Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. மாமியாருக்கு ஒரு சேதி , மதித்து நடந்தால் மரியாதை......! 😍
  2. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் ஆண் : என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் ஆண் : பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே.......! --- இதயம் ஒரு கோவில் ---
  3. sStponodregt9thtggc23lc3fg07i40c9tfl2tih018h22t5a 6t130hcaat · 🚗" Ever Wondered What Those Little Colored Plugs in Your Car Are? ⚡" Think of your car's electrical system as a network of "water pipes," but instead of water, it carries electric current. Sometimes, there’s a "surge" (too much electricity), which can catch fire or fry your expensive radio! 📻" 🔥 That’s where Fuses come in—they are the tiny bodyguards of your vehicle. 🛡️ How do they work? A fuse has a small wire inside designed to melt and break the circuit if the electricity gets too high. It literally sacrifices itself to save your car’s components! 🎨" The Secret "Color Code" Each color represents a specific Ampere (A) rating. This tells you how much "pressure" the fuse can handle before it pops: * Red (10A): Usually protects smaller things like Headlights. * Blue (15A): Often for the Radio or power windows. * Yellow (20A): Handles things like Auxiliary outlets (charging your phone). * Green (30A): Used for heavy lifters like the A/C system. * Large Blue (100A): This is the "Big Boss." It protects the Alternator and the main battery charging system. 💡" Pro Tip: If a fuse blows, never replace it with a higher-rated one (e.g., don't put a 30A fuse where a 10A should be). It’s like putting a steel pipe where a safety valve should be—the fuse won't melt, but your wires might! Stay safe and keep your "Craft Skills" sharp! 🛠️"
  4. sonSoptdre008ma34ma1g0hh1ca 6hha14a0cg4fmai97gttm11h9i9tu01f · ஜெயிச்சது இந்தியா… ஆனா போராட்டத்தால் மனசை ஜெயிச்சது பெத்தல்! அரையிறுதி… அழுத்தம்… உலகக்கோப்பை கனவு… இந்த மூன்றும் சேரும் போது தான் ஒரு வீரனின் உண்மையான மதிப்பு தெரிய வரும். இன்று நடந்த இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி போட்டி அதற்கு ஒரு சிறந்த உதாரணம். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது சஞ்சு சாம்சன் தான். Knockout போட்டி என்ற அழுத்தத்திலும் அவர் ஒரு நிமிஷமும் பதட்டப்படாமல் விளையாடினார். 42 பந்துகளில் 89 ரன்கள்… 8 பவுண்டரி, 7 சிக்சர்கள்… இது ஒரு இன்னிங்ஸ் மட்டும் இல்ல, ஒரு Statement. Powerplayலேயே ரன் வேகத்தை உயர்த்தி இந்தியாவை சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்தியாவை காப்பாற்றியவர்… இன்று மீண்டும் அதே மாதிரி பெரிய மேடையில் இந்தியாவுக்கு backbone ஆக நின்று இருக்கிறார். இந்தியா இறுதியில் 253 ரன்கள் குவித்தது. அந்த ஸ்கோர் பெரியதாக இருந்தாலும், அரையிறுதிப் போட்டி என்பதால் எந்த நேரத்திலும் மேட்ச் திரும்பலாம் என்ற பதட்டம் இருந்தது. அதற்கான காரணம் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் . எதிரணியாக இருந்தாலும் அவருடைய இன்னிங்ஸ்க்கு நாம தலை வணங்கியே ஆகணும். அவர் ஆடிய அந்த போராட்டம்… அது வெறும் ரன் எடுப்பதல்ல. கடைசி மூச்சு வரை போராடும் ஒரு வீரனின் மனநிலையை காட்டியது. எந்த பவுலர் வந்தாலும் முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து அழுத்தத்தை மீண்டும் இந்தியாவிற்கு திருப்பினார். ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்துக் கொண்டு 18வது ஓவர் வரை இங்கிலாந்தை போட்டிக்குள் வைத்திருந்தது அவர் மட்டும்தான். ஒரு தருணத்தில் கூட “இங்கிலாந்து ஜெயிக்கலாம்” என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் கிரிக்கெட்டில் சில சமயம் ஒரே ஒரு வீரன் போட்டியை மாற்றிவிடுவான். இன்று அந்த வீரன் ஜஸ்ப்ரித் பும்ரா. எல்லா பவுலர்களும் ரன் கொடுத்த நேரத்தில் கூட, பும்ரா மட்டும் ரன்னை கட்டுப்படுத்தினார். 16வது ஓவரில் வெறும் 8 ரன்கள்… 18வது ஓவரில் 6 ரன்கள்… கடைசி இரண்டு ஓவர்களில் மொத்தம் 14 ரன்கள் மட்டும். அந்த இரண்டு ஓவர்கள்தான் இந்த போட்டியின் திருப்புமுனை. அவர் “Boom Boom Bumrah”! இறுதியில் இங்கிலாந்து 246 ரன்களில் முடிந்தது. இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்கோர்போர்டில் இந்தியா வென்றது என்று எழுதப்பட்டாலும், அந்த மைதானத்தில் இருந்த அனைவரின் மனதையும் கவர்ந்த வீரன் பெத்தெல் தான். அவர் அவுட் ஆன தருணத்தில் இந்திய வீரர்கள் கொண்டாடிய அந்த ஆர்ப்பரிப்பு கூட அவருக்கான மரியாதைதான். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றவர் சஞ்சு சாம்சன். 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டு சென்றதற்காக அந்த விருது அவருக்கே உரியது. இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அந்த விருதை வென்றுள்ளார். இன்று ஒரு உண்மை மட்டும் தெளிவாக தெரிய வந்தது… பெரிய மேடைகளில் தான் சாம்சன், பெத்தல் போன்ற உண்மையான வீரர்கள் பிறக்கிறார்கள். இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் இந்த அரையிறுதி போட்டியின் நினைவில் இரண்டு பெயர்கள் எப்போதும் இருக்கும் சஞ்சு சாம்சன்… மற்றும் ஜேக்கப் பெத்தெல். இந்தியா ஜெயிச்சிருக்கலாம்… ஆனா இந்த மேட்ச்சின் அடையாளம் அந்த கடைசி வரை போராடிய இன்னிங்ஸ்தான். 🏏" வாழ்த்துக்கள்! #easternsports | #INDvsENG | #T20WC2026.......!
  5. ntreSpsoodit98c4ugg2i0tm350h38c90 48673m2130uih334ia01619igg · பாரிஸின் பரபரப்பான வீதிகளுக்கு மத்தியில், 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுப் புரட்சியின் இருண்ட ரகசியங்களையும், உலகை மாற்றிய சரித்திர நிகழ்வுகளையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு ரகசிய சந்துதான் Cour du Commerce-Saint-André. இந்த குறுகலான கல் பதிக்கப்பட்ட பாதையில் நடந்து செல்வது, ஒரு வரலாற்றுத் திரைப்படத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தரும். பிரெஞ்சுப் புரட்சி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது 'கில்லட்டின்' (Guillotine) எனப்படும் தலையைத் துண்டிக்கும் இயந்திரம் தான். அந்த கொடூரமான இயந்திரம் முதன்முதலில் உருவானது இந்தச் சந்தில் தான்! மரண தண்டனையை வலியின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டாக்டர் கில்லட்டின் என்பவர் ஒரு கருவியை வடிவமைக்கச் சொன்னார். இந்தச் சந்தில் எண் 9-ல் வசித்து வந்த 'டோபியாஸ் ஷ்மிட்' (Tobias Schmidt) என்ற ஜெர்மானிய பியானோ தயாரிப்பாளர் தான் முதல் கில்லட்டின் இயந்திரத்தை மரத்தால் உருவாக்கினார். மனிதர்கள் மீது பயன்படுத்துவதற்கு முன்பு, இந்த இயந்திரம் சரியா வேலை செய்கிறதா என்பதை அறிய, இதே சந்தில் வைத்துத் தான் ஆடுகள் மற்றும் கன்றுகளின் மீது முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது. அமைதியான இந்தச் சந்தில் இப்படி ஒரு ரத்த சரித்திரம் அரங்கேறியது பலருக்கும் ஆச்சரியம்! இந்தச் சந்து பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் ரகசியக் கூடாரமாகச் செயல்பட்டது. பிரெஞ்சு புரட்சியின் தீவிரவாதத் தலைவரான Jean-Paul Marat இங்குள்ள 8-ஆம் எண் வீட்டில் தான் வசித்து வந்தார். இங்கு வைத்துதான் அவர் தனது "L'Ami du Peuple" (மக்களின் நண்பன்) என்ற புகழ்பெற்ற செய்தித்தாளை அச்சிட்டார். இந்தச் செய்தித்தாள் தான் பிரெஞ்சு மக்களிடையே மன்னராட்சிக்கு எதிரான கோபத் தீயை மூட்டியது. இதே சந்தில் தான் புரட்சியாளர்கள் கூடி ரகசியத் திட்டங்களைத் தீட்டினார்கள். இந்தச் சந்தின் மற்றொரு மிகப் பெரிய பொக்கிஷம், 1686-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'லு புரோகோப்' (Le Procope). இதுவே பாரிஸின் செயல்படும் மிகப்பழமையான கஃபே (Coffeehouse) ஆகும். இது வெறும் உணவகம் அல்ல, உலக வரலாற்றை மாற்றிய பல மேதைகளின் விவாத மேடை! பிரான்சின் புகழ்பெற்ற தத்துவஞானிகளான வால்டேர் (Voltaire), ரூஸோ (Rousseau) போன்றோர் இங்குத் தான் மணிக்கணக்கில் அமர்ந்து விவாதிப்பார்கள் (வால்டேர் தினமும் 40 கப் கோப்பி குடிப்பார் என்று ஒரு கதை உண்டு!). அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin) பிரான்சுக்கு வந்திருந்தபோது இங்கு அமர்ந்துதான் அமெரிக்க அரசியலமைப்பின் சில பகுதிகளை எழுதினார். இளம் இராணுவ அதிகாரியாக இருந்த நெப்போலியன் போனபார்ட், ஒருமுறை இங்கு சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால், தனது தொப்பியை (Bicorne hat) அடமானமாக வைத்துவிட்டுச் சென்றார். அந்தத் தொப்பி இன்றும் இந்த உணவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது! இன்று நீங்கள் இந்த இடத்திற்குச் சென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட அதே கற்களின் (Cobblestones) மீது நடக்கலாம். பழமையான இரும்பு விளக்குகள், சிறிய புத்தகக் கடைகள், தேநீர் விடுதிகள் என இந்த இடம் 18-ஆம் நூற்றாண்டின் அழகை அப்படியே பாதுகாத்து வருகிறது. லெ புரோகோப் உணவகத்தில் இன்றும் நீங்கள் சென்று உணவருந்தலாம். வரலாறும், புரட்சியும், கலையும் ஒருங்கே கலந்த ஒரு அரிய இடம் இது......!
  6. ooreSdsptn9u29gir6hr36f4771i0:l503mfue 221l213852u7f,0v8é6 a · "நான் ஆடம்பரத்தை விரும்புபவனல்ல. எளிய குடுபத்தினனாக இருந்து இப்போது 30, 40 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிய வாய்ப்பிருக்கும்போது இது சாதாரண மக்களுக்கு எவ்வளவு பெரிதென்று எனக்குத்தோன்றும். இது அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய செல்வம் எனத்தோன்றும்.. அதேபோல் லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்துகொண்டு நான் என் நண்பர்கள் மத்தியில் செல்வதில்லை அது எனக்கு குற்ற உணர்வைத்தருவதாக இருக்கிறது. அவர்களில் பலர் இன்னமும் உணவு கொண்டுசேர்க்கும் ஊழியர்களாக பணிசெய்கிறார்கள். அவர்களுடன் நான் எளியவனாகவே, என்றும் அவர்களின் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.. " - வருண் சக்கரவர்த்தி. 👏" வருண் தன்னோட திடீர் ஆடம்பரத்துல இருந்து விலகி இருக்கறதா சொல்றார். இன்னொரு விசயம் பகிர்ந்திருந்தார், 'நான் எந்த வேலையும், Carrer ம் இல்லாம இருந்தப்ப என் காதலிகிட்ட சொன்னேன். என்னை நம்பாதே, உன்ன பாத்துக்க முடியுமா தெரியலைன்னு. அவ சொன்னா, நீங்க கிரிக்கெட் ஆடி 6000 சம்பாதீங்க, நான் வேலைக்குப்போயி 15,000 சம்பாதிக்கறேன் குடும்பத்த நான் பாத்துக்கறேன்னு.' 👏" இன்னைக்கி அவர் மனைவி சகல வசதிகளோட நிறைவா இருப்பாங்க இல்லையா... 👏" ஆண்களுக்கு எல்லா பெண்களும் தேவதைகள்தான். ஆனால் உண்மையான தேவதைகள் சில ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தேவதைகள் இறக்கைகளோட இருக்கிறார்கள். 👏"
  7. வணக்கம் வாத்தியார் ..........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஆண் : { ஒரே வானிலே ஒரே மண்ணிலே } (2) ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ஆண் : காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஆண் : தோன்றும்போது தாயில்லாமல் தோன்ற வில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே ஆண் : வாழும்போது பசியில்லாமல் வாழ வில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போலே நாடு காண வேண்டும் விடுதலை ஆண் : அச்சமின்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ......! --- அதோ அந்த பறவை போல ---
  8. ஆணாகப் பிறந்ததெல்லாம் ......... படம் : சபாஷ் மீனா , நடனம் : சரோஜாதேவி & ஜெமினி சந்திரா . ......பாடியவர்கள் : பி . சுசிலா & கே . ஜமுனாராணி ........ இசை : T . G லிங்கப்பா ......! 😍
  9. Snsdproeto598ica767g20émviff6g6e ru706f,457m01f20:1h1r8 9u36 · ‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும். ‘‘சொல்லுப்பா?’’ ‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’ ‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’ ‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’ ‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’ ‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’ ‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’ ‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’ ‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’ ‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’ ‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’ ‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’ ‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’ ‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’ ‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’ ‘‘புரிகிறது அப்பா!’’........!
  10. இஸ்ரேல் & இரான் யுத்தத்தின் போக்கு பற்றி ரகசிய மாநாடு .......! 😂
  11. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : கன்னித் தீவு பொண்ணா… கட்டெறும்பு கண்ணா… கட்டுமர துடுப்பு போல… இடுப்பு ஆட்டுறா… இவ கள்ளுப்பான உதட்ட காட்டி… கடுப்பு ஏத்துறா… ஆண் : மத்தாப்பு போல… சிரிச்சிட்டு போனா… கித்தாப்பு எல்லாம்… மிதிச்சுட்டு போனா… ஆண் : இந்த வப்பாட்டிய பார்த்து… என் பொண்டாட்டிய மறந்தேன்… இவ முந்தானைய மோந்து… நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்… ஆண் : மஞ்ச சீலையோடு… ஒரு மாசிக் கருவாடு… வட்டம் போட்டு ஆடு… இது வானவில்லு ரோடு… குழு : தர்ப்பூசு பழத்துக்கே நீ… தண்ணி காட்டாதே… ஆண் : கடிச்சா கசக்காத… ஸ்வீட்டு பீடா நீ… குடிச்சா எப்போ வரும்… கோலி சோடா நீ… ஆண் : இடிச்சா உசிரு போகும்… தண்ணி லாரி நீ… அடிச்சா போதை வரும்… பன்னீர் செர்ரி நீ… ஆண் : உன் சம்மதத்த சொன்னா… என் சம்பளத்தை தருவேன்… நீ கைநழுவி போனா… நான் கண்ணகியா அழுவேன்… ஆண் : வெண்ணிலா கேக்கு… என விட்டுத்தரேன் நாக்கு… கொள்ளிக்கட்ட நாக்கு… என்ன கொப்பளமா ஆக்கு… குழு : தஞ்சாவூரு தட்ட ஏந்தி… பிச்ச கேட்காதே… ஆண் : உருட்டி விளையாடும்… தாயக்கட்ட நீ வழுக்கி விழவைக்கும்… வாழமட்ட நீ… ஆண் : மணக்கும் மலையாள… கொழா புட்டு நீ… திரும்பி பார்க்காத… தெனாவட்டு நீ… ஆண் : இவ கன்னக்குழியோடு… வந்து பல்லாங்குழி ஆடு… என்ன முத்தமிட்டு மூடு… கொஞ்சம் சத்துணவு போடு…....! --- கன்னித் தீவு பொண்ணா ---
  12. முழுநிலவின் திருமுகத்தில் .......! 😘
  13. dpstSeoonr6ml u:r2360hs5 41t9i4m39l8a0t01637a5agthg,43642mil · மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்...... இன்று குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் பிறந்தநாள் இன்று ......!
  14. ஆனைக்குட்டியின் சிரிப்பில் அள்ளுண்டு போகுது நெஞ்சம்.........! 😂
  15. eotrnSposd1a75f67 414ég5a72067,ev2igl37tru2g7hr 4ic0g2tt:30h · 1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்பு த்திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னணி நடிகர்களான ... (பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் தேடி ஓடி வந்தார்கள். சிவாஜியிடம் மனம்விட்டுபேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனார்கள். இதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழாவில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது. விருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட்டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார். இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது. பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேருவிடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்து வைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு. உலக சினிமா வட்டாரத்தில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை.. ‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது’’.......!
  16. eSrpdsonot4a988s56a6h24i154215,60g2041 90:mga5rm2hc4 7lfc3la · எத்தனை முறை ஒதுக்கி இருப்பார்கள், எவ்வளவு இழிவான பேச்சுக்கள், ஆனால் அத்தனையும் ஓரம் கட்டி விட்டு, சோர்ந்து போகாமல் விசுவாசத்தோடு இன்று ஜெயித்துக் காட்டியிருக்கிறார், அதோடு மட்டுமல்லாமல் போட்டி முடிந்ததும் தேவன் தந்த வெற்றிக்காக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியும் சேர்த்து சொல்லி இருக்கிறார்,.. 💜 ஒரு மனுஷனுக்கு என்ன மாதிரி பிரச்சனை எல்லாம் வரக்கூடாதோ அத்தனை பிரச்சினைகளும் பல உருவங்களாக பல வடிவங்களில் போட்டு வாட்டி வதைத்தது ஏன் நாமே பலமுறை இந்த சஞ்சு சாம்சன் அணிக்கு தேவையில்லை என்று எழுதியதும் உண்டு அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில் இருந்து இன்று இந்தியாவை அரையிறுதி போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறான் தனி ஒருவனாக இந்த உலகக் கோப்பை போட்டியை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பு போட்டிகளில் சரியான ஆட்டம் ஆடாததால் போட்டியின் பாதியிலேயே அவனிடமிருந்து விக்கெட் கீப்பிங் கிளவுஸ் கழட்டப்பட்டு அது இஷான் கிஷான் கையில் கொடுக்கப்பட்ட போது அவன் முகம் எவ்வளவு வாடியது அவன் மனம் எவ்வளவு பதறியது என்று அன்றைய நாள் நாம் லைவாக பார்க்கும்போது உணர்ந்தோம் அன்றைய நேரத்தில் சஞ்சு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல ஒரு மோசமான நாளை இனிமேல் கண்டுவிடக்கூடாது என்று எடுத்த வைராகியம் தான் என்று இந்தியாவிற்கு உலக அரங்கில் உச்சபட்சமான வெற்றியை எடுத்துக் கொடுத்திருக்கிறது பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய ஸ்கோர் ஆன கிட்டத்தட்ட 200 ரன்களை டார்கெட் ஆக வைத்தார்கள் இந்த ரன்னை அடிக்க வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி தேவைப்படும் இதற்கு முன்பு உலக கோப்பை வரலாற்றில் எவ்வளவு பெரிய ரன்னை அடித்து துரத்தி வெற்றி பெற்றது என்று வரலாறே இந்திய அணிக்கு கிடையாது அப்படிப்பட்ட வரலாறை இன்று மாற்றி எழுதியிருக்கிறான் சாம்சன் அவர் 50 ரன்கள் அடித்த போதே நான் முடிவு செய்து விட்டேன் இன்று இவன்தான் போட்டியை முடித்துக் கொடுக்க போகிறான் என்று எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் முக்கியமான தருவாயில் கைவிட்டாலும் தான் கைவிடமாட்டேன் என்று இமயமலை போல ஒற்றை நம்பிக்கையாக இந்தியாவிற்கு கடைசி வரை ஜொலித்து நின்றான் சாம்சன் இறுதியாக நான் வணங்கும் கடவுள் என்னை கைவிடவில்லை என்பதை உணர்த்தும் வகையில் மைதானத்தில் முட்டி போட்டு தன்னுடைய மரியாதையை கொடுத்தபோது எவ்வளவு ஆனந்தம் இருந்திருக்கும் உண்மையில் இந்த சஞ்சுவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க போட்டி இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இது போல ஒரு வெற்றியை தன் வாழ்நாளில் இதற்கு முன்பு இவர் பெற்றிருக்க மாட்டார் இதன் பின் பெறுவாரா என்பது சந்தேகம்தான் இதைவிட பல போட்டிகள் இவர் இன்னும் ஆட வேண்டியது இருந்தாலும் இந்த போட்டியில் இவர் அடித்த அடிகள் அனைத்தும் இவர் அடித்த ரன்கள் அனைத்தும் இந்திய அணியின் வரலாற்றில் மறையாத சுவடுகளாக அப்படியே நிலைத்து நிற்கும் சஞ்சு சாம்சன் என்ற மாவீரனுக்கு 10000000 பயர் விடலாம் 🔥" #SanjuSamson #INDvsWI #cricketlovers #ICC #tilakvarma #ICCWorldCup #T20WorldCup2026 #icct20worldcup2026 #icccricket #TeamIndia #INDvsWI பதிவு உரிமையாளருக்கு நன்றிகள்.
  17. சூழல் மாசு பற்றி உங்களின் அனுபவங்கள் ........எழுதுங்கள் . .....! வசந்தம் வரமுதலே இந்த ஒவ்வாமைக்கு ஒரு ஊசி இங்கு போடுவார்கள் இலவசமாக ........அதனால் அது அவர்களுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும் . ...... அங்கு அப்படி இல்லையா .........!
  18. நீங்கள் இருவரும் என்னையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் . ..... நான் இந்தப் பகுதியில் எழுதிய கவிதை பற்றித்தான் குறிப்பிட்டேன் ....... வேறொன்றுமில்லை . .......! புஷ்பா தங்கதுரை ஒரு மாபெரும் எழுத்தாளர் . ......அவருடன் என்னை ஒப்பிடுவதே, எனக்குத்தான் பெருமை .......அது எனக்கு மகிழ்ச்சியே .......மன்னிப்புக்கு அவசியமே இல்லை ஜஸ்ட்டின்.......! இந்த யாழ்களத்திலேதான் ஏதோ எழுதுகிறேன் .......வேறெங்கும் நான் எழுதியதே இல்லை . ...... அன்று எனது தம்பி முறையானவரும், டென்மார்க் (அடுத்தடுத்த வீடுகள் ) எனது சொந்த அத்தானும் ஜெர்மனி, காலமாகி விட்டனர் ....... அங்கு போய் இன்றுதான் வந்தனான்.......ஒரு அப்பாயின்மென்டுக்காக . ....... சில சமயம் ஓரிரு நாட்களில் மீண்டும் போகவேண்டி வரலாம் . .......! நான் எழுதுவேன் . ..... எனக்கு குறையொன்றுமில்லை . ......!
  19. உங்களுக்குப் பிடித்த பிளேயர் இருக்கட்டும், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா .......கவனமாக இருங்கள் ......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.