Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ் திரைப் பாடல்.......! 😍
  2. நீலவண்ணக் கண்ணா வாடா.......! 😍
  3. வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஏய் போட்டு தாக்கு வரா ஒரு புறா போட்டு தாக்கு வங்க கடல் எறா போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு ஏய் சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு பெண் : ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு பெண் : ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு ஆண் : ஏ ஏறிகிச்சு ஏ பட்டனடி நீ ஏத்துக்கிட்டா நம்ம பாட்டு ரெடி ஆண் : பார்ட்டி யாரு பாத்து தாக்கு ஒன் பார்வையால போட்டு தாக்கு பார்ட்டி யாரு பாத்து தாக்கு பார்வையால போட்டு தாக்கு பாஞ்சிடாம மெல்ல தாக்கு பாவம் சின்ன பள்ளத்தாக்கு ஆண் : வரா பாரு மீனா இவ வறுத்து வெச்ச மீனா அட வந்துடுச்சு தானா ஒரு குயிலு குப்பம் கானா பெண் : ஹே பார்த்தா பாத்துக்க சேர்த்தா சேத்துக்க ஏத்தா ஏத்துக்க தோத்தா தோத்துக்க......! --- ஏய் போட்டு தாக்கு வரா ஒரு புறா---
  4. உள்ளதை உள்ளபடியே எழுதிக் கொண்டு செல்கிறீர்கள்......நன்றாய் இருக்கு தொடர்......! 👍
  5. பிரியாணி இதுவும் நல்லா இருக்கே.....செய்து பாருங்கள்.......! 👍
  6. சக்கரை பந்தலில் தேன்மழை பொழியுது.......! 😍
  7. வணக்கம் வாத்தியார்.......! யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல நான் பதினெட்டு பட்டிக்கு ராசா என் நகம் பட்டு மலராதோ ரோசா நான் பதினெட்டு பட்டிக்கு ராணி என எங்காச்சும் கூட்டிட்டு போ நீ பசிக்காம தொட மாட்டேன் ருசிக்காம விட மாட்டேன் பொசுக்குன்னு தர மாட்டேன் இசுக்குன்னு விட மாட்டேன் மூவாறு நீயே அட நாளாறு நானே பசி கோளாறு தானே வந்துடுச்சி தேளாகத்தானே விரல் மேலேரத்தானே உடல் கூழாகத்தானே வெந்துருச்சி வீனா வெக்கப்படும் கிளியே பூனா தொட்டுடுச்சி உரிய மீச குத்திடுச்சு பயலே ஆசை பொத்தி வச்ச புயலே நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் நீ பின்னாலே வந்தா நான் தன்னால தாரேன் மல மேலே மழை தூர அல மேல அல மோதும் ---யே வச்சிக்கவா வச்சிக்கவா வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல---
  8. செல்லக்கிளியே மெல்லப் பேசு......! 😍
  9. வணக்கம் வாத்தியார்......! ஆண் : கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன் ஆண் : கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன் ஆண் : ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க இடையில் தனிமை தளும்புதே நதியாய் ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம் ஆண் : உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம் ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம் கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள் ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா......! --- ஓஹோ முழுமதி அவளது முகமாகும்---
  10. நாகபூசணி அம்மனையே அலறவிட்ட அக்காவுக்கு பாராட்டுக்கள்......! நான் அங்கும் சரி இங்கும் சரி எந்தக் கோவிலுக்கு போனாலும் அன்னதானம் சாப்பாடு கொஞ்சமாவது கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் வருவேன்.....சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கு கொஞ்சம் வேலைகளும் செய்வதுண்டு......! 😁
  11. கவியரசர் கண்ணதாசன் KAVIYARASAR KANNADASAN · Rejoindre Alagu Muthu · · நடிகையின் வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன்!.. கவிஞருக்கு குசும்பு அதிகம்தான்!… kannadasn கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், தத்துவம், சோகம், நம்பிக்கை, விரக்தி, அழுகை, உற்சாகம், ஏமாற்றம் என தமிழ் சினிமாவில் வந்த பல சூழ்நிலைகளுக்கும் கண்ணதாசன் மிகச் சிறப்பான முறையில் பாடல் வரிகளை அமைத்து விடுவார் கண்ணதாசன் தன் சொந்த வாழ்வில் நடக்கும் பல விஷயங்களையும் பாடல் வரிகளில் புகுத்திவிடுவார். யார் மீது கோபம் இருந்தால் கூட அந்த பாட்டில் காட்டிவிடுவார். அல்லது, அன்று யாராவது சொன்ன விஷயத்தையே முதல் வரியாக்கி பாடலை எழுதிவிடுவார். அன்னை இல்லம் படத்தில் இடம் பெற்ற பாடல் எண்ணிரண்டு பதினாறு வயது. இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். கே.வி.மகேதேவன் இசையில் மனதை மயக்கும் மெலடியாக இந்த பாடல் அமைந்தது. இந்த படத்தில் சிவாஜியும், தேவிகாவும் நடித்திருந்தனர். தேவிகாவை மனதில் நினைத்து கடற்கரையில் சிவாஜி பாடுவது போல இந்த பாடலை எடுத்திருப்பார்கள். இந்த பாடல் வரிகளை கேட்ட அப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் ‘ஏன் கவிஞரே.. தேவிகாவை பார்த்தால் பதினாறு வயது போலவா தெரிகிறது?’ எனக்கேட்டு சிரித்தார்களாம். அதற்கு பதில் சொன்ன கண்ணதாசன் ‘நான் எங்கே அப்படி சொல்லியிருக்கிறேன். பாடல் வரிகளை நன்றாக படித்து பாருங்கள். எண் இரண்டு பதினாறு.. *அதாவது இரண்டு பதினாறு சேர்ந்து 32 வயது என்றுதான்* சொல்லியிருக்கிறேன்’ என்றாராம். அதைகேட்டு இயக்குனரும், தயாரிப்பாளரும் அசந்து போனார்களாம். அப்போது நடிகைகளெல்லாம் 30 வயதுக்கு மேல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது........!
  12. Senthuran Tco · *கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்:* 1. *குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்...* 2. *சமூக மதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...* 3. *வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது...* 4. *வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது...* 5. *சீரழிந்த வாழ்க்கைமுறை - மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...* 6. *சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...* 7. *ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தைப் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...* 8. *பிரமாண்டத் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...* 9. *வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...* 10. *தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் - குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.....* 11. *வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...* *நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்.* *இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.* *இது சிந்திக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி.* *நம்மில் பெரும்பாலானோருக்கு இவை பொருந்தும்.*.....!
  13. 🙏KALIYUGAVARADHAN🙏 · Rejoindre Raji Raji · · நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர். தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை... பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன். வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார். நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்ஸ் எனக்கு பறிமாறினார்கள். மிகவும் சுவையான உணவு நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர். அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார். எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையலறைக்கு அறிவுறுத்தினார். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள் அது தான் #வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே. அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்... கவலை கொள்ளாதீர்கள்... கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை தலைமை சமையல்காரர் கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும். நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது.......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.