Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஒரு ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது, தான் உட்கார வேண்டிய நாற்காலி கூரையில் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் மாணவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கரும்பலகையில் சென்று இப்படி எழுதினார்: இன்றைய தேர்வு - 15 நிமிடங்கள், 30 மதிப்பெண்கள். கேள்வி 1. நாற்காலிக்கும் தரைக்கும் இடையிலான தூரத்தை சென்டிமீட்டரில் கணக்கிடுங்கள் -1 மதிப்பெண் √. கேள்வி 2. நாற்காலியின் உச்சவரம்பு சாய்வின் கோணத்தைக் கணக்கிட்டு, உங்கள் செயல்பாடுகளைக் காட்டுங்கள் -1 மதிப்பெண் √. கேள்வி 3. நாற்காலியை கூரையில் தொங்கவிட்ட மாணவரின் பெயரையும்,அவருக்கு உதவிய நண்பர்களின் பெயரையும் எழுதுங்கள்~28 மதிப்பெண்கள் √.😜 100% பொழுது போக்கு ·
  2. நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது! நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபல வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில்.. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை , சட்டவிரோதமாக ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் , அனில் அம்பானி இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ருபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் இன்று(11) அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1450096
  3. சீனா மீது கூடுதல் 100 சதவீத வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமது நாட்டின் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என அறிவித்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலாக சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டதையடுத்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் அமெரிக்கா அறிவித்தது. அதன்படி, சீனா மீதான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்ததோடு, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. மேலும் 90 நாட்கள் வரிவிதிப்பு நிறுத்தமானது, ஒகஸ்ட் 10ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, கால அவகாசம் கூடுதலாக 90 நாட்களுக்கு (நவம்பர் 10) வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (11) அறிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 01ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் ஏற்கனவே சீன பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 130 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 30ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், தற்போது சீன ஜனாதிபதியை சந்திக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/1450099
  4. பராக் ஒபாமா... ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. பராக் ஒபாமாவை விமர்சித்த ட்ரம்ப். Tamilwin ############### ################# நீயும், ஒண்ணுமே செய்யாம இரு! உனக்கும்... தருவாங்க, நோபல் பரிசு. 🤣😂🤣 Muralimanoj Muralimanoj ############### ################# நீ... குழப்படி கூட, அதுதான் உனக்கு கிடைக்கல. 😂 🤣 Mafahim Junaid ############### ################# யாரப்பா... அங்க, அந்த நோபலை... கொடுத்து தொலைங்கப்பா முடியல. 😂 🤣 Jenatheeban Theeban ############### ################# குடுங்களேன்டா.... அந்தாளுக்கு, அத... 😂 🤣 Mhm Asmir
  5. இன்னும் ஒரு வருசத்துக்கு.... இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா -உக்ரேன், இந்தியா - பாகிஸ்தான்.... போன்றவற்றை, சண்டை பிடிக்காமல் ஒழுங்காக இருக்கச் சொல்லி வெருட்டி வைத்திருக்கிறது லேசுப் பட்ட காரியம் இல்லை கண்டியளோ. 😂
  6. அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு! வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அமைதியான மாற்றங்களுக்கான போராட்டத்திற்காக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அவர் அயராது உழைத்ததற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் அவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுகிறார் என்று இன்று ஒஸ்லோவில் உள்ள நோர்வே நோபல் நிறுவனத்தில் பரிசை வழங்கிய நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1450047
  7. ஓம் கோசான். நிறைய எழுதும் போது வாசிப்பவர்களுக்கும் அலுப்பு அடிக்கும் என்பதுடன், பலர் நுனிப்புல் மேய்ந்து விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதால், முக்கிய சமாச்சாரத்தை... சின்ன வரியாக இடைவெளி விட்டு எழுதும் போது... பலரும் ஆர்வத்துடன் வாசிப்பார்கள். நிறைய எழுதி பெரும்பாலானோர் வாசிக்காமல் போனால், மினைக்கெட்டுஎழுதியதில், அர்த்தம் இல்லாமல் போகும். 🙂 டிஸ்கி: உங்களைப் போல் நிறைய எழுத... என்னிடம், சரக்கும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக தெரிவித்துக் கொள்கின்றேன். 😂 உலகத்தில் உள்ள பெரும்பாலானோர்.. ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும், அப்படிக் கிடைத்தால் அது கேலிக் கூத்தாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது.... திருவாளர் ட்ரம்ப் அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை... தனக்குத்தான் அப் பரிசு கிடைக்கும் என நம்பிக் கொண்டு இருந்தார். பல வழிகளில்... அவர் வாய் விட்டுக் கேட்டும், பரிசு கிடைக்காதது அவருக்கு பெரிய ஏமாற்றமாகவும், பயங்கர ஆத்திரமாகவும் இருக்கும் என நினைக்கின்றேன். இதன் பின் விளைவுகளாக சில வேளை அவர் நோபல் பரிசுக்கு ஈடாக... அமெரிக்க மேற்பார்வையில், இன்னும் ஒரு பரிசு கொடுக்க ஒரு அமைப்பை உருவாக்கலாம் என நினைக்கின்றேன். 😂
  8. ட்றம்ப்… இன்னும் தனது நோபல் பரிசு ஆசையை கைவிடவில்லை என்று, இன்றைய ஜேர்மன் தொலைக்காட்சி செய்தியாக இருந்தது. ரஷ்ய - உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவர புட்டினுக்கு அழுத்தமும் கொடுக்கின்றாராம். 🤣
  9. நன்றி கோசான். 🙏🏽 தடித்த எழுத்தில் எழுதுதல், பெயின்ற் அடித்தல் இவற்றை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😁 😂 🤣
  10. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து! உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் கூறியதாகத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று (09) சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நேற்று முந்தினம் நடைபெற்ற உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு வருகைதந்திருந்த ரவி செனவிரட்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகளை மறுத்து பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நேற்று நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து வெளியிட்டபோதே சபையில் இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது தயாசிறி ஜயசேகர கூறுகையில், நான் உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன அந்தக் குழுவுக்கு வருகை தந்திருந்தபோது, நிஸாம் காரியப்பர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சகல ஊடகங்களும் எங்களிடம் கேட்கின்றன. இந்நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அதன் பின்னால் இந்தியா இருப்பதாக அவர் கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அவ்வாறான கருத்தைக் கூறவில்லை. எனினும் இது தொடர்பில் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவில் இதுபற்றி கூறாமல் நீதிமன்றத்தில் யார் பிரதான சூத்திரதாரி என்பதைக் கூறுங்கள். இது தொடர்பில் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது பொறுப்புவாய்ந்த ஒருவரோ கூற வேண்டும்’’ என தெரிவித்தார். இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இது தொடர்பில் கூறுகையில், இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது. அந்த செயற்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் அவற்றை ஊடகங்களுக்கு கூறவில்லை. அது விசாரணையின் ஒரு பகுதி என்பதனால் அந்தக் கருத்தை நீக்குமாறு உத்தரவிட முடியாது. வேறு வழியில் இந்த விசாரணைகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கோருகின்றேன்’’ என கூறினார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, குறித்த விடயத்தை நிஸாம் காரியப்பரே டுவிட் செய்துள்ளார். உயர்ப்பதவிகள் தொடர்பான குழுவில் நடக்கும் விடயங்களை எவரும் டுவிட் செய்வதில்லை. அவர் இன்று (வியாழகிழமை ) காலையிலேயே டுவிட் செய்திருந்தார். ஆனால் இந்த விடயங்கள் நேற்று (புதன்கிழமை) மாலையே வெளியாகியிருந்தன’’ என்றார். இதேவேளை இது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில், உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறலுடனேயே அழைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான செயற்குழுவாகும். இங்கு வரும் அதிகாரிகள் அந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்தே கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர். அவ்வாறு பதிலளிக்கும் விடயங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களால் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளில் வெளியிடப்படுகின்றது என்றால் அது பாரதூரமான குற்றமாகும். அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு வெளியில் சமூக வலைத்தளங்களில் எழுதும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.பியை அழைத்து அவரை எச்சரிக்க வேண்டும். அவரை அந்த குழுவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என கூறினார். https://athavannews.com/2025/1449996
  11. அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்! 2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது. அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சுசில் ரணசிங்க : வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் பிரதி அமைச்சர்கள் அனில் ஜெயந்த பெர்னாண்டோ: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டி.பி. சரத்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் எம். எம். மொஹமட் முனீர்: சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர : நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி : சுகாதார பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண : காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் தினிந்து சமன் குமார: இளைஞர் விவகார பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன: வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் எம். ஐ. எம். அர்காம்: எரிசக்தி பிரதி அமைச்சர். Athavan Newsஅமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும்
  12. போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை! போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல நேற்று (09) இந்த தண்டனையை விதித்துள்ளார். மன்னாரை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், ஐஸ் என்ற போதைப் பொருளைக் கொண்டு சென்றபோது, கடந்த 2022 நவம்பர் 03 ஆம் திகதி எழுத்தூர் சந்திக்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சட்டமா அதிபர் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். இந்நிலையில் விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பை அறிவிக்கும் போது, வழக்குத் தொடுப்பவரால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தண்டனை விதித்துள்ளார். https://athavannews.com/2025/1449999
  13. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை! பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், தீவின் தலைநகர் டாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் (79 மைல்) தொலைவில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்குப் பகுதியில், 58.1 கிலோமீட்டர் (36 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs), உயிருக்கு ஆபத்தான அலை உயரத்துடன் பேரழிவு தரும் சுனாமி எதிர்பார்க்கப்படுவதாக கூறியது. அத்துடன் கிழக்கு, தெற்கு பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரித்தது. இதேவேளை, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு 1-3 மீட்டர் உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இந்தோனேசியாவின் சில கடற்கரைகள், பலாவ் தீவு நாடிலும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது. பிலிப்பைன்ஸ், பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 25,000 மைல் (40,000 கிலோமீட்டர்) நில அதிர்வுப் பிளவுக் கோடுகளின் நெருப்பு வளையத்தின் அருகே அமைந்துள்ளது. இது உலகின் பாதிக்கும் மேற்பட்ட எரிமலைகளைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை எதிர்கொள்கின்றது. https://athavannews.com/2025/1449973
  14. காணாமல் போன எனது “அவதாரை” கண்டு பிடித்துத் தந்தமைக்கு நன்றி யாயினி. 👍🏽 🙏 😁
  15. சுமந்திரன்…. ஒரு சதத்திற்கும் உதவாதவர் என்பது மட்டுல்ல, தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப் பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக இருந்த கட்சிகளை உடைத்து… ஶ்ரீலங்காவினதும், இந்திய நாட்டினதும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்த ஆபத்தான மனிதன்தான் சுமந்திரன். இனியும் இவரை தமிழரசுக் கட்சி வைத்திருக்குமானால்… அது தமிழருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் பேராபத்தாக முடியும். இவர் தமிழ் அரசியலில் இருக்கும் வரை… தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒற்றுமையாவதற்கு சந்தர்ப்பமே இல்லை. சுமந்திரனை வைத்து…. தமிழரில் இன்னும் பல பிரிவினைகளை உருவாக்கவே இந்தியத் தூதரகம் மாதா மாதம் இவருடன் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும், பணமும் வழங்கிக் கொண்டு இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.
  16. சுமந்திரனை தலையில் வைத்து கொண்டாடுபவர்களின் பின் புலத்தையும், கடந்த காலத்தில் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும் வைத்துப் பார்த்தால்… பல விடயங்கள் இலை மறை காயாக ஒளிந்து இருப்பதை கண்டு பிடிக்கலாம். 1) சுமந்திரன், தமிழ் தேசியத்துக்கு எதிரானவர் என்பதால்… அந்தப் பாசத்தில் ஆதரவு கொடுப்பவர்கள்…. ஈழப் போராட்டத்தின் போது, புலிகளை காட்டிக் கொடுத்த ஒட்டுக் குழுக்களுக்கும், சிங்கள அரசாங்கத்துக்கும் ஆதரவாக கருத்துக்களை வைத்துக் கொண்டு திரிந்தவர்கள் ஒரு வகை. 2) சுமந்திரன், தமிழர் கட்சிகளை சின்னா பின்னமாக்கி ஒற்றுமையை சிதைத்துக் கொண்டு இருப்பது சிலருக்கு இனிப்பான விடயமாக இருப்பதாலும்… 3) சுமந்திரன், வட மராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால், ஊர்ப் பாசத்தில் ஒரு சிலரும்… (சென்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும்…. ஆபிரஹாம் சுமந்திரனின் தமிழரசுக் கட்சி மரண அடிவாங்கி, படு தோல்வி அடைந்த இடம் வடமராட்சிதான்.) 😂 🤣 4) ஆபிரஹாம் சுமந்திரன், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு சிலரும்…. 5) சுமந்திரன், சிங்களவருக்குக்குள் திருமண தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதால் ஒரு சிலரும்…. 6) யாழ்ப்பாணத்தில் கொழுத்தும் வெய்யில் வெக்கைக்குள்…. கோட்டு, சூட்டுப் போட்ட சுமந்திரனை, பெரிய அறிவாளி என நினைக்கும் சில பனங்கொட்டைத் தமிழர்களும்…. சுமந்திரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றார்கள் என்பதே உண்மை. இவர்களால்… தமிழருக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பைத்தியக்காரக் கூட்டம் என்று கடந்து போக வேண்டியதுதான்.
  17. போன மாதம், இந்தியத் தூதுவருடன் நடந்த சந்திப்பின் போது பேசப் பட்ட விடயங்களுக்கு என்ன நடந்தது. அவை தீர்க்கப் பட்டு விட்டதா? இப்படி மாதா மாதம் வெட்டியாக போய் சந்தித்து பத்திரிகைகளில் படங்களைப் போட்டு… நானும் அரசியலில் இருக்கின்றேன் என்று, சுத்துமாத்து சுமந்திரன்… இத்துப் போன “பிலிம்” காட்டுகின்றாரா? இந்தப் பேய்க்காட்டல் அரசியல் எல்லாம் பழைய ரெக்னிக். சம்பந்தன் காலத்திலிருந்து பார்த்தும், கேட்டும் அலுத்துப் போச்சுது. புதுசா ஏதாவது செய்யப் பாருங்கள் சுமன். நட்டுக் கழண்ட லூசன் மாதிரி நெடுக செய்த ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாதீர்கள் ஆபிரஹாம் சுமந்திரன். மக்கள் உங்களை பைத்தியக்காரன் என்று முடிவு கட்டி விடுவார்கள்.
  18. யாழ்.செம்மணி அணையா விளக்கு தூபி விசமிகளால் சேதமாக்கப்பட்ட நிலையில்... இன்று மீளவும் புனரமைக்கப்பட்டது. Babu Babugi
  19. ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது! ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09) அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்துக் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில் அவற்றின் நுகர்வு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மருந்துகளின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது. இந்த நிலையில் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொழில்துறை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும். இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது. மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் இந்த தயாரிப்பைத் தடை செய்துள்ளன. இந்த நச்சு இருமல் சிரப் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்ட பின்னர் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர். உஸ்பெகிஸ்தானில், 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு மாசுபட்ட சிரப்பை உட்கொண்ட பின்னர் 68 குழந்தைகள் இறந்தனர். https://athavannews.com/2025/1449960 ############### ################## @Justin அந்த மருந்து தயாரிக்கப் பட்டதே... திராவிட ஊழல் மலிந்த, தமிழ் நாட்டில் தான். 😮 ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி, 😂 கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 🤣
  20. அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1449938
  21. காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பாடு. 67,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று மத்திய கிழக்கை மறுவடிவமைத்த காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன. காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலைத் தூண்டிய ஹமாஸ் போராளிகளின் எல்லை தாண்டிய தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு நாள் கழித்து, எகிப்தில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், பாலஸ்தீனப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் 20-அம்ச கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டின. இந்த ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிராந்திய மோதலாக உருவெடுத்த போரை நிறுத்துவதற்கான முந்தைய எந்த முயற்சியையும் விட இரு தரப்பினரும் நெருக்கமாக அமைதிருக்குத் திரும்புவார்கள். இந்த ஒப்பந்தம் பற்றிய செய்தி இஸ்ரேல், காசா மற்றும் அதற்கு அப்பால் கொண்டாட்டங்களைத் தூண்டியது. இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் பட்டாசுகளை வெடித்தன, பாலஸ்தீனியர்கள் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். எனினும், புதன்கிழமை (08) தாமதமாக ட்ரம்ப் அறிவித்த ஒப்பந்தம் விவரங்கள் குறைவாகவே இருந்தது. மேலும் முந்தைய அமைதி முயற்சிகளில் நடந்தது போல, அதன் சரிவுக்கு வழிவகுக்கும் பல தீர்க்கப்படாத கேள்விகளை விட்டுச் சென்றது. இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது குடியரசுக் கட்சி ஜனாதிபதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (09) தனது அரசாங்கத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாகக் கூறினார். திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலுடன், எங்கள் அனைத்து பணயக்கைதிகளும் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றதுடன், இது இஸ்ரேல் அரசுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி என்றார். அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியது, இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுவது மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறியது. 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவ பதிலடி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து 67,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர். சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காசாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 48 பணயக்கைதிகளில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எவ்வாறெனினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கைகள் எழுந்துள்ள போதிலும், நேரம், காசா பகுதிக்கான போருக்குப் பிந்தைய நிர்வாகம் மற்றும் ஹமாஸின் தலைவிதி உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1449915

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.