Everything posted by தமிழ் சிறி
-
டயர் நிக்கோல்ஸ் மரணம்- பொலிஸ் அதிகாரிகள் மூவர் விடுதலை
டயர் நிக்கோல்ஸ் மரணம்- பொலிஸ் அதிகாரிகள் மூவர் விடுதலை. அமெரிக்காவில் கருப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் (Tyre Nichols) என்பவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு மெம்பிஸ் நகரில் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய டயர் நிக்கோல்ஸை பொலிஸார் அடித்து துன்புறத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை குறித்த சம்பவதத்தில் படுகாயமடைந்த டயர் நிக்கோல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாகவே அவர் உயிர் இழந்துள்ளார் என அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நாடு தழுவிய போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து குறித்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் கருப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் மூவரை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431221
-
கருத்து படங்கள்
- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
வானில் விமானப்படை, தரையில் இராணுவம் – இந்தியாவின் இருமுனை தாக்குதல்! ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இரு முனைகளைக் கொண்டது. இதில் வானத்தில் விமானப்படை மற்றும் தரையில் இராணுவம் ஈடுபட்டதாக அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படை (IAF) ஆகாயத்திலிருந்து தரைக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய அதே வேளையில், இந்திய இராணுவம் ஒரே நேரத்தில் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவியதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-மொஹமட், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் நடந்த இந்த நடவடிக்கையில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பன்முக தாக்குதல், பயங்கரவாத இயந்திரங்களை ஆதரிப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகும், இது பாகிஸ்தானின் பயங்கரவாத இயந்திரத்தை முடக்கும் என்று இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதை நிறுத்துமாறு இஸ்லாமாபாத்திற்கு தெளிவான செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு, புது டெல்லி முக்கிய உலக சக்திகளிடமிருந்து இராஜதந்திர ஆதரவைப் பெற்றதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவு கிடைத்தது, சீனாவின் பதில் நடுநிலையானது என்று விவரிக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதைக் காண முடிந்தது. இதனால் பாகிஸ்தான் இராஜதந்திர முன்னணியில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டது. துருக்கியைத் தவிர, வேறு எந்த நாடும் இஸ்லாமாபாத்தை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இது இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க இராஜதந்திர வெற்றி என்று கூறியது. தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை “அப்பட்டமான போர் நடவடிக்கை” என்று கூறி, பொதுமக்கள் உயிரிழப்புகளைக் கூறினார். பாகிஸ்தான் “அதன் விருப்பப்படி சரியான நேரத்தில் மற்றும் இடத்தில்” பதிலடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா கடுமையாக பதிலளிக்கத் தயாராக உள்ளது என்று இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். எவ்வாறெனினும், இந்தியாவின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதில் அசாரின் உறவினர்கள் பத்து பேர் அடங்குவர் என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஒரு விளையாட்டு மைதானத்தில் அவரது இறுதிச் சடங்கிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து. “அல்லாஹ் அக்பர்” அல்லது கடவுள் பெரியவர் என்று கோஷமிட்டனர். மேலும் பிற மத கோஷங்களையும் எழுப்பினர். “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொடூரம் அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது” என்று அந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “துக்கமும் அதிர்ச்சியும் விவரிக்க முடியாதவை”. கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்றும், மற்றவர்களில் அசாரின் சகோதரி மற்றும் அவரது கணவர் அடங்குவதாகவும் அது கூறியது. பல ஆண்டுகளாகக் காணப்படாத அசார் மற்றும் அவரது சகோதரர், குழுவின் துணைத் தலைவரான அப்துல் ரவூப் அஸ்கர் ஆகியோர் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. தாக்குதலுக்குப் பின்னர் அந்த இடத்திற்குச் செல்லும் சாலை முற்றுகையிடப்பட்டது. மேலும் வடக்கே, நள்ளிரவுக்குப் பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, நான்கு இந்திய ஏவுகணைகள் முரிட்கேயில் உள்ள ஒரு பரந்த வளாகத்தை ஆறு நிமிடங்களுக்குள் தாக்கியதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் ஒரு மசூதியையும் அருகிலுள்ள நிர்வாகக் கட்டிடத்தையும் இடித்து, மூன்று பேரை இடிபாடுகளுக்குள் புதைத்தது. https://athavannews.com/2025/1431218 ################### ################## ################### 😂 🤣- கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்! கொழும்பு- கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த மாணவி, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக, இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக அமைதியான முறையில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தா வீதிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் கொட்டாஞ்சேனை ராஜேஸ்வரி கல்விக்கூடம் வரை முன்னெடுக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்விக் கற்றுவந்த மாணவி ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கல்வி கற்றுவந்த பாடசாலையில் கற்பித்த கணித பாட ஆசிரியர் குறித்த மாணவியை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளதாக பொற்றோர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்ட போதும் பாடசாலை நிர்வாகம் மாணவியின் மீது போலியாக மனநிலை சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கணிதபாட ஆசிரியரைப் பாதுகாத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து மாணவிக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானம் காரணமாக மாணவி விரக்தியடைந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். முன்னதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தபோது சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்று பின்னர் விடுதலையானார். இதனை தொடர்ந்து மாணவியை கொழும்பில் உள்ள வேறு ஒரு பிரபல மகளிர் பாடசாலைக்கு பெற்றோர் மாற்றியுள்ளனர். இந்த நிலையில் மாணவி பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் கற்கை நிலையத்தில் ஆசிரியராக இருந்தவரும், மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியரின் நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நண்பரான கணிதபாட ஆசிரியருக்கு எதிராக மாணவி வழக்கிய முறைபாடு தொடர்பாகவும் மாணவியின் நடத்தை தொடர்பாகவும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் தவறான தகவலை திட்டமிட்டு பொது வெளியில் பகிரங்கப்படுத்தியுள்ளார். இதனால் மன அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் குறித்த மாணவி தாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் இருந்து கீழே பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பும் பாடசாலை நிர்வாகவே ஏற்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்னர். உடனடியாக பொலிஸார் மாணவியின் தற்கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவரையும் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கோருகின்றனர். இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்லர்கள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431222- ஆப்ரேஷன் சிந்தூர்: அதிரடி தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம்!
ஆப்ரேஷன் சிந்தூர்: பெயருக்கான காரணத்தை வெளியிட்ட இந்தியா! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) புதன்கிழமை (07) ஒன்பது தளங்களைத் தாக்கி இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளித்தபோது, அந்தத் திட்டத்திற்கு – ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிட்டது. சிந்தூர் அல்லது குங்குமம் என்பது திருமணமான இந்துப் பெண்களின் அடையாளமாகும். மேலும் ஏப்ரல் 22 அன்று பஹல்காம் படுகொலையைக் குறிக்கிறது. அதில் புதிதாகத் திருமணமானவர்கள் உட்பட ஆண்கள் தங்கள் மதத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். போர் வீரர்களால் ஒரு சிந்தூர் திலகமும் பெருமையுடன் அணியப்படுகிறது. எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்த முதல் அறிவிப்பில், இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரை காட்சிப்படுத்த ஒரு படத்தைப் பயன்படுத்தியது. துல்லியமான வெடிமருந்துகளைப் பயன்படுத்தி அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், இராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப்படை (IAF) ஆகிய முப்படைகளால் ஒருங்கிணைக்கப்பட்டு, பாகிஸ்தான் மற்றும் POK இல் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கின. “சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப்படைகள் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கின. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியது. அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன. மொத்தம் ஒன்பது தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன என்று இந்திய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதிகள், பைசரனில் உள்ள புல்வெளியில், இந்து ஆண்களைத் தனிமைப்படுத்தி, மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர். பஹல்காமில் உள்ள இந்த இடத்திற்கு தேனிலவு பயணிகள் அடிக்கடி வருகிறார்கள். ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் கணவன்களை இழந்த பெண்களை மனதில் கொண்டு, பதிலடி கொடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று குறியீட்டுப் பெயரை வைத்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹரியானாவைச் சேர்ந்த ஹிமான்ஷி நர்வால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஷான்யா திவேதி, குஜராத்தைச் சேர்ந்த ஷிதல் கலாதியா, காஜல்பென் பர்மர், கொல்கத்தாவைச் சேர்ந்த சோஹினி அதிகாரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரகதி ஜக்டேல், கேரளாவைச் சேர்ந்த ஷீலா ராமச்சந்திரன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெனிபர் நதானியேல், ஜெயா மிஸ்ரா ஆகியோரின் கணவர்கள் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தாக்குதலின் பின்னர் திருமணமாகி ஆறு நாட்களே ஆன ஹிமான்ஷி நர்வால், தனது கணவர் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் உடலுக்கு அருகில் மண்டியிட்டார். அவர்தான் இந்த துயரத்தின் முகமாக மாறினார். சில நாட்களுக்குப் பின்னர், ஹிமான்ஷி தனது கணவருக்கு அஞ்சலி செலுத்தத் தோன்றினார், ஆனால் திருமணமான இந்துப் பெண்களின் நெற்றியில் பிரகாசிக்கும் குங்குமம் இல்லாமல். https://athavannews.com/2025/1431168- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்? ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431182 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லையில் பதற்றம் – ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்? ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஎல்லையில் பதற்றம் - ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றம்?ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது . நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள...- புதிய பாப்பரசர் தெரிவு மாநாடு இன்று!
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை! வத்திக்கான நேரப்படி புதன்கிழமை (07) இரவு 9.00 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேறியது. போப்பாண்டவர் மாநாட்டில் முதல் சுற்று வாக்களிப்பில் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டனர் என்பதை இது உறுதிப்படுத்தியது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கூடும் 133 கார்டினல்கள், போப்பை தேர்வு செய்வதற்காக வரும் நாட்களில் மீண்டும் விவாதங்களைத் தொடங்கவுள்ளனர். சிஸ்டைன் தேவாலயத்திற்குள் ஒரு புனிதமான ஊர்வலத்தைத் தொடர்ந்து, வத்திக்கான் நேரப்படி மாலை 5:45 மணியளவில் முதல் சுற்று வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு கார்டினலும் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். (தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று பதவியேற்கும்போது செய்துகொள்ளும் பிரமாணம்) வாக்களிப்புகள் பதிவானதும், கவனம் தேவாலயத்தின் சின்னமான புகைபோக்கியின் மீது திரும்பியது. இதன்போது, சிறிது நேரம் ஒரு கடற்பறவை அங்கு அமர்ந்திருந்தது விசேட கவனமாக அமைந்தது. பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னர், இரவு 9:05 மணிக்கு, புகைபோக்கியில் இருந்து கரும்புகை எழுந்தது. இது செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த 45,000 க்கும் மேற்பட்ட கூட்டத்தினரிடமிருந்து கைதட்டலைத் தூண்டியது. போப்பாண்டவர் மாநாட்டில் முதல் சுற்று வாக்களிப்பில் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டனர் என்பதை இந்த வெளிப்பாடு உறுதிப்படுத்தியது. இந்த மாநாடு வியாழக்கிழமை (இன்று) மீண்டும் தொடங்கும். கடந்த மாதம் 88 வயதில் காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடரும். ஒரு போப் தேர்ந்தெடுக்கப்படும்போது சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளைப் புகை வெளிப்படும், ஆனால் புதன்கிழமை இது எதிர்பார்க்கப்படவில்லை. நவீன காலத்தில் ஒரு மாநாட்டின் முதல் நாளில் ஒரு போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. நவீன போப் மாநாடுகள் பொதுவாக குறுகியவை. 2013 மாநாடு இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது. அதேபோல் 2005 இல் அவரது முன்னோடியான பெனடிக்ட் XVI தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அவ்வாறே நீடித்தது. அண்மைய நாட்களில், 1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட திருச்சபையை வழிநடத்தும் அடுத்த போப்பாண்டவரிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பது குறித்து கார்டினல்கள் வெவ்வேறு மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர். சிலர் பிரான்சிஸின் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ச்சியைக் கோரியுள்ளனர், மற்றவர்கள் பழைய மரபுகளைத் தழுவ விரும்புவதாகக் கூறியுள்ளனர். பலர் இன்னும் கணிக்கக்கூடிய, அளவிடப்பட்ட போப் பதவியை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1431209- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியன்… வாயாலை வடை சுடத்தான் லாயக்கு. இப்படி நடக்கும் என்று, கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்த மானமும் கப்பல் ஏறி விட்டது. 😂- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆர்வக் கோளாறில்… பக்கத்தில் போய் நின்று, குண்டு போட்டிருப்பார்களோ. 😂 🤣- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கோசான்…. இந்தியனும், பாகிஸ்தான்காரனும்… உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல், பாலஸ்தீன சண்டையில் எரியும் சண்டை காட்சிகளையும் இடையில் சொருகி விட்டு, நமது காதில் பூ சுற்றப் பார்ப்பார்கள், நாங்கள்தான் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால்… திருட்டு வீடியோ தயாரிப்பதில் இவர்கள் பயங்கர கில்லாடிகள். 😂 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்தக் கணக்கு வாத்தியார்… இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் 20 வருடங்களாக விடுமுறையே எடுக்காமல், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க செல்லும் பயணத்தை நினைக்க பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதே நேரம் யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சங்கரன் என்னும் கணக்கு வாத்தியார், தனது வகுப்பு மாணவிக்கு தனது ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த கேவலமும் நம்ம ஊரில் நடந்துள்ளது. (இப்போ அந்த மாணவி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்) ஆணுறுப்பை காட்டிய ஆசிரியருக்கு ஆதரவாக… அதிபரும், அரசியல்வாதிகளும் துணை நிற்பது.... கேவலத்தின் உச்சம்.- தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது- எம் ஏ சுமந்திரன் !
தமிழரசு கட்சி இலங்கை பாராளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை கட்சியாக இருந்து இப்போ ஐந்தாம் இடத்தில் இருப்பது சுமந்திரனுக்கு தெரியாது போலுள்ளது. அந்த ஐந்தாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டதும்…சாணக்கியனின் கெட்டித்தனமே தவிர, சுமந்திரன் இதில் பெருமைப்பட எதுவும் இல்லை.- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
நீங்களே சொல்லுங்க சசி, ஆனையிறவு உப்புக்கு… “ரஜ லுணு” என்று பெயர் வைத்தால், கோவம்… வருமா, வராதா. 😂- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025 1 மொத்தம் 339 உள்ளூராட்சி மன்றங்களில் 266 உள்ளூராட்சி மன்றங்களைத் தேசிய மக்கள் சக்தி வென்று இருக்கிறது. ஆனால் இதில் நூற்று எழுபது சபைகளில் மட்டுமே எந்தப் பிக்கல் பிடுங்கலுமில்லாத தனி ராஜ்யம் சாத்தியமாகிறது. பல இடங்களில் அரசு பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையானது மொத்த எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் ஆசனங்களின் கூட்டுத் தொகைக்கு சமனாகிறது. இவற்றிலும் எந்தப் பிரச்னையுமின்றி ஆட்சி அமைக்க முடியும். ஆனால் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்க்கட்சிக்கு அதிகமாய் உள்ள சபைகளில் தான் பிரச்னை எழப் போகிறது.தாம் சுயாதீனக் குழுக்களுடன் இணைந்து தான் ஆட்சி அமைக்கப் போவதாகவும் பாரம்பரிய கட்சிகள் மற்றும் எச்சங்களுடன் இணையப் போவதில்லை என்றும் டில்வின் சில்வா சொல்வதைப் பார்க்கும் போது இது தீரப் போகும் பிரச்னை மாதிரி தெரியவில்லை. அநேகமாய் இத்தகு சபைகள் கமிஷனர் ஒருவரின் கீழ் மத்திய அரசில் இருந்து நிர்வகிக்கப்படலாம். Zafar Ahmed- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இலங்கைக்கு அமைதிப் படை என வந்து.... குறிப்பிட்ட அளவு ஆயுதங்களை மட்டுமே வைத்திருந்த, சாரம் கட்டிய புலிகளிடம்... ஆயிரக் கணக்கில் உயிரை பலி கொடுத்து, பல்லாயிரக் கணக்கில் அங்கவீனர்களாக திரும்பிப் போன நாடுதான் இந்தியா. இப்படியிருக்க... பாகிஸ்தான் என்ற நாட்டிடம்... வளமாக வாங்கிக் கட்டப் போகின்றார்கள். இந்திய பாதுகாப்பு படைகளிடம்.. பாகிஸ்தானிடம் உள்ள மனவலிமை குறைவு என்பது எனது கணிப்பு. அவர்கள்... எளிதில் விலை போகக் கூடியவர்கள். அரசியல் வாதிகளும், ஊடகங்களும், இணைய வாசிகளும் அளவுக்கு அதிகமாக ஊதி பெருப்பித்து இந்திய இராணுவத்திற்கு குழை அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதே உண்மை. 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் காரனெண்டால் சும்மா இல்லேடா... நெருப்புடா. இந்தியாவின் 5 போர் விமானத்துக்கு சமாதி கட்டிய பாகிஸ்தான் வீரர்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மீன் தலை வெட்டின, வெட்டிலை.... வெட்டின பலகையும்... இரண்டாய் போச்சுது. 😂 🤣- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
கரைச்சியில் தமிழரசு வரலாறு காணாத வெற்றி💜 வாழ்த்துகள் 💜💕 Shritharan Sivagnanam சேர் 21 வட்டரங்களில் 20 வீடு, ரெலிபோன் 1💜 கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தன்வசப்படுத்தியிருக்கிறது. கரைச்சி 21 இல் 20 🏠 பூநகரி 11 இல் 10 🏠 பளை 8 இல் 6 🏠 K J Arun Kumar- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
தமிழ்த் தேசிய மண்ணிலிருந்து சுமந்திரன் வெளியேற்றம். சுமந்திரனின் வீட்டு வட்டாரமான குடத்தனை வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி படு தோல்வியடைந்தது. ஆனால் தமிழ்த்தேசியம் வென்றது🔥 சசிகலா ரவிராஜ்- சிரிக்கலாம் வாங்க
- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
இந்த 6 மாதங்களில் தெற்கில், பல மாவட்டங்களில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் மொட்டுக் கட்சியின் வாக்குகளில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. SJB ம் கணிசமான வாக்குகளை அதிகரித்துள்ளது. NPP தனது வாக்குவங்கியை அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் இழந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் வேகம் மீண்டும் 3% வெகுதொலைவில் இல்லை என்பதைக்காட்டுகிறது. ஆகையால் இனி அவர்கள் தமது முகமூடிகளை அகற்றத்தொடங்குவார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அதைக்கொண்டுதான் மாகாண சபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். Monisha Kokul - இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.