Everything posted by தமிழ் சிறி
-
இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!
இலங்கையின் பொருட்களுக்கு 44% அதிக வரியை விதித்தது அமெரிக்கா… 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. வியட்நாமுக்கு 46%, சீனாவுக்கு 34%, இந்தியாவுக்கு 26%, பிலிப்பைன்ஸுக்கு 17% மற்றும் சிங்கப்பூருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்க சந்தை பெரும் பங்கை வகிக்கிறது அதன் மீது ட்ரம்ப் விதித்த 44% வரியானது இலங்கையின் மொத்த வருவாயில் தாக்கம் செலுத்துவதால் மீண்டும் மக்களிடம் இருந்தே வரியாக அறவிட IMF நிர்பந்திக்கும் அப்போது அரசு அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது மேலும் வரியை விதிக்காமல் மக்கள் மீதே வரியை விதிப்பார்கள். உலக வர்த்தகப் போர் ஆரம்பமாகிவிட்டது; எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். • United Kingdom 10% • Singapore 10% • Australia 10% • Chile 10% • Brazil 10% • Turkey 10% • Colombia 10% • Israel 17% • Philippines 17% • European Union 20% • Japan 24% • Malaysia 24% • South Korea 25% • India 26% • Pakistan 29% • South Africa 30% • Switzerland 31% • Taiwan 32% • Indonesia 32% • China 34% • Thailand 36% • Bangladesh 37% • Sri Lanka 44% • Vietnam 46% • Cambodia 49% யாழ்ப்பாணம்.com
-
தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம்
நாய்களை இவர்கள் நேசிப்பது என்றால்... தங்கள் வீடுகளில், கட்டி வளர்க்கட்டும். சும்மா தெருவில் அவிட்டு விடுவதால்... அதுகள் போறவன், வாறவன் எல்லாரையும் திரத்திக் கொண்டு போய் கடிக்கின்றது அல்லது விபத்தை ஏற்படுத்துகின்றது. மோட்டார் சைக்கிள், துவிச் சக்கரவண்டிகளில் போனவர்கள் எத்தனை பேர் கை கால் முறிந்து இருக்கின்றார்கள் என்று இந்த ஆர்வலர்களுக்கு தெரியுமா? அரசாங்கம் நன்மை செய்ய வெளிக்கிட்டால், சில வெருளிகள்.... வேண்டாம் என்று மட்டையை தூக்கிக் கொண்டு வந்து தெருவில் நிற்குதுகள். அதிலை... இரண்டு மூன்று வெள்ளையளும் நிற்குதுகள். இதுகளை தெருநாய் உள்ள இடத்தில் கொண்டு போய் விட்டு.. கடி வாங்க விடவேணும். பிறகு பொக்கிளை சுத்தி 21 ஊசி போடும் போதுதான் புத்தி வரும்.
-
வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு!
- மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை
எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கிற்கு... தீர்ப்பு வழங்க 10 வருடம் எடுத்துள்ளது. இந்த 10 வருடத்தில் அவன் மேலும் எத்தனை பேரை பாலியல் வன்கொடுமை செய்தானோ.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்!
அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்! நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என்றும் குறிப்பிட்டார். பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி ’இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த UNESCO உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிரந்தர உபாய மார்க்கங்களை கலந்துரையாடும் வகையில் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு இடம்பெற்றது. இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார். யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் 75 வருடங்களை அண்மிக்கும் தருணத்தில் யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே அவர்கள் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பிரதிபலனாக அனுராதபுரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறுகிறது. யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல், மரபுரிமைகளை பாதுகாத்தல், கல்வி, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு கைகொடுக்கும். எதிர்கால சந்ததியினருக்கென கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பலப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவராக யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முன்னரை விடவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் காலப்பகுதியில் நாம் உள்ளோம். கலாசாரத்திற்கென முன்னர் இல்லாத மகத்தான வரவேற்பைப் பெறுதல், உலக அமைதி, அபிவிருத்திக்கான அறிவுத்திறன் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்தல், AI தொழில்நுட்பத்தை உயர் நெறிமுறைகளுடன் கையாளுதல், நிலைபேறான கல்வி, சமுத்திர உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் திறனை மேம்படுவதற்காக யுனெஸ்கோ எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் காலத்திற்கு ஏற்றவை. கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது. இதேவேளை மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள பேரழிவுகள் தொடர்பில் அந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுக்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார். யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2025/1427318- இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு!
இலங்கையின் கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு! இலங்கையின் கடல் வளங்களை ஆராய்ந்து இலங்கையின் சர்வதேச கடல்சார் உரிமைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சி தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது இது குறித்து மேலும் தெரிய வருவதாவது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதுடன் இலங்கையின் கடலடிப் பகுதியில் உள்ள கனிம வளங்களை ஆராயும் உரிமையை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்து பிரதமர் மோடி விவாதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தனது இந்திய விஜயத்தின் போது இது குறித்து ஆதரவு தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுர குமார மீது அழுத்தம் செலுத்தி இலங்கையின் கடல் வளங்களைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். நாம் அனைவரும் ஜனாதிபதிக்கு பலமாக இருக்க வேண்டும் என சங்க சந்திம அபேவர்தன இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பித்த கடிதத்திலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பத்தில் அந்தக் கடிதத்தை ஏற்க மறுத்த நிலையில் சுமார் ஒரு மணி நேர காத்திருப்பின் பின்னர் கடிதத்தை வழங்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427326- ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை!
ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை! 16 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின்னர், இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிட இன்று (03) வழங்கினார். 2019 பெப்ரவரி 17 ஆம் திகதி கிரேண்ட்பாஸில் நடத்தப்பட்ட சோதனையின் போது 16.88 கிராம் ஹெராயினுடன் குற்றம் சாட்டப்பட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், ஹெராயின் வைத்திருந்தமை, கடத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதன்படி, 47 வயது குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். https://athavannews.com/2025/1427311- பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது
மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்! போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், மேலும் இருவரும் இன்று (03) காலை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதற்கிடையில், வழக்கு விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படாமல் இருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட மூன்று நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சிஐடியின் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் ஏப்ரல் 09, 2025 அன்று திகதி நிர்ணயித்துள்ளது. https://athavannews.com/2025/1427289- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்! விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார் அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1427323- இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!
டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் பல நாடுகள் மீது பொருளாதாரப் போருக்கு தயார் ஆனார். குறிப்பாக கனடாவின் அமேரிக்க ஏற்மதி தொடர்பாக அவரின் நிலைப்பாடுகள் உள்நாட்டு பொருட்களின் நுகர்வை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்தல் என்ற போர்வையில் இருந்தது. இது ஒரு பொருளாதாரப் போர். 440 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் அமேரிக்காவுக்கு செய்யும் கனடாவை நிலைகுலைச் செய்யும் ஒரு முறையாக இதைக் கையாள்வதாக அவர் நினைக்கின்றார். அதே போல் ஏனைய நாடுகள் மீதும் வரிவிதிப்பிற்கான காரணங்களாக அமேரிக்க பொருட்களை தங்களால் விற்க முடிவதில்லை என்று கூறுகின்றார். ஆனால் சர்வதேச வியாபாரத்தை அவ்வாறு கையாள முடியாது. இலங்கையின் மேல் விதிக்கப்பட்டிருக்கும் வரியானது 44% ஆக இருக்கின்றது. எமது அமேரிக்காவுக்கான ஏற்றுமதியும் அமேரிக்காவில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களிக்கான சென்மதி நிலுவை எப்பொழுதும் மறையாகவே உள்ளது. மிக மிக குறைவான இறக்குமதியே செய்யப்படுகிறது. இதுவே ஒரு பிரதான காரணம். இலங்கையின் அமேரிக்காவுக்கான ஏற்றுமதி கிடத்தட்ட 3 பில்லியன்களை டொலர்களை எட்டியுள்ளது. இது மொத்த ஏற்றுமதியில் 20%க்கும் உயர்வாக இருக்கின்றது. ஏற்கனவே 12% இருந்த வரியை 44% ஆக அதிகரித்திருப்பது குறைவான வரியிருக்கும் நாட்டின் பொருட்களின் நுகர்வை அங்கே அதிகரிக்கும். இதனால் எமது ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்படும். பெருவாரியாக எமது ஆடை உற்பத்திகளே அங்கு ஏற்றுமதியாகின்றது. அதற்கான போட்டியி சந்தையில் இலகுவாக அமேரிக்கா தனது தேவையை பூர்த்தி செய்ய முடியும். இலங்கை போன்ற பொருளாதாரத்தில் படிப்படியாக மீட்சியடையும் நாட்டிற்கு ஒரு பேரிடியாக அமையும். மீண்டும் $ பெறுமதி அதிகரிக்கும் பணவீக்கம் தொடரும். வளர்முக நாடுகள் தொடர்பாக எந்தவித அக்கறையும் இல்லாமல் எப்பொழுதும் கொடூரமாக செயற்படும். அதன் ஒரு வடிவம் இது. இதனை கையாள புதிய சந்தை வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். ஏற்கனவே GSP+ சலுகையில் தான் எமது உற்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கின்றது. அரசு புதிய முயற்சிகள் புதிய பொருளாதாரக் கொள்கைகள் புதிய உற்பத்தில்கள் என்பவற்றிக்கான ஆரம்பப் படிகளைச் செய்யாமல் எம்மால் மீள முடியாது. Monisha Kokul- கருத்து படங்கள்
- இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!
- சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்குங்குமாறு கோரிக்கை!
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்குங்குமாறு கோரிக்கை! இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வர இருக்கிற நிலைமையில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமருக்கான மகஜரொன்றை யாழ் இந்திய தூதரகத்தில் இன்று கையளித்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர் 2025 சித்திரை மாதம் மூன்றாம் திகதியாகிய இன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் இயங்கும் சிவில் அமைப்புகளின் வலைப்பின்னலான வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இந்திய அரசின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம். ஒரு நட்பான அயல் நாடு எனும் வகையில் இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்தியா எப்போதும் உதவிக்கு வருகிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய மாபெரும் பங்களிப்பை நாம் எப்போதும் நன்றியுடன் நினைவிற் கொண்டுள்ளோம். அவ்வாறே, 1980களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையை திர்ப்பதற்கு நடுவராக இந்தியா ஆற்றிய வகிபாகத்தையும் நினைவிற் கொண்டுள்ளோம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது குறிப்பீட்ட சில உரிமைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மாகாண ஆட்சி வழங்கப்பட்டது அத்துடன் தமிழ் மொழியானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அலுவல்கள் மற்றும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. மேலும் மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமானது, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதுமாகும். எனினும், 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை. இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியானவர் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண ஆட்சியை செயலிழக்க செய்ய முடியும் என்பது இந்த மாகாண ஆட்சி முறைமையின் இன்ளொரு மட்டுப்படுத்தலாகும். ஒரு தூரதிஷ்டவசமான நிகழ்வாக, இலங்கையின் உச்ச நீதிமன்றமானது 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாவது “செல்லுபடியற்றதும் சட்டவிரோதமானதும்” எனப் பிரகடனப்படுத்தியது. இது இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அரசியல் பின்னடைவாகும். 13 வது திருத்த சட்டம் இலங்கையின் அரசியல் அமைப்பில் உளிவாங்கப்பட்டு 35 வருடங்கள் கடந்துவிட்டவ இந்த இடைப்பட்ட காலத்தில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டு முடிவற்றது. போரின் போதும் போர் முடிவுற உடனடிக் கால கட்டத்திலும் பொது மக்கள் மீது பாரதூரமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பயிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவமயமாக்கலையும், சிங்கள் காலணித்துவத்தையும், பௌத்தமயமாக்கலையும் விரிவாக்கினர் அத்துடன் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை மற்றும் கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. எமது கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபலங்களின் அடிப்படையில், 13வது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறையானது நிலைபேறானதல்ல எந்த நேரத்திலும் இலங்கை அரசானது மாகாண அதிகாரத்தை மீளப்பெற முடியும். எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே எமக்கு கௌரமமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புகிறோம். அந்தவகையில் தங்களுக்கு நல்வரவு கூறுவதுடன் இலங்கைக்கான தங்களின் உத்தியோகபூர்வ வருகையை நாம் உலர்வாக கௌரவிப்பதுடன், இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுந்த தங்களின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கிறோம் என்றுன் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது. https://athavannews.com/2025/1427280- அருண் தம்பிமுத்து கைது
வெளிநாட்டு நிதி பெற்று... சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கஸ்ரகாலம் தொடங்கி விட்டது. வெளிநாட்டு நிதியில் உல்லாச வாழ்க்கை வாழும், இன்னும் பல ஆயிரக் காணக்கானவர்கள் இருப்பார்கள் என நினைக்கின்றேன். அவர்களையும் தேடிப் பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பாவப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்வதைப்போல் இழிய செயல் வேறு எதுவும் இல்லை.- வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்தார் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்! சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்தது. . மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427287- முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் 22 பேர் மீது சிஐடி விசாரணை!
முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் 22 பேர் மீது சிஐடி விசாரணை! 2008 மற்றும் 2024 க்கு இடையில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை தொடங்கியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்குவது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட கண்டுபிடிப்புகள், சம்பந்தப்பட்ட நபர்கள் பல்வேறு அளவுகளில் 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிதியைப் பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன. அதன்படி, நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதிக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விவரங்களைப் பெறுவதற்கு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திடம் நேற்று (2) சிஐடி அதிகாரிகள் உத்தரவு கோரியிருந்தாகவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1427254- இலங்கை பொருட்களுக்கு வரியை அதிகரித்தார் டிரம்ப்!
அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர், வெளியுறவு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் ஒமர், ஷெராட் அமலீன் மற்றும் சைப் ஜெபர்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இந்தப் புதிய வரிக் கொள்கையின்படி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுடன் வர்த்தக உபரியை நடத்தும் நாடுகளுக்கு அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது. இன்னிலையில் கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதுடன் பங்களாதேஷூக்கு 37 சதவீதமும், தாய்லாந்திற்கு 36 சதவீதமும், சீனாவிற்கு 34 சதவீதமும், இந்தியாவிற்கு 26 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2025/1427284- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அப்டேட்! எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சுமார் 700,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை மார்ச் 3 தொடங்கி மார்ச் 17 ஆம் திகதி நிறைவடைந்தது. இதற்கிடையில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் குறித்த தகவல்களைத் தொகுக்கும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்காத பொது அதிகாரிகள் உடனடியாக அவ்வாறு செய்யுமாறு தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். அத்தகைய அதிகாரிகள் தங்கள் தகவல்களை, தங்கள் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் – என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1427269- வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; 06 வயது சிறுவன் உயிரிழப்பு!
பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது! களுத்துறை, கமகொட பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், களுத்துறையின் தோடங்கொட மற்றும் கொங்கொட பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், மற்றொரு பெற்றோல் குண்டு, இரண்டு மொபைல் போன்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலை நடத்துவதற்காக இருவரும் 5000 ரூபா ஒப்பந்தத்தைப் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இருவரும் 2025 மார்ச் 29 அன்று களுத்துறையில் உள்ள ஒரு வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசித் தாக்கினர். இந்த விபத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 06 வயது சிறுவன் ஒருவன் சில நாட்களுக்குப் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427272- தாய்லாந்து, இலங்கைக்கான பயணத்திற்கு முன் மோடியின் அறிக்கை!
தாய்லாந்து, இலங்கைக்கான பயணத்திற்கு முன் மோடியின் அறிக்கை! இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்துக்கு முன்னதாக பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) தாய்லாந்து புறப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 26% தள்ளுபடி பரஸ்பர வரிகளை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் மோடி இந்த விஜயம் அமைந்திருந்தது. மோடிக்கும் வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் மொஹமட் யூனுஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அல்லது சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்து தாய்லாந்து பயணத்தின் போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தைத் திட்டமிடுவது குறித்து நன்கு அறிந்தவர்கள், முறையான சந்திப்பு சாத்தியமில்லை என்று முன்னதாகவே கூறியிருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக வங்கதேசத் தரப்பு ஒரு சந்திப்புக்கு வலுவான அழுத்தத்தை அளித்து வருகிறது. தனது புறப்பாட்டிற்கு முன்னதாக ஒரு அறிக்கையில் மோடி, இந்தப் பயணங்கள் கடந்த காலத்தின் அஸ்திவாரங்களை உருவாக்கி, பரந்த பிராந்தியத்தின் நலனுக்காக இந்தியாவின் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்த பங்களிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவின் அழைப்பின் பேரில் தாய்லாந்துக்கு பயணம் செய்வதாக அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய மேம்பாடு, இணைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மன்றமாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்தியாவின் வடகிழக்கு பகுதி பிம்ஸ்டெக்கின் மையத்தில் அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட மோடி, குழுவின் தலைவர்களைச் சந்தித்து “எங்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உற்பத்தி ரீதியாக” ஈடுபடுவேன் என்றார். 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நடத்தவிருந்த தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) செயல்பாடுகளை இந்தியா முடக்கியதால், பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமாக வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் மீது கவனம் செலுத்தியுள்ளது. ஏப்ரல் 4 ஆம் திகதி பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக மோடி ஷினவத்ரா மற்றும் தாய்லாந்து தலைமையுடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். பிம்ஸ்டெக் தலைவர்களுக்காக தாய்லாந்து பிரதமர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்கு முன்பு இன்று மாலை ஷினவத்ராவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். வெள்ளிக்கிழமை (04) நடைபெறும் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, மோடி தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னை சந்திப்பார். மோடியின் இலங்கை விஜயம் மோடி வெள்ளிக்கிழமை மாலை தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார். கடந்த டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து இந்தப் பயணம் நடைபெறுகிறது. இந்த பயணம் குறித்து பதிவிட்டுள்ள மோடி, பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்ப்பது’ என்ற கூட்டுத் தொலைநோக்குப் பார்வையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், நமது பகிரப்பட்ட நோக்கங்களை அடைவதற்கான கூடுதல் வழிகாட்டுதலை வழங்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று மோடி கூறினார். இந்த விஜயத்தின் போது இந்தியாவும் இலங்கையும் 10 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1980களின் பிற்பகுதியில் தீவு நாட்டின் உள்நாட்டுப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை (IPKF) தலையீட்டிற்குப் பிறகு முதல் முறையாக பாதுகாப்பு ஒத்துழைப்பைப் புதுப்பிப்பதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் அடங்கும். https://athavannews.com/2025/1427260- ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிவு!
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிவு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை கடுமையாக்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (03) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் 3% வரை சரிந்தன. இது முதலீட்டாளர்கள் உலகளாவிய வர்த்தகப் போரை ஏற்படுத்தும் என்றும், இது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் எரிபொருள் தேவையை மட்டுப்படுத்தும் என்றும் கவலைப்படுகிறார்கள். பிரெண்ட் மசகு எண்ணெய் (BCO) $73 க்கும் கீழே சரிந்தது, அதே நேரத்தில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் (WTI) $70 க்கும் கீழே சரிந்தது. மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர், பிரெண்ட் மசகு எண்ணெய் விலை $1.82 அல்லது 2.43% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு 73.13 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் $1.84 அல்லது 2.57% குறைந்து, ஒரு பீப்பாய்க்கு $69.87 ஆக இருந்தது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்தார். பல நாடுகளின் பொருட்களுக்கு மிக அதிக வரிகளுடன், பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க அச்சுறுத்தும் உலகளாவிய வர்த்தகப் போரை அதிக அளவில் தொடங்கியுள்ளார். https://athavannews.com/2025/1427278- ஜப்பானின் கியூஷுவில் நிலநடுக்கம்!
ஜப்பானின் கியூஷுவில் நிலநடுக்கம்! ஜப்பானின் கியூஷுவில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) இரவு 07.34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன,நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதற்கிடையில், நிலநடுக்க நிவாரண முயற்சிகளை அனுமதிக்க மியான்மரின் ஆளும் இராணுவம் ஏப்ரல் 22 வரை நாட்டின் உள்நாட்டுப் போரில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஜப்பானைப் பொறுத்தவரை, அந்நாடு அதிக நில அதிர்வு மண்டலத்தில் உள்ளது. மேலும் பசுபிக் கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தும், நூற்றுக்கணக்கான கட்டிடங்களை இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் கொல்லக்கூடும் என்று ஜப்பான் அரசாங்க அறிக்கை திங்களன்று தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. https://athavannews.com/2025/1427247- பிரித்தானியா பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய செய்தி – நாளை முதல் அமுலில்
பயண விதிமுறையை திருத்திய பிரித்தானியா! பிரித்தானிய அரசாங்கம் தனது பயண விதிமுறைகளை புதிப்பித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து செல்லும் ஐரோப்பிய பயணிகளுக்கு புதன்கிழமை (03) முதல், புதிய ஆன்லைன் நுழைவு அனுமதி (Online Entry Permit)அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நுழைவு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, கண்டத்திலிருந்து வரும் பயணிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. புதிய ஆன்லைன் நுழைவு அனுமதி, இங்கிலாந்தின் எல்லை அமைப்பை நவீனமயமாக்கும் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் தேவை உடனடியாக அமலுக்கு வந்தாலும், பல மாதங்கள் நீடிக்கும் இடையகக் காலம் பயணிகளை புதிய முறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அனுமதிக்கும். புதிய ஆன்லைன் நுழைவு அனுமதி திட்டத்தின்படி, இங்கிலாந்துக்குள் நுழைய விசா தேவையில்லாத அனைத்து பயணிகளும் 10 பவுண்டுகள் (12 யூரோக்கள்) செலவில் பயணத்திற்கு முந்தைய அனுதமியை ஆன்லைனில் வாங்க வேண்டும். இது ஏப்ரல் 9 முதல் 16 பவுண்டுகளாக உயரும். அயர்லாந்து குடிமக்கள் இதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்த விதிமுறை முதன்முதலில் கடந்த ஆண்டு ஐரோப்பியர் அல்லாத நாட்டினருக்கு விரிவுபடுத்தப்பட்டது, இதில் அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகள் அடங்குவர். https://athavannews.com/2025/1427275 - மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.