Everything posted by பெருமாள்
-
வடக்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்!
காலவதியான மருந்துக்கள் காலவதியான உணவுகள் முட்டை தேங்காய் எண்ணை போன்வற்றுக்கு கூட இறக்குமதியை நம்பி இருக்க வேண்டிய சோம்பேறிகள் வாழும் நாட்டில் என்ன முதலீடு செய்யலாம்? ஒரு வருத்தம் வந்தால் தனியார் வைத்திய சாலைகள் பணம் பிடுங்கும் பேய்களாய் மாறி விடும் நாட்டில் எப்படி மனிதன் நிம்மதியாய் போய் வாழுவான் ? பொழுது பட்டால் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சொல்கிறார்களாம் காரணம் அவ்வளவுக்கு ரவுடிய்சம் கொள்ளை கொலைகள் திருட்டு 2௦௦9க்கு முதல் அப்படியா இருந்தது ?
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள் . சித்திர செவ்வானத்தை சிரிக்க வைத்த ஆண் குயில் ஒன்று விடைபெற்று பறந்து போனது .
-
சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன்.
இதைத்தானே பல் தடவை சொல்கிறோம் யார் கேட்டார்கள் . கொஞ்சபேர் ஒரு கதை எழுதுகினம் அனுராவல் எல்லாம் முடியும் என்று உண்மை தமிழருக்கு தீர்வை கொடுக்காமல் சிங்களம் நிம்மதியாய் வாழ முடியாது .
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
ஏன் தமிழகத்தில் கடந்த வருடங்களில் பல்லாயிரம் ஓலைசுவடிகள் காணாமல் போய் உள்ளன அழிக்பட்ட சம்பவங்கள் அடி முக்கியமானவை விற்கப்பட்ட செய்திகள் கேள்விப்படவில்லையா ?
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
இருக்கு தேடி எடுத்து போட கோஞ்சம் நேரம் தாருங்கள் .
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
செய்தி ஆதாரம் எதுவும் உள்ளதா ?
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
கபித்தான் ஒவ்வொரு முறையும் வாங்கி கட்டி கொள்வதே வழமையானதே .
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
கொஞ்சம் பொறுங்க சண்டே டைம்ஸ் இலிருந்து மொழி மாற்றி போட்டேன் ஆங்கிலஇலக்கணம் இலக்கியம் தெரியாத கூட்டம் வந்து கேத களிக்கும் அதையும் தாண்டனும் வெயிர் அண்ட் சீ .😄
-
சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
முதலில் தமிழர்களின் அருமை பெருமையான ஓலைசுவடிகளை சென்னை நூலகத்தில் கரையான் அரிக்க வைத்து கொண்டு இந்த சவுடால் கதை .
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
உங்களின் பேத்தி ஜெயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
காலத்தின் தேவை கருதி மறு இணைப்பு நன்றி கிருபன் ஜி . 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாய்களை அவ்வாறு கொல்வதற்குத் தடை விதித்து ஒரு சுற்றுநிருபத்தை வெளியிட்டார். அதாவது 2009ஆம் ஆண்டு போர்க்களத்தில் சிக்கியிருந்த தமிழர்களை பூச்சி,புழுக்களைப் போல கொன்று யுத்தத்தை வென்ற ஒருவர்,சரியாக ஆறு ஆண்டுகளின் பின் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
முள்ளி வாய்க்கால் கஞ்சி வரிசை நினைவில் வந்து போகுது .
-
நீண்ட வரிசையில் நின்று, அரிசி வாங்குவதற்கு மக்கள் அலைகின்றனர்.
சனத் கமகே மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அம்பலாந்தோட்டை வர்த்தகர் சங்கம், சிவப்பு அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.220 என்ற கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க எடுத்த நடவடிக்கையால், நகரில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்பாட்டு விலைக்கு ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஐந்து கிலோ அரிசியை வர்த்தகர் சங்கம் வழங்கியது. இருப்பினும், கையிருப்பு முடிந்ததும், நூற்றுக்கணக்கான நுகர்வோர் ஏமாற்றத்துடன் வெளியேறினர். https://www.dailymirror.lk/breaking-news/Queues-back-people-jostle-for-rice-purchases/108-299561
-
ரஷ்ய இராணுவத்தில் 500 சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள்! வெளியாகும் பகீர் தகவல்கள்
இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்பு இராணுவத்தில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-in-russian-army-issue-1736165388
-
தைப்பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தயார் செய்ய அரிசி தட்டுப்பாடு - புறக்கோட்டை அரிசி மொத்த வியாபாரிகள்
நாட்டுக்கு வருகை தரும் சுற்றலா பயணிகளை நம்பியே வருமானம் எதிர்பார்த்து இருந்தால் இதுதான் முடிவு .
-
விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை
பல விடயங்கள் சொல்லலாம் . விவேக் மீடியாவில் உச்சகட்ட வெளிசத்தில் இருந்தவர் . 1. சுசிர் பாலாஜியின் கொலையா தற்கொலையா தெரியாது அவர் என்ன சொன்னார் a1 வாடிக்கையாளர்கள் இருந்தே தரவு திருட்டு நடை பெறுகிறது என்று . அதே போல் சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை யாழ் உறவுகளுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் . 2.குறைந்த விலையில் மொபைல் டீல் பிராட் பாண்ட் டீல் கிடைக்கும் சில வருடங்களில் சராசரி விலையையும் விட அதிக பணம் நமது பாங்கில் எடுத்து கொள்கிறார்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் குறைந்தது ஒரு மணி நேரம் காக்க வைப்பார்கள் இணைப்பு வாங்க போகையில் உள்ள வேகம் இந்த பிரச்னையை சொல்லி வெளியேற போகையில் உள்ள வேகத்தையும் கவனியுங்கள் . 3. ஒரு பொருளை வோசிங் மிசினை வாங்க முடிவு செய்து குடும்பத்தாருடன் கதைத்து போனில் உள்ள முக நூலை திறந்தால் வோசிங் மிசின் விளம்பரம் வருவது தற்செயல் ஆனதா ? 4.நமது வீட்டின் பின்புறம் ஆப்பிள் மரங்கள் உள்ளன நவம்பரில் குளிர் தொடங்கி யவுடன் பழம்கள் கொட்டி மரமும் மொட்டையாகி நிக்கும் அந்த கீழே விழுந்த பழங்களை அள்ளி வைப்பது ஒவ்வொரு விண்டரிலும் பெரிய வேலை ஆனால் சுப்பர் மார்கெட்களில் விண்டர் பொழுதுகளிலும் ஆப்பிள் பழம் விற்கிறார்களே எப்படி ? 5. gmail,ஹாட் மெயில் போன்றவை எமக்கு இலவசமாக தருகிறார்கள் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ? இப்படி நிறைய இருக்கின்றன கேள்விகளின் விடையில் உங்களுக்குரிய பதில் இருக்கும் .
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
இப்படி நீங்கள் கேள்வி கேட்பதால் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது அது கதைதான் சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம் . கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்.. கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று . புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?". சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது. "புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை. "புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது. புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை". அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது. "அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?". சிங்கம் பதிலளித்தது.. "புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை." உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்... எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!. நன்றி . சுமத்திரன் எனும் முட்டாள் விசரனால் தமிழரின் அரசியலை பலவருடங்கள் பின்னோக்கி தள்ளியுள்ளான் அதை புரிந்து கொள்ளாது சுமத்திரன் நல்லவன் வல்லவன் என்று புல் நீல நிறம் போல் வாதிடும் உங்களுடன் இனி இந்த திரியில் வாதிப்பதில் பலனில்லை நன்றி வணக்கம் .
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
அடுத்த தொற்று நோய் சீனாவில் இருந்து இலங்கைக்கு வரும் வராமல் விடாது . கொர்னோ போன்ற பாதிப்பை தராது என்கிறார்கள் ஆனால் பொருளாதார சீரழிவை கொடுக்கும் . கொர்னோ நேரம் கோத்தா செய்வது சரி என்ற யாழ் கள சூரர்களை இப்பவும் தேடுகிறேன் முக்கிமாய் அவர் பேரை சொல்வதுக்கு முன் அவராவே வந்து சரண்டர் ஆவது நல்லது 😆 எல்லாம் பகிடிக்குத்தான் .
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
இரண்டு பட்டம் வேறு வாங்கியிருக்கா அதுவும் 2௦ வயதில் என்கிறார்கள் ஒரே குழப்பமா இருக்கு .
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
உங்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்க என்னால் முடியாது . கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது. இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது. கனடா பிரதமர் தமிழர் இனப்படுகொலை தினமாக மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை மே 23ஆம் தேதி வெளியிட்ட பிறகு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனடா தூதுவரை நேரில் அழைத்து, கனடா அரசின் அறிவிப்பை முழுமையாக நிராகரிப்பதாக கூறினார். இலங்கை எம்.பி உதய கம்மன்பில இந்த விஷயத்தில் கனடாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். https://www.bbc.com/tamil/articles/ck7k07g900ro
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Tamil Genocide Remembrance Day: “Fifteen years ago, the quarter-century-long armed conflict in Sri Lanka came to an end. Tens of thousands of Tamils tragically lost their lives, including at the massacre in Mullivaikal. To this day, many more remain missing, injured, or displaced. Today, we honour the victims, survivors, and their loved ones, who live with the lasting pain caused by this senseless violence. “Two years ago, Canada’s Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day. We will always advocate for justice and accountability for the crimes committed during the conflict, as well as for the hardships faced by all in Sri Lanka. In 2023, we imposed sanctions against four former Sri Lankan government officials in response to their violations of human rights in the country during the armed conflict. “Canada is a strong defender of human rights in Sri Lanka. We are advancing our work with international partners to fully implement the United Nations Human Rights Council resolution adopted in October 2022, which calls for greater reconciliation, justice, accountability, and human rights in Sri Lanka. And we continue to urge the Government of Sri Lanka to respect freedom of religion, belief, and pluralism – essential values to build lasting peace. “Today reminds us of our shared responsibility to stand up for human rights, justice, and accountability – values that cannot be taken for granted. Canada will never stop its work to protect human rights across the world. On behalf of the Government of Canada, I invite Canadians to join in honouring the victims of the armed conflict in Sri Lanka. Together, let us reflect on how we can foster a better, more inclusive, and more peaceful world for everyone.” https://www.pm.gc.ca/en/news/statements/2024/05/18/statement-prime-minister-trudeau-on-tamil-genocide-remembrance-day
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
அப்ப கனடா அரசுக்கு புரிந்தது சுத்து மாத்து சுமத்திரனுக்கு விளங்கவில்லை சிலவேளை சாணியில் முக்கி எடுத்த செருப்பால் சுமத்திரனுக்கு தமிழ் மக்கள் திரத்தி திரத்தி அடி போட்டு இருந்தால் விளங்கி இருக்கும் . @Kapithan கடந்த தேர்தலில் தமிழ் சனம் நல்லதொரு முடிவை கொடுத்துள்ளார்கள் .இனி சுத்து மாத்து வெல்வது என்றால் கள்ள வோட்டுக்கள் மூலமே இல்லை பின் கதவு தான் அப்படி வந்தாலும் முன்பு போல் சுத்து மாத்து பண்ணினால் தமிழ் சனம் பொறுமையின் எல்லைக்கு சென்று விடுவார்கள் .6௦ வயதாகி விட்டது ஓய்வுக்கு போக சொல்லுங்க .
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
பல கோடி செலவழித்து எடுத்த good bad uglyஅசித்து படமும் வெளிவருவதுக்கு முன்பே பெட்டிக்குள் முடக்கபட்டு விட்டது . Good Bad Ugly: கதைத்திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி? படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில், படக்குழு புது சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதாவது, விடாமுயற்சி படம், ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல் என்றும், இதனை ப்ரேக் டவுன் படக்குழுவினரிடம் எந்த விதமான உரிமம் பெறாமல் படத்தினை எடுத்து விட்டதாகவும், லைகா தரப்பில் படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்குவதாக முதலில் தெரிவிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வருகின்றன. இப்படியான நிலையில், ப்ரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாராமவுண்ட் நிறுவனம், ரூபாய் 150 கோடு நஷ்ட ஈடு கேட்டு லைகாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read more at: https://tamil.filmibeat.com/news/ajithkumar-good-bad-ugly-director-adhik-ravichandran-opens-about-gbu-fans-happy-148009.html
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
சிங்களவர்கள் என்றாலும் தமிழர்கள் என்றாலும் என்ன செய்தாவது அந்த நாட்டை விட்டு ஓடித்தப்பிக்கணும் எனும் நிலை .
-
விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை
தனிப்பட்ட ஒவொருவரும் கண்காணிப்பில் உள்ளோம் ஆகவே இரண்டு மாதங்களுக்கு ஒரு புது ஐடியை பார்வையில் இடுவது நல்லது . உதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மெயில் ஐடியை மாற்றுவது .