Everything posted by கிருபன்
-
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு March 7, 2025 11:07 am யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதிய அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன் 150 பேருக்கு அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று செல்வம் அடைக்கலநாதன் எம். பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேற்படி ஓட்டுத் தொழிற்சாலை 1990 ஆண்டு காலங்களிலேயே யுத்தம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் அந்த தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அது சாத்தியப்படவில்லை. அந்த வகையில் கடந்த வருடம் திறைசேரி மூலம் 15 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொண்டு அதனை ஆரம்பிப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முடியாமற் போயுள்ளது. எனினும் எமது அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களில் அந்த ஓட்டு தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து புதிய தலைவர் ஒருவரை நியமித்து அவரது தலைமையில் தற்போது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க இன்று (நேற்று) இந்த தொழிற்சாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுவதுடன் இது வடக்கு மக்கள் மகிழ்ச்சியடையும் சந்தர்ப்பமாகும். அந்த மக்கள் குறைந்த விலையில் ஓடு மற்றும் செங்கற்களையும் அதன் மூலம் கொள்வனவு செய்து கொள்ள முடியும். 5800 ஓடுகள் கொள்ளளவோடு 150 பேருக்கு தொழில் வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கப் பெறுகின்றது. தேவைப்படும் மேலதிக நிதியை அமைச்சின் மூலம் பெற்று சாத்தியமான வகையில் வெற்றிகரமாக இந்த தொழிற்சாலையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://oruvan.com/reopening-of-the-abandoned-ottusuddan-wheel-factory-during-the-war/
-
சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் - இனியபாரதி குற்றச்சாட்டு
சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் - இனியபாரதி குற்றச்சாட்டு செய்திகள் பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் இன்று (06) மாலை சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி விசேட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து இவ்வாறு ஊடக மாநாட்டில் அவ்விடயத்தை நிரூபிக்கட்டும். நான் அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுக்கின்றேன். அவருக்கு பாராளுமன்ற சிறப்புரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்தை உரிமையை இழுக்கும் உரிமை அவருக்கு இல்லை. பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் தான் அதிகம். இவ்வாறு இருக்க இவ்வாறு என்னை இழுத்து இருக்கின்றார். அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை . எனது சாரதி சுதா என்று சொல்கின்றார். முடிந்தால் அந்த சுதாவை காட்டுமாறு சவால் விடுகின்றேன் .எனவே தான் பாராளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்ற அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் நான் முறைப்பாடு ஒன்றை வழங்கவுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறான ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும் என சவால் விடுகின்றேன் என்றார்.
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் அதிருப்தி editorenglishMarch 7, 2025 அல்ஜசீராவில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் குறித்து ரணில் விக்ரமசிங்க,அதிருப்தி தொிவித்துள்ளாா். நேர்காணல் ஒளிபரப்பான சிறிது நேரத்திலேயே இது தொடா்பில் அவா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளாா். அல்ஜசீரா தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அவா் தொிவித்துள்ளாா். “மனித உரிமைகள் வழக்கறிஞரும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையருமான அம்பிகா சத்குணநாதன் இந்த விவாதத்தில் பங்கேற்பார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எங்கள் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், நான் அவரை அறிந்திருப்பதால், அதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், பின்னர் அவருக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொண்ட இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை அறிந்தேன்,” என அவா் குறிப்பிட்டுள்ளாா். நேர்காணலின் வடிவத்தையும் விமர்சித்த அவர் தனது பதில்களின் முக்கிய பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா். “நான் உள்ளூர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது, எனவே நல்லது கெட்டது இரண்டும் வெளிவரும். இருப்பினும், அல் ஜசீரா இரண்டு மணி நேரம் என்னை நேர்காணல் செய்தது, ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது, அதில் பெரும்பகுதியைத் திருத்தியது” என்று அவர் தொிவித்துள்ளாா். https://globaltamilnews.net/2025/212831/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஷோபாசக்தியின் எல்லாக் கதைகளையும் படித்திருப்பேன். புத்தகம் வாங்குவது எழுத்தின் அபிமானத்தால்தான். அவர் எழுத்தை வைத்து பிழைப்பதாக நான் நினைக்கவில்லை. சர்மிளா செய்யத் துருக்கியில் போய் இருந்தார். இப்போதும் அங்குதான் என்று நினைக்கின்றேன். சிலவேளை அநுர சகோதரயவின் ஆட்சியில் நல்லதே நடக்கும் என்று ஊர் போனாவோ தெரியாது!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஏதாவது செட் ஆகுமா?? ஷோபாசக்தி கதைகள் 1997-2024 தீக்குடுக்கை - அனோஜன் மணிமேகலை - அ.மார்க்ஸ் இடபம் - கண்மணி தாயைத்தின்னி - தில்லை சிவப்புச் சட்டைச் சிறுமி - ஸர்மிளா செய்யத்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓம். பெளசர் 6 புத்தகங்கள் எடுத்து வைச்சிருக்கின்றார். பெருமாள் முருகனையும் பாத்ததாகவும் இருக்கும்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சாரி! சில்லறை வாங்கிப் பழக்கமில்லை..😂 மொத்தமாக வாரிச் சுருட்டித்தான் பழக்கம்😝
-
பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும் March 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான விவாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டின் பொருளாதாரத்தை விடுத்து பட்ஜெட்டின் அரசியலையே பேசினார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொருளாதாரத்தை கையாளும் ஜனாதிபதி திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் பட்ஜெட்டை சமர்ப்பித்திருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கூறினார்கள். ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளை தேசிய மக்கள் சக்தி கைவிட்டு விட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்புகிறார்களா அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றுவதை வரவேற்கிறார்களா என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதற்காக தர்க்கரீதியாக பொருத்தமில்லாத வகையில் பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தனது அரசாங்கத்துக்கு தொடர்ந்து கிடைத்து வருவது குறித்து பெருமைப்படுகிறார் என்றே தோன்றுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கப்போவதில்லை என்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பை தாங்கள் பொய்யாக்கிவிட்டதாக அவர் திருப்திப்படுகிறார் என்பதை அவரின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. ஜே.வி.பி.யின் கோட்பாடுகளை தாங்கள் கைவிடவில்லை என்று அழுத்தம் திருத்தமாக இப்போது ஜனாதிபதி கூறுவதில்லை. சிலவேளை அவர் அவ்வாறு கூறியிருந்தால், காலத்துக்கு ஒவ்வாத கொள்கைகளில் இன்னமும் கூட அவர் நம்பிக்கை கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் மறுதலையாக குற்றஞ்சாட்டவும் தவறமாட்டார்கள். தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு கூறியதைப் போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உள்ளாக்குவது என்பது சுலபமாகச் சாத்தியமாகக்கூடியது அல்ல என்பதை ஜனாதிபதி திசாநாயக்க தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளையே திசாநாயக்க தொடர்ந்து முன்னெடுக்கிறார் என்று ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் பிரகாரம் தொடர்ந்து செயற்பட்டால் இலங்கை முழுமையான பொருளாதார மீட்சியை அடையமுடியுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தற்போதைய தருணத்தில் அதன் நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் பொருளாதாரம் மேலும் மோசமடையக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதே கசப்பான யதார்த்தமாகும். இதே போக்கில் சென்றால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் பொருளாதாரக் கொள்கைகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. இதற்கு அரசாங்க தலைவர்களினால் உகந்த பதிலைக் கூறக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. இது இவ்வாறிருக்க, அண்மைய நாட்களாக கடுமையாக தீவிரமடைந்திருக்கும் பாதாள உலக கொலைகள் பட்ஜெட் விவாதத்தை பெருமளவுக்கு கிரகணம் செய்துவிட்டன. மக்களின் கவனம் துப்பாக்கி வன்முறைகள் மீது திரும்பியிருக்கிறது. விவாதங்களின்போது பட்ஜெட் பற்றி பேசுவதை விடுத்து தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொலைகள் குறித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும்போது அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் தடுமாற்றத்தை அம்பலப்படுத்துகின்றன. குறைந்தபட்சம் இரு கொலைகளாவது இடம்பெறாமல் ஒரு நாளும் கூட கடந்த செல்வதாக இல்லை. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலக குழுவின் ஒரு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவர் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டுக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரைச் சுட்டுக்கொலை செய்தவர் ஒரு சட்டத்தரணி போன்று வேடமணிந்து நீதிமன்றத்திற்குள் வந்திருந்தார். கொழும்பு புதுக்கடையில் நீதிமன்றத்திற்குள் வைத்து பாதாள உலக பேர்வழிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. 2004 ஜனவரியில் இதே போன்றே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள் தம்மிக்க அமரசிங்க என்ற பாதாள உலக பேர்வழி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலைசெய்தவர் சட்டத்துறை மாணவனாக வேடமணிந்து நீதிமன்றத்துக்கு வந்தார். அதே வருடம் நவம்பரில் மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய அவரது கொழும்பு வாசஸ்தலத்துக்கு முன்பாக பாதாள உலகத்தவர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். விரும்பிய விதத்தில் தாக்குதல்களை மேற்கொள்வதில் தங்களுக்கு இருக்கும் ஆற்றலை பாதாள உலக கும்பல்கள் பொலிசாருக்கு சவால் விடுக்கும் வகையில் நிரூபித்த பல சம்பவங்களை கூறமுடியும். ஆனால், அரசாங்கங்களும் பொலிசாரும் முன்னைய சம்பவங்களில் இருந்து எந்த படிப்பினையையும் பெறவில்லை. சம்பவத்துக்கு பின்னர் சகலரும் புத்திசாலிகள் போன்று பேசுவது சுலபம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதாள உலக கும்பல்களை முற்றாக ஒழித்துக் கட்டப்போவதாக அரசாங்கங்கள் சூளுரைத்தன. ஆனால் நாளைடைவில் எல்லாமே மறக்கப்பட்டுவிடும். அரசாங்கம் மீண்டும் உஷாரடைவதற்கு இன்னொரு பாதாள உலக வனமுறைச் சம்பவம் இடம் பெற வேண்டியிருக்கும். ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 2023 பிற்பகுதியில் பாதாள உலகக் கும்பல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் ஒழித்துக் கட்டுவதற்கு அன்றைய பொதுப் பாதூகாப்பு அமைச்சர் ரிறான் அலஸும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனும் பெரும் ஆரவாரத்துடன் ‘யுக்திய’ என்ற நடவடிக்கையை தொடங்கினார்கள். கடுமையான அத்துமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு்க்களுக்கு மத்தியில் சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட அந்த நடவடிக்கையின் விளைவாக பாதாள உலக வன்முறைகளும் போதைப்பொருள் கடத்தலும் பெருமளவுக்கு ஒடுக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் பிரகடனம் செய்தார். அதன் இலட்சணத்தை கடந்த பல மாதக்களாக நாட்டின் பல பாகங்களிலும் தொடரும் பாதாள உலக கொலைகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. பாதாள உலக கும்பல்களையும் போதைப்பொருள் வியாபாரத்தையும் இரு போயா தினங்களுக்குள் ஒழித்துக் கட்டப்போவதாக சூளுரைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அண்மைய சம்பவங்களுக்கு பிறகு முன்னைய அரசாங்க தலைவர்களைப் போன்றே ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அமைச்சர்களும் பாதாள உலக கும்பல்கள் முற்றாக துடைத்தெறியப்படும் என்று சூளுரைக்கிறார்கள். தீவிரமடைந்திருக்கும் துப்பாக்கி வன்முறைகளின் விளைவாக அரசாங்கம் கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. குற்றச்செயல்களின் அதிகரிப்பின் பின்னணியில் சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கூறுகிறார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை தடம்புரளச் செய்வதற்கும் நாட்டின் உறுதிப்பாட்டைக் குலைக்கவும் முயற்சியொன்று மேற்கொள்ளப்டுவதாக தங்களுக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கடந்தவாரம் அவர் ஊடகங்களுக்கு கூறினார். பாதாள உலக கும்பல்களுக்கும் போதைப்பொருள் மாபியாவுக்கும் எதிரான தனது போரைச் சீர்குலைக்கும் நோக்குடனேயே 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது. அப்போது குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பாக இருந்த ரவி செனவிரத்ன இப்போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சீர்குலைக்கும் நோக்குடனேயே பாதாள உலக கும்பல்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக கூறும் விசித்திரத்தை காண்கிறோம். தற்போதைய வன்முறைகள் வெறுமனே பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவானவையா அல்லது அவற்றின் பின்னால் மறைகரங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்கவும் கூறியிருக்கிறார். தற்போதைய துப்பாக்கி வன்முறைகளின் பின்னணியில், அரசாங்க தலைவர்கள் தேசிய பாதுகாப்பு என்பதற்கு வெவ்வேறு வியாக்கியானங்களை அளிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வாரம் கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெறுகின்ற போதிலும், அண்மைய சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கோ அல்லது மக்களின் பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலை தோற்றுவிக்வில்லை என்று கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தேன்றியிருப்பதாக கருதுவதற்கு மோதுமானளவு பாரதூரத்தன்மை கொண்டவையாக தற்போதைய வனமுறைகளை ஜனாதிபதி நோக்கவில்லையா? தேசிய பாதுகாப்பு என்பது தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும் வெளியில் இருந்துவரும் அச்சுறுத்தல்களை தடுப்பதுமாக மாத்திரம் அர்த்தப்படாது. நாட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத அளவுக்கு பயங்கரமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கக்கூடியதாக தீவிரமடைந்திருக்கும் துப்பாக்கி வன்முறைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ளவேண்டும். பாதாள உலக கும்பல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களும் வன்முறைகளும் திடீரென்று தோற்றம் பெற்றவை அல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. சடடவிரோத போதைப் பொருள் வியாபாரம், பயங்கரமான ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் அரசியல் அனுசரணை ஆகியவற்றின் ஒரு கலவையே இன்றைய இந்த பயங்கரமான நிலைவரத்துக்கு காரணமாகும். கடந்த பல தசாப்தங்களாக, அரசாங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பாதாள உலக குழுக்களை பயன்படுத்தி வந்திருக்கின்றன. பணபலமும் அடியாள் பலமும் சேர்ந்து அரசியலைக் குற்றச் செயல்மயமாக்கியிருப்பதுடன் குற்றச் செயல்களை அரசியல்மயமாக்கியிருக்கின்றன. இந்த விசச் சுழலில் இருந்து இலங்கையை விடுவிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. குற்றச்செயலும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கி்ன்றன. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு தடவை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், “மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் நாளடைவில் அவற்றை தயாரிப்பதை தொழிலாகக் கொண்டு சொத்துக்களைக் குவித்து இறுதியில் பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள்” என்று கூறியது நினைவுக்கு வருகிறது. அவரின் ஆட்சிக் காலத்திலும் பாதாள உலக கும்பல்களுக்கு அரசியல் அனுசரணை இருந்தது. ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பிறகு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளின் ஆட்சிகளிலும் பாதாள உலக கும்பல்கள் அரசியல் அனுசரணையுடன் செயற்பட்டன. கொலை, பாலியல் வல்லுறவு, பணம்பறிப்பு போன்ற குற்றச்செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்த பாதாள உலக பேர்வழிகளுக்கு ஜனாதிபதிகள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து சமாதான நீதிவான் பட்டமும் கொடுத்த வரலாறும் இருக்கிறது. இனநெருக்கடியின் விளைவாக மூண்ட மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரும் தென்னிலங்கையில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளும் சமூகத்தில் ஆயுதங்கள் பரவலாக புழக்கத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களாகும். வன்முறைகளை தூண்டிய அரசியல் கலாசாரத்தின் விளைவுகளையே இலங்கை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்கப் போவதாக கூறிக்கொண்டு பதவிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி தற்போதைய நிலைவரத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை அறிவதற்கு நாமெல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஸ்ரீலங்காவை ‘கீளீன்’ பண்ணுவது சுலபமான வேலை அல்ல. https://arangamnews.com/?p=11861
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 6 Mar 2025, 12:13 PM ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் ஆனந்த விகடனின் இணைய இதழான விகடன் பிளஸ் இதழில் வெளியானது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. ஆனந்த விகடன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், “கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குவது என்பது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பரதசக்கரவர்த்தி, ஆனந்த விகடன் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்ய வேண்டும் என்று ஆனந்த விகடனுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். https://minnambalam.com/tamil-nadu/madras-high-court-order-central-govt-removes-vikatan-blocked/
-
நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன்
நெடுந்தீவு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கிய ஆளுநர் வேதநாயகன் March 6, 2025 10:46 am நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டினர். வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல்படுவதாக மக்கள் தெரிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்தவேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இயன்றவரையில் விரைவாக சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பதிலளித்தார். நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் காணாமல்போயுள்ள நிலையில், தற்காலிகமாக எழுதாரகைப் படகின் நங்கூரத்தை நெடுந்தாரகைப் படகுக்கு பயன்படுத்துவதற்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்தார். நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம் இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர், வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே அதனை புனரமைப்புச் செய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். நெடுந்தீவில் சுற்றுலாத்துறையை நீண்டகால நோக்கில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகார சபை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன்போது நெடுந்தீவின் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். நெடுந்தீவு கடற்றொழில் சமாசத்துக்குச் சொந்தமான அலையரசி படகு திருத்த வேலை காரணமாக பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்தப் படகு திருத்தத்துக்கான நிதி ஐ.ஓ.எம். நிறுவனம் வழங்கவிருந்த நிலையில் நிர்வாகச் சிக்கல் காரணமாக அந்த நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டதாக பிரதேச செயலர் குறிப்பிட்டார் நிர்வாகச் சிக்கலை தீர்ப்பதற்கான நடவடிக்கை வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக விரைவில் முன்னெடுக்கப்படும் என்று இதன்போது பிரதம செயலாளர் குறிப்பிட்டார். நெடுந்தீவு கடற்கரையோரத்தைச் சூழ தடுப்பணை அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும், பெருமளவு நிதி ஒதுக்கீடு இதற்குத் தேவை என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. நெடுந்தீவில் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. படகுச் சேவையின் நேரத்தை கருத்தில் கொண்டு நெடுந்தீவிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார். நெடுந்தீவில் வீதி விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்த பிரச்சினைக்கு ஆளுநர் உடனடியாகத் தீர்வை வழங்கினார். மேலும், நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தை திருத்தியமைத்து தருமாறு மக்கள் கோரினர். இதேவேளை, நெடுந்தீவில் 150 வகையான மருத்துவ மூலிகைகள் காணப்படுவதாக கண்டறிந்துள்ளதாக வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார். அதை மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களுக்கு அதன் ஊடாக வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார். https://oruvan.com/governor-vedanayagan-provided-solutions-to-major-issues-in-neduntheevu/
-
பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது
பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது March 6, 2025 9:08 am களனிப் பகுதியில் காணி ஒன்று தொடர்பாக போலி ஆவணங்களைத் தயாரித்து பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் பேரிலேயே முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://oruvan.com/marvin-silva-arrested-on-charges-of-money-laundering/
-
உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்!
இராணுவ உதவிகள் நிறுத்தம் – ட்ரம்பிடம் சரணடைந்தார் ஜெலென்ஸ்கி இராணுவ உதவியை நிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சரணடைந்தார். இந்நிலையில், அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தைக்கு எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைன் மக்கள் அமைதியை அதிகம் விரும்புபவர்கள். டிரம்பின் பின்னால் உறுதியாக நிற்போம்” என அவர் எக்ஸ் தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டை நிறுத்த உக்ரைன் தயாராக உள்ளது. உக்ரைன் ஏவுகணைகள், நீண்ட தூர ட்ரோன்கள், குண்டுகள் அல்லது பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தாது. இருப்பினும், ரஷ்யாவும் இந்த விடயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தம் எந்த நேரத்திலும் கையெழுத்தாகலாம் என்றும், அது உக்ரைனுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்று நம்புவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார். கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்க்கு இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதி ட்ரம்ப் ஊடகங்கள் முன்னிலையில், உக்ரைன் ஜனாதிபதியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனால் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தைகள் முறிந்ததது. அமெரிக்காவில் இருந்து உடனடியாக வெளியேறிய உக்ரைன் ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்த நிலையில், அவருக்கு அமோக வரவேற்று அளிக்கப்பட்டிருந்தது. இது அமெரிக்காவை மேலும் ஆத்திரமடையச் செய்தது. இந்நிலையில், உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. எவ்வாறாயினும், தற்போது அமைதிக்காக டிரம்புடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=314957
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் புதிய தீர்மானம் அவசியம் என்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி March 6, 2025 ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு தமிழ் மக்களின் சம்மதத்தினை பெற வேண்டுமாயின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும், புதிய தீர்மானம் அவசியம்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது. 2021 ஜனவரி 15ம்திகதியும் பெப்ரவரி 24ம் திகதியும் செப்டம்பர் 8 ம் திகதியும் 2022 பெப்ரவரி 25ம் திகதியும் கூட்டாக வெளியிட்ட கடிதங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்துக்காட்டியுள்ளது. அந்த தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என தெரிவித்திருந்தோம். ‘அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச் செய்கின்றன’. ‘மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்’. ‘இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ‘இலங்கை குறித்த முதலாவது தீர்மானம் 2012 இல் நிறைவேற்றப்பட்டு பல வருடங்களாகிவிட்டது’. ‘எங்களின் எச்சரிக்கைகள் ஒவ்வொன்று சரியானவை என்பது நிரூபணமாகியுள்ளது’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. ‘இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னைய தீர்மானங்களை, இலங்கை விவகாரத்தில் தலையிடுபவை, அரசியல் நோக்கம் கொண்டவை என நிராகரித்துள்ளதுடன் உள்நாட்டு பொறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்படும் எந்த பொறிமுறையும் உண்மையை கண்டறிவதை நோக்கமாக கொண்டிருக்கும் மாறாக பொறுப்புக்கூறலை நோக்கமாக கொண்டிராது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ‘இவ்வாறான சூழ்நிலைகளில் இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை போல குற்றவாளிகளிற்கு எதிராக சுயவிருப்புடன் நடவடிக்கைகளை எடுக்காது என்பது மிகவும் தெளிவாக தெரியவந்துள்ளது’ என்று இணை அனுசரணை நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ‘குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்பதையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வலியுறுத்திவருகின்றனர்’. ‘மீளநிகழாமைக்கு இது மிகவும் அவசியம்’ என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. https://www.ilakku.org/இலங்கையை-சர்வதேச-குற்றவ-4/
-
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு
நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு கனகராசா சரவணன்,பாறுக் ஷிஹான் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர் இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வியாழக்கிழமை (06) காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகவும் இதுவரை சடலம் அடைiயாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் 5 அடி உயரம் கொண்டதாக காணப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/நின்றுகொண்டிருந்த-சடலம்-மீட்பு/175-353193
-
கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழு; விசாரணைகள் தீவிரம்!
கிழக்கில் அடிப்படைவாதம்” என்ற கூற்றினூடாக இஸ்லாமியர்களை முடக்க முயற்சி editorenglishMarch 6, 2025 பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05/03/2025) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்… கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05/03/2025) வெளிவந்துள்ளன. குறிப்பாக, கல்முனை பகுதிகளில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தக் கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.. கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை உட்பட இஸ்லாமிய அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர் என்றார். இவ்வாறான அடிப்படைவாதப் போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம் பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை. இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்றார். கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய சக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும். அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள் வீண் அச்சம் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால் சமூகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் செயல்படுகிறது என்ற பழைய தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிழக்கில் அடிப்படைவாதம் என்ற அமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி அரசாங்கம் பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/212750/
-
தமிழ் அரசியல் தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறது ஈ.பி.டி.பி
தமிழ் அரசியல் தரப்புகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்கிறது ஈ.பி.டி.பி editorenglishMarch 6, 2025 வடக்கில் கிறீஸ் பூதம் கடந்த காலங்களில் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்கத் திட்டமிடப்படுகிறதா? என்று சந்தேகத்தை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம், இது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். யாழ். ஊடக மையத்தில், புதன்கிழமை (05/02/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் தயாராக இருப்பதாக சமிக்ஞை எம்மால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றன. அதுதொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, கடந்த காலங்களைப் போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அது ஒருபுறமிருக்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரையில், தற்போதைய அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாக விமர்சிக்கும் நோக்கம் இல்லாத போதிலும், சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீக கடப்பாடு இருப்பதாக இருப்பதாகக் கருதுகிறோம். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்ற போது எமது பிரதேசங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கிறது. சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மற்றுக் கருத்தில்லை. எமது மக்களைப் பொறுத்தவரையில், காணிகள் விடுவிக்கப்படும், காணாமல் போனோர் விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும், அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற விடயங்கள் சொல்லப்பட்ட போதிலும், இதுவரையில் அவை தொடர்பான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் ஆயுத ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடிப்படைவாத அமைப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற போது வடக்கில் கடந்த காலங்களில் கிறிஸ் பூதங்கள் ஏவி விடப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் இருப்பதாகவும், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/212737/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆசை, தோசை அப்பளம் வடை!🤪 போட்டியில் இல்லாத அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு முதலிலேயே முட்டைகள் 🍳 கொடுக்கப்படும். புஸ்டியான ஆகாரத்தோடு மட்சைப் பார்க்கலாம்! இந்தியா வெல்லும் என்றவர்களுக்கு ட்ரம்ப் - செலன்ஸிக்கான லஞ்ச்சில் கவியார்🍱🧆🥗 மாதிரி எக்ஸ்பென்சிவ் ஐயிட்டம் எல்லாம் ரெடி. செலன்ஸ்சி மாதிரி இந்தியா மட்சைக் கவிட்டால் எல்லோருக்கும் கூழ்முட்டைதான்🥚🥚😂🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முன்னர் பெரிய குடும்பி வைச்சிருந்தேன்😜 சம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றதால் உள்ளூர் சாதகம் இருக்கும் என்று பாகிஸ்தானை நம்பி குணா குகையில் விழுந்தவன் மாதிரி ஆகிவிட்டேன்😩 இனி மட்டன் வாங்குவதைத் தவிர்த்து வேறு ஒன்றிலும் பாகிஸ்தான்காரரை நம்பமாட்டேன்😜
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.. நம் கனவு அண்ணன் தயவால் பலிக்கும்🥳
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ரச்சின் ரவிந்திராவினதும் கேன் வில்லியம்ஸினதும் செஞ்சுரிகளுடனும் க்ளென் பிலிப்ஸின் அதிரடியான 49 ஓட்டங்களுடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி சவாலான ஓட்ட இலக்கை அடித்தாட முடியாதவாறு நியூஸிலாந்து சுழல் பந்துவீச்சு இருந்தது. டேவிட் மில்லர் மாத்திரம் அடித்தாடி செஞ்சுரி அடித்தாலும் பிற வீரர்களின் ஒத்துழைப்பின்மையால் 312 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்த @சுவைப்பிரியன் க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
உக்ரைன் யுத்தம் - சமாதான தேவதையும் பிசாசுகளும்!
சமாதான தேவதையும் பிசாசுகளும்! sudumanal கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு. இராஜதந்திரங்கள் பலவும் சம்பிரதாயபூர்வமாக மக்கள் கண்களில் சாந்தமான ஜனநாயக அணுகுமுறை போலவும், நான்கு பக்க சுவர்களுக்குள் வல்லான் அழுத்தங்களினாலும் பயமுறுத்தல்களினாலும் நிறைவேற்றப்படுகிற அரங்க நிகழ்வுகளாகும். இது பல நாடுகளிலும் காலங்காலமாக தொடர்கிற ஒன்று. இந்த இரட்டைத்தன்மை வாய்ந்த இராஜதந்திர வடிவத்தின் சம்பிரதாய மீறலானது வெளிப்படையில் செலன்ஸ்கியை அவமானப்படுத்தியதாக எம்மை வந்தடைகிறது. கணவன் மனைவி சண்டையை வீதிக்கு கொண்டுவருவது போன்ற செயல்தான் அன்று நடந்தது. இது திட்டமிடப்பட்டு ட்றம்ப் குழுவால் நிகழ்த்தப்பட்டதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கள்ளத்தனமான செயற்பாட்டை செலன்ஸ்கி ஓர் இராஜதந்திரியாக இருந்திருந்தால் அந்த இடத்தில் தவிர்த்திருக்க முடியும். அதே பாசாங்கை அவர் செய்திருக்கலாம். ஆனால் அவர் நேரடித்தன்மை அல்லது வெளிப்படைத்தன்மை வாய்ந்தவராக இருந்தார். போரில் நலிந்துபோய் செய்வதறியாது பரிதவிக்கும் ஒரு நாட்டுத் தலைவரின் உளவியல் அழுத்தத்தை நாம் புரிந்துகொண்டால், அவர் அவ்வாறு பேசத் தலைப்பட்டதையும் புரிந்துகொள்ளலாம். இந்த உளவியலை ஒரு கருவியாக ட்றம்ப் குழு பாவித்து உணர்ச்சிமயமான சூழலுக்குள் தள்ளினார்கள். அவரது உடை குறித்தும்கூட அங்கு நின்ற செய்தியாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) பிரஸ்தாபித்து, அது அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றது என்று முட்டாள்தனமாக சொல்லவும் செய்தார். இந்த ஆத்திரமூட்டும் சூழ்நிலைக்குள் செலன்ஸ்கி வீழ்ந்தார். ட்றம்ப் “உன்னிடம் துருப்புச் சீட்டு இல்லை. அது என்னிடமே இருக்கிறது” என சொன்னபோது, செலன்ஸ்கி அதை தனது நிலையில் நின்று புரிந்து, “இது துருப்புச் சீட்டு விளையாட்டல்ல. நான் சீரியஸாக பேசுகிறேன்” என அர்த்தப் பிறழ்வோடு சொல்ல நேர்ந்தது. அதை நாம் புரிந்துகொண்டே ஆக வேண்டும். ஐரோப்பாவில் நின்று வீரம் பேசிய பிரான்சின் மக்ரோனும் பிரித்தானியாவின் ஸரார்மரும் தனித்தனியாக ட்றம்பை சந்தித்தபோது சம்பிரதாய நடிப்பை செவ்வனே செய்துவிட்டுத்தான் வந்தார்கள். அடிக்கடி ஒவ்வொரு கோணத்தில் கையைப் பிடிப்பது, தோளில் தட்டுவது, தடவுவது, துடையில் தொட்டு கதை சொல்வது, வெகுளித்தனமாக இளிப்பது என அவர்கள் காட்டிய உடல்மொழி கேவலமாக இருந்தது. இது செலன்ஸ்கிக்கு வாய்க்கப் பெறவில்லை. ஓவல் அலுவலக சந்திப்பிலிருந்து கோபத்தோடு வெளியேறிய செலன்ஸ்கியை அந்த சூடான வார்த்தைப் பரிமாறல்களின் ஈரம் காயுமுன்னர், பிரித்தானிய பிரதமர் ஸ்ராமர் அழைத்து கட்டியணைத்து வரவேற்றார். ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் கனடா தலைவர் ஆகியோருடனான ஒரு திடீர் சந்திப்பை இலண்டனில் நிகழ்த்திக் காட்டினார். “இந்தா பார் நீ உதாசீனப்படுத்திய செலன்ஸ்கியை நாங்கள் கௌரவித்துக் காட்டுகிறோம்” என ஒரு வீம்புச் செய்தியை ட்றம்ப் க்கு காட்ட வேண்டும் என்பது போல் அது இருந்தது. அதைத் தாண்டிய பிரச்சினை என்னவென்றால் இந்த சுடுதண்ணிச் செயற்பாடானது செலன்ஸ்கியை இன்னொரு பொறியுள் விழ வைத்திருக்கிறது. ஒரு கையால் இராணுவ உதவிகளை கொடுத்தபடி, இன்னொரு கையால் சமாதான முயற்சி செய்யும் விநோதமான அணுகுமுறை ஸ்ராமரினதும் மக்ரோன் இனதும் திட்டமாக இருப்பது ஒரு முரண்நிலை செயற்பாடாகும். அத்தோடு சமாதானப் படை என்ற பெயரில் ஸ்ராமரும் மக்ரோனும் உக்ரைனுக்கு படை அனுப்ப துடியாய்த் துடிக்கிறார்கள். ஒரு நிழல் போரை நடத்தி உக்ரைனை இந்தப் பேரழிவுக்குள் விட்டுவிட்டவர்கள் அவர்கள்!. உக்ரைனுக்கு படையனுப்பி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்நிபந்தனையாக சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு ஐநா என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. இவர்கள் நினைப்பதுதான் சர்வதேச விதிகள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். ஐநா அனுப்பிய அப்படியான படைகள் பிரச்சினைக்குள் சிக்கிய ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு செக்குமாடாய் செயற்பட்டது இன்னொரு வரலாறு. உருப்படியாக எதுவும் நடந்ததில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அவற்றால் பண்பாட்டு ரீதியில் பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு சமாதானப்படை அனுப்பும் முயற்சியை ரசியா நேற்றோவின் விஸ்தரிப்புவாதமாக எடுத்துக் கொள்ளவே செய்யும். இது சமாதானத்தை கேள்விக் குறியில் நிறுத்திவிடும். சமாதானம் என்பது இப் பிரச்சினையின் மூலவேர்களை கண்டறிந்து அதை களைவதில்தான் நிலைத்து நிற்கும். ஐரோப்பாவின் செயற்பாடு இதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சமாதானம் அல்ல முக்கியம். “ரசியாவை பலவீனப்படுத்துவது” என்ற தமது இலக்கை முடிந்தவரை உக்ரைன் மக்களின் சாம்பலிலிருந்தாவது உயிர்ப்பித்து அடையத் துடிப்பதுதான். “ரசியா சோவியத் யூனிய சாம்ராச்சியத்தை மீண்டும் நிறுவத் துடிக்கிறது. அது ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அழித்தொழிக்கக் கூடியது. உக்ரைனின் போராட்டமானது எங்களுக்கும் (ஐரோப்பாவுக்கும்) சேர்த்த போராட்டம்தான்” என அவர்கள் மக்களின் மூளைக்குள் கட்டியெழுப்பத் துடிக்கும் கதையாடலில் உண்மையில்லை என்பது இந்தத் தலைவர்களுக்குத் தெரியும். இதற்கு புட்டின் போர் ஆரம்பித்தபோதே பதில் கூறியிருந்தார். “சோவியத் இன் அழிவு குறித்து கவலைப்படாதவருக்கு இதயம் இல்லை. சோவியத் மீண்டும் உருவாகும் என சொல்பவர்களுக்கு மூளை இல்லை” என்றார். சோவியத் இன் அழிவு 1990 இலிருந்து அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை நிறுவியது. எதிர்க் கடை இல்லாத வியாபாரமாய் அடுத்தடுத்து அமெரிக்கா போர்களை உற்பத்திசெய்து விற்றது. இவைதான் இந்தக் காலப் பகுதியில் நடந்த துயர நிகழ்வுகள். இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இறைத்த இராணுவ உதவிகளானது போரில் ரசியாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனபோதும் கூட, இப்போ அமெரிக்கா இல்லாத இந்த கூட்டணியால் என்னத்தை பிடுங்கிவிட முடியும். அது அவர்களுக்குத் தெரியாததல்ல. இது செலன்ஸ்கிக்கு தெரியாமல் போவதுதான் வருத்தமளிக்கிறது. அன்றைய இலண்டன் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அரைவாசி நாடுகளுக்கு மேல் பங்குபற்றவில்லை. அநேகமும் அந்த நாடுகள் ஏழை கிழக்கு ஐரோப்பிய நாடுகள். ஹங்கேரியின் பிரதமர் விக்ரன் ஓவன் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் “போர் வெறியர்கள்” என பேட்டியொன்றில் மிக அண்மையில் சொல்லியிருக்கிறார். இத்தாலி பிரதமர் மெலோனி அவர்கள் ட்றம்ப் க்கு ஆதரவாக இருக்கிறார். ஜேர்மனி சமாதானப் படை அனுப்ப தயங்குகிறது. இவ்வாறாக, பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் பெரியண்ணன் இல்லாத நேற்றோவானது பலத்தை இழக்க நேர்ந்துள்ளது. (அது சிலவேளை ட்றம்ப் ஆட்சிக் காலத்தின் பின் மீண்டும் தடத்தில் ஓடலாம்). இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய நிதி 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைவிட அதிகமானதாகும். சுயத்தை அமெரிக்காவிடம் அடகுவைத்திருக்கும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதம் அரைவாசியும் அமெரிக்காவில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவுக்கென சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்ளை கூட இல்லை என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள். இந்த சீத்துவத்துள் தோல்வியடைந்து கொண்டிருக்கும் உக்ரைனுக்கு (பிரித்தானியா உட்பட்ட) ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதாக செலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். தலைவர்கள் தேர்தலில் முளைத்து தேர்தலில் மறைபவர்கள். அவர்கள் வருவர், போவர். உக்ரைன் போரால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு. அந்த நாட்டின் இராணுவம் உட்பட மக்களின் உயிர்கள் திரும்ப முளைக்கப் போவதில்லை. எல்லாமே சுரண்டல்தான். எரியிற நெருப்பில் எஞ்சியதை பிடுங்கிற எத்தனம். பெரும் கனிம வளங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிற உக்ரைனின் வளங்களை கொள்ளையிடும் நுட்பம் தெரிந்தவர்கள் அவர்கள். உதவியளிக்கிறோம் என சொல்லி உக்ரைனுக்குள் ஆயுதங்களை இறைத்துவிட்டு, இப்போ தாம் வழங்கிய உதவிக்கு உக்ரைனின் வளங்களை பிய்ச்சுப் பிடுங்கிற போட்டியில் இறங்கியிருக்கிறார்கள், அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும்!. இனி ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கிளம்பலாம். போரில் அழிவுண்ட ஒரு நாடு தன்னை கட்டியெழுப்ப அதன் கனிமவளங்கள் உதவும் என்ற ஓர் அறம்கூட இந்த நாடுகளிடம் கிடையாது. காலனிய காலத்திலிருந்து அவர்களின் மூளையைத் தொடரும் களவு மனநிலையும் அதிகாரத்துவ உளவியலும் நீங்கப் போவதில்லை என்பதை இது காட்டுகிறது. பிரித்தானியா இப்போ பார்த்திருக்கும் வேலை இன்னமும் உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற வேலை. ரசியா மீதான பொருளாதாரத் தடை மூலமாக உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசிய சொத்துகளிலிருந்து (சர்வதேச விதிமுறைகளை மீறி) 2.84 பில்லியன் பவுண்ட்ஸ் இனை எடுத்து உக்ரைனுக்கு கடனாக வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது. இது புதிய சிக்கல்களை உருவாக்க வல்லது. சமாதானப் பாதைக்கு குறுக்கே போடப்படுகிற பாறாங் கற்கள் இவை. மக்ரோன் ட்றம்ப் இனை சந்தித்தபோதும் ரசியாவின் உறைநிலை சொத்துக் குறித்து தடுமாற்றத்துடனும் வெகுளித்தனமான அவரது உடல்மொழியுடனும் ஒன்றைச் சொன்னார். தாம் உறைநிலையில் வைத்திருக்கும் ரசியாவின் சொத்துக்களை தாம் எடுப்பது சர்வதேச விதிமுறைக்கு முரணானதுதான் என்றாலும், தாம் உக்ரைனுக்கு அளித்த உதவிக்காகவும் உக்ரைனை ரசியா அழித்ததற்காகவும் அதை தமக்கு விட்டுக் கொடுத்தால் super என சொன்னார். அதன்போதுதான் ட்றம் “ஓம் அவர்கள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கடை பணத்தை திருப்பி எடுக்கப் பார்க்கினம்.. எடுப்பினம்” என நையாண்டி செய்யும் உடல் மொழியில் சொன்னார். உடனே மக்ரோன் “இல்லையில்லை. நாம் உக்ரைனுக்கு கடனாகவும் அன்பளிப்பாகவும் உதவியாகவும் அதாகவும் இதாகவும்..” என சொற்களை தடுமாறவிட்டுக் கொண்டிருந்தார். உக்ரைனின் கனிமவள பேரத்தில் (அமெரிக்காவுடன்) பிரித்தானியாவும் பிரான்சும் பங்கெடுக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து ஐரோப்பா சார்பாக சமாதான வரைவு ஒன்றை தயாரித்து அதை நேரில் ட்றம்ப் உடன் கலந்தாலோசிக்க உள்ளோம் என்கிறார்கள். உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதத்தை தந்தால், தான் கையெழுத்திடுகிறேன் என செலன்ஸ்கி சொல்லியிருந்தார். ட்றம்ப் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.கனிமவள உடன்படிக்கையில் செலன்ஸ்கி கையெழுத்திடாமல் அமெரிக்காவிடமிருந்து தப்புவது கடினம். அதேபோல் அமெரிக்காவின் சமாதான முயற்சிக்கு செலன்ஸ்கி பச்சைக் கொடி காட்டாவிட்டால் அவரின் பதவி கைமாறப்பட்டு செய்துமுடிக்கப்பட அமெரிக்க உளவுத்துறைக்கு நேரம் ஆகாது. அதனால் செலன்ஸ்கி “மீண்டும் வருகிறேன்” என ட்றம்புக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். தலையை முந்நூற்றி அறுபது பாகையில் திருப்பித் திருப்பி பார்த்தாலும் இதற்குள் ஒளிந்திருக்கும் இரத்தப் பிசாசை கண்டறிய முடியாமல் இருக்கிறது. திரைமறைவில் என்னவெல்லாம் அரங்கேறுகிறதோ தெரியவில்லை. இன்று இறைமை என்பது களவாடப்பட்டு அழகாக உச்சரிக்கப்படுகிற வார்த்தையாக உருமாறியிருக்கிறது. வலிமையற்ற நாடுகளுக்கு இறைமை என்பது சொல் அலங்காரம் மட்டுமே. ஐரோப்பாவே அமெரிக்காவை விட்டு இறைமையுள்ளதாக மாற வேண்டும் என குரல் எழுப்புகிறபோது, வலிமையற்ற நாடுகளுக்கு இது எம்மாத்திரம். வலிமையுள்ளவர்களை சார்ந்திருப்பதே வலிமையற்றவர்களின் இறைமை என்பதுதான் ஓரவஞ்சனையான அரசியல் நியதியாக உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் காப்பாற்ற உக்ரைனுக்குள் -அதாவது ரசிய எல்லைவரை- படையனுப்பத் துடிப்பவர்கள், ரசியா தனது பாதுகாப்பு உத்தரவாதம் கருதி உக்ரைன் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருக்கக் கோருவதை எந்த தர்க்கம் கொண்டு நிராகரிக்கிறார்கள். உதாரணத்துக்கு பிரான்ஸின் எல்லையோரம் ஏதாவதொரு நாட்டில் ரசியாவோ சீனாவோ படைத்தளம் அமைத்து ஏவுகணையை அல்லது அணுவாயுதத்தை நிற்பாட்டினால், பிரான்ஸ் அமைதியாக இருந்துவிடவா போகிறது. ஆக, போரற்ற உலகில்தான் சமாதானம் உயிர்வாழும். மனிதகுலம் மேம்படும். இது யதார்த்ததில் சாத்தியமில்லாமல் ஆகியிருக்கிறது. வலியவர்களின் உலகம் இது. அவர்களுக்கொரு நீதி. மற்றவர்க்கொரு நீதி. எனவே இதற்குள் இராஜதந்திரம் என்ற வெட்டியோடல்தான் ஜனநாயக மேக் அப். “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என எந்த நாடோ விடுதலை இயக்கமோ பயணிக்க முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. உக்ரைனுக்கும் இது விதிவிலக்கல்ல. எதிர்கால உக்ரைனாக மாறும் அபாயமுள்ள தாய்வானுக்கும் இது விதிவிலக்கல்ல. சோவியத் அழிவோடு வார்சோ ஒப்பந்த நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டபோதே “நேற்றோ” மரணப் படுக்கைக்குப் போயிருக்க வேண்டும். அதை உயிர்ப்பிக்க நேற்றோ விஸ்தரிப்பு தேவைப்பட்டது. கம்யூனிச பூச்சாண்டி கலைந்தபின் மற்றைய நாடுகள் மேல் அதிகாரம் செலுத்த அவர்கள் தொடர்ந்து காப்பாற்றிய இராணுவ அரக்கன்தான் நேற்றோ அமைப்பு. 1990 க்குப் பின்னான எல்லாப் போர்களையும் இந்த அரக்கனையும் அதன் சாரதியான அமெரிக்காவையும் தவிர்த்து வியாக்கியானப் படுத்தவே முடியாது. எனவே இந்த மேற்குலகிடமிருந்து விடுபட்டு ரசியாவும் உக்ரைனும் -இருவரும் உடன்படக்கூடிய- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பிரச்சினையின் மூல வேர்களைக் களைந்து சமாதானத்தை நோக்கி இயன்றவரை முயற்சிப்பதுதான் சிறந்த வழி! ravindran.pa https://sudumanal.com/2025/03/04/சமாதான-தேவதையும்-போர்ப்/
-
நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது?
நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது? by ஸ்ரீதர் ரங்கராஜ் • March 1, 2025 தீவிர இலக்கியம் அதன் வாசகர்களிடமிருந்து வெறும் நுகர்வைக் காட்டிலும் அதிகமாகக் கோரக்கூடியது — அதற்கு ஈடுபாடு, பொருள்கொள்ளுதல், சிக்கலான தன்மையுடன் ஊடாடும் விருப்பம் தேவை. நேரியல் முறையிலான கதைசொல்லல் மற்றும் உடனடி நுகர்வை வளர்க்கும் வெகுஜனப் புனைகதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் அடுக்குகள், பலபொருள்படும் தன்மை கொண்டது, பெரும்பாலும் எளிமையான புரிதலுக்கு மறுமுனையில் இருப்பது எனலாம். தீவிர இலக்கிய வாசிப்பின் உண்மையான மகிழ்ச்சி புறவயமான நுகர்வு அனுபவத்திலிருந்து அல்லாமல் அதன் உள்ளார்ந்த பொருளைக் கண்டறிவதில், கட்டமைப்பை ரசிப்பதில், கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கும் செயலில் பங்கேற்பதன் மூலம் வருகிறது. தீவிர இலக்கியத்தை வாசிப்பது என்பது ஆர்வம், பொறுமை மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் ஒரு படைப்பை அணுகுவதே. இதற்கு வாசகர் வரலாற்றுச் சூழல், மொழியியல் நுணுக்கங்கள் மற்றும் மொழிபுக் கட்டமைப்புகள் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஈடுபாடு வாசகரின் அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சி ஆழத்தை மேம்படுத்தி இலக்கியத்தை வெறும் கதைசொல்லல் என்பதிலிருந்து தத்துவ விசாரம், சமூக விமர்சனம் மற்றும் கலைப் புதுமைகள் நிகழக்கூடிய ஊடகமாக மாற்றும். தீவிர இலக்கியத்தை வாசிப்பதால் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறனும் ஒருவரது உடனடி யதார்த்தத்திற்கு அப்பால் மனித அனுபவங்களைப் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும். பிறரது உணர்விடத்திலிருந்து சிந்திப்பது, உரையாடலை ஊக்குவிப்பது, முன்முடிவான கருத்துகளை மீளாய்வு செய்வது என தீவிர இலக்கியம் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவும். கூடுதலாக, தொடர் வாசிப்பு உள்ளார்ந்த கருப்பொருள்கள், கட்டமைப்பு வடிவங்கள், சொல்லாட்சி நுட்பங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்கும் திறனையும் வளர்க்கும். அவ்வகையில் தீவிர இலக்கிய வகைமையில் பொருந்தக்கூடிய ஒரு படைப்பை மேலோட்டமாக வாசிப்பது என்பது வாசகருக்கு மேற்கூறிய பலன்கள் எதையும் அளிக்காது என்பதால் அவ்வாறான படைப்பை வாசிப்பது எப்படி என்பதையும் விளக்க வேண்டியதாகிறது. இந்தக்கட்டுரை என் புரிதலிலிருந்து அதற்கான முயற்சியே. 1. மேற்பரப்பிற்கு அப்பால் நகர்தல் சாதாரண வாசிப்புக்கும் தீவிர இலக்கிய வாசிப்புக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு, மேற்பரப்பிற்கு அப்பால் பார்க்கும் திறன். மேற்பரப்பு என்பது என்ன? படைப்பில் விவரிக்கப்பட்டுள்ள கதை மற்றும் சம்பவங்களே மேற்பரப்பு. அப்படைப்பின் கதை, களம் உங்களை மகிழ்விக்கக்கூடும், ஆனால் தீவிர இலக்கியம் என்பது வெறும் சம்பவங்களின் வரிசை மட்டுமல்ல — அது, அந்தச் சம்பவங்கள் அடிப்படையில் எதை உணர்த்த முயல்கின்றன? என்பதைப் பற்றியது. தீவிர இலக்கிய வாசகன் கேட்கவேண்டிய கேள்வி: இந்தச் சம்பவங்களுக்கு அப்பால் அல்லது இந்தச் சம்பவங்களின் மூலம் எழுத்தாளர் எதை வெளிப்படுத்த முயல்கிறார் என்பதே. உதாரணமாக: சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ — இந்த நாவல் தனிப்போக்குடைய ஓர் எழுத்தாளனின் வாழ்க்கையைப் பற்றியது மட்டுமல்ல, கருத்துகள், சித்தாந்தங்கள், நோக்கங்கள், பார்வைகள் என எல்லாமும் மாறிவரும் இன்றைய சமூகத்தில் இலக்கிய உலகில் நிலவும் பண்பாடு, அறிவுஜீவித்தனம் மற்றும் தனித்துவம் குறித்த கூர்மையான விமர்சனம். மேற்பரப்பிலான வாசிப்பு இந்த அடுக்குகளைத் தவறவிட்டுவிடும், ஆழமான ஈடுபாட்டுடன் கூடிய வாசிப்பு அதன் பரந்துபட்ட இருத்தலியல் கவலைகளை, பிம்பங்கள் உருவாகிக் கலைவதை, உயர்ந்த தத்துவங்களின் கள யதார்த்தத்தை, வெளிப்படுத்துகிறது. இவ்வாறு படைப்பின் ஆழத்தை அடைய வாசகர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்ன? முதலில் ஒரு புத்தகத்தை விரைவாகப் படித்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தவிர்க்கவேண்டும். எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள் என்பது இங்கு முக்கியமே அல்ல. நீங்கள் குறைவான எண்ணிக்கையில் வாசித்திருந்தாலும் ஒரு படைப்பை எவ்வளவு ஆழமாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியம். படைப்பில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு காட்சியைப் பற்றிச் சிந்திக்க இடைநிறுத்துவது, சிக்கலான பகுதிகளை மீண்டும் மீண்டும் படிப்பது, குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சொற்றொடரை எழுத்தாளர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று கேள்வி கேட்டுக்கொள்வது பிரதியை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும். அதோடு, அப்படைப்பு சார்ந்த விமர்சனக் கட்டுரைகள், எழுத்தாளரின் நேர்காணல்கள் அல்லது கதை எழுதப்பட்டுள்ள வரலாற்றுச் சூழலை அறிந்து கொள்ளுதல் போன்ற துணை வாசிப்புகள் படைப்பின் மீதான புதிய கண்ணோட்டங்களைத் திறக்கும். 2. மொழி மற்றும் பாணியில் கவனம் செலுத்துதல் தீவிர இலக்கியம் அதன் மொழியிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதது. சொற்களின் தேர்வு, அதன் இசைமை, வாக்கிய அமைப்பு மற்றும் உருவகங்கள் ஆகியவை வெறும் அலங்காரங்கள் மட்டுமல்ல, அவை அர்த்தத்துடன் ஒருங்கிணைந்தவை. யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவலை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இந்நாவல் கவித்துவமான உரைநடையில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒன்று. அப்படைப்பின் மொழியிலுள்ள இசைமை, நாவலின் கருப்பொருளான காதல் மற்றும் ஏக்கம் குறித்த அதன் கவனத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் பத்திகளில் அதை நீங்கள் உணரக்கூடும்: “நான் என்ன செய்வேன் ஜீவிதா… உங்கள் மெலிந்த உருவம்.. வட்டச் சிறுமுகம்… வரண்டாவில் நடக்கும்போதான புடவைச் சரசரப்பு… அசைவுகள்… புன்னகை… பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப் போலவும் ஞானியைப் போலவும் நடந்தேன். இந்தச் சந்தோஷ நேரத்திற்கு — எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்தத் தருணத்திற்கு — அன்பு சுரந்து ததும்புகிற இந்தப் பிரகாச நிலைக்கு — எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு — பாடுகள் அத்தனையிலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்தலுக்கு — என்றென்றைக்குமாக உங்களுக்கு என் நன்றி.” “இருளின் குமிழ்களைப்போல் உங்கள் புடவை அசைகிறது. மிகச்சன்னமாக ஒலிக்கின்றன உங்கள் கொலுசு மணிகள். தெளிந்து வருகிறது தலையில் சூடியிருந்த பூச்சரம். நடந்து நடந்து அகன்று கொண்டிருந்தீர்கள். ஒரு காலெடுத்து அடுத்த அடி வைக்கும்போது உங்கள் செருப்பிலிருந்து உதிரும் மணல், என்னை உட்கொண்டு திறந்திருக்கும் புதைகுழியை மூடுகிறது சிறுகச் சிறுக.., அலைகளை மிதித்தபடி கடலோரமாய் நடக்கத் துவங்கினேன்.” *** இந்த இடத்தில் தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலையும் குறிப்பிடவேண்டும். அதில் பாபுவின் தாபம் மற்றும் உளத்தடுமாற்றம் குறித்த கவனத்தை மேம்படுத்த அதன் மொழி உதவுகிறது. நாவலில் வரும் இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்: ”யமுனாவின் முகத்தையும் கண்ணையும் வனப்பையும் பார்த்தான் பாபு. இவளிடம் ஏதோ அசாதாரணமான ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அணுகமுடியாத, தொடமுடியாத ஒரு முழுமை, பொலிவு, சந்தனக்கட்டையின் வழவழப்பு, வர்ணம். நீண்ட விரல்கள், நீண்ட கைகள், நீண்ட பாதம். உண்மையாகவே இவள் தொடக்கூடாதவளா? நெருங்க முடியாதவளா? நெருங்கத் தகாதவளா? அறிவைத் தவிர, எண்ணங்களைத் தவிர வேறு ஒன்றுமே இவளுக்குக் கிடையாதா? இவள் சரீரத்திற்கு, தங்கச்சுரங்கமான இந்தப் புறஅழகிற்குப் பலனே கிடையாதா? இவளும் ஒருகணத்தில், ஒளிமங்கிய முக்கால் இருளில் தனிமையின் கைமறையும் அந்திமங்கலில் அன்பை மட்டும் ஆடையாக அணிந்து மயங்கத்தானே வேண்டும். தனிமையின் தயங்கும் துணிச்சலில், இருள்-ஒளிக் கலவையின் மறைவில், ஆகாயத்தை மட்டும் ஆடையாக அணிந்து நாணம் மின்னி நெளிய, குன்றியும் ஒடுங்கியும் எழுச்சி பெற்று நினைவழியத்தானே வேண்டும்.” *** இங்ஙனம் மொழியில் முனைந்து உருவாக்கப்பட்டவற்றை அடையாளங்காண்பது தீவிர இலக்கிய வாசிப்பில் முக்கியமானதொரு செயல்பாடு — என்ன சொல்லப்படுகிறது என்பதைத் தாண்டி எப்படிச் சொல்லப்படுகிறது என்ற இடத்திற்குச் செல்வது. இதையுணர, சில பகுதிகளை வாய்விட்டுச் சத்தமாக வாசிப்பது, பயன்படுத்தப்படும் சொற்களில், வாக்கிய அமைப்பில் கவனம் செலுத்துவது, தொனியில் உருவாகும் மாற்றங்களைக் கவனிப்பது ஆகியவை எழுத்தாளரின் மொழிப்பயன்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். 3. கதைகூறலின் நுட்பங்களைப் புரிந்துகொள்வது தீவிர இலக்கியத்தில் கதை அமைப்பு முக்கியமானது, பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. வெவ்வேறு கதைகூறல் நுட்பங்களை அடையாளங்காண்பது வாசகருக்கு படைப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் பிரதியைப் புரிந்துகொள்ளவும் உதவும். எடுத்துக்காட்டாக சில கதைகூறல் நுட்பங்கள்: நேரியல்முறை அல்லாத கதைகூறல்: சுந்தர ராமசாமியின் ’ஒரு புளியமரத்தின் கதை’ நாவலின் கதை, மாறிமாறி வரும் காலவரிசை, பகுதிபகுதியான கதைசொல்லல் மூலம் எழுதப்பட்டுள்ளது. வாசகர்கள் அதன் பொருளை ஒன்றிணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அகவயமான கதைசொல்லிகள்: ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில், கதைசொல்லியின் கண்ணோட்டத்திலிருந்து வரும் கருத்துகள், ஒழுக்கம் குறித்த பார்வைகள் உண்மையின் அகநிலைத் தன்மையை எடுத்துக்காட்டுபவை. வேறுபட்ட கண்ணோட்டங்கள்: சோ.தர்மனின் கூகை நாவல் சாதிய ஒடுக்குமுறைகளை, சமூகக் கட்டமைப்புகளை பல்வேறு கதாபாத்திரங்களின் கண்ணோட்டங்கள் வழி முன்வைக்கிறது, இதன்மூலம் பல அடுக்குகள் கொண்ட வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. மீபுனைவு: ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் வழமையான கதைசொல்லலைத் தவிர்த்து புராணம், வரலாறு மற்றும் தத்துவத்தைக் கலந்து, கதை குறித்த வாசகரின் பார்வைக்குச் சவாலான வகையில் கட்டமைக்கப்பட்டது. தீவிர இலக்கியம் பெரும்பாலும் எளிமையான, ஒற்றை-நோக்கில் கூறப்படும் கதைகளை நிராகரிக்கிறது, அதற்குப்பதிலாக வாசகரின் பங்களிப்புத் தேவைப்படும் துண்டு-துண்டான, பல அடுக்குகள் கொண்ட கதைசொல்லலைத் தேர்வு செய்கிறது. மொழிபிலுள்ள மாற்றங்கள், கண்ணோட்டத்தில் நிகழும் மாற்றங்கள், கட்டமைப்பு ரீதியிலான புதுமைகள் ஆகியவை கருப்பொருளின் மீதான தாக்கங்களைக் கொண்டிருப்பதால், வாசகர்கள் அவற்றைக் கவனிக்கத் தங்களைப் பயிற்றுவிக்க வேண்டும். 4. மையக்கருத்துகள், மறைபொருளைத் தேடுதல் தீவிர இலக்கியப் படைப்பு ஒருபோதும் அதில் நேரடியாகச் சொல்லப்படும் கதையைப் பற்றியது மட்டுமல்ல — அது எப்போதும் அறிவுசார், தத்துவ உரையாடலின் பகுதி. இலக்கியத்திலுள்ள அடிப்படை மையக்கருத்துகள், மறைபொருள்களை அடையாளம் காண வாசகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சில உதாரணங்கள்: பாமாவின் கருக்கு: சுயசரிதை நாவல் என்பதைத் தாண்டி, சாதிய ஒடுக்குமுறை, எதிர்ப்புத்தன்மை மற்றும் சுய அடையாளத்தை ஆழமான தனிப்பட்ட பார்வை மூலம் ஆராய்கிறது. ஜெயமோகனின் வெள்ளை யானை: காலனித்துவ விடுதலைக்கால வரலாற்றுநாவல் மட்டுமல்ல, நம்பிக்கை, கண்ணோட்டங்கள் மற்றும் யதார்த்தத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையிலான இடைவினை குறித்த ஆய்வு. ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்: இடப்பெயர்வு, பண்பாட்டு மாறுதல் மற்றும் உயிர்வாழ்வதற்கான போராட்டம் ஆகியவற்றை விவாதிப்பது மட்டுமின்றி காலனித்துவ, பிந்தைய காலனித்துவ யதார்த்தங்கள் குறித்த விமர்சனம். தீவிர இலக்கியத்தில் கருப்பொருள்கள் அல்லது மையக்கருத்துகள் அரிதாகவே நேரடியாகக் கூறப்படும்; அவை மீண்டுமீண்டும் சொல்லப்படும் காட்சிகள், உருவகங்கள், உரையாடல்கள் மூலம் யூகிக்கப்பட வேண்டியவை. தீவிர இலக்கிய வாசகர் காலப்போக்கில் இந்த நுணுக்கங்களைக் கண்டறியக் கற்றுக்கொள்கிறார். வெளிப்படையாகக் கூறப்படாதவற்றைப் போலவே, சொல்லப்படாமல் விடப்பட்டவற்றிலும் கவனம் செலுத்துவது தீவிர இலக்கிய வாசிப்பில் மிக முக்கியமானது. 5. பொருள் கொள்ளுதல் தெளிவான தீர்வுகளை வழங்கும் வெகுஜன எழுத்துகளைப் போலல்லாமல், தீவிர இலக்கியம் தெளிவின்மையில் (Ambiguity) செழித்திருப்பது. ஒரு பிரதிக்கு வெவ்வேறு வாசகர்கள் வெவ்வேறு விதமான விளக்கங்களை அளிக்கலாம், ஒவ்வொன்றும் படைப்பின் செழுமையை அதிகரிக்கின்றன. கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்: கதை சொல்லியின் பயணம் நேரடியான பயணமா அல்லது சமூக மாற்றத்திற்கான ஓர் உருவகமா? ஜோ டி’ க்ரூஸின் ஆழி சூழ் உலகு: தனிமனித ஒழுக்கத்தை விமர்சிக்கிறதா அல்லது சமூகத்தின் கடுமையான கட்டமைப்புகளை விமர்சிக்கிறதா? அசோகமித்திரனின் தண்ணீர் : இந்த நாவல் மையப்படுத்துவது ‘80களில் இருந்த சென்னையின் வாழ்க்கை முறையையா அல்லது திரைப்படத்துறையில் உள்ள அவலங்களையா அல்லது மனிதசமூகத்தின் குணவியல்புகளையா? பொருள் கொள்ளுதல் என்பது தொடர்ச்சியான செயல்முறை; இலக்கியப் படைப்பு ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய அர்த்தங்களை வெளிப்படுத்தக் கூடியது. வாசகரின் வளர்ந்து வரும் கண்ணோட்டத்தால் புதுவடிவம் பெறுவது. இலக்கிய விவாதங்களில் பங்கேற்பது, பல பகுப்பாய்வுகளைப் படிப்பது என்பதோடு ஒருவரின் சொந்தக்கருத்துகளை எழுதுவதும் கூட பொருள் கொள்ளும் அனுபவத்தை ஆழப்படுத்த கூடியதே. 6. விமர்சனச் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுதல் இலக்கியத்தை ஆழ்ந்து வாசிப்பதென்பது ஒரு படைப்பை அதன் பிரபலத்திற்காக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அதைக் கேள்விகேட்பதை உள்ளடக்கியது. அதாவது படைப்பை வெவ்வேறு வகையில் ஆராய்வது. எடுத்துக்காட்டாக சில விமர்சனச் சிந்தனைகள்: எழுத்தாளரின் பார்வை: எவ்வகையான சார்புகள் அல்லது சித்தாந்தங்கள் படைப்பை உருவாக்கியுள்ளன? வரலாறு மற்றும் பண்பாட்டுச் சூழல்: படைப்பிலுள்ள காலம் மற்றும் இடம் அப்படைப்பின் மையப்பொருள்களை எவ்வாறு வடிவமைக்கின்றன? மாற்று வாசிப்புகள்: வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகள் — மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், பின்காலனித்துவம் போன்றவை — படைப்பை எவ்வாறு மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகின்றன? உதாரணமாக, இமயத்தின் கோவேறு கழுதைகள் நாவலை சமூக ஏற்றத் தாழ்வுகளின் வர்ணனையாக அல்லது தலித்திய படைப்பாக அல்லது தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் அடக்குமுறையாக அல்லது ஆண்சமூகம் பெண்ணை எவ்வாறு பார்க்கிறது என்பதாக, ஆராயப்படும் கண்ணோட்டத்தைப் பொறுத்துப் பொருள்கொள்ளலாம். விமர்சனக் கோட்பாடுகள் சார்ந்து படைப்பை வாசிப்பது வாசகர்கள் அவற்றின் மேலோட்டமான அர்த்தங்களுக்கு அப்பால் படைப்புகளை மறுகட்டமைக்க உதவுகிறது, அதிகாரக் கட்டமைப்புகள், கருத்தியல் நிலைப்பாடுகள் மற்றும் பண்பாட்டு மறைபொருள்களை கேள்விக்குள்ளாக்க உதவுகிறது. 7. ஆழ்ந்து வாசிப்பதற்கான உத்திகள் இலக்கிய வாசிப்பில் ஆழமாக ஈடுபடுவதற்கு நிச்சயம் தீவிரமான முயற்சி தேவை. அதற்கு சில நடைமுறை உத்திகள் உள்ளன. வரிகளைக் கோடிடுதல்: முக்கியமான சொற்றொடர்களை அடிக்கோடிடுதல், எண்ணங்களைக் குறிப்புகளாக எழுதுதல், தனித்து நிற்கும் பகுதிகளைக் குறித்து வைத்துக் கொள்ளுதல் போன்றவை புத்தகத்துடனான உரையாடலை உருவாக்க உதவும். மெதுவாக மீண்டும்மீண்டும் படிப்பது: பல இலக்கியப் படைப்புகள் தொடர்ந்த பல வாசிப்புகளில் மட்டுமே அவற்றின் ஆழத்தை வெளிப்படுத்தும். மற்றவர்களுடன் விவாதிப்பது: படைப்பை வாசித்த வெவ்வேறு நபர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் வெவ்வேறு விளக்கங்களை வெளிப்படுத்தி புரிதலை வளப்படுத்தலாம். முன் ஆய்வு: எழுத்தாளரின் சார்புநிலை அல்லது எந்தச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர், படைப்பின் வரலாற்றுப் பின்னணி என்ன, அப்படைப்பு ஏதேனும் குறிப்பிட்ட இலக்கிய இயக்கம் சார்ந்து எழுதப்பட்டிருந்தால் — உதாரணமாக பின் நவீனத்துவம் — அதுகுறித்து அறிந்துகொள்வது படைப்பைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கும். வாசிப்பு நாட்குறிப்பு: வாசிக்கும்போது தோன்றும் எண்ணங்கள், கேள்விகள், நீங்கள் நிகழ்த்திய பகுப்பாய்வுகளைப் பதிவு செய்வது, சிக்கலான கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு வாசகராக உங்களது தனிப்பட்ட வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் உதவும். 8. தவிர்க்க வேண்டிய விஷயங்கள் தீவிரமாக வாசிக்க முனையும்போது, வாசகர்கள் அவர்களது ஈடுபாட்டைச் சிதறடிக்கும் சில விஷயங்களில் மாட்டிக்கொள்ளும் சாத்தியமுண்டு. கதையில் மட்டும் கவனம் செலுத்துதல்: ‘அடுத்து என்ன நடக்கிறது’ என்பதில் மட்டும் கவனத்தை நிலைநிறுத்தும்போது மையப்பொருள்கள் மற்றும் நுட்பங்களைத் தவற விட்டுவிடலாம். உடனடித் தெளிவை எதிர்பார்ப்பது: சில படைப்புகள் தெளிவற்றதாகவும் திறந்த முடிவாகவும் இருக்கும்; இதை ஏற்றுக்கொள்ளாத தன்மை வாசிப்பின் மகிழ்ச்சியைத் தடுத்துவிடும். அறிமுகமில்லாத படைப்புகளைப் புறக்கணித்தல்: சிரமம் அல்லது பண்பாட்டு வேறுபாடுகள் காரணமாக சவாலான நூல்களைத் தவிர்ப்பது வாசகர்களின் இலக்கியத் திறப்பைக் (Literary Exposure) குறைக்கும். ஒற்றை விளக்கத்தைத் திணித்தல்: இலக்கியம் பல அர்த்தங்களுக்குரிய வாய்ப்பைக் கொண்டுள்ளதே அதன் சிறப்பு; ‘சரியான ஒற்றை அர்த்தம்’ இருக்க வேண்டுமென விரும்புவது, ஒரே கண்ணோட்டத்தில் — உதாரணமாக பெண்ணியம், மார்க்சியம், தலித்தியம் — அனைத்துப் படைப்புகளையும் பார்ப்பது அதன் செழுமையைக் குறைத்துவிடும். மொழிநடை மற்றும் கட்டமைப்பைப் புறக்கணித்தல்: ஒரு கதை சொல்லப்படும் விதம் அதன் உள்ளடக்கத்தைப் போலவே முக்கியமானது. இதுகுறித்து ஏற்கனவே விளக்கியுள்ளேன். 9. தனிப்பட்ட அனுபவத்தின் பங்கு ஒவ்வொரு வாசகரும் தங்கள் சொந்தப்பின்னணி, உணர்ச்சிகள், கண்ணோட்டத்தைக் கொண்டு படைப்பை அணுகுகிறார்கள். அவர்கள் அதை எவ்வாறு விளங்கிக் கொள்கிறார்கள், பிரதியோடு எவ்வாறு தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என்பது நபருக்கு நபர் வேறுபடும். இந்த அகநிலை என்பது அதன் தனிச்சிறப்பு, வரம்பு அல்ல. ஒரு நாவல் ஒரு வாசகரின் பண்பாட்டு, சமூக அல்லது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வெவ்வேறு வாசிப்புகளை அளிக்கக்கூடும். உதாரணமாக: ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாசகர் ஒரு நாவலின் ஒடுக்குமுறை சார்ந்த மையப்பொருள்களை மிகவும் கூர்மையாக உணரலாம். வெளிநாட்டில் வாழ்ந்த ஒருவர் இடப்பெயர்ச்சி மற்றும் அடையாளச்சிக்கல் சார்ந்த கதைகளின் கருத்துகளுடன் முரண்படலாம். இழப்பு, காதல் அல்லது சிரமங்கள் போன்ற வாழ்க்கை அனுபவங்கள், இலக்கியத்தின் உணர்ச்சி ஆழத்தை ஒருவர் உணரும் விதத்தை வடிவமைக்கின்றன. புதிய விளக்கங்களுக்குத் திறப்புடன் இருந்து மற்றொருவரின் பார்வையை ஏற்றுக்கொள்வது வாசிப்பு அனுபவத்தை வளப்படுத்தும், இலக்கிய வாசிப்பு என்பதை தொடர்ந்து மாறும், வளரும் உரையாடலாக மாற்றும். *** இறுதியாக, இலக்கியத்தைத் தீவிரமாக வாசிப்பதென்பது, ஒரு படைப்பை வாசித்து அடையும் இன்பத்திற்குப் பதிலாக அவ்விடத்தில் பகுப்பாய்வை வைப்பதல்ல, மாறாக நுண்ணறிவு மூலம் வாசிக்கும் இன்பத்தை ஆழப்படுத்துவது. இது வாசிப்பு என்ற செயலை புறவயமான நுகர்விலிருந்து முழுமையான அகவய ஈடுபாடாக மாற்றுவது, ஒவ்வொரு புத்தகத்தையும் ஓர் அறிவுசார் உரையாடலாக மாற்றுவது. மேற்பரப்பிற்கு அப்பால் பார்ப்பதன் மூலம், மொழியின் நுட்பங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், கருப்பொருள்களை கேள்விக்கு உட்படுத்துதன் மூலம், பிரதியைப் பொருள்கொள்ளுவதன் மூலம், வாசகர்கள் தீவிர இலக்கியப் படைப்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியும். அப்போது இலக்கிய வாசிப்பு என்பது வெறும் கதைவாசிப்பதாக மட்டுமின்றி, கருத்துகள், பண்பாடு மற்றும் மனித அனுபவத்துடன் நிகழும் ஓர் உயிருள்ள உரையாடலாக மாறும். https://vallinam.com.my/version2/?p=10142
-
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்பு மாநகர சபையில் ஆசனங்க ளைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி சி.இரத்தின வடிவேல் சுட்டிக்காட்டினார். அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புப வர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப் பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகால மாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் https://akkinikkunchu.com/?p=314887
-
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்!
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அரபு லீக் தலைவர் அகமட் அபூல் கெய்ட், “எகிப்துத் திட்டம் இப்போது ஒரு அரபுத் திட்டமாகும்” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்களை குறிப்பிடாமல், “தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ எந்தவொரு இடப்பெயர்ச்சியையும் நிராகரிப்பதே அரபு நிலைப்பாடு” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு முன்மொழிவுகள் அல்லது யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதிக்கான ஒரு பெரிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். அரபுத் திட்டம் என்றும் அழைக்கப்படும் எகிப்தின் திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் காசாவை அதன் மக்கள்தொகையை அகற்றாமல் மீண்டும் கட்டியெழுப்புவதை முன்னறிவிக்கிறது. முதல் கட்டத்தில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் எஞ்சியிருக்கும் 50 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றுவதும், வெடிக்காத குண்டுகளை செயலிழக்கம் செய்வதைத் தொடங்குவதும் அடங்கும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் “நிலையான, பசுமையான மற்றும் நடக்கக்கூடிய” வீடுகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை முழுமையாக மறுவடிவமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இது விவசாய நிலங்களைப் புதுப்பித்து, தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பெரிய பூங்கா பகுதிகளை உருவாக்குகிறது. இது ஒரு விமான நிலையம், ஒரு மீன்பிடி துறைமுகம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்கவும் அழைப்பு விடுக்கிறது. 1990 களில் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தங்கள் காசாவில் ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்க அழைப்பு விடுத்தன, ஆனால் அமைதி செயல்முறை சரிந்ததால் திட்டங்கள் கைவிடப்பட்டன. காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசங்களிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை அரபுத் தலைவர்கள் நிராகரிப்பதை மதிப்பதாகக் கூறி, ஹமாஸ் வரவேற்ற இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. இதற்கிடையில், வெள்ளை மாளிகை அரபு நாடுகளின் உள்ளீடுகளை வரவேற்பதாகக் கூறியது, ஆனால் ஹமாஸ் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் வலியுறுத்தியது. போருக்குப் பிந்தைய காசாவுக்கான தனது துணிச்சலான தொலைநோக்குப் பார்வையில் ஜனாதிபதி உறுதியாக நிற்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள எங்கள் அரபு கூட்டாளிகளிடமிருந்து உள்ளீடுகளை அவர் வரவேற்கிறார். அவரது திட்டங்கள் இந்தப் பிரச்சினையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்குப் பதிலாக பிராந்தியத்தை பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டியுள்ளன என்பது தெளிவாகிறது – என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ் கூறினார். அரபு நாடுகள் அங்கீகரித்த திட்டத்தில், சீர்திருத்தப்பட்ட பாலஸ்தீன ஆணையம் கட்டுப்பாட்டை ஏற்கும் வரை, ஹமாஸ் அரசியல் சுயேச்சைகளின் இடைக்கால நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கும். கடந்த மாதம், காசாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் முன்மொழிந்து, பிராந்தியத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, அமெரிக்கா அந்த நிலத்தை மீட்டு மத்திய கிழக்கில் ஒரு “ரிவியரா”வாக மாற்றும். பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை நிபுணர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அவரது திட்டம், இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று கூறியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=314890
-
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு !
செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதிக்கு மேலதிக கண்காணிப்புக்கு ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு 05 Mar, 2025 | 10:56 AM யாழ்ப்பாணம் - அரியாலை, செம்மணி பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலும், முறைப்பாட்டாளர் சார்பிலும் சட்டத்தரணிகளும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகளால் கோரப்பட்டது. இதனை ஆராய்ந்த நீதவான் மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கினார். வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/208319