Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த கனடா! அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு இன்று முதல் அழுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் வரி விதித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. இந்த இறக்குமதி வரி இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்றும் கனடா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419324
  2. நீங்கள்… ஏனப்பா, எலும்பை கடிக்கின்றீர்கள். 😂 🦴 🤣
  3. ராமசாமி ஒருநாள் பல்வலி தாங்காமல் பல்லை பிடுங்க பல் டாக்டர்கிட்ட போனாரு... டாக்டர் சார் என் பல்லைப் பிடுங்கணும்னா எவ்வளவு ஆகும்" டாக்டர்: 1200 ரூபாய் ஆகும்.. ராமசாமி கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு பல் டாக்டர்கிட்ட "சார் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?" டாக்டரும் "ஒரே ஒரு வழி இருக்கு... மயக்க மருந்து இல்லாம வேணும்னா செய்யலாம். அதற்கு நீங்க 500 ரூபாய் கொடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும் பரவாயில்லையா?" " பரவாயில்லை டாக்டர் மயக்க மருந்து இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்" என்று ராமசாமி சோகமாக கூற... பல் மருத்துவரும் அவரோட பல்லை பிடுங்கிய போது அவர் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது மருத்துவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.. பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற ராமசாமியிடம் பல் டாக்டர் "இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையும் கொண்ட ஒரு நோயாளியை இதுவரை நான் பார்த்ததே இல்லை.. எனக்கு நீங்க ஒரு "கேஸ் ஸ்டடி" மாதிரி. எனவே நீங்கள் எனக்கு பணம் தர வேண்டாம். இந்த 5000 ரூபாயை எனது அன்பளிப்பாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார். ராமசாமியும் ரொம்ப மகிழ்ச்சியுடன் மருத்துவருக்கு ஒரு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு நடையை கட்டினார்.. டாக்டரும் மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கிற்கு வந்த ராமசாமி பற்றியும் தனக்கு ஏற்பட்ட சுவராஸ்யமான அனுபவத்தை பற்றியும் மிகுந்த ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டார். எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார். "நீங்கள் சொன்ன ராமசாமி காலையில் முதலில் என்னிடம் தான் வந்தார். அவருக்கு உணர்ச்சி மருத்துப்போக மருந்து கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவர் சீட்டில் இல்லை ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தார். காணாமல் போனவரு நேராக உங்களிடம் வந்திருக்கிறார் போலிருக்கு " என்று புலம்பித் தீர்த்து விட்டார்... 😂 🤣 Paranji Sankar
  4. 👇 அர்ஜுனாவின் ஒரு நிமிட காணொளியை கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும். 👉 https://www.facebook.com/krishnanandhtk/videos/472190945960503 👈 இந்த வைத்தியரை இயக்குவது NPP தான் என்று ஏற்கனவே கூறி உள்ளேன். NPP-யின் பின்னால் இருந்து தான் வைத்தியர் இயக்குகின்றார். அதில் இனியும் சந்தேகம் வேண்டுமா? தமிழண்டா, அதடா இதடா என்று அடிக்கடி வெடி கொழுத்தி போடும் வைத்தியர் 100 கருணாவிற்கு சமமான ஒருவர் தான். ஆகவே வைத்தியர் ஓர் அப்பட்டமான தமிழின துரோகி. பாராளுமன்ற முதல் அமர்விலும் கஜேந்திரகுமார் அவர்கள் தையிட்டி விகாரை தொடர்பாக பேசிய போது சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் வைத்தியர் "நாங்கள் யாழ்பாணத்தில் இன ஒற்றுமையாக உள்ளோம்...." என்று பேரினவாத சிங்கள பெளத்த அடிப்படைவாததிற்கு ஆதரவாக கதைக்க முற்பட்டார். ஆனால் Parliament Speaker தடுத்து விட்டார். பின்னர் 31.01.2025 நேற்றைய தினம் யாழ்பாணம் DCC கூட்டத்தில் தையிட்டி விகாரை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்கள் கதைக்கும் போது கரடி போல் இடையே புகுந்த வைத்தியர் "தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்கினால் போதும்..." என்றார். மக்களின் காணி என்பதை தாண்டி அவை தனியார் காணி ஆகும். ஆகவே இதுவரையில் தையிட்டி விடயதில் குறித்த மக்களுடன் வைத்தியர் கதைத்து உள்ளாரா? கதைத்து இருந்தால் அவரின் பாணியில் கேட்பதாக இருந்தால் facebook live வந்திருக்குமே? அல்லது வீடியோ பதிவு என்றாலும் வந்து இருக்குமே? எதுவும் இல்லாமல் பேரினவாத சிங்கள அரசின் பௌத்த பேரினவாத அடாவடி செயலுக்கு துணை போகும் செயலாக வைத்தியர் உள்ளார். இங்கே வைத்தியரை வைத்து முற்று முழுதாக இயக்குவது NPP தான் என்பதை மறுபடியும் கூறிக் கொள்கிறேன். த. கிருஷ்ணா
  5. 30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பௌத்த பிக்குகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் ஒரே இரவில் ஆலயம் முழுமையாக இடிக்கப்பட்டது. கோவிலை மூடுவதற்கு முன்னர் சில மதச் சடங்குகள் செய்ய முயற்சித்த ஆலய நிர்வாகம் அவகாசம் கேட்ட போதும் அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது. அதே நாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் என்கின்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் திருட்டுத்தனமாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள். அதாவது கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்ட 100 அடி உயரமான தூபி (Stupa) மற்றும் மைத்திரி-ரணில் காலத்தில் ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்ட விகாரை (Vihara) ஆகிய இரு சட்டவிரோத கட்டுமானங்களையும் நியாயம் செய்கின்றார்கள். குறிப்பாக சிங்கள நிலபரப்புகளில் நிறுவப்பட்டுள்ள ருவன்வெலிசாய (338 அடி), ஜெதவனாராமய (400 அடி) அபயகிரி (246 அடி), மிரிசவெட்டி (197 அடி), தூபாராமய (66 அடி) ஆகிவற்றுக்கு இணையாக தமிழ் நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு சின்னமாக 100 அடியில் தூபியை நிறுவி உரிமை கோருகின்றார்கள் இது போதாதென்று தனியாருக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள மேற்படி கட்டுமானங்களுக்கு பௌத்த சாசன அமைச்சு ஊடக நிதி உதவி பெற்று பெற்று இருக்கின்றார்கள் இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த விகாரை அமைந்துள்ள பகுதியில் 406 சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது என இராணுவத்தினர் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் நியாப்படுத்துகின்றார்கள் இது போதாதென்று பௌத்த சாசன அமைச்சு அந்த நிலம் முழுமையாக விகாரைக்குரியது என வாதிடுகின்றது. ஆனால் நியத்தில் எந்தக் காலத்திலும் அங்கு பௌத்த கட்டுமானங்கள் இருந்தற்குரிய எந்தவித ஆவணங்களும் கிடையாது. அதே நேரம் அந்த பகுதி தமிழ் மக்களின் நிலம் என உறுதிப்படுத்தி அதற்குரிய ஆதன உறுதிகளை கூட திரு கஜேந்திரகுமார் பாராளமன்றத்தில் முன்வைத்து இருக்கின்றார் இந்த நிலையில் தற்போது தமிழ் ஆளுநர் திரு வேதநாயகன் ஊடாக சட்டவிரோத ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள். சில வாரங்களுக்கு முன் சட்டபூர்வமற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு இருப்பதாக அறிவித்த திரு வேதநாயகன் தற்போது சட்டவிரோத விகாரையை நியாயம் செய்கின்றார். தனது அதிகாரத்தை தக்க வைக்க பௌத்த சிங்கள அதிகாரத்திற்கு துணை போகின்றார். சட்டவிரோதமான முறையில் ஒரு மதில் காட்டினாலே அகற்ற அப்பாவி பொது சனம் மீது சட்டங்களை ஏவி விடும் இவர்கள் சட்டவிரோத விகாரையை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள் என தெரியவில்லை. சட்டவிரோத கட்டுமானங்களை நியாயப்படுத்தி ஒருபோதும் இன நல்லிணக்கத்தையோ மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது. அதே நேரம் சட்டவிரோத விகாரையை ஏற்றுக்கொண்டால் தையிட்டியில் மற்றுமொரு சிங்கள குடியேற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்ட சட்டவிரோத விகாரையை தேச வீடமைப்பு அதிகார சபையூடாக சட்டபூர்வமாக்கி அந்த சூழலில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றத்தை காணி உரிமம் பெற்று கொடுத்து சட்டபூர்வமாக்கி இருப்பது போல தையிட்டியில் இராணுவம் வாதிடுவது போல சிங்களவர்களை குடியேற்றுவார்கள். அதாவது தையிட்டி ஒரு போதும் முடிவாக இருக்க போவதில்லை. தொல்லியல் திணைக்களம் பௌத்த ஆலயங்கள் இருப்பதாக உரிமை கோரும் காங்கேசன்துறை , பலாலி, நயினாதீவு, நாவற்குழி, நெடுந்தீவு, வல்லிபுரம் ஊர்காவத்துறை, வலிகாமம், மட்டுவில், நிலாவரை, சுன்னாகம்,உடுவில், புலோலி கந்தரோடை,உட்பட்ட பகுதிகள் தோறும் நிறுவ முயற்சிக்கும் பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கான ஆரம்பமாக தையிட்டி இருக்கும். Kunalan Karunagaran
  6. மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பலர் அஞ்சலி. மறைந்த மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பேராசிரியர் விமல் சுவாமிநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அத்தோடு, எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர், ஆளுநர் நா.வேதநாயகன், தமிழரசுக்கட்சி செயலாளர் (கொழும்பு கிளை) சி.கமலநாதன், டக்ளஸ் தேவானந்தா, பொ.ஐங்கரநேசன், ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1419289
  7. தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரை பற்றிய முழுமையான விடயங்களை கஜேந்திரகுமார் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதை பார்த்தேன். அது ஒரு தனியார் காணி எனவே அங்கு கட்டியிருக்கும் சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக அமைந்தது. இடையில் குறுக்கிட்ட ஆளுநர் அந்த காணி உரிமையாளர்கள் வேறு பகுதியில் இதற்கு பதிலாக காணியை எடுத்துக்கொள்ள்ச் இணங்குவதாக குறிப்பிட்டார். இது அடி முட்டாள்த்தனமான கருத்து, ஆளுநரின் காணிக்குள் போய் நான் வீடு கட்டிவிட்டு அவருக்கு வேறு காணி வழங்கினால் ஏற்பாரா? இது இப்படியிருக்கு இறுதியில் பேசிய அர்ச்சுனா கட்டிய விகாரையை இடிக்க முடியாது எமது இந்து சமயம் இதைத் தான் சொல்லுகிறதா என்றார். உண்மையில் இவனைப் போல ஒரு பைத்தியத்தை என் வாழ் நாளில் கண்டதில்லை. ஒரு ஆக்கிரமிப்பின் அடிப்படையே விளங்காமல் எல்லா விடயத்திலும் தனது அரைகுறைத் தனத்தை காட்டிக்கொண்டே இருக்கின்றார். Monisha Kokul ############### ################# ################# ##################
  8. ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல். ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இன்று (1) முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மெரென்சிகே இந்தக் கருத்தை வௌியிட்டார். அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக வாகனத்தை கொள்வனவு முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இறுதியில் என்ன நடக்கும் என்றால், நாட்டின் சாதாரண குடிமகனால் வாகனத்தை வாங்க முடியாத நிலை ஏற்படும். “இது சுமார் 5 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டிருந்தால் சுமார் 6 மில்லியன் முதல் 6.5 மில்லியன் ரூபாய்க்கு வாகனத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் அது இன்று இல்லாமல் போயுள்ளது” என்றார். உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 2 ஆண்டுகளில் ஜப்பானிய வாகனங்களின் தற்போதைய ஏல விலை மற்றும் அது இந்நாட்டின் வரிகளுடன் சேர்க்கும் போது வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் விதம் பற்றி மெரென்சிகே விளக்கினார். அதன்படி, Toyota Raize 1200cc காரின் விலை சுமார் ஒரு கோடியோ 60 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும். அத்துடன் Toyota Yaris வாகனத்தின் விலை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கக்கூடும். இதற்கிடையில், சுமார் ஒரு கோடியோ 95 லட்சம் பெறுமதியான Honda Vezel 1500cc ஹைப்ரிட் கார் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் பலரால் விரும்பப்படும் காரான Wagon R காரின் விலை ஒரு கோடி ரூபாயை விட அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1419267
  9. விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி பயணித்த வாகனம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1419264
  10. 2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம். 2025-26 நிதியாண்டுக்கான மத்திய வரவு-செலவு திட்டம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், பல்வேறு முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் அவர் அறிவித்தார். அதன்படி, (இந்திய மதிப்பின் படி) பாதுகாப்பு – ரூ. 4.91 லட்சம் கோடி ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி சுகாதாரம்- ரூ. 98.311 கோடி. சமூக நலன்- ரூ. 60052 கோடி. உள்துறை – ரூ.2.3 லட்சம் கோடி. தகவல் தொடர்பு- ரூ. 95298 கோடி. கல்வி- ரூ.1.28 லட்சம் கோடி. வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி. நகர்ப்புற வளர்ச்சி- ரூ. 96777 கோடி. வணிகம், தொழிற்துறை- ரூ. 65553 கோடி. அறிவியல்- ரூ. 55679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1419261
  11. பாம்பன் பாலத்தின் திறப்பு விழா குறித்து வெளியான தகவல். ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது. 545 கோடி ரூபாவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக புதிய பாலத்தின் மீது ரயில் என்ஞின்களை விட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று கடலோர காவல்படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே விட்டு அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்ய உள்ளனர். புதிய பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படும் என மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தில் தைப்பூச நாளிலோ அல்லது அதற்கு முந்தைய தினமோ பாலம் திறக்கப்படலாம் என்றும், புதிய பாலத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2025/1419200
  12. வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு! இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக நீக்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில் இன்று (31) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, “இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) விதிமுறைகள் 2025 இன் 02” என்ற தலைப்பிலான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி பொது பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள், வணிக அல்லது சரக்கு போக்குவரத்து வாகனங்கள், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பிற மோட்டார் அல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை நீக்குகிறது. மோட்டார் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிமுறைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், உப பிரிவு 4(1) மற்றும் பிரிவு 14 ஆகியவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட பிரிவு 20 இன் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1419219
  13. இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு. இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் கபில ஜயரத்தன தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன், 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது இல்லை. ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. நாட்டில் கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களில் சுமார் 26 ஆயிரம் பேருக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்ப பகுதியில் கரு கலைவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சுமை, கருத்தரித்தல் தொடர்பில் போதியளவான தெளிவின்மை, வாழ்க்கை சூழல் போன்றன இதற்கு காரணமாக உள்ளன. மேலும் இந்நாட்டின் சுகாதார சேவையின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்களின் வயதெல்லை 73 ஆகவும் பெண்களின் வயதெல்லை 80 ஆகவும் உயர்வடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1419227
  14. வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு. நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறான வீதி விபத்துக்களில் 5 தொடக்கம் 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகக் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மரணங்களில் 19 வயதுக்குட்பட்ட 2,000 மரணங்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான விசேட ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1419234
  15. அவரை கேட்காமல், அவரின் பெயரை இங்கு சொல்வது சரியல்ல என்பதால் தவிர்த்துக் கொள்கின்றேன்.
  16. ஈழப்பிரியன்…. இந்தப் படங்களை, வேறு ஒரு யாழ். கள உறவு அனுப்பியிருந்தார். ஆகவே… நன்றி அவருக்குத்தான் சேர வேண்டும். 🙂
  17. உதயன் பத்திரிகை வைத்த தலைப்பும், அனுரவின் இன்றைய நிகழ்ச்சி நிரல்களான…. மாவை வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி, யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டமை, வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் சந்திப்பும், தமிழ் ஆச்சிமாரை… எம். ஜி. ஆர். பாணியில் கட்டிப் பிடித்த்தையும் பார்த்து, தையிட்டி விகாரையை… அனுர, அத்திவாரத்துடன் கிளப்பப் போறார் என்று நம்பி ஏமாந்து போனன். 😂 உதயனுக்கு…. நெடுகவும், “ஏப்பிரல் பூல்” செய்யுறதே… வேலையாய் போச்சுதுது. 🤣
  18. “தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்” என்று உதயன் தலையங்கத்தில் போட்டுள்ளது. நல்ல செய்தியாக உள்ளதே என்று உள்ளே போய் பார்த்தால்… விகாரையை அகற்றுவதைப் பற்றி ஜனாதிபதியோ அரச அதிகாரிகளோ எதுவும் சொல்லாமல் நட்ட ஈடு கொடுப்பதைப் பற்றி கதைத்துள்ளார்கள். தலையங்கத்தின் படி… விகாரை எப்ப அகற்றப்படும் என்று உதயன் சொன்னால் நல்லது.
  19. சிங்கப்பூர் பென்சனியர்களின் காலம் வேறை. இப்ப மாதம் 500 டொலர் வருகுது என்று தெரிந்தால், வாள்வெட்டு கோஷ்டி... வீட்டு வாசலிலை வந்து நிற்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.