Everything posted by விசுகு
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
அவா ஒரு காலத்தில் சிவாஜி கணேசனுக்கு காதலியாக இருந்தவர் (படத்தில்🤣) எனக்கும் தான் பைலட் பிரேம் நாத் படம் பார்க்கும் வரை...🫢
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
செய்வது என்றால் நாமும் எதையாவது உருவவேண்டும். இங்கே அதற்கு இடமில்லாத போது .... உருப்பட வாய்ப்பே இல்லையே 🤪
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
வந்தோம் படம் பார்த்தோம் சொல்லாமல் சென்றோம்....😛
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
என்னை சட்டத்துறையில் வளர்த்தவர் குமார் பொன்னம்பலம்... https://www.facebook.com/share/v/14QPhdXVgDr/
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
1983 july எமது கடை தாக்குதலுக்கு உள்ளான போது நாங்கள் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது கதவை உடைக்க முடியாததால் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டு படியால் இறங்கமுடியாத நிலை வருகிறது. எனவே முதலாம் மாடியின் பின்புறமாக சென்று அங்கிருந்து பக்கத்தில் உள்ள குடிசைகளின் கூரை மீது நடக்க ஆரம்பித்தேன். சில வீடுகள் தாண்டியதும் கீழே இறங்க ஒரு இடம் கிடைத்தது. இறங்கி தப்பலாம் என்று காலை வைத்தபோது இறங்கினால் வெட்டுவேன் என்று ஒருத்தன் தமிழில் கத்தியபடி கத்தி எடுக்க ஓடுகிறான் அவன் எனக்கு நன்கு அறிமுகமானவன். நேற்று வரை என் அண்ணனின் தோளில் கை போட்டபடி நட்புடன் இருந்தவன். அப்பொழுது பிரபாகரன் அவர்களுக்கு என்ன தீமை செய்திருந்தார். அவன் ஏன் என் முதுகில் குத்தினான். நான் தமிழன் என்பதை தவிர என்ன செய்தேன்......? மீண்டும் கூரைகள் மீது நடந்து சிங்கள பாடசாலையின் மைதானத்திற்குள் குதித்து தப்பினேன்.
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
தலையற்ற மக்கள் கூட்டம்....😭
-
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்
மக்கள் பிழைத்து கொண்டார்கள் 😡
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
இது போன்ற திரிகளில் என் தம்பி மினக்கெட மாட்டாரே இன்று என்ன செய்கிறார் என்று பார்க்கவந்தால் கதை தண்ணியில போகுது....🤣
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இவரது தொழில் வித்தியாசமானது. அத்துடன் இவரது கைதும் அவரது தொழிலால் மட்டும் வந்ததல்ல.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நாம் இவ்வாறு எழுதிக் கொண்டிருக்க France இன் முக்கிய உதைபந்தாட்ட கழகத்திற்கு Lyca ஸ்பொன்சராக வலம் வரத் தொடங்கியிருக்கிறது.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
வலியை தந்தவனுடன் வலியை அனுபவித்தவர் தான் பேசவேண்டும். அப்படித் தான் தலைவரூம் மற்றும் அஸ்ரப்பும் பேசி முடித்தார்கள். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட தமிழர்கள் மீது வெளியாரால் திணிக்கப்பட்ட அனைத்து திணிப்புகளையும் மெச்சும் நீங்கள் வலியை அனுபவித்தவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தமிழர்கள் என்றால் மட்டும் ....
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
உங்களுக்கு என் கருத்தும் பெயரும் அலர்ஜி என்பதை பலமுறை கண்டு விட்டேன். அது முற்றிவிட்டதும் அதற்கு நிதானம் என்றொரு மருந்துண்டு. ஆம் மகிந்தவும் தலைவரும் பேசியிருந்தாலும் வலிகள் மன்னிக்கப்பட்டு மறக்கப்பட்டிருக்கும்....
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
தலைவரும் அஸ்ரப்பும் ஒன்றாக இருந்து பேசியவுடனே அந்த முரண்பாடு மற்றும் வலி முடிவுக்கு வந்தாயிற்று. அப்புறம் சிங்களவனை சொறிய அல்லது நக்க வேண்டிய தேவை வரும்போதெல்லாம் பலமற்ற ஆதரவற்ற தமிழருக்கு முதுகில் குத்துதல் மட்டுமே அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் அல்லா தந்த வரம். இத்தனை நடக்கும் இஸ்ரேலை இவர்கள் மறந்து மன்னித்து விடுவதால் தானே என்னவோ இத்தனை அழிவுகள் பாலஸ்தீனத்தில் நடக்கிற போதும் என் மனம் உருகுதில்லை.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள் மதிலில் பாய்வதும் கரண்ட் கம்பியில் தொங்குவதும் வீடுகள் மற்றும் கூரைகள் மீது தாவுவதும் எதுவோ?? அதிலும் இவை வெறி பிடித்த கூட்டம் வேறு.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
ஆயிரம்களையே வாழ்வில் காணாத காண முடியாத மக்களுக்கு லட்சங்களை காண்பது என்பதும் அதற்கு மாற்றாக இறந்தவர் கூட சிறிதாக தெரிவதும் ஏற்கக்கூடாத ஆனால் பரிதாபகரமாக உண்மை தான்.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
வரும் முன்பே விஜய்க்கு எவ்வளவு சனம் நிற்கிறது என்று தெரிந்து இருக்கும். காவல்துறை விஜயை எச்சரித்து இருக்கிறது. அதை மீறியே அவர் வலது புறமாக தான் போகவேண்டிய இடத்துக்கு சென்று இருக்கிறார். நீங்கள் சொன்னது போல தடை செய்திருந்தால் விஜயின் குரங்கு கூட்டம் பேயாட்டம் போட்டிருக்கும். அழிவுகள் பல மடங்காக இருந்து அத்தனைக்கும் அரசே காரணம் என்று முடிந்திருக்கும்.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
இதில் விஜய் எதிர்ப்பு எங்கே வருகிறது?? சரி நீங்கள் ஒரு உதாரணம் சொல்லுங்கோவன்....
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
எனது பிறந்த நாளுக்கு 500 பேர் வருவார்கள் என்று மண்டபக்காரரிடம் ஒப்பந்தம் செய்து மண்டபத்தை பெற்றபோது அவர்கள் நாலைந்து பாதுகாவல்காரர்களை போடுகிறார்கள். நான் தாய்மார்கள் குழந்தைகள் உட்பட ஐயாயிரம் பேரை பிறந்த நாள் மண்டபத்திற்கு அழைக்கிறேன். சன நெருசலால் என் வீட்டிலேயே பலர் இறந்தும் காயமடைந்தும் விட்டால் எனது குடும்பம் மண்டபக்காரனையும் அவர்கள் போட்ட பாதுகாவலர்களையுமா கேள்வி கேட்கும்???
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
அனுமதி 10 ஆயிரம் பேருக்கு. ஆனால் காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரக் கூடும் என்று தகவல் அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் அதையும் மீறி சனம் கூட நெருசல் ஏற்பட விஜய் தான் காரணம் என்றும் அந்த தாமதத்தை அவர் வேண்டும் என்றே தனது செல்வாக்கை நிரூபிக்க செய்ததாகத் தான் இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றம் மற்றும் அனைத்து தமிழக ஊடகங்களும் சொல்கின்றன. இங்கே பல ஊர்வலங்கள் மற்றும் மாநாடுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறோம். காவல்துறை மற்றும் அரசா பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை செய்கிறது?????
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்.. https://www.facebook.com/share/v/14PdFXjdaUp/
-
நடிகர் விஜய்யை பேட்டி காணச்சென்ற ஈழத்துச் செயற்பாட்டாளர் ஒருவருடைய தொகுக்கப்பட்ட அனுபவம்..
தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஈழத்தைச் சேர்ந்த ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார்,நடிகர் விஜய்யை நேர்காணல் செய்வதற்காக அவருடைய அலுவலகத்தோடு கதைத்து ஒரு நேரத்தை எடுத்திருக்கிறார்.குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கே போனபோது அங்கே விஜயினுடைய தகப்பன் இருந்திருக்கிறார். விஜய்க்கு பதிலாக அவர்தான் பதில் கூறுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நேர்காணல் விஜயின் பெயரில்தான் வரும். விஜயின் படங்கள்தான் காணப்படும். அந்த அலுவலகத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்து விஜய்யின் இலக்கத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும் மேற்படி செயற்பாட்டாளர் கவனித்திருக்கிறார்.அவர்கள் அனைவரும் விஜய்யின் குரலில் விஜய்யின் பாணியில் விஜய்யைப் போலவே கதைக்கிறார்களாம்.அழைப்பை எடுப்பவர்கள் தமக்கு விஜய்தான் பதில் கூறுகிறார் என்று நம்புவார்கள். மேலும் நமது ஈழத்துச் செயற்பாட்டாளர் அங்கிருந்த வேளையில் விஜய்யின் ரசிகர் ஒருவர் கௌரவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்றால் விஜய்க்கு தன்னுடைய அன்பை தெரிவிப்பதற்காக தன்னுடைய சுண்டு விரலை அறுத்து கூரியரில் அனுப்பியவர்.அவரை அங்கு அழைத்து கௌரவித்திருக்கிறார்கள்.அப்பொழுது நமது செயற்பாட்டாளர் விஜய்யின் தகப்பனிடம் கேட்டிருக்கிறார்…”இது போன்ற விடயங்களை நீங்கள் புரொமோட் பண்ணுவது சரியா?” என்று. அதற்கு விஜய்யின் தகப்பன் சொன்னாராம், அப்படிச் செய்ய வேண்டும். ஏனென்றால் விஜய்யின் படத்தை ஒரு முறை பார்ப்பவர் அடுத்தடுத்த படங்களையும் தொடர்ந்து பார்க்குமாறு தூண்ட வேண்டும். அப்படித் தூண்டினால்தான் படங்கள் ஓடும், அதற்கு இதுபோன்ற புரமோஷன்கள் தேவை என்று.அதாவது ரசிகரைப் பக்தராக மாற்றுவது. அதற்கு ரசிகர் செய்யும் தியாகங்களைப் புரமோட் பண்ணுவது. இது நடிகர் விஜய்யை பேட்டி காணச்சென்ற ஈழத்துச் செயற்பாட்டாளர் ஒருவருடைய தொகுக்கப்பட்ட அனுபவம்.. https://www.facebook.com/share/1CyQMi7DN3/
-
மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபமும் புகழ் வணக்கங்களும்... ஒம் நமச்சிவாய 🙏
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
வியாபாரம் என்று வந்து விட்டால் எதையும் செய்யலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அதிஷ்டவசமாக அவர்கள் தான் வெல்கிறார்கள். அநியாயமாக அவர்கள் தான் இவ்வுலகை ஆள்கிறார்கள். இதில் தமிழர்களும் இருந்து விட்டு போகட்டுமே. அவர்களையும் நம் பாதைக்கு கல் போட பயன்படுத்தலாம் என்பது தான் சரியாக இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் வீக்கம் வெடித்து சிதறலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.
-
கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
இங்கே சிக்கல் என்னவென்றால் விமர்சனத்தை எதிர்பார்த்து தான் அந்த அம்மா வீட்டுச் செய்தியை ஊர்ச்செய்தியாக்கினார். ஆனால் என்ன தனியே அவா எதிர் பார்த்த வகையான விமர்சனம் வரவில்லை. புதுமை என்று கொண்டு வந்து அவாவுக்கு ஏற்ற விமர்சனங்களை எதிர்பார்ப்பதும் அக்கா இன்னும் பல மைல் தூரம் பின்தங்கிய நிற்கிறா என்று மட்டும் தெரிகிறது.