Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. பொன்னெழில் பூத்தது புதுவானில் . ........! 😍
  2. அனைவருக்கும் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் . ........! 😍
  3. இந்த அயர்லாந்து ஓமானை கோமாவுக்கே அனுப்பி விட்டது ........! 😂
  4. pootedsrnSum5lctli873fhm1i2729aagt u7ac2i5l7g4190cci97ua02l6 · தமிழக அரசு - நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு ரூ.1,000-மும், மதுரை சோமுவுக்கு ரூ.1,000-மும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, நேர்மையின் சிகரமாகவே வாழ்ந்து, வறுமையில் வாடிக்கொண்டிருந்த கக்கன் அவர்களுக்கு மாதம் ரூ.500 மட்டுமே நிதி உதவி வழங்கியது. சிவாஜி கணேசன் தன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கக்கனுக்கு அளித்ததுடன், சேலம் நேரு கலையரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகம் நடித்து கிடைத்த தொகை முழுவதையும் கக்கனுக்கு நிதியாக வழங்கினார். அந்த அரிய புகைப்படம் இதுதான். முகநூல் பதிவு -பிரசாந்த் ......!
  5. இம்முறை பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது ........அவை சிங்கம் , புலி , கரடி என்று ஒன்றையும் விடாமல் கடித்துக் குதறுகின்றன . ........!
  6. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ… பாதமோ… ஆடை காலின் நிகலோ ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளையல் வானவில் நிறங்களே காதலே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் .........! --- உருகி உருகி போனதடி ---
  7. வெற்றி பெற்ற மாமனுக்கு .......... சரோஜாதேவி & T. K ராமச்சந்திரன் .......! 😍
  8. USA நெதர்லாந்தை வென்று விட்டது .......!
  9. விளையாட்டு வீராங்கனைகளுக்கும் பயிற்றுனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் ........! இணைப்புக்கு நன்றி கந்தப்பு ......!
  10. Jino Sivaji ·seropnodtShh16i 132mf866cf6,1mgiiuéftrr0h:e9v2ih3h1fc4 g7410 · பைசாவின் சாய்ந்த கோபுரம் ஏன் சாய்ந்துள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கி.பி 1173 இல் 3 மீட்டர் ஆழத்திலிருந்து கட்டுமானம் தொடங்கியது, அதன் மேல், அவர்கள் சுவர்களைக் கட்டத் தொடங்கினர். கட்டிடம் மூன்றாவது தளத்தை அடைந்தபோது, அது சாய்ந்து கொண்டிருந்தது. மணல் மற்றும் வண்டல் மண்ணில் 3 மீட்டர் ஆழமான அடித்தளத்தில் கட்டப்பட்ட 14,500 டன் கோபுரத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நேரத்தில் கட்டுமானத்திற்கு முன் ஜியோடெக்னிக்கல் ஆய்வுகளை கற்பனை செய்து பாருங்கள் . சரிவைக் கண்டறிந்த பிறகு, அக்கால பொறியாளர்கள் மீதமுள்ள தளங்களின் சுவர்களைக் கட்டினார்கள், இதனால் மூழ்கும் பக்கத்தில் தரையின் உயரம் மறுபக்கத்தின் உயரத்தை விட அதிகமாக இருந்தது, இதனால் சாய்வின் கோணத்திற்கு ஈடுசெய்யப்பட்டது. உண்மையில் கூடுதல் எடையின் காரணமாக மற்ற பக்கத்துடன் ஒப்பிடும்போது ஏற்கனவே மூழ்கும் பக்கத்தில் உள்ள அடித்தளங்களின் அதிக வீழ்ச்சியின் காரணமாக கோபுரம் இன்னும் சாய்ந்தது. கோபுரம் இடிந்து விழாமல் இருப்பதற்கும், நான்கு முறை நிலநடுக்கங்களைத் தாங்குவதற்கும் அமுக்கப்பட்ட களிமண் மண்ணே காரணம். இருப்பினும், இந்த வகை நிலத்தில் அது அப்படியே இருந்தால், இந்த ரத்தினம் இறுதியில் சரிந்துவிடும். எனவே நவீன பொறியியலில் "விளையாட" நேரம் வந்தது. நவீன பொறியாளர்கள் கோபுரத்தின் ஈர்ப்பு மையத்தை கணக்கிட்டனர், மேலும் கோபுரம் 5.44 டிகிரிக்கு மேல் சாய்ந்தால் இடிந்து விழும் என்று கணக்கீடுகள் முடிவு செய்தன. 1990ல் பழுதுபார்ப்பதற்காக கோபுரம் மூடப்பட்டது. அவர்கள் 40 மீட்டர் ஆழத்தில் 361 குழிகளை தோண்டி, 90 டன் கான்கிரீட்டை இந்த துளைகள் மூலம் மண்ணில் செலுத்தினர். அடித்தளத்தின் அடிப்படையில், ஸ்லாப்பின் கீழ் பைலிங்ஸ் செய்யப்பட்டன. இது நிலையற்ற மண் அடுக்கு வழியாக ஊடுருவி நெடுவரிசைகளை வைப்பது போன்றது மற்றும் ஸ்லாப்பை சமமாக நிலையானதாக வைத்திருக்க மண்ணின் ஆழமான அடுக்கில் "நங்கூரம்" வைப்பது போன்றது. அடுத்து, கோபுரத்தின் குறைந்த மூழ்கிய பக்கத்திலிருந்து மண் அகற்றப்பட்டது, இதனால் அது அந்தப் பக்கத்தில் மூழ்கி அதன் சாய்வை அசல் நான்கு டிகிரிக்கு குறைக்கும். அவர்கள் கோபுரத்தை செங்குத்தாக செய்திருக்கலாம், ஆனால் அதன் சாய்வு காரணமாக அதன் புகழ் மற்றும் சுற்றுலா மதிப்பை இழக்க அவர்கள் விரும்பவில்லை. மேலும் சாய்ந்துவிடாமல் 300 ஆண்டுகள் தாங்கும் என்று உறுதி செய்த பிறகு, கோபுரம் பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது......!
  11. RS Vijayakumar ·edrospntSorm91i9719 8370i5,0me8ulm4lr6cf11f003:h14m780v é536 · இணையத்தில் பார்த்த புகைப்படம்... இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது. ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான். 2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான். நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது. இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது. இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது... இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்.. இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு. உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்....!
  12. oroensptSd7170gamt7i3hi790ti1726f 3fa139lt09lg0l77h9i997uf6u · ராவணனை அழித்த பிறகு., போா்க்களத்தில் ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தாா்..!! அப்போது ஒரு பெண்ணின் நிழல் தொிந்தது..!! அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்., அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை., ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புாிந்து கொண்டார்..!! உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்..!! “நீ யாரம்மா?” என்றாா்....!! “நான் ராவணனின் மனைவி மண்டோதாி..!! என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!! ஆனால்., அவரையே ஒருவா் கொன்று விட்டார் என்றால்., அவாிடம் ஏதோ உயா்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்..!! மேலும்.. க்ஷத்திரிய குல தா்மப்படி., கணவனை வென்ற/இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன்., என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..!! ஆனால் நீ என்னிடம் வரவில்லை..!! ஆச்சாியப்பட்டேன்..!! இங்கே நீ., என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது., உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்..! என் கணவாிடம் கூட., “ரகு குலத்தில் உதித்த ராமன்., மனிதன் அல்ல..!! உலகைக் காக்கும் பரம்பொருள்..!! விஸ்வரூபன்..!! அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது..!! அவன் வேதத்தின் சாரம்..!! ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்..!! அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்..!!” “அவா் கேட்கவில்லை..!!” “உன் வெற்றிக்கு காரணம்., என் கணவாிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்..!!” “அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை..!!” “அதனால் தான் நீ வென்றாய்.,” என்றாள்.....!! அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புாிந்தாா்.....!! தன் சுயவடிவான “நாராயணனாக” அவளுக்கு “விஸ்வரூப தாிசனம்” கொடுத்தாா்.....!! ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதாி.....!! அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது., மண்டோதாி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு., ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்..!! அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்., கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ‘நாராயணின் விஸ்வரூப தரிசனம்’ பெற்றாள்..!! உயா்ந்த ஜாதியில் பிறந்தவன்., வசதியில் உயா்ந்தவன்., அரச பதவியில் இருப்பவன்., என இறைவன் பாா்ப்பதில்லை..!! நம்முடைய பயபக்தி., அன்பு., ஒழுக்கம்., இறைச்சேவை., அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவையே இறைவனின் அருள் தாிசனம் பெறும் வழிமுறையாகும்..!! ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்., தன் ஒழுக்க குணத்தால்., ‘இராவணனின் மனைவி’ மண்டோதாிக்கு ஸ்ரீராமபிரானின் விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது...!!! ஸ்ரீ ராம ஜெயம்..!! ஸ்ரீ ராம ஜெயம்..!!! ஸ்ரீ ராம ஜெயம்..!!!! ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏽"
  13. அவுசுக்கு சிம்பாவே வாழ்க்கையில் மறக்க முடியாத பயத்தைக் காட்டி ஹவுசுக்கு அனுப்பியிருக்கு . ......! அருமையான பீல்டிங் ........! முன்கூட்டியே கணித்த சகோதரிக்கு பாராட்டுக்கள் . ......!
  14. reotdpnSos9087 :amcctut21ir3u5ggf9uhff1ti aff12,1rv5iémhe6t7 · #ஊசி கீழே விழும் சத்தம் கேட்குமா கேட்க்காதா...? 1) #ஃபீல்ட்_மார்ஷல் மானக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்.. நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள். பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன், மராத்தி மொழியை மராத்தா ரெஜிமெண்ட்டிடம், மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ், பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி, ஏன்... கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். "இப்போது தான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று நக்கலாக கேட்டார் அதிகாரி. "இல்லை முன்பு வந்திருக்கிறேன்..." "அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு..." "நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை..." "சான்ஸே இல்லை.... அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி..." உறுமினார் அதிகாரி. சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியை பார்த்தவாறே, அமெரிக்கர் சொன்னார்: "இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு, ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது, என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை..." -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) 3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: "நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..." பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார். சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கைக் கண்டு துணுக்குற்றாலும், நேரு பேச அனுமதி அளித்தார். "சார்.... நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது...?" -- (தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.) அரூபமான இத்தாக்குதலில் இருந்து சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு நேரு கேட்டார்: "முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?" "இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்... அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்..." இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு.. ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்......!
  15. Chandra Krishnan poedrstonS8363hmtfi8auc01h8c1cf1lm641hal 053u26081t700l6l3ig · தமிழ் எழுத்து சீர்திருத்தம் அரசு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூலம் அப்போது முதல்வர் MGR இந்த மாற்றங்கள் முதலில் முன்வைத்தவர்: பெரியார் தமிழ் எழுத்து எளிமைப்படுத்த வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பே வலியுறுத்தினார். #பெரியார் #வரலாறு #தமிழ் #அரசியல்
  16. சகோதரி நிலாமதியின் மைண்ட் வொய்ஸ் .......! அவுஸ் = 69/4=10.3 --
  17. பார்த்தால் சிரிக்கிறே பார்க்காவிட்டால் மொறைக்கிறே ........! 😍
  18. வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : { ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே } (2) காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே அட காதல் இதுதானா குழு : பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா ஆண் : ஏனோ மனது உன்னை கண்ட பொழுது காற்றில் ஓடும் மேகமென ஆச்சு பெண் : ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு கண்ணாம்மூச்சி ஆடும்கதை ஆச்சு ஆண் : உன்னை அழைத்தவன் நானே நானே தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன் பெண் : கூண்டு கிளி இங்கு நானே நானே விட்டு விடுதலை ஆனேன் ஆனேன் ஆண் : உன் சேலை நூலாகவா பெண் : …………………………………. ஆண் : நான் உன் கூந்தல் பூவாகவா பெண் : …………………………………. ஆண் : அடி நான் இன்று நீ ஆகவா ஆண் : பூவான என் நெஞ்சம் போராட தூங்காத கண்ணோடு நீராட பெண் : உறவான நிலவொன்று சதிராட கடிதங்கள் வாராமல் உயிா் வாட அஞ்சலகம் எங்கு என்று தேடுகிறேன் நான் ஆண் : பூஞ்சோலை நீதானம்மா ஒரு பூ சிந்த பிடிவாதமா மௌனங்கள் மொழியாகுமா பெண் : காதல் மனசு தத்தளிக்கும் வயசு எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும் ஆண் : ராத்திாி பொழுது பௌா்ணமி நிலவு என் மனதை சுட்டு விட்டு போகும் பெண் : தனிமைகள் என்னை தொடுமே தொடுமே பனித்துளி என்னை சுடுமே சுடுமே ஆண் : தாகம் கொண்ட தங்க குடமே குடமே அள்ளித்தர கங்கை வருமே வருமே பெண் : மேகங்கள் தேனூற்றுமே புது மொட்டுக்கள் பூவாகுமே ஒரு பூமாலை தோள் சேருமே பெண் : காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே அட காதல் இதுதானா குழு : பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா ........! --- ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.