Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22988
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. INDIA 168/6 ENG (16/20 ov, T:169) 170/0 England won by 10 wickets (with 24 balls remaining) எனக்கும் சுவியண்ணைக்கும் புள்ளி கிடைக்கப்போகுது.
  2. யுத்த காலத்தில் தற்போதைய புலனாய்வுப் பிரிவினர் இருந்திருந்தால் பிரபாகரனால் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்போம் - பொன்சேகா By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 03:11 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம் ) நாட்டின் புலனாய்வு பிரிவினர் தொடர்பில் அதிருப்தி நிலை காணப்படுகிறது. இவர்கள் யுத்த காலத்தில் இருந்திருந்தால் பிரபாகரனால் நாங்கள் இன்று தடுத்து வைக்கப்பட்டிருப்போம். ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை நிறைவு பெறும் வரை இலங்கைக்கு எவரும் ஒரு டொலர் கூட அனுப்ப கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. 30 மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். எனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து, அனைத்து செயற்பாடுகளையும் அப்போதைய அரச தலைவரே முன்னெடுத்தார். விலைமனுகோரலுடன் தொடர்புப்படவில்லை, ஆனால் விலைமனுகோரல் சபையில் உறுப்பினராக இருந்த காரணத்தினால் 30 மாத காலம் சிறைக்கு சென்றேன். இவ்வாறு தண்டிக்க வேண்டுமாயின் பல அரசியல்வாதிகள் தற்போது சிறையில் இருக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கபோவதில்லை. துறைகளில் காணப்படும் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்ததால் மாத்திரமே ஆணைக்குழுக்களினால் நாட்டு மக்கள் பயன்பெற முடியும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவை பார்ப்பதற்கு சென்றேன். தங்காலைக்கு சென்ற போது கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அழைத்து சென்றுள்ளதாக குறிப்பிட்டார்கள். வசந்த முதலிகேவை கொழும்புக்கு அழைத்து சென்றமை தொடர்பில் எவரும் அறியவில்லை. நாட்டில் பயங்கரவாதம் உள்ளதா, வசந்த முதலிகே பயங்கரவாதியா என கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரியிடம் வினவிய போது, பயங்கரவாதம் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டார். இவ்வாறான நிலை காணப்படுமாயின் புலனாய்வு பிரிவு எதற்கு. தற்போதைய புலனாய்வு பிரிவினர் நல்ல வேளை யுத்த காலத்தில் இருக்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் நாங்கள் பிரபாகரனின் தடுப்பு காவலில் இருந்திருப்போம். வசந்த முதலிகே,உட்பட மத குருவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். இவ்விருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைiயை அரசாங்கம் நிறுத்தும் வரை அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். மனித உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளித்தால் ஒத்துழைப்பு வழங்க தயார். ஜனநாயகத்திற்கு அமைய அரசாங்கம் செயற்படும் வரை ஒரு டொலர் கூட சர்வதேசத்தில் வாழ்பவர்கள் இலங்கைக்கு அனுப்ப கூடாது என்பதையும் வலியுறுத்துகிறேன். போராட்டம் நடத்த வேண்டாம், நாடு பாதிக்கப்படும் என குறிப்பிடும் தொழிற்துறை தரப்பினர்கள் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கத்துடன் ஒன்றிணை வேண்டிய தேவை எனக்கு கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/139642
  3. யுக்ரைன் யுத்தத்தில் 240,000 பேர் பலி: அமெரிக்கா கணிப்பு By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 03:53 PM யுக்ரைன் யுத்தத்தில் இதுவரை சுமார் 2 லட்சம் படையினரும் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் என அமெரிகக்h கணிப்பிட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் ரஷ்ய படையினரும், ஒரு லட்சம் யுக்ரைனிய படையினரும் யுக்ரைனில் பலியாகியிருக்கலாம் என அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் மார்க் மிலி கூறியுள்ளார். அத்துடன், மோதல்களில் சிக்கி சுமார் 40,000 பொதுமக்களும் பலியாகியிருக்கலாம் எனவும் அவர் கூறிழயுள்ளார். அதேவேளை, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்கு மீள செல்வதற்காக யுக்ரைன் விடுத்துள்ள சமிக்ஞைகள், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார். யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என அண்மைய நாட்களில் கூறி வருகிறார். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து விளாடிமிர் புட்டின் நீக்கப்பட வேண்டுமென ஸெலேன்ஸ்கி கூறிவந்தார். ஆனால், அந்த நிபந்தனையை தற்போது அவர் கைவிட்டுள்ளார். யுக்ரைனில் தனது 5937 படையினர் இறந்ததாக ரஷ்யா இறுதியாக கடந்த செப்டெம்பரில் தெரிவித்திருந்தது. தனது 9000 படையினர் இறந்ததாக யுக்ரைன் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/139650
  4. 204 கோடி டொலர் (75,195 கோடி ரூபா) ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது! By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 03:30 PM அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில், 204 கோடி டொலர்கள் (சுமார் 75,195 கோடி இலங்கை ரூபா, சுமார் கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியுடைய ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டுள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் வெல்லப்பட்ட மிகக் கூடுதலான ஜக்பொட் பரிசு இதுவாகும். பவர்போல் எனும் லொத்தர் சீட்டிழுப்பிலேயே இப்பாரிய பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. தனி ஒரு சீட்டுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 160 கோடி டொலர்களாக அதிகரித்து சாதனை படைத்தது. ஆனால் அன்றைய தினமும் இப்பரிசு வெல்லப்படவில்லை. அதையடுத்து கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை சீட்ழுடிப்புக்கான ஜக்பொட் பரிசுத் தொகை 2.04 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத் இச்சீட்‍டிழுப்பு திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்தது. ஆனால், அதிக ‍‍டிக்கெட் விற்பனை காரணமாக தரவுகளை பரிசீலிப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது, இச்சீட்டிழுப்பில், கலிபோர்னியா மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்ட தனியான ஒரு லொத்தர் சீட்டுக்கு இப்பரிசு கிடைத்துள்ளதாக பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். வெற்றியாளர் ஒரே தடவையில் சுமார் 140 கோடி டொலர்களை பெற முடியும். அல்லது மொத்தத் தொகையான 204 கோடி டொலர்களை 30 வருடங்களில் தவணை முறையில் பெற முடியும். இந்த ஜக்பொட் பரிசை வென்றவரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. லொத்தர் சீட்டு விற்பனை செய்தவருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர் இதேவேளை. பரிசுக்குரிய லொத்தர் சீட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 கோடி இலங்கை ரூபா, 8 கோடி இந்திய ரூபா) போனஸாக பவர்போல் லொத்தர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. ஜோசப் சஹாயாத் என்பவரே இவ்வாறு 10 லட்சம் டொலர் போனஸ் தொகையை பெற்றுள்ளார். இவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்வதை தான் விரும்புவதாக கூறும் ஜோசப் சஹாயெத், இவ்வளவு பெருந்தொகை பரிசு தனக்கு கிடைத்த போதிலும் வேலைசெய்வதை நிறுத்த மாட்டேன். வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு கடையில் பணியாற்றச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார். ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத் (மத்தியில்) கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியின் பின் பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டமை இதுவே முதல் தடiவாயகும். 2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வெள்வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும். https://www.virakesari.lk/article/139643
  5. INDIA 168/6 ENG (13/20 ov, T:169) 140/0 England need 29 runs in 42 balls. Current RR: 10.76 • Required RR: 4.14 • Last 5 ov (RR): 56/0 (11.20) Win Probability:ENG 99.73% • INDIA 0.27%
  6. ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டு செய்தியாளர் 10 நவம்பர் 2022, 06:18 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. சேத்தன் சர்மா, அஜித் அகர்கர் முதல் இர்பான் பதான், புவனேஷ்வர் குமார் வரை பலர் இந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் - உதாரணமாக, அகர்கர், லார்ட்ஸில் சதம் அடித்தார், பின்னர் அடிலெய்டில் ஒரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்லத் துனை செய்தார். ஆனால் அவர்கள் பந்துவீச்சிற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களில் யாரும் பேட்டிங்கில் மட்டும் தடம் பதிக்கத் தவறிவந்தனர். கபில் ஒரு இயல்பாகவே பந்து வீச்சைப் போல, பேட்டிங்கிலும் எதிரணியினருக்கு அச்சத்தை ஊட்டினார். அவர் தனக்கே உரித்தான தனி பாணியில் மிக நேர்த்தியாகத் தனது சாதனைகளைப் புரிந்து வந்தார். அதனால் அவர், தனித்துவம் வாய்ந்தவராக இருந்தார். 16 ஆண்டுகால வாழ்க்கையில், காயம் காரணமாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூடத் தவறவிட்டதில்லை. டி20: பாகிஸ்தான் வெற்றிக்கு பாபர் ஆஸம் சொன்ன 6 ஓவர் ரகசியம்9 நவம்பர் 2022 டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் நுழைய இந்தியா என்ன செய்ய வேண்டும்?9 நவம்பர் 2022 'அஷ்வின் மீது நம்பிக்கை இல்லை' - கபில்தேவ் கூறியதற்கு என்ன காரணம்?8 நவம்பர் 2022 கபிலின் இடத்தை நிரப்ப, தேர்வான ஹார்திக் பாண்ட்யா - இலங்கையின் காலேயில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததுடன் அதே தொடரில் ஒரு சதமும் (ஏழு சிக்ஸர்களுடன்) அடித்தார். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடந்த அடுத்த டெஸ்டில், அவர் 93 ரன்கள் எடுத்தார். நாட்டிங்ஹாம் டெஸ்டில் 28 ரன்கள் கொடுத்து, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தானும் ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்தபோது, உண்மையிலேயே அவர் கபிலின் இடத்தை நிரப்பினார். கடந்த ஓராண்டில், 29 வயதான பாண்டியா, டி20 கிரிக்கெட்டில், சுமார் 150 ரன்கள் என்ற சராசரியுடன் இந்தியாவின் தேர்ந்த ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். மேலும் இறுக்கமான சூழ்நிலைகளில் மகேந்திர சிங் தோனி போன்றே, அமைதியை வெளிப்படுத்தினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அவரது 113 ரன் பார்ட்னர்ஷிப், உலக டி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடிப்பதற்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இது டி-20 ஆட்டங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நவம்பரின் பிற்பகுதியில் அவர் இந்திய அணி, டி-20 தொடரில் விளையாட நியூசிலாந்திற்கு ஹார்திக் பாண்ட்யா தலைமையில் செல்கிறது. அவரது திறமைகள் மற்றும் உடல் நிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு ஆட்ட வகை இது. பாண்ட்யா, 140 கிலோ மீட்டர் (87 mph) என்ற வேகத்தில் நான்கு ஓவர்கள் பந்து வீசுவது, அது வரை இந்தியாவிற்கு இல்லாத ஒரு ஸ்திரத் தன்மையைக் கொடுத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த ஆசியக் கோப்பையில், பந்துவீசும்போது, முதுகு பிடித்துக்கொண்டதால், வெளியேறிய பாண்ட்யா, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்றே பலர் நினைத்தனர். இந்தியா இந்தக் குறுகிய கிரிக்கெட் வடிவத்திற்கு ஒரு ஃபினிஷரை வளர்த்தெடுத்துள்ளது. இப்போது மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை உற்று நோக்கி வருகிறது. அதே போல பாண்ட்யாவும், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் பந்துவீசவே இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பாண்ட்யா காயமடைந்தது குறித்து, முன்னாள் தேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "இது தீவிரமானது என்று எங்களுக்குத் தெரியும். மருத்துவ அறையில் அவரால் நகரக் கூட முடியவில்லை, அவர் தனது தலையை மட்டுமே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைத்து வந்தார். அவர் மிகவும் அதிக வலியால் துன்பப்பட்டார். அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப மிகவும் உறுதி வேண்டும்" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார். இந்த ஆண்டு ஆகஸ்டில், பாண்டியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பையில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஒரு சிக்சருடன் இந்தியாவிற்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் காயமடைந்து வெளியேறிய அதே மைதானத்தில், அதே அணிக்கு எதிராக, அதே போட்டியில் பாண்ட்யா இதைச் சாதித்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடியுள்ள, இடது கைச் சுழற்பந்து வீச்சாளரான இவரது மூத்த சகோதரர் க்ருனால் பாண்ட்யாவுடன் இணைத்துப் பாண்ட்யா சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இந்த இணை, சிறந்த கிரிக்கெட் வசதிகள் வேண்டி, இளம் வயதிலேயே சூரத்தில் இருந்து குஜராத் மாநிலத்தின் பரோடாவுக்கு இடம் பெயர்ந்தனர். இது அவர்களின் தந்தை எடுத்த முன்னெடுப்பு. இது குறித்து இந்த வறிய குடும்பத்தின் புதல்வர்கள் எப்போதும் நன்றியுடன் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் கிரண் மோரேவின் அகாடமியில் இச்சகோதரர்கள் பயிற்சி பெற்றனர். 2015 ஆம் ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஜான் ரைட், ஹார்திக் பாண்ட்யாவைத் தேர்வு செய்தார். அவரது ஆரம்ப விலை $16,000 (£13,841). மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் $1.7 மில்லியனுக்குத் தக்கவைக்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் ஐபிஎல் அறிமுக ஆட்டக்காரர்களான குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் தலைமை வகித்த அனுபவம் இவரது திறமையைப் பறைசாற்றியதால், இப்போது தேசிய அணிக்குத் தலைமை வகிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். சூழ்நிலைகள் பாண்ட்யாவை இந்த நவீனகால கிரிக்கெட் வீரராக - T20 ஸ்பெஷலிஸ்ட் ஆக நிர்ப்பந்திக்கலாம். சிவப்பு பந்து கிரிக்கெட்டின் போக்கும் அதற்குத் தேவையான உடல் வலிமையும் இதிலிருந்து மாறுபட்டது. அவர் அறிமுகமானதிலிருந்து இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டிகளில் ஆறில் ஒரு பங்கு ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளார். ஆனால் டி20 சர்வதேச போட்டிகளில் கிட்டத்தட்ட 60% ஆடியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மெலிந்த உடல் வாகு கொண்ட இவர், பந்தை அடிக்கும் வேகம் வியப்புக்குரியது. அதே போல், பந்து வீசும் வேகமும் பேட்ஸ்மேனை வியக்கச் செய்யும். ஒரு ஃபீல்டராகவும் அவர் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தியா அவரை ஒரு வகை கிரிக்கெட்டிற்கு மட்டுமே பொருத்திப் பார்ப்பது பரிதாபகரமானது. அவர் ஆட்டத்திற்கு ஒரு தனி விறுவிறுப்பைக் கொண்டு வந்து, அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்கிறார். தன்னை இரண்டாவது கபில்தேவாக மட்டுமல்ல, முதல் ஹார்திக் பாண்ட்யாவாகவும் உருவாக்கிக்கொண்டுள்ளார். அது மிகச் சிறந்த விஷயம். https://www.bbc.com/tamil/articles/cml4dl7jjnpo
  7. தனுஷ்க விடுதலையானதும் மீண்டும் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் - எஸ்.பி.திஸாநாயக்க By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:27 AM (எம்.மனோசித்ரா) பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்பிட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக விரைவில் விடுதலையாவார். அவர் விடுதலையானதன் பின்னர் மீண்டும் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தினார். பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் , தனுஷ்க குணதிலக தொடர்பில் கேட்கப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது களியாட்ட விடுதிகள் உள்ளிட்டவற்றுக்குச் செல்வது சாதாரணமானதொரு விடயமாகும். அவுஸ்திரேலியாவில் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்களைப் போன்று , திட்டமிட்டு இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். அவர்கள் இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர். எனவே குறித்த கிரிக்கட் வீரர் மீது மாத்திரம் முழுமையாக குற்றஞ்சாட்டி விட முடியாது. வழக்கு விசாரணைகளின் நிலைமைகளை அவதானிக்கும் போது அவர் விரைவில் விடுதலையாவார் என்பது நிச்சயமாகும். அவ்வாறு அவர் விடுதலையானதன் பின்னர் இலங்கை கிரிக்கட் அணியில் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/139590
  8. INDIA 168/6 ENG (9/20 ov, T:169) 91/0 England need 78 runs in 66 balls. பாகிஸ்தான் இந்தியா இறுதிப் போட்டி நடக்காது போல?!
  9. ஜப்பானிலிருந்து சொகுசு ஜீப் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி : ஒருவர் கைது! By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:34 AM ஜப்பானிலிருந்து பிராடோ ரக ஜீப் ஒன்றை இறக்குமதி செய்வதாகக் கூறி 80 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (09) உத்தரவிட்டுள்ளார். நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது சேவை பெறுநர் வேறொருவருக்கு இந்தப் பணத்தை வழங்கியதாகவும், அவர் பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றங்களுக்காக கைதாகி பிணையில் இருப்பதாகவும் தெரிவித்தார். குறித்த நபருக்கு பணம் வழங்கியதற்கான ஆவணத்தை முன்வைக்க முடியுமா என சந்தேகநபரிடம் நீதிவான் வினவியதோடு, சந்தேகநபர் அதனை முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/139599
  10. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியமைக்கான காரணத்தை விளக்கினார் சரத் வீரசேகர By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:14 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) வெளிநாட்டு மற்றும் பொருளாதார கொள்கைகளை முறையாக பின்பற்ற தவறியதாலே கோத்தாபய ராஜபக்ஷ்வினால் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன் ரஷ்யாவிடம் இருந்த இரண்டு வருட கடன் திட்டத்தில் எரிபொருள்கொள்வனவு செய்திருந்தால் போராட்டங்கள் இடம்பெற்றிருக்காது என சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தோம். இதனாலேயே இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும் தற்போது அந்த நிலைமை குறைவடைந்து இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. நாட்டை கொண்டு செல்வதற்கு அந்நியசெலாவணி அவசியமாகும் . கடந்த காலங்களில் கொவிட் தொற்று நிலைமையால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. எனினும் இந்த நிலைமை மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை. அத்துடன் எரிபொருள் நெருக்கடியின் போது ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியிலும் இந்தியா எரிபொருளை கொள்வனவு செய்தது. அவர்களால் முடியுமென்றால் எமது வெளிநாட்டு கொள்கை நடுநிலையென்றால் ஏன் எங்களால் முடியாது என்று நான் அமைச்சரவையில் கேட்டிருந்தேன். அப்போது அமெரிக்காவுக்கு அடிபணிவதால் அதனை செய்யவில்லை. ரஷ்யாவிடம் இருந்த இரண்டு வருட கடன் திட்டத்தில் எரிபொருள் கொள்வனவு செய்திருந்தால் நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்றிருக்காது. http://island.lk/wp-content/uploads/2021/09/gotabaya.jpg ஆனால் நாங்கள் செய்ய வேண்டியதை செய்யாது ரஷ்யா,சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை பகைத்துக்கொள்ள நேரிட்டது. இதனாலேயே கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு நாட்டை விட்டு வெளியில் போக வேண்டி ஏற்பட்டது. அவரால் பொருளாதார கொள்கை முறையாக பேணப்படாமையே இதற்கு காரணமாகும். வெளிநாட்டு கொள்கையின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றவில்லை. பொருளாதார கொள்கையின் அடிப்படைகளுக்கு முரணான வகையிலேயே செயற்பட்டனர். இறுதியில் இந்தியாவும் அமெரிக்காவும் அவரை கைவிடும் நிலைமை ஏற்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/139585
  11. இலவச மருத்துவம், இலவச கல்விச் சேவையில் கட்டணம் அறவிடுமாறு நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியான செய்தி அடிப்படையற்றது - செஹான் சேமசிங்க By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:13 AM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளாவிட்டால் சமூக கட்டமைப்பு மிக மோசமான விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும்,அதனை எவராலும் தடுக்க முடியாது. இலவச மருத்துவம், இலவச கல்வி சேவையில் கட்டணம் அறவிடுமாறு நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். இலவச கல்வி.மருத்துவ சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 09) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி கட்டளைச் சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெறுகிறது. எதனையும் மறைக்கவில்லை,மறைக்கவும் முடியாது.சகல விடயங்களும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெற வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவின் அனுமதி கிடைத்தவுடன் நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்போம்.உணர்வு பூர்வமான விடயங்களை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது. பல்வேறு காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை.பொருளாதார மீட்சிக்காக நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. வரி அதிகரிப்பினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வரி அதிகரிப்பு குறுகிய காலத்தை அடிப்படையாகக் கொண்டது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தோல்வியடிடைந்தால் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் காணப்பட்ட மிக மோசமான நிலைமையை போன்ற தன்மை பன்மடங்கு அதிகரிக்கும், இதனை எவராலும் தடுக்க முடியாது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை அவசர தேவையாக பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பிலான விடயங்கள் திரிபுப்படுத்தப்பட்டுள்ளன. ஒருசில ஊடகங்கள் அரசியல் நோக்கத்திற்காக உண்மை விடயங்களை திரிபுப்படுத்தி பிரபல்யமடைகின்றன.அரசாங்கம் என்ற ரீதியில் பிரபல்யமடையும் நிலையில் நாடு தற்போது இல்லை. வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளில் மருந்து விநியோகத்திற்கு கட்டணம் அறவிடுமாறும்,அரச பல்கலைக்கழகங்களில் கட்டணம் அறவிடுமாறும் சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றதாகும்.இலவச மருத்து சேவை, இலவச கல்வி சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தல், பொருளாதாரத்தை முன்னெடுத்தல் மற்றும்,பொருளாதாரத்தை வளர்ச்சிப் பெற செய்தல் உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தலுபக்கான ஆரம்பக் கட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த செப்டெம்பர் மாதத்தை காட்டிலும் ஒக்டோபர் மாதம் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் காலப்பகுதியில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/139584
  12. வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எஸ்.சிறீதரன் By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:11 AM (இராஜதுரை ஹஷான்) வியட்நாம் கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழ் புலம்பெயலாளர்கள் தொடர்பில் ஐ நா அகதிகளுக்கான நிறுவனம் மனிதாபிமான கண்ணோட்டத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) சில வரி திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போதே சிறீதரன் எம்.பி இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 303 தமிழ் புலம்பெயலாளர்களுடன் சென்ற கப்பலொன்று கடலில் இன்று வியாட்நாமிய கடற்படையினரால் மீட்கப்பட்டு நாடொன்றின் எல்லைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குழந்தைகள் உள்ளிட்ட 303 பேர் மனித பேரவலத்தில் சிக்கியுள்ளனர். ஆசியாவின் எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு நிரந்தரமான வாழ்வை வாழ முடியாதுஇ தங்களின் சொத்துக்களை விற்று சென்றுள்ளனர். இந்த மனித பேரவலத்திற்கு மத்தியில் அவர்கள் தங்களை நாடொன்றில் வசிக்க தஞ்சம் கோருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் இந்த விடயத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அனுக வேண்டும். ஏன் இவர்கள் இங்கிருந்து இடம்பெயர காரணமென்ன? ஏன் இங்கு வாழலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாது போனமைக்கான காரணம் என்ன? அவர்கள் நம்பக்கூடிய அரசியல் தீர்வை வழங்காமையினாலேயே உயிரை பணயம் வைத்து ஆபாத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கனடா நோக்கி சென்றதாகவே கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன் பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலையிலும் ஏன் இவர்கள் இப்படி போக வேண்டும். இங்குள்ள நிலைமைகளே காரணமாகும். இங்குள்ள அடிப்படை பிரச்சினையாக 40 வருடங்களுக்கு மேலாக இங்கு இனப்பிரச்சினை உள்ளது. இதன்போது யுத்த தளவாடங்களுக்காக அரசாங்கம் கடன் வாங்கியது. இலங்கை இப்போது கடனில் சிவப்பு எல்லைக்குள் போயுள்ளது. இதற்கு யுத்தமும் காரணமாக அமைந்துள்ளது. இப்போது நாட்டின் தலைவர்கள் சிந்தித்தால் தமிழ் தேசிய இனத்தின் அடிப்படையை புரிந்துகொண்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் போது புலம்பெயர்ந்தவர்களின் பணம் மற்றும் சர்வதேசத்தின் கவனம் மூலம் இந்த நாட்டுக்கு மாற்றங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். இவ்வாறான சிந்தனை இல்லாமையே இதுபோன்ற நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்றன என்றார். https://www.virakesari.lk/article/139582
  13. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு: காங்கிரஸிற்குள் முரண்பாடு ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 நவம்பர் 2022 படக்குறிப்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அதனை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன்? பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதனை வரவேற்றிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது. இந்தப் பயணத்தில் காங்கிரஸ் ஒரு முக்கியப் பங்கை வகித்திருக்கிறது" என்று குறிப்பிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்களிடமிருந்து வந்த எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பதிவிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இந்தத் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பதிவிட்டார். "உச்சநீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இடஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சம வாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது" என்றார் அவர். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 ''EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்" - தீர்ப்பு வந்தது, அடுத்தது என்ன?8 நவம்பர் 2022 EWS உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு: எதிர்ப்பவர்கள், வாதிடுபவர்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன?7 நவம்பர் 2022 'உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற தீர்ப்பு - முக்கிய தகவல்கள்7 நவம்பர் 2022 அதேபோல சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி பி சிதம்பரமும் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பதிவிட்டார். "உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதிலிருந்து பலரை விலக்கி வைக்கிறது. 3:2 விகிதத்தில் தீர்ப்பு வந்திருப்பது, எதிர்கொள்ளவேண்டிய முரண்பாடான கேள்விகளை முன்வைக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான வரையறையும் சரியானதாக இல்லை. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு உதவவில்லை" என்று அவர் பதிவிட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இந்தத் தீர்ப்பை ஆதரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. ட்விட்டரில் இது குறித்து பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்டபோது, "கட்சித் தலைமை தெரிவிப்பதுதான் அதிகாரபூர்மான நிலைப்பாடு" என்றார். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்தத் தீர்ப்பை வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக பெரும்பகுதி சமுதாயம் சிரமப்பட்டது, சமூகநீதி வழங்கப்படவில்லை, இப்பொழுது எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல" என்று கூறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரித்துவந்திருக்கிறது. 1991ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியன்று பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். ஆனால், 1992ல் வழங்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பில், இந்த ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டது. வெறும் பொருளாதார அளவுகோலை வைத்துமட்டும் ஒருவரை பிற்படுத்தப்பட்டவராக அடையாளம் காணமுடியாது என்றது நீதிமன்றம். இதற்குப் பிறகு 2004ல் மன்மோகன் சிங் பிரதமரான பிறகு, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான ஆணையம் ஒன்று அதே ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2006 ஜூலையில் மறுபடியும் திருத்தியமைக்கப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். சின்ஹோ தலைவராக நியமிக்கப்பட்டார். நரேந்திர மோதி அரசு முஸ்லிம், கிறிஸ்தவ தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தர உண்மையாகவே விரும்புகிறதா?10 அக்டோபர் 2022 பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு: ஆதரித்தது யார், எதிர்த்தது யார்?9 ஜூலை 2019 ஆனால், பொதுமான புள்ளிவிவரங்கள் இந்த ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை, தமிழ்நாடு, பிஹார் மாநிலங்கள் இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்த்தன. இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 2010 ஜூலை மாதம் அப்போதைய சமூக நீதித் துறை அமைச்சர் முகுல் வாஸ்நிக்கிடம் அளித்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதன் பரிந்துரைகள் பொதுவெளியிலும் விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 2019ல், அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 103வது திருத்தத்தின் மூலம் இதனை முறைப்படி அமல்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டுமல்லாமல் தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் காங்கிரசின் தலைவருமான உதித் ராஜும் இந்த இட ஒதுக்கீட்டு தொடர்பான தீர்ப்பில் உள்ள முரண்பாட்டை கடுமையாக எதிர்த்திருக்கிறார். 50 சதவீதத்தையும் தாண்டி இட ஒதுக்கீடு தரலாம் என்று நீதிமன்றம் கூறியிருப்பதைக் கடுமையாக கண்டிக்கிறார் அவர். "நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மேல் ஜாதி மனநிலையை வலியோடு கவனிக்கிறேன். இந்திரா சஹானி தீர்ப்பிலிருந்து தான் உயர்த்திப் பிடித்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்திருக்கிறது. SC/ST/OBC இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் மட்டும் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது" என்று அவர் கூறியிருக்கிறார். Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மிக உணர்வுகரமான பிரச்னையாக இருந்து வருகிறது. திராவிடக் கட்சிகள் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கின்றன. தி.மு.க., தி.க. ஆகிய கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றன. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை வரும் சனிக்கிழமையன்று நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருக்கிறது. அ.தி.மு.கவைப் பொருத்தவரையில் இதுவரை எடப்பாடி கே. பழனிச்சாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஓ பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார். வி.கே. சசிகலாவும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்திருப்பதோடு, சீராய்வு மனு தாக்கல்செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c90ge3n8j72o
  14. பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகளை வீசிய நபர் கைது - என்ன நடந்தது? 9 நவம்பர் 2022 காணொளிக் குறிப்பு, காணுங்கள்: அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகள் வீசப்படும் காணொளி யார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசி துணைவியை நோக்கி முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தம்பதியை வாழ்த்துவதற்காக நகரின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்கில்கேட் பாரில் கூட்டம் கூடியபோது, அவர்களிடையே இருந்த ஒரு எதிர்ப்பாளரின் திடீர் செயலைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டார். இருந்தபோதும், அந்த நேரத்தில் "இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது" என்று அந்த நபர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். நடந்த சம்பவம் குறித்து நார்த் யார்க்ஷயர் காவல்துறை கூறுகையில், "23 வயதான ஒரு நபர் பொது ஒழுங்கை மீறிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்றது. கூட்டத்தில் இருந்தவர்கள், "கடவுளே அரசரைக் காப்பாற்றுங்கள்" என்றும், எதிர்ப்பாளரை நோக்கி "உனக்கு அவமானம்" என்றும் குரல் எழுப்பினர். காணொளிக் குறிப்பு, யார்க்கில் அரசர் சார்ல்ஸ் மீது முட்டைகளை வீசிய நபர் கைது செய்யப்பட்டார் யார்க்ஷயருக்கு அலுவல்பூர்வமாக அரசர் வருகை தந்த இரண்டாம் நாளில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பயணத்தின்போது அரசருடன் அரசி துணைவியாரும் டான்காஸ்டருக்கு பயணம் செய்தார். இந்த அரச தம்பதியை யார்க்கில் நகரத் தலைவர்கள் வரவேற்றனர், அப்போது எதிர்ப்பாளர் தரப்பில் இருந்து அரச தம்பதியை நோக்கி ஏராளமான முட்டைகள் வீசப்பட்டன.அந்த நேரத்தில் லார்ட் மேயர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் அரசர் சார்ல்ஸ் கைகுலுக்கியபடி இருந்தார். திடீரென்று தரையில் விரிசல் விழுந்த முட்டை ஓடுகளைப் பார்க்க சில நொடிகள் அரசர் நின்று கீழே பார்த்தார். முட்டைகள் அரச தம்பதி மீது விழாதபோதும் அந்த பகுதியில் இருந்து இருவரையும் உடனடியாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதேவேளை மற்றொரு அதிகாரிகள் குழு, அரசரின் வருகைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக வேலிகளுக்குப் பின்னால் சந்தேக நபரை தரையில் தடுத்து கட்டுப்படுத்துவதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, மறைந்த தமது தாயின் சிலையை திறப்பதற்காக நகருக்கு வருகை தரும் அரசை வாழ்த்த மக்கள் திரண்டிருந்தபோது எதிர்ப்பாளரின் குரல்கள் கேட்கப்பட்டன. சம்பவத்தை நேரில் பார்த்த ப்ளாசம் ஸ்ட்ரீட் கேலரியின் உரிமையாளரான கிம் ஓல்ட்ஃபீல்ட், தனது கடையின் வாசலில் நின்று தம்பதியின் வருகையை "மகிழ்ந்து" கொண்டிருந்தபோது "திடீரென சத்தமும் முட்டைகளும் பறந்தன" என்று கூறினார். "நான் முழுவதையும் பார்த்தேன், போலீசார் தடுப்பு மீது ஏறி அந்த நபரின் மேலே படுத்து அவரை கட்டுப்படுத்த முயன்றனர். "அதற்குள்ளாக அந்த நபரால் ஐந்து முட்டைகளை வீச முடிந்தது." "சத்தம் தொடங்கும் போது கமில்லா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். ஆனால் மிக விரைவாகவே நிலைமையை காவல்துறையினர் கையாண்டனர். அந்த நபரின் அவமானகர செயல் ஒரு அழகான தருணத்தை கெடுத்துவிட்டது," என்கிறார் கிம் ஓல்ட்ஃபீல்ட். எதிர்ப்பாளரால் வீசப்பட்ட முட்டைகள் சம்பவம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசர் எவ்வளவு ஆபத்தை சந்திக்கக் கூடிய சூழலில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்கிறார் அரண்மனைக்கான பிபிசி செய்தியாளர் சீன் கோக்லான். நடந்த சம்பவம் குறித்த அவரது பார்வை: "அரசர் சார்ல்ஸ் நலம் விரும்பிகள் அடங்கிய கூட்டத்திடம் மிகவும் அணுகக்கூடிய நபராகவே இருந்துள்ளார். மக்களுடன் கைகுலுக்கி வருவதும் நகைச்சுவைகளை பரிமாறிக் கொள்வதும் என மக்கள் சந்திப்பு பயணத்தின்போது உண்மையிலேயே அவர் ஒரு அரசரைப் போலவே மாறினார். அரசர், தனது தாயின் மரணத்திற்கு அடுத்த சில நாட்களில் மக்களைச் சந்தித்த போது அவர்களின் அரவணைப்பை அனுபவித்ததாகவே தோன்றுகிறது. நேற்று அவர் லீட்ஸின் வீதிகளில் வரிசையாக நிற்கும் கூட்டத்தை வாழ்த்தினார். அந்த தருணத்தை பதிவு செய்த செல்பேசி புகைப்பட கிளிக்குகளையும் அவர் எதிர்கொண்டார். ஒரு அமெரிக்க அதிபரை சுற்றியுள்ள அடர்த்தியான பாதுகாப்பிற்கு சற்று குறைவாகவே இந்த நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு இருந்திருக்கும். எனவே பிரிட்டனில் உள்ள மூத்த அரசியல்வாதிகள், இத்தகைய கூட்டத்தின் சீரற்ற தன்மையால் இனி இதுபோல வெளிப்படையாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை. கூட்டத்துக்கு வரும் மக்களில் யார் எதை எடுத்து வருவார்கள் என யாருக்குத் தெரியும்? ஆனால் பாதுகாப்பாக வலம் வருவதற்கும், மக்களிடையே அணுகும் முகமாக இருப்பதற்கும் இடையே எப்போதும் ஒரு பாகுபாடு இருக்கவே செய்யும். இதுவே கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருந்தால் அரசருக்கும் கூட்டத்திற்கும் இடையில் சிறிய இடைவெளி ஏற்படுத்தப்படும். இந்த நிகழ்வின் மறுபுறம் 'இவர் என் ராஜா அல்ல' என்ற பதாகையுடன் சில போராட்டக்காரர்கள் காணப்பட்டனர். அவர்கள் நின்றிருந்த சில அடி தூரத்தில் இருந்து தான் முட்டைகள் வீசப்பட்டன. ஆனால், நடந்த நிகழ்வால் அரசர் கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. காவல்துறை விரைவாக எதிர்வினையாற்றியது. ஆனால் அதற்குள் முட்டைகள் வீசப்பட்டு விட்டன," என்கிறார் சீன் கோக்லான். யார்க் நகருக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும் அரசரை லார்ட் மேயர் வரவேற்கும் பாரம்பரிய நிகழ்வில் நின்றிருந்த கூட்டத்தில் அரசர் சார்ல்ஸ் குழப்பமில்லாமல் தோன்றினார். இத்தகைய பாரம்பரிய நிகழ்வில் அரசரின் தாய் ராணி இரண்டாம் எலிசபெத் 2012ஆம் ஆண்டு கலந்து கொண்டார். இப்போது அரசர் மற்றும் அரசி துணைவியார் யார்க் மின்ஸ்டரில் மாட்சிமை வாய்ந்த அரசியின் சிலையை திறப்பதற்காக யார்க்கிற்குச் வந்துள்ளனர். மறைந்த அரசியாரின் மரணத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட அவரது முதல் சிலையின் திறப்பு விழா நிகழ்ச்சி இதுவாகும். யார்க் பேராயர், ஸ்டீபன் காட்ரெல், "நடந்த சம்பவம் பொதுமக்களை சந்திப்பதில் இருந்து அரச தம்பதியை தடுக்காது," என்று கூறினார். அவர் பிபிசியிடம் பேசுகையில், "பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சில சமயங்களில் பாதிக்கப்படக்கூடிய நிலைகளில் இருக்கிறார்கள். நாம் சந்திக்க முடியாத அளவுக்கும் அரட்டை அடிக்க முடியாத அளவுக்கும் சிந்தனை கொண்ட மக்கள் அல்லாத ஒரு நாட்டில் உண்மையில் உலகில் வாழவே நான் ஆசைப்படுகிறேன்," என்கிறார். "நிச்சயமாக அரசியும் அரசி துணைவியாரும் இதைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் மக்களுடன் [பின்னர்] கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் நடந்த சம்பவம் தங்களை பாதித்து விட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராயர் ஸ்டீபன் காட்ரெல். படக்குறிப்பு, வீசப்பட்ட முட்டைகள் அரச தம்பதி மீது விழவில்லை படக்குறிப்பு, யார்க்கில் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் கமில்லாவை காண அலைமோதிய மக்கள் கூட்டம். பின்னர், செளத் யார்க்ஷயரில் உள்ள டான்காஸ்டருக்கு அதன் நகர அந்தஸ்தை முறையாக வழங்குவதற்காக அரசர் வந்தபோது, அவரை உள்ளூர் மக்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர். சார்ல்ஸ் மற்றும் கமில்லா பின்னர் முட்டை மற்றும் வாட்டர்கெஸ் சாண்ட்விச்கள் உள்ளிட்ட மெனுவுடன் கூடிய விருந்து அடங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, டான்காஸ்டருக்கு நகர அந்தஸ்தை வழங்குவதற்காக மேன்ஷன் ஹவுஸுக்கு வந்த அரசர் தமது நலம் விரும்பிகளைச் சந்தித்து கைகுலுகுக்கிறார். https://www.bbc.com/tamil/global-63571699
  15. கல்வி, சுகாதாரத்துறைகளை தனியார் மயமாக்குவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா ? - சஜித் அரசாங்கத்திடம் கேள்வி By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 09:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) அமைச்சுப்பதவிகளை காட்டி எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை பழி எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. எந்த முயற்சி எடுத்தாலும் எமது கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் முட்டாள்தனமான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை. அத்துடன் இலவச சுகாதாரதுறை மற்றும் கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளித்துள்ளீர்களா? என கேட்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதனிக்கிழமை (9) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை வங்குரொத்து அரசாங்கத்தின் மூலம் மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம் பாலமாக அமைந்துள்ளது என்று கூறுகின்றனர். அப்படியென்றால் ஏன் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்தில் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை வெளியிடாமல் இருக்கின்றது. நாட்டுக்கு அதனை வெளிப்படுத்த அரசாங்கம் ஏன் அச்சப்படவேண்டும் என கேட்கின்றோம். அத்துடன் பல்வேறு வரிகளை அதிகரிக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையே செயற்படுத்துகின்றோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அப்படியென்றால் விலை, கட்டண அதிகரிப்புகளுக்கும் இதுவா காரணம். உடன்படிக்கைகளை மறைத்துக்கொண்டு செயற்படும் அரசாங்க்ததுடன் இணைந்து செயற்படுமாறு அரசாங்கம் அழைக்கின்றது. அத்துடன் இந்த நாட்டின் இலவச சுகாதார துறை, கல்வித்துறையை தனியார் மயப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திடம் வாக்குறுதி அளித்திருக்கின்றதா என ரசாங்கத்திடம் கேட்கின்றோம். சில பிரதான அரச வைத்தியசாலைகளில் கட்டணங்களுடன் சில சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள புதிதாக ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவதா? என்று அரசாங்கத்திடம் கேட்கின்றோம். அத்துடன் திருட்டுத்தனமான ஒப்பந்தங்களின் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைக்க இவர்கள் முயற்சிக்கின்றனர். இதுவே மொட்டின் கொள்கையாகும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்த முட்டாள்தனமான அரசில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இல்லை. அரசாங்கம் எமது கட்சியில் இருந்து பழி எடுப்பதற்கு பயந்து நாங்கள் யாரையும் வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை. எமது உறுப்பினர்கள் மீது எமக்கு நம்பிக்கை இருக்கின்றது என்றார். https://www.virakesari.lk/article/139581
  16. டெங்கினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரிப்பு By DIGITAL DESK 2 10 NOV, 2022 | 10:49 AM இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 18 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 1,114 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வாரத்தில் 943 பேர் மட்டுமே பதிவாகியிருந்தனர். இதற்கமைவாக, நாட்டில் இவ்வருடம் 63,549 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு 44 பிரிவுகளை டெங்கு அபாய பிரதேசங்களாக அறிவிக்க சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/139602
  17. கடன் வழங்கியவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள்- இலங்கைக்கு உலக வங்கி அறிவுரை By RAJEEBAN 10 NOV, 2022 | 10:52 AM கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குநர்கள் இணக்கப்பாட்டிற்கு வருவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பெஸ் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியும் உலகவங்கி தலைவரும் இலங்கையின் பொருளாதார நிலைமை சமூக நிலைமை இலங்கை பொருளாதாரத்தை துரிதமாக ஸ்திரப்படுத்தவேண்டிய நிலைமை குறித்து ஆராய்ந்தனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய கடன்நெருக்கடிக்கு உரிய தருணத்தில் பயனளிக்ககூடிய தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குநர்கள் இணக்கப்பாட்டிற்கு வருவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவரும் ஜனாதிபதியும் பொதுச்செலவீனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் அரச நிறுவனங்களிற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடினர் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசதுறையின் பாரிய அளவை கருத்தில்கொண்டே இருவரும் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர். https://www.virakesari.lk/article/139603
  18. அல்ஹைதாவுடன் தொடர்பு - இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்தது அமெரிக்கா By RAJEEBAN 10 NOV, 2022 | 10:31 AM அல்ஹைதாவுடன் தொடர்புவைத்திருந்த இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசார் என்ற முஸ்லீம் வர்த்தகருக்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அல்ஹைதாவின் நிதி உதவியாளர் மற்றும் மற்றும் வெளிநாட்டு சதிதிட்டங்களில் ஈடுபட்டுள்ளவருடன் தொடர்புகளை பேணியமைக்காக அமெரிக்கா இலங்கை வர்த்தகருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. அஹமட் லுக்மான் தலிப் என்பவருடன் நிசார் தொடர்பிலிருந்தார் என அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக்கட்டுப்பாடு தொடர்பிலான அலுவலகம் அறிவித்துள்ளது. அஹமட் லுக்மான் தலிப் அல்ஹய்தாவின் நோக்கங்களை மேம்படுத்துவதற்காக தனிநபர்களின் நடமாட்டம் மற்றும் சொத்துக்களை பயன்படுத்துவதை இலகுவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என முன்னர் அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்துக்கட்டுப்பாடு தொடர்பிலான அலுவலகம் அவரை தனது பட்டியலில் இணைந்திருந்தது. 2018 முதல் நிசார் லுக்மன் தலிப்பின் இலங்கைக்கான வர்த்தக சகாவாக செயற்பட்டார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த வர்த்தக நடவடிக்கைகள் மூலம் அவர் 200,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டினார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139600
  19. வியட்நாமில் 306 இலங்கை அகதிகள்: கனடா செல்ல 5,000 டாலர்கள் கொடுத்ததாக தகவல் - முழு விவரம் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக இருந்துஇலங்கை 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.எ கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன், ஜப்பான் கப்பலொன்றினால் மீட்கப்பட்டிருந்தனர். சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் வைத்து, இந்த அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர், பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார். என்ன நடந்தது? இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு நேற்று முன்தினம் தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது. இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து செயற்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள், அகதிகளுடன் மூழ்கும் அபாயத்திலிருந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, இந்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த ஜப்பானுக்கு சொந்தமான கப்பலொன்றிற்கு தகவல் பரிமாற்றப்பட்டதை அடுத்து, குறித்த அகதிகள் ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,VNA அகதிகளை தாம் பாதுகாப்பாக மீட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகளில் 264ற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அகதிகள் தற்போது வியட்நாமிலுள்ள முகாமொன்றில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். எங்கிருந்து பயணம் தொடங்கியது? இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், நாட்டில் வாழ முடியாத நிலைமை காரணமாக பலர் வெளிநாடுகளை நோக்கி செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதேபோன்று, பலர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்திருந்த செய்திகளையும் காண முடிந்தது. இந்த நிலையில், ஒரே கப்பலில் அதிகளவிலான இலங்கை அகதிகள் செல்ல முயற்சித்து, நிர்கதிக்குள்ளான செய்தி நேற்றைய தினம் பதிவாகியது. 300 இலங்கை அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் மீட்பு8 நவம்பர் 2022 இலங்கை இறுதி யுத்தத்தில் 'புலிகள்' சரணடைந்தனரா? ஆணைக்குழுவிடம் இலங்கை ராணுவம் சொன்னது என்ன?9 நவம்பர் 2022 இலங்கை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 50க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?7 நவம்பர் 2022 இந்த அகதிகள் எவ்வாறு கனடா நோக்கி செல்ல தயாராகினார்கள் என்பது குறித்த தகவல்களை, பிபிசி தமிழ் ஆராய்ந்தது. குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்களே, அதிகளவில் இந்த கப்பலில் பயணித்துள்ளதாக, அந்த கப்பலில் பயணித்த இலங்கையர் ஒருவரின் சகோதரன், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். அத்துடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இந்த கப்பலில் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர். அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர். கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார். குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர். முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த நிலையிலேயே, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். இதையடுத்தே, குறித்த படகில் பயணித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாரிய தொகையை செலவிட்டு, கனடா நோக்கி செல்ல முடியாது போனமை குறித்து, உறவினர்களின் நிலைபாடு தொடர்பில், பிபிசி தமிழ், குறித்த கப்பலில் பயணித்த இலங்கை அகதியின் சகோதரனிடம் வினவியது. ''பணம் ஒரு புறத்தில் இருக்க, நாட்டிற்கு மீள வருகைத் தருவது என்பது சாத்தியமற்ற விடயம். நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்புலத்தை கொண்ட ஒரு சமூகம். நாட்டிற்கு திரும்பி வரும் போது, குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் மீண்டும் பிரச்சினை வரும். எமது உறவினர்களும் அகதிகளாக சென்றார்கள் என்பதை வெளியில் சொன்னாலே, எமக்கு பிரச்சினை வரும். அதனால், அவர்கள் நாட்டிற்கு வருவதை விட, கனடா இல்லை, வேறொரு நாட்டிற்கு சென்றடைய வேண்டும். நாட்டிற்கு திரும்பி வருவது அவர்களுக்கு பிரச்சினை. இது தான் இப்போதைய நிலைமை. வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் காலப் பகுதியில் தமிழர்களுக்கு சரியான பிரச்சினை வரும் காலம். இந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்தால், அவர்கள் மீது வேறு வழியில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. இவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தால், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் வழக்கு தொடரக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றது." என அவர் கூறினார். ''சுமார் 300 பேரையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது மனிதாபிமானமற்ற செயல். நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் கூறுகின்றார்கள். காணிகளை, சொத்துக்களை விற்பனை செய்து விட்டு, சென்றவர்கள் மீண்டும் இங்கு வந்து என்ன செய்வது. நாட்டிற்கு திரும்பி அனுப்பினால், தற்கொலை செய்துக்கொள்வோம் என காணிகளை விற்பனை செய்து விட்டு போனவர்கள் கூறுகின்றார்கள். இதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. தமது பிரஜைகளை நாட்டிற்கு எடுப்பதற்கே இலங்கை முயற்சிக்கும். ஆனால், அவர்களுக்கு அது சிரமமானது. அகதிகளாக சென்ற தமது உறவினர்கள், மீண்டும் நாட்டிற்கு வருவது பாதுகாப்பற்றது என்பதே உறவினர்களின் நிலைப்பாடு.." என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, அலி சாப்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வியட்நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் கைது செய்யப்படுவார்களா? சர்வதேச முகவரி நிறுவனத்தின் ஊடாக, இந்த அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது, வெளிவிவகார அமைச்சுக்கும், சர்வதேச முகவர் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இது பெரும்பாலும் அரசாங்கங்களுக்கு இடையிலும், சர்வதேச முகவரி நிறுவனத்திற்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். படக்குறிப்பு, நிஹால் தல்துவ, போலீஸ் ஊடகப் பேச்சாளர் இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படக்கூடும் என உறவினர்களிடம் காணப்படும் அச்சம் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணிவர்கள் இந்த அகதிகளுக்கு மத்தியில் இருந்தால், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், அவ்வாறானவர்கள் இல்லையென்றால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று, ஆட்கடத்தலுடன் தொடர்புடைவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறினார். https://www.bbc.com/tamil/articles/c2vxwdj8wd1o
  20. அமெரிக்கத் தேர்தல்கள்: இரு பிரதான கட்சிகளும் கடும்போட்டி By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 06:38 PM அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்களின் பெறுபேறுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையின் அனைத்து 435 உறுப்பினர்களும், 100 செனட் உறுப்பினர்களில் 35 பேரும் 39 மாநிலங்கள், பிராந்தியங்களின் ஆளுநர்கள் மற்றும் பல உயர் பதவிக்குரியவர்களும் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இத்தேர்தலின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு பல நாட்கள் செல்லும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சி வெற்றியீட்டும் என்பதை கணிப்புகள் மூலம் முன்கூட்டியே பிரதான ஊடகங்கள் வெளிப்படுத்துவது வழக்கம். இதன்படி, இதுவரையான வெளியான பெறுபேற்று கணிப்புகளின்படி இரு கட்சிகளும் ஏறத்தாழ சம அளவிலான ஆசனங்களை வென்றுள்ளன. குறிப்பாக செனட் சபையைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. 100 ஆசனங்களைக் கொண்ட செனட் சபைக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி 47 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 46 ஆசனங்களையும் வென்றுள்ளதாக அசோஷியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. ஆனால், இரு கட்சிகளும் தலா 48 ஆசனங்களை வென்றுள்ளதாக சிஎன்என் தெரிவிக்கிறது. கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு 435 ஆசனங்களுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் இதுவரையான பெறுபேறுகளின்படி 199 ஆசனங்களை குடியரசுக்கட்சியும் 178 ஆசனங்களை குடியரசுக் கட்சி வென்றுள்ளதாக சிஎன்என் கணித்துள்ளது. 199 ஆசனங்களை குடியரசுக்கட்சியும் 172 ஆசனங்களை குடியரசுக் கட்சி வென்றுள்ளதாக அசோஷியேடட் பிரஸ் கணித்துள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான அலை வீசும் எனக் கருதப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட ஜனநாயகக் கட்சி கணிசமான ஆசனங்களை வென்றுள்ளது. எனினும் பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றினால் அச்சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றுவ 2018 ஆம் ஆண்டின் பின்னர் இதுவே முதல் தடவையாக அமையும். https://www.virakesari.lk/article/139573
  21. நாடு வங்குரோத்தடைந்துள்ளமைக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்பு - பிரசன்ன ரணதுங்க By DIGITAL DESK 5 09 NOV, 2022 | 10:02 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பிரதம கோலாசான் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முறைமை மாற்றத்திற்காக பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை கொண்டு எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.ஜனாதிபதி அனுப்பிய கடிதம் சபாநாயகருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமையவில்லை. பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டால் மாத்திரமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சிகள் அங்கத்துவம் பெற வேண்டும் என வெளிப்படை தன்மையுடன் அழைப்பு விடுத்துள்ளோம். அனைத்து விடயங்களையும் பிடித்துக் கொண்டு விமர்சனங்களை மாத்திரம் முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளமைக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூற வேண்டும்.தற்போதைய பொருளாதார பாதிப்பின் பொறுப்பை ஒரு அரசாங்கத்தின் மீது மாத்திரம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். https://www.virakesari.lk/article/139542
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.