்கு நன்றி சுவி அண்ணா.
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
கொல்லிமலை: ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல மருத்துவ பரிசோதனை - ஏன் இந்த ஏற்பாடு? பட மூலாதாரம்,PARTHIBAN கட்டுரை தகவல் எழுதியவர், சுரேஷ் அன்பழகன் பதவி, பிபிசி தமிழுக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. நாமக்கல் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் காரவள்ளி இருக்கிறது. இதுதான் எழில் கொஞ்சும் கொல்லிமலையின் அடிவாரப் பகுதி. 70 கொண்டை ஊசி வளைவு அடிவாரப் பகுதியில் வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. இங்கிருந்து சுமார் 500 மீட்டரில் இருந்து கொண்டை ஊசி (HAIR PIN BEND) வளைவுகள் துவங்குகின்றன. அங்கிருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். பேருந்து நிலையம் இங்குதான் உள்ளது. பேருந்து வசதியைப் பொருத்தவரை பிரச்னை இல்லை, தாராளமாகவே கிடைக்கிறது. ஆனால், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களே அதிகம். அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 300 அடி உயரம் கொண்டது. மூலிகைகள் ஊடாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் இதில் குளிக்கவே, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இத்தனை கஷ்டப்படுகின்றனர். பட மூலாதாரம்,PARTHIBAN கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல 15 வயதில் இருந்து அனுமதிக்கப்படுகிறார்கள். சிறியவர்களுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இளையவர்கள் சுமார் இரண்டு மணி நேரத்தில் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுவிடலாம், சுமார் 50 வயதுடையவர்கள் செல்ல சுமார் 3 மணி நேரமாகும். அருவியில் சில நாள் நீர் அதிகமாகவும், சில நாள் நீர் குறைவாகவும் வரும், இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட கோவில். மயங்கி விழுந்த வாலிபர் கொல்லிமலையை சுற்றிப் பார்க்க ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நிதிஷ் காந்த், 22 என்பவர் வந்தார். மலைப்பகுதியில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியைக் காண அந்தப் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 700 படிக்கட்டுகளைக் கடந்தபோது நிதிஷ்காந்த் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். கொல்லிமலை தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். அருவிக்குச் செல்லத் தடை இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தைத் தவிர்க்கும் வகையில், கொல்லிமலை வனத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உடல் தகுதி அவசியம் பட மூலாதாரம்,PARTHIBAN அந்த வகையில் தற்போது, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் நுழைவு வாயில் பகுதியில் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். அதில் உடல்நிலை குறைவால் வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் அறிவுறுத்தலின் பேரில் கொல்லிமலை வனத்துறையினர் தற்போது இதைக் கடைபிடித்து வருகின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், "ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்ல சுமார் 1,200 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் முன்பே இதயப் பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளோம்," என்று கூறினார். அதிக உடல் பருமனோடும் நடக்க முடியாமலும் அருவிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை மூலம் கண்டறிந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், "சுற்றுலா பயணிகள் சிலர் தெரியாமல் சென்று விடுகின்றனர். அவர்கள் கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு, கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுத்துச் சென்றாலும் பரவாயில்லை. போட்டி, போட்டுக் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வீழ்ச்சிக்குச் சென்ற நபர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவர் தனது அண்ணனுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை இருந்துள்ளது. மேலும், உடல் பருமனுடன் இருந்துள்ளார்," என்று கூறுகிறார் ராஜாங்கம். மருத்துவ பரிசோதனை பட மூலாதாரம்,PARTHIBAN இந்தச் சம்பவத்திற்கு பிறகு வனத்துறை மூலமாக நீர்வீழ்ச்சியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளைக் கண்காணித்து சந்தேகம் வருபவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியே அனுப்பி வருவதாகக் கூறுகிறார் ராஜாங்கம். சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவற்றை வனத்துறையினர் பரிசோதனை செய்கிறார்கள். இதற்காக வனத்துறைக்கு உரிய மருத்துவ உபகரணம் கொடுத்து, உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை மூலம் பரிசோதித்து, அதில் இந்த நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளை ஏறும் உடல் தகுதி உள்ளவர்களைத் தவிர மற்றவர்களை அனுப்ப வேண்டாம் என வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளும் மூச்சு வாங்கும்படி செல்லாமல் ஆங்காங்கே அமர்ந்து உரிய ஓய்வு எடுத்துச் செல்ல வேண்டும். இதை உணர்ந்து நீர்வீழ்ச்சிக்குச் சென்றால் பிரச்னை வராது. இதை சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க வேண்டும்," என்று வலிபஉறுத்துகிறார் ராஜாங்கம். வனத்துறை மூலமாக மருத்துவ பரிசோதனை செய்து அனுப்புவது வரவேற்கத்தக்கது என்று கொல்லிமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். "பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் உடல் நலத்திற்கு ஏற்ப நீர்வீழ்ச்சிக்குச் சென்று குளிக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்வது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு பெரிய இலக்குதான். கவனமாகச் சென்று சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டும். பாறை நிறைந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும்," என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதை சுற்றுலா பயணிகள் உணர்ந்து பத்திரமாக நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு நலமோடு திரும்ப வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் கூறினர். https://www.bbc.com/tamil/articles/c2jzg922dx4o
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியில் ஐ.நா கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும் - தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல் 03 SEP, 2023 | 01:54 PM "வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கான பதில்கள் மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடும்" (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எனவே செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கப்படவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி அகழ்வுகளை சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை செவ்வாய்கிழமை (5) மேற்கொள்வதென முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி இப்புதைகுழி அகழ்வின்போது பின்பற்றப்படவேண்டிய நியமங்கள் மற்றும் இதனை அடிப்படையாகக்கொண்ட அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டுமெனக் கேள்வியெழுப்பியபோதே அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர். மனிதப்புதைகுழி விவகாரங்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனடிப்படையிலேயே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எழுப்பப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் இப்புதைகுழிகளில் இருக்கக்கூடுமென சுட்டிக்காட்டிய அவர், தற்போது கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இந்நடவடிக்கைகள் உரியவாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதைப்போன்று, ஏனைய மனிதப்புதைகுழி அகழ்வு விவகாரங்களிலும் உரியவாறு செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கான நிதியொதுக்கீட்டை வலியுறுத்துவதில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முன்னின்று செயற்பட்டதாகவும், அதன்மூலம் இப்பணிகளுக்கென 57 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜெ.தற்பரன் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார். அதேவேளை இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது என்று குறிப்பிட்டதுடன், எனவே இவ்விசாரணைகள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்களின் பங்கேற்புடன் நடைபெறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். அத்தோடு இதுபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகளிடம் தாம் வலியுறுத்தியிருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் பின்னணியில் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகளைக் கண்காணிப்பதற்கு ஐ.நா அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/163743
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
India's First Sun Mission: வெற்றிகரமாக விண்ணில் சீறிய Aditya-L1; அடுத்தது என்ன?
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
ISROவின் அடுத்த கட்ட பாய்ச்சல்... Aditya-L1 Mission-ல என்ன இருக்கு? Explained
-
இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக அனைத்து உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பு Published By: VISHNU 01 SEP, 2023 | 09:05 PM (எம்.ஆர்.எம்.வசீம்) புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நாட்டில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன் அது தொடர்பில் அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி ராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/163659
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் 31 AUG, 2023 | 09:43 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்குகொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கு விசாரணை களுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள பகுதிக்கு கடந்த 10.08.2023 ம் திகதி கள விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு விஜயம் செய்த சட்டத்தரணிகள் தொடர்பிலே புலனாய்வு பிரிவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்ததோடு குறித்த பகுதி கிராம அலுவலரிடமும் அங்கு சென்ற சட்டத்தரணிகளின் பெயர் என்ன ? எங்கிருந்து வந்தார்கள் ? என்பது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர்கள் வருகை தந்த வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்கி தங்களது விவரங்களை திரட்டி இவ்வாறு புலனாய்வு பிரிவினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக சட்டத்தரணிகளால் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த சட்டத்தரணிகள் தொடர்பாக கிராம அலுவலரிடமும் புலனாய்வு பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததாக கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலரும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் இவ்வாறான நிலையில் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் அவர்கள் புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் இரகசியமாக தகவல்களை பெற்றுக் கொள்பவர்கள் இவர்கள் வெளிப்படையாக வந்து விசாரணைகள் செய்வது என்பது அச்சுறுத்தல் என்பதை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இது தொடர்பாக கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த விடயமாக சட்டத்தரணிகளை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யுமாறும் தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார் இலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டு இருக்கின்றதன் அடிப்படையில் அதனை வைத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி கொக்குகுளாய் பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களது உரிமை சார்ந்த விடயங்களில் ஈடுபடும் பொது மக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக புலனாய்வு பிரிவினரால் அச்சுறத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சட்டத்தரணிகளையும் அச்சுறுத்தும் நீதித்துறையை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/163608
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இந்தநிலையில், அதன் விசேட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது. நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் எதிர்வரும், 5ம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://thinakkural.lk/article/271111
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ய நகரமொன்றின் விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் ஆளில்லா விமானதாக்குதல் - விமானங்கள் சேதம் Published By: RAJEEBAN 30 AUG, 2023 | 06:39 AM ரஸ்யாவின் வடகிழக்கில் உள்ள பஸ்கோவ் நகரில் உள்ள விமானநிலையத்தை இலக்குவைத்து உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் பல விமானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகின்றன. இராணுவம் தாக்குதலை முறியடிக்கின்றது என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். பாரிய தீயை காண்பிக்கும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார் – பெரும் வெடிப்பு சத்தங்களை அந்த வீடியோவில் கேட்க முடிகின்றது. நான்கு இலுசின் 76 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன என உறுதிப்படுத்தப்படாத ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ்கோவ் நகரம் உக்ரைனிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் எஸ்டோனியாவின் எல்லைக்கு அருகில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ரஸ்யாவிற்குள் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து கருத்துகூறுவதை தவிர்த்துவந்துள்ளது. பஸ்கொவ் நகரின் மீதான ஆளில்லா விமான தாக்குதல்களை பாதுகாப்பு அமைச்சு முறியடிக்கின்றது என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நான் நின்றிருந்தேன் உயிரிழப்பு எதுவுமில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை அவசரநிலைக்கான அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ள டாஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானதாக்குதல் காரணமாக நான்கு விமானங்கள் சேதமடைந்தன தீப்பிடித்ததில் இரண்டு விமானங்கள் வெடித்துச்சிதறின என டாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/163467