Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழித்து விடுவோம் என்பதே ஈரானின் தாரக மந்திரம். இவ் இலக்கினை நோக்கியே ஈரான் தனது இராணுவ, ஆயுத பலத்தினை உருவாக்கி வந்திருக்கிறது. இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேலினைச் சூழ்வுள்ள இஸ்லாமிய நாடுகள், மற்றும் தனது முகவர் அமைப்புக்களை உருவாக்கி, வள‌ர்த்து, இராணுவ மயப்படுத்தி வந்திருக்கிறது. பலஸ்த்தீன அமைப்புக்களான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புள்ளா, ஆசாத்தின் சிரிய அரசு, ஈராக்கின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், யெமெனின் ஹூத்தீக்கள் என்று பல முகவர் அமைப்புக்களை இஸ்ரேலின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துமாறு ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆக 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம் ஆகியவற்றை நடத்தி இஸ்ரேலினை முற்றாக அழித்துவிட சூழவுள்ள இஸ்லாமிய நாடுகள் முயன்று, தோற்றதன் பின்னர், நவீன காலத்தில் ஈரான் தனது முகவர்களைக் கொண்டு இவ்வாக்கிரமிப்பினை நடத்த முயல்கிறது. யூத இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சுமார் ஆறு மில்லியன் மக்கக்ளை இழந்திருந்தது. கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனக்கொலையாக இது பார்க்கப்படுகிறது. இன்று வெறும் 9 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டு, 20,000 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் நிச்சயமாக இன்னொரு பாரிய இனக்கொலையாகவே முடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான், தமது இனம் இரண்டாவது முறையாகவும் இன்னொரு இனக்கொலையினைச் சந்தித்துவிடக் கூடாதென்பதில் யூதர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். (கிறீஸ்த்துவிற்குப் பின்னரான காலத்தில் அன்றைய இஸ்ரேலில் இருந்து அகதிகளாக உலகெங்கும் அடித்துவிரட்டப்பட்ட யூதர்களைத் தேடித்தேடி மீளவும் தமது சரித்திர நிலத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக முயன்று வருகின்றன. இதன் ஒரே நோக்கம் யூதவினம் அழியாது, ஓரினமாக ஓரிடத்தில் வாழவேண்டும் என்பதுதான்). தனது இனத்தை முற்றாக அழித்தும், தனது சின்னஞ்சிறிய நாட்டை முற்றாக ஆக்கிரமிக்கவும் மட்டுமே ஒரு நாடு அணுவாயுதத்தினைத் தயாரிக்கின்றது என்றால், அவ்வணுவாயுதத்தை எப்பாடுபட்டாவது அழித்துவிட பாதிக்கப்பட்ட அவ்வினம் முயல்வதில் தவறு இருக்கின்றதா? ஈரானினால் உருவாக்கப்பட்டு வரும் அணுச்சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றது? தனது சக்தித் தேவைக்காக வெறும் 1 வீதத்தினை மட்டுமே அணுச்சக்தியில் இருந்து பெற்றுக்கொண்டுவரும் ஈரானிற்கு மிகப்பெரும் அணுச்சக்தியைக் கொடுக்கப்போகும் பல அணுவாலைகள் எதற்கு? தனது நிலப்பரப்பில் பெருமளவு எண்ணெய்வளத்தையியும், இயற்கை வாயுவையும் கொண்டிருக்கும் ஈரான், அணுச்சக்தியில் மிகுந்த கவனம் செலுத்த விரும்புவது எதற்காக? அணுவாயுதம் ஒன்றினை உருவாக்குவதற்கான மிகத்தூய . செறிவான யுரேனியத்தை உருவாக்கியும் சேமித்து வைப்பது எதற்காக? மருத்துவத் தேவைக்காகவும், சக்தித் தேவைக்காகவும் என்று கூறிக்கொண்டே இத்தேவைகளை நிவர்த்திசெய்யும் அளவினை விட பலமடங்கு சக்திவாய்ந்த யுரேணியம் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு வருவது எதற்காக? தான் உருவாக்கும் அணுச்சக்தி வெறுமனே மருத்துவத் தேவைக்காகவும், மின்சாரத்திற்காகவும் மட்டும்தான் என்றால், இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிப்போம் எனும் கொள்கையினை ஈரானின் முல்லாக்கள் இதுவரை கைவிடாது இருப்பதும், அக்கொள்கையினை நோக்கி தமது கவனத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதும் எதற்காக? அணுவாயுதத்தை தயாரிக்கும் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் சுமூகமான முறையில் பயணிப்பதற்கு ஈரானிற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஒபாமாவின் ஆட்சியில் அணுவாயுத நோக்கத்தினைக் கைவிட்டு ஏனைய துறைகளில் கவனம் செலுத்தவென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், 2006 இல் எதிரிகள் எவரிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தனது அணுவாயுதத் திட்டத்தைப் பாதுக்காகவென‌ போர்ட்டொவில், மலைகளுக்கு நடுவில், 300 அடிகள் ஆளத்தில், மிகப்பாதுகாப்பான அணு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, அணுவாயுத உற்பத்திக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருகிறது. இந்த அணு ஆராய்ச்சி நிலையம் உட்பட மூன்று அணுவாராய்ச்சி நிலையங்களே இன்று தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் சர்வாதிகாரிகளிடமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமும் இருக்கும் மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மனித குலத்தின் இருப்பிற்கே ஆபத்தானவை. வட கொரியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இதற்காகக் குறிப்பிடலாம். ஏனெறால், தமது சொந்த நலனிற்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மதவெறியினால் உந்தப்பட்டும் இவர்கள் தம்மிடமிருக்கும் நாசகார ஆயுதத்தினை எப்போது வேண்டுமானாலும் பாவித்துவிடுவார்கள். ஆகவேதான் இவர்களிடம் அணுவாயுதங்கள் உட்பட நாசகார ஆயுதங்கள் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியும். தவறேயில்லை.
  2. https://edition.cnn.com/world/live-news/israel-iran-conflict-06-22-25-intl-hnk https://www.youtube.com/watch?v=1ewMRyeK1x0
  3. ஈரானின் மூன்று அணுவாயுத நிலைகள் மீதும் அமெரிக்கா பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அமெரிக்காவின் ஆறு ராட்சத பி 2 ரக விமானங்களைப் பயன்படுத்தி ஒவ்வொன்றும் 30,000 இறாத்தல்கள் நிறைகொண்ட 12 பங்கர் பஸ்ட்டர் குண்டுகளைப் பயன்படுத்தி இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. https://edition.cnn.com/world/live-news/israel-iran-conflict-06-22-25-intl-hnk BBC NewsUS bombs Iranian nuclear sites as Trump says Tehran must...Trump says three locations, including Fordo, were struck as Washington joins Israel's attack on Tehran's nuclear programme.https://www.reuters.com/world/israel-iran-live-trump-address-nation-after-us-bombs-nuclear-sites-iran-2025-06-22/ https://www.cbc.ca/news/world/israel-iran-1.7567750
  4. நீங்கள் இணைத்த எக்ஸ் தள வீடியோவைப் பார்த்தவுடன் ஒருகணம் உண்மையென்று எண்ணிவிட்டேன். ஆனால் அது வீடியோ கேம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி என்று பின்னர்த்தான் படித்து அறிந்தேன். என்றாலும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வீடியோ கேமின் இப்பகுதிக்கும் அதிக வேறுபாடில்லை. ஒருவேளை இதனை வைத்துத்தான் இத்தாக்குதலை அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். ரஸ்ஸியாவின் நீண்டதூர குண்டுவீச்சு விமானங்களின் பலத்தில் 34% வீதம் அழிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றரை வருடங்களாகத் திட்டமிட்டு, சிறிய ட்ரோன்களை ரஸ்ஸியாவினுள் கடத்திவந்து, அங்கிருந்தே அவற்றினை இயக்கி அழித்திருக்கிறார்கள். கில்லாடிகள்தான். புலிகளின் தாக்குதல் உத்திகளும் உக்ரேனியர்கள், பலம்பொறுந்திய ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடத்தும் தாக்குதல்களும் ஒரேமாதிரியானவை. குண்டு நிரப்பிய படகுகளால் மோதுவது, குண்டுநிரப்பிய ட்ரோன்கள் (இது புலிகளுக்குக் கிடைக்கவில்லை) கொண்டு அழிப்பது என்று தமக்குக் கிடைக்கும் வளங்களைப் பாவித்து எதிரியை திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். ரஸ்ஸியாவுக்கு விழுந்த அடியைப் பார்த்து ரஸ்ஸியர்கள் என்ன சொல்கிறார்களோ எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்தியாவில் பலர், "ஏன் ரஸ்ஸியா தனது விஸ்வரூபத்தைக் காட்டவில்லை, ஏன் புட்டின் ஐயா பொறுமை காக்கிறார்? ஏன் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை முழுப்போராக மாற்றவில்லை? ஏன் அணுவாயுதத்தைப் பாவிக்கவில்லை?" என்று கோபம்கொண்டு கேள்விக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள். விட்டால் புட்டின் ஒரு கையை பின்னால் மடித்துக்கொண்டு, மற்றைய கையினால் மட்டுமே போராடி வருகிறார் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏனென்றால், இந்திய அமைதிப்படை அப்படித்தான் இலங்கையில் போராடியதாம்! நெல்லியடி மத்திய கல்லூரித் தாக்குதலில் பாரவூர்தியை கல்லூரிக் கட்டடத்தின் உட்பகுதிக்குள் செலுத்திவிட்டு சாரதி வெளியேறியேறி வந்துவிடவேண்டும் என்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டமாம். ஆனால் பாரவூர்தி உள்ளே வருவதைப் பார்த்துவிட்ட இராணுவத்தினர் அதன்மீது தாக்குதல் நடத்தவே அதனை எப்படியாவது உள்ளே செலுத்திச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு, சாவு வருமென்று தெரிந்துகொண்டே மில்லர் அவர்கள் தொடர்ந்து உள்ளிருந்தார் என்று அறிந்தேன். இதுபற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்.
  5. கட்டுநாயக்க மற்றும் அநுராதபுரம் எல்லாளன் நடவடிக்கை ஆகியவையும் நினைவிற்கு வந்துபோகின்றன. ஒரே வித்தியாசம் இது ட்ரோன்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. எமது தாக்குதல்கள் போராளிகள் மூலம் நடத்தப்பட்டவை. Video appears to show Ukraine drone attack in Russia
  6. வரிசையாக ரஎரிந்துகொண்டிருக்கும் ரஸ்ஸியாவின் நெடுந்தூர குண்டுவீச்சு விமானங்களின் ஒளிநாடா இணைக்கப்பட்டிருக்கிறது. Ukraine-Russia war live: Drones 'emerged from trucks' before strikes on bombers during major attack in Russia - BBC News ரஸ்ஸியாவின் நான்கு விமானத் தளங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 41 குண்டுவீச்சு விமானங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. தனது விமானத்தளங்கள் தாக்கப்பட்டதை ரஸ்ஸியா ஒத்துக்கொண்டிருக்கிறது. Watch moment Ukrainian drone strikes 'enemy bombers' after audacious attack inside Russia
  7. மாரடைப்பு ஆனாலும் பால்ராஜ் எதிர்வுகூறியதன்படி நிகழ்வுகள் நடந்தேறவில்லை. அவர் எதிர்வுகூறி சரியாக மூன்று வருடங்களின் பின்னர், வைகாசி 2009 இல் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். இப்போரின் இறுதிக் கட்டங்கள் தளபதி பால்ராஜின் மாவட்டமான முல்லைத்தீவிலேயே இடம்பெற்றிருந்தன. ஆனால் அன்று அவர் உயிருடன் இருக்கவில்லை. போர் முடிவடைவதற்கு ஒருவருடத்திற்கு முன்னர் அவர் இயற்கை எய்தியிருந்தார். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்றில் இருதய நோய்க்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவேளை 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மாரடைப்பினால் அவர் இயற்கை எய்தினார். புலிகளின் இராணுவ ரீதியிலான தோல்வியினைத் தன் கண்களால் எதிர்கொள்ளும் அவலம் அவருக்கு இருக்கவில்லை. அவரது மறைவின் பின்னர் தலைவரினால் அவருக்கு பிரிகேடியர் எனும் நிலை வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருந்தது. முற்றும் நன்றி டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம்
  8. தீச்சுவாலை நடவடிக்கை உலக இராணுவ வல்லுனர்களால் அதிசயித்துப் பார்க்கப்படும் ஆனையிறவு படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டு சரியாக ஒருவடத்தின்பின்னர் தளபதி பால்ராஜ் அவர்களின் தடுப்புச் சமர் வல்லமையின் உச்சத்தினை எம்மால்க் காணமுடிந்தது. 2001 ஆம் ஆண்டு சித்திரை 24 ஆம் திகதி ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தால் பாரிய முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட தீச்சுவாலை இராணுவ நடவடிக்கைக்கெதிராக பால்ராஜ் அவர்கள் நடத்திய தீர்க்கமான எதிர்ச்சமரே இச்சண்டையாகும். ஆனையிறவைக் கைப்பற்றும் கனவுடன் இராணுவ முன்னரங்கப் பகுதிகளான கிளாலி - எழுதுமட்டுவாள் - நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் ஆனையிறவு நோக்கி முன்னேறத் தொடங்கினர். ஆனால் முன்னேறிய இராணுவத்தினர் மீது கடுமையான எதிர்த்தாக்குதல்களை நடத்திய புலிகள் இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர். அதிசயிக்கும் ஆனையிறவு வெற்றி மற்றும் தீச்சுவாலை நடவடிக்கையினைத் தோற்கடித்ததன் மூலம் ஆனையிறவைத் தக்கவைத்துக்கொள்வதில் அவர் ஈட்டிய தீர்க்கமான வெற்றி ஆகியவற்றின் மூலம் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவரான பால்ராஜ் அவர்களின் புகழ் மேலும் பரவத் தொடங்கியது. இதன்மூலம் தளபதி பால்ராஜ் அவர்கள் தமிழ் மக்களிடையே அசாதாரண வீரனாகப் போற்றப்படத் தொடங்கினார். மோசமாகிச் சென்ற அவரது உடல்நிலை எப்படியிருந்தபோதும் பால்ராஜின் உடல்நிலை சிறிது சிறிதாக மோசமடையத் தொடங்கியிருந்தது. பலவருடங்களாக இருதய நோயினால் அவஸ்த்தைப்பட்டுவந்திருந்த பால்ராஜ் அவர்கள் இறுதிப்பகுதியில் அந்நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு மேலதிகமாக சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயினாலும் அவர் அவஸ்த்தைப்பட்டு வந்தார். புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த 2003 பகுதியில் அவர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் மருத்துவ சிகிச்சைக்கான சிங்கப்பூரிற்குச் சென்றார். அங்கு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர் நாடு திரும்பும்போதே சில இலங்கை இராணுவ அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் சூழ்ந்துகொண்டது நடந்திருந்தது. நட்புரீதியில் அமைந்திருந்த இந்த நிகழ்வு குறித்த சில விடயங்களை நான் இக்கட்டுரையின் முற்பகுதியில் பகிர்ந்திருந்தேன். மோசமாகி சென்றுகொண்டிருந்த உடல்நிலையினையடுத்து பால்ராஜ் அவர்கள் மந்தகதியிலான வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக்கொண்டார். புலிகளின் இராணுவக் கல்லூரியில் கற்றுவந்த அதிகாரிகளுக்கு விரிவுரைகளை வழங்குவதிலும், அவர்களைப் பயிற்றுவிப்பதிலும் அவர் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். இளம் அதிகாரிகளுக்கு இராணுவ உத்திகள், திட்ட‌மிடல்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல்கள் போன்றவற்றைக் கற்பிப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. இதைவிடவும் புலிகளின் கொமாண்டோ வீரர்களுக்கும், விசேட படையினருக்கும் அவர் பயிற்சிகளை வழங்கி வந்தார். புலிகளின் பல பயிற்சிமுகாம்களுக்குப் பயணித்த பால்ராஜ் அவர்கள் அவ்வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராகவும், நடைமுறைச் செயற்பாட்டு வித்தகராகவும் பணியாற்றி வந்தார். தளபதி பால்ராஜ் அவர்களிடம் கற்றுக்கொள்வதைப் போராளிகள் பெரும் பாக்கியமாகவே கருதிவந்தனர். பின்னாட்களில் உடல்நிலை மிகவும் மோசமாகிச் சென்றபோது பால்ராஜ் அவர்கள் சிறிது சிறிதாக தனது நாட்களின் பெரும்பகுதியை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலேயே கழிக்கத் தொடங்கினார். ஆனால் முன்னரங்கக் களத்தில் அவரது சேவைக்கு எப்போதுமே தேவை இருந்துகொண்டுதான் இருந்தது. மணலாறுப் பகுதியில் புதிதாகக் களமிறக்கப்பட்ட இராணுவத்தினரின் 59 ஆவது படையணி புலிகளுக்குப் பெரும் பிரச்சினையாக அப்போது மாறியிருந்தது. தமிழர் தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படும் மணலாற்றில் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது புலிகளுக்கு மிகவும் அவசியமாகக் கருதப்பட்டது. ஆகவே மீண்டும் ஒருமுறை பால்ராஜிடமே இதற்கான பொறுப்பினைத் தலைவர் கொடுத்தார். தனது மோசமான உடல்நிலைக்கு மத்தியிலும் மணலாற்றின் முன்னரங்கில் பல மணி நேரங்களை பால்ராஜ் செலவிட்டார். இது அவரது உடல்நிலையில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. ஆனாலும் முன்னரங்க நிலைகளை ஆராய்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக அடிக்கடி வைத்தியசாலையில் இருந்து முன்னரங்கப் பகுதிகளுக்குச் சென்றுவரலானார். பின்னாட்களில் பால்ராஜின் வேலைப்பழுவினைக் குறைப்பதற்கு உதவியாக புலிகளின் மூத்த தளபதிகளான சொர்ணம் மற்றும் பாணு போன்றவர்கள் மணலாற்றிற்கு அனுப்பப்பட்டார்கள். வைகாசி 2006 ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு வெளிப்படையாகப் பேசிய தளபதி பால்ராஜ் அவர்கள் புலிகள் இயக்கம் இறுதிப்போரினை வென்றே தீரும் என்று கூறியிருந்தார். "நான்காவது ஈழப்போரே இறுதிப்போராகும். மிகக்கடுமையாக இருக்கப்போகும் இப்போரே எம்மக்களின் நீண்டகாலக் கனவான தாயக விடுதலையினையும், சுதந்திரத்தையும் வென்று தரும். நாம் வெற்றிபெறப்போகும் நிலையிலேயே இருக்கிறோம் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எமது மக்கள் எம்முடன் இருக்கிறார்கள். எமது தலைவர் வெற்றி நோக்கி எம்மை வழிநடத்திச் செல்வார்" என்று அவர் உறுதிபடக் கூறியிருந்தார். தொடரும்............
  9. ஆனையிறவு படைத்தளம் ஓயாத அலைகள் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இப்படைநடவடிக்கைகள் யாழ்க்குடாநாட்டின் உட்பகுதிவரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இப்படை நடவடிக்கைகளின் உச்சவெற்றியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படைத்தளம் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டதைக் கூறமுடியும். எழுதுமட்டுவாள் - இயக்கச்சி பகுதிகளுக்கும் ஆனையிறவு பெரும்படைத்தளத்திற்கும் இடையிலான வழங்கற்பாதையினை தடுத்து, ஆனையிறவினை முற்றுகைக்குள் கொண்டுவந்து, உள்ளிருந்த ஆயிரக்கணக்கான படைவீரர்களைப் பலவீனப்படுத்தி, ஈற்றில் அவர்களை தோற்கடிப்பதே இப்படைநடவடிக்கையின் மிக முக்கிய நோக்கமாகும். தம்மால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட ஆனையிறவை வெளித்தொடர்புகள் அனைத்திலுமிருந்து முற்றாக அறுத்தெடுத்து, அதனைத் தனிமைப்படுத்தி அகற்றுவதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அனால் புலிகளால் முன்னெடுக்கப்படும் எந்தவிதமான முற்றுகையினையும் எதிர்கொள்ளும் நோக்குடன் படையினர், ஆனையிறவு படைத்தளத்தினை செவ்வக வடிவில் நீட்டித்து, வடமாராட்சி கிழக்குக் கரையோரம் வழியே தாளையடி - மருதங்கேணி பகுதிகள் வரை விஸ்த்தரித்து, பின்னர் கிழக்குக் கரையோரத்தினூடாக யாழ்க்குடாநாடு நோக்கி, கண்டிவீதி வழியே புதுக்காட்டுச் சந்திவரை விஸ்த்தரித்து, பலப்படுத்தப்பட்ட நீண்ட பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றினை உருவாக்கியிருந்தார்கள். இப்பகுதியே வத்திராயன் பெட்டி (Vaththirayan Box) என்று அழைக்கப்பட்டு வந்ததுடன் இப்பாரிய செவ்வகப் பகுதிக்குள் வத்திராயன், புல்லா வெளி, சோரன்பற்று, மாசார் உள்ளிட்ட பல பகுதிகள் அடக்கப்பட்டிருந்தன. மேலும் யாழ்க்குடாநாட்டின் உட்பகுதியினுள் ஆரம்பமாகும் எழுதுமட்டுவாளில் இருந்தும், வடமாராட்சிக் கிழக்கின் தாளையடியில் இருந்தும் ஆனையிறவு படைத்தளத்திற்கான தடையற்ற‌ வழங்கல்களை இதன்மூலம் படையினர் உறுதிப்படுத்தி வந்திருந்தனர். பால்ராஜ் அவர்களுக்கு மகுடம் சூட்டிய நடவடிக்கை எவராலும் ஊடறுத்து, உட்புகமுடியாத கோட்டையென்று கருதப்பட்ட ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடறுத்து எவ்வாறு பால்ராஜ் அவர்கள் இந்த வெற்றியை ஈட்டினார் என்பது நவீன இராணுவ வரலாற்றில் ஒரு பெரும் அதிசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதுவே அவரின் அனைத்து நடவடிக்கைகளினதும் மகுடமாகவும் கருதப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு பங்குனி 26 ஆம் திகதி, வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து யாழ்க்குடாநாட்டின் கரையோரப் பகுதிக்குள் சுமார் 1200 தரைப்படைப் போராளிகளைக் கன‌கச்சிதமான நடவடிக்கை ஒன்றின் மூலம் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை பாதுகாப்பாக தரையிறக்கினார். தளபதி பால்ராஜின் தலைமையில் இப்போராளிகள் குடாரப்பு மற்றும் மாமுனை ஆகிய கரையோரப் பகுதிகளில் தரையிறங்கி, கண்டல்த் தாவரங்களும், சதுப்பு நிலங்களும் கொண்ட ஏரிப்பகுதிக்கூடாக மிகவும் இரகசியமான முறையில் உட்பகுதி நோக்கி முன்னேறத் தொடங்கினர். இம்முன்னேற்ற நடவடிக்கையின்போது சோரன்பற்று, மாசார் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலைகளைத் தாக்கியழித்த புலிகள், ஏ 9 பாதையின் புதுக்காட்டுச் சந்திவரை முன்னேறி அதனைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதன்பின்னர் தளபதி பால்ராஜ் தலைமையில் செயற்பட்ட புலிகள்,பளைப்பகுதிக்கு அண்மையில் அமைந்திருந்த இத்தாவில் பகுதியில் தமது நிலைகளை அமைத்துப் பலப்படுத்திக்கொண்டனர். இங்கிருந்தே ஆனையிறவு, இயக்கச்சிக்கான வழங்கல்களை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் இப்பகுதியில் பல‌நாட்களாக பாலராஜின் தலைமையில் விவேகமும் துணிவும் கொண்ட போராளிகளுக்கும் பெரும் படைப்பலம் கொண்டு இப்பகுதியைக் கைப்பற்ற முனைந்த இராணுவத்தினருக்கும் இடையே மிகக்கடுமையான சண்டைகள் இடம்பெற்றன. ஆனால், இச்சண்டையில் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்கிற அனைத்து எதிர்வுகூறல்களையும் உடைத்தெறிந்த புலிகள், இராணுவம் தம்மீது வீசிய அனைத்து வலிந்த தாக்குதல்களையும் சளைக்காது முகெம்கொடுத்து வெற்றியீட்டினர். இச்சண்டைகளில் களங்கள் அடுத்தடுத்து கைமாறப்பட்டிருப்பினும், தன்னை அப்பகுதியில் இருந்து எப்படியாவது அகற்றிவிடும் நோக்கில் தன் மீது இராணுவத்தின் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட அத்தனை தாக்குதல்களையும் அவர் தீரத்துடன் எதிர்கொண்டு, சமராடித் தோற்கடித்தார். 24 நாட்களாகக் கடுமையாக நடைபெற்ற சண்டைகளின் விளைவாக இராணுவம் ஆனையிறவைத் தக்கவைக்கும் தனது முயற்சியைக் கைவிட்டது. அதன்படி சித்திரை 19 ஆம் திகதி ஆனையிறவு படைத்தளத்தினைக் கைவிட்ட இராணுவம், யாழ்க்குடா நாடு நோக்கிப் பின்வாங்கியது. சித்திரை 22 ஆம் திகதி புலிகள் ஆனையிறவுப் படைத்தளத்தில் தமது கொடியினை உத்தியோகபூர்வாமாக ஏற்றிவைத்தனர். இராணுவ வல்லுனர்களால் போற்றப்படும் பால்ராஜ் அவர்களின் இந்த அதிசயிக்கவைக்கும் வெற்றி, இராணுவக் கையேடுகளில் ஏற்றப்பட்டு, பகுதி பகுதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, கற்பிக்கப்பட்டும் வருகிறது. பால்ராஜ் அவர்களின் இந்த வெற்றியானது புலிகளின் படையணிகள், விமானப்படையொன்றின் உதவியின்றி, எதிரியின் கோட்டைக்குள் ஆளமாக ஊடுருவி நிலைகொண்டு, அங்கிருந்து வலிந்த தாக்குதல்களிலும், தடுப்புத் தாக்குதல்களிலும் சரளமாக ஈடுபட்டு, தம்மைக் காட்டிலும் ஆட்பலத்திலும், ஆயுதப் பலத்திலும் பன்மடங்கு பலமான எதிரியை வெற்றிகொள்ளும் வல்லமையினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. மட்டுப்படுத்தப்பட்ட போர்களை (Limited Wars) எவ்வாறு மேற்கொள்வது எனும் கோட்பாட்டில் பால்ராஜின் இந்த வெற்றியானது முன்னுதாரணமான மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. 23 நீண்ட வருடங்களுக்குப் பின்னர் எனது தாய்நாட்டினைத் தரிசிக்கும் முயற்சியினை 2013 ஆம் ஆண்டு நான் மேற்கொண்டபோது இத்தாவில் பகுதிக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். ஏ9 நெடுஞ்சாலையின் இத்தாவில்ப் பகுதியில் எமது வாகனத்தை நிறுத்தி இறங்கிக்கொண்டேன். ஆனால் வீதியிலிருந்து உட்பகுதி நோக்கிச் செல்லமுடியாதபடி கண்ணிவெடி அபாய எச்சரிக்கைகள் காணப்பட்டன. அப்பகுதியெங்கும் பரவிக்கிடக்கும் கண்ணிவெடிகள் இதுவரையில் அகற்றப்படாமையினால் இப்பகுதிக்குள் மக்கள் உட்பிரவேசிப்பது தடுக்கப்பட்டிருந்தது. தொடரும்............
  10. இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. புளித்துப்போன பிரதேசவாத அரசியல்.தமிழினக் கொலை நடத்தப்பட்ட வைகாசி மாதத்தில், இனக்கொலை முடித்துவைக்கப்பட்ட நாளிற்கு முன் நாளில், இலட்சக்கணக்கான உறவுகளைப் பலிகொடுத்த நினைவுகளைச் சுமந்து, அவர்களுக்கான அஞ்சலியைச் செலுத்த, கனத்த மனதுடன் தமிழ மக்கள் தயாராகி வருகையில், அவர்களுடைய துன்பத்தில், இழப்புக்களில்ல் தமக்கு எதுவித தொடர்பும் இல்லையெனும் மனப்பாங்கில், அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் மேள தாளங்களுடன் ஒரு நிகழ்வைச் செய்யத் துணிந்ததுதான் அந்த அரசியல். விபுலானந்தருக்கு விழா எடுக்கலாம், தவறேயில்லை. ஆனால், வைகாசி 17 ஏன் தெரிவுசெய்யப்பட்டது? வருடத்தில் தமிழர்கள் தமது உறவுகளின் இழப்பினை நினைவுகூரும் ஒரு சில நாட்களைத்தவிர மீதி வருடம் இருக்கின்றது, அதில் ஒரு நாளைத் தெரிவு செய்ய இவர்கள் ஏன் முயலவில்லை? துன்பங்களைச் சுமந்து கதறியழும் மக்களின் முகத்தில் அறைந்தாற்போல் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் நாங்களும் நீங்களும் வேறானவர்கள் என்பது. தமிழர்களின் ஒருபகுதியினருக்குத் தம்மைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் இனத்தின் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், அரச புலநாய்வுத்துறையின் கொலைக்கருவிகளின் ஆசீர்வாதத்தோடு பதவியில் ஏற்றப்பட்ட தற்போதைய விபுலானந்தர் வித்தியாலய நிர்வாகமே இந்த முடிவினை எடுத்திருக்கிறது. ஆனால் இதே பிரதேசத்தின் வாகரையிலும், வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திலும் முள்ளிவாய்க்கால் இனக்கொலை அனுஷ்ட்டிக்கப்பட, கல்லடியில் மேள தாள முழக்கங்களோடு விழாக்கோலம் பூணப்பட்டு விபுலானந்தர் சிலை திறக்கப்படுகிறது. இதனைப் பார்க்கும்போது தமிழனத்தின் துரோகிகளில் ஒருவரான கருநாநிதி கூறியவார்த்தைகள்தான் நினைவிற்கு வந்துபோகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் இறுதிநாட்களில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக்கொண்டிருக்க, தில்லியில் கூடாரம் அடித்து கருநாநிதி தனது குடும்பத்தினருக்கு பாராளுமன்ற ஆசனங்களையும், பதவிகளையும் கேட்டு சோனியாவுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார். இச்செயலைக் கண்ணுற்ற ஒரு செய்தியாளர், "முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருக்க, நீங்களோ பதவிகளுக்காகப் பேரம் பேசலில் ஈடுபடுகிறீர்களே?" என்று கேட்டபோது, "சங்க கால இலக்கியங்களில் ஒரு வீட்டில் மரண ஓலத்துடன் பறையொலி கேட்கும்போது, அதே பகுதியில், இன்னொரு வீதியில் மங்கள வாத்தியமும் கேட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறதே?" என்று ஏளனத்துடன் கூறியிருக்கிறார். அவராவது வேறுநாட்டில் முதல்வராக தமிழ் பேசிய தெலுங்கன், ஆனால் இவர்களோ?????
  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவி இராணுவத் தளபதியான பால்ராஜ் தளபதி பால்ராஜிற்கு உன்னதமான இராணுவ மரியாதையினை தலைவர் 1996 ஆம் ஆண்டில் வழங்கி கெளரவித்தார். பால்ராஜை இயக்கத்தின் உதவி இராணுவத் தளபதி எனும் நிலைக்கு தலைவர் உயர்த்தினார். தலைவர் பிரபாகரனே இயக்கத்தின் பிரதான இராணுவத் தளபதி என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் புலிகள் இராணுவ அதிகாரக் கட்டமைப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டார். புலிகளின் இரண்டாவது இராணுவத் தளபதி தனது போரியல் ஆற்றலினை தொடர்ந்துவந்த சமர்க்களங்களில் நிரூபித்துக் காட்டத் தொடங்கினார். 1996 ஆம் ஆண்டு ஆடி மாதம் 18 ஆம் திகதி ஒயாத அலைகள் - ஒன்று எனும் பாரிய அழித்தொழிப்புச் சமரை தளபதி பால்ராஜே ஒருங்கிணைத்து நடத்தினார். பல கட்டுமாண‌ங்களைக் கொண்டதும் மிகுந்த பாதுகாப்பானதுமான‌ முகாம் என்று கருதப்பட்ட பாரிய முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது பால்ராஜும் போராளிகளும் நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் பலியானார்கள். ஆனால், இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையான ஒப்பரேஷன் ஜயசிக்குரு (வெற்றி நிச்சயம்) நடவடிக்கைக்கு எதிராக தளபதி பால்ராஜினால் அதிகளவு பங்களிப்பைச் செய்ய முடியவில்லை. 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின்போது இராணுவத்தினர் ஓமந்தை மற்றும் நெடுங்கேணி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். புளியங்குளம் பகுதி இராணுவத்தினரின் வசம் வீழும்வரை தளபதி பால்ராஜே ஜயசிக்குரு நடவடிக்கைக்கெதிரான எதிர்த்தாக்குதல்களை ஒருங்கிணைத்து வந்தார். இதன்பின்னர் புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவுடன் இணைந்து எதிர்த்தாகுதல்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தளபதி கேணல் தீபன் பொறுப்பெடுத்தார். 1998 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் கிளிநொச்சி படைமுகாம் மீது புலிகள் ஓயாத அலைகள் - 2 எனும் பெயரில் தாக்கியழிக்கும் சமரினை ஆரம்பித்தார்கள். இத்தாக்குதல்களில் ஏற்பட்ட கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் முகாமினைக் கைவிட்ட இராணுவம் பின்வாங்கி ஆனையிறவு நோக்கிச் சென்றது. இத்தாக்குதலுக்கு தளபதி பால்ராஜே பொறுப்பாக இருந்ததுடன், இராணுவத்தினருக்கெதிராக உளவியல்த் தந்திரங்களையும் கைக்கொண்டார். இலங்கையின் 50 ஆவது சுதந்திர நாளன்றே இத்தாக்குதலை புலிகள் ஆரம்பித்திருந்தனர். இதன் பின்னர் ஓயாத அலைகள் - மூன்று எனும் வலிந்த தாக்குதல் நடவடிக்கையினை புலிகள் முன்னெடுத்தனர். 1999 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் நன்கு திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களில் ஒட்டுசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் உட்பட்ட பல இராணுவ முகாம்களை சில நாட்களில் புலிகள் கைப்பற்றினர். 18 மாத காலமாக ஜயசிக்குரு நடவடிக்கையூடாக சிறுகச் சிறுக இராணுவத்தினர் கைப்பற்றியிருந்த பெரும்பாலான பிரதேசங்களை வெறும் 9 நாட்களிலேயே புலிகளிடம் இழந்தனர். தொடரும்............
  12. புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியின் தளபதி 1991 ஆம் ஆண்டிலேயே புலிகள் தமது முதலாவது மரபுவழிப் படையணியினை நிறுவினார்கள். தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தோழனும், தலைவர் அதிகளவு நம்பிக்கை கொண்டிருந்தவருமான சீலன் எனப்படும் சாள்ஸ் அன்டனியின் பெயரிலேயே இப்படையணி உருவாக்கப்பட்டது. சீலன் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஆடி 15 ஆம் திகதி மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பொன்றில் வீரமரணம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. சாள்ஸ் அன்டையின் பெயரில் உருவாக்கப்பட்ட தனது முதலாவது மரபுவழிப் படையணிக்குத் தலைமை தாங்க தளபதி பால்ராஜையே தலைவர் தெரிவுசெய்தார். இப்படையணியின் தளபதியாக 1993 ஆம் ஆண்டுவரை தளபதி பால்ராஜ் பணியாற்றி வந்தார். இராணுவ நடவடிக்கைகள், வலிந்த தாக்குதல்கள் என்பவற்றுக்கு அப்பால் பாதுகாப்பு வியூகங்களை அமைப்பதிலும் பால்ராஜ் அவர்கள் சிறந்து விளங்கினார். இராணுவத்தினர் காலத்திற்குக் காலம் முன்னெடுத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தோற்கடித்தல், தாக்குதல்கள் நடப்பதைத் தடுத்தல், தாக்குதல்களின் நோக்கத்தை அழித்தல் ஆகிய விடயங்களுக்கு பால்ராஜே பொறுப்பாகவிருந்தார். இவ்வாறான இராணுவத்தினரின் வலிந்த நடவடிக்கைகளுக்கெதிராக தளபதி பால்ராஜ் முன்னெடுத்த தடுப்புத் தாக்குதல்களுக்கு உதாரணமாக வவுனியாவில் இருந்து இராணுவத்தினரால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட வன்னி விக்கிரம நடவடிக்கை, மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் நடவடிக்கை, யாழ்க்குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தல் நடவடிக்கை,கிளாலி - புலோப்பழை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட யாழ் தேவி நடவடிக்கை மற்றும் ஆனையிறவை மீளக் கைப்பற்ற முன்னெடுக்கப்பட்ட அக்கினி கீற்று (கீல) நடவடிக்கை போன்ற‌வற்றிற்கெதிராக அவர் நடத்திய எதிர்ச்சமர்களைக் குறிப்பிட முடியும். 1993 ஆம் ஆண்டு யாழ்க்குடாநாட்டின் தென்பகுதியில் இராணுவத்தினர் முன்னெடுத்த ஒப்பரேஷன் யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிராக தளபதி பால்ராஜும், அவரது உதவித்தளபதி தீபனும் களமிறங்கினார்கள். புலோப்பழையில் இடம்பெற்ற கடுமையான சண்டையில் பால்ராஜ் காயங்களுக்கு உள்ளானார். புலிகளின் நிலைகளை நோக்கி நகர்ந்த T- 55 ரக தாங்கியொன்றின்மீது ஆர் பி ஜி உந்துகணையினால் அவர் தாக்குதல் நடத்தியபோது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயமே அவர் நடக்கும்போது ஒருபக்கத்திற்குச் சரிந்து நடப்பதற்கான காரணம் ஆகியது. அத்துடன் நீண்டதூரம் நடக்கும்போது காலில் ஏற்பட்டிருந்த காயம் அவருக்கு கடுமையான வலியினையும் ஏற்படுத்தியது. 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பொழுது புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றினைச் செய்து பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். ஆனால் யுத்த நிறுத்தம் 1995 ஆம் ஆண்டு சித்திரையில் முறிவடைய மீளவும் போர் ஆரம்பித்தது. யாழ்க்குடா நாட்டின் வலிகாமம் பகுதியில் முன்னேறிப் பாய்தல் எனும் பெயரில் வலிந்த தாக்குதல் ஒன்றினை சந்திரிக்காவின் அரசாங்கம் ஆரம்பித்தது. இத்தாக்குதலுக்கு எதிராக புலிகள் புலிப்பாய்ச்சல் எனும் பெயரில் கடுமையான எதிர்த்தாக்குதல் ஒன்றினை முன்னெடுத்தனர். புலிகளின் எதிர்த்தாக்குதலையடுத்து இராணுவத்தின் தமது வலிந்த தாக்குதலைக் கைவிட்டனர். இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலை முறியடிப்பதில் தளபதி பால்ராஜ் மிக முக்கியமான பங்கினை ஆற்றியிருந்தார். ஆனாலும் சில காலத்தின்பின்னர் இராணுவத்தினர் ஒப்பரேசன் சூரியக் கதிர் நடவடிக்கையினை முன்னெடுத்து யாழ்க்குடாநாட்டினைக் கைப்பற்றியபோது, 1996 ஆம் ஆண்டளவில் புலிகள் வன்னிக்கு தமது தளங்களை மாற்றிக்கொண்டனர். தொடரும்............
  13. தரை கடல் ஆகாயம் தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமையும், புத்திசாதுரியமும் வெளிப்பட்டிருந்த இன்னொரு முக்கிய தாக்குதல் நடவடிக்கைதான் 1991 ஆம் ஆண்டு புலிகள் ஆனையிறவு தடைமுகாம் மீது நடத்திய முற்றுகைச் சமர். "தரை - கடல் - ஆகாயம்" என்று புலிகளால் பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான இம்முற்றுகைச் சமருக்கு மாத்தையா தலைமை தாங்கினார். தளபதி பால்ராஜிற்கும், தீபன் அடங்கலான அவரது போராளிகளுக்கும் வழங்கப்பட்ட பணி குறிஞ்சாத்தீவுப் பகுதியூடாக ஆனையிறவு முகாமின் கப்பரன்களை அழித்து உள்ளே நுழைவது. தனக்கு வழங்கப்பட்ட பணியைக் கச்சிதமாக நிறைவேற்றிய தளபதி பால்ராஜின் அணி, நீர்ப்படுக்கையூடாக முன்னேறி, அப்பகுதியில் இருந்த இராணுவ முகாமினை அழித்து, பிரதான முகாமின் பகுதிகளின் ஒன்றான விருந்தினர் மாளிகையினைக் கைப்பற்றி நிலையெடுத்துக்கொண்டதுடன், இம்முற்றுகைச் சமர் முடிவடையும் வரையில் அப்பகுதியில் இருந்து இராணுவம் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வந்தனர். இச்சமர் புலிகளுக்கு எதிர்பார்த்த வெற்றியினை வழங்காத நிலை ஏற்பட்டபோது இப்பகுதியில் இருந்து பின்வாங்கிய பால்ராஜின் அணி விருந்தினர் மாளிகையினைத் தகர்த்துவிட்டே வெளியேறியிருந்தது. புலிகள் எதிர்பார்த்த வெற்றியான முகாமின் முற்றான அழிப்பு என்பது நடைபெறாது போனதனால் இச்சமர் அவர்களுக்கு தோல்வியாகப் பார்க்கப்பட்டது. புலிகள், 673 போராளிகளை இச்சமரில் இழந்தபோதிலும், தளபதி பால்ராஜின் அணி தனக்கு வழங்கப்பட்ட பணியினை மிகவும் வெற்றிகரமாகவே செய்திருந்தது. தொடரும்............
  14. வன்னியின் இராணுவத் தளபதி புலிகளின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக, வன்னி மண்ணின் மைந்தனான தளபதி பால்ராஜ் அவர்கள் அந்நிலத்தின் இராணுவத் தளபதியாக 1990 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இக்கலத்திலேயே பால்ராஜ் அவர்கள் தனது இராணுவ வல்லமையினையும், திட்டமிடலின் புத்தி சாதுரியத்தையும் சிறப்பாக வெளிக்காட்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஏ - 9 நெடுஞ்சாலை அல்லது யாழ் - கண்டி வீதியின் வவுனியா முதல் ஆனையிறவு வரையான பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அக்காலத்தில் இருந்து வந்தது. இவ்வீதியின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் இராணுவம் தனது படைமுகாம்களை அமைத்திருந்தது. தளபதி பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணி கொக்காவில் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மீது வலிந்த தாக்குதல்களை நடத்தி அவற்றைக் கைப்பற்றிக்கொண்டது. பின்னர் கிளிநொச்சி இராணுவம் முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. ஆனால் புலிகளினால் கிளிநொச்சி முகாமை அப்போது முழுமையாகக் கைப்பற்ற முடியாது போய்விட்டபோதும், சிலநாட்களின் பின்னர் இராணுவமே அம்முகாமைக் கைவிட்டு விட்டு, பரந்தன் பகுதியில் தன‌து நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டது. இத்தாக்குதல்களினால் புலிகள் அடைந்த வெற்றி அவர்களின் ஆயுதக் கைய்யிருப்பினை அதிகப்படுத்தியது. இச்சமர்களினூடாக தளபதி பால்ராஜ் அவர்கள் மிகச் சிறந்த தளபதியாக உருவெடுத்ததுடன் தனது அணிகளில் பணியாற்றிவந்த போராளிகளுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையினையும் ஊட்டி, சண்டைகள் கடுமையாகும்பொழுதிலும் துணிகரமாகச் சமராடி, சமரை வெற்றிகொள்ளும் மனோபலத்தையும் அவர்களுக்கு ஊட்டி வந்தார். தொடரும்............
  15. இந்திய இராணுவம் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினூடாக இந்திய அமைதிப்படைப் படை எனும் பெயரில் பெருமளவு இந்திய இராணுவத்தினர் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்குள் வந்திறங்கியபோது அதுவரை இருந்த போர்ச்சூழலில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. ஆனால் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த சமாதான நடவடிக்கைகள் ஐப்பசி மாதமளவில் முற்றாகத் தோல்வியடையவே இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான முழுமையான போர் ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்திய இராணுவம் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்தது. தளபதிகள் பசீலன் மற்றும் பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணியொன்று இந்திய இராணுவத்துடனான சண்டைகளுக்காக புலிகளால் யாழ்க்குடநாட்டிற்கு அனுப்பப்பட்டது. இவ்வாறான சமர்களில் ஒன்றான கோப்பாய்ச் சமரில், தமது நிலைகளை நோக்கி முன்னேறிவந்த இந்திய இராணுவத்தின் தாங்கியொன்றின்மீது தான் வைத்திருந்த ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அழித்தார் பால்ராஜ். பால்ராஜின் துணிகரமான இச்செயல் போராளிகளிடையே மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையிலான போர் வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாயிற்று. தலைவர் பிரபாகரனும், உதவித்தலைவர் மாத்தையாவும் வன்னிக்கு தமது நிலைகளை மாற்றிக்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக அடர்ந்த காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் தலைவர் பிரபாகரன் தனது முகாமை அமைத்துக்கொண்டார். தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் லெப்டிணன்ட் கேணல் நவமே பொறுப்பாகவிருந்தார். இக்காலத்தில் தளபதி நவத்தின் உதவித்தளபதியாக பால்ராஜ் செயற்படத் தொடங்கினார். இக்காலத்திலேயே தலைவர் பிரபாகரனுடன் பால்ராஜ் அவர்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கின. தளபதி பால்ராஜின் தன்னடக்கமும், அசாத்தியமான போரிடும் ஆற்றலும் தலைவர் பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தன. 1988 ஆம் ஆண்டு நித்திகைக்குளத்தில் தங்கியிருந்த தலைவரைக் கைப்பற்ற இந்திய இராணுவம் முன்னெடுத்த பாரிய இராணுவ நடவடிக்கையான ஒப்பரேஷன் செக்மேட்டிற்கெதிராக, தளபதி பால்ராஜ் அவர்கள் நடத்திய நேரடியான எதிர்ச்சமர் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையினை முற்றாகத் தோல்வியடையச் செய்திருந்தது. இச்சமரின்போது இந்திய இராணுவத்தின் கூர்க்கா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவத்தினருக்கெதிரான சண்டைகளில் சுமார் மூன்று தடவைகள் பால்ராஜ் அவர்கள் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறியதையடுத்து தலைவர் பிரபாகரன் தனது கட்டளையகத்தை மீளவும் யாழ்க்குடா நட்டிற்கே மாற்றிக்கொண்டார். அக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பினுள் சில கொள்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து இயக்கத்தில் இணைந்துகொள்ளும் போராளிகள் அப்பிரதேசத்தில் உருவாகும் தலைமைப் பொறுப்புகளுக்கு தம்மை ஈடுபடுத்தலாம் என்பதே அது. தொடரும்............
  16. கொக்குத்தொடுவாய் கந்தையா பாலசேகரன் எனும் இயறற்பெயரைக் கொண்ட தளபதி பால்ராஜ், 1965 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமமான கொக்குத்தொடுவாயில் பிறந்தார். நான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக அவர் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயிலும் பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் உயர்தரக் கல்வியையும் அவர் பயின்றார். குடும்பத்தில் கல்வியில் சிறந்தவராக விளங்கிய பாலசேகரன் அவர்கள், சாதாரணதர பரீட்சையில் அதிவிசேட சித்திகளைப் பெற்றிருந்தார். அவர் கல்வியில் காட்டிய திறமையினால் பல்கலைக்கழகம் புகுவார் என்று அவரது பெற்றோரான கந்தையாவும் தாயாரான கண்ணகியும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் பாலசேகரன் தமிழ் போராளி அமைப்பு ஒன்றில் இணைந்துகொண்டார். 1984 ஆம் ஆண்டிலேயே புலிகளுடன் பாலசேகரன் இணைந்துகொண்டார். புலிகளின் ஒன்பதாவது அணியில் இடம்பெற்ற அவர் தமிழ்நாட்டில் இராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். புலிகள் இயக்கத்தில் அவர் இணைந்துகொண்டதன் பின்னர் அவருக்கு பால்ராஜ் என்று பெயர் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தனது ஆயுதப் பயிற்சியை நிறைவுசெய்த பால்ராஜ் நாடு திரும்பினார். புலிகளின் வன்னி நடவடிக்கைகளுக்கு அக்காலத்தில் பொறுப்பாகவிருந்த கோபாலசாமி மகேந்திரராஜா எனும் இயற்பெயரைக் கொண்ட மாத்தையாவினால் புலிகள் இயக்கத்திற்குள் உள்வாங்கப்பட்ட பால்ராஜ், மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைக்கப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் நடவடிக்கைகளில் புலிகளால் ஈடுபடுத்தப்பட்டார். பால்ராஜ் அவர்களது முதலாவது குறிப்பிடத்தக்க தாக்குதல் முயற்சி 1986 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி இராணுவ முகாமைச் சுற்றிவளைக்க மாத்தையாவினால் எடுக்கப்பட்ட முயற்சியானது தோல்வியடைந்தபோதிலும், தனக்கு வழங்கப்பட்ட பணியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றும் தாக்குதலை பால்ராஜ் சிறப்பாகவே செய்துமுடித்தார். 1987 ஆம் ஆண்டு மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக பதவியேற்று யாழ்க்குடாவிற்குச் சென்றார். அங்கிருந்துகொண்டு வன்னியின அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான பொறுப்பினை அவர் பார்த்து வந்தார் . அதேவேளை வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான தளபதிகளாக ஜெயம், சுசீலன் மற்றும் பசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பசீலனின் துணைத்தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். இக்காலப்பகுதியில் பசீலனினாலும், பால்ராஜினாலும் மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.அதன்பின்னர் பால்ராஜ் அவர்கள் மணலாறுப் பிரதேசத்திற்கு நன்கு பரீட்சயமானவர் என்கிற அடிப்படையில் அப்பகுதியிலேயே களம் அமைத்துச் செயற்பட்டு வரலானார். தொடரும்............
  17. பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட‌ தமிழர்களின் ஒப்பற்ற தளபதி : டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்க்குடா நாட்டில் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை இந்திய இராணுவம் ஆரம்பித்தது. இந்திய இராணுவத்திற்கெதிரான சண்டைக்கு தளபதி பசீலன் தலைமையிலான புலிகளின் அணியொன்று அவசர அவசரமாக யாழ்க்குடாநாட்டில் இறக்கப்பட்டது. இச்சண்டைகளில் தளபதி பசீலனுக்கு உதவித்தளபதியாக பால்ராஜ் களமாடினார். இச்சண்டைகளில் ஒன்றின்போதே முன்னேறிவந்த இந்திய இராணுவத் தாங்கியொன்றின் மீது சர்வசாதாரணமாக ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அதனைச் செயலிழக்கச் செய்தார் பால்ராஜ். கோப்பாய்ப் பகுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக புலிகளின் நிலைகள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவத் தாங்கிமீது பால்ராஜ் அவர்கள் மிகுந்த துணிவுடன் முன்னால்ச் சென்று அதனைத் தாக்கி அழித்தது அவரது வீரத்தை வெகுவாகப் பறைசாற்றியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு அடுத்த நிலை இராணுவத் தலைவரும், பிரபாகரனின் பிரதான தளபதியுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இயற்பெயர் கந்தையா பாலசேகரன் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆகச்சிறந்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இராணுவத் திட்டமிடல்களில் அவருக்கிருந்த அசாத்திய புலமையும், சண்டைகளை முன்னின்று வழிநடத்தும் வல்லமையும் அவருக்கே தனித்துவமானவை. 1965 ஆம் ஆண்டு பிறந்த தளபதி பார்ராஜ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி, இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இருதய நோயினால் இயற்கை எய்தினார். அவரது அறுபதாவது பிறந்த தினம் இவ்வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்படும். தளபதி பால்ராஜ் தொடர்பாக முன்னர் வந்த கட்டுரைகளை அடிப்படையாக வைத்து, புலிகளின் ஒப்பற்ற வீரனான அவரது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இராணுவ வட்டாரங்களில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் வைத்து தளபதி பார்லார்ஜ் பாக்கப்படுகிறார். தலைவரைப் போலவே தடுப்புச் சமர்களிலும், வலிந்த தாக்குதல்ச் சம‌ர்களிலும் மிகவும் கைதேர்ந்தவராக அவர் வலம்வந்தார். தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமைகள் அவரது எதிரிகளான இலங்கை இராணுவத்தினராலும் வெகுவாகப் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவ‌ரை பால்ராஜ் அவர்கள் மிகச்சிறந்த இராணுவத் திட்டமிடலாளன் என்பதோடு, மிகவும் திறமையான‌ வீரன் என்றும் கருதப்படுகிறார். திட்டமிடல் மற்றும் அதனைத் திறம்படச் செயற்படுத்துதல் என்பவற்றில் பால்ராஜ் அவர்களைத் தலைவரைக் காட்டிலும் உயர்வான தானத்தில் இலங்கை இராணுவம் வைத்திருந்தது என்றும் கருதப்படுகிறது. தளபதி பால்ராஜுடன் இலங்கை இராணுவம் நடத்திய சண்டைகளின் ஒன்றின்போது போர்முனையிலிருந்து இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அனுப்பப்பட்ட செய்திப் பரிவர்த்தனையினை புலிகளால் கேட்க முடிந்திருந்தது. அதன்படி போர்முனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் களத்தில் தளபதி பால்ராஜ் இருக்கிறார் என்று தலைமையிடத்திற்கு அறியத் தந்தார்கள். அதற்கு தலைமையகத்திடமிருந்தது வந்த பதில் இவ்வாறு இருந்தது, "மிகுந்த க‌வனமாக இருங்கள். பிரபாகரனைக் காட்டிலும் பால்ராஜ் மிகவும் ஆபத்தானவர்" என்று கூறியது. பின்னாட்களில் இச்செய்தி குறித்து தலைவர் பிரபாகரன் அறிந்துகொண்டபோது மிகவும் மகிழ்ந்துபோனார். பால்ராஜுடன் இதுகுறித்து வேடிக்கையாகப் பேசிய தலைவர், " அவர்கள் உன்னைத்தான் முதலாவது எதிரியாகப் பார்க்கிறார்கள் போலத் தெரிகிறது, ஆகையால் நான் இனி அஞ்சத் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற , பெரிதும் வெளியே தெரிந்திராத சம்பவம் ஒன்று 2003 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.நோர்வே மத்தியஸ்த்தத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முயற்சிகள் நடந்துகொண்டிருந்த காலம். இருதய நோயினால் மிகுந்த அவஸ்த்தைக்குள்ளாகியிருந்த தளபதி பால்ராஜிற்கு உடன‌டியான மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிற்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. கட்டுநாயக்கா அந்நேரத்தில் நாட்டின் சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இருந்தார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணியாற்றி வந்தார். நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்கள் அவ்வேளை நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் பால்ராஜை கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லும் அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த தளபதி பால்ராஜ் தனது இரு மெய்ப்பாதுகாவலர்களோடும், நோர்வேயின் அதிகாரிகளோடும் கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்குப் பயணமானார். அவருக்கான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து சில வாரகாலத்தின் பின்னர் அவர் மீளவும் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார். நாடுதிரும்பும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை தளபதி பால்ராஜ் வந்தடைந்த போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டிணன்ட் கேணல், மேஜர் தர அதிகாரிகள் உட்பட இன்னும் பதினைந்து இராணுவத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இராணுவத்தினர் இவ்வாறு பால்ராஜைச் சூழ்ந்துகொண்டது அவரைத் தாக்குவதற்காகத்தான் என்று எண்ணிய நோர்வே அதிகாரிகள் அச்சத்தினுள் உறைந்துபோயினர். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த இராணுவ அதிகாரிகள், தளபதி பால்ராஜ் புரிந்த சாகசங்களை, வியத்தகு செயல்களை நன்கு அறிந்தே இருந்தனர். ஆகவே அவர்மீது மிகுந்த மரியாதையும், கெளரவமும் அவர்களுக்கு இருந்தது. அவரை மிகச்சிறந்த போர்வீரனாக அவர்கள் கண்டுணர்ந்திருந்தனர். ஆகவே தான் பால்ராஜ் அங்கு வருகிறார் என்று அவர்கள் அறிந்த்துகொண்டபோது, களத்தில் தமக்குச் சிம்மசொப்பணமாக விளங்கிய மிகச்சிறந்த வீரனை நேரடியாகக் கண்டுவிடும் ஆர்வத்தில் அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வதிகாரிகளில்ச் சிலர் பால்ராஜுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், மகிழ்ச்சியாகவும் உரையாடினர். அதன்பின்னர் பால்ராஜ் பத்திரமாக இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றி ஏறி வன்னிக்குப் புறப்பட்டுச் சென்றார். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடப்போகிறது என்று அஞ்சிய நோர்வே அதிகாரிக‌ள் இதனால் ஆறுதல் அடைந்தனர். https://youtu.be/iO8uYq9Fo4U?si=KZnRj8CS1FdFEPkS தொடரும்............
  18. சிங்கள இனக்கொலை இராணுவத்தின் விசேட படையணியின் பயிற்சி நிறைவு பாதியில் நிறுத்தம் ‍ ‍- மாதுரு ஓயா வானூர்தி விபத்தில் ஆறு இனக்கொலையாளிகள் பலியானது காரணமாம். சிங்கள இனக்கொலை இராணுவத்தின் விசேட படைப்பிரிவிற்கென்று இணைத்துக்கொள்ளப்பட்ட பிரிவுகள் 55 மற்றும் 56 இற்கான படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வு பாதியில் அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இனக்கொலையாளிகளின் விசேட படைப்பிரிவு முகாமில் இன்று காலை ஏற்பட்ட உலங்கு வானூர்தி விபத்தில் ஆறு இனக்கொலையாளிகள் கொல்லப்பட்டதனால் இந்த அணிவகுப்பு நிகழ்வு சடுதியாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. ஏழாவது ஸ்குவாட்ரன் பிரிவினரால் இயக்கப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பான பெல் 212 உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது. மாதுரு ஓயாவில் அமைந்திருக்கும் விசேட படையணியினர் அணிவகுப்பு நிகழ்விற்கான சாகச ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோதே வானிலிருந்து கீழே திடீரென்று வீழ்ந்து வானூர்தி விபத்திற்குள்ளானது. ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது வானூர்தியில் இரு விமானமோட்டிகள், விமானப்படை வீரர்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் விசேட படையினர் என்று 12 பேர் பயணித்திருக்கிறார்கள். விபத்து நடந்தவுடன் சிதைவுகளில் இருந்து அனைவரும் உயிருடன்ம் மீடகப்பட்டபோதிலும் அறுவர் பின்னர் பொலன்னறுவை வைத்தியசாலையில் மரணித்திருக்கிறார்கள். Special Forces passing-out parade halted after helicopter crash - Caption Story | Daily Mirror
  19. சிலர் இவ்வாறான கருத்தாடல்களுக்கு வருவதே தமது புலியெதிர்ப்பு வக்கிரத்தைக் கொட்டுவதற்காகத்தான். என்னதான் தமிழர்களுக்கான நலன்கள் குறித்தே தாம் பேசுவதாகக் கூறினும் அவர்களின் கருத்துக்களில் மிகத்தீவிரமான புலியெதிர்ப்பு உணர்வு இழையோடியிருப்பதை அவதானிக்கலாம். புலிகளை மட்டுமல்லாமல், தமிழர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்களையொத்த சிலரைத் தவிர) இன்றும் புலிகளை ஆதரிப்பதால் ஏற்படும் இயல்பான வெறுப்பும் இவர்களை இவ்வாறு எழுதத் தோன்றுகிறது. இவர்களின் சில வருடங்களுக்கு முன்னரான கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என்றால், "தமிழ்த்தேசியம் தவறானது, தமிழருக்கென்று தனிநாடு தேவையற்றது, தமிழினத்திற்கென்று தனியேயான அடையாளம் தேவையற்றது, தமிழ்ப் பிரிவினைவாதத்தினையும், இனவாதத்தையும் உருவாக்கியவர்கள் தமிழரசுக் கட்சியும் கூட்டணியும்தான், சிறிமாவும் பண்டாரநாயக்கவும் தமிழர்களுக்கு நண்மை புரிந்தவர்கள், தமிழர்கள் அடையாளம் துறந்து இலங்கையராக தம்மை அடையாளப்படுத்துவதே சரியானது" என்று இவர்கள் வாதித்ததைப் படித்திருப்பீர்கள். தமிழர்கள் நலன் தொடர்பாக இவர்களுக்கு ஒரு உரோமம் தன்னும் அக்கறை இல்லை. புலிகளையும், பெரும்பாலான தமிழர்களையும் அவமதிக்கக் களம் திறக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கு வந்து கடை விரிக்கிறார்கள். இவர்களுடன் வாதிட்டு உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
  20. இந்தியாவும், பாக்கிஸ்த்தானும் எமக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவியவர்கள். இந்தியா ஒருபடி மேலே சென்று 2009 மே மாதாம் 18 இற்கு முன்னர் யுத்தம் முடிக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசிற்குக் கட்டளையிட்டு அதற்கான சகல உதவிகளையும் செய்திருந்தது. எந்தப் பாக்கிஸ்த்தான் இலங்கைக்குள் ஆளமாக வேரூன்றுவதைத் தான் விரும்பவில்லை என்று கூறி இலங்கைக்கான தனது இராணுவ உதவிகளை அன்று இந்தியா நியாயப்படுத்தியதோ, அதே பாக்கிஸ்த்தானுடன் இன்று சண்டையிடுகிறது. இந்தியா இப்போரில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஐந்து இல்லை ஐம்பது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட வேண்டும். வாழ்த்துக்கள் பாக்கிஸ்த்தான். Pakistan security sources say 5 Indian fighter jets, including French-made Rafales, shot down From CNN’s Sophia Saifi and Nic Robertson in Islamabad Five Indian Air Force jets and one drone were shot down by Pakistan during India’s attack, according to Pakistani security sources. In a statement released to reporters, the security sources said three French-made Rafale jets, one MiG-29 and one SU-30 fighter jets were downed “in self-defense.” An Indian Heron drone was also shot down, they added. A second senior Pakistani government official confirmed the same list of downed aircraft. The briefing did not say precisely where the jets were downed or how. Pakistani officials had earlier briefed that they shot down three aircraft and a drone. CNN cannot independently verify the claims and has reached out to the Indian government for a response. 8 people killed, dozens injured in 6 locations in Pakistan, military spokesperson says From CNN's Hira Humayun and Helen Regan Eight people were killed, including children, and 35 injured, Pakistan’s military spokesperson said after India launched military strikes on targets in Pakistan early Wednesday. India targeted six locations with 24 strikes in both Pakistan and Pakistan administered-Kashmir, spokesperson Lt. Gen. Ahmed Sharif Chaudhry said in a news conference early Wednesday. Previously, Pakistan said five locations were struck. India has said nine sites in total were targeted. Five people were killed, including a 3-year-old girl, in Ahmadpur East, in Pakistan’s Punjab Province, Chaudhry said. One man was also killed in Punjab’s Muridke, a city near Lahore, the capital of the province. In Pakistan administered-Kashmir, a 16-year-old girl and 18-year-old man were killed in the city of Kotli, he added. Mosques were targeted in the strikes, according to the military spokesperson. CNN cannot independently verify the claim.
  21. இது தனிப்பட்ட ஒருவரின் கருத்து. 2009 இற்குப் பின்னர் புலிகள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் உமிழப்படுவது. ஆகவே இதனை சரியா தவறா என்று அமிலப் பரிசோதனை செய்து உங்களின் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. தமிழர் நலனில் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அக்கறை கொண்டவர்கள் எமதினதில் முன்னரும் இருக்கவில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.
  22. தவறான முடிவினால் எடுக்கப்பட்ட உயிர். இதனைச் செய்திருக்கத் தேவையில்லை. அமெரிக்கச் சார்பு நீலன் அமெரிக்க நலன்களை முன்னிறுத்தியே தீர்வினை வரைய உதவியிருக்கலாம், இதுகூட அனுமானம் தான். இவரைக் கொன்றதால் எமக்கு சர்வதேசத்தில் ஏற்பட்ட அவப்பெயரும், பாதிப்பும் மிகக் கடுமையானது. கதிர்காமர் கொல்லப்பட்டதைக் காட்டிலும் நீலனின் கொலை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சிலவேளைகளில் கதிர்காமை சந்திரிக்காவிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் நீலன் என்பதாலேயே இவரை புலிகள் குறிவைத்தார்களோ என்றும் நினைப்பதுண்டு. எதுவாகவிருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய கொலை. ஒரு விவாதத்திற்கு இவரைக் கொன்றதாலேயே அமெரிக்கா புலிகளை அழித்தது அல்லது அழிக்கத் துணை நின்றது என்று எடுத்துக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதுமே தர்மத்தின்பால் நின்றிருக்கிறதா என்கிற கேள்வியும் வருகிறதே? 1980 களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணையாகவே நின்றிருக்கிறது. புலிகளை அழிப்பதே இலங்கையுடனான தனது வெளியுறவுக் கொள்கை என்றளவிற்குச் செயற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே அமெரிக்கா, நீலனின் இறப்பின் பின்னர்தான் புலிகளை அழிக்க எண்ணியது என்று நான் நினைக்கவில்லை. தமிழர் போராட்டத்தை எவர் முன்னெடுத்திருப்பினும் அதனை அமெரிக்கா எதிர்த்தே இருக்கும். நீலனின் கொலை இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்று நான் கருதவில்லை.
  23. எமக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த வீரமங்கைக்கு எனது கண்ணீர் அஞ்சலி !
  24. மாமனிதர் தாரக்கி சிவராமைக் கொன்றது இனியபாரதியே - கீர்த்தி ரட்நாயக்க‌ தாரக்கி சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த விடுதியில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து உணவருந்திவிட்டு வீடு திரும்பும் வேளையில் அவரைக் கருணா குழுவினரும் இராணுவப் புலநாய்வுத்துறையும் கடத்திச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்து, பின்னர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதி அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் சதுப்பு நிலப்பகுதியில் எறிந்துவிட்டுச் சென்றார்கள் என்று டி.பி.எஸ் ஜெயராஜ் உட்பட இன்னும் சில செய்தியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். தாரக்கியை கருணாவே தனிப்பட்ட ரீதியில் சுட்டுக் கொன்றான் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனாக் கீர்த்தி ரட்நாயக்கவின் செவ்வியில் பிள்ளையானின் அடியாட்களில் ஒருவனான இனியபாரதியே தாரக்கி சிவராமைக் கொன்றான் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் சிவராமைக் கொன்றது கருணா குழுவினர்தான் என்பது உண்மை, ஆனால் இக்கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவன் யாரென்பதில் இதுவரை தெளிவில்லை.
  25. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பிள்ளையானினால் இரு சிறுமிகள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவரான திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷாவிற்கு வயது 8 மட்டுமே. சுமார் 50 மில்லியன் ரூபாய்கள் கப்பமாகக் கோரப்பட்டு பணம் வழங்கப்படுமுன்னரே இச்சிறுமி கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, சாக்கினுள் கட்டப்பட்ட நிலையில் திருகோணமலையின் வீதியோரக் கால்வாய்க்கு அருகில் கண்டெடுக்கப்பட்டாள் என்று கீர்த்தி கூறுகிறார். அவ்வாறே மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்ட 11 வயதுச் சிறுமியும் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டாள் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார். இக்கடத்தல்கள், படுகொலைகளில் ஈடுபட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்களைப் பின்னர் பிள்ளையானே பொலீஸாரின் உதவியுடன் சுட்டுக் கொன்றான் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.