Everything posted by கிருபன்
-
மாவீரர் நாள் 2024 : மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் – நிலாந்தன்!
மாவீரர் நாள் 2024 : மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் – நிலாந்தன்! December 1, 2024 நான்கு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம் திண்ணை விருந்தினர் விடுதியில் ஒரு தூதரகத்தின் இரவு விருந்தில் கலந்து கொண்டேன். எனது மேசையில் மூத்த ஊடகவியலாளர்கள் இருவரும் ஊடக முதலாளி ஒருவரும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் கட்சி ஒன்றின் முக்கியஸ்தரும் அமர்ந்திருந்தார்கள். எங்களோடு இருந்து கதைத்துக்கொண்டிருந்த ஒரு ராஜதந்திரி என்னைப் பார்த்துச் சொன்னார் ” எல்லா ஈழத் தமிழர்களின் மனதிலும் ஒரு நாடு என்ற கனவு உண்டு” இப்படிக் கூறிவிட்டு அருகில் இருந்த அந்தக் கட்சிப் பிரமுகரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சொன்னார் “இதோ இவருடைய தலைவர் அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவரிடமும் அந்தக் கனவு உண்டு” ஆம். அந்தக் கனவு எல்லா ஈழத் தமிழர்களிடமும் இருப்பதால்தான் அந்தக் கனவைக் கட்டியெழுப்பிய தியாகிகளை அவர்கள் எல்லா இடர்களின் மத்தியிலும் நினைவு கூர்கிறார்கள். இம்முறை மாவீரர் நாளையொட்டி போலீசார் கடந்த ஆண்டுகளில் செய்வதைப் போல நீதிமன்றத்திற்கு போய் தடை உத்தரவுகளை பெற்றுக் கொண்டு வரவில்லை. எனினும் அம்பாறையில் போலீசார் சில நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவுப் பொருட்களுக்குத் தடை என்று அறிவித்திருந்த போதிலும், பெரும்பாலான சிறிய மற்றும் பெரிய தமிழ்ப் பட்டினங்களில் மாவீரர்களின் பாடல்கள் அனைத்தும் ஒலிக்கவிடப்பட்டன. உட்கிராமங்களில் மக்கள் கூடும் இடங்களிலும் பாடல்களைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அடர் மழை பொழிந்தது. வெள்ளம் பெருகி சில இடங்களில் பாதைகளை மூடியது. புயல் வரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது. எனினும் மழை விட்டிருந்த இடையூட்டுக்குள் மக்கள் துயிலுமில்லங்களை நோக்கிக் குவிந்தார்கள். குடைகளின் கீழே சுடர்களை ஏற்றினார்கள். ஆம். அவர்கள் தமது தேசக் கனவைக் கட்டியெழுப்பப் புறப்பட்டவர்களை ஒரு தேசமாக நினைவு கூர்ந்தார்கள். “அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம்தான்” என்று மிலன் குந்ரோ- Milan Kundera- கூறுவார். நினைவுகளின் போராட்டம் அல்லது மறதிக்கு எதிரான போராட்டம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசமாகத் திரள்வதன் ஒரு பகுதி. நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதி. தமிழ் மக்கள் எதை எதை மறக்கவில்லை? அல்லது மறக்கக் கூடாது? தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் தங்களைத் தியாகம் செய்தவர்களை மறக்கக்கூடாது. அதேசமயம் அந்த தியாகியின் இழப்பால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களையும் மறந்துவிடாதிருக்க வேண்டும். தியாகிகளின் வீட்டில் அடுப்பு எரிகின்றதா? அந்தத் தியாகியின் வீட்டுக்கூரை மழைக்கு ஒழுகுகின்றதா? அந்த தியாகியின் முதிய பெற்றோர் இப்பொழுது யாரோடு இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள்? அந்த தியாகியின் மனைவி இப்பொழுது எங்கே? அவருடைய வருமான வழி என்ன? அந்த தியாகியின் பிள்ளைகள் ஒழுங்காக படிக்கிறார்களா? போன்ற எல்லா விடயங்களையும் மறந்துவிடாமல் கவனிக்க வேண்டும். இரண்டாவதாக, அந்தத் தியாகியோடு போர்க்களத்தில் நின்றவர்கள், கையைக் காலைக் கொடுத்தவர்கள், கண்ணைக் கொடுத்தவர்கள், இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்கள்,சக்கர நாற்காலிகளில் வாழ்பவர்கள், இப்பொழுதும் படுக்கையில் கிடப்பவர்கள், இப்பொழுதும் உடல் முழுவதும் சன்னங்களைக் காவிக்கொண்டு திரிபவர்கள், என்னவென்று தெரியாத நோய்களைக் காவிக் கொண்டு திரிபவர்கள்…ஆகிய முன்னாள் இயக்கத்தவர்களையும் மறக்கக்கூடாது. இந்த நாட்டிலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தரப்பு -most vulnerable-அவர்கள்தான். அவர்களிற் சிலர் கடந்த 15 ஆண்டுகளாக தேர்தல் கேட்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆறு பேர் வெவ்வேறு கட்சிகளில் தேர்தல் கேட்டார்கள். ஒருவரும் வெற்றி பெறவில்லை. காலை இழந்த ஒரு பெண்ணுக்கும் வெற்றி கிடைக்கவில்லை. அந்த முன்னாள் இயக்கத்தவர்களில் யாருக்குமே தமிழ் மக்கள் வெற்றியைக் கொடுக்கவில்லை. ஏன்? ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம் தேர்தல் கேட்கக்கூடாது என்று தமிழ் மக்கள் நம்புகிறார்களா? அல்லது, இந்த விடயத்தில் தமிழ் மக்களுக்கு மறதி அதிகமா? அல்லது முன்னாள் இயக்கத்தவர்கள் தேர்தல் அரசியலின் கள்ளச் சூத்திரங்களைக் கற்றுத் தேறவில்லையா? ஒவ்வொரு ஆண்டும் துயிலும் இல்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாருக்கு வாக்காக மாறுகிறது? தியாகிகளை நினைவு கூர்வது என்பது, அந்த தியாகிகளோடு போர்க்களத்தில் நின்றவர்களை, போராட்டத்தில் தமது இளமையை, தமது வயதுகளை, தமது கல்வியை, அவயவங்களை இழந்தவர்களையும் மறந்து விடாமல் இருப்பதுதான். மூன்றாவது,போராடப்போய் சிறை வைக்கப்பட்டவர்களை,காணாமல் ஆக்கப்பட்டவர்களை, அவர்களுக்காகப் போராடும் முதிய அம்மாக்கள் அப்பாக்களை, போரினால் விதவைகளாக்கப்பட்டவர்களை மறந்துவிடாதிருக்க வேண்டும். போர் விதவைகள் கிட்டத்தட்ட 90000 பேர் உண்டு. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது போரினால் யார் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை தூர்ந்துபோனதோ, யாரெல்லாம் மீண்டெழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையை, வாழ வேண்டும் என்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதுந்தான். நாலாவது, 2009ஐ உடனடுத்த ஆண்டுகளில் நினைவு நாட்களை ஒழுங்குபடுத்தியது அரசியல் கட்சிகள்தான். அவர்களால்தான் அப்பொழுது அதைத் துணிந்து செய்ய முடிந்தது. இப்பொழுதும் நினைவு கூரும் களங்களின் பின் கட்சிகள் உண்டு. நினைவிடங்களில் கூடும் மக்களின் கூட்டுத் துக்கத்தை கொத்து வாக்காக எப்படித் திரட்டுவது என்பது அவர்களுடைய பிரச்சினை. ஆனாலும் மறதிக்கு எதிரான போராட்டத்தில் அவர்களுக்கு ஒரு பங்கு உண்டு. அதே சமயம் அவர்களுடைய அரசியல் முதலீடும் தமிழ் மகாஜனங்களின் மறதி தான். 2009க்கு முன்பு தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதி தியாகத்துக்குத் தயாராக இருப்பது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அடிப்படைத் தகுதி பிழைக்கத் தெரிந்திருப்பது. இந்தத் தகைமை வேறுபாட்டுக்குப் பின்னால் உள்ள சீரழிவை தமிழ் மக்கள் மறந்து விடாமல் இருக்க வேண்டும். தமிழ்க் கட்சிகளுக்கு தமிழ் மக்களின் நினைவும் தேவை; மறதியும் தேவை. தமிழ் மக்களின் மறதியின் மீது அதிகம் வெற்றிகரமாக அரசியல் செய்வது தமிழரசுக் கட்சிதான். கடந்த 15 ஆண்டுகளாக தலைவராக இருந்த சம்பந்தர் ஒவ்வொரு பெருநாள் திருநாளின் போதும் குடுகுடுப்பைச் சாத்திரக்காரனைப் போல அல்லது சுயாதீன திருச்சபையின் போதகரைப் போல அருள் வாக்குக் கூறிக்கொண்டிருந்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும் என்றெல்லாம் கூறினார். எதுவும் வரவில்லை. சம்பந்தரும் இப்பொழுது இல்லை. ஆனால் தமிழ் மக்கள் அதையெல்லாம் மறந்துபோய் இந்த முறை தமிழரசுக் கட்சிக்கே அதிகம் வாக்குகளைக் கொடுத்தார்கள். தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் மறதியை வைத்து விளையாடுகிறது என்பதனை எப்பொழுதும் சுட்டிக்காட்டுவது, பிரதானமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் மறதிக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்பது அந்தக் கட்சிதான். அதே சமயம் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏகபோக வாரிசாக தன்னைக் காட்டிக்கொள்ளப் பார்க்கின்றது. நினைவு நாட்களைத் தத்தெடுக்கப் பார்க்கின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த கட்சியின் செயலாளர் கஜேந்திரன் ஒரு காணொளியில் கூறுகிறார்…. ஏனைய எல்லா கட்சிகளையும் விடவும் சாகத் தயாரான கட்சி தாங்கள்தான் என்று. ஒரு கட்சி தனது மக்களுக்காக சாகத் தயாராக இருக்கிறது என்பதனை யாராவது அந்த கட்சியின் உறுப்பினர் செத்துத்தான் நிரூபிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காகப் போராடி யாரும் அப்படி உயிரைத் துறந்ததாகத் தெரியவில்லை. தன்னை ஏனைய கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தான் மட்டும் சாகத் தயாரான கட்சி என்று முன்னணி கூறிக்கொள்கிறது. ஆனால் 3லட்சத்துக்கும் குறையாத போராளிகளும் மக்களும் உயிரைக் கொடுத்த ஒரு போராட்டத்தை கடந்து வந்த இனம் இது என்பதை அந்தக் கட்சி மறந்து விட்டது. இதுவும் தமிழ் மக்களின் மறதியின் மீது செய்யப்படும் அரசியலே. இவ்வாறு தமிழ் மக்களின் மறதியின் மீது அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகள், நினைவு நாட்களை வைத்துச் சூதாடுவதைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் மறதிக்கு எதிராகப் போராட வேண்டும். எனவே மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசத்தைக் கட்டியெழுப்பிய நினைவுகளைத் தொடர்ந்தும் தேசத்தை பிணைக்கும் நினைவுகளாகப் பேணுவதுதான். நினைவின் பசை கொண்டு ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவது. மேலும், இறந்த காலத்தை மறந்து விடாமல் இருப்பது என்பது, இறந்த காலத்திலேயே வாழ்வது அல்ல. காயங்களோடு வாழ்வது அல்ல. துக்கத்தில் உறைந்து கிடப்பதும் அல்ல. மாறாக, இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வது. மகத்தான வீரமும் மகத்தான தியாகமும் எங்கே எப்படித் தோல்வியுற்றன என்பதைக் கற்றுக்கொள்வது. கூட்டுத் துக்கத்தை, கூட்டுக் காயங்களை,கூட்டு மனவடுக்களை,கூட்டுத் தோல்வியை, கூட்டு அவமானத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவது. அந்த அரசியல் ஆக்க சக்தியை நீதிக்கான போராட்டத்தின் உந்து விசையாக மாற்றுவது. நிலாந்தன் https://www.nillanthan.com/6996/
-
யாழில். வீதிகள், கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை! - ஜெ.றஜீவன்
யாழில். வீதிகள், கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை! adminDecember 1, 2024 வீதிகள் கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமையும் குளங்களை தூர்வாருவது குறித்து கவனம் செலுத்தாமையுமே யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதற்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வெள்ள நிலைமைகள் குறித்து பார்வையிட்டு ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், வெள்ள அனர்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டோம். அவர்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. பலபகுதிகளில் வெள்ளம் வழிந்தோடாமல் நிற்கிறது. யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதற்கு காரணம், வீதிகளை உயரமாக அமைத்தமையே ஆகும். வீதிகளைப் புனரமைத்து மீண்டும் அமைத்தவேளை அவற்றை உயரமாக அமைத்துள்ளனர். அதேவேளை வீடுகளை, வர்த்தக நிலையங்களை அமைக்கும்போது விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை. குளங்கள் தூர்வாரவில்லை. வடிகால் அமைப்பு சிறந்த முறையில் இல்லை. பருத்தித்துறை வீதி இதற்கு ஓர் உதாரணம். அங்கு வடிகாலமைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இவற்றுக்குத்தீர்வுகாண்பதற்கு நீண்டகாலம் எடுக்கும். வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு இடமில்லாத நிலை காணப்படுகிறது. இதனால் தற்போதைய நிலை இன்னும் ஓரிரு தினங்கள் நீடிக்கலாம். சில பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. தேசிய மக்கள் சக்தியும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக சமூகம், வர்த்தக சமூகம், லயன்ஸ் கழகம் உட்பட பல தரப்பினருடன் இணைந்து உதவிகளை வழங்கி வருகின்றோம். எனினும் இந்த உதவிகள் போதுமானதாகவையாக இல்லை. இதன் காரணமாக ஏனைய அனைவரும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவேண்டும். தற்போதைய சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கு உதவிகளை வழங்கிவருகின்றோம். சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம். கூலி வேலைகளுக்கு செல்பவர்கள். அன்றாடம் உழைத்து உண்பவர்களின் நிலைமையே மிகவும் கஷ்டமானதாக காணப்படுகிறது. அவர்கள் உலர் உணவை கோருகின்றனார். சமூக நிறுவனங்கள் இவற்றை வழங்க முன்வரவேண்டும்,கிராம சேவகர்கள், மாவட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க முன்வரவேண்டும். குடிநீர் பிரச்சினை, குழந்தைகளுக்கான உணவுப் பிரச்சினை போன்றவையும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. சில இடங்களில் அதிகாரிகளின் அசமந்தப்போக்கை அவதானிக்க முடிகிறது. அதிகாரிகள் மக்களுக்கு முழுமனதோடு உதவ முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208877/
-
யாழ் போதனாவில் மகப்பேற்று விடுதித் தொகுதி நிறுவ சுவிட்சர்லாந்திடம் நிதி உதவி கோரிக்கை!
யாழ் போதனாவில் மகப்பேற்று விடுதித் தொகுதி நிறுவ சுவிட்சர்லாந்திடம் நிதி உதவி கோரிக்கை! adminDecember 1, 2024 யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜாவுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராலய குடிபெயர்வுக்கான முதனிலை செயலாளர் டொரிஸ் மொனொர் தலைமையிலான பிரமுகர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (30.11.24) சந்தித்து கலந்துரையாடினர். அக் கலந்துரையாடலில் தூதுவராலய பிரமுகர்கள் இலங்கையில் அனைத்து சமூகங்களினையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றமொன்றினைக் கொண்டுவந்தமையையிட்டு தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதுடன் ஜனாதிபதியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களினை நடைமுறைப்படுத்துவதற்கான தங்களின் முழுமையான ஆதரவினையும் வெளிப்படுத்தினர். அத்துடன் யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பிலும் அதற்கு தாங்கள் எந்த வகையில் உதவமுடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினருடன் விரிவாகக் கலந்துரையாடினர். மேலும் வைத்தியகலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா , யாழ் போதனா வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய மகப்பேற்று விடுதித் தொகுதியொன்றினை நிறுவுவதற்கான சுவிட்சர்லாந்து நாட்டின் நிதி அனுசரணையையும் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரமுகர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அத்துடன் சமகால அரசியல் நிலைமை தொடர்பிலும் தூதுவராலய பிரமுகர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டனர். https://globaltamilnews.net/2024/208881/
-
வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் கொண்டாடியவர்களிடம் விசாரணை!
வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் கொண்டாடியவர்களிடம் விசாரணை! adminDecember 1, 2024 தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், புலிகளின் தலைவரின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியில் கேக் வெட்டி, மரநடுகை மேற்கொள்ளப்பட்டு, பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதன் போது நிகழ்விடத்தில், புலிகளின் தலைவரின் புகைப்படத்துடனான பதாகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வேளை அங்கு சென்ற வல்வெட்டித்துறை காவற்துறையினர், புலிகளின் தலைவரின் படத்தை அகற்றி விட்டு நிகழ்வை நடத்த அறிவுறுத்தினர். அதனை அடுத்து, ஏற்பாட்டாளர்கள் புலிகளின் தலைவரின் படத்தை மறைத்து விட்டு நிகழ்வை முன்னெடுத்து இருந்தனர். இந்நிலையில் பிறந்தநாள் நிகழ்வு தொடர்பில் வல்வெட்டித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நிகழ்வின் ஏற்பாட்டாளர் சிவாஜிலிங்கத்தை வாக்கு மூலம் வழங்க பொலிஸ் நிலையம் அழைத்த போது, சுகவீனம் காரணமாக வருகை தர முடியாது என காவற்துறையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, காவற்துறையினர் சிவாஜிலிங்கம் வீட்டிற்கு சென்று வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அதேவேளை,,பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட ஆறு பேரிடம் காவற்துறையினர் இதுவரையில் வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும், பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2024/208887/
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது December 1, 2024 12:05 pm பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=196695
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
சாருஜன் சண்முகநாதன் சதம் விளாசி அசத்தல்! December 1, 2024 03:09 pm 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (01) ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி Sharjah இல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக Sharujan Shanmuganathan 102 ஒட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் AM Ghazanfar 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196700
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அர்ச்சுனாவை பாராளுமன்றம் அனுப்பும் அளவிற்கு வாக்குகள் விழுந்த தேர்தலில் எனது rational ஆன கணிப்புக்கள் பிழைத்துவிட்டன! மேன்மை தங்கிய அநுர சகோதரயவையும், கெளரவ அமைச்சர் சந்திரசேகரையும் குறைத்து மதிப்பிட்டது அடுத்த பிழை!
-
பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
பௌத்த வினாவல் - 5, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பௌத்தத்தின் எழுச்சியும் பரவலும் அசோகர் புத்த ஸ்தூபத்தை வழிபடச்செல்லுதல் 277. பெருவாரியான மக்கள் பின்பற்றும் மற்ற மதங்களை ஒப்பிடும் போது பௌத்ததை பின்பற்றும் மக்கள் எவ்வளவு இருப்பர்? புத்த தர்மத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை வேறெந்த மதங்களை பின்பற்றுவோரையும்விட மிகுதிதான். 278. எவ்வளவு மக்கள் பின்பற்றுகின்றனர் என்ற எண்ணிக்கையை கூறமுடியுமா? சுமார் ஐந்நூறு கோடி. இது உலக மக்கள் தொகையில் 5:13 என்ற விகிதத்தில் உள்ளது. அல்லது உலக மக்கள் தொகையில் சரிபாதி அளவிற்கு குறைவாக உள்ளது. 279. புத்த தர்மத்தின் பரவலுக்காக பெரும் போர்களும், பல நாடுகள் கைப்பற்றப்பட்டதும், பெரும் மனிதக் குருதியும் சிந்தப்பட்டுள்ளனவா? வரலாறு அப்படி கொடுமைகளும் குற்றங்களும் எங்கள் மதத்தின் பரவலுக்காக நிகழ்த்தப்பட்டது என்று ஆவணப்படுத்தவில்லை. இன்றளவும் நாங்கள் அறிந்தவரையில் ஒரு துளி இரத்தம் சிந்தவும் அது காரணமாகவில்லை. பேரராசிரியர் கோல்ப் (kolb) தனது History of culture நூலில் இவ்வாறு சொல்கிறார்: ”போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கும், கைப்பற்றப்பட்ட நிலங்களில் வாழ்ந்த மக்கள் சிறைபிடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதற்கும் நாம் பௌத்தத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும்” 280. பிறகு எவ்வாறு அது பிரம்மிக்கத்தக்க வகையில் பரவியது. அதன் பரவலுக்கான ரகசியம் என்ன? பௌத்தத்தினுள்ளிருக்கும் அதன் சிறப்பை தவிர வேறெந்த காரணமுமில்லை. மெய்மையை அடிப்படையாக கொண்ட அதன் தரிசனம், உயரிய அற போதனைகள், மற்றும் மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் நிறைவளிக்கும் அதன் தன்மை ஆகியவையே. 281. எவ்வாறு பௌத்தம் பரப்பப்பட்டது? புத்தர் தனது நாற்பதாண்டு கால ஆசிரிய வாழ்க்கையில் இந்தியாவின் பல நிலங்களுக்கு பயணம் செய்து தம்மத்தை போதித்தார். அவரின் அறிவார்ந்த மற்றும் சிறந்த சீடர்களை இந்தியாவெங்கும் பயணம் செய்ய வைத்து தம்மத்தை பரப்பினார். 282. புத்தர் தனது மாணவர்களை எப்போது அனுப்பினார்? புரட்டாசி மாதத்தின் ஒரு முழுமதி நாளன்று. 283. அவர்களிடம் புத்தர் என்ன கூறினார்? புத்தர் அவர்கள் அனைவரையும் அழைத்து “செல்லுங்கள் பிக்குகளே, சென்று உலகிற்கு தர்மத்தை உபதேசம் செய்யுங்கள். பிறர் நலனுக்கும் உங்கள் நலனுக்கும் உழைத்திடுங்கள். இந்த நற்செய்தியை ஒவ்வொரு மனிதனுக்கும் சுமந்துசெல்லுங்கள். ஆனால் நீங்கள் யாரும் ஒரேவழியை பின்பற்ற வேண்டாம், ஒவ்வொருவரும் படைப்பூக்கத்துடன் செயல்படுங்கள்”. 284. கிறித்துவ யுகத்திலிருந்து எத்தனை ஆண்டுகள் முன்னர் இது நிகழ்ந்தது? சுமார் ஆறு நூற்றாண்டுகள் முன்னர். 285. அரசர்கள் என்ன உதவி செய்தனர்? தாழ்ந்தநிலை மக்களுடன் பேரரசர்களும் மதம் மாறி பௌத்தம் பரவ தங்கள் செல்வாக்கை வழங்கினர். 286. யாத்ரீகர்கள் பங்கென்ன? கற்றறிந்த யாத்ரீகர்கள் வெவ்வேறு நூற்றாண்டுகளில் இந்தியா வந்து இங்கிருந்து அரிய நூல்களையும் போதனைகளையும் தங்கள் நாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். ஆகவே படிப்படியாக பல நாடுகள் தங்கள் பழைய நம்பிக்கைகளை கைவிட்டு பௌத்தர்களாக மாறினார். 287. புத்த மதம் ஆழமாக வேரூன்றியதற்கு மற்ற யாரையும் விட எந்த ஒரு மனிதருக்காக உலகு கடன்பட்டுள்ளது? அவர் பேரரசர் அசோகர். இவர் பியாதாசி என்றும் தர்மசோக்கா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர் மகத மன்னர் பிந்துசாராவின் மகன். கிரேக்கர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றிய சந்திரகுப்தரின் பேரன். 288. அவரின் ஆட்சிக்காலம் எப்போது? பொ.மு மூன்றாம் நூற்றாண்டு. புத்தரின் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் பின்னர். வரலாற்று ஆசிரியர்கள் இந்த காலக்கணிப்பை மறுக்கின்றனர், எனினும் அவ்வளவு உறுதியாக அல்ல. 289. எது அவரை உயர்ந்தவர் ஆக்கியது? அவர் இந்திய வரலாற்றில் மிகவும் ஆற்றல்மிக்க பேரரசர், மாவீரர் மற்றும் இராஜதந்திரியாக அறியப்படுகிறார். ஆனால் அவரின் உன்னத குணங்கள் என்பது உண்மை மற்றும் அறத்தின் மீதான பற்று, மத நல்லிணக்கம், அனைவருக்கும் சமமான அரசு, கருணை - நோய்வாய்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விலங்குகள் மீதான அவரின் கருணை. அவரின் புகழ் சைபீரியா முதல் சிலோன் வரை மரியாதையுடன் நினைவுகூறப்படுகிறது. 290. பிறப்பிலேயே அவர் பௌத்தரா? இல்லை. அவரின் பட்டாபிஷேகம் முடிந்து தன்னுடைய பத்தாம் வயதில் அவர் பௌத்த மதத்திற்கு நிஃரோத சமனீரா என்னும் அராகதரால் மாற்றப்பட்டார். 291. அவர் பௌத்தத்திற்கு என்ன செய்தார்? அவர் போலி பிக்குகளை வெளியேற்றி நல்லவர்களை ஊக்குவித்தார், மடாலயங்கள் மற்றும் டகோபாக்கள் எழுப்பினார், நந்தவனங்கள் நிறுவினார், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் ஏற்படுத்தினார், பாடலிபுத்திரத்தில் தர்மத்தை மறுபரிசீலனை செய்யவும் மீளுருவாக்கம் செய்யவும் மன்றம் நிறுவினார், பெண்களுக்கும் மதக்கல்வி கற்கும் உயர்வளித்தார். ஐந்து கிரேக்க அரசர்கள், அவரது நட்பு நட்டுகள், மற்றும் இந்தியாவின் பேரரசர்களுக்கும் புத்தரின் சித்தாந்தத்தை போதிக்க தூதரக அதிகாரிகளை அனுப்பிவைத்தார். அவரே எங்கள் முதன்மை யாத்திரை நகரங்களான கபிலவஸ்து, புத்தகயா, இசிபட்டானா மற்றும் குசினராவில் ஸ்தூபிகளை எழுப்பினார். மேலும் பல ஆயிரம் கட்டிடங்களை எழுப்பினார். 292. அவரின் உன்னத குணங்களை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது? கடந்த சிறு காலத்திற்குள்ளேயே இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அவரின் பதினான்கு அரசாணைகள் பாறை கல்வெட்டிலும் அவரின் கட்டளைகளால் எழுப்பப்பட்ட எட்டு தூண்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தும் அவரை இப்புவியில் வாழ்ந்தவரில் விவகமும், உயர் மனமும் கொண்ட பேரரசர் என நிரூபிக்கின்றன. 293. இந்த கல்வெட்டுக்கள் பௌத்தத்திற்கு என்ன பண்புகளை அளிக்கிறது? இவை பௌத்தத்தை பெரும் சகிப்புத்தன்மை கொண்ட மதமாகவும், உலக சகதோரத்துவம், உயர் நெறி மற்றும் தர்மத்தை கடைபிடிக்கும் மதமாகவும் காட்டுகின்றன. இது சுயநலமோ, வகுப்புப்பிரிவினையோ அல்லது சகிப்பின்மையோ கொண்டதாக எங்கும் ஒரு சுவடும் இல்லை. அந்த கல்வெட்டுகள் மேற்கின் பெரும் பண்டிதர்களால் மரியாதையுடன் போற்றப்படுகின்றன. 294. தர்மசோகா என அழைக்கப்படும் அசோகர் பௌத்தத்திற்கு அளித்த மதிப்புமிக்க பரிசென்ன? தன் அன்பிற்குரிய மகன் மஹிந்தா மற்றும் மகள் சங்கமித்ரையை புத்த சங்கத்திற்கு அளித்தார். மேலும் அவர்களை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தை அறிமுகம் செய்வித்தார். 295. இந்த உண்மை தகவல் சிலோனின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளதா? ஆம். அரசு நிகழ்வுகளை பதிவுசெய்யும் மகாவம்சம் என்னும் நூலில் சமயப்பரப்பாளர்களின் பணியை நேரில் கண்டவர்களால் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது. 296. சங்கமித்ரை மேற்கொண்ட சமயப்பணி குறித்தான ஆதாரம் ஏதேனும் இன்றுள்ளதா? உள்ளது. அவர் சிலோன் செல்கையில் புத்தர் எந்த போதி மரத்தடியில் ஞானமடைந்தாரோ அதே மரத்தின் ஒரு கிளையை தன்னுடன் கொண்டுசென்றார். அது இன்றும் வளர்ந்துகொண்டிருக்கிறது. 297. எங்கு? அனந்தபுரம் என்னும் இடத்தில். அதன் வரலாறு இன்றும் அதிகாரபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. பொ.மு. 306-ல் நடப்பட்ட இம்மரமே வரலாற்றில் பதிவாகிய பழம்பெரும் மரம். 298. அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த பேரரசர் யார்? தேவனாம்பிரியா தீசா. அவரின் துணைராணி அனுலா சங்கமித்ரையை வரவேற்று பிக்குணிகளுக்கான சங்கத்தை நிறுவுமாறு கூறினார். 299. சங்கமித்ரையுடன் வந்தவர்கள் யார்? பல பிக்குணிகள் உடன்வந்தனர். அவர் குறுகிய காலத்தில் அரசியையும் மற்றும் அவருடன் இருந்த மகளிர்களையும் மேலும் ஐந்நூறு கன்னி பெண்களையும் சங்கத்தில் உட்புகுத்தினார். 300. அசோகரின் மறைபணியாளர்கள் அந்நிய நிலத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்னென்ன? அவரின் மகனும் மகளும் பௌத்தத்தை இலங்கையில் அறிமுகம் செய்தனர். அவரின் துறவிகள் பௌத்தத்தை வடஇந்தியா மற்றும் தங்களின் எல்லைக்கப்பாற்பட்ட பதினான்கு இந்திய நிலங்களிலும், ஐந்து கிரேக்க அரசர்களுக்கும் மற்றும் ஏற்கனவே தங்கள் சமய பணியாளர்களை அனுமதிக்கும் ஒப்பந்தம் கொண்ட நட்பு நாடுகளுக்கும் கொண்டுசென்றனர். 301. அவர்களை பெயர் கூறமுடியுமா? சிரியாவின் அண்டியோசிஸ் (Antiochus), எகிப்தின் படோலேமி (Ptolemy), மாசிடோனின் ஆன்டிகோன்ஸ் (Antigonus), சிரேனின் மர்கஸ் (Margas), எபிரோசின் அலெக்ஸாண்டர் (Alexander). 302. இதை எங்கே அறிந்துகொள்வது? பேரரசர் அசோகர் அவராலேயே பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலும் கல்தூண்களிலும் உள்ள அரசாணைகளில் காணலாம். அவை இன்றும் அவ்விடங்களுக்கு செல்வோர் அனைவரும் காணும்வகையில் நிலையாக இருக்கின்றன. 303. மேற்கின் எந்த இணை மதங்களோடு புத்த தர்மம் மேற்கத்திய சிந்தனையோடு ஒன்றுசேர்கிறது? எகிப்தின் தேராபெட்ஸ் (Therapeuts) மற்றும் பாலஸ்தீனத்தின் எஸ்சென்ஸ் (Essenes). 304. சீனாவில் பெளத்த நூல்கள் எப்போது அறிமுகம் செய்யபட்டன? சமந்த பசதிக்க (samanta pasadika) மற்றும் சாரத்த திபானி (sarattha dipani) ஆகிய இரண்டு பாலி நூல்கள் பொ.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தர்மசோகரின் ஐந்து பிக்குகளால் சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன என கூறப்படுகிறது. 305. எங்கிருந்து எப்போது கொரியா தேசத்திற்குள் சென்றது? சீனாவிலிருந்து பொ.யு. 372-ல் சென்றது. 306. ஜப்பானிய நாட்டிற்கு எப்போது எங்கிருந்து சென்றது? கொரியாவிலிருந்து பொ.யு. 552-ல் ஜப்பானிற்கு சென்றது. 307- எங்கிருந்து எப்போது கொச்சின்சீனா (Cochinchina - வியட்நாம்), ஃபார்மோசா (Formosa), ஜாவா, மங்கோலியா, யோர்கண்ட் (Yorkand), பால்க் (Balk), போகாரா (Bokhara), ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்றது? உறுதியாக பொ.யு. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் சென்றது. 308. இலங்கையிலிருந்து எங்கெங்கே எப்போது பௌத்தம் பரவியது? பொ.யு. 450-ஆம் ஆண்டில் பர்மாவிற்கும், பின்னர் அங்கிருந்து படிப்படியாக அரகன் (Arakan), கம்போயா (Kamboya) மற்றும் பெகுவிற்கும் (Pegu) பரவியது. ஏழாம் நூற்றாண்டில் (பொ.யு. 638) சியாமிற்கும் (தாய்லாந்து) பரவியது. அன்று முதல் இன்று வரை அது சியாமின் அரச மதமாகவே உள்ளது. 309. காஷ்மீரிலிருந்து சீனா தவிர்த்து கூடுதலாக வேறெங்கு பரவியது? நேபாளம் மற்றும் திபெத். 310. ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இருந்த பௌத்தம் ஏன் இப்போது இந்தியாவில் அழிவின் நிலையிலுள்ளது? துவக்கத்தில் பௌத்தம் ததாகதரின் போதனைகளின் புனிதமும் உன்னதமும் கொண்டிருந்தது; சங்கம் உயர் ஒழுங்குடனும் தர்ம விதிகளை பின்பற்றியும் நடந்தது; அது எல்லோர் மனதையும் வென்று காலை ஒளி மலர்களை உயிர்த்தெழுப்புவது போல பல நாடுகளெங்கும் மகிழ்ச்சியை பரவ செய்தது. ஆனால் சில நூற்றாண்டுகள் கழிந்து தீய பிக்குகள் உபசம்வதா (துறவு) ஏற்றனர், அதன்பிறகு சங்கத்தில் செல்வமும், சோம்பலும் மற்றும் புலன் நாட்டமும் வந்துசேர்ந்தது, தர்மம் நலிவுற்றது. ஆகவே இந்திய தேசம் அதை கைவிட்டது. 311. இந்த வீழ்ச்சி வெகு விரைவாக நடைபெற பொ.யு ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் ஏதேனும் நடந்ததா? ஆம் 312. ஆன்மீகத்தில் ஏற்பட்ட குறைபாடு, சங்கத்தின் சீரழிவு, மற்றும் உயர் விழுமியம் கொண்ட மக்கள் பின் மூடத்தனமான உருவவழிபாட்டிற்கு மாறிய விளைவு இவைகளல்லாமல் வேறேதும் காரணங்கள் உண்டா? ஆம். இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்சல்மான்கள் தாங்கள் சென்ற இடெமெல்லாம் பெரும் சேதம் உண்டாக்கி எங்கள் மதத்தை இல்லாமலாக்கினர். 313. எத்தகைய கொடுஞ்செயல் அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ளது ? எங்கள் விஹாரைகளை எரித்து அல்லது இடித்துத்தள்ளி அழித்தனர், பிக்குகளை கொன்றழித்தனர், எங்கள் புனித மத நூல்களை நெருப்பிற்கு இரையாக்கினர். 314. நம்முடைய நூல்கள் மொத்தமாக இந்தியாவில் அழிந்துவிட்டதா? இல்லை. பல பிக்குகள் எல்லை கடந்து திபெத் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்கள் நூல்களுடன் தஞ்சமடைந்தனர். 315. சமீப காலங்களில் இந்த புத்தகங்கள் பற்றி ஏதேனும் தடயங்கள் கண்டறியபட்டதா? ஆம். ராய்பகதூர் சரத்சந்திரதாஸ் என்னும் வங்காள அறிஞர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை திபெத்தின் நூலகங்களில் கண்டு அவற்றில் மிகவும் முக்கியமானவற்றை நகல் எடுத்து தன்னுடன் கொண்டுவந்தார். அவர் தற்போது இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு அப்புதகங்களை தொகுத்து பிரசுரிக்கும் பணியில் உள்ளார். 316. எந்த நாட்டில் துவக்ககால பௌத்ததின் புனித நூல்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு குறைந்த அளவே சிதைக்கப்பட்டுள்ளது என நாம் நம்புவதற்கு காரணமாகிறது? இலங்கை. பிரிட்டானிக்காவின் கலைக்களஞ்சியம் இப்படி சொல்கிறது “இந்த தீவில் பௌத்தம் அதன் அப்பழுகற்ற தூய நிலையில் இந்த நவீன காலத்திலும் தக்கவைக்கப்பட்டுள்ளது”. 317. நவீன காலகட்டத்தில் பிடகங்கள் திருத்தம் செய்யபட்டுள்ளனவா? ஆம். இலங்கையில் மிகவும் கவனமாக சுமங்கலா (H Sumangala) மற்றும் பிரதன ஸ்தவீரா (Pradhana sthavira) ஆகியோரின் தலைமையில் கற்றறிந்த பிக்குகளால் பொ.யு 1875-ல் வினய பிடகம் திருத்தம் செய்யப்பட்டது. 318. தெற்கு மற்றும் வடக்கு என பிரிவாக உள்ள பெளத்த நாடுகள் பௌத்ததின் நன்மைக்காக தங்களுக்குள் நட்பார்ந்த உறவு கொள்வதுண்டா? பொ.யு. 1891-ல் இந்த இருபெரும் பிரிவினரின் ’பிரதான நாயகர்’களிடையே பதினான்கு கருத்துக்கள் பௌத்தத்தின் அடிப்படை நம்பிக்கை கூறுகளாக ஏற்கப்பட்டு இருபிரிவினரும் கற்க வேண்டும் என்ற வெற்றிகரமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலோனல் ஆல்காட் அவர்களால் வரைவு செய்யப்பட்ட இக்கருத்துக்கள் பர்மா, சிங்களம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக விவாதித்து தலைமை பிக்குகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டு கையொப்பம் பெற்று தை மாதம் 1892 ஆம் ஆண்டு பிரசுரமானது. 319. இதனால் என்ன நல்விழைவு ஏற்பட்டது? இருவருக்குமான நற்புரிதலின் விழைவால் எண்ணற்ற ஜப்பானிய பிக்குகள் மற்றும் சமநேரர்கள் (புதிய ஆண் பிக்கு மாணவர்கள்) சிலோன் மற்றும் இந்தியாவிற்கு பாலி மற்றும் சமஸ்கிருதம் பயில அனுப்பப்பட்டனர். 320. புத்த தர்மம் பௌத்தம் அல்லாத நாடுகளிலும் பிரபலம் ஆவதற்கான தடயங்கள் ஏதேனும் உள்ளதா? உள்ளது. எங்களின் மதிப்புமிக்க நூல்களின் மொழிபெயர்ப்புகள் மற்றும் பல கட்டுரைகள் சிற்றிதழ்களிலும் நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்படுகிறன்றன. மற்றும் சிறப்பான சமய ஆய்வுக்கட்டுரைகள் தலைசிறந்த எழுத்தாளர்களால் அச்சிதழ்களில் வெளியிடப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கு நாடுகளில் பௌத்தர்களும் அல்லாதவரும் பெளத்த கருத்துக்களை பொதுவெளியில் பெரும் கூட்டத்தின் முன் சொற்பொழிவு செய்கின்றனர். ஷின் ஷூ (shin shu) பிரிவை சேர்ந்த ஜப்பானிய பௌத்தர்கள் ஹொனோலுலு, சான்பிரான்ஸிஸ்கோ, சக்ரமெண்டோ மற்றும் பிற அமெரிக்க நிலங்களில் தங்கள் சமயகுழுக்களை அமைத்துள்ளனர். 321. நம்முடைய எந்த இரண்டு முதன்மை கருத்துக்கள் மேற்கத்திய மனதை ஆக்கிரமித்துள்ளது? கர்மா மற்றும் மறுபிறப்பு. இதனை அவர்கள் ஏற்றுகொண்டதன் விரைவு ஆச்சர்யமயளிக்கிறது. 322. இந்த ஏற்பிற்கான விளக்கம் எது என நம்பப்படுகிறது? அவை இயற்கையாக உள்ளுறைந்திருக்கும் அறத்திற்கு முக்கியத்துவம் தருவதும் மற்றும் அவற்றின் தெளிவான நியாயத்தன்மையுமே காரணம். ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி ஹென்றி ஸ்டீல் ஆல்காட் விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/11/buddhism.html
-
சீனத் தூதுவர் இனவாதக் கருத்தை விதைக்கக் கூடாது; கஜேந்திரகுமார் கடும் கண்டனம்
சீனத் தூதுவர் இனவாதக் கருத்தை விதைக்கக் கூடாது; கஜேந்திரகுமார் கடும் கண்டனம் சீனத் தூதுவர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் சீனத் தூதர் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட நிலையில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விட்டார்கள் இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்து விட்டன எனக் கருத்துக் கூறியிருந்தார். இந்தக் கருத்தை எமது கட்சி கண்டிப்பாதோடு இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர் இவ்வாறு கருத்து கூறுவது நாகரிகமான செயல் அல்ல என்பதோடு அவ்வாறான கருத்தை தூதுவர் ஒருவர் கூறக்கூடாது. உண்மையில் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில்க் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கி விட்டார்கள் எனக் கூற முடியாத நிலையில் சீனா தூதுவர் எந்த அடிப்படையில் அவ்வாறான கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பில் கேட்க விரும்புகிறேன். தேசிய மக்கள் சக்திக்கு யாழ் தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்கள் கிடைக்கப்பெற்றது . சுயேச்சை குழுக்கள் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்ததால் அந்த ஆசனம் கிடைத்தது. இம்முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை . கடந்த பாராளுமன்ற தேர்தலில் தெற்கை பிரதிநிதித்துவப்டுத்தி களமிறங்கிய அங்கஜன் டக்ளஸ் போன்றோர் பெற்ற வாக்குகளை விட இம்முறை தேசிய மக்கள் சக்தி சுமார் 15,000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளனர். தெற்கு கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வாக்களிக்கும் ஒரு பகுதியினர் அங்கஜன், டக்ளசை நிராகரித்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளமையே உண்மையான விடயம். இவற்றை அறியாத சீனத்தூதுவர் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட தயாராகிவிட்டனர் என்ற கருத்தை கூறுவது ஒன்றில் கேட்ட கேள்வி விளக்கம் என்னால் கூறிய பதிலாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களை வேண்டுமென்றே தவறான பாதையில் இட்டு செல்வதாக பார்க்க முடியும். தமிழ் மக்கள் நீண்ட காலமாக தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு தமது ஆதரவை கொடுத்து வந்த நிலையில் அவர்களின் கோரிக்கை தொடர்பில் சீனத் தூதுவர் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற வேண்டும். அதை விடுத்து பூகோள அரசியல் போட்டி காரணமாக சீனா தமது ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காக இனவாத கருத்துக்களை தெரிவிப்பது ஆரோக்கியமான விடயமல் அல்ல. ஆகவே உலக வல்லரசில் ஒன்றான சீனாவின் இலங்கைக்கான தூதுவர் தனது தூதுவர் பதவிக்கு பொருத்தம் இலலாத விடயங்களில் தலையிடுவதும் தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைப்பதையும் தவிர்த்து கொள்ள வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=301149
-
பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு!
பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு! Vhg நவம்பர் 30, 2024 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் இரண்டாவது நேரடி அரசவை அமர்வு ஆரம்பமாகியுள்ளது. குறித்த அமர்வு நேற்று (29-11-2024) பாரிஸ் புறநகர் பகுதியான Mairie de Le Blanc Mesnil 1 Place Gabriel Péri 93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் தொடங்கியுள்ளது. அத்தோடு, இன்றைய தினமும் (30-11-2024) மற்றும் டிசம்பர் முதலாம் திகதியும் அமர்வு இடம்பெறவுள்ளது. இந்நதிலையில், இன்று (30-11-2024) மாலை 6.30 மணிக்கு 5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. குறித்த அமர்வில், அநுரவின் ஆட்சியில், தமிழ்த்தேசியத்திற்கான சவாலும்சந்தர்ப்பங்களும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச நீதி என்பவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இன்றைய நிகழ்வில் பன்னாட்டுஅரசியல், சமூக அமைப்புகளின் பங்களிப்புக்கள் மற்றும் கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அத்தோடு, தந்தைசெல்வா,நெல்சன் மண்டேலா,மாமனிதர் துரைராஜா, தியாகதீபம் திலிபன் நினைவு விருதுகள்,மற்றும் இளம்தலைமத்துவத்திற்கான விருது என்பன தேர்வாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன. மேலும், இந்நிகழ்வில்தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணியினரும் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/11/blog-post_565.html
-
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி!- செல்வம் அடைக்கலநாதன்
மாவீரர் தினத்திற்கு அனுமதி அளித்த ஜனாதிபதிக்கு நன்றி! November 30, 2024 06:45 am மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (29) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்ற போது மாவீரர் நினைவேந்தலின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில்,இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. எனினும் இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196638
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
மத்ரஸா மாணவர்கள் மரணத்துக்கு முப்படையினரே காரணம் – ஹக்கீம் November 30, 2024 “காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தில் உழவியந்திரம் வெள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரபுக் கல்லூரி (மத்ரஸா) மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயரிழந்த துயரச் சம்பவமானது பொலிஸ் மற்றும் முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்தது”- இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுடன் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த பாதிப்புகள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. இதேவேளை, மாவடிப்பள்ளி பாலத்தில் உழவியந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டுப் பேர் உயரிழந்த துயரச் சம்பவமானது பொலிஸ் மற்றும் முப்படையினரின் அவதானக் குறைவினாலேயே நிகழ்ந்ததாக ஹக்கீம் சுட்டிக்காட்டினார். குறித்த பாலத்துக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் பாதையை மூடாமல் போக்குவரத்துக்கு அனுமதியளித்தமையானது பொறுப்பற்ற செயல்பாடாகும். உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு தாம் சென்றபோது அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து விசனம் வெளியிட்டதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டார். எனவே, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரிதமாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர உதவிகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த பாதிப்புகளை நிவர்த்தி செய்து இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் ஹக்கீம் வலியுறுத்தினார். https://eelanadu.lk/மத்ரஸா-மாணவர்கள்-மரணத்து/
-
பெயர் மாற்றங்கள்.
அஞ்சு தரம் கேட்டாலும் என்ன பெயராக மாற்றவேண்டும் என்று சொல்லுமட்டும் மாற்றமாட்டார்கள். ஒரு பெயரை நீங்கள்தான் முன்மொழியவேண்டும்😀
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை
அநுர அலையில் சேரமான், பாலசிங்கம் பிரபாகரன், போலித் துவாரகா அடிபட்டுப் போனார்கள். காணொளியை வெளியிடுவார் என்று சொல்லியுள்ளார். ஆனால் யூடியுப்பர்கள் காலத்தில் இவர்களின் சலசலப்பு எவருக்கும் கேட்கவில்லை. 11:50 இல் தோன்றுகின்றார். சண்டையா நடக்கின்றது, சமாதானச் செய்தி அனுப்ப? யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரவின் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சாதாரணமாக உலவுகின்றார். மக்கள் குறைகளைக் கேட்கின்றார். சேரமானின் துவாரகா புரஜெக்ட் பல்லிளித்து நிற்கின்றது.
-
எம்.எஸ்.ஸைக் கொண்டாட வழிகோலிய டி.எம்.கிருஷ்ணா - பெருமாள் முருகன்
எம்.எஸ்.ஸைக் கொண்டாட வழிகோலிய டி.எம்.கிருஷ்ணா AaraNov 27, 2024 16:06PM பெருமாள்முருகன் மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு கருநாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு 2024 மார்ச் மாதம் அறிவித்தது. அதுமுதல் ஏழெட்டு மாதங்களாக அவருக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு செயல்களும் கருத்துரிமைக்கு எதிரானவையாக இருக்கின்றன. இசைக்கலைஞராகத் தம் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டிராமல் அரசியல், இசை, சாதி, மொழி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் தம் கருத்தைப் பேச்சாகவும் எழுத்தாகவும் வெளிப்படுத்துபவராகக் கிருஷ்ணா உள்ளார். அவர் கருத்துக்கள் ஆதிக்கத்தின் எல்லாத் தரப்புக்கும் கோபத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை விவாதிக்கும் மனநிலையும் சகிப்புத்தன்மையும் அற்றவர்கள் அவரது கருத்துரிமையைப் பறித்து வெவ்வேறு வகைகளில் நெருக்கடி தந்து கொண்டேயிருக்கின்றனர். ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தை முன்வைப்பவரைப் பொதுவெளியில் இருந்து அகற்றிவிடச் சகல தந்திரங்களையும் கையாள்கின்றனர். சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கு ஆண்டுதோறும் ‘தி இந்து’ நிறுவனம் சார்பாகச் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும்’ வழங்கப்படுகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏற்கனவே விரிவான கட்டுரை ஒன்றை டி.எம்.கிருஷ்ணா எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் எம்.எஸ்.ஸை இழிவுபடுத்தியிருக்கிறார், அவதூறு செய்திருக்கிறார், அவருக்கு எப்படி இந்த விருதை வழங்கலாம் எனப் பரவலாகப் பேசினர். அவரது பேரன் சீனிவாசன் என்பவர் ‘என் பாட்டியை இழிவுபடுத்தியவருக்கு அவர் பெயரிலான விருது வழங்கக் கூடாது’ என்று நீதிமன்றம் சென்றார். அவ்வழக்கில் இப்போது இடைக்காலத் தீர்ப்பு வந்திருக்கிறது. கிருஷ்ணா எழுதிய அக்கட்டுரை ஓர் இசைக்கலைஞரைப் பற்றிய அரிய ஆய்வு. இலக்கியத் திறனாய்வில் படைப்புக்கும் எழுத்தாளரின் வாழ்வுக்கும் உள்ள தொடர்பைக் குறித்து ஆய்வு செய்வது ஓர் அணுகுமுறை. அதை இசைக்கலைக்கு அற்புதமாகப் பொருத்தியிருக்கிறார். எம்.எஸ்.ஸின் ஆளுமை பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. அதை முழுமையாகத் தம் இசையில் அவரால் வெளிப்படுத்த முடிந்ததா என்பதைத்தான் கட்டுரை ஆராய்கிறது. அவர் பாடிய இசையே முதன்மை ஆதாரம். அவர் இசையைத் தொடர்ந்து கேட்டு அவற்றில் வெளிப்படும் கலை மேன்மையை அல்லது வெளிப்படத் தவித்து அடங்கிச் செல்லும் நிர்ப்பந்தத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதற்கான காரணத்தை எம்.எஸ்.ஸின் வாழ்வில் தேடுகிறது கட்டுரை. அவர் வாழ்வை மூன்று கட்டங்களாகப் பகுத்து ஒவ்வொன்றிலும் எப்படிப் பாடினார், தேர்வு செய்த பாடல்கள் எத்தகையவை, அதற்கான பின்னணிக் காரணங்கள் எவை என தர்க்கமும் அழகும் கலந்த மொழியில் கட்டுரை விவரிக்கிறது. கருநாடக சங்கீத உள் உலகில் பேசப்படும் பல்வேறு அபிப்ராயங்களையும் கட்டுரை எடுத்து விவாதிக்கிறது. அவை வாய்மொழிச் சான்றுகள். கிருஷ்ணாவும் பாடகராக இருப்பதால் அவற்றை எல்லாம் திரட்ட முடிந்திருக்கிறது. அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தி, அவை வெளிப்படுவதற்கான பின்னணிக் காரணத்தை நோக்கிச் சென்று தம் கருத்துக்களையும் எடுத்துச் சொல்கிறார். கட்டுரையில் சாதி பற்றியவையும் அவர் கணவர் பற்றிய பகுதிகளும் குடும்பத்தாருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவற்றிலும் எந்த எல்லை மீறலும் இல்லை. பண்பட்ட மொழியில் தம் எண்ணங்களை முன்வைத்திருக்கிறார். நம் சமூகத்தில் மதம் மாறிக்கொள்ளலாம். என்ன செய்தாலும் சாதி மாற முடியாது. எம்.எஸ். பிறந்து வளர்ந்த தேவதாசிப் பின்னணியை எப்படி மறைக்க முடியும்? கணவரின் கட்டுப்பாட்டில் அவர் இருந்தார் என்பதும் கணவரே கச்சேரி அமைப்பைத் தீர்மானித்தார் என்பதும் பொதுவெளியில் சாதாரணமாகப் பேசப்படும் விஷயம்தான். பொதுவெளியில் போற்றப்படும் எம்.எஸ். என்னும் மாபெரும் ஆளுமையைப் பற்றிய காத்திரமான கட்டுரை இது. இந்தக் கட்டுரை தரும் புரிதலோடு எம்.எஸ்.ஸின் இசையைக் கேட்டால் இன்னும் ஆழ்ந்து அனுபவிக்கலாம். பொதுவிருப்பத்திலிருந்து விலகி அவர் பாடிய வித்தியாசமான பாடல்களைத் தேடிக் கேட்கலாம். ‘இந்தக் கட்டுரை அவருடைய நினைவை நான் அவமதிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். உண்மையில் ஆகச் சிறந்த முறையில் அவரை நான் கொண்டாடியிருக்கிறேன்’ என்று தமிழ் மொழிபெயர்ப்பு முன்னுரையில் டி.எம்.கிருஷ்ணா சொல்வதை ஆழ்ந்து வாசிப்போர் உணர்வர். நீதிமன்றம் தீர்ப்பு சொல்வதற்கு எம்.எஸ்.ஸை டி.எம்.கிருஷ்ணா இழிவுபடுத்தினாரா இல்லையா என்பதற்குள் செல்லவில்லை. மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதைப் பற்றி எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. யார் சங்கீத கலாநிதி விருது பெறுகிறார்களோ அவருக்கு ‘தி இந்து’ நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது’ என்னும் ஒருலட்சம் ரூபாய் பணப் பரிசு பற்றிப் பேசுகிறது. எம்.எஸ்.ஸின் உயிலில் தம் பெயரில் எதையும் செய்வதை விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் விருப்பத்தை மதிக்கும் பொருட்டு அவர் பெயரைப் பயன்படுத்தாமல் பணப்பரிசை வழங்கலாம் என்று தீர்ப்பு சொல்கிறது. இந்து நிறுவனம் வழங்கும் விருதின் பெயர் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்னும் பெயரிலானது. மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதையும் அதைப் பெறுபவருக்கே இந்து நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்பதையும் குழப்பிக் கொண்ட தமிழ் ஊடகங்கள் அனைத்துமே தீர்ப்பைத் தவறான தொனியில் செய்தியாக்கியுள்ளன. சங்கீத கலாநிதி விருதே எம்.எஸ். பெயரிலானது எனப் புரிந்துகொண்டு ‘சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கத் தடை’ என்றே தமிழ்ச் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. டி.எம்.கிருஷ்ணாவுக்குச் சங்கீத கலாநிதி விருது வழங்கவே நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது எனப் பொருள்படும்படி செய்திகள் இருக்கின்றன. நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட போதும் இதே குழப்பத்துடன் செய்தியை வெளியிட்டன. ஆங்கில ஊடகங்களிலும் சில இப்படித்தான் புரிந்துகொண்டிருந்தன. விருதுப் பின்னணி பற்றிய அடிப்படை அறிதல் இல்லாததால் தீர்ப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பற்றிய நம்பகத்தன்மையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்விருது பற்றிய பின்னணியை இன்னும் சற்றே தெளிவுபடுத்தலாம். ‘சங்கீத கலாநிதி’ என்பது மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கருநாடக சங்கீத இசைக்கலைஞர்களுக்கு வழங்கி வரும் விருது. இதை 1968ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெற்றார். தாம் பெற்ற மதிப்பிற்குரிய விருதுப் பெயரைத் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொள்வது பொதுவழக்கம். தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதைப் பலர் தம் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது அறிவோம். அதுபோல ‘தி இந்து’ நிறுவனம் வழங்கும் ஒருலட்சம் ரூபாய் பணப்பரிசுடன் கூடிய விருதுக்குச் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்று பெயர் சூட்டியுள்ளனர். 2005ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆகவே மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருது வேறு; தி இந்து நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வேறு. ஆனால் தி இந்து நிறுவனம் தாம் வழங்கும் விருதுக்கெனத் தனியாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை. மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் யாருக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குகிறதோ அவருக்கே தி இந்து நிறுவனம் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை’ வழங்கிவிடுகிறது. இரண்டும் ஒருவருக்கே வழங்கப்படுகிறது. இந்தப் பின்னணி அறியாத ஊடகங்கள் தவறான புரிதலோடு செய்தியை வெளியிட்டுள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை இந்து நிறுவனம் தாம் வழங்கும் விருதுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் தீர்ப்பு. இப்போது நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்களுக்கு இந்து நிறுவனம் எம்.எஸ். பெயரிலான விருதையும் வழங்கியிருக்கிறது. அவை என்னவாகும்? அதைப் பற்றித் தீர்ப்பு ஏதும் சொல்லவில்லை. முடிந்து போன விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்திருக்கலாம். இனி அடுத்தடுத்த ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கும் இந்து நிறுவனம் ஒருலட்சம் ரூபாய் பரிசு வழங்கும்போது எம்.எஸ். பெயரைப் பயன்படுத்த முடியாது. தாம் வழங்கும் விருதின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது வேறு பெயரில் வழங்கலாம் என்று அதற்கு அர்த்தம். இன்னொரு கேள்வியும் எழுகிறது. எம்.எஸ். பெயரில் இந்து நிறுவனம் மட்டுமல்ல, வேறு நிறுவனங்களும் விருதுகள் வழங்குகின்றன. சான்றாக தமிழ்நாடு அரசின் ‘இயல் இசை நாடக மன்றம்’ ஆண்டுதோறும் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வழங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டுக்கான விருதைத் திரைப்பாடகர் எஸ்.ஜானகி பெற்றிருக்கிறார். 2020ஆம் ஆண்டு வாணிஜெயராம் பெற்றிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பு இத்தகைய விருதுகளையும் கட்டுப்படுத்துமா? அவர் பெயரில் வெவ்வேறு நிறுவனங்கள் வழங்கும் பல விருதுகளையும் பட்டியலிட்டுள்ள இத்தீர்ப்பு அவற்றைப் பற்றி எதையும் சொல்லவில்லை. ஆனால் இந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டு ‘வழங்கக் கூடாது’ என்று யாரேனும் நீதிமன்றம் சென்றால் அவற்றையும் வழங்க முடியாத நிலை ஏற்படும். அவற்றில் உள்ள எம்.எஸ். பெயரை நீக்கிவிட நேரும். இந்தத் தீர்ப்புப்படி டி.எம்.கிருஷ்ணாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவருக்குச் சங்கீத கலாநிதியும் வழங்கலாம். இந்து நிறுவனம் வழங்கும் பணப்பரிசையும் வழங்கலாம். ஆனால் எம்.எஸ். பெயரை இனி எந்த விருதுக்கும் பயன்படுத்த இயலாத நிலை உருவாக்கியிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி தம் உயிலில் ‘என் இறப்புக்குப் பிறகு என் பெயரில் அறக்கட்டளை, நினைவகம் அமைப்பது கூடாது. என் பெயரில் நிதி திரட்டுவதோ வழங்குவதோ கூடாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். எம்.எஸ்.ஸின் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் இத்தீர்ப்பின் அடிப்படையில் அனைத்திலிருந்தும் அவர் பெயரை நீக்க வேண்டும். இவ்வாண்டு டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கும் சூழலில் எம்.எஸ்.ஸின் விருப்பமும் நிறைவேறுகிறது என்றே சொல்லலாம். தம் கட்டுரை மூலமாக எம்.எஸ்.ஸைக் கொண்டாடிய டி.எம்.கிருஷ்ணா இப்போது அவர் உயிலில் தெரிவித்துள்ள விருப்பத்தையும் நிறைவேற்றியிருக்கிறார். இதுவரைக்கும் எம்.எஸ். தம் உயிலில் இப்படி எழுதியிருக்கிறார் என்று பொதுவெளியில் தெரியாது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எம்.எஸ். எழுதிய உயிலில் உள்ள செய்திகள் வெளிப்பட்டுத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளாத அவர் ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தை வெளியுலகிற்கு எடுத்துக்காட்ட டி.எம்.கிருஷ்ணா வழிகோலியிருக்கிறார். இருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் முனைவர் பெருமாள் முருகன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரை வீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். மாதொருபாகன் உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதியவர். 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் விருதுக்கான (International Booker Prize) நெடும்பட்டியலில் பெருமாள் முருகனின் பூக்குழி (Pyre) இடம்பெற்றது. தமிழ் நாவல் ஒன்று இப்பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல்முறை. 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி இலக்கிய பரிசை இவரது ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Fire bird பெற்றது. https://minnambalam.com/featured-article/present-sangeetha-kalanithi-award-to-tm-krishna-without-using-ms-subbulakshmis-name-madras-hc/
-
திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!
திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்! -சாவித்திரி கண்ணன் சீமான் – ரஜினி சந்திப்பு என்பது இரு தனி நபர் சார்ந்த சந்திப்பு அல்ல. ஒரு சித்தாந்தம் இன்னொரு சித்தாந்த பிம்மத்திற்குள் கரைய முயற்சிக்கும் சந்திப்பாகும். ரஜினியின் போயஸ் இல்லம் அரசியல் போக்கற்றவர்களின் போக்கிடமாக கடந்த பத்தண்டுகளாக எப்படி இயங்கி வருகிறது என்பது குறித்த ஒரு அலசல்; அதென்னவோ தெரியவில்லை. பொது வாழ்வில் செல்வாக்கு குறைந்து போனவர்கள் அடைக்கலம் ஆகும் இடமாக நடிகர் ரஜினிகாந்த் வீடு உள்ளது. திமுகவில் கலைஞர் சாப்தம் முடிவுக்கு வந்த நிலையில், ஸ்டாலினின் அதிகாரம் ஓங்கி வளர்ந்து வந்த நிலையில் மு.க.அழகிரி ஓரம்கட்டப்பட்டார். ரஜினியை போயஸ் கார்டன் சென்று சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தி இருந்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் பல்லாண்டுகளாக அதிகார மையமாக வாழ்ந்த சசிகலா, அதே போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு ஒரு போதும் செல்ல நினைத்ததில்லை. சிறை சென்று வந்த பிறகு அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் – பாஜகவின் கட்டளைக்கு ஏற்ப செயல்படக் கூடிய சூழலில் – ரஜினியை போயஸ் இல்லம் தேடிச் சென்று சந்தித்தார். ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். அந்த காலகட்டங்களிலும் சரி, அதன் பிறகு அமைச்சர்,துணை முதல்வர் காலகட்டங்களிலும் சரி, போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டைக் கடந்தே பலமுறை ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற காலகட்டங்களில் எல்லாம் ரஜினி வீட்டிற்கு செல்வதையே அவர் நினைத்து பார்த்ததில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் எடப்படியின் கை ஓங்கி கட்சியில் இருந்து விலக்கப்பட்டு, தீவிர பாஜகவின் ஆதரவாளராக வெளிப்பட்ட நிலையில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார். வைகோ நீண்ட காலமாக அரசியலில் இருப்பவர். அவர் திமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய 1993-ல் ரொம்ப பீக்கில் இருந்தார். ஆனால், படிப்படியாக அவர் செல்வாக்கு இறங்கி 2014 ஆம் ஆண்டு மிக நலிந்த நிலையில் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்ட நிலையில், அந்த ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மாலினி கடிதத்துடன் ரஜினியை சந்தித்தார். அதே போல திருநாவுக்கரசர் செல்வாக்கோடு இருந்த காலத்தில் எப்போதும் போதும் சரி போயஸ் இல்லம் சென்று ரஜினியை சந்தித்தவர் அல்ல, ஆனால் அவர் செல்வாக்கு முற்றிலும் சரிந்த காலகட்டத்தில் ரஜினியை போயஸ் இல்லம் சென்று சந்தித்தார். அவர் பாஜகவில் முன்பு அமைச்சர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஷ்பு திமுக, காங்கிரஸ் என்று பயணித்த காலங்களில் எல்லாம் திரைத்துறையில் நெருங்கி பழகிய ரஜினியைத் தேடி போயஸ் இல்லம் சென்று சந்தித்ததே இல்லை. அதே சமயம் பாஜகவில் சேர்ந்த பிறகு மிக உரிமையுடன் போயஸீல் உள்ள ரஜினி இல்லம் தேடிச் சென்று சந்தித்தார். தமிழருவி மணியன் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இருந்து பொது வாழ்வை தொடங்கியவர். ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா, காங்கிரஸ் என்று பயணித்து இறுதியில் காந்திய மக்கள் இயக்கம் கண்டவர். 2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு காரணமானவர். அப்போது கூட அவர் ரஜினி என்று யாரேனும் சொன்னால், அவரெல்லாம் நடிகர் அவரிடம் நமக்கென்ன பேச்சு வேண்டியுள்ளது என அறிவார்ந்த தளத்தில் கேள்வி எழுப்புவார். ஆனால், பிறகு பாஜகவுடன் அவர் நெருக்கமான பிறகு ரஜினியை தொடர்ந்து சந்தித்து பேசும் நிலைக்கு ஆளானார். இதே போலத் தான் சீமான். அரசியலில் தன் சொந்த பலத்தை நம்பி பயணித்த வரையில் அவர் ரஜினியை எடுத்தெறிந்து பேசியவர் தான். ஆனால், விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அவரது கட்சியில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் விலகி செல்லும் நிலையில், இனி தன் எதிர்காலம் கேள்விக்கு உள்ளான நிலையில் ரஜினியை சந்தித்து உள்ளார். சீமான் என்பவர் தமிழக அரசியலில் திராவிடத்தை எதிர்க்கும் ஒற்றை நோக்கத்தை கொண்டு இயங்கி வருவதோடு கே.டிராகவன் மற்றும் நடிகை கஸ்தூரி விவகாரங்களில் அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் என்பது கவனத்திற்கு உரியது. முன்பு தம்பி விஜய் என வாய்க்கு வாய் அடிக்கடி வலிந்து விஜய்யைப் பற்றி பேசி விஜய்யின் ஆதரவு ஓட்டுகளையெல்லாம் அறுவடை செய்து வந்த சீமானுக்கு அந்த வாய்ப்பு தற்போது இல்லாமல் ஆகிவிட்டது. விஜய்யும் திமுகவை உக்கிரமாக எதிர்ப்பதால் சீமானுக்கு விழுந்த திமுக எதிர்ப்பு ஓட்டுகளும் இனி விஜய் பக்கம் ஓரளவேனும் சென்றுவிடும். சீமானின் பாஜக எதிர்ப்பு பேச்சுக்கள் எல்லாம் வெறும் பசப்பல் தானேயன்றி உண்மையல்ல..என்பது சமூகதளத்தில் பரவலாக உணரப்பட்டு வருகிறது. ஆகவே, இனி வேஷம் களைவதைத் தவிர, வேறு வழியில்லை சீமானுக்கு. அதே சமயம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வை வீரியமாக எடுத்துச் சென்றவர் என்ற வகையில் சீமான் அரசியல் என்பது இந்த காலகட்டத்தின் தேவையாக உணரப்பட்டது என்பதை நாம் மறுக்க முடியாது. ரஜினியை பொறுத்த வரை பாஜகவிற்கு சாதகமாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க அடையாளம் காணப்பட்டவர். ஆனால், அது அவரது உடல் நிலை, மன நிலையால் வெற்றிகரமாக நடக்கவில்லை. ஆனால், அவரது அணுகுமுறை என்பது அனைத்து தரப்பினரோடும் இணக்கமான இருப்பது போன்ற தோற்றத்தை காட்டினாலும், அடிப்படையில் இந்திய தேசியத்திற்கும், பிராமணிய இந்துத்துவாவிற்கும் மிக விஸ்வாசமானது என்பது கவனத்திற்கு உரியது. இந்தப் பின்னணியில் ரஜினியை சீமான் சந்தித்து இருப்பதானது – அதுவும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ரவீந்திரன் துரைசாமியின் துணையோடு இந்த சந்திப்பும், பேச்சு வார்த்தைகளும் இரண்டரை மணி நேரம் நீடித்து இருக்கும் நிலையில் – இது வரை சமரசமற்ற தமிழ் தேசியப் போராளியாக தன்னை அடையாளம் காட்டி வந்த சீமானின் அரசியல், இனி சரிவை நோக்கி திரும்பி சென்று கொண்டிருப்பதையே உணர்த்துகிறது. சாவித்திரி கண்ணன் https://aramonline.in/19981/semaan-rajini-meeting-politics/
-
ஜனாதிபதியின் உரை : கொட்டை நீக்கப்பட்ட கோது……..!
ஜனாதிபதியின் உரை : கொட்டை நீக்கப்பட்ட கோது……..! November 27, 2024 — அழகு குணசீலன் — ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்க பிரசங்கத்தை செய்திருக்கிறார். இலங்கையின் இன்றைய நிலையில் என்.பி.பி.என்ற போர்வையில், ஜே.வி.பி யின் முழுமையான கட்சி கட்டுப்பாட்டு ஆட்சி அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான அதிகாரப்பகிர்வு, மற்றும் பொருளாதார மந்தம் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான பொருளாதாரதீர்வு திட்டங்கள் குறித்து கனத்த எதிர்பார்ப்பு தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அநுரவின் கொள்கை விளக்க சிம்மாசன பிரசங்கமானது “உள்ளடக்கத்தை” தேடவேண்டிய வழமையான அரசியல் பிரசங்கமாகவே அமைந்திருக்கிறது. ஜனாதிபதி தனது உரையில் “அதைச் செய்ய வேண்டும், இதைச்செய்யவேண்டும் ” என்று பொருளாதார மேம்பாடு குறித்து பேசினார். ஆனால் திட்ட வட்டமான கொள்கை வெளிப்பாடுகள் எதையும் அங்கு காணமுடியவில்லை. ஆகக்குறைந்தது சமகால பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் இலங்கையின் முன்னுரிமை தேவைகளை முதன்மைப் படுத்தி, மரபு ரீதியான முதலாளித்துவ , சோஷலிச கோட்பாட்டு வரையறைகளை கடந்து “மாற்று” கொள்கை அடிப்படையில் செயற்படத் தயார் என்பதையும் கூட வெளிப்படையாக அடித்துச் சொல்லவும் இல்லை, அல்லது மரபுவழி சோஷலிச கோட்பாடு சார்ந்த ஆட்சியை அமுல் செய்வோம் என்றும் கூறவில்லை. கோட்பாட்டு அரசியலில் மெதுவாக மார்க்கம் ஒன்றை தேர்வு செய்யாத நழுவல்போக்கு மௌனம் அவரால் கைக்கொள்ளப்பட்டுள்ளது . இது பூகோள அரசியல் தந்திரோபாய “தப்பித்தல்” என்று விட்டுவிடலாம். மறுபக்கத்தில் இலங்கையின் எரியும் பிரச்சினையாக உள்ள இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ன? அதை எவ்வாறு அவர் அடையப்போகிறார் என்பது பற்றியும் எந்த கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை. இந்த நாட்டை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் சீர்குலைத்த போருக்கு காரணமான சிறுபான்மை தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கிறது என்பதை தனது உரையின் எந்த இடத்திலும் அவர் கோடிட்டுக் காட்டா விட்டாலும் சாடை, மாடையாகவும் பேசவில்லை. மாறாக “இந்த நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை” என்ற வார்த்தைகளை ஒன்றுக்கு பல தடவைகள் அவர் பேசியுள்ளார். “இனவாதம்” என்ற வார்த்தை அந்த உரையில் மீள மீள உச்சரிக்கப்படுகிறது . இந்த “வார்த்தைக் கொழுக்கட்டை க்குள்” அவர் மறைத்து வைத்துள்ள உள்ளடக்கம் என்ன? “இனவாதத்திற்கு இனி இடமில்லை” என்றால் அதை அவர் எப்படி இல்லாமல் செய்யப் போகிறார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காமல் அதை எப்படி இல்லாமல் செய்ய முடியும்?என்.பி.பி.க்கு சிறுபான்மை தேசிய இனங்கள் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் வழங்கிய ஆதரவை புரிந்து கொண்டுள்ள விதம் அந்த மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முரண்பட்டதாகவே தெரிகிறது. ஜே.வி.பி.யின் முக்கிய புள்ளிகளான கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, விஜயகேரத் போன்றோர் வெளியிட்ட கருத்துக்களையே ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மறைமுகமாகப் பேசுகிறது. அநுரகுமார திசாநாயக்க ஒரு ஜனாதிபதி வேட்பாளராக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதியாக அதிகார பூர்வமாக ஆணித்தரமாக மீள் அறிவிப்பு செய்யவேண்டிய தார்மீக கடமையை அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வில் காட்டவில்லை. இதன் மூலம் “இனப்பிரச்சினைக்கான தீர்வு” என்பதை தவிர்த்து “இனவாதம்” பற்றி பேசுகிறார் அவர். சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை கோரிக்கையை/போராட்டத்தை “இனவாதம்” என்று முத்திரை குத்தும் இதுவரை யான சிங்கள பௌத்த பேரினவாத அரசியலில் இருந்து இது வேறுபட்டதல்ல. இதை கடந்த கால அரசியல் வரலாற்றில் ஜே.வி.பி. செய்யவில்லை என்பதும் அல்ல. அவரது கட்சிக்குள்ளே அது ஒழிக்கப்பட்டு விட்டது என்று நம்புவதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. “இனவாதத்திற்கு இனி இடமில்லை” என்ற கனவு காணுதலை “இனப்பிரச்சினைக்கான தீர்வு” இன்றி எப்படி இல்லாமல் செய்யமுடியும். ? “இலங்கையர்” என்ற கோஷத்தை எவ்வாறு நடைமுறைச்சாத்தியமான, ஜதார்த்தமான கொள்கையாக்க முடியும்? என்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான பதிலை ஜனாதிபதியின் உரை கொண்டிருக்காதது பெரும் ஏமாற்றமாக அமைகிறது. தேர்தல் காலத்தில் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி விட்டு அந்த எதிர்பார்ப்புக்களை அடைவதற்கான திசையை அதிகாரத்திற்கு வந்த பின் காட்டாது விட்டால் ஏமாற்றம் அதிகமாக இருப்பது தவிர்க்க முடியாதது. இந்த விடயத்தில் மாற்றம் அல்ல வழமையே தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் தொடர்பான பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பொறுப்பானவர்களால் அளிக்கப்பட்ட பதில்கள் “உரிமை” என்ற வார்த்தையை தவிர்த்து அளிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. பன்மைத்துவ சமூக, பொருளாதார, அரசியல், புவியியல் கட்டமைப்பில் இன,மத விகிதாசாரமும், சமத்துவமான கலாச்சார, பண்பாட்டு பேணலும் அடிப்படையானவை. இவற்றிற்கு ” நாங்கள்” இனவாரியாக, மொழி,மதவாரியாக செயற்படவில்லை என்று கூறுவது இருபத்தியோராம் நூற்றாண்டில் “சுதேசிய பெரும்பான்மை காலனித்துவ” அணுகுமுறையன்றி வேறில்லை. இதனால்தான் அமைச்சரவை, பிரதி அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள் நியமனத்தில் அரசாங்கம் கடும் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு , எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் சறுக்கியதன் விளைவு. பன்மைத்துவ இலங்கை தேசியத்தில் இன,மத விகிதாச்சாரம் பேணப்படாமல் இனரீதியான, பிரதேச ரீதியான அரசியல் அங்கீகாரம் மறுக்கப்பட்டாமல் இனவாதத்தை எப்படி இல்லாமல் செய்யமுடியும்? பெரும்பான்மை, சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இடையே ஒரு சமத்துவமான உளவியல் சார்ந்த “நாங்களும் அவர்களுக்கு நிகரானவர்கள், அவர்களும் எங்களுக்கு நிகரானவர்கள்” என்ற மனநிலையை எப்படி ஏற்படுத்தமுடியும். இனரீதியான நியமனம் இல்லை என்பது உண்மையில் உரிமை மறுப்பு. தருவதை எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பெரும்பான்மை அழுத்தம். இன விகிதாசார நியமனங்கள் இல்லை என்றால் பெரும்பான்மை முற்றுமுழுதாக நூறுவீத நியமனங்களையும் அல்லது சிறுபான்மைக்கு உரிய விகிதாசாரத்தையும் விடவும் குறைவாக வழங்கிவிட்டு , மிகுதி சிறுபான்மையினர் பங்கையும் பெரும்பான்மை அபகரித்து கொண்டால் இங்கு பேசப்படும் “இனரீதியாக அல்ல” என்பது சமூக அநீதியன்றி வேறென்ன? இது சமூக நீதிக்கு மாறான ஒரு அதிகார பங்கீட்டு முறைமை. இந்த அணுகுமுறை சோஷலிசம் பேசி சிறுபான்மை தேசிய இனங்களை நசுக்குகின்ற ரஷ்ய,சீன அடக்குமுறை மாதிரி. முதலாளித்துவ மேற்குல நாடுகளில் வாழும் பன்மைத்துவ சிறுபான்மை தேசிய இனங்களும், குடியேறிகளும் ரஷ்யா, சீனாவை விடவும் ஒப்பீட்டளவில் அதிக அடிப்படை ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கிறார்கள். பொருளாதாரத்தை மட்டும் முதன்மைப்படுத்தி, மனித உரிமைகளை மறுதலிப்பது சமூகநலன் சார்ந்த அரசியலாக இருக்க முடியாது. சலுகைகளிலும், மேலெழுந்தவாரியான சீர்திருத்த செயற்பாடுகளிலும் இருந்து சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை அரசியல் முற்றிலும் வேறுபட்டது என்பதை அநுர அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அபிவிருத்தியை அதிகாரப்பகிர்வுக்கு அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பதிலீடாக முன் வைக்கின்ற வழக்கமான போக்கே அநுரகுமார குமார அன் கோ அரசியலிலும் வெளிப்படுகிறது. இது பன்மைத்துவ சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கான சரியான, பொருத்தமான அணுகுமுறையல்ல. அபிவிருத்தி, அரசியல் தீர்வு என்பவை ஒன்றிற்கு ஒன்று பதிலீடு அல்ல. மாறாக ஒன்றுக்கு ஒன்று நிரப்பிகள். ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாக இருக்கவேண்டியவை. இணைந்தும், சமாந்தரமாகவும் பயணிக்கவேண்டியவை. மாகாணசபைகளை தற்காலிகமாக தொடர்ந்து பேணுவோம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற தேர்தல் வாக்குறுதிகளை ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கும், பிராந்தியத்திற்கும், சர்வதேசத்திற்கும் ஜனாதிபதி “கொட்டை நீக்கப்பட்ட வெறும் கோதுகளையே ” விட்டுச் சென்றிருக்கிறார். https://arangamnews.com/?p=11483
-
மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!
மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை! வட தமிழீழம் :- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக ஏ- 9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக குறித்த இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் கொண்டுவந்தமையே காரணமென தெரியவந்துள்ளது. https://www.thaarakam.com/news/a8b993f3-67fc-4cb6-a481-af182b53c879
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2024 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழ அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமென உறுதிகொள்ளும் புரட்சிகரநாள். தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து, எமது மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை ஒவ்வொருவரது நெஞ்சத்திலும் நிறுத்தி, தமிழ்த்தேசியம் என்ற உயிர்மைக் கருத்தியலினை எமது வாழ்வியல் நெறியாகவும் அரசியல் வழியாகவும் கொண்டு, தமிழீழத் தனியரசமைக்கும் விடுதலைப்பயணத்தில், உறுதியுடன் போராடுவோம் என எழுச்சிகொள்ளும் தமிழீழத் தேசியநாள். தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்கு எடுத்துச்சென்ற எமது வீரர்களைப் பெற்றெடுத்தோரும் அவர்தம் குடும்பத்தினரும் என்றும் போற்றுதற்குரியவர்கள். தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்தழிக்கப்பட்டு, இறந்தவர்களை நினைவுகூருதல் தொடர்பான அனைத்துலகச் சட்டங்களைப் புறந்தள்ளி, சுதந்திரமாகத் தமிழ்மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தமுடியாத அளவிற்குத் தடைகள் உள்ளபோதிலும் ஆண்டுதோறும் இம்மாவீரச் செல்வங்களுக்குச் சுடரேற்றி நினைவேந்தி வருகின்றார்கள். எமது தாய் மண்ணில் நாம் தன்னாட்சி உரிமையுடன் அரசாட்சி செய்த சூழமைவில் அன்னிய ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக, பிரித்தானியர் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர்;, தமிழர் தேசமும் சிங்கள தேசமும் இணைக்கப்பட்டு, 1948 இல் சிங்களவர்களுக்குச் சுதந்திரம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள், அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களிற்கும் உள்ளாக்கப்பட்ட சூழமைவில், தமிழினம் தம் உரிமைகளுக்காகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது. சிங்கள அரசுகளால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கூடாக எமது தாயக நிலப்பகுதிகளைப் படிப்படியாகப் பறித்தெடுத்து, முழு இலங்கைத்தீவினையும் பௌத்த சிங்கள நாடாக்கும் தமது இனவெறிக்கோட்பாட்டின் உச்சமாக, அடிப்படை உரிமைகள் மறுதலிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னாட்சி அரசியல் உரிமை கோரி தமிழ் மக்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்களை, சிங்கள இனவாத அரசுகள் ஆயுத வன்முறையூடாகக் கொடூரமாக அடக்கியொடுக்கியது. முப்பதாண்டுகால அரசியல்ரீதியான அறவழிப்போராட்டங்கள் அனைத்தும், சிங்கள இராணுவப் பலத்தால் நசுக்கப்பட்ட நிலையில் பறிக்கப்பட்ட எமது அரசியல் உரிமைகளை நிலைநாட்டி, எமது தாய்மண்ணைப் பாதுகாத்து, தமிழின அழிப்பினைத் தடுத்துநிறுத்தி, எமது மக்களைப் பாதுகாக்கவே ஆயுதமேந்திப் போராடும் நிலமைக்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். தமிழீழத்தினை வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தினை ஆரம்பித்த எமது இயக்கம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, தமிழ்மக்களது அரசியலைத் தீர்மானிக்கும் ஒரே சக்தியாக, தமிழீழமக்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு பெரும் தேசியவிடுதலை அரசியற்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. போர்க்களங்களில் எமது இயக்கம் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து, உலகின் தலைசிறந்த ஓர் விடுதலை இராணுவக்கட்டமைப்பு என்ற சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதேவேளை, காலத்திற்குக்காலம் வாய்ப்புகள் ஏற்பட்ட போதெல்லாம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாம் பின்நின்றதில்லை. திம்புவில் தொடங்கி நோர்வே வரையிலுமான அனைத்துச் சமாதான முயற்சிகளிலும் நாம் பங்குகொண்டு, நிரந்தரமான ஓர் அரசியற் தீர்வைக் காண்பதற்கு நேர்மையாக முயன்றோம் என்பதனைச் சர்வதேசச் சமூகம் நன்கறியும். பேச்சுவார்த்தைகள், பலசுற்றுக்களாக நடைபெற்ற போதும் சிறிலங்கா அரசானது எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வைத்தர முன்வராது இழுத்தடிப்புச் செய்து இனவழிப்புப் போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்தியது. இதன் விளைவாகப் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கப் பெரும்போரை மேற்கொண்டு இந்நூற்றாண்டின் பேரவலமான ஓர் இன அழிப்பு நடைபெற வித்திட்டது. போர் அழிவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, எமது இயக்கம் பெரும் முயற்சிகளைச் செய்தபோதும் உலகநாடுகள் பாராமுகமாக இருந்தன. தமிழினத்துக்கு எதிரான வன்முறையில் தீவிரம்காட்டி, தமிழ்மக்களைக் கொன்றொழித்த போரை நிறுத்துமாறு, தமிழ்மக்கள் தமது சக்திக்குட்பட்டு உலகநாடுகளெங்கும் போராடியபோதும் இந்த உலகம், எமது மக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றத்தவறிவிட்டது. இந்நிலையில், நாளாந்தம் ஆயிரக்கணக்காகக் கொன்றொழிக்கப்பட்டுக்கொண்டிருந்த எமது மக்களையும் காயங்களுக்கு இலக்காகி மருத்துவ வசதியின்றி ஒவ்வொரு நொடியும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களையும் பாதுகாப்பதற்காகவே எமது ஆயுதங்களை மௌனித்தோம். அதன் பின்னரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன அழிப்பு இன்றுவரை தொடர்கின்றது. தமிழீழத்தில், சிங்கள இராணுவத்தால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் பூர்வீக நிலப்பரப்பு, இன்னும் உரியவர்களிடம் கையளிக்கப்படாதுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து மகாவலித்திட்டம், தொல்பொருள் ஆய்வுத்திணைக்களம், வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் என்ற போர்வையில் சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தித் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திவருகின்றது. சிங்கள அரசானது தமிழ் மக்களின் பொருளாதார வளங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டிவருவதுடன், தொடர்ந்தும் எம்மக்களைச் சிங்களப் பேரினவாதத்திடம் கையேந்தும் நிலையிலேயே வைத்துள்ளது. இதனால், தமிழ்மக்கள் அகதிகளாக அடிப்படை வசதிகளற்றநிலையில் வறுமையில் வாழ்ந்துவருகின்றனர். தமிழீழ மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கச் சாதி, மதம் மற்றும் பிரதேசவாத முரண்பாட்டுக் கருத்துக்களை உருவாக்கிவருவதோடு, எமது இளைய தலைமுறையினரைச் சிதைக்கும் நோக்குடன் போதைப்பொருள் பாவனை, கலாச்சாரச் சீரழிவு மற்றும் வன்முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் எமது இளையதலைமுறையினரின் கல்விவளர்ச்சியினைத் தடுக்கும் மூலோபாயத்தினைச் சிறிலங்கா அரச கட்டமைப்புகள் முன்னகர்த்திவருகின்றன. சிறிலங்காப் பேரினவாத அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட படையினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாத்து வருவதுடன் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானங்களையும் இப்புதிய அரசும் நிராகரித்துவருகின்றது. இதேவேளை, பல ஆண்டுகளாக அரசியற்கைதிகளாகவுள்ள எம்மவர்களை விடுதலைசெய்யாது, தொடர்ந்தும் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்கள். இதற்கு நீதிகேட்டு, எமது மக்கள் சர்வதேசச் சமூகத்திடம் குரல்கொடுத்து வருகின்றார்கள். காணி அபகரிப்பு, பௌத்தமயமாக்கல், அரசியற்கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்களெனப் பல வழிகளிலும் உலகத்திடம் நீதிவேண்டிப் போராடிவருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில் முடிவுகள் ஏதுமின்றி, அவர்களது உறவுகளும் சாவடையும் அவலநிலை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் போராளிகளின் நிலைமைகளும் துன்பத்திற்கிடமாகவே உள்ளதோடு, சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பலர் சந்தேகத்திற்கிடமான முறையிலும் சாவடைந்து வருகின்றனர். இதேவேளை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பலரும் பாதுகாப்பின்றிச் சொல்லொணாத் துன்பங்களோடு வாழ்ந்து வருகின்றார்கள். அன்பார்ந்த தமிழீழ மக்களே! சிங்கள மக்களின் மகாவம்ச மனநிலையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கமுடியாது. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது. தென்னிலங்கை அரசியற்களத்தில், அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்கவேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை. இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் தெளிவான நிலைப்பாடாக இருந்து வருகிறது. ஈழத்தமிழர்களைப் போராட நிர்ப்பந்தித்த அடிப்படைக் காரணங்களில் சாதகமான மாற்றம் நிகழாத ஒரு சூழலிலேயே, பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியொன்று பெரும்பாண்மை வாக்குகளோடும் இன்று ஆட்சிப்பீடமேறியுள்ளது. தோல்வி மனப்பான்மையும் பொருளாதார சுமைகளும் ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினரை மாயவலைக்குள் வீழ்த்தியுள்ளது. விடுதலையை நேசிக்கும் எமது மக்கள், சதிவலைகளிலிருந்து மீண்டெழுந்து சுதந்திர தேசத்திற்கான வடம் பிடித்து இன விடுதலைக்கு வலுச்சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு சொல்லும் பாடமும் இதுவே. இனவாதச்சிங்களத் தலைமைகளினால் 75 ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பைச் சந்தித்துவரும் தமிழீழ மக்கள், பௌத்த சிங்கள மேலாண்மைக் கருத்தியலையும் அதன் வரலாற்றுச் சமூகப் பரிமாணங்களையும் வாழ்வியல் அனுபவங்களோடு கண்டறிந்தவர்கள். தற்போது பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியொன்று தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று அனுரகுமார திசாநாயக்க தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளது. இது சிங்கள மக்கள் விரும்பிய அரசியல் மாற்றம் ஒன்றின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழர் இனப்பிரச்சினை சார்ந்து, அடுத்து என்ன மாற்றம் நிகழுமென நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஆனால், புதிய அரசை அமைத்திருக்கும் கட்சிகளின் கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணி பிரதான கட்சியாகும். இக் கட்சியின் கடந்த கால அரசியற் பயணமானது தமிழின அழிப்பை முதன்மைப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. தற்போதும் இலங்கையர் என்ற ஒற்றைச்சொல்லில் தமிழர் அடையாளத்தைக் கரைத்திடும் கருத்தியலே முன்னகர்த்தப்பட்டு வருகிறது. இந்த வேளையில், 1983 இன் யூலைப் படுகொலை, வடக்குக் கிழக்குப் பிரிப்பு, சுனாமி அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பின் முடக்கம், இனவழிப்புப் போருக்கான இராணுவ ஆட்சேர்ப்புப் போன்ற கடந்தகாலத் தமிழின விரோதப்போக்கினையும் நாம் மறந்துவிடலாகாது. எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ்நாட்டு உறவுகளே! தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தாய்மடியாகத் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்களே என்றும் இருந்துவருவதுடன், ஈடிணையற்ற ஈகங்களைத் தமிழீழ விடுதலைக்காகத் தமிழினப்பற்றுடன் செய்துவருகின்றீர்கள். இவ்வையகத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தாயகமாகத் தமிழ்நாடே இருக்கிறது. எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும் தொல்லியலையும் அறிவார்ந்து வளர்த்துக்காக்கும் ஆற்றல்வளம், உங்களிடமே ஒப்பீட்டளவில் கூடுதலாகவுள்ளது. கட்டமைப்புசார் தமிழின அழிப்புக்கு எதிராக சுயாதீனச் சர்வதேச விசாரணைக்கு இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும்வகையில், அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகவும் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறு வேண்டிநிற்கின்றோம். தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு அரணாக விளங்கக்கூடிய ஒரே நாடு தமிழீழத் தேசமாக மட்டுமே இருக்கமுடியும். தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு உறவுகளுக்கு, எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது அன்பிற்குரிய இளையோர்களே! தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கமைவாக, தேச விடுதலைப் பணியினைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் வாழ் இளையவர்களின் செயற்பாடுகளை நாம் பேரன்போடு உளமார வாழ்த்துகின்றோம். நிகழ்ந்துவரும் உலகின் புவிசார் அரசியல் மாற்றங்களை மிகத்துல்லியமாக அவதானித்து வரும் இளையவர்களின் செயற்பாடுகள் இன்னும் விரிவு படுத்தப்படவேண்டும். நீங்கள் வாழுகின்ற ஒவ்வொரு நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் தமிழின அழிப்பிற்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவருவதற்கு விவேகத்தோடு வேகமாகச் செயற்படவேண்டும். அதேவேளை எமது மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் போன்ற தேசியப்பண்புகளைப் பேணிக்காத்து, இன அடையாளத்தினை இழந்துவிடாமல் பாதுகாக்கும் பாரிய பொறுப்பும் இளையவர்களாகிய உங்களிடமே தங்கியுள்ளது. தமிழர்களது வரலாற்று அடையாளமாகிவிட்ட எமது தேசியத்தலைவர் அவர்களது தத்துவக்கோட்பாட்டின் வழி நின்று, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை முன்னகர்த்திச்செல்வீர்களென உளமார நம்புகின்றோம். எமது அன்பான மக்களே! எமது மக்களின் இலட்சி உறுதியினை உடைக்க முடியாத எதிரிகள், தம்மால் முடிந்த அனைத்து வகையான சூழ்ச்சிகளையும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள். தமிழ்த்தேசியம் எனும் கோட்பாட்டினை அழிப்பதற்காக எதிரிகள், அருவருப்பான உத்திகளைக் கையாண்டு வருகின்றார்கள். இதனூடாகத் தமிழீழ மக்களின் தேசிய ஒருமைப்பாட்டு அடையாளத்தினைச் சிதைத்து, மெதுவாகப் பௌத்த சிங்கள ஒற்றையாட்சிக்குள் எம்மை முடக்கிவிடும் அபாயத்தினை எமது மக்கள் கண்டுணர்ந்து, எதிர் காலத்தில் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டுமென இப்புனித நாளிலே உரிமையோடு வேண்டிநிற்கின்றோம். உலக அரங்கில் இன்று ஏற்பட்டுவரும் சில மாற்றங்கள், எமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைகின்றது. பாலஸ்தீன தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் நாட்டுப் படைகளது இன அழிப்பு நடவடிக்கைகள் அனைத்துலக நீதிமன்றத்தினால் அண்மையில் விசாரிக்கப்பட்டு, இஸ்ரேல் நாட்டு அரசதலைவருக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கும் பிடியாணை வழங்கப்பட்டிருப்பது, நீதியின்பால் உலகம் இன்னும் இயங்குவதைக் காட்டிநிற்கின்றது. இவ்வாறான முன்னுதாரணங்களோடு சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சனையையும் அணுகித் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பிற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம். தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழ்நாடு எனும் மூன்று தளங்களிலும் தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுக்கும்பொழுது விரைவாக எமது இலட்சியத்தினை வென்றெடுக்கமுடியும். அன்பிற்குரிய மக்களே! தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களே! இதுவரை காலமும் இடைவிடாது நீங்கள் வழங்கிவந்த ஆதரவு என்றும் பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்தும் எமது மாவீரர்களின் இலட்சியக்கனவினை நிறைவேற்ற உறுதுணையாக நிற்கவேண்டுமென இப்புனித நாளிலே கேட்டு நிற்கின்றோம். தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மூலோபாயச் சிந்தனையின் அடிப்படையில், பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளிலிருந்து அடிமைத் தடைகளை உடைத்தெறிந்து, தமிழீழ அரசை நிறுவும் ஆற்றலை, எமது மாவீரர்களின் ஈகங்கள் எமக்குக் கொடுத்திருக்கின்றன. சவால்கள் மிகுந்த காலப்பகுதியில் மண்டியிடா வீரத்துடன் களமாடிய மாவீரர்களின் உளவுரணையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற விடுதலை உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://www.thaarakam.com/news/dfe683b1-62fe-4369-8e41-b862da96b335
-
இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தமும்: பிரான்ஸ் பின்னணியும்! லெபனானில் ஹிஸ்புல்லா, பலஸ்தீனத்தின் காசா என்று இரண்டு முனைகளில் போரை நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல் தற்போது ஹிஸ்புல்லா இயக்கத்துடன் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. அதுவும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த போர் நிறத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எடுத்த நகர்வுகள் இப் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று கூறினாலும் இதன் பின்னால் உள்ள காரண - காரியங்கள் குறித்து கேள்விகள் - சந்தேகங்கள் இல்லாமலில்லை. பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் போரை நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல், லெபனானிலும் போரைத் தொடங்கியதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். தாக்குதலைத் தீவிரப்படுத்தி தரை வழியாகவே தெற்கு லெபனான் பகுதியை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. இதனால், தெற்கில் வசித்த லெபனான் மக்கள், வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இப் போர், மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகப்படுத்தியது. இதனால், பல நாடுகளுக்கும் போர் பரவும் அபாயம் உருவானது. மத்தியக் கிழக்கில் முழு அளவிலான போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் உலக அளவில் ஏற்பட்டது. இப் பின்னணியில்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் சர்வதேச அளவில் விஞ்சியுள்ளன. ஏனெனில், காஸாவில் போர் தொடர்கிறது. அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்படாமல் ஹிஸ்புல்லாவுடன் மாத்திரம் போரை நிறுத்தியதன் அரசியல் லாபங்கள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் பிபிசி அரபு சேவை செய்தியாளர் கேரைன் டோர்பி, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இயங்கங்களை இஸ்ரேல் அணுகிய விதத்தில் வேறுபாடு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். லெபனானில் போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் எட்டியதற்கும், காஸாவில் ஹமாஸுடன் அதை எட்ட முடியாததற்கும் இடையே இருக்கும் ஒரு முக்கிய காரணம், இரண்டுக்குமான அரசியல் சூழல் என்கிறார் பிபிசி அரபி மொழிக்கான ஜெருசலேம் செய்தியாளர் முகன்னத் டுடுன்ஜி. அதேநேரம், லெபனானில் உள்ள பல மதரீதியிலான மற்றும் அரசியல் ரீதியிலான குழுக்களில் ஹிஸ்புல்லா இயக்கம் முக்கியமானது. அதோடு, அனைத்து லெபனான் மக்களும் இஸ்ரேலுடனான அதன் மோதல் குறித்து ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால், காஸாவின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அங்கு, ஆளும் அரசியல் சக்தியாகவும், இராணுவ சக்தியாகவும் ஹமாஸ் இருக்கிறது. அதோடு, இதேபோன்ற இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட வேறு சில பிரிவுகளால் ஆதரிக்கப்படுகிறது என்ற கருத்துக்களும் உண்டு. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் ஆகிய இயங்கங்களை இஸ்ரேல் எவ்வாறு அணுகியது என்பதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. காஸா தற்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஒரு பகுதி. ஆனால், லெபனான் தனிப்பட்ட இறையாண்மை கொண்ட ஒரு நாடு. முன்பு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், ஹிஸ்புல்லா மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் கடும் எதிர்ப்புகளால் அது பின்வாங்க நேரிட்டது. எவ்வாறாயினும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா பேர் நிறுத்தத்தை அமெரிக்காவும், பிரான்ஸும் இணைந்து சாத்தியப்படுத்தியிருக்கின்றன. இதன் பிரகாரம் இஸ்ரேல் - லெபனான் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லையாகக் கருதப்படும் ப்ளூ லைன் மற்றும் லிடானி நதிப் பகுதிகளிலிருந்து 60 நாட்களுக்குள்ளாக படைகளை இரு தரப்பும் திருப்பிப் பெற வேண்டும். மேலும், தெற்கு லெபனானில், அந்த நாட்டு இராணுவமும், ஐ.நா-வின் அமைதி காக்கும் படையும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல், அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று, போர் நிறுத்த நடைமுறைகளைக் கண்காணிக்கும். ஒப்பந்தம் மீறப்படும் பட்சத்தில், இந்தக் குழு நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. லெபனான் பிரதமர் நஜீப் மிகாடி, தெற்கு லெபனானில் இராணுவ வலிமையை அதிகப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் லெபனானில் புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்புவதாகவும் கூறியிருக்கிறார். அதேநேரம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவோ, போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஹிஸ்புல்லாவோ, அவர்களது கூட்டாளிகளோ மீறினால், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஆகவே, இந்த ஒப்பந்தத்தை எந்தத் தரப்பு மீறினாலும், மீண்டும் அங்கு போர் வெடிக்கும் அபாயங்கள் இருப்பது நன்கு தெரிகிறது. இஸ்ரேலிடம் மிகப்பெரிய இராணுவ திறன்களும் வான்வெளியில் மேலாதிக்கமும் இருந்தபோதிலும், லெபனானில் தரைப்படை நடவடிக்கையில் அவதிப்பட்டதை மறுக்க முடியாது. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த சண்டையின் முடிவிலும்கூட, தெற்கிலுள்ள நகரங்களைக் கைப்பற்றுவதில் இஸ்ரேல் தோல்வியடைந்திருந்தது என்பது உண்மை. ஹிஸ்புல்லாவின் ரொக்கெட் ஏவுதிறனைச் செயலிழக்க வைக்க இஸ்ரேலினால் முடியவில்லை. ஹிஸ்புல்லாவின் தொடர் தாக்குதல்கள் இஸ்ரேலில் போர் வியூகங்களில் பல குழப்பங்களை உருவாக்கிய அதேநேரம் காஸா மோதலில் அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டும் என்ற நோக்கங்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குக் காரணமாக இருந்தது என்ற முடிவுக்கு வரலாம். ஹமாஸுடன் ஒப்பிடுகையில், ஹிஸ்புல்லா அதிக இராணுவ திறன்களைக் கொண்ட ஒரு வலிமையான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. ஆகவே, இஸ்ரேல் அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற அவதானிப்புகளும் உண்டு. எவ்வாறாயினும் இந்தப் போர் நிறுத்தம் அழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றியுள்ளது என்பதே உண்மை. https://oruvan.com/sri-lanka/2024/11/29/israel-hezbollah-ceasefire-and-the-french-background
-
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார்
“விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பி விட்டார் என மூன்று மாவீரர்களின் தாயொருவர் கண்ணீருடன் கவலைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை 6.55 மணியளவில் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா? என வினவினார் எனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், புதன்கிழமை (27) அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள் என்றார். நானும் சம்மதம் தெரிவித்தேன் மாவீரர் நாளன்று 6.05 மணிக்கு விளக்கேற்றும் நேரம் நான் சரியாக 5 மணிக்கு கனகபுரம் துயிலுமில்லத்திற்கு சென்றேன். அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து நாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம் எனத் தெரிவித்து என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது மூன்று மாவீரர்களின் தாயான என்னை அவர்கள் அவமதித்துவிட்டனர். சிறிதரன் எம்.பி யின் அழைப்பிற்கு அமைய, முழங்கால் வரை தண்ணீரால் நிரம்பியுள்ள எனது வீட்டுக்குச் செல்லும் பாதையால் சிரமத்திற்கு மத்தியில் பிரதான வீதிக்கு வந்து வாகனம் ஒன்றில் மாவீரர் நாளன்று சரியாக 5 மணிக்கு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றேன். ஆனால் அங்கு நான் அவமதிக்கப்பட்டேன். இயக்கம் ஒரு மாவீரரின் தாயை இவ்வாறு நடத்தியது கிடையாது. இந்த மண்ணுக்காக நான் எனது மூன்று பிள்ளைகளை கொடுத்திருக்கிறேன்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=300981
-
மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு
மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு November 29, 2024 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித்த நேற்று (28) நிராகரித்துள்ளார். சந்தேக நபர்களான “கோஸ்தர்” அல்லது “மோரிஸ்” என அழைக்கப்படும் செல்வராசா கிருபாகரன் மற்றும் “தனுஷ்” என அழைக்கப்படும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சட்ட பிரதிநிதிகளான சுரங்க பண்டார மற்றும் அசித்த விபுலநாயக்க ஆகியோர் பிணை கோரியிருந்தனர். எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிணைக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தார். சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், வழக்கை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி செய்த நீதிபதி, 2025 ஏப்ரல் 28, 29 மற்றும் 30 திகதிகளில் சாட்சியங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டார். அப்போது அமைச்சராக இருந்த சிறிசேனவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு சந்தேகநபர்கள் மீதும் சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், ஐவர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/hc-denies-bail-for-ltte-suspects-in-2008-attempt-on-sirisenas-life/
-
உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை
மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பி வைத்ததன் காரணம் என்ன? Gayan AbeykoonNovember 29, 2024 அம்பாறை மாவட்டத்திலுள்ள மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் அகப்பட்டு 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள – மாவடிப்பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று உழவு இயந்திரமொன்று வெள்ளத்தில் கவிழ்ந்து மூழ்கிய சம்பவத்தில் உழவு இயந்திர சாரதி, அவரது உதவியாளர் மற்றும் மத்ரஸா மாணவர்கள் 8 பேர் பலியாகியிருந்தனர். இந்த உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி, உதவியாளர் அடங்கலாக 13 பேர் பயணம் செய்திருந்தனர். அவர்களில் ஆறு மாணவர்கள், உழவு இயந்திர சாரதி, உதவியாளர் ஆகிய 8 பேர் மரணமடைந்திருந்தனர். உயிரிழந்தோரின் உடல்களில் எட்டாவது உடல் நேற்றுக்காலை மீட்கப்பட்டது. முழுநாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவம் தொடர்பாக நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகம் ஊடகங்களுக்கான விபரங்களைத் தெரிவித்துள்ளது. நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாவது: “எங்களுடைய மத்ரசா நிர்வாகத்தினரும், அதிபர் உட்பட அனைவரும் தீர்மானித்ததற்கு அமைய, அனர்த்தம் ஒன்று ஏற்படுகின்ற பட்சத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கக் கூடிய போதிய வசதிகள் எமது மத்ரசாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்களை அங்கு தொடர்ந்து வைத்திருந்து பராமரிப்பது என முடிவு செய்திருந்தோம். ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக எமது காஸிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் மாணவர் விடுதி, வகுப்பறைகள், தொழுகை அறைகள் என்பன மழைநீரினால் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் இரண்டு மாணவர்கள் இந்நிலைமை காரணமாக விபத்தை அங்கு சந்திக்க வேண்டி ஏற்பட்டது. மலசலகூட குழிகள் கூட நிரம்பிக் காணப்பட்டன. இதனால் அடிப்படை வசதிகளைக் கூட மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலைமை எமக்கு ஏற்பட்டது. அதனால் மீண்டும் எங்களுடைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கூடி முடிவுகளை எடுத்தோம். மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் கல்லூரிக்கு விடுமுறை வழங்கி, மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தோம். இதற்காக பிரத்தியேகமாக ஒரு பஸ்வண்டியினை வாடகைக்கு அமர்த்தி மாணவர்களைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். ஆனால் சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற போது, காரைதீவில் இருந்த பாதுகாப்புப் படையினர், பஸ்வண்டியில் அப்பாதையூடாக செல்ல முடியாதுள்ளதாகவும், உழவு இயந்திரத்தின் ஊடாகவே மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாகவும் கூறினர். அதனையடுத்து மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்புவதற்கு நாங்கள் சம்மதித்தோம். இதனை மாணவர்களுடைய பெற்றோருக்கும் அறிவித்தோம். தாங்கள் மறுமுனையில் நிற்பதாகவும், மாணவர்களை அனுப்புமாறும் பெற்றோர் கூறியதன் பின்னரே நாங்கள் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பிவைத்தோம். ஆனால் அந்த உழவு இயந்திரம் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவே உண்மை நிலைமையாகும்”. இவ்வாறு நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு முன்னதாக, மத்ரஸா மாணவர்கள் 13 பேரும், உழவு இயந்திர சாரதி, நடத்துனர் ஆகிய இருவர் உட்பட 15 பேர் உழவு இயந்திரத்தில் பயணித்ததாக மத்ரஸா நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து இடம்பெற்றதும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 7 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து உடனடியாக உயிருடன் காப்பாற்றப்பட்டிருந்தனர். எஞ்சியோரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து நேற்றும் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 8 ஆவது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்ட உடல்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆற்றுப் பகுதியானது முதலைகள் அதிகம் நடமாடும் இடமாகும். எனினும் உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்துமே மீட்கப்பட்டு விட்டன. இதேவேளை மாவடிப்பள்ளியில் நீரில் மூழ்கியோரைத் தேடும் பணியின் போது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன. அஷ்ரப் கான்… https://www.thinakaran.lk/2024/11/29/featured/99129/மாணவர்களை-உழவு-இயந்திரத்/
-
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்! November 29, 2024 07:06 am வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின் அமுலுக்கு வரும் வகையில் இவ் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. https://tamil.adaderana.lk/news.php?nid=196577
-
க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!
உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு November 28, 2024 10:28 am சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சையை நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். “நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை பரீட்சையை நடத்த மாட்டோம். எனவே 6 நாட்களுக்கு பரீட்சை இல்லை. பின்னர் மீண்டும் டிசம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை பரீட்சை நடைபெறும். அத்தோடு, டிசம்பர் 4-ம் திகதிக்கான பரீட்சையே அன்று இடம்பெறும். இதுவரை வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சையே அன்றைய தினம் நடத்தப்படும்" என்றார். பாடங்களை பொறுத்தமட்டில் காலையில் இரசாயனவியல் பகுதி-1 , தொழில்நுட்பம் பகுதி -1 , நாடகம் மற்றும் கலைக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் பகுதி-1, மாலை அரசறிவியல் பகுதி-1 ஆகிய பாடங்களே டிசம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு * நவம்பர் 27 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 21 நடைபெறும் * நவம்பர் 28 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 23 நடைபெறும் * நவம்பர் 29 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 27 நடைபெறும் * நவம்பர் 30 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 28 நடைபெறும் * டிசம்பர் 2 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 30 நடைபெறும் * டிசம்பர் 3 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 31 நடைபெறும் இதேவேளை, பொது அறிவுப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும், அன்றைய தினம் புதிய நேர அட்டவணை வேறு நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196533