Everything posted by கிருபன்
- IMG_5610.jpeg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி கிளென் பிலிப்ஸின் வேகமான 39 (28 பந்துகள்), டிம் செய்ஃபேர்ட்டின் விரைவான 35 (25 பந்துகள்), பின் அலெனின் அதிரடியான 29 (19 ) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை நோக்கி போயிருந்தபோதும் டொம் பண்டனின் வேகமான 33 (24 பந்துகள்), வில் ஜக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 32 (18 பந்துகள்), இறுதி ஓவர்களில் றெஹான் அஹ்மட் ஆட்டம் இழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 19 (07 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி 27 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இங்கிலாந்து (Y1) எதிர் நியூஸிலாந்து (Y2) ENG. எதிர் NZ 17 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் நான்கு பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் ENG ஏராளன் ENG வசீ NZ புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் ENG ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் NZ கறுப்பி ENG வாதவூரான் ENG வீரப் பையன்26 NZ சுவி ENG கிருபன் ENG கோஷான் சே ENG அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் ENG ரசோதரன் AFG பிரபா ENG நிலாமதி AFG நந்தன் NZ இப்போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியபோதும், றொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் அதிரடியாக 52 (37 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேஸன் ஹோல்டர் வேகமாக எடுத்த 49 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடி எய்டன் மார்க்ரம் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 82 (46 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக் அதிரடியாக எடுத்த 47 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டன் வேகமாக ஆட்டம் இழக்காமல் எடுத்த 45 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும் 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான். அயர்லாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியா மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் வாணவேடிக்கையாக ஆட்டமிழக்காமல் எடுத்த 44 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் வேகமான 38 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும், சூரியகுமார் யாதவ் விரைந்து எடுத்த 33 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதுவே தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது! பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணியின் வீரர்களில் பிரயன் பென்னிட் அதிரடியாக ஆட்டமிழக்காமல் எடுத்த 97 (59 பந்துகள்) ஓட்டங்கள், சிகண்டர் ராஸா வேகமாக எடுத்த 31 (21 பந்துகள்) ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து வேகமாக ஆடாததால் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றில் விளையாடாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த எட்டு பேருக்குப் புள்ளிகள் கிடையாது!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய போட்டிகளை விமானப் பயணத்தில் பார்க்கம்கூடியதாக இருந்தது😀 இந்தியா அதிகூடிய ஓட்டங்கள் எடுத்தது மகிழ்ச்சி 🤩 புள்ளிகள் விபரம் நாளை தர முயற்சிக்கின்றேன்😊
-
தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் — கருணாகரன் —
தேசிய மக்கள் சக்தியை, இன்றைய ஜேவிபியை தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ள வேண்டும் February 24, 2026 — கருணாகரன் — தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முடியாதோரின் கண்களுக்கு ரோஹண விஜேவீர, சோமவன்ஸ அமரசிங்க போன்ற முகங்களே தென்படும். அந்த முகங்கள் பிரதிபலித்த பழைய – தீவிர இனவாத முகத்தையும் அது மேற்கொண்ட பகிரங்க வெறுப்பு நடவடிக்கைகளுமே நினைவில் எழும். அவ்வாறு தோன்றுவதால்தான் பழைய ஜே.வி.பியை நினைத்துக்கொண்டு தமிழ்த்தரப்புப் பேசுகிறது; எழுதுகிறது; தீர்மானங்களை எடுக்கிறது; போராட்டங்களை நடத்துவதற்கு முயற்சிக்கிறது. மொத்தத்தில் தன்னுடைய அரசியலை முன்னெடுக்கிறது. இது தவறான ஒரு வழிமுறை – அணுகுமுறை ஆகும். என்பதால் தமிழ்த்தரப்பு மேலும் பின்னடைவையும் தோல்வியையுமே சந்திக்கப்போகிறது என உறுதியாகச் சொல்ல முடிகிறது. எதிர்த் தரப்பைப் பற்றிச் சரியான கணிப்பீட்டைச் செய்து கொண்டால்தான் அதை எதிர்கொள்ளக் கூடிய அரசியற் பொறிமுறைகளை(தீர்மானங்கள், போராட்டங்கள், தந்திரோபாயங்கள், தொடர்பாடல்கள் போன்றவை) முன்னெடுக்க முடியும். இல்லையெனில் தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளுமே தொடரும். தடுமாற்றங்களும் தவறான நடவடிக்கைகளும் ஒருபோதும் சரியான விளைவுகளைத் தராது. நற்பயன்கள் எதையும் விளைக்காது. பதிலாக மேலும் பின்னடைவையும் சிதைவையும் தோல்வியையுமே வழங்கும். இன்றைய ஜே.வி.பி வேறு. அது நெகிழ்ச்சியும் உருமாற்றத்தையும் கொண்ட அநுரகுமார திசநாயக்கவின் முகத்தை உடையது. உறுதிப்பாடும் நிதானமும் கொண்ட ரில்வின் சில்வாவின் அகத்தைக் கொண்டது. இந்த இரண்டின் கலவையே தேசிய மக்கள் சக்தி. இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள முற்படுவோருக்கு இந்தக் கலவையின் நுட்பத்தையும் சிறப்பையும் தெரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். சுலபமாக ஒன்றைச் சொல்லி இதை விளக்கவும் நிரூபிக்கவும் முடியும். உள்நாட்டிலும் சரி, வெளியுலகிலும் சரி, மிகச் செல்வாக்கான – நம்பிக்கைத் தோற்றமுடைய முகம் அநுரகுமார திசநாயக்கவினுடையது. ‘மக்களின் நாயகன்’ என்று சொல்லக் கூடிய இன்றைய தலைவர் அநுரகுமார திசநாயக்க. இதை யாரும் மறுக்க முடியாது. வெளியுறவுக் கொள்கை உட்பட எதையும் வெளிப்படையாக உரத்துச் சொல்லாத, இனவாதத்தை வெளிக்காட்டாத செல்வாக்கான இந்த முகத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அநுரகுமார முதலில் ஓரிடத்துக்குச் செல்வார். அடுத்ததாக அவரைத் தொடர்ந்து ஏனைய அரசுப் பிரதிநிதிகள் அந்த இடங்களுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செல்வார். உள்நாட்டிலும் இதுதான் நடக்கிறது. வெளிநாடுகளிலும் இதுவே நிகழ்கிறது. அநுர முதலில் இந்தியாவுக்குச் சென்றார். இப்பொழுது ரில்வின் சென்று திரும்பியிருக்கிறார். அநுர முதலில் சீனாவுக்குச் சென்றார். ரில்வின் பிறகு சீனாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் ஐரோப்பாவுக்குச் சென்றார். ரில்வின் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று திரும்பினார். அநுர முதலில் வடக்குக் கிழக்கிற்கு வந்து சென்றார். ரில்வின் அதற்குப் பிறகு வடக்குக் கிழக்குக்குச் சென்று திரும்பினார். இந்தப் பயண ஒழுங்கினை யாரும் மீள நினைவு கொண்டு நோக்கலாம். அநுரகுமார திசநாயக்க தன்னுடைய செல்வாக்கான அடையாளத்தைக் கொண்டு கடினமான பாதைகளை இலகுவாக்கிக் கொடுக்கிறார். அதைப் பயன்படுத்தி, ஏனையவர்கள் தங்களுடைய அடுத்த கட்டச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ஆக ஜே.வி.பியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை நட்சத்திரமும் அரசியல் முதலீடும் அநுரகுமார திசநாயக்கவே. அதை அவரும் மிகச் சரியாகப் பேணிக்கொள்கிறார். மிகச் சாதாரணரைப் போன்ற ஒரு தோற்றத்தில் மிக வலிமையான மனிதராக – தலைவராக அநுர தொழிற்படுகிறார். அநுரகுமார திசநாயக்கவுக்கு துணை செய்வதைப்போல அல்லது தேசிய மக்கள் சக்தியின் பயணத்துக்கு வலுச்சேர்ப்பதைப்போல கூடவே பிரதமர் ஹரிணி அமரசூரியவும் விஜித ஹேரத்தும் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டைக் கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியாக வலுவான உறவைக் கட்டியெழுப்பியிருக்கிறது. நன்மதிப்பைப் பெற்றுள்ளது. ஒரு வகையான நூதனமான அரசியலைக் கையாண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொண்டு முன்செல்கிறது தேசிய மக்கள் சக்தி. இதற்கு இசைவாகத் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஜே. வி. பி. ஆனால், தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி. பிக்கும் இடையில் பெரியதொரு உட்போர் நடந்து கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுவதுண்டு. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிர்கொள்ள முடியாமலிருக்கும் ஆற்றாமையின் வெளிப்பாடு. இரண்டாவது, தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியின் இன்றைய போக்கையும் புரிந்து கொள்ளத் தவறுவதன் விளைவு. இந்த இரண்டினாலும் தேசிய மக்கள் சக்திக்கோ ஜே.வி.பிக்கோ எந்தப் பாதிப்புமில்லை. இங்கே வேடிக்கை என்னவென்றால், தங்களுடைய கட்சிக்குள் அல்லது அரசியற் கூட்டுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை. தேசிய மக்கள் சக்திக்குள்தான் குத்து வெட்டுகளும் இழுபறிகளும் என்பதைப்போல கதை விடுவதுதான். எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உள்முரண்பாடுகளும் கொதி நிலைகளும் இருப்பது வழமை. உள் முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சி நீதிமன்றத்திலேயே போய் நிற்கிறது. ஐ.தே.க உள்முரண்பாட்டினால் நீண்டகாலம் இழுபறிப்பட்டதை யாரும் மறக்க மாட்டார்கள். இனித் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில்தான் ரணில் – சஜித் அணி என்று பிளவு ஏற்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளும் உட்கொதிப்புகளும் உலகறிந்தவை. தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள், முஸ்லிம் காங்கிரசுக்குள் எல்லாம் உள் முரண்பாடுகள் அல்லது கொதிப்பான நிலை இருந்தபடியால்தான் அவற்றிலிருந்து சிலர் வெளியேறும் நிலை உருவானது. விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் நிகழ்ந்த உள்முரண்பாடுகள் பல. உமா மகேஸ்வரன் – பிரபாரன் முரண்பாடு, மாத்தயா – பிரபாகரன் முரண்பாடு, கருணா – பிரபாகரன் முரண்பாடு என பல அடுக்குகள் உண்டு. முரண்பாடும் கொதிப்புகளும் எந்தக் கட்சியிலும் எந்தக் கூட்டிலும் இருக்கும். அதைக் கடந்து, தமது அரசியல் முன்னெடுப்பில் குறித்த தரப்பு எப்படிச் செயற்படுகிறது? எப்படி வெற்றிகளைப் பெறுகிறது? எப்படி முன்செல்கிறது என்பதே அரசியல் பெறுமானமும் அரசியல் வெற்றியுமாகும். தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தமக்குள் உள்ள முரண்பாடுகளை எப்படித் தீர்த்துக் கொள்கின்றன என்று வெளியே தெரியவில்லை. அவற்றுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொதிப்புகளின் தன்மையைச் சரியாக உணர முடியவில்லை. நிச்சயமாக புகைச்சல்களும் முரண்களும் இருந்தே தீரும். ஆனால், அரசியல் ரீதியாக இரண்டும் முன்செல்வதை யாரும் மறுக்கவே முடியாது. இதையே நாம் கவனிக்க வேண்டும். இதற்கு முதற்காரணம் வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் படித்துக் கொண்ட ஒரு பேரமைப்பாக ஜே.வி.பி இன்றிருப்பதாகும். தன்னுடைய லட்சியவாதத்துக்கும் நடைமுறைகளுக்கும் இடையிலான தூரத்தையும் (இடைவெளியையும்) முரண்பாடுகளையும் இயலாமைகளையும் அது கற்றுள்ளது. அப்படிக் கற்றுக் கொண்டபடியால்தான் அதனால் தன்னை நெகிழ்ந்து கொடுக்க முடிந்திருக்கிறது. அதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. அண்மைய (இந்த வார) உதாரணம், ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணமும் அது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களுமாகும். இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரில்வினிடம் ‘இந்து’ பத்திரிகை கேள்வி எழுப்பியபோது, ”ஜே.வி.பி இந்தியாவுக்கு எதிரானது என்று நீண்டகாலமாக நிலவிவரும் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்து விட்டது. காலப்போக்கில் எமது நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் ரில்வின். மட்டுமல்ல, கொழும்பு – ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகை எழுப்பிய “ஜே.வி.பியின் முதல் தலைவரான ரோஹண விஜேவீர இந்தியாவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டை நீங்கள் கைவிட்டு விட்டீர்களா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்போது, “இலங்கைக்குப் பாதகமாக அமையக் கூடிய கொள்கைகளைக் கடைப்பிடித்த இந்திய அரசாங்கங்களை எதிர்த்தோமே தவிர, நாம் ஒருபோதுமே இந்தியாவை எதிர்க்கவில்லை“ என்று தெரிவித்திருக்கிறார். இது எதைக்காட்டுகிறது? முந்திய ஜே.வி.பி யிடமிருந்து இப்படி ஒரு சொல் வருமா? அதைப்போல இன்றைய ஜே.வி.பியிடமிருந்து முன்பைப்போலக் கடுமையான ஒரு வார்த்தை வரவே வராது. இதுதான் படிப்பினை. இதுதான் மாற்றம். இதுதான் விவேகம். இதுதான் வெற்றிக்கான வழிமுறை. புறச் சூழலின் யதார்த்தத்தை ஜே.வி.பி கற்றுத் தேர்ந்துள்ளது. அதனால்தான் ரில்வின் இந்தியாவைக் குறித்து அவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது. மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவர் பயணம் செய்தது கூட யதார்த்தத்தை உணர்ந்ததன் விளைவே. இந்தியாவை தூர வைத்துக் கையாள முடியாது என்று அவருக்குத் தெரியும். மட்டுமல்ல, ரில்வினின் இந்தியப் பயணம் ஜே.வி.பிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மிகப் பெரிய வெற்றியே. ஒன்று, நல்லுறவை வலுப்படுத்துவதில். இரண்டாவது, பொருளாதார உதவி மற்றும் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதில். மூன்றாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் அழுத்தத்தைக் குறைப்பதில். ஏற்கனவே அநுரகுமார திசநாயக்க, ஹரிணி அமரசூரிய போன்றவர்கள் சென்று நிலைமையைச் சுமுகமாக்கியிருந்தனர். இப்பொழுது ரில்வின் இந்தியாவுக்குப் போய் வந்திருக்கிறார். இப்படிப் பல உயர்மட்டத் தலைவர்களும் இந்தியாவுக்கு விஜயம் செய்வதை இந்தியாவும் வரவேற்கிறது. இதில் இரண்டு தரப்புக்கும் வெற்றியே உண்டு. இந்திய எதிர்ப்பைத் தன்னுடைய வரலாறாகக் கொண்ட ஒரு இயக்கத்தை – அதனுடைய ஆட்சியைத் தன் வசப்படுத்தியுள்ளது இந்தியா. அதைப்போல, தான் முந்திய நிலைப்பாட்டைப்போல இந்திய எதிர்ப்பில் தான் இல்லை என்று காட்டுவதன் மூலம் இந்தியாவின் சந்தேகத்தையும் பகைமையையும் இல்லாமற் செய்துள்ளது ஜே.வி.பி. கூடவே தனக்கு ஏற்படவுள்ள நெருக்கடிகளையும் அழுத்தத்தையும் குறைத்துள்ளது அல்லது இல்லாமற் செய்துள்ளது. ஆக, இந்தியா, மேற்குலகம், சீனா, யப்பான், ஐ.எம்.எவ் என அனைத்துத் தரப்புகளையும் கையாளும் நுட்பத்தை தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் கற்றுக் கொண்டுள்ளன. ‘L போர்ட் அரசாங்கம் ஓராண்டைத் தாக்குப் பிடிப்பதே கஸ்ரம்‘ என்று கேலி செய்த ரணில் விக்கிரமசிங்கவைக் காணவேயில்லை. இப்படியெல்லாம் சொல்லும்போது, தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் விழுந்தடித்துக் கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வேண்டியதில்லை. அப்படி அவர்களால் செய்யவும் முடியாது. அதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பவர்கள், இந்தக் கட்டுரை தேசிய மக்கள் சக்தியையும் ஜே.வி.பியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கிறது என்று கொதிக்கவும் தேவையில்லை. அப்படியான எந்த ஆபத்தையும் இந்தக் கட்டுரை உருவாக்கவில்லை. ஏனெனில் நாம் மேலும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய சங்கதிகள் உள்ளன. மேலே சொல்லப்பட்டவையெல்லாம் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி ஆகியவற்றின் புதிய தோற்றமும் புதிய அணுகுமுறைகளும் என்பது உண்மையே. அதே அளவுக்கு இவற்றின் இன்னொரு பக்கமும் உண்டு. முக்கியமாக வெளிநாட்டில் தம்முடைய உறவை நல்லபடி பார்த்துக் கொள்ள முயற்சிக்கும் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் உள்நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடயங்களில் சரியாகச் செயற்படவே இல்லை. அதனால் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் சமூகத்தின் மத்தியிலும் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் ஒன்று உருவாகியுள்ளது என்பதை வைத்துக் கொண்டு, குறித்த சமூகங்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறக்கணிக்கவும் முடியாது. அதை வேறு விதமாக – இனவாத அடிப்படையில் – கையாளவும் கூடாது. ஆனால், அப்படித்தான் தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் தவறாகச் செயற்படுகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வைப்பற்றி அரசாங்கம் வாயே திறக்கவில்லை. குறைந்த பட்சம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பற்றி ஜனாதிபதியோ பிரதமரோ எத்தகைய உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. இனப்பிரச்சினை தீர்வு உள்ளடங்கலாக, பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு ஏதுவான அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும். அது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கையையும் காணவில்லை. ஏன், பொருளாதார மறுசீரமைப்போ, புதிய பொருளாதாரக் கொள்கையோ, மாற்றுப் பொருளாதார விருத்தித் திட்டங்களோ உருவாக்கப்படவும் இல்லை. ஆக மொத்தத்தில் முந்திய அரசாங்கங்களைப்போல சிங்களப் பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கம் (ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும்) அக்கறையாக உள்ளது. ஆனாலும் அப்படிக் காட்டிக் கொள்ளாமல் முற்போக்கு முலாம் பூசிச் சிரிக்கிறது. இது கபடத்தனமாகும். இந்தக் கபடத்தனத்தோடு வெற்றிகரமாக ஆட்சியை நடத்தலாம். ஆனால், நாட்டை அமைதியாக்கவோ முன்னேற்றவோ முடியாது. இப்பொழுது எல்லாமே சரியாக நடப்பதாக – முன்னோக்கிச் செல்வதாக – ஒரு தோற்றம் காண்பிக்கப்படுகிறது. இதுதான் ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் வெற்றியாகும். அடிப்படையில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று நம்ப வைக்கப்படுகிறது. System Change என்பதற்கே மக்கள் தேர்தல் ஆணையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கினார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் அநுரகுமார அணி எந்த வகையில் System Change ஐச் செய்துள்ளது? அல்லது அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது? இதை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். இப்பொழுது நடக்கும் இந்த அரசியல் வித்தைக்கு எவ்வளவு காலம் ஆயுள் என்று உடனடியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தந்திரங்களுக்கும் சூதான அரசியலுக்கும் மயானம் வெகு தொலைவில் இல்லை. இப்பொழுது நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதை மீள நினைவுபடுத்திக் கொள்ளலாம். “தமிழ்த் தரப்பினர் தமது அரசியலைச் சரிசெய்ய வேண்டும் என்றால், மெய்யாகவே முன்கொண்டு செல்ல வேண்டும் என்றால், தேசிய மக்கள் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியை (அதாவது இன்றைய அரசாங்கத்தை) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இன்றைய ஜே.வி.பியைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் கைப்பற்றிய அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காகவும் ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தியுள்ளது. ‘ரில்வின் இந்தியாவிடம் சரணடைந்து விட்டார்’ என்றுகூடச் சிலர் கடுந்தொனியில் பேசலாம். கைகொட்டிச் சிரிக்கலாம். அரசியலில் என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம். அதிகாரத்துக்கு வேண்டியவை எவையோ அவற்றைச் செய்ய வேண்டும் என்ற யதார்த்தமே இங்கே முக்கியமானது. அதையே ஜே.வி.பியும் தேசிய மக்கள் சக்தியும் செய்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் இந்தியாவின் ஆதரவையும் உதவியையும் பெற வேண்டிய தமிழ்த் தரப்பு இந்தியாவைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகிறது. இலங்கை அரசுடன் நெருங்கவும் முடியாமல் திணறுகிறது. போருக்குப் பிறகான அரசியலை எப்படி முன்னெடுப்பது? இதுவரையான அரசியற் பயணத்தில் கற்றுக் கொண்டது என்ன? பெற்றுக் கொண்டது என்ன? இலங்கையில் மெய்யாகவே சாத்தியப்படக்கூடிய அரசியற் தீர்வு என்ன? அதை எப்படிப் பெற்றுக் கொள்ளது? சர்வதேச ஆதரவை எப்படிப் பெறுவது? அதனுடைய சாத்தியப்பாடுகளும் வரையறைகளும் என்ன? என எதைப்பற்றியும் அது படித்தறியவும் இல்லை. பட்டறியவும் இல்லை. இப்பொழுதும் அந்தப் பழைய – நைந்துபோன – சில பல சொற்களை வைத்துக் கொண்டு வார்த்தைகளால் அரசுக்கு எதிராகப் பீரங்கிகளை அடிக்கின்றன. தினமும் சமூக வலைத்தளங்கள், பத்திரிகைகள், ஊடக மாநாடுகளில் எல்லாம் குற்றச்சாட்டுப் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அதாவது தாம் எந்த நிலையிலும் நெகிழவோ மாறவோ மாட்டோம் என்ற விதமாக தோற்றம் காட்டுகின்றனர் தமிழ் அரசியற் தரப்பினர். இது சுத்தமான அரசியற் கோமாளித்தனமாகும். ‘நெகிழவோ மாறவோ மாட்டோம்‘ என்ற பிடிவாதத்தினால்தான் விடுதலைப்புலிகள் தம்மையே பலியிட நேர்ந்தது. அதற்கான விலையை இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டியுள்ளது. அந்தக் காலத்தை நீடிப்பதும் குறைத்துக் கொள்வதும் தற்பொழுது அரங்கில் உள்ள தமிழ்க் கட்சிகளின் கைகளில்தான் உள்ளது. ஆனால், அந்தத் தலைமைகளோ வரலாற்றிலிருந்தும் எதையும் படிக்கத் தயாரில்லை. வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் எதையும் கற்றுக் கொள்ள முயல்வதில்லை. குறைந்த பட்சம் தம்மை, தம்முடைய கட்சியை அல்லது இயக்கத்தை ஒரு தடவையேனும் மறுபார்வைக்குட்படுத்திச் சீர்ப்படுத்த முயற்சிப்பதில்லை. தமிழ்த்தரப்பில் தலைமைத்துவத்துக்கான ஒரு முகத்தைக்கூடக் காணவில்லை. இருக்கின்ற முகங்களை மாறி மாறி ஒவ்வொரு தரப்பும் சிதைப்பதிலேயே குறியாக உள்ளன. தலைமைக்குரிய ஒரு முகத்தையாவது அடையாளப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எவரிடத்திலும் இல்லை. இந்தப் பிழையான குணத்தினால்– இயல்பினால் – மூடத்தனத்தினால் – இந்தியாவையும் எதிர்த்தரப்பாகிய சிங்களர்களிடத்தில் ஒப்படைத்து விட்டு ஒப்பாரி வைக்கின்றன. இந்த (இன்றைய) உலகத்தில் ஒப்பாரிக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அது புலம்பலுக்கு ஒப்பானது. புலம்பல்களை யாரும் செவி கொள்வதில்லை. உங்களுடைய விருப்பங்களும் தேவைகளும் நியாயங்களும் நிலைப்பாடும் எவ்வளவோ பெறுமதிக்குரியனவாக இருக்கலாம். அவை எல்லாவற்றையும் பெறுவதற்கான யதார்த்தம் எப்படி உள்ளது என்பதே முக்கியமானது. ஜே.வி.பி பல பத்து ஆண்டுகளாக கடைப்பிடித்த நிலைப்பாட்டையெல்லாம் மூடையாகக் கட்டி ஓரத்தில் வைத்து விட்டு, தன்னை நெகிழ்த்தி, தேசிய மக்கள் சக்தியாகி, இன்று உலகத்தோடு ஒத்து ஓடுகிறது. தமிழர்களோ??? https://arangamnews.com/?p=12696
-
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு படுகொலையாகும். இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது, இந்நாட்டில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். அவ்வாறு இல்லாவிட்டால், சிலர் சட்டத்திற்குப் பயப்படுவதில்லை என்பதே அதன் பொருளாகும். ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு மறைந்திருக்க முடியும் என்பது உறுதியாகிறது. எனவே, குற்றங்கள் செய்வதற்குப் பயமின்மை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோரையும், கைது செய்யப்படுவதற்குப் பல்வேறு வியாக்கியானங்களை அளிப்போரையும் பார்க்கும் போது புரிகிறது, அவர்களின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்று. எனவே இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் ஒரு சுயாதீனமான விசாரணையாகும். அந்த விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிப்பதே சிறந்தது. அவ்வாறின்றி இந்த விசாரணைகளைக் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நாம் பார்க்கிறோம். எனவே, நாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். இந்த விசாரணைகள் தொடர வேண்டும். இவ்விசாரணைகள் மூலம் ஏதேனும் ஒரு பலன் கிடைக்கும் என நாம் நம்புகிறோம். இதன் மூலம், பலர் பேசுகின்ற அரசியல் சதியொன்று இருந்ததா இல்லையா என்பதையும், அவ்வாறு இருந்திருந்தால் அதனைச் செய்தது யார்? இத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? போன்ற விடயங்களை நாம் கட்டாயம் கண்டறிய வேண்டும். அதற்கு எவரேனும் இடையூறு விளைவிப்பார்களாயின், அதனைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு மாபெரும் குற்றமாகவே நாம் கருதுகிறோம். எனவே, தயவுசெய்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து, பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே சுரேஸ் சலே கைது விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் ஆகவே புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இது முறையற்றது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (25) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விடுதலை புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இராணுவ வீரனாக சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.அதன் பின்னர் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக பதவி வகித்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத ஆதரவாளர்கள் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளார்கள்.அவர்கள் சுரேஷ் சலே மீது வெறுப்புக் கொண்டு அவரை பழிவாங்குவதற்கு எதிர்பார்த்திருந்தார்கள்.அதற்காகவே அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பளம் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் -04 நிறுவனம் வெளிப்படுத்திய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானை கைது செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இமாம் குழுவின் அறிக்கையால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கம் வெற்றிப்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டார். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் குறிப்பிட்டார்கள். ஆனால் குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவில்லை. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் செயற்படாகவும் இதனை பார்க்கலாம் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/புலிகளின்-ஆதரவாளர்களை-திருப்திப்படுத்தவே-சுரேஸ்-சலே-கைது/175-373046
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் 26 பெப் இரு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், மேற்கிந்தியத் தீவுகள் (X3) எதிர் தென்னாபிரிக்கா (X4) WI எதிர் SA மூன்று பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் WI ஏராளன் SA வசீ SA புலவர் SA சுவைப்பிரியன் IRE அல்வாயன் SA ஈழப்பிரியன் SA நியூ பலன்ஸ் SA வாத்தியார் SA கறுப்பி SA வாதவூரான் AFG வீரப் பையன்26 WI சுவி WI கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் SA கந்தப்பு SA நியாயம் SA எப்போதும் தமிழன் SA ரசோதரன் SA பிரபா SA நிலாமதி SA நந்தன் SA இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, இந்தியா (X1) எதிர் ஸிம்பாப்வே (X2) IND எதிர் ZIM 15 பேர் இந்தியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை! 8 பேர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்கும் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் AUS நியூ பலன்ஸ் IND வாத்தியார் AUS கறுப்பி IND வாதவூரான் IND வீரப் பையன்26 IND சுவி IND கிருபன் IND கோஷான் சே IND அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூஸிலாந்து அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்களுடனுன் இருந்தபோதும் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெரின் புயல்வேக 47 (26 பந்துகள்), கோல் மக்கொஞ்சியின் ஆட்டமிழக்காத 31 (23 பந்துகள்) ஓட்டங்கள், மற்றும் ரச்சின் ரவீந்திராவின் வேகமான 32 (22 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பினர். நியூஸிலாந்து அணியின் 17 சுழல்பந்து ஓவர்களுக்கு அடித்தாடமுடியாமல் தடுமாறி, கமிண்டு மெண்டிஸின் 31 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், டுனித் வெல்லலகேயின் 29 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் சுருண்டனர். ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: நியூஸிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. அத்தோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடாத ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இன்று சுமைதாங்கிக் கல்லுக்கு @வாதவூரான் நகர்ந்துள்ளார். @Ahasthiyan இரண்டாம் இடத்திற்கும் முன்நகர்ந்துள்ளார்!
- IMG_5285.jpeg
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Lowest score record ஐ திரும்பவும் சிறிலங்கா முறியடிக்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு இன்று இரண்டு புள்ளிகள் கிட்டும்😀 NZ 168/7 SL (11/20 ov, T:169) 47/5 Sri Lanka need 122 runs in 54 balls. CRR: 4.27 • RRR: 13.55 • Last 5 ov (RR): 27/3 (5.40)
-
உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை!
உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை! ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. "உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 51 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை, இந்தியா ஆகியவற்றுக்கு மேலதிகமாக பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நாடுகளுள் அடங்குகின்றன. இந்தத் தீர்மானத்தில், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய நீதியான, முழுமையான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், போருடன் தொடர்புடைய அனைத்துப் போர்க் கைதிகளையும் முழுமையாகப் பரிமாற்றம் செய்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்தல் ஆகியன ஒரு முக்கியமான படியாக இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் உட்பட உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான வலுவான அர்ப்பணிப்பும் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmm1dw0z90019356p6o2v3azf
-
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 இல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014 இல் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீர்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி, “இலங்கையில் பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கொத்து கொத்தாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள கோயில்கள் இடிக்கப்பட்டு, இனப்படுகொலை தொடர்கிறது. இதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சூழலில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்.” என்று வாதிட்டார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடசாமி பாபு ஆகியோர், “விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 2024 ஆம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வைகோ 2014 இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த உத்தரவே காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த வழக்கும் செல்லத்தக்கதல்ல. மேலும், வைகோ பாதிக்கப்பட்ட நபரும் அல்ல. டில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வைகோவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்துள்ளது.” என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/புலிகள்-மீதான-தடையினை-நீக்குமாறு-வைகோ-தொடர்ந்த-வழக்கு-தள்ளுபடி/175-372975
-
மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் adminFebruary 25, 2026 மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எருவிட்டான் கிராமத்தில் 1.5 கிலோ மீட்டர் நீளமான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று செவ்வாய் (24) மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பு பணிகளுக்காக 57.82 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/229713/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அரையிறுதி மட்டும் பொம்மைகளைப் போடுவது கஷ்டம்! நாளைக்கு ஒன்றைப் போடுகின்றேன்☺️
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை புதன் 25 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் சிறிலங்கா (Y4) NZ எதிர் SL 15 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 06 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் SL வசீ NZ புலவர் NZ சுவைப்பிரியன் NZ அல்வாயன் SL ஈழப்பிரியன் NZ நியூ பலன்ஸ் SL வாத்தியார் NZ கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 NZ சுவி NZ கிருபன் NZ கோஷான் சே NZ அஹஸ்தியன் NZ கந்தப்பு SL நியாயம் NZ எப்போதும் தமிழன் NZ ரசோதரன் AFG பிரபா NZ நிலாமதி AFG நந்தன் NZ இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா பர்ஹானின் அதிரடியான 63 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், இன்னும் மூவரின் 20க்கு மேலான ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து சவால் குறைந்த 164 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலர் நிலைத்து ஆடாவிட்டாலும், அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் மின்னல்வேக செஞ்சுரியான 100 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. ஷகீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை உறுதிப்படுத்தியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வர் நாற்காலியிலும், சுமைதாங்கிக் கல்லிலும் மாற்றங்கள் இல்லை. @Ahasthiyan மூன்றாம் இடத்திற்கு முன்னகர்ந்துள்ளார்!
- IMG_5283.jpeg
-
PSTB சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா?
PSTB: சட்டத் திருத்தமா? அல்லது அடக்குமுறைக்கான ஆயுதமா? Veeragathy Thanabalasingham on February 23, 2026 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு (Protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடுப்புச் சட்ட வரைவும் (Counter Terrorism Act – CTA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2023ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti – Terrorism Act -ATA) முன்வைக்கப்பட்டன. முன்னைய இரு வரைவுகளையும் போன்றே தற்போதைய அரசாங்கத்தின் வரைவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாக அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் அமைப்புக்கள், சட்டத்துறை சாரந்த அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இடம்பெற்று வந்திருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை மீறல்களும் படுமோசமான துஷ்பிரயோகங்களும் இனிமேலும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த வரைவுகள் கொண்டிருக்கவில்லை என்பதே முன்வைக்கப்படுகின்ற முக்கியமான குற்றச்சாட்டாகும். நீதியமைச்சின் இணையத்தளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட புதிய வரைவும் ஜனாதிபதியினதும் பாதுகாப்புத்துறை அமைப்புக்களினதும் அதிகாரங்களை பெரியளவில் விரிவுபடுத்தும் ஏற்பாடுகளைப் கொண்டிருப்பது மாத்திரமல்ல, மக்களின் ஜனநாயக மற்றும் குடியியல் சுதந்திரங்களை பாரதூரமான அளவுக்கு கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தையும் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய வரைவு தொடர்பில் தற்போது மூண்டிருக்கும் பொது விவாதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களையும் மாற்று யோசனைகளையும் அரசாங்கம் எந்தளவுக்கு கவனத்தில் எடுத்து போதுமானளவு மாற்றங்களைச் செய்வதில் நாட்டம் காட்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முன்னைய இரு முயற்சிகளுக்கும் நேர்ந்த அதே கதி தற்போதைய முயற்சிக்கும் நேராது என்று எவராலும் உத்தரவாதம் கூறமுடியாது. பயங்கரவாதம் என்பதற்கு சட்ட வரைவில் கொடுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் ஜனநாயக ரீதியான எதிர்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படக்கூடியதாக விசாலமானதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. பயங்கரவாதக் குற்றங்கள் என்று வரைவில் வகைப்படுத்தப்பட்டிருப்பவை சாதாரண குடிமக்களைக் கூட 20 வருடங்கள் வரை சிறைவைக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆபத்தான சட்டங்களில் ஒன்று என்று இதை வர்ணித்திருக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த வரைவு தற்போதைய வடிவில் நிறைவேற்றப்படுமானால் ஜனநாயக சுதந்திரங்களுக்கு சாவுமணியாக அமையும் என்பதுடன் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். வீடுகளுக்குள் பிரவேசிப்பது, அந்தரங்கமான ஆவணங்களைக் கைப்பற்றுவது மற்றும் ஆட்களை சோதனை செய்வது உட்பட பரந்தளவிலான அதிகாரங்களை ஆயுதப் படைகள்,பொலிஸ் மற்றும் கரையோரக் காவல்படைக்கு வழங்கும் ஏற்பாடுகளை உத்தேச சட்டம் கொண்டிருக்கிறது. ஒரு வருடம் வரையான தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரமளிப்பதுடன் வழமையாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டிய சந்தேகநபர்களை பொலிஸ் காவலுக்கு மாற்றுவதற்கும் அனுமதிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக எந்தவொரு அமைப்பையும் தடை செய்யலாம். தடை உத்தரவை ஜனாதிபதி விலக்கிக்கொள்ளும் வரை அத்தகைய அமைப்புக்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதை, கூட்டங்களை நடத்துவதற்கு அல்லது வங்கிக்கணக்கு ஒன்றை கையாளுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. எந்தவொரு இடத்தையும் ஜனாதிபதி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்து மக்கள் பிரவேசிப்பதை தடுக்க முடியும். அந்தத் தடையை மீறுபவர்கள் மூன்று வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் அல்லது 3 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும். முன்னைய இரு அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலங்களில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் தொடர்பில் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட பாரதூரமான குறைபாடுகளையும் நீதித்துறை விதந்துரைத்த திருத்தங்களையும் கருத்தில் எடுக்காமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வரைவை வெளியிட்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்கு உள்ளாக்கித் தாக்கல் செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக் குற்றச்செயல்கள் ‘ என்று வர்ணிக்கப்பட்டிருந்தவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு பொருத்தமான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பயங்கரவாதத்துக்கு அந்தச் சட்டமூலம் கொடுத்த வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமைய வேண்டும் என்கிற அதேவேளை, அந்த வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை என்பதே யதார்த்தம். ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்று நாம் வழமையாக பேசுவதுண்டு. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே பயங்கரவாதத்துக்கு வியாக்கியானம் செய்கின்றன. இலங்கை அதற்கு விதிவிலக்கு அல்ல. நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீதான 2001 செப்டெம்பர் 11 விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் பயங்கவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்தபோது அன்றைய கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் அவர்கள் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் (Naked Terrorism) நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் (Legitimate Armed struggle) இடையிலான வேறுபாட்டை அழிக்கப் போகிறார்கள் என்று அவர் எச்சரிக்கை செய்தார். இது இவ்வாறிருக்க, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவரைவு ஒன்றை வெளியிட்டிருப்பதில் ஒரு முரண்நிலை இருக்கிறது. ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார். புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகிவந்திருக்கும் அந்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி மீறிய முதல் தேர்தல் வாக்குறுதி பெரும்பாலும் அதுவாகவே இருக்கலாம். இன்னொரு விசித்திரம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள் கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகும். இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12596
-
“பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்…!
“பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்…! February 24, 2026 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன. இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள் அழிக்கப்படவுள்ளதோடு, மக்களின் வாழ்வாதாரமும் இருப்பிடமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். ”அரசினால் மேற்கொள்ளப்படும் காற்றாலைத் திட்டத்திற்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இத்திட்டம் எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையிலும், குடியிருப்புகள் இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ளப்படுவதையுமே நாம் விரும்புகிறோம். இந்த நிலம் எமது பூர்வீக நிலம், எமது வாழ்வியலும் பொருளாதாரமும் இந்த மண்ணோடு பிணைந்துள்ளது. எனவே, இதற்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நட்ட ஈட்டையோ பெறுவதற்கு நாம் தயாரில்லை” என மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக அடையாளப்படுத்தப்பட்ட காணி தொடர்பில் எழுந்துள்ள ஆட்சேபனைகள் குறித்து, பூநகரி பிரதேச செயலகத்தில் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது ஆட்சேபனைகளை நேரடி வாக்குமூலங்களாக வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: ”அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் இத்திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களை இடம்பெயரச் செய்தோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தைச் சிதைத்தோ இத்திட்டம் முன்னெடுக்கப்படக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், கள யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களைத் தவிர்த்து மாற்று இடங்களில் இத்திட்டத்தை முன்னெடுப்பதே, முறையாகும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் கள விஜயத்தின் போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் திரு. சிவகுமார் சிறீரஞ்சன் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.ilakku.org/poonagari-wind-power-generation-project-mp-siridaran-urges-to-protect-peoples-homes/
-
இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு
இலங்கையில் பிறந்த பேராசிரியர் பாலி புலேந்திரன் தலைமையிலான குழுவினரால் சுவாசக் கருவி தடுப்பூசி கண்டுப்பிடிப்பு 24 Feb, 2026 | 10:53 AM இலங்கையில் பிறந்த நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பேராசிரியர் பாலி புலேந்திரன் ( Bali Pulendran) தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர், ஒரு புரட்சிகரமான "யுனிவர்சல்" சுவாசக் கருவி தடுப்பூசியைக் கண்டுப்பிடித்துள்ளனர். மூக்கு வழியாகச் செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வடிவங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அபாயகரமான பக்டீரியாக்கள் மற்றும் வீட்டில் தூசிகளால் ஏற்படும் ஒவ்வாமைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறது. வழக்கமான தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட வைரஸை மட்டும் குறிவைக்கும். ஆனால், இந்தப் புதிய தடுப்பூசி நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை தூண்டி, உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை நீண்ட காலத்திற்கு விழிப்புடன் வைத்திருக்கச் செய்கிறது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், இந்தத் தடுப்பூசி பல மாதங்கள் வரை நீடித்த பாதுகாப்பை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது விஞ்ஞான இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் புலேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கான முதற்கட்டச் சோதனைகளுக்கு விரைவில் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துள்ளார். நிதி உதவி மற்றும் சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரக்கூடும். "இது மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இலையுதிர்காலத்தில் ஒருமுறை இந்த நேசல் ஸ்ப்ரேயை எடுத்துக்கொண்டால், காய்ச்சல் , கொரோனா மற்றும் பொதுவான சளி போன்ற பல நோய்களில் இருந்து ஒரே நேரத்தில் பாதுகாப்பு பெற முடியும்," என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/239434
-
மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல்
மாகாண சபைத் தேர்தல் – மீண்டும் ஒரு காலங்கடத்தல் லக்ஸ்மன் குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும், பின்னர் கலைந்து போவதும் நமது நாட்டில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று. இப்போது மாகாண சபை தேர்தலை நடத்துவதா இல்லையா, பழைய முறையிலா புதிய முறையிலா என்று தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஒரு குழுவை இந்த அரசாங்கம் அமைத்திருக்கிறது. முன்னைய அரசாங்கங்களின் காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பாகவே இதுவும் அமைந்திருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கூறிவடவும் முடியாது. அதே நேரத்தில் ஒரு இலக்கைக் கொண்டிருக்கின்ற தரப்புக்கு அவர்களது சிந்தனையைத் திசை திருப்பும் செயற்பாடாகவும் அமையலாம் என்றும் கூறலாம். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது 2024ஆம் வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தாம் பெற்றுக் கொண்ட பெரும்பான்மையை கவனதில் கொண்டு உள்ளுராட்சித் தேர்தலை நடத்தினார். ஆனால் அத்தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உயர்ந்து வந்த ஆதரவு சற்று சரிந்திருந்தது. அந்தச் சரிவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்குக் காரணமாகும். அதன் பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமலேயே நிழல் மாகாண சபையை தற்போதைய அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பான முன் தயாரிப்பொன்று வெளியில் விடப்பட்டு அபிப்பிராயங்கள் திரட்டப்படுகின்றன. அரசியலமைப்பை புதிதாக உறுவாக்கவிருக்கிறோம் என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி இப்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இதிலிருந்து வெளியில் சொல்லப்படுவதனைத் தவிரவும் வேறு ஒரு செயற்பாடு உள்ளே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. எதிர்ப்புகள் காணப்பட்டாலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வரைபை வெளியிட்டதற்கு அரசாங்கத்துக்கு நற்சான்றுகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகள், முக்கியஸ்தர்கள் புதிய அரசியலமைப்பினுடைய விவகாரம் முடிவுக்கு வராமல் இருக்கையில் ஏன் இவ்வாறானதொன்றை உருவாக்கிக் கொள்ள முனைகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது ஒருபக்கமிருக்க ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கிறார். பிரபாகரன் சரணடைய முயற்சி எடுக்கப்பட்டதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கருத்தொன்றை கிளப்பிவிட்டிருக்கிறார். அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச பதில் கருத்தையும் வெளியிட்டிருக்கிறார். பீல்ட் மார்சல் ஏன் இந்த நேரத்தில் இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்பது தெரியாவிட்டாலும் இனவாதச் சிந்தனை, தென்பகுதி அரசியலில் ஒரு குழப்பமும் ஏற்பட இவருடைய கருத்து வழிகோலும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த நிலையில்தான் மாகாண சபை தேர்தல் தொடர்பிலான அரசின் நிலைப்பாடும் அதனை இழுத்தடிப்பதற்கு அரசு முயல்வதும் வெளிப்பட்டிருக்கிறது. மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள ஒரு கட்சி ஒருவாரத்திலேயே அதற்கான சட்டச்சிக்கலைச் சீர் செய்யமுடியும். ஆனால் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்திருக்கிறது. இது ஒரு ஏமாற்று வேலையே தவிர வேறொன்றுமில்லை. இந்த குழுவை அமைப்பதற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்றிருந்தது. எனினும், நீண்ட தாமதிப்புக்குப் பின்னரே குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் கவலைக்குரியது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதானது சிறிய வட்டத்துக்குள் நடந்து முடிய வேண்டியதற்காக மேலும் பெரிய வட்டம் ஒன்றை உருவாக்கி மேலும் சிக்கலாக்கும் நடைமுறையே. மாகாண சபை முறைமையைப் பொறுத்தவரையில் முன்பிருந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் தங்களுக்குச் சாதகமான முறைமைகளை உருவாக்கி தமது ஆதிக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்கே முனைந்திருக்கின்றன. அதே அடிப்படைச் சிந்தனையினையே இந்த தேசிய மக்கள்சக்தி அரசாங்கமும் கைக் கொள்கிறது எனலாம். தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாக பல தசாப்தங்களாக போராடி வருகின்ற தமிழர்கள் பயன் பெற்றதனைவிடவும் ஏனைய மாகாணங்கள் பெற்றுக் கொண்டதே அதிகமாகும். 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன. 2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை. தற்போது ஆளுனர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன. அத்துடன் அங்குள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவு ரீதியாக பொறுப்பளிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுனர்களையும் உடனடியாக நியமித்தார். அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதில் காணப்படவில்லைஎன்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் உருவாக்கப்பட்டது. வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். 2006இல் ஜே.வி. பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கதல் செய்த வழக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவானது. பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். பழைய முறையிலானால் உடனடியாக நடத்திவிடலாம். ஆனால் புதிய முறைறயிலாக இருந்தால் எல்லை நிர்ணயத் தீர்மானத்துக்கு முடிவு வந்தாகவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினரே முடிவைச்சொல்லியாக வேண்டும். முடிவுக்கு வரமுடியாமல் ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறையில் நடத்துமா, புதிய முறைமையில நடத்துமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். ஆட்சியிலிருப்பவர்களை எதிர்த்து பழகிப்போன எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்து ஆளும் கட்சியாக வந்த மக்கள் விடுதலை முன்னணி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் காணப்படும் தாமதம் மேலும் அவர்களின் ஆதரவுக்கு சரிவைத் தேடிக் கொடுக்காததாக இருக்கவேண்டும். எது எவ்வாறானாலும், பழைய முறையிலா பழைய முறையலா என தீர்மானிக்கும் குழு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுச் சரிவையும் கவனத்திலெடுத்து தீர்மானத்திற்கு வரட்டும். தொடர்ந்தும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் உரைநிகழ்த்தும் அரசியல் தரப்பினருடைய தொடர் முயற்சிக்கு வெற்றி கிட்டட்டும். இந்தியாவின் தொடர் மௌனமுயற்சிக்கும் பலன் கிடைக்கட்டும் என்று காத்திருப்போம். எதற்கும் மீண்டும் ஒரு காலங்கடத்தல் நடைபெறாதிருக்கட்டும் என்று நம்பிக்கைகொள்வோம். எவ்வாறானாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுடைய சுயநிர்ணயப் போராட்டத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையேனும் முழுமையாக நடைமுறைக்குவரும் காலம் உருவாதற்கான காலம் கனியட்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபைத்-தேர்தல்-மீண்டும்-ஒரு-காலங்கடத்தல்/91-372899
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் 24 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் பாகிஸ்தான் (Y3) ENG எதிர் PAK 08 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் 15 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டியாளர் பதில் செம்பாட்டான் PAK ஏராளன் PAK வசீ PAK புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் ENG வாத்தியார் ENG கறுப்பி PAK வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி ENG கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் PAK ரசோதரன் PAK பிரபா PAK நிலாமதி PAK நந்தன் PAK இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?