Everything posted by பெருமாள்
-
திமுகவில் இன்பநிதிக்கும் வேலை செய்யனும்.., பேரனுக்கு போஸ்டர் ஒட்ட முடியாது என நிர்வாகி விலகல்
திமுகவில் இன்பநிதிக்காவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால் கட்சியிலிருந்து விலகினேன் என்று திமுக நிர்வாகி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகி விலகல் தமிழக மாவட்டமான சேலம், ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் எழில்அரசன் (35). திமுக நிர்வாகியான இவர், கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையில், "சேலம் மத்திய மாவட்ட திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்த நான், கீழ்காணும் காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். *திமுக ஆட்சியில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. * பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராக இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "நான் 2015-ம் ஆண்டு முதல் கட்சியில் இருக்கிறேன். அடிப்படை உறுப்பினர் முதல் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த உதயநிதியை குறுகிய காலத்திற்குள் இளைஞரணிச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என உயர்ந்த பொறுப்பு கொடுத்தனர். பல ஆண்டுகளாக கட்சியில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லை. வரும் காலத்தில் இன்பநிதிக்காகவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று தான் வேதனையாக உள்ளது. இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன்" என்றார். https://news.lankasri.com/article/will-have-to-work-for-inbanidhi-dmk-member-resign-1738733894
-
உலகின் 10 சக்திமிக்க நாடுகள் அறிவிப்பு: இந்தியாவுக்கு இடமில்லை
உலகின் முதல் 10 தரவரிசையிலான நாடுகள் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளமுடன் இஸ்ரேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சக்திவாய்ந்த நாடுகள் எனினும் இந்தியா இந்த 10 நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படாமை குறித்து, பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. இந்த பட்டியல் பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்றபோதும், அதிக மக்கள் தொகை, நான்காவது பெரிய இராணுவம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியாவை ஏன் இந்த பட்டியில் சேர்க்கவில்லை என்ற கேள்வியே எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பட்டியல், ஐந்து முக்கிய காரணிகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியா தலைமைத்துவம், பொருளாதார செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, வலுவான சர்வதேச கூட்டணிகள் மற்றும் ஒவ்வொரு நாட்டின் இராணுவ வலிமை என்பனவே அவையாகும் என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பட்டியலில்,உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. பட்டியலின்படி, முதல் 10 இடங்களில், அமெரிக்கா, சீனா, ரஸ்யா ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/10-most-powerful-countries-in-the-world-1738687143?itm_source=parsely-detail
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
நாங்க சாமத்தில் பேய்கள் வெளியிரங்கும் நேரம் யாளுக்கு வருவதுண்டு இப்படி வயிறு வலிக்க சிரிக்க வைக்க வேணாம் 😄
-
தமிழரசுக்கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்!
தமிழரசு கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை> கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்> சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தில் 31ம் திகதி அன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது> வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சீ.வி.சிவஞானம் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு மோசமான செயற்பாடு. மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தனக்கு சார்பான செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளில் சுமந்திரன் மும்முரமாக இருந்துள்ளார். மாவை சேனாதிராசா அவர்களை மாற்றவேண்டும் என்றால்> அல்லது அவர் ராஜினாமா செய்துள்ளார் என்றால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தலைவராக சிறிதரன் இருககின்றார். அவரை தலைவராக தெரிவு செய்வதுதான் ஒரு அறநெறிக்கு உட்பட்தாகும். அதை விடுத்து அதைப்பற்றி எதுவுமே பேசாமல் இன்றைக்கு சி.வி.கே.சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். இது தமிழரசு கட்சியில் சுமந்திரன் பிரிவினருக்கு எதிராக இருக்கின்றவர்களை அகற்றி> சிறிதரனை தனிமைப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கை உள்வாரியாக இடம்பெறுகின்றது என்றே நான் நினைக்கின்றேன ;. இன்னும் கொஞ்சக்காலத்தில் சிறிதரன் தனிமைப்பட்டுப் போக சிறிதரனுக்கு எதிராக ஒரு ஒழுக்காற்று தீர்மானத்தை நிறைவேற்றி அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கூட பறிக்கக்கூடிய ஒரு நிலை இருக்கும் என நான் நினைக்கின்றேன். குறைந்தது ஆறு மாதத்திற்குள் சுமந்திரன் சிறிதரனை கட்சியிலிருந்து நீக்கி அல்லது தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சத்தியலிங்கத்தை பதவியிலிருந்து இராஜினாமா செய்யச்சொல்லி தான் அதற்கூடாக பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றது என்று நான் நினைக்கின்றேன். இன்னொரு பக்கமாக சுமந்திரன் ஊடக பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கனவே சிறினேசன் அவர்கள் ஊடக பேச்சாளராக இருக்கின்றார். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். தற்போது புதிதாக கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்றும்> பாராளுமன்றத்தின் ஊடக பேச்சாளராக சிறிநேசன் இருப்பாரென்றும் கூறப்படுகிறது. ஒரு கட்சிக்கு ஏன் இரண்டு ஊடக பேச்சாளர்கள்? ஒரு கட்சிக்கு ஒரு ஊடக பேச்சாளர் போதுமானதே. சுமந்திரனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். தமிழரசு கட்சியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மாவை சேனாதிராசா தான் என சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்கள். மாவை சேனாதிராசாவில் விமர்சனங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இந்த போக்குகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் சுமந்திரன் தான் என்பது இன்றைக்கு வெட்ட வெளிச்சமான உண்மையாகும். இதிலே தமிழரசு கட்சி என்பது ஒரு பாரம்பரிய கட்சி> அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது> அதற்கு வடக்கு கிழக்கு கட்டமைப்பு இருக்கிறது. அது பலவீனப்பட்டு செல்வது தமிழ் அரசியலை பலவீனப்படுத்துவது தமிழ் அரசியலை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும். ஆகவே தமிழரசு கட்சியை பாதுகாக்கின்ற நடவடிக்கையை கட்சிக்காரர்கள் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. எனவே வெளியிலிருந்து மக்கள் ஒரு பலமான அழுத்தத்தை கொடுப்பதன ; ஊடகவே இதனை முன்னேற்றமுடியும் என நான் கருதுகின்றேன். அதிலிருந்து நாம் தவறுவோமாகவிருந்தால் ஒரு குறுகிய காலத்திலேயே இலங்கை தமிழரசு கட்சி வடக்கிலே இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகக்கூடி ஒரு சூழல் வரலாம் என்பதே எனது நிலைப்பாடு. இந்தப் போக்கை தமிழ் மக்கள் அனுமதிக்கப்போகிறார்களா என்பதுதான் எனது கேள்வி. இதில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு விடயம் இது ஒரு கொள்கைப் பிரச்சினை. தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய அரசியலும் இதுவரை பின்பற்றிய அரசியலை கைவிட்டு இன்னோர் அரசியலை கொண்டு செல்வதற்காக குறிப்பாக இறைமை அரசியலை கைவிட்டு ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் ஒரு அரசியலை கொண்டு செல்வதற்கும்> இணக்க அரசியலை கொண்டு செல்வதற்க்காகவும் சுமந்திரன் இந்த வேலையை செய்கிறார். இந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் ஏன்பதே எனது நிலைப்பாடாகும் என்றார். https://uthayannews.ca/wp-content/uploads/2025/01/Jan_3_2025.pdf
-
இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடிக்கும் படகுகளின் உரிமை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது உண்மையைப் போட்டுடைத்த இலங்கை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர
இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படும் இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும் எனக் கூறிய இலங்கையின் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்> கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தும் இழுவைமடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித்தொழிலாளர்களே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த படகுகளின் உரிமை இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 'அந்த செயற்பாடு என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்த இழுவைமடியில் இழுவைப் படகுகளில் வருகின்றவர்கள் மீன் பிடிக்க வருகின்றவர்கள் அங்கிருக்கின்ற கூலித் தொழிலாளர்களாகும். அந்த படகு உரிமையாளர்களை எடுத்துப் பார்க்கின்ற போது> அங்கிருக்கின்ற அரசியல்வாதிகள் அல்லது பெரும் முதலைகளாகும். ஆகவே அந்த வகையிலே நிச்சியமாக நாளைக்கு அந்த படகுகள் பறிமுதல் செய்யப ;படுகின்ற போது> கைது செய்யப்படுகின்ற போது> மனிதாபிமான அடிப்படையில் அதில் இருக்கின்ற கூலித் தொழிலாளர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது தான் மனிதாபிமான நடவடிக்கையே தவிர> அல்லது இந்தியா வந்து இங்கு என்ன செய்துகொண்டு போனாலும் சரி> அவர்கள் எங்களது கடலை நாசமாக்கினாலும் சரி... இப்ப எங்களுக்கு இறால் பிடிக்கின்ற காலம் இது. இறால் பிடிக்கின்ற காலத்திலே> உண்மையிலேயே எங்களுடைய கடல்களை அழித்துக்கொண்டு போகின்ற செயல்பாடுகளை இந்திய மீனவர்கள் செய்கின்றார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள்." இந்திய மீனவர்கள் நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 'இது தொடர்பான செயற்பாடுகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தெரியும். தமிழ் நாட்டிலுள்ள புத்திஜீவிகளுக்கும் நன்றாகவே தெரியும். அது மாத்திரமின்றி டில்லியிலிருக்கின்ற மத்திய அரசாங்கத்திற்கும் தெரியும். அதில் இருக்கின்ற இது தொடர்பான அறிஞர்களுக்கும் நன்றாகவே தெரியும்." இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அழிவுகரமான ஆக்கிரமிப்பினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்து குறித்தும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல> எதிர்கால தலைமுறையும்> எதிர்கால வாழ்க்கையும். அந்த வகையில் இவ்வாறு அழிக்கப்படுமானால்> இன்னும் 15> 20 வருடங்களுக்கு பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போகின்ற கடல் பாலைவனமாக மாறுகின்ற ஒரு நிலை ஏற்படும் என்பது நாங்கள் மாத்திரமல்ல> சகல அறிஞர்களுக்கும் தெரிந்த விடயமாகும்." இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கிலுள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். இது இவ்வாறிருக்க. ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கு மீனவர்களை திருப்திப்படுத்தும் நிலையான தீர்வு கிடைக்காத நிலையில்> யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கடற்றொழில்> நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். 'இதற்குப் பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அனைத்து பேச்சுக்களும் முடிந்துவிட்டன. இதன் பின்னர் எவருடனும் பேச்சுவார்த்தை இல்லை". கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுகள் தொடரும் எனவும் தொழில்நுட்பம்> தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறுகிறார். வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டவிரோத இந்திய மீன்பிடி முறைகளால் கடனில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அச்சம் எழுந்துள்ளது. டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லியில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது> இரு நாட்டுத் தலைவர்களும் கடற்றொழில் பிரச்சினையை 'முக்கியமானது" என அடையாளப்படுத்தியிருந்தனர். மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும் என நாங்கள் கலந்துரையாடினோம் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். 'எவ்வாறாயினும்> மனிதாபிமான உதவிகளை வழங்குவதா அல்லது பெறுவதா என்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை." இலங்கை ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது> இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால்> வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்குமென கவலையடைந்திருந்தனர். எனவே தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இணைந்து அமைதியான தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் மீனவர் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்திய மீனவர்கள் வட கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை 'ஆக்கிரமிப்பு" என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு பேசாலையிலேயே இருக்கின்ற மீனவர்களை நாங்கள் சந்திக்கின்ற போது> வல்வெட்டித்துறையில் இருக்கின்ற மீனவர்களை சந்திக்கின்ற போது> ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற மீனவர்களை சந்திக்கின்ற போது> மீனவர்கள் சொல்லுகின்றார்கள்> 'ஐயா எங்களுக்கு இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்துங்கள். அல்லது நாங்கள் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளப் போகின்றோம்." கடலைச் சுரண்டும் இழுவைமடி மீன்பிடி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார். 'இதே வார்த்தையை இந்திய து}துவருக்கும் கூட நான் சொன்னேன். அது மாத்திரம் அல்ல> இந்த இழுவைப் படகுகள் என ;பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவை இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால்> இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். https://uthayannews.ca/wp-content/uploads/2025/01/Jan_3_2025.pdf
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
சம்பந்தர் மற்றவர்கள் போல் நெருக்கடியான கால கட்டத்தில் இறக்கவில்லை . அதை முதலில் புரிந்து கொள்ளுங்க இயல்பான நாளில் இறந்த ஒரு அரசியல் தலைவரை மக்களே இல்லாமல் அநாதை பிணம் போல் தகனம் செய்தார்கள் அதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தமிழ் மக்களின் இறுதி மரியாதையும் பழி வாங்கலும் . ஆனால் அதே கட்சி தான் மாவையருக்கு தமிழ் மக்கள் கொடுத்த இறுதி மரியாதை பார்த்தீர்கள் தானே ? ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்றதை அவனின் இழவு வீடு சொல்லிவிடும் .
-
மாவையின் உடல் தகன மயானத்தில் தடை விதிக்கப்பட்ட 19 நபர்கள்: சர்ச்சையை கிளப்பிய பதாகை
மாவையின் உடல் தகன மயானத்தில் தடை விதிக்கப்பட்ட 19 நபர்கள்: சர்ச்சையை கிளப்பிய பதாகை By Sajithra 11 hours ago இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அந்த பதாகையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் துரோகிகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mavai-death-ban-poster-showed-up-1738493675
-
மாவையின் மரணம் தொடர்பில் கொட்டித் தீர்க்கப்படும் ஆதங்கங்கள்
தமிழரசுக்கட்சின் மூத்த தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் மரணம் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. அவரின் மரணத்திற்கு முன்னர் தமிழசசுக்கட்சியின் இரு முக்கியஸ்தர்களை சந்தித்ததாகவும், அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், மாவை சேனாதிராஜாவின் மரணம் தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மற்றும் சட்டத்தரணி உமாகரன் இராசையா இன்றைய 02.02.2025 ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்ளனர். லங்காசிறியின் ஊடறுப்பு நேரலையை இலங்கை நேரம் - இரவு 09.00 பிரித்தானிய நேரம் - மாலை 3.30 ஐரோப்பிய நேரம் - மாலை 4.30 காணலாம். https://tamilwin.com/article/mavai-death-controversy-udaruppu-live-today-1738510352?itm_source=parsely-detail
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
நன்றி .
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
வடகிழக்கு தமிழர் களுக்காக 7 வருடத்துக்கு மேல் சிறையில் இருந்த ஒரு தமிழ் அரசியல்வாதியை உங்களால் சுட்டி காட்ட முடியுமா ? அனாதை பிணமாக சம்மந்தர் போனது போலத்தான் சுமத்திரன் இறந்தாலும் என்ன கொஞ்ச சிங்கள இனவெறியர்கள் சுமத்திரன் பிணத்துக்கு காவல் காப்பார்கள் அவ்வளவுதான் 😀
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
முதலில் பயங்கரவாத தடை சட்டத்தை எடுக்காமல் தமிழ் மக்களுக்கு புனுகு பூசுவதில் ஒன்றும் நடக்காது புலம்பெயர் தமிழர்கள் நம்ப போவதில்லை .
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
இரண்டாவது சியா மாசெட்டி தாக்குதல் வல்வெட்டி துறையில் அல்ல வல்வெட்டியில் அயலூரில் நடந்ததாய் ஞாபகம்.
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
எல்லாம் இந்த சிங்கள சுமத்திறனால் வந்த வினை .
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
சார் நான் இங்கு லண்டனில் என்ன செய்கிறேன் என்பதை மறைத்து பார் லைசன்ஸ் ஸ்ரீயின் கார் டிரைவர் என்ற லெவலுக்கு காட்டி கொடுக்காமல் இருகிரியல் அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன் சார் நன்றி சொல்லுகிறேன் சார் . ஆனால் உங்களுக்கு தெரியாமல் இல்லை நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும் எனக்கு அதுவும் தெரியும் 😆சில எல்லைகள் தாண்ட கூடாது வடிவேலு போல் உங்கள் எல்லைக்குள் நானும் வரமாட்டன் நீங்களும் வரகூடாது இது வார்த்தைகள் அல்ல 😀 வாழ்வே எல்லாம் பகிடிதான் .
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
அதை சொன்னால் பலருக்கு கோவம் வருது .
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
குரானை எரித்தவன் போல் நம்ம சாவும் என்கிறிர்கள் உண்மையான பெருமாள் யார் என்று தெரியாமல் .😃
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் 💐
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
நம்ம பார் சிறிதரன் போல் அங்கும் உண்டு . என்னடா இவனும் சிறியை திட்டு கிறானே என்று பார்க்க வேணாம் யார் பிழை செய்தாலும் குற்றம் குற்றமே ஆனால் என்னால் கூட மாற முடியும் இந்த சும் அடிவருடிகளால் மாறவே முடியாது காரணம் அதுகளின் பிறப்பு ஜீ.........😄
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
இந்த ரோலிங் படகுகளால் இந்திய அரசு வேண்டுமென்றே செய்கின்றது போல் உள்ளது வடகிழக்கில் வரிசையாக 15௦ ரோலர் இடைவெளி இல்லாமால் மீன்வளம் உள்ள கண்டமேடையை குஞ்சு குருமான் உள்ள அனைத்து மீன்களையும் அள்ளி எடுப்பதால் அந்த மீன் விளைவிக்கும் கருவறையை இல்லாமல் நாசம் பண்ணுகிறார்கள் இதனால் மீனையும் இறக்குமதி செய்யும் நிலையில் இலங்கை ?
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அந்த முறை உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்ட ஒன்று முடிந்தால் தமிழக கடற்கரையில் 1௦ மைலுக்குள் அதே இழுவை படகு களை ரோலிங் செய்து காட்ட சொல்லுங்க சிறு தொழில் செய்பவர்களுக்கும் ரோலிங் பன்னுவர்களுக்கும் பெரும் கலவரமே உருவாகிவிடும் . இப்படியான இலங்கையின் வடகிழக்கு ஆழம் குறைந்த சூரிய ஒளி இலகுவாக கடலின் அடி வரை செல்லும் இந்த இயற்க்கை சூழ்நிலை ஒரு வரம் மீன்கள் இலகுவாக இனப் பெருக்கம் அடையும் கருவறை இப்படியான கருவறையில் 1௦௦லிருந்து 15௦ தமிழக ரோலர்கள் சொல்லி வைத்தது போல் ரோலிங் பண்ணி கடலின் அடியை பாலைவனமாக்கும் செயலை யார் பொறுத்து கொள்வார் ? முதலில் ஆசியாவில் அரசியலில் ஈடுபடனும் என்றால் குறிப்பிட்ட படிப்பு தகுதி இருக்கணும் என்ற நிலையை கொண்டு வாருங்கள் .
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
சம்பந்தன் போல் கொழும்பு வீட்டுக்கு ஆசைப்பட்டு கிண்ணியா வெந்நீர் ஊற்றுக்களை தாரை வார்த்தது போல் இவர் அப்படி ஒன்றும் தமிழர்களுக்கு எதிராக செய்யவில்லை சுகமாகி வரனும் சுமத்திரன் எனும் துரோகி அரசியலை விட்டு போகுமட்டும் இவர் உயிர் உடன் இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன் .
-
யாழ். கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு;இருவர் காயம்
உலகில் தடை செய்யப்பட ரோலர் மீன் பிடியை கொண்டு வடகிழக்கு கடலில் அடாத்தாக மீன் பிடிப்பவர்களை தமிழக மீனவர்கள் என்று அழைப்பதே பிழையானது. அவர்களை ரோலர் மீன் வள கொள்ளைகாரர்கள் என்று ஊடகங்கள் குறிப்பிட வேணும் . ஏனென்றால் பலருக்கும் புரிவதில்லை தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை கொண்டு அவர்களின் சொந்த கடல் பகுதியையும் நாசம் பண்ணி கடைசியில் வடகிழக்கு மீன்கள் உருவாகும் கருவறை கண்ட மேடைகள் மீது ரோலிங் அடிப்பதால் வடகிழக்கு தமிழர்களின் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் இப்படி சொத்தை நாசம் பண்ணுபவர்களை எப்படி அழைக்கவேணும் ?
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
சுமத்திரனும் சரி அவரின் அடிபொடிகளுக்கும் எதிராளி ஒரு கேள்வி கேட்டால் பதில் வராது ஏனென்றால் செய்வதெல்லாம் வடகிழக்கு தமிழருக்கு எதிரான துரோகத்தனம் சிங்களத்துக்கு சார்பான வேலைகள் .
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
உங்கடை சுமத்திரன் கடந்த 14 வருடமாய் தமிழருக்கு செய்த ஒரு நல்ல விடயத்தை சொல்ல முடியுமா ?