Everything posted by suvy
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
Pattukkottai - பட்டுக்கோட்டை · Krv Raja ·rSeodtnpso4hgu53g256hmg62f7t7iih31t18ha8c18c544 7tm3h49044ht · இன்று முக்கியமான நாள்... தமிழக வரலாற்றில் பிழை நிகழ்ந்த நாள்.... மாமனிதர் #காமராஜர் அரசு 1967-ல் தூக்கி எறியப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாள்.. ஏன் காமராஜர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது? தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் என்ன கொடுமைகள் அவரது ஆட்சியில் நடந்தது? 1) காமராஜர் முதல்வராக 1954-ல் பதவி ஏற்றபோது தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 7 %. அவர் 1963-ல் பதவி விலகியபோது எழுத்தறிவு சதவீதம் 37% . கொடுமை நெம்பர் 1 . 2) ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம்: ஏழை பணக்காரன் பேதம் இளம் பிஞ்சுகள் மனத்தை பாதிக்காமல் இருக்க பள்ளிகளில் சீருடை திட்டம் .. கொடுமை நெம்பர் 2 . 3) வைகை அணை, மணிமுத்தாறு, சாத்தனூர் அணை, கீழ் பவானி, மேல் பவானி அணைகள், அமராவதி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம், நெய்யாறு .. இப்படி பல நீர்ப்பாசனத் திட்டங்கள். இதில் கீழ் பவானி திட்டத்தால் மட்டும் 207000 ஏக்கர் (842 ச .கிமீ ) நிலங்கள் சாகுபடி பயன் பெற்றன... கொடுமை நெம்பர் 3 . 4) BHEL திருச்சி, ஆவடி ரயில் பெட்டித் தொழிற்சாலை, ஊட்டியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், சௌத் இந்தியா விஸ்கோஸ் இப்படி பல தொழில் வளர்ச்சி "கொடுமைகளும்" நடந்தேறின.. கொடுமை நெம்பர் 4. இதுபோக மந்திரிகள் தங்களை பிரபல படுத்திக் கொள்ளாமை, பதவி போனவுடன் அரசாங்க டவுன் பஸ்ஸில் - கக்கன் போல- வீடு திரும்பும் எளிமை, அரசாங்க செலவில் நடைபெறும் நலத் திட்டங்களில் தங்கள் முகத்தை போஸ்டரில் போட்டு, ஏதோ தங்கள் கைக் காசில் அவற்றை நடத்துவதுபோல "வள்ளலே, ஏழைகளின் இதயத் துடிப்பே" என்றெல்லாம் ஜால்ராக்களை வைத்து எழுத வைக்காத எளிமை... இப்படிப் பல உப "கொடுமைகளும்" செய்த "கொடிய எதேச்சாதிகார " காமராஜா் ஆட்சி "தோற்கடிக்கப்பட்ட பொன் நாள்" இந்த நன்னாள்.. ஒரே ஒரு கார்ப்பரேஷன் கக்கூஸ் கட்டி விட்டால் கூட, தெரு முழுக்க டியூப் லைட் போட்டு, ஆளுயர போஸ்டர் அடித்து "வரலாற்று சாதனை" என்று வர்ணிக்கும் அடுக்கு மொழி வித்தகர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்.. இன்னும் பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் என்று சகலத்திலும் "காசு பார்ப்பதாக" குற்றச் சாட்டுகள் எழுந்த "பொற்காலத்தின்" ஆரம்ப விதை போடப்பட்ட நாள்.. "தமிழக அரசியலில் விஷக் கிருமிகள் புகுந்துவிட்டன" - என்று, முப்பது வருஷம் மந்திரியாய் இருந்தும் பத்து பைசா கஜானா காசை பாக்கெட்டில் போடாத பக்தவத்சலத்தால் வர்ணிக்கப்பட்ட நாள்.. அந்த மாபெரும் எளிய மனிதன் காமராஜை அவருடைய சொந்த ஊரிலேயே தோற்கடித்து, தமிழன் தன்னுடைய நன்றியைக் காட்டிய நாள்.. ஆம்.. 1967- பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள். அன்று "தமிழ் அன்னை" பொங்கி எழுந்தாள்.. ஆம் பொங்கி எழுந்த தமிழ் அன்னை இன்று "டாஸ்மாக்" வாசலில் தன் பிள்ளைகளை தேடும் நிலையை அடைய அச்சாரம் போட்ட நாள்.. தமிழன் தன் தலையில் மண் அள்ளி போட்டு 57 வருடம் ஆகி விட்டது இன்னும் திருந்தவில்லை....... Krv Raja Voir la traduction Creativity கிரியேட்டிவிட்டி · Krv Raja ·rSeodtnpso4hguo30merh1g62fn 5ii:31,18h18c18v54b 7tm3h49044he · #நெய்வேலியில் நிலத்துக்கடியில் கனிமவளம் இருப்பதைக் கண்டறிந்தார் ஓர் விவசாயி. வெள்ளையர் ஆட்சிக்கு தகவல் தந்தார். பதிலில்லை. முதல்வர் #ராஜாஜியிடம் முறையிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. #காமராஜர் முதல்வரானதும் நேரில் சென்று தகவல் சொன்னார். உடனடியாக பொறியாளர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார் முதல்வர். மிக விரிவான விஞ்ஞான பூர்வமான திட்ட அறிக்கையைத் தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைத்தார். தில்லி சென்று பிரதமர் நேருவிடம் நெய்வேலி திட்டம் பற்றிப் பேசினார். காகிதங்களைப் புரட்டிய நேரு கையை விரித்தார் .. " இதெல்லாம் சாத்தியமில்லை..!" "ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர் அனுபவமுள்ள ஒரு பொறியாளர். இந்த திட்டத்தை மறுக்க இரண்டு காரணங்கள்தான் உள்ளன. ஒன்று இந்த நாட்டில் பொறியியல் படிப்பு தரமாக இல்லை. அல்லது இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தகுதி அரசியல்வாதிகளான நமக்கு இல்லை.." Krv. #Raja கேம்ப்ரிட்ஜில் படித்த அறிவாளி நேருவை கிழிகிழியென கிழித்துப் போட்டார் கைநாட்டு பேர்வழி காமராஜர். காமராஜருக்கு கை சுத்தம் ..! அதனால் பிரதமராவது, பெரிய தலைவராவது ,. .. ( உள்துறை செயலாளரைப் பார்த்து நடுங்குகிறவர்கள், ஊழல் செய்து மாட்டிக் கொண்டு கைகால் பிடித்துவிடும் அரசியல் தலைகளுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை ) அடுத்தமுறை பொறியாளருடன் நேருவைச் சென்று சந்தித்தார், விளக்கினார். முதலீடு 150 கோடி என்றார் காமராசர். "திட்டம் ஓகே.. நிதியில்லையே.. தமிழக அரசு நடத்தலாம்..." "அரசின் ஆண்டு வருமானம் 150 கோடி .. எங்களால் எப்படி....?" " நிலக்கரியை வெளியே கொண்டுவர மூன்றாண்டுகள் ஆகும் என்கிறார். ஆண்டுக்கு 50 கோடி போடுங்க..." என்கின்றார் பிரதமர். முடிவெடுத்தார் தமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம். தமிழ்நாடுதானே காமராசருக்கு குடும்பம். 1954 ல் 50 கோடி ஒதுக்கினார். பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்த வருடம் 50 கோடி. 1956 ல் கடைசி தவணையைக் கொடுத்துவிட்டு தவிக்கத் தொடங்கினார். பிள்ளை பெண்டாட்டிகளுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற இன்றைய ஊழல் பெருச்சாளிகளின் கவலையல்ல. மக்கள் வரிப்பணமாச்சே.. மத்திய அரசு கேள்வி கேட்குமே ...! சுரங்கப் பணிகள் முடிவடைந்து, நிலக்கரியை வெட்டியெடுத்து வெளியே கொண்டு வரும் நாளில்.... முதல்வர் நெய்வேலி வந்தார். சுரங்கத்தில் நின்றார். அதோ.. நீரும் நிலக்கரியும் கலந்து வழியும் கனிம வளத்தை தலையில் சுமந்தபடி தொழிலாளிகள் வருகின்றனர். ஓடினார் முதல்வர்.... தமிழ் மண்ணின் வளம்.. தமிழர் நலம் அல்லவா தலையிலிருந்து கறுப்பு தங்கமாக வழிகிறது ? தாவியணைத்தார் அந்த தொழிலாளியை... கரியை அள்ளி கைகளால் முகர்ந்தார். ஆனந்தக் கூத்தாடினார். வெள்ளை கதர் சட்டை , கறுப்பாகி மின்னியது. இன்று ஆண்டுக்கு லாபம் 2000 கோடிகள்...! இந்த பதிவை படித்த போது என்னையுமறியாமல் என் கண்கள் நனைந்தன. இப்படியும் ஒரு மனிதர் இவரன்றி பிறந்ததுமில்லை ! இனி பிறக்கபோவதுமில்லை ! ஆனால் இருக்கும் வரை அவர் அருமை தெரியவில்லை. Krv Raja— avec Rajini Padmanaban Padhu et 13 autres personnes . Voir la traduction
-
குட்டிக் கதைகள்.
Farvin Ishak · Suivre rsodtnoSep1elifbumu34 29u:9rl005 7othm1,0a3tneu01v7gu85t3641 · ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள். சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள். சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான். “இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார். “ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான். “மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி. நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது. Voir la traduction இந்தக் கதைக்கு இந்தப் படம் எதுக்கென்றே தெரியவில்லை . .......ஏதோ ஈயடிச்சான் கொப்பி மாதிரிப் போட்டு வைப்போம் .........! 😂
-
அதிசயக்குதிரை
Riyas Qurana se sent fou à Akkaraipattu, Province de l'Est, Sri Lanka. · Suivre oesdtoSnrp4mhc1l1766 9i070869888m9aifmi8m0t92gh4g1hc1gh284i2 · விக்கிபீடியாவின் சித்தப்பா 0000000000000000000000000000 அடிப்படையில் அ.முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் தானா அல்லது மனித உருவில் இருக்கும் ஒரு நடமாடும் 'விக்கிபீடியாவா' என்பதை இதுவரை இலக்கிய உலகம் உறுதி செய்யவில்லை. எனக்குத் தெரிந்து அவர் கதை எழுத அமரும்போது, ஒரு பக்கம் வேர்ட் டொக்குமெண்ட் , இன்னொரு பக்கம் 'Britannica Encyclopedia' இரண்டையும் திறந்து வைத்துக்கொண்டுதான் உட்காருவார் போல. இல்லையென்றால், ஒரு மனுஷன் காதலைக்கூட இப்படியா 'லேப் ரிப்போர்ட்' மாதிரி எழுதுவது? அவருடைய கதையில் காதலன் காதலியின் கண்களைப் பார்க்கிறான். "கண்ணே, மணியே" என்று உருக வேண்டும் என்பதுதானே உலக நியதி? ஆனால் முத்துலிங்கம் சேரின் ஹீரோ, காதலியின் கண்களைப் பார்த்துவிட்டு, "உனக்குத் தெரியுமா? 1876-ல் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஒரு வகை ஆக்டோபஸ் தன் இணையைத் தேடும்போது, அதன் உடலில் இருந்து 42 விதமான நிறங்கள் மாறும். உன்னைப் பார்த்ததும் என் பிட்யூட்டரி சுரப்பியில் நடப்பதும் அதுதான்" என்கிறான். அடப்பாவிகளா! இது காதலா இல்லை 'டிஸ்கவரி சேனல்' ஸ்கிரிப்டா? சரி, சோகக் காட்சியிலாவது மனுஷன் விடுவாரா? ஊஹூம். அவருடைய பாத்திரங்கள் அழுதால்கூட, "ஒரு சொட்டுக் கண்ணீரில் 0.9% உப்பு இருக்கிறது. ஆனால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில்..." என்று அழுதுகொண்டே, நமக்கு ஒரு புவியியல் வகுப்பை எடுத்துவிட்டுத்தான் மூக்கைச் சிந்துவார்கள். வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்கள் அ.முத்துலிங்கம் கதைகளைத் தொடர்ந்து வாசித்தால், உங்களுக்கு இலக்கிய அனுபவம் கிடைக்குமோ இல்லையோ, அடுத்த வருடம் 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், நிச்சயம் ஜாக்பாட் அடிக்கலாம். உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகளைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவர் கதை எழுதுகிறாரா, இல்லை ‘பொது அறிவு’ தேர்வுக்கான வினாத்தாளை லீக் செய்கிறாரா? அதாவது, ஒரு சாதாரணக் கதை. ஒருத்தன் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஓட்டுகிறான். நாம் என்ன நினைப்போம்? ‘சரி, வெயில் அடிக்கிறது, புழுதி பறக்கிறது’ என்று போய்க்கொண்டே இருப்போம். ஆனால் முத்துலிங்கம் சேர் விடுவாரா? "அவன் ஓட்டியது ரெலி (Raleigh) சைக்கிள். 1887-ம் ஆண்டு நாட்டிங்ஹாமில் சேர் ஃபிராங்க் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அந்தச் சைக்கிளின் சங்கிலியில் (Chain) மொத்தம் 114 இணைப்புகள் இருந்தன. சரியாக 114 இணைப்புகள் இருந்தால் மட்டுமே சைக்கிள் ஈர்ப்பு விசையை எதிர்த்து 15 டிகிரி சாய்வில் ஏற முடியும் என்று ஆர்க்கிமிடிஸ் குளிக்கும்போது கண்டுபிடித்தார்." அடக் கடவுளே! (இதை நான் சொல்லவில்லை, அந்தச் சைக்கிளே அலறுகிறது). ஒரு மனுஷன் நிம்மதியாகச் சைக்கிள் கூட ஓட்ட முடியாதா பாஸ்? இவருடைய கதைகளில் வரும் காதலர்கள், பார்க்கிலோ அல்லது பீச்சிலோ சந்திப்பதில்லை. அவர்கள் நேராக ‘பிரிட்டிஷ் மியூசியத்தில்’ உள்ள பதினோராவது செக்ஷனில், மம்மிகளுக்கு நடுவேதான் சந்திப்பார்கள். காதலன் காதலியிடம், "உன் முகம் நிலா மாதிரி இருக்கு" என்று சொல்ல மாட்டான். அது அ.முத்துலிங்கம் யூனிவர்ஸ் இல்லையே!. அங்கே அவன் சொல்வது இதுதான். "பெண்ணே, உன் முகம் சந்திரயான்-3 அனுப்பிய லேண்டிங் புகைப்படத்தில் இருக்கும் தென் துருவத்தின் 42-வது பள்ளத்தைப் போலவே இருக்கிறது. அந்தப் பள்ளத்தில்தான் ஹீலியம்-3 வாயு உறைந்த நிலையில் கிடைக்கிறது." இதைப் கேட்டவுடன் அந்தப் பெண் வெட்கப்பட மாட்டாள். அவளும் ஒரு முத்துலிங்கம் கதாபாத்திரம் என்பதால், "ஆம் அன்பே, ஹீலியம்-3 எதிர்காலத்தின் எரிபொருள். ஆனால் ரஷ்யாவின் லூனா-25 ஏன் விழுந்தது தெரியுமா?" என்று பதில் கேள்வி கேட்பாள். இவர்கள் பேசுவதைக் கேட்டு, பக்கத்தில் இருக்கும் நமக்கே ‘மைனர் ஹார்ட் அட்டாக்’ வரும். ஆனால் கவலைப்படாதீர்கள், ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும், பைபாஸ் சேர்ஜரியை முதன்முதலில் 1960-ல் அர்ஜென்டினாவில் யார் செய்தது என்பதையெல்லாம், அடுத்த பாராவிலேயே விளக்கமாக எழுதிவிடுவார். சுருக்கமாகச் சொன்னால், அ.முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் அல்ல. அவர் மனித உருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ‘நடமாடும் அல்காரிதம்’. கூகுள் சேர்வர் டவுன் ஆனால், சுந்தர் பிச்சை உடனே அ.முத்துலிங்கத்திற்குத்தான் போன் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். (பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை நான் எழுதி முடிப்பதற்குள், அ.முத்துலிங்கம் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு அபூர்வமான சிலந்தி, எப்படி இணையத்தை விட வேகமாக வலை பின்னும் என்பது பற்றி ஒரு சிறுகதை எழுதி முடித்திருப்பார். பாவம் அந்தச் சிலந்தி!) Voir la traduction
-
பாரம்பரிய பல்லுயிர் தலமாக தேர்வு: எலத்தூர் குளம், நாகமலை குன்றில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு
பல்லுயிர் சரணாலயம் நல்லது . ...... இயற்கையுடன் மனிதர் ஒன்றி வாழும் வாழ்க்கை மிக நல்லது . ......! 🙂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உள்ளதை சொல்வேன் .........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கடவுளே சனீஸ்வரா நீங்கள் இடையில நிண்டு பார்க்கிறீங்கள் ........ முதல் பக்கத்தில் சென்று பார்த்தால் உங்கள் கேள்விக்குப் பதில் நிழல் ஆகத் தெரியும் . ...... முன்பு பல கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருந்தன, இப்ப இராகுதான் தனி ஆவர்த்தனம் . ....... இடைக்கிடை உங்களையும் காண்பது மகிழ்ச்சி . ......! 😂 வணக்கம் வாத்தியார் . ...........! தமிழ் பாடகர் : டி. சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது ஆண் : உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது ஆண் : பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது எதுவும் கிடையாது ஆண் : அடிப்பது போலே கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கு காரணம் புரியாது காரணம் புரியாது ஆண் : நன்றியய் மறந்தால் மன்னிக்க மாட்டேன் பார்வையில் நெருப்பாவேன் நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன் ஆண் : பிறந்தேன் பிறந்தது தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை பிறந்தேன் பிறந்தது தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை பெரியவர் அத்தை இருவரைத் தவிர தெய்வத்தைக் பார்த்ததில்லை நான் தெய்வத்தைக் பார்த்ததில்லை ஆண் : திருமணம் என்றார் நடக்கும் என்றேன் திருமணம் என்றார் நடக்கும் என்றேன் கொண்டு வந்தார் உன்னை சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ கொடுத்து விட்டேன் என்னை .........! --- உள்ளதை சொல்வேன் ---
-
மருந்து சீட்டு எழுதுவது குறித்து இலங்கை மருத்துவ சபையின் அறிவித்தல்!
இன்னுமா கையெழுத்து ......... கணனியில் எழுதச்சொல்லுங்கள் ........நானே கணனியில் அடிக்கிறன் ..........! 😇
-
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
என்ன இப்படி சொல்லுறியள் . ...... அவர் வியர்வையை புறங்கையால் துடைத்து விட்டுத்தானே முன் கையால் இழுத்து இழுத்து வாட்ச் எல்லாம் செய்து தாறவர் .........பிறகென்ன வருத்தம் . ....... ( அப்பா இருந்த நோயெதிர்ப்பு சக்திதான் இப்பவும் எங்களைக் காப்பாற்றுது )........! 😂
-
“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி
ஆஹா நல்ல கதை . ........ இவர்போல மேலும் சிலர் தும்பு மிட்டாஸ் விற்பவர் ஐஸ்கிரீம் விற்பவர் தள்ளு வண்டியில் முறுக்கு , கடலை மற்றும் வண்ண வண்ணமான நொறுக்குத் தீனிகள் விற்பவர்கள் என்று . .......! 😂 சே . ...யாயினி இன்னும் குழந்தைதான் . .......!
-
கொஞ்சம் ரசிக்க
- குட்டிக் கதைகள்.
Paranji Sankar · வெகு பிஸியான பூந்தமல்லி ஆவடி சாலையில், கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்பு காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனிடம், ஒரு கிழவி "கண்ணு.. இன்னிக்கு பத்து பாக்கெட்டு தான் வாங்கியாந்தேன். ஒன்னே, ஒன்னு தான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்க ராஜா." வயசு எழுபதுக்கு குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப் போன வெள்ளைப் புடவை. இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப் போன ரவிக்கை. கருத்தக் காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை. ஆழ்ந்த கவனம் கலைக்கப்பட்டாதால் உண்டான மெலிதான எரிச்சலில், 'ப்ச்ச்'சென முனகிக் கொண்டே குரல் வந்த திசையில் திரும்பினான் அவன். "என்னாது ஆயா?" "இட்லி மாவு கண்ணு.." "இட்லி மாவு..?" "பொசு பொசுன்னு மல்லீப்பூ மாதிரி வரும். பாக்கெட்டு பதினஞ்சு ரூவா.. பாஞ்சு இட்லி வரும்." "ம்ம்ம்.." "வாங்கிக்கோ நயினா. கட்சீ பாக்கெட்டு. பதினஞ்சு ரூவா கூட வாணாம்.. பத்து ரூவா குடுத்து எடுத்துக்கோ". நான்கைந்து முறை வேண்டாமென்று சொன்ன பின்னும், இட்லி மாவு பாக்கெட்டைக் கையில் திணிக்காத குறையாக மல்லு கட்டி கொடுத்தது அந்தக் கிழவி. மணி மாலை ஆறு தான் ஆகிறது. அதற்குள் ரூமுக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போகிறோம். கொஞ்ச நேரம் இதுகிட்டப் பேச்சுக் கொடுத்து தான் பார்ப்போமே...... "ஆயா உனக்கு பசங்க யாரும் இல்லையா ? ஏன் இந்த வயசுல இப்டீ தனியா கஷ்டப்படறியே?" "கட்டிக்கினவன் குடிச்சே செத்துப் பூட்டான். விட்டுது சனியன்னு நெனைச்சா, ஒன்னே ஒன்னு தான் பெத்தது அதுவும் அவன் அப்பன் வழியிலே உருப்படமா குடிச்சி குடிச்சே சீரழியுது." "ம்ம்ம்.. இந்த மாவை விக்கிறதல ஒரு நாளைக்கு உனக்கு எவ்ளோ தேறும்.." "ஒரு பாக்கிட்டு பதிமூனுக்கு வாங்கறேன். பதினெஞ்சுக்கு விக்கறேன்." "ம்ம்ம்." "நாள் பூரா நாயா பேயா இங்க அங்க ஓடுனாலும் இருவது பாக்கெட்டு போனா, அதுவே தலைக்கு மேல வெள்ளம்." சிக்னலில் க்ராஸிங் நேரத்தில் பிச்சையெடுப்பவர்கள் கூட நாளொன்றுக்கு வெகு எளிதாக இருநூறுக்குக் குறையாமல் பார்த்து விடுகிறார்கள். இந்த கிழவி நாள் முழுவதும் வேகாத வெயிலில் ஏன் இப்படி வெந்து சாகிறது ? ஒரு நொடி மூடிய விழிகளுக்குப் பின்னால் அவனுடைய ஆசை ஆயாவின் முகம் வந்து போனது. மனசு வலித்தது அவனுக்கு. "ஆயா.. மாவைக் குடு இப்டீ.." கிழவியிடம் ஒரு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான் அவன். "கண்ணு சில்ற இல்ல நயினா.." கிழவியின் முகம் சட்டெனத் தொங்கிப் போனது.. "ஆயா.. நீ தினம் இந்தப் பக்கம் வருவேல்ல?" (நாளை மறுநாள் அவன் பெங்களூருக்கு ட்ரெயின் ஏறியே ஆக வேண்டும்.) "ஆமா.." "நான் ஆறு மணிக்கு தெனம் இங்க தான் வந்து டீ குடிப்பேன். காசு தீர்ற வரைக்கும் தினம் ஒரு பாக்கெட்டு குடுத்துக்கிட்டே போ.." "இல்ல நயினா.." "இன்னா இல்ல.?" "ராவைக்கு என் மூச்சு நின்னு போச்சுன்னா உன் துட்டைத் திருப்பிக் குடுக்க நான் இன்னொரு ஜென்மம் எடுக்கணும். அதெல்லாம் வேணாம்." கிழவியின் கண்களில் ஒரு தீர்மானம், ஒரு நம்பிக்கை மின்னியது. "ஆயா.. என்னாப் பேச்சு பேசற நீ..?" "ஆமாம் கண்ணு. போன ஜென்மத்துலே நான் என்னாப் பாவம் பண்ணனோ இப்டீ நாயாப் பேயா அலையறேன். இதுக்கு மேல ஜென்மமே வாணாம் கண்ணு.." அரசாங்கத்தையும், அடுத்தவன் சொத்தையும், ஏன் ஆண்டவன் சிலைகளையே மாற்றுபவர்கள் பிறந்த இதே தேசத்தில் தான், இந்தக் #கிழவியும் பிறந்திருக்கிறாள்..... Voir la traduction- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 அமைதி சங்கர் ·nrStoeodsph4ih17a6agaicm2486tacl14687t564g000img9f01630 t11a · எந்த தந்தைக்கும் இந்த நிலைமை வரக்கூடாது!! 😭" 2017 ஆம் ஆண்டில், கிராமப்புற சீனாவைச் சேர்ந்த ஜாங் லியோங் என்ற தந்தை தனது 2 வயது மகளுக்கு கடுமையான தலசீமியா இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது வாழ்க்கையின் மிகவும் வேதனையான தருணத்தை எதிர்கொண்டார். இந்த சிகிச்சைக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் யுவான் செலவானது, அவரது குடும்பத்தினரால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகும். தங்கள் சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்து நம்பிக்கையை இழந்த பிறகு, தனது மகளை அடக்கம் செய்வதற்காக அல்ல, மாறாக நேரம் வந்தால் "மரணத்திற்குப் பழக" உதவுவதற்காக தனது சொந்தக் கைகளால் அவளுக்கு ஒரு சிறிய கல்லறையைத் தோண்டினார். தந்தையும் மகளும் கல்லறைக்கு அருகில் விளையாடும் இதயத்தை உடைக்கும் காட்சி மில்லியன் கணக்கானவர்களை ஆன்லைனில் ஈர்த்தது. 💔" வீடியோ வைரலான சிறிது நேரத்திலேயே, சீனா முழுவதும் மக்கள் உதவ ஒன்று கூடினர். ஒரு மாதத்திற்குள் அவரது சிகிச்சைக்குத் தேவையான முழுத் தொகையையும் கூட்டு நிதி திரட்டியது. பின்னர், தம்பதியருக்கு மற்றொரு மகள் பிறந்தார், அவளுடைய தொப்புள் கொடி இரத்தம் அவரது சகோதரியின் உயிரை அற்புதமாகக் காப்பாற்றியது, ஒரு அன்பான தொழிலதிபர் மீட்பு செலவுகளை ஈடுகட்டினார். அவரது மகள் இறுதியாக குணமடைந்தபோது, ஜாங் கல்லறையை நிரப்பி அதன் மீது சூரியகாந்தி பூக்களை நட்டார் - விரக்தியிலும் கூட, காதல் புதிய வாழ்க்கையைத் தரும் என்ற நம்பிக்கையின் சின்னம். 🌻" Voir la traduction- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ............! தமிழ் பாடகா் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் ஆண் : { ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் } (2) ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும் ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன் ஆண் : மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் ஆண் : உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும் ஆண் : { ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே } (2) ஆண் : இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள் காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள் ஆண் : தென் பொதிகை சந்தனக் காற்று உன் வாசல் வந்திட வேண்டும் ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும் ஆண் : { கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே } (2) ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன் .......! --- ஆனந்தம் ஆனந்தம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாட்டுக்கு பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் .......! 😍- அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி
அரசியலாவது வெங்காயமாவது ........ தலைவர் எப்போதும் காரியத்திலேயே கண்ணாய் இருக்கின்றார் . .......! 😂- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்
பாராட்டுக்கள் . ........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .......! தமிழ் பாடகர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத ஓ ஓ ஹோ ஓ கொல்லாத ஆண் : என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற ஆண் : காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான் கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான் என்னமோ நடக்குது இதயம் வலிக்குது மனசு தவிக்குது உன்னோடைய வார்த்தைக்காக ஆண் : ஹ்ம்ம் சின்னபுள்ள நேசம் இது பச்சபுள்ள பாசம் இது என் மனசு தாக்கியது உன்னால உன்னால ஆண் : ஹ்ம்ம் ஜாதி மதம் பாா்க்கலையே சம்மதத்த கேட்கலையே காதலுன்னு ஆயிருச்சு தன்னால தன்னால ஆண் : நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் அழுதேன் உன்னுடைய வார்த்தைக்காக ஆண் : ஹோ வெட்டருவா தூக்கிகிட்டு வெட்டிப்பய போலிருந்தேன் வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால கட்டகம்பி தூக்கிகிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன் கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னோடைய பார்வையால ......! --- உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தொட்ட இடம் துலங்க வரும் தாய்குலமே வருக ...........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
கராத்தே பழகுங்கள் ........ தற் பாதுகாப்புக்கு .........! 👍 "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு " தெரியாதா ......... அளவுடன் பார்த்து அளவின்றி ரசிக்கவும் . .....! 😂- நிரூபணவாதி
சோம்பலுக்கு சோம்பல் குடுத்து விட்டு சாம்பிளாக சிலவற்றை எழுதுங்கள் ...........! 🙂 "நிரூபனவாதி " நன்றாக இருக்கின்றது .......! 👍- குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்
இங்கு அனுபவங்களினூடாக சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட ...... பகிர்வுக்கு நன்றி ரசோ ........! - குட்டிக் கதைகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.