Everything posted by தமிழ் சிறி
-
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு!
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு! இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய விமானங்கள் தமது வான் வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் இன்று தடை விதித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிரான தீர்மானங்களை அறிவித்து வருகின்றது. இதேவேளை பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் இல், இந்திய மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய, பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. …………………………………….. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ள நிலையில் தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் இன்று தடை விதித்தது. அத்துடன் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை எதிராக இன்று மாலை பாகிஸ்தான் எதிர்வினையாற்றும் என பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவு அமைச்சர் இசாக் தர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் முதலாவதாக தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்துள்ளதுடன் மேலும் பல தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429433
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவிக்கையில் ‘இனி வரும் நாட்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் கண்டிப்பாக விளையாட மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை. இனி வரும் காலங்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். ஆனால் ஐ.சி.சி. போட்டிகளை பொறுத்தவரை, ICC வற்புறுத்தலின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம்‘ இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் ICC தொடர்களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐ.சி.சி.-க்கு பி.சி.சி.ஐ. கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பு தொடர்களில் விளையாடவில்லை. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429463
-
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!
ஓம்… இவரின் பெயரும், புதிய பாப்பாண்டவரின் பெயருக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஆனால்…. பாப்பாண்டவருக்கு உரிய முகவெட்டு, இவரின் மூஞ்சையில் இல்லை. பச்சை சிங்களவனாகத் தெரிகின்றார். 😂
-
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி
நீங்கள் இப்பிடி ஒரு அப்பாவியா? அவர் சொன்னதை நம்பி விட்டீர்களா…? 😎 உள்ளூராட்சி தேர்தலுக்காக… அவர் புளுகித் தள்ளுவதை எல்லாம் நம்பாதேங்கோ… 😁
-
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது ” தீர்வை வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும், அதன்முதலாவது கூட்டு அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 2025 ஆம் ஆண்டி அதிகளவான ஏற்றுமதி வருமானத்தினை பெறுவதற்கு தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி தாம் செல்வந்தர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாட்டோம் எனவும், அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1429399
-
வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!
வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு! கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் அதனை கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் விட்டுச் சென்றிருந்த கொலைச் சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று அறிவித்தார். சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணராஜாவிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்து, குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனக் கண்டறிந்தார். தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசாங்கத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குறித்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ….. இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்ததுடன் பெண்ணின் சடலம் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது. யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செட்டியார் தெருவில் உள்ள தங்குமிடத்தில் வைத்தே கார்த்திகா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான கறுப்பு நிற பெட்டியொன்றை சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபர் சுமந்துகொண்டு விடுதியில் இருந்து வெளியேறும் CCTV காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன. சந்தேக நபர் பயணப் பெட்டியுடன் பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக CCTV காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேச நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2025/1429429
-
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி! பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள இந்நிலையில், “பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபட்டதால், அவரை தமது எதிர்கால நடவடிக்கைகளில் புறக்கணிக்க வத்திக்கான் முடிவெடுத்துள்ளதாக” செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. சகோதர செய்தித்தளமொன்றில் இச் செய்தி வெளியாகியுள்ளதாக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், குறித்த இணையதளம் அவ்வாறான செய்தியை பிரசுரிக்கவில்லை என factseeker உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலியாக இவ்வாறான ஒரு செய்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடக பணிப்பாளர் பாதிரியார் ஜூட் கிருஷாந்திடம் FactSeeker வினவியத்தில், “சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்ற அந்த செய்தியில் எந்தவொரு உண்மையும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். அதேபோல், வத்திக்கானின் உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது வத்திக்கானுடன் நெருக்கமாக செயற்படும் ஊடகங்கள், நிறுவனங்களோ இவ்வாறான எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429445
-
யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்
சித்த வைத்தியத்தை ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டம் இருந்தால், அதனை பல்கலைக்கழகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த மண்ணுக்கே உரிய மருத்துவம்... அந்த மண்ணின் மொழியிலேயே இருக்க வேண்டும்.
-
நான் ரசித்த விளம்பரம் .
👉 https://www.facebook.com/100076314756096/videos/1183786436547705?locale=de_DE 👈 👆 12 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த விளம்பரத்தின் இறுதியில் என்ன சொல்கிறார்கள் என பாருங்கள். 😂
-
இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியது பாக்கிஸ்தான் - வர்த்தக நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் - ரொய்ட்டர்
சபாஷ் சரியான போட்டி. யார் பெரிசு என்று அடித்துக் காட்டுங்கள்.
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள குறிகாட்டுவான் ஜட்டிகளை, மக்கள் பெருமளவில் வாங்கிச் செல்கிறார்கள். எனக்கு பிடித்த நிறத்தில்... நானும் ஒன்று வாங்கியுள்ளேன். தரமான தயாரிப்பு. ஜட்டி அணிந்த மாதிரியே தெரியவில்லை. 😂 பொலியெஸ்ரர் கலக்காத... 100 % கொட்டன் துணியில் தயாரிக்கப் பட்ட குறிகாட்டுவான் ஜட்டிகள் ஆரோக்கியமானவை. 😂 🤣- அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
எண்ணை பூசி.... ஆமத்துறுவாக மாற்றப்பட்ட சிங்கம். 😂- கருத்து படங்கள்
- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் ஏப்ரல் 22 அன்று வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1429376- ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
தீவிரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கி சூடு; இந்திய இராணுவ வீரர் மரணம்! ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று (24) பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடந்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் உதம்பூரில் இந்த மோதல் நடந்துள்ளது. உதம்பூர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில் இந்திய இராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் செயல்பட்டு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1429382- உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்!
உக்ரேன் போர் விவகாரம்; ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் மீண்டும் மோதல்! உக்ரேனில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை (24) மீண்டும் மோதிக்கொண்டனர். கிரிமியா மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்க மறுத்ததற்காக அமெரிக்கத் தலைவர் ஜெலென்ஸ்கியைக் கண்டித்துள்ளார். கடந்த வாரம் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை எதிரொலிக்கும் விதமாக, ரஷ்யாவும் உக்ரேனும் அமெரிக்க அமைதித் திட்டத்திற்கு உடன்பட வேண்டிய நேரம் இது என்று ட்ரம்பின் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கூறினார். “அல்லது அமெரிக்கா இந்த செயல்முறையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் எச்சரித்தார். இந்தியாவில் செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், “இன்றைய நிலைக்கு அருகில் ஏதோ ஒரு மட்டத்தில் பிராந்திய எல்லைகளை முடக்குவதற்கும்” “நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படும் நீண்டகால இராஜதந்திர தீர்வுக்கும்” இந்த திட்டம் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறினார். அமெரிக்க முன்மொழிவை நன்கு அறிந்த ஒரு முன்னாள் மேற்கத்திய அதிகாரி, கிரிமியாவை ரஷ்யா இணைத்ததை அங்கீகரிக்கவும் அழைப்பு விடுத்ததாகக் கூறினார். ஜனவரியில் பதவியேற்றதிலிருந்து, உக்ரேன் போருக்கான அமெரிக்கக் கொள்கையை ட்ரம்ப் மாற்றியுள்ளார், 2022 இல் தனது அண்டை நாட்டின் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய ரஷ்யா மீதான அழுத்தத்தைத் தளர்த்தும் அதே வேளையில், உக்ரேனை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தார். 2014 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் கண்டனம் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையாக, தீபகற்பத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய ரஷ்யாவிடம் உக்ரேன் கிரிமியாவை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று ஜெலென்ஸ்கி செவ்வாயன்று மீண்டும் வலியுறுத்தினார். “இங்கே பேசுவதற்கு எதுவும் இல்லை. இது நமது அரசியலமைப்பிற்கு எதிரானது,” என்று அவர் கூறினார். அமெரிக்கா, உக்ரேன் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு இடையேயான லண்டன் பேச்சுவார்த்தைகள் மிகுந்த உணர்ச்சிகளால் குறிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி பின்னர் ஒரு எக்ஸ் பதிவில் கூறினார். ஆனால் எதிர்கால கூட்டுப் பணி அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உக்ரேன் அதன் அரசியலமைப்பிற்குக் கீழ்ப்படியும் என்றும், கியேவின் கூட்டாளிகள், குறிப்பாக அமெரிக்கா, “அதன் வலுவான முடிவுகளுக்கு ஏற்ப செயல்படுவார்கள்” என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார். https://athavannews.com/2025/1429345- காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு!
காசாவில் பாடசாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு! காசாவில் உள்ள பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவின் ராபா பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இத் தாக்குதலில் அங்குள்ள இஸ்லாமிய பாடசாலை உட்பட அப்பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கோர தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர் எனவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் இக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளும் கண்டம் வெளியிட்டுள்ளன. காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுத குழுவினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கிலும் இஸ்ரேல் இராணுவம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது. 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இப் போரில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429336- துருக்கியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளபூகம்பங்கள் - சேதவிபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி நண்பகல் 3.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இது இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429301- ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
விரிவான பதிலுக்கு நன்றி கோசான். 👍- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
டான் பிரியசாத் கொலை சம்பவம் | பின்னணி - சாட்சிய அழிப்பு ?- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
அத்திம்பேர் தூங்கலை... செத்துப் போயிட்டாரு.- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
டான் பிரசாத் இறந்துவிட்டாராம். - 3 வது அறிக்கையில் பொலிஸ் உறுதிப்படுத்தியது! Vaanam.lk- துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.