Everything posted by பெருமாள்
-
சீனாவில் புதிய வைரஸ் பரவல் - இலங்கை எச்சரிக்கை நிலையில்
உலகம் முழுக்க இருக்கிற சீனர்கள் தங்களின் நாட்டுக்கு திரும்பி ஜனவரி 29 அவர்களின் புது வருசத்தை கொண்டாடி விட்டு அப்படியே இலவச இணைப்பாக புதிய தொற்று நோயோடு வந்து இறங்கி இங்குள்ள நாடுகளில் நோயை பரப்ப போகினம் .
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
இந்த ஜென்மத்தில் இவைகள் திருந்த மாட்டினம் .
-
ஓய்வின் பின்னர் அரகலய சர்ச்சை தொடர்பில் மனம் திறந்த சவேந்திர சில்வா
2022ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை வெளிப்படுத்தியது என ஓய்வு பெற்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்(BMICH) இடம்பெற்ற சவேந்திர சில்வாவின் பதவி விலகும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தினால் ஏற்பட்ட குழப்ப நிலை, எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு சிக்கலான கட்டமாகும். இது எனது உண்மையான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகள் யார் என்பதை காட்டிக்கொடுத்தது. குறைந்தபட்ச அதிகாரம் இராணுவம் என்பது ஒரு உத்தியோகபூர்வ ஆயுதப் படையாகும். இது வெளியில் அல்லது உள்நாட்டில் அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்க தயாராக உள்ளது. அரகலய போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டேன். எந்த ஒரு சாதாரண அப்பாவி குடிமகனும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறப்பதை நான் விரும்பவில்லை. நிராயுதபாணியான மக்களுக்கு எதிராக அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஒருவனாக இருக்க நான் விரும்பவில்லை. இதேவேளை, அதிகார வெறி பிடித்த ஆட்சியாளர்கள் கூறுவது போல், அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற தீய நோக்கம் என்னிடம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/savendra-silva-on-aragalaya-protest-1735664997
-
2025இல் இலங்கை ரூபாவிற்கு காத்திருக்கும் நெருக்கடி!
2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதால் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதனால், தற்போது அதிகரித்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி அப்போது சரிவடைய வாய்ப்புள்ளது. தற்போது இலங்கையில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் கடன்கள் கிடைக்கப்பெறுவதாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வருகின்றது. எனினும், இறக்குமதிக்கான தடைகள் தளர்த்தப்படும் போதும் கடன்களை மீள செலுத்தும் போதும் இலங்கையில் டொலர் வெளிப்பாய்ச்சல் அதிகரிக்கும். இதேவேளை, இலங்கையின் கைத்தொழில் துறை முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு வளர்ச்சியை கடந்த காலங்களில் காட்டியுள்ளமை ஒரு சாதகமான பொருளாதார அம்சமாக கருதப்படுகின்றது. https://tamilwin.com/article/sri-lankan-rupee-crisis-awaits-in-2025-1735665684
-
யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் அத்து மீறிய செயற்பாடுகள்
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளும் அவ்வாறே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான படைத்தரப்பு உறவுகள் வலுவாக இருப்பதாக இந்தியா தெரிவித்து வருகின்றது. புலனாய்வு அமைப்புக்களின் தலையீடு இல்லாமல் இவ்வாறு படைத்தரப்பு உறவுகள் வலுவாக அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. https://tamilwin.com/article/indian-raw-activities-in-sri-lanka-1735605571
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
வாழ்த்துக்கள் மிக விரைவாக அழியட்டும் . முதலில் ஒழுங்கான கதையமைப்பு கிடையாது இன்னமும் நஞ்சு என்று எழுதிய போத்தலை காட்டினால் தான் விளங்கி கொள்ளும் ரசிக குஞ்சு மணிகள் இன்னை வரைக்கும் நீச்சல் குளத்தில் பாயும் போது வண்டியட விழுவது ஒரு பாய்ச்சல் என்று காட்டுவது ஒரு தமிழ் படத்தில் கூட முறையான நீச்சல் பாய்தல் கிடையாது இப்படி கேணத்தனமான காட்சிகளை வைத்து விட்டு படம் ஓடா விட்டாலும் ஓடுது அள்ளுது என்று மீடியாவில் அள்ளி விட்டு கடைசியில் ஒப்பாரி வைப்பது அவர்களின் வாடிக்கை . netflix போன்றவை ஆங்கில படங்களுக்கும் தமிழ் ஆக்கம் செய்து வெளியிடுகிறார்கள் . இன்னமும் விஜயையும் அசித்தையும் கிழட்டு ரசனியையும் நம்பினால் இதுதான் வழி .
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
இப்ப எல்லாம் முழு பயித்தியம் கள் தான் அரசியல் செய்கின்றன போல் உள்ளது அங்கு அண்ணாமலை இங்கு அர்ச்சுனா .
-
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
ஒருவரியில் வரவேண்டிய செய்தி வீரகேசரி படிப்பவர் எண்ணிக்கை குறைவு செய்தியைநீட்டிப்பதில் அவர்களின் வறுமை தெரிகிறது . ஒத்தை வரி செய்திகள் என்ற திரியை திறக்கலாமா என்ற யோசனை உள்ளது காலையில் எழுந்ததும் நான்கு தளம்களுக்கு விசிட் பண்ணி இப்படி நேரத்தை விழுங்கும் செய்திகளை படிச்சு நொந்து போவதை தவிர்க்கலாம் .
- தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார்
-
இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு மக்கள் கோரவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகின்றார்களே அன்றி இராணுவத்தினரின் காணிகளை அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் நடைபெற்ற விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மர நடுகை விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். https://tamilwin.com/article/vedhanayagan-on-governor-n-vedhanayakan-1735169633 “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர்.
-
முள்ளிவாய்க்கால் செல்வதை தவிர்க்கும் மெல்கம் ரஞ்சித்
முள்ளிவாய்க்கால் பேரவலம் இடப்பெற்ற பகுதிக்கு செல்வதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்றுவரை தவிர்த்து வருகின்றார். சர்வதேசத்தின் பிரதிநிதிகள் பலர் இதுவரை முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்துள்ள போதிலும் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் முள்ளிவாய்க்காலுக்கு செல்லவில்லை. யுத்த காலத்தில் கடும்போக்காக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு சாதகமான கருத்துக்களை கூறிவந்த மெல்கம் ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக குரல் எழுப்பவில்லை. இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய அவர், தற்போது அந்த விடயத்திலும் சிறிது அமைதி காப்பது போலவே உள்ளது. https://tamilwin.com/article/malcolm-ranjith-avoids-going-to-mullivaikkal-1735171168
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
தமிழ் bbc இதுக்குமாடா கேள்விக்குறி ?- கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
bbc தமிழ் தான் அனைத்து செய்திகளின் முடிவிலும் கேள்வி குறி .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்.- கடல்வள கொள்ளையர்
இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று . அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
மேல் உள்ள காணொளி 9 வருடங்களுக்கு முன்பானது .- தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம் ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது. ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள். எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால் திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். மாவை மீது குற்றம் ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது. ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள். எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால் திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1734860121?itm_source=parsely-detail- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
நோர்வேயும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை இந்த விசர் சுமத்திரனும் ஒன்றும் புடுங்கவில்லை இதை ஒரு செய்தியாய் போடுபவர்களை தான் குற்றம் சொல்லனும் .- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
எலான் முன்னர் அறிவித்தது போல் முதலில் கலிபோர்னியா நகரங்களான லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே மணிக்கு 700 மைல் வேகத்தில் செல்லும் ஹப்பர் லூப் திட்டத்தை நிறைவேற்ற எலானிடம் சொல்லுங்க அதன் பின் பார்க்கலாம் .- கடல்வள கொள்ளையர்
"கடல் வள கொள்ளையர்" நல்ல தொரு தலைப்பு .- 15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு
அனுரா தானும் ஒரு சிங்களவர் என்று நிருபித்து உள்ளார் இவரால் தமிழர்கள் ஒரு போதும் நிம்மதி அடைய போவதில்லை சிங்கள தொடர் தொல்லை தான் அவர் ஊழல் புரிந்தார் இவர் ஊழல் புரிந்தார் என்று சொல்லுகினமே தவிர இவர்தான் என்று குற்றம் சாட்ட முடியாதளவுக்கு நுண் அரசியல் செய்கிறார் பின்னால் அநேகமா சீனா இருக்கலாம் . இனியும் அந்த ஊழல் இந்த ஊழல் என்று பெரிதாய் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் ஏனென்றால் இது அனுரா அரசியல் அவ்வளவே சிங்களம் மாறவில்லை முகமூடி மாற்றி உள்ளனர் .- மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
இனவாதமும் மதவாதமும் இருக்கும் அந்த அழகான தீவு இனி பூமியின் நரகம் அவ்வளவே .- தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு
Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர். குறித்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பது தமி்ழ் பேசும் மக்களின் அரசியல் பரப்பில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அநுர அரசாங்கம் இலங்கையர்களாக சிந்திப்போம் என்று கூறுகின்றமையானது, தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லாதது போன்று காட்டும் தந்திரோபாயமாக உள்ளதாக என அரசியல் ஆய்வாளர் திபாகரன் குறிப்பிட்டுள்ளார். Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியும் தமிழர்களை அதாள பாதாளத்திற்கு தள்ளுவதாக உள்ளது.தமிழர்களை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார். https://tamilwin.com/article/clean-sri-lanka-special-gazette-released-anura-1734792198- பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?
அமென்யா தற்கொலையில் முடிவு காட் போடப்படும் . - சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
Important Information
By using this site, you agree to our Terms of Use.