Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. 1) ""சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம்."" சிங்களத்தையும் இந்தியையும் நான் தொட்டுச் செல்லவில்லை. எமது வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது என் ஆதங்கம். நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது என்று இதற்காகத்தான் குறிப்பிட்டேன். 2) உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான் உங்கள் கணிப்பு தவறு. நீங்களும் நானும் எப்படியோ பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் நிலத்திலுள்ள மக்களின் நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எமது தவறுகளை அடையாளம் காண முடியும். 3) அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம். [உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன்,....(சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள உங்களின் கருத்துப்படி) 90% மான மக்களின் கருத்தைத்தானே 10 வீதமானவர்கள் கேட்டிருக்க வேண்டும்? இல்லையா? ] எதைச் சாதித்தாலும் வாய்ப்புக்களைத் தவறவிட்டால் இருப்பது இல்லாமல் போகும் என்பதற்கு ஈழத் தமிழரதுப்போராட்டம் சிறந்த உதாரணம். கவனிக்க: இங்கே நாம் என்று என்னால் குறிப்பிடப்படுவது எம் எல்லோரையும் சேர்த்துத்தான. எவரையும் தனியே குறிப்பிடவில்லை. “[I]t is much better to lose a battle and win the war than to win a battle and lose the war. Resolve to keep your eyes on the big ball.”
  2. நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது. ஆனாலும் realty என்ன? இன்று நாம் கையறு நிலையில் நிற்கிறோம். இல்லையா? எங்கள் நிலத்தில் உள்ள மக்களிடம் இருந்த அற்ப சொற்ப பலமும் இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் உள்ளவர்களோ ஆளாளுக்கு நான்கு திசைகளாகப் பிரிந்துவிட்டோம். எங்களிடம் எஞ்சியிருப்பது என்ன? இதிலிருந்துதானே எமது தவறுகளை எடைபோட முடியும்? இன்னும் 10 வருடங்கள் கழித்து தாயக மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனது ஆதங்கம்/கோபம் புரியும்.
  3. வேலியில் ஓட்டையைப் போட்டு அதற்குள்ளால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களது privacy யை மீறலாம் என்று கூறுவது நாகரீகம் அடைந்த மக்களுக்கு அழகல்ல.
  4. எமக்கு அது பிரச்சனை இல்லை என்று கூறாதீர்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை என்று கூறுங்கள். அதுவே நியாயம், அதுவே நீதி,.....🤣
  5. குடு, கஞ்சா, ஊழல் என்று வரும்போது அவர்கள் தனிநபர் என்கிற வட்டத்தில் இருந்து வெளியே வந்துவிடுகின்றனர். அதுவரைப் பொது வாழ்க்கையில் உள்ளவர்களது Private life தொடர்பாக கருத்துச் சொல்லும் உரிமை எனக்கோ அல்லது உமக்கோ அல்லது வேறு எவருக்குமே இல்லை. அது எதிரியாக இருந்தாலும் ஒன்றுதான். இதுதான் அறம், ஒழுக்கம்.
  6. மிகவும் நம்பரமான தகவல். அவர் பொது வெளியில் வந்த காரணத்தால் மட்டுமே இதனை இங்கே குறிப்பிடுகிறேன். அத்துடன் யார் யாரைக் காதலிக்கின்றனர், திருமணம் செய்துகொள்கின்றனர் என்பது எனது உமது கரிசனைக்குரிய விடயம் அல்ல. 😉
  7. 1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது அந்த சமஷ்டியைக் குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா? இந்த சிந்தனை முறையின் விளைவுதான் ஆயுதப் போராட்டமும் அழிந்து இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம். புலம்பெயர் டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 😏
  8. இப்போது மேற்கொள்ளப்பட்ட இமயமலைப் பிரகடனமும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதற்குள் அடங்கும்? போர்த்துக்கொண்டு குப்பறப் படுத்துக்கொண்டால் எதுவுமே நடைபெறாது. வைக்கோற் பட்டடை நாய் தானும் உண்ணாது, உண்ணவரும் மாட்டையும் விடாது என்பதற்கு எமது கொஞ்ச புலம்பெயர் டமில்ஸ் நல்ல உதாரணம். 😏
  9. இது அரசியல், சமூகவியல், வரலாறு, மானிடவியல் போன்ற எல்லா துறைகளிலும் உள்ள பஞ்சத்தைப்போல தற்போது திறமை மிக்க ஊடகவியலாளர்களுக்கும் எமது சமூகத்தில் தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சாணக்கியன் தனக்குத் துணையாக ஒரு சிங்களப் பெண்ணை தெரிவு செய்துள்ள விடயம் உண்மை. ஆனால் அது அவரவர் தனிப்பட்ட தெரிவு. அதை யாரும் குறை சொல்ல முடியாது.
  10. உங்கள் வாக்கு ஒவொன்றும் 5,000 ரூபாய் விலைபேசி வாங்குவதுதான் சரியானது. 😏
  11. அயோக்கியர்களின் இறுதி ஆயுதம் மதம் 🤣
  12. U.S. Seized Iranian Oil Over Smuggling Incident That Escalated Tensions in Gulf The apprehension of the ship, the Suez Rajan, came after a group opposed to Iran raised accusations of sanctions violations last year. Share full article Read in app The advocacy group United Against Nuclear Iran said this satellite image shows the Virgo, left, and the M/T Suez Rajan in the South China Sea. At the time the image was taken, the Virgo reported a false location of about eight miles away. Credit...Planet Labs, via Associated Press By Charlie Savage and Ronen Bergman Charlie Savage reported from Washington, and Ronen Bergman from Tel Aviv. Sept. 6, 2023 Sign up for Your Places: Extreme Weather. Get notified about extreme weather before it happens with custom alerts for places in the U.S. you choose. Get it sent to your inbox. The United States government has seized nearly one million barrels of Iranian crude oil that it says was being smuggled to China in violation of U.S. sanctions against Iran, after it raised the threat of prosecution to get the tanker brought to American waters, newly unsealed court papers show. The seizure of the oil from the vessel, the M/T Suez Rajan, is part of a larger and shadowy conflict with Iran. After the tanker began to steam toward the United States last spring, Iran’s Revolutionary Guards C https://www.nytimes.com/2023/09/06/us/politics/iran-oil-sanctions-violations.html இதைத்தான் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பது. 🤣
  13. வேலை நேரத்திலும் அமைதியாக ஓய்வெடுக்க விரும்பும் தருணங்களிலும் எனக்கு உயிர் கொடுப்பது இளையராஜா, கங்கை அமரன் மற்றும் சில இசையமைப்பாளர்களின் இசையே. அடக்கம் அமரருள் உய்த்துவிடும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும். நான் வெறுப்பது தேவாவின் பிற்கால copy cat பாடல்களையும் தற்கால copy king அனுருத்தின் பாடல்களையுமே. (என்னிடம் இறைவன் என்ன வரம் வேண்டும் எனல் கேட்டால் அனிருத்தின் கைகள் key board ன் பக்கம் போகும்போது அனிருத்திற்கு ஞாபக மறதி வரவேண்டும் என வரம் கேட்பேன். 🤣)
  14. 👆இது கேள்வி 🤣 திராவிடர் என்பதற்குள் சிங்களம் வருமா? ஸ்ராலினுக்குப் பக்கத்தில் கதிரை போடவேண்டி ஏற்படுமல்லோ அதுதான் அழைப்பில்லை என நினைக்கிறேன். 🤣
  15. உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்வது இந்திய நலனுக்கும் சிங்களத்தின் நலனுக்கும் பாதகமானது. மேற்கின் கை இதன் பின்னணியில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.
  16. இலங்கைக்கு ஒரு நீதி, ரஸ்யாவுக்கு ஒரு நீதி, இஸ்ரேலுக்கு ஒரு நீதி என்றாகிவிட்டது. சர்வதேச நீதிமன்றம் பக்கச்சார்பான ஒரு அமைப்பு என நிரூபணமாகி பலகாலம் ஆகிவிட்டது.
  17. உலகத் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தால் அது நன்மையே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.