Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நீங்கள் யாழ். களத்தில் மைத்திரிக்கு... நாலு உதை கொடுக்க வேண்டும் என்று எழுதியதை... மைத்திரி வாசித்து விட்டார் போலுள்ளது. அதுதான் உதைக்குப் பயந்து உண்மையை... உடனே சொல்லியுள்ளார். 😂 மைத்திரியும்... யாழ்.களம் வாசிப்பது எமக்கெல்லாம் பெருமை தானே.. 🤣
  2. இங்கும் அப்படித்தான்.... நல்ல ஒரு பெரிய கயிறை கொடுத்து, பின் தொடர்ந்து.. கூண்டோடு அப்பி விடுவார்கள். அதற்காக மாதக் கணக்கில் மினைக்கெடுவார்கள். இலங்கையில் என்னண்டால்... ஆள் விமான நிலையத்தில் 5 கிலோ பொதியுடன் வந்தவரை, உடனேயே பிடித்து... பத்திரிகைக்கும் செய்தி கொடுக்கின்றார்கள். இப்போ... இறக்குமதி செய்த இலங்கையர் உசாராகி இருப்பார். சுங்க அதிகாரி... பதவி உயர்வுக்கு அவசரப் பட்டுட்டார் போலுள்ளது.
  3. ஸ்ரீ தலதா வழிபாடு; சர்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை! கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் போது புனித தந்ததாதுவை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தப் படம் 2025 ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் விகாரைக்கு சென்ற ஒரு பக்தர் எடுத்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. எனினும், மத அனுஷ்டானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதோ அல்லது நினைவுச்சின்னத்தை புகைப்படம் எடுப்பதோ கட்டாயம் தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைகாக குறித்த படம் தலதா வழிபாட்டின் போது எடுக்கப்பட்டதா, அது ஒரு பார்வையாளரால் எடுக்கப்பட்டதாக அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சிஐடி தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. Athavan Newsஸ்ரீ தலதா வழிபாடு; சர்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் சி....கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் போது புனித தந்ததாதுவை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துற...
  4. 6 வருடமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த விசாரணையில் முன்னேற்றம் - CID அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க ஜனாதிபதியால் பணிக்கப்பட்டுள்ளதாக தகவல்! Vaanam.lk
  5. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சி.ஐ.டி.யிடம்! 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் பல இடங்களில் 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஆழமான விசாரணைகளைத் தொடர புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1428909
  6. எக்குவடோரில் சேவல் சண்டையில் துப்பாக்கி பிரயோகம்; 12 பேர் உயிரிழப்பு! தென் அமெரிக்க நாடான எக்குவடோரில் சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். எக்குவாடோரின் லா வலென்சியா கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் ஒரு நாளைக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு மனாபி மாகாணத்தில் விசேட பொலிஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி தாரிகள் பயன்படுத்திய போலி பொலிஸ், இராணுவ சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான காட்சிகள், துப்பாக்கி ஏந்தியவர்கள் குறித்த பகுதிக்குள் துப்பாக்கியால் சுடுவதை வெளிக்காட்டியது. அதே நேரத்தில் பயந்துபோன பார்வையாளர்கள் பீதியால் ஓடுவதையும் காட்சிகள் வெளிப்படுத்தின. போலி இராணுவ உடையில் தாக்குதல் நடத்தியவர்கள் சேவல் சண்டையில் போட்டியாளர்களாக இருந்த ஒரு குற்றவியல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாட்டில் 20 குற்றவியல் கும்பல்கள் செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது, முக்கிய போதைப்பொருள் வழிகளைக் கட்டுப்படுத்த போட்டியிடுகின்றன. உலகின் 70% கொக்கேய்ன் இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு எக்குவாடோர் துறைமுகங்கள் வழியாகவே செல்கிறது என்று அந் நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா கூறியுள்ளார். உலகின் இரண்டு பெரிய கொக்கேய்ன் உற்பத்தியாளர்களான அண்டை நாடான கொலம்பியா மற்றும் பெருவிலிருந்து எக்குவாடோருக்கு இந்த போதைப்பொருள் கடத்தப்படுகிறது. போதைப்பொருள் தொடர்பில் கடந்த ஜனவரியில் 781 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் பல சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவை என்றும் கூறப்படுகின்றது. https://athavannews.com/2025/1428913
  7. இந்திய தொலைக்காட்சி பிரியங்காவை கைபிடித்தார் சம்பந்தர் ஐயாவின் மருமகன்! பிரபல இந்திய விஜே தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார். இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர். மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார். அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம். அப்படிச் சென்று வந்த தருணங்களிலேயே பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர். இவரின் முதல் கணவர்: இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்திற்கு மாகபா ஆனந்த் சென்றிருந்தார். இவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாகத்தான் சென்றுள்ளது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டே பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அதற்கு முன்னர் இருந்தே தனியாக இருந்து வந்துள்ளார்கள். அதனால்தான், பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஃபேமிலி வாரத்தில் நடத்தப்படும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிரவீன் குமார் கலந்து கொள்ளவில்லை. பிரியங்காவின் அம்மாவும் தம்பியும் மட்டுமே கலந்து கொண்டனர். Monisha Kokul
  8. கொத்துக் கொத்தாக கொலைகளை செய்து விட்டு, திருநீறும், சந்தனப் பொட்டும், வெள்ளை வேட்டியும் கட்டிக்கொண்டு ஊருக்குள்ளை நல்லவன் மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு திரிந்திருக்கிறான். இவனை "என்கவுன்ட்டர்" போட்டு... பிடித்த இடத்திலேயே சுட்டுக் கொன்று இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நிறுத்தி.. வழக்கு விசாரணை என்று போக... அடுத்த இருபத்தைந்து வருடம் ஆகிவிடும். அப்படியான நிலையில்தான்... நம்மூர் நீதிமன்றங்கள் உள்ளன. இவ்வளவு காலமும் பிள்ளையானை உயிர் வாழ விட்டதே மிக, மிக அதிகம். விளக்கமறியலில் வைத்தாவது இந்த 🐕‍🦺யை போட்டுத்தள்ளுங்க.
  9. 240 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 29 வயதான பிரேசில் பிரஜை ஆவார். அவரிடமிருந்து சுமார் 05 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 240 மில்லியன் ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும், கைதான பயணியையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1428897
  10. மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்! மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார். அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னணியைப் பயன்படுத்தி” ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய முதலமைச்சர்,வகுப்புவாத கலவரங்களை கண்டிப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கலவரங்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகள் கடுமையாகக் கையாளப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், பரஸ்பர அவநம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும் என்றும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களினால் ஏப்ரல் 11 அன்று வெடித்த முர்ஷிதாபாத் வன்முறையைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த அறிக்கை வந்துள்ளது. இந்த வன்முறையினால் மூன்று பேர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளதுடன், விரிவான சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுள்ளனர். அவர்களில் சிலர் ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்ததுடன், ஏனையவர்கள் மால்டாவில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். https://athavannews.com/2025/1428882
  11. ஈஸ்டர் பண்டிகை; ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அறிவிப்பு! ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி, 30 மணி நேர போர் நிறுத்தம் மொஸ்கோ நேரப்படி சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும். எனினும், போர் நிறுத்தத்தின் போது, “எந்தவொரு சாத்தியமான மீறல்களுக்கும்” பதிலளிக்க ரஷ்யப் படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் புட்டின் கூறியுள்ளார். ரஷ்யாவும், உக்ரேனும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு இருப்பதைக் காட்டாவிட்டால், சில நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை கைவிடலாம் என்ற அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து, மொஸ்கோவின் 30 மணி நேர போர் நிறுத்தமானது அமுலுக்கு வந்துள்ளது. எவ்வாறெனினும், புட்டினின் அறிவிப்புக்குப் பின்னர் சிறிது நேரத்திலேயே, ரஷ்யப் படைகள் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்ததாக உக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு, தமது விமானங்கள் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை முறியடித்ததாக கூறினார். Athavan Newsஈஸ்டர் பண்டிகை; ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் போர் நிறுத்த அற...ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் ஒரு நாள் திடீர் போர் நிறுத்தத்தை நேற்றைய தினம் அறிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு படி, 30 மணி நேர போர் நிறுத்தம்...
  12. எண்பது வயதைக் கடந்த முதியவர் ஒருவர் தம் மனைவியைத் தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கையைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால், அவரோடு சென்ற அவரின் மனைவியோ அடிக்கடி அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்காமல் நின்றுவிடுவதையும், அந்த முதியவர் அப்பெண்மணியின் கவனத்தைத் திருப்பித் தம்மோடு விடாமல் அழைத்துச் செல்வதையும் தொடர்ந்து கவனித்துவந்தார் அப்பகுதியைச் சேர்ந்த மனிதர் ஒருவர். அவர் ஒருநாள் அந்த முதியவரைப் பார்த்து, “பெரியவரே! உங்கள் மனைவி ஏன் உங்களோடு நடக்காமல் இடையிடையே நின்றுவிடுகிறார்? ஏன் அங்குமிங்கும் மிரண்டு பார்க்கிறார்?” என்று வினா எழுப்பினார். அதற்கு அந்த முதியவர், “தம்பி! என் மனைவி மறதிநோயால் (Alzheimer's disease) பாதிக்கப்பட்டிருக்கிறாள்; அதனால்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறாள்” என்று பதில் சொன்னார். அதைக்கேட்ட அந்த மனிதர், ”மறதிநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் மனைவிக்கு உங்களையும் அடையாளம் தெரியாதுதானே?” என்று கிண்டலாகக் கேட்கவே, அதனை ஆமோதித்த அந்த முதியவர், ”உண்மைதான்! என் மனைவி நான் அவள் கணவன் என்பதை மறந்து(ம்) பல ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று சொன்னார் சற்று வருத்தத்தோடு. வினாத் தொடுத்தவர் அத்தோடு நிறுத்தவில்லை. ”அப்படியானால் நீங்கள் உங்கள் மனைவியை நடுவழியில் விட்டுச்சென்றாலும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை; பின்பு ஏன் நீங்கள் செல்லுமிடமெல்லாம் அவரை விடாது அழைத்துச் செல்கின்றீர்கள்?” என்று நக்கலாகக் கேட்க, எரிச்சலூட்டும் அவ்வினாவைக்கூடச் சிறுபுன்னகையோடு எதிர்கொண்ட அந்த முதியவர், ”தம்பி! என் மனைவிக்கு வேண்டுமானால் என்னை அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம்; ஆனால், அவள்தான் என் மனைவி என்பதும், என் வாழ்க்கைக்கு இனிமை சேர்த்தவள் அவளே என்பதும் எனக்குத் தெரியுமே” என்று பதிலளித்தார். அதைக்கேட்டதும் வினாத்தொடுத்தவரின் முகம் தொங்கிப்போனது; தம்முடைய பண்பாடற்ற வினாவுக்காக முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார் அந்த மனிதர். நண்பர்களே, உறவுகள் நமக்குப் பயன்படும் நிலையில் இருக்கும்போது மட்டும் அவர்களிடம் அன்புகாட்டுவதும் இல்லையெனில் தூக்கியெறிந்துவிட்டுச் செல்வதும் மனிதத்தன்மையற்ற செயல்கள். பின்னாளில் அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டுவதும், கைவிடாது அரவணைப்பதுமே உறவுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை; அதனைத் தம் செயலால் நிரூபித்திருக்கும் அந்த முதியவரைப் போற்றுவோம்!🙏 [About That Street (ATS) எனும் முகநூல் பக்கத்தில் நான் படித்த ஆங்கிலக் கதையின் தமிழாக்கம் இது.] Megala Ramamourty
  13. Mark Xnge Sam நான் கொங்கு மண்டல பகுதியைச் சேர்ந்தவன் சில வருடங்களுக்கு முன் ஏறத்தாழ 2016, 17 என்று இருக்கும் அந்த காலகட்டத்தில் நூல் பிரிக்கிற மெஷின் என்று ஒரு வியாபாரம் இந்த பகுதியில் நடந்து வந்தது அதை பிரிக்கிற மெஷின் 15 ஆயிரம் வரையிலும் விற்றார்கள் ஒரு முறை பிரித்து கொடுத்தால் இவ்வளவு ஒரு கிலோ இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்று. அப்போது சக்க போடு போட்டது. ஆனால் பிரித்துக் கொடுத்தால் வாங்குபவர்கள் யாரும் இல்லை பனியன் வேஸ்ட் யில் இருந்து நூல் பிரித்து தர அவர்கள் சொல்லும் rate நாம் கொடுக்கும் போது மற்றவர்கள் வாங்கும் ரேட்டும் பயங்கர வித்தியாசம் அதன் மூலம் என்னைப் போன்ற ஏராளமான நபர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ############### ############ Aburaja Muhamed காரணம் அரசின் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்கும் பாலிசி தான். பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பவர்கள் விட்டுவிடுவார்கள் அதை உபயோகப்படுத்துவர்களையும் அதை விற்பவர்களையும் தண்டனைக்கு உட்படுத்துவார்கள். பேப்பர் கப்பும் தடை செய்யப்பட்டது ஆனால் அதை தயாரித்து இன்னும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறிய அளவில் தயாரித்து அதை மார்க்கெட் செய்வது மிகப் பெரிய சவால். பாக்கு மட்டை தட்டு வியாபாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களையும் விற்பவர்களையும் கண்டுக்காமல் இருந்தவரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இப்பொழுது அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவே பாக்கு மட்டை மிஷின் போட்டவர்கள் நஷ்டம் அடைந்து விட்டார்கள். பேப்பர் கப் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது தடையை மீறி கொடுப்பது கொடுத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. எப்பொழுது வருமானம் தேவையோ அப்பொழுது உற்பத்தியாளர்களையும் விற்பவர்களையும் தேடி தேடி அதிகாரிகள் செல்வார்கள். டிஷ்ஷு பேப்பர் உற்பத்தியில் பெரிய கம்பெனிகளுடன் போட்டி போட வேண்டியிருக்கும் அது சாதாரண வேலை இல்லை ஏனென்றால் மாஸ் ப்ரொடக்ஷனில் செலவுகள் குறையும் ஆனால் அதே பொருள் சிறிய அளவில் உற்பத்தி செய்யும் பொழுது செலவு கூடும். ############### ############ Ramadoss Govindasamy இப்போது மற்றும் ஒரு ஏமாற்று வேலை... பென்சில் பேக்கிங், பேனா பேக்கிங் மாதம் 30000 ரூபாய் வரை சம்பளம். முதலில் பதிவு செய்ய 650 ரூபாய், இதில் 600 ரூபாய்திருப்பி தரப்படும். ஆதார் கார்டு போட்டோ அனுப்பவும், கூரியர் சர்வீஸில் பேக்கிங் மெட்டீரியல்ஸ் அனுப்பப்படும். அதனுடன் 15000 ரூபாய் அட்வான்ஸ் தரப்படும்என விளம்பரம். ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.
  14. இப்போ மார்க்கெட்ல புதுவிதமான இன்னொரு ஏமாற்று வியாபார யுக்திய தொடங்கி இருக்காங்க மக்களே. அது என்ன வியாபாரம்னா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படிங்குற புதிய விதமான வியாபாரம். இதுக்கு முன்னாடி பாக்கு மட்ட பிளேட், பேப்பர் கப்பு தயாரிப்பு, பேப்பர் பிளேட் தயாரிப்பு அப்படின்னு சொல்லி ஒன்னுக்குமே ஆகாத ஒரு இரும்பு சாமான நம்ம தலையில கட்டிக்கிட்டு 10 லட்ச ரூபா வாங்கிக்கிட்டு போயிருவாங்க. மாசம் நீங்க 5 லட்ச ரூபாய் வரைக்கும் பேப்பர் கப்பு தயாரிச்சு நீங்க வெளியே கொடுக்கலாம் அப்படின்னு சொல்லி நம்ம தலையில வச்சு கட்டிருவாங்க. ஆனா நடந்தது என்னன்னா நீங்க பேப்பர் கப், தட்டம் எல்லாம் தயாரிச்சிகிட்டு அதை நீங்களே வச்சிக்க வேண்டியது எவனும் வாங்க இருக்க மாட்டான். ஆனால் இவங்க மிஷின் தலையில் வைத்து கட்டிக்கிட்டு போயிடுவாங்க. மிஷின விக்கிறது வரைக்கும் தேனு மாதிரி பேசுவானுங்க மிஷின் வித்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட இருந்து எந்த விதமான ரெஸ்பான்ஸ் இருக்காது. இப்ப புதுசா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படின்னு சொல்லி புதுசா இன்னொரு வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். நீங்கள் மெஷின், ரா மெட்டீரியல் வாங்குவதற்கு 6 இலட்சம் கொடுத்தீங்கன்னா மாசம் 3 லட்ச ரூபா லாபம் மட்டும் பாக்கலாம்னு. இந்த அளவுக்கு லாபம் பாக்குறத எதுக்கு அவனுக நம்ம தலையில வச்சு கட்டணும் இவனுங்க எல்லாம் நம்மள வாழ வைக்கிறதுக்காக இல்ல, முடிஞ்ச அளவு நம்ம கிட்ட இருந்து பணத்தை பு~டுங்கிட்டு ஓடுறதுக்கு தான் இருக்கிறானுங்க. தயவு செய்து இந்த மாதிரி எந்த மாதிரி வியாபாரம் போய் மாட்டி விடாதீங்க நண்பர்களே. மேலும் யாராவது இந்த மாதிரி பேப்பர் கப் தயாரிப்பு டிஷ்யூ பேப்பர் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றிகரமாக இருக்கிறீர்களா அல்லது ஏமாந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும். கள்ள ஆட்டம்
  15. ஆஞ்சநேயருக்கு வடை மாலை. நாமக்கல்.
  16. பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துகுவிப்பை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு. மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர். அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள்:- இலங்கையில் உள்ள சொத்துக்கள். 01. வீடு - 01, மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 2 கோடி. 02. வீடு - 02, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 6.5 கோடி. 03. வீடு - 03, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23 கோடி. 04. வீடு - 04, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி - 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 12 கோடி. 05. சுற்றுலாவிடுதி - 01, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 5 கோடி. 06. சுற்றுலாவிடுதி - 02, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 17 கோடி. 07. 12 ஏக்கர் நிலம், மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி. 08. 50 ஏக்கர் நிலம், திருகோணமலை, கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி. 09. நிலத்தொகுதி, மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் இந்த நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 10. 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 11. 10ஏக்கர் நிலம், மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 12. ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி. வெளிநாட்டு சொத்துக்கள்:- 13. சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு - 01. இதன் பெறுமதி: 7.5 கோடி. 14. நகைக்கடையும் கட்டடமும், சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி. 15. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சரி நிகர்
  17. ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு! ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய, முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன எனவும், எனவே, எந்த முன்னேற்றமுமின்றி, அமைதிப் பேச்சுவார்த்தையை மாதக்கணக்கில் தாம் தொடரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் “போர் நிறுத்தம் குறித்து விரைவாக தீர்மானிக்க வேண்டும் எனவும், அது சாத்தியம் என்றால் மட்டுமே, ஜனாதிபதி ட்ரம்ப் அதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தொடர்வார் எனவும், இல்லாவிட்டால், இன்னும் சில தினங்களில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும்” எனவும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உக்ரேன் – ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பதவியேற்ற ட்ரம்ப், இரு நாடுகளிடையே போரை நிறுத்த முயற்சியை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428846

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.