-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஏழு வருடங்களுக்கு முன்பே என்னுடைய ஆணித்தரமான கருத்தை இப்பகுதியில் வைத்துவிட்டேன் இது கருத்துக்கள உறுப்பிர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய நாற்சந்தியில் அமைந்திருக்கிறது. யாழ் கருத்துக்களத்தின் நிலவரம் இதுவரையும் மாற்றமடையவில்லை கருத்தாடல்கள் தனிமனிதத் தாக்குதல்களாக மாறுவது காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று செவ்வியன். கருத்தாளர்களைக் குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் பார்வை என்பது அவர்களுக்குள் இருக்கக்கூடிய எண்ணங்கள் நம்பிக்கையின் பால் ஏற்படுவது. எண்ணங்கள் நம்பிக்கைகளை தூரநோக்கில் பார்க்கப் பழக்கப்படாதவர்களிடம் எதையும் கலந்தாலோசிக்கமுடியாது அவ்வளவுதான்.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நாங்கள் இங்கு சீமானுக்காக அல்லது சீமானுக்கு எதிராக கருத்தாடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையில் நாம் சிந்திக்கவேண்டியது தமிழக மீனவர்களும், தாயக மீனவர்களும் மிகப்பெரும் எதிரியாக மாறிவிட்டார்களே... அதைப்பற்றித்தான் நாம் இப்போது கவலைப்படவேண்டும். ஒருகாலத்தில் தாயகம் தமிழகம் இறுக்கமான உறவை வைத்திருந்ததே இந்த மீனவர்களால்தான் இப்போது அத்திவாரமே தகர்க்கப்பட்டு சிதைவடைந்துள்ளது. இதனை எப்படி சுமூகநிலைக்கு கொண்டு வருவது என்று கலந்துரையாடுவதும் அதனைச் செயற்படுத்துவதுந்தான் காலத்தின் தேவை.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
எழுதுவதுதான் அத்திபூத்தாற்போல் ஆனால் நாளாந்தம் இங்கு வருகை தந்து வாசிக்கிறேன். இந்தப்பக்கம் வரும்போதுதான் ஈழத்தமிழினம் எவ்வளவுதூரம் பலவீனமாகி விட்டது என்பதை முழுமையாக உணரமுடிகிறது.
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நாம எங்க நிக்கிறம் என்றே புரியவில்லை.....
-
உண்மை தெரிந்தாகனும்
எங்கேயோ கேட்ட குரல் 🤔
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
எறும்பூர கற்குழியும். 🙂
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
"நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும்இ நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது." மிக ஆக்கபூர்வமான கட்டுரை எழுதியவர் எவ்வளவு தூரம் இந்த கருப்பொருளுக்குள் தன்னை மிக நுட்பமாக நுழைத்து ஆய்வு செய்கிறார் என்பதை வாசித்துக்கொண்டுபோகும்போது நன்றாக உணரமுடிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்றல் என்பது பாலியல் வன்முறை சார்ந்த விடயங்களில் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது என்பதை ஆய்வாளரின் எழுத்துகள் நிரூபிக்கின்றன. சாதாரண நீரோட்டமான வாழ்க்கையிலும் நான் பழகும் பலரில் அந்த ஆய்வில் கூறப்பட்ட குணாதியங்களை காண முடிகிறது.மனோதிடம் குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இலகுவாக ஒருவரை மனோதிடம் உடையவராக மாற்றிவிடமுடியாது. ஆய்வாளரின் எழுத்துகள் அவருடைய பலதரப்பட்ட முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. நல்ல முயற்சியும் தேடலும் வழிநடத்தலும் வாழ்த்துகள் கிரிசாந்த். இணைப்பிற்கு நன்றி கிருபன். கட்டுரையை வாசித்தவுடன் நிறையவே எழுதவேண்டும் என்று தோன்றியது ஆனால் கைத் தொலையேசியில் வாசித்ததனால் அப்போது எழுதமுடியவில்லை பின்னர் எழுதலாம் என்று தள்ளிப்போட்டேன் எழுத நினைத்த விடயங்கள் எங்கோ போய் ஒளிந்து விட்டன.
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பெண்களை மிதிக்கும் சமூகம் என்பதற்கு இதை விட வேறு சாட்சியம் வேண்டுமா?
-
துவாரகா உரையாற்றியதாக...
விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே! விலை எங்கு போனீர்? வலை பின்னி வாரீர் வார்த்தைகள் பொய்க்கின்றீர் நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன். தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினி ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் இழப்பிற்கும் நேரில் வந்து பங்குபற்ற முடியாமல் பென்டமிக் தடைசெய்தது. இப்போதும் நேரில் சமூகமளிக்கமுடியாத சூழலில் இருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன். கண்டிப்பாக நேரில் சந்திப்பேன்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
புட்டின் மகிமையால ஞானத்தங்கமே - எங்கள் கு.சா குழம்பிப்போனார் ஞானத்தங்கமே😁
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
ஒரு சம்பவத்தை மிகவும் இரசித்து வாசிக்கும்படி எழுதும் பாணி வெட்டுக்கிளிக்கு லாவகமானது என்பதற்கு உங்கள் பதிவுகள் சாட்சி. இரசித்து சிரித்தபடியே வாசித்து முடித்தேன். சூப்பர்
-
அந்தக் கண்கள்- நிழலி
என்னதான் வக்கணையாய் ஆயிரம் கதைகள் கதைத்தாலும் பக்கத்தில் உடன் வரும் துணைதான் ஆபத்பாந்தவர். வீட்டுக்குப் போன பின்னால் நிழலி கவிதாவின் காலில் அட்டாங்க நமஸ்காரம் செய்ததாக காற்று வாக்கில் கதை அடிபட்டது நான் தான் நம்பேல்லை. பட் இப்ப நம்புறேன். கிலியை உண்டாக்கும் எழுத்தென்றாலும் அந்த நீட்டி முழங்கல் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விடுகிறது. பாராட்டுகள் வெட்டுக்கிளி
-
காலச்சுழல்
நல்ல கவிதை தியா. அரிதாக என்றாலும், சிறகுகள் உடைந்தாலும் மேலும் கீழுமாக என்றாலும் பறவை பறக்கிறது அல்லவா. ஆதலால் பறவை தொலையவும் இல்லை தன்னைத் தொலைக்கவும் இல்லை. நான் சொல்வது சரிதானே.. 🙂