Everything posted by putthan
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல...
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
வள்ளலார் சுவாமிகளை பற்றி பேசும் பொழுது இன்றும் தமிழக பேச்சாளர்கள் குறிப்பாக சிவப்பு சிந்தனையாளர்கள் ஆறுமுகநாவலரை குறை கூறுவதை கவனிக்கலாம் ...வள்ளலாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தமையே இதற்கு காரணம் ...வழிபாட்டு முறை....இருவரும் இந்துக்கள்.... இன்றைய காலகட்டத்தில் இந்திய துனை தூதரகம் ஹிந்தி மொழியை யாழ் இந்துக்கல்லூரியில் அறிமுக படுத்துவதில் முழு மூச்சாகசெயல் படுகிறது. இஸ்லாமிய பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.. அரபியர்கள்,ஹிந்தியர்கள் இல்லாத சூழலிலும் சில மத ,மற்றும் அதிகார மையங்கள் தங்கள் மதம் சார்ந்த மொழிகளை பக்தி நூல்களை காரணம் காட்டி பரப்புகின்றனர்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
உண்மை மாற்று கருத்துக்கு இடமில்லை.ஆனால் அதுதான் உலக ஒழுங்கில் உள்ள மரபு ..பல நூற்றாண்டு காலமாக நடை பெற்று வருகிறது .ஆதிக்கம் ,அதிகாராம்,படை பலம் உள்ளவர்கள் தங்களது மதகருத்தியல்,மொழி,அரசியல்போதனைகள் போன்றவற்றை ஏனைய இனங்களுக்கு பரப்புவதற்கு தேர்ந்து எடுத்த முறை ...இனசுத்திகரிப்பு .....மத சுத்திகரிப்பு ...அரசியல் கருத்தியல் சுத்திகரிப்பு... நாடுகள் ஒரு காலகட்டத்தில் வாள் கொண்டு தலைகளை வெட்டி மக்களை பயமுறுத்தி தங்கள் மத கருத்தியலை பரப்பினர் ....அதனால் சில நாடுகள் தங்களது கொடியில் இன்றும் வாள் சின்னத்தை முக்கியப்ப்டுத்துகின்றனர்...
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அரசியல் தலைவர்களை,போராட்ட தலைவர்களை,பயங்கரவாத தலிவர்களை வாழ,வளர விடுவார்கள் .....உலக ஆதிக்க சக்திகள்.. எப்பொழுது இந்த தலைவர்கள் தங்களுக்கு எதிராக தங்களது சொல் கேளாமல் இயங்க தொடங்கிறார்களோ அன்று போட்டு தள்ளிவிடுவார்கள்.மார்டின் லூதர்கிங்,கென்னடி,காந்தி,ராஜீவ் காந்தி, சதாம்,கடாபி,பின்லாடன், நம்ம தலைவர்,ஈரான் ஜனாதிபதி,.....இது தொடரும்... தலைவர்களை போட்டு தள்ளினால் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல் சில காலங்களின் பின்பு அழிந்து போகும் என்பது கொள்கை வகுப்பாளர்களின் கொள்கை போல தெரிகிறது... தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை ஆட்சி கவிழ்ப்பின் ஊடாக ஓரம் கட்டுவார்கள்
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
வாழ்த்துக்கள்
-
மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது! - ஜனாதிபதி ரணில்
நாங்கள் மறக்க மாட்டோம் உங்கள் பரம்பரம்யினரை.... சீனி,மா,பாண் ,உடைகள் (சீத்தை) போன்றவற்றுக்கு வரிசையில் நின்றதை மறக்க மாட்டோம் ...பிறகு உங்க்களுடைய மாமாவும் நீங்களும் ஆட்சிக்கு வந்த பின்பு தானே சனம் கேக் சாப்பிட்டவையள் ..... எங்கள் வாக்கு உங்களுக்கே ☺️
-
1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
இவர்கள் எல்லாம் இனம்,மொழி,குடும்பம் எல்லாம் கடந்த ஞானிகள் ளப்பா...
-
ஆட்பதிவு திணைக்கள தரவுக் கட்டமைப்பை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி - விமல்
பிறகென்ன ....ஆட்பதிவு திணைக்களத்தை இந்தியா உள்வாங்குவதன் உள் நோக்கம் சிறிலங்கா மக்களை இந்தியா மக்கள் என பதிவு செய்வதற்கே... இந்தியாவின் உள்நோக்கம் புரிந்து கொண்ட அரசியல்வாதி நீங்கள் மட்டுமே ...இதை தடுத்து நிறுத்த ..கடையெரிப்பு,ஆர்ப்பாட்டம்.அரச சொத்துக்களை நாசம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுங்கள்
-
ஆனைக் கோட்டையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
பாடசாலை அபிவிருத்தி,கோவில் அபிவிருத்தி,வைத்தியசாலை அபிவிருத்தி,அரசியல் கட்சிகளின் அபிவிருத்தி ....இப்படி பல அபிவிருத்திகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் பணம் செல்கின்றது ..... புதிதாக இந்த பட்டியலில் தொல்பொருள் ஆராச்சிமா?
-
சிங்களதேச வேட்பாளருக்கு வாக்களிக்கப் போட்டி! தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க சூளுரை!
அதுவும் இன்னும் 10 ,15 வருடங்களுக்குதான் .....எங்கன்ட தலைமுறையினரின் பணம் அனுப்பும் படலம் முடிவடைந்த பின்பு வேறு மத நிறுவனங்களின் பணம் அதிகமாக கிடைக்க பெற்றால்...மக்கள் அங்கே தஞ்சமடைவார்கள்
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நாங்கள் என்ன தான் அறிவு பூர்வமாக விவாதித்தாலும்... நாங்கள் ஊரில் ,சும்மா கே.கே....சாப்பை..என நகைச்சுவையாக அதன் தீவிரதன்மை புரியாமல் பேசிய விடயங்கள் ...இன்று புலம்பெயர்ந்த பிரதேசத்தில் எமது அடுத்த தலைமுறையினரின் வாசற்படியில் வந்து நிற்கின்றது.. ஒரினசேர்க்கையாளர்களினால் பாதிக்கப்பட்ட சாதாரண பெண்கள் அதிகம்... ஒரு மருத்துவர் (ஒரினசேர்க்கையாளர்)அதை பெண்ணிடம் கூறாமல் தனது தாயின் வேண்டுகோளுக்காக ஒர் சாதாரணபெண்னை திருமணம் முடித்த பின்பு ...அந்த பெண்னுடன் வாழ்க்கை நடத்தாமல் விலகி சென்றுள்ளார்...
-
குருந்தூர்மலையில் பொலிஸ் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு
ஏன் முடியாது ? வழிபடலாம் பிரச்சனை என்னவென்றால் அந்த நிலத்துக்கு சொந்தகாரன் யார் என்பது தான்....பெளத்தர்கள் எல்லாம் சிங்களவர்களாகவும்,சைவர்கள் எல்லாம் தமிழர்களாகவும் இருப்பது அடுத்த பிரச்சனை.... மதம் என்ற வகையில் பிரச்சனை தீர்க்கப்படலாம் ஆனால் இனம் என்ற வகையில் இதை அணுகுவதால் பிரச்சனை எழுகின்றது... 15ஆம் நூற்றாண்டுகளுக்கு பின்பு அறிமுகமான மதங்களை மக்கள் விரும்பி பின்பற்றுகின்றனர்....அதற்கு முன் வந்த மதங்களை ஏன் பின்பற்ற மாட்டார்கள்.. கொட்டகேனா கிறிஸ்தவ தேவாலயத்தில் திறுநீற்று குறியுடன் செல்பர்களை காணலாம்.. வற்றாப்பளை ,நல்லூர் கோவில்களில் பெளத்தர்கள் வழிபடுவதையும் காணலாம்.. ஒரு மத நிறுவனம் தனது ஆளுமையை அந்த நிலத்தில் நிலைநாட்டிய பின்பு ஏனைய மதங்களை அரவணைப்பது சரித்திரம்...
-
தேசிய மக்கள் சக்தி இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையின் புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டும் - லண்டனில் அநுர குமார !
நீங்கள் தான் உலகத்துக்கே நாகரிகம் கற்று கொடுத்த அறிவு கொழுந்துகள்
-
பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
இப்படி இடக்கு மடக்கான கேள்வியை கேட்டா நாங்கள் எப்படி பதில் சொல்வது.... 13 ஆம் திருத்த சட்டத்தை வைத்து நாங்கள் இன்னும் 15 வருசம் அரசியல் நடத்த வேணும் ....
-
மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் - டக்ளஸ் தேவானந்தா
நல்ல விடயம்....ஒற்றுமைக்கான சிலை அமைத்தாலேபோதும்...
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
இன்று சிறிலங்கா தேசிய கட்சிகளை தமிழ் பகுதிகளில் நிலைநிறுத்த பலர் முயற்சி செய்கின்றனர் ...சிவப்பு கோவண கட்சி ஜெ.வி.பி யும் ....பச்சை கோவணம் ஐக்கிய தேசிய கட்சியும்....இதற்காக தமிழ் தேசிய கட்சிகளை உடைக்கின்றனர் ....
-
புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை
இரு பகுதியையும் குற்றம் சாட்டுவது இலகுவானது ....ஆனால் தமிழரசு கட்சியை உடைக்க வேணும் என்ற கொள்கைக்கு நாங்கள் உடன்பட முடியாது ..70 வருடங்களாக பல ஊத்தைகள் வந்து போய்விட்டார்கள் அதற்காக தமிழ் தேசியத்தை அழிக்க உதவ முடியாது ...
-
மத்தல விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய, ரஸ்ய நிறுவனங்களிடம்!
Dijibotiநாடு போன்று சிறிலங்காவும் வருகின்றது ....சோமாலியாவின் ஒர் சிறிய பகுதியை பிரித்து இந்த நாட்டை உருவாக்கி சகல நாடுகளின் படைத்தளங்களையும் அமைத்து சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது போல சிறிலங்காவையும் அதே டெம்பிளெட் நாடாக மாற்ற முனைகின்றனர்...உலக சண்டியர்கள் .......
-
"போதும் இந்த நரகம்..!"
சபலங்கள் வரும் பொழுது மனைவியின் துணை யுடன் சபலத்தை தீர்த்துவிட்டால் சகலதும் சுபமென சொல்லுறீயல்...என்ன ஒரு வயதுக்கு பின்பு வள்ளுவரின் காமத்துபாலை விட அறத்துப்பால் சிறப்பு என புலம்பத்தொடங்கிவிடுவார்கள் ..
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரானின் ஜனாதிபதி சிறிலங்காவுக்கு உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொள்ள போகின்றாராம் என செய்திகள் வருகின்றது...2008 ஆம் ஆண்டு தொடங்கிய அணைக்கட்டு இப்ப திறக்க போறார்... வளைகுடா தியட்டர் ஒவ் ஒபரேசன் முடிவுக்கு வந்து ....தென்னாசியா வில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தியட்டர் ஒஃப் ஒப்பரேசன் தொடங்க போகின்றார்களோ? நம்ம லங்கா மாதா உசாராக இருக்க வேணும்...ஒரு பக்கம் ஈரான் சீனா ரஸ்யா கூட்டு....மறு புறம் அமெரிக்கா மேற்கு கூட்டு ...வழமை போல இந்தியா இரண்டு பேருக்கும் வாலாட்டி கொண்டு சிறிலங்கா மாதவை லவ் பண்ண முயற்சிகள் ஆனால் சிறிலன்கா மாதா இவரை கனவிலும் கை பிடிக்க மாட்டார்...என்பது உலகமறிந்த உண்மை
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
-
இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!
தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
-
மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது!
இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..