Everything posted by தமிழ் சிறி
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை! வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் அதன்படி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர். அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த இருந்து 20 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1431669 ############### ################# ### கந்தையா அண்ணை ... இப்ப, உங்களுக்கு திருப்தியா. 😂
-
வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்!
வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்! தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளை இன்று நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431661
-
ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்! நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான அளவு மனிதாபிமானத்தோடு செயற்பாட்டு உதவிகளை வழங்கிய நல்லுலங்களுக்கும் நன்றி. நாட்டில் உள்ள நல்ல விபரங்களையும் பாதுகாக்க வேண்டும் எதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது அனைத்தையும் விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்கிறார்கள் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிறைவேற்ற கூடிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1431657
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆம். தலைவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்த பத்திரிகையை... தலைவரே சிரித்துக் கொண்டு வாசித்த படங்களும் அப்போது வந்திருந்தது. @நன்னிச் சோழன் இடம் சிலவேளை அந்தப் படம் இருக்கலாம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியா… இலங்கையில் அப்பாவி பொது மக்களையும், மாணவர்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, பயங்கரவாதிகளை அழித்தோம் என்று அறிக்கைகள் விட்டதை நேரில் பார்த்தோமே. இந்தியா கூறும் தகவல்கள் வடித்து எடுத்த பொய் மூட்டைகள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
26 பேர் கொல்லப் பட்டதற்கு பதிலடியாக…. போர் நடத்தி, இந்தியா 56 இராணுவ வீரர்களையும் இழந்து, இரண்டு பெண் விமானிகள் சிறை பிடிக்கப் பட்டு, சில ரபேல் விமானங்களையும், பல ட்ரோன்களையும் இழந்து உள்ளது. இந்தியாவிற்கு இது பெரும் அவமானகரமான தோல்வி. பிற் குறிப்பு: இதன் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். இந்தியாவின் இழப்பை கணக்கு எடுத்து வைத்தவர்கள் அதன் எண்ணிக்கைகளை பதிவு இடுவது வரவேற்கப் படுகின்றது. 🙂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட காரியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை சரிந்து வீழ்ந்தது. ###################### மன்னிக்கவும்: இந்தப் பதிவு இங்கு தவறுதலாக பதியப் பட்டு விட்டது.- ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
- ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
👉 https://www.facebook.com/watch?v=2695816150608014 👈 👆 விபத்துக்குள்ளான பேரூந்தின் நிலைமை. 😮- பொதுவான கோட்பாட்டிற்கு இணங்கி ஆதரவளியுங்கள் - எம்.ஏ சுமந்திரன்
ஆபிரஹாம் சுமந்திரனுக்கு.... சேர்ந்து இருக்கின்றவர்களை அரவணைத்து போகத் தெரியாது, கட்சியில் இருப்பவர்களை விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது, தன்னுடன் நாலு அல்லக்கைகளை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் ஆடுவது, தமிழரசு கட்சி மேல் மூன்று வழக்குகளை போட்டு... நீதிமன்றில் நிறுத்துவது போன்ற கேவலம் கெட்ட வேலைகளை செய்து விட்டு... வெட்கம், ரோசம், மானம் கெட்டு... மற்ற தமிழ்க் கட்சிகளிடம் அதுகும் விநயமாக ஆதரவு கோருகிறாராம். காரியம் ஆகும் மட்டும் காலை பிடித்து கெஞ்சுவது, அது கை கூடியபின்... தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது. இப்படி சுத்துமாத்துகள் செய்த படியால்தானே போன தேர்தலில், மக்கள் வேண்டாம் என்று அடித்து திரத்தியவர்கள். பிறகு என்ன முகத்துடன்... மக்கள் முன்னால் வந்து நிற்கிறார். சுத்துமாத்து சுமந்திரனின் செயல் முழுக்க... பச்சோந்தி தனமானது என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். இனி என்ன வேஷம் போட்டாலும் மக்களிடம் எடுபடாது.- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்! என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் – மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு நீதிகோரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்த உயிரிழந்த மாணவியின் ஆத்மசாந்திவேண்டியும் அவருக்கு நீதிவேண்டியும் கலந்து கொண்டோர் கறுப்புப் பட்டியணிந்து, மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தியிருந்தனர். இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்குக் கையளிப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு மாணவிக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கான சட்ட நடவடிக்கைகள் கடுமையானதாக ஆக்கப்படவேண்டும் எனவும் இதன்போது போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்னவைக்கப்பட்டன. https://athavannews.com/2025/1431635- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
தமிழின அழிப்பு நினைவுத்தூபி கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்டது! தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் இன்றைய தினம்(11) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழின அழிப்பு நினைவகம் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நினைவுத்தூபியை பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் திரைச்சீலை நீக்கி உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் திறந்து வைத்தார். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றலுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வில் அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் இணைந்து கலந்துகொண்டருந்தனர். இதேவேளை, மே மாதம் 18ஆம் நாளைத் தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431645- ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது! ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று இன்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதேவேளை, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்க இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1431652- ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு. - போக்குவரத்து பிரதி அமைச்சர்.- Muthusamy Navaraja- இளைஞனை தாக்கி காயப்படுத்திய 'டீச்சர் அம்மாவை' கைது செய்ய உத்தரவு!
மேற்படி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட இளைஞன் மருத்துவ உதவி பெறுகிறார். Vaanam.lk- ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
இறம்பொடை விபத்து 11 பேர் பலி, 34 பேர் படுகாயம்! கொத்மலை இறம்பொடை கெரன்டி எல்ல பகுதியில் கதிர்காமம்-குருநாகல்-நுவரெலியா அரச போக்குவரத்து பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாதையிலிருந்து விலகி பாரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
👉 https://www.facebook.com/search/top/?q=china%20Fort&locale=de_DE 👈 இந்தியா அனுப்பின ட்ரோனை அடித்து விழுத்தி, தோளில் சுமந்து செல்லும் பாகிஸ்தானியர்.- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு! இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா . ‘ஒப்பரேஷன் சிந்துார்’ என்ற பெயறரில் பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்தது. இந்நிலையில் போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம் எனவும் விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் இந்திய இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதேவேளை, ஒபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் குறித்து சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. Athavan Newsஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை...இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ள...- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
- கருத்து படங்கள்
- உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள் – நிலாந்தன். எதிர்பாக்கப்பட்டதைப் போலவே உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே இணங்கிச் செயற்படத் தயாராக இருந்தால் சபைகளை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் கட்சிகள் பின்வரும் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவது போல, உள்ளூராட்சி சபைகள் உள்ளூர் நிலைமைகளுக்கானவை என்ற போதிலும் அவை தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் வழியில் அடிப்படையானவை. கீழிருந்து மேல் நோக்கித்தான் தேசத்தைக் கட்டியெழுப்பலாம். அந்த அடிப்படையில் தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது உள்ளூராட்சி சபைகளில் இருந்து தொடங்குகின்றது. எனவே முதலாவதாக, தேசத்தைக் கட்டி எழுப்புவது என்ற அடிப்படையில் உள்ளூராட்சி சபைகளை எப்படிக் கட்டியெழுப்புவது என்று முடிவெடுக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் பொதுவான ஐக்கியத்திற்கு உடன்படப் போவதில்லை. எனினும் குறைந்தபட்சம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு வெளியே உள்ளூர் அதிகாரம் செல்வதைத் தடுப்பது என்ற அடிப்படையிலாது அவர்கள் தந்திரோபாயமாக ஒன்றிணைலாம். அதேபோல தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கு நிலையிலிருந்துதான் உள்ளூர் அதிகாரத்தைக் கையாள வேண்டும் என்ற விடயத்திலும் ஒரு புரிந்துணர்வுக்கு வரலாம். அப்படி ஒரு புரிந்துணர்வு ஏற்படுமாக இருந்தால், உள்ளூராட்சி சபைகளை இரண்டு தளங்களில் கட்டி எழுப்ப வேண்டியிருக்கும். முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவது.இரண்டாவதாக, உள்ளூர் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது. உள்ளூர்த் தலைமைகளையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் அவற்றுக்கேயான தனித்துவங்களோடு கட்டி எழுப்பும் அதே சமயம் அவை தேசத்தைக் கட்டி எழுப்பும் பரந்தகன்ற நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாக அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். முதலாவதாக, உள்ளூர்த் தலைமைகளை எப்படிக் கட்டி எழுப்புவது? கிராமங்கள் தான் தேசத்தின் இதயம். அதேசமயம் கிராமங்களில்தான் அதிகம் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். தமிழ்க் கிராமங்களில் சாதி சமய பால் முரண்பாடுகளும் அசமத்துவங்களும் அதிகம். உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பலரும் சாதி அடிப்படையில் அல்லது சமய அடிப்படையில் அல்லது உள்ளூர் செல்வாக்கின் அடிப்படையில்தான் தெரிவு செய்யப்பட்டு இருப்பார்கள். அவர்களில் பலர் சாதி உணர்வுகளுக்கும் சமய உணர்வுகளுக்கும் உட்பட்டவர்களாக இருப்பர். பால் சமத்துவம் தொடர்பில் விழிப்பில்லாதவர்களாக இருப்பர். எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து அவர்களை வார்த்தெடுக்க வேண்டும். சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. மதவெறியர் தேசிய வாதியாக இருக்க முடியாது.ஆண் மேலாதிக்கவாதி அல்லது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர், உள்ளூர்த் தலைவராக இருக்க முடியாது. தேசியவாதியாகவும் இருக்க முடியாது. எனவே உள்ளூர்த் தலைவர்களிடம் தேசியப் பண்புகளை எப்படி வளர்த்தெடுப்பது என்று சிந்திக்க வேண்டும். அங்கிருந்து தொடங்கினால்தான் மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் முடிவில் தாயக மட்டத்திலும் தேசியப் பண்புமிக்க தலைமைகளைக் கட்டி எழுப்பலாம். கீழிருந்து மேல் நோக்கி. இது முதலாவது. இரண்டாவதாக, தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் பொருளாதாரத்தை எப்படிக் கட்டியெழுப்புவது? ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதன் எல்லைக்குட்பட்டு பொருத்தமான பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அது தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் பிரிக்கப்படுவியலாத பகுதியாகவும் இருக்க வேண்டும். அதாவது தேசத்தைக் கட்டி எழுப்புவதன் ஒரு பகுதியாக கிராமங்களைக் கட்டி எழுப்புவது. மறுவளமாகச் சொன்னால், தேசத்தைக் கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தை கிராமங்களைக் கட்டி எழுப்புவதில் இருந்தே தொடங்க வேண்டும். இந்த அடிப்படையில் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் அதற்கேயான தனித்துவம் மிக்க பொருளாதாரத் தரிசனத்தைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளூர் அதிகார சபை என்று அது அழைக்கப்பட்டாலும் அதற்குள்ள அதிகாரங்கள் வரையறைக்குட்பட்டவை. தையிட்டி விகாரை ஆகப்பிந்திய உதாரணம். எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் இணைத்துக் கொண்டு எப்படிக் குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைப் பிரதேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது என்று திட்டமிட வேண்டும். பொதுவாகச் சொல்லுவார்கள், உள்ளூராட்சி சபைகள் பிரசவத்தில் இருந்து மரணம் வரையிலும் உள்ளூர் நிலைமைகளின் மீது தலையிடக்கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன என்று. நடைமுறையில் அந்த அதிகாரங்கள் போதாமல் இருக்கலாம். ஆனால் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உள்ளூர்ப் பொருளாதாரத்தைத் தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்புவதற்கு வேண்டிய தீர்க்கதரிசனம் மிக்க திட்டமிடல்கள் வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசுத் தலைவர் அனுர கூறியதாகக் கூறப்படும் ஒரு விடயம் அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் சபைகளுக்கு நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு நிதிகளை வழங்குவோம் என்ற பொருள்பட அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவித்தன. அரசு தரப்பு அதை மறுத்திருந்தது. ஆனால் அரசுத் தலைவர் பேசும் ஒரு கூட்டத்தில் அவருடைய பேச்சின் மொழிபெயர்ப்பை அப்படித்தான் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பிரதேச சபைகளுக்குத்தான் அவர்கள் நிதியைத் தடையின்றி வழங்குவார்கள் என்று பொருள் கொள்ளத்தக்க ஒரு பேச்சு. எனவே அரசாங்கம் நிதியை வழங்குமோ இல்லையோ, புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவிகளை உள்ளூர் கள நிலைமைகளுக்கு ஏற்ப எப்படிப் பெற்றுக் கொள்வது? உள்ளூரில் இருக்கக்கூடிய வளங்களை எப்படி உச்சமாகப் பயன்படுத்துவது? புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விடயத்தில் புதிய தரிசனங்கள், புதிய திட்டமிடல்கள் வேண்டும். பெரும்பாலான தமிழ்க் கிராமங்களில் யாரோ ஒருவர் அல்லது பல புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வழிகளிலும் உதவிகளைச் செய்து வருகிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் இவ்வாறு உதவிகளைச் செய்து வருகின்றார்கள். இந்த உதவிகளை உள்ளூராட்சி சபைகள் பொருத்தமான விதங்களில் ஒருங்கிணைக்கலாம். அடுத்தது முக்கியமாக,எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்தாலும் அந்தத் திட்டங்கள் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். மிகக் குறிப்பாக சமூகப் பங்களிப்புடன் கூடிய பசுமைத் திட்டங்கள் ஆக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கிராமத்தை ஒரு பசுமை பூங்காவாக மாற்றக்கூடிய பொருளாதாரத் தரிசனங்களைக் கொண்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தனித்துவமிக்க பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர். அவர் ஓர் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் கூட. தன்னுடைய துறைக்கு வெளியே சென்று, ஆயிரக்கணக்கான மரங்களை நடுவித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக, காரைநகர்ப் பகுதியில் நாலுக்கும் மேற்பட்ட குளங்களை அவர் புணரமைத்தார். குளங்களை நோக்கிச் செல்லும் நீரோடும் வாய்க்கால்களைப் புனரமைத்தார். இரண்டு புதிய குளக்கட்டுகளையும் அவர் கட்டியிருக்கிறார். இத்தனைக்கும் அது அவருடைய மருத்துவ நிர்வாகச் செய்முறைக்கு அப்பாற்பட்ட விடயம். அவர் தன்னார்வமாக அந்தப் பசுமைத் திட்டங்களை முன்னெடுத்தார். அவர் ஒரு முன்னுதாரணம். இந்தியாவில் இதுபோன்று பல முன்னுதாரணம் மிக்க மனிதர்களைக் கிராமங்கள் தோறும் காண முடியும். தமது சொந்தச் செலவில் பாலத்தை கட்டியவர்கள், தமது சொந்த உழைப்பினால் சிறு காடுகளை உருவாக்கியவர்கள், தமது சொந்த உழைப்பினால் குளங்களைத் தூர் வாரியவர்கள், வாய்க்கால்களைப் புதுப்பித்தவர்கள்…. என்று பலரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் பார்க்கின்றோம். அவ்வாறான தன்னார்வமாக இயங்குகின்ற உன்னதமான சமூகத் தொண்டர்களை உள்ளூராட்சி சபைகள் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பலத்தையும் போதிய வளங்களையும் கொடுத்து அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.அதாவது யார் முதலில் பசுமைக் கிராமங்களைக் கட்டியெழுப்பப் போகிறார்கள் என்ற போட்டிதான் இருக்க வேண்டும்.மாறாக எந்தக் கட்சியைக் கட்டியெழுப்புவது? எந்தத் தலைவருக்கு விசுவாசிகளை, வாலாட்டிகளைக் கட்டியெழுப்புவது? என்ற போட்டி இருக்கக்கூடாது. https://athavannews.com/2025/1431563- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்த வருடத்துக்கான... "சமாதான நோபல் பரிசு" டிரம்புக்குத்தான். 😎- ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து - 13 பேர் உயிரிழப்பு, 30 பயணிகள் காயம். விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை அதன்படி பேருந்து சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1431577- 3 மாதத்திற்குள் பயங்கரவாத தடை சட்டம் நீக்கம்; அரசாங்கம் தீர்மானம்
இப்ப, மகிந்த... தனது உயிருக்கு ஆபத்து என்று அறிக்கை விடுவார். - ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.