Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. குரு தேக் பகதூர் வரலாறு: ஒளரங்கசீப் முன் தலைவணங்காமல் உயிரை துறந்தவர் கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1664 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி, டெல்லியில் இருந்து ஒரு சீக்கியர்கள் குழு பஞ்சாபில் உள்ள பகாலா கிராமத்தை அடைந்தது. தான் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எட்டாவது குரு ஹர்கிஷன், தனது வாரிசு பகாலாவில் கண்டுபிடிக்கப்படுவார் என்று அறிவித்தார். பகாலாவில் சீக்கியர்களின் சிறப்புக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு அதில் தேக் பகதூருக்கு குருவின் சிம்மாசனம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பாரம்பரிய விழாவில், குருதித்தா ரந்தாவா குருவின் நெற்றியில் குங்குமத் திலகம் இட்டு, அவருக்கு ஒரு தேங்காய் மற்றும் ஐந்து பைசாவை பரிசளித்து, குருவின் சிம்மாசனத்தில் அமர வைத்தார். தொடக்கத்தில் குரு தேக் பகதூர் வெளிப்படையாக பேசுபவராக இருக்கவில்லை. பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் தனது 'எ ஹிஸ்டரி ஆஃப் தி சீக்ஸ்' என்ற புத்தகத்தில் "குரு தேக் பகதூர் சாமானியர்களிடையே பிரபலமடைந்ததற்கு பின்னணியில் இந்த இயல்புதான் இருந்தது. தீர்மல் அவரை படுகொலை செய்ய முயன்றார். ஆனால் படுகொலை செய்யும் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வெற்றிபெறவில்லை,” என்று எழுதியுள்ளார். "தேக் பகதூர் பகாலாவை விட்டு அமிர்தசரஸ் சென்றார். அங்கு ஹர்மந்திர் சாஹிப்பின் கதவுகள் மூடப்பட்டன. அங்கிருந்து தனது தந்தையால் நிறுவப்பட்ட கீரத்பூர் நகருக்குச் சென்றார். அதன் பிறகு அவர் கீரத்பூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய கிராமத்தை நிறுவினார். அதற்கு அவர் ஆனந்த்பூர் என்று பெயரிட்டார்,” என்று அவர் மேலும் எழுதுகிறார், பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த இடம் இப்போது ஆனந்த்பூர் சாஹிப் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கேயும் அவரது எதிரிகள் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை. குரு தேக் பகதூரின் கைது குரு தேக் பகதூர் 1621ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஆறாவது சீக்கிய குரு ஹர்கோவிந்தின் இளைய மகன். ஆனந்த்பூரில் சில நாட்கள் தங்கியிருந்த குரு தேக் பகதூர் கிழக்கு இந்தியாவுக்கு பயணம்செய்ய முடிவு செய்தார். வழியில் ஆலம் கான் தலைமையிலான முகலாய வீரர்களால் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது பற்றி வரலாற்றாசிரியர்களிடையே ஒத்த கருத்து இல்லை. "இது முகலாய அரசவையில் வாழ்ந்த ராம் ராயின் தூண்டுதலால் செய்யப்பட்டது. அமைதியைக் குலைப்பதாக குரு தேக் பகதூர் மீது குற்றம் சாட்டப்பட்டது," என்று குஷ்வந்த் சிங் எழுதுகிறார். வரலாற்றாசிரியர் ஃபோஜா சிங் இதை ஏற்கவில்லை. ராம் ராய், தேக் பகதூரை தனது குருவாகக் கருதத் தொடங்கிவிட்டதாகவும், அவரிடம் எந்த தீய எண்ணமும் இருக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஒளவுரங்கசீப்பின் முன்னால் நிறுத்தப்பட்டார் சரப் ப்ரீத் சிங் தனது 'ஸ்டோரி ஆஃப் தி சீக்ஸ்’ என்ற புத்தகத்தில், "குரு தேக் பகதூர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், 1665ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி குரு தேக் பகதூர் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஔரங்கசீப் முன் ஆஜர்படுத்தப்பட்டார்,” என்று எழுதுகிறார். குரு தேக் பகதூர் பேரரசர் ஔரங்கசீப்பிடம், "எனது மதம் இந்துவாக இல்லாமல் இருக்கலாம், வேதங்களின் மேலாதிக்கம், சிலை வழிபாடு மற்றும் பிற பழக்கவழக்கங்களை நான் நம்பாமல் இருக்கலாம், ஆனால் நான் இந்துக்கள் கெளரவமாக வாழவும், அவர்களின் மத நம்பிக்கைகளை பாதுகாக்கவும் தொடர்ந்து போராடுவேன்,” என்றார். ஆனால் குரு தேக் பகதூரின் இந்த வார்த்தைகள் ஔரங்கசீப் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஔரங்கசீப்பின் அரசவையில் இருந்த பல முஸ்லிம் அறிஞர்கள், குருவின் செல்வாக்கு அதிகரித்து வருவது இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அவரிடம் கூறினார்கள். பட மூலாதாரம்,PENGUIN VIKING ஔரங்கசீப் குருவுக்கு மரண தண்டனை வழங்க முடிவு செய்தார், ஆனால் அவரது ராஜபுத்திர மந்திரிகளில் ஒருவரான ராஜா ராம் சிங் அவரை உயிருடன் விட்டுவிடுமாறு கோரினார். அந்தக் கோரிக்கையை ஒளரங்கசீப் ஏற்றுக்கொண்டார். ஒரு மாதம் கழித்து டிசம்பரில், குரு தேக் பகதூர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் திரும்ப பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்டவுடன் குரு கிழக்கு நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவர் மதுரா, ஆக்ரா, கான்பூர், அலகாபாத், வாரணாசி, போத்கயா வழியாக பட்னாவை அடைந்தார். குரு தேக் பகதூரின் மனைவி மாதா குஜ்ரி அங்கு தங்க முடிவு செய்தார். ஆனால் குரு தேக் பகதூர் தனது தொண்டர்களை சந்திக்க டாக்கா நோக்கிச் சென்றார். டாக்காவில் வசிக்கும் போது அவருக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாக செய்தி கிடைத்தது. குழந்தைக்கு கோபிந்த் ராய் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அவர் குரு கோபிந்த் சிங் என்று அறியப்பட்டார். படக்குறிப்பு, குரு தேக் பகதூர் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? - பொன்னியின் செல்வன் படத்தால் உண்டான விவாதம்8 அக்டோபர் 2022 ஞானவாபி: 'கார்பன் டேட்டிங்' பற்றி அக்டோபர் 11இல் உத்தரவு - கார்பன் டேட்டிங் என்றால் என்ன?7 அக்டோபர் 2022 அசாமில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார் இதற்கிடையில் காம்ரூப் மன்னரின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பை ஒளரங்கசீப் ராஜா ராம் சிங்கிடம் ஒப்படைத்தார். அந்த நேரத்தில் காம்ரூப் ஓர் ஆபத்தான இடமாக கருதப்பட்டது. துணிச்சலான போர் வீரர்கள் மற்றும் 'மந்திர தந்திரம்' ஆகியவற்றிற்கு அது பிரபலமாக இருந்தது. ராஜா ராம் சிங், குரு தேக் பகதூரின் ஆன்மிக சக்தியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். காம்ரூப் மீதான நடவடிக்கையில் தன்னுடன் இணையுமாறு ராஜா ராம் சிங், குரு தேக் பகதூரை கேட்டுக் கொண்டார். குருவால் அவரது கோரிக்கையை மறுக்க முடியவில்லை. "சண்டையின் போது குரு அசாமில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்தார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது மத்தியஸ்தராகவும் செயல்பட்டார். அங்கிருந்து திரும்பியதும் பட்னாவில் வசிக்கும் தனது மனைவியை அவரால் சந்திக்கமுடியவில்லை. ஏனென்றால் பஞ்சாபில் அவரது இருப்பு அவசியம் என்று அவருக்கு தொடர்ந்து செய்திகள் வந்தன. 1672 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சக் நான்கியில் தனது அரியணைக்கு அவர் திரும்பினார். குருநானக்கைத் தவிர வேறு எந்த சீக்கிய குருவும் செல்லாத இடங்களுக்கு அவரது பயணங்கள் அவரை அழைத்துச் சென்றன,”என்று சர்ப் ப்ரீத் சிங் எழுதியுள்ளார். காஷ்மீர் பண்டிதர்களின் கோரிக்கை 1675 மே 25ஆம் தேதி குரு தேக் பகதூர் ஆனந்த்பூர் சாஹிப்பில் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, காஷ்மீரில் இருந்து ஒரு குழு அவரைச் சந்திக்க வந்தது. பண்டிட் கிர்பா ராம் குழுவுக்கு தலைமை வகித்தார். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் தன் முன்னோர்களின் மதம் ஆபத்தில் இருப்பதாக கைகூப்பி அவர் குருவிடம் தெரிவித்தார். ஒளரங்கசீப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காஷ்மீர் ஆளுநர் இஃப்தேகர் கான், கிர்பா ராம் இஸ்லாத்தை ஏற்க வேண்டும், இல்லையெனில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். குரு தேக் பகதூர் கிர்பா ராமின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் அவரது வேதனையைக் கேட்டு, குருவின் மனம் உருகியது. "குரு தேக் பகதூர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், தாங்களும் மதம் மாறுவதாக பேரரசரின் பிரதிநிதியிடம் கூறுமாறு காஷ்மீரில் இருந்து வந்த பிராமணர்களின் குழுவிடம் குரு சொன்னார்," என்று குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றில் ஹரி ராம் குப்தா எழுதியுளார். 'எல்லா சீக்கியர்களும் குருவை 'உண்மையான அரசர்' என்று அழைப்பதை ஒளரங்கசீப் எதிர்த்தார். தான்தான் உண்மையான பேரரசர் என்றும், இந்தியாவின் ஆட்சியாளர் ஒரு போலிச் சக்கரவர்த்தி என்றும் குரு பிரசாரம் செய்கிறார் என்று ஔரங்கசீப் கருதினார். முகலாய அரசவையில் இருக்கும் பிரமுகர்களுக்கு ’ பகதூர்’ என்று பட்டப்பெயர் அளிக்கப்படுவதால், குரு தனது பெயரில்’பகதூர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை ஔரங்கசீப் விரும்பவில்லை,” என்று ஹரி ராம் குப்தா குறிப்பிடுகிறார். குரு தேக் பகதூரை டெல்லியில் தன் முன் ஆஜர்படுத்தி, இஸ்லாத்தை ஏற்க கட்டாயப்படுத்த வேண்டும், இல்லையெனில் அவர் உயிரை இழக்க நேரிடும் என்று ஔரங்கசீப் உத்தரவிட்டார். குரு தேக் பகதூரிடம் கேள்வி பதில் குரு தேக் பகதூர் தனது குடும்பத்தினர் மற்றும் தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். தனக்குப்பிறகு அடுத்த குருவாக தனது மகன் கோபிந்த் ராய் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். 1675 ஜூலை 11ஆம் தேதி குரு தேக் பகதூர் தனது ஐந்து சீடர்களான பாய் மதி தாஸ், அவரது இளைய சகோதரர் சதி தாஸ், பாய் தயாலா, பாய் ஜைதா மற்றும் பாய் உதய் ஆகியோருடன் டெல்லிக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும், மேலதிக செய்திகளைப் பெற பாய் உதய் மற்றும் பாய் ஜைதாவை டெல்லிக்கு அனுப்பினார். ஒரு நாள் கழித்து மல்லிக்பூரின் ரங்காரன் கிராமத்தில், ரோபர் காவல் நிலையத்தின் ஹக்கீம் மிர்சா நூர் முகமது கான், குருவை கைது செய்தார். ரோபரில் இருந்து, குருவும் அவரது மூன்று தோழர்களும் பலத்த பாதுகாப்புடன் சிர்ஹிந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு அவர் டெல்லியில் உள்ள சாந்தினி செளக் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். இந்த நான்கு மாத சிறைவாசத்தில் குருவும் அவரது மூன்று தோழர்களும் பல சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாந்தினி சௌக் EWS இடஒதுக்கீடு விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக ஏன் பங்கேற்கவில்லை?12 நவம்பர் 2022 காலநிலை மாற்றம் நமக்கு நன்மை பயக்கும் விஷயமா? - உண்மை என்ன?10 நவம்பர் 2022 குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் சிங் விர்தி தனது 'Guru Tegh Bahadur Savior of Hindus and Hindustan' என்ற புத்தகத்தில், "குரு தனது மூன்று தோழர்களுடன் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு குருவிடம் இந்து மதம் மற்றும் சீக்கிய மதம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. பூணூல் அணிபவர்களுக்காகவும், நெற்றியில் திலகம் வைத்துக்கொள்பவர்களுக்காகவும் ஏன் உயிர் தியாகம் செய்கிறீர்கள் என்று அவரிடம் வினவப்பட்டது. இந்துக்கள் பலவீனமாகி விட்டதால் நானக்கின் காலடியில் தஞ்சம் அடைந்தனர் என்பதே குருவின் பதில். முஸ்லிம்களும் தன்னிடம் இதுபோன்ற உதவியை கேட்டிருந்தால், அவர்களுக்காகவும் உயிரை தியாகம் செய்திருப்பேன் என்றும் குரு பதில் சொன்னார்," என்று எழுதியுள்ளார். ஒளரங்கசீப்பின் எச்சரிக்கை டாக்டர் திரிலோச்சன் சிங் தனது 'Guru Tegh Bahadur Prophet and Martyr’ என்ற புத்தகத்தில், ”ஒளவுரங்கசீப் காலை 9 மணிக்கு திவான்-இ-ஆமில் நுழைந்து அதன் பால்கனியை அடைந்தார். அவர் வெள்ளை பட்டு ஆடை அணிந்திருந்தார். பட்டால் ஆன இடுப்புப் பட்டை அணிந்திருந்தார். அதில் ரத்தினங்கள் பதித்த குத்துவாள் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் தலையில் வெண்ணிற தலையலங்காரம் இருந்தது. சக்கரவர்த்தியின் இருபுறமும் நின்றிருந்த நங்கைகள் மயில் இறகுகளால் ஆன விசிறியால் காற்று வீசினர். சீக்கிய மதத்தைப் பற்றி பேரரசருக்கு ஏற்கனவே ஞானம் இருந்தது. முஸ்லிம்களைப் போலவே சீக்கியர்களும் சிலை வழிபாட்டுக்கு எதிரானவர்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருவருக்குள்ளும் கருத்தியல் ரீதியாக நெருக்கம் அதிகம் இருந்ததால், குருவை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது,” என்று எழுதியுள்ளார். ஔரங்கசீப் குரு தேக் பகதூரிடம், உங்களுக்கு சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லை, இந்த பிராமணர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. பிறகு ஏன் அவர்கள் விவகாரத்தை எடுத்துக்கொண்டு என் முன் வந்தீர்கள்?" என்று வினவினார். குரு தேக் பகதூர் ஔரங்கசீப்பிற்கு புரியவைப்பதில் தோல்வி அடைந்தார். இறுதியில், அவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் அல்லது இறக்கத் தயாராக வேண்டும் என்று அரசவை தரப்பில் இருந்து அவரிடம் தெளிவாகச் சொல்லப்பட்டது. குரு தேக் பகதூர் இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டார். பட மூலாதாரம்,PENGUIN BOOKS ஔரங்கசீப் குருவிடம் பல தூதர்களை அனுப்பினார். ஆனால் குரு தனது கருத்தில் உறுதியாக இருந்தார். ஒரு நாள் சிறைத் தலைவர் குருவிடம், “நீங்கள் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று பேரரசர் விரும்புகிறார். உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், நீங்கள் புனித புருஷர் என்று அவர் நம்பும் வகையில் ஓர் அதிசயத்தை நடத்திக்காட்டுங்கள்,” என்றார். "நண்பரே, அதிசயம் என்பது கடவுளின் கருணை மற்றும் தயவு. உலகத்திற்கு முன்பு மாயாஜாலம் காட்ட அவர் அனுமதிக்கவில்லை. அவரது அருளை தவறாகப் பயன்படுத்தினால் அவர் கோபம் கொள்வார். நான் அதிசயத்தை காட்ட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நாளும் நம் கண் முன்னால் அற்புதங்கள் நடக்கின்றன. பேரரசர் மற்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறார், ஆனால் ஒரு நாள் தானும் இறக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியாமல் இருப்பதும் ஓர் அதிசயம்தானே என்று குரு பதிலளித்தார்,” என்று ஹர்பன்ஸ் சிங் விர்தி எழுதுகிறார். மூன்று கூட்டாளிகளின் கொலை குரு தேக் பகதூர் மனம் மாற மாட்டார் என்று தெரிந்ததும் அவரது தோழர்கள் அவருடைய கண்முன்னே சித்திரவதை செய்யப்பட்டனர். "இன்று சாந்தினி சௌக்கில் காவல் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்த நீரூற்றுக்கு அருகில், பாய் மதி தாஸ் அவர் எதிரில் ரம்பத்தால் வெட்டப்பட்டார். அவர் இந்த சித்திரவதையை அமைதியுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டார். சீக்கியர்களால் தினசரி அர்தாஸில் இது குறிப்பிடப்படுகிறது. இந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்த குருவிடம் கூப்பிய கரங்களுடன் பாய் மதி தாஸ் ஆசிர்வாதத்தைப் பெற்றார். சதி தாஸ் கொதிக்கும் எண்ணெயில் உயிருடன் தூக்கி எறியப்பட்டார். பின்னர் அவரது உடலில் பருத்தி துணியை சுற்றி ஒரு கம்பத்தில் கட்டி தீ வைக்கப்பட்டது. இதையெல்லாம் ஒரு பெருங்கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தது. குரு தேக் பகதூரின் கண் முன்னே இவையெல்லாம் நடந்து கொண்டிருந்தன. அவர் தொடர்ந்து வாஹே குரு என்று உச்சரித்துக் கொண்டிருந்தார். அங்கு இருந்த குருவின் மற்றொரு சீடர் ஜெய்தா தாஸ், இரவில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அருகில் ஓடும் ஜமுனா ஆற்றில் விட்டார்,” என்று குரு தேக் பகதூரின் வாழ்க்கை வரலாற்றில் ஹரி ராம் குப்தா எழுதுகிறார்,. தேக் பகதூரின் கடைசி நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நாளில் குரு தேக் பகதூர் அதிகாலையில் எழுந்தார். காவல் நிலையத்திற்கு அருகே உள்ள கிணற்றில் குளித்துவிட்டு பிரார்த்தனை செய்தார். 11 மணியளவில் மரண தண்டனை வழங்கப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, காஸி அப்துல் வஹாப் போரா அவருக்கு ஃபட்வா (சட்ட உத்தரவு) வாசித்தார். மரண தண்டனை நிறைவேற்றுபவரான ஜலாலுதீன் வாளுடன் அவருக்கு முன்னால் நின்றார். அப்போது வானத்தில் மேகங்கள் சூழ்ந்தன. அங்கிருந்தவர்கள் கதறி அழ ஆரம்பித்தனர். பட மூலாதாரம்,DSGMC ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன் உள்ளிட்டோர் விடுதலை5 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக கால நிலைமாற்றம் காரணமா?12 நவம்பர் 2022 குரு தேக் பகதூர் இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதித்தார். குரு தேக் பகதூரின் தலையை ஜலாலுதீன் துண்டித்தவுடன் கூட்டத்தில் பேரமைதி நிலவியது. குரு தேக் பகதூர் உயிர்தியாகம் செய்த அதே இடத்தில் பின்னர், சீஸ்கஞ்ச் குருத்வாரா கட்டப்பட்டது. குருவின் சீடர் ஜெய்தா தாஸ், துண்டிக்கப்பட்ட தலையை டெல்லியில் இருந்து 340 கிமீ தொலைவில் உள்ள ஆனந்த்பூருக்கு எடுத்துச் சென்று அவரது ஒன்பது வயது மகன் கோபிந்த் ராயிடம் கொடுத்தார். ஆனந்த்பூர் சாஹிப்பில் குரு தேக் பகதூரின் துண்டிக்கப்பட்ட தலை முழு மரியாதையுடன் புதைக்கப்பட்ட இடத்தில் சீஸ்கஞ்ச் குருத்வாரா கட்டப்பட்டது. லக்கி ஷா என்ற மற்றொரு நபர், கோட்வாலியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரகாப் கஞ்சில் குரு தேக் பகதூரின் உடலை தகனம் செய்தார். அவரது நினைவாக அதே இடத்தில் குருத்வாரா ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. முகலாயர்களின் வீழ்ச்சியின் ஆரம்பம் குரு தேக் பகதூரின் உயிர் தியாகத்திற்குப் பிறகு பல காஷ்மீரி பண்டிதர்கள் சீக்கிய மதத்தைத் தழுவினர். காஷ்மீரி பிராமணர்களுக்கு தலைமை தாங்கிய கிர்பா ராம் சீக்கியராக மாறினார். "குரு தேக் பகதூரின் இந்த தியாகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மாற்றியது. மனிதகுல வரலாற்றில், மனித உரிமைகளுக்காக அளிக்கப்பட்ட உயிர்தியாகத்தின் மிகப்பெரிய உதாரணமாக இது ஆனது. இந்தியாவின் வலிமைமிக்க முகலாயப் பேரரசின் வீழ்ச்சி இங்கிருந்து தொடங்கியது,"என்று சீக்கிய அறிஞர் குர்முக் சிங் தனது 'குரு தேக் பகதூர் தி ட்ரூ ஸ்டோரி' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c2j03m2zydlo
  2. PAK 137/8 ENG (5.6/20 ov, T:138) 49/3 England need 89 runs in 84 balls. Current RR: 8.16 • Required RR: 6.35 • Last 5 ov (RR): 42/3 (8.40) Win Probability:ENG 83.16% • PAK 16.84% மூன்றாவது விக்கெட்டும் வீழ்ந்தது.
  3. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது விசாரணை! By VISHNU 13 NOV, 2022 | 03:32 PM முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றையதினம் (13) மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தை ஆக்கிரமித்து படைமுகாம் அமைத்துள்ள 592 ஆவது பிரிகேட் முகாமின் கட்டளை அதிகாரி இராணுவ முகாமுக்கு அழைத்து விசாரணையில் மேற்கொண்டுள்ளார். இன்றுகாலை கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விஜிந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன் , ஜெகன் ஆகியோரும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நேரத்தில் அப்பகுதிக்கு வருகைதந்த இராணுவத்தினர் விசாரணைக்காக தமது இராணுவ முகாமுக்கு வருகைதருமாறு ஏற்பாட்டாளர்களை அழைத்து சென்றிருந்தனர். இதன்படி இராணுவ முகாமுக்கு சென்ற ஏற்பாட்டாளர்களை விசாரித்த 592 ஆவது பிரிகேட் முகாமின் அதிகாரி மாவீரர் நாளினை இப்பகுதியில் அனுஷ்டிக்க முடியாது என எச்சரித்ததோடு இப்பகுதி முழுவதும் இராணுவத்துக்கு சொந்தமான பகுதி எனவும் வேண்டும் என்றால் நீங்கள் துப்பரவு செய்யலாம் ஆனால் 27ஆம் திகதி சுடர் ஏற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதற்க்கு பதிலளித்த ஏற்பாட்டு குழுவினர் இப்பகுதி பிரதேச சபைக்கு சொந்தமான பகுதி அதனையே நாங்கள் துப்பரவு செய்கின்றோம். இறந்த எமது உறவுகளை நினைவு தடை எதுவும் இல்லை என அரசாங்கம் கூறியுள்ள போதிலும் இராணுவத்தினர் இவ்வாறு நடந்துகொள்கின்கிறீர்கள். இருந்தாலும் எமது உறவினர்களை நினைத்து நாங்கள் அஞ்சலிப்பதை தடுக்க வேண்டாம் என கூறிவிட்டு மீண்டும் வந்து துயிலும் இல்ல வளாகத்தை துப்பரவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவத்தினர் அப்பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளதோடு கல்லறைகள் இருந்த பகுதியில் புத்தர் சிலை ஒன்றையும் அரச மரம் ஒன்றையும் நாட்டி வழிபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139901
  4. பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெஹ்ரான் கரிமி நாசேரி 51 நிமிடங்களுக்கு முன்னர் 18 ஆண்டுகள் பாரிஸ் விமானநிலையத்தில் வசித்த இரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி மரணமடைந்தார். பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கிய நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் ஒரு சிறிய பகுதியை மெஹ்ரான் கரிமி நாசேரி தனது இல்லமாக்கினார். 2004 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘தி டெர்மினல்’ திரைப்படம் இவருடைய அனுபவத்தை மையமாக வைத்து உருவானது. மெஹ்ரான் கரிமி நாசேரிக்கு ஃபிரான்ஸில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும் சில வாரங்களுக்கு முன்பு அவர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்ததாகவும், தற்போது இயற்கையாக அவர் மரணமடைந்ததாகவும் விமான நிலையை அதிகாரிகள் ஏஎஃப்பி செய்து முகமையிடம் தெரிவித்தனர். 1945ஆம் ஆண்டு இரானிய மாகாணமான குசெஸ்தானில் பிறந்த நாசேரி, தனது தாயை தேடி ஐரோப்பாவிற்கு முதன்முதலில் சென்றார். சரியான குடியேற்ற ஆவணங்கள் இல்லாததால் பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், சில ஆண்டுகள் பெல்ஜியத்தில் வாழ்ந்தார். அங்கிருந்து ஃபிரான்ஸ் சென்ற நாசேரி, அங்கு விமான நிலையத்தின் 2F முனையத்தை தன்னுடைய இல்லமாக்கினார். அங்கு தன்னுடைய வாழ்க்கை குறித்து நோட்டுகளில் எழுதியும், புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாசித்தும் நாட்களைக் கழித்தார். உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு?20 ஜூன் 2022 சிரியா அகதிகள்: ஆன்லைனில் யாசகம் கேட்பவர்களை சுரண்டுகிறதா டிக்டாக்?14 அக்டோபர் 2022 இந்தியர்கள் சிலர் தாயகத்தை விட்டு வெகு தூரம் செல்ல என்ன காரணம்?7 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானநிலையத்தில் தனது உடைமைகளுடன் மெஹ்ரான் கரிமி நாசேரி அவரது கதை சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததோடு, பிரபல இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் இயக்கத்தில் ஹாங்க்ஸ் மற்றும் கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் நடிப்பில் தி டெர்மினல் திரைப்படம் வெளியானது. அப்படம் வெளியானதும் அவரிடம் பேட்டியெடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஒரு கட்டத்தில் தன்னை சர் ஆல்ஃபிரட் என்று அழைத்துக்கொண்ட அவர், ஒரு நாளுக்கு 6 நேர்காணல்கள் வரை கொடுத்ததாக ஃபிரான்ஸின் உள்ளூர் நாளிதழ் செய்தி கூறுகிறது. 1999ஆம் ஆண்டு அகதி அந்தஸ்தும், ஃபிரான்ஸில் தங்குவதற்கான உரிமையும் வழங்கப்பட்ட போதிலும், நோய் வாய்ப்பட்டு கடந்த 2006ஆம் ஆண்டு வரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை விமான நிலையத்திலேயே அவர் தங்கியிருந்தார். பின்னர் திரைப்படத்திற்காக கிடைத்த பணம் மூலம் விடுதியில் தங்கி காலத்தை கழித்ததாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது. சில வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கு மீண்டும் வந்த நாசேரி, இறக்கும் வரை அங்கிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவருடைய உடைமையில் சில ஆயிரம் யூரோக்கள் இருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.bbc.com/tamil/articles/cv28gzdw68zo
  5. மாற்றத்திற்குள்ளாகும் இந்திய அணுகுமுறைகள் By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 02:48 PM (சி.அ.யோதிலிங்கம்) இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத்தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் அது கைகூடவில்லை. இதுவிடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகா் சாகல ரத்நாயக்காவை இரசகியமாக புதுடில்லிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் அனுப்பி வைத்தார். அதுவும் வெற்றியளிக்கவில்லை. சாகல ரத்நாயக்காவினால் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய்மோகன் குவாத்ராவையும் உயரதிகாரிகளையும் மட்டுமே சந்திக்க முடிந்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைக் கூட சந்திக்க முடியவில்லை. கடன் மறுசீரமைப்பு, இலங்கை ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் சந்தித்தல் என்கின்ற இரு விவகாரங்களுக்கு முயற்சிகளைச் செய்தபோதும் தெளிவான பதில் எவற்றையும் இந்தியா கொடுக்கவில்லை. இலங்கையின் ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் முதல் பயணமாக இந்தியா செல்வதே வழமையானதாகும். ரணிலுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடன்மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவோ, சீனாவோ அவசரம் காட்டவில்லை. இந்தியா, இலங்கைத் தீவில் தனக்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென எதிர்பார்க்கின்றது. சீனா இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறது. இருதரப்பும் இலங்கையில் செல்வாக்கு செலுத்துவதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஆயுதமாக பயன்படுத்த முனைகின்றன. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்தமொரகொட பொருளாதார ரீதியான உறவுகளை இந்தியாவுடன் வலுவாகப் பேணுவதன் மூலம் தமிழர் விவகாரத்தை ஓரம்கட்டலாமென நினைக்கின்றார். அதற்காக பழைய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை இரத்துச்செய்து புதிய உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கும் முயற்சிசெய்தார். இந்திய ஊடகங்களுக்கும் இது தொடர்பாக நோ்காணல்களை வழங்கினா். ஆனால் இந்திய அரசதரப்பு அதற்கான இணக்கங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. மிலிந்த மொரகொடவின் விருப்பங்களுக்கு இந்தியா சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்தியாவின் இலங்கை தொடா்பான வெளி உறவுக் கொள்கையிலேயே மாற்றங்களைச் செய்யவேண்டும். இலங்கை தொடா்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய விடயம் இலங்கையின் இறைமை ஆட்புலமேன்மை என்பன பேணப்படுவதோடு தமிழ் மக்களின் சமத்துவம் சமாதான வாழ்வு என்பனவும் பேணப்பட வேண்டும் என்பதே ஆகும். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இக்கொள்கையிலும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. இனப்பிரச்சினைத்தீர்வும் இலங்கையின் பொருளாதார நெருக்கடித்தீர்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று இந்தியா கூறியுள்ளது. அத்துடன் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நோக்கி இலங்கை நகர வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பாராளுமன்றத்தில் பேசியபோது ‘கூட்டுச்சமஸ்டி’ என்ற ஆட்சிப் பொறிமுறையை நோக்கி இலங்கை நகரவேண்டும் எனக் கூறியிருந்தார்;. இந்த அடிப்படையில் கடந்த 04ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனுடன் சமூகவிஞ்ஞான ஆய்வுமையத்தினர் ஒருசந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது, சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினர் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் முதலாவது அரசியல் தீர்வாகும். இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது என்பதால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களை இவ் அழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். எனவே அரசியல் தீர்வு கோட்பாட்டு அடிப்படையில் தேசிய இன அங்கீகாரம் இறைமை அங்கீகாரம், சுய நிh;ணய உரிமை அங்கீகாரம், சுய நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சமஸ்டி பொறிமுறை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு அரசியல் யாப்பு சட்ட வடிவம் கொடுக்கும் போது தாயக ஒருமைப்பாட்டைப் பேணும் வகையிலான வடக்கு - கிழக்கு இணைந்த அதிகார அலகு , சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்கக் கூடிய சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசிய இனமாக பங்குபற்றுவதற்குரிய பொறிமுறை, சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றை கொண்டிருத்தல் வேண்டும். வடக்கு - கிழக்கு இணைந்த அதிகார அலகில் முஸ்லீம்களின் வகிபாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக முஸ்லீம்களுடன் பேசித்தீர்க்கலாம் என்றும் முஸ்லிம்கள் முன் வைக்கின்ற தனி அதிகார அலகுக் கோhpக்கையையும் சாதகமாக பாரிசீலிக்கலாம். இரண்டாவது 13ஆவது திருத்தம் பற்றியதாகும். 13ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்குட்பட்ட மத்திய அரசில் தங்கி நிற்கின்ற எந்த வித சுயாதீனமற்ற மாகாணசபை முறையினையே சிபாரிசு செய்துள்ளது என்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு இது எந்த வகையிலும் போதுமானது அல்ல என்றும் குறிப்பிட்டனர். தற்போது வெட்டிக்குறைக்கப்பட்ட 13ஆவது திருத்தமே நடைமுறையில் உள்ளது. இது அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக கூட கொள்வதற்கு தகைமை அற்றது. மூன்றாவது ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதாகும். மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வன பாரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், பௌத்தசாசன அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு என்பன இதில் கூட்டாக செயற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி இவ்வாக்கிரமிப்புக்களை நிறுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். நான்காவது அரசியல் கைதிகளின் விடுதலையாகும். அரசியல் கைதிகளில் 50 பேர் வரை சிறையில் இருக்கின்றனா;. அதில் 34 பேர் 10 வருடம் தொடக்கம் 28 வருடம் வரையில் சிறையில் இருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்தவுடன் நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே வழமையாகும். இலங்கையில் அது இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட் இவர்களின் விடுதலைக்கான அழுத்தங்களை இந்தியா கொடுக்கவேண்டும். ஐந்தாவது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தமிழ் மக்கள் பாரிகார நீதியையே கோரியிருந்தனர். ஆனால் சார்வதேச சமூகம் நிலைமாறுகால நீதியையே சிபாரிசு செய்தது. இந்த நிலைமாறுகால நீதி உண்மையை கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்ற நான்கு செயல் திட்டங்களை உள்ளடக்கியது. இந்த நீதி வழங்கல் செயற்பாட்டில் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. சர்வதேச பொறிமுறையையே அவர்கள் கோருகின்றனர். எனவே சர்வதேசப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் உதவவேண்டும். ஆறாவது தமிழா் தாயகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உதவவேண்டும் எனக் கோரப்பட்டது. அந்த அபிவிருத்தி செயற்பாடுகளில் தமிழ் மக்களையும் இணைக்கவேண்டும் என்றும் குறிப்பாக உள்ளுராட்சிச் சபைகளை இணைப்பது ஆரோக்கியமானது. ஏழாவது தமிழக மக்களுடனான தாயக மக்களின் உறவினை இலகுவாக்குவதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் மீள செயற்படுத்துவதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்தும் காங்கேசன் துறை காரைக்கால் படகு போக்குவரத்தும் உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்களே அவையாகும். இதற்கு பதிலளித்த துணைத்தூதுவர், அரசியல் தீர்வு, 13ஆவது திருத்தம், அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கோரிக்கைகளை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டதோடு ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதற்கு சில முயற்சிகள் நடப்பதாகவும் அபிவிருத்தி செயற்பாடுகளில் தாம் மிகுந்த அக்கறை கொள்வதாகவும் இந்திய முதலீட்டாளர்களுடன் இது பற்றி பேசுவதாகவும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனவரி மாதமளவில் மீளத்திறப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளது எனவும் இராமேஸ்வரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தையும் காங்கேசன்துறை - காரைக்கால் படகுப் போக்குவரத்தையும் அதேமாதத்தில் ஆரம்பிக்க முடியுமெனவும் குறிப்பிட்டார். மேலதிகமாக தமிழ் விவசாயிகளின் மண்ணெண்ணை உரத் தேவை பூத்திசெய்வதற்கு தான் முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டார். மாணவர்களின் கல்வி விடயத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்றும் ஆனால் தமிழ் மாணவர்களின் அக்கறை குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/139896
  6. உண்மை தான். PAK 137/8 ENG (3.3/20 ov, T:138) 32/2 England need 106 runs in 99 balls. இரண்டாவது விக்கெட் வீழ்ந்தது.
  7. PAK 137/8 ENG (1/20 ov, T:138) 7/1 England need 131 runs in 114 balls. முதலாவது விக்கெட் விழுந்தது.
  8. இலங்கிலாந்துக்கு 138 ஓட்டங்கள் வெற்றி இலக்கு : கட்டுப்படுத்துமா பாகிஸ்தான் ? 13 NOV, 2022 | 03:22 PM (நெவில் அன்தனி) எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 138 ஓட்டங்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது. மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றுவரும் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. களத்தடுப்பில் ஈடுபட்ட இங்கிலாந்துக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் தத்தமது ஓவர்களை முறையே நோபோல் மற்றும் வைட்டுடன் ஆரம்பித்தனர். எவ்வாறாயினும் மூன்றாவது பந்துவீச்சாளர் சாம் கரன் தனது 2 ஆவது ஓவரில் மொஹமத் ரிஸ்வானின் விக்கெட்டைப் பதம் பார்க்க இங்கிலாந்து சிறு ஆறுதல் அடைந்தது. ரிஸ்வான் 15 ஓட்டங்களைப் பெற்றார். பவர் பிளே நிறைவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 7 ஆவது ஓவரில் பந்துவீச்சில் அறிமுகமான ஆதில் ராஷித் வீசிய முதல் பந்திலேயே மொஹமத் ஹாரிஸ் (8) ஆட்டமிழக்க பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. (45 - 2 விக்.) ஆதில் ராஷித் ஒரு ஓட்டமற்ற விக்கெட் ஓவர் உட்பட 4 ஓவர்களைத் தொடர்ச்சியாக நிறைவுசெய்து 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அணித் தலைவர் பாபர் அஸாம், ஷான் மசூத் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ராஷித்தின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து 32 ஓட்டங்களுடன் பாபர் அஸாம் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இப்திகார் அஹ்மத் ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். (85 - 4 விக்.) ஷான் மசூத் (38), ஷதாப் கான் (20) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்த பின்னர் பாகிஸ்தானின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின. 20 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். கிறிஸ் ஜொர்டன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/139902
  9. PAK (19.6/20 ov) 137/8 ENG England chose to field. Current RR: 6.85 • Last 5 ov (RR): 31/4 (6.20) அநேகமாக இங்கிலாந்து கிண்ணத்தை தூக்கப் போகுது...
  10. உலகக் கிண்ணத்தை யார் கைப்பற்றுவது ? இயற்கை கைகொடுக்குமா ? இங்கிலாந்து - பாகிஸ்தான் இன்று மோதல் ! 13 NOV, 2022 | 07:18 AM (நெவில் அன்தனி) முதல் சுற்றிலிருந்து அரை இறதிவரை எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத அற்புதமான ஆற்றல்களை கடந்த நான்கு வாரங்களாக வழங்கிவந்த எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் சம்பியனைத் தீர்மானிக்கும் இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இந்த இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஏறத்தாழ ஒரே மாதிரியான பெறுபேறுகள் இறுதி ஆட்டத்தை நோக்கிய இங்கிலாந்தினதும் பாகிஸ்தானினதும் பயணம் அதாவது அவற்றின் பெறுபேறுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்ததுடன் இரண்டு அணிகளுக்கும் அரை இறுதி வாய்ப்புகளும் மிக சொற்பமாகவே இருந்தன. இரண்டு அணிகளும் தத்தமது குழுக்களில் கடைசி சுப்பர் 12 சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டாம் இடங்களைப் பெற்று அரை இறதிகளில் விளையாட தகுதிபெற்றன. குழு 1இல் நியூஸிலாந்தும் குழு 2இல் இந்தியாவும் முதலாம் இடங்களைப் பெற்றபோது அந்த இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலாவது அரை இறுதியில் நியூஸிலாந்தை பாகிஸ்தான் 7 விக்கெட்களாலும் 2ஆவது அரை இறுதியில் இந்தியாவை இங்கிலாந்து 10 விக்கெட்களாலும் மிக இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றன. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 2009இல் சம்பியனான பாகிஸ்தான் மூன்றவாது தடவையாகவும் 2010இல் சம்பியனான இங்கிலாந்து இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளன. 30 வருடங்களின் பின்னர் மீண்டும் இங்கிலாலந்து - பாகிஸ்தான் 1992 உலகக் கிண்ண (50 ஓவர்) இறுதிப் போட்டியில் விளையாடிய அதே நாடுகளின் அணிகள் 3 தசாப்தங்களுக்குப் பின்னர் அதே அரங்கில் ரி 20 வகையான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளமை விசேட அம்சமாகும். இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் 30 வருடங்களுக்கு முன்னர் மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிறஹாம் கூச் தலைமையிலான இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு 50 ஓவர் கிரிக்கெட்டில் உலக சம்பியனாகியிருந்தது. இப்போது ஜொஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தும் பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தானும் இம்முறை சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து அதே அரங்கில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடுத்ததாக இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இரண்டு தடவைகள் சம்பியனான இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெறும். இரண்டாவது தடவையாக உலக சம்பியனாக வேண்டும் என்ற வேட்கையுடன் இரண்டு அணிகளும் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதால் இப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் பாகிஸ்தானின் பந்துவிச்சுக்கும் இடையே இடம்பெறப்போகும் போட்டி இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தின் துடுப்பாட்டத்திற்கும் பாகிஸ்தானின் பந்தவீச்சிற்கும் இடையிலான போட்டியாக அமையும என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷத்துடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடக்கூடியவர்கள் மடடுமல்லாமல் அவ்வணியின் துடுப்பாட்ட வரிசை நீளமானது. ஆனால், நடந்து முடிந்த போட்டிகளில் இங்கிலாந்து சார்பாக இருவர் மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் மொத்தமாக 211 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஜொஸ் பட்லர் 5 பொட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 199 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரைவிட வெறு எவரும் 60 மொத்த ஓட்டங்களைப் பெறவில்லை. பந்துவீச்சில் சாம் கரன் (5 போட்டிகளில் 10 விக்கெட்கள்), உபாதைக்குள்ளாகி இருக்கும் மார்க் வூட் (4 போட்டிகளில் 9 விக்கெட்கள்) ஆகிய இருவரே சிறப்பாக செயற்பட்டுள்ளனர். மார்க் வூட் இன்றைய போட்டியில் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் பலம் அதன் பந்துவீச்சில் தங்கியிருப்பதுடன் அதன் ஆரம்ப வேகப்பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்தவீசியுள்ளனர். அவ்வணியின் சுழல்பந்துவீச்சும் சிறப்பாகவே அமைந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் மொஹமத் ரிஸ்வான் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 160 ஓட்டங்களையும் ஷான் மசூத் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 137 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் (6 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 114 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஷஹீன் ஷா அப்றிடி (6 போட்டிகளில் 10 விக்கெட்கள்), ஷதாப் கான் (6 போட்டிகளில் 10 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பாபர் அஸாம் 6 போட்டிகளில் ஒரு அரைச் சதத்துடன் 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளார். அவர் இறுதிப் போட்டியில் முழுத் திறமையுடன் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெறுவார் என நம்பப்படுகிறது. இது இவ்வாறிருக்க, இரண்டு அணிகளினதும் வெற்றிகளில் களத்தடுப்புகளும் முக்கிய பங்காற்றியிருந்தன. ஒட்டுமொத்தத்தல் இரண்டு அணிகளும் சிரமமான ஆரம்பங்களின் பின்னர் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி முக்கிய வெற்றிகளை ஈட்டி இன்றைய இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளன. இந் நிலையில் இன்றைய இறுதிப் போட்டிகளில் எந்த அணி மிகச் சிறந்த நுட்பத்திறன்களுடனும் புத்திசாதுரியத்துடனும் விளையாடுகின்றதோ அந்த அணிக்கே ச்ம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும். அணிகள் கடந்துவந்த பாதை இங்கிலாந்து சுப்பர் 12 எதிர் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்களால் வெற்றி எதிர் அயர்லாந்து - DLS முறைமை 5 விக்கெட்களால் தோல்வி எதிர் அவுஸ்திரேலியா - மழையினால் ஆட்டம் கைவிடப்பட்டது எதிர் நியூஸிலாந்து - 20 ஓட்டங்களால் வெற்றி எதிர் இலங்கை - 4 விக்கெட்களால் வெற்றி அரை இறுதி எதிர் இந்தியா - 10 விக்கெட்களால் வெற்றி பாகிஸ்தான் சுப்பர் 12 சுற்று எதிர் இந்தியா - 4 விக்கெட்களால் தோல்வி எதிர் ஸிம்பாப்வே - ஒரு ஓட்டத்தால் தோல்வி எதிர் நெதர்லாந்து - 6 விக்கெட்களால் வெற்றி எதிர் தென் ஆபிரிக்கா - DLS முறைமை 33 ஓட்டங்களால் வெற்றி எதிர் பங்களாதேஷ் - 5 விக்கெட்களால் வெற்றி அரை இறுதி எதிர் நியூஸிலாந்து - 7 விக்கெட்களால் வெற்றி இங்கிலாந்து முன்னிலை இங்கிலாந்தும் பாகிஸ்தானும் இரண்டு தடவைகள் மாத்தரமே இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. லண்டன் ஓவலில் 2009இல் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது இங்கிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. பிறிஜ்டவுனில் 2010இலும் பாகிஸ்தானுடனான போட்டியில் 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து முன்னிலையிலேயே இருக்கிறது. இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 28 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 17 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. சமநிலையில் முடிவடைந்த பொடடியில் சுப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் முடிவு கிட்டவில்லை. சீரற்ற காலநிலை நிலவினால்... இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ரீ 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி மழையினால் தடைப்படலாம் என அஞசப்படுகிறது. ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டால் ஒதுக்கப்பட்டுள்ள நாளான திங்களன்று போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை எண்ணியுள்ளது. ஆனால், திங்களன்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு நாடுகள் இணை சம்பியன்களாக பிரகடனப்படுத்தப்படும். சுப்பர் 12 சுற்றில் போட்டி முடிவுக்கு குறைந்தது 5 ஓவர்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இறுதிப் போட்டியில் முடிவைத் தீர்மானிக்க குறைந்தது 10 ஓவர்கள் வீதம் விசப்பட்டிருக்கவேண்டும். ஞாயிறன்று ஆட்டம் ஆரம்பமாகி மழையினால் தடைப்பட்டால் விடப்பட்ட இடத்திலிருந்து திங்களன்று ஆட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணிகள் இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன் அல்லது ஃபில் சோல்ட், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹெரி ப்றூக், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ஆதில் ராஷித், மார்க் வூட் அல்லது கிறிஸ் ஜோர்டன். பாகிஸ்தான்: பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், ஷான் மசூத், மொஹமத் ஹரிஸ், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், ஹரிஸ் ரவூப், மொஹமத் வசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/139835
  11. 800 கொவிட் 19 தொற்றாளர்களுடன் சிட்னிக்கு வந்த பாரிய உல்லாசக் கப்பல் By DIGITAL DESK 3 13 NOV, 2022 | 08:32 AM சுமார் 800 கொவிட் 19 தொற்றாளர்களைக் கொண்ட உல்லாசப் பயணிகள் கப்பலொன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது. மெஜஸ்டிக் பிரின்சஸ் எனும் இக்கப்பலில் மொத்தமாக சுமார் 4,600 பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். நியூஸிலாந்திலிருந்து இக்கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது. 12 நாள் பயணத்தின் இடையில், கப்பலிலிருந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இக்கப்பலை இயக்கும் கார்னிவேல் அவுஸ்திரேலியா நிறுவனத்தன் தலைவர் மார்கரிட் பிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார். தொற்றுடைய அனைவருக்கும் அறிகுறிகள் இல்லை, அல்லது இலேசான அறிகுறிகளே இருந்தன எனஅவர் கூறியுள்ளார். தொற்றுடைய அனைவரும் தனிமைப்படுத்தப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139836
  12. திலினி பிரியமாலி விவகாரம்: ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம்! By VISHNU 13 NOV, 2022 | 10:52 AM திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய நிதி மோசடி தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் 12 ஆம் திகதி சனிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. ஞானசார தேரரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது ஞானசார தேரர் தொடர்பான உரையாடல்கள் பதிவாகியுள்ளதால், அவர் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/139857
  13. கப்பலிலிருந்து மசகு எண்ணெய் இறக்கும் பணிகள் ஆரம்பம் -காஞ்சன 13 NOV, 2022 | 12:09 PM 7 மில்லியன் டொலர்களைச் செலுத்த முடியாமல் சுமார் 55 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மசகு எண்ணெய் கப்பலிலிருந்த மசகு எண்ணெய்யை இறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு தெரிவித்துள்ளார். இந்த மசகு எண்ணெய் கப்பலின் விநியோகஸ்தருக்கு பணம் வழங்குவதற்கான புதிய முறைமை ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/139873
  14. 3வது முறை கலைந்த கரு, வயிற்றில் துணி கட்டி 9 மாதம் நடித்த பெண் - சமூக அழுத்தம் பெண்களை எப்படி பாதிக்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர்,நடராஜன் சுந்தர் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மூன்றாவது முறையாக கரு கலைந்த பெண் குடும்பத்தினருக்குப் பயந்து 9 மாதங்கள் வயிற்றில் துணி கட்டி நடித்து வந்த நிலையில், உண்மை வீட்டிற்குத் தெரிவதற்கு முன் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக மருத்துவர்களிடம் கூறிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவுற்று குழந்தை பிரசவிப்பது என்பது பெண்களுக்கு உடலில் இயற்கையாக உள்ள ஓர் அமைப்பாக இருந்தாலும், பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனரா? ஒரு தம்பதியால் கருத்தரிக்க முடியாமல் போகும்பட்சத்தில், அப்பெண் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெரும் அழுத்ததுக்கு உள்ளாகிறாரா? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்துள்ள இரண்டு நிகழ்வுகள் இந்தக் கேள்வியை அழுத்தமாக முன்வைக்கின்றன. சம்பவம் 1 - வயிற்றில் துணி கட்டி 9 மாதங்கள் கர்ப்பிணியாக நடித்த பெண் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன 23 வயது பெண் ஒருவருக்கு 2 முறை கருத்தரித்து, கரு வயிற்றில் தங்காமல் கலைந்து போனது. இதையடுத்து அப்பெண் 3-வது முறையாகக் கருவுற்றார். 5 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் கரு கலைந்தது. இதற்கிடையே அப்பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். ஆனால், தனக்கு மீண்டும் கரு கலைந்து கணவரது வீட்டிற்குத் தெரிந்தால் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று எண்ணி அப்பெண் பயந்துள்ளார். இதனைச் சமாளிக்க வயிற்றில் துணியை வைத்துக்கொண்டு நடிக்கத் தொடங்கினார். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து வருவதாகக் காட்டிக்கொண்டார். 9 மாதங்கள் கடந்த நிலையில் குழந்தை பிரசவத்திற்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நாள் நெருங்கியதும், தனக்குக் குழந்தை பிறப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முயன்றபோது தான் கருத்தரிக்கவில்லை தனது வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் நடித்து வந்ததாகக் கூறியுள்ளார். தான் மூன்றாவது முறையாகக் கருத்தரித்தும் கரு தங்கவில்லை என்ற விஷயம் வீட்டிற்குத் தெரிந்தால் என்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் எனப் பயந்து கர்ப்பம் தரித்தது போல நடித்து வந்ததாக மருத்துவர்களிடம் கூறினார். மேலும் தன்னை இதிலிருந்து காப்பாற்றவும் வீட்டில் கேட்டால் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறும்படியும் கேட்டு மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் நிலைமையை எடுத்துக் கூறுவதாகக் கூறி அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவர்களிடம் குடும்பத்தினர் கேட்டபோது அவர்கள் நடந்த சம்பவத்தை விளக்கினர். தகவலறிந்து மருத்துவமனை வந்த பெண் காவலர் மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு ஆலோசனை வழங்கினர். "இதுபோன்று செய்வது தவறு என்று எடுத்துரைத்த மருத்துவர்கள், கருத்தரிக்க நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. அதற்கேற்ப நீங்கள் சிகிச்சை எடுத்திருக்கலாம். ஆனால் இவ்வாறு செய்வது ஒரு காலத்தில் வீட்டிற்குத் தெரியாமல் போய்விடுமா என்று மருத்துவர்கள் பெண்ணிடம் கேட்டதற்குப் பிரசவம் நேரம் நெருங்கும் போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன்” என்று அப்பெண் கூறியதாக காவலர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பின்னர் அப்பெண்ணிற்கும் குடும்பத்தினருக்கும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உரிய அறிவுரைகள் வழங்கி அனுப்பிவைத்தனர். சம்பவம் 2 - செயற்கை கருவூட்டல் முறையில் இரட்டை குழந்தை பெற்ற பெண் தற்கொலை பட மூலாதாரம்,GETTY IMAGES புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர். இதனால் அவர்கள் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றெடுக்க முயன்றனர். அதன்படி தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை மூலமாக கடந்த மே மாதம் ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்த வழக்கை விசாரணை செய்த புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் பிபிசியிடம் கூறுகையில், "குழந்தை பெற்ற பிறகு புதுச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு 31 வயதான ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்றுள்ளார். இதனிடையே குழந்தை பராமரிப்பதில் அப்பெண் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் குழந்தைகள் 7 மாதம் குறைப் பிரசவத்தில் பிறந்ததால் தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு சிரமம் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும் குழந்தையை சரிவர பராமரிக்க முடியாமல் போவது குறித்தும், வீட்டிலுள்ள தனது தாயிடம் கூறி அப்பெண் அழுதுள்ளார். தொடர்ந்து குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற அச்சம் உள்ளிட்ட காரணங்களால் அவர் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாகத் தனது பெற்றோர் வீட்டில் தங்கி குழந்தைகளைப் பராமரித்து வந்த அப்பெண் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது," என்கிறார் அவர். மேலே குறிப்பிட்ட இரண்டும் வெவ்வேறு சம்பவங்களாக இருந்தாலும் இரண்டுக்கும் அடிப்படை குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதே ஆகும். உளவியல் நிபுணர்கள் சொல்வது என்ன? ஒரு பெண் பிறந்ததே திருமணமாகி, அடுத்த தலைமுறைக்கு வாரிசை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே என்ற எண்ணம் இருக்கிறது. இவ்வாறு பெண்களை குடும்பத்தில் இனப்பெருக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தும் முறை இன்று வரை நீடித்தது வருவதாக உளவியல் நிபுணர் ஷர்மிலி ராஜகோபாலன் பிபிசியிடம் பகிர்ந்துள்ளார். "சமுதாயத்தில் வெகுஜன மனநிலை (Mass Mentality) ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போது ஆண், பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒரு கருத்தை குடும்பமும், சமுதாயமும் நமக்குள் செலுத்துகின்றன. அதன்பின்னர் வளரும் போது நமக்கென்று தனித் தன்மையை உருவாக்க வேண்டும். ஆனால் நாம் சமுதாயம் சொல்கின்ற ஆளாக மட்டுமே மாறுகிறோம். இவ்வாறு ஒரு பெண் முழுமையான ஆளாக மாறும் போது, உடல் ரீதியான மாற்றம் மட்டுமே நடக்கிறதே தவிர உளவியல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. மேலும் வெகுஜன மனநிலை உருவாகும் போது ஒரு பெண் எல்லாரும் சொல்வதைக் கேட்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார். செக்ஸ்சோம்னியா: பிரிட்டனில் பேசப்பட்ட ஒரு மாறுபட்ட வழக்கின் கதை இது7 நவம்பர் 2022 தமிழ்நாட்டு பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது ஏன்?8 நவம்பர் 2022 பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்?1 நவம்பர் 2022 ஆண், பெண் இருவருக்கும் சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்ட விஷயங்களை வெகுஜன மனநிலையில் உள்ள உறுதியான நம்பிக்கையாகப் பார்க்கின்றனர். அதிலிருந்து வெளியே யோசிப்பதற்குக் கூட பெண்கள் பயப்படுகின்றனர். இதில் அவர்களுக்கு ஏற்படும் பயம் மிகவும் ஆழ்ந்த பயமாக உள்ளது," என்கிறார் உளவியலாளர் ஷர்மிலி ராஜகோபாலன். இந்த ஆழ்ந்த பயம் நம்மை நம் வசத்தில் வைத்துக்கொள்ளாது. வெகுஜன மனநிலையின் வசத்தில் நம்மை இழுக்கும் என்று கூறும் நிபுணர் ஷர்மிலி, ஒரு பெண் 9 மாதங்கள் வரை குழந்தை இருப்பது போல் பொய்யாக நடித்திருக்கிறார் என்றால் அவருடைய வசத்தில் அப்பெண் இல்லை என்று அவர் கூறுகிறார். "இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணிற்கு அவரது குடும்பம், மற்றும் சமுதாயம் குழந்தை பெற்றால் தான் தாய்மை என்று அனைத்தையும் நம்பி தனக்கென்று தனித்தன்மையை அவர் உருவாக்காமல் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் தனக்குள் உருவாக்காத காரணத்தினால் தான் இந்த வெகுஜன மனநிலை அவர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தூண்டும். ஆணாதிக்கம் என்று சொல்லும்போது அது குறித்த அனைத்து கோபங்களும் ஆண்கள் மீது செல்லும் போது பெண்ணியம் என்று ஒன்று உருவாகிறது. இந்த ஆண்களே இப்படிதான், எங்களை இப்படி ஆக்கிவிட்டார்கள், அதற்கு எதிராக ஒன்று சேரப் போகிறோம் என்று பெண்ணியம் எழுகிறது. ஆனால் ஆணாதிக்கம் ஆண்களிடம் மட்டும் இல்லை. ஆணாதிக்கம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று சொல்லலாம். அதேபோன்று பெண்களைப் பெண்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் அந்தந்த குடும்பத்தில் உள்ள மாமியார் ஆண்களைப் போலத்தான் நடந்துகொள்கின்றனர். ஓர் ஆண், குழந்தையைப் பார்க்கும் போது ஒருவிதமான உணர்வு ஏற்படுகிறது என்றால் அவனுக்குள் தாய்மை அல்லது பெண் ஆற்றல் (feminine energy) உள்ளது. அதேபோன்று ஒரு பெண் தனியாக வேலை செய்கிறார் என்றால் அவளுக்குள் ஆண் ஆற்றல் (masculine energy) உள்ளது. ஆணாதிக்கம் செலுத்தும் போது ஒருவருக்குள் இருக்கும் ஆண் ஆற்றல், பெண் ஆற்றலை முழுவதும் அடக்கி வைத்துவிடுகிறது," என்று கூறுகிறார் ஷர்மிலி. செயற்கை கருவூட்டலில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES தொடர்ந்து பேசிய அவர், "திருமணமாகி குழந்தை இல்லை என்றால் உடனே மருத்துவரைச் சென்று பார்க்கின்றனர். இதற்காகக் கொஞ்ச காலம் காத்திருப்பதில்லை. அதற்கேற்ப அறிவியலும் வளர்ந்துள்ளதால் உடனே செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற முயல்கின்றனர். அதை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. தற்போதைய சூழலில் நிறையப் பெண்கள் அழுத்தம் மற்றும் கட்டுப்பாட்டால் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற இந்த சமுதாயத்தால் தள்ளப்படுகின்றனர். இரண்டாவது விஷயத்தில், தாய்க்குள் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை என்றால் இன்னொரு குழந்தைக்கு இந்த ஸ்திரத்தன்மையைக் கொடுக்க முடியாது. அதுமட்டுமின்றி குழந்தை பெற அந்த பெண்ணிற்கு 7 ஆண்டுகள் தாமதமானது. குழந்தை பெற்றதற்குப் பிறகு தன்னை தனக்குப் பிடிக்காமல் இருக்கும்போது தன்னுடைய குழந்தையை வெறுக்கத் தொடங்குவார்கள். இதை மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (Postpartum Depression) என்று அழைப்பார்கள். ஆனால் அவரது மன உளைச்சலுக்கு அவை மட்டும் காரணமில்லை. இத்தனை காலம் குழந்தை இல்லாமல் வலிமையற்ற நிலையிலிருந்த அவர், குழந்தை பெறும் போது மேலும் வலிமையற்ற சூழலுக்கு உடலளவிலும் மனதளவிலும் தள்ளப்படுகிறார். இதனால் அந்த பெண் மன அழுத்தத்தின் உச்சத்திற்குச் சென்றிருப்பார். அதனால் தான் இவ்வாறு செய்திருக்கக் கூடும்," என உளவியல் நிபுணர் ஷர்மிலி ராஜகோபாலன் கூறுகிறார். அறிவியல் ரீதியாக வளர்ந்தாலும் பழமையின் பிடியில் இருக்கும் சமுதாயம் உலகத்தை விரல் நுனியில் வைத்துப் பார்க்கும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது. அது மனிதர்களை அதிவேகமான தொழில்நுட்பம் மூலம் அடுத்தடுத்த நூற்றாண்டிற்குக் கொண்டு செல்கிறது. ஆனால் இவை ஒருபுறமிருக்க பழமையின் பிடிப்பு மற்றும் அதனுடைய வலை மனிதர்களை சில விஷயங்களில் முன்னேற விடாமல் தடுப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், பெண்ணிய சிந்தனையாளருமான அ. அருள்மொழி பிபிசி தமிழிடம் கூறினார். படக்குறிப்பு, வழக்கறிஞர் அருள்மொழி "இந்த பெண் வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு நடித்ததைத் திரைப்படத்தில் பார்த்திருக்கலாம். அதே போன்று தற்கொலை செய்து கொண்ட மற்றொரு பெண் எவ்வளவு கடினமான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தை பெற்றெடுப்பதும், வளர்ப்பதும் பிரச்னைக்கு உரியதாகிவிட்டால் அந்த குழந்தையை வளர்க்கும் மொத்த சுமையும் தாய் மீது தான் இந்த சமூகம் திணிக்கிறது. தற்போது சில இளைஞர்கள் குழந்தை பொறுப்பை அவர்களும் ஏற்கிறார்கள், குழந்தையைக் கவனிக்கின்றனர். அப்படி தந்தை ஒருவர் குழந்தைக்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்கிறார் என்றால் அதைப் போற்றுதலுக்கு உரிய விஷயமாகப் பார்க்கின்றனர். அதே விஷயத்தை ஒரு தாய் செய்யும்போது குழந்தைக்கு அவர் செய்யாமல் யார் செய்வார்கள் என்று மிக இயல்பாகவும் எந்தவித மதிப்பீடு இல்லாமல் கணிக்கப்படுகிறது," என்கிறார். ரயில் முன் தள்ளி கொல்லப்பட்ட மாணவி: பெண்கள் மீது தொடரும் ஆணாதிக்க வன்முறை15 அக்டோபர் 2022 'நான் ஏன் என் இரண்டு மகள்களை கொன்றேன்?' - ஒரு தாயின் கண்ணீர் வாக்குமூலம்11 அக்டோபர் 2022 திருமண உறவில் ‘துரோகம்’ என எதைச் சொல்வது? அதற்கான வரையறைகள் என்ன?8 அக்டோபர் 2022 குழந்தை பிறப்பு என்பது பெண்ணின் மிகப்பெரிய கடமையாக கருதும் இந்த சமுதாயம், அந்தக் குழந்தையை வளர்ப்பதில் மட்டும் உரிமை கொண்டாடுவதாகக் கூறுகிறார் அருள்மொழி. "இதைப்பற்றி சமூகத்தில் எல்லா இடங்களிலும் பேச வேண்டும். இவை பற்றிய புரிதலை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். தற்போதைய சூழலில் நிறையப் பெண்கள் திருமணம் வேண்டாம் என்ற நிலைக்கு நகர்கின்றனர். அதற்கான காரணம் இந்த குழந்தை பெறுதல் பற்றிய பயமும், தன்னுடைய எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கனவுகள் எதையும் அடைய முடியாமல் போய்விடும் என்ற அச்சமும் தான். குழந்தை முக்கியமென்று இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குடும்பத்தினர், இந்த குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதால் உன்னுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யாமல் படிக்க வைத்தது தவறு, வேலைக்கு அனுப்பியது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முரண்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் திரும்பத் திரும்ப குடும்பம், சமூகம் மற்றும் ஆணாதிக்க பிடிமானத்துக்கு உள்ளாகும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இவ்வாறான தவறான முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பெண்களை குறை கூறுவது தவறானது. இந்த சமூகம் ஆணுக்காக அவர்களுடைய வம்சங்களை, வாரிசுகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பெண்களுடைய கடமை என்ற போக்கு மாற்றப்பட்டால் இந்த பிரச்னைகளுக்கு முடிவு வரும்," என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அ.அருள்மொழி. பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் மறு உற்பத்தி ஆற்றலாகப் பார்க்கிறார்கள் படக்குறிப்பு, பெண்ணிய எழுத்தாளர் வ.கீதா இந்த விவகாரம் தொடர்பாக பெண்ணிய எழுத்தாளர் வ.கீதா பிபிசி தமிழிடம் கூறுகையில், "பிள்ளை பெறும் ஆற்றல், உயிரை வாழ வைக்கும் ஆற்றல் பெண்களுக்கு எதிராக எப்படித் திருப்பப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமே அமைக்கப்பட்ட அந்த ஆற்றல் பெண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் எப்படி உருவாகிறது. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆதிக்க நிலையில் உள்ள ஆண்களால் பெண்கள் ஒடுக்கப்படுவதற்குக் காரணம் இந்தப் பிள்ளை பெறும் ஆற்றலின் மீது தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்து விரும்புகின்றனர். பெண்ணின் கருவுறும் ஆற்றலை ஒருவரது வம்சம் தழைக்கவும், சாதி இன விருத்தி செய்து பிள்ளையைப் பெற்றுத்தர ஒரு மறு உற்பத்தி ஆற்றலாக மட்டுமே பார்க்கின்றனர்," என்கிறார் அவர். "குழந்தை பெற்றுத் தரமுடியாமல் போனால் சமுதாயத்தில் தகுதியும் மதிப்பும் இருக்காது என்று கருதி, எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று தன்னைத்தானே வருத்திக் கொள்கிறாள். இப்படிப்பட்ட அழுத்தம் மற்றும் சுமையைச் சுமந்து கொண்டே வாழ்வதால் பல நேரங்களில் பிள்ளை பெற்றுத் தருவதை தலையாய கடமையாகப் பார்த்து இதில் உடன்பட்டுச் செல்கிறாள். பெண் அடிமைத்தனத்தின் மிக முக்கியமான கூறாக பார்ப்பது பெண்கள் கருவுரும் ஆற்றல் மீது ஆண்கள் சேர்க்கும் அதிகாரம். பெண்கள் அறியாமை காரணமாக, வேறு வழி இல்லாததின் காரணமாக, தனித்து வாழக்கூடிய பெண், திருமணமாகாத பெண், பிள்ளை பெற மறுக்கின்ற பெண்களுக்கு மதிப்பில்லாத காரணத்தினால் தான் இவை மாறாமல் இருக்கின்றன," என கீதா தெரிவிக்கிறார். மேற்கத்திய நாடுகளில் பெண்ணிய நோக்கில் வரலாறு எழுதும் எழுத்தாளர்கள் சொல்லுவது குறித்து கூறும் கீதா, புரட்சிகரமான மாற்றம் என்ன என்பதற்கு வரலாற்றில் பல புள்ளிகளைச் சொல்லமுடியும். அதில் மிக முக்கியமானது, கருத்தடை சாதனங்கள் பற்றிய அறிவும், அதனைப் பற்றிய அறிவியல்பூர்வமான பார்வை பெண்களிடம் வந்து சேர்ந்ததுதான்” என்கிறார். "ஏனென்றால் காதலுக்கும் திருமணத்திற்கும் உண்டான உறவை அவை உடைத்தது. காதலித்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு பிறகு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் வாழலாம் என்ற நிர்ப்பந்தம் மற்றும் பிள்ளைக்காகத் திருமணம் செய்து கொள்வதை அது உடைத்தெறிந்தது. இதனால் பெண்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய சூழலை இவை உருவாக்கிக் கொடுத்துள்ளது. தற்போதைய சூழலில் பேசப்படாத மிகப் பெரிய பிரச்னையாகச் சமுதாயத்தில் இருப்பது, எந்த அளவிற்கு பெண்கள் விஷயத்தில் குடும்பங்கள் செயலற்று இருக்கிறது என்பது தான்," எனத் தெரிவித்தார் வ.கீதா. https://www.bbc.com/tamil/articles/c808xq70vrro
  15. அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தினால் பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ் By RAJEEBAN 13 NOV, 2022 | 09:11 AM அதிகாரத்தில் உள்ளவர்களி;ன் அலட்சியம் காரணமாக காவல்துறையினரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இன்று ( 12-11- 22) இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் இலங்கை பொலிஸார் எவ்வளவு தூரம் தரம்தாழ்ந்துவிட்டனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. முதலாவது சம்பவம் கையில் பதாகைகளுடன் நடந்துகொண்டிருந்த பெண்களை பொலிஸார் துன்புறுத்தியது. இரண்டாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்பொஸிஸார் ஒருவரின் கழுத்தின் மீது கையை வைத்து அழுத்துவது. மூன்றாவதாக சிரேஸ்ட சட்டத்தரணியொருவர் என்னை அழைத்து தனது உதவியாளரை அடையாள அட்டை வைத்திருக்கவில்லை என தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்தார்.அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். பொலிஸாரை கையாளும் அதிகாரம் படைத்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவாகளின் தோல்வி மெத்தனப்போக்கினால் காவல்துறையின் ஈவிரக்கமற்ற தன்மைகள் தொடர்கின்றன அவமானம் https://www.virakesari.lk/article/139839
  16. வியட்நாமிலுள்ள 303 இலங்கையர்கள் குறித்து சர்வதேச சட்டங்களே தீர்மானிக்கும் : விரும்பினால் அழைத்துவருவோம் : வெளிவிவகார அமைச்சர் By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 09:55 AM (ஆர்.ராம்) வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். அதேநேரம் குறித்த இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் மீண்டும் நாடுதிரும்ப விரும்பாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் வியநட்நாம் குடிவரவு குடியகல்வு சட்டங்களும் சர்வதேச புலம்பெயர்தல் சட்டங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிங்கப்பூரில் இருந்து மீன்பிடிப் படகொன்றின் மூலம் சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு 303 இலங்கையர்கள் முயன்றிருந்த நிலையில் படகுக் கோளாறு காரணமாக தத்தளித்தவர்களை வியட்நாமிற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தம்மை நாட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தம்மை ஐ.நா.பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். http://island.lk/wp-content/uploads/2022/05/ali-sabry.jpg இவ்வாறான நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வீரகேசரியிடத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆபத்தான படகுப்பயணத்தில் பாதிக்கபட்டு வியட்நாமில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள் மற்றும் விமானச் சீட்டுக்களை வழங்கி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடுதிரும்ப மறுத்தால்? எனினும் நாட்டில் காணப்படுகின்ற பொருளதார நெருக்கடிகளை மையப்படுத்தியே படகு மூலம் கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சிகளை குறித்த நபர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதை மறுப்பார்காளாக இருந்தால் அதன் பின்னர் சதேசச் சட்டங்களும் வியநட்நாமின் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களும் தான் அவர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். குறிப்பாக ஐ.நா.வின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உள்ளிட்ட தரப்பினரே தீர்மானங்களை எடுக்கவுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/139843
  17. யோசித ராஜபக்ச விசாரணையில் By RAJEEBAN 13 NOV, 2022 | 11:18 AM யோசித ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து இலஞ்ச ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. முன்னாள்பிரதமரின் பிரதானியாக விளங்கிய யோசித ராஜபக்ச வெளிநாட்டு பயிற்சிக்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இலங்கை கடற்படையில் பணியாற்றியவேளை அவர் எவ்வாறு வெளிநாட்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. வெளிநாட்டு பயிற்சிக்கு கடற்படையினரை தெரிவு செய்பவர்களை இலஞ்ச ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணை செய்யவுள்ளது. எனினும் இந்த விசாரணைகள் குறித்து அதிகாரிகள் கனத்த மௌனம் காக்கின்றனர். யோசித ராஜபக்ச பிரிட்டிஸ் கடற்படையின் டார்ட்மவுத்தில் பயிற்சி பெற்றிருந்தார். https://www.virakesari.lk/article/139862
  18. நின்றுகொண்டே சாப்பிட்டால்... By DEVIKA 13 NOV, 2022 | 11:59 AM நின்றுகொண்டே சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும். அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசை­யின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்றுகொண்டே சாப்பி­டும்­போது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து இரத்­தம் மேல் நோக்கி செல்வ­தற்கு சிரமப்படும். இரத்தத்தை மேல்­நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்­டும் ஹோர்மோனான கார்டி­சாலின் அளவை அதிகப்படுத்தும். தொடர்ந்து நின்று கொண்டே சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளும்போது ஹோர்மோன்களில் மாற்றம் ஏற்படுவதோடு உணவின் சுவையை அறியக்கூடிய உறுப்புகளின் உணர் நரம்புகள் பாதிப்புக்­குள்ளாகும். நாளடைவில் உணவின் ருசியை அறியும் நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகி ருசித்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். சாப்பிடும்போது கால்களை மடக்கியவாறு தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சரியானது. இந்த ஆய்வுக்கு 350 பேர் உட்படுத்­தப்­பட்டனர். அவர்களில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டவர்களை விட நின்று கொண்டு சாப்பிட்டவர்களின் செயல்பாடுகளில் சீரற்றதன்மை ஏற்பட்டது கண்டறியப்பட்டது. https://www.virakesari.lk/article/139867
  19. pak vs eng t20: மெல்பர்னில் மீண்டும் நிகழுமா 1992 அதிசயம்? பட மூலாதாரம்,GETTY IMAGES 55 நிமிடங்களுக்கு முன்னர் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே மெர்பர்ன் மைதானத்தில் இதே போன்ற ஓர் இரவில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகச் சாம்பியன் ஆனது. அதே இரவை மீண்டும் எதிர்நோக்கி காத்திருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி எப்போதும் அதிசயத்தை நிகழ்த்தக்கூடியது என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்புகிறார்கள். ஜிம்பாப்வேயுடன் தோற்ற அந்த அணி பலமான தென்னாப்பிரிக்காவையும் நியூசிலாந்தையும் வீழ்த்தியதை சுட்டிக்காட்டுகிறார்கள். 1992-ஆம் ஆண்டு நடந்ததை போன்று மீண்டும் நடக்கும் என்ற விவாதம் குறித்துக் கேட்டபோது, “நடப்பது எல்லாம் அல்லாவால் நடக்கிறது. அல்லா எங்களுக்கு வாய்ப்பளிக்கிறார். ஆனால் முயற்சி எங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஆனால் முடிவு அல்லாவின் கையில். இறுதிப் போட்டியிலும் அல்லா எங்களை வெற்றி பெற வைப்பார்” என்று கூறினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம். உலகக் கோப்பை டி20 தொடரின் தொடக்கப் போட்டிகளில் பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணி தடுமாறியது. இந்தியாவுடனும் ஜிம்பாப்வே அணியுடனும் தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. கடைசி நாளில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியுடன் தோற்றுப் போனதால் அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது. பாகிஸ்தான் வெற்றிக்கு மேத்யூ ஹேடன் செய்தது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 அலெக்ஸ் ஹேல்ஸ்: ஊக்கமருந்து சோதனையில் தோற்றவர், இரு உலக கோப்பை வாய்ப்பிழந்தவர்10 நவம்பர் 2022 டி20: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்9 நவம்பர் 2022 ஆயினும் தொடக்கப் போட்டிகளில் தடுமாறிய அணி பலமான நியூசிலாந்து அணியை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தபோது, மிக எளிதாக அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. 1992-ஆம் ஆண்டு எங்கோ காணாமல் இருந்த அணி கடைசியில் கோப்பையை வென்றது போல இன்னொரு முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமிதம் அடைந்து வருகிறார்கள். பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் எப்படி? பாகிஸ்தானும் இங்கிலாந்தும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமையன்று மோத இருக்கின்றன. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. அரையிறுதிப் போட்டியில் எளிதாக வென்ற உற்சாகத்தில் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தயாராக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்றிருக்கிறது. பாகிஸ்தானின் பாபர் ஆஸம், ரிஸ்வான் இணையைப் போல, இங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் இணை சிறப்பான துவக்கத்தை அளிக்கத் தொடங்கியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாஹீன் ஷா அப்ரிடி என்றால் இங்கிலாந்துக்கு சாம் கரன். இரு தரப்புமே இப்போதைக்கு சமமான பலத்தைக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்றே நம்பலாம். எனினும் இங்கிலாந்து அணியின் மார்க் வுட், மலான் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES மெல்பர்ன் மைதானம் எப்படி? மெல்பர்னில் காலநிலை மோசமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முடிவு கிடைக்கும் வகையில் போட்டியை ஆடுவதற்கு நேரம் கிடைக்கலாம். இந்த மைதானத்தில் ஏற்கெனவே ஆடப்பட்ட போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது 160 ரன்களுக்கு அதிகமாக எடுத்தால் இரண்டாவது ஆடும் அணிக்கு அது சவாலானதாக இருக்கும். டி20 உலகக் கோப்பை தொடரில் மெல்போர்னில் திட்டமிடப்பட்ட 12 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டிருக்கின்றன. இந்த மைதானம் மட்டும்தான் இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றத்தை தந்திருக்கிறது. மெல்போர்னில் நடந்த ஒரு போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து, மற்றொரு போட்டி ரத்தானதால் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கும் இதேபோன்ற நிலைதான். இந்தியாவுடனான போட்டியில் தோல்வியடைந்தது இந்த மைதானத்தில்தான். 1992-இல் என்ன நடந்தது? 1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும். முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தது. அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான போட்டி. வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான். தோல்வி உறுதி என்ற நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் கிடைத்தன. இது இங்கிலாந்துக்கு ஏமாற்றமாகவும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் போனது. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்ததாக இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மற்றொரு தோல்வியைச் சந்தித்து. டெண்டுல்கர், அசாருதீன் ஆகியோரின் கணிசமான ரன் குவிப்பால் இந்திய அணி 216 ரன்களை எடுத்தது. ஆனால் 173 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்தது பாகிஸ்தான். முதல் 5 போட்டிகளில் ஜிம்பாப்வே அணியை மட்டும் பாகிஸ்தானால் வீழ்த்த முடிந்தது. அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது. கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூசிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை 166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூசிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது. பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிரட்டிய வாசிம் அக்ரம், கோப்பையைக் கைப்பற்றுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். பாகிஸ்தான் அணியின் இத்தகைய விஸ்வரூப மாற்றத்தைத்தான் அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். நியூசிலாந்துடனான போட்டியில் அதுவே நடந்திருக்கிறது. அதுவே இறுதிப் போட்டியிலும் நடக்கும் என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். https://www.bbc.com/tamil/articles/c72z47xezz7o
  20. அமெரிக்காவில் நடு வானில் மோதி, விழுந்து நொறுங்கிய விமானங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜ் ரைட் பதவி,பிபிசி நியூஸ் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இரண்டு விமானங்களும் தாழ்வான உயரத்தில் ஒன்றையொன்று மோதுவதையும், அதில் ஒரு விமானம் பாதியாக உடைவதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது. அவை தரையில் விழும்போது தீப்பிழம்பு ஏற்பட்டதையும் காண முடிகிறது. டல்லாஸ் அருகே நடைபெற்ற ஒரு நினைவு கூறல் நிகழ்வில் இரண்டு விமானங்களும் பங்கேற்றிருந்தன. அதில் ஒரு விமானம் போயிங் பி-17 ஃப்ளையிங் ஃபோர்டஸ் வகையைச் சேர்ந்தது. இரு விமானங்களிலும் எத்தனை பேர் இருந்தனர், அதில் இருந்த எவரேனும் உயிர் பிழைத்தார்களா என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. அமரிக்க முன்னாள் ராணுவ வீரர்களைக் கௌரவிப்பதற்காக இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறும். மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், 4,000 முதல் 6,000 மக்கள் இதை கண்டு ரசித்தார்கள். டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் இதை மோசமான துயரம் என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GIANCARLO@GIANKAIZEN படக்குறிப்பு, இரண்டாம் உலகப்போர் காலகட்ட விமானங்கள் மோதி விபத்து “காணொளிகள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. இன்று நம் குடும்பங்களை மகிழ்விக்கவும், கற்பிக்கவும் வானில் ஏறிய ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்த எரிக் ஜான்சன், தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார். சனிக்கிழமை விமான சாகச கண்காட்சியில் பல விமானங்கள் பங்கேற்க இருந்ததாக இந்த நிகழ்வின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான வான்வழிப் போரில் வெற்றி பெறுவதில் பி-17 விமானம் முக்கிய பங்கு வகித்தது. மற்றொரு விமானம், பி-63 கிங்கோப்ரா வகையைச் சேர்ந்தது. இந்தப் போர் விமானம் அதே போரில் சோவியத் ஒன்றியத்தின் விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c0k5rjdrnxzo
  21. இன்று விடுதலை ஆனவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் திருச்சி சிறப்பு முகாமிற்குக் கொண்டுசெல்லப்படுகின்றனர். திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படும் இவர்களை, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதில், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியர்களைத் திருமணம் செய்துள்ளனர். அந்த அடிப்படையில், அவர்கள் தங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கக்கோரலாம் எனத் தெரிகிறது.
  22. 6 பேர் விடுதலையில் மத்திய அரசு தீவிர எதிர்ப்பைக் காட்ட தவறிவிட்டது: நாராயணசாமி நாராயணசாமி | கோப்புப் படம் புதுச்சேரி: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையில் மத்திய அரசு தீவிரமாக தங்களுடைய எதிர்ப்பைக் காட்ட தவறிவிட்டது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமான வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தால் நளினி மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை விஞ்ஞான நாடாக மாற்றுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மிகச் சிறப்பான முறையில் ஆட்சி நடத்திய ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த நாடே அவருடைய இறப்புக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலமாக தண்டிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது மறுபடியும் ஆயுள் தண்டனையாக மாறியது. தமிழக அரசு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காத காரணத்தால் வழக்கு தொடரப்பட்டு பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற ஒரு நிலையில் அதை பார்க்காமல் அவரை விடுதலை செய்தார்கள். பழைய தீர்ப்பின் அடிப்படையில் மொத்தம் 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இது அனைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மிகப்பெரிய மன வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசினுடைய வழக்கறிஞர் கலந்து கொள்ளாமல் மத்திய அரசினுடைய நிலையை சொல்லாமல் இருப்பது நரேந்திர மோடியின் அரசின் செயலற்றத்தன்மையை காட்டுகின்றது. தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இந்த விடுதலையை கொண்டாடுகின்றனர். அது மேலும் வேதனையை நமக்கு உருவாக்குகிறது. ஓர் அரசியல் கட்சியினுடைய மாபெரும் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு முழுமையான நீதி வழங்கியும் அதை நீதிமன்றம் என்ற போர்வையில் தட்டி பறிப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. மத்திய நரேந்திர மோடி அரசு அந்த 6 பேர்களுடைய விடுதலை சம்பந்தமான மனுவில் தங்களுடைய தீவிரமான எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும். மத்திய அரசு தவறிவிட்டது. மற்ற அரசியல் கட்சியினுடைய தலைவர் படுகொலை செய்யப்பட்டால் அந்தக் கட்சியினர் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்களா? சில அரசியல் கட்சிகள் அடிக்கடி தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்கின்ற போக்கு பெரும் வேதனை தருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியினுடைய மிகப்பெரிய தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை முழுமையாக நாங்கள் எதிர்க்கின்றோம். குறிப்பாக, சில அரசியல் கட்சிகள் தலைவரை இழந்து வாடுகின்ற அந்தக் கட்சி தொண்டர்களுடைய உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தியினுடைய துணைவியார் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவர்களை மன்னித்து விட்டோம் என்று கூறியிருப்பதாக சிலர் பேசுகின்றார்கள். இது அந்த தலைவர்களுடைய பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால், ஒரு கட்சியின் தொண்டன் என்ற முறையிலே ராஜீவ் காந்தியினுடைய படுகொலையை கண்டித்து முழுமையான நீதி கிடைக்கின்ற வரை நாங்கள் போராடுவோம்’’ என்று அவர் கூறியுள்ளார். https://www.hindutamil.in/news/tamilnadu/895948-narayanasamy-on-rajiv-gandhi-s-killers-release-2.html
  23. T20 WC | பாகிஸ்தான் - இங்கிலாந்து இறுதியும், 10 விதமான ரசிக மனநிலைகளும் - ஓர் உளவியல் பார்வை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி இந்த டி20 உலகக் கோப்பையை அலங்கரிக்கும் ஓர் இறுதியாக இருக்கும் என்று இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருந்த நேரத்தில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்று ரசிகர்கள் பலரது இதயத்தை நொறுக்கிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டி 1992-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ரிபீட் ஆகியுள்ளது. இது பற்றிய கருத்துகள் வலம் வந்தபடி இருக்கின்றன. அப்போது இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதேபோல் இப்போதும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்லும் என்பது பாகிஸ்தான் ரசிகர்களின் நினைவு ஏக்க ஆசையாக இருந்து வருகிறது. இந்த ஆசையை பலவிதங்களில் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய மனநிலைகளில் ஒரு சில தரப்பு ஆறுதல் படுவது ‘நல்ல வேளை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்பதற்குப் பதிலாக இங்கிலாந்திடம் தோற்றதே நல்லது’ என்ற ட்ரெண்ட்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய ரசிகர்கள் பலவிதம்... ஒவ்வொருவரும் ஒரு விதம். இந்த இறுதிப் போட்டி குறித்த இந்திய ரசிகர்களின் பல்வேறு மனநிலைகளை வரிசைப்படுத்துவோம்: இந்தியாவோ இறுதிக்கு வரவில்லை, எனவே இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை டென்ஷன் இன்றி பார்க்கலாம். பாகிஸ்தான் நம் எதிரி நாடு, எனவே இறுதியில் அந்த அணி கோப்பையை வென்று விடக் கூடாது. இங்கிலாந்துதான் வெல்ல வேண்டும். இங்கிலாந்து நம்மை மிக மோசமாகத் தோற்கடித்து விட்டனர், ஆகவே, பாகிஸ்தான் வென்றாலும் வெல்லலாமே தவிர, இங்கிலாந்து ஒருபோதும் வெல்லவே கூடாது. பட்லருக்காகவாவது இங்கிலாந்துதான் வெல்ல வேண்டும். பாபர் அசாம் இப்போதுதான் கேப்டனாகியுள்ளார், கோலியினால் வெல்ல முடியாத ஐசிசி கோப்பையை பாபர் அசாம் தலைமையில் அதற்குள் பாகிஸ்தான் வெல்லக் கூடாது. இந்தியா, ஜிம்பாப்வேயிடம் தோற்ற பாகிஸ்தான் கோப்பையை வெல்ல தகுதிபெற்ற அணியல்ல. அயர்லாந்திடம் தோல்வியடைந்து இலங்கையிடம் தண்ணி குடித்து கடைசி ஓவர் வரை வந்து 140 ரன்கள் இலக்கை எடுத்து வென்ற இங்கிலாந்து கோப்பையை வெல்ல லாயக்கற்றது. ‘என் தலைவன் கோலி’ ஆடாத இறுதிப் போட்டியில் யார் வென்றால் என்ன? தோனி போனவுடனேயே கிரிக்கெட் போயிடுச்சு சார்! யார் ஜெயிச்சா என்ன? தோற்றால் என்ன? கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பாருங்க ப்ரோ! அமெரிக்கக் கவி வாலஸ் ஸ்டீவன்ஸ் Thirteen Ways of Looking at a Blackbird என்ற கவிதையை எழுதினார். அந்த பிளாக் பேர்டு போல் இங்கிலாந்து - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை ஒரு பொருளாகக் கண்டால் 10 விதங்களில், 10 கோணங்களில் இந்திய ரசிகர்கள் அதைக் காண்கின்றனர் என்று கூற முடியும். (விடுபட்ட கோணங்களை கருத்துப் பகுதியில் பகிரலாம்) இவையெல்லாம் பல்வேறு மனநிலைகள். மனநிலைகளின் பன்மை என்று கூறலாம். ஆனால், இவையெல்லாமே ஏதோ ஒருவிதத்தில் ஒருதலைப் பட்சமான பார்வையே. ‘கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பாருங்க ப்ரோ’ ரக மனநிலை கொண்டவர்கள் மத்தியிலும் கூட இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத ஒரு வெறுப்பு மனநிலையில் இத்தகைய நிலைப்பாடு கொண்டவர்கள் இருப்பார்கள். இவையெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் இந்தியா - பாகிஸ்தான் அரசியல் பதற்றம் சார்ந்த பார்வைகளில் மையம் கொண்டதாகவே இருக்கலாம். இந்த மனநிலைகளுக்கு மாற்றாக அழகியல் பார்வையை வலியுறுத்தலாம். அதாவது, பாபர் அசாமின் அந்த கவர் ட்ரைவ், ஆன் ட்ரைவ், மிட்விக்கெட் ட்ரைவ், கட்ஷாட்களின் அழகை ரசிப்பது. ரிஸ்வானின் புல்ஷாட் அழகை ரசிப்பது. அல்லது இப்திகாரின் மிடில் ஓவர் ஆட்டத்திறனையும் அவரது சிக்சர்களையும் இடைவெளியில் அடிக்கும் திறமையையும் விதந்தோதி கிரிக்கெட் நுணுக்கங்களுடன் ரசிப்பது. அல்லது பட்லர், ஹேல்ஸின் அட்டகாசமான ஷாட் செலக்‌ஷனை ரசிப்பது, ஆதில் ரஷீத் அன்று திட்டம் தீட்டி சூரியகுமார் யாதவை வீழ்த்தியது போல் பாகிஸ்தானின் முக்கியமான வீரர்களை எப்படி வீழ்த்துகிறார் என்பது போன்ற நுணுக்கங்களைப் பாராட்டுவது. வெற்றி - தோல்விகளுக்கு அப்பால், கிரிக்கெட்டின் நுட்பங்களையும் அந்த ஆட்டத்திற்குரிய அழகியல்களை ரசிப்பது என்பது நடுநிலையான பார்வை. வெறுப்பரசியலால் தூண்டப்பட்ட கிரிக்கெட் வெறி மனோபாவத்தை விட கிரிக்கெட் ரசனையை மேம்படுத்துமாறு போட்டியை ரசிப்பது என்பது உடல்/மன ஆரோக்கியத்திற்கு நல்லது. பார்ப்பவர்களின் தன்னுணர்வுடன் கூடிய எதார்த்த உலகிற்கும் தொலைக்காட்சியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி எனும் புனைவுலகத்திற்கும் இடையே ஒரு தொலைவை கடைப்பிடிப்பது, தூரத்தைக் கடைப்பிடிப்பது aesthetic distance என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இப்போதெல்லாம் ஒரு போட்டிக்கு முன்பாக, குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போன்ற போட்டிகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் போட்டி குறித்த விளம்பரங்கள், டிஜிட்டல், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த அழகியல் தொலைவு என்பதை அனுமதிக்காது ரசிகர்களை உணர்வுபூர்வமாக போட்டியைப் பார்க்க தூண்டுகிறது. இந்த நெரிசலான ஓர் ஊடக இடையீடுகள் ஏற்படுத்தும் ஓர் உணர்ச்சிகரமான கொதிநிலை மனோபாவங்களிலிருந்து விடுபட அழகியல் தொலைவுபடுத்திக் கொள்ளுதல் என்ற கோட்பாடு பெரிதும் உதவும். ஜெர்மானிய தத்துவ ஞானியான இம்மானுயேல் காண்ட் என்பார் தன்னுடைய Critique of Judgement என்ற நூலில் தன்னலமற்ற, சுயத்தின் தன்மைகள் அற்ற ஒரு மகிழ்ச்சி நிலை பற்றி கூறுகிறார். இதில் ஒரு குறிப்பிட்ட பொருள் மீதான ஆசை அல்லது பற்றுதல் கூடாது, நம் சூழலில் கிரிக்கெட் போட்டி குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட போட்டிகள் என்று வைத்துக் கொள்வோம். இதனை ஒரு பொருள் அல்லது பண்டமாகவே ஒளிபரப்பு ஊடகங்கள் மாற்றி வைத்துள்ளன. எனவே, பண்டமாக்கப்பட்ட பொருள் மீதான ஆசையைத் துறந்து, அந்தக் குறிப்பிட்ட பொருளின் அல்லது ஆட்டத்தின் அல்லது படைப்பின் உள்ளார்ந்த அழகு உள்ளிட்ட குணாம்சங்களைக் கண்டு மகிழ்தல், ரசித்தல் என்பதுதான் இம்மானுயேல் காண்ட் கூறுவது. அதாவது, நம் சுயத்தின் உருவாக்கப்பட்ட கோரிக்கைகள், அந்த ஆட்டத்தைப் பற்றிய நம் மனப்போக்குகள், திணிகக்ப்பட்ட எண்ணங்களை தற்காலிகமாகவேனும் ஒத்தி வைத்துவிட்டு ஆட்டத்தின் உள்ளார்ந்த அழகில் கவனம் செலுத்தி ரசித்து மகிழ்வது என்பது நல்ல ஆரோக்கியமான, அழகியல் மனநிலைக்கு உதாரணம். இத்தகைய அழகியல் பார்வை குறுகிய எண்ணங்களிலிருந்து நம்மை விடுவித்து மேன்மைப்படுத்தும் ஒரு வழிமுறை என்றே உளவியல்கள் கூறுகின்றன. கிரிக்கெட்டை மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பையுமே நாம் இப்படிப்பட்ட பார்வைக்குட்படுத்திக் கொண்டு விட்டால் அது நம் சுயத்தை ஏற்கெனவே இருக்கும் தளைகளிலிருந்து விடுவித்து வேறு சுயத்தை வடிவமைத்துக் கொள்ளச் செய்யும். https://www.hindutamil.in/news/sports/895943-pakistan-and-england-t20-world-cup-final-held-tomorrow-here-fans-mindset-4.html
  24. புகையிலை, மதுசார நிறுவனத்தின் பெயரை விளையாட்டு, கல்வி தொடர்பான நிகழ்வுகளில் பயன்படுத்த முடியாது : மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் By DIGITAL DESK 5 12 NOV, 2022 | 01:24 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் சட்டத்தின்படி புகையிலை நிறுவனமொன்றின் அல்லது மதுசார நிறுவனமொன்றின் பெயரை விளையாட்டு, கல்வி சம்பந்தப்பட்ட பொது நிகழ்வுகளில் அமைச்சரொருவர் நன்றி தெரிவிக்க முடியாது என்பதுடன் அந்த நிறுவனங்களிடமிருந்து அனுசரணையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதென மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் புபுது சமரசேகர தெரிவித்தார். எனினும், நிகழ்வொன்றின்போது துறைசார் அமைச்சர் குறித்தவொரு பியர் நிறுவனத்தின் பெயரை கூறி, அந்நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்திருந்தாக புபுது சமரசேகர சுட்டிக்காட்டினார். இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், "இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சிகரட் மற்றும் மதுபானம் ஆகியவற்றில் அவர்களின் அதிகம் நாட்டம் காணப்படவில்லை எனவும், நகரங்களில், தெருக்களில் வீதி வரை படங்களுக்கான தேவை , போக்குவரத்து வசதி போன்றவையே அவர்களின் அதிகபடியான தேவையா உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என அது சம்பந்தப்பட்டவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், சிகரெட்டுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிகரெட் மீதான வரி கொள்கை மாற்றப்பட வேண்டும். எமது நாட்டில் கிடைக்கும் வருமானத்தை வேறு நாடுகள் சுரண்டிச் செல்வதற்கு இடமளிக்க கூடாது" என்றார். அதிபடியான வரி ஈட்டிக்கொள்வதால் நாட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுப்பதற்று ஏனைய நாடுகளிடம் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/139803
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.