Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025 1 மொத்தம் 339 உள்ளூராட்சி மன்றங்களில் 266 உள்ளூராட்சி மன்றங்களைத் தேசிய மக்கள் சக்தி வென்று இருக்கிறது. ஆனால் இதில் நூற்று எழுபது சபைகளில் மட்டுமே எந்தப் பிக்கல் பிடுங்கலுமில்லாத தனி ராஜ்யம் சாத்தியமாகிறது. பல இடங்களில் அரசு பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையானது மொத்த எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் ஆசனங்களின் கூட்டுத் தொகைக்கு சமனாகிறது. இவற்றிலும் எந்தப் பிரச்னையுமின்றி ஆட்சி அமைக்க முடியும். ஆனால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்க்கட்சிக்கு அதிகமாய் உள்ள சபைகளில் தான் பிரச்னை எழப் போகிறது.தாம் சுயாதீனக் குழுக்களுடன் இணைந்து தான் ஆட்சி அமைக்கப் போவதாகவும் பாரம்பரிய கட்சிகள் மற்றும் எச்சங்களுடன் இணையப் போவதில்லை என்றும் டில்வின் சில்வா சொல்வதைப் பார்க்கும் போது இது தீரப் போகும் பிரச்னை மாதிரி தெரியவில்லை. அநேகமாய் இத்தகு சபைகள் கமிஷனர் ஒருவரின் கீழ் மத்திய அரசில் இருந்து நிர்வகிக்கப்படலாம். Zafar Ahmed
  2. இலங்கைக்கு அமைதிப் படை என வந்து.... குறிப்பிட்ட அளவு ஆயுதங்களை மட்டுமே வைத்திருந்த, சாரம் கட்டிய புலிகளிடம்... ஆயிரக் கணக்கில் உயிரை பலி கொடுத்து, பல்லாயிரக் கணக்கில் அங்கவீனர்களாக திரும்பிப் போன நாடுதான் இந்தியா. இப்படியிருக்க... பாகிஸ்தான் என்ற நாட்டிடம்... வளமாக வாங்கிக் கட்டப் போகின்றார்கள். இந்திய பாதுகாப்பு படைகளிடம்.. பாகிஸ்தானிடம் உள்ள மனவலிமை குறைவு என்பது எனது கணிப்பு. அவர்கள்... எளிதில் விலை போகக் கூடியவர்கள். அரசியல் வாதிகளும், ஊடகங்களும், இணைய வாசிகளும் அளவுக்கு அதிகமாக ஊதி பெருப்பித்து இந்திய இராணுவத்திற்கு குழை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே உண்மை. 🤣
  3. பாகிஸ்தான் காரனெண்டால் சும்மா இல்லேடா... நெருப்புடா. இந்தியாவின் 5 போர் விமானத்துக்கு சமாதி கட்டிய பாகிஸ்தான் வீரர்கள்.
  4. மீன் தலை வெட்டின, வெட்டிலை.... வெட்டின பலகையும்... இரண்டாய் போச்சுது. 😂 🤣
  5. கரைச்சியில் தமிழரசு வரலாறு காணாத வெற்றி💜 வாழ்த்துகள் 💜💕 Shritharan Sivagnanam சேர் 21 வட்டரங்களில் 20 வீடு, ரெலிபோன் 1💜 கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தன்வசப்படுத்தியிருக்கிறது. கரைச்சி 21 இல் 20 🏠 பூநகரி 11 இல் 10 🏠 பளை 8 இல் 6 🏠 K J Arun Kumar
  6. தமிழ்த் தேசிய மண்ணிலிருந்து சுமந்திரன் வெளியேற்றம். சுமந்திரனின் வீட்டு வட்டாரமான குடத்தனை வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி படு தோல்வியடைந்தது. ஆனால் தமிழ்த்தேசியம் வென்றது🔥 சசிகலா ரவிராஜ்
  7. இந்த 6 மாதங்களில் தெற்கில், பல மாவட்டங்களில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் மொட்டுக் கட்சியின் வாக்குகளில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. SJB ம் கணிசமான வாக்குகளை அதிகரித்துள்ளது. NPP தனது வாக்குவங்கியை அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் இழந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் வேகம் மீண்டும் 3% வெகுதொலைவில் இல்லை என்பதைக்காட்டுகிறது. ஆகையால் இனி அவர்கள் தமது முகமூடிகளை அகற்றத்தொடங்குவார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அதைக்கொண்டுதான் மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். Monisha Kokul
  8. 3000 நாட்களை எட்டிய காணாமல் போன உறவுகளின் போராட்டம்! தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 3000 நாளை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதிப்போரின்போதும்,அதற்கு முன்னரும் காணாமல் போன தமது உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 3000 நாட்களை கடக்கின்ற நிலையில் அவர்களது போராட்டம் தீர்வின்றி தொடர்ந்து செல்கின்றது. இதனையடுத்து இன்றையதினம் அவர்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஐரோப்பிய அமெரிக்க கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தங்களுக்கு சர்வதேசநீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1431117
  9. 2025 உள்ளூராட்சி தேர்தல்: நாடு முழுவதுமான இறுதி முடிவுகள்! 2025 உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தி (NPP) 4,503,930 வாக்குகளைப் (43.26%) பெற்று, இலங்கை முழுவதும் 3927 இடங்களைப் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, 23 மாநகர சபைகள், 26 நகர சபைகள் மற்றும் 217 பிரதேச சபைகள் உட்பட 266 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 2,258,480 வாக்குகளுடன் (21.69%) 1767 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்தக் கட்சி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 02 நகர சபைகள் மற்றும் 11 பிரதேச சபைகள் அடங்கும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 954,517 வாக்குகளைப் (9.17%) பெற்று, 742 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 488,406 வாக்குகளைப் (4.69%) பெற்று 381 இடங்களைப் பெற்றுள்ளது. ஆனால் எந்த உள்ளூராட்சி மன்றத்தையும் வழிநடத்தத் தவறிவிட்டது. இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK) 307,657 வாக்குகளைப் (2.96%) பெற்று 377 இடங்களைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சி 37 சபைகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் 03 மாநகர சபைகள், 01 நகர சபை மற்றும் 33 பிரதேச சபைகள் அடங்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 116 இடங்களைப் பெற்றுள்ளது. 02 நகர சபைகள் மற்றும் 03 பிரதேச சபைகள் உட்பட 05 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி 300 இடங்களையும் சர்வஜன அதிகாரம் 226 இடங்களையும் பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1431108
  10. இந்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் மரணம்! பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாத முகாம்களை புதன்கிழமை (07) அதிகாலையில் இந்தியா தாக்கியது. பஹால்காமில் உள்ள சுபான் அல்லா வளாகத்தின் மீதான தாக்குதல்கள், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்ற பஹால்காம் படுகொலைக்கு இந்தியாவின் பதிலடியான ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ இன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்க தாக்குதல்களில் ஒன்றாகும். இதில் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். இதேவேளை புதன்கிழமை எல்லையில் இந்தியா நடத்திய தாக்குதல்களிலும் துப்பாக்கிச் சூட்டிலும் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதேநேரத்தில் அணு ஆயுதப் போட்டியாளர்களுக்கு இடையே பல தசாப்தங்களில் நடந்த மிகக் கடுமையான சண்டையில், பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் இந்தியா கூறுகிறது. https://athavannews.com/2025/1431101
  11. புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று! கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21ஆம் திகதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் மாநாடு இன்று (07) தொடங்கும் என்று வத்திக்கான் அறிவித்தது. அதன்படி இன்று(07) பாப்பரசர் தேர்வு தொடங்குகிறது. வத்திக்கானில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடைபெறுகின்றது. இதற்காக வத்திக்கானில் 250 கர்தினால்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கர்தினால்கள் சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து இரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள். கர்தினால்களை தவிர இரண்டு அவசர கால வைத்தியர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கர்தினால்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்திற்குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை நீக்க வேண்டும். புதிய பாப்பரசர் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்புகள் நடை பெறும். ஒவ்வொரு கர்தினால் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள். போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோனி பூலா, ஜோர்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கர்தினால்கள் வாக்களிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431131
  12. வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். மே 9 முதல் 12 வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் கலந்து கொள்வார் என்று பீஜிங் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் வொஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்களது அலுவலகங்கள் அறிவித்தன. வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்களுக்கு 145% வரை புதிய இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். சீனா அமெரிக்காவிலிருந்து வரும் சில பொருட்களுக்கு 125% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பமாகவுள்ள பேச்சுவார்த்தை பல மாதங்கள் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜனவரி மாதம் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங் கலந்து கொண்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட தொடர்பு இதுவாகும். https://athavannews.com/2025/1431104
  13. இந்த முறை பாகிஸ்தானில் சப்பாத்தியும், பருப்புக்கறியும் சாப்பிட்டு விட்டு... "பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு" என்று சேர்ட்டிபிக்கேற் கொடுப்பார்கள். 😂
  14. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவர்கள் ஆறு பேர் கைது! சக மாணவர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏப்ரல் 29 ஆம் திகதி தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாகக் கூறி ஹோமகம பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. மே 6, செவ்வாய்க்கிழமை மாணவர்கள் ஹோமகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கிரிந்திவெல, தெல்கொட, புத்தல, குளியாப்பிட்டிய மற்றும் கலங்குட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1431020
  15. கொழும்பு மாநகர சபையில் 48 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது! கொழும்பு மாநகர சபையில் 81,000 வாக்குகளுக்கு மேல் (36.92%) பெற்று மொத்தம் 48 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) – 81,814 (48 இடங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 58,375 (29 இடங்கள்) ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 26,297 (13 இடங்கள்) இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) – 9,341 (5 இடங்கள்) இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 8,630 (4 இடங்கள்) சுயேச்சைக் குழு 03 – 5,934 (3 இடங்கள்) சுயேச்சைக் குழு 04 – 3,640 (2 இடங்கள்) சுயேச்சைக் குழு 05 – 4,659 (2 இடங்கள்) ஐக்கிய அமைதிக் கூட்டணி – 4,473 (2 இடங்கள்) சர்வஜன பலய (SB) – 3,911 (2 இடங்கள்) https://athavannews.com/2025/1431075
  16. ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்! ஜேர்மனியின் புதிய சேன்சலராக கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவர் ஃபிரிடிரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவடைந்த போதிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முதலான சில காரணங்களால் ஆட்சியமைப்பதில் பல்வேறு தாமதம் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் 208 இருக்கைகளை வென்ற CDU/CSU கட்சியும், 120 இருக்கைகளை வென்ற SPD கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அந்தவகையில் இன்று ஜேர்மனியில் புதிய அரசு ஆட்சி அமைக்க உள்ளதாகவும் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜேர்மனியின் நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இதன்போது பிரெட்ரிக் மெர்ஸின் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் பெரும்பான்மையை அவர் நிரூபித்த பின்னர் ஃபிரிடிரிக் மெர்ஸை ஜேர்மனியின் 10ஆவது சேன்ஸலராக ஜனாதிபதி உறுதி செய்வார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஃபிரிடிரிக் மெர்ஸ்ஸுக்கு தேவையான 316 வாக்குகள் கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர் சேன்சலராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வலது சாரி கட்சியான ஆல்டர்நடிவ் ஃபியூர் டெயுச்ச்லாந்து புதிய தேர்தல்களை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் ஓலாப் ஷோல்ஸ் (Olaf Scholz ) தற்காலிக சேன்சலராகத் திகழ்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430874
  17. ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை (07) அதிகாலை நடத்திய தொடர் துல்லியத் தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-மொஹமட் (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது தளங்களை எல்லை தாண்டிய நடவடிக்கை குறிவைத்தது. இந்திய மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் கோட்டையான பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு தளத்திலும் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முரிட்கேவில், இலக்காக இருந்த மஸ்ஜித் வா மர்காஸ் தைபா, எல்.இ.டி.யின் நரம்பு மையம் மற்றும் சித்தாந்த தலைமையகம், இது நீண்ட காலமாக பாகிஸ்தானின் “பயங்கரவாத நாற்றங்கால்” என்று கருதப்படுகிறது. ஏனைய இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை புலனாய்வு அமைப்புகள் இன்னும் சரிபார்த்து வருகின்றன. ஆரம்ப மதிப்பீடுகளின்படி மொத்தம் 80 முதல் 90 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட வசதிகளில் JeM மற்றும் LeT ஆல் இயக்கப்படும் ஏவுதளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் தீவிரமயமாக்கல் மையங்கள் ஆகியவை அடங்கும். இவை இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளின் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1431023
  18. ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்! ரஷ்யா மீது உக்ரேன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் கொண்டாட்டங்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 8ஆம் திகதி முதல் நடைபெற உள்ளன. இதையடுத்து, உக்ரேனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார். இப் போர்நிறுத்தம் மே 8ஆம் திகதி தொடக்கத்தில் இருந்து மே 10ஆம் திகதி இறுதி வரை, அதாவது 72 மணி நேரம் நீடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்கும்படி உக்ரேனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில், அந்நாடு தற்போது ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரஷ்யாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரேன் நடத்திய ட்ரோன்கள் தாக்குதல் காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷ்யாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களினால் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரேன் இணையக்கூடாது என்பதற்காக,அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431062

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.