Everything posted by ஏராளன்
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
ஜனாதிபதி கச்சதீவிற்கு விஜயம் Published By: Vishnu 01 Sep, 2025 | 09:56 PM யாழ்ப்பாணத்திற்கு 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை வந்தடைந்த ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க, மாலை வேளையில் கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி, திங்கட்கிழமை (1) மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கு பயணமானார். குறித்த இடத்திற்கு சென்ற பின் அங்கு பல பகுதிகளைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதேவேளை, மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி விசாரித்து கேட்டறிந்துகொண்டார். ஜனாதிபதி விஜயத்தின் போது, கச்சதீவின் இயற்கை அழகையும், மீனவர் சமூக வாழ்வையும் அவர் நேரடியாகக் கண்டறிந்தார். மேலும், கச்சதீவு தொடர்பான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223973
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது. இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் மொத்த பணப்பரிசாக 105 கோடியே 42 இலட்சத்து 83,000 ரூபா (3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டது. இந்த வருடம் சம்பியன் அணிக்கு 134 கோடியே 93 இலட்சத்து 49,000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 67 கோடியே 46 இலட்சத்து 74,000 ரூபாவும் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 33 கோடியே 73 இலட்சத்து 37,000 ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும். குழு நிலை லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் சுமார் ஒரு கோடியே 3 இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும். 5ஆம், 6ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 21 கோடியே 8 இலட்சம் ரூபாவும் 7ஆம், 8ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 8 கோடியே 43 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி செம்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகளும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும் இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் குவஹாட்டியில் விளையாடவுள்ளன. லீக் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறுவதுடன் அரை இறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் திகதியும் நடைபெறும். https://www.virakesari.lk/article/223953
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Published By: Vishnu 01 Sep, 2025 | 07:29 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (1) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223972
-
ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது. கட்டுரை தகவல் ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் 1 செப்டெம்பர் 2025, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும் கொண்டதாகவும் இருந்தது. SCO உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படாவிட்டாலும், அது அபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரிகளாலும், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு ஒரு தலைப்பட்சமாக எடுத்த நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்தவர்கள். இந்த சந்திப்பு எச்சரிக்கையுடனான மறுசீரமைப்பாக கருதப்பட்டது. 'நாங்கள் முன்னேற்றத்திற்கான கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்ல' என இந்தியா மற்றும் சீனா கூட்டு அறிக்கையை வெளியிட்டது. மேலும், இந்த வேறுபாடுகள் மோதலாக மாறிவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்தியது. 2020ஆம் ஆண்டில் நடந்த கல்வான் மோதல்களுக்குப் பிறகு உருவான நீண்ட பதற்றத்திற்கு பின், உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது. இரு தலைவர்களும் வர்த்தகம், எல்லை மேலாண்மை பற்றி மட்டுமல்லாமல், பலதுருவ ஆசியா மற்றும் பலதுருவ உலகம் பற்றிய விரிவான பார்வையையும் முன்வைத்தனர். அமெரிக்காவை மட்டுமே உலகத் தலைவராகக் கருத முடியாது என்ற இதன் உட்பொருள் தெளிவாக இருந்தது. டிரம்பால் ஏற்பட்ட பாதிப்புகள்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப். இந்த சந்திப்பின் பின்னணியை தவிர்க்கமுடியாது. டிரம்பின் வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியது. அவசர அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட அந்த வரிகள், ரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கியதற்கான தண்டனையாக நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில், அவை அமெரிக்காவிற்கு இடமில்லாத யூரேஷிய கூட்டமைப்புகளுக்குள் இந்தியாவை மேலும் ஆழமாக இழுத்துச் செல்கின்றன. "ஆம், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பணியாற்ற தயார் எனச் சிக்னல் கொடுக்கிறது. அமெரிக்கா, இந்தியா உறவு டிரம்பின் நடவடிக்கைகளால் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த திட்டம் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் இதை குறுகிய காலத் தீர்வாகவே பார்க்க வேண்டும்." என இந்திய வெளிநாட்டு கொள்கையில் முன்னணி அறிஞராக விளங்கும் இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் கங்குலி பிபிசியிடம் கூறினார். ஆனால், மோதி மற்றும் ஜின்பிங் பயன்படுத்திய வார்த்தைகள் திட்டமிட்டு சிக்கலாக்கப்பட்டது. எல்லையில் அமைதியும், அமைதியான சூழலும் முன்னேற்றத்திற்குத் தேவையானவை என்ற பிரதமர் மோதியின் நினைவூட்டல், சமரசமானதாக மட்டுமல்ல எச்சரிக்கையாகவும் இருந்தது. எல்லையில் படைகளின் விலகல் (disengagement) மற்றும் தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்த குறியீடுகள், சிறிய முன்னேற்றங்களை கூட அர்த்தமுள்ளவையாக காட்டும் வகையில் அமைந்தது. Play video, "டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?", கால அளவு 3,53 03:53 காணொளிக் குறிப்பு, டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா? பொருளாதாரத்தில், சுமையை குறைப்பது மற்றும் வர்த்தகத்தை ஆழப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள், இந்தியா, சீனாவுடன் கூட வர்த்தகத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அரசியல் செய்தியாக முன்வைக்கப்பட்டன. "மூன்றாம் நாட்டின் பார்வையில் இருந்து மறுக்கப்பட்டதன் மூலமும், மூலோபாய சுயாட்சி (strategic autonomy) வலியுறுத்தப்பட்டதன் மூலமும், அமெரிக்க அழுத்தம் பெய்ஜிங் உடன் உள்ள ஈடுபாட்டை நிர்ணயிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதை டெல்லி வாஷிங்டனுக்கு தெளிவுபடுத்தியது. டெல்லியின் போர் மேலாண்மை பள்ளியில் சீன நிபுணராக உள்ள பேராசிரியர் ஃபைசல் அஹ்மது நேரடியாக தனது கருத்தைப் பதிவிட்டார். "இந்தியா, சீனா உறவுகள் இருதரப்பாகவும் சரி, எஸ்சிஓ-விலும் சரி வலிமைமிக்க நிலைப்பாட்டில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தியான்ஜினில் நடந்த மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு." என்கிறார். இந்த சந்திப்பு நம்பிக்கையை வளர்க்கும் என அவர் நம்புகிறார். "மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு இருதரப்பு நம்பிக்கையில்லாதன்மையை குறைக்க ஓர் ஊக்கம் அளிக்கிறது. எஸ்சிஓ அளவிலும், தியான்ஜின் சந்திப்பு பிராந்திய பிரச்னைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தியது. சர்வதேச குற்றங்களை கையாளுதல், மக்கள் மத்தியிலான இணைப்பை வலுப்படுத்துதல் போன்றையும் இதில் அடங்கும். தோற்றங்களும் விளைவுகளும்: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. உண்மையில் சில நேரங்களில் காட்சிகளும் முடிவுகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை பெறுகின்றன. தியான்ஜினில் ஜி ஜின்பிங் மற்றும் புதின் உடன் பிரதமர் தோன்றிய காட்சி, எஸ்.சி.ஓ அரங்கத்தைக் கடந்தும் பரவச் செய்தது. இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நேரமாக இருந்தது. சில நாட்களுக்கு முன், டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தார் அந்தச் வரி சட்டத்திற்கு முரணானவை என்று அமெரிக்க கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் டிரம்புக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதால் அந்த வரிகள் இன்னும் நீக்கப்படவில்லை. ஷீ ஜின்பிங் மற்றும் புதினுடன் பிரதமர் மோதி தோன்றிய நிகழ்ச்சி, அடையாளச் சின்னங்கள் நிறைந்ததாக இருந்தது. பேராசிரியர் ஃபைசல் அஹ்மது, இந்த தருணத்தை வெறும் புகைப்படத்தை விட அதிகமாகக் கருதுகிறார். "டிரம்பின் வரி நடவடிக்கை மிகவும் முறையற்றது. தியான்ஜினில் மோடி, ஜின்பிங், புதின் ஒரே மேடையில் தோன்றியது, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச பாதுகாப்புக் கொள்கைகளுக்கு பதிலடியாக இருந்தது." என்றார். 7 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோதி சீனா சென்றுள்ளார். இது ஒரே ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றியது மட்டுஅல்ல. ஜின்பிங் உடன் நடந்த இந்த சந்திப்பு, உறவுகளை மீட்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அதே சமயம், விரிவான எஸ்சிஓ சந்திப்பு, வாஷிங்டனை தாண்டி இந்தியாவுக்கு கூட்டாளிகள் உள்ளன என்பதை காட்டும் அரங்காக அமைந்தது. "சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் மோதி பங்கேற்றதை, மூலோபாய திசை மாற்றமாக அல்லாமல், விரிவான தூதரக சமநிலைப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்" என முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபால் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.சி.ஓ-வின் முக்கியத்துவங்கள்: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். வாஷிங்டனில், எஸ்.சி.ஓ பெரும்பாலும் அதிகாரவாதிகளின் சங்கமாகவே புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற எஸ்.சி.ஓ உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. இந்தியாவுக்கு, அதன் பயன் வேறு இடத்தில் இருக்கிறது. ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, இப்போது ஈரானும் கூட ஒரே மேடையில் அமரக் கூடிய அரங்கத்தை அது வழங்கியுள்ளது. இந்த மாநாட்டை பயன்படுத்தி, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். டெல்லியை பொறுத்தவரை, இந்த சந்திப்பு உறுதித்தன்மை பற்றிய பேச்சுகள், எதிர்பார்க்கக்கூடிய உறவாக மாறுமா என்பதைச் சோதிக்கும் முயற்சியாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டனர். எல்லைப் பிரச்னை தொடர்ந்து வலியை உண்டாக்குகிறது. மேலும் சீனாவுடனான 99 பில்லியன் டாலர் வர்த்தக பற்றுச்சுமை அரசியல் தலைவலியாக உள்ளது. இது கடினமாக இருந்தாலும், பேச்சுவார்த்தை அவசியமானதாக உள்ளது. "இதற்கு மாற்று என்ன? சீனாவை நிர்வகிப்பதே அடுத்த பல தசாப்தங்களுக்கு, இந்தியாவின் பிரதான பணியாகும்" என்கிறார் பகுப்பாய்வாளர் ஹாப்பிமான் ஜேக்கப். ஆறு உறுப்பினர்களுடன் எளிமையாக தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது 10 உறுப்பினர்களாக விரிவடைந்துள்ளது. அதோடு 2 பார்வையாளர்கள் மற்றும் 14 உரையாடல் கூட்டாளிகளும் உள்ளனர். இப்போது, அது மற்ற பிராந்திய அமைப்பை விட பரந்த புவியியல் பரப்பை கொண்டதாக, உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது. ஹாங்காங்கை மையமாக கொண்ட மூத்த பகுப்பாய்வாளர் ஹென்றி லீ, எஸ்.சி.ஓ குறித்துப் பேசினார். "எஸ்.சி.ஓ-பன்முகத்தன்மை அதிர்ச்சிகரமாக உள்ளது. வரலாறுகள், கலாசாரம், அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியவை. "இத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், எஸ்.சி.ஓ தனது உறுப்புநாடுகளின் தேவைகளையும் தற்போதைய சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது." என்றார். மேலும், "ஒரு விதத்தில், எஸ்.சி.ஓ உலகுக்கு பல்வேறு நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது. இது இன்னும் முழுமையாக இல்லை என்றாலும், நாடுகள் ஒன்றிணைந்தால் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது" என்றார். ரஷ்யாவின் பங்கு: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விஷயத்தில் ரஷ்யாவின் பங்கு சாதாரணமானதாக இல்லை. ரஷ்யாவின் விலை குறைந்த கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் இந்தியாவில் பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க முடிந்தது. இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும். ரஷ்யா இந்தியாவுக்கு வெறும் எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் மட்டும் வழங்கவில்லை. அது சுயாட்சி சின்னமாக இருந்தது. மேலும், நரேந்திர மோதி அரசு அமெரிக்காவுக்கு அடிபணியாமல் உறவுகளை சமநிலைப்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கும். ஆனால் "ரஷ்யா பலவீனமாகும் சக்தி, அதன் பொருளாதார மற்றும் தூதரக திறன்கள் வரையறுக்கப்பட்டவை." என பேராசிரியர் கங்குலி எச்சரிக்கிறார். மேலும், "யுக்ரேனுடனான சண்டையால் ரஷ்யா நீண்டகால பிரச்னைகளை எதிர்கொள்வது அவசியம். மோதலில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தற்போது உயர் தொழில்நுட்பம், ஆயுதப் பாகங்கள் மற்றும் எண்ணெய் விற்பனையை அதிகம் சார்ந்துள்ளது" எனக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா ரஷ்யாவிடம் நெருங்கிப் பழகுவது அன்பு அல்ல, அவசியம் என்கிறார். அமெரிக்காவுடன் சுமூகமான உறவு இல்லாத சூழலில், இந்தியாவிற்கு இது தனி இடத்தை அளிக்கும் ஆதரவாகும். "இது சரியான தேர்வு அல்ல, ஆனால் சிறந்த தேர்வு" என நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய தூதர் ஜதிந்திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார். அமெரிக்காவை மீறிச் செல்லும் நாடுகள்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார். பிரதமர் மோதியின் எஸ்.சி.ஓ வருகை மற்றும் புதினின் டெல்லி வரவு, அமெரிக்காவின் உத்தரவுக்கு பிறகான தாக்கத்தின் தொடக்கமா? இது அப்படியல்ல. பிரதமர் மோதி, புதின் மற்றும் ஷீ ஜின்பிங் ஒரே மேடையில் காட்சியளித்தது, வேறுமாதிரி தோன்றினாலும், இந்தியா பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இன்னும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. சீனாவின் வெறுப்புணர்வை சமாளிக்க இந்தியாவின் மூலோபாய மையமாக குவாட் உள்ளது. எனினும் இந்த மாற்றம் சுவாரஸ்யம் அளிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோதி சமநிலை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வர மறுக்கிறார். "கிடைத்த தருணத்தை வீணடிக்கக் கூடாது. என பேராசிரியர் அஹ்மது வலியுறுத்துகிறார். குறிப்பாக, நரேந்திர மோதி, ஷீ ஜின்பிங், இடையிலான முறைசாரா உச்சி மாநாடு தொடர வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசை கிடைக்கும் என்கிறார். டிரம்பின் தோல்வியும், இந்தியாவின் பொறுமையும்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் இந்தியா வந்தோது எடுக்கப்பட்ட புகைப்படம். விசித்திரம் என்னவென்றால், டிரம்ப் மிகவும் பயப்படுவதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார். இந்தியாவுக்கு அதிக வரிகள் விதிப்பதன் மூலம், அமெரிக்கா அதனை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகே தள்ளுகிறது. நீதிமன்றத்தில் தோல்வி அடைந்ததால், உலக வர்த்தக விதிகளை மாற்றுவதற்கான அவர்களது உரிமையும் குறையும். மிதமான கூட்டாளிகளுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முயற்சித்து, அவர் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கிறார். ஜப்பான், அமெரிக்காவில் அதிக முதலீடு செய்ய அழுத்தம் தரப்பட்டதால், வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளது. இது, பாரம்பரியமாக அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்த நாடுகளும் இப்போது எதிர்ப்பு காட்ட தொடங்கியுள்ளன. மாற்று வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக பிரதமர் மோதியை பாராட்ட வேண்டுமா? இந்தியா அமெரிக்காவை விட்டு இன்னமும் விலகவில்லை, குறைந்தது இப்போதைக்கு அது நிகழவில்லை. இரு நாடுகளின் கூட்டாண்மை மிக பரந்தது விரிந்தது மட்டுமன்றி ஆழமுமானதும்கூட. எந்த தரப்பையும் தேர்வு செய்வது என்பதை விட தன் விருப்பப்படி செயல்படுவதே தனக்கு சவாலான ஒன்று என மோதி அரசு நன்கு அறிந்துள்ளது. "இந்தியாவின் தற்போதைய நிலை கடினமாக உள்ளது. ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள், தானே உருவாக்கப்பட்டவை அல்ல. டிரம்பின் உறுதித்தன்மை இல்லாத நடத்தையையும், அவரின் பரிமாற்ற நோக்கோடு நடத்தப்படும் கொள்கைகளையும் புரிந்துகொள்ளாததற்காகவும் மட்டுமே இந்தியாவை குறை கூற முடியும்." என்கிறார் பேராசிரியர் காங்குலி. உண்மையில், மோதியின் சீன பயணம் சொல்லும் செய்தி இதுதான் என பல பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர். "இது அமெரிக்காவிற்கான நினைவூட்டல். இந்தியாவுக்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. இந்தியா, தூதரக சுயாட்சியை தனது வெளிநாட்டு கொள்கையின் மையமாக முன்வைக்கிறது என்பதும் வெளிப்பாடு" என அவர்கள் கூறுகின்றனர். டிரம்பை, நண்பர்களிடமிருந்து தன்னை பிரித்து அமெரிக்காவின் வீழ்ச்சியை வேகப்படுத்திய அதிபராக வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளலாம். மோதியை, இந்தியாவின் தனிப்பட்ட செயல்திறலை பாதுகாத்து, எந்த ஒரு சக்தியிடமும் அடிபணியாமல் செயல்படுபவராக நினைவில் வைத்துக் கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77627lg867o
-
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் பாத்பைன்டர் பவுன்டேஷன் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட சந்திப்பு
Published By: Vishnu 01 Sep, 2025 | 06:21 PM (நா.தனுஜா) பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அண்மைக்காலத்தில் நடாத்திவரும் சந்திப்புக்களின் ஓரங்கமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பு திங்கட்கிழமை (1) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது சமகாலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றின் விளைவாக எதிர்வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டன. அதேவேளை தற்போது நிலவும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வழங்கிவரும் தலைமைத்துவம் குறித்து மிலிந்த மொரகொட தனது பாராட்டை வெளிப்படுத்தியதுடன், அது பிராந்திய உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு நேர்மறையாகப் பங்களிப்புச் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/223968
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் விளையாட்டு அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர். அனைவரும் அரசாங்கம் மீது வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நீண்டகால திட்டத்தின் கீழ், மண்டைதீவை சர்வதேச அளவிலான வசதிகளுடன் கூடிய 'விளையாட்டு நகரமாக' மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் இங்கு முன்வைக்கப்பட்டது. நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளுடன் கூடிய இந்த விளையாட்டு நகரம் முழுமையான வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு வளாகம், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்டிருக்கும். யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக போட்டிகளை நடத்தும் வகையில் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கு அமைக்கப்படவுள்ளது. பிரதான பார்வையாளர்கள் அரங்கம் மற்றும் ஊடக அரங்கம் இரண்டாம் கட்டத்திலும், மீதமுள்ள பார்வையாளர்கள் அரங்குகள் மூன்றாம் கட்டத்திலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இறுதி கட்டத்தில் மின்விளக்கு கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் வேலணை பிரதேச சபையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், சுமார் 40,000 பார்வையாளர்களுக்கு போட்டிகளை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச அளவிலான பகல்/இரவு போட்டிகளை நடத்த வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் வரலாற்றில் இடம்பிடிக்கும். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில், கிரிக்கெட் என்பது இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு விளையாட்டு என்று தெரிவித்தார். விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று நிர்மாணப் பணிகள் தொடங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் ஒரு மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கிரிக்கெட் அணியையும், அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில் ஆரவாரம் செய்யும் ஒரு நாட்டையும் உருவாக்குவதே தமது கனவு என்று கூறிய ஜனாதிபதி, அதை நனவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டி அதற்கு நன்றியும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmf18gnkd0060o29nzt3gx8mr
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
‘வாழ்வாதாரமே பாதிக்கும் அபாயம்’ - போராட்டத்தில் இறங்கிய தமிழர்கள்; மன்னாரில் என்ன பிரச்னை? இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டில் காற்றாலை செயல்பாடு தொடங்கியது. மன்னார் தீவுப் பகுதியில் 36 காற்றாலைகள் தற்போது இயங்கி வருகின்ற நிலையில், புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனவே, மக்கள் 25 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றாலை மின்சாரம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போரட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர். #Colombo #Mannar #WindForm இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmf1be60u005qqplpqv1px4ae
-
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!
யாழ். பொதுநூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று (01) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமயப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1331807308948546?ref=embed_post -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmf123tn1005gqplpajgipsnp
-
சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது? சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும் வெப்பச் சலனத்தால் ஆங்காங்கே மழை பெய்வது வழக்கம். அதைப் போலவே சில நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்துவந்தது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னை முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையின் வடபகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அன்று இரவு 11 முதல் 12 மணிவரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அன்று இரவில் மூன்று இடங்களில் அதிதீவிர கன மழையும் எட்டு இடங்களில் தீவிர கனமழையும் 28 இடங்களில் கனமழையும் பதிவானது. மணலி, மணலி புதுநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் அதிதீவிர கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் மணலியில் 27.15 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 25.56 செ.மீ மழையும் விம்கோ நகரில் 22.86 செ.மீ. மழையும் பதிவானது. மணலியிலும் விம்கோ நகரிலும் 'மேகவெடிப்பு' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்திற்குள் 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 செ.மீ. மழை பெய்வதை, 'மேகவெடிப்பு' நிகழ்வாக இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. இதுபோன்ற 'மேகவெடிப்பு' நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று இரவில் ஆறு இடங்களில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மணலியில் இரவு பத்து மணியிலிருந்து 11 மணிக்குள் 10.6 செ.மீ. மழை பதிவானது. 11 மணியிலிருந்து 12 மணிக்குள் விம்கோ நகரில் 15.72 செ.மீ. மழை பதிவானது. கொரட்டூரில் 13.71 செ.மீ. மழையும் மணலியில் 12.6 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 10.32 செ.மீ. மழையும் பதிவானது. இந்த 'மேகவெடிப்பு' நிகழ்வுகளிலேயே மிகத் தீவிரமான நிகழ்வு விம்கோ நகரில் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீவிர மழைப்பொழிவு நிகழ்வின் காரணமாக, ஃப்ராங்க்ஃபர்ட், மங்களூரு, புதுதில்லி ஆகிய இடங்களில் இருந்து அன்று இரவில் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டன. "தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆகவே, தென்மேற்கு பருவக் காற்றால் இங்கே மழைபெய்வதில்லை. மாறாக, வெப்பச் சலனத்தின் காரணமாகத்தான் மழை பெய்யும். அதாவது, கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது மழைக்கு வழிவகுக்கிறது. சனிக்கிழமையன்று நடந்ததைப் போல 'மேக வெடிப்பு' நிகழ முக்கியக் காரணம், மேகங்களின் நகர்வு மெதுவாக இருப்பது அல்லது அதே இடத்தில் நின்றுவிடுவதுதான். மழை பெய்துகொண்டிருக்கும் மேகம், அங்கேயே நின்றுவிட்டால், அவை கொட்டித்தீர்த்துவிடும். சென்னை போன்ற நகரங்களில் நகர்ப் புறங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே மேகங்கள் நகர்ந்து புறநகர்ப் பகுதியை அடையும்போது மழை பெய்வது அதிகரிக்கும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது" என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த். சென்னையில் இதற்கு முன்பும் இதுபோல பல தருணங்களில் மழை பெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், மேக வெடிப்பிற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார். முன்பே கூறியதைப் போல, சென்னை போன்ற நகரங்களில் வெப்பச்சலனத்தால் மழை உருவாகும்போது மேகங்கள் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஒரு காரணம். அடுத்ததாக, புயல் வீசும்போது அது வேகமாகக் கரையைக் கடக்காவிட்டாலும் இது போன்ற தீவிர மழைப் பொழிவு நிகழும் என்கிறார் அவர். "2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயல் வீசிய தருணத்தில் இப்படி நடந்தது. புயல் உடனடியாக கடந்துசெல்லாமல் ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இதனால், பெரிய அளவில் மழைகொட்டித்தீர்த்தது" என்கிறார் ஸ்ரீகாந்த். மலைப் பிரதேசங்களைப் பொறுத்தவரை மேகங்கள் இரண்டு மலை முகடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது அந்த இடத்தில் மேகவெடிப்பு நிகழும் என்கிறார் அவர். மேகவெடிப்புகள் அதிகரிக்கின்றனவா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் இதற்கிடையில் மேகவெடிப்பு நிகழும்போக்கு இந்தியாவில் அதிகரிக்கவில்லையென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மேகவெடிப்பு நகழ்வுகள் அதிகரிக்கவில்லையென கூறினார். ஆனாலும், சிறு மேகவெடிப்புகள் (mini-cloudbursts) அதிகரித்துள்ளன என்கிறார் அவர். அதாவது, ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்வதை சிறு மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. மேகவெடிப்பு நிகழ்வுகளைப் பொறுத்தவரை, 1969லிருந்து 2015ஆம் ஆண்டிற்குள் 28 முறை மேகவெடிப்பு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மீட்டராலஜியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 2015ஆம் ஆண்டிற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் இதில் இல்லை என மிருத்யுஞ்சய் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய அவர், "சில பிராந்தியங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை வகைப்படுத்துவது கடினமாக உள்ளது. காரணம், அந்த இடங்களில் வானிலை மையங்கள் இல்லை" என்றார் அவர். மிருத்யுஞ்சய் வேறொரு பிரச்சனையையும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இதுபோன்ற தீவிர மழைப்பொழிவுகளைக் கணிப்பது கடினம் என்கிறார். "செயற்கைக்கோள் படத்தை வைத்து, தீவிரமாக மழைபெய்யலாம் என சில மணி நேரங்களுக்கு முன்பாகச் சொல்ல முடியும். ஆனால், மேகவெடிப்பாக இருக்குமா என்பதைக் கணிக்க முடியாது" என்கிறார் அவர். அவர் கூறுவதைப்போலவே, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திக் குறிப்பில், "இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அன்று இரவு பத்தரை மணியளவில் வெளியிட்ட முன்னெச்சரிக்கையிலும், மிதமானது முதல் கனமழைவரை பெய்யலாம் என்றே கூறப்பட்டிருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதனை மேகவெடிப்பாக கருதுகிறது. ஆனால், '2-5 செ.மீ. மழைக்கே நிலச்சரிவு ஏற்படலாம்' என்பதை தற்போதைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார் மிருத்யுஞ்சய். "இமயமலைப் பகுதியில் ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்தாலே அது நிலச்சரிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. லே போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீக்கு மேல் பெய்தாலே அதனை மேக வெடிப்பாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்ரீகாந்த். தென்மேற்கு பருவமழைக் காலமான செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியப் பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மழை பெய்வது, 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjmrr3n3m9o
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!; இவ்வாண்டு இறுதிக்குள் முதல் போட்டி நடைபெறுமென தெரிவிப்பு 01 Sep, 2025 | 06:21 PM யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (1) பிற்பகல் ஆரம்பித்துவைத்தார். யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு என்பதையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 3 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை ஜனாதிபதி பாராட்டினார். https://www.virakesari.lk/article/223967
-
ஜனாதிபதியின் கவனத்தைப் பெற மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் போராட்டம் - பொலிஸார் அராஜகம்!
01 Sep, 2025 | 03:30 PM மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்றபோது, முதியவர்கள், பெண்கள் என அனைவரையும் மிக மோசமான முறையில் பொலிஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். அதேவேளை இந்த சம்பவத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டித் துரத்தியடித்துள்ளனர். மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன்போது, கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர். இந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக, மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றனர். இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார், வயோதிபர்கள், பெண்கள் என்றும் பாராமல், அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, அந்த மக்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி, பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தள்ளி, தகாத வார்த்தைகளால் பேசித் துரத்தினர். அவ்வேளை, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர். மக்களின் காணிகள் மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு, அபிவிருத்திப் பணிகளை தொடங்கிவைக்க மயிலிட்டி பகுதிக்கு சென்றார். அவ்வேளை, “எமது காணிகளை விடுவியுங்கள்” என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடாத்த முற்பட்டபோது கடந்த கால அரசாங்கத்தைப் போன்றே, இந்த அரசாங்கத்திலும், பொலிஸார் எம்மிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர். மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதற்கு, பொலிஸார் எம்மிடம் நடந்துகொண்ட விடயம் சான்று பகிர்கிறது என காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223933
-
அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா?
'அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்': அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் லியோனிங் கட்டுரை தகவல் Laura Bicker China correspondent Dalian, China 2 மணி நேரங்களுக்கு முன்னர் "சோசலிசம் நல்லது..." என்று மைக்கைப் பிடித்து ஓய்வூதியதாரர் ஒருவர் பேசுகிறார். அவரது குரல், அவரது நண்பர்களின் அரட்டை சத்தத்தில் குறைவாக கேட்கிறது. ஆனால் அவர்களும், அவருடன் சேர்ந்து, "கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான பாதையில் சீனாவை வழிநடத்துகிறது!" என்று முழங்குகிறார்கள். இது பிரபலமான பாடல் அல்ல. ஆனால் அவர்கள் நின்று கொண்டிருக்கும் டாலியனின் சுயோயுவான் பூங்காவிலிருந்து பாடுவதற்கு பொருத்தமானது. டாலியன் சீனாவின் கப்பல் கட்டும் தளங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். வடகிழக்கு சீனாவில் மஞ்சள் கடலுக்குள் நீண்டிருக்கும் டாலியனில் உள்ள அந்த பூங்காவிலிருந்து, சீனாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றின் அற்புதமான காட்சிகளை காண முடியும். மக்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்கான இடமாகவும் அது அமைந்துள்ளது. ஆனால் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள வெள்ளை மாளிகை ஆய்வாளர்களுக்கு, சீனா கப்பல் கட்டும் இந்த தொட்டில் வளர்ந்து வரும் அச்சுறுத்தலின் ஒரு பகுதியாகும். கடந்த இரண்டு தசாப்தங்களில் சீனா கப்பல் கட்டும் தொழிலில் முதலீட்டை அதிகரித்துள்ளது. அது பலனளித்துள்ளது. இந்த ஆண்டு உலகின் ஆர்டர்களில் 60% க்கும் அதிகமானவை சீன கப்பல் கட்டும் தளங்களுக்குச் சென்றுள்ளன. எளிமையாகச் சொல்வதானால், சீனா வேறு எந்த நாட்டையும் விட அதிகமான கப்பல்களைக் கட்டுகிறது, ஏனென்றால் வேறு எவரையும் விட வேகமாக சீனாவால் அதைச் செய்ய முடியும். சீனா "அசாதாரணமான அளவில் கப்பல்களை கட்டுகிறது " என்று லண்டனை தளமாகக் கொண்ட மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் கடல்சார் நிபுணர் நிக் சைல்ட்ஸ் கூறுகிறார். "சீனாவின் கப்பல் கட்டும் திறன் அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்." கப்பல் கட்டுவதில் முன்னிலையில் இருக்கிறது என்றால், அதன் பலன் சீனாவின் கடற்படைக்கும் பொருந்தும். சீன கம்யூனிஸ்ட் கட்சி இப்போது உலகின் மிகப்பெரிய, 234 போர்க்கப்பல்களை இயக்குகிறது. அமெரிக்க கடற்படையில் 219 போர்க்கப்பல்களே உள்ளன. சீனாவின் இந்த மாபெரும் எழுச்சிக்கு கடல் ஒரு முக்கிய காரணியாகும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா உலகின் 10 பரபரப்பான துறைமுகங்களில் ஏழு துறைமுகங்களைக் கொண்டுள்ளது, அவை உலகளாவிய வர்த்தக விநியோகத்துக்கு முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் அமைந்துள்ளன. சீனாவின் கடலோர நகரங்கள் வர்த்தகத்தால் செழித்து வளர்கின்றன. சீனாவின் ஆசைகள் வளர்ந்துள்ள நிலையில், அதன் கப்பல் படையும் வளர்ந்துள்ளது - தென் சீனக் கடலிலும் அதற்கு அப்பாலும் உரத்த குரலில் உரிமை கோருவதற்கான அதன் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. அதிபர் ஜின்பிங்கின் சீனா நிச்சயமாக அலைகளை (அதாவது கடலை) ஆள விரும்புகிறது. அது நடக்குமா என்பதுதான் கேள்வி. படக்குறிப்பு, 19-ம் நூற்றாண்டில் ரஷ்யர்களால் துறைமுகமாக கட்டப்பட்ட டாலியன் தற்போது சீனாவின் பெரிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்று. அடுத்த வாரம் ஒரு மாபெரும் ராணுவ அணிவகுப்பு அந்த இலக்குக்கு எவ்வளவு நெருக்கமாக சீனா உள்ளது என்பதை வெளிப்படுத்தக்கூடும். விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரை ஜின்பிங் இந்த நிகழ்வுக்கு அழைத்துள்ளார். இது அவர்களை புறக்கணித்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் செய்தியாகும். இந்த அணிவகுப்பில், கப்பலை தாக்கும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ வலிமையின் காட்சிப்படுத்தலை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உன்னிப்பாக கவனிக்கும். "அமெரிக்க கடற்படை, இன்னும் குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், சீனாவுடனான அதன் திறன்களில் இடைவெளி காணப்படுகிறது. இதற்கான விடையை தேட அமெரிக்கா போராடுகிறது," என்று சைல்ட்ஸ் கூறுகிறார், "ஏனென்றால் கடந்த தசாப்தங்களில் அதன் கப்பல் கட்டும் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது." இதை சரிசெய்ய விரும்புவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அமெரிக்க கப்பல் கட்டுமானத்திற்கு புத்துயிர் அளிக்கவும், அமெரிக்காவின் கடல்சார் சாதகங்களை மீண்டும் பெறவும் நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அது, "மிக சவாலான காரியமாக இருக்கும்" என்று சைல்ட்ஸ் மேலும் கூறுகிறார். 'கசப்பான நினைவுகளை' முடிவுக்கு கொண்டு வரும் கடற்படை 2019 மற்றும் 2023 க்கு இடையில், சீனாவின் நான்கு பெரிய கப்பல் கட்டும் தளங்களான டாலியன், குவாங்சோ, ஜியாங்னன் மற்றும் ஹுடாங்-ஜோங்குவா ஆகியவை 39 போர்க்கப்பல்களை (மொத்தம் 550,000 டன்) தயாரித்ததாக , மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் (சிஎஸ்ஐஎஸ்) ஆய்வு தெரிவிக்கிறது. 550,000 டன் என்பது அந்த 39 போர்க்கப்பல்களும் கடலில் மிதக்கையில் இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவு, இது ஒரு கப்பல் அல்லது கடற்படையின் வலிமையை அளவிடுவதற்கான வழக்கமான முறையாகும். அதன்படி பார்த்தால், ஒப்பீட்டளவில் பிரிட்டனின் ராயல் கடற்படையின் வலிமை (சுமார் 399,000 டன் ) குறைவு. கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில், சீனா உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டிருந்தாலும், அமெரிக்க கடற்படையின் வலிமை அதிகமாகும். மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல்களுடன் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமெரிக்க கடற்படை திகழ்கிறது. ஆனால் சீனா அமெரிக்காவை வேகமாக எட்டிப் பிடிக்கிறது. "சீனர்கள் மெதுவாக செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று சி.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த அலெக்சாண்டர் பால்மர் கூறுகிறார். "ஹல் எண்ணிக்கை [கப்பல்களின் எண்ணிக்கை] நிச்சயமாக ஒரு கடற்படையின் செயல்திறனின் ஒரே அளவீடு அல்ல, ஆனால் போர்க்கப்பல்களை உற்பத்தி செய்யும் சீனாவின் திறன் மிகவும் அபாரமாக உள்ளது, இது ஒரு மூலோபாய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடும்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "தேச நலனை பாதுகாக்க ஒரு வலுவான கடற்படையின்" முக்கியத்துவத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்துகிறார். சீனாவின் கடற்படை வளர்ச்சியில் சில குறைபாடுகள் தென்படுகின்றன. சீனாவிடம் அதிக கப்பல்கள் இருக்கலாம், ஆனால் அதனிடம் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன. சீன கடற்படையில் அமெரிக்காவை விட மிகக் குறைவான நீர்மூழ்கிக் கப்பல்களே உள்ளன. அவை பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்கா தொழில்நுட்ப சாதகத்தைக் கொண்டிருப்பதைப் போல அதிநவீனமானவை அல்ல என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரும்பாலும் ஆழம் குறைந்த தென் சீனக் கடலுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்கெனவே அமெரிக்காவும் சீனாவும் எலியும் பூனையுமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, சீனா தனது சொந்த கடற்கரையில் இருந்து வெகுதூரம் பயணிக்கும் திறன் குறைவாகவே உள்ளது. ஆனால் இது வேகமாக மாறுவதற்கான அறிகுறிகள் உள்ளன. தென் சீனக் கடலில் உள்ள ஒரு சீன தீவு மாகாணமான ஹைனானின் பிபிசி வெரிஃபை பெற்ற செயற்கைக்கோள் படங்கள், பெய்ஜிங் அதன் கடற்படை தளங்களை விரிவுபடுத்த கணிசமான நிதியை கொட்டி வருவதை சுட்டிக்காட்டுகின்றன. யூலினில் உள்ள தளத்தில் ஐந்து புதிய கப்பல்கள் தென்படுகின்றன, அவை கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. சீனா தனது மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களான ஜின்-கிளாஸ் (அல்லது வகை 094) அனைத்தையும் இந்த துறைமுகத்தில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் 12 அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும். சீன சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒத்திகைகளின் புகைப்படங்கள் மற்றும் காட்சிகள், குறைந்தது இரண்டு புதிய வகை ஆளில்லா நீருக்கடியில் இயக்கப்படும் டிரோன்கள் (நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்தப்படும் குண்டுகளை போன்ற தோற்றம் கொண்டவை), அடுத்த வார அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்படும் புதிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன. இதன் மூலம் சீனா நீருக்கடியில் ஆழமான கண்காணிப்பை மேற்கொள்ளவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது கடலுக்கடியில் கேபிள்களைக் கூட அதன் சொந்த கடற்படைப் படைகளுக்கு ஆபத்து இல்லாமல் கண்டுபிடிக்கக் கூடும். இந்த தொழில்நுட்பத்தின் பெரும்பகுதி இன்னும் "நிரூபிக்கப்படவில்லை மற்றும் அதன் திறன்களின் காலவரிசை இன்னும் தெளிவாக இல்லை" என்று சி.எஸ்.ஐ.எஸ்ஸின் சீனா பவர் திட்டத்தைச் சேர்ந்த மத்தேயு ஃபுனயோல் எச்சரிக்கிறார். "தொழில்நுட்பம் முதிர்ச்சியடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதுதான் பெரிய கேள்வி." சீனாவின் கப்பல் கட்டுமானம் முன் வைக்கும் அச்சுறுத்தலை அமெரிக்கா புறக்கணிக்க முடியாது என்று அவர் மேலும் கூறுகிறார். நாட்டின் பரந்த கடற்படை கட்டமைப்பு, கடந்த காலத்தின் வலிகளில் இருந்து இன்னும் மீளாத ஒரு கட்சியால் உந்தப்படுகிறது - அதன் விசுவாசம், அதிகாரம் மற்றும் தேசப்பற்று பற்றிய செய்தியை வலுப்படுத்த அவர்களை வழிநடத்த விரும்புகிறது. ஜப்பான் மீதான வெற்றியையும், ஜப்பான் ஆக்கிரமிப்பின் முடிவையும் நினைவுகூரும் வகையில் ஒரு ராணுவ அணிவகுப்பை நடத்துவது அதற்கு சான்றாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் விமானம் தாங்கி கப்பல் லியோனிங் 2024 பிப்ரவரி-ல் கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சீனாவின் எழுச்சி என்று உலகம் எதை பார்க்கிறதோ, அதனை சீனாவின் மறுமலர்ச்சியாக அதிபர் ஜி ஜின்பிங் பார்க்கிறார். "தேச நலனை பாதுகாக்க ஒரு வலுவான கடற்படையின்" முக்கியத்துவத்தை அவர் பெருமையாக பேசுகிறார். 1840 மற்றும் 1949 க்கு இடையில் நடைபெற்ற 470 படையெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த கிங் பேரரசு உடைய தொடங்கியபோது, சீனா கொந்தளிப்பு, புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரில் மூழ்கி, "சொல்லமுடியாத துன்பத்தை" எதிர்கொண்டது. தனது நாடு மீண்டும் ஒருபோதும் "அவமானப்படுத்தப்படாது" அல்லது "வெளிநாட்டு தாக்குதல்களின் கசப்பான நினைவுகளை" புதுப்பிக்காது என்று அவர் சபதம் செய்துள்ளார். சீனாவுக்கு மறுக்க முடியாத சாதகம் உள்ளது – அது அங்குள்ள கப்பல் கட்டும் தளங்களின் இரட்டை பயன்பாடு . அந்த தளங்களில் பல வணிக பயன்பாட்டுக் கப்பல்களை தயாரிக்கும் வேளையில், கடற்படைக்கான போர்க்கப்பல்களையும் உற்பத்தி செய்ய உதவும். ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கப்பல் கட்டும் தளங்கள் சில இடங்களில் கைகோர்த்து செயல்படுகின்றன, இது "ராணுவ-சிவிலியன்(பொதுமக்கள்) இணைவு" என்று அரசு ஊடகங்கள் விவரிக்கின்றன. இந்த கருத்தை அதிபர் ஜின்பிங் வலிமையாக முன்வைக்கிறார். பெய்ஜிங் ஒரு "முதன்மை கப்பல் கட்டும் தளம்" என்று அழைக்கும் டாலியன் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. படக்குறிப்பு, டாலியனில் உள்ள கப்பல் கட்டும் தளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளூர் மக்களிடையே பிரபலமானவை ஆகும். மைக் பிடித்து பாடல்களை பாடிக்கொண்டு, சுற்றுலா வந்திருக்கும் ஓய்வூதியதாரர்களின் முழு பார்வையில் படும்படி பெரிய வணிக கப்பல்கள் உள்ளன, சில மூன்று கால்பந்து மைதானங்கள் வரை நீளமானவை. ஆனால் யாரும் புகைப்படம் எடுக்க முடியாத ஒரு மூலையில், ராணுவக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு, ஒரு கிரேன் ஒரு ஹெலிகாப்டரை கப்பலின் பெரிய தளத்தில் இறக்குகிறது, "இது வணிக மற்றும் ராணுவ நடவடிக்கைகளை ஒன்றிணைக்கும் அரசியல் நோக்கம் கொண்டதாகும் " என்று ஃபுனயோல் கூறுகிறார். "இரண்டையும் உருவாக்க தேவையான தொழில்நுட்பத்தை ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உள்ளன - டாலியன் அவற்றில் ஒன்று." அதனால்தான் சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் இல்லாமல் கூட, வணிகக் கப்பல்களை விரைவாக உருவாக்குவதில் சீனா பெறும் நிபுணத்துவம் ஒரு நெருக்கடியின் போது முக்கியமானதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார். படக்குறிப்பு, டாலியனில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவக் கப்பலில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது. "எந்தவொரு நீடித்த மோதலிலும், புதிய கப்பல்களை விரைவாக உருவாக்கும் கப்பல் கட்டும் தளங்கள் உங்களிடம் இருந்தால், இது ஒரு பெரிய மூலோபாய நன்மை" என்று ஃபுனயோல் கூறுகிறார். "வணிகக் கப்பல்கள் எந்தவொரு மோதல் நடைபெறும் பகுதிக்கும் உணவு போன்றவற்றை கொண்டு செல்ல முடியும். இது இல்லாமல், அமெரிக்கா ஒரு நீண்டகால போர் முயற்சியைத் தொடர முடியாத நிலையில் உள்ளது." இது ஒரு நேரடியான கேள்விக்கு இட்டுச் செல்கிறது என்கிறார், "யார் அதிக கப்பல்களை விரைவாகவும் எளிதாகவும் தண்ணீரில் இறக்க முடியும்?" இதற்கான பதில், இப்போதைக்கு சீனாதான். "உன் வலிமையை மறைத்துக் கொண்டு, சரியான நேரத்திற்காக காத்திரு" பேராசிரியர் ஹூ போ, "அதைப்பற்றி உலகம் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் மற்ற நாடுகளின் பிரச்னையில், குறிப்பாக ராணுவ ரீதியில் தலையிடுவதற்கான எந்த ஆர்வமும் கொள்ளவில்லை" என்கிறார். பெய்ஜிங் பல்கலைக் கழகத்தின் கடல்வெளி மூலோபாய ஆய்வுகள் மையத்தின் இயக்குநரான அவர் கூறும் செய்தி, பெரிய கப்பல்களை கட்டமைப்பதற்கான திறன்களை சீனா வளர்த்துக் கொண்டிருப்பது உலகைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அல்ல என்பதுதான். ஆனால், சீனாவுக்கு விருப்பமான ஒரு தீவு உண்டு. சீனா அதை வேறொரு நாடாகப் பார்க்கவில்லை. அதுதான் தைவான். பெய்ஜிங் நீண்ட காலமாக ஜனநாயக தைவானுடன் "மீண்டும் ஒன்றிணைவோம்" என உறுதியோடு உள்ளது. அதற்காக பலத்தை பயன்படுத்தும் வாய்ப்பையும் நிராகரிக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், சீனா தைவானை 2027க்குள் ஆக்கிரமிக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் பெய்ஜிங் இதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை என்று மறுக்கிறது. "தைவானை மீண்டும் கைப்பற்றும் திறன் சீனாவிடம் ஏற்கனவே உள்ளது," என்று பேராசிரியர் ஹு போ கூறுகிறார், "ஆனால் சீனா அதைச் செய்யவில்லை, ஏனென்றால் எங்களிடம் பொறுமை உள்ளது. சீனா அமைதியான ஒன்றிணைப்புக்கான வாய்ப்பை ஒருபோதும் கைவிடவில்லை. அதற்காக காத்திருப்பது சாத்தியமே" தைவான் மீதான எந்தவொரு தாக்குதலும் பெரிய போருக்கு தூண்டுதலாக அமையலாம் என்பது பெரிய கவலை ஆகும். அதில் அமெரிக்காவும் இணையக்கூடும். வாஷிங்டன் தனது சட்டப்படி தைவானின் தற்காப்புக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படிப்பட்ட ஆதரவை சீனா ஏற்காது, ஏனென்றால் அவர்கள் தைவானை, தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மாகாணமாக, சீனாவோடு இறுதியில் இணையும் வாய்ப்புள்ள ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், சீனா தைவானுக்கு "உடனடி" அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தார். ஆசிய நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரித்து போரைத் தடுக்கும் விதமாக அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பேராசிரியர் ஹு போ உறுதியாகச் சொன்ன போதிலும், சீனாவின் போர்க்கப்பல்கள் பெருங்கடல்களில் வெகுதொலைவில் பயணிக்கத் தொடங்கியுள்ளன என்ற உண்மையை புறக்கணிப்பது கடினம். பிப்ரவரியில் அவை ஆஸ்திரேலியாவின் கடற்கரையை மூன்று வாரங்களுக்கும் மேலாக சுற்றிவந்தன. அங்கு அவை முன்னெப்போதும் மேற்கொண்டிராத பயிற்சிகளை நடத்தின. மிக சமீபத்தில் சீன விமானந்தாங்கி கப்பல்கள் ஜப்பானுக்கு அருகில் கடற்படை பயிற்சிகளை நடத்தின. இந்த பயிற்சிகள் சர்வதேச கடல் எல்லையில் நடந்த போதிலும், இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாததாக இருந்தது. படக்குறிப்பு, சீனாவின் கப்பல் கட்டும் செயல்பாடுகள் குறித்து உலகம் கவலை கொள்ள தேவையில்லை என்று பேராசிரியர் ஹு தெரிவிக்கிறார். பசிபிக் பிராந்தியத்தில் தனது சக்தியைக் காட்ட பெய்ஜிங் தைரியமாக முயற்சிக்கும் போது, தைவான் முதல் ஆஸ்திரேலியா வரையிலான சீனாவின் அண்டை நாடுகள் அதன் புகழ்பெற்ற மந்திரம் செயல்படுத்தப்படுவதாக கவலைப்படுகின்றன: "உன் வலிமையை மறைத்து வைத்து, சரியான நேரத்திற்காக காத்திரு." ஆனால் பேராசிரியர் ஹு, இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார், ஏனென்றால் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் எல்லோருமே அறிவார்கள் என்றார். "கடந்த மூன்று ஆண்டுகளில், இரு தரப்பிடமிருந்தும் சண்டையிட விரும்பவில்லை என்ற சமிஞ்ஞை மிகவும் தெளிவாக உள்ளது," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிட விரும்பவில்லை." 'நாங்கள் எங்கள் கடல் லட்சியங்களை பாதுகாக்கிறோம்' சுறுசுறுப்பான நகரப் பகுதியிலிருந்து ஒருமணி நேர தூரத்தில், டாலியனில் மீண்டும் சுற்றுலா பேருந்துகள் லுஷுன்கௌ எனும் கடற்படை கோட்டை நகரத்திற்கு வருகின்றன, இங்கு விமானம் தாங்கி கப்பல் வடிவில் ஒரு ராணுவ செயல்பாடுகளை காட்சிப்படுத்தும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கிகளைக் கொண்ட வழிகாட்டிகள் தங்கள் குழுக்களை பூங்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர். பிறை வடிவ துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ராணுவ கப்பல்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவர்கள் கூறுகிறார்கள், மேலும் "தாய்நாட்டைப் பாதுகாக்க உதவியாக" உளவு பார்க்க வழிவகுக்கும் எந்த நடவடிக்கை குறித்தும் புகாரளிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சுட்டிக்காட்டுகின்றனர். பாலங்களிலும், சுவர்களிலும் ராணுவ அறிவிப்புகளில் "ஒன்றாக இணைந்து, நாம் நமது கடல் லட்சியத்தை பாதுகாக்கிறோம்" என்று எழுதப்பட்டுள்ளது. படக்குறிப்பு, டாலியனில் உள்ள ராணுவப் பூங்கா சுற்றுலா பயணிகளிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது. சீனா தனது கப்பல் கட்டும் திறமையில், குறிப்பாக இங்கு டாலியனில் தனது பெருமிதத்தை வெளிக்காட்டுகிறது. கப்பல் கட்டும் தளத்தை நோக்கி அமைந்த ராணுவ பூங்காவில், உள்ளூர் பாணியில் பூ வடிவ சட்டை அணிந்த 50 வயதான ஒரு இணைய பிரபலம் , தனது சமூக ஊடக பக்கத்தில் இருந்து துறைமுகத்தில் கட்டப்படும் சமீபத்திய கப்பல்களின் தினசரி விவரங்களை அளிக்கிறார். "நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - உண்மையில், இந்த நகரம் நமக்கு என்ன தருகிறது என்று பாருங்கள்," என்று அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் அறிவிக்கிறார். அண்டை மாகாணத்திலிருந்து விடுமுறைக்கு வந்த ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் கப்பல்களைப் பார்த்து வியக்கின்றனர். "நான் வியந்து பார்த்தேன். இந்த கப்பல் மிகப் பெரியது. இது எப்படி கடலில் செல்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது?" என்றார். அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் - சீனாவின் போர்க் கப்பல்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும், பெய்ஜிங் தனது கடற்கரையில் இருந்து எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறது என்பதுதான். "எந்த கட்டத்தில் அவர்கள் திடீரென முன்னேறி தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள், உதாரணமாக இந்தியப் பெருங்கடலிலும் அதற்கு அப்பாலும் செல்வார்களா, இது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கும்," என்று நிக் சைல்ட்ஸ் கூறுகிறார். "அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது, ஆனால் அவர்கள் நிச்சயமாக எல்லைகளைக் கடந்து முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8z64gp5l0o
-
இராணுவ பயன்பாட்டிற்காக வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - ஜனாதிபதி
01 Sep, 2025 | 03:11 PM போரின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுகிறது. கடந்த போரின்போது இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும். நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனத் தெரிவித்தார். மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அடையாள ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள் என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் 298 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/223926
-
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!
ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் 01 Sep, 2025 | 03:05 PM மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/223916#google_vignette
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 09:35 AM அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது பயணிக்கும்போது அனைத்து பயணிகளும் இன்று முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். தற்போது சீட் பெல்ட் பொருத்தப்படாத வாகனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/223889
-
'பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள்' - டிரம்பின் ஆலோசகர் கூறியது என்ன?
பட மூலாதாரம், EPA/Shutterstock 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் ஒரு பேசியுள்ளார். 'பிராமணர்கள்' இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இதை 'நிறுத்த வேண்டும்' என்றும் அந்த பேச்சில் நவரோ குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று கூறினார். "எனவே நான் சொல்வதெல்லாம், இந்திய மக்களே, தயவுசெய்து இங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்" என்று நவரோ கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்ட பின்னர், கடந்த சில நாட்களாக நவரோ தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருகிறார். இந்தியா மீது டிரம்ப் 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். பின்னர், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போரில் புதினுக்கு உதவி புரிவதாகக் கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்தியா அந்த வரிகளை 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு மாறானது' என்று கூறி, 'மலிவான எண்ணெய் எங்கே கிடைக்கிறதோ அங்கே தொடர்ந்து வாங்குவோம்' என்று திட்டவட்டமாக கூறியது. சீனா பற்றிய கேள்விக்கு நவரோ பதில் பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock சீனாவும் ரஷ்ய எண்ணெயை வாங்கும் போது, இந்தியா மீது மட்டும் கூடுதல் வரிகளை விதிப்பதால் புதினை 'கட்டுப்படுத்த' முடியுமா என்று நவரோவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, நவரோ, "சரி, இந்தியா மீது தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சீனா மீதும் 50 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வரியை உள்ளது. நமக்கு தீங்கு நேராமல் வரிகளை எவ்வளவு அதிகரிக்க விரும்புகிறோம் என்பதுதான் கேள்வி?" என்றார். பிப்ரவரி 2022 இல் புதின் யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பு, இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கவில்லை என்று நவரோ கூறினார். "பிறகு என்ன நடந்தது? சரி, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தன. புதின் மோதிக்கு கச்சா எண்ணெய் விலையில் தள்ளுபடி அளிக்கிறார். அவர்கள் அதை சுத்திகரித்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கு அதிக விலைக்கு விற்று நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்," என்று நவரோ கூறினார். "அப்படியானால் இதில் என்ன தவறு? உண்மையில், இது 'ரஷ்ய போர் இயந்திரத்தை' வலுப்படுத்துகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஆதரிக்கும் அதே வேளையில், இந்தியா தனது எரிசக்தி கொள்முதல் தேசிய நலன் சார்ந்தது என்று கூறி வருகிறது." "யுக்ரேன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் மீது தடைகளை விதித்தன. அப்போதிருந்து, ரஷ்யா இந்தியாவின் சிறந்த எரிசக்தி சப்ளையராக உருவெடுத்துள்ளது." பட மூலாதாரம், Reuters "இது யுக்ரேன் மக்களை காயப்படுத்துகிறது. வரி செலுத்துவோராக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், யுக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்ள அதிக பணம் அனுப்ப வேண்டும். இந்தியா வரிகளின் 'மகாராஜா' என்பதாலேயே கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது," என்று நவரோ குற்றம் சாட்டினார். "அவர்கள் (இந்தியா) உலகிலேயே மிக அதிக வரிகளை விதிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். நாங்கள் அந்த பொருட்களை தயாரித்து விற்க முடியவில்லை. அதனால் யார் பாதிக்கப்படுவார்கள்? அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க வரி செலுத்துவோர் மற்றும் ரஷ்ய டிரோன் தாக்குதல்களில் இறக்கும் யுக்ரேன் மக்கள்." என்று அவர் கூறினார். மோதியின் போர் என்று ஏற்கனவே விமர்சனம் பீட்டர் நவரோ முன்பு யுக்ரேன் போர் தொடர்பாக இந்தியாவையும் பிரதமர் மோதியையும் விமர்சித்துள்ளார். முன்னதாக உக்ரைன் மோதலை "மோதியின் போர்" என்று அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் புதன்கிழமை, அமெரிக்காவின் புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீட்டர் நவரோ இந்தியா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். ப்ளூம்பெர்க் டிவியில் ஒரு உரையாடலில், ரஷ்யா-யுக்ரேன் போர் உண்மையில் "மோதியின் போர்" என்று நவரோ கூறினார். "இந்தியாவின் செயல்களால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் இழப்பை சந்திக்கிறார்கள். நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் இழப்பை சந்திக்கின்றனர். இந்தியா விதிக்கும் அதிக வரிகள் நமது வேலைகள், தொழிற்சாலைகள், வருமானம் மற்றும் சிறந்த ஊதியத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன. பின்னர் 'மோதியின் போருக்கு' நாம் பணம் செலுத்த வேண்டியிருப்பதால் வரி செலுத்துவோரும் இழப்பை எதிர்கொள்கிறார்கள்" என்று நவரோ கூறினார். 'புதினின் போர்' என்று அவர் சொல்கிறாரா என்று ப்ளூம்பெர்க் அவரிடம் கேட்டபோது, "நான் 'மோதியின் போர்' என்று சொன்னேன், ஏனென்றால் அமைதிக்கான பாதை ஒரு வகையில் பார்த்தால் புதுடெல்லி வழியாகவே செல்கிறது" என்று நவரோ கூறினார். அவர் மேலும் கூறுகையில், "இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமானவர்கள் என்பது என்னைத் தொந்தரவு செய்கிறது. 'நாங்கள் அதிக வரி விதிக்கவில்லை, இது எங்கள் இறையாண்மை. நாம் எங்கிருந்து வேண்டுமானாலும், யாரிடமிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கலாம்.' என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியா, நீங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yk14e4v82o
-
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!
ஜனாதிபதியால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது 01 Sep, 2025 | 04:29 PM (எம்.நியூட்டன்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/223944
-
ஆப்கன், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு - தாலிபன் என்ன செய்கிறது?
ஆப்கன் நிலநடுக்கத்தில் 610 பேர் உயிரிழப்பு, 1300 பேர் காயம் - பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு பட மூலாதாரம், Reuters கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 1 செப்டெம்பர் 2025, 01:37 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு மாகாணங்கள் சிலவற்றில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபன் அரசு எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. "உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தற்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள மாகாணங்களிலிருந்து ஆதரவு குழுக்களும் விரைந்துக் கொண்டிருக்கின்றன, "என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் நூற்றுக்கணக்கானோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கம் எங்கு ஏற்பட்டது? 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் நாட்டின் ஐந்தாவது பெரிய நகரமான ஜலாலாபாத்திலிருந்து 17 மைல் (27 கி.மீ) தொலைவில் இதன் மையப்பகுதி இருந்தது. இந்த நிலநடுக்கம் குனார் மற்றும் லக்மான் மாகாணங்களையும் பாதித்துள்ளது. மேலும் 140 கி.மீ (87 மைல்) தொலைவில் உள்ள நாட்டின் தலைநகர் காபூலில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது. பட மூலாதாரம், TALIBAN GOVERNMENT குனார் மாகாணத்தின் சவ்காய் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 35 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து உடல்களை வெளியே எடுத்து வருவதாக பிபிசிக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன. பிபிசி பார்த்த ஒரு வீடியோவில், பொதுமக்கள் சிலர் மலைகளால் சூழப்பட்ட ஒரு திறந்த பகுதியில் கூடியுள்ளனர். காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் செல்லப்படுகின்றனர், குழந்தைகள் கதகதப்புக்காக போர்வைகளால் போர்த்தப்பட்டு தரையில் கிடத்தப்படுகின்றனர். பட மூலாதாரம், TALIBAN GOVERNMENT படக்குறிப்பு, காயமடைந்தவர்களை தரை வழியாகவும், வான் வழியாகவும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு தாலிபன் அரசு அனுப்பி வருகிறது. நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று காலையில் தெரிவித்திருந்தார். இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன. இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது. https://www.bbc.com/tamil/articles/cev2r7pkzv9o
-
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!
வடக்கிற்கு ஜனாதிபதி அநுர இன்று விஜயம் : பல அபிவிருத்தி கருத்திட்டங்கள் அங்குரார்ப்பணம் 01 Sep, 2025 | 06:13 AM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் யாழ் பிரதேச காரியாலயம் காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் செயலக பிரிவில் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வில் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவுள்ளதுடன், யாழ் நூலகத்தின் அபிவிருத்தி பணிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச புதிய கிரிக்கெட் மைதானத்தின் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை (2) ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு விஜயம் செய்து 'தென்னை தினம்' அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.அத்துடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டவுள்ளார். அத்துடன் பளை பகுதியில் தென்னை நாற்று உற்பத்தி நிலையத்தையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/223883
-
எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Published By: Vishnu 31 Aug, 2025 | 10:28 PM இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அதன் விலை 325 ரூபாவாக இருந்தது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 305 ரூபாவிலிருந்து 299 ரூபாவாக அதன் புதிய விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். https://www.virakesari.lk/article/223877
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் - சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா எச்சரிக்கை
31 Aug, 2025 | 09:03 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தில் வரைவு செய்யப்படும் என இதுதொடர்பில் ஆராய்ந்து புதிய சட்டமூலம் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில், திட்டமிடப்பட்ட குற்றச் சட்டத்தையும் முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும். திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும், அதேநேரம் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை தடுக்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றார். பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்வது என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். அதனால் செப்டம்பர் தொடக்கத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/223870
-
ஆப்கன், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு - தாலிபன் என்ன செய்கிறது?
கட்டுரை தகவல் ஹஃபிசுல்லா மரூஃப் பிபிசி ஆப்கன் சேவை 31 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்த 115 க்கும் மேற்பட்டோர் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 8 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.0 அளவிலானதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 23:47 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போதிருந்து, குறைந்தது மூன்று பிந்தைய நில அதிர்வுகள் - 4.5 மற்றும் 5.2 வரையிலான அளவுகளுடன் ஏற்பட்டுள்ளன. சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், கிட்டத்தட்ட 400 கி.மீ தூரத்தில் உள்ள பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், US Geological Survey நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் மீட்புக்குழுவினர் விரைந்து செல்வதற்கு எளிதானவை அல்ல, மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டவை. அங்குள்ள வீடுகள் பொதுவாக நிலநடுக்கத்தை தாங்கக் கூடியவை அல்ல. ஆகவே, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரும், ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமுமான ஜலாலாபாத்திலிருந்து 27 கி.மீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான பகுதியாக உள்ளது. பட மூலாதாரம், Getty Images உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் நங்கஹார் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர்கள் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர். அங்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாலிபான் அரசின் துணை ஆளுநர் அஜிசுல்லா முஸ்தபா பிபிசியிடம் கூறுகையில், கிட்டத்தட்ட 30 பேர் அவர் மேற்பார்வையிட்ட மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பேரழிவு "பரவலாக" இருப்பதால் "குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்" என்று அதன் மாதிரி கணிப்புகள் மதிப்பிடுகின்றன. இப்பகுதியில் இதே அளவிலான முந்தைய பூகம்பங்களுக்கு பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்புப் பணிகள் தேவைப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது. உதவி கோரும் தாலிபன் அரசு தொலைதூர மலைப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தாலிபன் அரசு அதிகாரிகள் உதவி வழங்கும் அமைப்புகளை வலியுறுத்தியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இப்பகுதிக்கான சாலைகள் அணுக முடியாத அளவுக்கு இருப்பதாக என்று குனார் மாகாண காவல்துறைத் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார். மீட்புப் பணிகளை விமானம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். தாலிபன் அதிகாரிகள் தங்களிடம் குறைவான வளங்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களை வழங்க சர்வதேச அமைப்புகளின் உதவியைக் கோருவதாகவும் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cev2r7pkzv9o
-
'ரணிலை வீழ்த்திய புலிகள்' : சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்றவர் இலங்கை அரசியலில் தனிமரமான கதை
பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார். தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசிங்க இன்று பதவியை இழந்து கட்சி அரசியலில் மாத்திரம் ஈடுபட்டு வந்த தருணத்தில் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு புதிய வகையான பிரச்னையொன்றை எதிர்நோக்கியுள்ளார். வெளிநாட்டு பயணமொன்றின் ஊடாக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் (26) நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. 50 லட்சம் ரூபாய் வீதமான 3 சரீர பிணைகளின் கீழ் ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தருணத்தில் சுகயீனமுற்ற ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு பல்வேறு நோய்கள் காணப்படுகின்ற பின்னணியில், அவர் தொடர்ந்தும் சிகிச்சை மருத்துவமனையில் தங்கியிருந்து பெற வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவ குழாம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்நோக்கிய சவால் மிகுந்த சர்ச்சைக்குரிய தருணங்கள் குறித்து இந்த கட்டுரை ஆராய்கின்றது. ஐ.தே.க கட்சித் தலைவர் பதவியின் சர்ச்சை பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்ட மிக முக்கியமான பழைமை வாய்ந்த கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது. சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக 1994ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், 1994-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை சந்தித்திருந்த பின்னணியில், கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோஷம் 2010-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்தது. கட்சி தலைவர் பதவி சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்திய பின்னணியில், 2015-ஆம் ஆண்டுக்கு பின்னராக காலத்தில் அது வலுப்பெற ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருந்தனர். இந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸ பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவினர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்திருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கை இழப்பே, ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்க பிரதானமான காரணமாக அமைந்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த ஏனைய கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து வெளியேறி, சஜித் பிரேமதாஸவுடன் கைக்கோர்த்திருந்தனர். இந்தப் பின்னணியில், 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார். 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நாடாளுமன்ற ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் பெற்றுக்கொண்ட முழுமையான வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது. இவ்வாறு கிடைக்கப் பெற்ற ஒரு ஆசனத்தின் ஊடாக புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு 6 மாதங்களின் பின்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தனியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார். பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் ரணில் விக்ரமசிங்க தனிமையடைந்திருந்தார். இதையடுத்து, கொரோனா தாக்கத்தின் ஊடாக நாடு பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியது. தனிநபராக நாடாளுமன்றத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திய அவர், பொருளாதார சிக்கல் காரணமாக எழுந்த போராட்டத்தினால் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பு விடுத்தார். எனினும், பிரதான எதிர்க்கட்சிகளான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆகியன ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த பின்னணியில், தனிநபராக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ரணில் விக்ரமசிங்க கோட்டாபய ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டார். அதன் பின்னர் வலுப்பெற்ற போராட்டம் காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, பதில் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்ரமசிங்க, அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளின் ஊடாக புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது ஒரு ஆசனத்தின் ஊடாக தனது அரசியலை செய்து, இறுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒரேயொருவர் ரணில் விக்ரமசிங்கவாக கருதப்படுகின்றார். அதன்பின்னர், பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்ட நாடு, ஒரு சில மாதங்களிலேயே வழமை நிலைக்கு திரும்பியது. எனினும், 2024ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தோல்வியை சந்தித்திருந்தார். பல முறை ஆட்சி பீடம் ஏறி, இறுதியில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொறுப்பை அந்த கட்சியின் தலைவராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க ஏற்க வேண்டும் என பல தரப்பினர் கூறியிருந்தனர். எனினும், சவால்களை கடந்து, இறுதியில் தனிநபராக ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார். சந்திரிக்கா கலைத்த அமைச்சரவை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான மக்கள் கூட்டணி தோல்வி அடைந்து, ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதன் ஊடாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். நிறைவேற்று அதிகாரம் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கட்சி வசமும், ஆட்சி அதிகாரம் பிரதமரான ரணில் விக்ரமசிங்க வசமும் காணப்பட்டது. இதனால், ஆட்சியை உரிய முறையில் செய்வதில் பாரிய இழுப்பறி நிலைமை அந்த காலப் பகுதியில் காணப்பட்டது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த அந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தி, நாட்டில் போர் நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறான பின்னணியில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகாரத்திற்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறி இரண்டு வருடங்களின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையை கலைத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 105 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சி 82 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. இந்த நாடாளுமன்ற கலைப்பானது ஜனநாயக விரோத செயற்பாடு என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதித்திட்டமாக அந்த காலப் பகுதியில் கருதப்பட்டது. 'ரணிலை வீழ்த்திய விடுதலைப் புலிகள்' படக்குறிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுத்த அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக அ.நிக்சன் குறிப்பிடுகின்றார். இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் 2005ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியிருந்தார். மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மஹிந்த ராஜபக்ஸ 4,887,152 வாக்குகளை பெற்றிருந்ததுடன், ரணில் விக்ரமசிங்க 4,706,366 வாக்குகளை பெற்றுக் கொண்டார். மஹிந்த ராஜபக்ஸவிடம், ரணில் விக்ரமசிங்க வெறும் 180,786 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்திருந்தார். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியை தழுவ பிரதானமான காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதினர். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமிழர் பிரச்னை தொடர்பில் சரியான தீர்வுகளை முன்வைக்க தவறிய பட்சத்திலேயே, விடுதலைப் புலிகள், 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை, ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பை ஏற்றுக்கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பை பெரும்பாலும் தவிர்த்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவிப்பே ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கான பிரதானமான காரணமாக அமைந்திருந்ததாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் குறிப்பிடுகின்றார். ''சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளினால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்திருந்தால், குறைந்தது இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டிருந்திருப்பார். நிச்சயமாக அவர் வென்றிருப்பார். அந்த மக்கள் வாக்களிக்கவில்லை. அதனாலேயே அவர் தோல்வி அடைந்தார். ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்திருந்தாலும் போர் நடந்திருக்கும். கட்டாயம் போர் நடந்திருக்கும். ஆனால், மஹிந்த ராஜபக்ஸ மாதிரி மிக மோசமாக போர் நடந்திருக்காது. ரணில் விக்ரமசிங்க வந்திருந்தால் விடுதலைப் புலிகள் மீதான தடைகளும் சர்வதேச ரீதியாக அதிகரித்திருக்கும்.'' என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் கூறுகின்றார். 2018 அரசியலமைப்பு குழப்பம் பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்த வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார். ராஜபக்ஸ குடும்பத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 2015ம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பிலிருந்த மைத்திரிபால சிறிசேனவை அங்கிருந்து பிரித்து, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் நல்லாட்சி என்ற பெயரிலான அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தனர். 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியாக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். 2015ம் ஆண்டு முதல் மீண்டும் பிரதமர் பதவியை வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேன மீண்டும் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பதவி நீக்கியிருந்தார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 2004ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கத்தை போன்றதொரு சம்பவத்தையே, மைத்திரிபால சிறிசேன மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகழ்த்தியிருந்தார். இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு பதவி விலக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார். இது இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியலமைப்பு குழப்ப நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக்கியமையானது, நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற மறுத்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேல் நீடித்த இந்த சர்ச்சையை உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு, மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது, சட்டவிரோதமான செயற்பாடு என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்த சர்ச்சையானது, இலங்கை அரசியலமைப்பு குழுப்பநிலையை ஏற்படுத்தியிருந்ததுடன், அது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்ட மேலும் சில சர்ச்சைகள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றார். பட்டலந்தை சித்திரவதை முகாம் நடத்தியதாக கூறப்படும் சம்பவம், மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் என சர்ச்சைகளை எதிர்நோக்கிய ரணில் விக்ரமசிங்க, தற்போது வெளிநாட்டு பயணத்தின் போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தற்போதைய ஆட்சியாளர்களினால் வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற நிலையில், நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. எனினும், ரணில் விக்ரமசிங்க சுகயீனமுற்ற நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23zlvel1po
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!
பாதாள உலகக் குழுவினரை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து பகிரங்கமாகக் கையாள்வது ஆபத்து - பிரேம்நாத் சி தொலவத்த 31 Aug, 2025 | 08:37 PM (எம்.மனோசித்ரா) பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல. மிகவும் சூட்சுமமாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமுமாகும். அரசாங்கத்தின் இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கே.பி.பத்மநாதன் மற்றும் மாகந்துரே மதுஷ் போன்றவர்களும் கடந்த ஆட்சி காலங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான விளையாட்டுக்களை நாம் பார்க்கவில்லை. சந்தேகநபர்களை அழைத்து வரும் போது அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் எதற்காக விமான நிலையத்துக்குச் செல்கின்றனர்? கேலிக் கூத்து காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த போது இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் 159 பேரும் நந்திக்கடலுக்குச் சென்று குளித்து நடனமாடியிருப்பர். கொண்டாடப்பட வேண்டிய விடயங்களை விடுத்து பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கைது செய்யப்பட்மை சிறந்த விடயம். ஆனால் அது இந்தளவுக்கு கொண்டாடப்பட வேண்டியதல்ல. இது மிகவும் சூட்சுமமாக கையாளப்பட வேண்டிய விடயமாகும். விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கமாகக் காண்பிக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் எஞ்சியிருக்கும் பாதாள உலகக் குழுக்குழுவினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இலகுவாக இருக்கும். பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவற்கான நகர்வுகள் இரகசியமானவையாக இருக்க வேண்டும். ஏனையோர் மீது குறை கூறிக் கொண்டிருக்காமல் தமது பொறுப்பினை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம். எமது ஆட்சி காலத்தில் பெருமளவான பாதாள உலக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அரசாங்கமானாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தவே முயற்சிக்கும். மாறாக அவர்களை நிர்வகிக்க நினைப்பதில்லை. இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/223865