Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானத்தில் உடனடி தலையீடு தேவை – சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்தல் 20 Feb, 2026 | 10:21 AM யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத் திட்டம் தீவிரமான சுற்றுச்சூழல் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்களை உள்ளடக்கியதாகக் கூறி, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) இதில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், குறித்த கட்டுமானப் பகுதி ஒரு தாழ்வான கடலோர சதுப்பு நிலமாக இருப்பதையும், அது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெள்ளக் கட்டுப்பாடு, கடலோரப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் வளப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த பகுதி கண்டல் காடுகள் (Mangroves), உவர் சதுப்பு நிலங்கள், கடற்புல் படுக்கைகள் மற்றும் இயற்கை நீரோட்ட அமைப்புகளை கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. இவை கடல் மட்ட உயர்வு, சூறாவளி அலைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு எதிரான இயற்கை அரண்களாகச் செயல்படுகின்றன. பாரிய அளவிலான நில நிரப்புதல், தாவர அழிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், இந்த இயற்கை சூழலமைப்புகள் நிரந்தர சேதமடையக்கூடும் என்றும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ள அபாயம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டுமானத் திட்டம் பல்லுயிர் வாழ்விட இழப்பை ஏற்படுத்தி, கடலோர சூழலியல் சமநிலையை பாதிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தனது கடிதத்தில், 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் Terms of Reference வழங்கப்பட்டிருந்த போதிலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறை முழுமையாக நிறைவேறாமல் சுமார் 60 சதவீத கட்டுமானப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இது சட்டத்தின் ஆட்சி முறையை பாதிப்பதோடு, சுற்றுச்சூழல் ஆளுமை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மதிப்பீடு மற்றும் பொதுமக்கள் ஆலோசனை இன்றி இத்தகைய பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமைகளை புறக்கணிக்கும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ‘சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எதிர் அனுர சதரசிங்க’ என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள சுற்றுச்சூழல் நீதிக்கான மையம், அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையானவை அல்ல என்றும், அவை பொதுமக்களின் நலனுக்காக ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புகள் (Public Trust Doctrine) என்றும் நினைவூட்டியுள்ளது. எனவே, முழுமையான சட்ட இணக்கப்பாடுகள் உறுதி செய்யப்படும் வரை யாழ். மண்டைதீவு கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வ பதில் வெளியாகும் வரை, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் நிதானமாக கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239125
  2. “ஏ.ஐ. அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்” - பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டில்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கடந்த 16 ஆம் திகதி தொடங்கியது. 4 ஆம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அநுரகுமார திஸாநாயக்க உட்பட 20 நாடுகளின் தலைவர்கள், 100 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், பல்வேறு மொழிகளை அவரவர் விரும்பும் மொழியில் மொழிபெயர்க்கும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு டில்லி ஏஐ உச்சி மாநாட்டில் மிகச் சிறந்த தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பங்கள் மற்றும் இந்தியாவின் புதுமை கண்டுபிடிப்புகள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதுபோலத்தான் ஏ.ஐ. தொழில்நுட்பமும். இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பல பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண முடியும். அழிவுக்கு பயன்படுத்தினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும். மனிதகுலத்துக்கு பலன் அளிக்கும் வகையில் மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் நன்மை, அனைவருக்கும் மகிழ்ச்சி என்ற கருத்தை முன்னிறுத்தியே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏ.ஐ. காணொலி, புகைப்படங்களை ‘வாட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும். சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர். சில நாடுகள் சுயநலனுடன் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை வேறுபட்டது. ஏ.ஐ. மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயன் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் ஃபேக் காணொலி, ஒலிகள், புகைப்படங்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகின்றன. இதை தடுத்துநிறுத்த வேண்டும். உணவுப் பொருள் பாக்கெட்டில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல டிஜிட்டல் உலகில் எது உண்மையான காணொலி, எது ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்பது தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். ஏஐ வீடியோ, புகைப்படங்களை ‘வோட்டர்மார்க்’ குறியீடு மூலம் அடையாளம் காட்ட வேண்டும். சிறார் நலன், பாதுகாப்பு ஏ.ஐ. தொழில்நுட்ப விவகாரத்தில் சிறாரின் நலன்கள், பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பத்தால் சிறாரின் நலன்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது. டில்லி மாநாட்டில் 3 இந்திய நிறுவனங்கள் தங்களது ஏ.ஐ. தொழில்நுட்ப மாதிரிகள், செயலிகளை அறிமுகம் செய்துள்ளன. இவை இந்திய இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன. உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இந்திய இளைஞர்கள் தீர்வுகளை வழங்குகின்றனர் என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-ஐ-அறிவை-ஆக்கப்பூர்வமாக-பயன்படுத்துவோம்/175-372768
  3. மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். இந்நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், இதற்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. யுரேனிய செறிவூட்டலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில், ஈரான் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், சில பிரச்சினைகளில் சிக்கல் நீடிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்திருந்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. 2003 இல் ஈராக்குக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா இப்பகுதியில் படைகளை குவித்தது. அதன் பிறகு தற்போது தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதையே இது காட்டுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை வாரக்கணக்கில் விரிவடையும் என்றும் முழு அளவிலான போரைப் போன்று இருக்கும் என்றும் ஆக்சியோஸ் குறிப்பிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப் பெரிய தாக்குதலாக இது இருக்கப் போகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், ‘மத்திய கிழக்கு நோக்கி தனது அதிநவீன F-35, F-22 ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா நகர்த்தி வருகிறது. USS ஆபிரகாம் லிங்கன் போர் கப்பல் ஏற்கனவே ஈரான் கடற்கரையின் எல்லைக்குள் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளும் இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் உத்தரவிடுவாரா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. தாக்குதல் நடத்த அவர் முடிவு செய்தால், அது ஈரான் ஆட்சிக்கும் அதன் பிராந்திய பிரதிநிதிகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தும். ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை குறிவைப்பதாக இந்த தாக்குதல் இருக்கும். ஈரானில் ஆட்சி மாற்றத்தை இது ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மத்திய-கிழக்கில்-பதற்றம்-அமெரிக்க-படைகள்-குவிப்பு/50-372767
  4. ⚓ காங்கேசன்துறை துறைமுகத்தில் கள ஆய்வு adminFebruary 20, 2026 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தை ஒரு பிராந்திய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாக (Regional Hub) மேம்படுத்தும் நோக்கில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்று நேரடி கள ஆய்வை மேற்கொண்டனர். காங்கேசன்துறை துறைமுகமானது இந்தியாவின் தென் பகுதிக்கும் இலங்கைக்கும் இடையிலான மிக நெருக்கமான கடல்வழிப் பாதையாக இருப்பதால், இதனை நவீனமயமாக்குவது அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார இலக்காகும்.பெரிய ரக சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் (Ferries) இலகுவாக வந்து செல்வதற்கு ஏதுவாக துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிக்கும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆராய்ந்தனர். இந்திய அரசாங்கத்தின் சுமார் 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் (Breakwater construction and Pier expansion) குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது இந்தியா – இலங்கை இடையே இயங்கும் கப்பல் சேவைகளை (Sivagangai Ferry) மேலும் வலுப்படுத்தி, பயணிகளுக்கான நவீன முனையங்களை (Terminals) அமைப்பதற்கான இடங்கள் பார்வையிடப்பட்டன. வடமாகாணத்தின் விளைபொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக துறைமுகத்தில் களஞ்சிய வசதிகளை (Warehouse facilities) உருவாக்குவது அமைச்சரின் பிரதான திட்டமாகும். அமைச்சர்கள் துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், ஏற்கனவே அமுலில் உள்ள ‘சகல’ (Sagar) கடல்சார் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்தனர். தற்போது நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கி வரும் ‘சிவகங்கை’ (Sivagangai) பயணிகள் கப்பல் சேவையை, வானிலை சீராக இருக்கும் பட்சத்தில் வாரத்தில் அதிக நாட்கள் இயக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ராமேஸ்வரம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர்கள் துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இது ஆன்மீக மற்றும் வர்த்தக சுற்றுலாவை (Religious & Business Tourism) மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் பயணக் கட்டணங்களைக் குறைப்பது மற்றும் பயணிகளுக்கான சுங்க வரி நடைமுறைகளை எளிதாக்குவது தொடர்பாக இந்தியத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அமைச்சர் அனுர கருணாதிலக்கவின் கூற்றுப்படி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் பாரிய கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டு, 2028 ஆம் ஆண்டளவில் காங்கேசன்துறை ஒரு முழுமையான வர்த்தகத் துறைமுகமாக மாற்றப்படும் என்பது நோக்கத்தக்கது https://globaltamilnews.net/2026/229419/
  5. 🚨 யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் காவல்நிலையத்தில் முறைப்பாடு : adminFebruary 20, 2026 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் விநியோகிக்கப்பட்ட அரசியல் துண்டுப் பிரசுரங்கள் இந்த சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் விநியோகிக்கப்பட்ட தினசரிப் பத்திரிகைகளுக்குள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பெயரிலான துண்டுப் பிரசுரங்களும் வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கருத்து, அவரது கௌரவத்திற்கும் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தனது நற்பெயரைப் பாதுகாக்குமாறு அவர் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் ரீதியான பிரசாரங்கள் அல்லது தனிநபர் விமர்சனங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வைத்தியசாலை போன்ற பொது சேவை மையங்களுக்குள் விநியோகிக்கப்படுவதை நிர்வாகம் பொதுவாக அனுமதிப்பதில்லை. இந்தப் பின்னணியில், பத்திரிகை விநியோகஸ்தர்கள் ஊடாக இவை எவ்வாறு உள்ளே வந்தன என்பது குறித்தும் காவல்துறையினா் ஆராய்ந்து வருகின்றனர். வைத்தியசாலைக்குள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் துண்டுப் பிரசுரங்கள் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளியாகும். அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு செயற்படும் ஒரு புதிய அரசியல் கட்சியாகும். இதன் நிறுவனராகவும், முக்கிய செயற்பாட்டாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (MP Ramanathan Archchuna) அறியப்படுகிறார். அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் செயற்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் “ஆதாரமற்ற மற்றும் தரக்குறைவான” கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினசரி பத்திரிகைகளின் உள்ளே வைத்து இவை விநியோகிக்கப்பட்டதன் மூலம், பொதுமக்களிடையே திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டக்கோவையின் கீழ், ஒரு அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலான இந்த மோதல் கடந்த சில மாதங்களாகவே தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2026/229413/
  6. அரையிறுதிப் போட்டிகள் கேள்விகளின் அடைப்படையில் நடாத்தப் படாவிட்டால் புள்ளிகள் பறிபோகாது. அரையிறுதியில் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். அது முதல் போட்டி அல்லது இரண்டாவது போட்டியாக இருந்தாலும் பிரச்சினை இல்லை! இரண்டுக்கும் சேர்த்து aggregate ஆகக் கொடுக்கப்படும். ஆனால் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு ஒரு புள்ளியும் கிடையாது😂
  7. முதல் சுற்று புள்ளிகள் எல்லாம் கணக்குப் பார்த்தாயிற்று😁 ஆனால் நாளை போட்டி முடிந்த பின்னர்தான் பதிய முடியும்! நிலைகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.. 🤪
  8. நாளை வெள்ளி 20 பெப் பிரித்தானிய நேரப்படி ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெல்லுவதை பல்லேகலவில் மழை வந்து தடுக்குமா?
  9. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!
  10. ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣 👇🏿
  11. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வியாழன், 19 பெப்ரவரி 2026 06:52 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நிதியாளர், நூலகர், மற்றும் பதிவாளர் அணிவகுத்து வர, கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகை தந்த துணைவேந்தரும், வேந்தரும் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினர். இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். https://jaffnazone.com/news/55070
  12. விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு February 19, 2026 9:45 am ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் மே 17, 2009 அன்று காலை கலந்துரையாடியதாக பொன்சேகா கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய அனுமதிப்பது குறித்து, மே 17, 2009 அன்று மாலையில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார். தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிக்க கலந்துரையாடினர். எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்பியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். எனினும், ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார். இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தன. விடுதலைப் புலிகள் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார். குறிப்பிட்ட நாளில் தான் சீனாவில் இருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபை உடனாக மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொக்சேகா குறிப்பிட்டார். மே 17, 2009 அன்று கலந்துரையாடல் நடந்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீட்டர் பரப்பளவில் சுற்றிவளைக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களுக்குள் தாம் உயிரிழந்துவிடுவோம் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார். ராஜபக்‌சவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மே 19, 2009 அன்று இராணுவத்தால் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடிந்தது என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/
  13. நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி! Published By: Digital Desk 1 19 Feb, 2026 | 12:26 PM நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, நைஜீரியாவின் சுரங்கத்துறை அமைச்சர் டெலே அலகே, இந்தச் சம்பவம் நடந்த சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்தை அந்தநாட்டு பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அரசின் கண்காணிப்பு இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த வருடம் நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239034
  14. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமனம் 19 Feb, 2026 | 11:20 AM வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239032
  15. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 19 Feb, 2026 | 12:12 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் ஊடாக பொதுமக்களுக்கு அறியத் தருவதாவது : 2026.02.27ஆம் திகதி காலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ஆம் திகதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். கச்சதீவுக்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ஆம் திகதி காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239035
  16. எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம் 19 Feb, 2026 | 12:34 PM (எம்.நியூட்டன்) எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (19) ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் https://www.virakesari.lk/article/239038
  17. லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள் 19 February 2026 லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் ஒரு கும்பல் சுரண்டி வருவதை பிபிசி (BBC) புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தும் இந்தக் கும்பல்கள் வலைவிரிக்கும். பின்னர் அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்றில் இச்சிறுமிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கும்பல்களின் அதிகாரப் படி நிலையில் இவர்கள் மிகக் கீழ் மட்டத்தில் (Lowest Rung) வைக்கப்படுகின்றனர். கும்பல்கள் வாங்கிய போதைப்பொருள் கடனுக்காக அல்லது கும்பல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இச்சிறுமிகள் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். லண்டனில் வெள்ளை இனத்தவர் உட்பட பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட குழுக்கள் இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சில பெண்கள் தங்களைச் சுரண்டியமை வெள்ளை இன ஆண்கள் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்ற சில தப்பிப்பிழைத்தவர்கள் தாங்கள் தெற்காசிய ஆண்களால் பாலியல் தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். லண்டன் காவல்துறையின் (Met Police) தகவலின்படி, தற்போது குறைந்தது 60 சிறுமிகள் இத்தகைய கும்பல்களால் சுரண்டப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2,000 சிறுவர் சுரண்டல் தொடர்பான வழக்குகள் பதிவாகின்றன. இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் நகர முதல்வர் சாதிக் கான், இத்தகைய அருவருக்கத்தக்க கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். https://hirunews.lk/tm/447444/violent-gangs-targeting-girls-in-london-inhumane-incidents-unfolding
  18. இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம் 19 February 2026 இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க Xinhua ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக வரைபடமாக்குவதற்கான விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் வெறும் அரசாங்கக் கண்காணிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்களின் நேரடிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். அடையாளம் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிக்கவும், அவற்றைச் சிதைவுகளிலிருந்து பாதுகாக்கவும் உள்ளூர் மட்டத்தில் 'சமூகப் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்படவுள்ளன. நாட்டின் கலாசார மரபுகளை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், இனம் காணப்படாத இந்தத் தொல்பொருள் தளங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். https://hirunews.lk/tm/447403/special-project-to-protect-1000-unrecognized-archaeological-sites-in-sri-lanka
  19. பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்! பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று (19) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது. மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும் செலுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlt1xr7z000r356n5kj7ulbh
  20. நாளை வியாழன் 19 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் இத்தாலி அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். இத்தாலி கோஷான் சே இப்போட்டியில் @goshan_che க்கு புள்ளிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா? 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL எதிர் ZIM 22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸிம்பாப்வே வசீ இப்போட்டியில் ஸிம்பாப்வேயின் தயவில் @vasee க்கு புள்ளிகள் கிடைக்குமா? 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG எதிர் CAN அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கும் யாழ் களப் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா?
  21. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, தென்னாபிரிக்கா அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அலிஷான் ஷரஃபு நிதானமான ஆடி 45 (38 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டெவால்ட் பிறெவிஸின் வேகமான 36 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டனின் அதிரடியான 30 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும் 13.2 ஓவர்களிலலேயே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 123 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா ஃபர்ஹானின் ஆட்டமிழக்காத புயல்வேக செஞ்சுரியான 100 (58 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் அதிரடியான 38 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷடாப் கானின் ஆட்டமிழக்காத வேகமான 36 (22) ஓட்டங்களோடும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கை தற்போதைய அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, ஷிவம் டுபேயின் மின்னல்வேக 66 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் நிதானமான 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் நிதானமான 31 (27 பந்துகள்) ஓட்ட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் வேகமான 30 (21 பந்துகள்) ஓட்டங்களோடும் விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று போட்டிகளிலும் முட்டை வாங்கி சாதனை படைத்துள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை எனினும் பலரின் பங்களிப்புடன் வேகமாக அடித்தாடி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!
  22. ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ள போவதில்லை - வத்திக்கான் அறிவிப்பு Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 11:57 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள 'அமைதி திட்டம்' என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த 'அமைதி திட்ட அமைப்பை' உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இதில் காசா மறுசீரமைப்பிற்காக 05 பில்லியன் டொலர் நிதி திரட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது. வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் இது குறித்துத் தெரிவிக்கையில், "வத்திக்கான் என்பது பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல, அதன் தன்மை வேறுபட்டது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலைகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த அமைப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்." ட்ரம்ப்பின் இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணையாமல், வெறும் 'பார்வையாளர்களாக' மட்டுமே கலந்துகொள்ள தீர்மானித்துள்ளன. காசா விவகாரம் குறித்துப் பேசும் இந்த அமைப்பில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காசாவில் கடந்த அக்டோபர் முதல் நிலவி வரும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவும் கடும் பஞ்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பாப்பரசர் லியோ தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238937
  23. யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக களத்தில் இறங்கிய சி.ஐ.டி யினர் 18 Feb, 2026 | 12:25 PM யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை எனும் பெயரில், பாலியல் அத்துமீறல்கள், துஸ்பிரயோகங்கள், சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகிடிவதைகள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே தனியார் வீடுகள், விடுதிகளில் தங்கியுள்ள மூத்த மாணவர்கள் , தமது இடங்களுக்கு அழைத்து பகிடிவதை புரிவதனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் செயல்களுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்க முடியாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தனிப்பட்ட ரீதியில் பொலிஸ் முறைப்பாடோ அல்லது வேறு நடவடிக்கையோ எடுக்க முடியும் என பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன் வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238939

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.