Jump to content

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5650
  • Joined

  • Last visited

  • Days Won

    67

Everything posted by Justin

  1. நானே சொல்லி விட்டால் எப்படி உங்கள் மனதில் தங்கும்? எனவே தான் நீங்களே தேட வேண்டும்! எனக்குத் தெரியாது என்று வைத்துக் கொண்டு தேடுங்கள், அது தானே உங்களுக்கு மகிழ்ச்சி தரும்? ரிவி பேட்டியெல்லாம் எதற்கு ? உங்களால் தேட முடிந்தால் அதை நீங்களே கண்டு கொள்ளலாம்!(ஆனால் பாதியில் தூங்கி விடுவீர்கள், பார்க்க ஆரம்பித்தால்! உங்கள் ஏரியா அல்ல அதில் இருப்பது!)
  2. நான் உதாரணம் காட்டிய போதே சீனக் கடனும் முதலீடும் பெறும் நாடுகளைத் தான் போட்டேன்! இருந்தாலும் இலங்கை இவையெல்லாவற்றிலிருந்தும் வித்தியாசங்கள் கொண்டது, அவர் சொன்ன பதில் சரி. திறமையான கல்விப் பெற்ற ராஜதந்திரிகள் தான் அந்த பல வீடுகளை ஒரே நேரத்தில் சமாளிக்க காரணம்!
  3. ஓம் பெருமாள் எனக்கும் தெரியவில்லை, அதனால் தான் உங்களிடம் அறிந்து கொள்ளலாம் என்று கேட்டேன், உங்களுக்கே தெரியவில்லையென்றால் யாரிடம் போவது?😭 (அது சரி மேலே விசுகர் நச்சென்று போட்டிருக்கிறார் ஒரு பதில் பார்த்தீர்களா?, இனியாவது ஐந்து வித்தியாசங்கள்?)
  4. வெனிசுவெலாவுக்கும் சிறிலங்காவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சுப் பாருங்கோ, ஏன் சிறி லங்காவுக்கு அந்த நிலை வராதென்று விளங்கும்! வெனிசுவெலா மட்டுமா? சிம்பாப்வே, ஓரளவுக்கு சூடான், எத்தியோப்பியா, கொங்கோ என ஒரு பெரிய பட்டியலே இருக்கு. என்ன வித்தியாசம் சிறிலங்காவில?
  5. விசுகர், "கிண்டினவன் பொங்கலை விட தண்டினவன் பொங்கல் அதிகம்" என்றொரு சிலேடை மொழி ஊரில் கேள்விப்பட்டிருப்பீங்கள். அதனால் தான் சிறி லங்கா போல உதவியிலும் நீண்டகாலக் கடனிலும் ஒடும் நாடுகள் ஒரு நாளும் பொருளாதார சரிவினால் மூழ்கிப் போவதில்லை!
  6. இப்போதும் இலங்கையின் கொரனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பல மேற்கு நாடுகளை விட பல மடங்கு சிறந்தது. இதற்கு கோத்தாவின் இரும்புக் கரம் குறித்த பயம் காரணமா? இருக்கலாம், ஆனால் முக்கிய காரணம் இலங்கையில் இருக்கும் பொதுச் சுகாதார ஊழியர்களும் மருத்துவர்களும் முழுமையாக விஞ்ஞானத்தை நம்பி, பின்பற்றுகின்றனர். அனேக இலங்கை மக்களும் சோசியல் மீடியாவில் வரும் செய்திகளை விட பிரிண்ட் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி நடக்கின்றனர். பொருளாதாரம் அடி வாங்கும், கேஸ்கள் கூடும், மரணங்கள் நூற்றுக் கணக்காக வரலாம். ஆனால் பெருமாளின் vision அவரது தலைக்குள் இருக்கும் காட்சி மட்டுமே!
  7. சரி தான்! முன்னர் யாரோ சொன்னது போல, இந்தத் திரிக்கும் சனி பிடித்து விட்டது!
  8. தாயக மக்களின் தேர்தல் தெரிவுகளுக்கு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டால் யாரை அவர்கள் தேர்ந்திருக்கிறார்கள் என்றும் புரிந்து விடும்! ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள் எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்! ஒரு அமைப்பின் legacy குறித்துக் கவலைப் பட வேண்டிய காலம் தாயகத்தில் மலையேறி விட்டது எனவே நினைக்கிறேன்!
  9. ரதி, விற்றமின் பி17 ஐயும் சில தாவரங்களையும் உண்டால் அவர்கள் பாசையில் "கேன்சர் குறைபாடு" வராது என்பது இன்றைய காலத்தில் மூடநம்பிக்கை தான்! சில நூறு வகையான புற்று நோய்கள் சில நூறு காரணங்களால் வருகின்றன. அந்த பதிவை எழுதியவருக்கு புற்றுநோய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோய் என்பதே தெரியாது! இவை ஆபத்தை ஏற்படுத்தும் போலி நம்பிக்கைகள், இது போன்ற போலி ஆலோசனைகளால் புற்று நோய்க்கு மருந்தெடுக்காமல் நோய் முற்றி இறந்தவர்கள் இருக்கிறார்கள். எனவே தான் களவிதிப்படி அகற்றினர் என நினைக்கிறேன்!
  10. அண்ணை, அனுபவம் என்றால் எத்தனை பேரின் அனுபவம் உங்களுக்கு சரியான ஆலோசனையைத் தரும் என நினைக்கிறீர்கள்? 3, 30, 300? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது உடல் வாசி என்கிற genotype ஐப் பொறுத்து ஒவ்வொரு மாதிரியான அனுபவம் இருக்கும்! இதை சமன் செய்து ஒரு முடிவை அணுகத் தான் ஆயிரக் கணக்கானோரின் மருத்துவத் தகவல்களை திரட்டி ஆய்வுகள் செய்வது. அந்த ஆய்வுகளின் படி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக ஒரு ஆய்வு முடிவும் இல்லை! இதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக நான் எழுதிய நாட்களில் , ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடிக்க ஒரு மணிநேரம் பிடிக்கும். தகவல்களைச் சரிபார்க்க இன்னுமொரு மணிநேரம் எடுக்கும்! மற்றவர்களின் உடல் நலத்திற்கு நிறுவப் பட்ட விஞ்ஞானத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டுமென்று எடுத்துக் கொண்ட என் முயற்சி இங்கே மூன்று பேர் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் ஜோக்காக இருந்திருக்கிறது என்பது எனக்கு ஒரு eye-opener ! இதை வெளிக்கொணர்ந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்!
  11. இது இந்த ஆண்டின் ஜனவரியில் அமெரிக்காவின் நம்பிக்கையான AHA அமைப்பின் Circulation என்ற விஞ்ஞான சஞ்சிகையின் 16 ஆய்வுகளை செய்த meta-analysis முடிவு: https://www.ahajournals.org/doi/10.1161/CIRCULATIONAHA.119.043052
  12. அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான ஆய்வுகளும் இது வரை வரவில்லை! உடலின் மேற்பரப்பான தோலுக்கு தேங்காய் எண்ணை நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் saturated fat தோலில் இலகுவாகத் தங்கி மினு மினுப்பூட்டும்! இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேங்காயெண்ணையில் இருக்கும் saturated fat கொலஸ்திரோலை அதிகரிக்கும் என்பதே இது வரையில் கண்டறியப் பட்ட தகவல். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் அபிப்பிராயம் கீழே: https://www.health.harvard.edu/heart-disease-overview/coconut-oil-heart-healthy-or-just-hype#:~:text=It is said that coconut,attack and other cardiovascular events.
  13. நேக்கும் தான் தலை சுத்திப் போட்டுது! சமரசமாகியாகியாச்சு! ஆனா வாத்தியார் இப்படி வந்து இனி மயக்க மருந்து தர மாட்டெனென்று சத்தியம் செய்து தர வேண்டும்! 😎
  14. இது நீங்கள் எழுதியது! நான் சொன்னது களவிதியை மீறாமல் நான் எல்லாவற்றையும் கேள்வி கேட்பேன் என மட்டுமே! எல்லாம் என்பதன் வரையறை என்னை பொறுத்த வரையில் பொது அமைப்புகள், கொள்கைகள், கருத்துகள்! ஆனால், "எல்லாம்" என்பது சிலருக்கு மற்றையோரின் திருமண வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் முதல் ஒருவரின் தொழில் அவரது படிப்பினால் அவருக்கு ஏற்படும் இயல்புகள் என அர்த்தப் படுத்தப் படுவதால் தான் இந்தப் பிரச்சினையே! உங்களுக்கு உண்மையிலேயே தனி மனித தாக்குதல்களை நிறுத்தும் மானசீக அக்கறை இருந்தால் சம்பந்தமில்லாத திரிகளில் வந்து எள்ளல்கள் விடும் கருத்தாளர்களைத் திருத்துங்கள்! முதலில் உங்களையே நீங்கள் திருத்த வேண்டியிருக்கும்! ஒரு செய்தியைப் பற்றி நான் கருத்து சொன்னால், வந்து "பேச்சிலர் டிகிரி, டாக்டரேற் ." என்று நக்கல் செய்ததையே திரும்பி ஒருதரம் போய் வாசித்து விட்டு உங்கள் முகங்களைக் கண்ணாடியில் பாருங்கள்! பிறகு மற்றையோருக்கு fire breathing ஆக ஆலோசனை கொடுங்கள்!
  15. மருதர், ஓம். இது ஒரு உறுப்பினர் என்னுடைய தொழிலை நக்கலாக விளித்து எழுதியமைக்கு எழுதிய பதில்! அது முறையிடப் பட்டு அகற்றப் பட்டது. அதை நீங்கள் பார்த்து விட்டுப் பேசாமல் போயிருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லை! இரண்டில் எது நடந்திருந்தாலும் இப்படி ஒரு தலைப் பட்சமாக வந்து குற்றம் சாட்டும் தகுதி உங்களுக்கு இல்லை! அப்படியான தனி நபர் தாக்குதல்கள் செய்வது, பிறகு அதற்கான பதில்களை இப்படி வந்து குற்றம் சாட்டி நீட்பிப்பது இவையெல்லாம் கருத்துகளை தரவுகள், டீசண்டான மறுப்புகள் மூலம் எதிர் கொள்ள முடியாத வெப்பிசாரத்தில் எதிர் கருத்தாளரை வெறுப்பேற்றி மௌனமாக்கும் ஒரு திட்டத்தின் பாகம் என்று அறிந்திருக்கிறேன்! எனவே, கருத்தில் தவறிருந்தால் மட்டுகளுக்கு அறிவியுங்கள்! அவர்கள் நீக்குவர்! மற்றபடி இந்த ஆக்ரோஷம் அச்சுறுத்தல் எல்லாம் என்னைக் கட்டுப் படுத்தாது! கள விதி மீறலில்லாமல் எதையும் நான் எழுதுவேன்!
  16. அனேகமாக நீங்கள் உங்கள் முயற்சியில் வென்று விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்! என்ன செய்தாலும் நீங்கள் வந்து சுவரில் மூத்திரம் பெய்வதைத் தடுக்க இயலவில்லை!
  17. இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா?
  18. அன்புள்ள நெடுக்கு, அண்மைக்காலத்தில் நடந்த விவாதங்களில் தேவையற்று நான் உங்களைச் சங்கடப் படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! இது இறுதியாக சுமந்திரன் பற்றிய விவாதத்தில் நடந்த பரிமாற்றங்களுக்கும் பொருந்தும்! இனி மேல் இப்படி நடக்காது என உங்களுக்கு உறுதி தருகிறேன்! ஆரோக்கியமான விவாதங்களூடு இணைந்திருப்போம்!:)

    அன்புடன்
    ஜஸ்ரின்

  19. இரண்டாம் உலகப் போரின் போது, ஸ்ராலின்கிராடில் ஜெர்மன் படையினரை கிட்ட வரவிட்டு, அதிரடியாக ரஷ்ய செம்படையினர் ஒரு பாரிய தாக்குதலை நடத்தினர். அந்த நடவடிக்கையின் பெயர் என்ன?
  20. மீன், தேசிக்காய், வெங்காயம் எல்லாம் சரி, முக்கியமான "அயிட்டம்" எங்க நைனா காணோம்?? :D
  21. நெடுக்ஸ், நீங்கள் சந்தேகப் படுவது ஏனென்று புரிகிறது. வன்னியில் விமானத்தாக்குதல் தொடர்வது உண்மை. நான் நினைக்கிறேன் தானியங்கி விமான எதிர்ப்பு எனப் புலிகள் சொல்லி விட்டதால், அந்தப் பக்கம் தான் புலிகளின் ஓடு பாதை இருப்பதாக சந்தேகித்து எப்படியும் அழித்து விட அதே இடத்திலல்லவா தாக்க வேண்டும்?. ஆனால் இரணைமடுவைத் தவிர்த்துத் தாக்குதல் தொடர்வது ஏதோ நேற்று நடந்ததைத் தெளிவாக்குகிறது. மேலும், தமது மறுப்பை மேலும் உறுதிப்படுத்தவும் தாக்குதலைத் தொடரக்கூடும். பாருங்கள் நீங்கள் தமது மறுப்பை நம்பும்படி செய்து விட்டார்கள். மேலும் எனக்குத் தனிப்பட்ட தொடர்புகளூடாகக் கிடைத்த தகவலின் படி ஒரு மிக் விமானம் திரும்பி வரவில்லை. அது வடக்கின் தளங்களிலும் தரையிறக்கப்படவில்லை. இந்தத் தகவலின் மூலம் சிறி லங்கா வான்படைக்குள்ளிருந்து. யார் எவர் எனப் பெயர் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். கேட்டாலும் இதற்கு மேல் நான் சொல்லப் போவதில்லை.
  22. காவடி சேர், யார் நம்பினது இதையெல்லாம்? சிங்களப் பைலட்டாயிருந்தால் அவனுக்கு இந்தத் தப்பும் வழிமுறையெல்லாம் தெரியாது என்று நிச்சயமாக நம்பலாம்!
  23. பாதுகாப்பு அமைச்சுக்கு இன்னும் தகவலே கிடைக்கவில்லைப் போல! ஒரு தொழில்நுட்பக் கோளாறு கூட தமது விமானங்களில் ஏற்படவில்லையாம்! அதுவும் சரி தான், பொட்டென்று போட்டால் தொழில்நுட்பக் கோளாறும் வராது அதைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குச் சொல்லவும் அவகாசம் இருக்காது. நாளை காலையில் விமானங்களை எண்ணும் போது தான் தெரிய வரலாம்! ஈழவன் ஐயா! பைலட் "புட்டுகிட்டான்" என்று பார்த்தால் "எஜெக்டரில்" பாய்ந்து தப்பித்திருப்பான் போலிருக்கே?
  24. பிபிசி இன்னும் வாய் திறக்கவில்லை ஏன்? ஆமி வெப் சைட்டில் இன்னும் வரவில்லையா? அல்லது பேண்ட புள்ளேயின் அடுத்த பேட்டிக்காகக் காத்திருக்கிறார்களா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.